தூரமே தூரமாய் 35
ருது எழும்போது இமையாள் பக்கத்தில் இல்லை. கீழே தேஷ் சிரித்து விளையாடும் சத்தம் கேட்டது.
முதுகில் என்னவோ உறுத்த என்னவென்று எழுந்து நின்று படுக்கையை ஆராய்ந்தான்.
இமையாளின் கண்ணாடி வளையல் உடைந்து துண்டாகக் கிடந்தது.
அவனுள் இரவின் இனிமை தேனாய் இனித்தது. உடன் மந்தகாசமாய் இதழோரம் குட்டி புன்னகையும்.
உடைந்த வளையல் துண்டுகளை கையில் எடுத்தவன், படுக்கைக்கு அருகிலிருக்கும் சிறு மேசை இழுவையை திறந்து பத்திரபடுத்தினான்.
'எனக்கே டயர்டா இருக்கு. இவள் எப்படி சீக்கிரம் எழுந்தாள்?' என குறும்பாய் நினைத்தவன் குளியலறை புகுந்து வெளியில் வந்தான்.
இன்று மைதானத்தில் ஓட முடியாது. அந்தளவிற்கு அவனுக்கு நேரமில்லை. மாடிக்குச் சென்றவன், புஷ்ஷப் எடுக்கத் துவங்கினான்.
அப்போது தேஷ்ஷும், ஷிவாவும் ஓடி வரும் சத்தம் கேட்டது.
"குட்மார்னிங் ப்பா..." என்ற தேஷ் ஓடிவந்து ருதுவின் முதுகில் படுத்துக்கொண்டான்.
"குட்மார்னிங் டார்லிங்" என்ற ஷிவா, "இன்னைக்கு கிரவுண்டில் கொசு விரட்டலையா?" என கிண்டல் செய்தாள்.
"டைம் இல்லை" என்றவன், "தேஷ்ஷை பின்னால் கையிட்டு வளைத்து சுழன்றவனாக மல்லாக்க திரும்பி படுத்தான்.
"என்ன காலையிலே ரெண்டு பேரும் மாடிக்கு?" என்றவன், தேஷ்ஷின் கன்னத்தைப் பிடித்தி இழுத்துக்கொண்டிருந்தான்.
"செடிங்களுக்கு தண்ணி விட..." என்ற ஷிவா மாடியின் ஒரு பக்கம் முழுக்க செடிகள் வைப்பதற்கெனவே மண் நிரப்பி நீண்டு கட்டப்பட்டிருந்த மற்றும் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த பல வகை பூ, கீரை மற்றும் மருத்துவ செடிகளிடம் நகர்ந்தாள்.
"அம்மா எனக்கு நட்ஸ் ஜூஸ் கொடுத்தாங்கப்பா. செம டேஸ்ட்" என்ற தேஷ், "அத்தைக்கு காபி நோ சொல்லிட்டாங்க" என்றான்.
"ஏனாம்?"
"ஏபிசி ஜூஸ் கொடுத்தாங்க டார்லிங்." அவள் முகம் சுருக்கி சொல்லியதில் ருதுவிடம் சத்தமான சிரிப்பு.
"போங்க உங்களுக்கும் இருக்கு" என்றிட,
"அத்தைக்கு ஹெல்ப் பண்ணுங்க. அப்பா ஸ்டேஷன் போகணும்" என்று தேஷ்ஷின் கன்னத்தில் முத்தம் வைத்து எழுந்த ருது, நேராக கீழே வந்து சமயலறைக்குள் நுழைந்தான்.
சுவற்றில் சாய்ந்து நின்றவன், தன்னவளின் பின் உருவத்தை வஞ்சனை இல்லாது ரசித்தான்.
முந்தானை சொருகிய இடை பளிங்காய் மின்னிட, பொங்கும் உணர்வை பின்னந்தலை வருடி சமன் செய்தான்.
"குளிக்காம கிச்சன்க்குள்ள வந்தாச்சு" என்று திரும்பிய இமையாள், பின்பக்கம் மேடையில் சாய்ந்தவளாக, மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, என்ன என்பதைப்போல் ஒற்றை புருவம் ஏற்றி இறக்கினாள்.
"சுண்டி இழுக்கறடி பொண்டாட்டி" என்றவன், அவள் உணரும் புன்பு கையை பிடித்து இழுத்தவனாக தனக்குள் சுருட்டியிருந்தான்.
"ம்ப்ச்... விடுங்க. என்ன ருது இது" என்று இமையாள் சிணுங்கிட,
"எழுந்ததும் உன்னைத் தேடினேன்" என்றான்.
"எதுக்காம்?"
"இதுக்குத்தான்" என்றவன் நொடியில் அவளைத் திருப்பி இதழோடு இதழ் பொருத்தியிருந்தான்.
அவனது கரம் அவளின் கன்னத்திலிருந்து அவளது வெற்றிடைக்கு இறங்கியிருக்க, பெண்ணவள் விழித்துக்கொண்டாள்.
விடுக்க முடியாது அவனிலிருந்து தன்னிதழை விடுத்துக் கொண்டவள், மூச்சு வாங்கியவளாக, "கிச்சனில் வைத்து என்ன பண்றீங்க?" என அவனின் தோளில் அடித்தாள்.
"இதுதான் கிச்சன் ரொமான்ஸ். டீச்சருக்கு தெரியாதா?" எனக் கேட்டவன், "முழுசா சொல்லிக்கொடுக்க விடாமல் பாதியில் விட்டால் எப்படி கத்துக்கிறது. மக்கு டீச்சர்" என்று அவன் குறும்பாய் சீண்டினான்.
"உங்க சீண்டலுக்கு இப்போ என்னால் பதில் சொல்ல முடியாது" என்றவள், ஒரு குவளையை எடுத்து அவனது கையில் திணித்து, "குடிச்சிட்டு கிளம்பி வாங்க. எனக்கு வேலையிருக்கு" என அடிப்பின் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
"எங்கையாவது புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரியா இருக்க" என அலுத்தவன், கையிலிருந்த குவளையில் இருப்பது என்னவென்று தெரியாமலே ஒரே மூச்சில் காலி செய்து டொக்கென்று வைத்தான்.
அதன் சத்தத்தில் திரும்பியவள்,
"நெல்லிக்காய் ஜூஸ் அவ்ளோ நல்லாயிருந்துச்சா?" எனக் கேட்டாள்.
"அதென்னவோ?" என்று கடுப்பாய் மொழிந்தவன், "எங்கையாவது ரொமான்ஸ் பீலிங் இருக்காடி உனக்கு?" என அவளின் இருபக்க தோளையும் பிடித்து தன் பக்கம் திருப்பி, "நேத்து தான் அதெல்லாம் நடந்துச்சு. அந்த எபெக்ட் கொஞ்சமாவது உன் முகத்தில் தெரியுதா? சின்னதா வெட்கம்... என்னை பார்த்ததும் குட்டியா ஸ்மைல். முகம் பார்க்க தடுமாற்றம். இப்படி எதாவது இருக்கா?" என்றான்.
"ஏன் இருக்கணும்?" பட்டென்று கேட்டிருந்தாள்.
"நிஜமா ஒண்ணுமே தோணலையா லேஷஸ்!"
"என் ருது நீங்க. அப்புறம் எதுக்கு வெட்கப்படணும்? எப்போவாயிருந்தாலும் இது நமக்குள்ள நடக்க வேண்டியது தானே! நீங்க பக்கம் வந்தால் கட்டிக்கத் தோணும்" என சொல்லியபடி அவனை கட்டிக்கொண்டாள்.
"இவ்ளோ நெருக்கமா இருந்தா கிஸ் பண்ணனும் தோணும்..." என்று அவன் கன்னத்தில் முத்தம் வைத்தவள், "வேறேன்னென்னவோ எல்லாம் தோணும்... தோணுது தான். நீங்க என் புருஷன். உங்ககிட்ட இதெல்லாம் இயல்பு தானே! அதுக்காக பார்க்கும் நேரமெல்லாம் வெட்கப்பட்டுட்டே இருக்க முடியுமா?" என்றாள். அவன் விழிகளை ஊடுருவி.
"லவ் யூ டி" என்று அழுத்தமாக அணைத்துக் கொண்டான்.
'உன்னிடம் என் இயல்போடு இருக்கிறேன்' என்று அவள் சொல்வது போதுமே! அவனின் காதல் வென்ற உணர்வு.
"இப்படியே இருக்க ஆசை தான். ஆனா பாருங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் தேஷ்ஷும் ஷிவாவும் வந்திடுவாங்க" என்ற இமையாளை ருது விடவே இல்லை.
"ஸ்டேஷ போகும் ஐடியா டிசி சாருக்கு இல்லையா?"
அப்போதும் அவன் அசைத்தான் இல்லை.
"உங்களுக்குள்ள இப்படியொரு காதல் மன்னனை நான் இமேஜின் கூட பண்ணதில்லை" என்று சிரித்தவளின் இதழ் நோக்கி ருது முகம் தாழ்த்த...
"சார்... அண்ணா சார்" என்ற வெங்கட்டின் குரல் வீட்டு வாயில் தொடர்ந்து அவன் உள்ளே வந்து அழைப்பது கேட்டது.
"இம்சை" என்று முனகியபடி, இமையாளின் உதட்டில் அவசரமாக தன் உதட்டை வைத்து விலகி கூடத்திற்கு வந்தவன், வெங்கட்டை பார்த்து...
"என்னடா?" என்றான்.
"கோபமா இருக்கீங்களா?"
ருது கேட்ட தோரணையில் வெங்கட் இரண்டடி பின் வைத்திருந்தான்.
ருதுவின் பின்னால் சிரிப்பினை மறைத்தபடி வந்த இமையாள்,
"வாங்க" என்றிட, "இப்போ வராதா போறதா தெரியல மேம்" என்றான் வெங்கட், ருதுவை பார்த்து.
"வந்த விஷியத்தை சொல்லுடா?"
"கோர்ட்டுக்கு போகணும். சீக்கிரம் வர சொன்னீங்களே" என்று தடுமாறிய வெங்கட், "நீங்க வந்தால் தான் அந்த கவுன்சிலரை கண்ட்ரோல் பண்ண முடியும்" என்றான்.
"கால் பண்ண வேண்டியது தானேடா, நந்தி..."
"ஹான்..." ருது சொல்லிய நந்தியில் தான் வெங்கட்டிற்கு தவறான நேரத்தில் வந்துவிட்டோம் என்பது புரிந்தது. தோன்றிய அசட்டினை காட்டாது மறைத்தான்.
"கால் பண்ணேன் அண்ணா. நாலு தடவை. நீங்க அட்டெண்ட் பண்ணல" என்றான் குறையாக.
"சரி வெயிட் பண்ணு வரேன்" என்று வெங்கட்டுக்கு இருக்கையை காண்பித்த ருது,
இமையாள் புறம் திரும்பி,
"நைட் வச்சிக்கிறேன் உன்னை" என்று உதடசைத்து மேலேறிச் சென்றான்.
இமையாள் வெங்கட்டிற்கு தேநீர் கொண்டு வந்து கொடுக்க, வாங்கி பருகியவன், "ரெண்டு நாளா பார்க்கும் ருது சார் வேற மேம். நீங்க பிரிஞ்சிருக்கீங்க அண்ணா சொல்லும் போது பீல் பண்ணேன். இப்போ சந்தோஷமா இருக்கு மேம்" என்றான்.
'அடேய்... இவங்கிட்ட ஒரு கதையா?' என கணவனை நினைத்து உள்ளுக்குள் சிரித்த இமையாள், வெங்கட்டை பார்த்து புன்னகைத்தவளாக, "மேம்லாம் வேண்டாம் நேம் சொல்லியே சொல்லுங்க. அவரை அண்ணா தானே சொல்றீங்க?" என்றாள்.
"எப்போவாவது தான்..."
"எப்பவும் கூப்பிடலாம்" என காக்கியில் கிளம்பி வந்திட்டான் ருது.
"வாடா போகலாம்" என ருது அடி வைத்திட...
"டிசி சார் சாப்பிட்டு போகலாம்" என்றாள். கட்டளையாக.
"ம்ப்ச்... அவன் வெயிட் பன்றான் இமயா!"
"ஃபைவ் மினிட்ஸில் ஒன்னும் ஆகாது" என்றவள், "நீங்க வெயிட் பண்ணுவீங்க தானே?" என்றாள். வெங்கட்டிடம்.
வெங்கட் எல்லா பக்கமும் தலையை உருட்டினான்.
"அவனை நீ மிரட்டுற. எப்படி முழிக்கிறான் பாரு" என்று சொல்லிய ருது, மனைவியின் பேச்சினை மீறாது உணவை முடித்துக்கொண்டே கிளம்பினான்.
வாயில் வரை வெங்கட்டுடன் நடந்தவன் திரும்பி வந்து, வெங்கட் பார்ப்பதையும் பொருட்படுத்தாது, தான் செல்வதை பார்த்து நின்ற இமையாளின் கன்னத்தில் முத்தம் வைத்து...
"பை'டி பொண்டாட்டி" என்று, அதிர்ந்து நின்ற வெங்கட்டை இழுத்துக்கொண்டு கிளம்பியிருந்தான்.
____________________________________
அன்று மதியம் போல் இனியன் வீடு திரும்பியிருந்தான்.
வீட்டிற்கு வந்ததும் குளித்து ஆயத்தமானவன் தங்கையை காண புறப்பட்டு விட்டான்.
"சாயங்காலம் போலாமே இனியா? அப்பாவும் வந்திடுவார். மறுவீட்டுக்கு முறையா அழைச்சிட்டு வரலாம்" என்றார் தீபா.
"இன்னைக்கு நீங்க கதை படிக்கலையா?" எனக் கேட்டான்.
"அதென்னன்னு சொல்ல... அந்த ரைட்டரு செத்தவனை வச்சு காமெடி பண்ணுது. பேய் வச்சுலாம் மேஜிக் காட்டுது. சுவாரஸ்யமா இருக்குடா. என்ன இன்னைக்கு எபி இல்லை. அதான் வருத்தம்" என்றார்.
"அதானே பார்த்தேன்" என்ற இனியன், "எனக்கு இமயாவை பார்க்கணும்மா. நானே முறையா மறுவீடு வாங்கன்னு சொல்லிக்கிறேன்" என கிளம்பிவிட்டான்.
ஷிவா கல்லூரி சென்றிருக்க, இமையாள், வீட்டிற்கு முன்னிருந்த மரத்தில் தேஷ் விளையாடுவதற்காக கட்டியிருந்த ஊஞ்சலில் சிறுவனை அமர வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
இனியனை முதலில் கண்ட தேஷ்... தாவி இறங்கியவனாக,
"மாமா" என்று ஓடிட, யாரென்று பார்த்த இமையாள் இனியனை முறைத்தாள்.
"என்னவாம் என் தங்கச்சி என்னை ரொம்ப பாசமா பாக்குறீங்க?" என்று கேட்டபடி, தேஷ்ஷை தூக்கி முத்தம் கொடுத்த இனியன் கேட்டினைத் தாண்டி உள்ளே வந்தான்.
"எப்போ வந்தீங்க?" எனக் கேட்ட இமையாள், உள்ளே அழைத்துச் சென்றாள்.
"வன் ஹவர் ஆகுது. வீட்டுக்கு போயிட்டு உடனே வறேன்" என்றான்.
"தேஷ் அங்கிளுக்கு தண்ணி கொண்டு வாங்க" என்று மகனை அனுப்பியவள்,
"தேஷ் உங்களுக்கு எப்படித் தெரியும்?" எனக் கேட்டாள்.
இனியன் தடுமாறிட...
"சொல்லுங்க இனியாண்ணா. அப்போ ஃபிரண்டுன்னு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ரொம்ப நாளாகுது... ரைட்?" என்றாள்.
"அது வந்துடா இமயா..." என இழுத்த இனியன், "மறைக்கூடாதுன்னு இல்லைடா. தேஷ்க்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடல் வந்தான். நேரில் பார்த்துட்டு அவாய்ட் பண்ண முடியல. நம்ம ருது டா. எப்படி விட சொல்ற? அவனோட பாஸ்ட் தெரிஞ்சு அவனை உனாக்காகன்னு கூட யோசிச்சு விலக்க முடியல" என்றான்.
"புரியுது" என்றவள், "சொல்லியிருக்கலாமே!" என்றாள்.
"நான் ருதுவுடன் சேர்ந்ததை சொன்னால் உன்கிட்ட அவனோட பாஸ்ட் சொல்ல வேண்டியது இருக்கும். அவனா சொல்றது தானே சரியா இருக்கும். அதான் சொல்லலை" என்றான். இனியனின் நிலை அவளால் விளங்கிக்கொள்ள முடிந்தது. அவனும் யாருக்கென்று பார்ப்பான். நிதர்சனத்தின் பக்கம் நின்று கொண்டான்.
"அப்போ கல்யாணம்..."
"நிஜமா ருது இப்படி ஒரு சூழலை பயன்படுதிப்பான் தெரியாதுடா" என்றான்.
"ம்ம்ம்ம்..." என்ற இமையாளிடம், "இன்னும் உனக்கு கோபம் போகலையாடா?" எனக் கேட்டான்.
"கோபமெல்லாம் இல்லை இனியாண்ணா. என்னால் என் ருதுவை புரிஞ்சிக்க முடியுது. அவங்களோட வலி தெரிந்த பிறகு கோபத்தை சுமந்திட்டு இருப்பது வேஸ்ட்" என்றவள், "சின்ன வருத்தமிருக்கு" என்றாள்.
"என்னடாம்மா?" அத்தனை பரிவு இனியனிடம். அவளின் வருத்தத்தால் அவர்களின் வாழ்வு சிக்கலாகிவிடுமோ என்ற சிறு அச்சம்.
"என் மேல் ருதுவுக்கு ஏன் நம்பிக்கையில்லாமல் போச்சு இனியாண்ணா?" அந்த கேள்வியில் இமையாள் மொத்தமாக உடைந்திருந்தாள். கண்ணீர் கன்னம் வழிய, தேஷ்ஷின் வரவில் நொடியில் சீரானாள்.
"மாமா ஜூஸ்" என்று கொடுத்தான்.
"நீங்களே கொண்டு வந்துட்டிங்களா. வெரி குட்" என்ற இனியன், கையில் வாங்கிக்கொண்டான்.
"மாமா டாய்ஸ் வாங்கி வந்திருக்கேன். நீங்க பிடிச்சிருக்கா பாருங்க" என்று இனியன் சிறு பையினை தேஷ்ஷின் கையில் கொடுக்க, அவன் பொம்மைகளை ஆராய்ந்தவாறு ஓரமாக அமர்ந்துவிட்டான்.
தேஷ் பொம்மைகளில் ஆழுந்துவிட்டதை உறுதி செய்துகொண்ட இனியன்,
"அப்போ அவனோட சூழல் அப்படி இமயா? அவன் இப்பவும் நம்புறது உன்னை மட்டும் தான். உன் காதலை மட்டும் தான்" என்றான்.
"தேஷ்ஷை நானா ஏத்துக்கணும் நினைச்சவருக்கு... அவர் உண்மையை சொல்லியிருந்தாலும் அப்போவே ஏத்துயிருப்பேன் ஏன் நம்பிக்கை இல்லாமல் போச்சு. இதை அவங்கக்கிட்ட கேட்கவும் தோணலை. அதிலிருந்து மீளல தெரியும். ஆனால் திரும்ப நான் இதை கேட்டு அவங்களை கஷ்டப்படுத்த விரும்பல. உள்ளவே வச்சிருக்க ஒரே அழுத்தமா இருந்தது. அதான் உங்ககிட்ட சொல்லிட்டேன். நீங்க உடனே உங்க ஃபிரண்ட்கிட்ட சொல்லணும் அவசியமில்லை. இப்போவே இதை மறந்திடுங்க. எனக்கு ருதுவோட காதல் மட்டும் போதும்" என்றாள்.
'என்ன காதல் இது' என இனியனுக்கு மலைப்பாக இருந்தது.
தன்னவனின் வருத்தத்திற்காக தனது வருத்தத்தை மறைத்துக்கொள்கிறாள் என்றால் அவன் மீது அவளுக்கு எத்தனை பெரும் காதல் இருந்திட வேண்டும்.
"நானும் அவளை இப்படி லவ் பண்ணுவேணா இமயா?" தன்னைப்போல் கேட்டிருந்தான்.
"முதலில் பொண்ணை காட்டுங்க" என்றிருந்தாள் இமையா.
சரியாக அந்நேரம் "அண்ணி" என அழைத்துக்கொண்டு உள் வந்த ஷிவா சற்றும் இனியனை எதிர்பார்க்கவில்லை.
"வாங்க டாக்டர்." முகம் ஒளிர சொல்லியிருந்தாள். அவனும் அவளது மகிழ்வை உள்வாங்கியவனாக தலையசைத்தான்.
"டாக்டரா?" இமையாள் ஷிவாவின் விளிப்பை சுட்டினாள்.
"முன்னவே தெரியுமா?", இமையாள்.
"சேம் ஹாஸ்பிடல் அண்ட் காலேஜ்" என்றான் இனியன்.
"ஓகே... ஓகே..." என்ற இமையாள், "எக்ஸாம்ஸ் இன்னையோட ஓவரா ஷிவா?" என்றவளாக எழுந்து கிச்சன் சென்றாள்.
"எல்லாம் முடிஞ்சுது அண்ணி" என்ற ஷிவா, இனியனுடன் பேசும் ஆசையில் அவனது கான்பிரன்ஸ் பற்றி கேள்வி கேட்டவாறு அவன் முன்னே அமர்ந்துவிட்டாள்.
இமையாள் வரும்போது அவளது கையில் பலகாரங்கள் இருந்தன. அடுத்து மூவரும் ஏதேதோ பேசி சிரித்தபடி இருக்க நேரம் விரைந்து ஓடியது.
சொந்த கிராமம் சென்ற வேங்கடமும், அம்பிகாவும் திரும்பி வந்தனர்.
வந்தவர்கள், இன்னும் சொல்லிக்கொள்ளாத இனியன், ஷிவன்யாவின் காதலுக்கு ஆப்பினை ரெடிமேடாகக் கையோடு கொண்டு வந்திருந்தனர்.
ருது எழும்போது இமையாள் பக்கத்தில் இல்லை. கீழே தேஷ் சிரித்து விளையாடும் சத்தம் கேட்டது.
முதுகில் என்னவோ உறுத்த என்னவென்று எழுந்து நின்று படுக்கையை ஆராய்ந்தான்.
இமையாளின் கண்ணாடி வளையல் உடைந்து துண்டாகக் கிடந்தது.
அவனுள் இரவின் இனிமை தேனாய் இனித்தது. உடன் மந்தகாசமாய் இதழோரம் குட்டி புன்னகையும்.
உடைந்த வளையல் துண்டுகளை கையில் எடுத்தவன், படுக்கைக்கு அருகிலிருக்கும் சிறு மேசை இழுவையை திறந்து பத்திரபடுத்தினான்.
'எனக்கே டயர்டா இருக்கு. இவள் எப்படி சீக்கிரம் எழுந்தாள்?' என குறும்பாய் நினைத்தவன் குளியலறை புகுந்து வெளியில் வந்தான்.
இன்று மைதானத்தில் ஓட முடியாது. அந்தளவிற்கு அவனுக்கு நேரமில்லை. மாடிக்குச் சென்றவன், புஷ்ஷப் எடுக்கத் துவங்கினான்.
அப்போது தேஷ்ஷும், ஷிவாவும் ஓடி வரும் சத்தம் கேட்டது.
"குட்மார்னிங் ப்பா..." என்ற தேஷ் ஓடிவந்து ருதுவின் முதுகில் படுத்துக்கொண்டான்.
"குட்மார்னிங் டார்லிங்" என்ற ஷிவா, "இன்னைக்கு கிரவுண்டில் கொசு விரட்டலையா?" என கிண்டல் செய்தாள்.
"டைம் இல்லை" என்றவன், "தேஷ்ஷை பின்னால் கையிட்டு வளைத்து சுழன்றவனாக மல்லாக்க திரும்பி படுத்தான்.
"என்ன காலையிலே ரெண்டு பேரும் மாடிக்கு?" என்றவன், தேஷ்ஷின் கன்னத்தைப் பிடித்தி இழுத்துக்கொண்டிருந்தான்.
"செடிங்களுக்கு தண்ணி விட..." என்ற ஷிவா மாடியின் ஒரு பக்கம் முழுக்க செடிகள் வைப்பதற்கெனவே மண் நிரப்பி நீண்டு கட்டப்பட்டிருந்த மற்றும் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த பல வகை பூ, கீரை மற்றும் மருத்துவ செடிகளிடம் நகர்ந்தாள்.
"அம்மா எனக்கு நட்ஸ் ஜூஸ் கொடுத்தாங்கப்பா. செம டேஸ்ட்" என்ற தேஷ், "அத்தைக்கு காபி நோ சொல்லிட்டாங்க" என்றான்.
"ஏனாம்?"
"ஏபிசி ஜூஸ் கொடுத்தாங்க டார்லிங்." அவள் முகம் சுருக்கி சொல்லியதில் ருதுவிடம் சத்தமான சிரிப்பு.
"போங்க உங்களுக்கும் இருக்கு" என்றிட,
"அத்தைக்கு ஹெல்ப் பண்ணுங்க. அப்பா ஸ்டேஷன் போகணும்" என்று தேஷ்ஷின் கன்னத்தில் முத்தம் வைத்து எழுந்த ருது, நேராக கீழே வந்து சமயலறைக்குள் நுழைந்தான்.
சுவற்றில் சாய்ந்து நின்றவன், தன்னவளின் பின் உருவத்தை வஞ்சனை இல்லாது ரசித்தான்.
முந்தானை சொருகிய இடை பளிங்காய் மின்னிட, பொங்கும் உணர்வை பின்னந்தலை வருடி சமன் செய்தான்.
"குளிக்காம கிச்சன்க்குள்ள வந்தாச்சு" என்று திரும்பிய இமையாள், பின்பக்கம் மேடையில் சாய்ந்தவளாக, மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, என்ன என்பதைப்போல் ஒற்றை புருவம் ஏற்றி இறக்கினாள்.
"சுண்டி இழுக்கறடி பொண்டாட்டி" என்றவன், அவள் உணரும் புன்பு கையை பிடித்து இழுத்தவனாக தனக்குள் சுருட்டியிருந்தான்.
"ம்ப்ச்... விடுங்க. என்ன ருது இது" என்று இமையாள் சிணுங்கிட,
"எழுந்ததும் உன்னைத் தேடினேன்" என்றான்.
"எதுக்காம்?"
"இதுக்குத்தான்" என்றவன் நொடியில் அவளைத் திருப்பி இதழோடு இதழ் பொருத்தியிருந்தான்.
அவனது கரம் அவளின் கன்னத்திலிருந்து அவளது வெற்றிடைக்கு இறங்கியிருக்க, பெண்ணவள் விழித்துக்கொண்டாள்.
விடுக்க முடியாது அவனிலிருந்து தன்னிதழை விடுத்துக் கொண்டவள், மூச்சு வாங்கியவளாக, "கிச்சனில் வைத்து என்ன பண்றீங்க?" என அவனின் தோளில் அடித்தாள்.
"இதுதான் கிச்சன் ரொமான்ஸ். டீச்சருக்கு தெரியாதா?" எனக் கேட்டவன், "முழுசா சொல்லிக்கொடுக்க விடாமல் பாதியில் விட்டால் எப்படி கத்துக்கிறது. மக்கு டீச்சர்" என்று அவன் குறும்பாய் சீண்டினான்.
"உங்க சீண்டலுக்கு இப்போ என்னால் பதில் சொல்ல முடியாது" என்றவள், ஒரு குவளையை எடுத்து அவனது கையில் திணித்து, "குடிச்சிட்டு கிளம்பி வாங்க. எனக்கு வேலையிருக்கு" என அடிப்பின் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
"எங்கையாவது புதுசா கல்யாணம் ஆன பொண்ணு மாதிரியா இருக்க" என அலுத்தவன், கையிலிருந்த குவளையில் இருப்பது என்னவென்று தெரியாமலே ஒரே மூச்சில் காலி செய்து டொக்கென்று வைத்தான்.
அதன் சத்தத்தில் திரும்பியவள்,
"நெல்லிக்காய் ஜூஸ் அவ்ளோ நல்லாயிருந்துச்சா?" எனக் கேட்டாள்.
"அதென்னவோ?" என்று கடுப்பாய் மொழிந்தவன், "எங்கையாவது ரொமான்ஸ் பீலிங் இருக்காடி உனக்கு?" என அவளின் இருபக்க தோளையும் பிடித்து தன் பக்கம் திருப்பி, "நேத்து தான் அதெல்லாம் நடந்துச்சு. அந்த எபெக்ட் கொஞ்சமாவது உன் முகத்தில் தெரியுதா? சின்னதா வெட்கம்... என்னை பார்த்ததும் குட்டியா ஸ்மைல். முகம் பார்க்க தடுமாற்றம். இப்படி எதாவது இருக்கா?" என்றான்.
"ஏன் இருக்கணும்?" பட்டென்று கேட்டிருந்தாள்.
"நிஜமா ஒண்ணுமே தோணலையா லேஷஸ்!"
"என் ருது நீங்க. அப்புறம் எதுக்கு வெட்கப்படணும்? எப்போவாயிருந்தாலும் இது நமக்குள்ள நடக்க வேண்டியது தானே! நீங்க பக்கம் வந்தால் கட்டிக்கத் தோணும்" என சொல்லியபடி அவனை கட்டிக்கொண்டாள்.
"இவ்ளோ நெருக்கமா இருந்தா கிஸ் பண்ணனும் தோணும்..." என்று அவன் கன்னத்தில் முத்தம் வைத்தவள், "வேறேன்னென்னவோ எல்லாம் தோணும்... தோணுது தான். நீங்க என் புருஷன். உங்ககிட்ட இதெல்லாம் இயல்பு தானே! அதுக்காக பார்க்கும் நேரமெல்லாம் வெட்கப்பட்டுட்டே இருக்க முடியுமா?" என்றாள். அவன் விழிகளை ஊடுருவி.
"லவ் யூ டி" என்று அழுத்தமாக அணைத்துக் கொண்டான்.
'உன்னிடம் என் இயல்போடு இருக்கிறேன்' என்று அவள் சொல்வது போதுமே! அவனின் காதல் வென்ற உணர்வு.
"இப்படியே இருக்க ஆசை தான். ஆனா பாருங்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் தேஷ்ஷும் ஷிவாவும் வந்திடுவாங்க" என்ற இமையாளை ருது விடவே இல்லை.
"ஸ்டேஷ போகும் ஐடியா டிசி சாருக்கு இல்லையா?"
அப்போதும் அவன் அசைத்தான் இல்லை.
"உங்களுக்குள்ள இப்படியொரு காதல் மன்னனை நான் இமேஜின் கூட பண்ணதில்லை" என்று சிரித்தவளின் இதழ் நோக்கி ருது முகம் தாழ்த்த...
"சார்... அண்ணா சார்" என்ற வெங்கட்டின் குரல் வீட்டு வாயில் தொடர்ந்து அவன் உள்ளே வந்து அழைப்பது கேட்டது.
"இம்சை" என்று முனகியபடி, இமையாளின் உதட்டில் அவசரமாக தன் உதட்டை வைத்து விலகி கூடத்திற்கு வந்தவன், வெங்கட்டை பார்த்து...
"என்னடா?" என்றான்.
"கோபமா இருக்கீங்களா?"
ருது கேட்ட தோரணையில் வெங்கட் இரண்டடி பின் வைத்திருந்தான்.
ருதுவின் பின்னால் சிரிப்பினை மறைத்தபடி வந்த இமையாள்,
"வாங்க" என்றிட, "இப்போ வராதா போறதா தெரியல மேம்" என்றான் வெங்கட், ருதுவை பார்த்து.
"வந்த விஷியத்தை சொல்லுடா?"
"கோர்ட்டுக்கு போகணும். சீக்கிரம் வர சொன்னீங்களே" என்று தடுமாறிய வெங்கட், "நீங்க வந்தால் தான் அந்த கவுன்சிலரை கண்ட்ரோல் பண்ண முடியும்" என்றான்.
"கால் பண்ண வேண்டியது தானேடா, நந்தி..."
"ஹான்..." ருது சொல்லிய நந்தியில் தான் வெங்கட்டிற்கு தவறான நேரத்தில் வந்துவிட்டோம் என்பது புரிந்தது. தோன்றிய அசட்டினை காட்டாது மறைத்தான்.
"கால் பண்ணேன் அண்ணா. நாலு தடவை. நீங்க அட்டெண்ட் பண்ணல" என்றான் குறையாக.
"சரி வெயிட் பண்ணு வரேன்" என்று வெங்கட்டுக்கு இருக்கையை காண்பித்த ருது,
இமையாள் புறம் திரும்பி,
"நைட் வச்சிக்கிறேன் உன்னை" என்று உதடசைத்து மேலேறிச் சென்றான்.
இமையாள் வெங்கட்டிற்கு தேநீர் கொண்டு வந்து கொடுக்க, வாங்கி பருகியவன், "ரெண்டு நாளா பார்க்கும் ருது சார் வேற மேம். நீங்க பிரிஞ்சிருக்கீங்க அண்ணா சொல்லும் போது பீல் பண்ணேன். இப்போ சந்தோஷமா இருக்கு மேம்" என்றான்.
'அடேய்... இவங்கிட்ட ஒரு கதையா?' என கணவனை நினைத்து உள்ளுக்குள் சிரித்த இமையாள், வெங்கட்டை பார்த்து புன்னகைத்தவளாக, "மேம்லாம் வேண்டாம் நேம் சொல்லியே சொல்லுங்க. அவரை அண்ணா தானே சொல்றீங்க?" என்றாள்.
"எப்போவாவது தான்..."
"எப்பவும் கூப்பிடலாம்" என காக்கியில் கிளம்பி வந்திட்டான் ருது.
"வாடா போகலாம்" என ருது அடி வைத்திட...
"டிசி சார் சாப்பிட்டு போகலாம்" என்றாள். கட்டளையாக.
"ம்ப்ச்... அவன் வெயிட் பன்றான் இமயா!"
"ஃபைவ் மினிட்ஸில் ஒன்னும் ஆகாது" என்றவள், "நீங்க வெயிட் பண்ணுவீங்க தானே?" என்றாள். வெங்கட்டிடம்.
வெங்கட் எல்லா பக்கமும் தலையை உருட்டினான்.
"அவனை நீ மிரட்டுற. எப்படி முழிக்கிறான் பாரு" என்று சொல்லிய ருது, மனைவியின் பேச்சினை மீறாது உணவை முடித்துக்கொண்டே கிளம்பினான்.
வாயில் வரை வெங்கட்டுடன் நடந்தவன் திரும்பி வந்து, வெங்கட் பார்ப்பதையும் பொருட்படுத்தாது, தான் செல்வதை பார்த்து நின்ற இமையாளின் கன்னத்தில் முத்தம் வைத்து...
"பை'டி பொண்டாட்டி" என்று, அதிர்ந்து நின்ற வெங்கட்டை இழுத்துக்கொண்டு கிளம்பியிருந்தான்.
____________________________________
அன்று மதியம் போல் இனியன் வீடு திரும்பியிருந்தான்.
வீட்டிற்கு வந்ததும் குளித்து ஆயத்தமானவன் தங்கையை காண புறப்பட்டு விட்டான்.
"சாயங்காலம் போலாமே இனியா? அப்பாவும் வந்திடுவார். மறுவீட்டுக்கு முறையா அழைச்சிட்டு வரலாம்" என்றார் தீபா.
"இன்னைக்கு நீங்க கதை படிக்கலையா?" எனக் கேட்டான்.
"அதென்னன்னு சொல்ல... அந்த ரைட்டரு செத்தவனை வச்சு காமெடி பண்ணுது. பேய் வச்சுலாம் மேஜிக் காட்டுது. சுவாரஸ்யமா இருக்குடா. என்ன இன்னைக்கு எபி இல்லை. அதான் வருத்தம்" என்றார்.
"அதானே பார்த்தேன்" என்ற இனியன், "எனக்கு இமயாவை பார்க்கணும்மா. நானே முறையா மறுவீடு வாங்கன்னு சொல்லிக்கிறேன்" என கிளம்பிவிட்டான்.
ஷிவா கல்லூரி சென்றிருக்க, இமையாள், வீட்டிற்கு முன்னிருந்த மரத்தில் தேஷ் விளையாடுவதற்காக கட்டியிருந்த ஊஞ்சலில் சிறுவனை அமர வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
இனியனை முதலில் கண்ட தேஷ்... தாவி இறங்கியவனாக,
"மாமா" என்று ஓடிட, யாரென்று பார்த்த இமையாள் இனியனை முறைத்தாள்.
"என்னவாம் என் தங்கச்சி என்னை ரொம்ப பாசமா பாக்குறீங்க?" என்று கேட்டபடி, தேஷ்ஷை தூக்கி முத்தம் கொடுத்த இனியன் கேட்டினைத் தாண்டி உள்ளே வந்தான்.
"எப்போ வந்தீங்க?" எனக் கேட்ட இமையாள், உள்ளே அழைத்துச் சென்றாள்.
"வன் ஹவர் ஆகுது. வீட்டுக்கு போயிட்டு உடனே வறேன்" என்றான்.
"தேஷ் அங்கிளுக்கு தண்ணி கொண்டு வாங்க" என்று மகனை அனுப்பியவள்,
"தேஷ் உங்களுக்கு எப்படித் தெரியும்?" எனக் கேட்டாள்.
இனியன் தடுமாறிட...
"சொல்லுங்க இனியாண்ணா. அப்போ ஃபிரண்டுன்னு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ரொம்ப நாளாகுது... ரைட்?" என்றாள்.
"அது வந்துடா இமயா..." என இழுத்த இனியன், "மறைக்கூடாதுன்னு இல்லைடா. தேஷ்க்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடல் வந்தான். நேரில் பார்த்துட்டு அவாய்ட் பண்ண முடியல. நம்ம ருது டா. எப்படி விட சொல்ற? அவனோட பாஸ்ட் தெரிஞ்சு அவனை உனாக்காகன்னு கூட யோசிச்சு விலக்க முடியல" என்றான்.
"புரியுது" என்றவள், "சொல்லியிருக்கலாமே!" என்றாள்.
"நான் ருதுவுடன் சேர்ந்ததை சொன்னால் உன்கிட்ட அவனோட பாஸ்ட் சொல்ல வேண்டியது இருக்கும். அவனா சொல்றது தானே சரியா இருக்கும். அதான் சொல்லலை" என்றான். இனியனின் நிலை அவளால் விளங்கிக்கொள்ள முடிந்தது. அவனும் யாருக்கென்று பார்ப்பான். நிதர்சனத்தின் பக்கம் நின்று கொண்டான்.
"அப்போ கல்யாணம்..."
"நிஜமா ருது இப்படி ஒரு சூழலை பயன்படுதிப்பான் தெரியாதுடா" என்றான்.
"ம்ம்ம்ம்..." என்ற இமையாளிடம், "இன்னும் உனக்கு கோபம் போகலையாடா?" எனக் கேட்டான்.
"கோபமெல்லாம் இல்லை இனியாண்ணா. என்னால் என் ருதுவை புரிஞ்சிக்க முடியுது. அவங்களோட வலி தெரிந்த பிறகு கோபத்தை சுமந்திட்டு இருப்பது வேஸ்ட்" என்றவள், "சின்ன வருத்தமிருக்கு" என்றாள்.
"என்னடாம்மா?" அத்தனை பரிவு இனியனிடம். அவளின் வருத்தத்தால் அவர்களின் வாழ்வு சிக்கலாகிவிடுமோ என்ற சிறு அச்சம்.
"என் மேல் ருதுவுக்கு ஏன் நம்பிக்கையில்லாமல் போச்சு இனியாண்ணா?" அந்த கேள்வியில் இமையாள் மொத்தமாக உடைந்திருந்தாள். கண்ணீர் கன்னம் வழிய, தேஷ்ஷின் வரவில் நொடியில் சீரானாள்.
"மாமா ஜூஸ்" என்று கொடுத்தான்.
"நீங்களே கொண்டு வந்துட்டிங்களா. வெரி குட்" என்ற இனியன், கையில் வாங்கிக்கொண்டான்.
"மாமா டாய்ஸ் வாங்கி வந்திருக்கேன். நீங்க பிடிச்சிருக்கா பாருங்க" என்று இனியன் சிறு பையினை தேஷ்ஷின் கையில் கொடுக்க, அவன் பொம்மைகளை ஆராய்ந்தவாறு ஓரமாக அமர்ந்துவிட்டான்.
தேஷ் பொம்மைகளில் ஆழுந்துவிட்டதை உறுதி செய்துகொண்ட இனியன்,
"அப்போ அவனோட சூழல் அப்படி இமயா? அவன் இப்பவும் நம்புறது உன்னை மட்டும் தான். உன் காதலை மட்டும் தான்" என்றான்.
"தேஷ்ஷை நானா ஏத்துக்கணும் நினைச்சவருக்கு... அவர் உண்மையை சொல்லியிருந்தாலும் அப்போவே ஏத்துயிருப்பேன் ஏன் நம்பிக்கை இல்லாமல் போச்சு. இதை அவங்கக்கிட்ட கேட்கவும் தோணலை. அதிலிருந்து மீளல தெரியும். ஆனால் திரும்ப நான் இதை கேட்டு அவங்களை கஷ்டப்படுத்த விரும்பல. உள்ளவே வச்சிருக்க ஒரே அழுத்தமா இருந்தது. அதான் உங்ககிட்ட சொல்லிட்டேன். நீங்க உடனே உங்க ஃபிரண்ட்கிட்ட சொல்லணும் அவசியமில்லை. இப்போவே இதை மறந்திடுங்க. எனக்கு ருதுவோட காதல் மட்டும் போதும்" என்றாள்.
'என்ன காதல் இது' என இனியனுக்கு மலைப்பாக இருந்தது.
தன்னவனின் வருத்தத்திற்காக தனது வருத்தத்தை மறைத்துக்கொள்கிறாள் என்றால் அவன் மீது அவளுக்கு எத்தனை பெரும் காதல் இருந்திட வேண்டும்.
"நானும் அவளை இப்படி லவ் பண்ணுவேணா இமயா?" தன்னைப்போல் கேட்டிருந்தான்.
"முதலில் பொண்ணை காட்டுங்க" என்றிருந்தாள் இமையா.
சரியாக அந்நேரம் "அண்ணி" என அழைத்துக்கொண்டு உள் வந்த ஷிவா சற்றும் இனியனை எதிர்பார்க்கவில்லை.
"வாங்க டாக்டர்." முகம் ஒளிர சொல்லியிருந்தாள். அவனும் அவளது மகிழ்வை உள்வாங்கியவனாக தலையசைத்தான்.
"டாக்டரா?" இமையாள் ஷிவாவின் விளிப்பை சுட்டினாள்.
"முன்னவே தெரியுமா?", இமையாள்.
"சேம் ஹாஸ்பிடல் அண்ட் காலேஜ்" என்றான் இனியன்.
"ஓகே... ஓகே..." என்ற இமையாள், "எக்ஸாம்ஸ் இன்னையோட ஓவரா ஷிவா?" என்றவளாக எழுந்து கிச்சன் சென்றாள்.
"எல்லாம் முடிஞ்சுது அண்ணி" என்ற ஷிவா, இனியனுடன் பேசும் ஆசையில் அவனது கான்பிரன்ஸ் பற்றி கேள்வி கேட்டவாறு அவன் முன்னே அமர்ந்துவிட்டாள்.
இமையாள் வரும்போது அவளது கையில் பலகாரங்கள் இருந்தன. அடுத்து மூவரும் ஏதேதோ பேசி சிரித்தபடி இருக்க நேரம் விரைந்து ஓடியது.
சொந்த கிராமம் சென்ற வேங்கடமும், அம்பிகாவும் திரும்பி வந்தனர்.
வந்தவர்கள், இன்னும் சொல்லிக்கொள்ளாத இனியன், ஷிவன்யாவின் காதலுக்கு ஆப்பினை ரெடிமேடாகக் கையோடு கொண்டு வந்திருந்தனர்.