தூரமே தூரமாய் 9
இலையோடும் மலரோடும் உன் விரல் ரேகை... வழியெல்லாம் வழியெல்லாம் உன் குழல் வாசம்.
நீரோடை முழுதும் உன் வேர்வைக் கயல்கள்... முட்புதரில் இடையில் உன் பார்வை முயல்கள்.
இத்தேடல் முடிந்தால் நீ அங்கே இருந்தால்... என் நெஞ்சம் உடைந்தாலும் உடையும்!
- மதன் கார்க்கி.
_____________________
மியூசிக் பிளேயர் ஒலித்துக்கொண்டிருக்க ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிக் கொண்டிருந்தான் ருத்விக்.
சட்டென்று கேட்ட பாடலின் இசையும், வரிகளும் ஏதோ ஓர் வலி நிறைந்த அர்த்தத்தை மனதில் கூர் தீட்டிட, ருதுவின் விரல்கள் உறைந்தது.
அவ்வரிகளில் அவனுக்கு முன்பு அவனது இதயம் ஒன்றிப்போனது.
ஏதோ சுமக்க முடியா நினைவொன்று உள்ளுக்குள் ஆட்டுவித்தது.
அவனை அசைத்து பார்த்திட முயன்ற எண்ணத்தை முயன்று ஒதுக்கியவன், வேகமாக பாடலினை அணைத்திருந்தான்.
அவ்வளவு நேரமிருந்த இலகுத்தன்மை ருதுவிடம் இல்லை. இரும்பென விறைத்திருந்தான்.
வண்டியும் காந்தா பேட்டைக்குள் நுழைந்தது. நுழைவு வாயில் வளைவினை ருது விழியுயர்த்தி பார்த்திட, ஜீப்பின் மேல் முன் பகுதியில் வந்து விழுந்தது ரத்தம் தோய்ந்த உடல்.
சட்டென்று கண்முன் உயிரற்ற சடலம், அதுவும் சிவப்பு நிறத்தில் வந்துவிழ, ருதுவிடம் தன்னைப்போல் சிறு அதிர்வு எழுந்து அடங்கியது.
வெங்கட் "அய்யோ" என்று அலறிவிட்டான்.
"இங்க வரும்போதே தெரியும் சார். உங்களுக்கு வரவேற்பு இப்படித்தான் இருக்கும்ன்னு" என்ற கிருஷ்ணன் இதிலெல்லாம் எனக்கு அனுபவம் நிறைய எனும் விதமாக, வண்டியை இயக்கினார்.
வண்டியின் மீதிருக்கும் உடலிலிருந்து ருதுவின் கருவிழிகள் அசையவில்லை.
"உன் கண் முன்பே ஒரு கொலை செய்கிறேன். உன்னால் என்ன செய்துவிட முடியும்" என எதிராளி தனது காக்கிக்கு விடுக்கும் சவாலாகத்தான் ருதுவிற்கு தெரிந்தது.
"மொத்தம் அறுநூறு குடும்பம் இருக்கு சார். சிட்டியிலே பெரிய பேட்டை இதுதான். ஆரம்பத்தில் ஏதோ தலைவர் பேருதான் இந்த பேட்டைக்கு இருந்தது. கைலாஷ் இருந்த வரை அவன் பெயர் சொல்லி சொல்ல ஆரம்பிச்சாங்க. இப்போ முழுக்க காந்தா கண்ட்ரோல் அப்படிங்கிறதால... காந்தா பேட்டை ஆகிப்போச்சு. இப்போ இந்த பேட்டையோட உண்மையான பெயர் என்னன்னு கேட்டால் அந்த கைலாஷ்க்கே நினைவிருக்காது" என்று விவரம் சொல்லியபடி, பேட்டையின் உள்ளே இறுதியில் பெரிய மைதானத்தின் நடுவில் இருந்த வீட்டிற்கு முன்பு வண்டியை நிறுத்தியிருந்தார் கிருஷ்ணன்.
வரும் வழியில் யாவற்றையும் கூர்ந்து நோக்கியபடி தான் வந்திருந்தான் ருது. பேட்டை எனும் சொல்லுக்கே எதிராக இருந்தது அவ்விடம். சிறு குடிசை கூட அங்கில்லை. நகர்த்தில் பெரும் புள்ளிகள் வசிக்கும் பகுதிக்கு மேலாக அனைத்து வசதிகளுடன் காணப்பட்டது.
"இங்கிருக்க பசங்க எல்லாம், பெரிய பெரிய காலேஜில் படிக்கிறாங்க சார். எல்லாம் கைலாஷ் செலவு தான். செய்யுறது காந்தா. எந்தவொரு வீட்டிலும் விசேஷம் அப்படின்னா, கைலாஷ் பெயர் சொல்லி சீர் இருக்கும். இப்படி பணத் தேவைகள் செய்தே அடிமையாக்கி வச்சிருக்கான்" என்றார் கிருஷ்ணன்.
"ரொம்பத்தான் தெரிஞ்சு வச்சிருக்கீங்க!"
"தெரிஞ்சு வச்சு என்ன சார் பிரயோஜனம். தப்பு பண்றானுங்கன்னு தெரிஞ்சும் ஒருத்தனையும் அரேஸ்ட் பண்ண முடியலையே!" என்றார். விரக்தியாக.
"பண்ணிடலாம். கவலையை விடுங்க" என்ற ருது அந்த மைதானத்தை சுற்றி பார்வையை சுழற்ற, ஆங்காங்கே முறுக்கேறிய தேகத்தோடு ஆட்கள் நின்று உடற்பயிற்சி, கால்பந்து, ஓட்டம் என்று பயிற்சி செய்து கொண்டிருந்தனர். துப்பாக்கி சுடுதலும் இதில் அடக்கம்.
"ம்ம்ம்... நல்லாவே ட்ரெயின் பன்றாங்க." ருது மெச்சுதலாகக் கூறினான்.
"இது நல்ல விஷயத்துக்காக இருந்தால் உங்க மெச்சுதல் சரி சார். இங்கிருக்க எவனும் நல்லதுக்குன்னு சின்ன துரும்பைக்கூட அசைக்க மாட்டானுங்க" என்றான் வெங்கட்.
வண்டி அங்கு காந்தாவின் வீட்டின் முன் நின்றது முதல் மைதானத்தில் நின்றிருப்பவர்களின் பார்வை முழுவதும் அதன் மீதுதான்.
"வெட்ட வரை மாதிரியே பாக்குறானுங்க." வெங்கட் தொண்டைக்குழியை ஏற்றி இறக்கினான்.
அப்போது இடியென பெரும் சிரிப்பு.
யாரென்று பார்க்க...
கருப்பு சட்டை, பச்சை வர்ண வேட்டி அணிந்து தன்னிரு கைகளையும் அகல விரித்தபடி ஜீப்பினை நோக்கி,
"வாங்க... வாங்க..." என்ற கூவலோடு வந்தான் காந்தா.
நாற்பது வயது இருக்கும். ஆனாலும் முன் முப்பது தோற்றம்.
"எங்க பேட்டைக்கு வந்துகினதுக்கு சந்தோஷம். வரவேற்பு பார்த்தீங்கல? எம்புட்டு மாஸ் காட்டிக்கினோம்" என்று ருது அமர்ந்திருந்த பக்கம் வந்து மீசையை முறுக்கியபடி வினவினான் காந்தா.
ருது வாய் திறக்கவில்லை. காந்தாவை அவதானித்தபடி இருந்தான். ருது அணிந்திருந்த கூலர்ஸை தாண்டி காந்தாவால் ருதுவின் எண்ணவோட்டத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.
"என்ன டிசி சார். இவனை கொன்னதுக்கு கைது செய்யப் போறீங்களா?" காந்தா சிரிப்போடு வினவ...
"கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்களா" என்றான் ருது.
காந்தா அசராது நின்றிருக்க...
ருது வேகமாக கதவினை திறந்திட, நொடியில் சுதாரித்து பின்வாங்கியிருந்தான் காந்தா.
"ஹேய்..." அடியாட்கள் ஐந்தாறு பேர் ருதுவை தாக்கும் நோக்கில் நெருங்கிவிட்டனர். மைதானத்தில் நின்றபடி இங்கவே பார்த்திருந்தவர்களும் இவர்களை நோக்கி ஓடிவர, கை காட்டி நிறுத்தியிருந்தான் காந்தா.
"என் பேச்சைக் கேட்கலன்னா இப்படித்தான் ஏடாகூடமா ஏதும் நடக்கும்" என்ற ருது குதித்து இறங்கி, கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவாறு, "ஏரியாவை பக்காவா மெயின்டெயின் பண்றீங்க. அரசாங்கம் செய்ய வேண்டியதையெல்லாம் நீங்க மக்களுக்கு செய்றீங்கன்னு கேள்விப்பட்டேன். அந்த நல்லவரை நேரில் பார்க்கணும் வந்தால்... சும்மா அதிர விட்டுடீங்க" என்று ஜீப்பின் மீது கிடந்த உடலை பார்வையால் சுட்டினான்.
காந்தா தன் ஆட்களில் ஒருவனுக்கு கண்காட்டிட, நொடியில் உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
"இந்த கொலைக்கான ஆதாரம் ஏதுமில்லைங்கிறதால தப்பீச்ச" என்று காந்தாவை நெருங்கி ஒருபக்க கூலர்ஸை இறக்கி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் ருது சொல்லிட...
"ஏய்" என்று சீறினான் காந்தா.
"ஷ்ஷ்ஷ்ஷ்..." என்று வாயில் ஒற்றை விரல் வைத்து தலையை இருபக்கமும் அசைத்தவாறு விலகி நின்ற ருது...
"உனக்கு மேல ஒருத்தன் இருக்கானாமே! சொல்லி வை. மொத்தமா அழிக்கிறேன்" என்றான். காந்தாவுக்கு பின்னால் அரணாக நின்றவர்களை பார்வையால் உரசியபடி.
"என்ன அண்ணாத்தே பார்த்துக்கினு நிக்குற. அவென் எம்புட்டு தவ்லத்தா பேசிக்கினு நிக்கிறான்" என்று ஒருவன் காந்தாவை தாண்டி எகிறான்.
"கொடுக்குலாம் ரொம்ப துள்ளுதே கிருஷ்ணா அண்ணா. என்ன பண்ணலாம்?" என்று தாடையை நீவிய ருது... "தூக்கிடலாமா?" என துப்பாக்கியை எடுத்து அவனுக்கு நேராக நீட்டி, காந்தாவின் மீது குறி வைத்தான்.
"சார்..." வெங்கட் அதிர்ந்து ருதுவின் கையினை பிடிக்க... காந்தா ருதுவை முறைத்து பார்த்தான்.
"என்னா லந்து கொடுத்துக்கினு இருக்கான். சும்மா பார்த்துக்கினு இருக்கியேண்ணே. ம் ன்னு சொல்லு போட்டுடலாம்" என்று ஒருவன் மீசை முறுக்கினான்.
"நம்மக்கின வந்துக்கின போலீஸ் யார்கிட்டயாச்சும் கேட்டு தெரிஞ்சிக்கினு வந்திருக்கணும் தம்பி நீயி... உன் உதார் வுடுற வேலையெல்லாம் எங்கனான்ட வச்சிகிடாத. அப்படி வச்சிக்கின மூஞ்சு பேந்துரும்" என்று மற்றொருவன் தொடையை தட்டினான்.
"ஷ்..." என்று சலிப்பான பாவனையை காட்டிய ருது...
"இவனுங்க என்னண்ணா இன்னும் எயிட்டிஸ் வில்லன் மாதிரி டயலாக்கா பேசுறானுங்க" என்றான்.
"ச்சூ... கம்மின்னு கெடங்கடா" என்று தனது ஆட்களை அடக்கிய காந்தா...
"வேணாம் தம்பி. உசுரோட இருக்கணும்ன்னா எங்களை சீண்டிக்காம இருந்துக்க. அது முடியாதுன்னா, எந்த வூருக்கு வேணும் ட்ரான்ஸ்பரு... சொல்லிக்கினு போயிக்கிட்டே இரு" என்றான்.
"நைஸ் ஜோக் மேன்" என்று ஜீப்பின் பேனெட் மீது தாவி அமர்ந்து, தொடையில் கை ஊன்றி கூலர்ஸை கழட்டிய ருது...
"மொத்தமா நீ நிறுத்திக்கோ. முதலில் ட்ரக்ஸ் ஸப்ளை. ஸ்டூடண்ஸ் கிட்ட விற்பதை நிறுத்து" என்றான்.
"நீ என்னை ரொம்ப சீண்டுற?"
"நீ அல்ரெடி என்னை சீண்டிட்ட" என்று குதித்து இறங்கிய ருது... "நீ பில்டப் கொடுத்த அளவுக்கு இங்க ஒண்ணுமில்லை வெங்கட்" என்றான்.
அவ்வளவு தான் காந்தா உட்பட மொத்த பேரின் பார்வையும் வெங்கட்டை வெட்டவா குத்தவா எனும் ரீதியில் நிலைத்தது.
வெங்கட் மூச்சுவிடவே பயந்து நின்றான்.
"டைம் இஸ் ரன்னிங்" என்றவனாக வண்டியில் ஏறி அமர்ந்தான் ருது. அவனைத் தொடர்ந்து கிருஷ்ணன் ஓட்டுநர் இருக்கையில் ஏறிட, வெங்கட் காந்தாவை பார்த்து திருதிருவென விழித்தான்.
"சொல்லி வை சப்-இன்சு. துள்ளுறதுக்கு உடம்புல உசுரு இருக்காது" என்ற காந்தாவை கண்டு அரண்டவனாக வெங்கட் வேகமாக வண்டியிலேறினான்.
கிருஷண்ன் அமைதியாக வண்டியை திருப்பி செலுத்த, ருதுவின் விழிகள் கூர்மையாக காந்தாவின் மீது படிந்து விலகியது.
வெங்கட் உண்மையில் பயந்திருந்தான். கைலாஷ் மற்றும் காந்தாவின் வரலாறு அப்படி.
"என்ன வெங்கட் அமைதியா வறீங்க?"
ருது பேசுவதற்காகவே காத்திருந்தவன் போல் வெங்கட் புலம்பித் தள்ளினான்.
"நான் உங்களுக்கு என்ன சார் துரோகம் பண்ணேன்?
"சும்மா கிடந்த ஓணானை புடிச்சு பேண்டுக்குள்ள விட்ட மாதிரி, சும்மா இருந்தவனை சுரண்டிட்டு வந்திருக்கீங்க...
"பத்தாததுக்கு என்னையும் கோர்த்து விட்டுட்டிங்க. எனக்கு கல்யாணமாகிருச்சு சார். மனைவி கர்ப்பமா இருக்காள்" என்றான்.
"சோ, வாட்?" என்றான் ருது. சற்றும் அலட்டிக்கொள்ளாது.
"நம்மை பணிய வைக்க இவனுங்க என்ன வேணாலும் செய்வானுங்க சார். நேரடியா வந்து சீண்டியிருக்கீங்க. கவனமா இருங்க" என்று வெங்கட் பேச்சினை முடித்துக்கொண்டான்.
எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும் ருது அவனுக்குத் தோன்றுவதைத்தான் செய்வான் என்பது முந்தைய நிகழ்விலே தெரிந்துவிட, இதற்கு மேல் ருதுவிடம் எடுத்து சொல்வது வீண் என அமைதியாகிப்போனான் வெங்கட்.
ருதுவிற்கு காந்தாவை சீண்ட வேண்டுமென்ற எண்ணமில்லை. அவனுக்கு கைலாஷை நேரில் பார்த்திட வேண்டும். அது அத்தனை எளிதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களே கைலாஷினை சந்திப்பதற்கு காத்திருக்கும் நிலையில், எங்கு தட்டினால் வெளிச்சம் வரும் என்பதை அறிந்து காந்தாவை வார்த்தையால் தட்டிவிட்டு வந்திருக்கிறான்.
இன்னும் சற்று நேரத்தில் கைலாஷ் ருதுவை தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரிலேயே சந்திக்கவும் செய்யலாம். ருது காத்திருக்கத் தொடங்கினான்.
______________________________________
ருதுவை நேரில் பார்க்க நேரிடுமென்று இனியனுக்குத் தெரியும். ஆனால் இப்படியொரு நிலையில், ஒரு பெண்ணுடன் பார்ப்போமென்று நினைக்கவில்லை.
ஷிவன்யா அவனுக்கு என்ன உறவென்று தெரியாது... தானே தனது கற்பனைக்கு தீனி போடக்கூடாதென மெல்ல மனதை ஆசுவாசப்படுத்திய பின்னரே வீட்டிற்கு கிளம்பிச் சென்றான் இனியன்.
இனியனுக்கு ருது ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்றிருந்தான் என்பதைக் காட்டிலும், ஷிவன்யா ஒரு ஆணுடன், அவனது கைவளைவில் நின்றிருந்தாள் என்பது அவனின் மனதை ஏதோ செய்தது. என்னவென்று விளங்கா நிலை அவனிடம்.
ஷிவன்யா ருதுவிடம் வீடியோ வைரல் என்று சொல்லியது நினைவு வர, அலைபேசியை எடுத்து என்னவென்று ஆராய்ந்தவகனுக்கு சில நொடிகளில் ருதுவின் வீடியோ கண்ணில் பட...
"ம்மா... ம்மா..." என்று கத்திகொண்டே தீபாவிடம் சென்றான்.
"எதுக்குடா கத்துற? ஒரு நாவல் நிம்மதியா படிக்க முடியுதா?" என்று அவனுக்கு மேல் கத்திக் கேட்டவர், மகனை பேசவிடாது, "புது கதைடா. ஐந்தாறு எபி தான் போயிருக்கு. செமயா இருக்குடா. நாலு பிரண்ட்ஸ் தூங்கி எழுந்து பியூச்சருக்கு டைம் டிராவல் ஆகிட்டாங்க. இப்போ இருக்க எல்லாமே அவங்க என்னவாக ஆசைப்பட்டாங்களோ அப்படி ஆகிடுச்சு. நமக்கும் அந்த மாதிரி நடக்குமாடா?" எனக் கேட்டார்.
"ம்ம்ம்மா..." தலையில் தட்டிக்கொண்ட இனியன், "அது கதைம்மா... கதை. கதையை கதையா மட்டும் பாரு" என்று கடிந்தான்.
"இப்போ நான் என்ன சொல்லிட்டேன். எனக்கும் அந்த மாதிரி போயிட்டால் தேவலாம் தோணுது. டாக்டர் படிக்கணும் ஆசைப்பட்டேன். அது நடக்கும்ல" என்றார்.
அன்னையென்றும் பாராது அவரின் தலையில் கொட்டுவோமா என்று ஒரு கணம் தோன்றிவிட்ட எண்ணத்தை நெற்றியில் தட்டி புறம் ஒதுக்கிய இனியன்...
"அப்படி ஏதும் நடக்கும் அப்படின்னா... உன் பொண்ணு அவள் லவ் பண்ணவனோட கல்யாணமாகி குழந்தை குடும்பமுன்னு செட்டில் ஆகிருக்கணும் நினை. நடக்குதா பார்ப்போம்" என்று முறைத்துவிட்டு, தான் அவரை எதுக்கு அழைத்தோமோ அதனை தானே செய்தான்.
வீடு முழுவதும் அலசியும் இமையாள் எங்குமில்லை.
'ஸ்கூல் விட்டு எப்பவோ வந்திருக்கணுமே' என நினைத்தவன் மொட்டை மாடி சென்று பார்த்தான்.
இருள் கவிழ இருந்த நேரம். முகத்தில் எவ்வித உணர்வுமின்றி சுற்று சுவற்றின் மீது சாய்ந்து அமர்ந்திருந்தவளின் கையில் அலைப்பேசி. அத்தனை இறுக்கமாக பிடித்திருந்தாள்.
திரையில் ருதுவின் காணொளி. அவனின் ஆளுமையானத் தோற்றத்தில், அவனது கம்பீரமான சிறு சிறு அசைவையும் இமை சிமிட்டாது உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.
ஓடும் பேருந்தில் தோரணையாக அவன் குதித்து ஏறும் காட்சி அவளை பழைய நினைவு ஒன்றில் சுழல வைத்தது.
அவனுடன் பேசிக்கொண்டு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த இமையாள், தான் ஏற வேண்டிய பேருந்து வந்தும், ருது ஏற சொல்லி பலமுறை சொல்லியும் அவனை விட்டு போக முடியாதென அடமாக நின்றிருந்தாள்.
"இந்த பஸ் விட்டால், அடுத்து வர தர்ட்டி மினிட்ஸ் ஆகும் லேஷஸ்" என்ற ருதுவின் வார்த்தையை கண்டுகொள்ளாதவள், "மீட் பண்றதே எப்போவாவது. உடனே துரத்த பாக்குறீங்க. இன்னும் கொஞ்ச நேரம் இருக்கனே" என்று அவனின் கரம் பற்றிட முனையை லாவகமாக தள்ளி நின்றான்.
"ரொம்ப தான் பண்றீங்கப்பா. கை கூட பிடிக்கக்கூடாதா?" என்பவளுக்கு காதலியேயானாலும் அவன் காட்டும் கண்ணியம் அத்தனை பிடிக்கும்.
"நீங்க பக்கத்திலிருந்தும் எட்ட நிற்பதற்கு... நான் வீட்டுக்கே போறேன்" என்று இமையாள் பேருந்தை நோக்கிச்செல்ல வண்டி நகர்ந்தது.
"அடுத்த பஸ்ஸில் போகலாம்" என்று ருது முடிக்கும் முன்னர், வேகமாக ஓடிச்சென்று பேருந்தில் ஏறி, இறுதி படியில் நின்று கையசைத்தவளை அவன் பார்த்த கண்டிப்பு பார்வை இன்றும் முதுகை சில்லிட வைக்கும்.
"ருது..." மெல்ல அவளது இதழ்கள் பிரிந்து உச்சரிக்க... சட்டென்று கண்ணீர் திரண்டு கன்னம் உருண்டது.
அந்நொடி தான் இனியன் அங்கு வந்தான்.
"இமயா!" தங்கையின் அருகில் அமர்ந்தவன், அவளின் கையிலிருக்கும் அலைப்பேசியில் ஓடும் காணொளியை கண்டு வேகமாக பறித்து அணைத்திருந்தான்.
"அண்ணா" என்ற கூவலோடு இனியனின் கழுத்தினை கட்டிக்கொண்டு அவனின் தோளில் முகம் புதைத்தவள், வீறிட்டு கதறினாள்.
"அடேய்... பாப்பா..." இனியனின் குரல் தழுதழுப்பாய்.
தங்கையின் வலியையே இனியன் இந்த சில நாட்களாகத்தான் ஆழமாக அறிகிறான். இமையாள் அழுத்தி வைத்த ரணத்தையெல்லாம் தாக்குப்பிடிக்க முடியாது இப்போதுதானே உடன் பிறந்தவனிடம் பகிறந்துகொள்கிறாள். அண்ணாக தங்கையின் வலி போக்கிட முடியாது துவண்டான்.
"அவங்க நானில்லாமல் ரொம்பவே நல்லா இருக்காங்கண்ணா!" அந்த வார்த்தைகளில் அப்படியொரு வலி.
இனியனுக்கு... ஷிவன்யாவிடம் பேசும்போது ருது முகத்தில் தெரிந்த சிரிப்பு, சந்தோஷம் யாவும் அவனின் மகிழ்வை பறைசாற்றிட பனித்த கண்ணீரை துடைத்தவனாக ஆமென்று மேலும் கீழும் தலையசைத்தான்.
"நாலு வருஷமாகுதுண்ணா... என்னால் இன்னும் அவங்களை கடக்க முடியல. ஆனால் அவங்க..." அடுத்து வார்த்தை வராது திக்கினாள்.
"இங்க யாரும் ஒருத்தரோட நினைப்பில் தேங்கிடுறது இல்லடாம்மா!" என்ற இனியனுக்கே தான் சொல்லியது அபத்தமாக இருந்தது. அவனுமே நண்பனின் எண்ணத்தில் தவித்துக் கொண்டிருப்பவன் தானே.
"நீ இப்படியே இருந்தால் எதுவும் மாறாது. மறக்க முடியாதுன்னு இருக்க உன் பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்திக்கலாம்" என்றான்.
இமையாளிடம் வறண்ட புன்னகை.
இலையோடும் மலரோடும் உன் விரல் ரேகை... வழியெல்லாம் வழியெல்லாம் உன் குழல் வாசம்.
நீரோடை முழுதும் உன் வேர்வைக் கயல்கள்... முட்புதரில் இடையில் உன் பார்வை முயல்கள்.
இத்தேடல் முடிந்தால் நீ அங்கே இருந்தால்... என் நெஞ்சம் உடைந்தாலும் உடையும்!
- மதன் கார்க்கி.
_____________________
மியூசிக் பிளேயர் ஒலித்துக்கொண்டிருக்க ஒவ்வொரு அலைவரிசையாக மாற்றிக் கொண்டிருந்தான் ருத்விக்.
சட்டென்று கேட்ட பாடலின் இசையும், வரிகளும் ஏதோ ஓர் வலி நிறைந்த அர்த்தத்தை மனதில் கூர் தீட்டிட, ருதுவின் விரல்கள் உறைந்தது.
அவ்வரிகளில் அவனுக்கு முன்பு அவனது இதயம் ஒன்றிப்போனது.
ஏதோ சுமக்க முடியா நினைவொன்று உள்ளுக்குள் ஆட்டுவித்தது.
அவனை அசைத்து பார்த்திட முயன்ற எண்ணத்தை முயன்று ஒதுக்கியவன், வேகமாக பாடலினை அணைத்திருந்தான்.
அவ்வளவு நேரமிருந்த இலகுத்தன்மை ருதுவிடம் இல்லை. இரும்பென விறைத்திருந்தான்.
வண்டியும் காந்தா பேட்டைக்குள் நுழைந்தது. நுழைவு வாயில் வளைவினை ருது விழியுயர்த்தி பார்த்திட, ஜீப்பின் மேல் முன் பகுதியில் வந்து விழுந்தது ரத்தம் தோய்ந்த உடல்.
சட்டென்று கண்முன் உயிரற்ற சடலம், அதுவும் சிவப்பு நிறத்தில் வந்துவிழ, ருதுவிடம் தன்னைப்போல் சிறு அதிர்வு எழுந்து அடங்கியது.
வெங்கட் "அய்யோ" என்று அலறிவிட்டான்.
"இங்க வரும்போதே தெரியும் சார். உங்களுக்கு வரவேற்பு இப்படித்தான் இருக்கும்ன்னு" என்ற கிருஷ்ணன் இதிலெல்லாம் எனக்கு அனுபவம் நிறைய எனும் விதமாக, வண்டியை இயக்கினார்.
வண்டியின் மீதிருக்கும் உடலிலிருந்து ருதுவின் கருவிழிகள் அசையவில்லை.
"உன் கண் முன்பே ஒரு கொலை செய்கிறேன். உன்னால் என்ன செய்துவிட முடியும்" என எதிராளி தனது காக்கிக்கு விடுக்கும் சவாலாகத்தான் ருதுவிற்கு தெரிந்தது.
"மொத்தம் அறுநூறு குடும்பம் இருக்கு சார். சிட்டியிலே பெரிய பேட்டை இதுதான். ஆரம்பத்தில் ஏதோ தலைவர் பேருதான் இந்த பேட்டைக்கு இருந்தது. கைலாஷ் இருந்த வரை அவன் பெயர் சொல்லி சொல்ல ஆரம்பிச்சாங்க. இப்போ முழுக்க காந்தா கண்ட்ரோல் அப்படிங்கிறதால... காந்தா பேட்டை ஆகிப்போச்சு. இப்போ இந்த பேட்டையோட உண்மையான பெயர் என்னன்னு கேட்டால் அந்த கைலாஷ்க்கே நினைவிருக்காது" என்று விவரம் சொல்லியபடி, பேட்டையின் உள்ளே இறுதியில் பெரிய மைதானத்தின் நடுவில் இருந்த வீட்டிற்கு முன்பு வண்டியை நிறுத்தியிருந்தார் கிருஷ்ணன்.
வரும் வழியில் யாவற்றையும் கூர்ந்து நோக்கியபடி தான் வந்திருந்தான் ருது. பேட்டை எனும் சொல்லுக்கே எதிராக இருந்தது அவ்விடம். சிறு குடிசை கூட அங்கில்லை. நகர்த்தில் பெரும் புள்ளிகள் வசிக்கும் பகுதிக்கு மேலாக அனைத்து வசதிகளுடன் காணப்பட்டது.
"இங்கிருக்க பசங்க எல்லாம், பெரிய பெரிய காலேஜில் படிக்கிறாங்க சார். எல்லாம் கைலாஷ் செலவு தான். செய்யுறது காந்தா. எந்தவொரு வீட்டிலும் விசேஷம் அப்படின்னா, கைலாஷ் பெயர் சொல்லி சீர் இருக்கும். இப்படி பணத் தேவைகள் செய்தே அடிமையாக்கி வச்சிருக்கான்" என்றார் கிருஷ்ணன்.
"ரொம்பத்தான் தெரிஞ்சு வச்சிருக்கீங்க!"
"தெரிஞ்சு வச்சு என்ன சார் பிரயோஜனம். தப்பு பண்றானுங்கன்னு தெரிஞ்சும் ஒருத்தனையும் அரேஸ்ட் பண்ண முடியலையே!" என்றார். விரக்தியாக.
"பண்ணிடலாம். கவலையை விடுங்க" என்ற ருது அந்த மைதானத்தை சுற்றி பார்வையை சுழற்ற, ஆங்காங்கே முறுக்கேறிய தேகத்தோடு ஆட்கள் நின்று உடற்பயிற்சி, கால்பந்து, ஓட்டம் என்று பயிற்சி செய்து கொண்டிருந்தனர். துப்பாக்கி சுடுதலும் இதில் அடக்கம்.
"ம்ம்ம்... நல்லாவே ட்ரெயின் பன்றாங்க." ருது மெச்சுதலாகக் கூறினான்.
"இது நல்ல விஷயத்துக்காக இருந்தால் உங்க மெச்சுதல் சரி சார். இங்கிருக்க எவனும் நல்லதுக்குன்னு சின்ன துரும்பைக்கூட அசைக்க மாட்டானுங்க" என்றான் வெங்கட்.
வண்டி அங்கு காந்தாவின் வீட்டின் முன் நின்றது முதல் மைதானத்தில் நின்றிருப்பவர்களின் பார்வை முழுவதும் அதன் மீதுதான்.
"வெட்ட வரை மாதிரியே பாக்குறானுங்க." வெங்கட் தொண்டைக்குழியை ஏற்றி இறக்கினான்.
அப்போது இடியென பெரும் சிரிப்பு.
யாரென்று பார்க்க...
கருப்பு சட்டை, பச்சை வர்ண வேட்டி அணிந்து தன்னிரு கைகளையும் அகல விரித்தபடி ஜீப்பினை நோக்கி,
"வாங்க... வாங்க..." என்ற கூவலோடு வந்தான் காந்தா.
நாற்பது வயது இருக்கும். ஆனாலும் முன் முப்பது தோற்றம்.
"எங்க பேட்டைக்கு வந்துகினதுக்கு சந்தோஷம். வரவேற்பு பார்த்தீங்கல? எம்புட்டு மாஸ் காட்டிக்கினோம்" என்று ருது அமர்ந்திருந்த பக்கம் வந்து மீசையை முறுக்கியபடி வினவினான் காந்தா.
ருது வாய் திறக்கவில்லை. காந்தாவை அவதானித்தபடி இருந்தான். ருது அணிந்திருந்த கூலர்ஸை தாண்டி காந்தாவால் ருதுவின் எண்ணவோட்டத்தை புரிந்துகொள்ள முடியவில்லை.
"என்ன டிசி சார். இவனை கொன்னதுக்கு கைது செய்யப் போறீங்களா?" காந்தா சிரிப்போடு வினவ...
"கொஞ்சம் தள்ளி நிக்கிறீங்களா" என்றான் ருது.
காந்தா அசராது நின்றிருக்க...
ருது வேகமாக கதவினை திறந்திட, நொடியில் சுதாரித்து பின்வாங்கியிருந்தான் காந்தா.
"ஹேய்..." அடியாட்கள் ஐந்தாறு பேர் ருதுவை தாக்கும் நோக்கில் நெருங்கிவிட்டனர். மைதானத்தில் நின்றபடி இங்கவே பார்த்திருந்தவர்களும் இவர்களை நோக்கி ஓடிவர, கை காட்டி நிறுத்தியிருந்தான் காந்தா.
"என் பேச்சைக் கேட்கலன்னா இப்படித்தான் ஏடாகூடமா ஏதும் நடக்கும்" என்ற ருது குதித்து இறங்கி, கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவாறு, "ஏரியாவை பக்காவா மெயின்டெயின் பண்றீங்க. அரசாங்கம் செய்ய வேண்டியதையெல்லாம் நீங்க மக்களுக்கு செய்றீங்கன்னு கேள்விப்பட்டேன். அந்த நல்லவரை நேரில் பார்க்கணும் வந்தால்... சும்மா அதிர விட்டுடீங்க" என்று ஜீப்பின் மீது கிடந்த உடலை பார்வையால் சுட்டினான்.
காந்தா தன் ஆட்களில் ஒருவனுக்கு கண்காட்டிட, நொடியில் உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
"இந்த கொலைக்கான ஆதாரம் ஏதுமில்லைங்கிறதால தப்பீச்ச" என்று காந்தாவை நெருங்கி ஒருபக்க கூலர்ஸை இறக்கி அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் ருது சொல்லிட...
"ஏய்" என்று சீறினான் காந்தா.
"ஷ்ஷ்ஷ்ஷ்..." என்று வாயில் ஒற்றை விரல் வைத்து தலையை இருபக்கமும் அசைத்தவாறு விலகி நின்ற ருது...
"உனக்கு மேல ஒருத்தன் இருக்கானாமே! சொல்லி வை. மொத்தமா அழிக்கிறேன்" என்றான். காந்தாவுக்கு பின்னால் அரணாக நின்றவர்களை பார்வையால் உரசியபடி.
"என்ன அண்ணாத்தே பார்த்துக்கினு நிக்குற. அவென் எம்புட்டு தவ்லத்தா பேசிக்கினு நிக்கிறான்" என்று ஒருவன் காந்தாவை தாண்டி எகிறான்.
"கொடுக்குலாம் ரொம்ப துள்ளுதே கிருஷ்ணா அண்ணா. என்ன பண்ணலாம்?" என்று தாடையை நீவிய ருது... "தூக்கிடலாமா?" என துப்பாக்கியை எடுத்து அவனுக்கு நேராக நீட்டி, காந்தாவின் மீது குறி வைத்தான்.
"சார்..." வெங்கட் அதிர்ந்து ருதுவின் கையினை பிடிக்க... காந்தா ருதுவை முறைத்து பார்த்தான்.
"என்னா லந்து கொடுத்துக்கினு இருக்கான். சும்மா பார்த்துக்கினு இருக்கியேண்ணே. ம் ன்னு சொல்லு போட்டுடலாம்" என்று ஒருவன் மீசை முறுக்கினான்.
"நம்மக்கின வந்துக்கின போலீஸ் யார்கிட்டயாச்சும் கேட்டு தெரிஞ்சிக்கினு வந்திருக்கணும் தம்பி நீயி... உன் உதார் வுடுற வேலையெல்லாம் எங்கனான்ட வச்சிகிடாத. அப்படி வச்சிக்கின மூஞ்சு பேந்துரும்" என்று மற்றொருவன் தொடையை தட்டினான்.
"ஷ்..." என்று சலிப்பான பாவனையை காட்டிய ருது...
"இவனுங்க என்னண்ணா இன்னும் எயிட்டிஸ் வில்லன் மாதிரி டயலாக்கா பேசுறானுங்க" என்றான்.
"ச்சூ... கம்மின்னு கெடங்கடா" என்று தனது ஆட்களை அடக்கிய காந்தா...
"வேணாம் தம்பி. உசுரோட இருக்கணும்ன்னா எங்களை சீண்டிக்காம இருந்துக்க. அது முடியாதுன்னா, எந்த வூருக்கு வேணும் ட்ரான்ஸ்பரு... சொல்லிக்கினு போயிக்கிட்டே இரு" என்றான்.
"நைஸ் ஜோக் மேன்" என்று ஜீப்பின் பேனெட் மீது தாவி அமர்ந்து, தொடையில் கை ஊன்றி கூலர்ஸை கழட்டிய ருது...
"மொத்தமா நீ நிறுத்திக்கோ. முதலில் ட்ரக்ஸ் ஸப்ளை. ஸ்டூடண்ஸ் கிட்ட விற்பதை நிறுத்து" என்றான்.
"நீ என்னை ரொம்ப சீண்டுற?"
"நீ அல்ரெடி என்னை சீண்டிட்ட" என்று குதித்து இறங்கிய ருது... "நீ பில்டப் கொடுத்த அளவுக்கு இங்க ஒண்ணுமில்லை வெங்கட்" என்றான்.
அவ்வளவு தான் காந்தா உட்பட மொத்த பேரின் பார்வையும் வெங்கட்டை வெட்டவா குத்தவா எனும் ரீதியில் நிலைத்தது.
வெங்கட் மூச்சுவிடவே பயந்து நின்றான்.
"டைம் இஸ் ரன்னிங்" என்றவனாக வண்டியில் ஏறி அமர்ந்தான் ருது. அவனைத் தொடர்ந்து கிருஷ்ணன் ஓட்டுநர் இருக்கையில் ஏறிட, வெங்கட் காந்தாவை பார்த்து திருதிருவென விழித்தான்.
"சொல்லி வை சப்-இன்சு. துள்ளுறதுக்கு உடம்புல உசுரு இருக்காது" என்ற காந்தாவை கண்டு அரண்டவனாக வெங்கட் வேகமாக வண்டியிலேறினான்.
கிருஷண்ன் அமைதியாக வண்டியை திருப்பி செலுத்த, ருதுவின் விழிகள் கூர்மையாக காந்தாவின் மீது படிந்து விலகியது.
வெங்கட் உண்மையில் பயந்திருந்தான். கைலாஷ் மற்றும் காந்தாவின் வரலாறு அப்படி.
"என்ன வெங்கட் அமைதியா வறீங்க?"
ருது பேசுவதற்காகவே காத்திருந்தவன் போல் வெங்கட் புலம்பித் தள்ளினான்.
"நான் உங்களுக்கு என்ன சார் துரோகம் பண்ணேன்?
"சும்மா கிடந்த ஓணானை புடிச்சு பேண்டுக்குள்ள விட்ட மாதிரி, சும்மா இருந்தவனை சுரண்டிட்டு வந்திருக்கீங்க...
"பத்தாததுக்கு என்னையும் கோர்த்து விட்டுட்டிங்க. எனக்கு கல்யாணமாகிருச்சு சார். மனைவி கர்ப்பமா இருக்காள்" என்றான்.
"சோ, வாட்?" என்றான் ருது. சற்றும் அலட்டிக்கொள்ளாது.
"நம்மை பணிய வைக்க இவனுங்க என்ன வேணாலும் செய்வானுங்க சார். நேரடியா வந்து சீண்டியிருக்கீங்க. கவனமா இருங்க" என்று வெங்கட் பேச்சினை முடித்துக்கொண்டான்.
எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும் ருது அவனுக்குத் தோன்றுவதைத்தான் செய்வான் என்பது முந்தைய நிகழ்விலே தெரிந்துவிட, இதற்கு மேல் ருதுவிடம் எடுத்து சொல்வது வீண் என அமைதியாகிப்போனான் வெங்கட்.
ருதுவிற்கு காந்தாவை சீண்ட வேண்டுமென்ற எண்ணமில்லை. அவனுக்கு கைலாஷை நேரில் பார்த்திட வேண்டும். அது அத்தனை எளிதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களே கைலாஷினை சந்திப்பதற்கு காத்திருக்கும் நிலையில், எங்கு தட்டினால் வெளிச்சம் வரும் என்பதை அறிந்து காந்தாவை வார்த்தையால் தட்டிவிட்டு வந்திருக்கிறான்.
இன்னும் சற்று நேரத்தில் கைலாஷ் ருதுவை தொடர்பு கொள்ளலாம் அல்லது நேரிலேயே சந்திக்கவும் செய்யலாம். ருது காத்திருக்கத் தொடங்கினான்.
______________________________________
ருதுவை நேரில் பார்க்க நேரிடுமென்று இனியனுக்குத் தெரியும். ஆனால் இப்படியொரு நிலையில், ஒரு பெண்ணுடன் பார்ப்போமென்று நினைக்கவில்லை.
ஷிவன்யா அவனுக்கு என்ன உறவென்று தெரியாது... தானே தனது கற்பனைக்கு தீனி போடக்கூடாதென மெல்ல மனதை ஆசுவாசப்படுத்திய பின்னரே வீட்டிற்கு கிளம்பிச் சென்றான் இனியன்.
இனியனுக்கு ருது ஒரு பெண்ணுடன் நெருக்கமாக நின்றிருந்தான் என்பதைக் காட்டிலும், ஷிவன்யா ஒரு ஆணுடன், அவனது கைவளைவில் நின்றிருந்தாள் என்பது அவனின் மனதை ஏதோ செய்தது. என்னவென்று விளங்கா நிலை அவனிடம்.
ஷிவன்யா ருதுவிடம் வீடியோ வைரல் என்று சொல்லியது நினைவு வர, அலைபேசியை எடுத்து என்னவென்று ஆராய்ந்தவகனுக்கு சில நொடிகளில் ருதுவின் வீடியோ கண்ணில் பட...
"ம்மா... ம்மா..." என்று கத்திகொண்டே தீபாவிடம் சென்றான்.
"எதுக்குடா கத்துற? ஒரு நாவல் நிம்மதியா படிக்க முடியுதா?" என்று அவனுக்கு மேல் கத்திக் கேட்டவர், மகனை பேசவிடாது, "புது கதைடா. ஐந்தாறு எபி தான் போயிருக்கு. செமயா இருக்குடா. நாலு பிரண்ட்ஸ் தூங்கி எழுந்து பியூச்சருக்கு டைம் டிராவல் ஆகிட்டாங்க. இப்போ இருக்க எல்லாமே அவங்க என்னவாக ஆசைப்பட்டாங்களோ அப்படி ஆகிடுச்சு. நமக்கும் அந்த மாதிரி நடக்குமாடா?" எனக் கேட்டார்.
"ம்ம்ம்மா..." தலையில் தட்டிக்கொண்ட இனியன், "அது கதைம்மா... கதை. கதையை கதையா மட்டும் பாரு" என்று கடிந்தான்.
"இப்போ நான் என்ன சொல்லிட்டேன். எனக்கும் அந்த மாதிரி போயிட்டால் தேவலாம் தோணுது. டாக்டர் படிக்கணும் ஆசைப்பட்டேன். அது நடக்கும்ல" என்றார்.
அன்னையென்றும் பாராது அவரின் தலையில் கொட்டுவோமா என்று ஒரு கணம் தோன்றிவிட்ட எண்ணத்தை நெற்றியில் தட்டி புறம் ஒதுக்கிய இனியன்...
"அப்படி ஏதும் நடக்கும் அப்படின்னா... உன் பொண்ணு அவள் லவ் பண்ணவனோட கல்யாணமாகி குழந்தை குடும்பமுன்னு செட்டில் ஆகிருக்கணும் நினை. நடக்குதா பார்ப்போம்" என்று முறைத்துவிட்டு, தான் அவரை எதுக்கு அழைத்தோமோ அதனை தானே செய்தான்.
வீடு முழுவதும் அலசியும் இமையாள் எங்குமில்லை.
'ஸ்கூல் விட்டு எப்பவோ வந்திருக்கணுமே' என நினைத்தவன் மொட்டை மாடி சென்று பார்த்தான்.
இருள் கவிழ இருந்த நேரம். முகத்தில் எவ்வித உணர்வுமின்றி சுற்று சுவற்றின் மீது சாய்ந்து அமர்ந்திருந்தவளின் கையில் அலைப்பேசி. அத்தனை இறுக்கமாக பிடித்திருந்தாள்.
திரையில் ருதுவின் காணொளி. அவனின் ஆளுமையானத் தோற்றத்தில், அவனது கம்பீரமான சிறு சிறு அசைவையும் இமை சிமிட்டாது உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.
ஓடும் பேருந்தில் தோரணையாக அவன் குதித்து ஏறும் காட்சி அவளை பழைய நினைவு ஒன்றில் சுழல வைத்தது.
அவனுடன் பேசிக்கொண்டு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த இமையாள், தான் ஏற வேண்டிய பேருந்து வந்தும், ருது ஏற சொல்லி பலமுறை சொல்லியும் அவனை விட்டு போக முடியாதென அடமாக நின்றிருந்தாள்.
"இந்த பஸ் விட்டால், அடுத்து வர தர்ட்டி மினிட்ஸ் ஆகும் லேஷஸ்" என்ற ருதுவின் வார்த்தையை கண்டுகொள்ளாதவள், "மீட் பண்றதே எப்போவாவது. உடனே துரத்த பாக்குறீங்க. இன்னும் கொஞ்ச நேரம் இருக்கனே" என்று அவனின் கரம் பற்றிட முனையை லாவகமாக தள்ளி நின்றான்.
"ரொம்ப தான் பண்றீங்கப்பா. கை கூட பிடிக்கக்கூடாதா?" என்பவளுக்கு காதலியேயானாலும் அவன் காட்டும் கண்ணியம் அத்தனை பிடிக்கும்.
"நீங்க பக்கத்திலிருந்தும் எட்ட நிற்பதற்கு... நான் வீட்டுக்கே போறேன்" என்று இமையாள் பேருந்தை நோக்கிச்செல்ல வண்டி நகர்ந்தது.
"அடுத்த பஸ்ஸில் போகலாம்" என்று ருது முடிக்கும் முன்னர், வேகமாக ஓடிச்சென்று பேருந்தில் ஏறி, இறுதி படியில் நின்று கையசைத்தவளை அவன் பார்த்த கண்டிப்பு பார்வை இன்றும் முதுகை சில்லிட வைக்கும்.
"ருது..." மெல்ல அவளது இதழ்கள் பிரிந்து உச்சரிக்க... சட்டென்று கண்ணீர் திரண்டு கன்னம் உருண்டது.
அந்நொடி தான் இனியன் அங்கு வந்தான்.
"இமயா!" தங்கையின் அருகில் அமர்ந்தவன், அவளின் கையிலிருக்கும் அலைப்பேசியில் ஓடும் காணொளியை கண்டு வேகமாக பறித்து அணைத்திருந்தான்.
"அண்ணா" என்ற கூவலோடு இனியனின் கழுத்தினை கட்டிக்கொண்டு அவனின் தோளில் முகம் புதைத்தவள், வீறிட்டு கதறினாள்.
"அடேய்... பாப்பா..." இனியனின் குரல் தழுதழுப்பாய்.
தங்கையின் வலியையே இனியன் இந்த சில நாட்களாகத்தான் ஆழமாக அறிகிறான். இமையாள் அழுத்தி வைத்த ரணத்தையெல்லாம் தாக்குப்பிடிக்க முடியாது இப்போதுதானே உடன் பிறந்தவனிடம் பகிறந்துகொள்கிறாள். அண்ணாக தங்கையின் வலி போக்கிட முடியாது துவண்டான்.
"அவங்க நானில்லாமல் ரொம்பவே நல்லா இருக்காங்கண்ணா!" அந்த வார்த்தைகளில் அப்படியொரு வலி.
இனியனுக்கு... ஷிவன்யாவிடம் பேசும்போது ருது முகத்தில் தெரிந்த சிரிப்பு, சந்தோஷம் யாவும் அவனின் மகிழ்வை பறைசாற்றிட பனித்த கண்ணீரை துடைத்தவனாக ஆமென்று மேலும் கீழும் தலையசைத்தான்.
"நாலு வருஷமாகுதுண்ணா... என்னால் இன்னும் அவங்களை கடக்க முடியல. ஆனால் அவங்க..." அடுத்து வார்த்தை வராது திக்கினாள்.
"இங்க யாரும் ஒருத்தரோட நினைப்பில் தேங்கிடுறது இல்லடாம்மா!" என்ற இனியனுக்கே தான் சொல்லியது அபத்தமாக இருந்தது. அவனுமே நண்பனின் எண்ணத்தில் தவித்துக் கொண்டிருப்பவன் தானே.
"நீ இப்படியே இருந்தால் எதுவும் மாறாது. மறக்க முடியாதுன்னு இருக்க உன் பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்திக்கலாம்" என்றான்.
இமையாளிடம் வறண்ட புன்னகை.