உருகும் சூரியன் 24
அவன் யார்?... ஏன் அவனை அப்பாவுடன் மனம் ஒப்பிடுகிறது. குழந்தையை யார் பார்த்திருந்தாலும் தூக்கி சென்று பெற்றவர்களிடம் ஒப்படைத்து தான் இருப்பார்கள். சிலர் திட்டிவிட்டு குழந்தையை கொடுத்து இருப்பார்கள். நானே அந்த குழந்தையை தூக்கி இருந்தாலும் அதை தான் செய்து இருப்பேன். அவன் அப்பா போல் கோபமுற்று அடித்ததால் எனக்கு அவன் அப்பா போல் தோன்றியதா?... ஆனால் முதலில் அவனை பார்க்கும் போது மனம் ஏன் வேகமாக துடித்தது?...
அவனை முன்பே பார்த்து இருக்கிறேனா?... எங்கே?... எப்போது?... என்று நினைவுகளில் தேட அவளுக்கு கிடைத்த விடை பூஜ்யம். அவன் ஏன் திரும்ப திரும்ப என்னை பார்த்தான். அவன் முகத்தில் எந்த உணர்வு இல்லை ஆனால் அவன் பார்வையில் எதுவே இருந்தது என்ன அது?... என்று விடை தெரியா பல கேள்விகள் வந்தன. ஆனால் ஒரு கேள்விக்கு கூட விடை தான் அந்த பதினேழு வயது பெண்ணுக்கு தெரியவில்லை.
வெயில் நன்றாக உறைத்ததும் தான் குளத்து கரையில் இருந்து எழுந்தாள். நேராக பஸ் நிலையம் வந்து தன் வீடு செல்ல மாங்காடு பஸ்சில் ஏறினாள் பனிமலர். வழி முழுவதும் சிந்தனையில் இருந்தவள் வீடு வந்த போது பெரிய தந்தையும் மற்றவர்களும் படையல் போட்டு முடித்து அமர்ந்து இருந்தனர்.
அசோகன் எப்போதும் மதிய வேளை வீட்டுக்கு வருவதில்லை இன்று இறந்தவர்களுக்கு படையல் போட வந்திருந்தார். பனிமலர் இருந்தால் படையல் போடும்போது அறையை விட்டு வெளியே வரமாட்டாள். படைத்து முடிக்கும் வரை கதவை அடைத்துக் கொண்டு இருப்பாள்.
இன்று அவள் இல்லாததால் படையல் போட்டு முடித்து சாப்பிட ஆயத்தமாகிக்கொண்டு இருந்தனர். ஆகாஷ் உடன் அவள் இருந்தால் அவன் எப்படியும் சாப்பிட வைத்து விடுவான் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் உணவு வேளையில் பனிமலரை கண்டதும் "சித்துமா வா.. வா... சாப்பிடலாம்" என்றார் அசோகன்.
"டாடி பைவ் மினிட்ஸ் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்" என்று அறைக்கு சென்றாள். அவளின் பேச்சை கேட்டவர்களுக்கு ஆச்சரியமே இந்த நாளில் அவளை சாப்பிட வைப்பது கடினம் ஆனால் இன்று அவள் வருகிறேன் என்று சந்தோஷக்குரலில் சொல்லி சென்றதால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
சொன்னதை போல ஐந்து நிமிடத்தில் புன்னகையுடன் வந்தவள் தன் பெரிய தந்தையின் ஒரு பக்கம் எழில்நிலாவும் மறுபக்கம் அகிலேஷ் அமர்ந்து இருப்பதை கண்டவள் அகிலேஷ் பின் சென்று அவனை தள்ளிவிட்டு தன் பெரிய தந்தையின் அருகில் அமர்ந்தாள். அன்று டைனிங் டேபிளில் அமராமல் தரையில் அமர்ந்து இருந்தனர்.
"ஏய் சத்துமாவு" என்றான் அகிலேஷ் கோபமாக
"என்னடா அகல்விளக்கு" என்றாள்.
"நான் தானே அங்க உட்கார்ந்து இருந்தேன் எழுந்திரு" என்றான்.
"முடியாதுடா" என்றாள் பனிமலர்.
"எவ்வளவு இடம் இருக்கு அங்க உட்கார வேண்டியது தானே ஏன் என் இடத்தில் உட்கார்ந்த எழுந்திரு" என்றான் அகிலேஷ்.
"என்னது உன் இடமா அப்படி எதுவும் உன் பெயர் இங்க எழுதி இல்லையே" என்று தான் உட்கார்ந்து இருந்த இடத்தை சுற்றி பார்த்தாள் பனிமலர்.
அகிலேஷ்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை தந்தை இல்லையென்றால் உருண்டு பிரண்டு சண்டை போட்டு இருப்பான். அதுவும் இல்லாமல் இன்றைய நாள் எப்படிப்பட்ட நாள் அவனுக்கும் தெரியுமே படையல் போடும் போது பாட்டி அம்மா வாய்விட்டு அழுதார்கள் என்றால் தந்தை மௌனமாக கண்ணீர் வடித்தாரே ஏன் இவனும் எழில்நிலாவும் கூட கண்ணீர் வடித்தனரே பிரியமான சித்தப்பா சித்தியை தாத்தாவையும் அவர்களால் எப்படி மறக்க முடியும்.
இத்தனை ஆண்டுகளாக பனிமலர் எவ்வளவு அழுது இருக்கிறாள் இந்த நாளில் அவளை ஆறுதல் செய்யக்கூட விடாமல் அறையை பூட்டிக்கொண்டு இருப்பவள் இன்று புன்னகை முகத்துடன் எப்போதும் போல் அவனிடம் சண்டைக்கு வந்து இருப்பது அகிலேஷ்க்கு நிம்மதி தர அவளை முறைப்பது போல பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் முறைப்பவனை கண்டதும் அனைவருக்கும் சிரிப்பு வந்தது. அசோகன் வாய்விட்டே சிரித்தார் அவரை தொடர்ந்து அனைவரும் சிரித்தனர்.
அதன் பிறகு பேச்சும் சிரிப்புமாக உணவு முடித்தனர். சிறிது நேரம் ஓய்வு எடுக்க அறைக்கு சென்ற அசோகன் பின் சென்றாள் பனிமலர்.
அறைக்கு தன் பின் பனிமலர் வருவதை கண்ட அசோகன் "வாடா சித்துமா" என்று கட்டிலில் தன் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டார்.
எதையோ சொல்ல தயங்குகிறாள் என்று அசோகனுக்கு புரிந்தது.
"டாடி கிட்ட எதாவது சொல்லனுமாடா" என்றார் அசோகன்.
"ஆமாம் டாடி" என்று சற்று தயங்கியவள் பின் தான் பொய் சொல்லி வெளியே சென்றதையும் கோயில் சென்றதால் மனம் நன்றாக இருப்பதாகவும் இனி பொய் சொல்லமாட்டேன் டாடி என்று கூறி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டாள் அங்கு அவனை பார்த்ததையும் நடந்ததையும் கூறவில்லை.
அனைத்தையும் கேட்ட அசோகன் "நீ செய்தது தப்பு தான் என்று உனக்கே தெரிந்து இருக்கு சித்துமா இனி செய்யமாட்டேன் என்று நீயே சொல்லிட்ட அதனால் டாடி உன்னை எதுவும் சொல்லலை. ஆனால் இனி எங்காவது போகனும் என்றால் சொல்லி விட்டே போகனும்" என்றவர் மேலும் சிறிது நேரம் பேசினார்.
அதன் பிறகு அவளிடம் நிறைய மாற்றங்கள் பழையபடி குறும்புகள் சேட்டைகள் செய்தாள். கல்லூரி சேர்ந்தபோது தமிழ் இவளுடன் வந்து இணைந்து கொண்டாள்.
நண்பியின் மாற்றம் தமிழுக்கு சந்தோஷமாக இருந்தது. கல்லூரிக்கே உரிய கலாட்டாக்களுடன் நாட்கள் சென்றன.
பனிமலருக்கு இப்போது எல்லாம் தாய் தந்தை நினைவு வரும்போதே அவன் நினைவும் வந்தது. நண்பியுடன் ஊர் சுற்றும் போது கண்கள் எங்காவது அவன் தென்படுகிறானா என்று தேடுவாள்.
முதல் வருடம் முடித்து மீண்டும் அந்த நாள் வந்தபோது வீட்டில் சொல்லிவிட்டே வெளியே வந்தாள் பனிமலர். பாட்டியும் பெரியண்ணையும் உடன் வருகிறேன் என்றவர்களை மறுத்து விட்டு வந்திருந்தாள்.
இந்த வருடம் சற்று சீக்கிரம் வந்தவளின் கண்கள் சுற்றி சுற்றி அவனை மட்டுமே தேடியது. அவன் வரமாட்டான் என்ற எண்ணமே அவளுக்கு வரவில்லை கண்டிப்பாக வருவான் என்று மனம் சொன்னது. அவளை ஏமாற்றாமல் வேக நடையுடன் வந்து கொண்டு இருந்தான் அவன்.
பனிமலரின் கண்கள் விரிந்தன ஒரு வருடத்தில் இவ்வளவு மாற்றமா என்றது மனம். உயரமாக சிவந்து ஒல்லியான தோற்றத்தில் ட்ரிம் செய்யப்பட்ட மீசையுடன் கல்லூரி செல்லும் தோற்றத்தில் சென்ற ஆண்டு பார்த்திருந்தாள்.
ஆனால் இன்று அடர்ந்த மீசை தாடி இல்லாத இறுக்கமான முகம் முறுக்கேறிய உடல் தினமும் சில மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை காட்டியது.
வேகமாக வந்தவனின் பார்வை சட்டென்று இவள் இருக்கும் பக்கம் படிந்து மீண்டது. அவன் பார்வையை சந்தித்த போது இவளின் இதயம் வெளியே குதித்து விடும் அளவுக்கு துடித்தது. அவன் பின்னே இடைவெளி விட்டு சென்றாள்.
அன்றும் அவன் பார்வை அடிக்கடி அவள் மீது பட்டு விலகியதே தவிர அவன் இவளிடம் பேசவும் இல்லை ஒரு புன்னகை கூட செய்யவில்லை.
அதே போல பனிமலரும் அவனிடம் பேச முயற்சிக்கவில்லை. அடுத்து இரண்டாம் வருடம் கல்லூரி முடித்த போதும் இந்த நாளில் வந்து காத்திருந்து அவன் பின் சுற்றினாள்.
அந்த ஒரு நாள் பார்ப்பதை வருடம் முழுவதும் மனதில் நினைக்கொண்டிருப்பாள் பனிமலர்.
பனிமலர் மூன்றாம் வருடம் முதல் செமஸ்டர் தேர்வு முடிந்து அடுத்த செமஸ்டர் வகுப்பு தொடங்கி இருந்தபோது ஒரு விடுமுறை நாளில் வகுப்பு தோழிகள் ஐந்து பேர் ஒன்றாக ஊர் சுற்ற கிளம்பினர். அதில் ஒரு தோழி வீட்டில் இருந்த காரை எடுத்து வந்து ஹாஸ்டலில் உள்ள தோழிகளை அழைத்து சென்றாள்.
தேவையான பொருட்களை வெளியில் வாங்கிவிட்டு சும்மா சுற்றுவதற்காக ஷாப்பிங் மால் சென்றனர். கார் பார்க்கிங்கில் காரை விட்டு தோழிகள் பேசிக்கொண்டு லிப்ட் நோக்கி சென்றபோது "அம்மாமா....." என்ற அலறல் வந்தது.
அனைவரும் திரும்பி பார்க்க அங்கு ஒருவன் கத்தியுடன் இன்னொருவனை குத்த முயற்சி செய்ய அந்த மற்றொருவன் அவனின் கையை பிடித்து முறுக்கிக்கொண்டு இருந்தான். ஏற்கனவே அவனின் கையில் இரத்தம் வந்து கொண்டு இருந்தது அந்த கையினாலே குத்த வந்தவனின் கையை முறிக்க வலியில் குத்த வந்தவன் கத்திக்கொண்டு இருந்தான்.
அந்த கத்தலில் அங்கிருந்த காவலாளிகள் ஓடி வந்தனர். அவனின் வயதான கார் டிரைவர் தவிப்புடன் நின்று இருந்தார். அதிக வலியில் குத்த வந்தவன் மயங்கி விழுந்தான்.
அதுவரை அதிர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த பனிமலர் வேகமாக அவன் அருகில் ஓடினாள்.
"ஏய் எங்க போறடி" என்ற தமிழின் குரல் கூட காதில் வாங்காமல் அவனின் அருகில் சென்றவள் இரத்தம் சொட்டிய கைகளை கண்டு கண் கலங்கினாள். அவன் காவலாளிகளிடம் எதையோ சொல்லிக்கொண்டு இருந்தான்.
டிரைவர் அருகில் சென்றவள் "காரில் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்கும் எடுங்க சார்" என்றாள். அவரும் வேகமாக எடுத்து வந்து கொடுக்க அதில் இருந்த மருந்து மற்றும் பஞ்சை எடுத்துக்கொண்டு அவன் அருகில் சென்றாள்.
அவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு கையை நீட்டினான் மெல்ல பஞ்சை கொண்டு இரத்தத்தை துடைத்தவள் மருந்தை வைத்து கட்டு ஒன்றை போட்டாள் பனிமலர். கத்தி ஆழமாக இறங்கி இருக்கவில்லை லேசாக கீறி இருந்தது இருந்தும் இரத்தம் வந்திருந்தது.
கட்டு போட்டு முடித்தவள் "டாக்டர் கிட்ட ஒரு முறை காட்டுங்க சார்" என்றாள். அவள் ஓடி வரும்போது மற்ற தோழிகளும் அவள் பின் வந்திருந்தனர். அவள் டாக்டர் இடம் காட்டுங்கள் என்றதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை கட்டு போட்டதற்கும் நன்றி சொல்லாமல் அங்கிருந்த காவலாளியை ஒரு பார்வை பார்த்து விட்டு காரில் ஏறி அமர்ந்தான்.
தன் நண்பியை உதாசீனப்படுத்தி விட்டு சென்றவனின் மீது கோபம் வந்தது தமிழுக்கு பனிமலரின் கையை பிடித்து இழுத்து "ஏய் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேளை அவன் உனக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் போறான் திமிர் பிடித்தவன்" என்றாள்.
அங்கிருந்த மற்றொரு தோழி "ஏய் அது யார் என்று தெரிந்தால் இப்படி சொல்லமாட்டாய்" என்றாள்.
"அப்படி என்ன பெரிய அப்பாடக்கரா அவன்?..." என்றாள் தமிழ்.
"நீ சொன்னாலும் சொல்லலை என்றாலும் அவர் பெரிய ஆள் தான். அவர் தான் சூர்யபிரகாஷ் பிரகாஷ் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் எம் டி" என்றாள்.
தோழிகளுக்கு ஆச்சரியம் என்றாலும் ஆச்சரியம் அதிர்ச்சி இரண்டும் பனிமலருக்கு உண்டானது. கம்பெனி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் அசுர வளர்ச்சி என்று அறிந்து இருக்கிறாளே அது இவன் தானா பேர் என்ன சொன்னாள் சூர்யபிரகாஷா என்று மனதில் நினைத்தவள் "என் சூரியன்" என்று முனுமுனுத்தது அவளின் உதடுகள்.
அவன் யார்?... ஏன் அவனை அப்பாவுடன் மனம் ஒப்பிடுகிறது. குழந்தையை யார் பார்த்திருந்தாலும் தூக்கி சென்று பெற்றவர்களிடம் ஒப்படைத்து தான் இருப்பார்கள். சிலர் திட்டிவிட்டு குழந்தையை கொடுத்து இருப்பார்கள். நானே அந்த குழந்தையை தூக்கி இருந்தாலும் அதை தான் செய்து இருப்பேன். அவன் அப்பா போல் கோபமுற்று அடித்ததால் எனக்கு அவன் அப்பா போல் தோன்றியதா?... ஆனால் முதலில் அவனை பார்க்கும் போது மனம் ஏன் வேகமாக துடித்தது?...
அவனை முன்பே பார்த்து இருக்கிறேனா?... எங்கே?... எப்போது?... என்று நினைவுகளில் தேட அவளுக்கு கிடைத்த விடை பூஜ்யம். அவன் ஏன் திரும்ப திரும்ப என்னை பார்த்தான். அவன் முகத்தில் எந்த உணர்வு இல்லை ஆனால் அவன் பார்வையில் எதுவே இருந்தது என்ன அது?... என்று விடை தெரியா பல கேள்விகள் வந்தன. ஆனால் ஒரு கேள்விக்கு கூட விடை தான் அந்த பதினேழு வயது பெண்ணுக்கு தெரியவில்லை.
வெயில் நன்றாக உறைத்ததும் தான் குளத்து கரையில் இருந்து எழுந்தாள். நேராக பஸ் நிலையம் வந்து தன் வீடு செல்ல மாங்காடு பஸ்சில் ஏறினாள் பனிமலர். வழி முழுவதும் சிந்தனையில் இருந்தவள் வீடு வந்த போது பெரிய தந்தையும் மற்றவர்களும் படையல் போட்டு முடித்து அமர்ந்து இருந்தனர்.
அசோகன் எப்போதும் மதிய வேளை வீட்டுக்கு வருவதில்லை இன்று இறந்தவர்களுக்கு படையல் போட வந்திருந்தார். பனிமலர் இருந்தால் படையல் போடும்போது அறையை விட்டு வெளியே வரமாட்டாள். படைத்து முடிக்கும் வரை கதவை அடைத்துக் கொண்டு இருப்பாள்.
இன்று அவள் இல்லாததால் படையல் போட்டு முடித்து சாப்பிட ஆயத்தமாகிக்கொண்டு இருந்தனர். ஆகாஷ் உடன் அவள் இருந்தால் அவன் எப்படியும் சாப்பிட வைத்து விடுவான் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் உணவு வேளையில் பனிமலரை கண்டதும் "சித்துமா வா.. வா... சாப்பிடலாம்" என்றார் அசோகன்.
"டாடி பைவ் மினிட்ஸ் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்" என்று அறைக்கு சென்றாள். அவளின் பேச்சை கேட்டவர்களுக்கு ஆச்சரியமே இந்த நாளில் அவளை சாப்பிட வைப்பது கடினம் ஆனால் இன்று அவள் வருகிறேன் என்று சந்தோஷக்குரலில் சொல்லி சென்றதால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
சொன்னதை போல ஐந்து நிமிடத்தில் புன்னகையுடன் வந்தவள் தன் பெரிய தந்தையின் ஒரு பக்கம் எழில்நிலாவும் மறுபக்கம் அகிலேஷ் அமர்ந்து இருப்பதை கண்டவள் அகிலேஷ் பின் சென்று அவனை தள்ளிவிட்டு தன் பெரிய தந்தையின் அருகில் அமர்ந்தாள். அன்று டைனிங் டேபிளில் அமராமல் தரையில் அமர்ந்து இருந்தனர்.
"ஏய் சத்துமாவு" என்றான் அகிலேஷ் கோபமாக
"என்னடா அகல்விளக்கு" என்றாள்.
"நான் தானே அங்க உட்கார்ந்து இருந்தேன் எழுந்திரு" என்றான்.
"முடியாதுடா" என்றாள் பனிமலர்.
"எவ்வளவு இடம் இருக்கு அங்க உட்கார வேண்டியது தானே ஏன் என் இடத்தில் உட்கார்ந்த எழுந்திரு" என்றான் அகிலேஷ்.
"என்னது உன் இடமா அப்படி எதுவும் உன் பெயர் இங்க எழுதி இல்லையே" என்று தான் உட்கார்ந்து இருந்த இடத்தை சுற்றி பார்த்தாள் பனிமலர்.
அகிலேஷ்க்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை தந்தை இல்லையென்றால் உருண்டு பிரண்டு சண்டை போட்டு இருப்பான். அதுவும் இல்லாமல் இன்றைய நாள் எப்படிப்பட்ட நாள் அவனுக்கும் தெரியுமே படையல் போடும் போது பாட்டி அம்மா வாய்விட்டு அழுதார்கள் என்றால் தந்தை மௌனமாக கண்ணீர் வடித்தாரே ஏன் இவனும் எழில்நிலாவும் கூட கண்ணீர் வடித்தனரே பிரியமான சித்தப்பா சித்தியை தாத்தாவையும் அவர்களால் எப்படி மறக்க முடியும்.
இத்தனை ஆண்டுகளாக பனிமலர் எவ்வளவு அழுது இருக்கிறாள் இந்த நாளில் அவளை ஆறுதல் செய்யக்கூட விடாமல் அறையை பூட்டிக்கொண்டு இருப்பவள் இன்று புன்னகை முகத்துடன் எப்போதும் போல் அவனிடம் சண்டைக்கு வந்து இருப்பது அகிலேஷ்க்கு நிம்மதி தர அவளை முறைப்பது போல பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவளுக்கு பதில் சொல்ல முடியாமல் முறைப்பவனை கண்டதும் அனைவருக்கும் சிரிப்பு வந்தது. அசோகன் வாய்விட்டே சிரித்தார் அவரை தொடர்ந்து அனைவரும் சிரித்தனர்.
அதன் பிறகு பேச்சும் சிரிப்புமாக உணவு முடித்தனர். சிறிது நேரம் ஓய்வு எடுக்க அறைக்கு சென்ற அசோகன் பின் சென்றாள் பனிமலர்.
அறைக்கு தன் பின் பனிமலர் வருவதை கண்ட அசோகன் "வாடா சித்துமா" என்று கட்டிலில் தன் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டார்.
எதையோ சொல்ல தயங்குகிறாள் என்று அசோகனுக்கு புரிந்தது.
"டாடி கிட்ட எதாவது சொல்லனுமாடா" என்றார் அசோகன்.
"ஆமாம் டாடி" என்று சற்று தயங்கியவள் பின் தான் பொய் சொல்லி வெளியே சென்றதையும் கோயில் சென்றதால் மனம் நன்றாக இருப்பதாகவும் இனி பொய் சொல்லமாட்டேன் டாடி என்று கூறி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டாள் அங்கு அவனை பார்த்ததையும் நடந்ததையும் கூறவில்லை.
அனைத்தையும் கேட்ட அசோகன் "நீ செய்தது தப்பு தான் என்று உனக்கே தெரிந்து இருக்கு சித்துமா இனி செய்யமாட்டேன் என்று நீயே சொல்லிட்ட அதனால் டாடி உன்னை எதுவும் சொல்லலை. ஆனால் இனி எங்காவது போகனும் என்றால் சொல்லி விட்டே போகனும்" என்றவர் மேலும் சிறிது நேரம் பேசினார்.
அதன் பிறகு அவளிடம் நிறைய மாற்றங்கள் பழையபடி குறும்புகள் சேட்டைகள் செய்தாள். கல்லூரி சேர்ந்தபோது தமிழ் இவளுடன் வந்து இணைந்து கொண்டாள்.
நண்பியின் மாற்றம் தமிழுக்கு சந்தோஷமாக இருந்தது. கல்லூரிக்கே உரிய கலாட்டாக்களுடன் நாட்கள் சென்றன.
பனிமலருக்கு இப்போது எல்லாம் தாய் தந்தை நினைவு வரும்போதே அவன் நினைவும் வந்தது. நண்பியுடன் ஊர் சுற்றும் போது கண்கள் எங்காவது அவன் தென்படுகிறானா என்று தேடுவாள்.
முதல் வருடம் முடித்து மீண்டும் அந்த நாள் வந்தபோது வீட்டில் சொல்லிவிட்டே வெளியே வந்தாள் பனிமலர். பாட்டியும் பெரியண்ணையும் உடன் வருகிறேன் என்றவர்களை மறுத்து விட்டு வந்திருந்தாள்.
இந்த வருடம் சற்று சீக்கிரம் வந்தவளின் கண்கள் சுற்றி சுற்றி அவனை மட்டுமே தேடியது. அவன் வரமாட்டான் என்ற எண்ணமே அவளுக்கு வரவில்லை கண்டிப்பாக வருவான் என்று மனம் சொன்னது. அவளை ஏமாற்றாமல் வேக நடையுடன் வந்து கொண்டு இருந்தான் அவன்.
பனிமலரின் கண்கள் விரிந்தன ஒரு வருடத்தில் இவ்வளவு மாற்றமா என்றது மனம். உயரமாக சிவந்து ஒல்லியான தோற்றத்தில் ட்ரிம் செய்யப்பட்ட மீசையுடன் கல்லூரி செல்லும் தோற்றத்தில் சென்ற ஆண்டு பார்த்திருந்தாள்.
ஆனால் இன்று அடர்ந்த மீசை தாடி இல்லாத இறுக்கமான முகம் முறுக்கேறிய உடல் தினமும் சில மணிநேரம் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதை காட்டியது.
வேகமாக வந்தவனின் பார்வை சட்டென்று இவள் இருக்கும் பக்கம் படிந்து மீண்டது. அவன் பார்வையை சந்தித்த போது இவளின் இதயம் வெளியே குதித்து விடும் அளவுக்கு துடித்தது. அவன் பின்னே இடைவெளி விட்டு சென்றாள்.
அன்றும் அவன் பார்வை அடிக்கடி அவள் மீது பட்டு விலகியதே தவிர அவன் இவளிடம் பேசவும் இல்லை ஒரு புன்னகை கூட செய்யவில்லை.
அதே போல பனிமலரும் அவனிடம் பேச முயற்சிக்கவில்லை. அடுத்து இரண்டாம் வருடம் கல்லூரி முடித்த போதும் இந்த நாளில் வந்து காத்திருந்து அவன் பின் சுற்றினாள்.
அந்த ஒரு நாள் பார்ப்பதை வருடம் முழுவதும் மனதில் நினைக்கொண்டிருப்பாள் பனிமலர்.
பனிமலர் மூன்றாம் வருடம் முதல் செமஸ்டர் தேர்வு முடிந்து அடுத்த செமஸ்டர் வகுப்பு தொடங்கி இருந்தபோது ஒரு விடுமுறை நாளில் வகுப்பு தோழிகள் ஐந்து பேர் ஒன்றாக ஊர் சுற்ற கிளம்பினர். அதில் ஒரு தோழி வீட்டில் இருந்த காரை எடுத்து வந்து ஹாஸ்டலில் உள்ள தோழிகளை அழைத்து சென்றாள்.
தேவையான பொருட்களை வெளியில் வாங்கிவிட்டு சும்மா சுற்றுவதற்காக ஷாப்பிங் மால் சென்றனர். கார் பார்க்கிங்கில் காரை விட்டு தோழிகள் பேசிக்கொண்டு லிப்ட் நோக்கி சென்றபோது "அம்மாமா....." என்ற அலறல் வந்தது.
அனைவரும் திரும்பி பார்க்க அங்கு ஒருவன் கத்தியுடன் இன்னொருவனை குத்த முயற்சி செய்ய அந்த மற்றொருவன் அவனின் கையை பிடித்து முறுக்கிக்கொண்டு இருந்தான். ஏற்கனவே அவனின் கையில் இரத்தம் வந்து கொண்டு இருந்தது அந்த கையினாலே குத்த வந்தவனின் கையை முறிக்க வலியில் குத்த வந்தவன் கத்திக்கொண்டு இருந்தான்.
அந்த கத்தலில் அங்கிருந்த காவலாளிகள் ஓடி வந்தனர். அவனின் வயதான கார் டிரைவர் தவிப்புடன் நின்று இருந்தார். அதிக வலியில் குத்த வந்தவன் மயங்கி விழுந்தான்.
அதுவரை அதிர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த பனிமலர் வேகமாக அவன் அருகில் ஓடினாள்.
"ஏய் எங்க போறடி" என்ற தமிழின் குரல் கூட காதில் வாங்காமல் அவனின் அருகில் சென்றவள் இரத்தம் சொட்டிய கைகளை கண்டு கண் கலங்கினாள். அவன் காவலாளிகளிடம் எதையோ சொல்லிக்கொண்டு இருந்தான்.
டிரைவர் அருகில் சென்றவள் "காரில் ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்கும் எடுங்க சார்" என்றாள். அவரும் வேகமாக எடுத்து வந்து கொடுக்க அதில் இருந்த மருந்து மற்றும் பஞ்சை எடுத்துக்கொண்டு அவன் அருகில் சென்றாள்.
அவன் அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு கையை நீட்டினான் மெல்ல பஞ்சை கொண்டு இரத்தத்தை துடைத்தவள் மருந்தை வைத்து கட்டு ஒன்றை போட்டாள் பனிமலர். கத்தி ஆழமாக இறங்கி இருக்கவில்லை லேசாக கீறி இருந்தது இருந்தும் இரத்தம் வந்திருந்தது.
கட்டு போட்டு முடித்தவள் "டாக்டர் கிட்ட ஒரு முறை காட்டுங்க சார்" என்றாள். அவள் ஓடி வரும்போது மற்ற தோழிகளும் அவள் பின் வந்திருந்தனர். அவள் டாக்டர் இடம் காட்டுங்கள் என்றதற்கு எந்த பதிலும் கொடுக்கவில்லை கட்டு போட்டதற்கும் நன்றி சொல்லாமல் அங்கிருந்த காவலாளியை ஒரு பார்வை பார்த்து விட்டு காரில் ஏறி அமர்ந்தான்.
தன் நண்பியை உதாசீனப்படுத்தி விட்டு சென்றவனின் மீது கோபம் வந்தது தமிழுக்கு பனிமலரின் கையை பிடித்து இழுத்து "ஏய் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேளை அவன் உனக்கு ஒரு நன்றி கூட சொல்லாமல் போறான் திமிர் பிடித்தவன்" என்றாள்.
அங்கிருந்த மற்றொரு தோழி "ஏய் அது யார் என்று தெரிந்தால் இப்படி சொல்லமாட்டாய்" என்றாள்.
"அப்படி என்ன பெரிய அப்பாடக்கரா அவன்?..." என்றாள் தமிழ்.
"நீ சொன்னாலும் சொல்லலை என்றாலும் அவர் பெரிய ஆள் தான். அவர் தான் சூர்யபிரகாஷ் பிரகாஷ் கார்மெண்ட் எக்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் எம் டி" என்றாள்.
தோழிகளுக்கு ஆச்சரியம் என்றாலும் ஆச்சரியம் அதிர்ச்சி இரண்டும் பனிமலருக்கு உண்டானது. கம்பெனி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் அசுர வளர்ச்சி என்று அறிந்து இருக்கிறாளே அது இவன் தானா பேர் என்ன சொன்னாள் சூர்யபிரகாஷா என்று மனதில் நினைத்தவள் "என் சூரியன்" என்று முனுமுனுத்தது அவளின் உதடுகள்.