அத்தியாயம் 06
ஜனனி குளித்துவிட்டு கூந்தலை அள்ளி முடிந்தபடி அக்கோன்டஸ் புக்கை எடுத்து வைத்தவள், “கொஞ்சமாச்சும் படிப்பம் இல்லாட்டி அந்த சொட்டை மார்க்ஸ் இல்ல எண்டு கண்டபடி திட்டும்.” என்று முணுமுணுத்துக்கொண்டே படிக்க அமர்ந்து தாள்களை பக்கம் பக்கமாக புரட்டினாளே தவிர அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது.
அவளோ, “ச்சை…” என்று சலித்துக்கொண்டே மேசையில் இருந்த அவளது புக்கை தூக்கி வீச, அவளது அறை கதவை திறந்து உள்ளே நுழைந்த கனிக்காவின் காலடியில் அது போய் விழுந்தது.
கனிக்காவோ, “ஏய்! எதுக்குடி புக்கை தூக்கி வீசுற?” என்று கேட்டுக்கொண்டே கீழே கிடந்த புக்கை எடுத்து கண்ணில் ஒத்திக்கொண்டவள், “என்னடி உன் பிரச்சனை? “ என்று கேட்டபடி வந்து புக்கை மேசையில் வைத்துவிட்டு அங்கிருந்த ஸ்டூலை இழுத்தெடுத்து அதில் அமர்ந்தாள்.
ஜனனி திரும்பி பார்த்து கனிக்காவை முறைத்து , “இவ எல்லாத்தையும் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கா நான் இடைல மாட்டிட்டு முழிக்குறேன் “என்று தனக்குள் சொல்லிக்கொண்டவள்,நிதானத்தை இழந்து, துருவனுக்கு கொடுத்த வாக்கையும் மறந்து,“ எல்லாத்துக்கும் காரணம் நீதான் தெரியுமா! நீ பண்ண வேலையால இன்னைக்கு மூணு பேரோட வாழ்கை கேள்வி குறியா நிக்குது. “என்று சொல்ல, கனிக்காதான் குழம்பி போனாள்.
சிறிது நேரம் யோசித்துவிட்டு, “என்ன ஜனனி சொல்ற? நான் என்ன பண்ணன் ? நீ கொஞ்ச நாளா என்கிட்ட சரியா பேசல, நானும் வேலை டென்ஷன்ல அத பெருசா கண்டுக்காமலே விட்டுட்டன். அதுதான் இப்போ என்ன ஏதுனு கேட்டு பேசிட்டு போகலாம்னு வந்தன். நீ என்னடானா ஏதேதோ பேசிட்டு இருக்க? “என்று கேட்டாள்.
ஜனனி சற்று நிதானமானவள் அதற்குமேல் எதுவும் பேச விரும்பாமல் , கனிக்காவை கடந்து செல்ல, அவளது கைகளை எட்டி பிடித்த கனிக்கா, “என்ன நான் கேட்டதுக்கு ஒன்னுமே சொல்லாம நீ பாட்டுக்கு போய்ட்டு இருக்க? பதில் சொல்லிட்டு போ. “ என்றாள்.
ஜனனியோ, “எனக்கு உன்கிட்ட பேச இஷ்டம் இல்ல கனி, ப்ளீஸ் என்ன ஏதும் கேக்காத அப்புறம் ஏதாச்சும்…”என்று இழுத்தவள்,”கையை விடு கனி. “ என்றாள்.
கனிக்காவோ ஜனனியின் கையை விட்டவள், “இப்போ நீ ஏதோ சொல்ல வந்தல.. “என்று கண்கள் கலங்கி கேட்க,” எனக்கு உன்கிட்ட பேசவே புடிக்கல… நீ பண்ணது ரொம்ப தப்பு.” என்றாள் அவள்.
கனிக்காவோ பொறுமை இழந்தவள், “என்னடி லூசு மாதிரி பேசிட்டு இருக்க? நான் பண்ணது என்ன எண்டே சொல்லாம தப்பு பண்ணிட்டேன் என்ற என்னதான் உன் பிரச்சனை? “ என்று கேட்க, ஜனனியோ சற்றும் யோசிக்காமல், “சரணித் விஷயத்துல நீ பண்ணது ரொம்ப தப்பு என்றாள். “
கனிக்காவிற்கோ சரணித் என்ற பெயரை கேட்டதும் தலையே சுற்றுவது போன்ற உணர்வு. அவள் வாழ்கையை புரட்டி போட்டு இன்று வரை ஆறாத வடுவாக அவள் மனதை குடைந்து கொண்டிருக்கும் அவளது கடந்தகாலம் ஒரு முறை அவள் கண் முன் வந்து போனது.
“சர…ணி.. த்.. அவ.. ன் “ என்று சொன்ன கனிக்காவிற்கு அதற்கு மேல் பேச வார்த்தைகள் வராமல், கண்கள் கலங்கி கண்ணீர் மட்டுமே வந்தது.அவள் கண்களிலே அவ்வளவு கோபமும் வலியும் கலந்திருந்தது தெளிவாக தெரிந்தது.
ஜனனியோ, “என்ன பேச முடியலையா? நீ பண்ண தப்பு எல்லாம் இப்போ உன் கண் முன்னாடி வந்துட்டு போயிருக்குமே!, பொம்பள பிள்ளைகள் கண்ணீர் விட்டா விசாரிக்காம எல்லாத்தையும் கண்ணை மூடிட்டு நம்புற சொசைட்டி இருக்குற வரைக்கும் உன்னை மாரி தப்பு பண்ணிட்டு பசங்க மேலே பழி போடுற பொண்ணுகளுக்கு கொண்டாட்டம் தான். அதுமட்டுமா.. “ என்று தொடர்ந்து பேச எத்தணிக்க, ஜனனியை தன்பக்கம் திருப்பிய கனி அவள் கன்னத்தில் அறைந்திருந்தாள்.
ஜனனி நிலை தடுமாறி ஓரிரு அடிகள் பின் சென்று திரும்பியவள், கன்னத்தை பிடித்துக்கொண்டு, “இப்போ எதுக்கு என்ன அடிச்ச? எல்லா உண்மையும் எனக்கு தெரிஞ்சு போச்சு என்ற பயத்துலயா? “ என்று கேட்க, கோபத்துடன் அவளை முறைத்து, “இனி ஒரு வார்த்தை பேசின நான் மனுஷியாவே இருக்க மாட்டேன். என்னடி தெரியும் உனக்கு அண்டைக்கு நடந்தத பத்தி? எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுற. அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு. “என்று அடி தொண்டையில் கத்தினாள்.
ஜனனியோ, “எனக்கு எல்லாம் தெரியும் கனி. சரணித் என்கிட்ட எல்லாமே சொல்லிட்டான். ஆனா அப்போ கூட அவன் உன்னை தப்பா ஒரு வார்த்தை சொல்லல தெரியுமா? ஏதோ பதட்டத்துல நீ அப்படி எல்லாம் பண்ணிட்டனு சொன்னான்.“என்று கனிக்கு சளைக்காமல் கத்த, கனிக்காவுக்கு தான் அடுத்த இடி இறங்கிய உணர்வு, “என்னது சரணித் இங்க இருக்கானா? உன்கூட பேசினானா? “ என்று கேட்டாள் அவள்.
இதற்கிடையில் துருவனும்ம் , கனிஷ்டனும் அவர்கள் அறையில் இருந்து அவரவர் வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கும் ஜனனி மற்றும் கனிக்காவின் குரல் கேட்க, “என்னடா இவ்வளவு சத்தம் போட்டு பேசிட்டு இருக்காளுக? “ என்று கேட்டான் துருவன்.
கனிஷ்டனோ, “தெரியலயே.. கொஞ்ச நாளா ஜனனி என்கூட சரியா பேசல எண்டு சொல்லி கனி புலம்பிட்டே இருந்தா. அதான் போய் பேசி என்ன ஏதுனு கேட்டுட்டு வாறன்னு போனா. சும்மா ஏதும் சில்லறை விஷயத்துக்கு இரண்டும் முட்டிட்டு இருக்கும் “ என்று சாதாரணமாக சொன்னவன் அவனது லேப்டாப்பை தட்ட, துருவன் தான் ஏதோ சரி இல்லையே என்று நினைத்தவன், எழுந்து ஜனனியின் அறையை நோக்கி வந்தான்.
ஜனனியோ கனிக்கா கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவள், “ஆமா.. சரணித் இங்கதான் இருக்கான். என்னோட காலேஜ் ப்ரொபேசர் . “என்றவள், “நீ எதுக்கு இப்படி பயப்படுற?? எங்க நீ பண்ண தில்லு முல்லு எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சுடும் என்ற பயமா? “ என்று கேட்க, சத்தம் கேட்டு ஜனனியின் அறைக்கு வந்திருந்த துருவனுக்கு ஜனனி பேசியது தெளிவாக கேட்டது.
கனிக்காவிடம் சரணித் பற்றி ஜனனி பேசியதில் கோபத்தின் உச்சிக்கே சென்ற துருவன், பாதி மூடியிருந்த அவள் அறைக்கதவை எட்டி உதைத்து உள்ளே நுழைந்து ஜனனியின் கன்னத்தில்ஓங்கி அறைந்தவன் , “வாயை மூடு ஜனனி. “ என்றான்.
ஜனனி துருவன் அறைந்ததில் நிலை தடுமாறி நிலத்தில் சுருண்டுவிட, துருவன் எதற்கு வருகிறான் என்று தெரியாமல் அவன் பின்னால் வந்த கனிஷ்டனும், அங்கே அழுது கொண்டு நின்றிருந்த கனிக்காவுமே, “துருவ் என்னடா பண்ற? “ என்று கேட்டபடி அவளை தூக்கி விட்டனர்.
ஜனனி குளித்துவிட்டு கூந்தலை அள்ளி முடிந்தபடி அக்கோன்டஸ் புக்கை எடுத்து வைத்தவள், “கொஞ்சமாச்சும் படிப்பம் இல்லாட்டி அந்த சொட்டை மார்க்ஸ் இல்ல எண்டு கண்டபடி திட்டும்.” என்று முணுமுணுத்துக்கொண்டே படிக்க அமர்ந்து தாள்களை பக்கம் பக்கமாக புரட்டினாளே தவிர அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது.
அவளோ, “ச்சை…” என்று சலித்துக்கொண்டே மேசையில் இருந்த அவளது புக்கை தூக்கி வீச, அவளது அறை கதவை திறந்து உள்ளே நுழைந்த கனிக்காவின் காலடியில் அது போய் விழுந்தது.
கனிக்காவோ, “ஏய்! எதுக்குடி புக்கை தூக்கி வீசுற?” என்று கேட்டுக்கொண்டே கீழே கிடந்த புக்கை எடுத்து கண்ணில் ஒத்திக்கொண்டவள், “என்னடி உன் பிரச்சனை? “ என்று கேட்டபடி வந்து புக்கை மேசையில் வைத்துவிட்டு அங்கிருந்த ஸ்டூலை இழுத்தெடுத்து அதில் அமர்ந்தாள்.
ஜனனி திரும்பி பார்த்து கனிக்காவை முறைத்து , “இவ எல்லாத்தையும் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கா நான் இடைல மாட்டிட்டு முழிக்குறேன் “என்று தனக்குள் சொல்லிக்கொண்டவள்,நிதானத்தை இழந்து, துருவனுக்கு கொடுத்த வாக்கையும் மறந்து,“ எல்லாத்துக்கும் காரணம் நீதான் தெரியுமா! நீ பண்ண வேலையால இன்னைக்கு மூணு பேரோட வாழ்கை கேள்வி குறியா நிக்குது. “என்று சொல்ல, கனிக்காதான் குழம்பி போனாள்.
சிறிது நேரம் யோசித்துவிட்டு, “என்ன ஜனனி சொல்ற? நான் என்ன பண்ணன் ? நீ கொஞ்ச நாளா என்கிட்ட சரியா பேசல, நானும் வேலை டென்ஷன்ல அத பெருசா கண்டுக்காமலே விட்டுட்டன். அதுதான் இப்போ என்ன ஏதுனு கேட்டு பேசிட்டு போகலாம்னு வந்தன். நீ என்னடானா ஏதேதோ பேசிட்டு இருக்க? “என்று கேட்டாள்.
ஜனனி சற்று நிதானமானவள் அதற்குமேல் எதுவும் பேச விரும்பாமல் , கனிக்காவை கடந்து செல்ல, அவளது கைகளை எட்டி பிடித்த கனிக்கா, “என்ன நான் கேட்டதுக்கு ஒன்னுமே சொல்லாம நீ பாட்டுக்கு போய்ட்டு இருக்க? பதில் சொல்லிட்டு போ. “ என்றாள்.
ஜனனியோ, “எனக்கு உன்கிட்ட பேச இஷ்டம் இல்ல கனி, ப்ளீஸ் என்ன ஏதும் கேக்காத அப்புறம் ஏதாச்சும்…”என்று இழுத்தவள்,”கையை விடு கனி. “ என்றாள்.
கனிக்காவோ ஜனனியின் கையை விட்டவள், “இப்போ நீ ஏதோ சொல்ல வந்தல.. “என்று கண்கள் கலங்கி கேட்க,” எனக்கு உன்கிட்ட பேசவே புடிக்கல… நீ பண்ணது ரொம்ப தப்பு.” என்றாள் அவள்.
கனிக்காவோ பொறுமை இழந்தவள், “என்னடி லூசு மாதிரி பேசிட்டு இருக்க? நான் பண்ணது என்ன எண்டே சொல்லாம தப்பு பண்ணிட்டேன் என்ற என்னதான் உன் பிரச்சனை? “ என்று கேட்க, ஜனனியோ சற்றும் யோசிக்காமல், “சரணித் விஷயத்துல நீ பண்ணது ரொம்ப தப்பு என்றாள். “
கனிக்காவிற்கோ சரணித் என்ற பெயரை கேட்டதும் தலையே சுற்றுவது போன்ற உணர்வு. அவள் வாழ்கையை புரட்டி போட்டு இன்று வரை ஆறாத வடுவாக அவள் மனதை குடைந்து கொண்டிருக்கும் அவளது கடந்தகாலம் ஒரு முறை அவள் கண் முன் வந்து போனது.
“சர…ணி.. த்.. அவ.. ன் “ என்று சொன்ன கனிக்காவிற்கு அதற்கு மேல் பேச வார்த்தைகள் வராமல், கண்கள் கலங்கி கண்ணீர் மட்டுமே வந்தது.அவள் கண்களிலே அவ்வளவு கோபமும் வலியும் கலந்திருந்தது தெளிவாக தெரிந்தது.
ஜனனியோ, “என்ன பேச முடியலையா? நீ பண்ண தப்பு எல்லாம் இப்போ உன் கண் முன்னாடி வந்துட்டு போயிருக்குமே!, பொம்பள பிள்ளைகள் கண்ணீர் விட்டா விசாரிக்காம எல்லாத்தையும் கண்ணை மூடிட்டு நம்புற சொசைட்டி இருக்குற வரைக்கும் உன்னை மாரி தப்பு பண்ணிட்டு பசங்க மேலே பழி போடுற பொண்ணுகளுக்கு கொண்டாட்டம் தான். அதுமட்டுமா.. “ என்று தொடர்ந்து பேச எத்தணிக்க, ஜனனியை தன்பக்கம் திருப்பிய கனி அவள் கன்னத்தில் அறைந்திருந்தாள்.
ஜனனி நிலை தடுமாறி ஓரிரு அடிகள் பின் சென்று திரும்பியவள், கன்னத்தை பிடித்துக்கொண்டு, “இப்போ எதுக்கு என்ன அடிச்ச? எல்லா உண்மையும் எனக்கு தெரிஞ்சு போச்சு என்ற பயத்துலயா? “ என்று கேட்க, கோபத்துடன் அவளை முறைத்து, “இனி ஒரு வார்த்தை பேசின நான் மனுஷியாவே இருக்க மாட்டேன். என்னடி தெரியும் உனக்கு அண்டைக்கு நடந்தத பத்தி? எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுற. அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு. “என்று அடி தொண்டையில் கத்தினாள்.
ஜனனியோ, “எனக்கு எல்லாம் தெரியும் கனி. சரணித் என்கிட்ட எல்லாமே சொல்லிட்டான். ஆனா அப்போ கூட அவன் உன்னை தப்பா ஒரு வார்த்தை சொல்லல தெரியுமா? ஏதோ பதட்டத்துல நீ அப்படி எல்லாம் பண்ணிட்டனு சொன்னான்.“என்று கனிக்கு சளைக்காமல் கத்த, கனிக்காவுக்கு தான் அடுத்த இடி இறங்கிய உணர்வு, “என்னது சரணித் இங்க இருக்கானா? உன்கூட பேசினானா? “ என்று கேட்டாள் அவள்.
இதற்கிடையில் துருவனும்ம் , கனிஷ்டனும் அவர்கள் அறையில் இருந்து அவரவர் வேலைகளை பார்த்துக்கொண்டு இருந்தவர்களுக்கும் ஜனனி மற்றும் கனிக்காவின் குரல் கேட்க, “என்னடா இவ்வளவு சத்தம் போட்டு பேசிட்டு இருக்காளுக? “ என்று கேட்டான் துருவன்.
கனிஷ்டனோ, “தெரியலயே.. கொஞ்ச நாளா ஜனனி என்கூட சரியா பேசல எண்டு சொல்லி கனி புலம்பிட்டே இருந்தா. அதான் போய் பேசி என்ன ஏதுனு கேட்டுட்டு வாறன்னு போனா. சும்மா ஏதும் சில்லறை விஷயத்துக்கு இரண்டும் முட்டிட்டு இருக்கும் “ என்று சாதாரணமாக சொன்னவன் அவனது லேப்டாப்பை தட்ட, துருவன் தான் ஏதோ சரி இல்லையே என்று நினைத்தவன், எழுந்து ஜனனியின் அறையை நோக்கி வந்தான்.
ஜனனியோ கனிக்கா கேட்ட கேள்விக்கு பதில் சொன்னவள், “ஆமா.. சரணித் இங்கதான் இருக்கான். என்னோட காலேஜ் ப்ரொபேசர் . “என்றவள், “நீ எதுக்கு இப்படி பயப்படுற?? எங்க நீ பண்ண தில்லு முல்லு எல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சுடும் என்ற பயமா? “ என்று கேட்க, சத்தம் கேட்டு ஜனனியின் அறைக்கு வந்திருந்த துருவனுக்கு ஜனனி பேசியது தெளிவாக கேட்டது.
கனிக்காவிடம் சரணித் பற்றி ஜனனி பேசியதில் கோபத்தின் உச்சிக்கே சென்ற துருவன், பாதி மூடியிருந்த அவள் அறைக்கதவை எட்டி உதைத்து உள்ளே நுழைந்து ஜனனியின் கன்னத்தில்ஓங்கி அறைந்தவன் , “வாயை மூடு ஜனனி. “ என்றான்.
ஜனனி துருவன் அறைந்ததில் நிலை தடுமாறி நிலத்தில் சுருண்டுவிட, துருவன் எதற்கு வருகிறான் என்று தெரியாமல் அவன் பின்னால் வந்த கனிஷ்டனும், அங்கே அழுது கொண்டு நின்றிருந்த கனிக்காவுமே, “துருவ் என்னடா பண்ற? “ என்று கேட்டபடி அவளை தூக்கி விட்டனர்.