உருகும் சூரியன் 39
இரவு மணி ஒன்பதை தாண்டிய நேரம் கையில் பாலுடன் மாடியேறிக்கொண்டு இருந்தாள் பனிமலர். பந்தயக்குதிரையை விட வேகமாக அவளின் இதயம் துடித்துக்கொண்டு இருந்தது. அவனை பற்றி அவள் கண்டறிந்ததை தமிழ், ஆகாஷ் இருவரிடமும் கூறமுடியாமல் போயிருந்தது.
மாலை தன் குடும்பத்தினருடன் தமிழ் வருவாள் என்று எதிர்பார்க்க அவள் வரவில்லை அவளின் நெருங்கிய உறவில் இறப்பு என்று ஊருக்கு சென்றுவிட்டாள்.
ஆகாஷ் போன் எடுக்கவில்லை என்று ஹரிக்கு போன் செய்த போது ஆகாஷ் வேலை விஷயமாக வெளிநாடு போயிருப்பதாக சொல்லினான். இப்போதைக்கு பனிமலரால் எதையும் செய்ய முடியாமல் போனது.
சூர்யாவின் அறைக்கு வெளியே நின்றவளின் மனதில் பல்வேறு உணர்ச்சி போராட்டங்கள் நடந்து கொண்டு இருந்தன.
ஒரு பக்கம் அவளின் அவன் மீதான காதல் மறுபுறம் நிலாவின் நிலையறிய முடியாத வேதனை அடுத்து பழிவாங்க இந்த கல்யாணம் என்று அவனின் வாக்குமூலம் எல்லாம் அவளின் மனதில் மாறி மாறி வந்து கொண்டு இருக்க அவளால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் என்ன செய்வானோ என்ற பயத்துடன் அறையினுள் கால் எடுத்து வைத்தாள்.
உள்ளே வந்தவளின் பார்வை படும் இடங்களில் சூர்யா இல்லை. பார்வை அறையை சுற்றி வர ஒற்றை சோபாவில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டு இருந்தான். அவன் லேப்டாப்பில் வேலை செய்வதை பார்த்தால் அவள் வந்தது கூட அறியவில்லை என்பது புரிய இப்போது என்ன செய்வது அவனின் முன் சென்று தன் வருகையை உணர்த்த வேண்டுமா இல்லை கட்டிலில் சென்று படுத்துவிடுவோமா என்ற சிந்தனையிடையே பாட்டி சொன்னவை நியாபகம் வர அவனை நோக்கி கால்கள் நகர்ந்தன.
பாலை வேஸ்ட் பண்ணாமல் குடிக்கும்படி பாட்டி சொல்லியிருக்க அதை கொடுத்துவிட்டு படுக்கலாம் என்று அவன் முன் சென்று நின்றவளை ஏறெடுத்தும் சூர்யா பார்க்கவில்லை.
ஒரு காலை மெல்ல அசைத்து கொலுசொலி எழுப்பினாள் . அதற்கும் அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை. மீண்டும் சற்று வேகமாக காலை தரையில் தட்டி ஒலியை அதிகமாக்க இப்போது தலை நிமிர்ந்து என்ன என்பது போல் பார்த்தவனின் முகத்தில் சற்று கோபம் தெரிந்தது.
"பா...பாட்டி... பால்... கொடுத்து விட்டாங்க..." தடுமாற்றத்துடன் கூறினாள்.
"எனக்கு வேண்டாம்" என்றுவிட்டு மீண்டும் லேப்டாப்பில் கண்ணை பதிக்க
"இல்ல... பாட்டி வேஸ்ட் பண்ண கூடாது என்று சொன்னாங்க" என்றாள்.
"ச்சே... என்று சற்று எரிச்சலுடன் தலையை கோதியவன் உனக்கு எடுத்திட்டு மீதியை வச்சுட்டு போ நான் அப்புறம் குடிக்கிறேன் என்று கூறி மீண்டும் லேப்டாப்பில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டான் சூர்யா.
சரி என்று தலையாட்டியவள் பிளாஸ்கில் இருந்த பாலை ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு அங்கிருந்து விலகி சென்று கட்டிலில் அமர்ந்து பாலை குடித்துக்கொண்டே தன் கையில் இருந்த போனை பார்க்க ஆரம்பித்தாள்.
பாலை குடித்து முடித்தவள் போனில் மூழ்கி இருக்கும் இடம் மறந்து போனாள் பனிமலர்.
வாட்ஸ்அப்பில் தமிழ் ஆன்லைனில் வந்ததை கண்டதும் அவளுக்கு போன் செய்து விட்டாள். அந்த பக்கம் ஒரே ரிங்கில் தமிழ் எடுத்ததும் "எருமை எத்தனை முறை போன் பண்ணினேன் ஒரு மெசேஜாவது ரிப்ளை கொடுக்க தெரியாதா?..." என்று திட்ட ஆரம்பிக்க அந்த பக்கம் எதையோ கேட்க வந்த தமிழ் பனிமலரின் பேச்சில் கேட்க வந்ததை மறந்து போனாள்.
"நீ தான்டி எருமை நானில்லை அதுவும் மூளையில்லாத எருமை இழவு வீட்டில் போனை எடுத்துட்டு போய் உன்கிட்ட கொஞ்சிட்டு இருக்கமுடியுமா என்று கூட யோசிக்க தெரியாத எருமை" என்றாள் தமிழ்.
"ஏன் அங்க தான் பேசனும் இல்லை வீட்டுக்கு வந்ததும் பேசவேண்டியது தானே" என்றாள் பனிமலர்.
" ஏய் கொஞ்ச நேரத்திற்கு முன் தான் வந்து குளிச்சிட்டு போய் அங்க சாப்பிட்டு விட்டு வந்து போனை ஆன் பண்ணதும் உன் போன் வந்ததுடி இன்னும் நான் எதையும் பார்க்கக்கூட இல்லை ஆமாம் எதுக்கு போன் பண்ண" என்று தமிழ் பேசிக்கொண்டு இருக்கும் போதே
"ஆஆ.... என்னை விடு." . என்ற பனிமலரின் குரல் தமிழுக்கு கேட்டது.
" ஏய் மலர்... மலர் என்னாச்சு என்னாச்சுடி மலர்... என்ற குரல் போனில் ஒலிக்க சூர்யா பனிமலரின் கை பிடித்து இழுத்துக்கொண்டு சென்று பால்கனியில் விட்டு விட்டு அறைக்குள் சென்றவன் பால்கனி கதவை தாளிட்டு திரைச்சீலையை இழுத்து மூடியிருந்தான்.
தமிழிடம் பேசும் போது எங்கு இருக்கிறோம் என்பதை மறந்திருந்த பனிமலர் எப்போதும் போல் சத்தமாக பேச எதிர்புறம் பேசிய தமிழின் குரலும் சத்தமாக இருக்கவே அமைதியாக இருந்த அறையில் சூர்யாவின் காதில் விழாமல் போகுமா?...
தமிழிடம் பேசக்கூடாது என்று கூறியதை மறந்து பேசியதால் தான் கோபத்தில் இழுத்து சென்று பால்கனியில் விட்டு கதவை மூடி இருக்கிறான் நல்ல வேளை போனை உடைக்கவில்லை என்று ஆசுவாசம் அடைந்தவள் இனி அவன் எதிரில் தமிழ் கிட்ட பேசக்கூடாது என்று நினைத்துக்கொண்டு இருந்தவளுக்கு அப்போது தான் எதிர்புறம் மலர்... மலர்... என்று அழைக்கும் தமிழின் குரல் கேட்டது.
"ஏய் கத்தாதடி காது வலிக்குது" என்றாள் பனிமலர்.
"மலர் என்னாச்சிடி என்று அப்போதும் குரலில் பதட்டத்துடன் தமிழ் கேட்டாள்.
" ஒன்னும் ஆகலைடி டிஸ்டர்ப் இல்லாமல் உன்கிட்ட பேசனும் என்று என் புருஷன் என்னை பால்கனியில் கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனார் என்றாள்.
பனிமலரின் பேச்சை கேட்ட தமிழ் "ஏய் என்னடி உலருர உன்னை அந்த ராட்சசன் எதாவது பண்ணானா ஒழுங்கா மறைக்காமல் சொல்லுடி" என்றாள் தமிழ்.
"ஏய் நான் எதுவும் உலருல ரூமில் லேப்டாப்பில் வேலை செய்துட்டு இருக்கார் நான் உன்கிட்ட சத்தமாக பேசியது டிஸ்டர்ப்பா இருக்கவே என்னை பால்கனியில் விட்டுட்டு போனார் டி உனக்கு சந்தேகமாக இருந்தா வீடியோ காலில் வா இந்த பால்கனி எவ்வளவு சூப்பராக இருக்கு தெரியுமா" என்றவள் வாட்ஸ்அப் காலில் இருந்தவள் வீடியோ காலில் மாற்றி இருந்தாள்.
தமிழும் வீடியோ காலில் வர ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக்கொண்டு இருப்பதை முதலில் காட்டியவள் பின் அங்கிருந்த பூச்செடிகளையும் கொடிகளையும் காட்டி " எவ்வளவு சூப்பரா இருக்கு தெரியுமா இந்த பூக்களோட வாசனையில் இப்படி ஊஞ்சலில் ஆடிட்டு இங்கேயே இருந்திடலாம் போல இருக்குடி" என்று பனிமலர் ரசித்து பேசிக்கொண்டு இருந்த போது எதிர்புறம் இருந்த தமிழ் எதையும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
"ஏய் நான் எவ்வளவு சந்தோஷமாக பேசிட்டு இருக்கேன் நீ பதில் சொல்லாமல் மூஞ்சியை உம்முனு வச்சிட்டு இருக்க" என்றாள்.
" நிஜமாக நீ சந்தோஷமாக இருக்கியா மலர்" என்ற தமிழின் குரலில் பனிமலருக்கு அதுவரை இருந்த புன்னகை மறைந்து போனது.
"உன் வாழ்க்கையில் முக்கியமான நாள் இது அந்த நாளில் இப்படி ராத்திரியில் என்கிட்ட பேசிட்டு இருக்கியே அதிலே நீ எப்படி இருக்க என்று தெரிந்து பேச்சு மலர்" என்றவளின் குரலில் நண்பியின் வாழ்க்கை குறித்த கவலை அதிகமாக இருந்தது.
"ஏய் தமிழ் என்ன பேசுற எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த கல்யாணம் நடந்தது அப்படி இருக்கும் போது" என்று பேசிக்கொண்டு இருந்தவளின் மனதில் எழில்நிலா வந்ததும் தன் தலையில் அடித்துக்கொண்டவள் "தமிழ் நான் உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் அதை விட்டு வேற என்னென்னவோ பேசிட்டு இருக்கேன் நிலா" என்று பேசப்போனவள் சட்டென்று பேச்சியை நிறுத்திவிட்டு சுற்றி பார்த்தவள் பின் தமிழை பார்த்து
"தமிழ் இங்க இருந்து கொண்டு பேசவேண்டாம் என்று நினைக்கிறேன் அதனால் மெசேஜ் பண்ணுறேன்" என்று தமிழின் பதிலை எதிர்பார்க்காமல் போனை கட் செய்தவள் வேகமாக அவள் யோசித்ததை அனைத்தும் டைப் செய்து அனுப்பினாள் பனிமலர்.
அதை படித்த தமிழும் கடற்கரையில் தனக்கும் சந்தேகம் வந்தது பின் திருமண மண்டபத்தில் சந்தேகம் வந்தது ஆகாஷ் இடம் கூறியதையும் அவனின் பதிலையும் கூறியவள் இப்போது என்ன செய்யலாம் என்றாள் தமிழ்.
இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி சந்தேகம் இருப்பதால் சூர்யாவிடம் தவறு இருக்கிறது என்று உறுதி செய்த பனிமலர் வீட்டில் சொல்லிவிடவா என்று தமிழுக்கு மெசேஜ் செய்தாள். தமிழ் அதற்கு மறுப்பு கூறியவள் எழில்நிலா அரவிந்த் பற்றி விசாரித்து அதன் பிறகு முடிவு செய்யலாம் அதுவரை எதையும் வெளிக்காட்டாமல் பத்திரமாக இரு என்றவள் நிலாவை பற்றி எப்படி விசாரிப்பது என்று சில யோசனைகளை கூறியவள் பத்திரம் என்று நண்பிக்கு மெசேஜ் அனுப்பி போனை வைத்து இருந்தாள் தமிழ்.
சிறிது நேரம் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே தமிழ் கூறியதை சிந்தித்து அதன்படி செய்யலாம் இப்போது தூங்கி காலையில் சீக்கிரம் எழுந்து ஆக்கு கம்பெனிக்கு போயிட்டு அதன் பிறகு திட்டத்தை செயல்படுத்தலாம் இப்போது அறைக்குள் செல்லலாம் என்று எழுந்து அறைக்கு உள்ளே செல்ல கதவை திறக்க கதவு திறக்கவில்லை அப்போது தான் அவன் கதவை பூட்டியது தெரிந்தது.
கதவை தட்டினாள் பனிமலர் அவன் கதவை திறக்கவில்லை இரண்டு மூன்று முறை தட்டியும் திறக்காமல் போக தூங்கிட்டானா என்ற சந்தேகம் எழுந்தது. உடனே இல்லையே வேலை செய்திட்டு இருந்தவன் அதுக்குள்ள தூங்கியிருக்கமாட்டான் தமிழ் உடன் பேசியதற்காக தண்டனை கொடுத்து இருக்கிறான் என்பதை உணர்ந்தாள் பனிமலர் .
சிறிது நேரம் நேரம் யோசித்தவள் "நீ எனக்கு தண்டனை கொடுத்து இருக்கியா?..." என்று வாய்விட்டு கூறியவளின் இதழோரம் புன்னகை வந்தது.
பனிமலரை மாடிக்கு அனுப்பியதும் பாட்டி பத்மாவதி, மாமியார் அம்பிகா, சாருமதி மூவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
தாத்தாவும் அருளானந்தமும் படுக்க சென்றுவிட சந்திரபிரகாஷ் காருண்யாவை உறங்க வைத்து விட்டு மனைவியை தேடி கீழே வர அங்கு பாட்டி அம்மா மனைவி மும்முரமாக பேசிக்கொண்டு இருக்கவே அவனும் வந்து அவர்களுடன் அமர்ந்து விட்டான். நேரமாவதை கூட உணராமல் பேசிக்கொண்டு இருந்தனர்.
திருமணத்தில் உறவினர்களின் பேச்சு அவர்களின் பொறாமை எண்ணம் என்று பேசிக்கொண்டு இருந்தவர்களின் பேச்சு சூர்யாவிடம் வந்து நின்றது.
"ஏன் பாட்டி உங்க சின்ன பேரன் அவ்வளவு சீக்கிரம் யார் சொல்லுறதையும் கேட்கமாட்டார் ஆனால் நீங்க பனிமலரை கல்யாணம் பண்ணச்சொன்னதும் பண்ணிகிட்டாரே இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வரலையா?..." என்றாள் சாருமதி.
"அடியேய் இதில் சந்தேகப்பட என்னடி இருக்கு கல்யாணம் நின்னா எல்லாருக்கும் பிரச்சனை என்று எடுத்துச்சொன்னதால் புரிந்துகிட்டு நான் சொன்ன பெண்ணை கல்யாணம் பண்ணிட்டான்" என்று பாட்டி பேசிக்கொண்டு இருந்த நேரம் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.
திடீரென கேட்ட ஒலியில் சற்று திடுக்கிட்டனர் நால்வரும் இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்ற எண்ணம் நால்வருக்கும் எழுந்தது. யாராவது வெளியில் இருந்து வந்திருந்தால் செக்யூரிட்டி கால் செய்து கேட்டு விட்டு தானே உள்ளே விடுவார் என்று எண்ணிக்கொண்டே எழுந்து சென்று கதவை சிறிது மட்டும் திறந்து பார்த்த சாருமதி திகைத்து நின்றுவிட்டாள்.
இரவு மணி ஒன்பதை தாண்டிய நேரம் கையில் பாலுடன் மாடியேறிக்கொண்டு இருந்தாள் பனிமலர். பந்தயக்குதிரையை விட வேகமாக அவளின் இதயம் துடித்துக்கொண்டு இருந்தது. அவனை பற்றி அவள் கண்டறிந்ததை தமிழ், ஆகாஷ் இருவரிடமும் கூறமுடியாமல் போயிருந்தது.
மாலை தன் குடும்பத்தினருடன் தமிழ் வருவாள் என்று எதிர்பார்க்க அவள் வரவில்லை அவளின் நெருங்கிய உறவில் இறப்பு என்று ஊருக்கு சென்றுவிட்டாள்.
ஆகாஷ் போன் எடுக்கவில்லை என்று ஹரிக்கு போன் செய்த போது ஆகாஷ் வேலை விஷயமாக வெளிநாடு போயிருப்பதாக சொல்லினான். இப்போதைக்கு பனிமலரால் எதையும் செய்ய முடியாமல் போனது.
சூர்யாவின் அறைக்கு வெளியே நின்றவளின் மனதில் பல்வேறு உணர்ச்சி போராட்டங்கள் நடந்து கொண்டு இருந்தன.
ஒரு பக்கம் அவளின் அவன் மீதான காதல் மறுபுறம் நிலாவின் நிலையறிய முடியாத வேதனை அடுத்து பழிவாங்க இந்த கல்யாணம் என்று அவனின் வாக்குமூலம் எல்லாம் அவளின் மனதில் மாறி மாறி வந்து கொண்டு இருக்க அவளால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் என்ன செய்வானோ என்ற பயத்துடன் அறையினுள் கால் எடுத்து வைத்தாள்.
உள்ளே வந்தவளின் பார்வை படும் இடங்களில் சூர்யா இல்லை. பார்வை அறையை சுற்றி வர ஒற்றை சோபாவில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டு இருந்தான். அவன் லேப்டாப்பில் வேலை செய்வதை பார்த்தால் அவள் வந்தது கூட அறியவில்லை என்பது புரிய இப்போது என்ன செய்வது அவனின் முன் சென்று தன் வருகையை உணர்த்த வேண்டுமா இல்லை கட்டிலில் சென்று படுத்துவிடுவோமா என்ற சிந்தனையிடையே பாட்டி சொன்னவை நியாபகம் வர அவனை நோக்கி கால்கள் நகர்ந்தன.
பாலை வேஸ்ட் பண்ணாமல் குடிக்கும்படி பாட்டி சொல்லியிருக்க அதை கொடுத்துவிட்டு படுக்கலாம் என்று அவன் முன் சென்று நின்றவளை ஏறெடுத்தும் சூர்யா பார்க்கவில்லை.
ஒரு காலை மெல்ல அசைத்து கொலுசொலி எழுப்பினாள் . அதற்கும் அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை. மீண்டும் சற்று வேகமாக காலை தரையில் தட்டி ஒலியை அதிகமாக்க இப்போது தலை நிமிர்ந்து என்ன என்பது போல் பார்த்தவனின் முகத்தில் சற்று கோபம் தெரிந்தது.
"பா...பாட்டி... பால்... கொடுத்து விட்டாங்க..." தடுமாற்றத்துடன் கூறினாள்.
"எனக்கு வேண்டாம்" என்றுவிட்டு மீண்டும் லேப்டாப்பில் கண்ணை பதிக்க
"இல்ல... பாட்டி வேஸ்ட் பண்ண கூடாது என்று சொன்னாங்க" என்றாள்.
"ச்சே... என்று சற்று எரிச்சலுடன் தலையை கோதியவன் உனக்கு எடுத்திட்டு மீதியை வச்சுட்டு போ நான் அப்புறம் குடிக்கிறேன் என்று கூறி மீண்டும் லேப்டாப்பில் வேலை செய்ய ஆரம்பித்து விட்டான் சூர்யா.
சரி என்று தலையாட்டியவள் பிளாஸ்கில் இருந்த பாலை ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்துக்கொண்டு அங்கிருந்து விலகி சென்று கட்டிலில் அமர்ந்து பாலை குடித்துக்கொண்டே தன் கையில் இருந்த போனை பார்க்க ஆரம்பித்தாள்.
பாலை குடித்து முடித்தவள் போனில் மூழ்கி இருக்கும் இடம் மறந்து போனாள் பனிமலர்.
வாட்ஸ்அப்பில் தமிழ் ஆன்லைனில் வந்ததை கண்டதும் அவளுக்கு போன் செய்து விட்டாள். அந்த பக்கம் ஒரே ரிங்கில் தமிழ் எடுத்ததும் "எருமை எத்தனை முறை போன் பண்ணினேன் ஒரு மெசேஜாவது ரிப்ளை கொடுக்க தெரியாதா?..." என்று திட்ட ஆரம்பிக்க அந்த பக்கம் எதையோ கேட்க வந்த தமிழ் பனிமலரின் பேச்சில் கேட்க வந்ததை மறந்து போனாள்.
"நீ தான்டி எருமை நானில்லை அதுவும் மூளையில்லாத எருமை இழவு வீட்டில் போனை எடுத்துட்டு போய் உன்கிட்ட கொஞ்சிட்டு இருக்கமுடியுமா என்று கூட யோசிக்க தெரியாத எருமை" என்றாள் தமிழ்.
"ஏன் அங்க தான் பேசனும் இல்லை வீட்டுக்கு வந்ததும் பேசவேண்டியது தானே" என்றாள் பனிமலர்.
" ஏய் கொஞ்ச நேரத்திற்கு முன் தான் வந்து குளிச்சிட்டு போய் அங்க சாப்பிட்டு விட்டு வந்து போனை ஆன் பண்ணதும் உன் போன் வந்ததுடி இன்னும் நான் எதையும் பார்க்கக்கூட இல்லை ஆமாம் எதுக்கு போன் பண்ண" என்று தமிழ் பேசிக்கொண்டு இருக்கும் போதே
"ஆஆ.... என்னை விடு." . என்ற பனிமலரின் குரல் தமிழுக்கு கேட்டது.
" ஏய் மலர்... மலர் என்னாச்சு என்னாச்சுடி மலர்... என்ற குரல் போனில் ஒலிக்க சூர்யா பனிமலரின் கை பிடித்து இழுத்துக்கொண்டு சென்று பால்கனியில் விட்டு விட்டு அறைக்குள் சென்றவன் பால்கனி கதவை தாளிட்டு திரைச்சீலையை இழுத்து மூடியிருந்தான்.
தமிழிடம் பேசும் போது எங்கு இருக்கிறோம் என்பதை மறந்திருந்த பனிமலர் எப்போதும் போல் சத்தமாக பேச எதிர்புறம் பேசிய தமிழின் குரலும் சத்தமாக இருக்கவே அமைதியாக இருந்த அறையில் சூர்யாவின் காதில் விழாமல் போகுமா?...
தமிழிடம் பேசக்கூடாது என்று கூறியதை மறந்து பேசியதால் தான் கோபத்தில் இழுத்து சென்று பால்கனியில் விட்டு கதவை மூடி இருக்கிறான் நல்ல வேளை போனை உடைக்கவில்லை என்று ஆசுவாசம் அடைந்தவள் இனி அவன் எதிரில் தமிழ் கிட்ட பேசக்கூடாது என்று நினைத்துக்கொண்டு இருந்தவளுக்கு அப்போது தான் எதிர்புறம் மலர்... மலர்... என்று அழைக்கும் தமிழின் குரல் கேட்டது.
"ஏய் கத்தாதடி காது வலிக்குது" என்றாள் பனிமலர்.
"மலர் என்னாச்சிடி என்று அப்போதும் குரலில் பதட்டத்துடன் தமிழ் கேட்டாள்.
" ஒன்னும் ஆகலைடி டிஸ்டர்ப் இல்லாமல் உன்கிட்ட பேசனும் என்று என் புருஷன் என்னை பால்கனியில் கூட்டிட்டு வந்து விட்டுட்டு போனார் என்றாள்.
பனிமலரின் பேச்சை கேட்ட தமிழ் "ஏய் என்னடி உலருர உன்னை அந்த ராட்சசன் எதாவது பண்ணானா ஒழுங்கா மறைக்காமல் சொல்லுடி" என்றாள் தமிழ்.
"ஏய் நான் எதுவும் உலருல ரூமில் லேப்டாப்பில் வேலை செய்துட்டு இருக்கார் நான் உன்கிட்ட சத்தமாக பேசியது டிஸ்டர்ப்பா இருக்கவே என்னை பால்கனியில் விட்டுட்டு போனார் டி உனக்கு சந்தேகமாக இருந்தா வீடியோ காலில் வா இந்த பால்கனி எவ்வளவு சூப்பராக இருக்கு தெரியுமா" என்றவள் வாட்ஸ்அப் காலில் இருந்தவள் வீடியோ காலில் மாற்றி இருந்தாள்.
தமிழும் வீடியோ காலில் வர ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக்கொண்டு இருப்பதை முதலில் காட்டியவள் பின் அங்கிருந்த பூச்செடிகளையும் கொடிகளையும் காட்டி " எவ்வளவு சூப்பரா இருக்கு தெரியுமா இந்த பூக்களோட வாசனையில் இப்படி ஊஞ்சலில் ஆடிட்டு இங்கேயே இருந்திடலாம் போல இருக்குடி" என்று பனிமலர் ரசித்து பேசிக்கொண்டு இருந்த போது எதிர்புறம் இருந்த தமிழ் எதையும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
"ஏய் நான் எவ்வளவு சந்தோஷமாக பேசிட்டு இருக்கேன் நீ பதில் சொல்லாமல் மூஞ்சியை உம்முனு வச்சிட்டு இருக்க" என்றாள்.
" நிஜமாக நீ சந்தோஷமாக இருக்கியா மலர்" என்ற தமிழின் குரலில் பனிமலருக்கு அதுவரை இருந்த புன்னகை மறைந்து போனது.
"உன் வாழ்க்கையில் முக்கியமான நாள் இது அந்த நாளில் இப்படி ராத்திரியில் என்கிட்ட பேசிட்டு இருக்கியே அதிலே நீ எப்படி இருக்க என்று தெரிந்து பேச்சு மலர்" என்றவளின் குரலில் நண்பியின் வாழ்க்கை குறித்த கவலை அதிகமாக இருந்தது.
"ஏய் தமிழ் என்ன பேசுற எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த கல்யாணம் நடந்தது அப்படி இருக்கும் போது" என்று பேசிக்கொண்டு இருந்தவளின் மனதில் எழில்நிலா வந்ததும் தன் தலையில் அடித்துக்கொண்டவள் "தமிழ் நான் உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசனும் அதை விட்டு வேற என்னென்னவோ பேசிட்டு இருக்கேன் நிலா" என்று பேசப்போனவள் சட்டென்று பேச்சியை நிறுத்திவிட்டு சுற்றி பார்த்தவள் பின் தமிழை பார்த்து
"தமிழ் இங்க இருந்து கொண்டு பேசவேண்டாம் என்று நினைக்கிறேன் அதனால் மெசேஜ் பண்ணுறேன்" என்று தமிழின் பதிலை எதிர்பார்க்காமல் போனை கட் செய்தவள் வேகமாக அவள் யோசித்ததை அனைத்தும் டைப் செய்து அனுப்பினாள் பனிமலர்.
அதை படித்த தமிழும் கடற்கரையில் தனக்கும் சந்தேகம் வந்தது பின் திருமண மண்டபத்தில் சந்தேகம் வந்தது ஆகாஷ் இடம் கூறியதையும் அவனின் பதிலையும் கூறியவள் இப்போது என்ன செய்யலாம் என்றாள் தமிழ்.
இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி சந்தேகம் இருப்பதால் சூர்யாவிடம் தவறு இருக்கிறது என்று உறுதி செய்த பனிமலர் வீட்டில் சொல்லிவிடவா என்று தமிழுக்கு மெசேஜ் செய்தாள். தமிழ் அதற்கு மறுப்பு கூறியவள் எழில்நிலா அரவிந்த் பற்றி விசாரித்து அதன் பிறகு முடிவு செய்யலாம் அதுவரை எதையும் வெளிக்காட்டாமல் பத்திரமாக இரு என்றவள் நிலாவை பற்றி எப்படி விசாரிப்பது என்று சில யோசனைகளை கூறியவள் பத்திரம் என்று நண்பிக்கு மெசேஜ் அனுப்பி போனை வைத்து இருந்தாள் தமிழ்.
சிறிது நேரம் ஊஞ்சலில் ஆடிக்கொண்டே தமிழ் கூறியதை சிந்தித்து அதன்படி செய்யலாம் இப்போது தூங்கி காலையில் சீக்கிரம் எழுந்து ஆக்கு கம்பெனிக்கு போயிட்டு அதன் பிறகு திட்டத்தை செயல்படுத்தலாம் இப்போது அறைக்குள் செல்லலாம் என்று எழுந்து அறைக்கு உள்ளே செல்ல கதவை திறக்க கதவு திறக்கவில்லை அப்போது தான் அவன் கதவை பூட்டியது தெரிந்தது.
கதவை தட்டினாள் பனிமலர் அவன் கதவை திறக்கவில்லை இரண்டு மூன்று முறை தட்டியும் திறக்காமல் போக தூங்கிட்டானா என்ற சந்தேகம் எழுந்தது. உடனே இல்லையே வேலை செய்திட்டு இருந்தவன் அதுக்குள்ள தூங்கியிருக்கமாட்டான் தமிழ் உடன் பேசியதற்காக தண்டனை கொடுத்து இருக்கிறான் என்பதை உணர்ந்தாள் பனிமலர் .
சிறிது நேரம் நேரம் யோசித்தவள் "நீ எனக்கு தண்டனை கொடுத்து இருக்கியா?..." என்று வாய்விட்டு கூறியவளின் இதழோரம் புன்னகை வந்தது.
பனிமலரை மாடிக்கு அனுப்பியதும் பாட்டி பத்மாவதி, மாமியார் அம்பிகா, சாருமதி மூவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.
தாத்தாவும் அருளானந்தமும் படுக்க சென்றுவிட சந்திரபிரகாஷ் காருண்யாவை உறங்க வைத்து விட்டு மனைவியை தேடி கீழே வர அங்கு பாட்டி அம்மா மனைவி மும்முரமாக பேசிக்கொண்டு இருக்கவே அவனும் வந்து அவர்களுடன் அமர்ந்து விட்டான். நேரமாவதை கூட உணராமல் பேசிக்கொண்டு இருந்தனர்.
திருமணத்தில் உறவினர்களின் பேச்சு அவர்களின் பொறாமை எண்ணம் என்று பேசிக்கொண்டு இருந்தவர்களின் பேச்சு சூர்யாவிடம் வந்து நின்றது.
"ஏன் பாட்டி உங்க சின்ன பேரன் அவ்வளவு சீக்கிரம் யார் சொல்லுறதையும் கேட்கமாட்டார் ஆனால் நீங்க பனிமலரை கல்யாணம் பண்ணச்சொன்னதும் பண்ணிகிட்டாரே இதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வரலையா?..." என்றாள் சாருமதி.
"அடியேய் இதில் சந்தேகப்பட என்னடி இருக்கு கல்யாணம் நின்னா எல்லாருக்கும் பிரச்சனை என்று எடுத்துச்சொன்னதால் புரிந்துகிட்டு நான் சொன்ன பெண்ணை கல்யாணம் பண்ணிட்டான்" என்று பாட்டி பேசிக்கொண்டு இருந்த நேரம் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.
திடீரென கேட்ட ஒலியில் சற்று திடுக்கிட்டனர் நால்வரும் இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்ற எண்ணம் நால்வருக்கும் எழுந்தது. யாராவது வெளியில் இருந்து வந்திருந்தால் செக்யூரிட்டி கால் செய்து கேட்டு விட்டு தானே உள்ளே விடுவார் என்று எண்ணிக்கொண்டே எழுந்து சென்று கதவை சிறிது மட்டும் திறந்து பார்த்த சாருமதி திகைத்து நின்றுவிட்டாள்.