அத்தியாயம் 5
குழியினுள் விழுந்துக் கிடந்த இருவரில், முதலில் சுதாரித்துக் கொண்ட பத்மா, மெல்ல எழுந்து நின்று அந்த குழியினை சுற்றிப் பார்த்தாள். அதிகம் அழமில்லாத அதே சமயம் மத்திமமான அகலமுடைய சின்ன குழி அது. சற்று உயரமான பத்மாவே குழியினுள் இருந்து எக்கிப் பார்த்தால் தான் ரோட்டை பார்க்க முடியும். அப்படி இருக்கையில், பத்மாவின் நெஞ்சளவே இருக்கும் அழகி அந்த குழிக்குள் நின்று எவ்வளவு தூரம் எக்கிப் பார்த்தாலும், நிச்சயமாக அவளுக்கு ரோடு தெரிய வாய்ப்பே இல்லை.
அழகியை பற்றிய சிந்தனை வந்ததும் தான், அவள் எங்கே என்று திரும்பி பார்த்தாள் பத்மா.
அழகியோ எப்படி அங்கு விழுந்தாளோ அப்படியே அசையாமல் கிடப்பதை கண்ட பத்மா, பதறியப்படி அவள் அருகில் சென்று அவளை அசைத்து எழுப்ப முயன்றாள்.
அந்த அசைவில் கண் விழித்த அழகி பத்மாவைப் பார்த்து கேட்டாளே ஒரு கேள்வி, ஆடிப்போய்விட்டாள் பத்மா.
"பத்து… நாம சொர்க்கத்துல தானே இருக்கோம் இப்போ! இங்க அந்த அமிர்தம் ஜூஸ் எங்கே விற்பாங்கன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுடி? ஒரு ரெண்டு கிளாஸ் வாங்கி குடிப்போம். வண்டி மரத்துல மோதியும் கீழே விழாம... சும்மா காத்துலையே பறந்து சொர்க்கம் வரைக்கும் வந்து இருக்கிறோம்ல அது வேற ரொம்ப டயர்டா இருக்குடி.
அப்படியே, இந்த படத்துலாம் வர மாதிரி அழகான தேவேந்திரர்கள் எல்லாம் எங்க இருப்பாங்கன்னு கொஞ்சம் கேட்டு அட்ரஸ்சை வாங்கி வைடி பத்து. போய் அவங்கள பார்க்கலாம்… நல்லா இருந்தா கொஞ்ச நேரம் சைட்டிங் அடிச்சிட்டு வரலாம். அப்புறம், முக்கியமா இங்க இருக்குற மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை போய் பார்க்கனும்டி… ரம்பை ஊர்வசிக்கு எல்லாம் போடுற மேக்கப் மாதிரி நாமளும் போட்டுக்கனும் பத்து. இல்லன்னா ஆட் ஒன் அவுட்டா நாம மட்டும் தனியா தெரிவோம்..." அழகி தான் பாட்டிற்கு பேசிக்கொண்டே இருந்தாள்.
பேய் முழி முழிப்பதாக சொல்வார்களே! அப்படி ஒரு முழியைத் தான் முழித்துக் கொண்டிருந்தாள் பத்மா, அழகயின் கேள்வியில்.
தனது கேள்விக்கான பதிலை தராமல் தன்னை விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பத்மாவை நோக்கி, "அடியே! என்னை அப்புறம் ரசிக்கலாம். இப்போ போய் அமிர்தம் ஜூஸ்சும், மேக்கப் மேன்னும் எங்கன்னு பார்த்துவிட்டு வா..." என்றாள் அழகி ஆர்வமாக. ஆனால் அழகி பேசுகையில் அவளின் குரல், தெளிவில்லாமல் ஏதோ கனவு நிலையில் இருந்து பேசுவது போல் குழறலாகத் தான் இருந்தது.
இம்முறை சற்று நிதானித்த பத்மா, அழகியின் அருகில் சென்று அவளது கைகளைப் பிடித்து அழுத்திக் கிள்ளி… அவளை சுயநினைவிற்குக் கொண்டு வந்தாள்.
பத்மா கிள்ளியதால் ஏற்பட்ட வலியின் விளைவால், கைகளை தேய்த்தவாறு எழுந்தமர்ந்த அழகி பத்மாவை பார்த்து, "பக்கி மாடே பத்து, ஏண்டி! இப்போ என் கைய பிடிச்சு கிள்ளின?" என்றாள் காட்டமாக.
"அடடா! நீ ஏன் பேச மாட்ட அழகி, பைத்தியம் மாதிரி எதையாவது ஓ(உ)ளறிக்கிட்டு இருன்னு உன்னை எல்லாம் அப்படியே விட்டு இருக்கணும்" என்றவள் , இவ்வளவு நேரமும் அமிர்தம் ஜூஸ்சை கேட்டு அழகி செய்த ரகளைகளை எல்லாம் அவளிடம் விலாவாரியாக எடுத்துச் சொல்ல, அதைக் கேட்டு அசடு வழிந்தவாறே,
“சரி.. சரி.. அதை விடு. இப்போ என்ன பண்ணலாம்னு பாப்போம் வா. ஆமா, பத்து! சந்தோவோட புல்லட்டை பார்த்தியாடி.. என்ன நிலைமைல இருக்கு..” என்று பத்மாவிடம் கேட்டவாரே எழுந்து நின்ற அழகி, தன் காலின் கட்டை விரலை மட்டும் தரையில் படும்படி நன்றாக அழுத்தினாள். குதியங்காலை மேலே உயர்த்தி தன்னால் முடிந்த மட்டும் எக்கி நின்று எட்டிப் பார்த்தும், அவளால் அந்த குழிக்கு வெளியில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கவே முடியவில்லை.
“விடு அழகி... நீ எவ்வளவு பார்த்தாலும் வெளியே ஒன்னும் தெரியாது. யாரவது அவங்களா பார்த்து வந்து நமக்கு ஹெல்ப் பண்ணினாதான் உண்டு. நீ வந்து இப்படி உக்காரு பாத்துக்கலாம்… என்ன நடக்குதுன்னு... அப்புறம், சந்தோஷ் வண்டிக்கு ஒன்னும் அவ்வளவு அடி பலமில்ல.. அது அந்த மரத்துக்கிட்டையே தான் விழுந்துக் கிடக்குது. நாம தான் ஹேர்ல பறந்து வித்தை காட்டிக்கிட்டே இந்த குழிக்குள்ள விழுந்திருக்கோம்..” என்று கூறிய பத்மாவின் நினைவலைகளில் அவர்கள் இருவரும் வண்டியில் இருந்து பறந்து வந்த காட்சி ஓட … கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் அழகியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் பத்மா.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த அழகி, “ நீ எதை நினைச்சு இப்படி சிரிக்கிறேன்னு... ஐ நோ டி பத்து…” என்று கூறி பத்மாவுடன் சேர்ந்து தானும் அடக்க மாட்டாமல் சிரித்தாள்.
அந்த குழியினுள் இருந்து எவ்வாறு வெளியே செல்வது என்று பலவிதமான யோசனைகளுக்கு பிறகு அழகியும், பத்மாவும் ஒரு முடிவிற்கு வந்தனர்.
அதை செயல் படுத்தும் வகையில், அழகி மண்டியிட்டு அமர… அவள் மீது ஏறி குழியினுலிருந்து வெளியில் சென்றாள் பத்மா. தனது துப்பட்டாவை கழற்றி குழிக்குள் போட்ட பத்மா, அதை குழிக்கு வெளியில் இருந்து இறுக்கிப் பிடிக்குக்கொள்ள... அதை பற்றிக்கொண்டு அழகியை மேலே ஏறி வரச் சொன்னாள். இது தான் அவர்களின் மாஸ்டர் பிளான். இந்த அழகான பிளானை போட்டுத் தந்தது வேறு யாருமல்ல சாட்சாத் நம்ம அழகி தான்.
பிளான் செய்த படியே பத்மா குழிக்குள் துப்பட்டாவை போட்டுவிட்டு அதை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நிற்க, உள்ளிருந்த அழகியும் அந்த துப்பட்டாவை கெட்டியாக பற்றிக்கொண்டு மேலே ஏறுவதற்கு முயன்றாள்.
முதல் நான்கு அடிகளை மெல்ல மெல்ல அந்த துப்பட்டாவை பற்றியவாறே ஏறியவளின் கைகள் துப்பட்டாவை விட்டு லேசாக நழுவ, ‘ஐயோ… விட்டுறக் கூடாது.. விட்டுறக் கூடாது..’ என்று பதறியே துப்பட்டாவை விட்டுவிட்ட அழகி, மீண்டும் குழிக்குள்ளேயே விழுந்தாள்.
கீழே விழுந்த அழகியே கத்தாமல் இருக்க, மேலே நின்றுக் கொண்டிருந்த பத்மாவோ, “அழகி… ஒன்னும் ஆகலைல்ல… அழகி…” என்று கத்திக் கூப்பாடு பட்டாள் . பத்மாவின் இந்த கத்தல் சாலையில் சென்றுக் கொண்டிருந்த மருதுவிற்குக் கேட்க சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியவன், கண்டதெல்லாம் விழுந்துக்கிடந்த சந்தோஷின் வண்டியயையும், அதற்குச் சற்றுத் தொலைவில் கத்திக் கொண்டிருந்த பத்மாவையும் தான்.
வண்டி விழ்ந்து கிடந்த நிலையே அங்கு என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்ல, மருதுவிற்கு பின்னால் அமர்ந்திருந்த அமிழ்தினியன் பத்மாவிற்கு உதவலாம் என்று எண்ணி அங்கு சென்றான். மருதுவும் அவனை பின்தொடர்ந்தான்...
அமிழ்தினியனும் , மருதுவும் பத்மாவை நோக்கி நெருங்க, மருதுவை அங்கு கண்ட நொடி அவனிடம் ஒடிவந்த பத்மா, “மாமா… மாமா … நம்ம அழகி அந்த குழிக்குள்ள மாட்டிக்கிட்டா… சிக்கிரம் வந்து காப்பாத்து மாமா…” என்றாள் பதற்றத்துடன்.
'அழகி... குழிக்குள்ள…' என்ற வார்த்தைகளை கேட்டதுமே அந்த குழியருகில் சென்றவன், என்ன செய்யலாம் என்று யோசித்தவாறே அழகியிடம் பேச்சுக் கொடுத்தான் அவளை இயல்பாக்கும் பொருட்டு.
ஏன்னென்றால் அளவுக்கு மீறி அழகி பதற்றப்பட்டால் அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் என்றும், அதன் பிறகு அவள் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது ஒரு வாரக் காலம் கூட ஆகலாம் என்பது மருதுவிற்கு தெரியும். சொல்லப் போனால் சந்தோஷ், மருது, அழகியின் தந்தை வேலுசாமி இவர்களை தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது.
மருது அழகியிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருக்க, சற்றும் தாமதிக்காமல் அந்த குழிக்குள் இறங்கிய இனியன், அழகியின் இடையைப் பற்றி மேலே தூக்கி, மேலே நின்றிருந்த மருதுவின் கைகளை பற்றிக்கொண்டு மேலே செல்லுமாறு அழகியிடம் கூறினான்.
அழகியும் அவன் சொன்னதைப் போல் செய்து மேலேற, அவள் பத்திரம் தானா என்பதை உறுதிப் படுத்திக்கொண்ட இனியன். ஒரு தேர்ந்த போர் வீரனைப் போல் லாவகமாக மேலேறி வருவதை வாய்ப்பிளக்க கண்ட அழகி,
“வாவ்… சூப்பர்ங்க. அழகா ஏறுனீங்க..” என்றாள் பாராட்டாக.
“ஹஹா… தேங்க்ஸ் மதியழகி. அக்சுவலி இது ஒரு குட்டிக் குழி. மிஞ்சிப் போனா ஒரு ஆறே கால் அடி தான் இருக்கும். நீயே கொஞ்சம் முயற்சிப் பண்ணியிருந்தா, மேலேறி வந்து இருக்கலாம்… பட் உயரம் தான் கொஞ்சம் ப்ரோப்லம்மா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்...” என்ற இனியனின் பேச்சில் கடுப்பானவள்,
“ஹலோ மிஸ்டர். அமிழ்தினியன் சார்! நீங்க பனைமரம் மாதிரி ஒசரமா இருக்கிறோம்னு ஓவராப் பண்ணாதீங்க. என்னைப் பத்தி என்னவேணா பேசிக்கோங்க… ஆனா என் ஹயிட்ட பத்தி மட்டும் கிண்டாலா பேசுனிங்க.. அவ்வளவு தான் என் எனிமி லிஸ்ட்ல நீங்களும் ஆட் ஆகிடுவீங்கப் பார்த்துக்கோங்க. பீ கேர்லஸ்…” என்றாள் கோபமாக.
“அப்புறம்.. என்ன சொன்னீங்க? ஆறேகால் அடி குழியா... உங்களுக்கு வேணும்னா இது சின்னதா இருக்கலாம். நீங்க தான் பனைமரம் ஆச்சே. ஆனா, நான் பாவம் சின்னப் பொண்ணு… நாளே முக்கால் அடி ஹயிட் இருக்க எனக்கு ஆறே கால் ஹயிட் இருக்க இந்த குழிப் பெருசுத் தான். தெரியுமா...” என்றாள் படப்படப்பாய்.
மூச்சே விடமால் தம்கட்டி பேசிக்கொண்டிருந்த அழகியை இயல்பாக்கும் பொருட்டு, “ ஆமா… ரெண்டு பேரும் எப்படி இதுக்குள்ள விழுந்தீங்க” என்று மருதுக் கேட்க, அதற்கு விடையாக இன்ற காலையயில் சாவி வாங்க அத்தை வீட்டிற்கு சென்றதிலிருந்து இப்போது குழிக்குள் விழுந்ததுவரை அனைத்தையும் கூறி முடித்தவளை அமைதியாகப் பார்த்திருந்தான் மருது.
அழகி அனைத்தையும் கூறி முடித்ததும், “சோ… இப்போ ராஜன் கிட்ட பார்சலைத் திருப்பிக் கொடுக்கத் தான் ரெண்டு பேரும் போய்க்கிட்டு இருந்தீங்க... கரெக்டா..” என்றான் மருது நிதானமாக அவர்களைப் பார்த்து.
“அதே தான்டா மாடு பையா... சீக்கிரம் அந்த காச ராஜன் கிட்ட கொடுக்கணும். அதே மாதிரி அந்த ஃபைன் கட்டினவருக்கும் அந்த ஃபைன் அமௌன்ட்டை கொடுத்திடனும் … அப்போ தான் ரீலாக்ஸ்சா இருக்க முடியும் ” என்றாள் அழகி இனியனை பார்த்தவாறே.
இனியன் எதையோ மறுத்துக் கூற முற்பட, அவனை முந்திக்கொண்ட மருதுவோ, “ஆமா… யாரு அந்த அதிப்புத்திசாலி. மூணு மாங்காக்கு ஐயாயிரம் கொடுத்த மகாபிரபு?” என்று அழகியிடம் கேட்க,
“ நா தான்டா மச்சி… அந்த அதிப்புத்திசாலி… மகா பிரபு…” என்று சிரித்துக்கொண்டே கூறிய இனியனை உலக அதிசயத்தைப் பார்ப்பதைப் போல் பார்த்து வைத்த மருதுவின் தோள்களில் சிரித்தவாறே கைபோட்டு தட்டிய இனியன் அழகியை பார்த்து,
“எனக்கு அந்த காசைத் திருப்பி தரனும்னு எந்த அவசியமும் இல்ல மதியழகி. இந்த பார்சல் அண்ட் அமௌன்ட்டை… யார் அனுபினாங்களோ அவங்களுக்கே திருப்பி அனுப்பிடுங்க. அந்த லெட்டர்ல போட்டு இருந்த மாதிரி நீங்க யாருக்கும் பதில் சொல்லுற ஸ்டேஜ்லையோ... இல்லை கட்டுப்படுற ஸ்டேஜ்லையோ இருப்பதை என்னாலும் அக்ஸப்ட் பண்ணிக்க முடியாது. ஒருவேளை இப்போ அவங்க அனுப்பின இந்த பார்சலை அச்செப்ட் பண்ணி நீங்க என்கிட்ட இந்த அமௌன்ட்டை கொடுத்து செட்டில் பண்ணிட்டாலும்,
இந்த விஷயம் இல்லைனா... இதைபோல வேற விஷயத்தை வச்சி உங்களை கண்ட்ரோல் பண்ணப் பார்பாங்க. சோ… ஜஸ்ட் ரீடர்ன் இட் மதியழகி. என்னடா இவன் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கிறான்னு நினைக்க வேண்டாம். எனக்கு தோன்றிய விஷயத்தைச் சொன்னேன். அதை ஏத்துக்கிறதும் ஏற்காமல் போறதும் உங்க விருப்பம் தான் . அண்ட் ஓன் மோர் திங்… அந்த ஐயாயிரத்தை உங்களால எப்போ முடியுதோ அப்போ கொடுக்கலாம். உங்களுக்கு எந்தவித பயமும் வேண்டாம் மதியழகி, எங்கே இவன் இந்த காரணத்தைக் காட்டி நம்மகிட்ட ஒவரா அட்வான்டேஜ் எடுத்துப்பானோன்னு…” என்று மிக நீளமாக பொறுமையாய் பேசிக்கொண்டிருந்த இனியனை, ‘நீயாடா மச்சி இது’ என்பது போல் ஆச்சரியமாக பார்த்தான் மருது.
இனியன் சொல்வதெல்லாம் அழகிக்கும் சரி என்று பட, “ கண்டிப்பா இனியன்… இந்த பார்சலை ரீட்டர்ன் பண்ணிட்டு உங்க காசையும் சீக்கிரம் திரும்ப தருவேன்” என்று சிரித்துக்கொண்டே கூறியவளை பார்த்துப் புன்னகைத்தவன், “தட்ஸ் மை கேர்ள்” என்றான்.
“அப்புறம் இனியா… நீ அழகிக் கூடவே ப்ரெசிடென்ட் வீட்டுக்கு போய்டுடா . நா இங்க விழுந்துக்கிடக்குற சந்தோஷ் வண்டிக்குப் பட்டி டிங்கரிங் வேலையெல்லாம் பார்த்துட்டு வரேன்..” என்ற மருதுவின் கூற்றில் குழம்பிய அழகி,
“ஆமா… எங்க வீட்டுல உங்களுக்கு என்ன வேலை?” என்றாள். இனியனை நோக்கி கேள்வியாக.
“உங்க வீடா??”
“ஆமா… ப்ரெசிடென்ட் வேலுசாமி என் அப்பா தான்”
“ஒ!! நானும் மருதுவும் ஒரு சாப்ட்வேர் கம்பனி ஸ்டார்ட் பண்ணப்போறோம் இங்க அழகூர்ல.. அதை பத்தி ஏற்கனவே ப்ரெசிடென்ட் கிட்ட சொல்லி இருந்தோம். இன்னைக்கு பிளான் காட்டி பெர்மிசன் வாங்கணும். அப்புறம் இன்னும் ஒரு ஐடியாவும் இருக்கு. அதை இந்த ஊர்ல செயல்ப்படுத்த எந்த அளவுக்கு பாசிப்பிளிட்டிஸ் இருக்குன்னு பேசனும் மதியழகி” என்று எதற்காக தான் ப்ரெசிடென்ட் வேலுசாமியை காண, அவர் வீட்டிற்குச் செல்கிறேன் என்பதை விளக்கமாக சொன்னான் இனியன்.
“வாவ்!! செம இனியன். புது கம்பனி ஸ்டார்ட் பண்ணப் போறீங்களா... ஆல் தி பெஸ்ட் இனியன்… மருது சொன்ன மாதிரி நீங்க என் கூட வாங்க நா உங்களை வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன். மருது வண்டியை சரிப் பண்ணிட்டு வரட்டும்..” என்றாள் அழகி.
சந்தோஷின் வண்டியை எடுத்துக்கொண்டு மேக்கானிக் கடையை நோக்கி மருதுச் செல்ல. மருதுவும், இனியனும் வந்த வண்டியில் அழகி, இனியன், பத்மா மூவரும் பயணப்பட்டனர் அழகியின் இல்லம் நோக்கி.
**********************
குழியினுள் விழுந்துக் கிடந்த இருவரில், முதலில் சுதாரித்துக் கொண்ட பத்மா, மெல்ல எழுந்து நின்று அந்த குழியினை சுற்றிப் பார்த்தாள். அதிகம் அழமில்லாத அதே சமயம் மத்திமமான அகலமுடைய சின்ன குழி அது. சற்று உயரமான பத்மாவே குழியினுள் இருந்து எக்கிப் பார்த்தால் தான் ரோட்டை பார்க்க முடியும். அப்படி இருக்கையில், பத்மாவின் நெஞ்சளவே இருக்கும் அழகி அந்த குழிக்குள் நின்று எவ்வளவு தூரம் எக்கிப் பார்த்தாலும், நிச்சயமாக அவளுக்கு ரோடு தெரிய வாய்ப்பே இல்லை.
அழகியை பற்றிய சிந்தனை வந்ததும் தான், அவள் எங்கே என்று திரும்பி பார்த்தாள் பத்மா.
அழகியோ எப்படி அங்கு விழுந்தாளோ அப்படியே அசையாமல் கிடப்பதை கண்ட பத்மா, பதறியப்படி அவள் அருகில் சென்று அவளை அசைத்து எழுப்ப முயன்றாள்.
அந்த அசைவில் கண் விழித்த அழகி பத்மாவைப் பார்த்து கேட்டாளே ஒரு கேள்வி, ஆடிப்போய்விட்டாள் பத்மா.
"பத்து… நாம சொர்க்கத்துல தானே இருக்கோம் இப்போ! இங்க அந்த அமிர்தம் ஜூஸ் எங்கே விற்பாங்கன்னு கொஞ்சம் கேட்டு சொல்லுடி? ஒரு ரெண்டு கிளாஸ் வாங்கி குடிப்போம். வண்டி மரத்துல மோதியும் கீழே விழாம... சும்மா காத்துலையே பறந்து சொர்க்கம் வரைக்கும் வந்து இருக்கிறோம்ல அது வேற ரொம்ப டயர்டா இருக்குடி.
அப்படியே, இந்த படத்துலாம் வர மாதிரி அழகான தேவேந்திரர்கள் எல்லாம் எங்க இருப்பாங்கன்னு கொஞ்சம் கேட்டு அட்ரஸ்சை வாங்கி வைடி பத்து. போய் அவங்கள பார்க்கலாம்… நல்லா இருந்தா கொஞ்ச நேரம் சைட்டிங் அடிச்சிட்டு வரலாம். அப்புறம், முக்கியமா இங்க இருக்குற மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை போய் பார்க்கனும்டி… ரம்பை ஊர்வசிக்கு எல்லாம் போடுற மேக்கப் மாதிரி நாமளும் போட்டுக்கனும் பத்து. இல்லன்னா ஆட் ஒன் அவுட்டா நாம மட்டும் தனியா தெரிவோம்..." அழகி தான் பாட்டிற்கு பேசிக்கொண்டே இருந்தாள்.
பேய் முழி முழிப்பதாக சொல்வார்களே! அப்படி ஒரு முழியைத் தான் முழித்துக் கொண்டிருந்தாள் பத்மா, அழகயின் கேள்வியில்.
தனது கேள்விக்கான பதிலை தராமல் தன்னை விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பத்மாவை நோக்கி, "அடியே! என்னை அப்புறம் ரசிக்கலாம். இப்போ போய் அமிர்தம் ஜூஸ்சும், மேக்கப் மேன்னும் எங்கன்னு பார்த்துவிட்டு வா..." என்றாள் அழகி ஆர்வமாக. ஆனால் அழகி பேசுகையில் அவளின் குரல், தெளிவில்லாமல் ஏதோ கனவு நிலையில் இருந்து பேசுவது போல் குழறலாகத் தான் இருந்தது.
இம்முறை சற்று நிதானித்த பத்மா, அழகியின் அருகில் சென்று அவளது கைகளைப் பிடித்து அழுத்திக் கிள்ளி… அவளை சுயநினைவிற்குக் கொண்டு வந்தாள்.
பத்மா கிள்ளியதால் ஏற்பட்ட வலியின் விளைவால், கைகளை தேய்த்தவாறு எழுந்தமர்ந்த அழகி பத்மாவை பார்த்து, "பக்கி மாடே பத்து, ஏண்டி! இப்போ என் கைய பிடிச்சு கிள்ளின?" என்றாள் காட்டமாக.
"அடடா! நீ ஏன் பேச மாட்ட அழகி, பைத்தியம் மாதிரி எதையாவது ஓ(உ)ளறிக்கிட்டு இருன்னு உன்னை எல்லாம் அப்படியே விட்டு இருக்கணும்" என்றவள் , இவ்வளவு நேரமும் அமிர்தம் ஜூஸ்சை கேட்டு அழகி செய்த ரகளைகளை எல்லாம் அவளிடம் விலாவாரியாக எடுத்துச் சொல்ல, அதைக் கேட்டு அசடு வழிந்தவாறே,
“சரி.. சரி.. அதை விடு. இப்போ என்ன பண்ணலாம்னு பாப்போம் வா. ஆமா, பத்து! சந்தோவோட புல்லட்டை பார்த்தியாடி.. என்ன நிலைமைல இருக்கு..” என்று பத்மாவிடம் கேட்டவாரே எழுந்து நின்ற அழகி, தன் காலின் கட்டை விரலை மட்டும் தரையில் படும்படி நன்றாக அழுத்தினாள். குதியங்காலை மேலே உயர்த்தி தன்னால் முடிந்த மட்டும் எக்கி நின்று எட்டிப் பார்த்தும், அவளால் அந்த குழிக்கு வெளியில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கவே முடியவில்லை.
“விடு அழகி... நீ எவ்வளவு பார்த்தாலும் வெளியே ஒன்னும் தெரியாது. யாரவது அவங்களா பார்த்து வந்து நமக்கு ஹெல்ப் பண்ணினாதான் உண்டு. நீ வந்து இப்படி உக்காரு பாத்துக்கலாம்… என்ன நடக்குதுன்னு... அப்புறம், சந்தோஷ் வண்டிக்கு ஒன்னும் அவ்வளவு அடி பலமில்ல.. அது அந்த மரத்துக்கிட்டையே தான் விழுந்துக் கிடக்குது. நாம தான் ஹேர்ல பறந்து வித்தை காட்டிக்கிட்டே இந்த குழிக்குள்ள விழுந்திருக்கோம்..” என்று கூறிய பத்மாவின் நினைவலைகளில் அவர்கள் இருவரும் வண்டியில் இருந்து பறந்து வந்த காட்சி ஓட … கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் அழகியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் பத்மா.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த அழகி, “ நீ எதை நினைச்சு இப்படி சிரிக்கிறேன்னு... ஐ நோ டி பத்து…” என்று கூறி பத்மாவுடன் சேர்ந்து தானும் அடக்க மாட்டாமல் சிரித்தாள்.
அந்த குழியினுள் இருந்து எவ்வாறு வெளியே செல்வது என்று பலவிதமான யோசனைகளுக்கு பிறகு அழகியும், பத்மாவும் ஒரு முடிவிற்கு வந்தனர்.
அதை செயல் படுத்தும் வகையில், அழகி மண்டியிட்டு அமர… அவள் மீது ஏறி குழியினுலிருந்து வெளியில் சென்றாள் பத்மா. தனது துப்பட்டாவை கழற்றி குழிக்குள் போட்ட பத்மா, அதை குழிக்கு வெளியில் இருந்து இறுக்கிப் பிடிக்குக்கொள்ள... அதை பற்றிக்கொண்டு அழகியை மேலே ஏறி வரச் சொன்னாள். இது தான் அவர்களின் மாஸ்டர் பிளான். இந்த அழகான பிளானை போட்டுத் தந்தது வேறு யாருமல்ல சாட்சாத் நம்ம அழகி தான்.
பிளான் செய்த படியே பத்மா குழிக்குள் துப்பட்டாவை போட்டுவிட்டு அதை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நிற்க, உள்ளிருந்த அழகியும் அந்த துப்பட்டாவை கெட்டியாக பற்றிக்கொண்டு மேலே ஏறுவதற்கு முயன்றாள்.
முதல் நான்கு அடிகளை மெல்ல மெல்ல அந்த துப்பட்டாவை பற்றியவாறே ஏறியவளின் கைகள் துப்பட்டாவை விட்டு லேசாக நழுவ, ‘ஐயோ… விட்டுறக் கூடாது.. விட்டுறக் கூடாது..’ என்று பதறியே துப்பட்டாவை விட்டுவிட்ட அழகி, மீண்டும் குழிக்குள்ளேயே விழுந்தாள்.
கீழே விழுந்த அழகியே கத்தாமல் இருக்க, மேலே நின்றுக் கொண்டிருந்த பத்மாவோ, “அழகி… ஒன்னும் ஆகலைல்ல… அழகி…” என்று கத்திக் கூப்பாடு பட்டாள் . பத்மாவின் இந்த கத்தல் சாலையில் சென்றுக் கொண்டிருந்த மருதுவிற்குக் கேட்க சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியவன், கண்டதெல்லாம் விழுந்துக்கிடந்த சந்தோஷின் வண்டியயையும், அதற்குச் சற்றுத் தொலைவில் கத்திக் கொண்டிருந்த பத்மாவையும் தான்.
வண்டி விழ்ந்து கிடந்த நிலையே அங்கு என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்லாமல் சொல்ல, மருதுவிற்கு பின்னால் அமர்ந்திருந்த அமிழ்தினியன் பத்மாவிற்கு உதவலாம் என்று எண்ணி அங்கு சென்றான். மருதுவும் அவனை பின்தொடர்ந்தான்...
அமிழ்தினியனும் , மருதுவும் பத்மாவை நோக்கி நெருங்க, மருதுவை அங்கு கண்ட நொடி அவனிடம் ஒடிவந்த பத்மா, “மாமா… மாமா … நம்ம அழகி அந்த குழிக்குள்ள மாட்டிக்கிட்டா… சிக்கிரம் வந்து காப்பாத்து மாமா…” என்றாள் பதற்றத்துடன்.
'அழகி... குழிக்குள்ள…' என்ற வார்த்தைகளை கேட்டதுமே அந்த குழியருகில் சென்றவன், என்ன செய்யலாம் என்று யோசித்தவாறே அழகியிடம் பேச்சுக் கொடுத்தான் அவளை இயல்பாக்கும் பொருட்டு.
ஏன்னென்றால் அளவுக்கு மீறி அழகி பதற்றப்பட்டால் அவளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் என்றும், அதன் பிறகு அவள் இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தது ஒரு வாரக் காலம் கூட ஆகலாம் என்பது மருதுவிற்கு தெரியும். சொல்லப் போனால் சந்தோஷ், மருது, அழகியின் தந்தை வேலுசாமி இவர்களை தவிர வேறு யாருக்கும் இந்த விஷயம் தெரியாது.
மருது அழகியிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருக்க, சற்றும் தாமதிக்காமல் அந்த குழிக்குள் இறங்கிய இனியன், அழகியின் இடையைப் பற்றி மேலே தூக்கி, மேலே நின்றிருந்த மருதுவின் கைகளை பற்றிக்கொண்டு மேலே செல்லுமாறு அழகியிடம் கூறினான்.
அழகியும் அவன் சொன்னதைப் போல் செய்து மேலேற, அவள் பத்திரம் தானா என்பதை உறுதிப் படுத்திக்கொண்ட இனியன். ஒரு தேர்ந்த போர் வீரனைப் போல் லாவகமாக மேலேறி வருவதை வாய்ப்பிளக்க கண்ட அழகி,
“வாவ்… சூப்பர்ங்க. அழகா ஏறுனீங்க..” என்றாள் பாராட்டாக.
“ஹஹா… தேங்க்ஸ் மதியழகி. அக்சுவலி இது ஒரு குட்டிக் குழி. மிஞ்சிப் போனா ஒரு ஆறே கால் அடி தான் இருக்கும். நீயே கொஞ்சம் முயற்சிப் பண்ணியிருந்தா, மேலேறி வந்து இருக்கலாம்… பட் உயரம் தான் கொஞ்சம் ப்ரோப்லம்மா இருந்திருக்கும்னு நினைக்கிறேன்...” என்ற இனியனின் பேச்சில் கடுப்பானவள்,
“ஹலோ மிஸ்டர். அமிழ்தினியன் சார்! நீங்க பனைமரம் மாதிரி ஒசரமா இருக்கிறோம்னு ஓவராப் பண்ணாதீங்க. என்னைப் பத்தி என்னவேணா பேசிக்கோங்க… ஆனா என் ஹயிட்ட பத்தி மட்டும் கிண்டாலா பேசுனிங்க.. அவ்வளவு தான் என் எனிமி லிஸ்ட்ல நீங்களும் ஆட் ஆகிடுவீங்கப் பார்த்துக்கோங்க. பீ கேர்லஸ்…” என்றாள் கோபமாக.
“அப்புறம்.. என்ன சொன்னீங்க? ஆறேகால் அடி குழியா... உங்களுக்கு வேணும்னா இது சின்னதா இருக்கலாம். நீங்க தான் பனைமரம் ஆச்சே. ஆனா, நான் பாவம் சின்னப் பொண்ணு… நாளே முக்கால் அடி ஹயிட் இருக்க எனக்கு ஆறே கால் ஹயிட் இருக்க இந்த குழிப் பெருசுத் தான். தெரியுமா...” என்றாள் படப்படப்பாய்.
மூச்சே விடமால் தம்கட்டி பேசிக்கொண்டிருந்த அழகியை இயல்பாக்கும் பொருட்டு, “ ஆமா… ரெண்டு பேரும் எப்படி இதுக்குள்ள விழுந்தீங்க” என்று மருதுக் கேட்க, அதற்கு விடையாக இன்ற காலையயில் சாவி வாங்க அத்தை வீட்டிற்கு சென்றதிலிருந்து இப்போது குழிக்குள் விழுந்ததுவரை அனைத்தையும் கூறி முடித்தவளை அமைதியாகப் பார்த்திருந்தான் மருது.
அழகி அனைத்தையும் கூறி முடித்ததும், “சோ… இப்போ ராஜன் கிட்ட பார்சலைத் திருப்பிக் கொடுக்கத் தான் ரெண்டு பேரும் போய்க்கிட்டு இருந்தீங்க... கரெக்டா..” என்றான் மருது நிதானமாக அவர்களைப் பார்த்து.
“அதே தான்டா மாடு பையா... சீக்கிரம் அந்த காச ராஜன் கிட்ட கொடுக்கணும். அதே மாதிரி அந்த ஃபைன் கட்டினவருக்கும் அந்த ஃபைன் அமௌன்ட்டை கொடுத்திடனும் … அப்போ தான் ரீலாக்ஸ்சா இருக்க முடியும் ” என்றாள் அழகி இனியனை பார்த்தவாறே.
இனியன் எதையோ மறுத்துக் கூற முற்பட, அவனை முந்திக்கொண்ட மருதுவோ, “ஆமா… யாரு அந்த அதிப்புத்திசாலி. மூணு மாங்காக்கு ஐயாயிரம் கொடுத்த மகாபிரபு?” என்று அழகியிடம் கேட்க,
“ நா தான்டா மச்சி… அந்த அதிப்புத்திசாலி… மகா பிரபு…” என்று சிரித்துக்கொண்டே கூறிய இனியனை உலக அதிசயத்தைப் பார்ப்பதைப் போல் பார்த்து வைத்த மருதுவின் தோள்களில் சிரித்தவாறே கைபோட்டு தட்டிய இனியன் அழகியை பார்த்து,
“எனக்கு அந்த காசைத் திருப்பி தரனும்னு எந்த அவசியமும் இல்ல மதியழகி. இந்த பார்சல் அண்ட் அமௌன்ட்டை… யார் அனுபினாங்களோ அவங்களுக்கே திருப்பி அனுப்பிடுங்க. அந்த லெட்டர்ல போட்டு இருந்த மாதிரி நீங்க யாருக்கும் பதில் சொல்லுற ஸ்டேஜ்லையோ... இல்லை கட்டுப்படுற ஸ்டேஜ்லையோ இருப்பதை என்னாலும் அக்ஸப்ட் பண்ணிக்க முடியாது. ஒருவேளை இப்போ அவங்க அனுப்பின இந்த பார்சலை அச்செப்ட் பண்ணி நீங்க என்கிட்ட இந்த அமௌன்ட்டை கொடுத்து செட்டில் பண்ணிட்டாலும்,
இந்த விஷயம் இல்லைனா... இதைபோல வேற விஷயத்தை வச்சி உங்களை கண்ட்ரோல் பண்ணப் பார்பாங்க. சோ… ஜஸ்ட் ரீடர்ன் இட் மதியழகி. என்னடா இவன் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்கிறான்னு நினைக்க வேண்டாம். எனக்கு தோன்றிய விஷயத்தைச் சொன்னேன். அதை ஏத்துக்கிறதும் ஏற்காமல் போறதும் உங்க விருப்பம் தான் . அண்ட் ஓன் மோர் திங்… அந்த ஐயாயிரத்தை உங்களால எப்போ முடியுதோ அப்போ கொடுக்கலாம். உங்களுக்கு எந்தவித பயமும் வேண்டாம் மதியழகி, எங்கே இவன் இந்த காரணத்தைக் காட்டி நம்மகிட்ட ஒவரா அட்வான்டேஜ் எடுத்துப்பானோன்னு…” என்று மிக நீளமாக பொறுமையாய் பேசிக்கொண்டிருந்த இனியனை, ‘நீயாடா மச்சி இது’ என்பது போல் ஆச்சரியமாக பார்த்தான் மருது.
இனியன் சொல்வதெல்லாம் அழகிக்கும் சரி என்று பட, “ கண்டிப்பா இனியன்… இந்த பார்சலை ரீட்டர்ன் பண்ணிட்டு உங்க காசையும் சீக்கிரம் திரும்ப தருவேன்” என்று சிரித்துக்கொண்டே கூறியவளை பார்த்துப் புன்னகைத்தவன், “தட்ஸ் மை கேர்ள்” என்றான்.
“அப்புறம் இனியா… நீ அழகிக் கூடவே ப்ரெசிடென்ட் வீட்டுக்கு போய்டுடா . நா இங்க விழுந்துக்கிடக்குற சந்தோஷ் வண்டிக்குப் பட்டி டிங்கரிங் வேலையெல்லாம் பார்த்துட்டு வரேன்..” என்ற மருதுவின் கூற்றில் குழம்பிய அழகி,
“ஆமா… எங்க வீட்டுல உங்களுக்கு என்ன வேலை?” என்றாள். இனியனை நோக்கி கேள்வியாக.
“உங்க வீடா??”
“ஆமா… ப்ரெசிடென்ட் வேலுசாமி என் அப்பா தான்”
“ஒ!! நானும் மருதுவும் ஒரு சாப்ட்வேர் கம்பனி ஸ்டார்ட் பண்ணப்போறோம் இங்க அழகூர்ல.. அதை பத்தி ஏற்கனவே ப்ரெசிடென்ட் கிட்ட சொல்லி இருந்தோம். இன்னைக்கு பிளான் காட்டி பெர்மிசன் வாங்கணும். அப்புறம் இன்னும் ஒரு ஐடியாவும் இருக்கு. அதை இந்த ஊர்ல செயல்ப்படுத்த எந்த அளவுக்கு பாசிப்பிளிட்டிஸ் இருக்குன்னு பேசனும் மதியழகி” என்று எதற்காக தான் ப்ரெசிடென்ட் வேலுசாமியை காண, அவர் வீட்டிற்குச் செல்கிறேன் என்பதை விளக்கமாக சொன்னான் இனியன்.
“வாவ்!! செம இனியன். புது கம்பனி ஸ்டார்ட் பண்ணப் போறீங்களா... ஆல் தி பெஸ்ட் இனியன்… மருது சொன்ன மாதிரி நீங்க என் கூட வாங்க நா உங்களை வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன். மருது வண்டியை சரிப் பண்ணிட்டு வரட்டும்..” என்றாள் அழகி.
சந்தோஷின் வண்டியை எடுத்துக்கொண்டு மேக்கானிக் கடையை நோக்கி மருதுச் செல்ல. மருதுவும், இனியனும் வந்த வண்டியில் அழகி, இனியன், பத்மா மூவரும் பயணப்பட்டனர் அழகியின் இல்லம் நோக்கி.
**********************
Last edited: