அத்தியாயம் 31
கனிஷ்டன் ஜனனிக்கு சாப்பாடு எடுப்பதற்காக வந்தவன், துருவன் அங்கு நின்று சரணித் மற்றும் கனியின் திருமண புகைபடத்தை பார்த்து நிற்பதை கண்டு கொண்டான்.
தலையை இரு பக்கமும் ஆட்டியவன், “இவன் இன்னும் என்ன என்ன பஞ்சாயத்தை கூட்ட போறானோ தெரியலையே!” என்று நினைத்த படி நகர அவனை கண்ட துருவனோ, “என்னடா நடக்குது இங்க? எனக்கு எதுவுமே புரியல. இவனுக்கும் கனிக்கும் எப்படி கல்யாணம் ஆச்சு, அப்போ அவினேஷ்? கனி எப்படி இதுக்கு சம்மதிச்சா? எல்லாத்துக்கும் மேலே அப்பா, அத்தை, மாமா எல்லாரும் நல்லாத்தானே இருந்தாங்க அவங்க எப்படி திடீர்னு இறந்தாங்க? “ என்று பல கேள்விகளை கனிஷ்டனிடம் கேட்டான்.
கனிஷ்டனோ, “இரண்டு வருஷம் எங்கள பத்தி நீ யோசிக்கவே இல்லையே! இப்போ என்ன இவ்வளவு அக்கறை உனக்கு? ஆனா ஒண்டு துருவ், நம்மளோட அப்பா இறந்து போறதுக்கும், ஜனனி இன்னைக்கு அவங்க அப்பா அம்மாவை இழந்துட்டு நிக்குறதுக்கும் ஒரே காரணம் நீ மட்டும் தான். ஏதோ பாப்பா வந்ததுக்கு பிறகுதான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தோம். இப்போ மறுபடியும் நீ வந்து அந்த சந்தோஷத்தை எல்லாம் கலச்சு விட்டுடாத. “என்றவன் சமையல் அறைக்குள் சென்று ஜனனிக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போனான்.
துருவனுக்கு கனிஷ்டனின் பேச்சு மிகுந்த மனவேதனையை கொடுத்தது,ஒரு காலத்தில் அவர்களுக்காகவே வாழ்ந்தவன் அவன், அவன் பார்த்து பார்த்து வளர்த்த கனிஷ்டன் அவனிடத்தில் வேண்டாவெறுப்பாக பேசிச் செல்வதை துருவனால் சற்றும் ஏற்க முடியவில்லை.
இடைப்பட்ட காலத்தில் அங்கு என்னதான் நடந்தது என்று அறிந்து கொள்ள அவன் மனம் அவா கொண்டாலும், அங்கு யாரும் அதை அவனுக்கு தெரிய படுத்தும் மனநிலையில் இல்லை. ஆனாலும் யாரும் அவனை வீட்டை விட்டு வெளியேறும் படியும் சொல்லவில்லை.
கௌரிக்கு என்னதான் அவர் மகன் மேல் கோபம் இருந்தாலும் அவனை பட்டினி போட விரும்பாதவர், சமைத்து அவனுக்கு உணவு எடுத்து வைத்து , “வீட்டுக்கு வந்தவங்க யாரும் பட்டினியா இருக்க தேவல. “என்று மட்டும் சொல்லி சென்றார்.
கனிஷ்டனுடன் அவன் இருந்து சாப்பிட்டாலும், கனிஷ்டன் துருவனிடத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.துருவன் வந்திருந்ததால் அந்த நேரத்தில் ஜனனியை தனியாக விட்டு சென்றால் ஏதும் பிரச்சனை ஆகிவிடும் என்று நினைத்த கனிஷ்டன் வீட்டிலே இருந்துவிட்டான்.
ஜனனியை பற்றி சொல்லவே வேண்டாம் அவள் அறையில் அவள் முடங்கி விட, கனிஷ்டன் தான் வேளைக்கு அவளுக்கு உணவு கொண்டு கொடுத்தான்.
அப்படியே நேரம் நகர, மாலை நேரமதில் ஜனனியிடம் இருந்து குழந்தையை பெற்றுக்கொண்டு வந்த கனிஷ்டன் ஹாலில் அமர்ந்து அவளுடன் விளையாடிக்கொண்டு இருந்தான்.
தினதரணி அவளுக்கே உரித்தான மழலை பாஷையில் கனிஷ்டனுடன் பேசி சிரித்திருக்க இது அங்கு நின்றிருந்த துருவனின் மனதிற்கும் இதமாகதான் இருந்தது.
உடனே அவர்கள் அருகில் வந்து அமர்ந்தவன், “பாப்பாவோட பெயர் என்ன? “ என்று கனிஷ்டனிடம் கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் குழந்தையுடன் விளையாடிக்கொண்டே, “தினதரணி “ என்றான் கனிஷ்டன்.
சிறிது நேரம் யோசித்தவன், “அப்பா, அத்தை, மாமாவோட பெயர்களை எல்லாம் சேர்த்து பாப்பாவுக்கு பெயர் வச்சிருக்க. நல்ல விஷயம் தான். “ என்றான்.
கனிஷ்டனும் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் இருக்க, தினதரணி அவளது மழலை குரலில், “ப்பா “ என்று கனிஷ்டனை அழைத்தவள் வெளியே கைகளை காட்டினாள்.
கனிஷ்டனோ,”ஓஹ் பாப்பாக்கு வெளிய போகணுமா? சரி வாங்க நம்ம அம்மாகிட்ட போய் பெர்மிஸன் கேட்டுட்டு ட்ரெஸ் மாத்திட்டு வரலாம். “என்றபடி அவளை தூக்க, “ இது உன்னோட குழந்தையா கனிஷ்? “ என்று கேட்டான் துருவன்.
கனிஷ்டன் குழந்தையை தூக்கிய படியே, “ஜனனியோட குழந்தையும் கூட. “ என்றான்.
துருவனுக்கு இது வரை சந்தேகமாகவே இருந்தது இப்போது உறுதியாகி விட, “ஏன் டா உன்னோட வாழ்க்கையை நீயே கெடுத்துகிட்ட? அவளை பத்தி உனக்கு முழுசா எதுவுமே தெரியாது கனிஷ், இரண்டு துரோகிகளை நீ கூடவே வச்சுட்டு இருக்க. உன்னோட வாழ்க்கையையும் கனியோட வாழ்க்கையையும் ஜனனியும் சரணித்தும் மொத்தமா அழிச்சிட்டாங்க. “என்றான்.
கனிஷ்டன் நிதானமாகவே அவன் பேசுவதை கேட்டு நின்றவன், “நீ இன்னுமே திருத்தல துருவ். “ என்று சொல்லும் போதே துருவ் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த கௌரி, “ யாருடா துரோகி? எங்கள பொறுத்த வரைக்கும் நீதான் துரோகி. ஜனனியும் சரணித்தும் சொக்க தங்கம்டா. அந்த பசங்க கால் தூசுக்கு கூட நீ வரமாட்ட. உன்னோட கோவத்துக்கு பயந்து நாங்க உன்னை கண்டிக்காம விட்டது பெரிய தப்பா போச்சு. உன்னை நம்பினதுக்கு நீ எங்களுக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா? “ என்று ஆவேசமாகவே கேட்டு விட்டார் அவர்.
சத்தம் கேட்டு ஜனனியும் கீழே வர, கனிஷ்டனோ, “அம்மா வேணாம்!” என்று தடுத்தான்.
கௌரியோ இயலாமையின் உச்சியில் இருந்தவர், “நீ சும்மா இரு கனிஷ். “என்றுவிட்டு , “தெரியுமாடா நீ எங்களுக்கு கொடுத்துட்டு போனது என்னனு? உன்னால இங்க மூணு பேரோட வாழ்கை போச்சு. மூணு உசுரு போச்சு. ஏதோ சரணித்ட புண்ணியத்துல கனியோட வாழ்கை தப்பிச்சுது. அந்த தம்பி இல்லனா என்னோட கனிட வாழ்க்கையும் எப்போவோ முடிஞ்சு போயிருக்கும். “என்றவர் அழ ஆரம்பித்து விட்டார்.
ஜனனியோ, “ அழாதீங்க அத்தை, உடம்புக்கு ஏதும் ஆயிட போகுது. இனி யாரையும் இழக்குறதுக்கு எங்க மனசுல தெம்பில்லை. “என்று சொல்ல, கனிஷ்டனும், “ஆமாம்மா, அழாதீங்க “ என்றான்.
அந்த நேரத்தில் சரணித்தின் மலை கிராமம் சென்று விட்டு இரண்டு நாட்கள் கழித்து வீட்டடிற்கு வந்த கனிக்கு துருவனை பார்த்ததும் நிற்காமல் கண்ணீர் வழிந்தது.
உடனே, “அண்ணா!”என்று ஓடி வந்து அவனை அணைத்தவள் சற்று நேரத்திலே விலகி விட்டாள்.
துருவன் அவளை கண்டதும் சந்தோஷபட்டாலும் அவள் விலகலில் ஏதோ ஒரு வலி அவனுக்கு.
உடனே, “கனி எப்படி இருக்க? என்று கேட்டவன், அவளை நோட்டமிட, அவள் வயிற்றில் குழந்தையை சுமந்து நிற்பதை கண்டுகொண்டான்.
உடனே, “கனி கன்சிவா இருக்கியா? “ என்று கேட்டு அவள் உச்சந்தலையில் முத்தமிட, உடை பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் சரணித்.
துருவனுக்கோ அவனை கண்டதும் அடக்கி வைத்திருந்த கோபங்கள் அனைத்தும் மீண்டும் கொதித்தேழுந்தது.
சரணித் துருவனை கண்டு சந்தோஷபட்டாலும் கூட அதை அவன் முகத்தில் சற்றும் காட்டிக்கொள்ளவில்லை. முகத்தை இறுக்கமாகவே வைத்துக்கொண்டு நின்றான்.
துருவன் தான் எகிறி சென்று அவன் ஷர்ட்டை பிடித்தவன், “எவ்வளவு தைரியம் உனக்கு? “ என்று கேட்டான்.
கனியோ, “துருவ்!”என்று ஆக்கிரோஷமாக அழைத்து, அவர்கள் அருகில் சென்றவள்,துருவனின் கையை சரணித்தின் ஷர்ட்டில் இருந்து எடுத்து விட்டு, “சரணித் என்னோட புருஷன். அவர் கிட்ட மரியாதை இல்லாம நீ நடக்குறத பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது. “என்றாள்.
துருவனோ அவளை விழி பிதுங்கி பார்த்தவன், “இவன் பண்ண வேலை எல்லாம் உனக்கு மறந்து போச்சா கனி? இவன் நல்லவன் எல்லாம் இல்லமா. “ என்று சொல்ல, “அது எங்களோட பர்சனல். அண்ட் இவர் நல்லவன் இல்லனு சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு? நீ என்ன யோக்கியமா? உன்னால இன்னைக்கு மூணு பேரோட வாழ்க்கையே போச்சே. உனக்கு யாரை பத்தி பேசவும் யோகித்தை இல்ல. “என்ற கனி சரணித்தின் கையை பற்றிக்கொண்டே மாடிபடிகள் ஏறி சென்றாள்.
ஜனனியும் கௌரியை அழைத்து செல்ல, கனிஷ்டனும் அவர்கள் பின்னாலே குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றான்.
இடையில் துருவனுக்கு தான் உலகமே தன் திசையை மாற்றி சுழல்கிறது என்ற எண்ணம். அவனது தம்பி, தங்கை, அம்மா என அனைவரும் அவனை நடத்தும் விதம் அவனுக்கு பெரும் மனவலியை கொடுக்க, “நான் என்ன பண்ணன்? என்னால யாரோட வாழ்கை போச்சு? தப்பு பண்ணவங்களை கூடவே வச்சுட்டு இவங்க எப்படி இவ்வளவு கன்பிடென்டா பேசுறாங்க? “ என்று நினைத்து குழம்பி போனான்.
கனிஷ்டன் ஜனனிக்கு சாப்பாடு எடுப்பதற்காக வந்தவன், துருவன் அங்கு நின்று சரணித் மற்றும் கனியின் திருமண புகைபடத்தை பார்த்து நிற்பதை கண்டு கொண்டான்.
தலையை இரு பக்கமும் ஆட்டியவன், “இவன் இன்னும் என்ன என்ன பஞ்சாயத்தை கூட்ட போறானோ தெரியலையே!” என்று நினைத்த படி நகர அவனை கண்ட துருவனோ, “என்னடா நடக்குது இங்க? எனக்கு எதுவுமே புரியல. இவனுக்கும் கனிக்கும் எப்படி கல்யாணம் ஆச்சு, அப்போ அவினேஷ்? கனி எப்படி இதுக்கு சம்மதிச்சா? எல்லாத்துக்கும் மேலே அப்பா, அத்தை, மாமா எல்லாரும் நல்லாத்தானே இருந்தாங்க அவங்க எப்படி திடீர்னு இறந்தாங்க? “ என்று பல கேள்விகளை கனிஷ்டனிடம் கேட்டான்.
கனிஷ்டனோ, “இரண்டு வருஷம் எங்கள பத்தி நீ யோசிக்கவே இல்லையே! இப்போ என்ன இவ்வளவு அக்கறை உனக்கு? ஆனா ஒண்டு துருவ், நம்மளோட அப்பா இறந்து போறதுக்கும், ஜனனி இன்னைக்கு அவங்க அப்பா அம்மாவை இழந்துட்டு நிக்குறதுக்கும் ஒரே காரணம் நீ மட்டும் தான். ஏதோ பாப்பா வந்ததுக்கு பிறகுதான் கொஞ்சம் சந்தோஷமா இருந்தோம். இப்போ மறுபடியும் நீ வந்து அந்த சந்தோஷத்தை எல்லாம் கலச்சு விட்டுடாத. “என்றவன் சமையல் அறைக்குள் சென்று ஜனனிக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு போனான்.
துருவனுக்கு கனிஷ்டனின் பேச்சு மிகுந்த மனவேதனையை கொடுத்தது,ஒரு காலத்தில் அவர்களுக்காகவே வாழ்ந்தவன் அவன், அவன் பார்த்து பார்த்து வளர்த்த கனிஷ்டன் அவனிடத்தில் வேண்டாவெறுப்பாக பேசிச் செல்வதை துருவனால் சற்றும் ஏற்க முடியவில்லை.
இடைப்பட்ட காலத்தில் அங்கு என்னதான் நடந்தது என்று அறிந்து கொள்ள அவன் மனம் அவா கொண்டாலும், அங்கு யாரும் அதை அவனுக்கு தெரிய படுத்தும் மனநிலையில் இல்லை. ஆனாலும் யாரும் அவனை வீட்டை விட்டு வெளியேறும் படியும் சொல்லவில்லை.
கௌரிக்கு என்னதான் அவர் மகன் மேல் கோபம் இருந்தாலும் அவனை பட்டினி போட விரும்பாதவர், சமைத்து அவனுக்கு உணவு எடுத்து வைத்து , “வீட்டுக்கு வந்தவங்க யாரும் பட்டினியா இருக்க தேவல. “என்று மட்டும் சொல்லி சென்றார்.
கனிஷ்டனுடன் அவன் இருந்து சாப்பிட்டாலும், கனிஷ்டன் துருவனிடத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.துருவன் வந்திருந்ததால் அந்த நேரத்தில் ஜனனியை தனியாக விட்டு சென்றால் ஏதும் பிரச்சனை ஆகிவிடும் என்று நினைத்த கனிஷ்டன் வீட்டிலே இருந்துவிட்டான்.
ஜனனியை பற்றி சொல்லவே வேண்டாம் அவள் அறையில் அவள் முடங்கி விட, கனிஷ்டன் தான் வேளைக்கு அவளுக்கு உணவு கொண்டு கொடுத்தான்.
அப்படியே நேரம் நகர, மாலை நேரமதில் ஜனனியிடம் இருந்து குழந்தையை பெற்றுக்கொண்டு வந்த கனிஷ்டன் ஹாலில் அமர்ந்து அவளுடன் விளையாடிக்கொண்டு இருந்தான்.
தினதரணி அவளுக்கே உரித்தான மழலை பாஷையில் கனிஷ்டனுடன் பேசி சிரித்திருக்க இது அங்கு நின்றிருந்த துருவனின் மனதிற்கும் இதமாகதான் இருந்தது.
உடனே அவர்கள் அருகில் வந்து அமர்ந்தவன், “பாப்பாவோட பெயர் என்ன? “ என்று கனிஷ்டனிடம் கேட்க, அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் குழந்தையுடன் விளையாடிக்கொண்டே, “தினதரணி “ என்றான் கனிஷ்டன்.
சிறிது நேரம் யோசித்தவன், “அப்பா, அத்தை, மாமாவோட பெயர்களை எல்லாம் சேர்த்து பாப்பாவுக்கு பெயர் வச்சிருக்க. நல்ல விஷயம் தான். “ என்றான்.
கனிஷ்டனும் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் இருக்க, தினதரணி அவளது மழலை குரலில், “ப்பா “ என்று கனிஷ்டனை அழைத்தவள் வெளியே கைகளை காட்டினாள்.
கனிஷ்டனோ,”ஓஹ் பாப்பாக்கு வெளிய போகணுமா? சரி வாங்க நம்ம அம்மாகிட்ட போய் பெர்மிஸன் கேட்டுட்டு ட்ரெஸ் மாத்திட்டு வரலாம். “என்றபடி அவளை தூக்க, “ இது உன்னோட குழந்தையா கனிஷ்? “ என்று கேட்டான் துருவன்.
கனிஷ்டன் குழந்தையை தூக்கிய படியே, “ஜனனியோட குழந்தையும் கூட. “ என்றான்.
துருவனுக்கு இது வரை சந்தேகமாகவே இருந்தது இப்போது உறுதியாகி விட, “ஏன் டா உன்னோட வாழ்க்கையை நீயே கெடுத்துகிட்ட? அவளை பத்தி உனக்கு முழுசா எதுவுமே தெரியாது கனிஷ், இரண்டு துரோகிகளை நீ கூடவே வச்சுட்டு இருக்க. உன்னோட வாழ்க்கையையும் கனியோட வாழ்க்கையையும் ஜனனியும் சரணித்தும் மொத்தமா அழிச்சிட்டாங்க. “என்றான்.
கனிஷ்டன் நிதானமாகவே அவன் பேசுவதை கேட்டு நின்றவன், “நீ இன்னுமே திருத்தல துருவ். “ என்று சொல்லும் போதே துருவ் பேசியதை கேட்டுக்கொண்டிருந்த கௌரி, “ யாருடா துரோகி? எங்கள பொறுத்த வரைக்கும் நீதான் துரோகி. ஜனனியும் சரணித்தும் சொக்க தங்கம்டா. அந்த பசங்க கால் தூசுக்கு கூட நீ வரமாட்ட. உன்னோட கோவத்துக்கு பயந்து நாங்க உன்னை கண்டிக்காம விட்டது பெரிய தப்பா போச்சு. உன்னை நம்பினதுக்கு நீ எங்களுக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா? “ என்று ஆவேசமாகவே கேட்டு விட்டார் அவர்.
சத்தம் கேட்டு ஜனனியும் கீழே வர, கனிஷ்டனோ, “அம்மா வேணாம்!” என்று தடுத்தான்.
கௌரியோ இயலாமையின் உச்சியில் இருந்தவர், “நீ சும்மா இரு கனிஷ். “என்றுவிட்டு , “தெரியுமாடா நீ எங்களுக்கு கொடுத்துட்டு போனது என்னனு? உன்னால இங்க மூணு பேரோட வாழ்கை போச்சு. மூணு உசுரு போச்சு. ஏதோ சரணித்ட புண்ணியத்துல கனியோட வாழ்கை தப்பிச்சுது. அந்த தம்பி இல்லனா என்னோட கனிட வாழ்க்கையும் எப்போவோ முடிஞ்சு போயிருக்கும். “என்றவர் அழ ஆரம்பித்து விட்டார்.
ஜனனியோ, “ அழாதீங்க அத்தை, உடம்புக்கு ஏதும் ஆயிட போகுது. இனி யாரையும் இழக்குறதுக்கு எங்க மனசுல தெம்பில்லை. “என்று சொல்ல, கனிஷ்டனும், “ஆமாம்மா, அழாதீங்க “ என்றான்.
அந்த நேரத்தில் சரணித்தின் மலை கிராமம் சென்று விட்டு இரண்டு நாட்கள் கழித்து வீட்டடிற்கு வந்த கனிக்கு துருவனை பார்த்ததும் நிற்காமல் கண்ணீர் வழிந்தது.
உடனே, “அண்ணா!”என்று ஓடி வந்து அவனை அணைத்தவள் சற்று நேரத்திலே விலகி விட்டாள்.
துருவன் அவளை கண்டதும் சந்தோஷபட்டாலும் அவள் விலகலில் ஏதோ ஒரு வலி அவனுக்கு.
உடனே, “கனி எப்படி இருக்க? என்று கேட்டவன், அவளை நோட்டமிட, அவள் வயிற்றில் குழந்தையை சுமந்து நிற்பதை கண்டுகொண்டான்.
உடனே, “கனி கன்சிவா இருக்கியா? “ என்று கேட்டு அவள் உச்சந்தலையில் முத்தமிட, உடை பைகளை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் சரணித்.
துருவனுக்கோ அவனை கண்டதும் அடக்கி வைத்திருந்த கோபங்கள் அனைத்தும் மீண்டும் கொதித்தேழுந்தது.
சரணித் துருவனை கண்டு சந்தோஷபட்டாலும் கூட அதை அவன் முகத்தில் சற்றும் காட்டிக்கொள்ளவில்லை. முகத்தை இறுக்கமாகவே வைத்துக்கொண்டு நின்றான்.
துருவன் தான் எகிறி சென்று அவன் ஷர்ட்டை பிடித்தவன், “எவ்வளவு தைரியம் உனக்கு? “ என்று கேட்டான்.
கனியோ, “துருவ்!”என்று ஆக்கிரோஷமாக அழைத்து, அவர்கள் அருகில் சென்றவள்,துருவனின் கையை சரணித்தின் ஷர்ட்டில் இருந்து எடுத்து விட்டு, “சரணித் என்னோட புருஷன். அவர் கிட்ட மரியாதை இல்லாம நீ நடக்குறத பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியாது. “என்றாள்.
துருவனோ அவளை விழி பிதுங்கி பார்த்தவன், “இவன் பண்ண வேலை எல்லாம் உனக்கு மறந்து போச்சா கனி? இவன் நல்லவன் எல்லாம் இல்லமா. “ என்று சொல்ல, “அது எங்களோட பர்சனல். அண்ட் இவர் நல்லவன் இல்லனு சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு? நீ என்ன யோக்கியமா? உன்னால இன்னைக்கு மூணு பேரோட வாழ்க்கையே போச்சே. உனக்கு யாரை பத்தி பேசவும் யோகித்தை இல்ல. “என்ற கனி சரணித்தின் கையை பற்றிக்கொண்டே மாடிபடிகள் ஏறி சென்றாள்.
ஜனனியும் கௌரியை அழைத்து செல்ல, கனிஷ்டனும் அவர்கள் பின்னாலே குழந்தையை தூக்கிக்கொண்டு சென்றான்.
இடையில் துருவனுக்கு தான் உலகமே தன் திசையை மாற்றி சுழல்கிறது என்ற எண்ணம். அவனது தம்பி, தங்கை, அம்மா என அனைவரும் அவனை நடத்தும் விதம் அவனுக்கு பெரும் மனவலியை கொடுக்க, “நான் என்ன பண்ணன்? என்னால யாரோட வாழ்கை போச்சு? தப்பு பண்ணவங்களை கூடவே வச்சுட்டு இவங்க எப்படி இவ்வளவு கன்பிடென்டா பேசுறாங்க? “ என்று நினைத்து குழம்பி போனான்.