"நீ அவனை தமிழ்நாட்டுக்கு பேக் பண்ண சொன்னதுக்கான காரணம் எனக்கு தெரிஞ்சிடுச்சு."
தேநீர் கொண்டு வந்து கொடுத்த மனைவியிடம் வேங்கடம் அர்த்தமாகக் கூறினார்.
அம்பிகாவிடம் பிரதிபலிப்பாய் சிறு முறுவல்.
"நீ அவனை அங்கு மாத்துங்கன்னு அடம் பிடித்ததுக்கு பின்னால் இப்படியொரு காரணமிருக்கும் நினைக்கல" என்றார்.
ருதுவின் அனைத்தும் தெரிந்த அம்பிகாவுக்கு அவன் தனியாக இருப்பதில் விருப்பமில்லை.
"எல்லாம் மறந்துவிட்டேன். இனி என் வாழ்வு முழுமைக்கும் தேஷ் ஒருவன் போதும்" என ருது சொன்னாலும், அம்பிகாவால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் பெற்ற மகனாக அவனை அவர் பார்க்கும்போது பிள்ளையின் வாழ்வை தனிமையில் விட்டுவிடுவாரா அந்த தாய்.
மகனை கரை சேர்த்து பார்க்க ஆசை கொண்டு கணவன் மூலம் காரியத்தை நடத்த முயன்றார்.
தொலைத்த இடத்தில் தானே தேட வேண்டுமென்பார்கள். அது பொருளோ? மனமோ? விட்ட இடத்தில் மீட்க முடியும். அதனின் முதல் படியாக ருது சொந்த இருப்பிடம் அனுப்பிட முயற்சித்து, அவனை வேலையை காரணம் வைத்து தமிழ்நாட்டிற்கு அனுப்பிட சொல்லி பல மாதங்களாக கணவனிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
வேங்கடத்திற்கு மனைவியின் சொல்லுக்கான காரணம் விளங்கவில்லை என்றாலும், ஏதாவது அர்த்தமிருக்குமென்கிற புரிதலில் பலமுறை முயன்று பார்க்க... ருது அடமாக மறுத்துவிட்டான்.
தற்போது அவனே அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்க கட்டம் கட்டி தூக்கிவிட்டார்.
ருது அங்குதான் தேஷ்ஷின் அம்மா இருக்கிறாள் என்றதும், தன்னுடைய மனைவியின் எண்ணப்போக்கையும் கண்டுகொண்டார்.
"தாத்தா" என்று ஓடிவந்து கட்டிக்கொண்ட தேஷ்ஷை தூக்கி மடியில் இருத்திக்கொண்ட வேங்கடம், மனைவியை பார்த்தவாறே தேநீரை பருகி முடித்தார்.
"தேஷ் குட்டி ஸ்கூல் போனீங்களா?"
"போயிட்டு எப்பவோ வந்துட்டேன் தாத்தா. வரும்போது பாட்டி ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுத்தாங்க" என்று தேஷ் மழலையில் சொல்லிக்கொண்டிருக்க... வேங்கடத்தின் அலைப்பேசி ஒலித்தது.
எடுத்து யாரென்று பார்த்தவர்,
"அத்தை தான். நீ பேசு" என காணொளி அழைப்பினை ஏற்று, தேஷினை தள்ளிப்போகச் செய்தார்.
"உங்ககிட்ட சொல்லலன்னு வருத்தமா?"
இல்லையென தலையசைத்த வேங்கடம்...
"அவனோட விஷயம். அவனா சொல்றது வேற. அவன் சொல்லிட்டான், உனக்கும் தெரியுமென நீ என்கிட்ட சொல்றது வேற. அடுத்து அவன் அவனோட கஷ்டத்தைக்கூட உன்கிட்ட சொல்ல யோசித்து இருப்பான். என்னைவிட அவன் உன்னை அதிக நம்ப காரணமே அவனோட எல்லாம் தெரிந்தும், நீ என்கிட்ட சொல்லாம அவனை அரவணைத்திட்டு இருக்க பார்த்தியா? அதுதான்" என்றார்.
"இது சரி வரும் உனக்கு தோணுதா அம்பிகா? ஒத்து வராமல் தானே அவன் பிறந்த குழந்தையை தனியா தூக்கிட்டு வந்திருக்கான். திரும்ப எப்படி சேருவான் நினைக்கிற?" என்றார். அவரிடம் ருது நிம்மதியாக இருக்க வேண்டுமே என்கிற எண்ணம்.
"அவனுக்கு இதுதாங்க சரி. அவன் மூலமாகவே உங்களுக்கும் தெரிய வரும்" என்ற அம்பிகா, "உங்களுக்கு எப்போ ரிட்டையர்ட்?" எனக் கேட்டார்.
"இன்னும் ஆறு மாதம் சர்வீஸ் இருக்கு" என்ற கணவனிடம்,
"ஆறு மாதம் இருக்கா?" என்று இழுத்தார் அம்பிகா.
"ம்ம்... நானே அதுக்கு அப்புறம் வீட்டில் வெட்டியா உட்கார்ந்து என்ன பண்றதுன்னு தெரியல... சும்மா இருக்கணும் நினைச்சாலே பயந்து வருது" என்றார்.
கணவர் சொல்வதையெல்லாம் அம்பிகா கேட்கவில்லை. வேறு யோசனையில் இருந்தார்.
"என்ன யோசனை?"
"நானும் ருதுவுடன் இப்போவே போலாமா... இல்லை ஆறு மாதம் கழித்து உங்களோட போலாமான்னு தான் யோசிக்கிறேன்" என்று கணவனின் தலையில் குண்டைப்போட்டார்.
"என்னடி சொல்ற? நாம ஏன் போகணும்? வாழ்க்கையே முடிஞ்சிப்போச்சு. இனி அங்க போயி என்ன பண்ண?" எனக் கேட்டார். சற்று அதிர்வு தான் அவருக்கு.
"பொண்ணு அங்க சென்னையில விடுதியில் தங்கி படிக்கிறாள். பையனும், பேரனும் அங்க போகப்போறாங்க. ஒத்தையில இங்க கிடந்து என்ன பண்ணப்போறீங்க?" என்று அம்பிகா கேட்டுக்கொண்டிருக்க, வீட்டிற்குள் நுழைந்த ருதுவின் கண்கள் சட்டென்று துளிர்த்தது.
லாவகமாக மறைத்துக் கொண்டான்.
அம்பிகாவின் அருகில் வந்து அமர்ந்தவன், அவரின் மடியில் தலை வைத்து படுத்துக்கொள்ள...
'தான் சொல்லியதை கேட்டுவிட்டான்' என புரிந்துகொண்ட அம்பிகா, ஆதுரமாக அவனின் தலை கோதி கொடுத்தார்.
எவ்வளவு பெரிய அர்க்கனாக, மூர்க்கமுள்ளவனாக இருந்தாலும் தாய்மையில் சட்டென்று அடங்கிவிடுவது இயற்கையாயிற்றே! தாய்மைக்கு கட்டுப்படாத உயிரும் உண்டோ?
ருதுவின் கம்பீரத்தை பணியிடங்களில் கண்டு வியந்திருக்கும் வேங்கடத்திற்கு, அன்பிற்கு அடைக்கலம் புகும் ருதுவின் இந்த முகம் புதிது. தன்னுடைய மனைவி, மகளிடம் ருதுவிற்கு தன்னைவிட அதீத நெருக்கமென்று தெரியும். அதனின் ஆழத்தை இன்று தான் காண்கிறார்.
பனித்த நெஞ்சத்தை சமன் செய்துகொண்டார்.
"ஆறு மாதம் தனியா நான் என்னடி பண்ணுவேன்?"
"அது உங்க பாடு. என்னவும் பண்ணுங்க. வேணுன்னா வேலையை விட்டுட்டு எங்கக்கூடவே வந்திடுங்க. என்னால ரெண்டு பேரையும் விட்டு இருக்க முடியாது" என்று திடமாக மொழிந்தார் அம்பிகா.
"ம்மா..." ருதுவின் குரல் கரகரத்து ஒலித்தது.
அவரின் மகள் அங்கு தான் படிப்பேனென்று சென்று போதுகூட அவர் இந்த வார்த்தையை சொல்லவில்லை.
ருது மொத்தமாக நெகிழ்ந்துவிட்டான்.
இனி தனக்கென்று யாருமில்லை என்றிருந்தவனுக்கு, பெற்ற உறவு, ரத்த உறவைவிட மேலாக அன்பு காட்டும் உறவு கிடைத்திருக்கிறதே!
விட்டால் அவரை கட்டிக்கொண்டு அழுதுவிடுவான்.
சடுதியில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு எழுந்தவன்,
"பேக் பண்ணணும்மா" என்று எதிரே இருக்கும் தன் வீட்டிற்குள் புகுந்துகொண்டான்.
"வாய் திறந்திட மாட்டானே" என்ற வேங்கடம், தேஷ் பேசிக்கொண்டே பின்னிருக்கும் தோட்டத்திற்கு சென்றிருக்க, அவனைத்தேடிச் சென்றார்.
அம்பிகா ருதுவிடம் சென்றார்.
"ருது..."
அறைக்குள்ளிருந்து வேகமாக வந்தவன், அவரை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
"தேன்க்ஸ் ம்மா. தேன்க்ஸ். தேன்க்ஸ் அ லாட். இட்ஸ் மீன்ஸ் அ லாட்" என்று உணர்ச்சிவசத்தில் அரற்றினான்.
"அம்மாக்கு யாரும் தேன்க்ஸ் சொல்லுவாங்களா?" எனக்கேட்ட அம்பிகா, "போலீஸ்காரன் இப்படி அழலாமாடா? கண்ணத்துடை முதலில்" என்று ருதுவை தன்னிலிருந்து பிரித்து தானே துடைத்தும் விட்டார்.
"எப்போ கிளம்பணும்?"
அவனை இருக்கையில் அமர வைத்து வினவினார்.
"நிஜமாவே வரீங்களா?"
வரவேண்டுமென்கிற தவிப்பு அவனிடம். சரியாக அவனது கண்களில் விளங்கிக்கொண்டார்.
"உனக்காக இல்லை. தேஷ் குட்டிக்காக" என்று சிரித்தவரை முறைத்து வைத்தான்.
"போதும்... போதும்... விட்டுட்டு போலான்னு இருந்தியோ? தொல்லையா வந்து நிக்கிறனா?" என்றார். அவனை மாற்றவே சீண்டினார்.
"நீங்க வரலன்னா தூக்கிட்டுப்போகலான்னு பிளான் பண்ணியிருந்தேன்" என்ற ருதுவின் முகம் இயல்பாய் மாறியிருந்தது.
"அது யாருடா என் பொண்டாட்டியை தூக்கிட்டு போறது?" எனக்கேட்டு, தேஷ்ஷுடன் வேங்கடம் வந்தார்.
"உங்க பொண்டாட்டியை இல்லை. என் அம்மாவை" என்றவன், தேஷ்ஷை தூக்கி கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.
தேஷ் தந்தையின் மீசை முறுக்கி தன் பாலிதழ் தீண்டி விடுத்தான்.
தேஷ் தனது பள்ளியில் நடந்ததை கதையாக அப்பாவிடம் சொல்லிட...
"இவனை அங்க போய் ஸ்கூல் சேர்க்கணும்" என்றான் ருது.
"இப்போ ஏப்ரல் தானே! அங்க ஜூன் எல்.கே.ஜி சேர்த்திடலாம்" என்ற வேங்கடம், "எப்போ கிளம்புற?" எனக் கேட்டார்.
"ஆபீஸில் எல்லாம் ஓவர். எல்லாம் என் கண்ட்ரோலில் இருந்த ஸ்டேஷனில் ஹேண்ட் ஓவர் பண்ணிட்டேன். உங்களுக்கு லீவிங் லெட்டர் மெயில் பண்ணிட்டேன். நீங்க சைன் பண்ணிட்டு, திரான்ஸ்பர் ஆர்டர் அனுப்புனிங்கன்னா... உடனே!" என்றான்.
"ம்ம்ம்" என்ற வேங்கடம், "ரெண்டு நாள் வெயிட் பண்ணு" என்று எழுந்து சென்றார்.
இரண்டு நாட்கள் எல்லாம் எடுத்து வைக்கவே அவர்களுக்கு சரியாக இருந்தது. ஆட்கள் வைத்து எடுத்து வைத்தாலும், முறையாக எல்லாம் எடுத்தாயிற்றா என்று சரி பார்க்கவே மலைப்பாக இருந்தது.
"அங்க போய் எங்கப்பா தங்கப்போறோம். குவார்ட்டர்ஸ் தாம்மா. அரேஞ் பண்ணிட்டேன். சொந்த வீடும் இருக்கு. உங்களுக்கு வேணுன்னா அங்க இருந்துக்கலாம்" என்றான்.
ஆனால் அவன் இரண்டாவதாக சொல்லியதில் விருப்பமில்லை என்று புரிந்துகொண்ட அம்பிகா,
"எதுக்குப்பா தனியா... குவார்ட்டர்ஸ்ன்னா பழக ஆளுங்க இருப்பாங்களே" என்றுவிட்டார்.
வேலை முடித்து வேங்கடம் வர,
"உங்களோட தின்க்ஸ் மட்டும் தான் வச்சிருக்கேன். மத்தது எல்லாம் பேக் பண்ணிட்டேன். பேகம் பேஃட்டிகிட்ட சொல்லியிருக்கேன். தினமும் சமைத்து கொடுத்திடுவாங்க. உங்களுக்கு சுடு தண்ணி வைக்க மட்டும் தான் பாத்திரம் வச்சிருக்கேன். பத்திரமா இருங்க. சீக்கிரம் வந்து சேருங்க" என்றார் அம்பிகா.
"என்னை விட்டுட்டு போறீங்களா? போங்க" என்று வேங்கடம் சொல்லியதில் ருதுவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
இருப்பினும், "நீங்க இப்படி பீல் பண்ணாலும், அம்மாவை நான் கூட்டிடுத்தான் போறேன்" என்றான் ருது.
"அப்போ இந்த அப்பன் வேண்டாமாடா?"
ருது அவரின் கேள்வியில் நொறுங்கிவிட்டான்.
"அப்பா." முதல் முறை விளிக்கிறான். அவரின் முன்பு மண்டியிட்டு, அவரின் கால்களில் கையினை வைத்துக்கொண்டு.
வேங்கடத்தின் கண்களில் நீர் எட்டிப்பார்த்தது.
"எனக்கு இது போதும்டா" என்றவர், ருதுவின் தோளை தட்டியவராக,
"உன் பிள்ளை என்னை அப்பா சொல்ல நாலு வருஷமாகியிருக்கு" என்றார். ஏக்கமான சிரிப்போடு.
அவரின் உணர்வினை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
"சாரிப்பா..."
"விடுடா" என்றவர், "என்னையும் கூப்பிட்டுப்போடா!" என்றார்.
"வேலை?"
"விட்டுட்டேன். சர்வீஸ் இருக்க ஆறு மாதமும், சென்னை செக்ரட்ரிரைட்டில், பிளாக் கார்ட்ஸ் ஹெட்" என்றார்.
"அப்பா..." அதற்குமேல் ருதுவிற்கு வார்த்தை வரவில்லை.
"இப்போ நீங்க இருந்தது எத்தனை பெரிய பதவி?" கேட்ட ருதுவிற்கு தனக்காகவா என்று அவரின் அன்பில் அத்தனை நெகிழ்வு.
"சின்ன பதவியில் இருந்துதானே இதுக்கு வந்தேன். இப்பவும் நான் பெரிய ஆள் தான்டா... சி.எம் என்னை மீறி அசைய முடியாது" என்று சிரித்தார்.
"உடனே மாற்றல், பதவின்னு கேட்டதும் இதுதான் இருக்குன்னு ரிப்போர்ட் வந்துச்சு. ஆறு மாசத்துக்குத்தானே சரின்னு சொல்லிட்டேன். இதுக்கே அந்த கவர்னர் அவ்வளவு யோசிச்சார்" என்று சாதரணமாக பேசியவர், தன்னுடைய பொருட்களை எடுத்து வைக்க எழும்பிட, அம்பிகா அவருக்கு முன்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
ருதுவிற்கு காலமே முழுக்க அவர்களை தன் நெஞ்சில் தாங்கிக்கொள்ள வேண்டுமென நினைத்தான்.
எவ்வித எதிர்பார்ப்புமற்ற இந்த அன்பிற்கு முன்னால் யாவும் பூஜ்ஜியம் அல்லவா. உண்மையில் ருது வரம் பெற்றவன் தான்.
அடுத்த நாள் விடியல் அவர்களின் புது பயணத்திற்கு ஆரம்பமாகியது.
அங்கு மரித்த ருதுவின் வாழ்வு மீண்டும் உயர்த்தெழுந்திடுமா?
தூரமாய் விலக்கி வைத்த உறவு பக்கம் வந்திடுமா?
____________
உந்தன் மறுபாதி நானாகிறேன் தலைப்பில் வேறு கதை இருப்பதால் கதையின் தலைப்பு மாற்றியிருக்கிறேன்.
'தூரமே தூரமாய்.'
தேநீர் கொண்டு வந்து கொடுத்த மனைவியிடம் வேங்கடம் அர்த்தமாகக் கூறினார்.
அம்பிகாவிடம் பிரதிபலிப்பாய் சிறு முறுவல்.
"நீ அவனை அங்கு மாத்துங்கன்னு அடம் பிடித்ததுக்கு பின்னால் இப்படியொரு காரணமிருக்கும் நினைக்கல" என்றார்.
ருதுவின் அனைத்தும் தெரிந்த அம்பிகாவுக்கு அவன் தனியாக இருப்பதில் விருப்பமில்லை.
"எல்லாம் மறந்துவிட்டேன். இனி என் வாழ்வு முழுமைக்கும் தேஷ் ஒருவன் போதும்" என ருது சொன்னாலும், அம்பிகாவால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் பெற்ற மகனாக அவனை அவர் பார்க்கும்போது பிள்ளையின் வாழ்வை தனிமையில் விட்டுவிடுவாரா அந்த தாய்.
மகனை கரை சேர்த்து பார்க்க ஆசை கொண்டு கணவன் மூலம் காரியத்தை நடத்த முயன்றார்.
தொலைத்த இடத்தில் தானே தேட வேண்டுமென்பார்கள். அது பொருளோ? மனமோ? விட்ட இடத்தில் மீட்க முடியும். அதனின் முதல் படியாக ருது சொந்த இருப்பிடம் அனுப்பிட முயற்சித்து, அவனை வேலையை காரணம் வைத்து தமிழ்நாட்டிற்கு அனுப்பிட சொல்லி பல மாதங்களாக கணவனிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
வேங்கடத்திற்கு மனைவியின் சொல்லுக்கான காரணம் விளங்கவில்லை என்றாலும், ஏதாவது அர்த்தமிருக்குமென்கிற புரிதலில் பலமுறை முயன்று பார்க்க... ருது அடமாக மறுத்துவிட்டான்.
தற்போது அவனே அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருக்க கட்டம் கட்டி தூக்கிவிட்டார்.
ருது அங்குதான் தேஷ்ஷின் அம்மா இருக்கிறாள் என்றதும், தன்னுடைய மனைவியின் எண்ணப்போக்கையும் கண்டுகொண்டார்.
"தாத்தா" என்று ஓடிவந்து கட்டிக்கொண்ட தேஷ்ஷை தூக்கி மடியில் இருத்திக்கொண்ட வேங்கடம், மனைவியை பார்த்தவாறே தேநீரை பருகி முடித்தார்.
"தேஷ் குட்டி ஸ்கூல் போனீங்களா?"
"போயிட்டு எப்பவோ வந்துட்டேன் தாத்தா. வரும்போது பாட்டி ஐஸ்க்ரீம் வாங்கிக்கொடுத்தாங்க" என்று தேஷ் மழலையில் சொல்லிக்கொண்டிருக்க... வேங்கடத்தின் அலைப்பேசி ஒலித்தது.
எடுத்து யாரென்று பார்த்தவர்,
"அத்தை தான். நீ பேசு" என காணொளி அழைப்பினை ஏற்று, தேஷினை தள்ளிப்போகச் செய்தார்.
"உங்ககிட்ட சொல்லலன்னு வருத்தமா?"
இல்லையென தலையசைத்த வேங்கடம்...
"அவனோட விஷயம். அவனா சொல்றது வேற. அவன் சொல்லிட்டான், உனக்கும் தெரியுமென நீ என்கிட்ட சொல்றது வேற. அடுத்து அவன் அவனோட கஷ்டத்தைக்கூட உன்கிட்ட சொல்ல யோசித்து இருப்பான். என்னைவிட அவன் உன்னை அதிக நம்ப காரணமே அவனோட எல்லாம் தெரிந்தும், நீ என்கிட்ட சொல்லாம அவனை அரவணைத்திட்டு இருக்க பார்த்தியா? அதுதான்" என்றார்.
"இது சரி வரும் உனக்கு தோணுதா அம்பிகா? ஒத்து வராமல் தானே அவன் பிறந்த குழந்தையை தனியா தூக்கிட்டு வந்திருக்கான். திரும்ப எப்படி சேருவான் நினைக்கிற?" என்றார். அவரிடம் ருது நிம்மதியாக இருக்க வேண்டுமே என்கிற எண்ணம்.
"அவனுக்கு இதுதாங்க சரி. அவன் மூலமாகவே உங்களுக்கும் தெரிய வரும்" என்ற அம்பிகா, "உங்களுக்கு எப்போ ரிட்டையர்ட்?" எனக் கேட்டார்.
"இன்னும் ஆறு மாதம் சர்வீஸ் இருக்கு" என்ற கணவனிடம்,
"ஆறு மாதம் இருக்கா?" என்று இழுத்தார் அம்பிகா.
"ம்ம்... நானே அதுக்கு அப்புறம் வீட்டில் வெட்டியா உட்கார்ந்து என்ன பண்றதுன்னு தெரியல... சும்மா இருக்கணும் நினைச்சாலே பயந்து வருது" என்றார்.
கணவர் சொல்வதையெல்லாம் அம்பிகா கேட்கவில்லை. வேறு யோசனையில் இருந்தார்.
"என்ன யோசனை?"
"நானும் ருதுவுடன் இப்போவே போலாமா... இல்லை ஆறு மாதம் கழித்து உங்களோட போலாமான்னு தான் யோசிக்கிறேன்" என்று கணவனின் தலையில் குண்டைப்போட்டார்.
"என்னடி சொல்ற? நாம ஏன் போகணும்? வாழ்க்கையே முடிஞ்சிப்போச்சு. இனி அங்க போயி என்ன பண்ண?" எனக் கேட்டார். சற்று அதிர்வு தான் அவருக்கு.
"பொண்ணு அங்க சென்னையில விடுதியில் தங்கி படிக்கிறாள். பையனும், பேரனும் அங்க போகப்போறாங்க. ஒத்தையில இங்க கிடந்து என்ன பண்ணப்போறீங்க?" என்று அம்பிகா கேட்டுக்கொண்டிருக்க, வீட்டிற்குள் நுழைந்த ருதுவின் கண்கள் சட்டென்று துளிர்த்தது.
லாவகமாக மறைத்துக் கொண்டான்.
அம்பிகாவின் அருகில் வந்து அமர்ந்தவன், அவரின் மடியில் தலை வைத்து படுத்துக்கொள்ள...
'தான் சொல்லியதை கேட்டுவிட்டான்' என புரிந்துகொண்ட அம்பிகா, ஆதுரமாக அவனின் தலை கோதி கொடுத்தார்.
எவ்வளவு பெரிய அர்க்கனாக, மூர்க்கமுள்ளவனாக இருந்தாலும் தாய்மையில் சட்டென்று அடங்கிவிடுவது இயற்கையாயிற்றே! தாய்மைக்கு கட்டுப்படாத உயிரும் உண்டோ?
ருதுவின் கம்பீரத்தை பணியிடங்களில் கண்டு வியந்திருக்கும் வேங்கடத்திற்கு, அன்பிற்கு அடைக்கலம் புகும் ருதுவின் இந்த முகம் புதிது. தன்னுடைய மனைவி, மகளிடம் ருதுவிற்கு தன்னைவிட அதீத நெருக்கமென்று தெரியும். அதனின் ஆழத்தை இன்று தான் காண்கிறார்.
பனித்த நெஞ்சத்தை சமன் செய்துகொண்டார்.
"ஆறு மாதம் தனியா நான் என்னடி பண்ணுவேன்?"
"அது உங்க பாடு. என்னவும் பண்ணுங்க. வேணுன்னா வேலையை விட்டுட்டு எங்கக்கூடவே வந்திடுங்க. என்னால ரெண்டு பேரையும் விட்டு இருக்க முடியாது" என்று திடமாக மொழிந்தார் அம்பிகா.
"ம்மா..." ருதுவின் குரல் கரகரத்து ஒலித்தது.
அவரின் மகள் அங்கு தான் படிப்பேனென்று சென்று போதுகூட அவர் இந்த வார்த்தையை சொல்லவில்லை.
ருது மொத்தமாக நெகிழ்ந்துவிட்டான்.
இனி தனக்கென்று யாருமில்லை என்றிருந்தவனுக்கு, பெற்ற உறவு, ரத்த உறவைவிட மேலாக அன்பு காட்டும் உறவு கிடைத்திருக்கிறதே!
விட்டால் அவரை கட்டிக்கொண்டு அழுதுவிடுவான்.
சடுதியில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு எழுந்தவன்,
"பேக் பண்ணணும்மா" என்று எதிரே இருக்கும் தன் வீட்டிற்குள் புகுந்துகொண்டான்.
"வாய் திறந்திட மாட்டானே" என்ற வேங்கடம், தேஷ் பேசிக்கொண்டே பின்னிருக்கும் தோட்டத்திற்கு சென்றிருக்க, அவனைத்தேடிச் சென்றார்.
அம்பிகா ருதுவிடம் சென்றார்.
"ருது..."
அறைக்குள்ளிருந்து வேகமாக வந்தவன், அவரை இறுக்கி அணைத்துக்கொண்டான்.
"தேன்க்ஸ் ம்மா. தேன்க்ஸ். தேன்க்ஸ் அ லாட். இட்ஸ் மீன்ஸ் அ லாட்" என்று உணர்ச்சிவசத்தில் அரற்றினான்.
"அம்மாக்கு யாரும் தேன்க்ஸ் சொல்லுவாங்களா?" எனக்கேட்ட அம்பிகா, "போலீஸ்காரன் இப்படி அழலாமாடா? கண்ணத்துடை முதலில்" என்று ருதுவை தன்னிலிருந்து பிரித்து தானே துடைத்தும் விட்டார்.
"எப்போ கிளம்பணும்?"
அவனை இருக்கையில் அமர வைத்து வினவினார்.
"நிஜமாவே வரீங்களா?"
வரவேண்டுமென்கிற தவிப்பு அவனிடம். சரியாக அவனது கண்களில் விளங்கிக்கொண்டார்.
"உனக்காக இல்லை. தேஷ் குட்டிக்காக" என்று சிரித்தவரை முறைத்து வைத்தான்.
"போதும்... போதும்... விட்டுட்டு போலான்னு இருந்தியோ? தொல்லையா வந்து நிக்கிறனா?" என்றார். அவனை மாற்றவே சீண்டினார்.
"நீங்க வரலன்னா தூக்கிட்டுப்போகலான்னு பிளான் பண்ணியிருந்தேன்" என்ற ருதுவின் முகம் இயல்பாய் மாறியிருந்தது.
"அது யாருடா என் பொண்டாட்டியை தூக்கிட்டு போறது?" எனக்கேட்டு, தேஷ்ஷுடன் வேங்கடம் வந்தார்.
"உங்க பொண்டாட்டியை இல்லை. என் அம்மாவை" என்றவன், தேஷ்ஷை தூக்கி கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.
தேஷ் தந்தையின் மீசை முறுக்கி தன் பாலிதழ் தீண்டி விடுத்தான்.
தேஷ் தனது பள்ளியில் நடந்ததை கதையாக அப்பாவிடம் சொல்லிட...
"இவனை அங்க போய் ஸ்கூல் சேர்க்கணும்" என்றான் ருது.
"இப்போ ஏப்ரல் தானே! அங்க ஜூன் எல்.கே.ஜி சேர்த்திடலாம்" என்ற வேங்கடம், "எப்போ கிளம்புற?" எனக் கேட்டார்.
"ஆபீஸில் எல்லாம் ஓவர். எல்லாம் என் கண்ட்ரோலில் இருந்த ஸ்டேஷனில் ஹேண்ட் ஓவர் பண்ணிட்டேன். உங்களுக்கு லீவிங் லெட்டர் மெயில் பண்ணிட்டேன். நீங்க சைன் பண்ணிட்டு, திரான்ஸ்பர் ஆர்டர் அனுப்புனிங்கன்னா... உடனே!" என்றான்.
"ம்ம்ம்" என்ற வேங்கடம், "ரெண்டு நாள் வெயிட் பண்ணு" என்று எழுந்து சென்றார்.
இரண்டு நாட்கள் எல்லாம் எடுத்து வைக்கவே அவர்களுக்கு சரியாக இருந்தது. ஆட்கள் வைத்து எடுத்து வைத்தாலும், முறையாக எல்லாம் எடுத்தாயிற்றா என்று சரி பார்க்கவே மலைப்பாக இருந்தது.
"அங்க போய் எங்கப்பா தங்கப்போறோம். குவார்ட்டர்ஸ் தாம்மா. அரேஞ் பண்ணிட்டேன். சொந்த வீடும் இருக்கு. உங்களுக்கு வேணுன்னா அங்க இருந்துக்கலாம்" என்றான்.
ஆனால் அவன் இரண்டாவதாக சொல்லியதில் விருப்பமில்லை என்று புரிந்துகொண்ட அம்பிகா,
"எதுக்குப்பா தனியா... குவார்ட்டர்ஸ்ன்னா பழக ஆளுங்க இருப்பாங்களே" என்றுவிட்டார்.
வேலை முடித்து வேங்கடம் வர,
"உங்களோட தின்க்ஸ் மட்டும் தான் வச்சிருக்கேன். மத்தது எல்லாம் பேக் பண்ணிட்டேன். பேகம் பேஃட்டிகிட்ட சொல்லியிருக்கேன். தினமும் சமைத்து கொடுத்திடுவாங்க. உங்களுக்கு சுடு தண்ணி வைக்க மட்டும் தான் பாத்திரம் வச்சிருக்கேன். பத்திரமா இருங்க. சீக்கிரம் வந்து சேருங்க" என்றார் அம்பிகா.
"என்னை விட்டுட்டு போறீங்களா? போங்க" என்று வேங்கடம் சொல்லியதில் ருதுவிற்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
இருப்பினும், "நீங்க இப்படி பீல் பண்ணாலும், அம்மாவை நான் கூட்டிடுத்தான் போறேன்" என்றான் ருது.
"அப்போ இந்த அப்பன் வேண்டாமாடா?"
ருது அவரின் கேள்வியில் நொறுங்கிவிட்டான்.
"அப்பா." முதல் முறை விளிக்கிறான். அவரின் முன்பு மண்டியிட்டு, அவரின் கால்களில் கையினை வைத்துக்கொண்டு.
வேங்கடத்தின் கண்களில் நீர் எட்டிப்பார்த்தது.
"எனக்கு இது போதும்டா" என்றவர், ருதுவின் தோளை தட்டியவராக,
"உன் பிள்ளை என்னை அப்பா சொல்ல நாலு வருஷமாகியிருக்கு" என்றார். ஏக்கமான சிரிப்போடு.
அவரின் உணர்வினை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.
"சாரிப்பா..."
"விடுடா" என்றவர், "என்னையும் கூப்பிட்டுப்போடா!" என்றார்.
"வேலை?"
"விட்டுட்டேன். சர்வீஸ் இருக்க ஆறு மாதமும், சென்னை செக்ரட்ரிரைட்டில், பிளாக் கார்ட்ஸ் ஹெட்" என்றார்.
"அப்பா..." அதற்குமேல் ருதுவிற்கு வார்த்தை வரவில்லை.
"இப்போ நீங்க இருந்தது எத்தனை பெரிய பதவி?" கேட்ட ருதுவிற்கு தனக்காகவா என்று அவரின் அன்பில் அத்தனை நெகிழ்வு.
"சின்ன பதவியில் இருந்துதானே இதுக்கு வந்தேன். இப்பவும் நான் பெரிய ஆள் தான்டா... சி.எம் என்னை மீறி அசைய முடியாது" என்று சிரித்தார்.
"உடனே மாற்றல், பதவின்னு கேட்டதும் இதுதான் இருக்குன்னு ரிப்போர்ட் வந்துச்சு. ஆறு மாசத்துக்குத்தானே சரின்னு சொல்லிட்டேன். இதுக்கே அந்த கவர்னர் அவ்வளவு யோசிச்சார்" என்று சாதரணமாக பேசியவர், தன்னுடைய பொருட்களை எடுத்து வைக்க எழும்பிட, அம்பிகா அவருக்கு முன்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
ருதுவிற்கு காலமே முழுக்க அவர்களை தன் நெஞ்சில் தாங்கிக்கொள்ள வேண்டுமென நினைத்தான்.
எவ்வித எதிர்பார்ப்புமற்ற இந்த அன்பிற்கு முன்னால் யாவும் பூஜ்ஜியம் அல்லவா. உண்மையில் ருது வரம் பெற்றவன் தான்.
அடுத்த நாள் விடியல் அவர்களின் புது பயணத்திற்கு ஆரம்பமாகியது.
அங்கு மரித்த ருதுவின் வாழ்வு மீண்டும் உயர்த்தெழுந்திடுமா?
தூரமாய் விலக்கி வைத்த உறவு பக்கம் வந்திடுமா?
____________
உந்தன் மறுபாதி நானாகிறேன் தலைப்பில் வேறு கதை இருப்பதால் கதையின் தலைப்பு மாற்றியிருக்கிறேன்.
'தூரமே தூரமாய்.'