அத்தியாயம் 44
அடுத்த நாள் காலை ஜனனி, துருவன், சரணித், கனி, ஹரிணி என அனைவரும் ஹாலில் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு இருக்க அவர்களுக்கு காபி கொண்டு கொடுத்த கௌரி, “கனிஷ் எங்க?” என்று கேட்டார்.
துருவனோ, “இன்னும் எழுந்திரிக்கல போல.ரூம்ல போய் காபிய வச்சுட்டு வாங்கம்மா.”என்று சொல்ல, அவனின் தொடையில் தட்டிய ஜனனி,”அத்தை நீங்க இருங்க. ஹரிணி நீ போய் காபிய கொடுத்துட்டு வாயேன். “என்றாள்.
ஹரிணியோ, “என்னது நானா?”என்று கேட்க,”ஆமா நீயேதான். “என்றாள் ஜனனி.
ஹரிணி தலையை குனிந்து கொண்டே, “எனக்கு பயமா இருக்கு. நீயும் கூட வா.” என்று ஜனனியை சுரண்ட, “ஹேய், காபி கொடுக்க போறதுக்கு உனக்கு என்ன பயம். என்னோட அண்ணன் உன்னை புடிச்சு கடிச்சு வச்சிட மாட்டான். தைரியமா போ. “என்று நக்கலாக சொன்னாள் கனி.
அனைவரும் அவளை பார்த்து சிரிக்க, காபி கப்பை எடுத்துக்கொண்டு பயத்துடனே அவன் அறைக்குள் சென்றாள் ஹரிணி.
அவனோ அப்போது தான் தூங்கி எழுந்தவன், குளியல் அறைக்கு சென்று முகத்தை கழுவி விட்டு வெளியே வர, அங்கு வந்து நின்றாள் ஹரிணி.
அவனோ வெற்று மார்போடு நின்றிருக்க, அது ஹரிணிக்குத்தான் சங்கடமாகி போனது. உடனே திரும்பி கொண்டவள், “காபி” என்று மட்டும் சொன்னாள்.
அவனும், “அத அங்க வை “என்று சொன்னவன், அவள் பின்னால் சென்று நின்று அவளின் தோளை பற்றி தன் பக்கமாக திருப்பினான்.
அவளோ தலையை குனிந்து கொண்டே நிற்க, தன் ஒற்றை விரலை அவளின் நாடியில் வைத்து அவளை நிமிர செய்தவன், “ எப்போ இருந்து இந்த லவ் எல்லாம் வந்துச்சு? ஒரு தடவை கூட நீ என்கிட்ட அந்த மோடிவ்ல பழகுனதே இல்லையே!”என்றுதான் கேட்டான்.
ஜனனியோ அவனை பார்த்தவாறே, “இல்ல நான் உங்க முன்னாடி எக்ஸ்பிரஸ் பண்ணி இருக்கேன். உங்களுக்கு தான் அது புரியல. “என்று சொல்ல, “எப்போ? “ என்றுதான் கேட்டான் அவன்.
அவளோ, “அதுதான் உங்கள மரியாதையா பேசுறது, முன்னாடி எல்லாம் யோசிக்காம பக்கத்துல வந்து உக்கார்ந்துப்பன், கை போட்டுப்பேன், நான் லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணதுக்கு அப்புறம் அது எதுவும் பண்ணல. அப்புறம் அடிக்கடி பார்த்து சைட் அடிப்பேன். “என்று சொன்னாள்.
அவள் சொல்வதை கேட்டு வாய் விட்டு சிரித்த கனிஷ், “ஹேய் ப்ளீஸ்டி இந்த வாங்க போங்கலாம் வேணாம். சகிக்கல, நான் ஏதோ நீ டச் விட்டு போனதுல அப்படி எல்லாம் நடந்துக்குற என்று நினச்சுட்டேன். சத்தியமா நீ லவ் பண்ற என்றே எனக்கு தெரியாது. “என்றான்.
ஹரிணியோ மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாகவே, “தெரிஞ்சிருந்தா மட்டும் என்ன பண்ணிருப்பீங்க?“என்று சொல்ல, கனிஷ்டனோ கைகளை கட்டி அவளை பார்த்து நின்றான்.
அவளோ, “அய்யய்யோ! மைண்ட் வாய்ஸ் என்று சத்தமா பேசிட்டமே!” என்று நினைத்தவள் அங்கிருந்து ஒட முற்பட, அவளின் கையை புடித்து தன் பக்கம் இழுத்து அவனோடு மோதி நிற்க செய்தவன் அவளின் இடையில் தன் கைகளை கட்டிக்கொண்டான்.
ஹரிணியோ, “ஏதோ தெரியாம சொல்லிட்டேன் விடுங்க. “என்று சொல்ல, “மறுபடியும் சொல்றேன் தயவு செய்து வாங்க போங்கனு கூப்பிடாதடி, ஸ்கூல் படிக்கும் போது எப்படி கூப்பிடுவியோ அப்படியே கூப்பிடு. “என்றவன் அவன் கையை எடுத்து அவள் முகத்தின் மேல் இருந்த முடியை ஒதுக்கி விட்டவன் அவளையே பார்த்து நின்றான்.
ஹரிணியோ,”இப்போ எதுக்கு அப்படி பாக்குறீ.. சாரி பாக்குற? “என்று கேட்க, “நீதான் என்ன பண்ணி இருப்ப என்று கேட்டல? மொத்தமாலாம் இப்போ பண்ணி காட்ட முடியாது, ஒரு ட்ரையல் மட்டும் பண்ணி காட்டுறேன். “என்றவன் அவளின் இதழை தன்னுள் சிறையாக்கி கொண்டு அவளை திணற வைத்தான்.
முதலில் அவள் அதிர்ந்து நின்றாலும், அத்தனை நாள் கத்திருப்புக்கு பின்னதான இணைவு அவளை தன்னிலை மறந்து அவனுக்கு இசைந்து போக வைத்தது.
நீண்ட நேரத்தின் பின்னரே கனிஷ்டன் அவளின் இதழ்களை விடுதலை செய்தவன், “உனக்கு நிறைய கிளாஸ் எடுக்கணும். பெர்போர்மென்ஸ் பத்தாது. “என்று சொல்ல, “ஆமா இவரு மட்டும் பலே கில்லாடி பாரு. “என்று சொல்ல, “ஓஹ் அப்போ சரி வா, இப்போவே நான் என்னோட பெர்போர்மென்ஸ காட்டுறேன். “என்று சொல்லி அவள் அணிந்து இருந்த ட்ஷிர்ட்டை கழற்ற போக, அவனின் கையை தள்ளி விட்டு ஓடிசென்று குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள் ஹரிணி.
கனிஷோ, “நீ ரொம்ப சைலன்டான பொண்ணுனு நினைச்சன், என்னமா வாய் அடிக்குற! எல்லாத்துக்கும் சேர்த்து ஒரு நாளைக்கு உனக்கு கச்சேரி வச்சுக்குறேன். “என்று சொல்லி சிரித்தவன் காபி கப்பை எடுத்துக்கொண்டு ஹாலிற்கு சென்றான்.
ஹரிணியோ அவனின் செயல்களால் முகம் சிவந்து போனவள், முகத்தை மூடி கொண்டே, “என்னெல்லாம் பேசுறான். “என்று நினைத்துக்கொண்டு, மெதுவாக கதவை திறந்து பார்த்து அவன் அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டே வெளியே வந்தாள்.
கனிஷ்டனோ அனைவருடனும் வந்து அமர்ந்து கொள்ள, “ஹரிணி எங்க? “என்று கேட்டாள் ஜனனி.
அவனோ, “வருவா.”என்று சிரித்துக்கொண்டே சொல்ல, அவளும் அவன் இதழில் ஏற்படுத்தி இருந்த காயத்தை வருடிக்கொண்டே அங்கே வந்தாள்.
இதை கனிஷ்டன் கவனிக்கவில்லை என்றாலும் மற்ற அனைவரும் பார்த்து சிரிக்க,”என்ன கனி உன் அண்ணன் கடிச்சு வைக்க மாட்டான் என்று சொல்லி அந்த குழந்தைய அனுப்பி வச்ச, இப்போ கடிச்சு குதறி வச்சிருக்கான் போலயே. “என்று நக்கல் செய்தான் சரணித்.
கனியோ அவனின் தோளில் தட்ட, கனிஷ்டனுக்கு தான் புரைஏறி போனது. அவனோ நிமிர்ந்து ஹரிணியை பார்க்க அவள் தனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்பதை போலவே நின்றிருக்க அவள் முகமோ கண்டமேனிக்கு சிவந்து இருந்தது.
அவனுக்கோ அது ரசிக்கும் படி இருக்க இடை இடையே அவளையே பார்த்து இருந்தான் அவன்.
கௌரியோ நீண்ட நாட்களில் பின்னர் எல்லோரும் சேர்ந்து சிரித்து சந்தோசமாக இருப்பதை பார்த்தவர், திரும்பி அங்கே படமாக தொங்கிக்கொண்டு இருந்த தினகரன், சுந்தரம் மற்றும் வாணியின் புகைபடத்தையும் பார்த்து விழ இருந்த கண்ணீரை கஷ்டபட்டு இழுத்துக் கொண்டார் அப்போது அங்கிருந்த சூழ்நிலையை குலைத்துவிட வேண்டாம் என்பதற்காக.
அவரின் பாரங்கள் எல்லாம் ஓரளவு குறைந்து இருக்க, அவர்கள் அனைவர் மத்தியிலும் சென்று அமர்ந்தவரிடம், “அம்மா, கனிஷ் ஹரிணி கல்யாணத்தை எப்போ வச்சிக்கலாம்? “என்று கேட்டான் சரணித்.
ஹரிணியும் கனிஷும் ஒருவரை ஒருவர் பார்த்து தலையை குனிந்து கொள்ள, “கனி கன்சீவா இருக்கும் போது கல்யாணம் வச்சா அது அவ்வளவு நல்லாருக்காதுபா. முதல்ல கனிக்கு வளைகாப்பு நடத்தலாம், அப்புறம் குழந்தை பிறந்ததுக்கு அப்புறமா கல்யாணத்தை வச்சுக்கலாம். “என்றார் கௌரி.
துருவனோ, “அம்மா அதெல்லாம் பண்ணலாம். முதல்ல ஒரு நல்ல நாளா பாருங்க நான் இங்க வீட்டுல வச்சே அப்பா, மாமா, அத்தை போட்டோ முன்னாடி ஜனனிக்கு தாலி காட்டிடுறேன். “என்றான்.
கௌரியோ, “அதெப்படிடா வீட்டுலயே பண்றது? அது ரொம்ப சிம்பிளா பண்ற மாதிரி இருக்கும் துருவ். “என்றார்.
உடனே கனிஷ்ஷோ, “அம்மா அவனுக்கு புடிச்ச மாதிரி பண்ணட்டும். உங்களுக்கு என்ன துருவோட கல்யாணம் சிம்பிளா நடக்க கூடாது அவ்வளவுதானே! வீட்டுலயே அதை கிராண்டா பண்ண வேண்டியது என்னோட பொறுப்பு. “என்றான்.
கௌரியும் சம்மதம் சொன்னவர் அடுத்த மூன்று நாட்களில் நல்ல நாளை குறித்துக் கொடுத்தார்.
கனிஷ்டனுடன் சரணித்தும் சேர்ந்து கொள்ள, இருவரும் சேர்ந்து அவர்கள் வீட்டை அரண்மனை போல் அலங்கரித்து இருந்தனர் துருவனின் திருமணத்திற்காக.
அந்த வீட்டின் நடுவில் விண்லோகம் சென்ற மூன்று பேரின் புகைபடமும் மலர் அலங்காரத்துடன் வைக்க பட்டிருக்க, அவர்கள் ஆசிர்வாதத்துடனே ஜனனிக்கு மாங்கல்யம் அணிவித்து தன் மனைவி என்ற ஸ்தானத்தை அவளுக்கு வழங்கினான் துருவன்.
அந்த நொடியில் அனைவர் கண்களிலும் ஆனந்த கண்ணீர்தான் தவழ்ந்து கொண்டிருந்தது.
கனிஷ்டன் தான் தினதரணியை வைத்துக்கொண்டு நின்றவன், புகை படம் எடுக்கும் போது அவளை துருவனிடம் கொடுத்து, “இரண்டு பேருக்கும் நடுவுல வச்சு போட்டோ எடுத்துக்கோங்க. வருங்காலத்துல அம்மா அப்பாக்கு கல்யாணம் நடக்குறத பார்த்த ஒரே ஒரு பிள்ளை நீதான்னு அவள்ட சொல்லலாம். “என்று சொல்லி அவர்களை சீண்டிக்கொண்டான்.
துருவனின் விருப்பப்படியும், கௌரியின் ஆசைப்படியும் அந்த திருமணம் சிறப்பாக நடந்து இருக்க, அன்று இரவு பூக்கள் தூவி துருவனுக்கும் ஜனனிக்கும் அறையை ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர் கனிஷ் மற்றும் ஹரிணி.
கனிஷ் கட்டிலில் பூ தூவினானோ இல்லையோ ஹரிணி மீதே மொத்த பூவையும் தூவிக்கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் அவளை நெருங்கி வந்தவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க, அவள் நெளிந்து கொண்டே நின்றிருந்தாள்.
அந்த சமயம் கதவை திறந்து கொண்டு துருவன் உள்ளே நுழைய அவனை தொடர்ந்து ஜனனியும் வந்தாள்.
கனிஷ்டன் உடனடியாக அவளில் இருந்து விலகி விட, ஹரிணி தான் நெளிந்த படியே நின்றாள்.
துருவனோ, “இது எங்களுக்கு ஏற்பாடு பண்ற மாதிரி தெரியலையே!”என்று சொன்ன சத்தத்தில் தான் தன்னிலை அடைந்த ஹரிணி குடுகுடுவேன வெளியில் ஒட, கனிஷ்டனும் ஏதும் சொலல்லாமல் அங்கிருந்து நழுவி விட்டான்.
ஜனனியோ, “தப்பான நேரத்துல உள்ள வந்துட்டோமா? “ என்று கேட்க, “இல்லையே நல்ல நேரத்துலதான் வந்திருக்கம். “ என்று சொல்லி அவளை தூக்கி கொண்டு மஞ்சத்தில் கிடத்தியவன் அவன் பணியை ஆற்ற தொடங்கிவிட்டான்.
வெளியே ஓடி வந்த ஹரிணியோ பின்னால் வந்த கனிஷ்டனிடம், “உன்னால மானமே போச்சு. “என்றாள்.
அவனோ, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, உனக்குத்தான் கொஞ்சம் எக்ஸ்பிரியன்ஸ் பத்தல. போக போக சரியாகிடும். “என்றவன் மீண்டும் அவளை சீண்ட தொடங்க, “இது நான் பார்த்த கனிஷா எண்டு எனக்கே சந்தேகமா இருக்கு. உனக்குள்ள இப்படி ஒரு காதல் ரோமியோ இருக்குனு தெரியாம போச்சே!”என்று சொன்னாள் ஹரிணி.
கனிஷோ, “இதெல்லாம் பப்ளிக்காவா சொல்லிட்டு சுத்த முடியும். காட்டுறவங்க கிட்ட தான் காட்ட முடியும். “என்றவன் விட்டதை தொடங்க, “ஹரிணி கொஞ்சம் வாயேன் “என்று அழைத்தாள் கனி.
ஹரிணியோ பாவமாக கனிஷ்டனை பார்க்க, “ஷப்பா நிம்மதியா ரொமான்ஸ் பண்ண கூட விடுதுக இல்லையே. “என்று சொன்னவன், “போ. “என்று அவளை அனுப்பி வைத்து ஏக்கமாக அவளையே பார்த்து நின்றான்.
இன்று வரை அவனது அனைத்து கடமைகளையும் குடும்பத்துக்காக சரியாக செய்து கொண்டிருப்பவன் இனி அவனது காதலின் கடமைகளையும் சேர்த்து தன்னவளுக்காக செய்ய காத்திருக்கின்றான்.