தூரமே தூரமாய் 39
ரூபிணியை எதில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. அவள் சென்ற பின்னர் தான் அங்கு இறுக்கம் தளர்ந்தது. இனி ருதுவின் வாழ்வில் கைலாஷ்ஷின் அத்தியாயம் முடிந்தது போல் அவளுடையதும் முடிவுக்கு வந்தது.
"அவளுக்கு உன்னைப்பற்றி தெரியாதே இமையாள். அவ பேச்சை மனசில் வச்சிக்காதே!"
ரூபிணி சென்றும் இமையாள் கலங்கி போய் நிற்க, அம்பிகா அவளை தோளோடு அணைத்து ஆறுதல் கூறினார்.
"அதெல்லாம் இல்லை அத்தை" என்ற இமையாள், "மாமா பசங்க வெளியில் போனாங்க. கூட்டிட்டு வாங்க" என்று வேங்கடத்திடம் கூறியவள், தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ருதுவை இருக்கையில் அமர்த்தி,
"எப்படி அடிப்பட்டுச்சு?" எனக் கேட்டாள். அவனது கட்டினை ஆராய, அவளது கண்ணீர் அவனது காயத்தில் பட்டு தெறித்தது.
ருது கையை இழுத்திட...
"ம்ப்ச்..." என்றவள், "வலிக்குதாப்பா?" எனக் கேட்டாள்.
"என்னடா இவ்ளோ பெரிய கட்டு. எப்படி ஆச்சு? எப்படி கவனிக்கமா விட்டேன்" என்ற அம்பிகா, ருதுவின் மற்றைய பக்கம் வந்து அமர்ந்தார்.
"என்னம்மா நீங்க பார்க்காததா? அப்பாக்கு இந்த மாதிரி எத்தனை பார்த்திருப்பீங்க" என்ற ருது, "அழாதடி! என்னவோ பண்ணுது" என இமையாளை அதட்டியவனாக எழுந்து கொண்டான்.
"எப்படி ஆச்சுன்னு சொல்ல மாட்டிங்களா?"
"இப்போ உன் முன்னாடி நல்லா தானே நிக்கிறேன்" என்றவன், "பசிக்குதுடி" என்று விட்டு மாடியேறினான்.
"வலியை வெளியில் காட்டிக்கவே மாட்டான் இமையாள். நாம தான் தவிக்கணும்" என்ற அம்பிகா, "அவங்க மூணு பேர் வந்ததும் நான் சாப்பிட வைக்கிறேன். நீ அவனுக்கு கொண்டு போ" என்றார்.
உணவு அடங்கிய தட்டுடன் இமையாள் அறைக்குள் வரும்போது, ருது சட்டையை மாற்றாது தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தான். செய்தி அலைவரிசை ஓடிக் கொண்டிருக்க, இமையாளை கண்டதும் பட்டென்று அணைத்திருந்தான்.
"என்ன நியூஸ் அது..." என்று பாதி கேட்ட அதிர்வில் அவனருகில் வேகமாக வந்தவள், "இது வெட்டு பட்ட காயமா? டிவி ஆன் பண்ணுங்க" என தட்டினை முன்னிருந்த டீபாயின் மீது வைத்துவிட்டு, ருதுவிடமிருந்த ரிமோட்டினை பறிக்க முயற்சித்தாள். அவன் தர முடியாது என போக்குக்காட்டிட, அவன் மடி மீதே அமர்ந்து ரிமோட்டினை பிடிக்க முயல, இருவரும் அந்த நீள்விருக்கையில் சரிந்தனர். தானாக இருவரின் இதழும் ஒட்டிக்கொண்டது.
ருது மெல்ல கண்களை மூடிட, பட்டென்று ரிமோட்டை பறித்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்து எழுந்து நின்றாள்.
திரையில் அந்த மாலை மங்கிய நேரத்தில் ஒருவன் ருதுவை வெட்ட வருவதும், அதனை தடுக்க முயன்ற ருதுவின் உள்ளங்கையில் அரிவாள் ஆழமாக இறங்கிய காட்சியும் தான் ஓடிக் கொண்டிருந்தது.
இமையாளின் கன்னத்தில் சரசரவென நீர் இறங்கிட...
"ம்ப்ச்" என்று நெற்றியை தேய்த்தவன், அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தி அணைத்துக் கொண்டான்.
"ஒரு பொண்ணை ஈவ்டீஸிங் செய்து கொன்னிருக்கானுங்க. அவனுங்களுக்கு நேத்து தண்டனை கிடைச்சிருச்சு. அவனுங்க கவுன்சிலர் ஒருத்தனோட சொந்தம். அவன் என்னைப்போட..."
இமையாள் அவனது வாயில் கை வைத்து வேண்டாமென்று இடவலமாக தலையசைத்து, அவனது நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள்.
"இது என் வேலையில் சகஜம் டா. ஒவ்வொரு முறையும் அழுதுட்டே இருப்பியா? அந்த கவுன்சிலரையும் உள்ள போட்டாச்சு. எப்பவும் கவனமாதான் இருப்பேன். இன்னைக்கு, அதைவிடு... இனி உனக்காக, என் பொண்டாட்டியோட நிறைய வருஷம் வாழனுங்கிறதுக்காக இன்னும் கூடுதல் கவனமா இருக்கேன். ஓகே வா!" என்றான்.
இமையாள் அவனது நெஞ்சில் இதழ் ஒற்றி, முகம் காண...
"என்னடா?" என்றான். ஆதுரமாய்.
"ம்ஹூம்..." என்று அவனை இறுக்கி அணைத்தவள்,
"சாப்பிடலாம். நேரா உட்காருங்க" என்று அவனிலிருந்து பிரிந்து அமர்ந்தாள்.
அவளே அவனுக்கு ஊட்டியும் விட்டாள். ஆனால் அவளின் விழி நீர் மட்டும் நிற்கவில்லை.
அவள் இன்றொன்றுக்கும் மருகுகிறாள் என்பது புரிகிறது அவனுக்கு. ஆனால் அவனாக மட்டுமே அந்த மருகளை போக்கிட முடியாதே! அவளின் அழ் மனம் அதனை வெளிப்படுத்திட வேண்டும். அப்போதே அவன் அதற்கு தீர்வு காண முடியும்.
ஊட்டி முடித்து அவள் எழ...
"அழாம போடி..." என்றான்.
"வரும்போது சாப்பிட்டு வா" என்று பால்கனி பக்கம் சென்று நின்றவனுக்கு, ரூபிணியின் திடீர் வருகை, அவள் எண்ணம், இறுதியாக இமையாள் குறித்து பேசியது எதுவும் பிடிக்கவில்லை. அவள் மீதிருந்த கொஞ்ச பாசமும் விட்டுப்போனது.
'இப்படியும் இருப்பார்களா?' நினைத்துக் கொண்டிருக்கையில்,
"அப்பா" என்று ஓடி வந்தான் தேஷ். அவனின் பின்னால் வேங்கடம் மற்றும் ஷிவா.
"எவன் ருது அது?" என்று மகனின் கட்டை பார்த்தவர், "எத்தனை ஸ்டிச்சஸ்?" எனக் கேட்டார்.
"அவன் இப்போ ஜெயிலில். அதை விடுங்க. அம் ஓகே நவ்" என்றவனிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு வேங்கடம் சென்றிட, "பெயின் இருக்காண்ணா?" என்று அவனின் அருகில் வந்தாள் ஷிவா.
"வலிக்கல... அப்படியே அல்வா சாப்பிடுற மாதிரி இருக்கு" என்று மற்ற கையால் அவளின் தலையில் கொட்டினான்.
"அப்பா... அத்தை பாவம்" என்ற தேஷ், ருதுவை தூக்க சொல்லி கைகளை தூக்கிட...
"நான் தூக்குறேன்" என்று அப்போது தான் அறைக்குள் வந்த இமையாள், ருது குனிவதற்குள் வேகமாக வந்து தூக்கியிருந்தாள்.
"ஒரு கையில தான் அடி பட்டிருக்கு" என்ற ருது இமையாளை முறைத்தான்.
"போடா" என்று சத்தமின்றி உதடசைத்தவள், தேஷ்ஷுடன் நகர்ந்து உள்ளே சென்றிட...
"என்ன கேக்கணும் ஷிவா?" என்றான் ருது.
"அங்க... அண்ணி வீட்டில்?" என்று ஷிவா கேள்வியாய் நிறுத்திட...
"உன் ஆளுக்கு கல்யாணம் வேண்டாமாம்" என்றான். பால்கனி சுற்று கம்பியில் நன்கு சாய்ந்தவனாக.
"இல்லை... பொய் சொல்றீங்க." அவளின் குரல் தழுதழுத்தது.
"நீதான் அவன்கிட்ட நேரடியா லவ் சொல்லவே இல்லையாமே! சோ, கல்யாணம் இப்போ வேண்டாம் சொல்லிட்டான்..." என்று ருது முடிக்கும் முன் அங்கிருந்து வேகமாக கீழே தனதறைக்கு ஓடிவந்த ஷிவா, அதே வேகத்தோடு அலைப்பேசி எடுத்து இனியனுக்கு அழைத்தும் இருந்தாள்.
"ஐ லவ் யூ... லவ் யூ சோ மச்..." இனியன் ஏற்ற நொடி மூச்சு வாங்கிட படபடவென சொல்லியிருந்தாள்.
"அப்புறம்?" இனியனிடம் விரிந்த புன்னகை. அவளது மூச்சுக்காற்று ஓசையில் அவனது இதயம் தாளம் தப்பியது. இருப்பினும் நிதானமாகக் கேட்டான்.
"ஏன் கல்யாணம் வேணாம் சொன்னீங்க?" என்று சத்தமாகக் கேட்டவள், "பிடிக்கலையா?" என குரல் தழைத்து வினவ...
"ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கே! அதான் வேணாம் சொன்னேன்" என்றான்.
"புரியல?"
"நீ இன்னும் வளரனும் டி. இல்லைன்னா எனக்கு கஷ்டம்" என்றான்.
"டபுள் மீனிங்கா?"
"ச்ச்... ச்ச... சிங்கிள் மீனிங்ம்மா" என்றவனிடம் அவளின் சிணுங்களில் அட்டகாசமான புன்னகை.
"எதுக்கு சிரிக்கிறீங்க?"
"இப்போ எப்படி மேடம்க்கு தைரியம் வந்துச்சு?" இனியன் கேட்டிட, ருது கூறியவற்றை கூறினாள்.
இனியனின் சிரிப்பு இன்னும் நீண்டது.
"நான் உன் ஸ்டடிஸ் முடிஞ்சு மேரேஜ் வச்சிக்கலாம் தான் சொன்னேன்" என்றான் இனியன்.
"ஏன்?" என அவள் சிறு ஏமாற்றமாய் கேட்டிட... பொறுமையாகவே விளக்கம் கொடுத்தான்.
"மெடிஸின் ஈஸி இல்லை ஷிவா. ஸ்டடிஸ் பர்ஸ்ட். இன்னும் போக போக ஓவர் பிரஷர் ஆகும். ரொம்பவே சீரியஸான கோர்ஸ். இதுல மேரேஜ் பிரஷர் வேண்டாம்" என்றான்.
"அப்போ டூ இயர்ஸ் ஒன்னுமே இல்லையா?" அவன் மீது கொள்ளை காதல் அவளுக்கு. அதற்கு தடை விதித்தால் அவளும் என்ன செய்வாள்.
"லவ் பண்ணுவோம். இப்போ மாதிரியே! டிஸ்டன்ஸ் லவ்" என்றான்.
"முடியாது" என பட்டென்று மறுத்திருந்தாள்.
"நீ பக்கம் வந்தால் என் கண்ட்ரோல் மிஸ் ஆகும் டி. புரிஞ்சிக்கோ ஷிவா" என்ற இனியனின் அந்தகுரலில் என்ன உணர்ந்தாளோ அவளும் சரியென்றிருந்தாள்.
"தட்ஸ் மை கேர்ள்" என்றவன், "லவ் யூ டி" என்று வைத்திருந்தான்.
இனி அவர்களின் காதலின் எல்லை இரண்டு வருடத்திற்கு தடையில்லாது நீளும்.
காதல் வானில் உலா வரும் காதல் கிளிகள் ஆகினர்.
________________________________
ருதுவிற்கு கை குணமாகும் வரை அவனை சிறு பொருளை அசைக்கவும் விடவில்லை இமையாள்.
அவன் அசைந்தால் கூட,
"ஏதும் வேணுமா ருது?" என முன் வந்து நிற்பவளின் அதீத நேசத்தில் நொந்து போனான் என்றும் சொல்லலாம்.
"லவ் டார்ச்சர் பன்ற நீ" என்ற போதும், அவளின் அதீத காதலை துளி துளியாய் ரசிக்கவே செய்தான். கிடைக்காது என தவித்த தருணங்களை அவள் கொட்டி கொடுத்திடும் போது அவனுக்கு வேறென்ன வேண்டுமாம்.
ஆனாலும் இமையாளிடம் சிறு அமைதி. ருது உணர்ந்தே இருந்தான்.
தேஷ்ஷுடன் அப்படியொரு நெருக்கம். பெற்ற அன்னையின் அரவணைப்பையும் மிஞ்சய அன்பை அவனிடத்தில் கொண்டிருந்தாள் இமையாள். ருதுவிற்காக என்றாலும், தேஷ்ஷின் மீதான அவளின் அன்பு அத்தனை தூய்மையானது.
இருவரும் காதலாய் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தனர்.
ஒருநாள் திடீரென தான் ருதுவுக்கு இமையாள் எப்படி தேஷ் தன்னுடைய மகனில்லை என்பதை கண்டுகொண்டு தன்னிடம் கேட்டாள் எனும் கேள்வியே நினைவுக்கு வந்தது... அதனை அவன் கேட்கவும் செய்தான்.
"பர்த் சர்டிபிகேட்" என்று முடித்துக்கொண்டாள்.
அப்போது தான் அவனுக்கு அவள் எப்படித் தெரிந்து கொண்டிருக்க முடியும் என்பதே விளங்கியது.
பள்ளியில் கொடுத்திருந்த தேஷ்ஷின் பிறப்புச் சான்றிதழில், அப்பா பெயர் ருத்விக், அம்மா பெயர் இமையாள் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. குழந்தை பிறந்ததும் மருத்துவமனையில் அளிக்கப்படும் தகவலின் அடிப்படையில் அரசு அலுவலகத்தில் கொடுக்கப்படும் சான்றிதழில் உண்மை இல்லாமல் போலி பதிவு செய்திட முடியாதே!
'மண்டைக்குள் தன் பெயர் எப்படி?' இமையாளுக்கு வண்டாய் குடைந்திட, அப்போதுதான் ருது, அன்று தேஷ் பற்றி பேசும்போது, 'என் ரத்த சொந்தம் தான் அவன்' என சொல்லியது அவளின் காதில் எதிரொலித்தது.
'ரத்த சொந்தம் ரைட்... ஆனால்?'அவளின் மூளைக்குள் பளிச்சிடல்... அவனிடமே உண்மையை வாங்கியிருந்தாள்.
_________________________________
விடுமுறை முடிந்து அன்று இமையாளுக்கு மட்டுமல்ல தேஷ்ஷிற்கு முதல் நாள் பள்ளி. அவன் இவ்வுலகில் பறப்பதற்கான முதல் சிறகு முளைக்கும் நாள்.
தேஷ்ஷை கிளப்பி, தானும் அத்தனை வேகமாக ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் இமையாள்.
இருவருக்கும் ருது தான் மாற்றி மாற்றி உணவினை ஊட்டிக்கொண்டிருந்தான்.
"அம்மாவும், பிள்ளையும் தூங்கும்போதுதான் நல்லா ஆட்டம் போட வேண்டியது. இப்போ பாரு ஒழுங்கா சாப்பிடக்கூடநேரமில்லாம" என்று இருவரையும் கடிந்து கொண்டான்.
பின்னலை முடித்து திரும்பிய இமையாள்,
"அதனால மட்டும் தான் காலையில் நான் எழ லேட்டாச்சா டிசி சார்?" என புருவம் உயர்த்தி கேட்டதில்...
"நைட் பதில் சொல்றேண்டி என் பொண்டாட்டி" என்று கண் சிமிட்டினான் ருது.
"யூ... பையன் முன்னாடி" என்று ருதுவின் புஜத்தில் இமையாள் அடிக்க...
"அம்மா நானும்" என்று தேஷ் ருதுவின் புஜத்தை பற்றி பிடித்து ஊஞ்சல் ஆடினான்.
"அப்பாக்கு கை இப்போதான் சரி ஆகியிருக்கு பேபி" என்று தேஷ்ஷை தூக்கிக்கொண்ட இமையாள்,
"தேஷ்க்கு 12.30 ஸ்கூல் முடிஞ்சிடும். பிக்கப் பண்ணிக்கோங்க" என்றாள்.
"ஹ்ம்ம்" என்றவன், "எதுவும் இல்லையா?" என்றான்.
"என்னது?" என்றவள், தேஷ்ஷை இறக்கிவிட்டு "தாத்தா, பாட்டிக்கிட்ட விஷ்ஷஸ் வாங்கிக்கோங்க" என்று கீழே அனுப்பினாள்.
"என்ன வேணுமாம் டிசி சாருக்கு" என்று அவனை நெருங்கியவள், அவன் கால் மீது ஏறி நின்று அவனது கழுத்தினை சுற்றி வளைத்து கட்டிக்கொண்டாள்.
"லேஷஸ்..." அவனது சூடேறிய மூச்சுக்காற்று அவளின் முகம் தீண்டிட, அவளது இமை குடைகள் தாமாக மூடி, இதழ்கள் திறந்தன.
ஆழ்ந்த அழுத்தமான இதழ் முத்தம். அவன் முடிவுக்கு கொண்டு வந்தாலும், அவள் விடாது நீட்டித்தாள்.
"லேஷஸ்க்கு என்னவாம்?"
"ஸ்கூல் போகனுமா?"
அவள் கேட்டதில், இருக்கும் நெருக்கத்தில் அவனுள் தீ பிடித்தது.
"எப்படி நின்னுட்டு என்ன கேட்கிற நீ?" என்றவன், "நீ கிளம்பு" என்று தன்னிலிருந்து பிரித்து நிறுத்தினான்.
"என்னை எப்போவும் நம்புவீங்களா ருது?"
அவளின் கேள்வியின் பொருள் அவனுக்கு புரியவில்லை.
"என்னைவிடவே உன்னை அதிகம் நம்புறேன் டா" என்றவன், "சடனா என்ன இந்த கேள்வி?" எனக் கேட்டான்.
"முன்னாடி தேஷ் வைத்து என்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லை தானே! அதே எண்ணம் இப்பவும் இருக்கா?" என்றாள்.
"எதுக்காக இப்படியொரு கேள்வி லேஷஸ்? இதுக்கு நான் எப்பவோ விளக்கம் கொடுத்துட்டேன். உன்னை தேஷ் விடயத்தில் நீ ஏத்துக்கமாட்டன்னு தவறா நினைத்ததுக்கு மன்னிப்பும் கேட்டுட்டேன். ஆனால் இப்போ இது எதுக்கு எனக்கு புரியல" என்றான்.
இமையாள் அவனது ஆராயும் பார்வையை தவிர்த்தவளாக, "லேட்டாகுது கிளம்புறேன்" என்று நகர,
"ஏதும் மறைக்கிறியா லேஷஸ்?" எனக் கேட்டிருந்தான்.
அவளின் கண்ணீர் கன்னம் உருண்டது.
"லேஷஸ்..."அவன் பதறியவனாக அவளை நோக்கி அடி வைத்திட,
"லவ் யூ ருது" என வேகமாக கீழிறங்கியிருந்தாள்.
___________________________________
இமையாள் சொல்லியது போல் தேஷ்ஷை அழைத்து வர பள்ளிக்கு சரியான நேரத்திற்கு ருது வந்துவிட்டான்.
இமையாளக்கு அழைத்திட அவள் எடுக்கவில்லை.
"கிளாசில் இருப்பா(ள்)" என சொல்லிக்கொண்டவன், தேஷ் வந்ததும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
மகனை வீட்டில் விட்டவன், மீண்டும் காவல் நிலையம் சென்றான்.
அன்று முழுக்க வழக்கமாக தன்னவளிடமிருந்து வரும் குறுந்தகவல்கள் ஏதுமின்றி ருது மனதால் அல்லாடினான்.
ருது பணிக்கு சென்றால் கூட அவன் வீட்டிற்கு வருவதற்குள், எதையாவது கேட்டு தகவல் அனுப்பிடுவாள். ஏதுமில்லை என்றாலும், ஒற்றை சிவப்பு நிற இதயமாவது திரையில் எம்பி குதிக்கும். இன்று ஒன்றுமே இல்லை.
முதல் நாள் பள்ளி, பாடம் எடுப்பதில் பிசியாக இருப்பாளென்று இவனாக நினைத்துக்கொண்டு தன்னை சமாதானம் செய்து கொண்டிருக்க, இனியனிடமிருந்து அழைப்பு வந்தது.
"எங்கடா இருக்க? பிஸியா?" இனியனின் குரல் சத்தமாக ஒலித்ததோ? ருதுவிற்கு அப்படித்தான் கேட்டது.
"நானே என் பொண்டாட்டி லவ் யூ சொல்லலன்னு சோகமா இருக்கேன். நீ வேற ஏன்டா கத்தற?" என சுரத்தே இன்றி பேசினான் ருது.
"மேடம் யாருக்கும் தெரியாமல் பெரிய பெரிதாய் முடிவெல்லாம் எடுக்கும்போது, நம்ம நினைப்பெல்லாம் அவங்களுக்கு எப்படி இருக்கும்" என்று தன் முன்னே அமர்ந்திருக்கும் தங்கையை காட்டமாக பார்த்தவாறு பேசிய இனியன், "ஹாஸ்பிடல் வா" என வைத்திட்டான்.
இமையாள் மருத்துவமனையில் இருக்கிறாள் என்றதும், அவளுக்கு என்னவோ என மிகுந்த பதட்டத்துடன், அதி விரைவில் அங்கு வந்து சேர்ந்திருந்தான் ருது.
"இமயாக்கு என்னாச்சு இனியா?" என்று கேட்டபடி தான் இனியனின் கன்சல்டிங் அறை கதவை திறந்துகொண்டு உள் நுழைந்தான் ருது.
இனியன் கோபமாக இருப்பது, அவன் முகத்திலே அப்பட்டமாகத் தெரிந்தது.
இனியனின் முன் இருக்கையில் தலை குனிந்து அமர்ந்திருந்த இமையாள் சத்தமின்றி அழுது கொண்டிருந்தாள்.
"என்னடா... ஏன் அழறாள்? என்னாச்சு அவளுக்கு? நீ ஏதும் திட்டுனியா டா? ஏன்டா?" என்று ருது இமையாளுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தவனாகி, "லேஷஸ்... என்னடாம்மா?" என அவளின் முகம் உயர்த்தி அழுத்தமாக துடைத்து விட்டான்.
"இன்னும் நல்லா மடியில் தூக்கி வச்சு கொஞ்சு." கடுகடுப்பின் உச்சத்தில் கொந்தளித்தான் இனியன்.
"உன் முன்னாடி எப்படிடா?" என்ற ருது, இனியனின் முறைப்பில், "ஓகே... அம் ஜிப். என்னன்னு சொல்லு?" எனக் கேட்டான்.
"அவளையே கேளு" என்ற இனியன், "பர்ஸ்ட் அவளை இங்கிருந்து கூட்டிட்டு கிளம்பு" என்றான்.
"என்னடா ரொம்பதான் பன்ற? எதுக்கு உனக்கு இப்போ இவ்ளோ கோபம்?"
"உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போடா. இருக்கும் கோபத்துக்கு அவளை அடிச்சிடுவனோன்னு பயமா இருக்கு" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மருத்துவர் அபி கதவினை தட்டிவிட்டு இமையளின் மருத்துவ கோப்போடு உள் வந்தாள்.
"க்ரோத் நல்லாவே இருக்கு. 48 டேஸ் ஆகுது இனியா. எல்லா டெஸ்ட்டும் நார்மல். இமயா தான் மனசில் ஏதோ வச்சிக்கிட்டு அழுத்தம் கொடுத்துக்கிறாள். அது அவளுக்கும், பேபிக்கும் நல்லதில்லை. பொறுமையா என்னன்னு கேளு. சும்மா நீயும் கோபப்படுட்டு இருக்காதே!" என்று கோப்பினை இனியனிடம் கொடுத்தவள், அப்போது தான் ருதுவை கவனித்து "காங்கிராட்ஸ் டிசி சார்" என்று வாழ்த்தினாள்.
அவள் இனியனிடம் பேசியதிலே ருது என்னவென்று புரிந்து கொண்டான்.
புன்னகையோடு அபிக்கு நன்றி தெரிவித்தான்.
"எனக்கு ட்யூட்டி முடிஞ்சுது பைய்" என்று அபி கிளம்பிட...
"நல்ல விஷயம் தானே! நீ மாமா ஆகிட்ட. எதுக்குடா தேவையில்லாம கோபப்படுற?" என்றான் ருது.
"ருது... சத்தியமா அடிச்சிடுவேன். அவள் அபார்ஷன் பண்ண சொல்லி வந்து நிக்கிறாள். அபி என் ஃபிரண்ட்'ங்கிறதால் எனக்கு தெரிஞ்சுது. இல்லைன்னா? ரொம்பவே கோபத்தை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன். வீட்டுக்குப் போ. நான் அப்பா, அம்மா கூட்டிட்டு வரேன்" என்ற இனியன், "நானும் கிளம்புறேன்" என எழுந்து கொண்டான்.
"லேஷஸ்...?" ருதுவிற்கு தொண்டை அடைத்தது.
"ருது... நான்" என்றவள் மலுக்கென விழுந்த கண்ணீரோடு அவனது நெஞ்சில் சாய்ந்தாள்.
ரூபிணியை எதில் சேர்ப்பதென்றே தெரியவில்லை. அவள் சென்ற பின்னர் தான் அங்கு இறுக்கம் தளர்ந்தது. இனி ருதுவின் வாழ்வில் கைலாஷ்ஷின் அத்தியாயம் முடிந்தது போல் அவளுடையதும் முடிவுக்கு வந்தது.
"அவளுக்கு உன்னைப்பற்றி தெரியாதே இமையாள். அவ பேச்சை மனசில் வச்சிக்காதே!"
ரூபிணி சென்றும் இமையாள் கலங்கி போய் நிற்க, அம்பிகா அவளை தோளோடு அணைத்து ஆறுதல் கூறினார்.
"அதெல்லாம் இல்லை அத்தை" என்ற இமையாள், "மாமா பசங்க வெளியில் போனாங்க. கூட்டிட்டு வாங்க" என்று வேங்கடத்திடம் கூறியவள், தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ருதுவை இருக்கையில் அமர்த்தி,
"எப்படி அடிப்பட்டுச்சு?" எனக் கேட்டாள். அவனது கட்டினை ஆராய, அவளது கண்ணீர் அவனது காயத்தில் பட்டு தெறித்தது.
ருது கையை இழுத்திட...
"ம்ப்ச்..." என்றவள், "வலிக்குதாப்பா?" எனக் கேட்டாள்.
"என்னடா இவ்ளோ பெரிய கட்டு. எப்படி ஆச்சு? எப்படி கவனிக்கமா விட்டேன்" என்ற அம்பிகா, ருதுவின் மற்றைய பக்கம் வந்து அமர்ந்தார்.
"என்னம்மா நீங்க பார்க்காததா? அப்பாக்கு இந்த மாதிரி எத்தனை பார்த்திருப்பீங்க" என்ற ருது, "அழாதடி! என்னவோ பண்ணுது" என இமையாளை அதட்டியவனாக எழுந்து கொண்டான்.
"எப்படி ஆச்சுன்னு சொல்ல மாட்டிங்களா?"
"இப்போ உன் முன்னாடி நல்லா தானே நிக்கிறேன்" என்றவன், "பசிக்குதுடி" என்று விட்டு மாடியேறினான்.
"வலியை வெளியில் காட்டிக்கவே மாட்டான் இமையாள். நாம தான் தவிக்கணும்" என்ற அம்பிகா, "அவங்க மூணு பேர் வந்ததும் நான் சாப்பிட வைக்கிறேன். நீ அவனுக்கு கொண்டு போ" என்றார்.
உணவு அடங்கிய தட்டுடன் இமையாள் அறைக்குள் வரும்போது, ருது சட்டையை மாற்றாது தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தான். செய்தி அலைவரிசை ஓடிக் கொண்டிருக்க, இமையாளை கண்டதும் பட்டென்று அணைத்திருந்தான்.
"என்ன நியூஸ் அது..." என்று பாதி கேட்ட அதிர்வில் அவனருகில் வேகமாக வந்தவள், "இது வெட்டு பட்ட காயமா? டிவி ஆன் பண்ணுங்க" என தட்டினை முன்னிருந்த டீபாயின் மீது வைத்துவிட்டு, ருதுவிடமிருந்த ரிமோட்டினை பறிக்க முயற்சித்தாள். அவன் தர முடியாது என போக்குக்காட்டிட, அவன் மடி மீதே அமர்ந்து ரிமோட்டினை பிடிக்க முயல, இருவரும் அந்த நீள்விருக்கையில் சரிந்தனர். தானாக இருவரின் இதழும் ஒட்டிக்கொண்டது.
ருது மெல்ல கண்களை மூடிட, பட்டென்று ரிமோட்டை பறித்து தொலைக்காட்சியை உயிர்ப்பித்து எழுந்து நின்றாள்.
திரையில் அந்த மாலை மங்கிய நேரத்தில் ஒருவன் ருதுவை வெட்ட வருவதும், அதனை தடுக்க முயன்ற ருதுவின் உள்ளங்கையில் அரிவாள் ஆழமாக இறங்கிய காட்சியும் தான் ஓடிக் கொண்டிருந்தது.
இமையாளின் கன்னத்தில் சரசரவென நீர் இறங்கிட...
"ம்ப்ச்" என்று நெற்றியை தேய்த்தவன், அவளை இழுத்து தன் மடியில் அமர்த்தி அணைத்துக் கொண்டான்.
"ஒரு பொண்ணை ஈவ்டீஸிங் செய்து கொன்னிருக்கானுங்க. அவனுங்களுக்கு நேத்து தண்டனை கிடைச்சிருச்சு. அவனுங்க கவுன்சிலர் ஒருத்தனோட சொந்தம். அவன் என்னைப்போட..."
இமையாள் அவனது வாயில் கை வைத்து வேண்டாமென்று இடவலமாக தலையசைத்து, அவனது நெஞ்சிலே சாய்ந்து கொண்டாள்.
"இது என் வேலையில் சகஜம் டா. ஒவ்வொரு முறையும் அழுதுட்டே இருப்பியா? அந்த கவுன்சிலரையும் உள்ள போட்டாச்சு. எப்பவும் கவனமாதான் இருப்பேன். இன்னைக்கு, அதைவிடு... இனி உனக்காக, என் பொண்டாட்டியோட நிறைய வருஷம் வாழனுங்கிறதுக்காக இன்னும் கூடுதல் கவனமா இருக்கேன். ஓகே வா!" என்றான்.
இமையாள் அவனது நெஞ்சில் இதழ் ஒற்றி, முகம் காண...
"என்னடா?" என்றான். ஆதுரமாய்.
"ம்ஹூம்..." என்று அவனை இறுக்கி அணைத்தவள்,
"சாப்பிடலாம். நேரா உட்காருங்க" என்று அவனிலிருந்து பிரிந்து அமர்ந்தாள்.
அவளே அவனுக்கு ஊட்டியும் விட்டாள். ஆனால் அவளின் விழி நீர் மட்டும் நிற்கவில்லை.
அவள் இன்றொன்றுக்கும் மருகுகிறாள் என்பது புரிகிறது அவனுக்கு. ஆனால் அவனாக மட்டுமே அந்த மருகளை போக்கிட முடியாதே! அவளின் அழ் மனம் அதனை வெளிப்படுத்திட வேண்டும். அப்போதே அவன் அதற்கு தீர்வு காண முடியும்.
ஊட்டி முடித்து அவள் எழ...
"அழாம போடி..." என்றான்.
"வரும்போது சாப்பிட்டு வா" என்று பால்கனி பக்கம் சென்று நின்றவனுக்கு, ரூபிணியின் திடீர் வருகை, அவள் எண்ணம், இறுதியாக இமையாள் குறித்து பேசியது எதுவும் பிடிக்கவில்லை. அவள் மீதிருந்த கொஞ்ச பாசமும் விட்டுப்போனது.
'இப்படியும் இருப்பார்களா?' நினைத்துக் கொண்டிருக்கையில்,
"அப்பா" என்று ஓடி வந்தான் தேஷ். அவனின் பின்னால் வேங்கடம் மற்றும் ஷிவா.
"எவன் ருது அது?" என்று மகனின் கட்டை பார்த்தவர், "எத்தனை ஸ்டிச்சஸ்?" எனக் கேட்டார்.
"அவன் இப்போ ஜெயிலில். அதை விடுங்க. அம் ஓகே நவ்" என்றவனிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு வேங்கடம் சென்றிட, "பெயின் இருக்காண்ணா?" என்று அவனின் அருகில் வந்தாள் ஷிவா.
"வலிக்கல... அப்படியே அல்வா சாப்பிடுற மாதிரி இருக்கு" என்று மற்ற கையால் அவளின் தலையில் கொட்டினான்.
"அப்பா... அத்தை பாவம்" என்ற தேஷ், ருதுவை தூக்க சொல்லி கைகளை தூக்கிட...
"நான் தூக்குறேன்" என்று அப்போது தான் அறைக்குள் வந்த இமையாள், ருது குனிவதற்குள் வேகமாக வந்து தூக்கியிருந்தாள்.
"ஒரு கையில தான் அடி பட்டிருக்கு" என்ற ருது இமையாளை முறைத்தான்.
"போடா" என்று சத்தமின்றி உதடசைத்தவள், தேஷ்ஷுடன் நகர்ந்து உள்ளே சென்றிட...
"என்ன கேக்கணும் ஷிவா?" என்றான் ருது.
"அங்க... அண்ணி வீட்டில்?" என்று ஷிவா கேள்வியாய் நிறுத்திட...
"உன் ஆளுக்கு கல்யாணம் வேண்டாமாம்" என்றான். பால்கனி சுற்று கம்பியில் நன்கு சாய்ந்தவனாக.
"இல்லை... பொய் சொல்றீங்க." அவளின் குரல் தழுதழுத்தது.
"நீதான் அவன்கிட்ட நேரடியா லவ் சொல்லவே இல்லையாமே! சோ, கல்யாணம் இப்போ வேண்டாம் சொல்லிட்டான்..." என்று ருது முடிக்கும் முன் அங்கிருந்து வேகமாக கீழே தனதறைக்கு ஓடிவந்த ஷிவா, அதே வேகத்தோடு அலைப்பேசி எடுத்து இனியனுக்கு அழைத்தும் இருந்தாள்.
"ஐ லவ் யூ... லவ் யூ சோ மச்..." இனியன் ஏற்ற நொடி மூச்சு வாங்கிட படபடவென சொல்லியிருந்தாள்.
"அப்புறம்?" இனியனிடம் விரிந்த புன்னகை. அவளது மூச்சுக்காற்று ஓசையில் அவனது இதயம் தாளம் தப்பியது. இருப்பினும் நிதானமாகக் கேட்டான்.
"ஏன் கல்யாணம் வேணாம் சொன்னீங்க?" என்று சத்தமாகக் கேட்டவள், "பிடிக்கலையா?" என குரல் தழைத்து வினவ...
"ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கே! அதான் வேணாம் சொன்னேன்" என்றான்.
"புரியல?"
"நீ இன்னும் வளரனும் டி. இல்லைன்னா எனக்கு கஷ்டம்" என்றான்.
"டபுள் மீனிங்கா?"
"ச்ச்... ச்ச... சிங்கிள் மீனிங்ம்மா" என்றவனிடம் அவளின் சிணுங்களில் அட்டகாசமான புன்னகை.
"எதுக்கு சிரிக்கிறீங்க?"
"இப்போ எப்படி மேடம்க்கு தைரியம் வந்துச்சு?" இனியன் கேட்டிட, ருது கூறியவற்றை கூறினாள்.
இனியனின் சிரிப்பு இன்னும் நீண்டது.
"நான் உன் ஸ்டடிஸ் முடிஞ்சு மேரேஜ் வச்சிக்கலாம் தான் சொன்னேன்" என்றான் இனியன்.
"ஏன்?" என அவள் சிறு ஏமாற்றமாய் கேட்டிட... பொறுமையாகவே விளக்கம் கொடுத்தான்.
"மெடிஸின் ஈஸி இல்லை ஷிவா. ஸ்டடிஸ் பர்ஸ்ட். இன்னும் போக போக ஓவர் பிரஷர் ஆகும். ரொம்பவே சீரியஸான கோர்ஸ். இதுல மேரேஜ் பிரஷர் வேண்டாம்" என்றான்.
"அப்போ டூ இயர்ஸ் ஒன்னுமே இல்லையா?" அவன் மீது கொள்ளை காதல் அவளுக்கு. அதற்கு தடை விதித்தால் அவளும் என்ன செய்வாள்.
"லவ் பண்ணுவோம். இப்போ மாதிரியே! டிஸ்டன்ஸ் லவ்" என்றான்.
"முடியாது" என பட்டென்று மறுத்திருந்தாள்.
"நீ பக்கம் வந்தால் என் கண்ட்ரோல் மிஸ் ஆகும் டி. புரிஞ்சிக்கோ ஷிவா" என்ற இனியனின் அந்தகுரலில் என்ன உணர்ந்தாளோ அவளும் சரியென்றிருந்தாள்.
"தட்ஸ் மை கேர்ள்" என்றவன், "லவ் யூ டி" என்று வைத்திருந்தான்.
இனி அவர்களின் காதலின் எல்லை இரண்டு வருடத்திற்கு தடையில்லாது நீளும்.
காதல் வானில் உலா வரும் காதல் கிளிகள் ஆகினர்.
________________________________
ருதுவிற்கு கை குணமாகும் வரை அவனை சிறு பொருளை அசைக்கவும் விடவில்லை இமையாள்.
அவன் அசைந்தால் கூட,
"ஏதும் வேணுமா ருது?" என முன் வந்து நிற்பவளின் அதீத நேசத்தில் நொந்து போனான் என்றும் சொல்லலாம்.
"லவ் டார்ச்சர் பன்ற நீ" என்ற போதும், அவளின் அதீத காதலை துளி துளியாய் ரசிக்கவே செய்தான். கிடைக்காது என தவித்த தருணங்களை அவள் கொட்டி கொடுத்திடும் போது அவனுக்கு வேறென்ன வேண்டுமாம்.
ஆனாலும் இமையாளிடம் சிறு அமைதி. ருது உணர்ந்தே இருந்தான்.
தேஷ்ஷுடன் அப்படியொரு நெருக்கம். பெற்ற அன்னையின் அரவணைப்பையும் மிஞ்சய அன்பை அவனிடத்தில் கொண்டிருந்தாள் இமையாள். ருதுவிற்காக என்றாலும், தேஷ்ஷின் மீதான அவளின் அன்பு அத்தனை தூய்மையானது.
இருவரும் காதலாய் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தனர்.
ஒருநாள் திடீரென தான் ருதுவுக்கு இமையாள் எப்படி தேஷ் தன்னுடைய மகனில்லை என்பதை கண்டுகொண்டு தன்னிடம் கேட்டாள் எனும் கேள்வியே நினைவுக்கு வந்தது... அதனை அவன் கேட்கவும் செய்தான்.
"பர்த் சர்டிபிகேட்" என்று முடித்துக்கொண்டாள்.
அப்போது தான் அவனுக்கு அவள் எப்படித் தெரிந்து கொண்டிருக்க முடியும் என்பதே விளங்கியது.
பள்ளியில் கொடுத்திருந்த தேஷ்ஷின் பிறப்புச் சான்றிதழில், அப்பா பெயர் ருத்விக், அம்மா பெயர் இமையாள் என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. குழந்தை பிறந்ததும் மருத்துவமனையில் அளிக்கப்படும் தகவலின் அடிப்படையில் அரசு அலுவலகத்தில் கொடுக்கப்படும் சான்றிதழில் உண்மை இல்லாமல் போலி பதிவு செய்திட முடியாதே!
'மண்டைக்குள் தன் பெயர் எப்படி?' இமையாளுக்கு வண்டாய் குடைந்திட, அப்போதுதான் ருது, அன்று தேஷ் பற்றி பேசும்போது, 'என் ரத்த சொந்தம் தான் அவன்' என சொல்லியது அவளின் காதில் எதிரொலித்தது.
'ரத்த சொந்தம் ரைட்... ஆனால்?'அவளின் மூளைக்குள் பளிச்சிடல்... அவனிடமே உண்மையை வாங்கியிருந்தாள்.
_________________________________
விடுமுறை முடிந்து அன்று இமையாளுக்கு மட்டுமல்ல தேஷ்ஷிற்கு முதல் நாள் பள்ளி. அவன் இவ்வுலகில் பறப்பதற்கான முதல் சிறகு முளைக்கும் நாள்.
தேஷ்ஷை கிளப்பி, தானும் அத்தனை வேகமாக ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் இமையாள்.
இருவருக்கும் ருது தான் மாற்றி மாற்றி உணவினை ஊட்டிக்கொண்டிருந்தான்.
"அம்மாவும், பிள்ளையும் தூங்கும்போதுதான் நல்லா ஆட்டம் போட வேண்டியது. இப்போ பாரு ஒழுங்கா சாப்பிடக்கூடநேரமில்லாம" என்று இருவரையும் கடிந்து கொண்டான்.
பின்னலை முடித்து திரும்பிய இமையாள்,
"அதனால மட்டும் தான் காலையில் நான் எழ லேட்டாச்சா டிசி சார்?" என புருவம் உயர்த்தி கேட்டதில்...
"நைட் பதில் சொல்றேண்டி என் பொண்டாட்டி" என்று கண் சிமிட்டினான் ருது.
"யூ... பையன் முன்னாடி" என்று ருதுவின் புஜத்தில் இமையாள் அடிக்க...
"அம்மா நானும்" என்று தேஷ் ருதுவின் புஜத்தை பற்றி பிடித்து ஊஞ்சல் ஆடினான்.
"அப்பாக்கு கை இப்போதான் சரி ஆகியிருக்கு பேபி" என்று தேஷ்ஷை தூக்கிக்கொண்ட இமையாள்,
"தேஷ்க்கு 12.30 ஸ்கூல் முடிஞ்சிடும். பிக்கப் பண்ணிக்கோங்க" என்றாள்.
"ஹ்ம்ம்" என்றவன், "எதுவும் இல்லையா?" என்றான்.
"என்னது?" என்றவள், தேஷ்ஷை இறக்கிவிட்டு "தாத்தா, பாட்டிக்கிட்ட விஷ்ஷஸ் வாங்கிக்கோங்க" என்று கீழே அனுப்பினாள்.
"என்ன வேணுமாம் டிசி சாருக்கு" என்று அவனை நெருங்கியவள், அவன் கால் மீது ஏறி நின்று அவனது கழுத்தினை சுற்றி வளைத்து கட்டிக்கொண்டாள்.
"லேஷஸ்..." அவனது சூடேறிய மூச்சுக்காற்று அவளின் முகம் தீண்டிட, அவளது இமை குடைகள் தாமாக மூடி, இதழ்கள் திறந்தன.
ஆழ்ந்த அழுத்தமான இதழ் முத்தம். அவன் முடிவுக்கு கொண்டு வந்தாலும், அவள் விடாது நீட்டித்தாள்.
"லேஷஸ்க்கு என்னவாம்?"
"ஸ்கூல் போகனுமா?"
அவள் கேட்டதில், இருக்கும் நெருக்கத்தில் அவனுள் தீ பிடித்தது.
"எப்படி நின்னுட்டு என்ன கேட்கிற நீ?" என்றவன், "நீ கிளம்பு" என்று தன்னிலிருந்து பிரித்து நிறுத்தினான்.
"என்னை எப்போவும் நம்புவீங்களா ருது?"
அவளின் கேள்வியின் பொருள் அவனுக்கு புரியவில்லை.
"என்னைவிடவே உன்னை அதிகம் நம்புறேன் டா" என்றவன், "சடனா என்ன இந்த கேள்வி?" எனக் கேட்டான்.
"முன்னாடி தேஷ் வைத்து என்மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லை தானே! அதே எண்ணம் இப்பவும் இருக்கா?" என்றாள்.
"எதுக்காக இப்படியொரு கேள்வி லேஷஸ்? இதுக்கு நான் எப்பவோ விளக்கம் கொடுத்துட்டேன். உன்னை தேஷ் விடயத்தில் நீ ஏத்துக்கமாட்டன்னு தவறா நினைத்ததுக்கு மன்னிப்பும் கேட்டுட்டேன். ஆனால் இப்போ இது எதுக்கு எனக்கு புரியல" என்றான்.
இமையாள் அவனது ஆராயும் பார்வையை தவிர்த்தவளாக, "லேட்டாகுது கிளம்புறேன்" என்று நகர,
"ஏதும் மறைக்கிறியா லேஷஸ்?" எனக் கேட்டிருந்தான்.
அவளின் கண்ணீர் கன்னம் உருண்டது.
"லேஷஸ்..."அவன் பதறியவனாக அவளை நோக்கி அடி வைத்திட,
"லவ் யூ ருது" என வேகமாக கீழிறங்கியிருந்தாள்.
___________________________________
இமையாள் சொல்லியது போல் தேஷ்ஷை அழைத்து வர பள்ளிக்கு சரியான நேரத்திற்கு ருது வந்துவிட்டான்.
இமையாளக்கு அழைத்திட அவள் எடுக்கவில்லை.
"கிளாசில் இருப்பா(ள்)" என சொல்லிக்கொண்டவன், தேஷ் வந்ததும் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
மகனை வீட்டில் விட்டவன், மீண்டும் காவல் நிலையம் சென்றான்.
அன்று முழுக்க வழக்கமாக தன்னவளிடமிருந்து வரும் குறுந்தகவல்கள் ஏதுமின்றி ருது மனதால் அல்லாடினான்.
ருது பணிக்கு சென்றால் கூட அவன் வீட்டிற்கு வருவதற்குள், எதையாவது கேட்டு தகவல் அனுப்பிடுவாள். ஏதுமில்லை என்றாலும், ஒற்றை சிவப்பு நிற இதயமாவது திரையில் எம்பி குதிக்கும். இன்று ஒன்றுமே இல்லை.
முதல் நாள் பள்ளி, பாடம் எடுப்பதில் பிசியாக இருப்பாளென்று இவனாக நினைத்துக்கொண்டு தன்னை சமாதானம் செய்து கொண்டிருக்க, இனியனிடமிருந்து அழைப்பு வந்தது.
"எங்கடா இருக்க? பிஸியா?" இனியனின் குரல் சத்தமாக ஒலித்ததோ? ருதுவிற்கு அப்படித்தான் கேட்டது.
"நானே என் பொண்டாட்டி லவ் யூ சொல்லலன்னு சோகமா இருக்கேன். நீ வேற ஏன்டா கத்தற?" என சுரத்தே இன்றி பேசினான் ருது.
"மேடம் யாருக்கும் தெரியாமல் பெரிய பெரிதாய் முடிவெல்லாம் எடுக்கும்போது, நம்ம நினைப்பெல்லாம் அவங்களுக்கு எப்படி இருக்கும்" என்று தன் முன்னே அமர்ந்திருக்கும் தங்கையை காட்டமாக பார்த்தவாறு பேசிய இனியன், "ஹாஸ்பிடல் வா" என வைத்திட்டான்.
இமையாள் மருத்துவமனையில் இருக்கிறாள் என்றதும், அவளுக்கு என்னவோ என மிகுந்த பதட்டத்துடன், அதி விரைவில் அங்கு வந்து சேர்ந்திருந்தான் ருது.
"இமயாக்கு என்னாச்சு இனியா?" என்று கேட்டபடி தான் இனியனின் கன்சல்டிங் அறை கதவை திறந்துகொண்டு உள் நுழைந்தான் ருது.
இனியன் கோபமாக இருப்பது, அவன் முகத்திலே அப்பட்டமாகத் தெரிந்தது.
இனியனின் முன் இருக்கையில் தலை குனிந்து அமர்ந்திருந்த இமையாள் சத்தமின்றி அழுது கொண்டிருந்தாள்.
"என்னடா... ஏன் அழறாள்? என்னாச்சு அவளுக்கு? நீ ஏதும் திட்டுனியா டா? ஏன்டா?" என்று ருது இமையாளுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தவனாகி, "லேஷஸ்... என்னடாம்மா?" என அவளின் முகம் உயர்த்தி அழுத்தமாக துடைத்து விட்டான்.
"இன்னும் நல்லா மடியில் தூக்கி வச்சு கொஞ்சு." கடுகடுப்பின் உச்சத்தில் கொந்தளித்தான் இனியன்.
"உன் முன்னாடி எப்படிடா?" என்ற ருது, இனியனின் முறைப்பில், "ஓகே... அம் ஜிப். என்னன்னு சொல்லு?" எனக் கேட்டான்.
"அவளையே கேளு" என்ற இனியன், "பர்ஸ்ட் அவளை இங்கிருந்து கூட்டிட்டு கிளம்பு" என்றான்.
"என்னடா ரொம்பதான் பன்ற? எதுக்கு உனக்கு இப்போ இவ்ளோ கோபம்?"
"உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போடா. இருக்கும் கோபத்துக்கு அவளை அடிச்சிடுவனோன்னு பயமா இருக்கு" என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, மருத்துவர் அபி கதவினை தட்டிவிட்டு இமையளின் மருத்துவ கோப்போடு உள் வந்தாள்.
"க்ரோத் நல்லாவே இருக்கு. 48 டேஸ் ஆகுது இனியா. எல்லா டெஸ்ட்டும் நார்மல். இமயா தான் மனசில் ஏதோ வச்சிக்கிட்டு அழுத்தம் கொடுத்துக்கிறாள். அது அவளுக்கும், பேபிக்கும் நல்லதில்லை. பொறுமையா என்னன்னு கேளு. சும்மா நீயும் கோபப்படுட்டு இருக்காதே!" என்று கோப்பினை இனியனிடம் கொடுத்தவள், அப்போது தான் ருதுவை கவனித்து "காங்கிராட்ஸ் டிசி சார்" என்று வாழ்த்தினாள்.
அவள் இனியனிடம் பேசியதிலே ருது என்னவென்று புரிந்து கொண்டான்.
புன்னகையோடு அபிக்கு நன்றி தெரிவித்தான்.
"எனக்கு ட்யூட்டி முடிஞ்சுது பைய்" என்று அபி கிளம்பிட...
"நல்ல விஷயம் தானே! நீ மாமா ஆகிட்ட. எதுக்குடா தேவையில்லாம கோபப்படுற?" என்றான் ருது.
"ருது... சத்தியமா அடிச்சிடுவேன். அவள் அபார்ஷன் பண்ண சொல்லி வந்து நிக்கிறாள். அபி என் ஃபிரண்ட்'ங்கிறதால் எனக்கு தெரிஞ்சுது. இல்லைன்னா? ரொம்பவே கோபத்தை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன். வீட்டுக்குப் போ. நான் அப்பா, அம்மா கூட்டிட்டு வரேன்" என்ற இனியன், "நானும் கிளம்புறேன்" என எழுந்து கொண்டான்.
"லேஷஸ்...?" ருதுவிற்கு தொண்டை அடைத்தது.
"ருது... நான்" என்றவள் மலுக்கென விழுந்த கண்ணீரோடு அவனது நெஞ்சில் சாய்ந்தாள்.
Last edited: