அத்தியாயம் 16
கனிஷ்டனும் ஹரிணியும் அவளை தேற்ற, “நான் என்ன தப்பான பொண்ணா? இத்தனை வருஷமா என்ன பக்கத்துல இருந்து பார்த்து காதலிச்சவனுக்கு இப்போ மட்டும் நான் தப்பானவளா தெரியிறேனா?” என்று வலியுடன் கேட்டாள் ஜனனி.
ஹரிணியோ, “அப்படி இல்ல ஜனனி, துருவுக்கு நீ சரணித்தோட பழகுறது பிடிக்கல. அதனாலதான் இப்படி நடந்துக்கிறான். நீ மட்டும் சரணித் கூட பேசுறத ஸ்டாப் பண்ணி பாரு. மறுபடியும் அவன் உன்கூட பழைய மாதிரி பேச ஸ்டார்ட் பண்ணிடுவான்.” என்றாள்.
ஜனனி அவளை முறைத்தவள், “ஆமா அவனுக்கு மட்டும் இல்லை உங்க எல்லாருக்குமே நான் சரணித்தோட பேசுறதுதான் பெரிய பிரச்சனையா தெரியுதுல? முதல்ல ஒன்ன தெரிஞ்சிக்கோங்க நானா போய் அவன்கூட பேசல உங்கள மாதிரியே எனக்கும் அவன் மேலே கோபம், வெறுப்பு எல்லாமே இருந்துச்சு. ஆனா அவன் எனக்கு பண்ண ஒரே ஒரு விஷயத்துல அது எல்லாமே மறைஞ்சு போச்சு. “என்றவள் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
ஆம் சரணித் ப்ரோபஸராக அவளது கல்லூரிக்கு வந்து சேர்ந்த முதல் நாள் அது, அன்று துருவனுக்கும் வீட்டில் வேலைகள் இருந்ததால் தாமதமாகவே கல்லூரிக்கு புறப்பட்டு இருக்க, எப்போதுமே தாமதமாக வரும் ஜனனியும் அவனுடனே ஒட்டிக்கொண்டாள்.
கல்லூரி வளாகத்திற்குள் காரை விட்டவன், “சரி இன்னைக்கு அசைமென்ட் முடிச்சியா? “என்று கேட்க தலையில் கை வைத்தவள், இல்லை என்று தலையை ஆட்டினாள்.
துருவனோ, “அடிபாவி, நேற்று எப்படி பண்ணனும் எண்டெல்லாம் வந்து கேட்டியே? “என்று கேட்க, “ ஆமா நான் வந்து கேட்டேன். நீ எனக்கு அதை சொல்லி தரலையே. எனக்கு நீ எடுத்த பாடமே வேற. அதை நான் இங்க அசைமென்டா பண்ணி கொடுக்க முடியுமா? “என்று வெட்கத்துடனே கேட்டாள்.
அவனும் நெற்றியை நீவிக்கொண்டவன், “சரி சரி, காலைலயே அதெல்லாம் பேசி மூட கிளப்பாத. “என்றவன் அடக்கப்பட்ட புன்னகையுடன் அவளை பார்க்க, “என்ன அப்படி பார்க்கிற? “ என்று கேட்டாள் அவள்.
துருவனோ, “ஓஹ்! என்னோட பார்வைக்கு என்ன அர்த்தம்னு உனக்கு தெரியாது அப்படித்தானே? “ என்று கேட்க, அவளோ, “இல்லையே தெரியாதே. “ என்று சொல்லி சிரித்துக்கொண்டவள் கதவை திறந்து இறங்க போக, அவள் கைகளை பிடித்து உள்ளே இழுத்தவன் அவள் இதழ்களை தன்வசம் ஆக்கியிருந்தான்.
அவளும் கண்களை மூடி அவனுக்கு ஒத்துழைத்துக்கொண்டிருக்க, கண்களை திறந்து அவளின் தலை முடியை ஒதுக்கிக் கொண்டிருந்தவன் கண்கள் சற்று வெளியிலும் நோட்டமிட அங்கு சரணித் பைக்கை பார்க் செய்வது அவன் கண்களில் பட்டது.
உடனே இதழ்யுத்தத்தை அவன் நிறுத்திக்கொள்ள மெதுவாக கண்களை திறந்த ஜனனி கண்டது என்னவோ அவன் சிவந்திருந்த கண்களையும், புடைத்து எழுந்திருந்த அவன் கை நரம்புகளையும் தான்.
அவனை கேள்வியாக பார்த்துக்கொண்டே அவனில் இருந்து பிரிந்தவள், அவன் பார்த்துக்கொண்டிருந்த திசையை பார்க்க அவளுக்கு தூக்கி வாரி போட்டது. “இவன் எப்படி இங்க? “ என்றுதான் நினைத்துக்கொண்டாள்.
அவனை அவள் முறைத்துக்கொண்டிருந்த தருணம், அதிரடியாக காரில் இருந்து இறங்கிய துருவன் சரணித்தை நோக்கி சென்றான்.
ஜனனியோ துருவனின் கோபத்திற்கு கடிவாளம் இட இயலாது என்று தெரிந்தாலும் , “அய்யய்யோ அடிச்சு வச்சுட போறான். யாரும் பார்த்தா பிரச்சனை ஆகிடும். “ என்ற பதற்றத்தில் அவன் பின்னால் ஓடிச்சென்றாள்.
துருவன் நேராக சென்று சரணித்தின் முன்னால் நின்று கைகளை பின் கட்டிக்கொள்ள,ஜனனியும் அவன் பின்னால் சென்று நின்றுகொண்டாள்.
சரணித்தின் முகமோ மலர “ஹேய் துருவ்! எப்படி இருக்க? ஜனனி! என்ன இப்படி வளந்துட்ட? எப்படி இருக்க? நான் இங்கதான் ஆர்ட்ஸ் டிபார்ட்மென்ட்ல ப்ரோபஸரா ஜோயின் பண்ணிருக்கேன் “என்றான்.
துருவனோ அதற்கு மேல் பொறுமை இல்லாதவன் சரணித்தின் ஷர்ட் காலரை பிடித்து, “இங்க எதுக்குடா வந்த? உன்னை பார்த்தாலே வெட்டி போடுற அளவுக்கு கோபம் வருது எனக்கு. “என்றான்.
சரணித்தோ வெற்று புன்னகையோடு நின்றிருந்தானே அன்றி ஒன்றுமே பேசவில்லை.
ஆனாலும் அவன் மனதிற்குள், “நான் எந்த தப்பும் பண்ணலடா. என்ன நம்புங்க “ என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தான்.
துருவனிற்கு அவனது புன்னகை எரிச்சலை கிளப்ப, அவனை அடிக்க கை ஓங்கியே விட்டான்.
ஜனனிதான் அவள் இரு கைகளாலும் அவன் ஒற்றை கையை பிடித்துக்கொண்டவள், “வேணாம் துருவ், ப்ளீஸ் கோவத்தை கண்ட்ரோல் பண்ணு. யாரும் பார்த்தா பிரச்சனை ஆகிடும். “ என்றபடி அவனை அங்கிருந்து காரிற்கு இழுத்து செல்ல படாத பாடு பட்டாள்.
காரில் அவனை ஏற்றி, மறுபக்கம் அவளும் ஏறிக்கொண்டவள், “கூல் துருவ்! யாரும் நீ இங்க நிண்டு சண்டை போடுறத பார்த்தால் பிரச்சனை ஆகிடும். “என்று சொல்ல, “அதுக்கு அந்த நாய அப்படியே விட சொல்றியா? என்ன தைரியம் அவனுக்கு? “ என்று எகிறினான் துருவ்.
ஜனனியோ அவனை நெருங்கி சென்று அணைத்துக்கொண்டவள், “ப்ளீஸ்டா இப்படி கோபபடாத. சில விஷயத்துல நம்ம பொறுமையா இருந்துதான் ஆகணும். இல்லனா நமக்குத்தான் பாதிப்பு. “என்றாள்.
துருவனும் அவனவள் அணைப்பில் சற்று அடங்கித்தான் போனவன், சிறிது நேர அமைதியின் பின்னர் அவளை தன்னில் இருந்து விலக்கி எடுத்து, “ஓகே, நான் கோபபடல. ஆனா எனக்கு நீ ஒரு ப்ரோமிஸ் பண்ணி தரணும். “ என்று கேட்டான்.
ஜனனியோ, “என்னது? “ என்று கேட்க, “ நீ இங்க சரணித்த பார்த்தது, அவன் இங்க தான் வேர்க் பண்ண போறான் என்றது எதுவுமே கனிக்காக்கோ, கனிஷ்டனுக்கோ தெரிய வேணாம். “ என்றான் அவன்.
அவளோ இதனால் ஏற்பட போகும் விபரிதம் அறியாமல் அவனுக்கு வாக்கு கொடுத்தவள், “நான் ஏன் இவனை பத்தி கனிட்ட பேச போறேன்! இவனை பார்தாலே எரிச்சலா இருக்கு. “என்றாள்.
ஆனால் ஜனனி சரணித் மேல் கொண்டிருந்த கோபம் வெறுப்பு எல்லாம் ஒரு வார கால இடைவெளியிலே மறைந்து விட்டது.
கனிஷ்டனும் ஹரிணியும் அவளை தேற்ற, “நான் என்ன தப்பான பொண்ணா? இத்தனை வருஷமா என்ன பக்கத்துல இருந்து பார்த்து காதலிச்சவனுக்கு இப்போ மட்டும் நான் தப்பானவளா தெரியிறேனா?” என்று வலியுடன் கேட்டாள் ஜனனி.
ஹரிணியோ, “அப்படி இல்ல ஜனனி, துருவுக்கு நீ சரணித்தோட பழகுறது பிடிக்கல. அதனாலதான் இப்படி நடந்துக்கிறான். நீ மட்டும் சரணித் கூட பேசுறத ஸ்டாப் பண்ணி பாரு. மறுபடியும் அவன் உன்கூட பழைய மாதிரி பேச ஸ்டார்ட் பண்ணிடுவான்.” என்றாள்.
ஜனனி அவளை முறைத்தவள், “ஆமா அவனுக்கு மட்டும் இல்லை உங்க எல்லாருக்குமே நான் சரணித்தோட பேசுறதுதான் பெரிய பிரச்சனையா தெரியுதுல? முதல்ல ஒன்ன தெரிஞ்சிக்கோங்க நானா போய் அவன்கூட பேசல உங்கள மாதிரியே எனக்கும் அவன் மேலே கோபம், வெறுப்பு எல்லாமே இருந்துச்சு. ஆனா அவன் எனக்கு பண்ண ஒரே ஒரு விஷயத்துல அது எல்லாமே மறைஞ்சு போச்சு. “என்றவள் நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
ஆம் சரணித் ப்ரோபஸராக அவளது கல்லூரிக்கு வந்து சேர்ந்த முதல் நாள் அது, அன்று துருவனுக்கும் வீட்டில் வேலைகள் இருந்ததால் தாமதமாகவே கல்லூரிக்கு புறப்பட்டு இருக்க, எப்போதுமே தாமதமாக வரும் ஜனனியும் அவனுடனே ஒட்டிக்கொண்டாள்.
கல்லூரி வளாகத்திற்குள் காரை விட்டவன், “சரி இன்னைக்கு அசைமென்ட் முடிச்சியா? “என்று கேட்க தலையில் கை வைத்தவள், இல்லை என்று தலையை ஆட்டினாள்.
துருவனோ, “அடிபாவி, நேற்று எப்படி பண்ணனும் எண்டெல்லாம் வந்து கேட்டியே? “என்று கேட்க, “ ஆமா நான் வந்து கேட்டேன். நீ எனக்கு அதை சொல்லி தரலையே. எனக்கு நீ எடுத்த பாடமே வேற. அதை நான் இங்க அசைமென்டா பண்ணி கொடுக்க முடியுமா? “என்று வெட்கத்துடனே கேட்டாள்.
அவனும் நெற்றியை நீவிக்கொண்டவன், “சரி சரி, காலைலயே அதெல்லாம் பேசி மூட கிளப்பாத. “என்றவன் அடக்கப்பட்ட புன்னகையுடன் அவளை பார்க்க, “என்ன அப்படி பார்க்கிற? “ என்று கேட்டாள் அவள்.
துருவனோ, “ஓஹ்! என்னோட பார்வைக்கு என்ன அர்த்தம்னு உனக்கு தெரியாது அப்படித்தானே? “ என்று கேட்க, அவளோ, “இல்லையே தெரியாதே. “ என்று சொல்லி சிரித்துக்கொண்டவள் கதவை திறந்து இறங்க போக, அவள் கைகளை பிடித்து உள்ளே இழுத்தவன் அவள் இதழ்களை தன்வசம் ஆக்கியிருந்தான்.
அவளும் கண்களை மூடி அவனுக்கு ஒத்துழைத்துக்கொண்டிருக்க, கண்களை திறந்து அவளின் தலை முடியை ஒதுக்கிக் கொண்டிருந்தவன் கண்கள் சற்று வெளியிலும் நோட்டமிட அங்கு சரணித் பைக்கை பார்க் செய்வது அவன் கண்களில் பட்டது.
உடனே இதழ்யுத்தத்தை அவன் நிறுத்திக்கொள்ள மெதுவாக கண்களை திறந்த ஜனனி கண்டது என்னவோ அவன் சிவந்திருந்த கண்களையும், புடைத்து எழுந்திருந்த அவன் கை நரம்புகளையும் தான்.
அவனை கேள்வியாக பார்த்துக்கொண்டே அவனில் இருந்து பிரிந்தவள், அவன் பார்த்துக்கொண்டிருந்த திசையை பார்க்க அவளுக்கு தூக்கி வாரி போட்டது. “இவன் எப்படி இங்க? “ என்றுதான் நினைத்துக்கொண்டாள்.
அவனை அவள் முறைத்துக்கொண்டிருந்த தருணம், அதிரடியாக காரில் இருந்து இறங்கிய துருவன் சரணித்தை நோக்கி சென்றான்.
ஜனனியோ துருவனின் கோபத்திற்கு கடிவாளம் இட இயலாது என்று தெரிந்தாலும் , “அய்யய்யோ அடிச்சு வச்சுட போறான். யாரும் பார்த்தா பிரச்சனை ஆகிடும். “ என்ற பதற்றத்தில் அவன் பின்னால் ஓடிச்சென்றாள்.
துருவன் நேராக சென்று சரணித்தின் முன்னால் நின்று கைகளை பின் கட்டிக்கொள்ள,ஜனனியும் அவன் பின்னால் சென்று நின்றுகொண்டாள்.
சரணித்தின் முகமோ மலர “ஹேய் துருவ்! எப்படி இருக்க? ஜனனி! என்ன இப்படி வளந்துட்ட? எப்படி இருக்க? நான் இங்கதான் ஆர்ட்ஸ் டிபார்ட்மென்ட்ல ப்ரோபஸரா ஜோயின் பண்ணிருக்கேன் “என்றான்.
துருவனோ அதற்கு மேல் பொறுமை இல்லாதவன் சரணித்தின் ஷர்ட் காலரை பிடித்து, “இங்க எதுக்குடா வந்த? உன்னை பார்த்தாலே வெட்டி போடுற அளவுக்கு கோபம் வருது எனக்கு. “என்றான்.
சரணித்தோ வெற்று புன்னகையோடு நின்றிருந்தானே அன்றி ஒன்றுமே பேசவில்லை.
ஆனாலும் அவன் மனதிற்குள், “நான் எந்த தப்பும் பண்ணலடா. என்ன நம்புங்க “ என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தான்.
துருவனிற்கு அவனது புன்னகை எரிச்சலை கிளப்ப, அவனை அடிக்க கை ஓங்கியே விட்டான்.
ஜனனிதான் அவள் இரு கைகளாலும் அவன் ஒற்றை கையை பிடித்துக்கொண்டவள், “வேணாம் துருவ், ப்ளீஸ் கோவத்தை கண்ட்ரோல் பண்ணு. யாரும் பார்த்தா பிரச்சனை ஆகிடும். “ என்றபடி அவனை அங்கிருந்து காரிற்கு இழுத்து செல்ல படாத பாடு பட்டாள்.
காரில் அவனை ஏற்றி, மறுபக்கம் அவளும் ஏறிக்கொண்டவள், “கூல் துருவ்! யாரும் நீ இங்க நிண்டு சண்டை போடுறத பார்த்தால் பிரச்சனை ஆகிடும். “என்று சொல்ல, “அதுக்கு அந்த நாய அப்படியே விட சொல்றியா? என்ன தைரியம் அவனுக்கு? “ என்று எகிறினான் துருவ்.
ஜனனியோ அவனை நெருங்கி சென்று அணைத்துக்கொண்டவள், “ப்ளீஸ்டா இப்படி கோபபடாத. சில விஷயத்துல நம்ம பொறுமையா இருந்துதான் ஆகணும். இல்லனா நமக்குத்தான் பாதிப்பு. “என்றாள்.
துருவனும் அவனவள் அணைப்பில் சற்று அடங்கித்தான் போனவன், சிறிது நேர அமைதியின் பின்னர் அவளை தன்னில் இருந்து விலக்கி எடுத்து, “ஓகே, நான் கோபபடல. ஆனா எனக்கு நீ ஒரு ப்ரோமிஸ் பண்ணி தரணும். “ என்று கேட்டான்.
ஜனனியோ, “என்னது? “ என்று கேட்க, “ நீ இங்க சரணித்த பார்த்தது, அவன் இங்க தான் வேர்க் பண்ண போறான் என்றது எதுவுமே கனிக்காக்கோ, கனிஷ்டனுக்கோ தெரிய வேணாம். “ என்றான் அவன்.
அவளோ இதனால் ஏற்பட போகும் விபரிதம் அறியாமல் அவனுக்கு வாக்கு கொடுத்தவள், “நான் ஏன் இவனை பத்தி கனிட்ட பேச போறேன்! இவனை பார்தாலே எரிச்சலா இருக்கு. “என்றாள்.
ஆனால் ஜனனி சரணித் மேல் கொண்டிருந்த கோபம் வெறுப்பு எல்லாம் ஒரு வார கால இடைவெளியிலே மறைந்து விட்டது.