உருகும் சூரியன் 34
"பாட்டி நான் அவகிட்ட பேசனும்" என்றான் சூர்யா.
அவனின் தாத்தாவும் பாட்டியும் ஒன்றாக "யாருகிட்ட பேசனும்?..." என்று ஒரே சமயத்தில் கேட்டனர்.
பல்லை கடித்தவன் "அதான் இப்ப எனக்கு கல்யாணம் பண்ண பார்த்து இருக்கிற பெண்ணுகிட்ட" என்றான் சூர்யா.
" ஏன் சூர்யா அவள் பேர் என்ன என்று உனக்கு தெரியாதா?..." என்றார் பாட்டி.
"தெரியாது" என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான் சூர்யா.
"அவள் பேர் பனிமலர்" என்றார் பாட்டி.
" சரி நான் இப்ப அவகிட்ட பேசனும் எங்க இருக்கா என்று சொல்லுங்க" என்றான்.
" மலர் மணப்பெண் அறையில் இருக்கா" என்னும்போதே வேகமாக அங்கிருந்து சென்றிருந்தான் சூர்யா.
"என் பேரன் இப்படி ஆனதுக்கு நீங்க தான் காரணம் இப்படி அவனை தொழில் தொழில் என்று ஓடவிட்டதால் தான் இப்படி இருக்கான்" என்று தாத்தாவிடம் பொறிந்தார் பாட்டி.
"நான் என்னடி பண்ணேன் அவன் தான் பிஸ்னஸ் பின்னாடி ஓடிட்டு இருக்கான் கல்யாணம் முடிந்தால் அவனும் என்னை மாதிரி பெண்டாட்டி பின்னாடி சுத்த ஆரம்பித்திடுவான்" என்று தன் மீசையை முறுக்க அதில் பாட்டி வெட்கப்பட்டு போனார்.
அதை ஆவென பார்த்துக்கொண்டு இருந்தாள் சாருமதி. சந்திரபிரகாஷ் அவளின் கையில் தட்டி" என்னடி அப்படி பார்த்திட்டு இருக்க?... " என்றான்.
" ஏன் மாமா தாத்தாவும் பாட்டியும் இந்த வயதில் இப்படி ரொமான்ஸ் பண்ணுறாங்களே அப்ப சின்ன வயதில் எப்படி இருந்து இருப்பாங்க" என்றவளை
" ஏய் என்னடி உளறிட்டு இருக்க?..." என்றான்.
"அங்க பாருங்க உங்க தாத்தாவையும் பாட்டியையும் இந்த வயதிலும் பாட்டி வெக்கப்பட்டுட்டு இருக்காங்க நீங்களும் இருக்கிங்களே" என்றவள் " நீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணியே இப்படி இருக்கிங்க இதில் உங்க தாத்தா சூர்யா கல்யாணம் ஆனால் அவரை மாதிரி பெண்டாட்டி பின்னாடி சுத்துவாராம் இதெல்லாம் கனவில் கூட நடக்காது" என்றவளை
" ஏன்டி நான் உன் பின்னாடி சுத்திட்டு தானே இருக்கேன் இன்னும் என்னடி" என்றான் சந்திரபிரகாஷ்.
" நல்லா சுத்திட்டு இருக்கிங்க உங்ககிட்ட பேசறதை விட அடுத்த வேலையை பார்க்கப்போறது நல்லது" என்று அந்த இடத்தை விட்டு சென்றாள் சாருமதி.
சூர்யா நேராக மணப்பெண் அறை முன் சென்று கதவை தட்ட தமிழ் கதவை திறந்தாள். தமிழை பார்க்காமல் உள்ளே இருந்த பனிமலரை பார்த்துக்கொண்டே "ஆன்ட்டி நான் அவகிட்ட தனியாக பேசனும்" என்றான்.
" உள்ள வா சூர்யா நீங்க பேசுங்க" என்று கூறிய மாலினி தமிழை அழைத்துக்கொண்டு வெளியேறியதும் கதவை தாளிட்டவன் கட்டிலில் அமர்ந்தான்.
அவனின் பார்வை சிறிதும் விலகாமல் அவள் மீதே இருந்தது. அவளோ தலைகுனிந்து நின்றிருந்தாள்.
" இந்த கல்யாணத்தில் உனக்கு முழு சம்மதமா?... " என்றான்.
இந்த கேள்வியை ஒரு நாளைக்கு முன்பு கேட்டு இருந்தாள் துள்ளி குதித்து சந்தோஷத்துடன் சம்மதம் சம்மதம் என்று ஊருக்கே கேட்கும் அளவுக்கு சொல்லி இருப்பாள் ஆனால் இன்று இப்படி ஒரு கேள்வியை ஏன் கேட்கிறான் அதான் நான் எல்லார் முன்னாடியும் சொல்லிட்டு வந்திட்டேனே என்றது அவளின் மனம்.
அவளிடம் இருந்து பதில் வராமல் போகவே மீண்டும் "சொல்லு உனக்கு இந்த திருமணத்திற்கு முழு சம்மதமா?..." என்றான் சற்றே கோபக்குரலில்
"சம்மதம்" என்றாள் தடுமாற்றத்துடன்
"என் முகத்தை பார்த்து சொல்லு" என்றான்.
"அதான் சம்மதம் என்று சொல்லிட்டனே" என்றாள்.
"உன் வாய் தான் சொல்லுது உன் முகம் வேற சொல்லுது எனக்கு தேவை உண்மையான பதில்" என்றான்.
"என் டாடிக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் என்று சொன்னேனே என்றாள்.
" அப்ப உன் டாடி வேற யாரையாவது காட்டி இருந்தாலும் சம்மதம் சொல்லியிருப்பாய் அப்படித்தானே?..." என்றான்.
இல்லை இல்லை அப்படி டாடி வேற யாரையாவது சொல்லியிருந்தால் கண்டிப்பாக சம்மதம் சொல்லியிருக்க மாட்டேன் அப்படி ஒரு சூழ்நிலை வந்திருந்தால் என் உயிரை விட்டு இருப்போன் என்று அவளின் மனம் கூக்குரலிட்டது. ஆனால் வெளியே அவனுக்கு பதில் சொல்லாமல் நின்றிருந்தாள் பனிமலர்.
"உன்கிட்ட தான் கேட்கிறேன் பதில் சொல்லு" என்று கூறியவன் அவளின் முன் வந்து நின்றான்.
அப்போதும் அவள் தலைகுனிந்து நின்று இருந்தாள்.
அவளின் தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தியவன் "சொல்லு உன் டாடி வேற யாரையாவது காட்டி கல்யாணம் பண்ணச்சொல்லி இருந்தா பண்ணியிருப்பாயா?.... என்றான்.
முகம் கோபத்தில் சிவந்து கண்கள் கூர்மையாக அவளின் பதிலுக்காக காத்திருப்பது கண்டவளுக்கு உடலில் நடுக்கம் தோன்றியது. அவன் முகம் பார்த்து உண்மையை கூறமுடியாமல் தவித்தவளுக்கு பொய்யையும் கூற வரவில்லை.
அவள் தான் அவனைக்கண்டதும் இணைபுரியா உணர்வுகள் எழுந்து காதலாக மாறி அவனையே நினைத்து பல கோட்டைகள் கட்டி வாழ்ந்து இருந்தாள்.
ஆனால் அவனிடம் இருந்து அவள் ஆர்வமான பார்வை கூட பார்த்ததில்லை. இருந்தும் மனம் அவனிடம் தான் சென்று கொண்டிருந்தது. அவனின் காதல் கிடைக்கவில்லை என்றாலும் அவனின் மூச்சுக்காற்று இருக்கும் இடத்திலாவது வாழ்ந்திடலாம் என்று இருந்தவளுக்கு தன் அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளையாக வந்தபோது அவளின் மனம் துடிதுடித்தது.
அவளின் அக்காவின் குணம் தெரிந்தவள் தமக்கை கண்டிப்பாக திருமணத்தை நிறுத்துவாள் அப்போது தான் அவனை மணந்துகொள்ளலாம் என்று மனக்கோட்டை கட்டியவளுக்கு தமக்கை திருமணத்தை நிறுத்த எந்த முயற்சியும் செய்யாமல் சந்தோஷமாக இருக்கவே தன் மனக்கோட்டை தகர்ந்ததை நினைத்து துடித்துக்கொண்டு இருந்தவளுக்கு தமக்கை இப்படி கடைசி நேரத்தில் சென்றது குடும்பத்தினருக்கு வேதனையையும் அவமானத்தையும் கொடுத்ததை பனிமலரால் தாங்கமுடியவில்லை.
திருமணம் நிற்கவேண்டும் என்று எண்ணியது தான் குடும்பம் அவமானப்பட காரணம் என்று நினைத்து அந்த திருமணமே எனக்கு வேண்டாம் என நினைத்திருந்தவளுக்கு அவளை தேடி அந்த வாய்ப்பு வந்த போது ஏற்கமுடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறாள்.
பெரிய தந்தை வாக்கு கொடுத்த பிறகு தான் மறுத்தால் மீண்டும் தன் குடும்பம் இன்னொரு அவமானத்தை சந்திக்கவேண்டும் என்ற எண்ணத்தினால் திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருந்தாள். அதுவும் சூர்யா என்பதால் மட்டுமே சம்மதம் சொல்லியிருந்தாள் வேறு யாராக இருந்திருந்தால் அவள் சம்மதம் சொல்ல அவள் உயிர் அவளின் உடலில் இருந்து இருக்காது.
இப்போது அவனுக்கு என்ன பதில் சொல்லுவாள் அவனிடம் எதிர்பார்த்த சிறு ஆர்வப்பார்வை கூட இல்லாமல் இருப்பவனிடம் நீ என்பதால் தான் ஒத்துக்கொண்டேன் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் அவனின் ஏளனப்பார்வையை சந்திக்க நேரிடுமே அதை எப்படி எதிர்கொள்வது. அவனாக தன் காதலை உணரவேண்டும் என்று முடிவு செய்தவளாக அமைதியாக நின்று இருந்தாள் பனிமலர்.
அவளிடம் இருந்து பதில் வராது போக கோபத்தின் உச்சிக்கு சென்றவன் அவளின் தாடையை அழுந்த பிடித்தான் அதில் அவளின் முகம் வலியில் சுளித்தது. அவனின் கையை தன் பலம் கொண்டு தட்டி விட்டு அறை வாயில் கதவு நோக்கி வேகமாக நடந்தவளின் கையை பிடித்து இருந்தான் சூர்யா.
அவனின் பிடியில் இருந்து தன் கைகளை விலக்க செய்த போராட்டம் எல்லாம் வீணானது இருப்புப்பிடியாக பிடித்திருந்த இடம் வலியைக்கொடுத்தது.
"பிளீஸ் கையை விடுங்க நான் சம்மதம் சொல்லியது உங்களுக்கு பிடிக்கலை என்று தெரியுது என்னால் மறுக்க முடியாமல் ஒத்துக்கிட்டேன். ஆனால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லையே நீங்க இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க" என்று பேசிக்கொண்டே போனாவளை இழுத்து அங்கிருந்த சுவற்றில் சாய்த்து இருபக்கமாக கையை வைத்து அவளை விலகி போகாமல் நிறுத்தியவன்.
" ஓஓஹே இதுதான் உன் பிளானா நானாக கல்யாணத்தை நிறுத்திட்டா உங்க குடும்பத்தின் மேல் எந்த பழியும் வராமல் என்னால் தான் உங்க அக்கா ஓடிவிட்டாள் என்று பழியை என் மேல் போட்டுட்டு வேற எவனையாவது உன் டாடி காட்டுவார் அவனை கல்யாணம் பண்ணிட்டு போயிடுவாய் நான் இங்க எல்லா பழியையும் ஏத்திட்டு இருக்கனும் இல்லையா????...."
" அய்யோ.... அப்படி இல்லை உங்களுக்கு என்னை பிடிக்காது அதனால் தான் சொன்னேன்." என்றாள்.
" எனக்கு உன்னை பிடிக்கும் என்றோ பிடிக்காது என்றோ சொன்ன மாதிரி எனக்கு நியாபகம் இல்லையே. அப்படியே உன்னை பிடிக்கலை என்றாலும் இப்ப இந்த கல்யாணம் நடக்கனும் என்று என் தாத்தா பாட்டி விரும்பறாங்க அதனால் இந்த கல்யாணம் கண்டிப்பாக நடக்கும்."
" அது மட்டும் இல்லாமல் உன் கிட்ட தீர்க்க வேண்டிய கணக்கு நிறைய இருக்கு. அதில் இப்போது உன் அக்கா ஓடிப்போனதும் சேர்ந்திடுச்சு உன் அக்கா ஓடிப்போகப்போறா என்று உனக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கு" என்று பேசிக்கொண்டு இருந்தவனின் பேச்சில் இடையிட்டு
"இல்லை... எனக்கு தெரியாது நிலா ஓடிப்போவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்றாள்.
"தெரியாதா?..." என்றவன் அவளின் கையைப்பற்றி தூக்கி அவளின் முகத்துக்கு நேராக காட்டி தெரியாதவள் தான் நிச்சயதார்த்தம் அன்னைக்கு என் கையால் இந்த மோதிரத்தை போட வச்சியா அப்புறம் உன் கழுத்தில் தாலி கட்ட ரெடியாக இருங்க அத்தான் என்று சொன்னாயா?...." என்றான்.
" அது... அது...." என்று தினறினாள் பனிமலர்.
" ம்ம்... சொல்லு உனக்கு எல்லாம் தெரிந்து இருக்கு . ஒரு வேளை உன் அக்காவிற்கு பிளான் போட்டுக்கொடுத்தவளே நீதானா?..."
" இல்லை... அப்படியில்லை... நான் எதுவும் பிளான் போடலை... "என்று கண்களில் நீர் வழியக்கூறியவளை பார்த்தவன்
"நீ என் பின்னாடி சுத்தி சுத்தி வந்தும் நான் உன்னை திரும்பிக்கூட பார்க்கலை ஆனால் உன் அக்காவை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டேன். அது உனக்கு பிடிக்கலை அதனால் அவளை குழப்பி ஓடவச்சுட்டா உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க என்று பிளான் போட்டு எல்லாம் பண்ணிட்டு இப்ப இப்படி கண்ணீர் விட்டு மத்தவங்களை ஏமாற்றலாம் ஆனால் என்னை ஏமாற்ற முடியாது. "
" இப்பக்கூட என்னால் இதே முகூர்த்தத்தில் வேறு பெண்ணை கல்யாணம் பண்ண முடியும். ஆனால் உன்னை ஏன் பண்ணிக்கிறேன் தெரியுமா நீ பண்ண எல்லாத்துக்கும் உனக்கு தண்டனை தரனும் இல்லையா அதுக்கு தான். "
அதனால் இப்ப போய் எந்த பிரச்சினையும் பண்ணாமல் கல்யாணத்திற்கு ரெடியாகு" என்று கூறிய சூர்யா தன் கையை சுவற்றில் இருந்து எடுத்ததும் பனிமலர் கதவை நோக்கி வேகமாக சென்றாள்.
"ஒரு நிமிஷம்" என்று அவளை தடுத்து நிறுத்தியவன் "நீ எதாவது எனக்கு எதிராக செய்யுற என்று தெரிந்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் உன் அக்காவும் அவளின் புருஷனும் இருந்த இடம் தெரியாமல் போயிடுவாங்க" என்றான்.
அதை கேட்ட பனிமலர் அதிர்ந்து பயத்துடன் "இல்லை நான் எதுவும் பண்ணமாட்டேன் அவங்களை எதுவும் பண்ணாதிங்க" என்றாள்.
" அது நீ நடந்துகொள்வதில்தான் இருக்கு அப்புறம் உன் பிரண்ட்ஸ் இன்னைக்கு தான் கடைசியாக இருக்கனும் நீ அவங்க கிட்ட பேசுறது நாளையிலிருந்து அவங்க உன் பக்கம் வந்தா உனக்கு எதுவும் ஆகாது ஆனால் அவங்களுக்கு என்னவென்றாலும் ஆகலாம்" என்று கூறிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியேறினான் சூர்யபிரகாஷ்.
நின்ற இடத்திலேயே சிலையாக நின்றாள் பனிமலர். என்னவெல்லாம் சொல்லுகிறான் என் மீது சிறு நம்பிக்கை கூட இல்லையா இவனுக்கு என்று எண்ணி கண்ணீர் விட்டு கொண்டிருந்தவளை கலைத்தது காலடி ஓசையும் பேச்சிக்குரலும் இங்கு தான் வருகிறார்கள் என்று அறிந்து வேகமாக குளியல் அறை புகுந்து கதவை மூடி அதன் மீதே சாய்ந்து நின்றாள் பனிமலர்.
குளியல் அறை கதவு தட்டும் ஓசையில் இதே வரேன் என்று கூறி வேகமாக முகம் கழுவி துடைத்து வெளியே வந்தவளை அங்கிருந்தவர்கள் அழைத்து சென்று எண்ணெய் நலங்கு வைத்து அதன் பிறகு குளித்து வந்தவளுக்கு மணப்பெண் அலங்காரம் செய்து இருந்தனர்.
காலையில் நடந்தவைகளை நினைத்துக்கொண்டு இருந்தவள் தன்னையும் அறியாமல் உறங்கி இருந்தாள்.
"பாட்டி நான் அவகிட்ட பேசனும்" என்றான் சூர்யா.
அவனின் தாத்தாவும் பாட்டியும் ஒன்றாக "யாருகிட்ட பேசனும்?..." என்று ஒரே சமயத்தில் கேட்டனர்.
பல்லை கடித்தவன் "அதான் இப்ப எனக்கு கல்யாணம் பண்ண பார்த்து இருக்கிற பெண்ணுகிட்ட" என்றான் சூர்யா.
" ஏன் சூர்யா அவள் பேர் என்ன என்று உனக்கு தெரியாதா?..." என்றார் பாட்டி.
"தெரியாது" என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னான் சூர்யா.
"அவள் பேர் பனிமலர்" என்றார் பாட்டி.
" சரி நான் இப்ப அவகிட்ட பேசனும் எங்க இருக்கா என்று சொல்லுங்க" என்றான்.
" மலர் மணப்பெண் அறையில் இருக்கா" என்னும்போதே வேகமாக அங்கிருந்து சென்றிருந்தான் சூர்யா.
"என் பேரன் இப்படி ஆனதுக்கு நீங்க தான் காரணம் இப்படி அவனை தொழில் தொழில் என்று ஓடவிட்டதால் தான் இப்படி இருக்கான்" என்று தாத்தாவிடம் பொறிந்தார் பாட்டி.
"நான் என்னடி பண்ணேன் அவன் தான் பிஸ்னஸ் பின்னாடி ஓடிட்டு இருக்கான் கல்யாணம் முடிந்தால் அவனும் என்னை மாதிரி பெண்டாட்டி பின்னாடி சுத்த ஆரம்பித்திடுவான்" என்று தன் மீசையை முறுக்க அதில் பாட்டி வெட்கப்பட்டு போனார்.
அதை ஆவென பார்த்துக்கொண்டு இருந்தாள் சாருமதி. சந்திரபிரகாஷ் அவளின் கையில் தட்டி" என்னடி அப்படி பார்த்திட்டு இருக்க?... " என்றான்.
" ஏன் மாமா தாத்தாவும் பாட்டியும் இந்த வயதில் இப்படி ரொமான்ஸ் பண்ணுறாங்களே அப்ப சின்ன வயதில் எப்படி இருந்து இருப்பாங்க" என்றவளை
" ஏய் என்னடி உளறிட்டு இருக்க?..." என்றான்.
"அங்க பாருங்க உங்க தாத்தாவையும் பாட்டியையும் இந்த வயதிலும் பாட்டி வெக்கப்பட்டுட்டு இருக்காங்க நீங்களும் இருக்கிங்களே" என்றவள் " நீங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணியே இப்படி இருக்கிங்க இதில் உங்க தாத்தா சூர்யா கல்யாணம் ஆனால் அவரை மாதிரி பெண்டாட்டி பின்னாடி சுத்துவாராம் இதெல்லாம் கனவில் கூட நடக்காது" என்றவளை
" ஏன்டி நான் உன் பின்னாடி சுத்திட்டு தானே இருக்கேன் இன்னும் என்னடி" என்றான் சந்திரபிரகாஷ்.
" நல்லா சுத்திட்டு இருக்கிங்க உங்ககிட்ட பேசறதை விட அடுத்த வேலையை பார்க்கப்போறது நல்லது" என்று அந்த இடத்தை விட்டு சென்றாள் சாருமதி.
சூர்யா நேராக மணப்பெண் அறை முன் சென்று கதவை தட்ட தமிழ் கதவை திறந்தாள். தமிழை பார்க்காமல் உள்ளே இருந்த பனிமலரை பார்த்துக்கொண்டே "ஆன்ட்டி நான் அவகிட்ட தனியாக பேசனும்" என்றான்.
" உள்ள வா சூர்யா நீங்க பேசுங்க" என்று கூறிய மாலினி தமிழை அழைத்துக்கொண்டு வெளியேறியதும் கதவை தாளிட்டவன் கட்டிலில் அமர்ந்தான்.
அவனின் பார்வை சிறிதும் விலகாமல் அவள் மீதே இருந்தது. அவளோ தலைகுனிந்து நின்றிருந்தாள்.
" இந்த கல்யாணத்தில் உனக்கு முழு சம்மதமா?... " என்றான்.
இந்த கேள்வியை ஒரு நாளைக்கு முன்பு கேட்டு இருந்தாள் துள்ளி குதித்து சந்தோஷத்துடன் சம்மதம் சம்மதம் என்று ஊருக்கே கேட்கும் அளவுக்கு சொல்லி இருப்பாள் ஆனால் இன்று இப்படி ஒரு கேள்வியை ஏன் கேட்கிறான் அதான் நான் எல்லார் முன்னாடியும் சொல்லிட்டு வந்திட்டேனே என்றது அவளின் மனம்.
அவளிடம் இருந்து பதில் வராமல் போகவே மீண்டும் "சொல்லு உனக்கு இந்த திருமணத்திற்கு முழு சம்மதமா?..." என்றான் சற்றே கோபக்குரலில்
"சம்மதம்" என்றாள் தடுமாற்றத்துடன்
"என் முகத்தை பார்த்து சொல்லு" என்றான்.
"அதான் சம்மதம் என்று சொல்லிட்டனே" என்றாள்.
"உன் வாய் தான் சொல்லுது உன் முகம் வேற சொல்லுது எனக்கு தேவை உண்மையான பதில்" என்றான்.
"என் டாடிக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம் என்று சொன்னேனே என்றாள்.
" அப்ப உன் டாடி வேற யாரையாவது காட்டி இருந்தாலும் சம்மதம் சொல்லியிருப்பாய் அப்படித்தானே?..." என்றான்.
இல்லை இல்லை அப்படி டாடி வேற யாரையாவது சொல்லியிருந்தால் கண்டிப்பாக சம்மதம் சொல்லியிருக்க மாட்டேன் அப்படி ஒரு சூழ்நிலை வந்திருந்தால் என் உயிரை விட்டு இருப்போன் என்று அவளின் மனம் கூக்குரலிட்டது. ஆனால் வெளியே அவனுக்கு பதில் சொல்லாமல் நின்றிருந்தாள் பனிமலர்.
"உன்கிட்ட தான் கேட்கிறேன் பதில் சொல்லு" என்று கூறியவன் அவளின் முன் வந்து நின்றான்.
அப்போதும் அவள் தலைகுனிந்து நின்று இருந்தாள்.
அவளின் தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தியவன் "சொல்லு உன் டாடி வேற யாரையாவது காட்டி கல்யாணம் பண்ணச்சொல்லி இருந்தா பண்ணியிருப்பாயா?.... என்றான்.
முகம் கோபத்தில் சிவந்து கண்கள் கூர்மையாக அவளின் பதிலுக்காக காத்திருப்பது கண்டவளுக்கு உடலில் நடுக்கம் தோன்றியது. அவன் முகம் பார்த்து உண்மையை கூறமுடியாமல் தவித்தவளுக்கு பொய்யையும் கூற வரவில்லை.
அவள் தான் அவனைக்கண்டதும் இணைபுரியா உணர்வுகள் எழுந்து காதலாக மாறி அவனையே நினைத்து பல கோட்டைகள் கட்டி வாழ்ந்து இருந்தாள்.
ஆனால் அவனிடம் இருந்து அவள் ஆர்வமான பார்வை கூட பார்த்ததில்லை. இருந்தும் மனம் அவனிடம் தான் சென்று கொண்டிருந்தது. அவனின் காதல் கிடைக்கவில்லை என்றாலும் அவனின் மூச்சுக்காற்று இருக்கும் இடத்திலாவது வாழ்ந்திடலாம் என்று இருந்தவளுக்கு தன் அக்காவிற்கு பார்த்த மாப்பிள்ளையாக வந்தபோது அவளின் மனம் துடிதுடித்தது.
அவளின் அக்காவின் குணம் தெரிந்தவள் தமக்கை கண்டிப்பாக திருமணத்தை நிறுத்துவாள் அப்போது தான் அவனை மணந்துகொள்ளலாம் என்று மனக்கோட்டை கட்டியவளுக்கு தமக்கை திருமணத்தை நிறுத்த எந்த முயற்சியும் செய்யாமல் சந்தோஷமாக இருக்கவே தன் மனக்கோட்டை தகர்ந்ததை நினைத்து துடித்துக்கொண்டு இருந்தவளுக்கு தமக்கை இப்படி கடைசி நேரத்தில் சென்றது குடும்பத்தினருக்கு வேதனையையும் அவமானத்தையும் கொடுத்ததை பனிமலரால் தாங்கமுடியவில்லை.
திருமணம் நிற்கவேண்டும் என்று எண்ணியது தான் குடும்பம் அவமானப்பட காரணம் என்று நினைத்து அந்த திருமணமே எனக்கு வேண்டாம் என நினைத்திருந்தவளுக்கு அவளை தேடி அந்த வாய்ப்பு வந்த போது ஏற்கமுடியாமல் தவித்துக்கொண்டு இருக்கிறாள்.
பெரிய தந்தை வாக்கு கொடுத்த பிறகு தான் மறுத்தால் மீண்டும் தன் குடும்பம் இன்னொரு அவமானத்தை சந்திக்கவேண்டும் என்ற எண்ணத்தினால் திருமணத்திற்கு சம்மதம் சொல்லியிருந்தாள். அதுவும் சூர்யா என்பதால் மட்டுமே சம்மதம் சொல்லியிருந்தாள் வேறு யாராக இருந்திருந்தால் அவள் சம்மதம் சொல்ல அவள் உயிர் அவளின் உடலில் இருந்து இருக்காது.
இப்போது அவனுக்கு என்ன பதில் சொல்லுவாள் அவனிடம் எதிர்பார்த்த சிறு ஆர்வப்பார்வை கூட இல்லாமல் இருப்பவனிடம் நீ என்பதால் தான் ஒத்துக்கொண்டேன் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் அவனின் ஏளனப்பார்வையை சந்திக்க நேரிடுமே அதை எப்படி எதிர்கொள்வது. அவனாக தன் காதலை உணரவேண்டும் என்று முடிவு செய்தவளாக அமைதியாக நின்று இருந்தாள் பனிமலர்.
அவளிடம் இருந்து பதில் வராது போக கோபத்தின் உச்சிக்கு சென்றவன் அவளின் தாடையை அழுந்த பிடித்தான் அதில் அவளின் முகம் வலியில் சுளித்தது. அவனின் கையை தன் பலம் கொண்டு தட்டி விட்டு அறை வாயில் கதவு நோக்கி வேகமாக நடந்தவளின் கையை பிடித்து இருந்தான் சூர்யா.
அவனின் பிடியில் இருந்து தன் கைகளை விலக்க செய்த போராட்டம் எல்லாம் வீணானது இருப்புப்பிடியாக பிடித்திருந்த இடம் வலியைக்கொடுத்தது.
"பிளீஸ் கையை விடுங்க நான் சம்மதம் சொல்லியது உங்களுக்கு பிடிக்கலை என்று தெரியுது என்னால் மறுக்க முடியாமல் ஒத்துக்கிட்டேன். ஆனால் உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லையே நீங்க இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்க" என்று பேசிக்கொண்டே போனாவளை இழுத்து அங்கிருந்த சுவற்றில் சாய்த்து இருபக்கமாக கையை வைத்து அவளை விலகி போகாமல் நிறுத்தியவன்.
" ஓஓஹே இதுதான் உன் பிளானா நானாக கல்யாணத்தை நிறுத்திட்டா உங்க குடும்பத்தின் மேல் எந்த பழியும் வராமல் என்னால் தான் உங்க அக்கா ஓடிவிட்டாள் என்று பழியை என் மேல் போட்டுட்டு வேற எவனையாவது உன் டாடி காட்டுவார் அவனை கல்யாணம் பண்ணிட்டு போயிடுவாய் நான் இங்க எல்லா பழியையும் ஏத்திட்டு இருக்கனும் இல்லையா????...."
" அய்யோ.... அப்படி இல்லை உங்களுக்கு என்னை பிடிக்காது அதனால் தான் சொன்னேன்." என்றாள்.
" எனக்கு உன்னை பிடிக்கும் என்றோ பிடிக்காது என்றோ சொன்ன மாதிரி எனக்கு நியாபகம் இல்லையே. அப்படியே உன்னை பிடிக்கலை என்றாலும் இப்ப இந்த கல்யாணம் நடக்கனும் என்று என் தாத்தா பாட்டி விரும்பறாங்க அதனால் இந்த கல்யாணம் கண்டிப்பாக நடக்கும்."
" அது மட்டும் இல்லாமல் உன் கிட்ட தீர்க்க வேண்டிய கணக்கு நிறைய இருக்கு. அதில் இப்போது உன் அக்கா ஓடிப்போனதும் சேர்ந்திடுச்சு உன் அக்கா ஓடிப்போகப்போறா என்று உனக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கு" என்று பேசிக்கொண்டு இருந்தவனின் பேச்சில் இடையிட்டு
"இல்லை... எனக்கு தெரியாது நிலா ஓடிப்போவது பற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்றாள்.
"தெரியாதா?..." என்றவன் அவளின் கையைப்பற்றி தூக்கி அவளின் முகத்துக்கு நேராக காட்டி தெரியாதவள் தான் நிச்சயதார்த்தம் அன்னைக்கு என் கையால் இந்த மோதிரத்தை போட வச்சியா அப்புறம் உன் கழுத்தில் தாலி கட்ட ரெடியாக இருங்க அத்தான் என்று சொன்னாயா?...." என்றான்.
" அது... அது...." என்று தினறினாள் பனிமலர்.
" ம்ம்... சொல்லு உனக்கு எல்லாம் தெரிந்து இருக்கு . ஒரு வேளை உன் அக்காவிற்கு பிளான் போட்டுக்கொடுத்தவளே நீதானா?..."
" இல்லை... அப்படியில்லை... நான் எதுவும் பிளான் போடலை... "என்று கண்களில் நீர் வழியக்கூறியவளை பார்த்தவன்
"நீ என் பின்னாடி சுத்தி சுத்தி வந்தும் நான் உன்னை திரும்பிக்கூட பார்க்கலை ஆனால் உன் அக்காவை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டேன். அது உனக்கு பிடிக்கலை அதனால் அவளை குழப்பி ஓடவச்சுட்டா உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க என்று பிளான் போட்டு எல்லாம் பண்ணிட்டு இப்ப இப்படி கண்ணீர் விட்டு மத்தவங்களை ஏமாற்றலாம் ஆனால் என்னை ஏமாற்ற முடியாது. "
" இப்பக்கூட என்னால் இதே முகூர்த்தத்தில் வேறு பெண்ணை கல்யாணம் பண்ண முடியும். ஆனால் உன்னை ஏன் பண்ணிக்கிறேன் தெரியுமா நீ பண்ண எல்லாத்துக்கும் உனக்கு தண்டனை தரனும் இல்லையா அதுக்கு தான். "
அதனால் இப்ப போய் எந்த பிரச்சினையும் பண்ணாமல் கல்யாணத்திற்கு ரெடியாகு" என்று கூறிய சூர்யா தன் கையை சுவற்றில் இருந்து எடுத்ததும் பனிமலர் கதவை நோக்கி வேகமாக சென்றாள்.
"ஒரு நிமிஷம்" என்று அவளை தடுத்து நிறுத்தியவன் "நீ எதாவது எனக்கு எதிராக செய்யுற என்று தெரிந்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் உன் அக்காவும் அவளின் புருஷனும் இருந்த இடம் தெரியாமல் போயிடுவாங்க" என்றான்.
அதை கேட்ட பனிமலர் அதிர்ந்து பயத்துடன் "இல்லை நான் எதுவும் பண்ணமாட்டேன் அவங்களை எதுவும் பண்ணாதிங்க" என்றாள்.
" அது நீ நடந்துகொள்வதில்தான் இருக்கு அப்புறம் உன் பிரண்ட்ஸ் இன்னைக்கு தான் கடைசியாக இருக்கனும் நீ அவங்க கிட்ட பேசுறது நாளையிலிருந்து அவங்க உன் பக்கம் வந்தா உனக்கு எதுவும் ஆகாது ஆனால் அவங்களுக்கு என்னவென்றாலும் ஆகலாம்" என்று கூறிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியேறினான் சூர்யபிரகாஷ்.
நின்ற இடத்திலேயே சிலையாக நின்றாள் பனிமலர். என்னவெல்லாம் சொல்லுகிறான் என் மீது சிறு நம்பிக்கை கூட இல்லையா இவனுக்கு என்று எண்ணி கண்ணீர் விட்டு கொண்டிருந்தவளை கலைத்தது காலடி ஓசையும் பேச்சிக்குரலும் இங்கு தான் வருகிறார்கள் என்று அறிந்து வேகமாக குளியல் அறை புகுந்து கதவை மூடி அதன் மீதே சாய்ந்து நின்றாள் பனிமலர்.
குளியல் அறை கதவு தட்டும் ஓசையில் இதே வரேன் என்று கூறி வேகமாக முகம் கழுவி துடைத்து வெளியே வந்தவளை அங்கிருந்தவர்கள் அழைத்து சென்று எண்ணெய் நலங்கு வைத்து அதன் பிறகு குளித்து வந்தவளுக்கு மணப்பெண் அலங்காரம் செய்து இருந்தனர்.
காலையில் நடந்தவைகளை நினைத்துக்கொண்டு இருந்தவள் தன்னையும் அறியாமல் உறங்கி இருந்தாள்.