உருகும் சூரியன் 19
அவர்களின் உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்தது. அவர்களின் தொழிலும் வேகமாக வளர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் போரூரில் வாடகைக்கு இடம் எடுத்து கம்பெனி வைத்து நூறு பேர் பணி செய்யும் அளவுக்கு உயர்ந்தனர்.
பனிமலர் பிறந்த மூன்று மாதம் ஆன சமயத்தில் தான் அவர்களின் பக்கத்து இடத்தில் கோபி, மாலினி வீடு கட்ட ஆரம்பித்து இருந்தார். அவர்கள் வீடு கட்டி புதுமனை புகுவிழா வைத்த போது பனிமலர் தளிர் நடை நடந்து கொண்டு இருந்தாள்.
சித்தியின் புதிய வீட்டை பார்க்க தன் தாயுடன் வந்த ஏழு வயது ஆகாஷ் காரில் இருந்து இறங்கியதும் தன்னை நோக்கி தளிர் நடை போட்டு வந்த குழந்தையை பார்த்ததும் அவனுக்கு தோன்றியது டால் போல அழகா இருக்கு என்பது தான்.
பனிமலரின் தாய் பரிமளா அவளின் பின்னிருந்து "பாப்பு வேகமாக போகக்கூடாது" என்று சொல்லிக்கொண்டு வந்தார். தாயின் பேச்சை கேட்கமாட்டேன் என்னும் விதமாக தாய் சொன்ன பிறகு இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள் பனிமலர்.
அப்போது தான் நடை பழகி கொண்டிருந்ததால் வேகமாக நடந்த குழந்தை கால் இடறி விழப்போக "பாப்பு டால்" என்று அழைத்துக்கொண்டே வேகமாக வந்து பிடித்து இருந்தான் ஆகாஷ்.
பரிமளா பிடிக்கும் முன் ஆகாஷ் பிடித்திருந்தான்.
"பாப்பு அம்மா எத்தனை முறை சொல்லியிருக்கேன் வேகமாக நடக்காதிங்க என்று இப்ப அண்ணன் பிடிக்கலை என்றாள் என்ன ஆகியிருக்கும் கீழே விழுந்து அடிப்பட்டு இருக்கும் இல்ல" என்றதும் பால்பற்கள் தெரிய சிரித்தாள் குழந்தை.
"சிரிச்சே நீ பண்ண தப்பை மறைச்சுடுவ" என்று கூறி குழந்தையை தூக்கப்போக
" ஆன்ட்டி பாப்புவை நான் கொஞ்ச நேரம் வச்சுக்க வா?..." என்று கேட்டான் ஆகாஷ்.
" தம்பி நீ மாலினி வீட்டிற்கு வந்தியா?... " என்று கேட்டார் பரிமளா.
"ஆமாம் ஆன்ட்டி மாலினி சித்தி வீட்டுக்குத்தான் வந்து இருக்கேன்" என்றான். அதுவரை காருக்கு மறுபக்கம் நின்று பேசிக்கொண்டு இருந்த மாலினியும் அவரின் அக்காவும் இவர்கள் அருகில் வந்தனர்.
ஏற்கனவே வீடு கட்ட ஆரம்பித்ததில் இருந்து மாலினியுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்க தன் அக்காவையும் ஆகாஷையும் பரிமளாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார் மாலினி.
அதன் பிறகு ஆகாஷ் தன் சித்தி வீட்டிற்கு வரும் போது எல்லாம் ஹரியை அழைத்துக்கொண்டு பனிமலர் வீட்டுக்கு வந்து அவளுடன் விளையாடி செல்வான். ஹரி பனிமலரை விட ஒரு வயது பெரியவன்.
அவளை பாப்பு டால் என்று தான் அழைப்பான் அவளை பெயர் சொல்லி அழைத்ததே இல்லை. அவர்கள் வீட்டில் அவன் ஒரே பையன். மாலினிக்கும் ஹரி பையன் என்பதால் பெண் குழந்தையான பனிமலரை ரொம்பவே பிடித்து இருந்தது ஆகாஷ்க்கு.
எழில்நிலாக்கு அப்போது மூன்று வயது நிரம்பி இருந்தது. அகிலேஷ் அப்போது தான் பிறந்து இருந்தான்.
ஆகாஷை கண்டாள் எப்போதும் ஓடி வந்து அவனின் காலை கட்டிக்கொள்வாள் பனிமலர். பேச ஆரம்பித்த போது அவன் பெயரை ஆக்கு என்று அழைக்க ஆரம்பித்தாள் இன்று வரை அந்த பெயரில் தான் அழைக்கிறாள். அண்ணா என்று அழைக்கும்படி அனைவரும் சொல்லியும் அவள் ஆக்கு என்ற அழைப்பை மாற்றவே இல்லை.
பனிமலர் நான்கு வயது ஆகியிருக்க பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தாள். எப்போதும் துரு துரு என்று இருப்பாள் பனிமலர் அவள் பின் எப்போதும் வீட்டில் உள்ளவர்கள் யாராவது சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.
எழில்நிலா விளையாடச்சென்றால் அவள் பின்னே செல்லும் பனிமலர் திரும்பி வரும்போது மண்ணில் புரண்டு உடல் முழுவதும் அழுக்காக்கி கொண்டு தான் வருவாள் பனிமலர். அதனால் அவளை விளையாட விடும்போது கருணாகரன் தாத்தா அவளின் பின்னே சுற்றிக்கொண்டு இருப்பார்.
கேசவன், பரிமளா இருவரும் கம்பெனி செல்வதால் கருணாகரன் தாத்தா குணவதி பாட்டி இல்லை என்றால் ஊர்மிளா என்று மூவரில் ஒருவர் எழில்நிலாவையும் பனிமலரையும் பள்ளி அழைத்து சென்று திரும்ப அழைத்து வருவர்.
விடுமுறை நாட்களில் அடம்பிடித்து தாய் தந்தையுடன் கம்பெனி செல்வாள் பனிமலர். அங்கும் ஓரிடத்தில் நிற்காமல் அனைவரிடமும் அது என்ன இது என்ன விசாரிப்பாள். அனைவரிடமும் இயல்பாக பழகுவாள்.
அப்படி ஒரு விடுமுறை நாளில் தந்தையின் பைக்கில் முன் பக்கம் பனிமலர் அமர்ந்திருந்தாள் பின்னால் பரிமளா அமர்ந்து கம்பெனி சென்று கொண்டு இருந்த போது கையில் சிறு குழந்தையை பிடிக்கமுடியாமல் பிடித்துக்கொண்டு தோளில் ஒரு பையையும் சுமந்து கொண்டு ரோட்டோரமாக நடந்து சென்ற பெண்ணை கண்ட பனிமலர்
"அப்பா வண்டியை நிறுத்துங்க அந்த ஆன்ட்டி கீழே விழப்போறாங்க" என்று சொல்லவும் சில அடிகள் சென்று ஓரமாக வண்டியை கேசவன் நிறுத்தினார். பனிமலர் வேகமாக வண்டியில் இருந்து இறங்கி அந்த பெண்ணை நோக்கி ஓடினாள். அதை கண்ட பரிமளாவும் வேகமாக சென்றார்.
மயங்கி கீழே சரிந்து கொண்டு இருந்த பெண்ணின் கையில் இருந்து நழுவிய குழந்தையை கையில் ஏந்தி இருந்தாள் பனிமலர். பின் வந்த பரிமளா அந்த பெண்ணை பிடித்து இருந்தார். கேசவன் தன் உணவுப்பையில் இருந்த தண்ணீரை எடுத்து வந்து அந்த பெண்ணின் முகத்தில் தெளித்து விட்டு அவளின் வாயில் புகட்ட மெல்ல மயக்கத்தில் இருந்து தெளிந்த அப்பெண்.
பெண்ணின் கண்கள் முதலில் தேடியது கையில் இருந்த குழந்தையைத்தான். அதை கண்ட பனிமலர் "பாப்பா என்கிட்ட தான் இருக்கா ஆன்ட்டி" என்று கையில் இருந்த குழந்தையை அவளிடம் கொடுத்தாள் பனிமலர்.
கையில் வாங்கிய குழந்தையை இறுக்கி அணைத்து கொண்டு கண்ணீர் விட்டாள் அப்பெண்.
அவளின் கண்ணீரை துடைத்த பனிமலர் "பாப்பா கீழே விழாமல் நான் பிடித்துவிட்டேன் ஆன்ட்டி பாப்பாவுக்கு எதுவும் ஆகலை" என்றாள் பனிமலர்.
கையெடுத்து கும்பிட்டாள் அப்பெண் பனிமலரை பார்த்து அதுவரை அமைதியாக இருந்த பரிமளா அப்பெண்ணின் கையை இறக்கி விட்டு "என்னாச்சுமா உடம்பு சரியில்லையா உன் கூட யாரையாவது கூட்டி வந்து இருக்கலாம் இல்லையா?... "என்று கேட்டார்.
அதை கேட்ட அப்பெண் கண்களில் இருந்து நீர் மேலும் வழிந்து "எனக்கு யாரும் இல்லை" என்றாள்.
"குழந்தையோட அப்பா?..." என்றார் பரிமளா தயக்கத்துடன்
" தெரியலை" என்றாள் அப்பெண்.
அதுவரை அமைதியாக நின்று இருந்த கேசவன் வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தியவர். "பரி ஆட்டோவில் கூட்டிட்டு வா கம்பெனியில் போய் பேசிக்கலாம். பச்ச குழந்தையை இப்படி ரோட்டில் வச்சு இருக்க வேண்டாம்" என்றார்.
தயங்கிய அப்பெண்ணை சமாதானம் செய்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கம்பெனி வந்தார் பரிமளா.
கம்பெனியில் அவர்களுக்கு என்று இருந்த அறைக்கு அந்த பெண்ணை அழைத்து சென்ற பரிமளா முதலில் தாங்கள் எடுத்து வந்த உணவை கொஞ்சம் தட்டில் போட்டு கொடுத்து உண்ணவைத்தார். அப்பெண் உண்ட வேகத்தை பார்த்த பரிமளா மேலும் கொஞ்சம் உணவை வைத்தார்.
உணவை உண்டு முடித்து குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்தப்பின்னே பரிமளாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் அப்பெண்.
அவளின் கையை விலக்கிவிட்டு "உன்னை பற்றி சொல்ல விருப்பம் இருந்தாள் சொல்லுமா?..." என்றதும் மடைதிறந்த வெள்ளமாக அனைத்து சொல்லினாள் அப்பெண்.
தன் பெயர் சாந்தி என்றும் பதினெட்டு வயதில் காதல் வயப்பட்டு ஊரை விட்டு ஓடுவந்து திருமணம் செய்து கொண்டு ஒரு சிறு வீடு எடுத்து இரண்டு பேரும் வேலைக்கு சென்று வாழ்ந்ததையும் குழந்தை உண்டாகிய பிறகு அவனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது இவள் குழந்தை பிறந்து ஆஸ்பத்திரியில் இருந்த போது அவன் வேறு பெண்ணுடன் ஊரைவிட்டு சென்று விட்டான்.
ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வந்த பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியில் ஒரு மாதம் கழித்த போது வீட்டு ஓனர் வந்து தன்னை அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் அப்படி இல்லை என்றால் வீட்டை விட்டு சொல்லுமாறு சொல்லவும் நான் வேலைக்கு சென்று ஒழுங்கா வீட்டு வாடகை தந்துவிடுகிறேன் என்று எவ்வளவே கூறியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பயந்து அக்கம் பக்கத்தினர் இடம் உதவிக்கு வருமாறு கேட்க அவர்களை எங்கே வீட்டை காலி செய்து விடச்சொல்லி விடுவாங்களோ என்று அனைவரும் விலகிவிட்டனர்.
இரண்டு நாளாக அந்த வீட்டு ஓனர் இரவில் வீட்டுக்கு வந்து கதவை தட்டிக்கொண்டு இருந்தார். நான் கதவை திறக்கவில்லை. நேற்று காலையில் வந்து என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டுவிட்டார். எங்கு போவது என்று தெரியாமல் சுற்றிவிட்டு ராத்திரி பிளாட்பாரத்தில் படுத்து இருந்தேன் அங்கேயும் சிலர் இரவு வந்து தொந்தரவு செய்தாங்க. அங்க இருந்த ஒரு வயசான அம்மா தான் ராத்திரி அவங்க கூட படுக்க வைத்துக்கொண்டாங்க காலையில் அவங்க இங்க இருக்காதமா பொல்லாதவங்க உன்னை தூக்கிட்டு போயிடுவாங்க வேற எங்காவது போய்விடு என்று சொன்னாங்க அதன் பிறகு எங்க போறது என்று தெரியாமல் ரோட்டில் போயிட்டு இருந்த அப்ப தான் நீங்க வந்தீங்க மேடம் என்றாள் சாந்தி.
அனைத்தும் கேட்ட பரிமளாவுக்கு சாந்தியை கண்டு மனம் இரக்கம் கொண்டது பின் "உன் ஊருக்கு கூட்டிட்டு போய் விடவா?..." என்று பரிமளா கேட்கவும்.
பயத்துடன் "வேண்டாம் மேடம் நான் ஊருக்கு போகலை போனா என்னையும் என் குழந்தையையும் கொன்னுடுவாங்க மேடம். நான் இங்கயே எதாவது வேலை தேடிட்டு எங்காவது தங்கிக்கிறேன்" என்றாள் சாந்தி.
"சரி நீ எங்கேவும் போகவேண்டாம்" என்று கூறிய பரிமளா "இப்ப என்கூட வா" என்று அழைத்துக்கொண்டு அங்கிருந்த வேறு பகுதியில் இருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்றார்.
அங்கு சில குழந்தைகள் விளையாடிக்கொண்டும் சில குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருந்தனர். இரண்டு பெண்கள் குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருக்க அங்கு தான் பனிமலரும் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள்.
அங்கிருந்த உள் அறைக்கு அழைத்து சென்ற பரிமளா "இங்க கொஞ்ச நேரம் படுத்து தூங்கு சாந்தி குழந்தையை இவங்க பார்த்துப்பாங்க" என்று சொல்லி விட்டு சென்றார்.
பரிமளா கேசவனிடம் அனைத்து சொல்ல இருவரும் பேசி ஒரு முடிவை எடுத்துவிட்டு சாந்தி எழுவதற்காக காத்து இருந்தனர். சாந்தி எழுந்ததும் அங்கு வேலை செய்யும் ஒரு அம்மாவை காட்டி இவங்களுக்கு யாரும் இல்லை நீ அவங்க வீட்டில் இருந்துக்க இங்கேயே வேலை செய் என்று கூறவும் கேசவன் பரிமளா காலில் விழுந்து விட்டாள் சாந்தி.
அதன் பிறகு சாந்தி எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை நன்றாக சென்றது. தான் நன்றாக இருப்பதற்கு காரணம் பனிமலர் என்று சாந்திக்கு அவளின் மீது மிகுந்த நன்றியுணர்வும் பாசமும் இருந்தது.
அவர்களின் உழைப்பிற்கு நல்ல பலன் கிடைத்தது. அவர்களின் தொழிலும் வேகமாக வளர்ந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் போரூரில் வாடகைக்கு இடம் எடுத்து கம்பெனி வைத்து நூறு பேர் பணி செய்யும் அளவுக்கு உயர்ந்தனர்.
பனிமலர் பிறந்த மூன்று மாதம் ஆன சமயத்தில் தான் அவர்களின் பக்கத்து இடத்தில் கோபி, மாலினி வீடு கட்ட ஆரம்பித்து இருந்தார். அவர்கள் வீடு கட்டி புதுமனை புகுவிழா வைத்த போது பனிமலர் தளிர் நடை நடந்து கொண்டு இருந்தாள்.
சித்தியின் புதிய வீட்டை பார்க்க தன் தாயுடன் வந்த ஏழு வயது ஆகாஷ் காரில் இருந்து இறங்கியதும் தன்னை நோக்கி தளிர் நடை போட்டு வந்த குழந்தையை பார்த்ததும் அவனுக்கு தோன்றியது டால் போல அழகா இருக்கு என்பது தான்.
பனிமலரின் தாய் பரிமளா அவளின் பின்னிருந்து "பாப்பு வேகமாக போகக்கூடாது" என்று சொல்லிக்கொண்டு வந்தார். தாயின் பேச்சை கேட்கமாட்டேன் என்னும் விதமாக தாய் சொன்ன பிறகு இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள் பனிமலர்.
அப்போது தான் நடை பழகி கொண்டிருந்ததால் வேகமாக நடந்த குழந்தை கால் இடறி விழப்போக "பாப்பு டால்" என்று அழைத்துக்கொண்டே வேகமாக வந்து பிடித்து இருந்தான் ஆகாஷ்.
பரிமளா பிடிக்கும் முன் ஆகாஷ் பிடித்திருந்தான்.
"பாப்பு அம்மா எத்தனை முறை சொல்லியிருக்கேன் வேகமாக நடக்காதிங்க என்று இப்ப அண்ணன் பிடிக்கலை என்றாள் என்ன ஆகியிருக்கும் கீழே விழுந்து அடிப்பட்டு இருக்கும் இல்ல" என்றதும் பால்பற்கள் தெரிய சிரித்தாள் குழந்தை.
"சிரிச்சே நீ பண்ண தப்பை மறைச்சுடுவ" என்று கூறி குழந்தையை தூக்கப்போக
" ஆன்ட்டி பாப்புவை நான் கொஞ்ச நேரம் வச்சுக்க வா?..." என்று கேட்டான் ஆகாஷ்.
" தம்பி நீ மாலினி வீட்டிற்கு வந்தியா?... " என்று கேட்டார் பரிமளா.
"ஆமாம் ஆன்ட்டி மாலினி சித்தி வீட்டுக்குத்தான் வந்து இருக்கேன்" என்றான். அதுவரை காருக்கு மறுபக்கம் நின்று பேசிக்கொண்டு இருந்த மாலினியும் அவரின் அக்காவும் இவர்கள் அருகில் வந்தனர்.
ஏற்கனவே வீடு கட்ட ஆரம்பித்ததில் இருந்து மாலினியுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்க தன் அக்காவையும் ஆகாஷையும் பரிமளாவிற்கு அறிமுகம் செய்து வைத்தார் மாலினி.
அதன் பிறகு ஆகாஷ் தன் சித்தி வீட்டிற்கு வரும் போது எல்லாம் ஹரியை அழைத்துக்கொண்டு பனிமலர் வீட்டுக்கு வந்து அவளுடன் விளையாடி செல்வான். ஹரி பனிமலரை விட ஒரு வயது பெரியவன்.
அவளை பாப்பு டால் என்று தான் அழைப்பான் அவளை பெயர் சொல்லி அழைத்ததே இல்லை. அவர்கள் வீட்டில் அவன் ஒரே பையன். மாலினிக்கும் ஹரி பையன் என்பதால் பெண் குழந்தையான பனிமலரை ரொம்பவே பிடித்து இருந்தது ஆகாஷ்க்கு.
எழில்நிலாக்கு அப்போது மூன்று வயது நிரம்பி இருந்தது. அகிலேஷ் அப்போது தான் பிறந்து இருந்தான்.
ஆகாஷை கண்டாள் எப்போதும் ஓடி வந்து அவனின் காலை கட்டிக்கொள்வாள் பனிமலர். பேச ஆரம்பித்த போது அவன் பெயரை ஆக்கு என்று அழைக்க ஆரம்பித்தாள் இன்று வரை அந்த பெயரில் தான் அழைக்கிறாள். அண்ணா என்று அழைக்கும்படி அனைவரும் சொல்லியும் அவள் ஆக்கு என்ற அழைப்பை மாற்றவே இல்லை.
பனிமலர் நான்கு வயது ஆகியிருக்க பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தாள். எப்போதும் துரு துரு என்று இருப்பாள் பனிமலர் அவள் பின் எப்போதும் வீட்டில் உள்ளவர்கள் யாராவது சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.
எழில்நிலா விளையாடச்சென்றால் அவள் பின்னே செல்லும் பனிமலர் திரும்பி வரும்போது மண்ணில் புரண்டு உடல் முழுவதும் அழுக்காக்கி கொண்டு தான் வருவாள் பனிமலர். அதனால் அவளை விளையாட விடும்போது கருணாகரன் தாத்தா அவளின் பின்னே சுற்றிக்கொண்டு இருப்பார்.
கேசவன், பரிமளா இருவரும் கம்பெனி செல்வதால் கருணாகரன் தாத்தா குணவதி பாட்டி இல்லை என்றால் ஊர்மிளா என்று மூவரில் ஒருவர் எழில்நிலாவையும் பனிமலரையும் பள்ளி அழைத்து சென்று திரும்ப அழைத்து வருவர்.
விடுமுறை நாட்களில் அடம்பிடித்து தாய் தந்தையுடன் கம்பெனி செல்வாள் பனிமலர். அங்கும் ஓரிடத்தில் நிற்காமல் அனைவரிடமும் அது என்ன இது என்ன விசாரிப்பாள். அனைவரிடமும் இயல்பாக பழகுவாள்.
அப்படி ஒரு விடுமுறை நாளில் தந்தையின் பைக்கில் முன் பக்கம் பனிமலர் அமர்ந்திருந்தாள் பின்னால் பரிமளா அமர்ந்து கம்பெனி சென்று கொண்டு இருந்த போது கையில் சிறு குழந்தையை பிடிக்கமுடியாமல் பிடித்துக்கொண்டு தோளில் ஒரு பையையும் சுமந்து கொண்டு ரோட்டோரமாக நடந்து சென்ற பெண்ணை கண்ட பனிமலர்
"அப்பா வண்டியை நிறுத்துங்க அந்த ஆன்ட்டி கீழே விழப்போறாங்க" என்று சொல்லவும் சில அடிகள் சென்று ஓரமாக வண்டியை கேசவன் நிறுத்தினார். பனிமலர் வேகமாக வண்டியில் இருந்து இறங்கி அந்த பெண்ணை நோக்கி ஓடினாள். அதை கண்ட பரிமளாவும் வேகமாக சென்றார்.
மயங்கி கீழே சரிந்து கொண்டு இருந்த பெண்ணின் கையில் இருந்து நழுவிய குழந்தையை கையில் ஏந்தி இருந்தாள் பனிமலர். பின் வந்த பரிமளா அந்த பெண்ணை பிடித்து இருந்தார். கேசவன் தன் உணவுப்பையில் இருந்த தண்ணீரை எடுத்து வந்து அந்த பெண்ணின் முகத்தில் தெளித்து விட்டு அவளின் வாயில் புகட்ட மெல்ல மயக்கத்தில் இருந்து தெளிந்த அப்பெண்.
பெண்ணின் கண்கள் முதலில் தேடியது கையில் இருந்த குழந்தையைத்தான். அதை கண்ட பனிமலர் "பாப்பா என்கிட்ட தான் இருக்கா ஆன்ட்டி" என்று கையில் இருந்த குழந்தையை அவளிடம் கொடுத்தாள் பனிமலர்.
கையில் வாங்கிய குழந்தையை இறுக்கி அணைத்து கொண்டு கண்ணீர் விட்டாள் அப்பெண்.
அவளின் கண்ணீரை துடைத்த பனிமலர் "பாப்பா கீழே விழாமல் நான் பிடித்துவிட்டேன் ஆன்ட்டி பாப்பாவுக்கு எதுவும் ஆகலை" என்றாள் பனிமலர்.
கையெடுத்து கும்பிட்டாள் அப்பெண் பனிமலரை பார்த்து அதுவரை அமைதியாக இருந்த பரிமளா அப்பெண்ணின் கையை இறக்கி விட்டு "என்னாச்சுமா உடம்பு சரியில்லையா உன் கூட யாரையாவது கூட்டி வந்து இருக்கலாம் இல்லையா?... "என்று கேட்டார்.
அதை கேட்ட அப்பெண் கண்களில் இருந்து நீர் மேலும் வழிந்து "எனக்கு யாரும் இல்லை" என்றாள்.
"குழந்தையோட அப்பா?..." என்றார் பரிமளா தயக்கத்துடன்
" தெரியலை" என்றாள் அப்பெண்.
அதுவரை அமைதியாக நின்று இருந்த கேசவன் வழியில் சென்ற ஆட்டோவை நிறுத்தியவர். "பரி ஆட்டோவில் கூட்டிட்டு வா கம்பெனியில் போய் பேசிக்கலாம். பச்ச குழந்தையை இப்படி ரோட்டில் வச்சு இருக்க வேண்டாம்" என்றார்.
தயங்கிய அப்பெண்ணை சமாதானம் செய்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கம்பெனி வந்தார் பரிமளா.
கம்பெனியில் அவர்களுக்கு என்று இருந்த அறைக்கு அந்த பெண்ணை அழைத்து சென்ற பரிமளா முதலில் தாங்கள் எடுத்து வந்த உணவை கொஞ்சம் தட்டில் போட்டு கொடுத்து உண்ணவைத்தார். அப்பெண் உண்ட வேகத்தை பார்த்த பரிமளா மேலும் கொஞ்சம் உணவை வைத்தார்.
உணவை உண்டு முடித்து குழந்தைக்கு பால் கொடுத்து உறங்க வைத்தப்பின்னே பரிமளாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் அப்பெண்.
அவளின் கையை விலக்கிவிட்டு "உன்னை பற்றி சொல்ல விருப்பம் இருந்தாள் சொல்லுமா?..." என்றதும் மடைதிறந்த வெள்ளமாக அனைத்து சொல்லினாள் அப்பெண்.
தன் பெயர் சாந்தி என்றும் பதினெட்டு வயதில் காதல் வயப்பட்டு ஊரை விட்டு ஓடுவந்து திருமணம் செய்து கொண்டு ஒரு சிறு வீடு எடுத்து இரண்டு பேரும் வேலைக்கு சென்று வாழ்ந்ததையும் குழந்தை உண்டாகிய பிறகு அவனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது இவள் குழந்தை பிறந்து ஆஸ்பத்திரியில் இருந்த போது அவன் வேறு பெண்ணுடன் ஊரைவிட்டு சென்று விட்டான்.
ஆஸ்பத்திரியில் இருந்து வீடு வந்த பிறகு அக்கம் பக்கத்தினர் உதவியில் ஒரு மாதம் கழித்த போது வீட்டு ஓனர் வந்து தன்னை அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் அப்படி இல்லை என்றால் வீட்டை விட்டு சொல்லுமாறு சொல்லவும் நான் வேலைக்கு சென்று ஒழுங்கா வீட்டு வாடகை தந்துவிடுகிறேன் என்று எவ்வளவே கூறியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. பயந்து அக்கம் பக்கத்தினர் இடம் உதவிக்கு வருமாறு கேட்க அவர்களை எங்கே வீட்டை காலி செய்து விடச்சொல்லி விடுவாங்களோ என்று அனைவரும் விலகிவிட்டனர்.
இரண்டு நாளாக அந்த வீட்டு ஓனர் இரவில் வீட்டுக்கு வந்து கதவை தட்டிக்கொண்டு இருந்தார். நான் கதவை திறக்கவில்லை. நேற்று காலையில் வந்து என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டுவிட்டார். எங்கு போவது என்று தெரியாமல் சுற்றிவிட்டு ராத்திரி பிளாட்பாரத்தில் படுத்து இருந்தேன் அங்கேயும் சிலர் இரவு வந்து தொந்தரவு செய்தாங்க. அங்க இருந்த ஒரு வயசான அம்மா தான் ராத்திரி அவங்க கூட படுக்க வைத்துக்கொண்டாங்க காலையில் அவங்க இங்க இருக்காதமா பொல்லாதவங்க உன்னை தூக்கிட்டு போயிடுவாங்க வேற எங்காவது போய்விடு என்று சொன்னாங்க அதன் பிறகு எங்க போறது என்று தெரியாமல் ரோட்டில் போயிட்டு இருந்த அப்ப தான் நீங்க வந்தீங்க மேடம் என்றாள் சாந்தி.
அனைத்தும் கேட்ட பரிமளாவுக்கு சாந்தியை கண்டு மனம் இரக்கம் கொண்டது பின் "உன் ஊருக்கு கூட்டிட்டு போய் விடவா?..." என்று பரிமளா கேட்கவும்.
பயத்துடன் "வேண்டாம் மேடம் நான் ஊருக்கு போகலை போனா என்னையும் என் குழந்தையையும் கொன்னுடுவாங்க மேடம். நான் இங்கயே எதாவது வேலை தேடிட்டு எங்காவது தங்கிக்கிறேன்" என்றாள் சாந்தி.
"சரி நீ எங்கேவும் போகவேண்டாம்" என்று கூறிய பரிமளா "இப்ப என்கூட வா" என்று அழைத்துக்கொண்டு அங்கிருந்த வேறு பகுதியில் இருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்றார்.
அங்கு சில குழந்தைகள் விளையாடிக்கொண்டும் சில குழந்தைகள் தூங்கிக்கொண்டு இருந்தனர். இரண்டு பெண்கள் குழந்தைகளை பார்த்துக்கொண்டு இருக்க அங்கு தான் பனிமலரும் குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள்.
அங்கிருந்த உள் அறைக்கு அழைத்து சென்ற பரிமளா "இங்க கொஞ்ச நேரம் படுத்து தூங்கு சாந்தி குழந்தையை இவங்க பார்த்துப்பாங்க" என்று சொல்லி விட்டு சென்றார்.
பரிமளா கேசவனிடம் அனைத்து சொல்ல இருவரும் பேசி ஒரு முடிவை எடுத்துவிட்டு சாந்தி எழுவதற்காக காத்து இருந்தனர். சாந்தி எழுந்ததும் அங்கு வேலை செய்யும் ஒரு அம்மாவை காட்டி இவங்களுக்கு யாரும் இல்லை நீ அவங்க வீட்டில் இருந்துக்க இங்கேயே வேலை செய் என்று கூறவும் கேசவன் பரிமளா காலில் விழுந்து விட்டாள் சாந்தி.
அதன் பிறகு சாந்தி எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை நன்றாக சென்றது. தான் நன்றாக இருப்பதற்கு காரணம் பனிமலர் என்று சாந்திக்கு அவளின் மீது மிகுந்த நன்றியுணர்வும் பாசமும் இருந்தது.