உருகும் சூரியன் 44
அடுத்த அரை மணி நேரத்தில் அருளானந்தமும் சந்திரபிரகாஷும் வீட்டில் இருந்தனர். அவர்களுக்கும் சூர்யா செய்த செயலை சொன்னதும் அவர்களும் சூர்யாவின் மீது கோபத்தில் காத்திருந்தனர்.
இவ்வளவு பேரின் கோபத்திற்கு ஆளான சூர்யா கோபத்துடன் எதிரிகளை பந்தாடிக்கொண்டு இருந்தான். தன்னை தாக்கியவர்களை பந்தாடிய போதும் அவனின் மனம் முழுவதும் அவனின் பனியிடம் தான் இருந்தது. அதனால் அவனால் முழுமையாக எதிரிகளின் தாக்குதலை தடுக்கமுடியாமல் அவனின் உடலிலும் காயங்கள் ஏற்பட்டன.
இந்த தாக்குதல் பற்றி ஏற்கனவே சூர்யா சொல்லியிருந்ததால் காவல்துறையினர் சரியான நேரத்தில் வந்து தாக்குதல் செய்தவர்கள் அனைவரையும் பிடித்த பிறகு மற்ற வேலைகளை மாதவனை பார்க்க சொன்னவன் வேகமாக காரில் ஏறி வீடு நோக்கி பறந்தான்.
காரின் ஒசை கேட்டு அனைவரும் கோபத்துடன் பார்த்திருந்தவர்கள் அவன் வந்த கோலத்தை கண்டு அனைவரும் எழுந்து நின்று விட்டனர். உடல் முழுவதும் அங்காங்கே இருந்த ரத்த காயங்களுடன் சூர்யாவை கண்டவர்கள் அதுவரை அவன் மீது இருந்த கோபம் மறைந்து இருந்தது.
"சூர்யா... சூர்யா... என்னாச்சு?..." என்று கேட்டவர்களின் குரல் கூட அவன் காதில் விழவில்லை. தன்னை நோக்கி வந்தவர்களை கூட கண்டு கொள்ளாமல் மாடியேறியவன் தன் அறைக்கதவை திறந்து உள்ளே சென்று வாடிய கொடியாய் படுத்திருந்த தன்னவளை கண்டு வேகமாக அருகில் சென்றவன் அவளை தொடப்போக
" சூர்யா இந்த கோலத்தில் மலரை தொடாதே முதலில் குளித்து விட்டு வா" என்ற சந்திரபிரகாஷ் குரலில் அவளை தொடாமல் திரும்பி சந்திரபிரகாஷை பார்த்தவனின் கண்கள் கலங்கி இருந்தன.
அறையின் வெளியே நின்று இருந்த சந்திரபிரகாஷ் தம்பியின் கலங்கிய கண்களை கண்ட உடன் அதிர்ந்து "சூர்யா... " என்று அறையினுள் வந்திருந்தான்.
" என்னடா என்னாச்சு ஏன் இப்படி இருக்க எல்லாவற்றையும் எங்ககிட்ட சொல்லாமல் மறைக்கிறாய் என்று பார்த்தால் இன்று மலரை அடித்து இருக்கிறாய் இப்போது இப்படி உடலில் காயங்களுடன் வந்து நிற்கிறாய். இனியும் மறைக்காமல் சொல்லுடா சொன்னால் தான் பிரச்சனையை சரி செய்ய முடியும்" என்றான்.
சூர்யா பதில் சொல்லாமல் தன் கை விரல்களை கோபத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கவும்
" முதலில் குளித்து விட்டு வா" என்று சூர்யாவை குளியல் அறையில் விட்டு விட்டு அறையில் இருந்து வெளியேறி கீழே சென்ற சந்திரபிரகாஷ் மேலே நடந்ததை கூறிவிட்டு சூர்யா வந்தால் வருந்தும் படி பேசவேண்டாம் என்று கூறினான்.
குளியல் அறையில் இருந்து வெளியே வந்தவன் நேராக பனிமலர் அருகில் வந்தமர்ந்து அவனின் விரல் தடம் பதிந்து சிவந்து இருந்த கன்னத்தை கண்டவனின் கண்கள் கலங்கின.
"சாரிடி... சாரிடி..." என்று கூறியவன் குனிந்து கன்னத்தில் மென்மையான முத்தம் பதித்தவன் வாங்கி வந்திருந்த மருந்தை மென்மையாக தடவிவிட்டு அவளின் அருகில் படுத்து அவளை பார்த்துக்கொண்டே
"உனக்கு என்னை பார்த்தால் கொலைகாரன் மாதிரியா தெரியுதுடி. அந்த அளவுக்கு மோசமானவனாக உன் மனசில் இருக்கேன். உன் கண்ணில் என் மீதான காதலை பார்த்திருக்கேனே, எங்கே என்னை தவறவிட்டுடுவியே என்ற தவிப்பையும் உன் கண்ணில் பார்த்திட்டு இருக்கமுடியாமல் என்னென்ன வேலைகள் செய்து நீ சொன்ன வார்த்தைகளை மீறி உன்னை என் மனைவியாக்கிட்டேன். இப்பவும் உன் வார்த்தைக்காக தான் உன்னை நெருங்காமல் விலகி இருக்கேன்."
" அன்னைக்கு உன்னை கோயில் முன்னாடி பார்த்ததும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா?... ஓடிவந்து உன் முன்னாடி நின்னு நீ கண் விரிச்சு என்னை முதல் முதலாக பார்த்த போது பார்த்தியே அதை பார்க்க ஆவலாக இருந்தது. ஆனால் நீ சொன்ன வார்த்தைகள் என்னை செய்ய விடாமல் தடுத்தது."
" நீ அந்த குழந்தையை பார்த்திட்டு இருக்கும் போது தான் நான் உன்னை பார்த்தேன். குழந்தையை பார்த்திட்டு இருந்த உன் முகத்திலும் கண்ணிலும் ஏக்கம் தெரிந்தது அது ஏன் எனக்கு அப்ப புரியலை. அடுத்து என்னை பார்த்தும் அந்த கண்கள் விரிந்தது பாரு யப்பா.... எப்படி இருந்திச்சு தெரியுமா அப்படியே அந்த கண்ணளே என்னை கபளீகரம் பண்ணிட்டடி. ஓடுவந்து என்கிட்ட பேசுவாய் என்று பார்த்தால் பேசலை உன் முகத்தில் குழப்பம் தான் வந்தது.
"ஆனாலும் என் பின்னால் வந்திட்டு இருந்த நீ எப்படியும் கண்டு பிடித்து விடுவாய் என்று பார்த்தால் என் பின்னாடி வந்தியே தவிர என்கிட்ட பேசக்கூட இல்லை. கோயிலில் இருந்து போகிறவறைக்கும் உன்னை திரும்பி திரும்பி பார்த்தேன் கடைசி வரை நீ பேசவே இல்லை. "
"நானாக வந்து பேசலாம் என்று பார்த்தால் நீ சொன்ன வார்த்தை என்னை தடுத்தது. அடுத்தது நீ என்னை தெரியலை என்று சொல்லிட்டா அதை என்னால் தாங்க முடியாதுடி. அப்பதான் என் பிரண்ட்ஸ் கிட்ட அவமானம் பட்டுட்டு அவங்களை பிரிந்து இருந்த நேரம் அப்ப நீயும் எதாவது சொல்லி இருந்தால் என்னால் தாங்க முடியாது என்று தான் உன்னிடம் பேசவில்லை."
*அப்பவும் உன் பின்னால் வந்து உன் அட்ரஸ் கண்டுபிடிக்க நினைச்சேன் தான் ஆனால் அப்படி செய்தால் உன் பேச்சை மீறியதாகும் என்று தான் அங்கிருந்து போனேன். அடுத்த மூன்று மாதம் தினமும் காலையில் அந்த கோயில் வாசலில் நின்னுட்டு இருந்தேன் நீ வருவாய் என்று ஆனால் நீ வரவே இல்லை அதன் பிறகு வேலைப்பளுவால் தினம் வரமுடியாமல் நேரம் கிடைக்கும் போது எல்லாம் வந்து உன்னை அந்த கோயிலில் தேடிட்டு இருந்தேன்."
" கடைசியா நீ ஒரு வருஷம் கழிச்சு அதே நாளில் வந்த அப்பவும் என் பின்னாடியே வந்த எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா?... அப்பவும் வந்து பேசுவாய் என்று எதிர்பார்த்தால் நீ பேசவே இல்லை. ஆனால் உன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரிந்தது."
" ஒரு வேளை நீ வந்து பேசினால் நான் உன்னை தெரியாது என்று சொல்லி விடுவேன் என்று தயங்கிறியா என்று நினைத்தேன். அதனால் உன்னை திரும்பித்திரும்பி பார்த்தால் நீ என்னிடம் பேச நினைத்தால் நான் பார்க்கும் போது உன் முகத்தில் புன்னகை வந்தால் பதில் புன்னகை செய்யலாம் என்று பார்த்தால் நீ ஒரு முறை கூட என்னை பார்த்து சிரிக்கவே இல்லை."
" அப்புறம் என்ன செய்து உன்னிடம் நெருங்கறது என்று தெரியலை நீ வேற சின்ன பெண்ணாக இருந்தாயா அப்ப தான் காலேஜ் முதல் வருடம் முடித்து இருப்பாய் என்று தோன்றியது. அந்த சமயத்தில் உன்னிடம் எப்படி பழகுவது அப்படி பழகினால் அண்ணா என்று சொல்லிடுவியே என்று பயம் வேற இருந்தது. அதான் அப்பவும் பேசாமல் போயிட்டேன்."
" அடுத்த வருஷமும் அதே தான் நடந்தது. நாலாவது முறை அந்த ஷாப்பிங் மாலில் பார்த்தது. ஓடிவந்து என் கைக்கு மருந்து போட்டியே அப்ப உன் முகத்தில் எவ்வளவு வலி தெரிந்தது தெரியுமா எனக்கு அடிபட்டது கூட வலிக்கலை டி ஆனால் அன்னைக்கு உன் கண்ணுல தெரிந்த அந்த வலியை என்னால் தாங்க முடியலைடி அப்பவே உன் தூக்கிட்டு வந்து என்கூடவே வச்சிக்கனும் என்று தோன்றியது."
" அப்பவும் உன் வார்த்தைகள் என்னை தடுத்தது. ஆனால் ஒன்றும் மட்டும் புரிந்தது எனக்கு வலிச்சா உனக்கு வலிக்குது. அதே போல உன் வலி எனக்கும் வலியை தருகிறது என்று தெரிந்தது. அப்ப நீ எனக்குள் இருக்குறது போல் உனக்குள் நான் இருக்கேன் தெரிந்தது."
" அந்த வருடமும் மற்ற மூன்று ஆண்டுகள் போல என் பின்னால் சுற்றினாயே தவிர என்கிட்ட பேசக்கூட முயற்சி செய்யலை. எனக்கு உன் மீது கோபம் தான் வந்தது இன்னும் எத்தனை வருடங்கள் என்னை இப்படி காக்க வைக்கப்போறடி என்று உன்னிடம் கேட்கனும் என்று தோன்றியது. அந்த முறையும் எப்பவும் போல உன் வார்த்தைக்காக தான் அமைதியாக போயிட்டேன்."
" அடுத்து உன்னை பார்த்தது காலேஜ் ஃபங்ஷனில் தான். நிஜமாகவே அங்க உன்னை பார்ப்போன் என்று நினைக்கவில்லை. உன்னை பார்த்து சந்தோஷப்பட்ட அடுத்த நிமிஷமே அது காணாமல் போகவச்சுட்டான் அந்த ஆகாஷ். அவன் உன்னை பார்த்து பாப்பு டால் சொன்ன அடுத்த நொடி என் சந்தோஷம் காணாமல் போயிடுச்சி."
" ஏன் கேட்கறியா அந்த பேரை வச்சு தான் சின்ன வயதில் இருந்து என்னை வெறுப்பேற்றுவான் அவன். என்னைக்கு உன்னை அவன் பார்த்திட்டு வந்தானோ அன்னையில் இருந்து என் பாப்பு டால் என் பாப்பு டால் புராணம் தான். அவன் சொல்லும் போது எனக்கு ரொம்ப பொறாமையாகவும் கோபமும் வரும் முடிந்த அளவு அவன் சொல்லும் போது தவிர்த்து வேறு பேசி திசை திருப்பி விடுவேன். அப்படியும் சில சமயம் கேட்கவேண்டியது வரும் அப்போது எல்லாம் அவன் சொல்லுறதை மனதில் பதியவிடமாட்டேன். அப்படியும் சில விசயங்கள் மனதில் பதிந்து தான் இருந்தது."
அவன் அன்னைக்கு உன்னை பார்த்து பாப்பு டால் என்று சொன்னதும் எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா?... என்னுடைய பனியை அவன் எப்படி உரிமை கொண்டாடலாம் என்ற ஆத்திரமும் வந்தது. அந்த நேரத்தில் உன் டிரஸ் கை லூசாக நழுவியதை பார்த்ததும் அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் உன் பக்கம் வந்திடுச்சு வேலையில் சின்சியாரா இல்லாமல் கேர்லஸ்சாக இருந்து இருக்கியே என்று கோபம் எல்லாம் சேர்ந்து தான் உன்னை அன்னைக்கு வாட்டி எடுத்தேன். உன் மனசை குத்தி கிழிக்கும் படியாக பேசினேன்."
" உன் கண்ணில் கண்ணீரை கண்ட பிறகும் என் கோபத்தை எல்லாம் உன் மீது கொட்டினேன். அன்னைக்கு எவ்வளவு வேதனை பட்டுயிருப்பாய் என்று எனக்கு தெரியும் ஏனென்றால் அன்னைக்கு உன்னை விட அதிகமாக நானும் வேதனை பட்டேன் பனிமா."
" உன்னை வேதனை படுத்திட்டேன் என்ற வேதனை ஒரு பக்கம் என்றால் உன் அப்பா அம்மா இல்லை என்பதே அன்னைக்கு தான் தெரிந்தது. நீ எவ்வளவு தவித்து இருப்ப, அப்ப உன்னை ஆறுதல் படுத்த உன் கூட நானில்லாமல் போயிட்டேனே என்று என் மீதே எனக்கு கோபம் வந்ததுடி. அன்னைக்கு கோயிலில் அந்த குழந்தையை பார்த்த அந்த பார்வைக்கு அர்த்தம் அன்னைக்கு தான் தெரிந்தது. எவ்வளவு வேதனையை அனுபவித்திட்டு இருக்கிற உன்னை நான் இன்னும் வருத்தியிருக்கேன் என்று தெரிந்ததும் எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கிட்டேன். இதுதான் என்று தன் கையில் இருந்த பெரிய தழுப்பை காட்டினான். சாரிடி உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல" என்றவன் குனிந்து பனிமலரின் நெற்றியில் முத்தம் பதித்தவன் மீண்டும் தொடர்ந்தான்.
" அதன் பிறகு உன்னை பற்றி நானாக விசாரிக்காமல் எல்லாம் எனக்கு தெரியவந்தது. வார இறுதி நாட்களில் நீ வெளியே சுற்ற கிளம்புவாய் என்று தெரிந்ததும் நேரம் கிடைக்கும் போது நானும் வந்து தூரத்தில் இருந்து உன் பின்னால் சுற்றியிருக்கிறேன்."
அடுத்த அரை மணி நேரத்தில் அருளானந்தமும் சந்திரபிரகாஷும் வீட்டில் இருந்தனர். அவர்களுக்கும் சூர்யா செய்த செயலை சொன்னதும் அவர்களும் சூர்யாவின் மீது கோபத்தில் காத்திருந்தனர்.
இவ்வளவு பேரின் கோபத்திற்கு ஆளான சூர்யா கோபத்துடன் எதிரிகளை பந்தாடிக்கொண்டு இருந்தான். தன்னை தாக்கியவர்களை பந்தாடிய போதும் அவனின் மனம் முழுவதும் அவனின் பனியிடம் தான் இருந்தது. அதனால் அவனால் முழுமையாக எதிரிகளின் தாக்குதலை தடுக்கமுடியாமல் அவனின் உடலிலும் காயங்கள் ஏற்பட்டன.
இந்த தாக்குதல் பற்றி ஏற்கனவே சூர்யா சொல்லியிருந்ததால் காவல்துறையினர் சரியான நேரத்தில் வந்து தாக்குதல் செய்தவர்கள் அனைவரையும் பிடித்த பிறகு மற்ற வேலைகளை மாதவனை பார்க்க சொன்னவன் வேகமாக காரில் ஏறி வீடு நோக்கி பறந்தான்.
காரின் ஒசை கேட்டு அனைவரும் கோபத்துடன் பார்த்திருந்தவர்கள் அவன் வந்த கோலத்தை கண்டு அனைவரும் எழுந்து நின்று விட்டனர். உடல் முழுவதும் அங்காங்கே இருந்த ரத்த காயங்களுடன் சூர்யாவை கண்டவர்கள் அதுவரை அவன் மீது இருந்த கோபம் மறைந்து இருந்தது.
"சூர்யா... சூர்யா... என்னாச்சு?..." என்று கேட்டவர்களின் குரல் கூட அவன் காதில் விழவில்லை. தன்னை நோக்கி வந்தவர்களை கூட கண்டு கொள்ளாமல் மாடியேறியவன் தன் அறைக்கதவை திறந்து உள்ளே சென்று வாடிய கொடியாய் படுத்திருந்த தன்னவளை கண்டு வேகமாக அருகில் சென்றவன் அவளை தொடப்போக
" சூர்யா இந்த கோலத்தில் மலரை தொடாதே முதலில் குளித்து விட்டு வா" என்ற சந்திரபிரகாஷ் குரலில் அவளை தொடாமல் திரும்பி சந்திரபிரகாஷை பார்த்தவனின் கண்கள் கலங்கி இருந்தன.
அறையின் வெளியே நின்று இருந்த சந்திரபிரகாஷ் தம்பியின் கலங்கிய கண்களை கண்ட உடன் அதிர்ந்து "சூர்யா... " என்று அறையினுள் வந்திருந்தான்.
" என்னடா என்னாச்சு ஏன் இப்படி இருக்க எல்லாவற்றையும் எங்ககிட்ட சொல்லாமல் மறைக்கிறாய் என்று பார்த்தால் இன்று மலரை அடித்து இருக்கிறாய் இப்போது இப்படி உடலில் காயங்களுடன் வந்து நிற்கிறாய். இனியும் மறைக்காமல் சொல்லுடா சொன்னால் தான் பிரச்சனையை சரி செய்ய முடியும்" என்றான்.
சூர்யா பதில் சொல்லாமல் தன் கை விரல்களை கோபத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கவும்
" முதலில் குளித்து விட்டு வா" என்று சூர்யாவை குளியல் அறையில் விட்டு விட்டு அறையில் இருந்து வெளியேறி கீழே சென்ற சந்திரபிரகாஷ் மேலே நடந்ததை கூறிவிட்டு சூர்யா வந்தால் வருந்தும் படி பேசவேண்டாம் என்று கூறினான்.
குளியல் அறையில் இருந்து வெளியே வந்தவன் நேராக பனிமலர் அருகில் வந்தமர்ந்து அவனின் விரல் தடம் பதிந்து சிவந்து இருந்த கன்னத்தை கண்டவனின் கண்கள் கலங்கின.
"சாரிடி... சாரிடி..." என்று கூறியவன் குனிந்து கன்னத்தில் மென்மையான முத்தம் பதித்தவன் வாங்கி வந்திருந்த மருந்தை மென்மையாக தடவிவிட்டு அவளின் அருகில் படுத்து அவளை பார்த்துக்கொண்டே
"உனக்கு என்னை பார்த்தால் கொலைகாரன் மாதிரியா தெரியுதுடி. அந்த அளவுக்கு மோசமானவனாக உன் மனசில் இருக்கேன். உன் கண்ணில் என் மீதான காதலை பார்த்திருக்கேனே, எங்கே என்னை தவறவிட்டுடுவியே என்ற தவிப்பையும் உன் கண்ணில் பார்த்திட்டு இருக்கமுடியாமல் என்னென்ன வேலைகள் செய்து நீ சொன்ன வார்த்தைகளை மீறி உன்னை என் மனைவியாக்கிட்டேன். இப்பவும் உன் வார்த்தைக்காக தான் உன்னை நெருங்காமல் விலகி இருக்கேன்."
" அன்னைக்கு உன்னை கோயில் முன்னாடி பார்த்ததும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா?... ஓடிவந்து உன் முன்னாடி நின்னு நீ கண் விரிச்சு என்னை முதல் முதலாக பார்த்த போது பார்த்தியே அதை பார்க்க ஆவலாக இருந்தது. ஆனால் நீ சொன்ன வார்த்தைகள் என்னை செய்ய விடாமல் தடுத்தது."
" நீ அந்த குழந்தையை பார்த்திட்டு இருக்கும் போது தான் நான் உன்னை பார்த்தேன். குழந்தையை பார்த்திட்டு இருந்த உன் முகத்திலும் கண்ணிலும் ஏக்கம் தெரிந்தது அது ஏன் எனக்கு அப்ப புரியலை. அடுத்து என்னை பார்த்தும் அந்த கண்கள் விரிந்தது பாரு யப்பா.... எப்படி இருந்திச்சு தெரியுமா அப்படியே அந்த கண்ணளே என்னை கபளீகரம் பண்ணிட்டடி. ஓடுவந்து என்கிட்ட பேசுவாய் என்று பார்த்தால் பேசலை உன் முகத்தில் குழப்பம் தான் வந்தது.
"ஆனாலும் என் பின்னால் வந்திட்டு இருந்த நீ எப்படியும் கண்டு பிடித்து விடுவாய் என்று பார்த்தால் என் பின்னாடி வந்தியே தவிர என்கிட்ட பேசக்கூட இல்லை. கோயிலில் இருந்து போகிறவறைக்கும் உன்னை திரும்பி திரும்பி பார்த்தேன் கடைசி வரை நீ பேசவே இல்லை. "
"நானாக வந்து பேசலாம் என்று பார்த்தால் நீ சொன்ன வார்த்தை என்னை தடுத்தது. அடுத்தது நீ என்னை தெரியலை என்று சொல்லிட்டா அதை என்னால் தாங்க முடியாதுடி. அப்பதான் என் பிரண்ட்ஸ் கிட்ட அவமானம் பட்டுட்டு அவங்களை பிரிந்து இருந்த நேரம் அப்ப நீயும் எதாவது சொல்லி இருந்தால் என்னால் தாங்க முடியாது என்று தான் உன்னிடம் பேசவில்லை."
*அப்பவும் உன் பின்னால் வந்து உன் அட்ரஸ் கண்டுபிடிக்க நினைச்சேன் தான் ஆனால் அப்படி செய்தால் உன் பேச்சை மீறியதாகும் என்று தான் அங்கிருந்து போனேன். அடுத்த மூன்று மாதம் தினமும் காலையில் அந்த கோயில் வாசலில் நின்னுட்டு இருந்தேன் நீ வருவாய் என்று ஆனால் நீ வரவே இல்லை அதன் பிறகு வேலைப்பளுவால் தினம் வரமுடியாமல் நேரம் கிடைக்கும் போது எல்லாம் வந்து உன்னை அந்த கோயிலில் தேடிட்டு இருந்தேன்."
" கடைசியா நீ ஒரு வருஷம் கழிச்சு அதே நாளில் வந்த அப்பவும் என் பின்னாடியே வந்த எவ்வளவு சந்தோஷமாக இருந்தது தெரியுமா?... அப்பவும் வந்து பேசுவாய் என்று எதிர்பார்த்தால் நீ பேசவே இல்லை. ஆனால் உன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரிந்தது."
" ஒரு வேளை நீ வந்து பேசினால் நான் உன்னை தெரியாது என்று சொல்லி விடுவேன் என்று தயங்கிறியா என்று நினைத்தேன். அதனால் உன்னை திரும்பித்திரும்பி பார்த்தால் நீ என்னிடம் பேச நினைத்தால் நான் பார்க்கும் போது உன் முகத்தில் புன்னகை வந்தால் பதில் புன்னகை செய்யலாம் என்று பார்த்தால் நீ ஒரு முறை கூட என்னை பார்த்து சிரிக்கவே இல்லை."
" அப்புறம் என்ன செய்து உன்னிடம் நெருங்கறது என்று தெரியலை நீ வேற சின்ன பெண்ணாக இருந்தாயா அப்ப தான் காலேஜ் முதல் வருடம் முடித்து இருப்பாய் என்று தோன்றியது. அந்த சமயத்தில் உன்னிடம் எப்படி பழகுவது அப்படி பழகினால் அண்ணா என்று சொல்லிடுவியே என்று பயம் வேற இருந்தது. அதான் அப்பவும் பேசாமல் போயிட்டேன்."
" அடுத்த வருஷமும் அதே தான் நடந்தது. நாலாவது முறை அந்த ஷாப்பிங் மாலில் பார்த்தது. ஓடிவந்து என் கைக்கு மருந்து போட்டியே அப்ப உன் முகத்தில் எவ்வளவு வலி தெரிந்தது தெரியுமா எனக்கு அடிபட்டது கூட வலிக்கலை டி ஆனால் அன்னைக்கு உன் கண்ணுல தெரிந்த அந்த வலியை என்னால் தாங்க முடியலைடி அப்பவே உன் தூக்கிட்டு வந்து என்கூடவே வச்சிக்கனும் என்று தோன்றியது."
" அப்பவும் உன் வார்த்தைகள் என்னை தடுத்தது. ஆனால் ஒன்றும் மட்டும் புரிந்தது எனக்கு வலிச்சா உனக்கு வலிக்குது. அதே போல உன் வலி எனக்கும் வலியை தருகிறது என்று தெரிந்தது. அப்ப நீ எனக்குள் இருக்குறது போல் உனக்குள் நான் இருக்கேன் தெரிந்தது."
" அந்த வருடமும் மற்ற மூன்று ஆண்டுகள் போல என் பின்னால் சுற்றினாயே தவிர என்கிட்ட பேசக்கூட முயற்சி செய்யலை. எனக்கு உன் மீது கோபம் தான் வந்தது இன்னும் எத்தனை வருடங்கள் என்னை இப்படி காக்க வைக்கப்போறடி என்று உன்னிடம் கேட்கனும் என்று தோன்றியது. அந்த முறையும் எப்பவும் போல உன் வார்த்தைக்காக தான் அமைதியாக போயிட்டேன்."
" அடுத்து உன்னை பார்த்தது காலேஜ் ஃபங்ஷனில் தான். நிஜமாகவே அங்க உன்னை பார்ப்போன் என்று நினைக்கவில்லை. உன்னை பார்த்து சந்தோஷப்பட்ட அடுத்த நிமிஷமே அது காணாமல் போகவச்சுட்டான் அந்த ஆகாஷ். அவன் உன்னை பார்த்து பாப்பு டால் சொன்ன அடுத்த நொடி என் சந்தோஷம் காணாமல் போயிடுச்சி."
" ஏன் கேட்கறியா அந்த பேரை வச்சு தான் சின்ன வயதில் இருந்து என்னை வெறுப்பேற்றுவான் அவன். என்னைக்கு உன்னை அவன் பார்த்திட்டு வந்தானோ அன்னையில் இருந்து என் பாப்பு டால் என் பாப்பு டால் புராணம் தான். அவன் சொல்லும் போது எனக்கு ரொம்ப பொறாமையாகவும் கோபமும் வரும் முடிந்த அளவு அவன் சொல்லும் போது தவிர்த்து வேறு பேசி திசை திருப்பி விடுவேன். அப்படியும் சில சமயம் கேட்கவேண்டியது வரும் அப்போது எல்லாம் அவன் சொல்லுறதை மனதில் பதியவிடமாட்டேன். அப்படியும் சில விசயங்கள் மனதில் பதிந்து தான் இருந்தது."
அவன் அன்னைக்கு உன்னை பார்த்து பாப்பு டால் என்று சொன்னதும் எனக்கு எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா?... என்னுடைய பனியை அவன் எப்படி உரிமை கொண்டாடலாம் என்ற ஆத்திரமும் வந்தது. அந்த நேரத்தில் உன் டிரஸ் கை லூசாக நழுவியதை பார்த்ததும் அவன் மேல் இருந்த கோபம் எல்லாம் உன் பக்கம் வந்திடுச்சு வேலையில் சின்சியாரா இல்லாமல் கேர்லஸ்சாக இருந்து இருக்கியே என்று கோபம் எல்லாம் சேர்ந்து தான் உன்னை அன்னைக்கு வாட்டி எடுத்தேன். உன் மனசை குத்தி கிழிக்கும் படியாக பேசினேன்."
" உன் கண்ணில் கண்ணீரை கண்ட பிறகும் என் கோபத்தை எல்லாம் உன் மீது கொட்டினேன். அன்னைக்கு எவ்வளவு வேதனை பட்டுயிருப்பாய் என்று எனக்கு தெரியும் ஏனென்றால் அன்னைக்கு உன்னை விட அதிகமாக நானும் வேதனை பட்டேன் பனிமா."
" உன்னை வேதனை படுத்திட்டேன் என்ற வேதனை ஒரு பக்கம் என்றால் உன் அப்பா அம்மா இல்லை என்பதே அன்னைக்கு தான் தெரிந்தது. நீ எவ்வளவு தவித்து இருப்ப, அப்ப உன்னை ஆறுதல் படுத்த உன் கூட நானில்லாமல் போயிட்டேனே என்று என் மீதே எனக்கு கோபம் வந்ததுடி. அன்னைக்கு கோயிலில் அந்த குழந்தையை பார்த்த அந்த பார்வைக்கு அர்த்தம் அன்னைக்கு தான் தெரிந்தது. எவ்வளவு வேதனையை அனுபவித்திட்டு இருக்கிற உன்னை நான் இன்னும் வருத்தியிருக்கேன் என்று தெரிந்ததும் எனக்கு நானே தண்டனை கொடுத்துக்கிட்டேன். இதுதான் என்று தன் கையில் இருந்த பெரிய தழுப்பை காட்டினான். சாரிடி உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல" என்றவன் குனிந்து பனிமலரின் நெற்றியில் முத்தம் பதித்தவன் மீண்டும் தொடர்ந்தான்.
" அதன் பிறகு உன்னை பற்றி நானாக விசாரிக்காமல் எல்லாம் எனக்கு தெரியவந்தது. வார இறுதி நாட்களில் நீ வெளியே சுற்ற கிளம்புவாய் என்று தெரிந்ததும் நேரம் கிடைக்கும் போது நானும் வந்து தூரத்தில் இருந்து உன் பின்னால் சுற்றியிருக்கிறேன்."