தூரமே தூரமாய் 32
கைலாஷ்ஷின் உண்மை முகம் தெரிந்த பின்னர் ருது தனது தந்தையென அவரின் பெயர் சொல்வதைக்கூட நிறுத்தியிருந்தான்.
இமையாள் இனியனிடம் கூட, அக்கா இருக்கிறாள் என சொல்லியிருக்கிறான். அவ்வளவு தான். இமையாளே ஒரு நாள் அவனது பெற்றோரின் பெயர் கேட்டிட, துளசியின் பெயர் மட்டும் சொல்லியவன், கைலாஷினை மொத்தமாக தவிர்த்தான்.
ஆனால் இனியனிடம், "பெயர் சொல்ற அளவுக்கு எனக்கு அவர் முக்கியமில்லை" என்றிருந்தான்.
நண்பனாக இருந்தால் அவனைப்பற்றி அனைத்தும் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? நட்பில் திளைக்க இருவருக்குமான புரிதல் போதும். ஒருவரைப்பற்றி மற்றவர் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. உறவுக்கான இடைவெளியை கொடுப்பதே அவ்வுறவின் நீட்டிப்புக்கு காரணமாக அமையும்.
'இடைவெளி அனைத்திலும் அழகு தான்.'
எழுதும் வரிகளில், பேசும் வார்த்தைகளில், நிகழும் சூழலில், துன்பமோ இன்பமோ சிறு இடைவெளி கொடுத்திடும் போது அதன் கனம் நிச்சயம் குறையும். உறவுகளுக்கு இடையில் ஏற்படும் சிறு இடைவெளி அன்பை ஆழப்படுத்தும்.
இனியனுக்கு அத்தகைய புரிந்துணர்வு ருதுவிடம்.
'ருதுவிற்கு குடும்பத்தில் ஏதோ கசப்பு' என புரிந்து அதைப்பற்றி பேசியதே கிடையாது.
அந்த புரிதலால் தான் பெரும் இடைவெளிக்கு பின்னரும் இருவரும் இயல்பாய் தங்களின் நட்பை தடையின்றி காட்டியிருந்தனர்.
ருது தேர்வில் வெற்றி பெற, பயிற்சிக்கென புறப்பட்ட பின்னர் வீட்டிற்கு வந்ததே இல்லை. அதற்கு காரணம் கைலாஷ் மேலும் மேலும் செய்த தவறுகள் தான்.
அந்நேரத்தில் தான் கைலாஷ் குவாரி ஒன்றை தொடங்கியிருந்தார். குவாரி என்கிற பெயரில் அனைத்து கட்டப்பஞ்சாயத்து, வட்டி வசூல், கடத்தல், எல்லாம் அங்கு வைத்து தான் செய்தார்.
கைலாஷ்ஷை மொத்தமாக ஒதுக்கி வைத்திட்டாலும், அவர் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை ருது கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.
அவரின் செயல்கள் யாவும் மேலும் மேலும் அவனை தூரம் செல்லவே வைத்தது.
பயிற்சியில் இருந்தபோது ஒருமுறை மட்டுமே வந்து இமையாளையும் இனியனையும் பார்த்துச் சென்றான். துளசியை பார்ப்பதற்காகக் கூட அவன் இல்லம் செல்லவில்லை. பயிற்சியில் விடுமுறையே கிடையாது என்று சொல்லிவிட்டான்.
கைலாஷிற்கு சிறு சிறு சறுக்கல் ஏற்படத் துவங்கியது.
இந்நிலையில் தான், ருதுவிற்கு பயிற்சி முடிய ஆறு மாதங்கள் இருந்த சமயம், துளசி வற்புறுத்தி ருதுவை வீட்டிற்கு வரவழைத்தார்.
அப்போது கைலாஷிற்கு ஐம்பத்தி ஏழு வயது. துளசிக்கு நாற்பத்தி எட்டு.
அன்று ரூபிணியும் வந்திருந்தது தான் ருதுவிற்கு ஆச்சரியம். ருது வீட்டிற்குள் நுழையும் போதே ரூபிணியின் சத்தம் வெளி வாயில் வரை ஒலித்தது.
"உங்களுக்கு வெட்கமா இல்லை... இந்த வயதில்... ச்சீய்" என்று அருவருப்பாக முகத்தை சுளித்து அன்னை என்றும் பாராது திட்டிக் கொண்டிருந்தாள்.
அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார் கைலாஷ்.
"இந்தா உங்க சீமந்தபுத்திரன் வந்தாச்சு... அவன்கிட்ட சொல்லுங்க. தலையில் தூக்கிவச்சு ஆடுவான்" என்றாள்.
"அக்கா என்ன? இப்போ எதுக்கு அம்மாவை திட்டுற?" பொறுமையாகத்தான் வினவினான்.
"நான் திட்டுறது தான் உனக்கு தெரியுதா? நீ வீட்டுல மகன்னு இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? ஆளில்லாத வீட்டுல கிழவன் துள்ளி குதிச்ச கதையில்ல இங்க நடந்திருக்கு" என்று அவள் சொல்ல அப்போதும் கைலாஷ் நிமிரவில்லை.
"ஆம்பளை அப்படித்தான் இருப்பாங்க. உனக்கு எங்கப்போச்சு புத்தி?" துளசியை பார்த்து ரூபிணி கேட்டிட, என்னவென்று புரியாது, "அக்கா" என்று கத்தினான் ருது.
"சும்மா கத்தாதடா! வெளியில் தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம்?" என்று ருதுவிடம் கோபத்தைக் காட்டியவள், "கல்யாணம் பண்ணியிருந்தால் இவனுக்கே குழந்தை இருந்திருக்கும். இந்த வயதில் இதெல்லாம் தேவையா. வெளியில் எப்படி சொல்லுவீங்க? பேரன், பேத்தி எடுக்குற வயசுல புள்ளை பெத்துக்கப் போறேன்னு. உடம்பு கூசலையா?" என்றாள். தாயென்றும் பாராது.
ருதுவிற்கு விடயம் புரிந்து அதிர்வு. தன் அன்னையை அதே அதிர்வுடன் ஏறிட்டான். அவனால் எதிர்பாராத இதனை கேட்டதும் ஏற்க முடியவில்லை. ஒரு மாதிரிதான் உணர்ந்தான். ஆனால் அன்னையின் கண்ணீர் அவனுள் என்ன நிகழ்த்தியதோ...
"இதுக்கா கத்திட்டு இருக்க?" என்று சாதாரணம் போல ரூபிணியிடம் கேட்டான்.
"எது சாதாரணம்?" என்று எகிறிக் கொண்டு வந்த ரூபிணி... "கல்யாணமாகி அஞ்சாறு வருஷம் ஆகியும். நான் இன்னும் உண்டாகல. ஆஸ்பத்திரி, கோவிலுன்னு நடையா நடந்துட்டு இருக்கேன். என் மாமியார் இதை சொல்லியே தினமும் ஜாடையா பூக்காத, காய்க்காத மரம்ன்னு என்னை குத்தி பேசுறாங்க. இப்போ நான் போய் இதை சொன்னால்... என்ன நினைப்பாங்க. பரிகாசமா சிரிக்க மாட்டாங்க. அவங்க மட்டுமா... ஊரே சிரிக்கும். பொண்ணு வாயும் வாயுறுமா இருக்க வேண்டிய நேரத்தில், அம்மா உண்டாகியிருக்கா... இந்த வயதில் கட்டுப்பாடு வேண்டாமான்னு ஊரே உமிழும்" என்றாள்.
துளசி அமைதியாக கண்ணீர் உகுத்தபடி கூனிக்குறுகி நின்றிருந்தார்.
"இப்போ இதெல்லாம் சாதாரணம். சும்மா அதிகம் பேசாத" என்ற ருது, துளசியின் அருகில் சென்று அவரின் கண்ணைத் துடைத்து, "எழுபது வயதில் எல்லாம் குழந்தை பெத்துக்குறாங்க. சமாளிக்கலாம். விடுங்கம்மா" என்றான்.
"இந்த கண்றா** சமாளிக்கப் போறியா நீ? எனக்கு இந்த மானங்கெட்ட செய்தியை கேட்டதும் பதறிப்போச்சு. செத்துப்போலாம் போல இருக்கு. இந்த அசிங்கத்தை தூக்கி சுமக்கப் போறீங்களா? அதுக்கப்பபுறம் என்னை மறந்துடுங்க" என்றாள்.
"அக்கா கொஞ்சம் சும்மா இருக்கியா? குழந்தையே இல்லாதவங்க காத்திருந்து, பதினைஞ்சு, இருபது வருஷம் கழித்தெல்லாம் குழந்தை பெற்றிருக்காங்க தானே? இப்போ என்ன அம்மாவுக்கு இன்னும் ஐந்தாறு வருஷம் லேட்டா பிறக்கப்போகுது அவ்வளவு தானே! இதுக்கு என்னவோ உயிரே போற மாதிரி குதிக்கிற?" என்றான்.
ருதுவிற்கு இவ்வளவு பேச வருமென்றே ரூபிணிக்கு மட்டுமல்ல கைலாஷுக்குமே அன்று தான் தெரியும்.
"எனக்கு குழந்தை இல்லாதது கவலையில்லை உனக்கு, அக்கறையில்லை... உன் அம்மா இந்த வயசில் பெத்துக்கப்போற குழந்தை மேல அதுக்குள்ள அக்கறையா? வெளியில் சொல்லிப்பாரு, இது சாதாரணம் சொல்ற உனக்கு அப்போ தெரியும். நக்கலடிச்சு, கிண்டல் செய்தே உன் அம்மாவை ஓட விடுவாங்க. மூஞ்சிக்கே நேராவே துப்புவாங்க" என்றாள்.
"பரவாயில்லை. உன்னை மாதிரியும் சிலர் இருக்கத்தானே செய்வாங்க" என்றவனின் வார்த்தையில் அதீத கோபம் கொண்ட ரூபிணி,
"பேசாமல் அதை கலைச்சிட்டு வேலையை பாருங்க" என்றாள்.
"ஏய்!"
அதுவரை அமைதியாக இருந்த கைலாஷ் கனல் பொங்க கத்தினார். அவரின் தோற்றத்தில் ரூபிணி அரண்டு நிற்க, ருது அவரை அசராது பார்த்தான்.
"எனக்கு இந்த குழந்தை ரொம்ப முக்கியம்... யாரென்ன சொன்னாலும், அவள் குழந்தையை பெத்தெடுப்பாள்" என்றார் கைலாஷ்.
ருது தான் ஏற்றுக்கொள்ள மாட்டானென்று கைலாஷ் நினைத்திருந்தார். ஆனால் அவனே ஏற்றுக்கொள்ள அவருக்கு வசதியாகிப்போனது.
ருது அன்னைக்காக மட்டுமே பார்க்கிறான் என்பது அவருக்கு தெரியவில்லை.
"இந்த அசிங்கத்தை ஊரறிய சொல்லப்போறீங்களா? உங்க பிஸ்னெஸ் வட்டாரத்தில் சொல்லிப் பாருங்க அப்போ தெரியும்" என்றாள் ரூபிணி. நக்கலாக.
"சொன்னால் தானே!" கைலாஷ்ஷிடம் பெரும் திட்டம்.
"இது நான் இரண்டு மூன்று வருடங்களாக எதிர்பார்த்தது தான்" என்ற அவரின் வார்த்தையில் ருது அதிர்ந்தான்.
அவனின் அதிர்வு தன்னை பிடித்திருக்கும் மகனின் கையில் உணர்ந்த துளசி...
"என்னை மன்னிச்சிடு ருது கண்ணா" என்றார், அவனின் தோளில் சாய்ந்து.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தற்செயலாக எதிர்பாராது நடந்துவிட்டதென அவன் நினைத்திருக்க... இதற்காகக் காத்திருந்ததாக கைலாஷ் சொல்லியதையும், துளசி ஆமோதித்ததையும் ருதுவாலே ஜீரணிக்க முடியவில்லை.
'தெரிந்தே செய்தார்களா? ஏன்? இந்த வயதில் இது எத்தனை பிரச்சினையை உண்டாக்கும்?' அவனது கேள்விகளை வாய் திறந்து கேட்டிட முடியாது நின்றிருந்தான்.
"இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை?" இம்முறை ரூபிணி கைலாஷிடமே நேரடியாகக் கேட்டிருந்தாள்.
"பொண்ணு குழந்தைக்கு தவமிருக்கும் போது... அம்மாவும் குழந்தைக்காக அலைஞ்சான்னு தெரிந்தால் கா* துப்* மாட்டாங்க" என்றாள்.
"எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. இந்த குழந்தை எனக்கு வேணும். அவ்வளவு தான்" என்றவர், "வெளியில் ஈஸியா சொல்ல முடியாது தான். என்கிட்ட வேலை செய்றவனே பரிகாசம் செய்வான். அதனால் சொல்லப்போவதில்லை" என்றவர், "நீ கர்ப்பமா இருக்கன்னு உன் வீட்டில் சொல்லு" என்றார். ரூபிணியிடம்.
நொடியில் அவரின் திட்டத்தை ருது யூகித்துவிட்டான். அவனிடம் வளைந்த விரக்தி சிரிப்பு.
"எதுக்கு?" கேட்ட ரூபிணியிடம்,
"துளசியை வீட்டிலே மறைத்து வைத்து பார்த்துக்கலாம். துளசிக்கு குழந்தை பிறக்கும் அன்று உனக்கும் வலி வந்து ஹாஸ்பிடலில் சேர்த்து, உன் குழந்தைன்னு சொல்லிக்கலாம்" என்றார்.
"அருவருப்பா இருக்கு." சட்டென்று சொல்லியிருந்தாள்.
"இந்த அசிங்கத்தை காலம் முழுக்க நான் தூக்கி சுமக்கணுமா?" என்றவள், "இந்த நினைப்பை இதோட நிறுத்திக்கோங்க. இனி இந்த வீட்டுக்கும் எனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. கொஞ்சம் விட்டால் என் தலையில் மிளகாய் அரைச்சிடுவீங்க போல. உங்களை அப்பா அம்மா சொல்லவே அசிங்கமா இருக்கு" என்றவள் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.
கைலாஷ் மகளை எப்படியும் சம்மதிக்க வைத்துவிடலாமென இருந்தார். பிள்ளை இல்லை, நிச்சயம் ஒப்புக்கொள்வாள் என பல திட்டங்கள் போட்டிருந்தார். குழந்தை பிறக்கும் வரை அவருக்கு சூழல் சுமுகமாக இருந்திட வேண்டும். அதற்காக அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தவர்...
"உனக்கு உடனே கல்யாணம்" என்றார் ருது.
"பண்ணிக்க முடியாது." பட்டென்று சொல்லியிருந்தான்.
"வெளிய சொல்ல இப்போதான் கூச்சமா தெரியுதா உங்களுக்கு?" என கைலாஷ்ஷின் முகம் பார்த்து நேராகக் கேட்ட ருது, "உங்ககிட்ட ஏதோ பெரிய திட்டம் ஒன்னு இருக்கு. அதுக்கு என் அம்மாவையும், குழந்தையையும் பகடக்காயா உருட்டுறீங்க தெரியுது. ஆனால் ஏன்? எதுக்குன்னு? புரியல" என தன் நாடியை நீவினான்.
கைலாஷ்ஷின் பார்வையில் திருட்டுத்தனம். ருது கண்டு கொண்டான்.
"சொல்லுங்க எதுக்கு இப்போ இந்த குழந்தை?" ருது கூர் பார்வையோடு வினவ,
"இன்னும் போலீஸே ஆகல... அதுக்குள்ள போலீஸ் புத்தியா?" என்ற கைலாஷ், "எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா. எல்லாம் உனக்காகத்தான்" என்று சென்றுவிட்டார்.
"எனக்காகவா?" ருது புரியாது இருக்கையில் அமர,
"கண்ணா" என்று அழுகையோடு துளசி அவனருகில் அமர்ந்திட...
"என்னம்மா நடக்குது?" என்றவன், "இதை நான் தப்புன்னு சொல்லல. நானோ, அக்காவோ பிறக்காமல் இருந்திருந்தால்... வயதாகியும் குழந்தைகக்காக காத்திருந்து பெற்றெடுக்கிறீங்க நினைக்கலாம். ஆனால் ஊர் என்ன பேசும், பார்க்குறவங்க பார்வை எப்படியிருக்கும் எல்லாம் தெரிந்தும் எதுக்குமா இப்போ குழந்தை? என்ன அவசியம்?" எனக் கேட்டான்.
"நீ இந்த குழந்தையை ஏத்துக்கலையா கண்ணா?"
"ம்ப்ச்... நான் ஏத்துக்கிறது விடயமில்லைம்மா" என்றவன், "என்ன அவசியம் கேட்கிறேன். இந்த வயதில் எத்தனை ரிஸ்க் இருக்கும்" என்றான்.
"அப்போ உன் அப்பா இந்த வயதில் சின்னப்பொண்ணை கல்யாணம் செய்துகிட்டு வந்திருந்தால் சரியா இருந்திருக்குமா?" என கண்ணீரோடு துளசி கேட்டதில்... ருது "அம்மா" என அதீத அதிர்வை உள்வாங்கியிருந்தான்.
"அவரை ரொம்ப நம்பிட்டேன் கண்ணா" என்றவர், "உன்கிட்ட இதையெல்லாம் சொல்லக்கூடாது தான். இருந்தாலும் எனக்குன்னு சொல்லி அழ நீதானே இருக்க" எனக்கூறி, முகத்தை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தார்.
"இவரு பணப்பேய் ருது. நமக்கெல்லாம் தெரியாமல் எவ்ளோ விஷயம் மறைத்திருக்கிறார்" என்றார்.
"பணத்தாசை எல்லோருக்கும் தான் இருக்கும். இதிலென்ன இருக்கு?" சாதாரணம் போல் கேட்டாலும், அவனுள் ஒரு கசப்பு.
கைலாஷ்ஷின் உண்மை முகம் தெரிந்த பின்னர் ருது தனது தந்தையென அவரின் பெயர் சொல்வதைக்கூட நிறுத்தியிருந்தான்.
இமையாள் இனியனிடம் கூட, அக்கா இருக்கிறாள் என சொல்லியிருக்கிறான். அவ்வளவு தான். இமையாளே ஒரு நாள் அவனது பெற்றோரின் பெயர் கேட்டிட, துளசியின் பெயர் மட்டும் சொல்லியவன், கைலாஷினை மொத்தமாக தவிர்த்தான்.
ஆனால் இனியனிடம், "பெயர் சொல்ற அளவுக்கு எனக்கு அவர் முக்கியமில்லை" என்றிருந்தான்.
நண்பனாக இருந்தால் அவனைப்பற்றி அனைத்தும் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன? நட்பில் திளைக்க இருவருக்குமான புரிதல் போதும். ஒருவரைப்பற்றி மற்றவர் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை. உறவுக்கான இடைவெளியை கொடுப்பதே அவ்வுறவின் நீட்டிப்புக்கு காரணமாக அமையும்.
'இடைவெளி அனைத்திலும் அழகு தான்.'
எழுதும் வரிகளில், பேசும் வார்த்தைகளில், நிகழும் சூழலில், துன்பமோ இன்பமோ சிறு இடைவெளி கொடுத்திடும் போது அதன் கனம் நிச்சயம் குறையும். உறவுகளுக்கு இடையில் ஏற்படும் சிறு இடைவெளி அன்பை ஆழப்படுத்தும்.
இனியனுக்கு அத்தகைய புரிந்துணர்வு ருதுவிடம்.
'ருதுவிற்கு குடும்பத்தில் ஏதோ கசப்பு' என புரிந்து அதைப்பற்றி பேசியதே கிடையாது.
அந்த புரிதலால் தான் பெரும் இடைவெளிக்கு பின்னரும் இருவரும் இயல்பாய் தங்களின் நட்பை தடையின்றி காட்டியிருந்தனர்.
ருது தேர்வில் வெற்றி பெற, பயிற்சிக்கென புறப்பட்ட பின்னர் வீட்டிற்கு வந்ததே இல்லை. அதற்கு காரணம் கைலாஷ் மேலும் மேலும் செய்த தவறுகள் தான்.
அந்நேரத்தில் தான் கைலாஷ் குவாரி ஒன்றை தொடங்கியிருந்தார். குவாரி என்கிற பெயரில் அனைத்து கட்டப்பஞ்சாயத்து, வட்டி வசூல், கடத்தல், எல்லாம் அங்கு வைத்து தான் செய்தார்.
கைலாஷ்ஷை மொத்தமாக ஒதுக்கி வைத்திட்டாலும், அவர் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை ருது கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.
அவரின் செயல்கள் யாவும் மேலும் மேலும் அவனை தூரம் செல்லவே வைத்தது.
பயிற்சியில் இருந்தபோது ஒருமுறை மட்டுமே வந்து இமையாளையும் இனியனையும் பார்த்துச் சென்றான். துளசியை பார்ப்பதற்காகக் கூட அவன் இல்லம் செல்லவில்லை. பயிற்சியில் விடுமுறையே கிடையாது என்று சொல்லிவிட்டான்.
கைலாஷிற்கு சிறு சிறு சறுக்கல் ஏற்படத் துவங்கியது.
இந்நிலையில் தான், ருதுவிற்கு பயிற்சி முடிய ஆறு மாதங்கள் இருந்த சமயம், துளசி வற்புறுத்தி ருதுவை வீட்டிற்கு வரவழைத்தார்.
அப்போது கைலாஷிற்கு ஐம்பத்தி ஏழு வயது. துளசிக்கு நாற்பத்தி எட்டு.
அன்று ரூபிணியும் வந்திருந்தது தான் ருதுவிற்கு ஆச்சரியம். ருது வீட்டிற்குள் நுழையும் போதே ரூபிணியின் சத்தம் வெளி வாயில் வரை ஒலித்தது.
"உங்களுக்கு வெட்கமா இல்லை... இந்த வயதில்... ச்சீய்" என்று அருவருப்பாக முகத்தை சுளித்து அன்னை என்றும் பாராது திட்டிக் கொண்டிருந்தாள்.
அதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தார் கைலாஷ்.
"இந்தா உங்க சீமந்தபுத்திரன் வந்தாச்சு... அவன்கிட்ட சொல்லுங்க. தலையில் தூக்கிவச்சு ஆடுவான்" என்றாள்.
"அக்கா என்ன? இப்போ எதுக்கு அம்மாவை திட்டுற?" பொறுமையாகத்தான் வினவினான்.
"நான் திட்டுறது தான் உனக்கு தெரியுதா? நீ வீட்டுல மகன்னு இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? ஆளில்லாத வீட்டுல கிழவன் துள்ளி குதிச்ச கதையில்ல இங்க நடந்திருக்கு" என்று அவள் சொல்ல அப்போதும் கைலாஷ் நிமிரவில்லை.
"ஆம்பளை அப்படித்தான் இருப்பாங்க. உனக்கு எங்கப்போச்சு புத்தி?" துளசியை பார்த்து ரூபிணி கேட்டிட, என்னவென்று புரியாது, "அக்கா" என்று கத்தினான் ருது.
"சும்மா கத்தாதடா! வெளியில் தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம்?" என்று ருதுவிடம் கோபத்தைக் காட்டியவள், "கல்யாணம் பண்ணியிருந்தால் இவனுக்கே குழந்தை இருந்திருக்கும். இந்த வயதில் இதெல்லாம் தேவையா. வெளியில் எப்படி சொல்லுவீங்க? பேரன், பேத்தி எடுக்குற வயசுல புள்ளை பெத்துக்கப் போறேன்னு. உடம்பு கூசலையா?" என்றாள். தாயென்றும் பாராது.
ருதுவிற்கு விடயம் புரிந்து அதிர்வு. தன் அன்னையை அதே அதிர்வுடன் ஏறிட்டான். அவனால் எதிர்பாராத இதனை கேட்டதும் ஏற்க முடியவில்லை. ஒரு மாதிரிதான் உணர்ந்தான். ஆனால் அன்னையின் கண்ணீர் அவனுள் என்ன நிகழ்த்தியதோ...
"இதுக்கா கத்திட்டு இருக்க?" என்று சாதாரணம் போல ரூபிணியிடம் கேட்டான்.
"எது சாதாரணம்?" என்று எகிறிக் கொண்டு வந்த ரூபிணி... "கல்யாணமாகி அஞ்சாறு வருஷம் ஆகியும். நான் இன்னும் உண்டாகல. ஆஸ்பத்திரி, கோவிலுன்னு நடையா நடந்துட்டு இருக்கேன். என் மாமியார் இதை சொல்லியே தினமும் ஜாடையா பூக்காத, காய்க்காத மரம்ன்னு என்னை குத்தி பேசுறாங்க. இப்போ நான் போய் இதை சொன்னால்... என்ன நினைப்பாங்க. பரிகாசமா சிரிக்க மாட்டாங்க. அவங்க மட்டுமா... ஊரே சிரிக்கும். பொண்ணு வாயும் வாயுறுமா இருக்க வேண்டிய நேரத்தில், அம்மா உண்டாகியிருக்கா... இந்த வயதில் கட்டுப்பாடு வேண்டாமான்னு ஊரே உமிழும்" என்றாள்.
துளசி அமைதியாக கண்ணீர் உகுத்தபடி கூனிக்குறுகி நின்றிருந்தார்.
"இப்போ இதெல்லாம் சாதாரணம். சும்மா அதிகம் பேசாத" என்ற ருது, துளசியின் அருகில் சென்று அவரின் கண்ணைத் துடைத்து, "எழுபது வயதில் எல்லாம் குழந்தை பெத்துக்குறாங்க. சமாளிக்கலாம். விடுங்கம்மா" என்றான்.
"இந்த கண்றா** சமாளிக்கப் போறியா நீ? எனக்கு இந்த மானங்கெட்ட செய்தியை கேட்டதும் பதறிப்போச்சு. செத்துப்போலாம் போல இருக்கு. இந்த அசிங்கத்தை தூக்கி சுமக்கப் போறீங்களா? அதுக்கப்பபுறம் என்னை மறந்துடுங்க" என்றாள்.
"அக்கா கொஞ்சம் சும்மா இருக்கியா? குழந்தையே இல்லாதவங்க காத்திருந்து, பதினைஞ்சு, இருபது வருஷம் கழித்தெல்லாம் குழந்தை பெற்றிருக்காங்க தானே? இப்போ என்ன அம்மாவுக்கு இன்னும் ஐந்தாறு வருஷம் லேட்டா பிறக்கப்போகுது அவ்வளவு தானே! இதுக்கு என்னவோ உயிரே போற மாதிரி குதிக்கிற?" என்றான்.
ருதுவிற்கு இவ்வளவு பேச வருமென்றே ரூபிணிக்கு மட்டுமல்ல கைலாஷுக்குமே அன்று தான் தெரியும்.
"எனக்கு குழந்தை இல்லாதது கவலையில்லை உனக்கு, அக்கறையில்லை... உன் அம்மா இந்த வயசில் பெத்துக்கப்போற குழந்தை மேல அதுக்குள்ள அக்கறையா? வெளியில் சொல்லிப்பாரு, இது சாதாரணம் சொல்ற உனக்கு அப்போ தெரியும். நக்கலடிச்சு, கிண்டல் செய்தே உன் அம்மாவை ஓட விடுவாங்க. மூஞ்சிக்கே நேராவே துப்புவாங்க" என்றாள்.
"பரவாயில்லை. உன்னை மாதிரியும் சிலர் இருக்கத்தானே செய்வாங்க" என்றவனின் வார்த்தையில் அதீத கோபம் கொண்ட ரூபிணி,
"பேசாமல் அதை கலைச்சிட்டு வேலையை பாருங்க" என்றாள்.
"ஏய்!"
அதுவரை அமைதியாக இருந்த கைலாஷ் கனல் பொங்க கத்தினார். அவரின் தோற்றத்தில் ரூபிணி அரண்டு நிற்க, ருது அவரை அசராது பார்த்தான்.
"எனக்கு இந்த குழந்தை ரொம்ப முக்கியம்... யாரென்ன சொன்னாலும், அவள் குழந்தையை பெத்தெடுப்பாள்" என்றார் கைலாஷ்.
ருது தான் ஏற்றுக்கொள்ள மாட்டானென்று கைலாஷ் நினைத்திருந்தார். ஆனால் அவனே ஏற்றுக்கொள்ள அவருக்கு வசதியாகிப்போனது.
ருது அன்னைக்காக மட்டுமே பார்க்கிறான் என்பது அவருக்கு தெரியவில்லை.
"இந்த அசிங்கத்தை ஊரறிய சொல்லப்போறீங்களா? உங்க பிஸ்னெஸ் வட்டாரத்தில் சொல்லிப் பாருங்க அப்போ தெரியும்" என்றாள் ரூபிணி. நக்கலாக.
"சொன்னால் தானே!" கைலாஷ்ஷிடம் பெரும் திட்டம்.
"இது நான் இரண்டு மூன்று வருடங்களாக எதிர்பார்த்தது தான்" என்ற அவரின் வார்த்தையில் ருது அதிர்ந்தான்.
அவனின் அதிர்வு தன்னை பிடித்திருக்கும் மகனின் கையில் உணர்ந்த துளசி...
"என்னை மன்னிச்சிடு ருது கண்ணா" என்றார், அவனின் தோளில் சாய்ந்து.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தற்செயலாக எதிர்பாராது நடந்துவிட்டதென அவன் நினைத்திருக்க... இதற்காகக் காத்திருந்ததாக கைலாஷ் சொல்லியதையும், துளசி ஆமோதித்ததையும் ருதுவாலே ஜீரணிக்க முடியவில்லை.
'தெரிந்தே செய்தார்களா? ஏன்? இந்த வயதில் இது எத்தனை பிரச்சினையை உண்டாக்கும்?' அவனது கேள்விகளை வாய் திறந்து கேட்டிட முடியாது நின்றிருந்தான்.
"இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை?" இம்முறை ரூபிணி கைலாஷிடமே நேரடியாகக் கேட்டிருந்தாள்.
"பொண்ணு குழந்தைக்கு தவமிருக்கும் போது... அம்மாவும் குழந்தைக்காக அலைஞ்சான்னு தெரிந்தால் கா* துப்* மாட்டாங்க" என்றாள்.
"எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை. இந்த குழந்தை எனக்கு வேணும். அவ்வளவு தான்" என்றவர், "வெளியில் ஈஸியா சொல்ல முடியாது தான். என்கிட்ட வேலை செய்றவனே பரிகாசம் செய்வான். அதனால் சொல்லப்போவதில்லை" என்றவர், "நீ கர்ப்பமா இருக்கன்னு உன் வீட்டில் சொல்லு" என்றார். ரூபிணியிடம்.
நொடியில் அவரின் திட்டத்தை ருது யூகித்துவிட்டான். அவனிடம் வளைந்த விரக்தி சிரிப்பு.
"எதுக்கு?" கேட்ட ரூபிணியிடம்,
"துளசியை வீட்டிலே மறைத்து வைத்து பார்த்துக்கலாம். துளசிக்கு குழந்தை பிறக்கும் அன்று உனக்கும் வலி வந்து ஹாஸ்பிடலில் சேர்த்து, உன் குழந்தைன்னு சொல்லிக்கலாம்" என்றார்.
"அருவருப்பா இருக்கு." சட்டென்று சொல்லியிருந்தாள்.
"இந்த அசிங்கத்தை காலம் முழுக்க நான் தூக்கி சுமக்கணுமா?" என்றவள், "இந்த நினைப்பை இதோட நிறுத்திக்கோங்க. இனி இந்த வீட்டுக்கும் எனக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. கொஞ்சம் விட்டால் என் தலையில் மிளகாய் அரைச்சிடுவீங்க போல. உங்களை அப்பா அம்மா சொல்லவே அசிங்கமா இருக்கு" என்றவள் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டாள்.
கைலாஷ் மகளை எப்படியும் சம்மதிக்க வைத்துவிடலாமென இருந்தார். பிள்ளை இல்லை, நிச்சயம் ஒப்புக்கொள்வாள் என பல திட்டங்கள் போட்டிருந்தார். குழந்தை பிறக்கும் வரை அவருக்கு சூழல் சுமுகமாக இருந்திட வேண்டும். அதற்காக அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தவர்...
"உனக்கு உடனே கல்யாணம்" என்றார் ருது.
"பண்ணிக்க முடியாது." பட்டென்று சொல்லியிருந்தான்.
"வெளிய சொல்ல இப்போதான் கூச்சமா தெரியுதா உங்களுக்கு?" என கைலாஷ்ஷின் முகம் பார்த்து நேராகக் கேட்ட ருது, "உங்ககிட்ட ஏதோ பெரிய திட்டம் ஒன்னு இருக்கு. அதுக்கு என் அம்மாவையும், குழந்தையையும் பகடக்காயா உருட்டுறீங்க தெரியுது. ஆனால் ஏன்? எதுக்குன்னு? புரியல" என தன் நாடியை நீவினான்.
கைலாஷ்ஷின் பார்வையில் திருட்டுத்தனம். ருது கண்டு கொண்டான்.
"சொல்லுங்க எதுக்கு இப்போ இந்த குழந்தை?" ருது கூர் பார்வையோடு வினவ,
"இன்னும் போலீஸே ஆகல... அதுக்குள்ள போலீஸ் புத்தியா?" என்ற கைலாஷ், "எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா. எல்லாம் உனக்காகத்தான்" என்று சென்றுவிட்டார்.
"எனக்காகவா?" ருது புரியாது இருக்கையில் அமர,
"கண்ணா" என்று அழுகையோடு துளசி அவனருகில் அமர்ந்திட...
"என்னம்மா நடக்குது?" என்றவன், "இதை நான் தப்புன்னு சொல்லல. நானோ, அக்காவோ பிறக்காமல் இருந்திருந்தால்... வயதாகியும் குழந்தைகக்காக காத்திருந்து பெற்றெடுக்கிறீங்க நினைக்கலாம். ஆனால் ஊர் என்ன பேசும், பார்க்குறவங்க பார்வை எப்படியிருக்கும் எல்லாம் தெரிந்தும் எதுக்குமா இப்போ குழந்தை? என்ன அவசியம்?" எனக் கேட்டான்.
"நீ இந்த குழந்தையை ஏத்துக்கலையா கண்ணா?"
"ம்ப்ச்... நான் ஏத்துக்கிறது விடயமில்லைம்மா" என்றவன், "என்ன அவசியம் கேட்கிறேன். இந்த வயதில் எத்தனை ரிஸ்க் இருக்கும்" என்றான்.
"அப்போ உன் அப்பா இந்த வயதில் சின்னப்பொண்ணை கல்யாணம் செய்துகிட்டு வந்திருந்தால் சரியா இருந்திருக்குமா?" என கண்ணீரோடு துளசி கேட்டதில்... ருது "அம்மா" என அதீத அதிர்வை உள்வாங்கியிருந்தான்.
"அவரை ரொம்ப நம்பிட்டேன் கண்ணா" என்றவர், "உன்கிட்ட இதையெல்லாம் சொல்லக்கூடாது தான். இருந்தாலும் எனக்குன்னு சொல்லி அழ நீதானே இருக்க" எனக்கூறி, முகத்தை துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தார்.
"இவரு பணப்பேய் ருது. நமக்கெல்லாம் தெரியாமல் எவ்ளோ விஷயம் மறைத்திருக்கிறார்" என்றார்.
"பணத்தாசை எல்லோருக்கும் தான் இருக்கும். இதிலென்ன இருக்கு?" சாதாரணம் போல் கேட்டாலும், அவனுள் ஒரு கசப்பு.
Last edited: