தூரமே தூரமாய் 14
"உங்க அண்ணாத்த கம்பிக்குள்ள இருக்காரு. நாளைக்கு கோர்ட்டில் வந்து பாரு" என நின்ற நிலையில் ஒரு காலினை தூக்கி பூட்ஸில் மண்ணை தட்டியவனாக ருது சொல்லிட, ஆளாளுக்கு துள்ளி கத்தினார்கள்.
வெங்கட்டிற்கு மனதிற்குள் 'பத்த வச்சிட்டியே பரட்டை' என்று தான் தோன்றியது.
அடுத்த நொடி அமைதியாக இருந்த இடம் கலவர பூமியாக மாறியிருந்தது.
வளாகத்தினுள் நின்றிருந்த வாகனங்கள், கட்டிடத்தின் கண்ணாடி சன்னல்கள் யாவும் அடித்து நொறுக்கப்பட, இடமே புழுதிக்காடாய் காட்சியளித்தது.
ருது நின்ற இடம் விட்டு அசையவில்லை.
அதுவே தடியர்களுக்கு ஆத்திரத்தை உண்டு செய்தது.
"என்ன சார் அமைதியா நிக்கிறீங்க?"
"எஸ்.ஐ சார் ஏதும் செய்ங்களேன்!" ருது சொல்லிய தொனியே வேடிக்கை மட்டும் பார் என்பதைப் போலிருந்தது.
"பெரிய பிரச்சினை ஆகிடப்போகுது சார்." கிருஷ்ணன் முன்வர,
"ஸ்டேஷனுக்குள்ள கால் வைக்கும் வரை என்னவும் பண்ணட்டும் கிருஷ்ணன்" என்றான் ருது.
"டைம் என்ன?"
"நாலாகப் போகுது சார்."
"காபி குடிச்சா நல்லாயிருக்கும்" என்ற ருதுவை இருவருமே அதிர்ந்து ஏறிட்டனர்.
அந்நேரம் ஒருவன் ருதுவை தாக்கிட்ட உருட்டு கட்டையை வீசிட, லாவகமாக பிடித்து அவன் மீதே எறிந்திருந்தான் ருது.
"யாராண்டா கையை வச்சிக்கின... இன்னும் செத்த நேரத்துல எங்க அண்ணாத்த வெளிய வந்துக்கினுவாரு பாரு" என்று ஒருவன் அலைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்திட முயல... சடுதியில் அவன் கையில் சுட்டிருந்தான் ருத்விக்.
"சார்..." வெங்கட் அதிர,
"என்ன கிருஷ்ணன் ஆவூன்னா இவன் அதிர்ந்துட்டே இருக்கான். எதுக்குடா நீ போலீஸ் ஆன" என்று கடிந்தான்.
"சுட்டுட்டுட்டீங்களே சார்!"
"சுடுறதுக்குத்தாண்டா துப்பாக்கி கொடுத்திருக்காங்க." ருதுவிடம் தான் சரியாகத்தான் செய்கிறோம் எனும் எண்ணம்.
துப்பாக்கி சத்தத்தில் பொருட்களை எல்லாம் உடைத்துக் கொண்டிருந்த மொத்த பேரும் அமைதியாகினர். கிட்டத்தட்ட பதினைந்து பேர் இருப்பார்கள்.
ருது அனைவரையும் பார்வையால் ஆராய்ந்தான். கட்டை, சைக்கிள் செயின், அரிவாள், கத்தி, என பல தரப்பட்ட ஆயுதங்கள் அவர்களின் கையில் இடம் பிடித்திருந்தன.
"ஒரு ஃபோட்டோ எடுத்துப்போம்" என்று எடுத்துக்கொண்ட ருது...
"எல்லாரையும் கைது செய்யுங்க. எவ்வளவு தைரியமிருந்தால் அவனுங்க தலைவனை கைது செய்துட்டோமின்னு ஸ்டேஷனை அடிச்சு நொறுக்கப் பார்த்திருப்பாங்க" என்று உள் சென்ற ருதுவை எதில் சேர்ப்பதென்று தெரியாது வெங்கட் திருத்திருத்தான்.
ருது கைது செய்ய சொல்லியதும் மீண்டு கத்திக்கொண்டே காவல் நிலையத்தின் உள்ளே பாய்ந்தோட, முன் வந்த இருவரை ஒரே உதையில் சுருட்டி பறக்க செய்திருந்தான் ருது.
"மாணிக்கம்... கேட்டை இழுத்து மூடுங்க" என்றவன், அவர் அதனை செய்ததும் "அடுத்து யாருடா?" எனக் கேட்டான்.
சுருண்டு விழுந்திருந்த இருவரையும் திரும்பி பார்த்த தடியர்கள், அவர்கள் வயிற்றை பிடித்துக்கொண்டு தரையில் நீரின்றி துள்ளும் மீனாய் துடித்து அலருவதைக் கண்டு, அமைதியாக பின் வாங்கினர்.
"இப்படி உட்காருங்கடா" என்று வராண்டா போன்று அலுவலகத்தின் முன் பக்கம் நீண்டிருந்த பகுதியை ருது கைகாட்டிட, பம்மியவர்களாக சென்று தரையில் அமர்ந்தனர்.
"அக்கா கேஸ் ஃபைல் பண்ணி சைன் வாங்குங்க" என்று மல்லிகாவிடம் தெரிவித்த ருது, "எவனாவது கையெழுத்து போடமாட்டேன்னு வம்பு பண்ணீங்க" என்று தான் துப்பாக்கியால் சுட்டதால் கை விரலில் குண்டு பாய்ந்து ரத்தம் சொட்ட அமர்ந்திருந்தவனில் பார்வையை பதித்தான் ருது.
அதிலே அவனது நடவடிக்கை என்னவாக இருக்குமென்பதை புரிந்துகொண்டு தலையை உருட்டினார்கள். சரியென்பதைப்போல்.
"தட்ஸ் குட்" என்ற ருது, "அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வாங்க" என்றான் கிருஷ்ணனிடம்.
ருது உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்த மறு கணம், தொலைபேசி ஒலி எழுப்பியது. அவன் எடுக்காது விட, அலுவலகத்தில் இருக்கும் அனைத்து தொலைபேசிகளும் அதிர்ந்து ஒலித்தன.
"பாருடா... இவ்ளோ பவரா உனக்கு?" செல்லுக்குள் முடங்கியிருந்த காந்தாவிடம் நக்கலாக வினவிய ருது,
"ரிசிவர் எல்லாம் எடுத்து கீழ வையுங்க" என்றான்.
பல வாகனங்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெளியில் எட்டி பார்த்திட, அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சங்கர் வேக நடையுடன் உள்ளே வந்தார்.
"யாருண்ணா இவரு. வெள்ளையும் சொல்லையும் பார்த்தாக்கா அரசியல்வாதி மாதிரி தெரியுது." வந்திருப்பது யாரென்று தெரிந்தும், வேண்டுமென்றே அவருக்கு கேட்கும்படி வினவினான் ருது.
"ஹேய் போலீசு... நீயென்ன பெரிய இதா? ஃபோனு எடுக்க மாட்டியோ?" எனக் கேட்டுக்கொண்டே அங்கிருந்த நாற்காலியில் கால் மேல் காலிட்டு அமர்ந்தார்.
"யார் நீங்க?"
"ஏய்..."
"சவுண்ட் விடும் வேலையெல்லாம் இங்க வேண்டாம். யாருன்னு சொன்னால் மரியாதை கிடைக்கும்" என்ற ருது, அவருக்கு நேரெதிர் நாற்காலியை இழுத்துப்போட்டு தோரணையாக கால் மாற்றி அமர்ந்தான்.
"ஏய்..." என்று அவரது ஆட்கள் முன்னால் வர, அவர்களை தடுத்தவர், "யாருன்னு தெரிந்தால் கும்பிடப்போறான். விடுங்கடா. தம்பி ஊருக்கு புதுசுல" என்றார்.
"நீ ரொம்ப சீனு போடுறன்னு பயலுவ சொன்னாணுவ... நேர்ல நல்லாவே தெரியுது" என்று எம்.எல்.ஏ தான் யாரென்பதை கூறினார்.
யாரென்று தெரிந்ததும் எழுந்து பவ்யமாக நடந்துகொள்வானென அவர் நினைத்திருக்க... அப்போதுதான் இன்னும் நிமிர்ந்து அமர்ந்து...
"சொல்லுங்க என்ன விஷயமா வந்திருக்கீங்க? ஏதும் கம்ப்ளையண்ட் கொடுக்கணுமா?" எனக் கேட்டிருந்தான் ருது.
"ரொம்ப திமிருதான்."
"தேன்க் யூ" என்ற ருது, "வந்த விஷயம் என்னன்னு சொல்லுங்க?" என்றான்.
"உனக்கேத் தெரியுமே போலீசு. டிஜிபி நானே பேசிக்கிறேன் சொன்னார். நான் தான் என்னைவிட ஒரு ஆளு வேணுமான்னு வந்தேன்" என்றவர், "காந்தாவை வெளியில் விடு" என்றார்.
ருது யோசிக்கவே இல்லை. ஒரு நொடியும் தாமதிக்கவில்லை.
எம்.எல்.ஏ வின் சட்டை பிடித்து இழுத்து ஒரு தள்ளு தான்... செல்லுக்குள் சென்று நின்றார்.
"இழுத்து மூடி லாக் பண்ணுங்க வெங்கட்" என்றவன் மல்லிகாவின் புறம் திரும்பிட...
"கொலை குற்றவாளியை விட சொல்லி எம்.எல்.ஏ ஸ்டேஷன் வந்து மிரட்டியதற்கும், அதிகாரம் துஷ்பிரயோகம் செய்ததற்கும் கைது செய்யப்பட்டார்" என்று எழுதிக்கொண்டே மல்லிகா சொல்லிட...
"குட் மூவ்" என்று அவரிடம் புன்னகைத்தான் ருது.
"எனக்கு பயந்து வருது மல்லிகாக்கா. இந்த இன்ஸ்பெக்டர் இப்போன்னா மெடிக்கல் லீவு போட்டு ஊருக்கு போவனும்" என்று புலம்பினான் வெங்கட்.
"ருது சாரிடம் நீங்க மாட்டணுமுன்னு தான் சார்" என்று மல்லிகா மெல்ல சிரித்தார்.
"உங்களுக்கு பயமே இல்லையாக்கா?"
"ஏன் இல்லை. அதெல்லாம் இருக்கு. இன்னைக்கு மட்டும் மூணு எப்.ஐ. ஆர் எழுதியிருக்கேன். அடுத்து எவ்வளவு எழுதப்போறன்னு தெரியல. ஆனால் ரைட்டரா இன்னைக்குத்தான் சார் நல்லது எழுதிய திருப்தி கிடைச்சிருக்கு" என்ற மல்லிகா, "சர்விசில் ஒருமுறையாவது நேர்மையான அதிகாரியோடு பணி செய்தோம்ன்னு நமக்கும் பெருமை தானே சார்" என்றார்.
"இந்த பெருமைக்கு நாலு எருமை மேய்க்கலாம் க்கா. உசுரு முக்கியம் க்கா" என்றான்.
"எழுதிட்டா அந்த ஆளுகிட்ட கையெழுத்து வாங்கிடுங்க" என்ற ருது, "இவனுங்க ஏன் இங்க நின்னு முறைச்சிட்டு இருக்கானுங்க, உள்ள தூக்கிப்போடு வெங்கட்" என்று எம்.எல்.ஏ சங்கர் உடன் வந்த ஐந்தாறு கதர் சட்டையை கண் காண்பித்தான்.
"இதுக்கு மேல போனால் ஸ்டேஷனில் இடம் பத்தாது சார்" என்று
முனகிக்கொண்டே அவர்களை பிடித்து அடைத்தான் வெங்கட்.
அவ்வளவு தான் அடுத்த சில நிமிடங்களில் நகரத்தின் மொத்த ஊடகமும் ருதுவின் அலுவலக வாயிலில் நின்றிருந்தது.
நகரத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்ட அனைவரும் காந்தா பேட்டையின் ஆட்கள்.
ருது ஊடகவியலாளர்கள் யாரின் கேள்விக்கும் செவி சாய்க்காது உள்ளே அமர்ந்திருந்தான். மொத்தமாக பிடித்திட வேண்டும். அதற்கே இந்த பொறுமை.
தனது ஆள் ஒருவனும் சும்மா சீண்டியதற்கே கைலாஷ் கொலை செய்வான் என்ற நிலையில், ருது அவனது மொத்த கையையும் அடைத்து சிறையில் வைத்திருக்கிறான். அவனிடமிருந்து சின்ன அழைப்புக்கூட இல்லை.
ருதுவின் இலக்கு கைலாஷ். அதற்கே மீன்களை வலைக்குள் இழுத்துக்கொண்டிருக்கிறான்.
பணி விஷயமாக சேலம் சென்றிருந்த வேங்கடம் மதியம் போல் திரும்பி வந்திருந்தார். மகனின் அதிரடி கேட்டு வியந்தாலும், முதல்வரை நினைத்து பயம் கொண்டார்.
முதல்வர் சின்னதாகக் கூட அதைப்பற்றி கேட்கவில்லை.
"அந்த கலவரத்தையாவது கட்டுக்குள் கொண்டுவர சொல்லுங்க வேங்கடம். பெரிய ஆளுங்க யார் சொல்லியும் கேட்கல போல" என்றார் முதல்வர்.
"சொல்றேன் சார்" என்று அலைபேசியை எடுத்தவாறு வேங்கடம் நகர,
"ஒரே நாளில் கைலாஷ் கூட்டத்தை அழிக்கணும் முடிவு பண்ணிட்டானா?" என்ற முதல்வர், வேங்கடம் நின்று திரும்பியதும், "ஜாக்கிரதை" என்றார்.
அரசியலுக்கே பெரும் வினையாக இருக்கும் கைலாஷ் மற்றும் நகரத்தின் குற்றங்கள் யாவற்றிற்கும் காரணியாக இருக்கும் காந்தா இருவரும் அழிந்தால் நன்மை தானே! இதுநாள் வரை இப்படி துணிச்சலாக களமிறங்க யாருமின்றி இருந்த முதல்வருக்கு ருதுவின் பணி பிடிக்கவே செய்தது. இருப்பினும் கட்சிக்கு பாதகமாக அவரின் நடவடிக்கைகள் அமைந்திடக்கூடாது. அவரது இருக்கை அத்தனை சூடானது. அதில் மக்களின் நலன் என்பது மட்டுமல்ல... பலதும் இருக்கிறது. யாவற்றையும் யோசித்து செயல்பட வேண்டும். நல்லதென செய்வது பாதகமாக அமையலாம். சரிவராது என்று ஒதுக்குவது அத்தனை நன்மை கொடுப்பதாக அமையும். அவரின் பதவி அப்படியானது. ஆதலால் மறைமுகமாக ருதுவுக்கு உதவிட நினைத்தார்.
'இந்த கைலாஷ் அமைதியா இருப்பது தான் உறுத்துது.' நினைத்த முதல்வர் மட்டுமல்ல யாருமே அறிந்திடாத ஒன்று உள்ளது. ருது மட்டுமே அறிந்த ஒன்று. கைலாஷ் யார் என்பது?
கிருஷ்ணன் மருத்துவமனையில் அமர்ந்திருந்தார். அறைக்குள் அடிபட்ட ஆளுக்கு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
"போலீஸ் அப்டிங்கிறதுக்காக இப்படியா சார் சுடுவீங்க. விரலையே துளைச்சிட்டு போயிருக்கு" என்று மருத்துவர் கிருஷ்ணனிடம் கடிந்துக்கொள்ள...
"பாவம் பார்க்குமளவிற்கு இவனுங்க நல்லவங்க இல்லை டாக்டர்" என்றார் கிருஷ்ணன்.
இவர்களின் வாதத்தை தற்செயலாகக் கேட்க நேர்ந்த இனியன்,
"மருத்துவருக்கு நல்லவங்க, கெட்டவங்கன்னு இல்லை சார். எல்லாமே உயிர். அவ்வளவு தான்" என்றதோடு "கோவப்படாமல் ட்ரீட் பண்ணு அபி" என்றான்.
"உயிருன்னு போலீசுக்கு மட்டும் புரிந்தால் போதாது டாக்டர்... எனக்குத் தெரிந்து இவன் எத்தனை கொலை பண்ணியிருக்கான் தெரியுமா? ஆனால் ஜாலியா வெளியில் சுத்திட்டு இருந்தான். எல்லாத்துக்கும் மொத்தமா இன்னைக்கு ருது சாரிடம் வாங்கிக்கணும் இருந்திருக்கு இவனுக்கு" என்று கிருஷ்ணன் அவனை இழுத்துக்கொண்டு நகர,
"ருது?" என்று கேள்வியாக இழுத்தான் இனியன்.
"புது டிசி டாக்டர்" என்று கிருஷ்ணன் சொல்லியவாறு சென்றிருந்தார்.
"ஹேய்... உன் பிரண்ட் நேம் கூட ருது தானே?" அபி கேட்டிட...
"மே பீ" என்று தன்னுடைய பணிக்கான விரைந்திருந்தான் இனியன்.
_____________________
பலமுறை அழைப்பு விடுத்தும் ருது எடுக்காமல் போக, வேங்கடம் ருதுவை காண அவனது அலுவலகமே வந்துவிட்டார். பிளாக் ஸ்குவார்ட் சீருடையிலே வந்திருக்க...
முதலமைச்சரின் தலைமை பாதுகாவலர் என்பது தெரிந்து காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர்.
ருது அவரை கண்டு தன்னிலையில் மாற்றமில்லாது அமர்ந்திருக்க...
"இவருக்கு தைரியம் அதிகம் தான்" என்று முணுமுணுத்தார் ஒரு கான்ஸ்டபிள்.
"எதுக்கு இப்படி சைலண்டா இருக்க ருது. உன் கண்ட்ரோலில் இருக்கும் பகுதிகளில் தான் கலவரம் நடக்குது. எதாவது ஒரு உயிருக்கு சேதாரம் ஆனாலும், உனக்குத்தான் பிரச்சினை. விசாரணை கமிஷன் வைத்து உன் வேலைக்கே ஆப்பு ஆடிச்சிடுவாங்க" என்றவர், "பீகாரில் பண்ண அதிரடியில் இது கொஞ்சம் தான்னு எனக்குத் தெரியுது. ஆனால் இது தமிழ்நாடு டா. தாங்காது. மக்கள் எமோஷனலி வீக்" என்றார்.
"என்ன இப்போ அவனை விடனுமா? உங்க முதலமைச்சர் உங்களை வைத்து என்னை மடக்க பார்க்கிறாரா?" என்று எகிறினான்.
"என்ன சார் இவரு யாருக்கும் பயப்படமாட்டாரா?" அப்போதுதான் மருத்துவமனையிலிருந்து வந்த கிருஷ்ணனிடம் வெங்கட் கேட்க,
"அவங்க ருது சாரோட அப்பா சார்" என்றார் கிருஷ்ணன்.
"ஹோ..." என்று வெங்கட் காற்றில் கூவ,
"தையல் போட்டாச்சுல. அவனையும் உள்ள தள்ளுங்க" என்றான் ருது. வேங்கடத்தின் மீது காட்டிட முடியாத கோபத்தை வெங்கட்டிடம் காட்டினான்.
"சும்மா கோபப்படக் கூடாது ருது. முதல்வர் உனக்கு மறைமுகமாக உதவ தயாரா இருக்கிறார்" என்று மகனை அடக்கிய வேங்கடம், "யாரை வேணாலும் அரேஸ்ட் பண்ணிக்க சொல்லிட்டார். ஆனால் ஆதாரம் பக்காவா இருக்கணும் சொன்னார். அடிபட்டு வெளிய வந்துட்டால், இவனுங்க ஆட்டம் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையா மாறிடும் சொன்னார். சூழலை கட்டுக்கொள் கொண்டு வா" என்றதோடு, "முதலிய மீடியாவை மீட் பண்ணு" என்று ருதுவின் தோளில் தட்டிச் சென்றார்.
"நேரா வீட்டுக்கு போங்க."
"என்னை பார்த்துக்க எனக்குத் தெரியும் போடா."
ருதுவிடம் சன்னமான சிரிப்பு.
மெல்ல ருதுவின் அருகில் சென்ற வெங்கட்...
"உங்களால் பாதி சிட்டியே கொந்தளிச்சிட்டு இருக்கு சார். சிரிக்கிறதை விட்டு எதாவது செய்யுங்க சார்" என்றான்.
வெங்கட்டை மேலும் கீழும் பார்த்த ருது,
"நீங்களும் காக்கி ட்ரெஸ் தான் போட்டிருக்கீங்க. நீங்களும் ஏதும் பண்ணலாம்" என்றான்.
"ஆரம்பித்தது நீங்கதானே சார். நீங்களே வழியும் காட்டுங்க. நடக்கிறோம்" என்றான் வெங்கட்.
"நல்ல விவரம் தான். இன்னொசென்ட மாதிரி ஆக்ட் பண்ணாத" என்ற ருது, வெளியில் ஒலிவாங்கியுடன் கத்திக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் முன் சென்றான்.
"சார் நீங்க எங்களை வேண்டுமென்றே அலட்சியம் செய்றீங்க?"
ருது வந்து நின்றதும் மூத்த நிருபர் கொந்தளித்தார்.
"ஒரு வழக்கு விசாரணையில் இருந்தேன்" என்று மற்ற பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டான் ருது.
"ஊரே கலவரமா இருக்கு இப்படி மெத்தனமா பதில் சொல்றீங்களே சார்?"
"ஸ்டேஷன் வெளியிலும் கலவரம் நடந்திருக்கும் போல?"
"எதுக்கு சார் காந்தாவை அரேஸ்ட் பண்ணீங்க?"
"எம்.எல்.ஏ சங்கரை கைது பண்ணியிருக்கீங்களா?"
"உண்மை காரணம் சொல்ல முடியுமா?"
"நேரடி தாக்குதலா?"
"பொய் வழக்கா?"
"பாப்புலர் ஆக ட்ரை பண்றீங்களா?"
ஆளாளுக்கு ஒலிவாங்கியை முன்னால் நீட்டியபடி சரமாரியாக கேள்விகளை எழுப்பிட...
"இத்தனை நாளும் சட்டம் தூங்குகிறதா? நகரை ஆட்டி வைக்கும் தனியொரு தாதா! குட்டி மன்னராட்சியே நடத்துகிறாரா? போலீஸ் வேலையே செய்யாதுன்னு பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டது நீங்கள் தானே?" எனக்கேட்ட ருது, "அதே சட்டம் தன் கடமையை செய்தால் அதற்கும் உங்கள் எண்ணப்படி கதை சொல்வீங்க அப்படித்தானே?" என்றான்.
சலசலப்பு குறைந்து மௌனமாகினர்.
"நீங்க உங்க வேலையை சரியா செய்யுங்கள். எங்க வேலையை எங்களுக்கு பார்க்கத் தெரியும்" என்று ஒருவித அழுத்தத்துடன் மொழிந்த ருது, "இதையே நான் கொடுத்த ஸ்டேட்மெண்டா போட்டுக்கோங்க" என்று அங்கிருந்து சென்றிருந்தான்.
அலைப்பேசி வாயிலாகவே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களையும் தொடர்பு கொண்டு, கலவரத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் பாகுபாடின்றி கைது செய்யுமாறு உத்தரவிட்டான்.
இரண்டு மணி நேரத்தில் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான். வெங்கட், கிருஷ்ணன் காந்தா பேட்டைக்கு அருகில் வன்முறையில் ஈடுபட்டிருப்பவர்களை அமைதிப்படுத்தப் போராடிக் கொண்டிருந்தனர்.
கல்லெரிப்பு, கண்ணாடி உடைத்தல், கடையடைப்பு, சாலை மறியல், என வரம்பு மீறி நடந்து கொண்டிருந்தனர் காந்தாவின் ஆட்கள்.
கட்சி மூலமாக சங்கருக்கு எந்தவொரு ஆதரவும் கொடுக்கக்கூடாதென முதல்வர் வலியுறுத்தியிருந்ததால், சங்கரின் தொண்டர்கள் கொஞ்ச நேரம் கத்திவிட்டு, கட்சியிடமிருந்து எவ்வித தகவலும் இல்லாததால் கலைந்து சென்றிருந்தனர்.
நகரையே இரண்டாக்கிக் கொண்டிருந்தது காந்தாவின் பேட்டை கைலாஷ் ஆட்கள் தான்.
கலவரம் நடந்த பகுதிகளை ருது பார்வையிட்டபடி வர,
வெங்கட் அழைத்து, "சார் இங்க சமாளிக்க முடியல. இவனுங்க ரொம்ப பண்றானுங்க. மத்த இடத்திலாவது அடிச்சி உடைச்சி அமைதி ஆகிட்டானுங்க. ஆனால் இங்க பெட்ரோல் குண்டெல்லாம் போடுறானுங்க சார்" என்று கத்தினான்.
அடுத்த பத்தாவது நிமிடம் ருது காந்தா பேட்டையை சுற்றியுள்ள பகுதியை அடைத்திருந்தான்.
கலவரத்தை அடக்க ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் பலருக்கும் அடிப்பட்டிருந்தது. காயத்தை பொருட்படுத்தாது அப்போதும் முனைப்புடன் அவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ருது வண்டியிலிருந்து இறங்கிட, எரிந்த நிலையில் டயர் ஒன்று உருண்டு வந்து விழுந்தது அவனது காலடியில்.
_______________
தொடர்ந்து விருப்பம் தெரிவித்து கருத்திட்டு ஆதரவு கொடுக்கும் வாசகர்களுக்கு நன்றி.
நிறை குறைகளை கீழுள்ள இணைப்பில் பகிர்ந்து கொள்ளுங்கள். நிறை ஊக்கப்படுத்தும். குறை திருத்திக்கொள்ள உதவும்.
"உங்க அண்ணாத்த கம்பிக்குள்ள இருக்காரு. நாளைக்கு கோர்ட்டில் வந்து பாரு" என நின்ற நிலையில் ஒரு காலினை தூக்கி பூட்ஸில் மண்ணை தட்டியவனாக ருது சொல்லிட, ஆளாளுக்கு துள்ளி கத்தினார்கள்.
வெங்கட்டிற்கு மனதிற்குள் 'பத்த வச்சிட்டியே பரட்டை' என்று தான் தோன்றியது.
அடுத்த நொடி அமைதியாக இருந்த இடம் கலவர பூமியாக மாறியிருந்தது.
வளாகத்தினுள் நின்றிருந்த வாகனங்கள், கட்டிடத்தின் கண்ணாடி சன்னல்கள் யாவும் அடித்து நொறுக்கப்பட, இடமே புழுதிக்காடாய் காட்சியளித்தது.
ருது நின்ற இடம் விட்டு அசையவில்லை.
அதுவே தடியர்களுக்கு ஆத்திரத்தை உண்டு செய்தது.
"என்ன சார் அமைதியா நிக்கிறீங்க?"
"எஸ்.ஐ சார் ஏதும் செய்ங்களேன்!" ருது சொல்லிய தொனியே வேடிக்கை மட்டும் பார் என்பதைப் போலிருந்தது.
"பெரிய பிரச்சினை ஆகிடப்போகுது சார்." கிருஷ்ணன் முன்வர,
"ஸ்டேஷனுக்குள்ள கால் வைக்கும் வரை என்னவும் பண்ணட்டும் கிருஷ்ணன்" என்றான் ருது.
"டைம் என்ன?"
"நாலாகப் போகுது சார்."
"காபி குடிச்சா நல்லாயிருக்கும்" என்ற ருதுவை இருவருமே அதிர்ந்து ஏறிட்டனர்.
அந்நேரம் ஒருவன் ருதுவை தாக்கிட்ட உருட்டு கட்டையை வீசிட, லாவகமாக பிடித்து அவன் மீதே எறிந்திருந்தான் ருது.
"யாராண்டா கையை வச்சிக்கின... இன்னும் செத்த நேரத்துல எங்க அண்ணாத்த வெளிய வந்துக்கினுவாரு பாரு" என்று ஒருவன் அலைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைத்திட முயல... சடுதியில் அவன் கையில் சுட்டிருந்தான் ருத்விக்.
"சார்..." வெங்கட் அதிர,
"என்ன கிருஷ்ணன் ஆவூன்னா இவன் அதிர்ந்துட்டே இருக்கான். எதுக்குடா நீ போலீஸ் ஆன" என்று கடிந்தான்.
"சுட்டுட்டுட்டீங்களே சார்!"
"சுடுறதுக்குத்தாண்டா துப்பாக்கி கொடுத்திருக்காங்க." ருதுவிடம் தான் சரியாகத்தான் செய்கிறோம் எனும் எண்ணம்.
துப்பாக்கி சத்தத்தில் பொருட்களை எல்லாம் உடைத்துக் கொண்டிருந்த மொத்த பேரும் அமைதியாகினர். கிட்டத்தட்ட பதினைந்து பேர் இருப்பார்கள்.
ருது அனைவரையும் பார்வையால் ஆராய்ந்தான். கட்டை, சைக்கிள் செயின், அரிவாள், கத்தி, என பல தரப்பட்ட ஆயுதங்கள் அவர்களின் கையில் இடம் பிடித்திருந்தன.
"ஒரு ஃபோட்டோ எடுத்துப்போம்" என்று எடுத்துக்கொண்ட ருது...
"எல்லாரையும் கைது செய்யுங்க. எவ்வளவு தைரியமிருந்தால் அவனுங்க தலைவனை கைது செய்துட்டோமின்னு ஸ்டேஷனை அடிச்சு நொறுக்கப் பார்த்திருப்பாங்க" என்று உள் சென்ற ருதுவை எதில் சேர்ப்பதென்று தெரியாது வெங்கட் திருத்திருத்தான்.
ருது கைது செய்ய சொல்லியதும் மீண்டு கத்திக்கொண்டே காவல் நிலையத்தின் உள்ளே பாய்ந்தோட, முன் வந்த இருவரை ஒரே உதையில் சுருட்டி பறக்க செய்திருந்தான் ருது.
"மாணிக்கம்... கேட்டை இழுத்து மூடுங்க" என்றவன், அவர் அதனை செய்ததும் "அடுத்து யாருடா?" எனக் கேட்டான்.
சுருண்டு விழுந்திருந்த இருவரையும் திரும்பி பார்த்த தடியர்கள், அவர்கள் வயிற்றை பிடித்துக்கொண்டு தரையில் நீரின்றி துள்ளும் மீனாய் துடித்து அலருவதைக் கண்டு, அமைதியாக பின் வாங்கினர்.
"இப்படி உட்காருங்கடா" என்று வராண்டா போன்று அலுவலகத்தின் முன் பக்கம் நீண்டிருந்த பகுதியை ருது கைகாட்டிட, பம்மியவர்களாக சென்று தரையில் அமர்ந்தனர்.
"அக்கா கேஸ் ஃபைல் பண்ணி சைன் வாங்குங்க" என்று மல்லிகாவிடம் தெரிவித்த ருது, "எவனாவது கையெழுத்து போடமாட்டேன்னு வம்பு பண்ணீங்க" என்று தான் துப்பாக்கியால் சுட்டதால் கை விரலில் குண்டு பாய்ந்து ரத்தம் சொட்ட அமர்ந்திருந்தவனில் பார்வையை பதித்தான் ருது.
அதிலே அவனது நடவடிக்கை என்னவாக இருக்குமென்பதை புரிந்துகொண்டு தலையை உருட்டினார்கள். சரியென்பதைப்போல்.
"தட்ஸ் குட்" என்ற ருது, "அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வாங்க" என்றான் கிருஷ்ணனிடம்.
ருது உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்த மறு கணம், தொலைபேசி ஒலி எழுப்பியது. அவன் எடுக்காது விட, அலுவலகத்தில் இருக்கும் அனைத்து தொலைபேசிகளும் அதிர்ந்து ஒலித்தன.
"பாருடா... இவ்ளோ பவரா உனக்கு?" செல்லுக்குள் முடங்கியிருந்த காந்தாவிடம் நக்கலாக வினவிய ருது,
"ரிசிவர் எல்லாம் எடுத்து கீழ வையுங்க" என்றான்.
பல வாகனங்கள் வந்து நிற்கும் சத்தம் கேட்டு வெளியில் எட்டி பார்த்திட, அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சங்கர் வேக நடையுடன் உள்ளே வந்தார்.
"யாருண்ணா இவரு. வெள்ளையும் சொல்லையும் பார்த்தாக்கா அரசியல்வாதி மாதிரி தெரியுது." வந்திருப்பது யாரென்று தெரிந்தும், வேண்டுமென்றே அவருக்கு கேட்கும்படி வினவினான் ருது.
"ஹேய் போலீசு... நீயென்ன பெரிய இதா? ஃபோனு எடுக்க மாட்டியோ?" எனக் கேட்டுக்கொண்டே அங்கிருந்த நாற்காலியில் கால் மேல் காலிட்டு அமர்ந்தார்.
"யார் நீங்க?"
"ஏய்..."
"சவுண்ட் விடும் வேலையெல்லாம் இங்க வேண்டாம். யாருன்னு சொன்னால் மரியாதை கிடைக்கும்" என்ற ருது, அவருக்கு நேரெதிர் நாற்காலியை இழுத்துப்போட்டு தோரணையாக கால் மாற்றி அமர்ந்தான்.
"ஏய்..." என்று அவரது ஆட்கள் முன்னால் வர, அவர்களை தடுத்தவர், "யாருன்னு தெரிந்தால் கும்பிடப்போறான். விடுங்கடா. தம்பி ஊருக்கு புதுசுல" என்றார்.
"நீ ரொம்ப சீனு போடுறன்னு பயலுவ சொன்னாணுவ... நேர்ல நல்லாவே தெரியுது" என்று எம்.எல்.ஏ தான் யாரென்பதை கூறினார்.
யாரென்று தெரிந்ததும் எழுந்து பவ்யமாக நடந்துகொள்வானென அவர் நினைத்திருக்க... அப்போதுதான் இன்னும் நிமிர்ந்து அமர்ந்து...
"சொல்லுங்க என்ன விஷயமா வந்திருக்கீங்க? ஏதும் கம்ப்ளையண்ட் கொடுக்கணுமா?" எனக் கேட்டிருந்தான் ருது.
"ரொம்ப திமிருதான்."
"தேன்க் யூ" என்ற ருது, "வந்த விஷயம் என்னன்னு சொல்லுங்க?" என்றான்.
"உனக்கேத் தெரியுமே போலீசு. டிஜிபி நானே பேசிக்கிறேன் சொன்னார். நான் தான் என்னைவிட ஒரு ஆளு வேணுமான்னு வந்தேன்" என்றவர், "காந்தாவை வெளியில் விடு" என்றார்.
ருது யோசிக்கவே இல்லை. ஒரு நொடியும் தாமதிக்கவில்லை.
எம்.எல்.ஏ வின் சட்டை பிடித்து இழுத்து ஒரு தள்ளு தான்... செல்லுக்குள் சென்று நின்றார்.
"இழுத்து மூடி லாக் பண்ணுங்க வெங்கட்" என்றவன் மல்லிகாவின் புறம் திரும்பிட...
"கொலை குற்றவாளியை விட சொல்லி எம்.எல்.ஏ ஸ்டேஷன் வந்து மிரட்டியதற்கும், அதிகாரம் துஷ்பிரயோகம் செய்ததற்கும் கைது செய்யப்பட்டார்" என்று எழுதிக்கொண்டே மல்லிகா சொல்லிட...
"குட் மூவ்" என்று அவரிடம் புன்னகைத்தான் ருது.
"எனக்கு பயந்து வருது மல்லிகாக்கா. இந்த இன்ஸ்பெக்டர் இப்போன்னா மெடிக்கல் லீவு போட்டு ஊருக்கு போவனும்" என்று புலம்பினான் வெங்கட்.
"ருது சாரிடம் நீங்க மாட்டணுமுன்னு தான் சார்" என்று மல்லிகா மெல்ல சிரித்தார்.
"உங்களுக்கு பயமே இல்லையாக்கா?"
"ஏன் இல்லை. அதெல்லாம் இருக்கு. இன்னைக்கு மட்டும் மூணு எப்.ஐ. ஆர் எழுதியிருக்கேன். அடுத்து எவ்வளவு எழுதப்போறன்னு தெரியல. ஆனால் ரைட்டரா இன்னைக்குத்தான் சார் நல்லது எழுதிய திருப்தி கிடைச்சிருக்கு" என்ற மல்லிகா, "சர்விசில் ஒருமுறையாவது நேர்மையான அதிகாரியோடு பணி செய்தோம்ன்னு நமக்கும் பெருமை தானே சார்" என்றார்.
"இந்த பெருமைக்கு நாலு எருமை மேய்க்கலாம் க்கா. உசுரு முக்கியம் க்கா" என்றான்.
"எழுதிட்டா அந்த ஆளுகிட்ட கையெழுத்து வாங்கிடுங்க" என்ற ருது, "இவனுங்க ஏன் இங்க நின்னு முறைச்சிட்டு இருக்கானுங்க, உள்ள தூக்கிப்போடு வெங்கட்" என்று எம்.எல்.ஏ சங்கர் உடன் வந்த ஐந்தாறு கதர் சட்டையை கண் காண்பித்தான்.
"இதுக்கு மேல போனால் ஸ்டேஷனில் இடம் பத்தாது சார்" என்று
முனகிக்கொண்டே அவர்களை பிடித்து அடைத்தான் வெங்கட்.
அவ்வளவு தான் அடுத்த சில நிமிடங்களில் நகரத்தின் மொத்த ஊடகமும் ருதுவின் அலுவலக வாயிலில் நின்றிருந்தது.
நகரத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்ட அனைவரும் காந்தா பேட்டையின் ஆட்கள்.
ருது ஊடகவியலாளர்கள் யாரின் கேள்விக்கும் செவி சாய்க்காது உள்ளே அமர்ந்திருந்தான். மொத்தமாக பிடித்திட வேண்டும். அதற்கே இந்த பொறுமை.
தனது ஆள் ஒருவனும் சும்மா சீண்டியதற்கே கைலாஷ் கொலை செய்வான் என்ற நிலையில், ருது அவனது மொத்த கையையும் அடைத்து சிறையில் வைத்திருக்கிறான். அவனிடமிருந்து சின்ன அழைப்புக்கூட இல்லை.
ருதுவின் இலக்கு கைலாஷ். அதற்கே மீன்களை வலைக்குள் இழுத்துக்கொண்டிருக்கிறான்.
பணி விஷயமாக சேலம் சென்றிருந்த வேங்கடம் மதியம் போல் திரும்பி வந்திருந்தார். மகனின் அதிரடி கேட்டு வியந்தாலும், முதல்வரை நினைத்து பயம் கொண்டார்.
முதல்வர் சின்னதாகக் கூட அதைப்பற்றி கேட்கவில்லை.
"அந்த கலவரத்தையாவது கட்டுக்குள் கொண்டுவர சொல்லுங்க வேங்கடம். பெரிய ஆளுங்க யார் சொல்லியும் கேட்கல போல" என்றார் முதல்வர்.
"சொல்றேன் சார்" என்று அலைபேசியை எடுத்தவாறு வேங்கடம் நகர,
"ஒரே நாளில் கைலாஷ் கூட்டத்தை அழிக்கணும் முடிவு பண்ணிட்டானா?" என்ற முதல்வர், வேங்கடம் நின்று திரும்பியதும், "ஜாக்கிரதை" என்றார்.
அரசியலுக்கே பெரும் வினையாக இருக்கும் கைலாஷ் மற்றும் நகரத்தின் குற்றங்கள் யாவற்றிற்கும் காரணியாக இருக்கும் காந்தா இருவரும் அழிந்தால் நன்மை தானே! இதுநாள் வரை இப்படி துணிச்சலாக களமிறங்க யாருமின்றி இருந்த முதல்வருக்கு ருதுவின் பணி பிடிக்கவே செய்தது. இருப்பினும் கட்சிக்கு பாதகமாக அவரின் நடவடிக்கைகள் அமைந்திடக்கூடாது. அவரது இருக்கை அத்தனை சூடானது. அதில் மக்களின் நலன் என்பது மட்டுமல்ல... பலதும் இருக்கிறது. யாவற்றையும் யோசித்து செயல்பட வேண்டும். நல்லதென செய்வது பாதகமாக அமையலாம். சரிவராது என்று ஒதுக்குவது அத்தனை நன்மை கொடுப்பதாக அமையும். அவரின் பதவி அப்படியானது. ஆதலால் மறைமுகமாக ருதுவுக்கு உதவிட நினைத்தார்.
'இந்த கைலாஷ் அமைதியா இருப்பது தான் உறுத்துது.' நினைத்த முதல்வர் மட்டுமல்ல யாருமே அறிந்திடாத ஒன்று உள்ளது. ருது மட்டுமே அறிந்த ஒன்று. கைலாஷ் யார் என்பது?
கிருஷ்ணன் மருத்துவமனையில் அமர்ந்திருந்தார். அறைக்குள் அடிபட்ட ஆளுக்கு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
"போலீஸ் அப்டிங்கிறதுக்காக இப்படியா சார் சுடுவீங்க. விரலையே துளைச்சிட்டு போயிருக்கு" என்று மருத்துவர் கிருஷ்ணனிடம் கடிந்துக்கொள்ள...
"பாவம் பார்க்குமளவிற்கு இவனுங்க நல்லவங்க இல்லை டாக்டர்" என்றார் கிருஷ்ணன்.
இவர்களின் வாதத்தை தற்செயலாகக் கேட்க நேர்ந்த இனியன்,
"மருத்துவருக்கு நல்லவங்க, கெட்டவங்கன்னு இல்லை சார். எல்லாமே உயிர். அவ்வளவு தான்" என்றதோடு "கோவப்படாமல் ட்ரீட் பண்ணு அபி" என்றான்.
"உயிருன்னு போலீசுக்கு மட்டும் புரிந்தால் போதாது டாக்டர்... எனக்குத் தெரிந்து இவன் எத்தனை கொலை பண்ணியிருக்கான் தெரியுமா? ஆனால் ஜாலியா வெளியில் சுத்திட்டு இருந்தான். எல்லாத்துக்கும் மொத்தமா இன்னைக்கு ருது சாரிடம் வாங்கிக்கணும் இருந்திருக்கு இவனுக்கு" என்று கிருஷ்ணன் அவனை இழுத்துக்கொண்டு நகர,
"ருது?" என்று கேள்வியாக இழுத்தான் இனியன்.
"புது டிசி டாக்டர்" என்று கிருஷ்ணன் சொல்லியவாறு சென்றிருந்தார்.
"ஹேய்... உன் பிரண்ட் நேம் கூட ருது தானே?" அபி கேட்டிட...
"மே பீ" என்று தன்னுடைய பணிக்கான விரைந்திருந்தான் இனியன்.
_____________________
பலமுறை அழைப்பு விடுத்தும் ருது எடுக்காமல் போக, வேங்கடம் ருதுவை காண அவனது அலுவலகமே வந்துவிட்டார். பிளாக் ஸ்குவார்ட் சீருடையிலே வந்திருக்க...
முதலமைச்சரின் தலைமை பாதுகாவலர் என்பது தெரிந்து காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர்.
ருது அவரை கண்டு தன்னிலையில் மாற்றமில்லாது அமர்ந்திருக்க...
"இவருக்கு தைரியம் அதிகம் தான்" என்று முணுமுணுத்தார் ஒரு கான்ஸ்டபிள்.
"எதுக்கு இப்படி சைலண்டா இருக்க ருது. உன் கண்ட்ரோலில் இருக்கும் பகுதிகளில் தான் கலவரம் நடக்குது. எதாவது ஒரு உயிருக்கு சேதாரம் ஆனாலும், உனக்குத்தான் பிரச்சினை. விசாரணை கமிஷன் வைத்து உன் வேலைக்கே ஆப்பு ஆடிச்சிடுவாங்க" என்றவர், "பீகாரில் பண்ண அதிரடியில் இது கொஞ்சம் தான்னு எனக்குத் தெரியுது. ஆனால் இது தமிழ்நாடு டா. தாங்காது. மக்கள் எமோஷனலி வீக்" என்றார்.
"என்ன இப்போ அவனை விடனுமா? உங்க முதலமைச்சர் உங்களை வைத்து என்னை மடக்க பார்க்கிறாரா?" என்று எகிறினான்.
"என்ன சார் இவரு யாருக்கும் பயப்படமாட்டாரா?" அப்போதுதான் மருத்துவமனையிலிருந்து வந்த கிருஷ்ணனிடம் வெங்கட் கேட்க,
"அவங்க ருது சாரோட அப்பா சார்" என்றார் கிருஷ்ணன்.
"ஹோ..." என்று வெங்கட் காற்றில் கூவ,
"தையல் போட்டாச்சுல. அவனையும் உள்ள தள்ளுங்க" என்றான் ருது. வேங்கடத்தின் மீது காட்டிட முடியாத கோபத்தை வெங்கட்டிடம் காட்டினான்.
"சும்மா கோபப்படக் கூடாது ருது. முதல்வர் உனக்கு மறைமுகமாக உதவ தயாரா இருக்கிறார்" என்று மகனை அடக்கிய வேங்கடம், "யாரை வேணாலும் அரேஸ்ட் பண்ணிக்க சொல்லிட்டார். ஆனால் ஆதாரம் பக்காவா இருக்கணும் சொன்னார். அடிபட்டு வெளிய வந்துட்டால், இவனுங்க ஆட்டம் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையா மாறிடும் சொன்னார். சூழலை கட்டுக்கொள் கொண்டு வா" என்றதோடு, "முதலிய மீடியாவை மீட் பண்ணு" என்று ருதுவின் தோளில் தட்டிச் சென்றார்.
"நேரா வீட்டுக்கு போங்க."
"என்னை பார்த்துக்க எனக்குத் தெரியும் போடா."
ருதுவிடம் சன்னமான சிரிப்பு.
மெல்ல ருதுவின் அருகில் சென்ற வெங்கட்...
"உங்களால் பாதி சிட்டியே கொந்தளிச்சிட்டு இருக்கு சார். சிரிக்கிறதை விட்டு எதாவது செய்யுங்க சார்" என்றான்.
வெங்கட்டை மேலும் கீழும் பார்த்த ருது,
"நீங்களும் காக்கி ட்ரெஸ் தான் போட்டிருக்கீங்க. நீங்களும் ஏதும் பண்ணலாம்" என்றான்.
"ஆரம்பித்தது நீங்கதானே சார். நீங்களே வழியும் காட்டுங்க. நடக்கிறோம்" என்றான் வெங்கட்.
"நல்ல விவரம் தான். இன்னொசென்ட மாதிரி ஆக்ட் பண்ணாத" என்ற ருது, வெளியில் ஒலிவாங்கியுடன் கத்திக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள் முன் சென்றான்.
"சார் நீங்க எங்களை வேண்டுமென்றே அலட்சியம் செய்றீங்க?"
ருது வந்து நின்றதும் மூத்த நிருபர் கொந்தளித்தார்.
"ஒரு வழக்கு விசாரணையில் இருந்தேன்" என்று மற்ற பக்கம் பார்வையை திருப்பிக்கொண்டான் ருது.
"ஊரே கலவரமா இருக்கு இப்படி மெத்தனமா பதில் சொல்றீங்களே சார்?"
"ஸ்டேஷன் வெளியிலும் கலவரம் நடந்திருக்கும் போல?"
"எதுக்கு சார் காந்தாவை அரேஸ்ட் பண்ணீங்க?"
"எம்.எல்.ஏ சங்கரை கைது பண்ணியிருக்கீங்களா?"
"உண்மை காரணம் சொல்ல முடியுமா?"
"நேரடி தாக்குதலா?"
"பொய் வழக்கா?"
"பாப்புலர் ஆக ட்ரை பண்றீங்களா?"
ஆளாளுக்கு ஒலிவாங்கியை முன்னால் நீட்டியபடி சரமாரியாக கேள்விகளை எழுப்பிட...
"இத்தனை நாளும் சட்டம் தூங்குகிறதா? நகரை ஆட்டி வைக்கும் தனியொரு தாதா! குட்டி மன்னராட்சியே நடத்துகிறாரா? போலீஸ் வேலையே செய்யாதுன்னு பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டது நீங்கள் தானே?" எனக்கேட்ட ருது, "அதே சட்டம் தன் கடமையை செய்தால் அதற்கும் உங்கள் எண்ணப்படி கதை சொல்வீங்க அப்படித்தானே?" என்றான்.
சலசலப்பு குறைந்து மௌனமாகினர்.
"நீங்க உங்க வேலையை சரியா செய்யுங்கள். எங்க வேலையை எங்களுக்கு பார்க்கத் தெரியும்" என்று ஒருவித அழுத்தத்துடன் மொழிந்த ருது, "இதையே நான் கொடுத்த ஸ்டேட்மெண்டா போட்டுக்கோங்க" என்று அங்கிருந்து சென்றிருந்தான்.
அலைப்பேசி வாயிலாகவே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து காவல் நிலையங்களையும் தொடர்பு கொண்டு, கலவரத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் பாகுபாடின்றி கைது செய்யுமாறு உத்தரவிட்டான்.
இரண்டு மணி நேரத்தில் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான். வெங்கட், கிருஷ்ணன் காந்தா பேட்டைக்கு அருகில் வன்முறையில் ஈடுபட்டிருப்பவர்களை அமைதிப்படுத்தப் போராடிக் கொண்டிருந்தனர்.
கல்லெரிப்பு, கண்ணாடி உடைத்தல், கடையடைப்பு, சாலை மறியல், என வரம்பு மீறி நடந்து கொண்டிருந்தனர் காந்தாவின் ஆட்கள்.
கட்சி மூலமாக சங்கருக்கு எந்தவொரு ஆதரவும் கொடுக்கக்கூடாதென முதல்வர் வலியுறுத்தியிருந்ததால், சங்கரின் தொண்டர்கள் கொஞ்ச நேரம் கத்திவிட்டு, கட்சியிடமிருந்து எவ்வித தகவலும் இல்லாததால் கலைந்து சென்றிருந்தனர்.
நகரையே இரண்டாக்கிக் கொண்டிருந்தது காந்தாவின் பேட்டை கைலாஷ் ஆட்கள் தான்.
கலவரம் நடந்த பகுதிகளை ருது பார்வையிட்டபடி வர,
வெங்கட் அழைத்து, "சார் இங்க சமாளிக்க முடியல. இவனுங்க ரொம்ப பண்றானுங்க. மத்த இடத்திலாவது அடிச்சி உடைச்சி அமைதி ஆகிட்டானுங்க. ஆனால் இங்க பெட்ரோல் குண்டெல்லாம் போடுறானுங்க சார்" என்று கத்தினான்.
அடுத்த பத்தாவது நிமிடம் ருது காந்தா பேட்டையை சுற்றியுள்ள பகுதியை அடைத்திருந்தான்.
கலவரத்தை அடக்க ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் பலருக்கும் அடிப்பட்டிருந்தது. காயத்தை பொருட்படுத்தாது அப்போதும் முனைப்புடன் அவர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ருது வண்டியிலிருந்து இறங்கிட, எரிந்த நிலையில் டயர் ஒன்று உருண்டு வந்து விழுந்தது அவனது காலடியில்.
_______________
தொடர்ந்து விருப்பம் தெரிவித்து கருத்திட்டு ஆதரவு கொடுக்கும் வாசகர்களுக்கு நன்றி.
நிறை குறைகளை கீழுள்ள இணைப்பில் பகிர்ந்து கொள்ளுங்கள். நிறை ஊக்கப்படுத்தும். குறை திருத்திக்கொள்ள உதவும்.
தூரமே தூரமாய்-கருத்து திரி
Desh yarudaiya kuzhanthai,?Ruthuku nijama marriage aacha? Poi solrana?
aadvikapommunovels.com
Last edited: