அத்தியாயம் 11
சரணித்தும், “சரி அப்போ நானும் புறப்படுறன். கொஞ்சம் வெளியில போற வேலை இருக்கு. “என்று சொல்லி செல்ல மற்றவர்களும் அங்கிருந்த சிறு சிறு வேலைகளை முடித்துக்கொண்டு சைக்கிள் பார்க்கிங் வந்து சேர்ந்தனர்.
இடையில் பெண்கள் கழிப்பறை சென்ற கனிக்காவிற்கு அங்கு தூர்நாற்றம் வீச, “இங்க எப்படி ட்ரெஸ் சேஞ் பண்ண முடியும்? “ என்று நினைத்து சுற்றி முற்றி பார்த்தவள் அங்கு மறைவாக இருந்த மோர்டர்ரூமை கண்டுகொண்டாள்.
நேராக அங்கு சென்றவள், “ஸ்கூல்ல யாருமே இல்ல, இங்க யாரும் வரவும் மாட்டாங்க. நம்ம இங்கையே சேஞ் பண்ணிக்கலாம். “என்று நினைத்துக்கொண்டு, தோள்பையை வெளியில் வைத்து விட்டு உடைகளை மட்டும் எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
சரணித் அனைவரிடமும் சொல்லி விட்டு போனவன்,அப்போதுதான் மாடி படிகளில் இருந்து இறங்கி வர, அவனை தூரத்தில் இருந்து பார்த்த கனிஷ்டன், “இவன் அப்போவே களம்பிடானே! இப்போதான் கீழ வாறான். “என்று சொல்ல, “இடைல ஏதாச்சும் வேலை வந்திருக்கும். “என்றாள் ஹரிணி.
சரணித் அவன் செல்போனையே உத்து பார்த்தவன், சிரித்துக்க்கொண்டே அவன் அடிவயிற்றை தடவியபடி கனிக்கா சென்றிருந்த அதே மோட்டார்ரூமை நோக்கி வந்தான்.
இந்த சமயம் துருவனும் மாணிக்கத்துடன் பேசிவிட்டு இவர்கள் இருந்த சைக்கிள் பார்க்கிங்கிற்கு வந்தவன், “என்ன நீங்க முணு பேர் மட்டும் நிக்குறீங்க கனிக்கா எங்க? “ என்று கேட்க, ஜனனிதான் நடந்ததை அவனிடம் சொன்னாள்.
துருவனோ கனிஷ்டன் தலையில் லேசாக கொட்டியவன், “பார்த்து பொறுமையா வேலைய முடிக்க மாட்டியா? “ என்று கேட்க, “தெரியாம தட்டுபட்டுடிச்சு துருவ், நீ வேற ஆரம்பிக்காத அவள் ஏற்கனவே என்ன திட்டிட்டா. “ என்றான் கனிஷ்டன்.
இதே நேரத்தில் கனிக்கா தனது ஆடைகளை களைந்தவள், ஜனனி கொடுத்த ஆடைகளை போடுவதற்கு ஆயத்தமாக நிற்க, “கனி.. “ என்று அழைத்துக்கொண்டே அந்த சிறு அறைக்குள் நுழைந்தான் சரணித்.
கனிக்கா அந்த அழைப்பில் அதிர்ந்தவள் திரும்பி பார்க்க அங்கு சரணித் நிற்பது மட்டுமே அவளுக்கு தெரிந்தது. அவளுக்கு எவ்வாறு எதிர்செயல் ஆற்றுவது என்றே புரியவில்லை.
“ச.. ர.. கிட்..ட வ..ரா..த தள்..ளி போ... “ என்று உளறியவள் காலடிகளை பின்னே வைத்து சென்றாள்.
சரணித்தின் கண்களோ அகல விரிந்து கொள்ள, “ஹேய்!”என்று கொண்டே எட்டி பாய்ந்தவன் அவள் இடையை சுற்றி தன்னுடன் இழுத்து புடித்துக்கொண்டான்.
அதிர்ந்த கனிக்காவோ, அவன் மார்பில் கை வைத்து தள்ளியவள், கீழே கிடந்த அவள் மேலாடையை எடுத்து தன்னை மறைத்துக்கொண்டே, “அண்ணா.... அண்ணா.. துருவ் அண்ணா “என்று அலற ஆரம்பித்து விட்டாள்.
பாடசாலை மாணவர்கள் அனைவரும் சென்றிருக்க அங்கு ஆள் அரவமே இல்லாமல் இருந்ததால் அவள் அலறிய சத்தம் இங்கு நின்றிருந்த அனைவரின் காதுகளிலும் தாராளமாய் ஒலித்தது.
துருவனும் கனிஷ்டனும் அவளின் அலறலை கேட்டு பதறிஅடித்துக்கொண்டு சத்தம் வந்த பக்கம் நோக்கி ஓட, ஜனனி மற்றும் ஹரிணியும் அவர்கள் பின்னால் ஓடினார்கள்.
சரணித்தான் அந்த சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்க அந்நேரம் புயல் வேகத்தில் கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தனர் துருவன் மற்றும் கனிஷ்டன்.
கனிக்கா அவள் மேலாடையை இறுக்கி பிடித்துக்கொண்டவள், கண்ணை மூடிக்கொண்டு, “அண்ணா உள்ளே வராதா.. ப்ளீஸ் வெளியே போ.. “ என்றபடி தரையில் குந்திக்கொண்டாள்.
துருவனுக்கும் கனிஷ்டனுக்கும் அவளை அந்த கோலத்தில் பார்த்ததும் நரம்புகள் புடைத்தேழுந்தது, கோபத்தின் உச்சியில் நின்ற இருவரும் அங்கிருந்த சரணித்தின் ஷர்ட் கொலரை பிடித்து வெளியில் இழுத்து வர, நிலைமையை புரிந்து கொண்ட ஜனனி மற்றும் ஹரிணி ஓடிச்சென்று கனிக்காவை அணைத்துக் கொண்டனர்.
சரணித்தை இழுத்து வந்து நிலத்தில் தள்ளி விட்ட துருவன் மற்றும் கனிஷ்டன் அவனை அடித்து துவைத்துக்கொண்டிருக்க, “ப்ளீஸ் அடிக்காதீங்கடா, நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க. “ என்று சொன்ன சரணித்தின் கெஞ்சல்கள் எல்லாம் அவர்கள் காதுகளிற்கு விழவே இல்லை.
இந்த சத்தம் கேட்டு அந்த பக்கம் வந்த மாணிக்கம், “டேய் பசங்களா! என்னடா பண்றீங்க? “ என்று கேட்டு ஓடி வர அவர் பின்னாலே செக்யூரிட்டியும் வந்தார்.
அவர்கள் பிடியில் இருந்து சரணித்தை பிரித்து எடுக்கவே அவர்களுக்கு படாத பாடு ஆகிப்போனது. சரணித் வாய், முகம் என இரத்தம் சொட்ட வலியில் துடித்து நின்றிருக்க, “இது ஸ்கூலா இல்ல வேற எதுமா? எதுக்குடா இவனை இப்படி போட்டு அடிக்குறீங்க? “ என்று கேட்டார் மாணிக்கம்.
துருவனோ, “இவன் பண்ண வேலைக்கு இவனை அடிக்காம..கொஞ்சுவாங்களா“ என்றவன் அவன் கண்டதை மட்டும் வைத்து அங்கு நடந்ததை யுகித்து மாணிக்கத்திடம் சொல்ல, அவரோ, “என்ன சரணித்தா??? “ என்று அவனை பார்த்தவர், “சரி இதை நான் பார்த்துக்குறேன். “என்றபடி அவனை அங்கிருந்து அழைத்துச்செல்ல, “இவனை எங்க சார் கூட்டிட்டு போறீங்க? இவனை எல்லாம். “ என்று சொல்லி மறுபடியும் அவன் மீது பாய்ந்தான் துருவன்.
மாணிக்கமோ மறுபடியும் அவனை தடுத்தவர், “அதான் நான் இதை பார்த்துக்கிறேன் என்று சொல்றன் தானே. இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கணுமோ அதை நான் கொடுக்கிறேன். “என்றவர் அவனை அங்கிருந்து அழைத்து செல்வதிலே குறியாக இருந்தார்.
அவருக்கு தெரியும் சரணித் அங்கு நின்றால் அவர்கள் இருவரும் இவனை அடித்தே கொன்றுவிடுவார்கள் என்று.
கனிஷ்டனோ மாணிக்கம் அழைத்து சென்ற சரணித்தை பார்த்து, “ஒரு நிமிஷம். “ என்றவன் அவன் முன்னே சென்று நின்று கொண்டு, “உன்ன எவ்வளவு நம்புனேன்டா. உன்னை நம்பி தானே வீட்டுக்குள்ள சேர்த்தோம்? எங்க அம்மா உன்னையும் புள்ளையா நினைச்சு எத்தனை நாள் அவங்க கையால உனக்கு சோறு போட்டிருப்பாங்க? எங்களுக்கு ஏன்டா இப்படி ஒரு கேவலத்தை பண்ண? “என்று கேட்கும் போதே அவன் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
சரணித்தோ, “கனிஷ் நான்.. “ என்றும் போதே, “இனி என்னோட வாழ்நாள்ல உன் முகத்தை நான் பார்க்க கூடாது. “என்றவன் அவனை கடந்து சென்று துருவன் பக்கத்தில் நின்று கொண்டான்.
இந்த கணத்திலே அவர்களில் அத்தனை வருட நட்பும் உடைந்து பகையாக மாறியது.