தூரமே தூரமாய் 28
இமையாள் "உங்க மகன்" என்று சொன்னதில் ருதுவிற்கு அவள்மீது கோபம்.
முறைத்துக்கொண்டு நின்றான். அவளும் அவனுக்கு சளைக்காது முறைத்து நின்றாள்.
'பார்க்கிறதை பாரு...' என ருதுவும்,
'அந்த கண்ணை பிடுங்கிடனும்' என இமையாளும் ஒருசேர முணுமுணுத்தனர்.
"ரொம்ப பண்றடி" என்ற ருது, "இன்னைக்கு சொல்றது தான் முதலும், கடைசி... தேஷ்க்கு நான் அப்பான்னா, அம்மா நீதான். பிரிச்சு பேசுறது இதோட நிக்கட்டும்" என்றான் அழுத்தாமாக.
சற்று முன்னர் கூட அவன் மீதா கோபத்தில் உங்க மகன் எனக் கூறியிருந்தாலும் உள்ளுக்குள் அம்மா நான்தானே என்று தானே நினைத்தாள். ஆனால் அதனை வெளிப்படையாய் அவனிடம் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை.
"ம்க்கும்..." என்று உதட்டை சுளித்தவள், அறையை சுற்றி பார்வையை ஓட்டினாள். மெத்தையில் அமர்ந்தவளாக.
ஒரு மாத கைகுழந்தையாக தேஷ்ஷை ருது கைகளில் ஏந்தி பிஞ்சுவின் நெற்றியில் முத்தம் வைத்த காட்சி முதல், அவனது மூன்றரை வயது வரை ருதுவுடனும் தனித்தும் எடுக்கப்பட்ட பல வகையான புகைப்படங்கள், ஒரு பக்க சுவர் முழுக்க நிறைந்திருந்தது.
ஒவ்வொன்றாக அவள் பார்த்து முடிய, ருது குளியலறை புகுந்து வெளியில் வந்திருந்தான்.
"உங்க ஃவைப் போட்டோவே இல்லையே?" என்றாள். ருதுவை ஏறிட்டு.
தலையை துவட்டியபடி அவளை ஆழ்ந்து நோக்கிய ருது, ஈரத் துண்டினை பால்கனி சென்று அதற்குரிய கம்பியில் விரித்து போட்டவனாக உள் வந்தான்.
இமையாள் அவனது பதிலுக்காக அவனையே பார்த்திருக்க, மெல்ல அவளருகில் வந்தவன் அவளது கரம் பற்றி எழுப்பினான்.
அவனது சிறு தொடுகைக்கே அவளது காதல் மனம் சுருண்டது.
இமையாள் விழிகளை தன் விழிகளால் உள்வாங்கி அவளது சிந்தையை தனக்குள் மூழ்கடித்தவன், அவளை அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடி முன் கூட்டிச்சென்று, அவளது பின்புறம் நின்று தோளில் கை வைத்தவனாக நிறுத்தியிருந்தான்.
இருவரின் பிம்பத்தையும் அழகோவியமாய் பிரதிபலித்தது கண்ணாடி.
காதலித்த நாட்களில் கூட இத்தனை பக்கம்... நெருக்கமாய் நின்றதில்லை இருவரும்.
இமை மூடாது ரசித்து அகப்பெட்டகத்தில் சேமித்தாள். இருவரின் நிழல் பிம்பத்தை நிஜத்தில் தேக்கி வைத்தவளாக.
இமையாள் உறைந்து போனாள் என்று தான் சொல்ல வேண்டும்.
கோபமாக இருக்கிறேன். உன்னை வெறுக்கிறேன் என்று சொல்பவள் காதலாய் கட்டுண்டு அவனது மார்போடு தன் முதுகு தீண்ட தன்னைப்போல் ஒட்டியிருந்தாள்.
இல்லையென்று சொல்லிக்கொண்டே பார்வையால் அவள் காட்டும் காதலை துளி துளியாய் கண்கள் வழி பருகியவனிடம் அத்தனை ரசிப்பு.
"ஷீ இஸ் மை வைஃப்." அவளின் வெற்றுத் தோளில் தன் நாடி பதித்து, அவளது கன்னத்தோடு தன் கன்னம் உரசியவன், கண்ணாடியில் பார்த்துக்கொண்டே மென்மையாய் சொல்லியிருந்தான்.
நிழல் விட்டு நிஜம் தாவியிருந்தது இமையாளின் கருமணிகள்.
"ருது..." காற்றாய் அவன் முகம் மோதியது அவளின் ஓசை.
"உன் ருது டி" என்று அவளின் நெற்றி முட்டியவன், "இங்க நீ மட்டும் தான் இருக்கன்னு சொன்னா நம்புவியா?" எனக் கேட்டு அவளது கையை எடுத்து தன் மார்பில் அழுத்தமாக வைத்து கண் மூடினான். ருதுவின் முகம் மேல் நோக்கி உயர்ந்திருக்க, அவனத்து கண்ணின் ஓரம் துளி நீர் விழ காத்திருந்தது.
சட்டென்று தன் பெருவிரல் கொண்டு துடைத்தவளின் உள்ளங்கை அவனது கன்னத்தில் தேங்கி நின்றது.
"என்கிட்ட ஏதும் சொல்லணுமா?" எனக் கேட்டவள், ருது பட்டென்று இமை திறந்து அவளை பார்த்ததில்,
"எதாவது மறைக்கிறீங்களா ருது?" என்றாள்.
வேகமாக விலகி நின்றான்.
ருதுவின் உடல் மொழியைத்தான் அவதானித்தாள் அவள்.
"நத்திங்... நத்திங்" என்ற ருது, "தேஷ்ஷை கூட்டிட்டு வரேன்" என்று வேகமாக அவளின் முன்னிருந்த சென்றிருந்தான்.
ருதுவிற்கு இமையாளிடம் அனைத்தையும் கொட்டிட ஒரு நொடி போதும். ஆனால் அதன் பிறகு தேஷ்ஷை அவள் எப்படி எந்த உறவில் பார்ப்பாள் என்கிற தடுமாற்றம் அவனிடம்.
'உண்மையாவே ஏதோ இருக்கு' என நினைத்த இமையாள், 'தன்னைத்தவிர எல்லாரும் அவங்களை ஏத்துகிட்டாங்க. எல்லோரிடமும் நல்லா தான் பழகுறாங்க. நியாயமா இன்னைக்கு நடந்த கல்யாணத்துக்கு கோபப்பட வேண்டிய அப்பாவே, உன் காதலை மட்டும் முன் வைத்து ருதுவை பாருன்னு அவங்களுக்கு சப்போர்ட்டா பேசுறார்... அப்போ?' என்று அனைத்தையும் பொறுமையாக யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது... 'ருதுவால் எப்போதும் தன்னுடைய காதலுக்கு துரோகம் செய்திருக்க முடியாது' என.
'இங்க நீ மட்டும் தான் இருக்கன்னு சொன்னா நம்புவியா?' என்று மனைவியாக கண்ணாடியில் தன்னை காட்டியதே அவளுள் மின்னிக் கொண்டிருந்தது.
எதுவோ ஒன்று புரிந்தும் புரியாது அவளை ஆட்டி வைத்திட, தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
தேஷ்ஷை பார்த்த பின்னரும் அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக சொல்லியதை பொய்யென்று அவளால் கருத முடியவில்லை.
'இப்போதும் தன்மீது அதே காதலோடு இருப்பவனால் எப்படி இன்னொரு பெண்ணுடனான திருமணத்தை ஏற்று, குழந்தை வரை சென்றிருக்க முடியும்? அதுவும் தனக்கு திருமணம் ஆகிவிட்டதென ருது சொல்லிய சமயமே கன்சீவாக இருப்பதாகவும் சொன்னாங்க. கல்யாணம் நடந்த குறுகிய காலத்தில் என்னை மறந்து குழந்தை வரை சாத்தியமா?' எல்லாம் நினைத்து நினைத்து குழம்பியவளுக்கு இறுதியாக மூளையில் மின்னல் வெட்டியது.
"தேஷ் அவங்களோட மகனே இல்லைன்னா?" தனக்குத்தானே வாய்விட்டேக் கேட்டிருந்தாள்.
"அப்போ அவங்க சொன்னது? இத்தனை நாள் தான் நினைத்திருந்தபடி நடந்துவிட்டதாக சொல்லிய திருமணம் பொய்யாகவே இருந்தால்? இருக்குமோ?" நெற்றியை நீவிக்கொண்டாள். மெல்ல தெளிவு வருவதை உணர்ந்தாள்.
'மனைவி போட்டோ இல்லையா?' என்பது சாதாரண கேள்வி, அதற்கு புகைப்படம் இருந்திருந்தால் இயல்பாய் காட்டியிருக்கலாம். விருப்பமில்லை என்றால், இருக்கு இல்லையென பதில் சொல்லியிருக்கலாம். அதை விடுத்து மனைவி என எவ்விடம் வந்தாலும் ருது தன்னை மட்டுமே குறிப்பிடுவது தான் அவளுக்கு அவளது சந்தேகத்தை வலுக்க வைத்தது.
'தன்னை கார்னர் செய்து திருமணம் செய்தது கூட ஏதோ ஒன்றை சொல்ல முடியாமல் தானோ?' சரியாக கணித்திருந்தாள்.
"அண்ணி."
நீண்ட நேரம் தனக்குள்ளே உழன்று கொண்டிருந்த இமையாள் ஷிவாவின் குரலில் தான் மீண்டாள்.
"உள்ள வா ஷிவா" என்றாள் இமையாள்.
"உங்ககிட்ட பேசவே இல்லை. அதான் நிறைய பேசி அண்ணியை ஃபிரண்ட் ஆக்கிக்கலாம் வந்தேன்" என்ற ஷிவா, "டார்லிங்கை கண் கலங்காம பார்த்துக்கோங்க" என்றாள்.
ஷிவா என்னவோ விளையாட்டாய் சொல்வது போலிருந்தாலும், அவளின் குரலில் சிறு பிசிறு தட்டியதோ எனத் தோன்றியது இமையாளுக்கு.
இமையாள் யோசிப்பது தெரிய,
"நீங்க உங்க தின்க்ஸ்லாம் இன்னும் அரேஞ் பண்ணலையா?" எனகேட்டபடி இமையாளின் பெட்டிகளை வார்ட்ரோப் பக்கம் தானே நகர்த்தினாள் ஷிவா.
"தேஷ் எங்கே?"
"நீங்களா கூப்பிடனுமாம்? வெளியில் மறைந்து நின்னு எட்டிபார்த்துட்டு இருக்கான் பாருங்க" என்றாள்.
இமையாளை அன்னையாக தன்னுடைய மனைவியாகத்தான் தேஷ் முன் நிறுத்துவேன் என்பதில் ருது உறுதியாக இருந்ததால், பதிவாளர் அலுவலகத்துக்கு மகனை ருது அழைத்து வரவில்லை.
ராதிகாவிடம் விட்டுச் சென்றிருந்தனர்.
தற்போது ராதிகா வீட்டிற்கு சென்று தேஷ்ஷை அழைத்து வந்த ருது ஷிவாவுடன் அனுப்பி வைத்தான்.
மகனிடம் ருது எதுவும் சொல்லவில்லை...
"அம்மா மேல இருக்காங்க" என்று மட்டுமே சொல்லி அனுப்பி வைத்தான்.
ருது அவ்வாறு சொல்லியதுமே தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனது இரு கன்னத்திலும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்ததில், ருதுவுக்கே மூச்சடைத்தது.
பார்த்திருந்த வேங்கடம், அம்பிகா, ஷிவாவுக்கு தானாக கண்கள் கலங்கிட பெரியவர்கள் இருவரும் எழுந்து சென்றிருந்தனர்.
தேஷ்ஷின் அன்னைக்கான ஏக்கம் அவனது முத்தத்தின் வேகத்தில் தெரிந்தது.
மகனை மார்போடு தழுவியவனாக ருது தரையில் மண்டியிட, ஷிவா அருகில் சென்று அவன் தோள் தொட்டு ஆறுதல் படுத்த முயன்றாள்.
ருதுவும், தேஷ்ஷும் தங்களின் நிலையிலிருந்து வெளி வருவதைப்போல் தெரியவில்லை.
அக்கணத்தை அத்தனை நொடியில் கடந்திட முடியுமா என்ன?
தேஷ்ஷின் முத்தம் முற்று பெறாது நீண்டுகொண்டே சென்றது.
"தேன்க்ஸ் ப்பா..." என்ற குழந்தையின் அரற்றலை ருதுவால் கேட்க முடியாது தன் அணைப்பு கூட்டி கண்களோடு நெஞ்சமும் கலங்கியிருந்தான்.
ருதுவை இப்படி பார்க்க மனம் கனத்திட,
"அண்ணாக்கு கால் பண்ணுங்க" என இனியனுக்கு தகவல் அனுப்பினாள் ஷிவா.
அப்போதுதான் அன்றைய தின மருத்துவ கூட்டம் முடிந்து ஹோட்டல் அறைக்கு வந்திருந்த இனியன் மதிய உணவிற்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். (இந்தியா - பிரான்ஸ் நேர வேறுபாடு மூன்றரை மணி நேரம். இந்தியாவின் நேரம் பிரான்ஸை விட முன் உள்ளது.)
ஷிவா தன்னுடைய எண்ணிலிருந்து காலை திருமண காணொளியை இனியனுக்கு அனுப்பியிருக்க... தற்போது தகவல் வந்திருப்பது அவளது எண் எனக் கண்டுகொண்டவனாக, ருதுவிற்கு வேகமாக அழைத்திருந்தான். என்னவோ? ஏதோ? எனும் பதைப்புடன்.
அழைப்பின் ஒலி ருதுவில் கருத்தில் பதியவில்லை.
"அண்ணா... உங்க போன்" என்று அவனை மீட்ட ஷிவா, "நீங்க பேசுங்க" என்று தேஷ்ஷை கூட்டிக்கொண்டு இமையாளை காண வந்திருந்தாள்.
"நீ வை ஷிவா... நான் எடுத்து வச்சிக்கிறேன். அப்போ தான் எனக்கு எடுக்க கம்போர்ட்டா இருக்கும்" என்று ஷிவா தன் உடைகளை அடுக்குவதை அவளுக்கு எதற்கு சிரமம் என மறுத்த இமையாள், "பெரிய மனுஷனை போய் கவனிப்போம் வா" என்று அவளையும் கூட்டிக்கொண்டு அறைக்கு வெளியில் வந்தாள்.
சுவற்றில் ஒட்டியபடி நின்றிருந்தான் தேஷ்.
அவன் முன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள்.
குழந்தையும் அவளைப்போல் கைகளை கட்டிக்கொண்டு மேல் கண்ணால் அவளை பார்த்தான்.
"கோபமா இருக்கானாம்?" ஷிவா சொல்லிட, முறுவலித்த இமையாள், தேஷ்ஷின் முன் மண்டியிட்டு அவனின் கரங்களை பிடித்து...
"என்ன கோபம் குட்டிக்கு? நேத்து ஸ்கூலில் என்னை பார்த்து க்யூட்டா சிரிச்சீங்களே" என்றாள்.
"சொல்ல மாட்டேன்" என்ற தேஷ் முகத்தை வேறு பக்கம் திருப்பிட...
"நிறைய கோபம் போலவே!" என்றாள் இமையாள்.
"ஆமாம்... ரொம்ப பெரிய கோபம்" என்றான் அந்த பெரிய மனிதன்.
ஷிவாவுக்கு தியாவிடமிருந்து அழைப்பு வர, அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
"அச்சோ... அம்மா தப்பு பண்ணிட்டேனா?" இமையாள் தன்னை அம்மா என்று அடையாளப்படுத்தி வினவிட, அதனை மாடியேறி வந்த ருதுவால் கேட்க முடிந்தது. இதயத்தில் ஏதோ ஒன்று உடைந்திட இருவரின் நிலையையும் உள்வாங்கியவனாக படியிலே நின்றுவிட்டான்.
"குட்டியை பார்க்க அம்மா வரவே இல்லை" என்று தேஷ் உதட்டை பிதுக்கி அழுகத் தயாராக, அவனின் பின்னனந்தலையில் கை வைத்தவளாக அரவணைத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.
குழந்தையின் அந்த வரிக்கு என்ன பதில் சொல்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை.
தான் அவனைப்பற்றி எதுவுமே தெரியாது அம்மா என்று குறிப்பிட்டது, அவன் ருதுவின் மகன் என்பதாலே! ஆனால் அவன் அம்மா என்று குறிப்பிடுவது... அதுவும் உரிமையாய் பார்த்த கணம்... இதற்கான விடையின் தேடுதல் அவளது உள்ளத்தில் தொடங்கிட... அதன் பாதை ருதுவிடமே முடிந்தது.
தனது யோசனையில் இருந்தவள் குழந்தையின் தேம்பலுடன் கூடிய அரற்றலில் அவனில் கவனம் வைத்தாள்.
"நீங்க என்னை பார்க்கவே வரல. எப்போ கேட்டாலும் அப்பா நீங்க தாத்தா வீட்டில் இருக்கீங்கன்னு தான் சொல்லுவாங்க தெரியுமா? அம்மா கேட்கும் போதெல்லாம் உங்க போட்டோ தான் காட்டுவாங்க. நான் இங்க வந்தப்புறம் கூட தேஷ்ஷை பார்க்க லேஷஸ் வரல" என்று திக்கித் திணறி விசும்பிக்கொண்டே தேஷ் சொல்லிட இமையாள் அவன் சொல்லியதை கிரகிக்க முடியாது சமைந்தாள்.
'என்ன சொல்கிறான்?' அவளுக்கு கண்கள் இருட்டியது.
'இவனோட அம்மா இருக்கும்போது என்னை ஏன் அம்மான்னு காட்டணும்?' அவளுள் இருக்கும் கேள்விகள் போதாதென்று புதிதாக பல கேள்விகள் வரிசைகட்டின.
அதுவும் அவன் ருதுவைப்போல் லேஷஸ் சொல்லியதில், தன்னை அவனை சுமந்த அம்மாவாகவே காட்டியிருக்கிறான் என அவள் நெஞ்சம் விம்மியது. குழந்தையின் ஏக்கத்திலும், அவனது குரலில் தென்பட்ட சோகத்திலும் அவள் மனம் கனத்தது.
"தேஷ்ஷை லேஷஸ்க்கு பிடிக்காதா?" அக்கேள்வியில் தேஷ்ஷின் கண்ணீர் அவளின் தோளை நனைத்திருந்தது.
பிஞ்சுவின் ஈரம் அவள் இதயத்தை சுட்டது.
தன் கண்களில் துளிர்த்து கண்ணீரை உள்ளிழுத்தவளாக,
"யார் சொன்னாங்க?" என்று தேஷ்ஷை தன்னிலிருந்து பிரித்து தன் முன் நிறுத்தியவளாக, அவனது கண்ணீரை துடைத்து இரு கைகளையும் கோர்த்து பிடித்தவளாக...
"அம்மாக்கு பேபியை ரொம்ப பிடிக்கும். ரொம்ப ரொம்ப பிடிக்கும்" என்றாள். அடைத்த தொண்டையை சரி செய்தவளாக.
இமையாள் தேஷ்ஷிற்காக சொல்லும் வார்த்தையில், தன் மீது அவள் கொண்டுள்ள நேசத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தான் ருது.
தேஷ்ஷை பற்றி ஒன்றுமே தெரியாது, அவனிடம் அவனின் தாயாகவே இமையாள் தன்னைக் காட்டிக்கொள்வது ருதுவின் மீதான காதலினால் அல்லவா! ருதுவிற்கு அவளின் காதலில் கர்வம் கூடியது.
ருது எதிர்பார்த்ததும் இதைத்தானே!
ஆனால் ஒரே நாளில்... இத்தனை சீக்கிரம் இது நடந்தேறும் என்று ருது நினைக்கவில்லை. தன்மீதான கோபத்தில் சற்று தள்ளி இருப்பாளென்று நினைத்திருந்தான்.
பெண்மைக்கே உரித்தான தாய்மையில் விலகலை காட்டிட முடியுமா என்ன? ஒரு குழந்தை தன்னை அம்மா என்று ஆறுதல் தேடும் போது இயல்பான தாய்மை உணர்வு அவளிடத்தில் தோன்றுவதில் என்ன ஆச்சரியம் இருந்திடப்போகிறது. இது இயற்கையின் வரமாயிற்றே. அதிலும் தன்னவன் அப்பாவாக இருந்திடும்போது அவளை அம்மாவாகக் கட்டிக்கொள்ளத்தானே அவளது காதல் நெஞ்சம் விரும்பும்.
ருதுவிற்கு தன்னுடைய லேஷஸ்ஸின் மீது காதல் இன்னும் இன்னும் கூடியது.
தன்னை ரொம்ப பிடிக்குமென இமையாள் சொல்லியதில் தேஷ் மகிழ்ந்தாலும்,
"அப்புறம் ஏன் நான் பிறந்ததும் விட்டுப்போனிங்க?" என்று கேட்டிட, அக்கேள்வியில் யாவும் அவளுக்கு ஸ்தம்பித்தது.
"பேபி..." என்ற இமையாள், தேஷ்ஷின் முகத்தில் கண்ட வருத்தத்தில்... தன் நிதானத்தை மீட்டு,
"அம்மா விட்டுப்போகலடா குட்டி... அம்மாக்கு உடம்பு சரியில்லையா... அம்மாகிட்டேர்ந்து குட்டிக்கு காய்ச்சல் வச்சிட்டா என்ன பண்றது? அதான் பாட்டி வீட்டில் இருந்தேன். இப்போ சரியாப்போச்சு, குட்டியை பார்க்க ஓடிவந்துட்டேன். இனி தேஷ்ஷை விட்டு லேஷஸ் எங்கையும் போகமாட்டேன்" என்று அவனின் கன்னம் பிடித்து ஆட்டினாள்.
"நிஜமா?"
"ஐ ஸ்வேர் பேபி. அம்மா தேஷ்கிட்ட பொய் சொல்லமாட்டனே!" என்றவளை தேஷ் தாவி அணைத்துக் கொண்டான்.
அன்னையின் ஏக்கம் சிறு குழந்தையை எத்தனை தூரம் வதைத்துள்ளது என்று நினைத்த இமையாளின் கண்ணீர் கன்னம் இறங்கியது.
பார்த்திருந்த ருதுவுக்கு, தான் உண்மையை சொல்லியிருந்தாலும், தேஷ்ஷை அவள் மகனாக மட்டுமே பார்த்திருப்பாள் என்பது அந்நொடி புரிந்தது.
"லவ் யூ டி." காற்றாய் ஒலித்த அவனது குரல் அவளைத் தீண்டியதோ, அவன் நின்ற திசையில் அவளின் பார்வை படிந்தது.
நொடியில் தன் முகத்தை மாற்றிய ருது...
"அம்மாவும், பையனும் என்ன சீக்ரெட் பேசிக்கிறீங்க?" எனக் கேட்டவாறு அருகில் வந்தான்.
"அதை ஏன் உங்களுக்கு சொல்லணும்?" என வெடுக்கெனக் கேட்ட இமையாள்,
"அப்பா தான் அம்மாவை பாட்டி வீட்டில் கொண்டு போய் விட்டாங்க பேபி. அப்பா பேச்சு கா விடுங்க" என்றாள் தேஷ்ஷிடம்.
"நிஜமாவாப்பா..." என்ற குழந்தை, "இனி பாட்டிக்கு வீட்டுக்கு போனால்... மூணு பேரும் ஒன்னாவே போலாம்ப்பா" என்றதில் ருது மற்றும் இமையாளின் நெஞ்சம் ஒருங்கே துடித்து அடங்கியது.
"அம்மா தேஷ் குட்டியை எங்கப்போனாலும் கூட்டிட்டுப் போயிடுறேன். ஓகேவா" என்றவள், "இந்த அப்பா வேணாம். கடையில் வித்திடலாம். நம்மளை பிரிச்சு வச்சார் தானே!" என்று தேஷ்ஷை தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைய,
"உன்னை விட்டால் எனக்கும் யாருமில்லை லேஷஸ்... என்னையும் கைப்பிடிச்சு கூட்டிட்டு போயிடு" என்ற ருதுவின் குரலில் அடுத்த அடி வைத்திட முடியாது தடுமாறி நின்றாள் ருத்விக்கின் இமையாள்.
தூரமும் தூரமாய் தூரம் சென்றிட அவர்களை அன்பின் வழி பக்கம் இணைத்திட நினைத்ததோ!?
Drop urs comments in below the Link
இமையாள் "உங்க மகன்" என்று சொன்னதில் ருதுவிற்கு அவள்மீது கோபம்.
முறைத்துக்கொண்டு நின்றான். அவளும் அவனுக்கு சளைக்காது முறைத்து நின்றாள்.
'பார்க்கிறதை பாரு...' என ருதுவும்,
'அந்த கண்ணை பிடுங்கிடனும்' என இமையாளும் ஒருசேர முணுமுணுத்தனர்.
"ரொம்ப பண்றடி" என்ற ருது, "இன்னைக்கு சொல்றது தான் முதலும், கடைசி... தேஷ்க்கு நான் அப்பான்னா, அம்மா நீதான். பிரிச்சு பேசுறது இதோட நிக்கட்டும்" என்றான் அழுத்தாமாக.
சற்று முன்னர் கூட அவன் மீதா கோபத்தில் உங்க மகன் எனக் கூறியிருந்தாலும் உள்ளுக்குள் அம்மா நான்தானே என்று தானே நினைத்தாள். ஆனால் அதனை வெளிப்படையாய் அவனிடம் சொல்ல அவளுக்கு விருப்பமில்லை.
"ம்க்கும்..." என்று உதட்டை சுளித்தவள், அறையை சுற்றி பார்வையை ஓட்டினாள். மெத்தையில் அமர்ந்தவளாக.
ஒரு மாத கைகுழந்தையாக தேஷ்ஷை ருது கைகளில் ஏந்தி பிஞ்சுவின் நெற்றியில் முத்தம் வைத்த காட்சி முதல், அவனது மூன்றரை வயது வரை ருதுவுடனும் தனித்தும் எடுக்கப்பட்ட பல வகையான புகைப்படங்கள், ஒரு பக்க சுவர் முழுக்க நிறைந்திருந்தது.
ஒவ்வொன்றாக அவள் பார்த்து முடிய, ருது குளியலறை புகுந்து வெளியில் வந்திருந்தான்.
"உங்க ஃவைப் போட்டோவே இல்லையே?" என்றாள். ருதுவை ஏறிட்டு.
தலையை துவட்டியபடி அவளை ஆழ்ந்து நோக்கிய ருது, ஈரத் துண்டினை பால்கனி சென்று அதற்குரிய கம்பியில் விரித்து போட்டவனாக உள் வந்தான்.
இமையாள் அவனது பதிலுக்காக அவனையே பார்த்திருக்க, மெல்ல அவளருகில் வந்தவன் அவளது கரம் பற்றி எழுப்பினான்.
அவனது சிறு தொடுகைக்கே அவளது காதல் மனம் சுருண்டது.
இமையாள் விழிகளை தன் விழிகளால் உள்வாங்கி அவளது சிந்தையை தனக்குள் மூழ்கடித்தவன், அவளை அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடி முன் கூட்டிச்சென்று, அவளது பின்புறம் நின்று தோளில் கை வைத்தவனாக நிறுத்தியிருந்தான்.
இருவரின் பிம்பத்தையும் அழகோவியமாய் பிரதிபலித்தது கண்ணாடி.
காதலித்த நாட்களில் கூட இத்தனை பக்கம்... நெருக்கமாய் நின்றதில்லை இருவரும்.
இமை மூடாது ரசித்து அகப்பெட்டகத்தில் சேமித்தாள். இருவரின் நிழல் பிம்பத்தை நிஜத்தில் தேக்கி வைத்தவளாக.
இமையாள் உறைந்து போனாள் என்று தான் சொல்ல வேண்டும்.
கோபமாக இருக்கிறேன். உன்னை வெறுக்கிறேன் என்று சொல்பவள் காதலாய் கட்டுண்டு அவனது மார்போடு தன் முதுகு தீண்ட தன்னைப்போல் ஒட்டியிருந்தாள்.
இல்லையென்று சொல்லிக்கொண்டே பார்வையால் அவள் காட்டும் காதலை துளி துளியாய் கண்கள் வழி பருகியவனிடம் அத்தனை ரசிப்பு.
"ஷீ இஸ் மை வைஃப்." அவளின் வெற்றுத் தோளில் தன் நாடி பதித்து, அவளது கன்னத்தோடு தன் கன்னம் உரசியவன், கண்ணாடியில் பார்த்துக்கொண்டே மென்மையாய் சொல்லியிருந்தான்.
நிழல் விட்டு நிஜம் தாவியிருந்தது இமையாளின் கருமணிகள்.
"ருது..." காற்றாய் அவன் முகம் மோதியது அவளின் ஓசை.
"உன் ருது டி" என்று அவளின் நெற்றி முட்டியவன், "இங்க நீ மட்டும் தான் இருக்கன்னு சொன்னா நம்புவியா?" எனக் கேட்டு அவளது கையை எடுத்து தன் மார்பில் அழுத்தமாக வைத்து கண் மூடினான். ருதுவின் முகம் மேல் நோக்கி உயர்ந்திருக்க, அவனத்து கண்ணின் ஓரம் துளி நீர் விழ காத்திருந்தது.
சட்டென்று தன் பெருவிரல் கொண்டு துடைத்தவளின் உள்ளங்கை அவனது கன்னத்தில் தேங்கி நின்றது.
"என்கிட்ட ஏதும் சொல்லணுமா?" எனக் கேட்டவள், ருது பட்டென்று இமை திறந்து அவளை பார்த்ததில்,
"எதாவது மறைக்கிறீங்களா ருது?" என்றாள்.
வேகமாக விலகி நின்றான்.
ருதுவின் உடல் மொழியைத்தான் அவதானித்தாள் அவள்.
"நத்திங்... நத்திங்" என்ற ருது, "தேஷ்ஷை கூட்டிட்டு வரேன்" என்று வேகமாக அவளின் முன்னிருந்த சென்றிருந்தான்.
ருதுவிற்கு இமையாளிடம் அனைத்தையும் கொட்டிட ஒரு நொடி போதும். ஆனால் அதன் பிறகு தேஷ்ஷை அவள் எப்படி எந்த உறவில் பார்ப்பாள் என்கிற தடுமாற்றம் அவனிடம்.
'உண்மையாவே ஏதோ இருக்கு' என நினைத்த இமையாள், 'தன்னைத்தவிர எல்லாரும் அவங்களை ஏத்துகிட்டாங்க. எல்லோரிடமும் நல்லா தான் பழகுறாங்க. நியாயமா இன்னைக்கு நடந்த கல்யாணத்துக்கு கோபப்பட வேண்டிய அப்பாவே, உன் காதலை மட்டும் முன் வைத்து ருதுவை பாருன்னு அவங்களுக்கு சப்போர்ட்டா பேசுறார்... அப்போ?' என்று அனைத்தையும் பொறுமையாக யோசித்தவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது... 'ருதுவால் எப்போதும் தன்னுடைய காதலுக்கு துரோகம் செய்திருக்க முடியாது' என.
'இங்க நீ மட்டும் தான் இருக்கன்னு சொன்னா நம்புவியா?' என்று மனைவியாக கண்ணாடியில் தன்னை காட்டியதே அவளுள் மின்னிக் கொண்டிருந்தது.
எதுவோ ஒன்று புரிந்தும் புரியாது அவளை ஆட்டி வைத்திட, தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
தேஷ்ஷை பார்த்த பின்னரும் அவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதாக சொல்லியதை பொய்யென்று அவளால் கருத முடியவில்லை.
'இப்போதும் தன்மீது அதே காதலோடு இருப்பவனால் எப்படி இன்னொரு பெண்ணுடனான திருமணத்தை ஏற்று, குழந்தை வரை சென்றிருக்க முடியும்? அதுவும் தனக்கு திருமணம் ஆகிவிட்டதென ருது சொல்லிய சமயமே கன்சீவாக இருப்பதாகவும் சொன்னாங்க. கல்யாணம் நடந்த குறுகிய காலத்தில் என்னை மறந்து குழந்தை வரை சாத்தியமா?' எல்லாம் நினைத்து நினைத்து குழம்பியவளுக்கு இறுதியாக மூளையில் மின்னல் வெட்டியது.
"தேஷ் அவங்களோட மகனே இல்லைன்னா?" தனக்குத்தானே வாய்விட்டேக் கேட்டிருந்தாள்.
"அப்போ அவங்க சொன்னது? இத்தனை நாள் தான் நினைத்திருந்தபடி நடந்துவிட்டதாக சொல்லிய திருமணம் பொய்யாகவே இருந்தால்? இருக்குமோ?" நெற்றியை நீவிக்கொண்டாள். மெல்ல தெளிவு வருவதை உணர்ந்தாள்.
'மனைவி போட்டோ இல்லையா?' என்பது சாதாரண கேள்வி, அதற்கு புகைப்படம் இருந்திருந்தால் இயல்பாய் காட்டியிருக்கலாம். விருப்பமில்லை என்றால், இருக்கு இல்லையென பதில் சொல்லியிருக்கலாம். அதை விடுத்து மனைவி என எவ்விடம் வந்தாலும் ருது தன்னை மட்டுமே குறிப்பிடுவது தான் அவளுக்கு அவளது சந்தேகத்தை வலுக்க வைத்தது.
'தன்னை கார்னர் செய்து திருமணம் செய்தது கூட ஏதோ ஒன்றை சொல்ல முடியாமல் தானோ?' சரியாக கணித்திருந்தாள்.
"அண்ணி."
நீண்ட நேரம் தனக்குள்ளே உழன்று கொண்டிருந்த இமையாள் ஷிவாவின் குரலில் தான் மீண்டாள்.
"உள்ள வா ஷிவா" என்றாள் இமையாள்.
"உங்ககிட்ட பேசவே இல்லை. அதான் நிறைய பேசி அண்ணியை ஃபிரண்ட் ஆக்கிக்கலாம் வந்தேன்" என்ற ஷிவா, "டார்லிங்கை கண் கலங்காம பார்த்துக்கோங்க" என்றாள்.
ஷிவா என்னவோ விளையாட்டாய் சொல்வது போலிருந்தாலும், அவளின் குரலில் சிறு பிசிறு தட்டியதோ எனத் தோன்றியது இமையாளுக்கு.
இமையாள் யோசிப்பது தெரிய,
"நீங்க உங்க தின்க்ஸ்லாம் இன்னும் அரேஞ் பண்ணலையா?" எனகேட்டபடி இமையாளின் பெட்டிகளை வார்ட்ரோப் பக்கம் தானே நகர்த்தினாள் ஷிவா.
"தேஷ் எங்கே?"
"நீங்களா கூப்பிடனுமாம்? வெளியில் மறைந்து நின்னு எட்டிபார்த்துட்டு இருக்கான் பாருங்க" என்றாள்.
இமையாளை அன்னையாக தன்னுடைய மனைவியாகத்தான் தேஷ் முன் நிறுத்துவேன் என்பதில் ருது உறுதியாக இருந்ததால், பதிவாளர் அலுவலகத்துக்கு மகனை ருது அழைத்து வரவில்லை.
ராதிகாவிடம் விட்டுச் சென்றிருந்தனர்.
தற்போது ராதிகா வீட்டிற்கு சென்று தேஷ்ஷை அழைத்து வந்த ருது ஷிவாவுடன் அனுப்பி வைத்தான்.
மகனிடம் ருது எதுவும் சொல்லவில்லை...
"அம்மா மேல இருக்காங்க" என்று மட்டுமே சொல்லி அனுப்பி வைத்தான்.
ருது அவ்வாறு சொல்லியதுமே தந்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனது இரு கன்னத்திலும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்ததில், ருதுவுக்கே மூச்சடைத்தது.
பார்த்திருந்த வேங்கடம், அம்பிகா, ஷிவாவுக்கு தானாக கண்கள் கலங்கிட பெரியவர்கள் இருவரும் எழுந்து சென்றிருந்தனர்.
தேஷ்ஷின் அன்னைக்கான ஏக்கம் அவனது முத்தத்தின் வேகத்தில் தெரிந்தது.
மகனை மார்போடு தழுவியவனாக ருது தரையில் மண்டியிட, ஷிவா அருகில் சென்று அவன் தோள் தொட்டு ஆறுதல் படுத்த முயன்றாள்.
ருதுவும், தேஷ்ஷும் தங்களின் நிலையிலிருந்து வெளி வருவதைப்போல் தெரியவில்லை.
அக்கணத்தை அத்தனை நொடியில் கடந்திட முடியுமா என்ன?
தேஷ்ஷின் முத்தம் முற்று பெறாது நீண்டுகொண்டே சென்றது.
"தேன்க்ஸ் ப்பா..." என்ற குழந்தையின் அரற்றலை ருதுவால் கேட்க முடியாது தன் அணைப்பு கூட்டி கண்களோடு நெஞ்சமும் கலங்கியிருந்தான்.
ருதுவை இப்படி பார்க்க மனம் கனத்திட,
"அண்ணாக்கு கால் பண்ணுங்க" என இனியனுக்கு தகவல் அனுப்பினாள் ஷிவா.
அப்போதுதான் அன்றைய தின மருத்துவ கூட்டம் முடிந்து ஹோட்டல் அறைக்கு வந்திருந்த இனியன் மதிய உணவிற்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். (இந்தியா - பிரான்ஸ் நேர வேறுபாடு மூன்றரை மணி நேரம். இந்தியாவின் நேரம் பிரான்ஸை விட முன் உள்ளது.)
ஷிவா தன்னுடைய எண்ணிலிருந்து காலை திருமண காணொளியை இனியனுக்கு அனுப்பியிருக்க... தற்போது தகவல் வந்திருப்பது அவளது எண் எனக் கண்டுகொண்டவனாக, ருதுவிற்கு வேகமாக அழைத்திருந்தான். என்னவோ? ஏதோ? எனும் பதைப்புடன்.
அழைப்பின் ஒலி ருதுவில் கருத்தில் பதியவில்லை.
"அண்ணா... உங்க போன்" என்று அவனை மீட்ட ஷிவா, "நீங்க பேசுங்க" என்று தேஷ்ஷை கூட்டிக்கொண்டு இமையாளை காண வந்திருந்தாள்.
"நீ வை ஷிவா... நான் எடுத்து வச்சிக்கிறேன். அப்போ தான் எனக்கு எடுக்க கம்போர்ட்டா இருக்கும்" என்று ஷிவா தன் உடைகளை அடுக்குவதை அவளுக்கு எதற்கு சிரமம் என மறுத்த இமையாள், "பெரிய மனுஷனை போய் கவனிப்போம் வா" என்று அவளையும் கூட்டிக்கொண்டு அறைக்கு வெளியில் வந்தாள்.
சுவற்றில் ஒட்டியபடி நின்றிருந்தான் தேஷ்.
அவன் முன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்றாள்.
குழந்தையும் அவளைப்போல் கைகளை கட்டிக்கொண்டு மேல் கண்ணால் அவளை பார்த்தான்.
"கோபமா இருக்கானாம்?" ஷிவா சொல்லிட, முறுவலித்த இமையாள், தேஷ்ஷின் முன் மண்டியிட்டு அவனின் கரங்களை பிடித்து...
"என்ன கோபம் குட்டிக்கு? நேத்து ஸ்கூலில் என்னை பார்த்து க்யூட்டா சிரிச்சீங்களே" என்றாள்.
"சொல்ல மாட்டேன்" என்ற தேஷ் முகத்தை வேறு பக்கம் திருப்பிட...
"நிறைய கோபம் போலவே!" என்றாள் இமையாள்.
"ஆமாம்... ரொம்ப பெரிய கோபம்" என்றான் அந்த பெரிய மனிதன்.
ஷிவாவுக்கு தியாவிடமிருந்து அழைப்பு வர, அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
"அச்சோ... அம்மா தப்பு பண்ணிட்டேனா?" இமையாள் தன்னை அம்மா என்று அடையாளப்படுத்தி வினவிட, அதனை மாடியேறி வந்த ருதுவால் கேட்க முடிந்தது. இதயத்தில் ஏதோ ஒன்று உடைந்திட இருவரின் நிலையையும் உள்வாங்கியவனாக படியிலே நின்றுவிட்டான்.
"குட்டியை பார்க்க அம்மா வரவே இல்லை" என்று தேஷ் உதட்டை பிதுக்கி அழுகத் தயாராக, அவனின் பின்னனந்தலையில் கை வைத்தவளாக அரவணைத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டாள்.
குழந்தையின் அந்த வரிக்கு என்ன பதில் சொல்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை.
தான் அவனைப்பற்றி எதுவுமே தெரியாது அம்மா என்று குறிப்பிட்டது, அவன் ருதுவின் மகன் என்பதாலே! ஆனால் அவன் அம்மா என்று குறிப்பிடுவது... அதுவும் உரிமையாய் பார்த்த கணம்... இதற்கான விடையின் தேடுதல் அவளது உள்ளத்தில் தொடங்கிட... அதன் பாதை ருதுவிடமே முடிந்தது.
தனது யோசனையில் இருந்தவள் குழந்தையின் தேம்பலுடன் கூடிய அரற்றலில் அவனில் கவனம் வைத்தாள்.
"நீங்க என்னை பார்க்கவே வரல. எப்போ கேட்டாலும் அப்பா நீங்க தாத்தா வீட்டில் இருக்கீங்கன்னு தான் சொல்லுவாங்க தெரியுமா? அம்மா கேட்கும் போதெல்லாம் உங்க போட்டோ தான் காட்டுவாங்க. நான் இங்க வந்தப்புறம் கூட தேஷ்ஷை பார்க்க லேஷஸ் வரல" என்று திக்கித் திணறி விசும்பிக்கொண்டே தேஷ் சொல்லிட இமையாள் அவன் சொல்லியதை கிரகிக்க முடியாது சமைந்தாள்.
'என்ன சொல்கிறான்?' அவளுக்கு கண்கள் இருட்டியது.
'இவனோட அம்மா இருக்கும்போது என்னை ஏன் அம்மான்னு காட்டணும்?' அவளுள் இருக்கும் கேள்விகள் போதாதென்று புதிதாக பல கேள்விகள் வரிசைகட்டின.
அதுவும் அவன் ருதுவைப்போல் லேஷஸ் சொல்லியதில், தன்னை அவனை சுமந்த அம்மாவாகவே காட்டியிருக்கிறான் என அவள் நெஞ்சம் விம்மியது. குழந்தையின் ஏக்கத்திலும், அவனது குரலில் தென்பட்ட சோகத்திலும் அவள் மனம் கனத்தது.
"தேஷ்ஷை லேஷஸ்க்கு பிடிக்காதா?" அக்கேள்வியில் தேஷ்ஷின் கண்ணீர் அவளின் தோளை நனைத்திருந்தது.
பிஞ்சுவின் ஈரம் அவள் இதயத்தை சுட்டது.
தன் கண்களில் துளிர்த்து கண்ணீரை உள்ளிழுத்தவளாக,
"யார் சொன்னாங்க?" என்று தேஷ்ஷை தன்னிலிருந்து பிரித்து தன் முன் நிறுத்தியவளாக, அவனது கண்ணீரை துடைத்து இரு கைகளையும் கோர்த்து பிடித்தவளாக...
"அம்மாக்கு பேபியை ரொம்ப பிடிக்கும். ரொம்ப ரொம்ப பிடிக்கும்" என்றாள். அடைத்த தொண்டையை சரி செய்தவளாக.
இமையாள் தேஷ்ஷிற்காக சொல்லும் வார்த்தையில், தன் மீது அவள் கொண்டுள்ள நேசத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தான் ருது.
தேஷ்ஷை பற்றி ஒன்றுமே தெரியாது, அவனிடம் அவனின் தாயாகவே இமையாள் தன்னைக் காட்டிக்கொள்வது ருதுவின் மீதான காதலினால் அல்லவா! ருதுவிற்கு அவளின் காதலில் கர்வம் கூடியது.
ருது எதிர்பார்த்ததும் இதைத்தானே!
ஆனால் ஒரே நாளில்... இத்தனை சீக்கிரம் இது நடந்தேறும் என்று ருது நினைக்கவில்லை. தன்மீதான கோபத்தில் சற்று தள்ளி இருப்பாளென்று நினைத்திருந்தான்.
பெண்மைக்கே உரித்தான தாய்மையில் விலகலை காட்டிட முடியுமா என்ன? ஒரு குழந்தை தன்னை அம்மா என்று ஆறுதல் தேடும் போது இயல்பான தாய்மை உணர்வு அவளிடத்தில் தோன்றுவதில் என்ன ஆச்சரியம் இருந்திடப்போகிறது. இது இயற்கையின் வரமாயிற்றே. அதிலும் தன்னவன் அப்பாவாக இருந்திடும்போது அவளை அம்மாவாகக் கட்டிக்கொள்ளத்தானே அவளது காதல் நெஞ்சம் விரும்பும்.
ருதுவிற்கு தன்னுடைய லேஷஸ்ஸின் மீது காதல் இன்னும் இன்னும் கூடியது.
தன்னை ரொம்ப பிடிக்குமென இமையாள் சொல்லியதில் தேஷ் மகிழ்ந்தாலும்,
"அப்புறம் ஏன் நான் பிறந்ததும் விட்டுப்போனிங்க?" என்று கேட்டிட, அக்கேள்வியில் யாவும் அவளுக்கு ஸ்தம்பித்தது.
"பேபி..." என்ற இமையாள், தேஷ்ஷின் முகத்தில் கண்ட வருத்தத்தில்... தன் நிதானத்தை மீட்டு,
"அம்மா விட்டுப்போகலடா குட்டி... அம்மாக்கு உடம்பு சரியில்லையா... அம்மாகிட்டேர்ந்து குட்டிக்கு காய்ச்சல் வச்சிட்டா என்ன பண்றது? அதான் பாட்டி வீட்டில் இருந்தேன். இப்போ சரியாப்போச்சு, குட்டியை பார்க்க ஓடிவந்துட்டேன். இனி தேஷ்ஷை விட்டு லேஷஸ் எங்கையும் போகமாட்டேன்" என்று அவனின் கன்னம் பிடித்து ஆட்டினாள்.
"நிஜமா?"
"ஐ ஸ்வேர் பேபி. அம்மா தேஷ்கிட்ட பொய் சொல்லமாட்டனே!" என்றவளை தேஷ் தாவி அணைத்துக் கொண்டான்.
அன்னையின் ஏக்கம் சிறு குழந்தையை எத்தனை தூரம் வதைத்துள்ளது என்று நினைத்த இமையாளின் கண்ணீர் கன்னம் இறங்கியது.
பார்த்திருந்த ருதுவுக்கு, தான் உண்மையை சொல்லியிருந்தாலும், தேஷ்ஷை அவள் மகனாக மட்டுமே பார்த்திருப்பாள் என்பது அந்நொடி புரிந்தது.
"லவ் யூ டி." காற்றாய் ஒலித்த அவனது குரல் அவளைத் தீண்டியதோ, அவன் நின்ற திசையில் அவளின் பார்வை படிந்தது.
நொடியில் தன் முகத்தை மாற்றிய ருது...
"அம்மாவும், பையனும் என்ன சீக்ரெட் பேசிக்கிறீங்க?" எனக் கேட்டவாறு அருகில் வந்தான்.
"அதை ஏன் உங்களுக்கு சொல்லணும்?" என வெடுக்கெனக் கேட்ட இமையாள்,
"அப்பா தான் அம்மாவை பாட்டி வீட்டில் கொண்டு போய் விட்டாங்க பேபி. அப்பா பேச்சு கா விடுங்க" என்றாள் தேஷ்ஷிடம்.
"நிஜமாவாப்பா..." என்ற குழந்தை, "இனி பாட்டிக்கு வீட்டுக்கு போனால்... மூணு பேரும் ஒன்னாவே போலாம்ப்பா" என்றதில் ருது மற்றும் இமையாளின் நெஞ்சம் ஒருங்கே துடித்து அடங்கியது.
"அம்மா தேஷ் குட்டியை எங்கப்போனாலும் கூட்டிட்டுப் போயிடுறேன். ஓகேவா" என்றவள், "இந்த அப்பா வேணாம். கடையில் வித்திடலாம். நம்மளை பிரிச்சு வச்சார் தானே!" என்று தேஷ்ஷை தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைய,
"உன்னை விட்டால் எனக்கும் யாருமில்லை லேஷஸ்... என்னையும் கைப்பிடிச்சு கூட்டிட்டு போயிடு" என்ற ருதுவின் குரலில் அடுத்த அடி வைத்திட முடியாது தடுமாறி நின்றாள் ருத்விக்கின் இமையாள்.
தூரமும் தூரமாய் தூரம் சென்றிட அவர்களை அன்பின் வழி பக்கம் இணைத்திட நினைத்ததோ!?
Drop urs comments in below the Link