உருகும் சூரியன் 4
வெள்ளிக்கிழமை காலை நிச்சயதார்த்த விழாவுக்கு சென்று அன்று இரவே ஹாஸ்டல் வந்து விட்டாள் பனிமலர். தமிழ்ச்செல்விக்கு விடுமுறை கிடைக்காததால் பனிமலர் மட்டும் நிச்சயதார்த்த விழாவுக்கு சென்று விட்டு இரவு தாமதமாக வந்ததால் வந்தவுடன் படுத்துவிட்டிருந்தாள்.
அடுத்த நாள் காலை எழும்போதே சண்டை அழுகை பேச்சு என்று கழிந்து விட மதிய உணவுக்கு பின் முடிக்க வேண்டிய அசைன்மென்ட் முடித்தார்கள். அன்று அவர்களால் வெளியே செல்லமுடியவில்லை அதனால் ஞாயிறு காலை ஹாஸ்டலில் உணவு முடித்து கிளம்பி விட்டனர்.
விடுமுறை நாட்களில் ஊர் சுற்றுவது தான் இவர்களின் முக்கிய வேலை. பெரும்பாலும் இவர்கள் இருவர் மட்டுமே வெளியே செல்வர் மற்ற தோழிகள் முக்கிய பொருட்கள் வாங்க என்றாள் தான் உடன் வருவர். காரணம் நாள் முழுவதும் சலிக்காமல் மால், பீச், பார்க், கோயில், சினிமா என்று இவர்கள் சுற்றுபவர்கள். அதனால் மற்ற தோழிகள் மறுத்து விடுவர்.
எப்படி தான் பார்த்த இடத்திற்கே திரும்ப திரும்ப போறிங்க போர் அடிக்காதா என்று கேட்பர். ஆனால் ஒரு முறை கூட இவர்களுக்கு சலிப்பு தோன்றியது இல்லை.
அன்றும் முதலில் கோயிலுக்கு சென்றவர்கள் பிறகு சென்னையில் மிகப்பெரிய பீனிக்ஸ் மால் சென்றனர்.
முதல் இரண்டு தளங்கள் முழுவதும் சுற்றியவர்கள் மூன்றாம் தளம் சென்று எப்போதும் ஐஸ்கிரீம் உண்ணும் கடைக்கு சென்ற போது அவர்கள் பார்வை ஓர் இடத்தை எப்போதும் அலசும் இன்று அதுபோல் பார்க்க அவர்களை ஏமாற்றாமல் அமர்ந்து இருந்தாள் எழில்நிலா.
எழில்நிலாவின் பின்புறம் பார்த்தே அது எழில்நிலா என்று கண்டவர்களுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.
எதிரில் இருந்த அவளின் காதலன் அரவிந்த் உடன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது. தங்களுக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கியவர்கள் எழில்நிலா அமர்ந்து இருந்த இடத்தில் இருந்த தடுப்புக்கு அடுத்த பக்கம் அவர்கள் அறியாமல் சென்று அமர்ந்தனர்.
உன்னிப்பாக அவர்கள் பேசுவதை கேட்டவர்களுக்கு அவர்கள் பார்த்த புதிய படத்தை பற்றி பேசி சிரித்துக்கொண்டு இருந்தனர்.
இவர்கள் இருவரும் குழம்பி போயினர். இரண்டு நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்த நிலையில் தன் காதலனுடன் அடுத்து என்ன செய்வது என்று பேசுவார்கள் என்று பார்த்தாள். சினிமாவில் நடந்ததை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர் எழில்நிலா, அரவிந்த்.
இருவரும் வாய்திறந்து பேசினால் அந்த பக்கம் இருக்கும் அரவிந்த் எழில்நிலாவுக்கு கேட்கும் என்று ஜாடையில் பேசினர்.
என்னடி இது என்று தமிழ் பனிமலரிடம் கேட்க அவளும் எனக்கும் ஒன்றும் புரியலை என்றாள்.
சிறிது நேரத்தில் எழில்நிலா அரவிந்த் எழுந்து சொல்ல அவர்கள் பார்க்க முடியாதபடி குனிந்து அமர்ந்து கொண்டனர்.
அவர்கள் சென்றதும் "ஏய் என்னடி நடக்குது இரண்டு பேரும் கல்யாணத்தை நிறுத்த பிளான் பண்ணுவாங்க என்று பார்த்தா அந்த மொக்கை படத்தை பற்றி பேசிட்டு இருக்கிறாங்க. நீ தான் மெண்டல் என்று பார்த்த உன் அக்காவும் மெண்டல் தான் போல" என்றாள் தமிழ்.
தமிழை முறைத்த பனிமலர் "கொஞ்ச நேரம் சும்மா இருடி என்றவள் ஒரு வேளை இரண்டு பேரும் பிரண்ட்ஸ்சா நம்ப தான் தப்பாக நினைத்துக்கொண்டோமா?..." என்றாள் பனிமலர்.
" ஆமாம் ஆமாம் பிரண்ட்ஸ் தான் ஒரே ஜுஸ் வாங்கி இரண்டு பேரும் ஒரு மணி நேரம் அதை சேர்ந்து குடிப்பாங்க" நக்கலாக கூறினாள் தமிழ்.
"இல்லடி கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் ஜாலியா சுத்தறாங்களே அதனால் என்று சில வினாடிகள் யோசித்தவள் ஒரு வேளை ரெண்டு பேரும் பிரிந்திடலாம் பிரண்ட்ஸ்சாக இருக்கலாம் என்று முடிவு செய்து இருப்பாங்களா?... " என்றாள் பனிமலர்.
சுற்றும் முற்றும் பார்த்தவள் அங்கிருந்த தண்ணீர் கூஜாவை தூக்கி " பப்ளிக் பிளேஸ் என்று பார்க்கிறேன் இல்லை என்றால் இதனால் உன் தலையை பிளந்து இருப்பேன். தலையில் கொஞ்சமாவது மூளை இருந்தா இப்படி எல்லாம் யோசிக்கமாட்ட"
"உன் அக்கா முகத்தை துப்பட்டாவை கொண்டு மூடிட்டு கைகோர்த்து அவர் நெஞ்சில் சாய்யாத குறையா ஒட்டிட்டு போறாங்க அவங்க பிரண்ட்ஸ்சாக பிரிந்திடுவாங்களா?..." என்று கூறியவள் சிந்தித்தபடி தன் முன் இருந்த ஐஸ்கிரீமை காலி செய்து விட்டு "இன்னொரு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வாடி" என்று நண்பியை ஏவ அவள் முறைத்தாள்.
"ஹலோ மேடம் இப்ப உனக்காகத்தான் நான் யோசித்திட்டு இருக்கேன். உனக்கு அந்த ராட்சசன் வேணும் என்றாள் செய்துதான் ஆகனும்" என்றாள் தமிழ்.
பனிமலர் எழுந்து சொல்லாமல் அமர்ந்து இருப்பதை கண்டவள். "ஏய் ஏற்கனவே நிறைய யோசித்ததில் மூளை சூடாகிப்போய் இருக்கு நீ இப்படி முறைச்சுட்டு இருந்தா உன் பார்வை சூட்டில் என் மூளை உறுகி வெளியே வந்திடும் அப்புறம் உனக்கு ஐடியா யார் கொடுப்பாங்க."
"உனக்கும் மண்டையில் மசாலா காலி என்று தெரிந்து பேச்சு இப்ப என்னுடையதும் உருகி வந்துட்டா என்ன பண்ணுறது" என்று தமிழ் சொல்லிமுடிக்க பனிமலர் அவள் தலையில் ஓங்கி குட்டியவள்
" நீ எனக்காக யோசிக்கவே வேண்டாம் அதனால் உன் மூளை உருகி வழியறதை நான் பார்க்கிறேன்" என்று கன்னத்தில் கை வைத்து தமிழை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
" ஓஓஹே... உனக்கு இல்லாத மூளை எனக்கு மட்டும் எதற்கு என்ற பொறாமை தானே உனக்கு நீயெல்லாம் எனக்கு பிரண்ட்" என்று கோவித்துக்கொண்டு எழுந்து சென்றவளை பார்த்து சிரித்தாளே தவிர அவளை நிறுத்தவில்லை.
சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து அமர்ந்த தமிழின் முன் இரண்டு கப் ஐஸ்க்ரீம்களை வைத்தாள் பனிமலர்.
" கோபம் கொண்டு போனவள் திரும்ப வந்திட்டேன் என்று நினைக்கிறீங்களா மக்களே நான் கடையவிட்டு வெளியே போகலைங்க ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தேன் ஹிஹிஹி...."
இரண்டு ஐஸ்கிரீமை ஆசையாக பார்த்தவள் பனிமலர் ஒரு ஐஸ்கிரீம் மட்டும் வைத்து இருப்பதை கண்டவள்
"ஏன்டி எனக்கு இரண்டு வாங்கி இருக்க உனக்கு ஒரு ஐஸ்கிரீம் மட்டுமே வாங்கி இருக்க" என்று பனிமலரிடம் விசாரித்தாள் தமிழ்.
" உன் சைஸ்சுக்கு நானும் வரனும் நினைக்கிறீயா?..." என்றாள் பனிமலர்.
"ஓஓஹே..... மேடம் டையட்டில் இருக்கீங்களா?... காலையில் இட்லி வடை ஒரு பக்கெட் சாம்பார் பூரி கூடவே பொங்கல் இதெல்லாம் பத்தவில்லை என்று ஒரு ஜுஸ் குடுச்சாங்களே அது யாருங்க மேடம்" என்றாள் குரலில் கேலியாக தமிழ்.
"எங்க பாட்டி சொல்லுவாங்க ஒல்லியாக இருக்கறவங்க உடம்பெல்லாம் வினை அதான் எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு சதை போடலை ஆனால் குண்டாக இருப்பவங்க கள்ளம் கபடம் இல்லாதவங்க அவங்க கொஞ்சம் சாப்பிட்டாக்கூட சதை போடும் என்று சொல்லுவாங்க அதன் அர்த்தம் இப்பதான் எனக்கு தெரியுது" என்றாள்.
" அப்ப நான் வினை பிடிச்சவ, மேடம் கள்ளம் கபடம் இல்லாதவங்க அப்படித்தானே" என்று கூறியவள் தமிழின் கையில் இருந்த இரண்டு ஐஸ்கிரீமையும் பிடிங்கி தன் பக்கம் வைத்து கொண்டு தனதை சாப்பிட ஆரம்பித்தாள்.
" வடபோச்சே" என்று வடிவேலு பாணியில் "ஐஸ்கிரீம் போச்சே" என்று பனிமலரை ஏக்கமாக பார்த்தாள் தமிழ்.
தோழியின் ஏக்கப்பார்வை கண்ட பனிமலர் இரண்டு ஐஸ்கிரீமை அவள் புறம் நகர்த்தி வைத்து விட்டு தனதை உண்டாள்.
"ஹிஹி ஹிஹி" என்ற புன்னகையுடன் ஆவலாக ஐஸ்கிரீம் எடுத்து உண்டாள் தமிழ்.
எதிர் எதிர் துருவங்கள் தான் ஈர்க்கும் என்று இல்லை ஒரே குணம் இருப்பவர்களும் ஈர்க்கும் என்பதற்கு இவர்கள் தான் உதாரணம். அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பிகளாக இருக்கின்றனர்.
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழல்களில் பிறந்து வளர்ந்தவர்கள் இன்று ஒருவர் மனதில் நினைப்பது மற்றவருக்கு தெரியும் என்னும் அளவுக்கு நெருங்கிய தோழிகளாக இருக்கின்றனர்.
பலர் இவர்கள் நட்பை கண்டு பாராட்டியும் இருக்கின்றனர் பொறாமை பட்டும் இருக்கின்றனர். இவர்களுக்குள் சண்டை அடிதடி இல்லாத நாளே இல்லை ஆனால் இருவரும் இதுவரை பிரிந்தது இல்லை. துன்பத்தில் தான் உண்மையான நட்பும் உறவும் தெரியும் என்று சொல்லுவார்கள். அப்படி ஒருவர் மனவருத்தும் கொள்ளும் முன்னரே அதில் இருந்து திசை திருப்பிவிடுவர்.
மொத்தத்தில் நட்புக்கு இலக்கணமாக திகழ்பவர்கள் இவர்கள். இவர்களின் துணைகளாக வருபவர்கள் இவர்களின் நட்பை தொடரவிடுவார்களா????...
தமிழ்ச்செல்வியின் ஊர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்து உள்ள சுங்குவார்சத்திரத்திம் தான். தந்தை விவசாயி, வசதியான குடும்பம் இவர்கள் குடும்பம். மூன்று ஆண்களுக்கு பிறகு மிகவும் தாமதமாக பிறந்தவள் தமிழ்ச்செல்வி.
பெரிய அண்ணனுக்கு வயது பதினைந்து இரண்டாம் அண்ணனுக்கு பதிமூன்று மூன்றாம் அண்ணனுக்கு ஒன்பது வயது இருக்கும் போது தமிழ்ச்செல்வி பிறந்தாள். பிரசவத்தில் தாய் இறந்து விட இவளை உறவு முறை அத்தை தான் வளர்த்தார்.
தந்தை அண்ணன்கள் செல்லத்தில் வளர்ந்ததால் எப்போதும் சுட்டித்தனம் அதிகம் இருக்கும். வளர வளர சுட்டித்தனம் அதிகமாகியதே தவிர குறைவில்லை. இவள் மட்டும் செல்வது இல்லாமல் சிறு பிள்ளைகளையும் சேர்த்துக்கொண்டு சுற்றுவாள்.
அவர்கள் தோப்பில் இருப்பதை பறித்து சாப்பிடாமல் அடுத்த தோப்புகளுக்கு சென்று மாங்காய், புளியங்காய், கொய்யாப்பழம் என்று இவளே மரத்தில் ஏறி பறித்து வந்து உண்பாள். உங்க தோட்டத்தில் இருக்கே அங்கேயே பறிச்சு சாப்பிட வேண்டியது தானே என்று கேட்பவர்களுக்கு
திருட்டு மாங்காய் தான் ருசிக்கும் என்பாள். எப்போதும் இவள் பின் ஒரு பட்டாளமே சுற்றும்.
குடும்பத்தையும் இவளையும் பார்த்துக்கொண்ட அத்தைக்கும் உடல் நலம் சரியில்லாமல் போக இவளின் எட்டாவது வயதில் இவளின் பெரிய அண்ணனுக்கு இருபத்தி மூன்று வயதில் திருமணம் செய்து வைத்து விட்டனர்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் அடுத்த அண்ணனுக்கும் திருமணம் முடித்துவிட்டனர். வந்த இரு அண்ணிகளும் இவளின் சொந்தமே இருவரும் நன்றாக பார்த்துக்கொண்டனர். அவர்களுக்கும் அடுத்தடுத்து பிள்ளைகள் பிறந்திவிட தமிழ்ச்செல்வி சந்தோஷமாகிப்போனாள்.
தன்னுடன் விளையாட அண்ணன் பிள்ளைகள் வந்து விட்டனர் என்ற சந்தோஷமே காரணம். ஏனெனில் வயதுக்கு வந்த பிறகு இவள் சுற்றுவதை கண்ட சிலர் தவறாக பேசுவதை கண்ட அண்ணிகள் வெளியே அனுப்புவது கிடையாது. பள்ளிக்கு கூட அப்பாவோ அண்ணன்களோ அழைத்து செல்வது கூட்டி வருவதையும் செய்வதால் முன்பு போல் அவளால் வெளியே செல்லமுடியாமல் போனது.
பள்ளி விட்டு வந்தால் பிள்ளைகள் உடன் தான் பொழுது போகும். பத்தாம் வகுப்பு முடிந்து விடுமுறையில் இருந்த போது அண்ணன் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள் தமிழ்ச்செல்வி.
உறவில் சிலர் அவர்களின் குடும்பத்தில் நடக்கும் விழாவிற்கு அழைக்க வந்தவர்கள் இவளை கண்டனர். பிள்ளைகளோடு பிள்ளையாக விளையாடுபவளைக்கண்டு என்ன பொறாமையே அவர்களுக்கு
"பெற்றவள் இருந்து இருந்தால் இப்படி வளர்த்து இருப்பாங்களா அடக்க ஒடுக்கமாக வளர்த்து வீட்டு வேலைகள் செய்ய கத்துகொடுத்து இருப்பாள். இப்படி நாலு பேர் பார்க்க குதிக்க விட்டு இருக்கமாட்டார்கள்" என்று பேசியதை கேட்ட அண்ணிகள்
"அவள் சின்ன பெண் தானே" என்று கூறவும்.
வந்தவர்களில் வயதான பெண்" என்னடியம்மா சின்ன பெண் இவள் வயசில் எனக்கு கல்யாணம் முடிந்து புள்ளையே உண்டாகிட்டேன். அவளை போய் சின்ன பெண் என்று சொல்லுறிங்க."
"நாளைக்கு உன் பிள்ளைகள் இந்த வயசு வரும் போது இதே மாதிரி விளையாட விடுவிங்களா எப்படி அடக்க ஒடுக்கமாக இருக்கனும் என்றும் வீட்டு வேலைகளையும் செய்ய சொல்லித்தரமாட்டிங்களா?..." என்று பேசினார் அந்தப்பெண்.
வெள்ளிக்கிழமை காலை நிச்சயதார்த்த விழாவுக்கு சென்று அன்று இரவே ஹாஸ்டல் வந்து விட்டாள் பனிமலர். தமிழ்ச்செல்விக்கு விடுமுறை கிடைக்காததால் பனிமலர் மட்டும் நிச்சயதார்த்த விழாவுக்கு சென்று விட்டு இரவு தாமதமாக வந்ததால் வந்தவுடன் படுத்துவிட்டிருந்தாள்.
அடுத்த நாள் காலை எழும்போதே சண்டை அழுகை பேச்சு என்று கழிந்து விட மதிய உணவுக்கு பின் முடிக்க வேண்டிய அசைன்மென்ட் முடித்தார்கள். அன்று அவர்களால் வெளியே செல்லமுடியவில்லை அதனால் ஞாயிறு காலை ஹாஸ்டலில் உணவு முடித்து கிளம்பி விட்டனர்.
விடுமுறை நாட்களில் ஊர் சுற்றுவது தான் இவர்களின் முக்கிய வேலை. பெரும்பாலும் இவர்கள் இருவர் மட்டுமே வெளியே செல்வர் மற்ற தோழிகள் முக்கிய பொருட்கள் வாங்க என்றாள் தான் உடன் வருவர். காரணம் நாள் முழுவதும் சலிக்காமல் மால், பீச், பார்க், கோயில், சினிமா என்று இவர்கள் சுற்றுபவர்கள். அதனால் மற்ற தோழிகள் மறுத்து விடுவர்.
எப்படி தான் பார்த்த இடத்திற்கே திரும்ப திரும்ப போறிங்க போர் அடிக்காதா என்று கேட்பர். ஆனால் ஒரு முறை கூட இவர்களுக்கு சலிப்பு தோன்றியது இல்லை.
அன்றும் முதலில் கோயிலுக்கு சென்றவர்கள் பிறகு சென்னையில் மிகப்பெரிய பீனிக்ஸ் மால் சென்றனர்.
முதல் இரண்டு தளங்கள் முழுவதும் சுற்றியவர்கள் மூன்றாம் தளம் சென்று எப்போதும் ஐஸ்கிரீம் உண்ணும் கடைக்கு சென்ற போது அவர்கள் பார்வை ஓர் இடத்தை எப்போதும் அலசும் இன்று அதுபோல் பார்க்க அவர்களை ஏமாற்றாமல் அமர்ந்து இருந்தாள் எழில்நிலா.
எழில்நிலாவின் பின்புறம் பார்த்தே அது எழில்நிலா என்று கண்டவர்களுக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன.
எதிரில் இருந்த அவளின் காதலன் அரவிந்த் உடன் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருப்பது தெரிந்தது. தங்களுக்கு பிடித்த ஐஸ்கிரீம் வாங்கியவர்கள் எழில்நிலா அமர்ந்து இருந்த இடத்தில் இருந்த தடுப்புக்கு அடுத்த பக்கம் அவர்கள் அறியாமல் சென்று அமர்ந்தனர்.
உன்னிப்பாக அவர்கள் பேசுவதை கேட்டவர்களுக்கு அவர்கள் பார்த்த புதிய படத்தை பற்றி பேசி சிரித்துக்கொண்டு இருந்தனர்.
இவர்கள் இருவரும் குழம்பி போயினர். இரண்டு நாட்களுக்கு முன்பு வேறு ஒருவருடன் நிச்சயம் நடந்த நிலையில் தன் காதலனுடன் அடுத்து என்ன செய்வது என்று பேசுவார்கள் என்று பார்த்தாள். சினிமாவில் நடந்ததை பற்றி பேசிக்கொண்டு இருந்தனர் எழில்நிலா, அரவிந்த்.
இருவரும் வாய்திறந்து பேசினால் அந்த பக்கம் இருக்கும் அரவிந்த் எழில்நிலாவுக்கு கேட்கும் என்று ஜாடையில் பேசினர்.
என்னடி இது என்று தமிழ் பனிமலரிடம் கேட்க அவளும் எனக்கும் ஒன்றும் புரியலை என்றாள்.
சிறிது நேரத்தில் எழில்நிலா அரவிந்த் எழுந்து சொல்ல அவர்கள் பார்க்க முடியாதபடி குனிந்து அமர்ந்து கொண்டனர்.
அவர்கள் சென்றதும் "ஏய் என்னடி நடக்குது இரண்டு பேரும் கல்யாணத்தை நிறுத்த பிளான் பண்ணுவாங்க என்று பார்த்தா அந்த மொக்கை படத்தை பற்றி பேசிட்டு இருக்கிறாங்க. நீ தான் மெண்டல் என்று பார்த்த உன் அக்காவும் மெண்டல் தான் போல" என்றாள் தமிழ்.
தமிழை முறைத்த பனிமலர் "கொஞ்ச நேரம் சும்மா இருடி என்றவள் ஒரு வேளை இரண்டு பேரும் பிரண்ட்ஸ்சா நம்ப தான் தப்பாக நினைத்துக்கொண்டோமா?..." என்றாள் பனிமலர்.
" ஆமாம் ஆமாம் பிரண்ட்ஸ் தான் ஒரே ஜுஸ் வாங்கி இரண்டு பேரும் ஒரு மணி நேரம் அதை சேர்ந்து குடிப்பாங்க" நக்கலாக கூறினாள் தமிழ்.
"இல்லடி கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் ஜாலியா சுத்தறாங்களே அதனால் என்று சில வினாடிகள் யோசித்தவள் ஒரு வேளை ரெண்டு பேரும் பிரிந்திடலாம் பிரண்ட்ஸ்சாக இருக்கலாம் என்று முடிவு செய்து இருப்பாங்களா?... " என்றாள் பனிமலர்.
சுற்றும் முற்றும் பார்த்தவள் அங்கிருந்த தண்ணீர் கூஜாவை தூக்கி " பப்ளிக் பிளேஸ் என்று பார்க்கிறேன் இல்லை என்றால் இதனால் உன் தலையை பிளந்து இருப்பேன். தலையில் கொஞ்சமாவது மூளை இருந்தா இப்படி எல்லாம் யோசிக்கமாட்ட"
"உன் அக்கா முகத்தை துப்பட்டாவை கொண்டு மூடிட்டு கைகோர்த்து அவர் நெஞ்சில் சாய்யாத குறையா ஒட்டிட்டு போறாங்க அவங்க பிரண்ட்ஸ்சாக பிரிந்திடுவாங்களா?..." என்று கூறியவள் சிந்தித்தபடி தன் முன் இருந்த ஐஸ்கிரீமை காலி செய்து விட்டு "இன்னொரு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வாடி" என்று நண்பியை ஏவ அவள் முறைத்தாள்.
"ஹலோ மேடம் இப்ப உனக்காகத்தான் நான் யோசித்திட்டு இருக்கேன். உனக்கு அந்த ராட்சசன் வேணும் என்றாள் செய்துதான் ஆகனும்" என்றாள் தமிழ்.
பனிமலர் எழுந்து சொல்லாமல் அமர்ந்து இருப்பதை கண்டவள். "ஏய் ஏற்கனவே நிறைய யோசித்ததில் மூளை சூடாகிப்போய் இருக்கு நீ இப்படி முறைச்சுட்டு இருந்தா உன் பார்வை சூட்டில் என் மூளை உறுகி வெளியே வந்திடும் அப்புறம் உனக்கு ஐடியா யார் கொடுப்பாங்க."
"உனக்கும் மண்டையில் மசாலா காலி என்று தெரிந்து பேச்சு இப்ப என்னுடையதும் உருகி வந்துட்டா என்ன பண்ணுறது" என்று தமிழ் சொல்லிமுடிக்க பனிமலர் அவள் தலையில் ஓங்கி குட்டியவள்
" நீ எனக்காக யோசிக்கவே வேண்டாம் அதனால் உன் மூளை உருகி வழியறதை நான் பார்க்கிறேன்" என்று கன்னத்தில் கை வைத்து தமிழை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
" ஓஓஹே... உனக்கு இல்லாத மூளை எனக்கு மட்டும் எதற்கு என்ற பொறாமை தானே உனக்கு நீயெல்லாம் எனக்கு பிரண்ட்" என்று கோவித்துக்கொண்டு எழுந்து சென்றவளை பார்த்து சிரித்தாளே தவிர அவளை நிறுத்தவில்லை.
சில நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்து அமர்ந்த தமிழின் முன் இரண்டு கப் ஐஸ்க்ரீம்களை வைத்தாள் பனிமலர்.
" கோபம் கொண்டு போனவள் திரும்ப வந்திட்டேன் என்று நினைக்கிறீங்களா மக்களே நான் கடையவிட்டு வெளியே போகலைங்க ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தேன் ஹிஹிஹி...."
இரண்டு ஐஸ்கிரீமை ஆசையாக பார்த்தவள் பனிமலர் ஒரு ஐஸ்கிரீம் மட்டும் வைத்து இருப்பதை கண்டவள்
"ஏன்டி எனக்கு இரண்டு வாங்கி இருக்க உனக்கு ஒரு ஐஸ்கிரீம் மட்டுமே வாங்கி இருக்க" என்று பனிமலரிடம் விசாரித்தாள் தமிழ்.
" உன் சைஸ்சுக்கு நானும் வரனும் நினைக்கிறீயா?..." என்றாள் பனிமலர்.
"ஓஓஹே..... மேடம் டையட்டில் இருக்கீங்களா?... காலையில் இட்லி வடை ஒரு பக்கெட் சாம்பார் பூரி கூடவே பொங்கல் இதெல்லாம் பத்தவில்லை என்று ஒரு ஜுஸ் குடுச்சாங்களே அது யாருங்க மேடம்" என்றாள் குரலில் கேலியாக தமிழ்.
"எங்க பாட்டி சொல்லுவாங்க ஒல்லியாக இருக்கறவங்க உடம்பெல்லாம் வினை அதான் எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு சதை போடலை ஆனால் குண்டாக இருப்பவங்க கள்ளம் கபடம் இல்லாதவங்க அவங்க கொஞ்சம் சாப்பிட்டாக்கூட சதை போடும் என்று சொல்லுவாங்க அதன் அர்த்தம் இப்பதான் எனக்கு தெரியுது" என்றாள்.
" அப்ப நான் வினை பிடிச்சவ, மேடம் கள்ளம் கபடம் இல்லாதவங்க அப்படித்தானே" என்று கூறியவள் தமிழின் கையில் இருந்த இரண்டு ஐஸ்கிரீமையும் பிடிங்கி தன் பக்கம் வைத்து கொண்டு தனதை சாப்பிட ஆரம்பித்தாள்.
" வடபோச்சே" என்று வடிவேலு பாணியில் "ஐஸ்கிரீம் போச்சே" என்று பனிமலரை ஏக்கமாக பார்த்தாள் தமிழ்.
தோழியின் ஏக்கப்பார்வை கண்ட பனிமலர் இரண்டு ஐஸ்கிரீமை அவள் புறம் நகர்த்தி வைத்து விட்டு தனதை உண்டாள்.
"ஹிஹி ஹிஹி" என்ற புன்னகையுடன் ஆவலாக ஐஸ்கிரீம் எடுத்து உண்டாள் தமிழ்.
எதிர் எதிர் துருவங்கள் தான் ஈர்க்கும் என்று இல்லை ஒரே குணம் இருப்பவர்களும் ஈர்க்கும் என்பதற்கு இவர்கள் தான் உதாரணம். அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய நண்பிகளாக இருக்கின்றனர்.
வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழல்களில் பிறந்து வளர்ந்தவர்கள் இன்று ஒருவர் மனதில் நினைப்பது மற்றவருக்கு தெரியும் என்னும் அளவுக்கு நெருங்கிய தோழிகளாக இருக்கின்றனர்.
பலர் இவர்கள் நட்பை கண்டு பாராட்டியும் இருக்கின்றனர் பொறாமை பட்டும் இருக்கின்றனர். இவர்களுக்குள் சண்டை அடிதடி இல்லாத நாளே இல்லை ஆனால் இருவரும் இதுவரை பிரிந்தது இல்லை. துன்பத்தில் தான் உண்மையான நட்பும் உறவும் தெரியும் என்று சொல்லுவார்கள். அப்படி ஒருவர் மனவருத்தும் கொள்ளும் முன்னரே அதில் இருந்து திசை திருப்பிவிடுவர்.
மொத்தத்தில் நட்புக்கு இலக்கணமாக திகழ்பவர்கள் இவர்கள். இவர்களின் துணைகளாக வருபவர்கள் இவர்களின் நட்பை தொடரவிடுவார்களா????...
தமிழ்ச்செல்வியின் ஊர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்து உள்ள சுங்குவார்சத்திரத்திம் தான். தந்தை விவசாயி, வசதியான குடும்பம் இவர்கள் குடும்பம். மூன்று ஆண்களுக்கு பிறகு மிகவும் தாமதமாக பிறந்தவள் தமிழ்ச்செல்வி.
பெரிய அண்ணனுக்கு வயது பதினைந்து இரண்டாம் அண்ணனுக்கு பதிமூன்று மூன்றாம் அண்ணனுக்கு ஒன்பது வயது இருக்கும் போது தமிழ்ச்செல்வி பிறந்தாள். பிரசவத்தில் தாய் இறந்து விட இவளை உறவு முறை அத்தை தான் வளர்த்தார்.
தந்தை அண்ணன்கள் செல்லத்தில் வளர்ந்ததால் எப்போதும் சுட்டித்தனம் அதிகம் இருக்கும். வளர வளர சுட்டித்தனம் அதிகமாகியதே தவிர குறைவில்லை. இவள் மட்டும் செல்வது இல்லாமல் சிறு பிள்ளைகளையும் சேர்த்துக்கொண்டு சுற்றுவாள்.
அவர்கள் தோப்பில் இருப்பதை பறித்து சாப்பிடாமல் அடுத்த தோப்புகளுக்கு சென்று மாங்காய், புளியங்காய், கொய்யாப்பழம் என்று இவளே மரத்தில் ஏறி பறித்து வந்து உண்பாள். உங்க தோட்டத்தில் இருக்கே அங்கேயே பறிச்சு சாப்பிட வேண்டியது தானே என்று கேட்பவர்களுக்கு
திருட்டு மாங்காய் தான் ருசிக்கும் என்பாள். எப்போதும் இவள் பின் ஒரு பட்டாளமே சுற்றும்.
குடும்பத்தையும் இவளையும் பார்த்துக்கொண்ட அத்தைக்கும் உடல் நலம் சரியில்லாமல் போக இவளின் எட்டாவது வயதில் இவளின் பெரிய அண்ணனுக்கு இருபத்தி மூன்று வயதில் திருமணம் செய்து வைத்து விட்டனர்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் அடுத்த அண்ணனுக்கும் திருமணம் முடித்துவிட்டனர். வந்த இரு அண்ணிகளும் இவளின் சொந்தமே இருவரும் நன்றாக பார்த்துக்கொண்டனர். அவர்களுக்கும் அடுத்தடுத்து பிள்ளைகள் பிறந்திவிட தமிழ்ச்செல்வி சந்தோஷமாகிப்போனாள்.
தன்னுடன் விளையாட அண்ணன் பிள்ளைகள் வந்து விட்டனர் என்ற சந்தோஷமே காரணம். ஏனெனில் வயதுக்கு வந்த பிறகு இவள் சுற்றுவதை கண்ட சிலர் தவறாக பேசுவதை கண்ட அண்ணிகள் வெளியே அனுப்புவது கிடையாது. பள்ளிக்கு கூட அப்பாவோ அண்ணன்களோ அழைத்து செல்வது கூட்டி வருவதையும் செய்வதால் முன்பு போல் அவளால் வெளியே செல்லமுடியாமல் போனது.
பள்ளி விட்டு வந்தால் பிள்ளைகள் உடன் தான் பொழுது போகும். பத்தாம் வகுப்பு முடிந்து விடுமுறையில் இருந்த போது அண்ணன் பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள் தமிழ்ச்செல்வி.
உறவில் சிலர் அவர்களின் குடும்பத்தில் நடக்கும் விழாவிற்கு அழைக்க வந்தவர்கள் இவளை கண்டனர். பிள்ளைகளோடு பிள்ளையாக விளையாடுபவளைக்கண்டு என்ன பொறாமையே அவர்களுக்கு
"பெற்றவள் இருந்து இருந்தால் இப்படி வளர்த்து இருப்பாங்களா அடக்க ஒடுக்கமாக வளர்த்து வீட்டு வேலைகள் செய்ய கத்துகொடுத்து இருப்பாள். இப்படி நாலு பேர் பார்க்க குதிக்க விட்டு இருக்கமாட்டார்கள்" என்று பேசியதை கேட்ட அண்ணிகள்
"அவள் சின்ன பெண் தானே" என்று கூறவும்.
வந்தவர்களில் வயதான பெண்" என்னடியம்மா சின்ன பெண் இவள் வயசில் எனக்கு கல்யாணம் முடிந்து புள்ளையே உண்டாகிட்டேன். அவளை போய் சின்ன பெண் என்று சொல்லுறிங்க."
"நாளைக்கு உன் பிள்ளைகள் இந்த வயசு வரும் போது இதே மாதிரி விளையாட விடுவிங்களா எப்படி அடக்க ஒடுக்கமாக இருக்கனும் என்றும் வீட்டு வேலைகளையும் செய்ய சொல்லித்தரமாட்டிங்களா?..." என்று பேசினார் அந்தப்பெண்.