அத்தியாயம் 21
கடந்த கால நினைவில் சுழன்றுகொண்டிருந்தவன் கண்ணில் நீர்துளிகள் அரும்பி , இப்போது அவள் அவனுடன் நடந்து கொண்ட விதமும் அவனை வாட்டி எடுக்க, “இவளுக்காக நான் என் அழணும் ? துரோகி என்னை ஏமாத்திட்டா. “ என்று சொல்லி கண்களை துடைத்துக் கொண்டான்.
அவன் நிதானமாக யோசிக்கும் மனநிலையில் இன்று மட்டும் அல்ல என்றும் இருந்தது இல்லை.
ஜனனிக்கு இது தெரிந்திருந்ததால், “சரி எதுக்கு வந்தான் எண்டு தெரியல. போய் பேசி பார்ப்பம்.” என்று நினைத்தவள் அவனிடம் நெருங்க, “இனி உன்கிட்ட பேச எதுவும் இல்லை. என்ன விட்டு தள்ளியே இரு.” என்றவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
ஜனனிக்கோ அவன் அவளை உயிரோடு கொன்று புதைத்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வு மட்டுமே இருந்து கொண்டிருந்தது.
இதே வேளை கம்பெனியில் வேலைகளை முடித்துக்கொண்ட கனிக்கா மற்றும் கனிஷ்டன் வீட்டுக்கு புறப்பட்டு இருக்க, காரை ஓட்டிக்கொண்டு வந்த கனிஷ்டனுக்கு மனதில் ஆயிரம் கேள்விகள் சுழன்று கொண்டிருந்தது.
அவனுக்கு கனிக்காவிடம் எதையும் நேராக கேட்டு விட முடியாது. சரணித்தின் பிரச்சனையின் பின்னர் அவள் மனதால் எவ்வளவு பாதிக்கபட்டாள் என்பதை கூட இருந்து பார்த்தவன் அவன்.
ஆனால் அவனுக்கு அன்று என்னதான் நடந்தது என்று தெரிய வேண்டிய கட்டாயம் இருந்தது, அதற்கு காரணம் இப்போதுநடந்து கொண்டிருக்கும் குழப்பங்களுக்கு பிள்ளையார் சுழி ஆறு வருடங்கள் முன் அரங்கேறிய கனி மற்றும் சரணித்தின் பஞ்சாயத்து தானே.
எல்லாவற்றையும் யோசித்தவன், சரணித்தை சந்தித்து பேசுவதையே அவனது முதல் கட்ட நகர்வாக்க நினைத்திருந்தான்.
கனிக்காவோ இடையில், “என்ன கனிஷ் அமைதியாவே வாற ? “ என்று கேட்க, “ஒன்னும் இல்ல, கொஞ்சம் டயர்ட். “என்றவன் வேறு ஏதும் பேசவில்லை.
கனிக்காதான் வளி முழுக்க, ஜனனி அவளை தவறாக நினைத்துக்கொண்டிருப்பதாகவும், எல்லாவற்றிற்கும் காரணம் சரணித் தான் என்று சொல்லி அவனுக்கு திட்டிக்கொண்டே வந்தாள்.
ஆனால் கனிஷ்டன் அதற்கு பதில் ஏதும் பேசவில்லை. இப்படியே வீட்டை வந்து அடைந்தவர்கள் தத்தமது வேலைகளில் மூழ்கிவிட, அவர்கள் அனைவரும் ஒன்றாக சந்தித்தது என்னவோ இரவு உணவு உண்ணும் வேளையில்தான்.
வாணி எல்லாருக்கும் உணவு பரிமாறிக்கொண்டிருக்க கௌரியோ , , “என்னப்பா துருவ், அடுத்த மாசமே ஒரு நல்ல நாள் குறிச்சிடுவமா? “ என்று கேட்டார்.
துருவனோ, “எதுக்கு? “ என்று சாப்பிட்ட படியே கேட்க, “ வேற எதுக்கு உனக்கு ஜனனிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கதான். “ என்றார் அவர்.
அவனோ கௌரியை முறைத்தவன், “இப்போ அதுக்கு என்ன அவசரம்? “ என்று கோபமாகவே கேட்க, “எங்களுக்கு எந்த அவசரமும் இல்ல உனக்குத்தான்.. “ என்றார் அவர்கள் மனநிலை பற்றி அறியாத கௌரி அவர்களை நக்கல் செய்யும் பொருட்டு.
தினகரன், சுந்தரம் மற்றும் வாணி சிரித்துக்கொள்ள, “என்னாச்சு அம்மா? “ என்று கேட்டாள் கனி.
கௌரி மாலை துருவன் ஜனனி அறைக்கு சென்றதையும் அவள் அலறியதையும் நக்கலாக சொல்ல, கனிக்காவோ, “ஓஹ் அப்போ சேர்ந்துடாங்க போல. “ என்று நினைத்து சந்தோஷபட்டாள்.
கனிஷ்டன் தான், “என்னடி நடக்குது இங்க? எங்கள எல்லாம் பார்த்தா உங்களுக்கு முட்டாள் மாதிரி தெரியுதா? “ என்று பக்கத்தில் அமர்ந்திருந்த ஜனனி காதில் குறுகுறுக்க, “நடந்தது முழுசா தெரியாம பேசிட்டு இருக்காங்கடா. இப்போ அவன் பண்ற ரகளைய மட்டும் பாரு. “ என்றாள் அவள்.
அவள் சொன்னால் போலவே, சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை தட்டி விட்டு, கதிரையை காலால் உதைத்து எழுந்த துருவன், “எத எங்க எப்படி பேசணும் எண்டு உங்களுக்கு விவஸ்த்த இல்லையா அம்மா? “ என்று சத்தம் போட்டான்.
கௌரியோ அவன் பேச்சில் அதிர்ந்து தள்ளி நிற்க, “துருவ் அம்மா கிட்ட பார்த்து பேசு. “ என்றாள் அந்த வீட்டில் அவனை எதிர்த்து பேசும் உரிமம் கொண்ட அவனது தங்கை கனி.
அவன் அவளையும் முறைத்தவன் அங்கே இருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து எறிந்து உடைத்துவிட்டுத்தான் சென்றிருந்தான்.
கௌரியோ இன்னும் அதிர்ந்து போய் நிற்க அவர் கண்கள் கலங்கி போய்இருந்தது.
தினகரனோ, “ கௌரி உன்மேல தான் தப்பு. வளர்ந்த புள்ள அவன். அவனோட பர்சனல் விஷயங்களை இப்படித்தான் எல்லார் முன்னாடியும் பேசுவியா? “என்று கேட்டு கைகளை கழுவி விட்டு எழுந்து கொள்ள, சுந்தரமும், “நம்ம துருவ் தானேமா, அவனே கோபம் குறைய வந்து பேசுவான். என்று சொல்லி அவர் பின்னே சென்றார்.
வாணிதான் கௌரியை சமாதானம் செய்ய, கனிக்காவும் அவருடன் சேர்ந்து கொண்டாள்.
இடையில் கனிஷ்டன் ஜனனியிடம் நடந்ததை கேட்டு தெரிந்து கொண்டவன், “போய்ட்டு இருக்குற பிரச்சனைய சமாளிக்குறதே பெரும் பாடா இருக்கு இதுக்குள்ள இவங்க வேற பிரச்சனைய கூட்டிக்கிட்டே போறாங்க. “என்றான்.
துருவனோ, எதற்கு கோபப்படுகிறோம், ஏன் கோபப்படுகிறோம் என்று ஏதும் புரியாத நிலையில் ஜனனி மீது இருந்த கோவத்தில் எல்லோர் மீதும் எரிந்து விழுந்து கொண்டிருந்தான்.
கனிக்கா மற்றும் கனிஷ்டன் வந்து கௌரியிடம் மன்னிப்பு கேட்டு பேசுமாறு சொல்ல அவர்களையும் திட்டி அனுப்பியிருந்தவன் நிதானமாகவே இல்லை.
அடுத்த நாள் காலையில் கண் விழித்த துருவனுக்கு முதல் நாள் அவன் செய்த செயல்களின் வீரியம் புரிய, “எல்லாம் அவளாலதான். “என்று சொன்னவன், கல்லூரிக்கு செல்ல ஆயத்தம் ஆகி வந்து சாப்பிட அமர்ந்து இருக்க, அமைதியாகவே அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் கௌரி.
அவனோ, “அம்மா! சாரிம்மா, நேற்று கொஞ்சம் கோபபட்டுட்டேன். “ என்று சொல்ல, “இல்லப்பா, என்மேலதான் தப்பு. எத பேசணும் எப்படி பேசணும் என்று தெரியாம பேசிட்டேன். “என்றார் கௌரி.
நேற்று இரவு தினகரன் கௌரிக்கு அவர் செய்த தவறை உணர்த்தி இருக்க, தான் அவ்வாறு எல்லோர் முன்னிலையிலும் பேசியது தவறு என்று உணர்ந்து கொண்டாலும் துருவன் அங்கு நடந்து கொண்டது அவருக்கு மனவலியை கொடுத்தது. அவருக்கு மட்டும் இல்ல தினகரன். சுந்தரம் மற்றும் வாணிக்கும் அதே உணர்வுதான்.
துருவனுக்கு கௌரி அவ்வாறு பேசுவது நெருடலாக இருக்க, “சாரிம்மா “ என்று சொன்னவனின் தலையை கோதியவர், “அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. அம்மாக்கு கோவம் இல்ல. நீ சாப்பிடு. “ என்று தனது வேதனையை தன்னுள் புதைத்துக்கொண்டார் அவன் கலங்கிவிட கூடாது என்பதற்காக.
ஆனால் அவருக்கு தெரியாது அவன் மொத்தமாக அனைவரையும் கலங்கடித்து கைவிட்டு செல்ல காத்திருக்கிறான் என்பது.
கடந்த கால நினைவில் சுழன்றுகொண்டிருந்தவன் கண்ணில் நீர்துளிகள் அரும்பி , இப்போது அவள் அவனுடன் நடந்து கொண்ட விதமும் அவனை வாட்டி எடுக்க, “இவளுக்காக நான் என் அழணும் ? துரோகி என்னை ஏமாத்திட்டா. “ என்று சொல்லி கண்களை துடைத்துக் கொண்டான்.
அவன் நிதானமாக யோசிக்கும் மனநிலையில் இன்று மட்டும் அல்ல என்றும் இருந்தது இல்லை.
ஜனனிக்கு இது தெரிந்திருந்ததால், “சரி எதுக்கு வந்தான் எண்டு தெரியல. போய் பேசி பார்ப்பம்.” என்று நினைத்தவள் அவனிடம் நெருங்க, “இனி உன்கிட்ட பேச எதுவும் இல்லை. என்ன விட்டு தள்ளியே இரு.” என்றவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
ஜனனிக்கோ அவன் அவளை உயிரோடு கொன்று புதைத்துக்கொண்டிருக்கிறான் என்ற உணர்வு மட்டுமே இருந்து கொண்டிருந்தது.
இதே வேளை கம்பெனியில் வேலைகளை முடித்துக்கொண்ட கனிக்கா மற்றும் கனிஷ்டன் வீட்டுக்கு புறப்பட்டு இருக்க, காரை ஓட்டிக்கொண்டு வந்த கனிஷ்டனுக்கு மனதில் ஆயிரம் கேள்விகள் சுழன்று கொண்டிருந்தது.
அவனுக்கு கனிக்காவிடம் எதையும் நேராக கேட்டு விட முடியாது. சரணித்தின் பிரச்சனையின் பின்னர் அவள் மனதால் எவ்வளவு பாதிக்கபட்டாள் என்பதை கூட இருந்து பார்த்தவன் அவன்.
ஆனால் அவனுக்கு அன்று என்னதான் நடந்தது என்று தெரிய வேண்டிய கட்டாயம் இருந்தது, அதற்கு காரணம் இப்போதுநடந்து கொண்டிருக்கும் குழப்பங்களுக்கு பிள்ளையார் சுழி ஆறு வருடங்கள் முன் அரங்கேறிய கனி மற்றும் சரணித்தின் பஞ்சாயத்து தானே.
எல்லாவற்றையும் யோசித்தவன், சரணித்தை சந்தித்து பேசுவதையே அவனது முதல் கட்ட நகர்வாக்க நினைத்திருந்தான்.
கனிக்காவோ இடையில், “என்ன கனிஷ் அமைதியாவே வாற ? “ என்று கேட்க, “ஒன்னும் இல்ல, கொஞ்சம் டயர்ட். “என்றவன் வேறு ஏதும் பேசவில்லை.
கனிக்காதான் வளி முழுக்க, ஜனனி அவளை தவறாக நினைத்துக்கொண்டிருப்பதாகவும், எல்லாவற்றிற்கும் காரணம் சரணித் தான் என்று சொல்லி அவனுக்கு திட்டிக்கொண்டே வந்தாள்.
ஆனால் கனிஷ்டன் அதற்கு பதில் ஏதும் பேசவில்லை. இப்படியே வீட்டை வந்து அடைந்தவர்கள் தத்தமது வேலைகளில் மூழ்கிவிட, அவர்கள் அனைவரும் ஒன்றாக சந்தித்தது என்னவோ இரவு உணவு உண்ணும் வேளையில்தான்.
வாணி எல்லாருக்கும் உணவு பரிமாறிக்கொண்டிருக்க கௌரியோ , , “என்னப்பா துருவ், அடுத்த மாசமே ஒரு நல்ல நாள் குறிச்சிடுவமா? “ என்று கேட்டார்.
துருவனோ, “எதுக்கு? “ என்று சாப்பிட்ட படியே கேட்க, “ வேற எதுக்கு உனக்கு ஜனனிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கதான். “ என்றார் அவர்.
அவனோ கௌரியை முறைத்தவன், “இப்போ அதுக்கு என்ன அவசரம்? “ என்று கோபமாகவே கேட்க, “எங்களுக்கு எந்த அவசரமும் இல்ல உனக்குத்தான்.. “ என்றார் அவர்கள் மனநிலை பற்றி அறியாத கௌரி அவர்களை நக்கல் செய்யும் பொருட்டு.
தினகரன், சுந்தரம் மற்றும் வாணி சிரித்துக்கொள்ள, “என்னாச்சு அம்மா? “ என்று கேட்டாள் கனி.
கௌரி மாலை துருவன் ஜனனி அறைக்கு சென்றதையும் அவள் அலறியதையும் நக்கலாக சொல்ல, கனிக்காவோ, “ஓஹ் அப்போ சேர்ந்துடாங்க போல. “ என்று நினைத்து சந்தோஷபட்டாள்.
கனிஷ்டன் தான், “என்னடி நடக்குது இங்க? எங்கள எல்லாம் பார்த்தா உங்களுக்கு முட்டாள் மாதிரி தெரியுதா? “ என்று பக்கத்தில் அமர்ந்திருந்த ஜனனி காதில் குறுகுறுக்க, “நடந்தது முழுசா தெரியாம பேசிட்டு இருக்காங்கடா. இப்போ அவன் பண்ற ரகளைய மட்டும் பாரு. “ என்றாள் அவள்.
அவள் சொன்னால் போலவே, சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை தட்டி விட்டு, கதிரையை காலால் உதைத்து எழுந்த துருவன், “எத எங்க எப்படி பேசணும் எண்டு உங்களுக்கு விவஸ்த்த இல்லையா அம்மா? “ என்று சத்தம் போட்டான்.
கௌரியோ அவன் பேச்சில் அதிர்ந்து தள்ளி நிற்க, “துருவ் அம்மா கிட்ட பார்த்து பேசு. “ என்றாள் அந்த வீட்டில் அவனை எதிர்த்து பேசும் உரிமம் கொண்ட அவனது தங்கை கனி.
அவன் அவளையும் முறைத்தவன் அங்கே இருந்த தண்ணீர் கிளாஸை எடுத்து எறிந்து உடைத்துவிட்டுத்தான் சென்றிருந்தான்.
கௌரியோ இன்னும் அதிர்ந்து போய் நிற்க அவர் கண்கள் கலங்கி போய்இருந்தது.
தினகரனோ, “ கௌரி உன்மேல தான் தப்பு. வளர்ந்த புள்ள அவன். அவனோட பர்சனல் விஷயங்களை இப்படித்தான் எல்லார் முன்னாடியும் பேசுவியா? “என்று கேட்டு கைகளை கழுவி விட்டு எழுந்து கொள்ள, சுந்தரமும், “நம்ம துருவ் தானேமா, அவனே கோபம் குறைய வந்து பேசுவான். என்று சொல்லி அவர் பின்னே சென்றார்.
வாணிதான் கௌரியை சமாதானம் செய்ய, கனிக்காவும் அவருடன் சேர்ந்து கொண்டாள்.
இடையில் கனிஷ்டன் ஜனனியிடம் நடந்ததை கேட்டு தெரிந்து கொண்டவன், “போய்ட்டு இருக்குற பிரச்சனைய சமாளிக்குறதே பெரும் பாடா இருக்கு இதுக்குள்ள இவங்க வேற பிரச்சனைய கூட்டிக்கிட்டே போறாங்க. “என்றான்.
துருவனோ, எதற்கு கோபப்படுகிறோம், ஏன் கோபப்படுகிறோம் என்று ஏதும் புரியாத நிலையில் ஜனனி மீது இருந்த கோவத்தில் எல்லோர் மீதும் எரிந்து விழுந்து கொண்டிருந்தான்.
கனிக்கா மற்றும் கனிஷ்டன் வந்து கௌரியிடம் மன்னிப்பு கேட்டு பேசுமாறு சொல்ல அவர்களையும் திட்டி அனுப்பியிருந்தவன் நிதானமாகவே இல்லை.
அடுத்த நாள் காலையில் கண் விழித்த துருவனுக்கு முதல் நாள் அவன் செய்த செயல்களின் வீரியம் புரிய, “எல்லாம் அவளாலதான். “என்று சொன்னவன், கல்லூரிக்கு செல்ல ஆயத்தம் ஆகி வந்து சாப்பிட அமர்ந்து இருக்க, அமைதியாகவே அவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தார் கௌரி.
அவனோ, “அம்மா! சாரிம்மா, நேற்று கொஞ்சம் கோபபட்டுட்டேன். “ என்று சொல்ல, “இல்லப்பா, என்மேலதான் தப்பு. எத பேசணும் எப்படி பேசணும் என்று தெரியாம பேசிட்டேன். “என்றார் கௌரி.
நேற்று இரவு தினகரன் கௌரிக்கு அவர் செய்த தவறை உணர்த்தி இருக்க, தான் அவ்வாறு எல்லோர் முன்னிலையிலும் பேசியது தவறு என்று உணர்ந்து கொண்டாலும் துருவன் அங்கு நடந்து கொண்டது அவருக்கு மனவலியை கொடுத்தது. அவருக்கு மட்டும் இல்ல தினகரன். சுந்தரம் மற்றும் வாணிக்கும் அதே உணர்வுதான்.
துருவனுக்கு கௌரி அவ்வாறு பேசுவது நெருடலாக இருக்க, “சாரிம்மா “ என்று சொன்னவனின் தலையை கோதியவர், “அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. அம்மாக்கு கோவம் இல்ல. நீ சாப்பிடு. “ என்று தனது வேதனையை தன்னுள் புதைத்துக்கொண்டார் அவன் கலங்கிவிட கூடாது என்பதற்காக.
ஆனால் அவருக்கு தெரியாது அவன் மொத்தமாக அனைவரையும் கலங்கடித்து கைவிட்டு செல்ல காத்திருக்கிறான் என்பது.