தூரமே தூரமாய் 19
நேற்று தன்னை சிறு பார்வைகூட பார்த்திடாது, யாரோப்போல் விறைத்துச் சென்றவன், இன்று தன்வழியை மறித்து முன்னே நிற்பதை நம்ப முடியாது பார்த்தாள் இமையாள்.
அவளின் இமைகள் புருவம் தொட்டிருந்தது.
'இப்படி பார்த்தே சாய்த்திடுவாள்' என்று மனதில் கிறங்கிய ருது, வண்டியிலிருந்து கீழே இறங்கிட, இமையாள் தன் அதிர்வை மறைத்துக்கொண்டு முறைத்து பார்த்தாள்.
'தேறிட்டாள்.' பக்கம் சென்று நின்றான்.
மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் அளந்தான்.
அவன் விட்டுச்சென்ற அன்று நேர்ந்த விபத்தில் ஏற்பட்ட காயத்தின் தழும்பு வலது பக்க நெற்றியில் கீறலாய். தொட்டுப்பார்க்க எழுந்த கையினை சட்டென்று இறுக்கிக்கொண்டான்.
அவனது செயலில் அவளது இதழ்கள் தானாக பிரிந்தது.
நேற்று கண்ணாடி வைத்து தன் பார்வையை மறைத்தவன், இன்று அதனைக் கழட்டி பாக்கெட்டில் வைத்தவனாக அப்பட்டமாக பார்வையால் விழுங்கினான்.
அவனின் பார்வை ரசிப்பில், கோபத்தை இழுத்துப் பிடிக்க வேண்டியிருந்தது அவளுக்கு.
"யார் சார் நீங்க?" அவன் முன் தன்னுடைய தடுமாற்றத்தை மறைக்க கோபமாக கேள்வி தொடுத்தாள்.
'மேடம் ரிவெஞ் எடுக்குறீங்களோ?' நொடியில் யூகித்து, உள்ளுக்குள் அட்டகாசமாக சிரித்துக்கொண்டான்.
"நான் யாருன்னு தெரியாதா?"
"தெரியாது?"
"ஆஹான்..."
"தெரிய வைக்கணுமே!" என்ற ருது பக்கவாட்டக சென்று ஒரு கையை வண்டியின் முன்னும், ஒரு கையை வண்டியின் பின்னும் அவளை நடுவில் சிறைப்பிடுத்தவாறு ஊன்றி முகம் அருகே குனிய, அவளோ மிரட்சியாய், எதிர் பக்கம் உடலை சரித்தாள்.
'கிஸ் பண்ணப்போறாரோ?' என நினைத்த வெங்கட் சுற்றி யாரும் இருக்கின்றனரா என பார்வையை சுழலவிட்டான்.
அவர்களைத் தவிர்த்து சாலை வெறிச்சோடி இருந்தது. அது முக்கிய சாலையிலிருந்து இமையாள் பள்ளிக்கு செல்லும் கிளை சாலை என்பதால் நடமாட்டமின்றி இருந்தது.
'சார் செமயா லவ் பன்றாரே! நாமளும் ராதுகிட்ட இப்படி ட்ரை பண்ணனும்' என்று எண்ணிய வெங்கட், அடுத்த நொடியே, 'ஓடவிட்டு உதைப்பாள்' என சிரித்திருந்தான்.
ருது காதல் செய்து ஒன்றாக சுற்றிய நாட்களில் கூட இத்தனை நெருக்கம் காண்பித்தது இல்லை. இன்று அவனது செயல் புதியதாகத் தெரிய கோபத்தை முயன்று காண்பித்தாள்.
"ரொம்பத்தான்" என்ற ருது, "ஸ்டேண்ட் எடுத்துட்டு வண்டியை ஓட்டுடி" என தானே அதனை சரி செய்து, அவளது முன் நெற்றியில் தவழ்ந்த சிறு முடியை ஊதினான்.
அவள் மேலும் முறைக்க...
"என்னவாம்?" என்றான், மேலும் அவளை நெருங்கி. இன்னும் அவள் சரிய...
"கையெடுத்தேன் விழுந்திடுவ" என்றான்.
"யார் நீங்க? போலீஸை கூப்பிடுவேன்" என்றாள். வெங்கட் வேறு தங்களையே பார்த்திருக்க... உள்ளுக்குள் உதறலாக இருக்க என்ன சொல்வதென்று தெரியாது உளறினாள்.
அதில் அட்டகாசமாக சிரித்த ருது...
"உன் புருஷனே பெரிய போலீஸ் தான்'டி. இன்னைக்கு நியூஸ் ஏதும் பார்க்கலையோ?" எனக் கேட்டான்.
இம்முறை இமையாளுக்கு நிஜமாகவே அத்தனை கோபம் அவன் மீது எழுந்தது.
'கல்யாணம் ஆகிடுச்சுன்னு விட்டுட்டுப்போயிட்டு, இப்போ வந்து பொண்டாட்டியாம்? என்ன நினைச்சிட்டு இருக்கார்?' என்று மனதோடு பொறுமியவள், வெளியில் அப்பட்டமாக கண்கள் சிவக்கும் அளவுக்கு முறைத்து பார்த்தாள்.
"முறைக்காதடி! அந்த கண்ணுல கிஸ் பண்ணணும் தோணுது" என்றவனின் வண்டியின் முன்பக்கமிருந்த கையை தட்டிவிட்டவள், வேகமாக வண்டியை கிளப்பிக் கொண்டு, ருதுவை திரும்பித் திரும்பி பார்த்தவாறு சென்றாள்.
"நேரா பார்த்து ஓட்டுடி" என்றவனிடம் பல வருடங்களுக்குப் பின்னர் அப்படியொரு சிரிப்பு. மனம் நிறைந்த சந்தோஷமான சிரிப்பு. முகம் முழுக்க புன்னகையால் வசீகரத்தது.
துள்ளளோடு நடந்து வந்து வண்டியில் ஏறியவனின் கைகள் ஸ்டியரிங்கில் தாளமிட, வாய் ஏதோ பாடலை முணுமுணுத்தது.
"காலையில் வீட்டில் சண்டையாண்ணா? இங்க வந்து சமாதானம் படுத்துறீங்க?" ஆர்வம் தாங்காது வெங்கட் கேட்டுவிட்டான்.
"அவள் என் மாமனார் வீட்டில் இருக்காடா?" என்ற ருது லாவகமாக வண்டியை வளைத்து திருப்பி சாலையில் செலுத்தினான்.
"அவ்ளோ பெரிய சண்டையா?"
"அடேய் இன்னும் கல்யாணமே ஆகலடா?"
ருது சொல்லியதில் வெங்கட்டிடம் பேரதிர்ச்சி.
"அண்ணா... சார்!?"
"என்னடா?"
"அப்போ தேஷ்?"
"எல்லாம் இப்போவே சொல்லிட்டால் கதை முடிஞ்சிடும்டா. படிக்கிற ரீடர்ஸ்க்கு சஸ்பென்ஸ் வேணாமா?" எனக் கேட்ட ருதுவுக்கு இதில் தன்னைச் சார்ந்தவர்களை முக்கியமாக தேஷ்ஷையும், இமையாளையும் காயப்படுத்தாமல் எல்லாம் எப்படி சரி செய்வது எனும் கவலை தன்னைப்போல் எழுந்தது.
பள்ளிக்கு சென்ற பின்னரும் இமையாளால் நிலைக்கொள்ள முடியவில்லை.
'என்னவாம் இப்போ அவங்களுக்கு?' என மனதோடு கேட்டுக் கேட்டு பொறுமினாள். முகத்தில் ஒருவித சிடுசிடுப்பு தென்பட்டது.
'ரொம்ப பன்றாங்க இமயா! இவங்க வேணான்னா போவாங்க. வேணுன்னா வருவாங்க. நாம ஒன்னுமே ரியாக்ட் பண்ணக்கூடாதா? இப்போ தான் இன்னும் கோபம் கோபமா வருது' என்று புலம்பியவள், இனியனுக்கு அழைத்து தலையுமில்லாது வாலுமில்லாது ருதுவை திட்டி வைத்திட்டாள்.
'இப்போ யாரை திட்டுறாள் இவள்?' என்று குழம்பியபடி அப்போது தான் வந்து சேர்ந்தவன், காரிலிருந்து இறங்கி மருத்துவமனை கட்டிடம் நோக்கி நடக்க, எதிரே ஷிவன்யா தென்பட்டாள்.
இனியன் பார்த்தும் பார்க்காததைப்போல் கடக்க முயல...
"ஹலோ டாக்டர்" என்றழைத்து அவனிடம் ஓடி வந்தாள்.
"சொல்லுங்க?"
"தேன்க் யூ டாக்டர்."
"எதுக்கு?"
"ப்ரொஜெக்ட் முடிக்க ஹெல்ப் பண்ணதுக்கு."
"அதான் அப்போவே சொல்லிட்டிங்களே!"
"திரும்ப சொன்னால் கேட்டுக்கமாட்டிங்களா? இதை சாக்கு வச்சு பார்க்க வந்தால்... ரொம்பத்தான்." ஷிவன்யாவின் முணுமுணுப்பு அவனுக்கும் கேட்டது. எதிர்பக்கம் திரும்பி புன்னகைத்துக் கொண்டான்.
"உங்க அண்ணா தானே சிட்டி புது டிசி. மார்னிங் நியூஸ் பார்த்தேன். அவங்க ஓகே தானே?" என நண்பனின் நலம் அறிந்திட மூன்றாம் மனிதன் போல் வினவினான்.
"அதெல்லாம் அண்ணா பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுவாங்க. அவங்களுக்கு சின்ன கீறல் கூட விழாது" என்றாள்.
"ம்ம்ம்" என்ற இனியன், "எனக்கு கன்சல்டிங் டைம் ஆச்சு" என்று நகர்ந்திட, "டாக்டர்" என விளித்தவள், அவன் முன் சாக்லேட் ஒன்றை நீட்டினாள்.
"எதுக்கு?"
"உங்களுக்கு கொடுக்கணும் வாங்கிட்டு வந்துட்டேன். வாங்கிக்கமாட்டிங்களா?" அவள் முகம் சுருக்கி கேட்டிட...
"அடிக்கடி சாக்லெட் சாப்பிடுறது நல்லதில்லை" என்றான்.
"ரொம்பத்தான் டாக்டரா இருக்கீங்க" என்றவள், "ஷேர் பண்ணிக்கலாம். ஷேரிங் இஸ் அ கேரிங்" என்றிட,
"இப்போ என்ன நான் பாதி சாக்லெட் வாங்கிக்கணும். அவ்வளவுதானே? கொடு" என்றான். மறைக்கப்பட்ட மகிழ்வோடு.
ஷிவன்யா பாதி கொடுத்ததும் வாங்கி சுவைத்தவன், "ஹேப்பி?" என்றிட, அவளோ விரிந்த புன்னகையோடு "டபுள் ஹேப்பி" என்றாள்.
அந்நேரம்...
"ஷிவன்யா" என்று தியா அழைக்க...
"கரடி" என்று முனங்கியவளாக, "அப்புறம் பார்க்கலாம் டாக்டர்" என்று சென்றவள், சென்ற வேகத்திற்கு தியாவின் தலையில் ஓங்கிக் கொட்டியிருந்தாள்.
அதனை பார்த்த இனியன் இருக்குமிடம் மறந்து சத்தமிட்டு சிரித்திருந்தான்.
அவனது சிரிப்பில் ஷிவன்யா திரும்பிப் பார்த்த பின்னரே தன் சூழல் புரிந்து வேகமாக நகர்ந்திருந்தான்.
"உன் ஆளுக்கு ரொம்பத்தான்... நான் கொட்டு வாங்குனதுக்கு அப்படி சிரிக்கிறார்" என்று தியா தலையை தேய்த்தபடி புலம்பினாள்.
"விடு பேபி. என்ன இருந்தாலும் அவர் உனக்கு அண்ணா" என்று ஷிவன்யா சொல்ல...
"எதே அண்ணாவா? நான் சைட் கூட அடிக்கக் கூடாதாடி?" என்று தியா பாவம்போல் வினவ,
"கூடவே கூடாது" என்றாள் ஷிவன்யா.
"அழகா இருக்கார் பேபி. உன் லவ் அவர் கன்ஃபார்ம் பன்ற வரை என் கிரஷ் லிஸ்டில் வச்சிக்கிறனே?"
"நோ சான்ஸ் பேபி. அண்ணாவை கிரஷ் அது இதுன்னு... இதெல்லாம் நல்லாவா இருக்கு பேபி" என்று ஷிவன்யா முகத்தை சுளித்து கேட்டதில் தியா தலைக்குமேல் கரம் குவித்து கும்பிட்டே விட்டாள்.
_________________________________
ருது எத்தனைக்கு எத்தனை மகிழ்வோடு காவல் நிலையம் வந்து சேர்ந்தானோ... அந்த மகிழ்வு யாவும் வளாகத்தினுள் நின்றிருந்த வாகனத்தைக் கண்டதும் துணி கொண்டு துடைத்தார் போல் மறைந்தது.
"எப்படா விடியும்ன்னு காத்திருந்தார் போல?" என்று இறங்கிய வெங்கட், திடீரென மாறிவிட்ட ருதுவின் முகம் பார்த்து புரியாது நின்றான்.
வண்டியை நிறுத்திய பின்னரும் கீழிறங்காது ஸ்டியரிங்கை அழுத்தி பிடித்தபடி இருந்தான் ருது. நரம்புகள் புடைத்து கிளம்பி, கண்ணின் விழிப்படலம் செந்நிறம் பூண்டது.
"சார்... சார்..." வெங்கட் மறுபக்கம் வந்து அழைத்த அழைப்பிற்கு ருதுவிடம் பதிலில்லை.
"அண்ணா" என்று அவன் ருதுவின் கையை பிடித்து உலுக்க..
எதிலிருந்தோ மீள்பவன் போல, திடுக்கிட்டு தளர்ந்தான்.
"அண்ணா ஆர் யூ ஓகே?"
"ம்" என்று ஒலித்த ருதுவின் குரலே மாறுபட்டிருந்து.
"கைலாஷ் வந்திருக்கார் போல சார்" என்றான் வெங்கட்.
அதற்கும் ம் மட்டுமே மொழிந்த ருது வண்டியிலிருந்து இறங்கி நின்றான்.
'எப்பவா இருந்தாலும், நேருக்கு நேர்... இப்படி ஒரு சூழல் நிச்சயம் உண்டு. இன்னைக்கே ஃபேஸ் பண்ணிடு ருது' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு விறைத்து நின்றவன், முகத்தில் ஒருவித கடுமையை கொண்டு வந்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான்.
அலுவலகத்தின் மத்தியில் நடுநாயகமாக இருக்கையில் கால் மேல் காலிட்டு கைலாஷ் அமர்ந்திருக்க... மொத்த காவல்துறை பணியாளர்களும் நின்றிருந்தனர்.
உள்ளே நுழைந்த ருது தனக்கு சல்யூட் வைத்த பணியாளர்களுக்கு தலையசைப்பைக் கொடுத்து பார்வையை சுழலவிட்டான்.
ருது உள் வந்த நொடி முதல் கைலாஷின் பார்வை ருதுவின் மீதே. அப்பார்வையில் கோபமோ, வன்மமோ, பழிவாங்கலோ இல்லை. மாறாக அன்பு, கனிவு, பரிவு மிதமிஞ்சியது.
ருது வெறுப்பாக முகம் திருப்பிக் கொண்டான்.
"உங்களுக்கெல்லாம் வேலை இல்லையா? எதுக்கு இப்படி நின்னுட்டு இருக்கீங்க?" என்று தன் பணியாளர்களிடம் கடிந்து கொண்ட ருது, "மல்லிக்காக்க எப்.ஐ.ஆர் ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்து வையுங்க. கோர்ட்டுக்கு கூட்டிட்டுப் போகணும்" என்றவன், "ஒருத்தனையும் விடாமல் வண்டியில் ஏத்துங்க" என்று கிருஷ்ணன் மற்றும் வெங்கட்டிடம் கூறினான்.
ருது தனது அறைக்கு கைலாஷ்ஷை தாண்டிக்கொண்டு தான் செல்ல வேண்டும். கைலாஷ் என்றொருவன் இருப்பதாகவே காட்டிக்கொள்ளாது ருது தன் நீண்ட எட்டுக்கள் வைத்து கடந்து சென்றான்.
அப்போதும் ருதுவை பார்க்கும் கைலாஷ்ஷின் பார்வையில் மாற்றமில்லை.
"என்ன அண்ணாத்த அவன் சீன் போட்டுக்கினு இருக்கான். நீ என்னம்மோ பார்ட்டியில் ஆட வந்த பொண்ணை பார்த்துகினு இருக்கமாறு ரசிச்சிக்கினு இருக்க" என்று செல்லுக்குள் இருந்து கத்தினான் காந்தா.
அவனுக்கு இரண்டு நாட்களாக காவல் நிலையத்தில் கம்பிகளுக்கு நடுவே இருக்கும் கடுப்பு. அத்தோடு இரவு தன்னை மீட்க வந்த கைலாஷ் எதுவுமே செய்யாது ருதுவின் சொல்லைக்கேட்டு திரும்பிச்சென்ற ஆத்திரம் வேறு.
முதல்முறை கைலாஷ்ஷின் மீது காந்தா அதிருப்தியில் இருந்தான்.
இதற்காகத்தான் ருது காய் நகர்த்துகிறானோ?
"சும்மா இரு காந்தா. டிசி சார் நல்லாவே ஆடுறார். எவ்வளவு தூரம் போகிறார் பார்ப்போம்." தன் நிலையில் மாற்றமில்லாது கைலாஷ் சொல்ல, காந்தா தன் கோபத்தை உள்ளங்கையில் காண்பித்தான். அவனால் கைலாஷ்ஷை பகைத்துக்கொள்ள முடியாது. முடிசூடா ராஜாவாக காந்தா பேட்டைக்குள் அவன் வலம் வர காரணமே கைலாஷ் தானே!
"கோர்ட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டால் எல்லாம் முடிஞ்சுது அண்ணாத்த. நம்ம மேல இருக்கும் பயம் காணாமல் போயிடும்" என்றான் காந்தா.
"சும்மா என்னடா சலம்பிக்கிட்டே இருக்க. சங்கரும் உன்னை மாதிரி உள்ளதானே இருக்கான். எப்படி அமைதியா இருக்கான். கொஞ்சம் பொறுமையா இரு" என்று கைலாஷ் இருக்கையை விட்டு எழ, ருது தன்னுடைய அறையிலிருந்து தொப்பியை தலைக்கு மாட்டியவனாக வெளியில் வந்தான்.
"எல்லாரையும் வேனில் ஏத்தியாச்சா?"
"ரெண்டு வேன் சார். போதல" என்றான் வெங்கட்.
"இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?"
"காந்தா, எம்.எல்.ஏ சங்கர், அல்லக்கைங்க ஒரு நாலு சார்" என்ற வெங்கட் காந்தா முறைத்த முறைப்பில் ருதுவின் பக்கவாட்டகா தன்னை மறைத்துக் கொண்டான்.
"போட்டிருக்க காக்கிக்காவது கொஞ்சம் தைரியமா இருக்க மாதிரி காட்டிக்கலாம்" என்று வெங்கட்டிற்கு மட்டும் கேட்குமாறு கூறினான் ருது.
"இங்கிருந்து கோர்ட் எவ்வளவு தூரம்?"
"நாலு கிலோமீட்டர் சார்" என்று கிருஷ்ணன் சொல்லியதும்,
"அவ்வளவு தானா? அப்போ மீதியிருக்க ஆறு பேரையும் நடக்க வச்சு கூட்டி வாங்க" என்றான்.
"ஏய்!" காந்தா எகிறிட, அப்போதும் கைலாஷ் அமைதியாகத்தான் இருந்தார். அதில் கைலாஷ் தன்னை காப்பாற்றிடுவான் என்ற நம்பிக்கையை காந்தா இழந்திருந்தான்.
"என்ன அண்ணாத்தா இப்போவும் சும்மா பார்த்துக்கினு இருக்க?"
கட்சியே தன்னை கைவிட்ட பின்னர், சத்தமிட்டு மேலும் சிக்கிக்கொள்ளக் கூடாதென சங்கர் அமைதியாக இருந்தார். அந்த பொறுமை காந்தாவிடம் கொஞ்சமும் இல்லை. பல பேரை ஆட்டிவைத்தே பழக்கப்பட்டவனுக்கு அடங்கிப்போக முடியவில்லை.
"நான் என் வண்டியில் கூட்டிட்டு வரேன்." கைலாஷ் ருதுவிடம் வாய் திறந்தார்.
"யார் நீங்க?" என்று பார்வையில் எட்ட நிறுத்தி, அழுத்தமாக வினவிய ருது, "கம்பளையண்ட் கொடுக்க வந்தால் அந்த வேலையை மட்டும் பாருங்க" என்றதோடு, "சும்மா வரவங்க போறவங்களை உட்கார வைக்க இதென்ன சத்திரமா? என்னன்னு கேட்டு அனுப்புங்க" என்று மல்லிகாவிடம் கோபத்தைக் காட்டினான்.
"நடக்க முடியாது சொன்னால் ட்ரெஸ்ஸை கழட்டிடுங்க" என்ற ருதுவை காந்தாவால் முறைக்க மட்டுமே முடிந்தது.
"கிருஷ்ணன் அண்ணா உங்களால் அவ்வளவு தூரம் நடக்க முடியுமா?"
"முட்டி வலி இருக்கு சார்" என்று அவர் சொல்ல, "வெங்கட், மல்லிகாக்கா ஆறு பேரையும் கூட்டிட்டு வந்திடுங்க" என்று வெளியேறினான்.
இரு வேன்களும் முன் செல்ல... அவர்களைத் தொடர்ந்து ருது ஜீப்பில் கிருஷ்ணன் உடன் பயணித்தான்.
"உங்களை அவன் ஒரு ஆளா கூட மதிக்கல!" காந்தா கைலாஷ்ஷை சீண்டிப்பார்த்தான். அதற்கும் அவர் அசரவில்லை.
ருது என்ன செய்தாலும் கைலாஷ்ஷின் பிரதிபலிப்பு மௌனமாக மட்டுமே இருக்கும். அவரே நினைத்தாலும் ருதுவை ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்குள் முக்கியமான பந்தம் ஒன்றுள்ளதே. ருதுவே இல்லையென்றாலும், கைலாஷ் யாரென்றே தெரியாதென மறுத்தாலும் மாற்றிட முடியாது!
கையில் விலங்கினை மாட்டி அவர்களை நடத்தி அழைத்துச்செல்ல, மொத்த ஊடகமும் நேரலை செய்யத் துவங்கியிருந்தது.
"ஏன் மல்லிக்காக்க உண்மையாவே கிருஷ்ணன் அண்ணாக்கு முட்டி வலி இருக்குமா?" வெங்கட் தன்னுடன் நடந்து வரும் மல்லிகாவிடம் வினவினான்.
"இருக்கும் சார். வயசானவர் இல்லையா?"
"என்ன பெரிய வயசு. நாற்பத்தி அஞ்சு தானே?" என்ற வெங்கட், "இந்த காந்தாவுக்கு ஐம்பது இருக்கும். எம்.எல்.ஏ. வுக்கு இன்னும் ரெண்டு கூட இருக்கும். இவங்களுக்கெல்லாம் முட்டி வலிக்காதா?" என்ற வெங்கட்டினை முறைத்த மல்லிகா... "உங்ககிட்ட இருந்து ஓடக்கூட தெம்பில்லை சார். கொஞ்சம் அமைதியா வாங்க" என்றார்.
"யாருக்கு தண்டனைன்னே தெரியல." மல்லிகா புலம்பிட,
"ஆமா'ல" என்றான் வெங்கட்.
"ம்க்கும் இதுவே இப்போதான் புரியுதா?" மல்லிகா கேட்டதில் சங்கர் சிரித்திட, "கொஞ்சம் வேகமா நடங்க" என்று கடிந்தான் வெங்கட்.
"உன்னால இந்த நிலையிலும் எப்படிடா சிரிக்க முடியுது?" காந்தா ஆத்திரத்தின் உச்சத்தில் சங்கரிடம் கேட்டிருந்தான்.
"எப்படியிருந்தாலும் தண்டனை அனுபவிக்கப்போறோம் தெரிஞ்சுப்போச்சு. கைலாஷ் நமக்கு உதவப்போவதில்லை. சும்மா எதுக்கு சோக கீதம் வாசிக்கணும்" என்ற சங்கரின் பேச்சினை காந்தா அலசி ஆராய்ந்தான்.
சங்கர் சொல்வது உண்மை என்றே அவனுக்குத் தோன்றியது.
எப்போதும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் முதல் ஆளாக காப்பாற்ற ஓடி வரும் கைலாஷ் இம்முறை மிகுந்த பொறுமையாக இருப்பது சந்தேகமாக இருந்தது. அதுவும் கிட்டத்தட்ட பாதி பேட்டையே உள்ளிருக்கு. கைலாஷ்ஷின் செல்வ வாழ்க்கைக்கு அவர்கள் இன்றியமையாதவர்கள். அப்படியிருந்தும் கைலாஷ்ஷினை இந்த பொறுமை காந்தாவை யோசிக்க வைத்தது.
"என்ன யோசிக்கிற காந்தா?" எனக்கேட்ட சங்கர், "நீ இதுவரை கைலாஷ்ஷிற்காக செய்த தவறுக்கெல்லாம் ஆதாரம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் போலீசுக்கு வரவேற்பு கொடுக்க, ஒருத்தனை கொன்னு மாட்டினியே அதுக்கானது, போதைப்பொருள் விற்பதுக்கானதுன்னு பக்கா எவிடென்ஸ் அந்த போலீசு வச்சிருக்கான். போதா குறைக்கு எல்லா சேனலிலும் உன் ஆளுங்க பண்ண கலவரம், நைட் ஸ்டேஷனில் பண்ண ஆட்டம்ன்னு எல்லாம் வெளிவந்திருக்கு. ஜெயிலுக்கு போறது உறுதி. உனக்குத் தூக்குத் தண்டனையே கூட கிடைக்கலாம்" என்ற சங்கர், "இப்போ நமக்கு கிடைக்க வேண்டிய தண்டனையை எப்படி குறைக்கிறதுன்னு மட்டும் தான் யோசிக்கணும்" என்றார்.
காந்தாவுக்கு தான் தப்பித்தால் போதுமென்ற நிலை. கைலாஷ் மேலிருந்த நம்பிக்கையே போயிருந்தது.
"என்ன பண்ணனும்?"
"அப்ரூவரா மாறனும்?"
காந்தா யோசிக்க ஆரம்பித்தான்.
நேற்று தன்னை சிறு பார்வைகூட பார்த்திடாது, யாரோப்போல் விறைத்துச் சென்றவன், இன்று தன்வழியை மறித்து முன்னே நிற்பதை நம்ப முடியாது பார்த்தாள் இமையாள்.
அவளின் இமைகள் புருவம் தொட்டிருந்தது.
'இப்படி பார்த்தே சாய்த்திடுவாள்' என்று மனதில் கிறங்கிய ருது, வண்டியிலிருந்து கீழே இறங்கிட, இமையாள் தன் அதிர்வை மறைத்துக்கொண்டு முறைத்து பார்த்தாள்.
'தேறிட்டாள்.' பக்கம் சென்று நின்றான்.
மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அவளை உச்சி முதல் பாதம் வரை பார்வையால் அளந்தான்.
அவன் விட்டுச்சென்ற அன்று நேர்ந்த விபத்தில் ஏற்பட்ட காயத்தின் தழும்பு வலது பக்க நெற்றியில் கீறலாய். தொட்டுப்பார்க்க எழுந்த கையினை சட்டென்று இறுக்கிக்கொண்டான்.
அவனது செயலில் அவளது இதழ்கள் தானாக பிரிந்தது.
நேற்று கண்ணாடி வைத்து தன் பார்வையை மறைத்தவன், இன்று அதனைக் கழட்டி பாக்கெட்டில் வைத்தவனாக அப்பட்டமாக பார்வையால் விழுங்கினான்.
அவனின் பார்வை ரசிப்பில், கோபத்தை இழுத்துப் பிடிக்க வேண்டியிருந்தது அவளுக்கு.
"யார் சார் நீங்க?" அவன் முன் தன்னுடைய தடுமாற்றத்தை மறைக்க கோபமாக கேள்வி தொடுத்தாள்.
'மேடம் ரிவெஞ் எடுக்குறீங்களோ?' நொடியில் யூகித்து, உள்ளுக்குள் அட்டகாசமாக சிரித்துக்கொண்டான்.
"நான் யாருன்னு தெரியாதா?"
"தெரியாது?"
"ஆஹான்..."
"தெரிய வைக்கணுமே!" என்ற ருது பக்கவாட்டக சென்று ஒரு கையை வண்டியின் முன்னும், ஒரு கையை வண்டியின் பின்னும் அவளை நடுவில் சிறைப்பிடுத்தவாறு ஊன்றி முகம் அருகே குனிய, அவளோ மிரட்சியாய், எதிர் பக்கம் உடலை சரித்தாள்.
'கிஸ் பண்ணப்போறாரோ?' என நினைத்த வெங்கட் சுற்றி யாரும் இருக்கின்றனரா என பார்வையை சுழலவிட்டான்.
அவர்களைத் தவிர்த்து சாலை வெறிச்சோடி இருந்தது. அது முக்கிய சாலையிலிருந்து இமையாள் பள்ளிக்கு செல்லும் கிளை சாலை என்பதால் நடமாட்டமின்றி இருந்தது.
'சார் செமயா லவ் பன்றாரே! நாமளும் ராதுகிட்ட இப்படி ட்ரை பண்ணனும்' என்று எண்ணிய வெங்கட், அடுத்த நொடியே, 'ஓடவிட்டு உதைப்பாள்' என சிரித்திருந்தான்.
ருது காதல் செய்து ஒன்றாக சுற்றிய நாட்களில் கூட இத்தனை நெருக்கம் காண்பித்தது இல்லை. இன்று அவனது செயல் புதியதாகத் தெரிய கோபத்தை முயன்று காண்பித்தாள்.
"ரொம்பத்தான்" என்ற ருது, "ஸ்டேண்ட் எடுத்துட்டு வண்டியை ஓட்டுடி" என தானே அதனை சரி செய்து, அவளது முன் நெற்றியில் தவழ்ந்த சிறு முடியை ஊதினான்.
அவள் மேலும் முறைக்க...
"என்னவாம்?" என்றான், மேலும் அவளை நெருங்கி. இன்னும் அவள் சரிய...
"கையெடுத்தேன் விழுந்திடுவ" என்றான்.
"யார் நீங்க? போலீஸை கூப்பிடுவேன்" என்றாள். வெங்கட் வேறு தங்களையே பார்த்திருக்க... உள்ளுக்குள் உதறலாக இருக்க என்ன சொல்வதென்று தெரியாது உளறினாள்.
அதில் அட்டகாசமாக சிரித்த ருது...
"உன் புருஷனே பெரிய போலீஸ் தான்'டி. இன்னைக்கு நியூஸ் ஏதும் பார்க்கலையோ?" எனக் கேட்டான்.
இம்முறை இமையாளுக்கு நிஜமாகவே அத்தனை கோபம் அவன் மீது எழுந்தது.
'கல்யாணம் ஆகிடுச்சுன்னு விட்டுட்டுப்போயிட்டு, இப்போ வந்து பொண்டாட்டியாம்? என்ன நினைச்சிட்டு இருக்கார்?' என்று மனதோடு பொறுமியவள், வெளியில் அப்பட்டமாக கண்கள் சிவக்கும் அளவுக்கு முறைத்து பார்த்தாள்.
"முறைக்காதடி! அந்த கண்ணுல கிஸ் பண்ணணும் தோணுது" என்றவனின் வண்டியின் முன்பக்கமிருந்த கையை தட்டிவிட்டவள், வேகமாக வண்டியை கிளப்பிக் கொண்டு, ருதுவை திரும்பித் திரும்பி பார்த்தவாறு சென்றாள்.
"நேரா பார்த்து ஓட்டுடி" என்றவனிடம் பல வருடங்களுக்குப் பின்னர் அப்படியொரு சிரிப்பு. மனம் நிறைந்த சந்தோஷமான சிரிப்பு. முகம் முழுக்க புன்னகையால் வசீகரத்தது.
துள்ளளோடு நடந்து வந்து வண்டியில் ஏறியவனின் கைகள் ஸ்டியரிங்கில் தாளமிட, வாய் ஏதோ பாடலை முணுமுணுத்தது.
"காலையில் வீட்டில் சண்டையாண்ணா? இங்க வந்து சமாதானம் படுத்துறீங்க?" ஆர்வம் தாங்காது வெங்கட் கேட்டுவிட்டான்.
"அவள் என் மாமனார் வீட்டில் இருக்காடா?" என்ற ருது லாவகமாக வண்டியை வளைத்து திருப்பி சாலையில் செலுத்தினான்.
"அவ்ளோ பெரிய சண்டையா?"
"அடேய் இன்னும் கல்யாணமே ஆகலடா?"
ருது சொல்லியதில் வெங்கட்டிடம் பேரதிர்ச்சி.
"அண்ணா... சார்!?"
"என்னடா?"
"அப்போ தேஷ்?"
"எல்லாம் இப்போவே சொல்லிட்டால் கதை முடிஞ்சிடும்டா. படிக்கிற ரீடர்ஸ்க்கு சஸ்பென்ஸ் வேணாமா?" எனக் கேட்ட ருதுவுக்கு இதில் தன்னைச் சார்ந்தவர்களை முக்கியமாக தேஷ்ஷையும், இமையாளையும் காயப்படுத்தாமல் எல்லாம் எப்படி சரி செய்வது எனும் கவலை தன்னைப்போல் எழுந்தது.
பள்ளிக்கு சென்ற பின்னரும் இமையாளால் நிலைக்கொள்ள முடியவில்லை.
'என்னவாம் இப்போ அவங்களுக்கு?' என மனதோடு கேட்டுக் கேட்டு பொறுமினாள். முகத்தில் ஒருவித சிடுசிடுப்பு தென்பட்டது.
'ரொம்ப பன்றாங்க இமயா! இவங்க வேணான்னா போவாங்க. வேணுன்னா வருவாங்க. நாம ஒன்னுமே ரியாக்ட் பண்ணக்கூடாதா? இப்போ தான் இன்னும் கோபம் கோபமா வருது' என்று புலம்பியவள், இனியனுக்கு அழைத்து தலையுமில்லாது வாலுமில்லாது ருதுவை திட்டி வைத்திட்டாள்.
'இப்போ யாரை திட்டுறாள் இவள்?' என்று குழம்பியபடி அப்போது தான் வந்து சேர்ந்தவன், காரிலிருந்து இறங்கி மருத்துவமனை கட்டிடம் நோக்கி நடக்க, எதிரே ஷிவன்யா தென்பட்டாள்.
இனியன் பார்த்தும் பார்க்காததைப்போல் கடக்க முயல...
"ஹலோ டாக்டர்" என்றழைத்து அவனிடம் ஓடி வந்தாள்.
"சொல்லுங்க?"
"தேன்க் யூ டாக்டர்."
"எதுக்கு?"
"ப்ரொஜெக்ட் முடிக்க ஹெல்ப் பண்ணதுக்கு."
"அதான் அப்போவே சொல்லிட்டிங்களே!"
"திரும்ப சொன்னால் கேட்டுக்கமாட்டிங்களா? இதை சாக்கு வச்சு பார்க்க வந்தால்... ரொம்பத்தான்." ஷிவன்யாவின் முணுமுணுப்பு அவனுக்கும் கேட்டது. எதிர்பக்கம் திரும்பி புன்னகைத்துக் கொண்டான்.
"உங்க அண்ணா தானே சிட்டி புது டிசி. மார்னிங் நியூஸ் பார்த்தேன். அவங்க ஓகே தானே?" என நண்பனின் நலம் அறிந்திட மூன்றாம் மனிதன் போல் வினவினான்.
"அதெல்லாம் அண்ணா பக்காவா ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுவாங்க. அவங்களுக்கு சின்ன கீறல் கூட விழாது" என்றாள்.
"ம்ம்ம்" என்ற இனியன், "எனக்கு கன்சல்டிங் டைம் ஆச்சு" என்று நகர்ந்திட, "டாக்டர்" என விளித்தவள், அவன் முன் சாக்லேட் ஒன்றை நீட்டினாள்.
"எதுக்கு?"
"உங்களுக்கு கொடுக்கணும் வாங்கிட்டு வந்துட்டேன். வாங்கிக்கமாட்டிங்களா?" அவள் முகம் சுருக்கி கேட்டிட...
"அடிக்கடி சாக்லெட் சாப்பிடுறது நல்லதில்லை" என்றான்.
"ரொம்பத்தான் டாக்டரா இருக்கீங்க" என்றவள், "ஷேர் பண்ணிக்கலாம். ஷேரிங் இஸ் அ கேரிங்" என்றிட,
"இப்போ என்ன நான் பாதி சாக்லெட் வாங்கிக்கணும். அவ்வளவுதானே? கொடு" என்றான். மறைக்கப்பட்ட மகிழ்வோடு.
ஷிவன்யா பாதி கொடுத்ததும் வாங்கி சுவைத்தவன், "ஹேப்பி?" என்றிட, அவளோ விரிந்த புன்னகையோடு "டபுள் ஹேப்பி" என்றாள்.
அந்நேரம்...
"ஷிவன்யா" என்று தியா அழைக்க...
"கரடி" என்று முனங்கியவளாக, "அப்புறம் பார்க்கலாம் டாக்டர்" என்று சென்றவள், சென்ற வேகத்திற்கு தியாவின் தலையில் ஓங்கிக் கொட்டியிருந்தாள்.
அதனை பார்த்த இனியன் இருக்குமிடம் மறந்து சத்தமிட்டு சிரித்திருந்தான்.
அவனது சிரிப்பில் ஷிவன்யா திரும்பிப் பார்த்த பின்னரே தன் சூழல் புரிந்து வேகமாக நகர்ந்திருந்தான்.
"உன் ஆளுக்கு ரொம்பத்தான்... நான் கொட்டு வாங்குனதுக்கு அப்படி சிரிக்கிறார்" என்று தியா தலையை தேய்த்தபடி புலம்பினாள்.
"விடு பேபி. என்ன இருந்தாலும் அவர் உனக்கு அண்ணா" என்று ஷிவன்யா சொல்ல...
"எதே அண்ணாவா? நான் சைட் கூட அடிக்கக் கூடாதாடி?" என்று தியா பாவம்போல் வினவ,
"கூடவே கூடாது" என்றாள் ஷிவன்யா.
"அழகா இருக்கார் பேபி. உன் லவ் அவர் கன்ஃபார்ம் பன்ற வரை என் கிரஷ் லிஸ்டில் வச்சிக்கிறனே?"
"நோ சான்ஸ் பேபி. அண்ணாவை கிரஷ் அது இதுன்னு... இதெல்லாம் நல்லாவா இருக்கு பேபி" என்று ஷிவன்யா முகத்தை சுளித்து கேட்டதில் தியா தலைக்குமேல் கரம் குவித்து கும்பிட்டே விட்டாள்.
_________________________________
ருது எத்தனைக்கு எத்தனை மகிழ்வோடு காவல் நிலையம் வந்து சேர்ந்தானோ... அந்த மகிழ்வு யாவும் வளாகத்தினுள் நின்றிருந்த வாகனத்தைக் கண்டதும் துணி கொண்டு துடைத்தார் போல் மறைந்தது.
"எப்படா விடியும்ன்னு காத்திருந்தார் போல?" என்று இறங்கிய வெங்கட், திடீரென மாறிவிட்ட ருதுவின் முகம் பார்த்து புரியாது நின்றான்.
வண்டியை நிறுத்திய பின்னரும் கீழிறங்காது ஸ்டியரிங்கை அழுத்தி பிடித்தபடி இருந்தான் ருது. நரம்புகள் புடைத்து கிளம்பி, கண்ணின் விழிப்படலம் செந்நிறம் பூண்டது.
"சார்... சார்..." வெங்கட் மறுபக்கம் வந்து அழைத்த அழைப்பிற்கு ருதுவிடம் பதிலில்லை.
"அண்ணா" என்று அவன் ருதுவின் கையை பிடித்து உலுக்க..
எதிலிருந்தோ மீள்பவன் போல, திடுக்கிட்டு தளர்ந்தான்.
"அண்ணா ஆர் யூ ஓகே?"
"ம்" என்று ஒலித்த ருதுவின் குரலே மாறுபட்டிருந்து.
"கைலாஷ் வந்திருக்கார் போல சார்" என்றான் வெங்கட்.
அதற்கும் ம் மட்டுமே மொழிந்த ருது வண்டியிலிருந்து இறங்கி நின்றான்.
'எப்பவா இருந்தாலும், நேருக்கு நேர்... இப்படி ஒரு சூழல் நிச்சயம் உண்டு. இன்னைக்கே ஃபேஸ் பண்ணிடு ருது' என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு விறைத்து நின்றவன், முகத்தில் ஒருவித கடுமையை கொண்டு வந்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்தான்.
அலுவலகத்தின் மத்தியில் நடுநாயகமாக இருக்கையில் கால் மேல் காலிட்டு கைலாஷ் அமர்ந்திருக்க... மொத்த காவல்துறை பணியாளர்களும் நின்றிருந்தனர்.
உள்ளே நுழைந்த ருது தனக்கு சல்யூட் வைத்த பணியாளர்களுக்கு தலையசைப்பைக் கொடுத்து பார்வையை சுழலவிட்டான்.
ருது உள் வந்த நொடி முதல் கைலாஷின் பார்வை ருதுவின் மீதே. அப்பார்வையில் கோபமோ, வன்மமோ, பழிவாங்கலோ இல்லை. மாறாக அன்பு, கனிவு, பரிவு மிதமிஞ்சியது.
ருது வெறுப்பாக முகம் திருப்பிக் கொண்டான்.
"உங்களுக்கெல்லாம் வேலை இல்லையா? எதுக்கு இப்படி நின்னுட்டு இருக்கீங்க?" என்று தன் பணியாளர்களிடம் கடிந்து கொண்ட ருது, "மல்லிக்காக்க எப்.ஐ.ஆர் ரிப்போர்ட்ஸ் எல்லாம் எடுத்து வையுங்க. கோர்ட்டுக்கு கூட்டிட்டுப் போகணும்" என்றவன், "ஒருத்தனையும் விடாமல் வண்டியில் ஏத்துங்க" என்று கிருஷ்ணன் மற்றும் வெங்கட்டிடம் கூறினான்.
ருது தனது அறைக்கு கைலாஷ்ஷை தாண்டிக்கொண்டு தான் செல்ல வேண்டும். கைலாஷ் என்றொருவன் இருப்பதாகவே காட்டிக்கொள்ளாது ருது தன் நீண்ட எட்டுக்கள் வைத்து கடந்து சென்றான்.
அப்போதும் ருதுவை பார்க்கும் கைலாஷ்ஷின் பார்வையில் மாற்றமில்லை.
"என்ன அண்ணாத்த அவன் சீன் போட்டுக்கினு இருக்கான். நீ என்னம்மோ பார்ட்டியில் ஆட வந்த பொண்ணை பார்த்துகினு இருக்கமாறு ரசிச்சிக்கினு இருக்க" என்று செல்லுக்குள் இருந்து கத்தினான் காந்தா.
அவனுக்கு இரண்டு நாட்களாக காவல் நிலையத்தில் கம்பிகளுக்கு நடுவே இருக்கும் கடுப்பு. அத்தோடு இரவு தன்னை மீட்க வந்த கைலாஷ் எதுவுமே செய்யாது ருதுவின் சொல்லைக்கேட்டு திரும்பிச்சென்ற ஆத்திரம் வேறு.
முதல்முறை கைலாஷ்ஷின் மீது காந்தா அதிருப்தியில் இருந்தான்.
இதற்காகத்தான் ருது காய் நகர்த்துகிறானோ?
"சும்மா இரு காந்தா. டிசி சார் நல்லாவே ஆடுறார். எவ்வளவு தூரம் போகிறார் பார்ப்போம்." தன் நிலையில் மாற்றமில்லாது கைலாஷ் சொல்ல, காந்தா தன் கோபத்தை உள்ளங்கையில் காண்பித்தான். அவனால் கைலாஷ்ஷை பகைத்துக்கொள்ள முடியாது. முடிசூடா ராஜாவாக காந்தா பேட்டைக்குள் அவன் வலம் வர காரணமே கைலாஷ் தானே!
"கோர்ட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டால் எல்லாம் முடிஞ்சுது அண்ணாத்த. நம்ம மேல இருக்கும் பயம் காணாமல் போயிடும்" என்றான் காந்தா.
"சும்மா என்னடா சலம்பிக்கிட்டே இருக்க. சங்கரும் உன்னை மாதிரி உள்ளதானே இருக்கான். எப்படி அமைதியா இருக்கான். கொஞ்சம் பொறுமையா இரு" என்று கைலாஷ் இருக்கையை விட்டு எழ, ருது தன்னுடைய அறையிலிருந்து தொப்பியை தலைக்கு மாட்டியவனாக வெளியில் வந்தான்.
"எல்லாரையும் வேனில் ஏத்தியாச்சா?"
"ரெண்டு வேன் சார். போதல" என்றான் வெங்கட்.
"இன்னும் எத்தனை பேர் இருக்காங்க?"
"காந்தா, எம்.எல்.ஏ சங்கர், அல்லக்கைங்க ஒரு நாலு சார்" என்ற வெங்கட் காந்தா முறைத்த முறைப்பில் ருதுவின் பக்கவாட்டகா தன்னை மறைத்துக் கொண்டான்.
"போட்டிருக்க காக்கிக்காவது கொஞ்சம் தைரியமா இருக்க மாதிரி காட்டிக்கலாம்" என்று வெங்கட்டிற்கு மட்டும் கேட்குமாறு கூறினான் ருது.
"இங்கிருந்து கோர்ட் எவ்வளவு தூரம்?"
"நாலு கிலோமீட்டர் சார்" என்று கிருஷ்ணன் சொல்லியதும்,
"அவ்வளவு தானா? அப்போ மீதியிருக்க ஆறு பேரையும் நடக்க வச்சு கூட்டி வாங்க" என்றான்.
"ஏய்!" காந்தா எகிறிட, அப்போதும் கைலாஷ் அமைதியாகத்தான் இருந்தார். அதில் கைலாஷ் தன்னை காப்பாற்றிடுவான் என்ற நம்பிக்கையை காந்தா இழந்திருந்தான்.
"என்ன அண்ணாத்தா இப்போவும் சும்மா பார்த்துக்கினு இருக்க?"
கட்சியே தன்னை கைவிட்ட பின்னர், சத்தமிட்டு மேலும் சிக்கிக்கொள்ளக் கூடாதென சங்கர் அமைதியாக இருந்தார். அந்த பொறுமை காந்தாவிடம் கொஞ்சமும் இல்லை. பல பேரை ஆட்டிவைத்தே பழக்கப்பட்டவனுக்கு அடங்கிப்போக முடியவில்லை.
"நான் என் வண்டியில் கூட்டிட்டு வரேன்." கைலாஷ் ருதுவிடம் வாய் திறந்தார்.
"யார் நீங்க?" என்று பார்வையில் எட்ட நிறுத்தி, அழுத்தமாக வினவிய ருது, "கம்பளையண்ட் கொடுக்க வந்தால் அந்த வேலையை மட்டும் பாருங்க" என்றதோடு, "சும்மா வரவங்க போறவங்களை உட்கார வைக்க இதென்ன சத்திரமா? என்னன்னு கேட்டு அனுப்புங்க" என்று மல்லிகாவிடம் கோபத்தைக் காட்டினான்.
"நடக்க முடியாது சொன்னால் ட்ரெஸ்ஸை கழட்டிடுங்க" என்ற ருதுவை காந்தாவால் முறைக்க மட்டுமே முடிந்தது.
"கிருஷ்ணன் அண்ணா உங்களால் அவ்வளவு தூரம் நடக்க முடியுமா?"
"முட்டி வலி இருக்கு சார்" என்று அவர் சொல்ல, "வெங்கட், மல்லிகாக்கா ஆறு பேரையும் கூட்டிட்டு வந்திடுங்க" என்று வெளியேறினான்.
இரு வேன்களும் முன் செல்ல... அவர்களைத் தொடர்ந்து ருது ஜீப்பில் கிருஷ்ணன் உடன் பயணித்தான்.
"உங்களை அவன் ஒரு ஆளா கூட மதிக்கல!" காந்தா கைலாஷ்ஷை சீண்டிப்பார்த்தான். அதற்கும் அவர் அசரவில்லை.
ருது என்ன செய்தாலும் கைலாஷ்ஷின் பிரதிபலிப்பு மௌனமாக மட்டுமே இருக்கும். அவரே நினைத்தாலும் ருதுவை ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்குள் முக்கியமான பந்தம் ஒன்றுள்ளதே. ருதுவே இல்லையென்றாலும், கைலாஷ் யாரென்றே தெரியாதென மறுத்தாலும் மாற்றிட முடியாது!
கையில் விலங்கினை மாட்டி அவர்களை நடத்தி அழைத்துச்செல்ல, மொத்த ஊடகமும் நேரலை செய்யத் துவங்கியிருந்தது.
"ஏன் மல்லிக்காக்க உண்மையாவே கிருஷ்ணன் அண்ணாக்கு முட்டி வலி இருக்குமா?" வெங்கட் தன்னுடன் நடந்து வரும் மல்லிகாவிடம் வினவினான்.
"இருக்கும் சார். வயசானவர் இல்லையா?"
"என்ன பெரிய வயசு. நாற்பத்தி அஞ்சு தானே?" என்ற வெங்கட், "இந்த காந்தாவுக்கு ஐம்பது இருக்கும். எம்.எல்.ஏ. வுக்கு இன்னும் ரெண்டு கூட இருக்கும். இவங்களுக்கெல்லாம் முட்டி வலிக்காதா?" என்ற வெங்கட்டினை முறைத்த மல்லிகா... "உங்ககிட்ட இருந்து ஓடக்கூட தெம்பில்லை சார். கொஞ்சம் அமைதியா வாங்க" என்றார்.
"யாருக்கு தண்டனைன்னே தெரியல." மல்லிகா புலம்பிட,
"ஆமா'ல" என்றான் வெங்கட்.
"ம்க்கும் இதுவே இப்போதான் புரியுதா?" மல்லிகா கேட்டதில் சங்கர் சிரித்திட, "கொஞ்சம் வேகமா நடங்க" என்று கடிந்தான் வெங்கட்.
"உன்னால இந்த நிலையிலும் எப்படிடா சிரிக்க முடியுது?" காந்தா ஆத்திரத்தின் உச்சத்தில் சங்கரிடம் கேட்டிருந்தான்.
"எப்படியிருந்தாலும் தண்டனை அனுபவிக்கப்போறோம் தெரிஞ்சுப்போச்சு. கைலாஷ் நமக்கு உதவப்போவதில்லை. சும்மா எதுக்கு சோக கீதம் வாசிக்கணும்" என்ற சங்கரின் பேச்சினை காந்தா அலசி ஆராய்ந்தான்.
சங்கர் சொல்வது உண்மை என்றே அவனுக்குத் தோன்றியது.
எப்போதும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் முதல் ஆளாக காப்பாற்ற ஓடி வரும் கைலாஷ் இம்முறை மிகுந்த பொறுமையாக இருப்பது சந்தேகமாக இருந்தது. அதுவும் கிட்டத்தட்ட பாதி பேட்டையே உள்ளிருக்கு. கைலாஷ்ஷின் செல்வ வாழ்க்கைக்கு அவர்கள் இன்றியமையாதவர்கள். அப்படியிருந்தும் கைலாஷ்ஷினை இந்த பொறுமை காந்தாவை யோசிக்க வைத்தது.
"என்ன யோசிக்கிற காந்தா?" எனக்கேட்ட சங்கர், "நீ இதுவரை கைலாஷ்ஷிற்காக செய்த தவறுக்கெல்லாம் ஆதாரம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் போலீசுக்கு வரவேற்பு கொடுக்க, ஒருத்தனை கொன்னு மாட்டினியே அதுக்கானது, போதைப்பொருள் விற்பதுக்கானதுன்னு பக்கா எவிடென்ஸ் அந்த போலீசு வச்சிருக்கான். போதா குறைக்கு எல்லா சேனலிலும் உன் ஆளுங்க பண்ண கலவரம், நைட் ஸ்டேஷனில் பண்ண ஆட்டம்ன்னு எல்லாம் வெளிவந்திருக்கு. ஜெயிலுக்கு போறது உறுதி. உனக்குத் தூக்குத் தண்டனையே கூட கிடைக்கலாம்" என்ற சங்கர், "இப்போ நமக்கு கிடைக்க வேண்டிய தண்டனையை எப்படி குறைக்கிறதுன்னு மட்டும் தான் யோசிக்கணும்" என்றார்.
காந்தாவுக்கு தான் தப்பித்தால் போதுமென்ற நிலை. கைலாஷ் மேலிருந்த நம்பிக்கையே போயிருந்தது.
"என்ன பண்ணனும்?"
"அப்ரூவரா மாறனும்?"
காந்தா யோசிக்க ஆரம்பித்தான்.