அத்தியாயம் 26
சரணித் சொல்வதை கேட்டு அமைதியான கனி ஆழ்ந்து யோசிக்கலானாள். ஆமாம் அன்று ஒரு குறுகிய இடத்திலே அவள் நின்று உடை மாற்றிக் கொண்டிருந்தாள்.
கீழே பெரிய இரும்புக்கம்பியும், ஆங்காங்கே வயர்களும் சுற்றிக் கிடந்தது. இது அவளின் நினைவுக்கு வர, “ஆமால, அண்டைக்கு இவன் என்ன புடிச்சு இருக்காட்டி நான் கீழ தானே விழுந்திருப்பேன். அவன் சொல்ற மாதிரி என்னோட தலை அந்த இரும்புல மோதி இருக்கும். “என்று நினைத்தவளுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
ஆனாலும் அவனில் குறை சொல்ல நினைத்தவள், “ஆஹ்! அத நீ வாயால சொல்றது தானே? எதுக்கு புடிச்ச?” என்று கேட்க, வெளிப்படையாக தலையில் அடித்துக்கொண்ட சரணித், “நான் சொன்னா அத விளங்கிக்கிற நிலமைலயா நீ இருந்த? “என்று கேட்க அவளுக்குத்தான் சங்கடமாகி போனது.
உடனே அவள் முகத்தை திருப்பி கொள்ள, அவளின் பேச்சிலும், முக பாவனையிலும் சரணித்க்கு சிரிப்பு தான் வந்தது.
சிறிது நேரம் அங்கு அமைதியே நிலவ, அதை முடிவுக்கு கொண்டுவந்த சரணித், “ஊ “ என்று ஊதி விட்டு, “நான் சொல்றத நம்புறதும் நம்பாததும் உன்னோட விருப்பம் கனி, அன்னைக்கு நானா ஒன்றும் அங்க வரல. உன்னோட போன்ல இருந்து எனக்கு மெசேஜ் வந்துது. “என்று ஆரம்பித்தவன் நடந்ததை சொல்ல, அவனை விறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் கனி.
இறுதியில்,”நிஜமா சொல்றேன், அப்போ உன்கிட்ட தப்பா நடந்துக்குற எண்ணம் துளி கூட இல்ல. உன்னை தப்பாவும் நான் தொடல. “என்று முடித்தான் சரணித்.
கனியோ, “ஐயோ! நான் எந்த மெசேஜூம் பண்ணல! என்மேல் எதுக்கு பழி போடுற? இதனால தான் ஜனனி கூட என்கிட்ட சரணித் விஷயத்துல நான் பண்ணது தப்பு என்று சொன்னாளா? “என்று பாவமாக முகத்தை வைத்து கேட்டாள்.
சரணித்தோ, “ஆமா,ஆனா அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது உன்னோட போன் அண்டைக்கு மிஸ் ஆச்சுன்ணு. அதுல இருந்தே நீ அதை பண்ணல என்றும் புரிஞ்சிடுச்சு. “என்றான்.
ஆம், சரணித்,கனியே அவனை அழைத்ததாக சொல்லும் போது ஜனனி, கனிஷ்டன் கூட அதிலே குழம்பி இருக்க வேறு எந்த விடயமும் அவர்கள் நினைவுக்கு எட்டவில்லை.
ஆனால் சிறிது நாட்களுக்கு முன்னரே கனிஷ்டனுக்கு சம்பவம் நடந்த அந்த நாளில் கனியின் போன் தொலைந்து போனது நினைவுக்கு வர, அதை உடனே சரணித்க்கும் தெரிய படுத்தினான்.
இருவருக்கும் அது பெரிய குழப்பமாகவே இருந்தது. ஏதேர்ச்சியாக ஏதோ நடந்திருக்க கூடும் என்று நினைத்தவர்களுக்கு, யாரோ பெரிய சதி வேலை செய்துள்ளார்கள் என்று புரிந்து போனது.
ஆனால் பாடசாலையில் சென்று விசாரித்து துப்புதுலக்கிய போதும் அவர்களுக்கு எந்த ஒரு பயனும் இருக்கவில்லை.
கனி இப்போது மொத்தமாக குழம்பி போய் நின்றிருந்தாள், என்ன நடக்குறது என்றே புரியாத உணர்வு அவளுக்கு. தலையில் கையை வைத்தவள் அப்படியே அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்து கொண்டாள்.
சரணித்க்கும் அவள் நிலை புரியாமல் இல்லை அதனால் அவளை தொந்தரவு செய்யாமல் கலவர நிலைமை பற்றி அறிய கதவை மெதுவாக திறந்து எட்டிப் பார்த்தான்.
அப்போது அங்கே பொலீசார் ஆங்காங்கே நின்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பது அவனுக்கு தென்பட உடனே, “கனி வெளிய போகலாம். “என்று அவளையும் கூட்டிக்கொண்டு மொலை விட்டு வெளியே வந்தவன், அவளை பார்த்து, “எதுல வீட்டுக்கு போவ? “ என்று கேட்டான்.
அவளோ, “நான் போய்டுவேன். “என்று சொல்ல, “அதான் எதுல போவ? “ என்று அதட்டிகேட்டான் அவன்.
கனியோ நண்பி ஒருத்தியின் பைக்கில் வந்திருக்க, அப்போது அந்த நிலைமையில் அவர்களை தேடி கண்டுபிடிக்க முடியாது என்று அறிந்தவள், சரணித்திடம் ஏதும் சொல்லாமலே அவள் பையில் இருந்த போனை எடுத்து அவள் நண்பிக்கு அழைத்திருந்தாள்.
அவளது நண்பியோ,”ஹேய் நான் உனக்கு எத்தனையோ தரம் கால் பண்ணி பார்த்தேன். நீ எடுக்கவே இல்லை. பொலிஸ் வேற இங்க நிக்காதீங்க எண்டு போக சொல்லிட்டாங்க. அதனால நாங்களும் களம்பிட்டோம். நீ சேப் தானே? “ என்று கேட்டாள்.
கனியோ அவள் போனை பார்க்க அது சைலன்டில் போடப்பட்டு இருந்தது, அவளையே கடிந்து கொண்ட கனி, “ஆஹ் நான் சேப்தான். நானே வீட்டுக்கு போய்டுவேன். “ என்றவள் போனை கட் செய்து விட்டு அவள் முன்னே கை கட்டி நின்ற சரணித்தை பார்த்தாள்.
அவனோ புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க, “ப்ரெண்ட்ஸ்ஒட வந்தேன் இப்போ அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க.” என்றாள்.
சரணித்தோ, “நல்ல பிரென்ட்ஸ். “ என்றவன், அடுத்து அழைத்தது என்னவோ கனிஷ்டனுக்கு தான்.
கனிஷ்டனும் போனை எடுத்திருக்க, “உன்னோட தங்கச்சிய வந்து கூட்டிட்டு போ. “என்றவன் மாலின் பெயரையும் சொல்லிருந்தான்.
கனிஷ்டனோ, “தங்கச்சியா? என்ன உளறுறான் இவன்? ஜனனிய இப்படி சொல்றானோ? “என்று நினைத்து, “ஜனனி எப்படி அங்க வந்தா? அது சரி அவ எப்போ எனக்கு தங்கச்சி ஆனா? “ என்று கேட்டு சிரித்துக்கொண்டான்.
சரணித்தோ, “இல்ல கனிஷ், வந்து கனிய கூட்டிட்டு போ. “என்று சொல்ல கனிஷ்டன் சிரித்துக்கொண்டிருந்தவன், “என்ன? “ என்று அதிர்ந்தே விட்டான்.
கனிக்காவோ, “என்னது கனிஷ்ஷா?, அப்போ எல்லாரும் பேசிகிட்டு தான் இருக்கீங்களா? எல்லார்க்கும் எல்லா விஷயமும் தெரியுமா? “ என்று அடுத்து அடுத்து கேள்விகளை அடுக்க அது மறுபக்கம் கனிஷ்டனின் காதுகளிலும் விழுந்தது.
அவனோ, “இவன் எதுக்கு அவளை போய் மீட் பண்ணினான்? “ என்று நினைத்தவன், “நீ எதுக்குடா போய் அவளை மீட் பண்ணின? என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே, அவ ஏதாச்சும் பிரச்சனை பண்ணி குட்டைய குழப்பபோறா இப்போ. “ என்று சொல்ல, “அதெல்லாம் ஒன்றும் பண்ண மாட்டா. “என்று சொல்லி கனியை பார்த்தவன், அவளை சந்தித்த கதையை கனிஷ்டனிடம் சொல்லி முடித்தான்.
கனிஷ்டனும், “கொஞ்ச நேரம் அங்கேயே இரு நான் வந்துடுறேன். “என்றவன் அங்கு புறப்பட்டு இருந்தான்.
கனியோ, “எல்லாரும் சேர்ந்து என்ன முட்டாள் ஆக்கி இருக்கீங்க. “என்று சொல்ல சரணித்தோ ஏதும் பேசாமல் அவள் பக்கத்திலே நின்றிருந்தான்.
அவளும் கைகளை கட்டி அங்கேயே நின்றிருக்க சிறிது நேரத்தித்தில் அங்கு வந்து சேர்ந்தான் கனிஷ்டன்.
காரில் இருந்து இறங்கியவன், “கலவரம் நடந்ததால கொஞ்சம் ட்ராபிக்கா இருந்துச்சு அதான் லேட். “என்று சொல்ல, அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள் கனிக்கா.
அவனோ, “இன்னைக்கு நம்ம செத்தம். “ என்று நினைத்தவன், “வா போகலாம். “என்று மட்டும் சொன்னான்.
சரணித்தும், “சரி, நான் களம்புறன். “ என்றவன் அங்கிருந்து செல்ல அவன் முதுகையே பார்த்துக்கொண்டிருந்தாள் கனிக்கா.
அவன் அங்கிருந்து சென்றதுமே வந்து காரில் ஏறிக்கொண்டவள் காரின் கதவை அடித்து சாத்தினாள்.
அந்த சத்தத்திலே அவளுக்கு இருக்கும் கோபம் புரிந்து போக தலையை சொறிந்து கொண்டே காரில் ஏறினான் கனிஷ்டன்.
அவளோ அவனை முறைத்துக்கொண்டே இருக்க, அதை கடை கண்ணால் பார்த்த கனிஷ்டன், “என்ன அப்படி பார்க்காத. “என்றவன் அவளது முகத்தை திருப்பி விட்டான்.
கனிக்காவோ, “எல்லாரும் சேர்ந்து என்ன ஏமாத்திடீங்கல? “என்று கேட்க, “நாங்க என்ன பண்ணம் கனி? சரணித் பத்தி உன்கிட்ட எப்படி வந்து பேச முடியும்? அதனாலதான் அவன் பக்க ஸ்டோரிய கேட்டுட்டு, அண்டைக்கு உண்மைல என்னதான் நடந்துச்சுனு தெரிஞ்சிக்க ரொம்ப ட்ரை பண்ணோம். ஆனா எதுக்கும் பயன் இல்லாம போச்சு. உண்மை என்னனு கண்டுபிடிக்கவே முடியல. அதனால தான் உன்கிட்ட எதுவுமே சொல்லல, ஏதாச்சும் ப்ரூப் இருந்திருந்தால் உன்னட வந்து பேசிருப்போம். ஆனா எல்லாமே அவனுக்கு எதிரா இருக்குற போ எங்களால என்ன பண்ண முடியும்? “என்றுதான் கேட்டான் கனிஷ்டன்.
கனியோ இருக்கையில் சாய்ந்து கொண்டவள், “எல்லாரும் சேர்ந்து தப்பு பண்ணீடீங்க. அவனை நீங்க என்கிட்ட ஒரு தடவை பேச வச்சி இருக்கணும்.”என்றவள் கண்ணில் நீர் துளிகள் அரும்பியது.
கனிஷ்டனோ காரை பிரேக் அடித்து நிறுத்தியவன், “கனி!!” என்று அதிர்ச்சியாக சொல்ல, “அவனுக்கு அறிவு வேணாமா? என்கிட்ட வந்து பேச வேண்டியதுலாம் உங்க கூட பேசிட்டு இருந்திருக்கான். “என்று சொன்னவள் முகத்தை மூடிக்கொண்டாள்.
சரணித் சொல்வதை கேட்டு அமைதியான கனி ஆழ்ந்து யோசிக்கலானாள். ஆமாம் அன்று ஒரு குறுகிய இடத்திலே அவள் நின்று உடை மாற்றிக் கொண்டிருந்தாள்.
கீழே பெரிய இரும்புக்கம்பியும், ஆங்காங்கே வயர்களும் சுற்றிக் கிடந்தது. இது அவளின் நினைவுக்கு வர, “ஆமால, அண்டைக்கு இவன் என்ன புடிச்சு இருக்காட்டி நான் கீழ தானே விழுந்திருப்பேன். அவன் சொல்ற மாதிரி என்னோட தலை அந்த இரும்புல மோதி இருக்கும். “என்று நினைத்தவளுக்கு அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை.
ஆனாலும் அவனில் குறை சொல்ல நினைத்தவள், “ஆஹ்! அத நீ வாயால சொல்றது தானே? எதுக்கு புடிச்ச?” என்று கேட்க, வெளிப்படையாக தலையில் அடித்துக்கொண்ட சரணித், “நான் சொன்னா அத விளங்கிக்கிற நிலமைலயா நீ இருந்த? “என்று கேட்க அவளுக்குத்தான் சங்கடமாகி போனது.
உடனே அவள் முகத்தை திருப்பி கொள்ள, அவளின் பேச்சிலும், முக பாவனையிலும் சரணித்க்கு சிரிப்பு தான் வந்தது.
சிறிது நேரம் அங்கு அமைதியே நிலவ, அதை முடிவுக்கு கொண்டுவந்த சரணித், “ஊ “ என்று ஊதி விட்டு, “நான் சொல்றத நம்புறதும் நம்பாததும் உன்னோட விருப்பம் கனி, அன்னைக்கு நானா ஒன்றும் அங்க வரல. உன்னோட போன்ல இருந்து எனக்கு மெசேஜ் வந்துது. “என்று ஆரம்பித்தவன் நடந்ததை சொல்ல, அவனை விறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் கனி.
இறுதியில்,”நிஜமா சொல்றேன், அப்போ உன்கிட்ட தப்பா நடந்துக்குற எண்ணம் துளி கூட இல்ல. உன்னை தப்பாவும் நான் தொடல. “என்று முடித்தான் சரணித்.
கனியோ, “ஐயோ! நான் எந்த மெசேஜூம் பண்ணல! என்மேல் எதுக்கு பழி போடுற? இதனால தான் ஜனனி கூட என்கிட்ட சரணித் விஷயத்துல நான் பண்ணது தப்பு என்று சொன்னாளா? “என்று பாவமாக முகத்தை வைத்து கேட்டாள்.
சரணித்தோ, “ஆமா,ஆனா அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது உன்னோட போன் அண்டைக்கு மிஸ் ஆச்சுன்ணு. அதுல இருந்தே நீ அதை பண்ணல என்றும் புரிஞ்சிடுச்சு. “என்றான்.
ஆம், சரணித்,கனியே அவனை அழைத்ததாக சொல்லும் போது ஜனனி, கனிஷ்டன் கூட அதிலே குழம்பி இருக்க வேறு எந்த விடயமும் அவர்கள் நினைவுக்கு எட்டவில்லை.
ஆனால் சிறிது நாட்களுக்கு முன்னரே கனிஷ்டனுக்கு சம்பவம் நடந்த அந்த நாளில் கனியின் போன் தொலைந்து போனது நினைவுக்கு வர, அதை உடனே சரணித்க்கும் தெரிய படுத்தினான்.
இருவருக்கும் அது பெரிய குழப்பமாகவே இருந்தது. ஏதேர்ச்சியாக ஏதோ நடந்திருக்க கூடும் என்று நினைத்தவர்களுக்கு, யாரோ பெரிய சதி வேலை செய்துள்ளார்கள் என்று புரிந்து போனது.
ஆனால் பாடசாலையில் சென்று விசாரித்து துப்புதுலக்கிய போதும் அவர்களுக்கு எந்த ஒரு பயனும் இருக்கவில்லை.
கனி இப்போது மொத்தமாக குழம்பி போய் நின்றிருந்தாள், என்ன நடக்குறது என்றே புரியாத உணர்வு அவளுக்கு. தலையில் கையை வைத்தவள் அப்படியே அங்கிருந்த ஸ்டூலில் அமர்ந்து கொண்டாள்.
சரணித்க்கும் அவள் நிலை புரியாமல் இல்லை அதனால் அவளை தொந்தரவு செய்யாமல் கலவர நிலைமை பற்றி அறிய கதவை மெதுவாக திறந்து எட்டிப் பார்த்தான்.
அப்போது அங்கே பொலீசார் ஆங்காங்கே நின்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பது அவனுக்கு தென்பட உடனே, “கனி வெளிய போகலாம். “என்று அவளையும் கூட்டிக்கொண்டு மொலை விட்டு வெளியே வந்தவன், அவளை பார்த்து, “எதுல வீட்டுக்கு போவ? “ என்று கேட்டான்.
அவளோ, “நான் போய்டுவேன். “என்று சொல்ல, “அதான் எதுல போவ? “ என்று அதட்டிகேட்டான் அவன்.
கனியோ நண்பி ஒருத்தியின் பைக்கில் வந்திருக்க, அப்போது அந்த நிலைமையில் அவர்களை தேடி கண்டுபிடிக்க முடியாது என்று அறிந்தவள், சரணித்திடம் ஏதும் சொல்லாமலே அவள் பையில் இருந்த போனை எடுத்து அவள் நண்பிக்கு அழைத்திருந்தாள்.
அவளது நண்பியோ,”ஹேய் நான் உனக்கு எத்தனையோ தரம் கால் பண்ணி பார்த்தேன். நீ எடுக்கவே இல்லை. பொலிஸ் வேற இங்க நிக்காதீங்க எண்டு போக சொல்லிட்டாங்க. அதனால நாங்களும் களம்பிட்டோம். நீ சேப் தானே? “ என்று கேட்டாள்.
கனியோ அவள் போனை பார்க்க அது சைலன்டில் போடப்பட்டு இருந்தது, அவளையே கடிந்து கொண்ட கனி, “ஆஹ் நான் சேப்தான். நானே வீட்டுக்கு போய்டுவேன். “ என்றவள் போனை கட் செய்து விட்டு அவள் முன்னே கை கட்டி நின்ற சரணித்தை பார்த்தாள்.
அவனோ புருவம் உயர்த்தி என்ன என்று கேட்க, “ப்ரெண்ட்ஸ்ஒட வந்தேன் இப்போ அவங்க வீட்டுக்கு போய்ட்டாங்க.” என்றாள்.
சரணித்தோ, “நல்ல பிரென்ட்ஸ். “ என்றவன், அடுத்து அழைத்தது என்னவோ கனிஷ்டனுக்கு தான்.
கனிஷ்டனும் போனை எடுத்திருக்க, “உன்னோட தங்கச்சிய வந்து கூட்டிட்டு போ. “என்றவன் மாலின் பெயரையும் சொல்லிருந்தான்.
கனிஷ்டனோ, “தங்கச்சியா? என்ன உளறுறான் இவன்? ஜனனிய இப்படி சொல்றானோ? “என்று நினைத்து, “ஜனனி எப்படி அங்க வந்தா? அது சரி அவ எப்போ எனக்கு தங்கச்சி ஆனா? “ என்று கேட்டு சிரித்துக்கொண்டான்.
சரணித்தோ, “இல்ல கனிஷ், வந்து கனிய கூட்டிட்டு போ. “என்று சொல்ல கனிஷ்டன் சிரித்துக்கொண்டிருந்தவன், “என்ன? “ என்று அதிர்ந்தே விட்டான்.
கனிக்காவோ, “என்னது கனிஷ்ஷா?, அப்போ எல்லாரும் பேசிகிட்டு தான் இருக்கீங்களா? எல்லார்க்கும் எல்லா விஷயமும் தெரியுமா? “ என்று அடுத்து அடுத்து கேள்விகளை அடுக்க அது மறுபக்கம் கனிஷ்டனின் காதுகளிலும் விழுந்தது.
அவனோ, “இவன் எதுக்கு அவளை போய் மீட் பண்ணினான்? “ என்று நினைத்தவன், “நீ எதுக்குடா போய் அவளை மீட் பண்ணின? என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே, அவ ஏதாச்சும் பிரச்சனை பண்ணி குட்டைய குழப்பபோறா இப்போ. “ என்று சொல்ல, “அதெல்லாம் ஒன்றும் பண்ண மாட்டா. “என்று சொல்லி கனியை பார்த்தவன், அவளை சந்தித்த கதையை கனிஷ்டனிடம் சொல்லி முடித்தான்.
கனிஷ்டனும், “கொஞ்ச நேரம் அங்கேயே இரு நான் வந்துடுறேன். “என்றவன் அங்கு புறப்பட்டு இருந்தான்.
கனியோ, “எல்லாரும் சேர்ந்து என்ன முட்டாள் ஆக்கி இருக்கீங்க. “என்று சொல்ல சரணித்தோ ஏதும் பேசாமல் அவள் பக்கத்திலே நின்றிருந்தான்.
அவளும் கைகளை கட்டி அங்கேயே நின்றிருக்க சிறிது நேரத்தித்தில் அங்கு வந்து சேர்ந்தான் கனிஷ்டன்.
காரில் இருந்து இறங்கியவன், “கலவரம் நடந்ததால கொஞ்சம் ட்ராபிக்கா இருந்துச்சு அதான் லேட். “என்று சொல்ல, அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள் கனிக்கா.
அவனோ, “இன்னைக்கு நம்ம செத்தம். “ என்று நினைத்தவன், “வா போகலாம். “என்று மட்டும் சொன்னான்.
சரணித்தும், “சரி, நான் களம்புறன். “ என்றவன் அங்கிருந்து செல்ல அவன் முதுகையே பார்த்துக்கொண்டிருந்தாள் கனிக்கா.
அவன் அங்கிருந்து சென்றதுமே வந்து காரில் ஏறிக்கொண்டவள் காரின் கதவை அடித்து சாத்தினாள்.
அந்த சத்தத்திலே அவளுக்கு இருக்கும் கோபம் புரிந்து போக தலையை சொறிந்து கொண்டே காரில் ஏறினான் கனிஷ்டன்.
அவளோ அவனை முறைத்துக்கொண்டே இருக்க, அதை கடை கண்ணால் பார்த்த கனிஷ்டன், “என்ன அப்படி பார்க்காத. “என்றவன் அவளது முகத்தை திருப்பி விட்டான்.
கனிக்காவோ, “எல்லாரும் சேர்ந்து என்ன ஏமாத்திடீங்கல? “என்று கேட்க, “நாங்க என்ன பண்ணம் கனி? சரணித் பத்தி உன்கிட்ட எப்படி வந்து பேச முடியும்? அதனாலதான் அவன் பக்க ஸ்டோரிய கேட்டுட்டு, அண்டைக்கு உண்மைல என்னதான் நடந்துச்சுனு தெரிஞ்சிக்க ரொம்ப ட்ரை பண்ணோம். ஆனா எதுக்கும் பயன் இல்லாம போச்சு. உண்மை என்னனு கண்டுபிடிக்கவே முடியல. அதனால தான் உன்கிட்ட எதுவுமே சொல்லல, ஏதாச்சும் ப்ரூப் இருந்திருந்தால் உன்னட வந்து பேசிருப்போம். ஆனா எல்லாமே அவனுக்கு எதிரா இருக்குற போ எங்களால என்ன பண்ண முடியும்? “என்றுதான் கேட்டான் கனிஷ்டன்.
கனியோ இருக்கையில் சாய்ந்து கொண்டவள், “எல்லாரும் சேர்ந்து தப்பு பண்ணீடீங்க. அவனை நீங்க என்கிட்ட ஒரு தடவை பேச வச்சி இருக்கணும்.”என்றவள் கண்ணில் நீர் துளிகள் அரும்பியது.
கனிஷ்டனோ காரை பிரேக் அடித்து நிறுத்தியவன், “கனி!!” என்று அதிர்ச்சியாக சொல்ல, “அவனுக்கு அறிவு வேணாமா? என்கிட்ட வந்து பேச வேண்டியதுலாம் உங்க கூட பேசிட்டு இருந்திருக்கான். “என்று சொன்னவள் முகத்தை மூடிக்கொண்டாள்.