அத்தியாயம் 2
புலர்ந்தும் புலராத அழகிய காலை நேரம் அது. 'ரூக்ளிங்… ரூக்ளிங்...' என்று கொட்டக்காச்சி பறவையின் இனிமையான இசையை ரசித்தவாறே தன் அத்தை மகன் ஹரியுடன் வயலை நோக்கி கையில் டீ தூக்குடன் சென்றுக் கொண்டிருந்தாள் அழகி.
கும்பகர்ணனின் தங்கை போல் தூங்குவதையே முழுநேர தொழிலாகக் கொண்டவள். இந்த அதிகாலை வேளையில் எழுந்து வயலை நோக்கிச் செல்கிறாள் என்றால் அதற்கு ஒரே காரணம் இந்த பறவைகளின் இன்னிசையைக் கேட்டு ரசிப்பதற்காக மட்டுமே தான்.
"டேய் ஹரி!! எங்கடா... இன்னும் என் செல்லத்தோட கியூட் மியூசிக்கை காணோம்" என்று அழகி புலம்பவும் 'குக்குக் குக்குக் குக்குக் குக்குக்குக்கு… குக்கு…குக்கு…' என்ற பொறிக்குயிலின் சத்தம் தேன் மழைகானமாக அவள் செவிகளை நிறைக்கவும் சரியாக இருந்தது.
அந்த அற்புதத்தருணத்தை ரசித்தவாறே நடந்தவளின் கண்களில் பட்டாள் அந்த வழியாகச் சென்றுக்கொண்டிருந்த கயல்விழி.
"ஹே.. கயலுலுலு… இங்க எங்க சுத்திக்கிட்டு இருக்க" என்று கயலை நோக்கி அழகி குரலெழுப்ப, அந்நேரம் அழகியை அங்குச் சற்றும் எதிர்ப்பார்த்திடாத கயல் தனக்குள் எழுந்த திகைப்பை மறைத்தவளாக அழகியை பார்த்து புன்னைகைத்தாள்.
அதற்குள் அவளை நெருங்கியிருந்த அழகி, “உன்னைத் தான் கேட்டேன் கயலு. என்ன இவ்வளவு வெள்ளன இந்தப் பக்கம்” என்றாள் சந்தேகமாய்.
“எல்லாம் என்ற மாமன் கூட லவ்ஸ் பண்ணத்தான்னு சொல்லுடா என் பஜ்ஜி...”
சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பிய அழகி கண்டது புல்லட் வண்டியில் சாய்ந்தவாறு நின்றுக்கொண்டிருந்த சந்தோஷை தான்.
“அடபாவி சந்தோ!! காலங்காத்தால ரொமான்ஸா. நீ கலக்குடா மச்சி... ஆனா இதையெல்லாம் பார்க்கணும் எனக்குத் தான் விதிச்சிருக்கு போல. சே.. இந்த சிங்கள் பொண்ணு சாபம் உன்னை சும்மாவே விடாதுடா சந்தோ...” என்று சோக குரலில் ராகம் பாடியவளை நோக்கி,
“சிங்களா இருக்கோம்னு ரொம்ப வருத்தபடுற போலக் குட்டா. டோன்ட் பீல்டா. உன் ஆளை இன்னைக்கே நீ மீட் பண்ணப் போற பாரேன். நா வேணும்னா கதிர்க்கு ஃபோன் பண்ணி... அழகி எப்பவும் உங்க நினைப்பாவே இருக்கா. அவ கிட்ட கொஞ்சம் பேசுங்கன்னு சொல்லட்டுமா?" என்று கிண்டல் செய்த சந்தோவின் சட்டை காலரை பிடித்துக் கீழே குனிய செய்தவள், அவன் தலையில் இரண்டு குட்டு வைத்த பிறகே பேச்சை ஆரம்பித்தாள்.
“அடப்பாவி… எனக்கு வில்லனே நீ தான்டா சந்தோ. பாவம் அவரே இவ வேண்டாம்னு நல்ல முடிவுல இருப்பார். நீ ஆணியே பிடுங்க வேண்டாம். அமைதியா இருந்தா மாட்டும் போதும். நானே இப்போ தான் கல்யாணப் பேச்சை எடுக்க மாட்டாங்கன்னு கொஞ்சம் ஜாலியா சுத்துறேன். அது பொறுக்கலையாடா உனக்கு. அதற்கும் வேட்டு வைக்க ரெடி ஆகிட்ட. எப்போடா இவளை மாட்டி விடலாம்னு சுத்தி திரியுற போல. பட்.. அது இந்த அழகி கிட்ட நடக்காது மை மச்சான்.
எனக்குன்னு வரப்போறவனுக்காக... நா சில பேசிக் ரூல்ஸ் வச்சுருக்கேன். அந்த ரூல்ஸ் எல்லாம் யாருக்கு கரெக்டா பொருந்துதோ... அவனைத் தான் நா கல்யாணம் செய்துப்பேன். சோ, உன்னோட வேலை என்னன்னா... என் ரூல்ஸ்க்கு ஏத்த பையனா பார்த்துவைக்கிறது தான் சரியா.. மை டியர் மச்சான்...”
“ஹஹா… அரக்காப்படி சைஸ்ல இருந்துகிட்டு கண்டிஷன்ஸ் வேற போடுறியா நீ… சரி அந்த ரூல்ஸ் என்ன என்னனு சொல்லும்… சொல்லி தொலையும்… நாங்களும் தெரிஞ்சிக்கிறோம். அப்படி என்ன ரூல்ஸ் தான் அதுன்னு..” வேண்டாவெறுப்பாகக் கேட்பதுப்போல் கேட்டாலும். சந்தோவிற்கு அப்படி எந்த மாதிரியான ரூல்ஸ்க்களைத் தான் அழகி சொல்லுவாள் என்று தெரிந்துக்கொள்ள அர்வமாகவே தான் இருந்தது.
சந்தோஷ் மட்டுமன்றி அவனுடன் நின்றிருந்த கயலும், ஹரியும் கூட ஆர்வமாக அழகி என்ன கூற போகிறாள் என்று காத்திருக்க. அவள் கூறிய பதிலை கேட்டு கிழே விழுந்து புரண்டு சிரிக்காத குறைதான் மூவருக்கும்.
அப்படி விழுந்து புரண்டு சிரிக்கும் அளவிற்கு என்ன தான் சொன்னாளாம் அவள். இதோ… அழகி கூறியவை எல்லாம் இவை தான்.
“ரொம்பப் பெரிய ரூல்ஸ்லாம் இல்லை சந்தோ… சிம்பிள் தான். எனக்காக வர போறவன் ‘கண்ணை வீசி… கண்ணை வீசி…’ பாட்டுல வர அஷ்வின் மாதிரி இருந்தா போதும். அதே மாதிரி ஹையிட்… இல்ல… இன்னும் கொஞ்சம் ஹையிட் அதிகமா... அதே கலர்ல … அதே போலீஸ் ஹேர் கட்ல இருக்கனும் சந்தோ அவன். முக்கியமா நல்லா பாட தெரியும். அழகா டான்ஸ் பண்ண தெரியனும். அப்போ தானே நாங்க எங்க கல்யாணத்துல ‘மம்பட்டியான்’ சாங்க்கு அழகா சேர்ந்து டான்ஸ் ஆட முடியும். அப்புறம் முக்கியமா நான்-வெஜ்ல மினிமம் ஒரு பத்து வகையான டிஷ்சாவது செய்யத் தெரியனும். இதெல்லாத்துக்கும் மேல அவரு கண்டிப்பா போலீஸா தான் இருக்கனும். பிகாஸ் நான் காக்க காக்க சூர்யா பான்ல அதான்.. இப்போதைக்கு இவ்வளவு தான் எனக்கு ஞாபகத்துல இருக்கு. மிச்சத்த எல்லாம் அப்புறமா யோசிச்சி வாட்ஸப்ல சொல்லுறேன்டா சந்தோ…” என்ற அழகியின் ரூல்ஸ்களைக் கேட்டுக் கொண்டிருந்த சந்தோஷ், கயல் மற்றும் ஹரி மூவராலும் சிரிப்பை கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் சிரித்துக்கொண்டிருக்க. அவர்களை நோக்கி முறைத்த அழகி.
“என்ன.. கிண்டலா!! பார்த்துப் பொறுமையா சிரிங்க.. பல்லு சுளுக்கிக்கப் போகுது” என்றாள் கடுப்புடன்.
“சுளுகினாலும் பரவாயில்லை அழகி. நீயும் உன் போலீஸ் வுட்டுக்காரரும் ஆடுற மம்பட்டியான் டான்சை பார்த்துட்டு தான் நாங்க ட்ரீட்மென்ட் செய்யவே போவோம். நீ கவலையே படாதே…” என்று கயல் கூற,
“அந்தப் பத்து நான்-வெஜ் ஐட்டமை விட்டுட்டியே புஜ்ஜி. அதையும் அவளோட காக்க காக்க சூர்யா கெட்டப்ல இருக்க அஷ்வினே செய்து தருவாரு…” என்று கயலுடன் சேர்ந்துக்கொண்டு சந்தோவும் அவளைக் கிண்டல் செய்யவும். எரிச்சலின் உச்சத்திற்கே சென்ற அழகி. தன் கையிலிருந்த தூக்கை தூக்கி சந்தோவிடம் தந்தவள்.
“ரொம்பப் பெருமையா இருக்கு. என் மம்பட்டியான் டான்சைப் பார்க்க நீங்கயெல்லாம் இவ்வளவு ஆர்வமா இருக்குறதை நினைச்சு. அப்படியே சந்தோ! நீயும் கயலும் சேர்ந்து என் டான்ஸ் ஸ்டெப்ஸ் எப்படி எல்லாம் இருக்கும்னு கற்பனை பண்ணி பார்த்துகிட்டே. இந்தத் தூக்குல இருக்குற ஆரி போன டீயை சூடு பண்ணி வயல்ல இருக்க ஆயாக்கும் , அங்க வேலை பார்க்குறவங்களுக்கும் கொடுப்பீங்கலாம். இந்தக் கேப்ல நானும் ஹரியும் அப்படியே வொறு ரௌண்ட்ஸ் போயிட்டு வருவோமாம் சரியா…
ஒருவேளை... இப்போ நா சொன்ன இந்த வேலையைச் செய்யாம, எனக்கு டிமிக்கி குடுகலாம்ன்ற எண்ணம் உனக்கிருந்தா அதை அப்படியே மறந்திடு. பிகாஸ் நா சொன்னப்படி நீங்க செய்யலைன்னா… உங்க ரெண்டு பேரை பத்தியும் சரவணன் பெரியப்பா கிட்ட நான் போட்டுக் கொடுத்துடுவேன். சோ, இந்த அழகிக்கிட்ட எப்பவும் ஜாக்கிரதையா இருக்கனும். பீ கேர்லெஸ்…” என்று அவர்களை நோக்கி கூறியவள். ஹரியை அழைத்துக்கொண்டு குளத்தை நோக்கி சென்றாள்.
அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த சந்தோ, “இந்தக் குட்டி சாத்தான். எவ்வளவு நேக்கா நம்மல அம்மாச்சிகிட்ட கோர்த்துவிட்டுட்டுப் போய்டா பாத்தியா பஜ்ஜி. இதுல ‘பீ கேர்லெஸ்’ வேறயாம். அது கேர்புல்ன்னு கூடச் சொல்லத் தெரியலை இவளாம் மிரட்டுற அளவுல இருக்கு நம்ம நிலைமை. எல்லாம் இந்தக் கயலோட அப்பா அந்த கிடா மீசைக்குப் பயந்துதான். ச்ச… வயல் பக்கம் போனா இன்னைக்கு முழுசும் வேலை சொல்லிச் சொல்லியேக் கொல்லுவாங்களே இந்த அம்மாச்சி வேற...” என்று புலம்பிய படியே ‘இந்தக் குட்டா கிட்ட சிக்கி சின்னபின்னம் ஆகப் போற அந்த புண்ணிவான் யாரோ… எவனோ... எங்கு இருக்கானோ… பாவம் அந்த ஜீவன்’ என்றேண்ணினான் சந்தோஷ்.
எந்நேரத்தில் சந்தோ அழகியிடம் சிக்கப் போகும் அந்த அ(ட)ப்பாவி ஜீவனைப் பற்றி எண்ணினானோ என்னவோ.
அந்த ஜீவனும் சரியாக அழகி ஹரியுடன் சென்றிருக்கும் குளத்திற்கு எதிர்புறமிருக்கும் பேருந்து நிறுத்ததில் வந்திறங்கினான்.
குளத்தில் இருக்கும் சறுக்கலில் ஹரியுடன் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அழகி. அவளையும் அறியாமல் ஆறு மணி பஸ்சில் வந்திறங்கிய அந்தப் புதியவனைக் கண்டதும் ‘யாருடா இவன் இவ்வளவு ஒசரமா இருக்கான். சரியான பனைமரம் போல இருக்கான்ல’ என்று எண்ணியவாறு தன்னருகில் அமர்ந்திருந்த ஹரியின் கைகளைச் சுரண்டினாள்.
“டேய் ஹரி! யாருடே அது... நம்ம சந்தோ பயலுக்கே டப் கொடுக்குற மாதிரி இவ்வளவு ஒசரமா இருக்குறது. இதுக்கு முன்ன இந்த உருவத்தை நா ஊருக்குள்ள பார்த்த மாதிரி ஞாபகமில்லையே . ஊருக்கு புதுசோ.. வெளியூர் ஆளா…”
அழகி தன் பாட்டிற்குக் கேள்விக்கனைகளை ஹரியை நோக்கி விசிக்கொண்டே செல்ல. ஹரியும் தான் சேகரித்த தகவல்களை எல்லாம் அழகியிடம் கூறலானான்.
“இவரா… இவர் பெயர் அமிழ்தினியன். நம்ம மருது அண்ணன் இருக்காருல அவரோட தோஸ்து. இவரும் மருது அண்ணனும் சேர்ந்து எதோ கம்ப்யூட்டர் கம்பனி வைக்கப் போறாங்களாம் நம்ம ஊருல. அதுக்காக மருதண்ணன் கூட ஒரு முறை இங்க வந்திருந்தாரு அப்போ பார்த்தேன் நான். நீ அந்தச் சமயம் காலேஜ் டூர் போய் இருந்த புள்ள... அதான் உனக்குத் தெரியலை”
“ஒ… அப்போ வந்தாரா. அதான் எனக்குத் தெரியல. இல்லைனா எனக்குத் தெரியாம இந்த ஊருக்குள்ள வொரு ஈ.. காக்கா கூட வர முடியாதே. ஆமா… எந்த ஊருடே ஹரி இவரு”
“ சொந்த ஊரு புதுக்கோட்டை டவுன் தானாம் அழகி. ஆனா படிச்சது வேலைப் பார்ப்பது எல்லாம் சென்னைலயாம்” என்று கருமமே கண்ணாகத் தான் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் அழகியிடம் கூறிக்கொண்டிருந்தான் ஹரி.
" அடேய்! இந்த இன்போர்மேஷன் கலெக்ட் பண்ணுற வேலையை மட்டும் பார்காம. கொஞ்சமாச்சும் படிக்கிற வேலையைப் பாருடா. நீ வேற இப்போ பத்தாகுப்பு(பத்தாம் வகுப்பு) போகப் போற. அப்பறம் படிக்காம நல்ல மார்க் வரலைனா. மொத்தக் குடும்பமும் ஒண்ணு சேர்ந்து அழகி தான் இவனைக் கெடுத்து குட்டிசுவர் ஆக்கி வச்சிருக்கான்னு சொல்லி… அறிவுரை சொல்லுறேன்னு ரெண்டு பேருக்கும் சேர்த்து பிளேட் போட ஆரம்பிச்சிடுவாங்க. அதுனால ஒழுங்கா படிப்பை பாருடே. நல்லா படிச்சா தான் என்னை மாதிரி இன்ஜினீயராக முடியும்" என்று அழகி கெத்தாகக் கூற.
அவளை வெத்தாக்கும் பொருட்டு, " எப்படி… உன்னை மாதிரி வெட்டி இன்ஜினீயராவா அழகி ஆகணும்" என்று கூறியவனை அவள் பிடிக்கும் முன்பே மின்னலென மறைந்திருந்தான் ஹரி.
"மவனே … என் கையில் சிக்காமல்லா இருக்கப்போற நீ… வசமா மாட்டுவல அப்போ இருக்கு உனக்கு" என்றெண்ணியவள்.
அடுத்ததாக யாரை வம்பு பண்ணலாம் என்று யோசித்தவாறே நடையை கட்டினாள்.
ஆனால், அழகியின் கேட்ட நேரமோ இல்லை மற்றவர்களின் நல்ல நேரமோ… ஒருவருமே அவளிடம் அகப்படாத காரணத்தினால் சமத்துப் பிள்ளையாக வீட்டிற்கே சென்றாள்.
வீட்டிற்குள் நுழையும்போதே!! வரவேற்பறையில் கேட்ட குரலில் குத்துகலமானவள். ஓடிச்சென்று அந்தக் குரலுக்கு சொந்தக்காரியான பத்மாவை கட்டிக் கொண்டாள் அழகி.
"அடியே பத்து… எப்போடி வந்தே… என்கிட்ட ஒரு வார்த்தைக் கூடச் சொல்லலை பார்த்தியா நீ ஊருக்கு வரேன்னு…" என்று குறையாக அவளிடம் கேட்டாலும், சலுகையாக அவள் மீதே சாய்ந்துக்கொண்டாள்.
"நா வர மாதிரியே ஐடியால இல்லைடா மதிமா. அதான் உன்கிட்ட சொல்லலை. இங்க தெற்கூர்ல என் மாமா பொண்ணுக்கு சடங்கு இன்னைக்கு. நான் வந்தே ஆகனுமாம். சோ.. வேற ஆப்ஷனே இல்லமா வந்துட்டேன்டா" என்றாள் பத்மா.
"அடடே… தெற்கூர் போறீங்களா மேடம். அதான் இம்புட்டு மேக்கப்… ‘சரி சரி’ புரியுது... ரொம்ப நாள் கழிச்சு உன் அவரைப் பார்க்க போற. அப்போ கொஞ்சம் பளிச்சுன்னு இருக்கனும் தானே. அதுவும் மாமா பொண்ணுக்கு சடங்கு வேற. அங்க ஹய்லைட்டே அத்தாச்சி நீ தான். என்ஜாய்.. என்ஜாய்.. பத்து.." என்றாள் அழகி உற்சாகமாய்.
அழகி, கயல், பத்மா மூவரும் சிறுவயதில் இருந்தே தோழிகள். பத்மாவும் கயலும் ஒத்த வயதுடையோர். ஆனால், அழகி இவர்களைக் காட்டிலும் வயது குறைந்தவளாகினும் இவர்களுகிடையில் இருக்கும் நட்பு ஆழமானது.
"நீ வேற ஏன்டி… அவரைப் பார்த்தே ரொம்ப நாள் ஆகுது. இன்னைக்கும் பார்ப்பேனா மாட்டேனான்னு தெரியல" என்றாள் பத்மா முகம் சிவக்க.
அவள் எப்போதும் அப்படித்தான். அந்த அவளின் அவரைப் பற்றிப் பேசினாலே போதும் அவள் முகம் சிவந்துவிடும். ஆனால் அந்த அவர் யாரென்று தான் இதுவரையிலும் யாருக்கும் தெரியாது. ஏன் கயலுக்கும் அழகிக்கும் கூட அது யாரென்று தெரியாது. அத்தனை ரகசியமாக வைத்திக்கிறாள் பத்மா அந்த அவரை. ஒருமுறை கூட அவள் அந்த நபரின் பெயரை சொல்லியதில்லை யாரிடமும். எப்போதும் 'அவரை ', 'அவர்' என்று தான் அந்த நபரை விளிப்பாளே தவிர ஒருபோதும் பெயரைச் சொல்லியதில்லை. அழகியும் ஹரியும் கூடத் தங்கள் துப்பறியும் வேலையையும் செய்துப் பார்த்துவிட்டார்கள். இருந்தும் அவர்களால் அந்த ‘அவரை’ கண்டுபிடிக்க முடியவில்லை.
"இன்னைக்கு அந்தச் சீக்ரெட் மேன் யாருன்னு நிச்சயம் இந்த அழகி கண்டுப்பிடிக்கிறேன் பாருடி பத்து.." என்று பத்மாவிடம் கூறியவள், ஐந்தே நிமிடங்களில் தயாராகி வந்தாள் பத்மாவுடன் தெற்கூர் செல்வதற்காக.
புலர்ந்தும் புலராத அழகிய காலை நேரம் அது. 'ரூக்ளிங்… ரூக்ளிங்...' என்று கொட்டக்காச்சி பறவையின் இனிமையான இசையை ரசித்தவாறே தன் அத்தை மகன் ஹரியுடன் வயலை நோக்கி கையில் டீ தூக்குடன் சென்றுக் கொண்டிருந்தாள் அழகி.
கும்பகர்ணனின் தங்கை போல் தூங்குவதையே முழுநேர தொழிலாகக் கொண்டவள். இந்த அதிகாலை வேளையில் எழுந்து வயலை நோக்கிச் செல்கிறாள் என்றால் அதற்கு ஒரே காரணம் இந்த பறவைகளின் இன்னிசையைக் கேட்டு ரசிப்பதற்காக மட்டுமே தான்.
"டேய் ஹரி!! எங்கடா... இன்னும் என் செல்லத்தோட கியூட் மியூசிக்கை காணோம்" என்று அழகி புலம்பவும் 'குக்குக் குக்குக் குக்குக் குக்குக்குக்கு… குக்கு…குக்கு…' என்ற பொறிக்குயிலின் சத்தம் தேன் மழைகானமாக அவள் செவிகளை நிறைக்கவும் சரியாக இருந்தது.
அந்த அற்புதத்தருணத்தை ரசித்தவாறே நடந்தவளின் கண்களில் பட்டாள் அந்த வழியாகச் சென்றுக்கொண்டிருந்த கயல்விழி.
"ஹே.. கயலுலுலு… இங்க எங்க சுத்திக்கிட்டு இருக்க" என்று கயலை நோக்கி அழகி குரலெழுப்ப, அந்நேரம் அழகியை அங்குச் சற்றும் எதிர்ப்பார்த்திடாத கயல் தனக்குள் எழுந்த திகைப்பை மறைத்தவளாக அழகியை பார்த்து புன்னைகைத்தாள்.
அதற்குள் அவளை நெருங்கியிருந்த அழகி, “உன்னைத் தான் கேட்டேன் கயலு. என்ன இவ்வளவு வெள்ளன இந்தப் பக்கம்” என்றாள் சந்தேகமாய்.
“எல்லாம் என்ற மாமன் கூட லவ்ஸ் பண்ணத்தான்னு சொல்லுடா என் பஜ்ஜி...”
சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பிய அழகி கண்டது புல்லட் வண்டியில் சாய்ந்தவாறு நின்றுக்கொண்டிருந்த சந்தோஷை தான்.
“அடபாவி சந்தோ!! காலங்காத்தால ரொமான்ஸா. நீ கலக்குடா மச்சி... ஆனா இதையெல்லாம் பார்க்கணும் எனக்குத் தான் விதிச்சிருக்கு போல. சே.. இந்த சிங்கள் பொண்ணு சாபம் உன்னை சும்மாவே விடாதுடா சந்தோ...” என்று சோக குரலில் ராகம் பாடியவளை நோக்கி,
“சிங்களா இருக்கோம்னு ரொம்ப வருத்தபடுற போலக் குட்டா. டோன்ட் பீல்டா. உன் ஆளை இன்னைக்கே நீ மீட் பண்ணப் போற பாரேன். நா வேணும்னா கதிர்க்கு ஃபோன் பண்ணி... அழகி எப்பவும் உங்க நினைப்பாவே இருக்கா. அவ கிட்ட கொஞ்சம் பேசுங்கன்னு சொல்லட்டுமா?" என்று கிண்டல் செய்த சந்தோவின் சட்டை காலரை பிடித்துக் கீழே குனிய செய்தவள், அவன் தலையில் இரண்டு குட்டு வைத்த பிறகே பேச்சை ஆரம்பித்தாள்.
“அடப்பாவி… எனக்கு வில்லனே நீ தான்டா சந்தோ. பாவம் அவரே இவ வேண்டாம்னு நல்ல முடிவுல இருப்பார். நீ ஆணியே பிடுங்க வேண்டாம். அமைதியா இருந்தா மாட்டும் போதும். நானே இப்போ தான் கல்யாணப் பேச்சை எடுக்க மாட்டாங்கன்னு கொஞ்சம் ஜாலியா சுத்துறேன். அது பொறுக்கலையாடா உனக்கு. அதற்கும் வேட்டு வைக்க ரெடி ஆகிட்ட. எப்போடா இவளை மாட்டி விடலாம்னு சுத்தி திரியுற போல. பட்.. அது இந்த அழகி கிட்ட நடக்காது மை மச்சான்.
எனக்குன்னு வரப்போறவனுக்காக... நா சில பேசிக் ரூல்ஸ் வச்சுருக்கேன். அந்த ரூல்ஸ் எல்லாம் யாருக்கு கரெக்டா பொருந்துதோ... அவனைத் தான் நா கல்யாணம் செய்துப்பேன். சோ, உன்னோட வேலை என்னன்னா... என் ரூல்ஸ்க்கு ஏத்த பையனா பார்த்துவைக்கிறது தான் சரியா.. மை டியர் மச்சான்...”
“ஹஹா… அரக்காப்படி சைஸ்ல இருந்துகிட்டு கண்டிஷன்ஸ் வேற போடுறியா நீ… சரி அந்த ரூல்ஸ் என்ன என்னனு சொல்லும்… சொல்லி தொலையும்… நாங்களும் தெரிஞ்சிக்கிறோம். அப்படி என்ன ரூல்ஸ் தான் அதுன்னு..” வேண்டாவெறுப்பாகக் கேட்பதுப்போல் கேட்டாலும். சந்தோவிற்கு அப்படி எந்த மாதிரியான ரூல்ஸ்க்களைத் தான் அழகி சொல்லுவாள் என்று தெரிந்துக்கொள்ள அர்வமாகவே தான் இருந்தது.
சந்தோஷ் மட்டுமன்றி அவனுடன் நின்றிருந்த கயலும், ஹரியும் கூட ஆர்வமாக அழகி என்ன கூற போகிறாள் என்று காத்திருக்க. அவள் கூறிய பதிலை கேட்டு கிழே விழுந்து புரண்டு சிரிக்காத குறைதான் மூவருக்கும்.
அப்படி விழுந்து புரண்டு சிரிக்கும் அளவிற்கு என்ன தான் சொன்னாளாம் அவள். இதோ… அழகி கூறியவை எல்லாம் இவை தான்.
“ரொம்பப் பெரிய ரூல்ஸ்லாம் இல்லை சந்தோ… சிம்பிள் தான். எனக்காக வர போறவன் ‘கண்ணை வீசி… கண்ணை வீசி…’ பாட்டுல வர அஷ்வின் மாதிரி இருந்தா போதும். அதே மாதிரி ஹையிட்… இல்ல… இன்னும் கொஞ்சம் ஹையிட் அதிகமா... அதே கலர்ல … அதே போலீஸ் ஹேர் கட்ல இருக்கனும் சந்தோ அவன். முக்கியமா நல்லா பாட தெரியும். அழகா டான்ஸ் பண்ண தெரியனும். அப்போ தானே நாங்க எங்க கல்யாணத்துல ‘மம்பட்டியான்’ சாங்க்கு அழகா சேர்ந்து டான்ஸ் ஆட முடியும். அப்புறம் முக்கியமா நான்-வெஜ்ல மினிமம் ஒரு பத்து வகையான டிஷ்சாவது செய்யத் தெரியனும். இதெல்லாத்துக்கும் மேல அவரு கண்டிப்பா போலீஸா தான் இருக்கனும். பிகாஸ் நான் காக்க காக்க சூர்யா பான்ல அதான்.. இப்போதைக்கு இவ்வளவு தான் எனக்கு ஞாபகத்துல இருக்கு. மிச்சத்த எல்லாம் அப்புறமா யோசிச்சி வாட்ஸப்ல சொல்லுறேன்டா சந்தோ…” என்ற அழகியின் ரூல்ஸ்களைக் கேட்டுக் கொண்டிருந்த சந்தோஷ், கயல் மற்றும் ஹரி மூவராலும் சிரிப்பை கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் சிரித்துக்கொண்டிருக்க. அவர்களை நோக்கி முறைத்த அழகி.
“என்ன.. கிண்டலா!! பார்த்துப் பொறுமையா சிரிங்க.. பல்லு சுளுக்கிக்கப் போகுது” என்றாள் கடுப்புடன்.
“சுளுகினாலும் பரவாயில்லை அழகி. நீயும் உன் போலீஸ் வுட்டுக்காரரும் ஆடுற மம்பட்டியான் டான்சை பார்த்துட்டு தான் நாங்க ட்ரீட்மென்ட் செய்யவே போவோம். நீ கவலையே படாதே…” என்று கயல் கூற,
“அந்தப் பத்து நான்-வெஜ் ஐட்டமை விட்டுட்டியே புஜ்ஜி. அதையும் அவளோட காக்க காக்க சூர்யா கெட்டப்ல இருக்க அஷ்வினே செய்து தருவாரு…” என்று கயலுடன் சேர்ந்துக்கொண்டு சந்தோவும் அவளைக் கிண்டல் செய்யவும். எரிச்சலின் உச்சத்திற்கே சென்ற அழகி. தன் கையிலிருந்த தூக்கை தூக்கி சந்தோவிடம் தந்தவள்.
“ரொம்பப் பெருமையா இருக்கு. என் மம்பட்டியான் டான்சைப் பார்க்க நீங்கயெல்லாம் இவ்வளவு ஆர்வமா இருக்குறதை நினைச்சு. அப்படியே சந்தோ! நீயும் கயலும் சேர்ந்து என் டான்ஸ் ஸ்டெப்ஸ் எப்படி எல்லாம் இருக்கும்னு கற்பனை பண்ணி பார்த்துகிட்டே. இந்தத் தூக்குல இருக்குற ஆரி போன டீயை சூடு பண்ணி வயல்ல இருக்க ஆயாக்கும் , அங்க வேலை பார்க்குறவங்களுக்கும் கொடுப்பீங்கலாம். இந்தக் கேப்ல நானும் ஹரியும் அப்படியே வொறு ரௌண்ட்ஸ் போயிட்டு வருவோமாம் சரியா…
ஒருவேளை... இப்போ நா சொன்ன இந்த வேலையைச் செய்யாம, எனக்கு டிமிக்கி குடுகலாம்ன்ற எண்ணம் உனக்கிருந்தா அதை அப்படியே மறந்திடு. பிகாஸ் நா சொன்னப்படி நீங்க செய்யலைன்னா… உங்க ரெண்டு பேரை பத்தியும் சரவணன் பெரியப்பா கிட்ட நான் போட்டுக் கொடுத்துடுவேன். சோ, இந்த அழகிக்கிட்ட எப்பவும் ஜாக்கிரதையா இருக்கனும். பீ கேர்லெஸ்…” என்று அவர்களை நோக்கி கூறியவள். ஹரியை அழைத்துக்கொண்டு குளத்தை நோக்கி சென்றாள்.
அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த சந்தோ, “இந்தக் குட்டி சாத்தான். எவ்வளவு நேக்கா நம்மல அம்மாச்சிகிட்ட கோர்த்துவிட்டுட்டுப் போய்டா பாத்தியா பஜ்ஜி. இதுல ‘பீ கேர்லெஸ்’ வேறயாம். அது கேர்புல்ன்னு கூடச் சொல்லத் தெரியலை இவளாம் மிரட்டுற அளவுல இருக்கு நம்ம நிலைமை. எல்லாம் இந்தக் கயலோட அப்பா அந்த கிடா மீசைக்குப் பயந்துதான். ச்ச… வயல் பக்கம் போனா இன்னைக்கு முழுசும் வேலை சொல்லிச் சொல்லியேக் கொல்லுவாங்களே இந்த அம்மாச்சி வேற...” என்று புலம்பிய படியே ‘இந்தக் குட்டா கிட்ட சிக்கி சின்னபின்னம் ஆகப் போற அந்த புண்ணிவான் யாரோ… எவனோ... எங்கு இருக்கானோ… பாவம் அந்த ஜீவன்’ என்றேண்ணினான் சந்தோஷ்.
எந்நேரத்தில் சந்தோ அழகியிடம் சிக்கப் போகும் அந்த அ(ட)ப்பாவி ஜீவனைப் பற்றி எண்ணினானோ என்னவோ.
அந்த ஜீவனும் சரியாக அழகி ஹரியுடன் சென்றிருக்கும் குளத்திற்கு எதிர்புறமிருக்கும் பேருந்து நிறுத்ததில் வந்திறங்கினான்.
குளத்தில் இருக்கும் சறுக்கலில் ஹரியுடன் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அழகி. அவளையும் அறியாமல் ஆறு மணி பஸ்சில் வந்திறங்கிய அந்தப் புதியவனைக் கண்டதும் ‘யாருடா இவன் இவ்வளவு ஒசரமா இருக்கான். சரியான பனைமரம் போல இருக்கான்ல’ என்று எண்ணியவாறு தன்னருகில் அமர்ந்திருந்த ஹரியின் கைகளைச் சுரண்டினாள்.
“டேய் ஹரி! யாருடே அது... நம்ம சந்தோ பயலுக்கே டப் கொடுக்குற மாதிரி இவ்வளவு ஒசரமா இருக்குறது. இதுக்கு முன்ன இந்த உருவத்தை நா ஊருக்குள்ள பார்த்த மாதிரி ஞாபகமில்லையே . ஊருக்கு புதுசோ.. வெளியூர் ஆளா…”
அழகி தன் பாட்டிற்குக் கேள்விக்கனைகளை ஹரியை நோக்கி விசிக்கொண்டே செல்ல. ஹரியும் தான் சேகரித்த தகவல்களை எல்லாம் அழகியிடம் கூறலானான்.
“இவரா… இவர் பெயர் அமிழ்தினியன். நம்ம மருது அண்ணன் இருக்காருல அவரோட தோஸ்து. இவரும் மருது அண்ணனும் சேர்ந்து எதோ கம்ப்யூட்டர் கம்பனி வைக்கப் போறாங்களாம் நம்ம ஊருல. அதுக்காக மருதண்ணன் கூட ஒரு முறை இங்க வந்திருந்தாரு அப்போ பார்த்தேன் நான். நீ அந்தச் சமயம் காலேஜ் டூர் போய் இருந்த புள்ள... அதான் உனக்குத் தெரியலை”
“ஒ… அப்போ வந்தாரா. அதான் எனக்குத் தெரியல. இல்லைனா எனக்குத் தெரியாம இந்த ஊருக்குள்ள வொரு ஈ.. காக்கா கூட வர முடியாதே. ஆமா… எந்த ஊருடே ஹரி இவரு”
“ சொந்த ஊரு புதுக்கோட்டை டவுன் தானாம் அழகி. ஆனா படிச்சது வேலைப் பார்ப்பது எல்லாம் சென்னைலயாம்” என்று கருமமே கண்ணாகத் தான் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் அழகியிடம் கூறிக்கொண்டிருந்தான் ஹரி.
" அடேய்! இந்த இன்போர்மேஷன் கலெக்ட் பண்ணுற வேலையை மட்டும் பார்காம. கொஞ்சமாச்சும் படிக்கிற வேலையைப் பாருடா. நீ வேற இப்போ பத்தாகுப்பு(பத்தாம் வகுப்பு) போகப் போற. அப்பறம் படிக்காம நல்ல மார்க் வரலைனா. மொத்தக் குடும்பமும் ஒண்ணு சேர்ந்து அழகி தான் இவனைக் கெடுத்து குட்டிசுவர் ஆக்கி வச்சிருக்கான்னு சொல்லி… அறிவுரை சொல்லுறேன்னு ரெண்டு பேருக்கும் சேர்த்து பிளேட் போட ஆரம்பிச்சிடுவாங்க. அதுனால ஒழுங்கா படிப்பை பாருடே. நல்லா படிச்சா தான் என்னை மாதிரி இன்ஜினீயராக முடியும்" என்று அழகி கெத்தாகக் கூற.
அவளை வெத்தாக்கும் பொருட்டு, " எப்படி… உன்னை மாதிரி வெட்டி இன்ஜினீயராவா அழகி ஆகணும்" என்று கூறியவனை அவள் பிடிக்கும் முன்பே மின்னலென மறைந்திருந்தான் ஹரி.
"மவனே … என் கையில் சிக்காமல்லா இருக்கப்போற நீ… வசமா மாட்டுவல அப்போ இருக்கு உனக்கு" என்றெண்ணியவள்.
அடுத்ததாக யாரை வம்பு பண்ணலாம் என்று யோசித்தவாறே நடையை கட்டினாள்.
ஆனால், அழகியின் கேட்ட நேரமோ இல்லை மற்றவர்களின் நல்ல நேரமோ… ஒருவருமே அவளிடம் அகப்படாத காரணத்தினால் சமத்துப் பிள்ளையாக வீட்டிற்கே சென்றாள்.
வீட்டிற்குள் நுழையும்போதே!! வரவேற்பறையில் கேட்ட குரலில் குத்துகலமானவள். ஓடிச்சென்று அந்தக் குரலுக்கு சொந்தக்காரியான பத்மாவை கட்டிக் கொண்டாள் அழகி.
"அடியே பத்து… எப்போடி வந்தே… என்கிட்ட ஒரு வார்த்தைக் கூடச் சொல்லலை பார்த்தியா நீ ஊருக்கு வரேன்னு…" என்று குறையாக அவளிடம் கேட்டாலும், சலுகையாக அவள் மீதே சாய்ந்துக்கொண்டாள்.
"நா வர மாதிரியே ஐடியால இல்லைடா மதிமா. அதான் உன்கிட்ட சொல்லலை. இங்க தெற்கூர்ல என் மாமா பொண்ணுக்கு சடங்கு இன்னைக்கு. நான் வந்தே ஆகனுமாம். சோ.. வேற ஆப்ஷனே இல்லமா வந்துட்டேன்டா" என்றாள் பத்மா.
"அடடே… தெற்கூர் போறீங்களா மேடம். அதான் இம்புட்டு மேக்கப்… ‘சரி சரி’ புரியுது... ரொம்ப நாள் கழிச்சு உன் அவரைப் பார்க்க போற. அப்போ கொஞ்சம் பளிச்சுன்னு இருக்கனும் தானே. அதுவும் மாமா பொண்ணுக்கு சடங்கு வேற. அங்க ஹய்லைட்டே அத்தாச்சி நீ தான். என்ஜாய்.. என்ஜாய்.. பத்து.." என்றாள் அழகி உற்சாகமாய்.
அழகி, கயல், பத்மா மூவரும் சிறுவயதில் இருந்தே தோழிகள். பத்மாவும் கயலும் ஒத்த வயதுடையோர். ஆனால், அழகி இவர்களைக் காட்டிலும் வயது குறைந்தவளாகினும் இவர்களுகிடையில் இருக்கும் நட்பு ஆழமானது.
"நீ வேற ஏன்டி… அவரைப் பார்த்தே ரொம்ப நாள் ஆகுது. இன்னைக்கும் பார்ப்பேனா மாட்டேனான்னு தெரியல" என்றாள் பத்மா முகம் சிவக்க.
அவள் எப்போதும் அப்படித்தான். அந்த அவளின் அவரைப் பற்றிப் பேசினாலே போதும் அவள் முகம் சிவந்துவிடும். ஆனால் அந்த அவர் யாரென்று தான் இதுவரையிலும் யாருக்கும் தெரியாது. ஏன் கயலுக்கும் அழகிக்கும் கூட அது யாரென்று தெரியாது. அத்தனை ரகசியமாக வைத்திக்கிறாள் பத்மா அந்த அவரை. ஒருமுறை கூட அவள் அந்த நபரின் பெயரை சொல்லியதில்லை யாரிடமும். எப்போதும் 'அவரை ', 'அவர்' என்று தான் அந்த நபரை விளிப்பாளே தவிர ஒருபோதும் பெயரைச் சொல்லியதில்லை. அழகியும் ஹரியும் கூடத் தங்கள் துப்பறியும் வேலையையும் செய்துப் பார்த்துவிட்டார்கள். இருந்தும் அவர்களால் அந்த ‘அவரை’ கண்டுபிடிக்க முடியவில்லை.
"இன்னைக்கு அந்தச் சீக்ரெட் மேன் யாருன்னு நிச்சயம் இந்த அழகி கண்டுப்பிடிக்கிறேன் பாருடி பத்து.." என்று பத்மாவிடம் கூறியவள், ஐந்தே நிமிடங்களில் தயாராகி வந்தாள் பத்மாவுடன் தெற்கூர் செல்வதற்காக.
Last edited: