அத்தியாயம் 8
இனியன் கம்பனியில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் அழகிச் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதக் காலம் ஆகிவிட்டது. இந்த ஒரு மாதக் காலத்தில் அழகி இனியனிடம் செய்யாதச் சேட்டைகள் என்பதே இல்லை என்று கூறிவிடலாம். அந்த அளவிற்கு இனியனைப் படுத்தி எடுத்திருந்தாள் அழகி.
வகுப்பில் இருக்கும் அனைவரும் அவனை 'சார்' என்று அழைக்க, இனியனோ சார் என்று சொல்லாமல் பெயரைச் சொல்லியேக் கூப்பிடுங்க, அதான் கார்ப்பரேட் ரூல் என்றான். அதுவரையில் இனியன்! இனியன்! என்று அழைத்துக் கொண்டிருந்தவள், என்று இனியன் பெயரைச் சொல்லிக் கூப்பிடச் சொன்னனோ, அன்றிலிருந்து அவனை 'இனியன் சார்' என்று தான் அழைத்து வருகிறாள் அழகி.
அது மட்டுமில்லை, இனியன் எது சொன்னாலும் அதற்கு நேர் எதிரில் அந்த விஷயத்தை செய்தால் தான் அவளுக்கு உறக்கமே வரும்.
ட்ரைனிங்கிற்கு போனால் தான் 'சோறு' என்று வேலுசாமி திட்டவட்டமாக சொல்லிவிடவும். வேறு வழியின்றி அங்கே சென்றவள், தனக்கென்று ஒரு குழுவையும் அமைத்துக் கொண்டு அவனை படாதப்பாடு படுத்தி எடுக்கிறாள்.
அவள் செய்யும் சேட்டைகளைக் கண்டு முதலில் கடுப்பான இனியன், போக போக அவனுக்கே தெரியாமல் அதை ரசிக்க ஆரம்பித்து இருந்தான்.
அழகி செய்யும் குறும்புகள் அவனுக்குப் பிடித்திருந்தாலும், அவன் அதை ரசிக்கச் செய்தாலும், 'ஆமாம் பிடித்திருக்கு ரசிக்கிறேன்' என்பதை ஏற்றுக்கொள்ள அவன் மனம் தயாராக இல்லை, அதை அழகியிடம் சொல்ல அவனும் தயாராக இல்லை என்பது தான் உண்மை.
என்றும் இல்லாத திருநாளாய் அழகி இன்று இனியனின் இல்லம் நோக்கி வந்து.. இன்றைய வகுப்பில் அவன் கொடுத்த டாஸ்கில் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி அவனிடன் கேட்டபோதே அவனுக்கு உள்ளுக்குள் சந்தேகம் தான் அவள் மீது. 'இவ இப்படிலாம் வந்து டவுட் கேட்கிற ஆள் இல்லையே.. இதுல என்னமோ இருக்கு' என்று எண்ணிக் கொண்டவன் அமைதியாக அவளைக் கவனித்தவாறு நின்றிருந்தான்.
அதிலும் சாகவாசமாக அவன் வீட்டு சோபாவிலேயே அமர்ந்துக் கொண்டு டீயை போட்டுத் தருமாறும், அதற்கு தொட்டுக்கொள்ள 'குட் டே' பிஸ்கெட் தான் வேண்டும் என்றும் அவனிடமே கேட்டுக் கொண்டிருந்தவள், திடீரென்று காலில் சுடுத்தண்ணி கொட்டியதுப் போல் அங்கே நில்லாமல் அவசர அவரசரமாக திருட்டு முழி ஓன்றை முழித்துவிட்டு சென்றவளையே ஏன் இவ்வாறு நடந்துக் கொள்கிறாள் என்று புரியாமல் பார்த்தப்படி நின்றிருந்தான் இனியன்.
அழகியின் வருகையால், அப்போது செய்துக் கொண்டிருந்த வேலையை பாதியில் விட்டுவிட்டு சென்றவன், அதை மீண்டும் தொடர்வதற்காக டேபிளின் மீது வைத்திருந்த பென்ட்ரைவ்வை பார்க்க. அந்த இடமோ பென்ட்ரைவ் இல்லாமல் அவனைப் பார்த்துப் பல் இளித்துக் கொண்டிருந்தது.
பென்ட்ரைவ் எங்கே என்று வீட்டை பிரித்துப் போட்டுத் தேடியும் அது கிடைக்காமல் போக. இனியனுக்கு ஒட்டு மொத்தச் சந்தேகமும் அழகியின் மேல் தான் திரும்பியது.
அதிலும் அவள் நான் தான் எடுத்தேன்.. முடிஞ்சா வந்து வாங்கிக்கோங்கன்னு சவால் விடுக்கவும். கிளம்பியே விட்டான் இனியன், அழகியின் இல்லம் நோக்கி.
சரியாக அழகியின் வீட்டிருக்கும் தெருவிற்கு வந்து நின்றவன் அழகியின் அலைப்பேசியிற்கு
அழைத்தான்.
முதல் ரிங்கிலேயே அழைப்பை எடுத்தவள், "ஹாஹா.. உங்க கால்காகத் தான் இவ்வளவு நேரம் வெய்ட் பண்ணேன் இனியன் சார். இங்க இருக்க எங்க வீட்டுக்கு வர இவ்வளவு நேரமா உங்களுக்கு??" என்று கேட்ட அழகியின் குரலில் நக்கல் டன் கணக்கில் வழிந்தது.
"உன்னால இப்போ நான் நடு தெருல நிக்கிறேன் அழகி. ஒழுங்க மரியாதையா அந்த பென் ட்ரைவை கொண்டு வந்து தந்திடு" என்றான் இனியன் உச்சக்கட்டக் கடுப்பில் பல்லைக் கடித்தவாறு.
"உடனே தந்துட்டா... அதுல என்ன கிக் இருக்கும் இனியன் சார். நீங்களே சொல்லுங்க?? சோ.. அதுனால இப்போ நீங்க குளத்துக்கிட்ட போவீங்களாம். நா உங்க பின்னாடியே வருவேணாம்" என்றாள் அழகி அசால்ட்டாக.
“என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற அழகி…”
“இப்போ பென்டிரைவ் வேணும்னா குளத்துக்கிட்ட வாங்க… வேண்டாம்னா எங்கேவேனா போங்க.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை...”
“சரி! வந்துத் தொலைக்கிறேன்.. நீயும் சீக்கிரமா வந்து சேறு..” என்ற இனியன். அழகிச் சொன்னக் குளத்தை நோக்கிச் சென்றான்.
இனியன் சென்றுப் பத்து நிமிடத்திற்கும் மேல் இன்னும் சிலப் பல நிமிடங்கள் சென்ற பிறகு தான் அங்கே வந்தாள் அழகி.
தன்னை வரச் சொல்லிவிட்டு இவ்வளவுத் தாமதமாக வருபவளைக் கண்டு எரிச்சலுற்றவன், " இது தான் நீ வர டைம்மா அழகி! கொஞ்சம் கூட ஒரு பொறுப்புணர்ச்சி இல்லைல்ல உனக்கு. எல்லாத்துலையும் விளையாட்டு தனம்.." என்றவனை இடைமறித்தவள்,
"போதும்.. போதும்.. ஸ்டாப் தி பாட்டு.. ஸ்டாப் தி பாட்டு.. இந்த பாட்டு வேண்டாம் தலைவா.." என்று சம்பந்தமே இல்லாமல் அழகி பாடவும், ஒன்றுமே விளங்கவில்லை இனியனிற்கு.
"இப்போ! எதுக்கு இந்த பாட்டை பாடுற??"
"பின்னே .. டீல் பேச வந்துட்டு.. அதை மறந்து எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களே நீங்க. அதான் உங்களை எப்படி ஸ்டாப் பண்ண வைக்குறதுன்னு ரொம்ப யோசிச்சப் பிறகு இந்த பாட்டை பாடிட்டேன். டிரெக்டா சொன்னா மரியாதையா இருக்காதுல்ல.. அதான் சிம்பொலிக்கா பாட்டுலச் சொன்னேன் இனியன் சார்...ஹிஹி.." என்றாள் சிரித்துக்கொண்டே.
"வாறே வா!! நல்ல சிந்தனை.. நல்ல சிந்தனை.. சரி அந்த பென்ட்ரைவ் எங்கே?" என்றான் இனியன் பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு.
இனியனின் கடுப்பை புரிந்தக்கொண்ட அழகியோ, அவனை மேலும் வெறுப்பெற்றும் பொருட்டு, "எந்த பென்ட்ரைவ் இனியன் சார்?? எனக்கு எதுவும் தெரியாதே! நீங்க ஃபோன்ல கேட்ட அப்போக் கூட நா சும்மாத் தான் சொன்னேன்.. நா எடுத்தேன்னு.." என்றாள் அப்பாவியாக.
"டோன்ட் ஆக்ட் அழகி! நீ திருடிட்டு வந்தியே அந்த பென்ட்ரைவ்வை தான் கேட்கிறேன். எனக்கு நல்லாவே தெரியும் அழகி நீதான் அதை எடுத்ததுன்னு. சோ! ஒழுங்கா அதை என் கிட்ட கொடுத்திடு" என்றான் நிதானமாக.
"ஹலோ! யாரை பார்த்து திருடிட்டு வந்தேன்னுச் சொல்லுறீங்க. நீங்க தான் என்னைப் பார் என் பென் ட்ரைவைப் பார்ன்னு அசால்ட்டா டேபிள்ல வச்சி இருந்தீங்க. அதை மேக் யூஸ் பண்ணி நா எடுத்து வந்தது எப்படி திருட்டாகும்?? யாரும் இல்லாம பாவமா தனியா இருந்த பென்ட்ரைவ்க்கு அடைக்கலம் கொடுத்து பாசமா எடுத்து வந்த என்னப் போய் திருடின்னு சொல்லிட்டீங்களே… சொல்லிட்டீங்களே…" என்று ஓவர் ஆக்கிட்டிங் பண்ணவும், மேலும் கடுப்பான இனியன்,
"அழகி! எனக்கு பொறுமை ரொம்பவே கம்மி. உன் கிட்ட இவ்வளவு நேரம் பொறுமையா நா பேசுறேன்னா அதுக்கு ஒரே காரணம் உன்கிட்ட என் கோப முகத்தை காட்ட நா விரும்பல என்பது தான். ஆனா.. நீ என்னை கோபப்படுத்தாமல் விட மாட்டேன்னு கங்கணம் கட்டிட்டு அலையுற.." என்றான்.
"அந்த கோபத்தையும் தான் காட்டுங்களேன் இனியன் சார். உங்க நவரச பாவத்தையும் பார்க்கனும்னு ஆசையா இருக்கு எனக்கு. ஆமா, இவ்வளவு கேக்குறீங்களே அப்படி அந்த பென் ட்ரைவ்ல என்ன தான் இருக்கு?? இனியன் சார்! சொல்லுங்க இதுக்கு முன்னாடி நீங்க மும்பைல என்ன செஞ்சீகிட்டு இருந்தீங்க??" என்று பாஷாப் படப்பானியில் அழகி கேட்கவும்,
"ஆமா, இது பெரிய பாஷா படம்... கேக்குறப் பாரு ஒரு கேள்வி" என்று சலித்துக் கொண்டவன்,
"அழகி! நா கமிட் ஆகி இருக்குற புது ப்ரொஜெக்ட்காக இவ்வளவு நாள் நா பண்ண ஒர்க் எல்லாமே அந்த பென் ட்ரைவ்ல தான் இருக்கு. அதுக்கு நா பேக்கப்பும் பண்ணி வைக்கல அழகி. அதான் உன் கிட்ட இவ்வளவு டிமாண்ட் பண்றேன் அந்த பென் ட்ரைவ்காக. கொஞ்சமாச்சும் விஷயத்தோட சீரியஸ்னஸைக் கொஞ்சம் புரிஞ்சிக்கோ.." என்றான் நிதானமாக.
இனியன் கூறிய பிற்பாதியை விட்டுவிட்டு, "எதே! புது ப்ரொஜெக்ட்டா... அதுவும் நீங்க பண்ணிய ஒர்க்கா ?? மனசாட்சியே இல்லாம சொல்லுறீங்களே இனியன் சார்... டாஸ்க்.. டாஸ்க்ன்னு சொல்லி என் கிட்ட வேலை வாங்கிட்டு .. இப்போ நீங்களே பண்ணின ஒர்க் மாதிரி சீன் போடுறீங்க.." என்ற அழகியின் பேச்சினால் எழுந்தச் சிரிப்பை எவ்வளவோ கட்டுப்படுத்த நினைத்தும் இனியனால் முடியாமல் போக, வாய்விட்டு சிரித்தான் இனியன்.
அவனின் இந்தச் சிரிப்பை புரியாமல் பார்த்தவள், "இப்போ ஏன் இப்படி சிரிக்குறீங்க இனியன்" என்றாள் குழப்பமாக.
"இல்ல.. நீ டாஸ்க் பண்ண அழக நினைச்சேன் சிரிச்சேன்..ஹாஹா.. என்னால இனி சிரிக்க முடியல அழகி. அந்த பென்ட்ரைவ்வை கொடு நா கிளம்பனும்" என்றான் சிரித்துக்கொண்டே.
"ஹலோ என்ன கிண்டலா?? பரவாயில்லை உங்களால எவ்வளவு முடியுதோ அவ்வளவு சிரிச்சுக்கோங்க இனியன் சார். ஆனா,உங்க பென்ட்ரைவ் உங்களுக்கு வேணும்னா.. நான் சொல்லுற டீல்க்கு ஓகே சொல்லணும்"
"அது என்ன டீல்??" என்றான் சிரிப்பதை நிறுத்திவிட்டு.
"பெரிதாகவெல்லாம் ஒன்றுமில்லை இனியன் சார். ரொம்ப சிம்பிள்.. நா கேக்குற ஐந்து விஷயங்ககுக்கு நீங்க யோசிக்கவே செய்யாம ஓகேன்னு சொல்லி, நா சொன்ன விஷயங்களை எல்லாம் செய்யணும். இது தான் நம்ம டீல் இனியன் சார். இந்த டீல்க்கு நீங்க ஓகே சொன்னா.. உங்க பென்ட்ரைவ் உங்களுக்கு. இல்லனா உங்க பென் ட்ரைவ் உங்களுக்கு கிடையாது" என்றாள் அசால்ட்டாக.
அழகியின் டீல்லைக் கேட்டு அதிர்ந்த இனியன், "வாட்????" என்றான் சப்தமாக. அவனின் குரலில் உச்சக்கட்ட அதிர்வு இருந்தது.
"அவுச்.. ஏன் இனியன் சார் இப்படி கத்தி
காதைச் செவிடாக்குறீங்க" என்றாள் அழகி காதைத் தேய்தவாறு.
" அழகி! உன் லிமிட்டை நீ கிராஸ் பண்ணிப் போற . போனா போகுது சின்னப் பொண்ணு விளையாட்டு தனமா ஏதோ பண்ணுறான்னு அமைதியா இருந்தா. நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு ஆடுற. ஒழுங்கா என் பென்ட்ரைவை தந்துட்டு இப்பவே இந்த இடத்தை விட்டு காலி பண்ணு" என்றான் இனியன்.
அவனின் குரலில் உள்ளுக்குள் பயம் எழுந்தாலும், அதை கண்டுக்கொள்ளாமல் ஓரம் கட்டியவள், "கூல்! கூல்! இனியன் சார்" என்று கூறியவள், கையில் வைத்திருந்த பென் ட்ரைவை எடுத்து உடைப்பது போல் செய்கை செய்ய. உண்மையிலேயே பதறிவிட்டான் இனியன்.
இருக்காத பின்ன, அந்த பென்ட்ரைவ்வில் இருப்பது அவனது இத்தனை நாள் அயராத உழைப்பல்லவா.
"சரி அழகி! நா இந்த டீல்க்கு ஓகே சொல்லுறேன். அதை என்கிட்ட கொடு" என்றான் முடிவாக.
இனியன் சரியென்று சொன்ன மாத்திரத்தில் கையில் வெத்துப் பத்திரத்தை எடுத்த அழகி அவனிடன் அதில் கையெழுத்திடச் சொல்ல. இனியனோ வெத்துப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று தீர்மானமாக சொல்லிவிட்டான்.
பிறகு அந்த பத்திரத்தில், 'இனியன் ஆகிய நான். அழகியிடம் இருந்து என் பென்ட்ரைவை வாங்குவதற்காக அவளிடம் போட்ட ஒப்பந்தத்தின் படி, இன்றிலிருந்து அழகி கூறும் ஐந்து விஷயங்களையும் எந்த வித கேள்வியும் இன்றி செய்வேன் என்று உறுதிக் கூறுகிறேன்' என்று தானே எழுதிய அழகி, அதை இனியனிடம் கொடுத்து கையெழுத்திட சொன்னாள்.
அழகி தந்த பத்திரத்தை வாங்கிப் பார்த்தவன், அதில் அவள் எழுதி இருக்கும் வார்த்தைகளைப் படித்திவிட்டு மீண்டும் அடக்க மாட்டாமல் சிரித்தவன், "ஹாஹா... அழகி வேற லெவல் நீ போ ... அக்ரீமெண்ட்டே போட்டுட்டே... என்னால சிரிச்சு முடியல" என்றவன் சிரித்தவாறே அந்த பாத்திரத்தில் கையெப்பமிட்டு அழகியிடம் தந்தான்.
பத்திரத்தை ஒரு கரத்தில் வாங்கியவள், மறுக் கரத்தில் இருந்த பென்ட்ரைவை இனியனிடம் தந்தாள்.
இனியனிற்கு போன உயிர் திரும்ப வந்த உணர்வு, அந்த பென் ட்ரைவை வாங்கிய போது.
"ஓகே இனியன் சார்! ஆல் செட். சோ.. இன்னையில இருந்து நா சொல்லுற அஞ்சு விஷயத்துக்கு நீங்க ஓகே சொல்லணும் இல்லையா?? அதுனால, இந்த ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடும் போது ட்ரயல் பால்ன்னு சொல்லி ஒரு பால் முன்னாடி போட்டுப் பார்ப்போம்ல. அதே போல இப்போ ட்ரயல் ஓகே ரூல் சரியா. இந்த ட்ரயல் ஓகே ரூல் என்னன்னா... நா எப்போ உங்களுக்கு கால் பண்ணாலும் நீங்க அதை அட்டெண்ட் பண்ணனும். இன்கேஸ் நீங்க பிஸியா இருந்தா .. நீங்க எப்போ ஃப்ரி ஆறீயங்களோ அப்போ எனக்கு கால் பண்ணனும். இதுதான் இந்த ட்ரயல் ரூளோட கண்டிஷன் இனியன் சார்… புரிஞ்சதா?" என்று அழகி கெத்தாக கேட்பதாக எண்ணிக் கொண்டு ஒரு பாவனையில் கேட்க.
மீண்டும் குபீர் சிரிப்பு வந்தாலும் அதை முயன்று கட்டுப் படுத்திக்கொண்டு, "எனக்கு டீல் ஓகே அழகி " என்றான் இனியன்.
"வாவ்! நீங்க இதுக்கும் வாக்குவாதம் பண்ணுவீங்க.. நா நிறைய பேசணும்ன்னு நினைச்சேன். பரவாயில்லை இனியன்.. நீங்களும் கொஞ்சம் சூப்பர் தான்" என்றாள் பாராட்டாக.
"ஹாஹா… தேங்க யூ போர் யூர் காம்ளிமெண்ட் அழகி! நா நினைச்சு இருந்தா.. நீ வந்தப்பவே உன்னைப் பிடிச்சி வச்சிக்கிட்டு என் பென்ட்ரைவ்வை வாங்கி இருக்கலாம். பட் நா அதை விரும்பாமத் தான் அமைதியா இருந்தேன். இன்னும் சொல்லப் போன ரொம்பவே பொறுமையா இருந்தேன், என் லிமிட்டை தாண்டியும். அப்படியும் ஒரு சில இடத்துல அவுட் பர்ஸ்ட் ஆகி இருப்பேன். எப்படியோ உன் பேச்சால் என்னை திரும்ப அமைதி பண்ணிட்ட நீ. தேங்க்ஸ் போர் தட் அழகி. என்னோட அங்கர் கண்ட்ரோல் லெவல்ல நானே டெஸ்ட் பண்ணிப் பார்த்துக்க தெரிந்தோ தெரியாமலோ நீ ரொம்பவே ஹெல்ப் பண்ணிருக்க அழகி.. தேங்க்ஸ்.." என்றவன் அழகியிடம் விடைப்பெற்று கிளம்ப,
அழகியோ, 'இப்போ ! இவ்வளவு நேரம் நாம அவரை வச்சி வம்பு செஞ்சோமா?? இல்ல அவரு அவரையே டெஸ்ட் பண்ணிக்க வான்டட்டா வந்து சோதனை எலியா நாமளா நின்னோமா?? ' என்று புரியாமல் புலம்பியப் படியே நின்றிருந்தவள்,
"எது எப்படியோ ! இனி இனியன் சார் மொத்தமும் என் கண்ட்ரோல்" என்று உல்லாசமாக எண்ணிக் கொண்டு விசிலடித்தப் படி வீட்டிற்குச் சென்றாள் அழகி.
இனியன் கம்பனியில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் அழகிச் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதக் காலம் ஆகிவிட்டது. இந்த ஒரு மாதக் காலத்தில் அழகி இனியனிடம் செய்யாதச் சேட்டைகள் என்பதே இல்லை என்று கூறிவிடலாம். அந்த அளவிற்கு இனியனைப் படுத்தி எடுத்திருந்தாள் அழகி.
வகுப்பில் இருக்கும் அனைவரும் அவனை 'சார்' என்று அழைக்க, இனியனோ சார் என்று சொல்லாமல் பெயரைச் சொல்லியேக் கூப்பிடுங்க, அதான் கார்ப்பரேட் ரூல் என்றான். அதுவரையில் இனியன்! இனியன்! என்று அழைத்துக் கொண்டிருந்தவள், என்று இனியன் பெயரைச் சொல்லிக் கூப்பிடச் சொன்னனோ, அன்றிலிருந்து அவனை 'இனியன் சார்' என்று தான் அழைத்து வருகிறாள் அழகி.
அது மட்டுமில்லை, இனியன் எது சொன்னாலும் அதற்கு நேர் எதிரில் அந்த விஷயத்தை செய்தால் தான் அவளுக்கு உறக்கமே வரும்.
ட்ரைனிங்கிற்கு போனால் தான் 'சோறு' என்று வேலுசாமி திட்டவட்டமாக சொல்லிவிடவும். வேறு வழியின்றி அங்கே சென்றவள், தனக்கென்று ஒரு குழுவையும் அமைத்துக் கொண்டு அவனை படாதப்பாடு படுத்தி எடுக்கிறாள்.
அவள் செய்யும் சேட்டைகளைக் கண்டு முதலில் கடுப்பான இனியன், போக போக அவனுக்கே தெரியாமல் அதை ரசிக்க ஆரம்பித்து இருந்தான்.
அழகி செய்யும் குறும்புகள் அவனுக்குப் பிடித்திருந்தாலும், அவன் அதை ரசிக்கச் செய்தாலும், 'ஆமாம் பிடித்திருக்கு ரசிக்கிறேன்' என்பதை ஏற்றுக்கொள்ள அவன் மனம் தயாராக இல்லை, அதை அழகியிடம் சொல்ல அவனும் தயாராக இல்லை என்பது தான் உண்மை.
என்றும் இல்லாத திருநாளாய் அழகி இன்று இனியனின் இல்லம் நோக்கி வந்து.. இன்றைய வகுப்பில் அவன் கொடுத்த டாஸ்கில் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி அவனிடன் கேட்டபோதே அவனுக்கு உள்ளுக்குள் சந்தேகம் தான் அவள் மீது. 'இவ இப்படிலாம் வந்து டவுட் கேட்கிற ஆள் இல்லையே.. இதுல என்னமோ இருக்கு' என்று எண்ணிக் கொண்டவன் அமைதியாக அவளைக் கவனித்தவாறு நின்றிருந்தான்.
அதிலும் சாகவாசமாக அவன் வீட்டு சோபாவிலேயே அமர்ந்துக் கொண்டு டீயை போட்டுத் தருமாறும், அதற்கு தொட்டுக்கொள்ள 'குட் டே' பிஸ்கெட் தான் வேண்டும் என்றும் அவனிடமே கேட்டுக் கொண்டிருந்தவள், திடீரென்று காலில் சுடுத்தண்ணி கொட்டியதுப் போல் அங்கே நில்லாமல் அவசர அவரசரமாக திருட்டு முழி ஓன்றை முழித்துவிட்டு சென்றவளையே ஏன் இவ்வாறு நடந்துக் கொள்கிறாள் என்று புரியாமல் பார்த்தப்படி நின்றிருந்தான் இனியன்.
அழகியின் வருகையால், அப்போது செய்துக் கொண்டிருந்த வேலையை பாதியில் விட்டுவிட்டு சென்றவன், அதை மீண்டும் தொடர்வதற்காக டேபிளின் மீது வைத்திருந்த பென்ட்ரைவ்வை பார்க்க. அந்த இடமோ பென்ட்ரைவ் இல்லாமல் அவனைப் பார்த்துப் பல் இளித்துக் கொண்டிருந்தது.
பென்ட்ரைவ் எங்கே என்று வீட்டை பிரித்துப் போட்டுத் தேடியும் அது கிடைக்காமல் போக. இனியனுக்கு ஒட்டு மொத்தச் சந்தேகமும் அழகியின் மேல் தான் திரும்பியது.
அதிலும் அவள் நான் தான் எடுத்தேன்.. முடிஞ்சா வந்து வாங்கிக்கோங்கன்னு சவால் விடுக்கவும். கிளம்பியே விட்டான் இனியன், அழகியின் இல்லம் நோக்கி.
சரியாக அழகியின் வீட்டிருக்கும் தெருவிற்கு வந்து நின்றவன் அழகியின் அலைப்பேசியிற்கு
அழைத்தான்.
முதல் ரிங்கிலேயே அழைப்பை எடுத்தவள், "ஹாஹா.. உங்க கால்காகத் தான் இவ்வளவு நேரம் வெய்ட் பண்ணேன் இனியன் சார். இங்க இருக்க எங்க வீட்டுக்கு வர இவ்வளவு நேரமா உங்களுக்கு??" என்று கேட்ட அழகியின் குரலில் நக்கல் டன் கணக்கில் வழிந்தது.
"உன்னால இப்போ நான் நடு தெருல நிக்கிறேன் அழகி. ஒழுங்க மரியாதையா அந்த பென் ட்ரைவை கொண்டு வந்து தந்திடு" என்றான் இனியன் உச்சக்கட்டக் கடுப்பில் பல்லைக் கடித்தவாறு.
"உடனே தந்துட்டா... அதுல என்ன கிக் இருக்கும் இனியன் சார். நீங்களே சொல்லுங்க?? சோ.. அதுனால இப்போ நீங்க குளத்துக்கிட்ட போவீங்களாம். நா உங்க பின்னாடியே வருவேணாம்" என்றாள் அழகி அசால்ட்டாக.
“என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற அழகி…”
“இப்போ பென்டிரைவ் வேணும்னா குளத்துக்கிட்ட வாங்க… வேண்டாம்னா எங்கேவேனா போங்க.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை...”
“சரி! வந்துத் தொலைக்கிறேன்.. நீயும் சீக்கிரமா வந்து சேறு..” என்ற இனியன். அழகிச் சொன்னக் குளத்தை நோக்கிச் சென்றான்.
இனியன் சென்றுப் பத்து நிமிடத்திற்கும் மேல் இன்னும் சிலப் பல நிமிடங்கள் சென்ற பிறகு தான் அங்கே வந்தாள் அழகி.
தன்னை வரச் சொல்லிவிட்டு இவ்வளவுத் தாமதமாக வருபவளைக் கண்டு எரிச்சலுற்றவன், " இது தான் நீ வர டைம்மா அழகி! கொஞ்சம் கூட ஒரு பொறுப்புணர்ச்சி இல்லைல்ல உனக்கு. எல்லாத்துலையும் விளையாட்டு தனம்.." என்றவனை இடைமறித்தவள்,
"போதும்.. போதும்.. ஸ்டாப் தி பாட்டு.. ஸ்டாப் தி பாட்டு.. இந்த பாட்டு வேண்டாம் தலைவா.." என்று சம்பந்தமே இல்லாமல் அழகி பாடவும், ஒன்றுமே விளங்கவில்லை இனியனிற்கு.
"இப்போ! எதுக்கு இந்த பாட்டை பாடுற??"
"பின்னே .. டீல் பேச வந்துட்டு.. அதை மறந்து எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களே நீங்க. அதான் உங்களை எப்படி ஸ்டாப் பண்ண வைக்குறதுன்னு ரொம்ப யோசிச்சப் பிறகு இந்த பாட்டை பாடிட்டேன். டிரெக்டா சொன்னா மரியாதையா இருக்காதுல்ல.. அதான் சிம்பொலிக்கா பாட்டுலச் சொன்னேன் இனியன் சார்...ஹிஹி.." என்றாள் சிரித்துக்கொண்டே.
"வாறே வா!! நல்ல சிந்தனை.. நல்ல சிந்தனை.. சரி அந்த பென்ட்ரைவ் எங்கே?" என்றான் இனியன் பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு.
இனியனின் கடுப்பை புரிந்தக்கொண்ட அழகியோ, அவனை மேலும் வெறுப்பெற்றும் பொருட்டு, "எந்த பென்ட்ரைவ் இனியன் சார்?? எனக்கு எதுவும் தெரியாதே! நீங்க ஃபோன்ல கேட்ட அப்போக் கூட நா சும்மாத் தான் சொன்னேன்.. நா எடுத்தேன்னு.." என்றாள் அப்பாவியாக.
"டோன்ட் ஆக்ட் அழகி! நீ திருடிட்டு வந்தியே அந்த பென்ட்ரைவ்வை தான் கேட்கிறேன். எனக்கு நல்லாவே தெரியும் அழகி நீதான் அதை எடுத்ததுன்னு. சோ! ஒழுங்கா அதை என் கிட்ட கொடுத்திடு" என்றான் நிதானமாக.
"ஹலோ! யாரை பார்த்து திருடிட்டு வந்தேன்னுச் சொல்லுறீங்க. நீங்க தான் என்னைப் பார் என் பென் ட்ரைவைப் பார்ன்னு அசால்ட்டா டேபிள்ல வச்சி இருந்தீங்க. அதை மேக் யூஸ் பண்ணி நா எடுத்து வந்தது எப்படி திருட்டாகும்?? யாரும் இல்லாம பாவமா தனியா இருந்த பென்ட்ரைவ்க்கு அடைக்கலம் கொடுத்து பாசமா எடுத்து வந்த என்னப் போய் திருடின்னு சொல்லிட்டீங்களே… சொல்லிட்டீங்களே…" என்று ஓவர் ஆக்கிட்டிங் பண்ணவும், மேலும் கடுப்பான இனியன்,
"அழகி! எனக்கு பொறுமை ரொம்பவே கம்மி. உன் கிட்ட இவ்வளவு நேரம் பொறுமையா நா பேசுறேன்னா அதுக்கு ஒரே காரணம் உன்கிட்ட என் கோப முகத்தை காட்ட நா விரும்பல என்பது தான். ஆனா.. நீ என்னை கோபப்படுத்தாமல் விட மாட்டேன்னு கங்கணம் கட்டிட்டு அலையுற.." என்றான்.
"அந்த கோபத்தையும் தான் காட்டுங்களேன் இனியன் சார். உங்க நவரச பாவத்தையும் பார்க்கனும்னு ஆசையா இருக்கு எனக்கு. ஆமா, இவ்வளவு கேக்குறீங்களே அப்படி அந்த பென் ட்ரைவ்ல என்ன தான் இருக்கு?? இனியன் சார்! சொல்லுங்க இதுக்கு முன்னாடி நீங்க மும்பைல என்ன செஞ்சீகிட்டு இருந்தீங்க??" என்று பாஷாப் படப்பானியில் அழகி கேட்கவும்,
"ஆமா, இது பெரிய பாஷா படம்... கேக்குறப் பாரு ஒரு கேள்வி" என்று சலித்துக் கொண்டவன்,
"அழகி! நா கமிட் ஆகி இருக்குற புது ப்ரொஜெக்ட்காக இவ்வளவு நாள் நா பண்ண ஒர்க் எல்லாமே அந்த பென் ட்ரைவ்ல தான் இருக்கு. அதுக்கு நா பேக்கப்பும் பண்ணி வைக்கல அழகி. அதான் உன் கிட்ட இவ்வளவு டிமாண்ட் பண்றேன் அந்த பென் ட்ரைவ்காக. கொஞ்சமாச்சும் விஷயத்தோட சீரியஸ்னஸைக் கொஞ்சம் புரிஞ்சிக்கோ.." என்றான் நிதானமாக.
இனியன் கூறிய பிற்பாதியை விட்டுவிட்டு, "எதே! புது ப்ரொஜெக்ட்டா... அதுவும் நீங்க பண்ணிய ஒர்க்கா ?? மனசாட்சியே இல்லாம சொல்லுறீங்களே இனியன் சார்... டாஸ்க்.. டாஸ்க்ன்னு சொல்லி என் கிட்ட வேலை வாங்கிட்டு .. இப்போ நீங்களே பண்ணின ஒர்க் மாதிரி சீன் போடுறீங்க.." என்ற அழகியின் பேச்சினால் எழுந்தச் சிரிப்பை எவ்வளவோ கட்டுப்படுத்த நினைத்தும் இனியனால் முடியாமல் போக, வாய்விட்டு சிரித்தான் இனியன்.
அவனின் இந்தச் சிரிப்பை புரியாமல் பார்த்தவள், "இப்போ ஏன் இப்படி சிரிக்குறீங்க இனியன்" என்றாள் குழப்பமாக.
"இல்ல.. நீ டாஸ்க் பண்ண அழக நினைச்சேன் சிரிச்சேன்..ஹாஹா.. என்னால இனி சிரிக்க முடியல அழகி. அந்த பென்ட்ரைவ்வை கொடு நா கிளம்பனும்" என்றான் சிரித்துக்கொண்டே.
"ஹலோ என்ன கிண்டலா?? பரவாயில்லை உங்களால எவ்வளவு முடியுதோ அவ்வளவு சிரிச்சுக்கோங்க இனியன் சார். ஆனா,உங்க பென்ட்ரைவ் உங்களுக்கு வேணும்னா.. நான் சொல்லுற டீல்க்கு ஓகே சொல்லணும்"
"அது என்ன டீல்??" என்றான் சிரிப்பதை நிறுத்திவிட்டு.
"பெரிதாகவெல்லாம் ஒன்றுமில்லை இனியன் சார். ரொம்ப சிம்பிள்.. நா கேக்குற ஐந்து விஷயங்ககுக்கு நீங்க யோசிக்கவே செய்யாம ஓகேன்னு சொல்லி, நா சொன்ன விஷயங்களை எல்லாம் செய்யணும். இது தான் நம்ம டீல் இனியன் சார். இந்த டீல்க்கு நீங்க ஓகே சொன்னா.. உங்க பென்ட்ரைவ் உங்களுக்கு. இல்லனா உங்க பென் ட்ரைவ் உங்களுக்கு கிடையாது" என்றாள் அசால்ட்டாக.
அழகியின் டீல்லைக் கேட்டு அதிர்ந்த இனியன், "வாட்????" என்றான் சப்தமாக. அவனின் குரலில் உச்சக்கட்ட அதிர்வு இருந்தது.
"அவுச்.. ஏன் இனியன் சார் இப்படி கத்தி
காதைச் செவிடாக்குறீங்க" என்றாள் அழகி காதைத் தேய்தவாறு.
" அழகி! உன் லிமிட்டை நீ கிராஸ் பண்ணிப் போற . போனா போகுது சின்னப் பொண்ணு விளையாட்டு தனமா ஏதோ பண்ணுறான்னு அமைதியா இருந்தா. நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு ஆடுற. ஒழுங்கா என் பென்ட்ரைவை தந்துட்டு இப்பவே இந்த இடத்தை விட்டு காலி பண்ணு" என்றான் இனியன்.
அவனின் குரலில் உள்ளுக்குள் பயம் எழுந்தாலும், அதை கண்டுக்கொள்ளாமல் ஓரம் கட்டியவள், "கூல்! கூல்! இனியன் சார்" என்று கூறியவள், கையில் வைத்திருந்த பென் ட்ரைவை எடுத்து உடைப்பது போல் செய்கை செய்ய. உண்மையிலேயே பதறிவிட்டான் இனியன்.
இருக்காத பின்ன, அந்த பென்ட்ரைவ்வில் இருப்பது அவனது இத்தனை நாள் அயராத உழைப்பல்லவா.
"சரி அழகி! நா இந்த டீல்க்கு ஓகே சொல்லுறேன். அதை என்கிட்ட கொடு" என்றான் முடிவாக.
இனியன் சரியென்று சொன்ன மாத்திரத்தில் கையில் வெத்துப் பத்திரத்தை எடுத்த அழகி அவனிடன் அதில் கையெழுத்திடச் சொல்ல. இனியனோ வெத்துப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன் என்று தீர்மானமாக சொல்லிவிட்டான்.
பிறகு அந்த பத்திரத்தில், 'இனியன் ஆகிய நான். அழகியிடம் இருந்து என் பென்ட்ரைவை வாங்குவதற்காக அவளிடம் போட்ட ஒப்பந்தத்தின் படி, இன்றிலிருந்து அழகி கூறும் ஐந்து விஷயங்களையும் எந்த வித கேள்வியும் இன்றி செய்வேன் என்று உறுதிக் கூறுகிறேன்' என்று தானே எழுதிய அழகி, அதை இனியனிடம் கொடுத்து கையெழுத்திட சொன்னாள்.
அழகி தந்த பத்திரத்தை வாங்கிப் பார்த்தவன், அதில் அவள் எழுதி இருக்கும் வார்த்தைகளைப் படித்திவிட்டு மீண்டும் அடக்க மாட்டாமல் சிரித்தவன், "ஹாஹா... அழகி வேற லெவல் நீ போ ... அக்ரீமெண்ட்டே போட்டுட்டே... என்னால சிரிச்சு முடியல" என்றவன் சிரித்தவாறே அந்த பாத்திரத்தில் கையெப்பமிட்டு அழகியிடம் தந்தான்.
பத்திரத்தை ஒரு கரத்தில் வாங்கியவள், மறுக் கரத்தில் இருந்த பென்ட்ரைவை இனியனிடம் தந்தாள்.
இனியனிற்கு போன உயிர் திரும்ப வந்த உணர்வு, அந்த பென் ட்ரைவை வாங்கிய போது.
"ஓகே இனியன் சார்! ஆல் செட். சோ.. இன்னையில இருந்து நா சொல்லுற அஞ்சு விஷயத்துக்கு நீங்க ஓகே சொல்லணும் இல்லையா?? அதுனால, இந்த ஸ்ட்ரீட் கிரிக்கெட் விளையாடும் போது ட்ரயல் பால்ன்னு சொல்லி ஒரு பால் முன்னாடி போட்டுப் பார்ப்போம்ல. அதே போல இப்போ ட்ரயல் ஓகே ரூல் சரியா. இந்த ட்ரயல் ஓகே ரூல் என்னன்னா... நா எப்போ உங்களுக்கு கால் பண்ணாலும் நீங்க அதை அட்டெண்ட் பண்ணனும். இன்கேஸ் நீங்க பிஸியா இருந்தா .. நீங்க எப்போ ஃப்ரி ஆறீயங்களோ அப்போ எனக்கு கால் பண்ணனும். இதுதான் இந்த ட்ரயல் ரூளோட கண்டிஷன் இனியன் சார்… புரிஞ்சதா?" என்று அழகி கெத்தாக கேட்பதாக எண்ணிக் கொண்டு ஒரு பாவனையில் கேட்க.
மீண்டும் குபீர் சிரிப்பு வந்தாலும் அதை முயன்று கட்டுப் படுத்திக்கொண்டு, "எனக்கு டீல் ஓகே அழகி " என்றான் இனியன்.
"வாவ்! நீங்க இதுக்கும் வாக்குவாதம் பண்ணுவீங்க.. நா நிறைய பேசணும்ன்னு நினைச்சேன். பரவாயில்லை இனியன்.. நீங்களும் கொஞ்சம் சூப்பர் தான்" என்றாள் பாராட்டாக.
"ஹாஹா… தேங்க யூ போர் யூர் காம்ளிமெண்ட் அழகி! நா நினைச்சு இருந்தா.. நீ வந்தப்பவே உன்னைப் பிடிச்சி வச்சிக்கிட்டு என் பென்ட்ரைவ்வை வாங்கி இருக்கலாம். பட் நா அதை விரும்பாமத் தான் அமைதியா இருந்தேன். இன்னும் சொல்லப் போன ரொம்பவே பொறுமையா இருந்தேன், என் லிமிட்டை தாண்டியும். அப்படியும் ஒரு சில இடத்துல அவுட் பர்ஸ்ட் ஆகி இருப்பேன். எப்படியோ உன் பேச்சால் என்னை திரும்ப அமைதி பண்ணிட்ட நீ. தேங்க்ஸ் போர் தட் அழகி. என்னோட அங்கர் கண்ட்ரோல் லெவல்ல நானே டெஸ்ட் பண்ணிப் பார்த்துக்க தெரிந்தோ தெரியாமலோ நீ ரொம்பவே ஹெல்ப் பண்ணிருக்க அழகி.. தேங்க்ஸ்.." என்றவன் அழகியிடம் விடைப்பெற்று கிளம்ப,
அழகியோ, 'இப்போ ! இவ்வளவு நேரம் நாம அவரை வச்சி வம்பு செஞ்சோமா?? இல்ல அவரு அவரையே டெஸ்ட் பண்ணிக்க வான்டட்டா வந்து சோதனை எலியா நாமளா நின்னோமா?? ' என்று புரியாமல் புலம்பியப் படியே நின்றிருந்தவள்,
"எது எப்படியோ ! இனி இனியன் சார் மொத்தமும் என் கண்ட்ரோல்" என்று உல்லாசமாக எண்ணிக் கொண்டு விசிலடித்தப் படி வீட்டிற்குச் சென்றாள் அழகி.
Last edited: