உருகும் சூரியன் 29
"பாப்பு டால் உனக்கு நான் எவ்வளவு பெரிய மாப்பிள்ளை பார்த்து வச்சிருந்தேன் நீ என்னடா போயும் போயும் இந்த சிடுமூஞ்சிக்காரனை கல்யாணம் பண்ணிட்ட" என்று சோகமாக கேட்டவனை பார்த்து பல்லை கடித்தான் சூர்யா.
"டேய் உன்னை யாருடா அழைச்சது முதலில் வெளியே போடா" என்று தன் கோபத்தை காட்டமுடியாமல் கை முஷ்டியை இறுக்கி தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு பேசினான் சூர்யா.
" அடேய் உன் கல்யாணத்திற்கு நான் வரலை என் பாப்பு டால் கல்யாணத்திற்கு வந்து இருக்கேன். என்னை பத்திரிகை வைத்து அழைச்சா தான் நான் வரனும் இல்லை. என் பாப்பு டால் கல்யாணத்தை முன்னாள் நின்று செய்யவேண்டிய உரிமை எனக்கு இருக்கு." இனி இப்படி ஓவரா துள்ளதடா அப்புறம் சோதாரம் அதிகம் ஆகும் உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன்" என்றான் நக்கல் சிரிப்புடன் ஆகாஷ்.
" ஏய் என்னடா ஓவரா பேசிட்டு இருக்க இவ்வளவு பேர் இருக்காங்களே என்று அமைதியா இருந்தா இஷ்டத்திற்கு பேசிட்டு இருக்க என்னடா சோதாரம் ஆகும்" என்றான் சூர்யா.
" அது இப்ப சொல்ல முடியாதுடா நீயே கூடிய விரைவில் லைவாக பார்ப்படா" என்று சொன்னவன் "என்ன பாப்பு டால் நான் சொன்னது சரிதானே" என்றான் புன்னகையுடன்
அதுவரை அமைதியாக இருந்த பனிமலரின் முகம் இப்போது புன்னகையுடன் " செய்திட்டா பேச்சு ஆக்கு நீ சொன்ன பிறகு செய்யாமல் இருப்போனா" என்றாள் பனிமலர்.
" ஏய் என்னடி இரண்டு பேரும் சேர்ந்து ஓவரா பில்டப் கொடுத்துட்டு இருக்கிங்க நான் நினைச்சா இரண்டு பேரையும் என்ன பண்ணுவேன் தெரியுமா?..." என்றான் சூர்யா.
"ஹலோ சார் அதெல்லாம் க மு இப்ப க பி" என்றாள் பனிமலர்.
சூர்யா அவள் சொன்னது புரியாமல் "என்னடி சொன்ன திரும்ப சொல்லு அது என்ன க மு க பி" என்றான்.
" ஆக்கு எப்படிடா இது கூட தெரியாமல் இவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேனாக இருக்கார் உன் பிரண்ட்" என்றாள் பனிமலர்.
" அவன் அப்படி தான் பாப்பு டால் குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் பிஸ்னஸ் பிஸ்னஸ் என்று இருப்பான். நம்பலை மாதிரி யூத் பேசுற பாஷை புரியாது" என்று புன்னகை செய்தான் ஆகாஷ்.
" ஏய் என்ன ரெண்டு பேரும் பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்கிங்க" என்று பல்லை கடித்தான் சூர்யா.
" ஹலோ சார் புரியலைனா என்ன என்று கேட்கனும் அதை விட்டுவிட்டு பைத்தியம் என்று சொல்லக்கூடாது.
க மு என்றால் கல்யாணத்திற்கு முன்பு க பி என்றால் கல்யாணத்திற்கு பின்பு என்று அர்த்தம். நான் இப்ப மிஸ்ஸஸ் சூர்யபிரகாஷ் அதனால் என்னையும் என் பிரண்டையும் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது" என்றாள் புன்னகையுடன் பனிமலர்.
" சூப்பர் பாப்பு டால் உன்னை பத்தி சாருக்கு நான் ரொம்ப வருஷத்திற்கு முன் சொன்னது எல்லாம் மறந்து போச்சு போல அதான் துள்ளுறான் இனி லைவாக காட்டிடுடா பாப்பு" என்றான்.
" ஓகே ஓகே" என்றாள் பனிமலர்.
சூர்யா கோபமாக பேச ஆரம்பிக்கும் முன்
"ஏன்டா இவ்வளவு பேர் நின்னுட்டு இருக்காங்க நீங்க ஜாலியாக பேசிட்டு இருக்கிங்க. அப்புறம் ஃபிரியா இருக்கும் போது உங்க அரட்டையை தொடங்குங்க" என்று வந்தார் ஆகாஷின் அம்மா உடன் ஆகாஷ் தந்தையும் கோபி மாலினி ஹரி விஷால் எல்லோரும் இருந்தனர்.
அதன் பின் அனைவரும் நின்று புகைப்படம் எடுக்க நிற்க ஹரி விஷால் ஆகாஷ் மூவரும் பனிமலர் அருகில் நிற்க சண்டை போட மாலினி தான் மூவரை ஒவ்வொருவராக நின்று புகைப்படம் எடுக்க வைத்தார். ஹரி பனிமலர் பக்கத்தில் நின்ற போது ஆகாஷ் சூர்யாவின் பக்கத்தில் நின்று அவன் மேல் கையை போட்டு கொண்டு நின்றான்.
சூர்யா ஆகாஷ்சை முறைத்து மெல்லிய குரலில் "டேய் கையை எடுத்திட்டு தூரமா போய் நில்லுடா" என்றான்.
"டேய் மச்சான் நாம இப்ப நெருங்கிய சொந்தமாகிட்டோம் இனி இப்படி தான் இருக்கனும்" என்றான் ஆகாஷ்.
போட்டோ எடுப்பவர் "சார் கொஞ்சம் நேராக பாருங்க" என்று குரல் கொடுத்ததும் நேராக நின்று கொண்டனர்.
மேலும் குடும்பத்தினர் உடன் நின்று புகைப்படம் எடுத்து முடித்து உணவு உண்ண சென்றனர். அங்கும் புகைப்படம் எடுப்பவர் வந்துவிட இப்போது ஆகாஷ் ஹரி விஷால் சாருமதி எல்லாம் சேர்ந்து சூர்யா பனிமலர் இருவரையும் ஒரு வழி செய்தனர்.
பனிமலரின் பார்வை தன் நண்பியை தேடியது. சற்று தொலைவில் தன் குடும்பத்தினர் உடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள் தமிழ். அவளின் பார்வை பனிமலர் மீது தான் இருந்தது.
பனிமலருக்கு கண்கள் கலங்கின இந்த திருமணம் தன்னையும் தமிழையும் பிரித்து விடுமோ என்ற பயம் அவளின் மனதை வறுத்திக்கொண்டு இருக்கிறது. . அவளின் வறுத்தத்திற்கு காரணமான பேச்சு இப்போதும் அவளின் செவியில் எதிரொலித்துக்கொண்டு இருக்கிறதே.
"இன்னைக்கு தான் கடைசியாக இருக்கனும் நீ அவங்க கிட்ட பேசுறது நாளையிலிருந்து அவங்க உன் பக்கம் வந்தா உனக்கு எதுவும் ஆகாது ஆனால் அவங்களுக்கு என்னவென்றாலும் ஆகலாம் என்றானே" என்று அவன் கூறியதை நினைத்து உண்ணாமல் உணவை அலைந்து கொண்டு இருந்தவளின் காதோரம்
"மேடம் அதுக்குள்ள கனவு காண போயிட்டிங்களா அதை நைட் நினைவிலேயே பார்க்கலாம் இப்ப சாப்பிடுங்க நிறைய வேலை இருக்கு" என்றான் சூர்யா.
பனிமலர் சூர்யாவை முறைத்து பார்த்தாள்.
"அத்தானை அப்புறம் பார்க்கலாம் சாப்பிட்டாச்சினா வா முக்கியமான வேலை இருக்கு மாடியில் எல்லாம் ரெடியாக இருக்கு" என்று கண்சிமிட்டலுடன் சூர்யா கூறியதும் பனிமலரின் உடலில் வேர்வை முத்துக்கள் பூத்தன.
அவளின் உடலில் மெல்லிய நடுக்கமும் வர அதன் பிறகு ஒரு பருக்கை கூட உண்ணமுடியாமல் அமர்ந்து இருந்தாள்.
அவளின் கை பிடித்து எழுப்பியவன் வா என்று இழுத்து சென்றான். அவனின் இழப்புக்கு அவன் பின்னால் சென்றவள் "பிளீஸ் நான் எங்கேயும் வரலை நீங்க போய் வாங்க" மெல்லிய தடுமாற்றத்துடன் கூறினாள் பனிமலர்.
"என்னது நான் மட்டும் போகனுமா?... நீயில்லாமல் நான் மட்டும் போய் என்ன பண்ணுறது" என்றவன் அவளின் கையை பிடித்து நீரில் கழுவியவன் தன் கையில் இருந்த கர்சீப் கொண்டு அவள் கையை துடைத்துவிட்டு" வா" என்று மீண்டும் கை பிடித்து அழைத்து சென்றான்.
அவன் விடமாட்டான் என்று அறிந்தவள் கண்கள் தன் நண்பியை தேடியது. அவளின் மனதை அறிந்தவள் போல அவளை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தாள் தமிழ். அவள் பின் சாருமதியும் மகளை அழைத்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தாள்.
"சித்து" என்ற அழைப்பில் வேகமாக சென்று கொண்டு இருந்த சூர்யா நின்றான். காருண்யா வேகமாக வந்து சூர்யாவை கட்டிக்கொண்டு "சித்து நீயும் சித்தியும் எங்க போறீங்க?..." என்றாள்.
சூர்யாவின் பார்வை சாருமதி மீது படிந்து பின் காருண்யாவை பார்த்து "அம்மு நானும் சித்தியும் மாடியில் போட்டோ சூட் எடுக்கப்போறோம்" என்றான்.
"போட்டோ எடுக்க நானும் வரேன் சித்து" என்றாள் காருண்யா.
" அம்மு காலையில் சீக்கிரம் எழுந்த இல்லையா முகம் எப்படி இருக்கு பார் இப்படியே போட்டோ எடுத்தா நல்லா இருக்காது அதனால் இப்ப போய் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வாடா ஈவினிங் நிறைய போட்டோ எடுக்கலாம்" என்று சூர்யா சொல்லவும்
" சரி சித்து" என்று கூறிய காருண்யா தாயிடம் " அம்மா வா எனக்கு தூக்கம் வருது" என்று கூறி அழைத்து சென்றாள்.
அவர்கள் சென்ற பின் சூர்யாவின் பார்வை தமிழை துளைத்தது. தமிழின் கையுடன் பனிமலரின் கை இணைந்து இருப்பதை கண்டவன் தமிழை பார்த்து "உனக்கு வேற வேலையே இல்லையா?... எதுக்கு இப்ப இவள் கையை பிடித்து இருக்க இப்ப நாங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி இப்ப கூட எங்களுக்கு பிரைவசி கிடையாதா?...."
"இன்னைக்கு கோபப்படக்கூடாது என்று அமைதியா பேசிட்டு இருக்கேன் என்னை கோபப்பட வைக்காமல் அங்க உன் ஆளு பெண்ணுங்ககிட்ட கடலை போட்டுட்டு இருக்கான் பாரு அவனை கவனி" என்று கூறியவன் இருவர் கையையும் விளக்கி விட்டு பனிமலரை அழைத்துக்கொண்டு லிப்ட் நோக்கி சென்றான்.
போகும் அவர்களையே பார்த்த தமிழுக்கு அப்போது தான் அவன் சொன்ன உன் ஆளு என்பது நினைவில் வர அப்ப எல்லாமே தெரிந்து வைத்துக்கொண்டு தான் பிளான் போட்டு கல்யாணம் பண்ணி இருக்கான். ஒரு வேளை எழில்நிலாவை இவன் கடத்தி இருப்பானோ என்ற எண்ணம் வந்ததும் விதிர்விதித்து போனாள் தமிழ்.
அய்யோ அப்ப இவன் எழில்நிலாவை எதாவது பண்ணிட்டானோ என்ற பயம் தோன்றவும் வேகமாக ஆகாஷ் இருக்கும் இடம் சென்றாள். ஆகாஷ் இரண்டு பெண்களிடம் பேசிக்கொண்டு இருந்தவன் தமிழ் அவன் அருகில் வந்ததை கண்டதும்
"ஏய் வா வா தமிழ்" என்று அவளின் கைபிடித்து அந்த பெண்களிடம் "நான் சொன்னேன் இல்லையா என் ஆளு தமிழ் இவள் தான்" என்றான் ஆகாஷ்.
அதை கேட்ட தமிழுக்கு கோபம் வந்தது அவனும் உன் ஆளு என்று சொல்லிட்டு போறான் இவனும் என் ஆளு என்கிறான் என்ன நினைச்சுட்டு இருக்கானுங்க என்று நினைத்தவள் தன் கோபத்தை எல்லாம் அவனிடம் காட்ட அவனின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள் தமிழ்.
"அம்மாமா...." என்று ஆகாஷ் அலறவும் இதுவரை அவனிடம் பேசிக்கொண்டு இருந்த பெண்கள் பயந்து அங்கிருந்து வேகமாக சென்றனர்.
"ஏய் எதுக்குடி என்னை குட்டின?... என்றான் வலியில் தலையை தோய்த்துக்கொண்டே ஆகாஷ்.
" உன் பிரண்ட் எப்படி பட்டவன்?..." என்றாள் தமிழ்.
" ஏய் நான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் நீ எதுக்கு என் பிரண்டை பத்தி கேட்கிற" என்றான். ஆகாஷ்.
" டேய் ஒழுங்கா பதில் சொல்லு இதில் ரெண்டு பெண்ணுங்க வாழ்க்கை அடங்கி இருக்கு உன் பிரண்ட் கேரக்டர் எப்படி?... "என்றாள்.
" ரெண்டு பெண்ணுங்களா யாருடி அது?... " என்றான் ஆகாஷ்.
" டேய் நான் கேட்பதற்கு பதில் சொல்லு பெண்ணுங்க விசயத்தில் அவன் எப்படி பட்டவன்?... என்றாள் கோபமாக தமிழ்.
"ஏய் என்னடி இப்படியெல்லாம் கேட்கிற அவன் அப்படி பட்டவன் இல்லை பெண்ணுங்க கிட்ட அதிகமாக கூட பேசமாட்டான்டி எதுக்கு இப்படி எல்லாம் கேட்கிற" என்றான்.
"உன்னை பழிவாங்க அவன் பிளான் பண்ணி எழில்நிலாவை கடத்திட்டு பனிமலரை கல்யாணம் பண்ணி இருக்கான் என்று தோன்றுது என்றாள் தமிழ்.
"பாப்பு டால் உனக்கு நான் எவ்வளவு பெரிய மாப்பிள்ளை பார்த்து வச்சிருந்தேன் நீ என்னடா போயும் போயும் இந்த சிடுமூஞ்சிக்காரனை கல்யாணம் பண்ணிட்ட" என்று சோகமாக கேட்டவனை பார்த்து பல்லை கடித்தான் சூர்யா.
"டேய் உன்னை யாருடா அழைச்சது முதலில் வெளியே போடா" என்று தன் கோபத்தை காட்டமுடியாமல் கை முஷ்டியை இறுக்கி தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு பேசினான் சூர்யா.
" அடேய் உன் கல்யாணத்திற்கு நான் வரலை என் பாப்பு டால் கல்யாணத்திற்கு வந்து இருக்கேன். என்னை பத்திரிகை வைத்து அழைச்சா தான் நான் வரனும் இல்லை. என் பாப்பு டால் கல்யாணத்தை முன்னாள் நின்று செய்யவேண்டிய உரிமை எனக்கு இருக்கு." இனி இப்படி ஓவரா துள்ளதடா அப்புறம் சோதாரம் அதிகம் ஆகும் உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன்" என்றான் நக்கல் சிரிப்புடன் ஆகாஷ்.
" ஏய் என்னடா ஓவரா பேசிட்டு இருக்க இவ்வளவு பேர் இருக்காங்களே என்று அமைதியா இருந்தா இஷ்டத்திற்கு பேசிட்டு இருக்க என்னடா சோதாரம் ஆகும்" என்றான் சூர்யா.
" அது இப்ப சொல்ல முடியாதுடா நீயே கூடிய விரைவில் லைவாக பார்ப்படா" என்று சொன்னவன் "என்ன பாப்பு டால் நான் சொன்னது சரிதானே" என்றான் புன்னகையுடன்
அதுவரை அமைதியாக இருந்த பனிமலரின் முகம் இப்போது புன்னகையுடன் " செய்திட்டா பேச்சு ஆக்கு நீ சொன்ன பிறகு செய்யாமல் இருப்போனா" என்றாள் பனிமலர்.
" ஏய் என்னடி இரண்டு பேரும் சேர்ந்து ஓவரா பில்டப் கொடுத்துட்டு இருக்கிங்க நான் நினைச்சா இரண்டு பேரையும் என்ன பண்ணுவேன் தெரியுமா?..." என்றான் சூர்யா.
"ஹலோ சார் அதெல்லாம் க மு இப்ப க பி" என்றாள் பனிமலர்.
சூர்யா அவள் சொன்னது புரியாமல் "என்னடி சொன்ன திரும்ப சொல்லு அது என்ன க மு க பி" என்றான்.
" ஆக்கு எப்படிடா இது கூட தெரியாமல் இவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேனாக இருக்கார் உன் பிரண்ட்" என்றாள் பனிமலர்.
" அவன் அப்படி தான் பாப்பு டால் குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் பிஸ்னஸ் பிஸ்னஸ் என்று இருப்பான். நம்பலை மாதிரி யூத் பேசுற பாஷை புரியாது" என்று புன்னகை செய்தான் ஆகாஷ்.
" ஏய் என்ன ரெண்டு பேரும் பைத்தியம் மாதிரி உளறிட்டு இருக்கிங்க" என்று பல்லை கடித்தான் சூர்யா.
" ஹலோ சார் புரியலைனா என்ன என்று கேட்கனும் அதை விட்டுவிட்டு பைத்தியம் என்று சொல்லக்கூடாது.
க மு என்றால் கல்யாணத்திற்கு முன்பு க பி என்றால் கல்யாணத்திற்கு பின்பு என்று அர்த்தம். நான் இப்ப மிஸ்ஸஸ் சூர்யபிரகாஷ் அதனால் என்னையும் என் பிரண்டையும் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது" என்றாள் புன்னகையுடன் பனிமலர்.
" சூப்பர் பாப்பு டால் உன்னை பத்தி சாருக்கு நான் ரொம்ப வருஷத்திற்கு முன் சொன்னது எல்லாம் மறந்து போச்சு போல அதான் துள்ளுறான் இனி லைவாக காட்டிடுடா பாப்பு" என்றான்.
" ஓகே ஓகே" என்றாள் பனிமலர்.
சூர்யா கோபமாக பேச ஆரம்பிக்கும் முன்
"ஏன்டா இவ்வளவு பேர் நின்னுட்டு இருக்காங்க நீங்க ஜாலியாக பேசிட்டு இருக்கிங்க. அப்புறம் ஃபிரியா இருக்கும் போது உங்க அரட்டையை தொடங்குங்க" என்று வந்தார் ஆகாஷின் அம்மா உடன் ஆகாஷ் தந்தையும் கோபி மாலினி ஹரி விஷால் எல்லோரும் இருந்தனர்.
அதன் பின் அனைவரும் நின்று புகைப்படம் எடுக்க நிற்க ஹரி விஷால் ஆகாஷ் மூவரும் பனிமலர் அருகில் நிற்க சண்டை போட மாலினி தான் மூவரை ஒவ்வொருவராக நின்று புகைப்படம் எடுக்க வைத்தார். ஹரி பனிமலர் பக்கத்தில் நின்ற போது ஆகாஷ் சூர்யாவின் பக்கத்தில் நின்று அவன் மேல் கையை போட்டு கொண்டு நின்றான்.
சூர்யா ஆகாஷ்சை முறைத்து மெல்லிய குரலில் "டேய் கையை எடுத்திட்டு தூரமா போய் நில்லுடா" என்றான்.
"டேய் மச்சான் நாம இப்ப நெருங்கிய சொந்தமாகிட்டோம் இனி இப்படி தான் இருக்கனும்" என்றான் ஆகாஷ்.
போட்டோ எடுப்பவர் "சார் கொஞ்சம் நேராக பாருங்க" என்று குரல் கொடுத்ததும் நேராக நின்று கொண்டனர்.
மேலும் குடும்பத்தினர் உடன் நின்று புகைப்படம் எடுத்து முடித்து உணவு உண்ண சென்றனர். அங்கும் புகைப்படம் எடுப்பவர் வந்துவிட இப்போது ஆகாஷ் ஹரி விஷால் சாருமதி எல்லாம் சேர்ந்து சூர்யா பனிமலர் இருவரையும் ஒரு வழி செய்தனர்.
பனிமலரின் பார்வை தன் நண்பியை தேடியது. சற்று தொலைவில் தன் குடும்பத்தினர் உடன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள் தமிழ். அவளின் பார்வை பனிமலர் மீது தான் இருந்தது.
பனிமலருக்கு கண்கள் கலங்கின இந்த திருமணம் தன்னையும் தமிழையும் பிரித்து விடுமோ என்ற பயம் அவளின் மனதை வறுத்திக்கொண்டு இருக்கிறது. . அவளின் வறுத்தத்திற்கு காரணமான பேச்சு இப்போதும் அவளின் செவியில் எதிரொலித்துக்கொண்டு இருக்கிறதே.
"இன்னைக்கு தான் கடைசியாக இருக்கனும் நீ அவங்க கிட்ட பேசுறது நாளையிலிருந்து அவங்க உன் பக்கம் வந்தா உனக்கு எதுவும் ஆகாது ஆனால் அவங்களுக்கு என்னவென்றாலும் ஆகலாம் என்றானே" என்று அவன் கூறியதை நினைத்து உண்ணாமல் உணவை அலைந்து கொண்டு இருந்தவளின் காதோரம்
"மேடம் அதுக்குள்ள கனவு காண போயிட்டிங்களா அதை நைட் நினைவிலேயே பார்க்கலாம் இப்ப சாப்பிடுங்க நிறைய வேலை இருக்கு" என்றான் சூர்யா.
பனிமலர் சூர்யாவை முறைத்து பார்த்தாள்.
"அத்தானை அப்புறம் பார்க்கலாம் சாப்பிட்டாச்சினா வா முக்கியமான வேலை இருக்கு மாடியில் எல்லாம் ரெடியாக இருக்கு" என்று கண்சிமிட்டலுடன் சூர்யா கூறியதும் பனிமலரின் உடலில் வேர்வை முத்துக்கள் பூத்தன.
அவளின் உடலில் மெல்லிய நடுக்கமும் வர அதன் பிறகு ஒரு பருக்கை கூட உண்ணமுடியாமல் அமர்ந்து இருந்தாள்.
அவளின் கை பிடித்து எழுப்பியவன் வா என்று இழுத்து சென்றான். அவனின் இழப்புக்கு அவன் பின்னால் சென்றவள் "பிளீஸ் நான் எங்கேயும் வரலை நீங்க போய் வாங்க" மெல்லிய தடுமாற்றத்துடன் கூறினாள் பனிமலர்.
"என்னது நான் மட்டும் போகனுமா?... நீயில்லாமல் நான் மட்டும் போய் என்ன பண்ணுறது" என்றவன் அவளின் கையை பிடித்து நீரில் கழுவியவன் தன் கையில் இருந்த கர்சீப் கொண்டு அவள் கையை துடைத்துவிட்டு" வா" என்று மீண்டும் கை பிடித்து அழைத்து சென்றான்.
அவன் விடமாட்டான் என்று அறிந்தவள் கண்கள் தன் நண்பியை தேடியது. அவளின் மனதை அறிந்தவள் போல அவளை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தாள் தமிழ். அவள் பின் சாருமதியும் மகளை அழைத்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தாள்.
"சித்து" என்ற அழைப்பில் வேகமாக சென்று கொண்டு இருந்த சூர்யா நின்றான். காருண்யா வேகமாக வந்து சூர்யாவை கட்டிக்கொண்டு "சித்து நீயும் சித்தியும் எங்க போறீங்க?..." என்றாள்.
சூர்யாவின் பார்வை சாருமதி மீது படிந்து பின் காருண்யாவை பார்த்து "அம்மு நானும் சித்தியும் மாடியில் போட்டோ சூட் எடுக்கப்போறோம்" என்றான்.
"போட்டோ எடுக்க நானும் வரேன் சித்து" என்றாள் காருண்யா.
" அம்மு காலையில் சீக்கிரம் எழுந்த இல்லையா முகம் எப்படி இருக்கு பார் இப்படியே போட்டோ எடுத்தா நல்லா இருக்காது அதனால் இப்ப போய் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்து வாடா ஈவினிங் நிறைய போட்டோ எடுக்கலாம்" என்று சூர்யா சொல்லவும்
" சரி சித்து" என்று கூறிய காருண்யா தாயிடம் " அம்மா வா எனக்கு தூக்கம் வருது" என்று கூறி அழைத்து சென்றாள்.
அவர்கள் சென்ற பின் சூர்யாவின் பார்வை தமிழை துளைத்தது. தமிழின் கையுடன் பனிமலரின் கை இணைந்து இருப்பதை கண்டவன் தமிழை பார்த்து "உனக்கு வேற வேலையே இல்லையா?... எதுக்கு இப்ப இவள் கையை பிடித்து இருக்க இப்ப நாங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி இப்ப கூட எங்களுக்கு பிரைவசி கிடையாதா?...."
"இன்னைக்கு கோபப்படக்கூடாது என்று அமைதியா பேசிட்டு இருக்கேன் என்னை கோபப்பட வைக்காமல் அங்க உன் ஆளு பெண்ணுங்ககிட்ட கடலை போட்டுட்டு இருக்கான் பாரு அவனை கவனி" என்று கூறியவன் இருவர் கையையும் விளக்கி விட்டு பனிமலரை அழைத்துக்கொண்டு லிப்ட் நோக்கி சென்றான்.
போகும் அவர்களையே பார்த்த தமிழுக்கு அப்போது தான் அவன் சொன்ன உன் ஆளு என்பது நினைவில் வர அப்ப எல்லாமே தெரிந்து வைத்துக்கொண்டு தான் பிளான் போட்டு கல்யாணம் பண்ணி இருக்கான். ஒரு வேளை எழில்நிலாவை இவன் கடத்தி இருப்பானோ என்ற எண்ணம் வந்ததும் விதிர்விதித்து போனாள் தமிழ்.
அய்யோ அப்ப இவன் எழில்நிலாவை எதாவது பண்ணிட்டானோ என்ற பயம் தோன்றவும் வேகமாக ஆகாஷ் இருக்கும் இடம் சென்றாள். ஆகாஷ் இரண்டு பெண்களிடம் பேசிக்கொண்டு இருந்தவன் தமிழ் அவன் அருகில் வந்ததை கண்டதும்
"ஏய் வா வா தமிழ்" என்று அவளின் கைபிடித்து அந்த பெண்களிடம் "நான் சொன்னேன் இல்லையா என் ஆளு தமிழ் இவள் தான்" என்றான் ஆகாஷ்.
அதை கேட்ட தமிழுக்கு கோபம் வந்தது அவனும் உன் ஆளு என்று சொல்லிட்டு போறான் இவனும் என் ஆளு என்கிறான் என்ன நினைச்சுட்டு இருக்கானுங்க என்று நினைத்தவள் தன் கோபத்தை எல்லாம் அவனிடம் காட்ட அவனின் தலையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள் தமிழ்.
"அம்மாமா...." என்று ஆகாஷ் அலறவும் இதுவரை அவனிடம் பேசிக்கொண்டு இருந்த பெண்கள் பயந்து அங்கிருந்து வேகமாக சென்றனர்.
"ஏய் எதுக்குடி என்னை குட்டின?... என்றான் வலியில் தலையை தோய்த்துக்கொண்டே ஆகாஷ்.
" உன் பிரண்ட் எப்படி பட்டவன்?..." என்றாள் தமிழ்.
" ஏய் நான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் நீ எதுக்கு என் பிரண்டை பத்தி கேட்கிற" என்றான். ஆகாஷ்.
" டேய் ஒழுங்கா பதில் சொல்லு இதில் ரெண்டு பெண்ணுங்க வாழ்க்கை அடங்கி இருக்கு உன் பிரண்ட் கேரக்டர் எப்படி?... "என்றாள்.
" ரெண்டு பெண்ணுங்களா யாருடி அது?... " என்றான் ஆகாஷ்.
" டேய் நான் கேட்பதற்கு பதில் சொல்லு பெண்ணுங்க விசயத்தில் அவன் எப்படி பட்டவன்?... என்றாள் கோபமாக தமிழ்.
"ஏய் என்னடி இப்படியெல்லாம் கேட்கிற அவன் அப்படி பட்டவன் இல்லை பெண்ணுங்க கிட்ட அதிகமாக கூட பேசமாட்டான்டி எதுக்கு இப்படி எல்லாம் கேட்கிற" என்றான்.
"உன்னை பழிவாங்க அவன் பிளான் பண்ணி எழில்நிலாவை கடத்திட்டு பனிமலரை கல்யாணம் பண்ணி இருக்கான் என்று தோன்றுது என்றாள் தமிழ்.