உருகும் சூரியன் 14
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் கல்லூரியில் படிப்பவர்களின் திறமையை அறிய இந்த விழாவை ஏற்படும் செய்வார்கள் கல்லூரி நிர்வாகம். மாணவ மாணவிகள் தங்கள் முழு திறமையையும் காட்டி உடைகளை டிசைன் செய்து அதை அணிந்து இந்த பேஷன் சோவில் கலந்து கொண்டால் முக்கிய பேஷன் டிசைனர்கள் பெரிய கார்மெண்ட்ஸ் ஓனர்கள் இந்த விழாவிற்கு வந்து சிறந்த உடைகளை தேர்ந்தெடுப்பர். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் உடைகளின் டிசைன்களை சிலர் தங்கள் கம்பெனியில் வெளியிடவும் முன் வருவர்.
அதனால் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துவர். முதல் மூன்று ஆண்டுகள் பனிமலர், தமிழ் இருவரும் இணைந்து செய்த டிசைன்களே இவர்கள் பிரிவில் முதல் பரிசு பெற்றது. இந்த ஆண்டும் முதல் பரிசை பெறவேண்டும் என்று பனிமலர், தமிழ் இருவரும் முனைப்பாக இருந்தனர்.
இந்த ஆண்டு இந்தியாவின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான பிரகாஷ் கார்மெண்ட்ஸ் முதல் இடம் பிடிக்கும் உடையை தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று அறிவித்து இருக்க அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பாக செய்து கொண்டு இருந்தனர்.
பனிமலரும் தமிழும் இணைந்து அழகாக வடிவமைத்து இருந்தனர். அந்த உடையை தமிழ் அணிந்தால் நன்றாக இருக்கும் என்று அவளின் அளவுக்கு தைத்து முடித்து அணிந்து பார்த்த போது இருவருக்கு திருப்தியாக இருந்தது. மறுநாள் விழா நடைபெற இருந்தது.
சந்தோஷமாக உறங்கிய நண்பிகள் அதிகாலையில் ஒலித்த போன் ஒலியில் எழுந்தனர். தமிழின் போன் தான் ஒலித்தது. அவளின் மூன்றாவது அண்ணன் தான் செய்து இருந்தான். ஆன் செய்து காதில் வைத்தாள் தமிழ் எதிர் முனையில் அவளின் அண்ணன் கீழே வரும்படி சொல்லவும் இந்த நேரத்தில் என்று வேகமாக நண்பிகள் இருவரும் கீழே சென்றனர்.
முகம் முழுவதும் சோகத்துடன் நின்று இருந்தான் தமிழின் அண்ணன்.
"அண்ணா யாருக்கு என்ன ஆச்சு?..." என்று அண்ணனிடம் கேட்டவளிடம் அவன் "அத்தை" என்று சொன்ன ஒரு வார்த்தையில் அனைத்தும் விளங்கியது. நீண்ட வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த அத்தை உயிர் பிரிந்து இருக்கிறது என்று அறிந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
தன் நண்பியை அணைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்த பனிமலர் அப்போதே அந்த உடையை தன்னுடைய அளவுக்கு மாற்ற சில வேலைகளை செய்தாள்.
ஒவ்வொரு வகுப்பாக நடப்பதால் இவளின் வகுப்பு வரும் போது மாலை நான்கு ஆகியிருந்தது. அந்த நேரத்தில் தான் சூர்யா கல்லூரிக்கு வந்திருந்தான் அதற்கு முன்பு வரை அவனின் கம்பெனியில் இருந்து வந்தவர்கள் தேர்வுக்குழுவில் இருந்தனர்.
வந்தவனுக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்து முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டான் சூர்யா. அவனின் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து இருந்தவனை கண்டு முறைத்து விட்டு திரும்பினான் சூர்யா.
அவன் முறைத்தது ஆகாஷ் PMC கார்மெண்ட்ஸ் ஓனர். சூர்யபிரகாஷின் முதல் எதிரி அவன் தான் சூர்யாவின் இன்றைய நிலைக்கு காரணமானவன். படித்து வெளிநாட்டில் சென்று ஜாலியாக வாழ்க்கை வாழ வேண்டியவனை இன்று இறுகி போய் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தொழில் தொழில் என்று ஓடவைத்தவன் இந்த ஆகாஷ் தான் அவனை கண்டால் கொலைப்பண்ணு அளவுக்கு வெறி வரும் இன்றும் அந்த வெறி வந்த போதும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்து இருந்தான் சூர்யா.
மேடையில் நிகழ்ச்சி ஆரம்பிக்க ஒவ்வொருவராக வந்து தங்கள் ஆடைகளை அணிந்து நடந்து காட்டி சென்றனர். பனிமலர் நடந்து வந்தபோது அவளின் உடையின் கைப்பகுதி சற்று லூசாக இருந்ததால் சற்றே தோளில் இருந்து விலகியதால் அவளின் கழுத்து பகுதி சற்றே கீழே இறங்கியிருந்தது. அது இன்னும் அந்த உடையை அழகாக காட்டியது.
அனைவரும் வியந்து அந்த உடையை ரசித்தனர் என்றால் ஒருவன் முகம் மட்டும் கல் போல இறுகியது. பக்கத்தில் இருந்த ஆகாஷின் குரல் வேறு அவனை இன்னும் கோபம் கொள்ளச்செய்தது.
"பாப்பு டால் சூப்பர்டா" என்று மெல்லிய குரலில் ஆகாஷ் கூறவும் அவனை முறைத்தான் சூர்யா.
"என்னடா பார்வை என் பாப்பு டால் அவள்" என்று பெருமையாக தன் காலரை தூக்கி காட்டினான் ஆகாஷ்.
பல்லை கடித்து தன்னை சமன் செய்தவன் பனிமலரின் உடைக்கு மதிப்பெண் குறைத்து போட்டான் சூர்யா.
அதை கண்ட ஆகாஷ் "ஏய் ஏன்டா அந்த டிரஸ்சுக்கு என்ன குறை?..." என்றான்.
அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மேடையை பார்த்தான் சூர்யா.
அனைத்தும் முடிந்து பரிசு பெற்றவர்களை அறிவித்த போது பனிமலர் உடைக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. பனிமலர் மனம் வருத்தமாக இருந்த போதும் இயல்பாக இருந்தாள்.
இரண்டாம் பரிசு பெற்றவள் அதை கிரிஜாவிடம் கொடுத்து விட்டு வாஷ் ரூம் சென்று வருவதாக கூறி அங்கிருந்து வெளியேறி இருந்தாள் பனிமலர். சிறிது நேரத்தில் வந்த ஆகாஷ் அவளின் முன் வந்து "பாப்பு டால்" என்றதும் "ஆக்கு" என்று அவனை அணைத்துக்கொண்டாள்.
" ஏன்டா இப்படி தனியாக வந்து இருக்க உனக்கு முதல் பரிசு கிடைக்கலை என்ற வருத்தமா?...." என்றான். "இல்ல ஆக்கு தமிழ் ரொம்ப எதிர்பார்போட இருந்தா முதல் பரிசு கிடைக்கும் என்று இப்போ இல்லை என்று சொன்னால் ஏற்கனவே அத்தை இறந்ததில் வருத்தமாக இருப்பாள் இதை சொன்னாள் இன்னும் வறுத்தப்படுவாள்" என்றாள் கலங்கிய கண்களுடன்
அந்நேரம் சூர்யா அவர்களை தாண்டி சொல்ல "உனக்கு முதல் பரிசு கிடைக்காமல் செய்தவன் இவன் தான்" என்று சூர்யாவின் கை பிடித்து நிறுத்தி இருந்தான்.
" ஏய்" என்று ஆகாஷ் கையை உதறியவன் அவனை அடிக்க கையை ஓங்க இடையில் வந்து நின்றாள் பனிமலர்.
"ஏய் நகரு அவனை போனால் போகுது என்று விட்டால் ரொம்ப ஓவரா பண்ணுறான்" என்று தன் சட்டையின் கைகளை ஏற்றிக்கொண்டு நின்றான் சூர்யா.
"பாப்பு டால் நீ நகருமா இவனை இன்னைக்கு ஒரு கை பார்க்கிறேன்" என்றான் ஆகாஷ்.
இருவரும் சண்டைக்கு தயாராக ஆகாஷை கை பிடித்து " ஆக்கு என் பேச்சை கேளு நான் அவருகிட்ட பேசிக்கிறேன் நீ கொஞ்ச நேரம் தூரமாக போ" என்றாள்.
அவளின் பேச்சை தட்டாமல் கேட்டவன் சூர்யாவை முறைத்து விட்டு சற்று தூரம் தள்ளி சென்று நின்றான்.
"உங்க இரண்டு பேருக்கும் என்ன பிரச்சினை சார் அவன் நீங்க தான் எனக்கு முதல் பரிசு கிடைக்காததற்கு காரணம் என்று சொல்லுறான்?..." என்று சூர்யாவிடம் பனிமலர் கேட்க
"உன்கிட்ட காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்றான்.
"சார் நீங்க என் டிசைனில் என்ன குறை என்று சொன்னால் தானே அடுத்த முறை அந்த தவறு நடக்காமல் டிசைன் செய்யமுடியும் என்ற எண்ணத்தில் தான் கேட்கிறேன்" என்றாள் பனிமலர்.
"உன் பேச்சுக்கு உன் செயலுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கு இப்படி ஒன்னுமே தெரியாதவள் போல் பேசுனா நீ பண்ணது இல்லை என்று ஆகிவிடுமா" என்றான் சூர்யா.
பனிமலருக்கு அவன் பேசுவது ஒன்றும் புரியாமல் குழம்பியவன் "சார் நீங்க என்ன சொல்லுறீங்க என்று புரியவில்லை" என்றாள்.
" நல்லா நடிக்கவும் செய்யுற மூன்று வருஷம் இப்படி நடிச்சு தான் முதல் பரிசு வாங்கினியா, இந்த வருடம் அது என்னால் கிடைக்காமல் போனதால் என்னையும் உன் வலையில் வீழ்த்த இப்படி ஒன்னும் தெரியாதது போல நடிச்சிட்டு இருக்க" என்றான் ஏளனக்குரலில் சூர்யா.
அதை கேட்டவளுக்கு கோபம் வர "சார் எங்க திறமையில் தான் மூன்று வருடங்கள் பரிசு வாங்கி இருக்கோம். எனக்கு நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை உங்களை வலை பிடிக்க வேண்டியதும் இல்லை. உங்க கிட்ட என் உடையில் என்ன குறை கண்டுபிடிச்சிங்க என்று மட்டும் தான் கேட்டேன் அதுவும் அடுத்த முறை தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்று தான் கேட்டேன் ஆனால் நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு என்னென்னவே பேசறீங்க" என்று கூறியவள் அவனிடம் அதற்கு மேல் பேசபிடிக்காமல் நகரப்போனவளை கை பிடித்து நிறுத்தினான் சூர்யா.
அவனின் கையை உதறியவளுக்கு முடியாமல் போனது அவனின் பிடி உடும்பு பிடியாக இருந்தது.
"சார் பிளீஸ் விடுங்க நான் போறேன்" என்றவளின் குரல் கலக்கத்துடன் இருந்தது.
"கேள்வி கேட்டுட்டு பதில் தெரிந்து கொள்ளாமல் போனால் எப்படி?..." என்றான் சூர்யா.
அதுவரை குனிந்து அவனின் கையை விலக்க போராடியவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவளின் கண்கள் கலங்கி கண்ணீர் வெளியே வரவா என்று தத்தளித்துக்கொண்டு இருந்தது.
அதை கண்டவனுக்கு என்ன தோன்றியதோ சட்டென்று கையை விலக்கியவன் திரும்பி நின்று ஆழமூச்செடுத்து விட்டு தலை கோதிக்கொண்டே திரும்பி பார்க்க பனிமலர் சில அடிகள் நடந்து சென்று இருந்தாள்.
வேகமாக சென்று அவள் முன் நின்றவன் "இங்க படிக்கறவங்க திறமையை காட்டத்தான் இந்த நிகழ்ச்சி நடத்துவது. அதில் உடையின் அழகை பார்த்து தான் தேர்ந்து எடுப்பாங்க. உடம்பை காட்டி இல்லை" என்றவனின் ஒரு விரல் நீண்டு அவளின் சற்றே இறங்கி முன்னழகை காட்டிக்கொண்டு இருந்த இடத்திற்கு அருகே சொல்ல
அதை கண்ட பனிமலர் சட்டென்று இரண்டு அடி பின்னே சென்றவள் தன் கை வைத்து மறைத்திருந்தாள்.
இப்போது அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. " அது.... அது..." என்று வார்த்தை வராமல் கண்ணீர் விட்டாள் பனிமலர்.
"இதுக்கு தான் மார்க் குறைந்தது" என்று சொல்லி திரும்பி நடந்தவனை
தன்னை தவறாக நினைத்துவிட்டானே அதை இல்லை என்று நிருபிக்கும் வேகத்தில் அவனின் முன் சென்று "இது என் பிரண்ட் தமிழுக்கு தைத்தது அவள் அத்தை இறந்திட்டதால் வீட்டுக்கு போய் விட்டாள். அதனால் நான் இந்த டிரஸ் போட்டேன் இரண்டு பேரும் ஒரே ஹைட் என்பதால் கை ஆல்ட்ரேஷன் பண்ணாமல் விட்டுட்டேன்" என்று கூறியவள் அவனின் பதிலுக்காக தலைகுனிந்து நின்று இருந்தாள் பனிமலர்.
அவன் பேசும் முன் ஆகாஷ் அங்கு வந்தவன் பனிமலர் கண்ணீருடன் நிற்பதை கண்டு
" டேய் என்னடா சொன்ன என் பாப்புவை" என்று சூர்யாவின் சட்டையை பிடித்து இருந்தான்.
சூர்யாவிற்கு ஆகாஷின் செயல் கோபத்தை கொடுக்க அவனின் சட்டையை பிடித்தவன் "உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என் சட்டையை பிடிப்ப" என்று அவனின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.
ஆகாஷ்சும் சூர்யாவின் முகத்தில் குத்த அதை லாவகமாக தன் மீது படாமல் விலகி இருந்தான் சூர்யா.
இருவரின் சண்டை கண்டு அதிர்ந்தவள் சில வினாடிகளில் தன்னை சமாளித்து ஆகாஷ் கை பிடித்து இழுத்தாள்.
" பாப்புமா உன்னை அழவச்ச இவனை சும்மா விடமாட்டேன்" என்று மீண்டும் சூர்யாவின் முகத்தில் குத்த அதில் இருந்தும் விலகி இருந்தான் சூர்யா.
ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் கல்லூரியில் படிப்பவர்களின் திறமையை அறிய இந்த விழாவை ஏற்படும் செய்வார்கள் கல்லூரி நிர்வாகம். மாணவ மாணவிகள் தங்கள் முழு திறமையையும் காட்டி உடைகளை டிசைன் செய்து அதை அணிந்து இந்த பேஷன் சோவில் கலந்து கொண்டால் முக்கிய பேஷன் டிசைனர்கள் பெரிய கார்மெண்ட்ஸ் ஓனர்கள் இந்த விழாவிற்கு வந்து சிறந்த உடைகளை தேர்ந்தெடுப்பர். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் உடைகளின் டிசைன்களை சிலர் தங்கள் கம்பெனியில் வெளியிடவும் முன் வருவர்.
அதனால் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துவர். முதல் மூன்று ஆண்டுகள் பனிமலர், தமிழ் இருவரும் இணைந்து செய்த டிசைன்களே இவர்கள் பிரிவில் முதல் பரிசு பெற்றது. இந்த ஆண்டும் முதல் பரிசை பெறவேண்டும் என்று பனிமலர், தமிழ் இருவரும் முனைப்பாக இருந்தனர்.
இந்த ஆண்டு இந்தியாவின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான பிரகாஷ் கார்மெண்ட்ஸ் முதல் இடம் பிடிக்கும் உடையை தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று அறிவித்து இருக்க அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்பாக செய்து கொண்டு இருந்தனர்.
பனிமலரும் தமிழும் இணைந்து அழகாக வடிவமைத்து இருந்தனர். அந்த உடையை தமிழ் அணிந்தால் நன்றாக இருக்கும் என்று அவளின் அளவுக்கு தைத்து முடித்து அணிந்து பார்த்த போது இருவருக்கு திருப்தியாக இருந்தது. மறுநாள் விழா நடைபெற இருந்தது.
சந்தோஷமாக உறங்கிய நண்பிகள் அதிகாலையில் ஒலித்த போன் ஒலியில் எழுந்தனர். தமிழின் போன் தான் ஒலித்தது. அவளின் மூன்றாவது அண்ணன் தான் செய்து இருந்தான். ஆன் செய்து காதில் வைத்தாள் தமிழ் எதிர் முனையில் அவளின் அண்ணன் கீழே வரும்படி சொல்லவும் இந்த நேரத்தில் என்று வேகமாக நண்பிகள் இருவரும் கீழே சென்றனர்.
முகம் முழுவதும் சோகத்துடன் நின்று இருந்தான் தமிழின் அண்ணன்.
"அண்ணா யாருக்கு என்ன ஆச்சு?..." என்று அண்ணனிடம் கேட்டவளிடம் அவன் "அத்தை" என்று சொன்ன ஒரு வார்த்தையில் அனைத்தும் விளங்கியது. நீண்ட வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த அத்தை உயிர் பிரிந்து இருக்கிறது என்று அறிந்தவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
தன் நண்பியை அணைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்த பனிமலர் அப்போதே அந்த உடையை தன்னுடைய அளவுக்கு மாற்ற சில வேலைகளை செய்தாள்.
ஒவ்வொரு வகுப்பாக நடப்பதால் இவளின் வகுப்பு வரும் போது மாலை நான்கு ஆகியிருந்தது. அந்த நேரத்தில் தான் சூர்யா கல்லூரிக்கு வந்திருந்தான் அதற்கு முன்பு வரை அவனின் கம்பெனியில் இருந்து வந்தவர்கள் தேர்வுக்குழுவில் இருந்தனர்.
வந்தவனுக்கு சிறப்பு வரவேற்பு கொடுத்து முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டான் சூர்யா. அவனின் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து இருந்தவனை கண்டு முறைத்து விட்டு திரும்பினான் சூர்யா.
அவன் முறைத்தது ஆகாஷ் PMC கார்மெண்ட்ஸ் ஓனர். சூர்யபிரகாஷின் முதல் எதிரி அவன் தான் சூர்யாவின் இன்றைய நிலைக்கு காரணமானவன். படித்து வெளிநாட்டில் சென்று ஜாலியாக வாழ்க்கை வாழ வேண்டியவனை இன்று இறுகி போய் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தொழில் தொழில் என்று ஓடவைத்தவன் இந்த ஆகாஷ் தான் அவனை கண்டால் கொலைப்பண்ணு அளவுக்கு வெறி வரும் இன்றும் அந்த வெறி வந்த போதும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்து இருந்தான் சூர்யா.
மேடையில் நிகழ்ச்சி ஆரம்பிக்க ஒவ்வொருவராக வந்து தங்கள் ஆடைகளை அணிந்து நடந்து காட்டி சென்றனர். பனிமலர் நடந்து வந்தபோது அவளின் உடையின் கைப்பகுதி சற்று லூசாக இருந்ததால் சற்றே தோளில் இருந்து விலகியதால் அவளின் கழுத்து பகுதி சற்றே கீழே இறங்கியிருந்தது. அது இன்னும் அந்த உடையை அழகாக காட்டியது.
அனைவரும் வியந்து அந்த உடையை ரசித்தனர் என்றால் ஒருவன் முகம் மட்டும் கல் போல இறுகியது. பக்கத்தில் இருந்த ஆகாஷின் குரல் வேறு அவனை இன்னும் கோபம் கொள்ளச்செய்தது.
"பாப்பு டால் சூப்பர்டா" என்று மெல்லிய குரலில் ஆகாஷ் கூறவும் அவனை முறைத்தான் சூர்யா.
"என்னடா பார்வை என் பாப்பு டால் அவள்" என்று பெருமையாக தன் காலரை தூக்கி காட்டினான் ஆகாஷ்.
பல்லை கடித்து தன்னை சமன் செய்தவன் பனிமலரின் உடைக்கு மதிப்பெண் குறைத்து போட்டான் சூர்யா.
அதை கண்ட ஆகாஷ் "ஏய் ஏன்டா அந்த டிரஸ்சுக்கு என்ன குறை?..." என்றான்.
அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் மேடையை பார்த்தான் சூர்யா.
அனைத்தும் முடிந்து பரிசு பெற்றவர்களை அறிவித்த போது பனிமலர் உடைக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது. பனிமலர் மனம் வருத்தமாக இருந்த போதும் இயல்பாக இருந்தாள்.
இரண்டாம் பரிசு பெற்றவள் அதை கிரிஜாவிடம் கொடுத்து விட்டு வாஷ் ரூம் சென்று வருவதாக கூறி அங்கிருந்து வெளியேறி இருந்தாள் பனிமலர். சிறிது நேரத்தில் வந்த ஆகாஷ் அவளின் முன் வந்து "பாப்பு டால்" என்றதும் "ஆக்கு" என்று அவனை அணைத்துக்கொண்டாள்.
" ஏன்டா இப்படி தனியாக வந்து இருக்க உனக்கு முதல் பரிசு கிடைக்கலை என்ற வருத்தமா?...." என்றான். "இல்ல ஆக்கு தமிழ் ரொம்ப எதிர்பார்போட இருந்தா முதல் பரிசு கிடைக்கும் என்று இப்போ இல்லை என்று சொன்னால் ஏற்கனவே அத்தை இறந்ததில் வருத்தமாக இருப்பாள் இதை சொன்னாள் இன்னும் வறுத்தப்படுவாள்" என்றாள் கலங்கிய கண்களுடன்
அந்நேரம் சூர்யா அவர்களை தாண்டி சொல்ல "உனக்கு முதல் பரிசு கிடைக்காமல் செய்தவன் இவன் தான்" என்று சூர்யாவின் கை பிடித்து நிறுத்தி இருந்தான்.
" ஏய்" என்று ஆகாஷ் கையை உதறியவன் அவனை அடிக்க கையை ஓங்க இடையில் வந்து நின்றாள் பனிமலர்.
"ஏய் நகரு அவனை போனால் போகுது என்று விட்டால் ரொம்ப ஓவரா பண்ணுறான்" என்று தன் சட்டையின் கைகளை ஏற்றிக்கொண்டு நின்றான் சூர்யா.
"பாப்பு டால் நீ நகருமா இவனை இன்னைக்கு ஒரு கை பார்க்கிறேன்" என்றான் ஆகாஷ்.
இருவரும் சண்டைக்கு தயாராக ஆகாஷை கை பிடித்து " ஆக்கு என் பேச்சை கேளு நான் அவருகிட்ட பேசிக்கிறேன் நீ கொஞ்ச நேரம் தூரமாக போ" என்றாள்.
அவளின் பேச்சை தட்டாமல் கேட்டவன் சூர்யாவை முறைத்து விட்டு சற்று தூரம் தள்ளி சென்று நின்றான்.
"உங்க இரண்டு பேருக்கும் என்ன பிரச்சினை சார் அவன் நீங்க தான் எனக்கு முதல் பரிசு கிடைக்காததற்கு காரணம் என்று சொல்லுறான்?..." என்று சூர்யாவிடம் பனிமலர் கேட்க
"உன்கிட்ட காரணம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்றான்.
"சார் நீங்க என் டிசைனில் என்ன குறை என்று சொன்னால் தானே அடுத்த முறை அந்த தவறு நடக்காமல் டிசைன் செய்யமுடியும் என்ற எண்ணத்தில் தான் கேட்கிறேன்" என்றாள் பனிமலர்.
"உன் பேச்சுக்கு உன் செயலுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கு இப்படி ஒன்னுமே தெரியாதவள் போல் பேசுனா நீ பண்ணது இல்லை என்று ஆகிவிடுமா" என்றான் சூர்யா.
பனிமலருக்கு அவன் பேசுவது ஒன்றும் புரியாமல் குழம்பியவன் "சார் நீங்க என்ன சொல்லுறீங்க என்று புரியவில்லை" என்றாள்.
" நல்லா நடிக்கவும் செய்யுற மூன்று வருஷம் இப்படி நடிச்சு தான் முதல் பரிசு வாங்கினியா, இந்த வருடம் அது என்னால் கிடைக்காமல் போனதால் என்னையும் உன் வலையில் வீழ்த்த இப்படி ஒன்னும் தெரியாதது போல நடிச்சிட்டு இருக்க" என்றான் ஏளனக்குரலில் சூர்யா.
அதை கேட்டவளுக்கு கோபம் வர "சார் எங்க திறமையில் தான் மூன்று வருடங்கள் பரிசு வாங்கி இருக்கோம். எனக்கு நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை உங்களை வலை பிடிக்க வேண்டியதும் இல்லை. உங்க கிட்ட என் உடையில் என்ன குறை கண்டுபிடிச்சிங்க என்று மட்டும் தான் கேட்டேன் அதுவும் அடுத்த முறை தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்று தான் கேட்டேன் ஆனால் நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு என்னென்னவே பேசறீங்க" என்று கூறியவள் அவனிடம் அதற்கு மேல் பேசபிடிக்காமல் நகரப்போனவளை கை பிடித்து நிறுத்தினான் சூர்யா.
அவனின் கையை உதறியவளுக்கு முடியாமல் போனது அவனின் பிடி உடும்பு பிடியாக இருந்தது.
"சார் பிளீஸ் விடுங்க நான் போறேன்" என்றவளின் குரல் கலக்கத்துடன் இருந்தது.
"கேள்வி கேட்டுட்டு பதில் தெரிந்து கொள்ளாமல் போனால் எப்படி?..." என்றான் சூர்யா.
அதுவரை குனிந்து அவனின் கையை விலக்க போராடியவள் அவனை நிமிர்ந்து பார்க்க அவளின் கண்கள் கலங்கி கண்ணீர் வெளியே வரவா என்று தத்தளித்துக்கொண்டு இருந்தது.
அதை கண்டவனுக்கு என்ன தோன்றியதோ சட்டென்று கையை விலக்கியவன் திரும்பி நின்று ஆழமூச்செடுத்து விட்டு தலை கோதிக்கொண்டே திரும்பி பார்க்க பனிமலர் சில அடிகள் நடந்து சென்று இருந்தாள்.
வேகமாக சென்று அவள் முன் நின்றவன் "இங்க படிக்கறவங்க திறமையை காட்டத்தான் இந்த நிகழ்ச்சி நடத்துவது. அதில் உடையின் அழகை பார்த்து தான் தேர்ந்து எடுப்பாங்க. உடம்பை காட்டி இல்லை" என்றவனின் ஒரு விரல் நீண்டு அவளின் சற்றே இறங்கி முன்னழகை காட்டிக்கொண்டு இருந்த இடத்திற்கு அருகே சொல்ல
அதை கண்ட பனிமலர் சட்டென்று இரண்டு அடி பின்னே சென்றவள் தன் கை வைத்து மறைத்திருந்தாள்.
இப்போது அவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. " அது.... அது..." என்று வார்த்தை வராமல் கண்ணீர் விட்டாள் பனிமலர்.
"இதுக்கு தான் மார்க் குறைந்தது" என்று சொல்லி திரும்பி நடந்தவனை
தன்னை தவறாக நினைத்துவிட்டானே அதை இல்லை என்று நிருபிக்கும் வேகத்தில் அவனின் முன் சென்று "இது என் பிரண்ட் தமிழுக்கு தைத்தது அவள் அத்தை இறந்திட்டதால் வீட்டுக்கு போய் விட்டாள். அதனால் நான் இந்த டிரஸ் போட்டேன் இரண்டு பேரும் ஒரே ஹைட் என்பதால் கை ஆல்ட்ரேஷன் பண்ணாமல் விட்டுட்டேன்" என்று கூறியவள் அவனின் பதிலுக்காக தலைகுனிந்து நின்று இருந்தாள் பனிமலர்.
அவன் பேசும் முன் ஆகாஷ் அங்கு வந்தவன் பனிமலர் கண்ணீருடன் நிற்பதை கண்டு
" டேய் என்னடா சொன்ன என் பாப்புவை" என்று சூர்யாவின் சட்டையை பிடித்து இருந்தான்.
சூர்யாவிற்கு ஆகாஷின் செயல் கோபத்தை கொடுக்க அவனின் சட்டையை பிடித்தவன் "உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என் சட்டையை பிடிப்ப" என்று அவனின் முகத்தில் ஒரு குத்து விட்டான்.
ஆகாஷ்சும் சூர்யாவின் முகத்தில் குத்த அதை லாவகமாக தன் மீது படாமல் விலகி இருந்தான் சூர்யா.
இருவரின் சண்டை கண்டு அதிர்ந்தவள் சில வினாடிகளில் தன்னை சமாளித்து ஆகாஷ் கை பிடித்து இழுத்தாள்.
" பாப்புமா உன்னை அழவச்ச இவனை சும்மா விடமாட்டேன்" என்று மீண்டும் சூர்யாவின் முகத்தில் குத்த அதில் இருந்தும் விலகி இருந்தான் சூர்யா.