பகுதி 30
ஓரு வாரத்திற்கு முன்பு...
"இந்த எலி தொல்லை பெரும் தொல்லையா இருக்கு, ஒருநாள் மருந்து வச்சா தான் சரி வரும்" என்று கடையின் முதலாளி புலம்பிக் கொண்டிருக்கும் போது சரியாக கடைக்குள் நுழைந்தாள் சங்கவி.
"வணக்கம் அண்ணா" என்று சொன்ன சங்கவியை பார்த்து ஒரு சிறு தலையசைப்புடன் "உள்ள போயி வேலையை பாருமா" என்று சொன்னான் அந்த முதலாளி.
ஒரு சிறிய உணவகத்தில் தான் இவள் வேலை செய்கிறாள். காய்கறி வெட்டிக் கொடுப்பது, உணவை பொட்டலம் கட்டுவது, உண்பவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வைப்பது என சின்ன சின்ன வேலைகளை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருப்பாள்.
காலை 8 மணிக்கு வேலைக்கு வருபவள் இரவு எட்டுமணி வரை அங்கு தான் இருப்பாள்.
அங்கு வேலை செய்பவர்களில் இவள் தான் சிறியவள், அதனால் அங்குள்ள அனைவரும் இவளிடம் பரிவாக நடந்து கொள்வார்கள். அதனால் வேலை பளு எவ்வளவுதான் இருந்தாலும் சிறு புன்னகையுடன் அந்த நாளை கடந்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவாள்.
அப்படியான ஒருநாளில்
எப்போதும்போல் இல்லாமல் அதீத முக வாட்டாத்துடன் தன் வீட்டுக்குள் நுழைந்தாள் சங்கவி.
எப்போதும் தன் பாட்டியின் நலனை கேட்டறிந்து கொண்ட பின்னே தன் அறை நோக்கி செல்பவளின் கால்கள் இன்று அன்னிசையாக அவளின் தாய், தந்தையின் புகைப்படத்தை நோக்கி நகர்ந்தது, இரு நொடி தாயின் முகத்தை பார்த்தவள், அப்படியே அந்த புகைப்படத்தின் கீழே அமர்ந்து கொண்டாள்.
சங்கவியின் முகவாட்டத்தை கவனித்த அவளது பாட்டி "என்னடா இவ்ளோ நேரம் ஆகிடுச்சு வேலை அதிகமா?" என்று கனிவாக கேட்டார். அவரது குரலில் கண்களை துடைத்துக் கொண்டு திரும்பினாள் சங்கவி.
"அப்படி எல்லாம் இல்ல பாட்டி"
"குரல் ஒரு மாதிரி இருக்கு உடம்பு எதுவும் சரி இல்லையா?"
"அப்படி எல்லாம் இல்லை பாட்டி" எல்லா கேள்விக்கும் ஒரே பதில் தான், கலங்கி இருந்த தன் கண்ணை மறைத்துக் கொண்டு பதில் கொடுத்தாள்.
"அப்புறம் எதுக்குடா வேலை விட்டு வந்ததில் இருந்து அப்படியே உட்கார்ந்து இருக்க? இன்னும் சாப்பிட கூட இல்லையே"
"பசிக்கல பாட்டி… நீ சாப்பிட்டாச்சா? தூங்கு, நான் குளிச்சுட்டு வந்து சாப்பிட்டுகிறேன்" என்றவள் மாற்று துணியை எடுத்துக் கொண்டு பின்பக்கம் இருக்கும் குளியல் அறை நோக்கி சென்றாள்.
"இந்த நேரத்தில் குளிச்சு உடம்புக்கு எதாவது வந்திட போகுது சங்கவிமா" என்று பாட்டி சொல்ல சொல்ல அதனை செவிமடுக்காமல் நேரகா குளியலறைக்குள் புகுந்தாள்.
அவள் குளித்து முடித்து விட்டு வெளியே வரவும், அந்நேரம் அவர்கள் வீட்டின் பின் பக்கம் ஏதோ உருட்டுவது போல சத்தம் கேட்டது.
அவள் திரும்பி பார்க்கவும் ஒருவன் அவர்கள் வீட்டு சுவரின் மீது ஏறி குதித்து எழுந்து நின்றான். திடுமென அவனை கண்டதும் ஒரு நொடி அப்படியே உறைந்து நின்றாள் பெண்ணவள், வார்த்தை கூட வெளிவர மறுத்தது. பயத்தில் பின்னால் நகர்ந்தவள் அங்கிருந்த வாளி மீது மோதினாள், அந்த சத்தத்தை கேட்ட அந்த புதியவன் நேராக அவளை நெருங்கி வர, உடனே "ஐயோ திருடன்" என்று கத்த வாயெடுத்தாள் சங்கவி,
அவனோ விரைந்து வந்து தன் ரத்தம் தோய்ந்த கரத்தினால் அவளது வாயை மூடியவன் "ஷ் கத்தாத" என்றான்.
அவளோ பயத்தில் மிடறு விழுங்கி அவனை பார்க்க, "வெளியே என்னை போலீஸ் தேடுது கொஞ்ச நேரத்தில் நானே இங்கே இருந்து போயிடுவேன், அதுவரை சத்தம் போடாதே" என்றவனை பிடித்து தள்ள பார்த்தாள்.
அவனும் அவளுக்கு இடைவெளி கொடுத்து விலகினான், மீண்டும் அவள் கத்த வாயெடுக்க, புறம் கையினால் ஓங்கி ஒரு அடி அவள் கன்னத்தில் விழுந்தது, அவன் அறைந்த வேகத்தில் அப்படியே பொத்தென்று கீழே விழுந்தாள் சங்கவி.
விழுந்த வேகத்தில் அவளது ஆடைகள் அலங்கோலமாக சரிந்து கிடக்க, கொடியில் கிடந்த ஒரு புடவையை தூக்கி அவள் மீது வீசியவன், தன் முதுகை பிடித்துக் கொண்டு அப்படியே அங்கிருந்த சுவரின் அருகே அமர்ந்தான்.
சுவர் எகிறி குதித்தில் கால் வேறு ஒரு பக்கம் பிடித்துக் கொண்டது போல, அது ஒரு பக்கம் வலி என்றால், முதுகில் வேலி கம்பி கிழித்ததால் ஏற்பட்ட காயத்தின் வலி வேறு உயிர் போகும் அளவுக்கு ரணமாக இருந்தது. இதில் இவளும் கத்தி கூப்பாடு போடுகிறாளே என்ற எண்ணத்தில் தான் அடித்து விட்டான்.
சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் அங்கு மயங்கி கிடந்த சங்கவியை கண்டான். 'இன்னும் எழுந்திருக்காமல் இருக்கா? ஒருவேளை செத்துகித்து போயிட்டாளா' என்று தனக்குள் பேசிக்கொண்டவன், தன் அருகில் இருந்த பக்கெட்டில் இருந்து நீரை கோரி அவள் முகத்தில் ஊற்றினான்.
முகத்தில் தண்ணீர் படவும் கண் விழித்து கொண்டவள் மீண்டும் அவனை கண்டு மிரண்டு கத்த போக, அவனோ மறுபடியும் தண்ணீரை கோரி அவள் முகத்தில் ஊற்றினான் "கத்தாதன்னு சொன்னா புரியாதா உனக்கு?" என்றவனை இரண்டு நொடி அமைதியாக பார்த்தவள் மெதுவாக அவன் அசந்த நேரம் வீட்டுக்குள் செல்ல பார்த்தாள்.
வலி பொறுக்க முடியாமல் கண் மூடி கிடந்தவன், அவளது கொலுசு சத்தம் கேட்டதும் தன்னை கடந்து சென்றவளின் காலை வலுவாக பிடித்து நிறுத்தினான்.
கதவருகே அமர்ந்து இருந்தவன், தலை உயர்த்தி அவளை பார்க்க "என்னை விடு" என்று காலை உதறினாள் சங்கவி.
அவள் உதறிய வேகத்தில் மேலும் கோவமானவன் அவளது காலை பிடித்து இழுக்க வலுவிழந்து தடுமாறியவள் அப்படியே கீழே விழுந்தாள்.
சிறு இடைவெளியில் தலையானது தரையில் மோதாமல் தப்பித்தாள்.
அதை எண்ணி நிம்மதியடைய கூட விடாமல் அருகில் இருந்த கொடியவன் அவளது தாடையை வலிக்க பற்றி இருந்தான்.
"அமைதியா இருந்தா உன்னை அப்படியே விட்டுட்டு போயிடுவேன்… இல்லை கத்தி கூப்பாடு போட்டு ஊரை கூட்டுவேன்னு சண்டித்தனம் பண்ணன்னு வையேன், சத்தம் கேட்டு இப்போ வந்து போலீஸ் என்னை பிடிச்சிடும், ஆனா ஒரு நாள் கண்டிப்பா நான் திரும்பி வெளியே வருவேன், அப்படி வந்தேன்னா அப்புறம் உன்னை உரு தெரியாம சிதைச்சிடுவேன்… யோசிச்சு அப்புறம் கத்தி ஊரை கூப்பிடு" என்றவன் அவளை விடுத்து அமைதியாக கண்களை மூடி சுவரில் சாய முற்பட்டான், அதனால் அதீத வலியால் பல்லை கடித்துக் கொண்டு பெரு மூச்சு விட்டான்.
"ஸ்ஆ" என்று முதுகை பிடித்துக் கொண்டு அவன் கத்தவும், அவன் அருகில் கல் குண்டு போல அமர்ந்து இருந்தாள் சங்கவி.
அவனை கண்டு சிறிதும் அவள் பரிதாப படவில்லை… அதனை அவனும் எதிர்பார்க்கவில்லை இருந்தும் இந்த காயத்துக்கு மருந்தாக ஏதாவது கிடைத்தால் நலமாக இருக்குமே என்ற எண்ணத்தில் அவளது முகத்தை நேருக்கு நேராக பார்த்தான்.
கலங்கம் இல்லாத அந்த பிறை முகத்தின் கண்கள் கவலைகளை சுமந்தபடி இருந்தது.
அதனை உணர்ந்தவன் தன் வலிகளை மறந்து "உனக்கு ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்டான்.
இப்போதைக்கு அவளது பிரதான பிரச்சனையாக நாம் நினைக்க கூடிய இவனே அவளிடம் 'என்ன பிரச்சனை?' என்று கேட்க…
'உன்னை மீறிய பிரச்சனையில் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்… நீயோ! இல்லை இப்போது நாம் இருக்கும் இந்த சூழ்நிலையோ! இதை எல்லாம் சிந்திக்க கூட மனமில்லாமல் தவிக்கும் ஒரு வாழ்க்கையை தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்' என்பது போல விரக்தியாக அவனை ஒரு பார்வை பார்த்தாள் அந்த பதினேழு வயது இளம் பெண்.
அந்த பார்வைக்கான அர்த்தம் இவனுக்கு விளங்கவில்லை… ஆயினும் அந்த பார்வை இவனது மனதை சற்று அசைத்து பார்த்தது.
இருமுறை இமை தட்டி முழித்தவன் "காயத்துக்கு போட மருந்து ஏதாவது வச்சு இருக்கியா?" என்று கேட்டான்.
"ஹான்" சட்டென கேட்டதும் அவளுக்கு விளங்கவில்லை.
"மருந்து இருக்கான்னு கேட்டேன்"
"எதுக்கு?" என்று அவள் கேட்டதும்… தன் சட்டை பட்டனில் கை வைத்து, அதனை கழட்ட ஆரம்பித்தான்.
"என்ன பண்ணுற" என்றவள் அமர்ந்தபடியே ஒரு அடி தள்ளி நகர, அவளை சலிப்பாக ஒரு பார்வை பார்த்தவன் கடினப்பட்டு தன் சட்டையை கழட்டி முதுகு புறத்தை காட்டினான்.
வேலி கம்பி நன்றாக குத்தி கிழித்ததில் சதை வரை ஆழமாக காயம் ஏற்பட்டிருந்தது… இன்னும் அவ்விடத்தில் எல்லாம் ரத்தம் கசிந்த வண்ணம் இருக்க… மிடறு விழுங்கி முகம் சுளித்தாள் பெண்ணவள்.
ஒருபக்கம் அவனை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் "மருந்து கொடுத்தா இங்கிருந்து போயிடுவீங்க தானே?" என்று மெதுவாக கேட்டாள்.
"ம்ம்ம்" என்ற ஒரு ஒலி மட்டுமே அவனிடம் இருந்து பதிலாக வந்தது.
'தனியாக வேறு இருக்கிறோம், இவன் வேறு பார்ப்பதற்கே பொறுக்கி போல இருக்கிறான். இப்போது கத்தி கூப்பாடு போட்டு இவனை பிடித்து கொடுத்து விட்டோம் என்றால், நாளை இவன் சொன்னது போலவே திரும்பி வந்து நம்மை ஏதாவது செய்து விட்டால் என்னவாவது? அதனால் இப்போதைக்கு பொறுமையாகவே இருப்போம்… எப்படியாவது ஆர்ப்பாட்டமில்லாமல் இவனை இங்கிருந்து அனுப்பி வைத்து விடுவோம். அது தான் நமக்கு நல்லது' என்று யோசனை செய்து கொண்ட சங்கவி அமைதியாக உள்ளே சென்று மஞ்சளை எடுத்துக் கொண்டு வந்தாள்.
உள்ளே அவள் பாட்டி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். உள்ளே சென்ற சங்கவியை நோட்டமிட்டு கொண்டே பின்னே வந்து நின்றான் அந்த கொடியவன்.
"இங்க எதுக்கு வந்தீங்க?" என்றவள் அதீத பயத்தில் அவளது பாட்டியை பார்க்க…
"இது யாரு?" என்று அவளது பாட்டியை குறிப்பிட்டு கேட்டான் அவன்.
"அவங்க என் பாட்டி… அவங்களை எதுவும் பண்ணிடாதீங்க"
"நாளைக்கு சாகபோற கிழவியை கொன்னுட்டு ஜெயிலுக்கு போற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை… அப்படியே வெளியே போயி, என்னை பத்தி சொல்லி உதவிக்கு யாரையும் கூப்பிட்டு வந்திடுவியோன்னு நினைச்சு தான் உன் பின்னாடி வந்தேன்… சரி வா பின் பக்கம் போலாம்"
"நான் எதுக்கு வரணும்? இந்தாங்க இது மஞ்சள் பொடி இதை காயத்துல போட்டுட்டு இங்கயிருந்து கிளம்புங்க"
"உன்னை நான் நம்புறதா இல்லை… வா" என்றவன் அவளது கரத்தை பிடிக்க போக, விலகி கொண்டாள்.
"ஏய் ரொம்ப பண்ணாத என்னால ரொம்ப நேரம் நிற்க முடியல… இப்படியே பண்ணிட்டு இருந்தன்னு வையேன், ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைன்னு அங்க இருக்க அம்மி கல்லை தூக்கி அந்த கிழவி மண்டையில் போட்டு கொன்னுருவேன்" என்றதும் சிறுபிள்ளை மிரண்டது.
இவன் இருக்கும் உடல் நிலைக்கு இதுவெல்லாம் அவனால் செய்ய முடியுமா என்று கூட சிந்திக்க முடியாத பேதையாகி நின்றாள் சங்கவி. அவளது வயதின் முதிர்ச்சி அவ்வளவு தான்.
அவன் சொல்லிற்கேற்ப இருவரும் வீட்டின் பின் புறம் வந்தனர். அப்போது அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்தான் அந்த கொடியவன்.
சங்கவியோ அவனை விட்டு இரு அடி தள்ளி நின்று கொண்டிருந்தாள்.
மஞ்சள் தூளை எடுத்து தன் முதுகில் உள்ள காயத்தில் போட பார்த்தான் அக்கொடியவன், ஆனால் முடியவில்லை, வெகு நேரம் முயன்றான், அந்நேரம் சங்கவியோ அமைதியாக எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது உடல் இங்கிருந்த போதும் மனமோ இன்று மாலை கடையில் நடந்த அந்த சம்பவத்தை அசைபோட்டுக் கொண்டிருந்தது.
சங்கவி வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் கழிவறைக்கு தாழ்ப்பாள் கிடையாது. நான்கு நாட்களுக்கு முன்பு தான் அது உடைந்தது அதனை இன்னும் யாரும் சரி செய்யவில்லை. அதனால் எப்போதும் கவனமாக தான் உள்ளே சென்று விட்டு வெளியே வருவாள் சங்கவி.
பெண் பிள்ளை ஒன்று இங்கு வேலை செய்கிறது என்ற காரணத்தால் அங்கு பணிபுரியும் சக ஊழியர்களும் கூட கொஞ்சம் கவனமாக தான் அங்கு சென்று வருவார்கள். சிறு தயக்கமும் இருக்கும். அதனாலயே சங்கவி எப்போது உள்ளே சென்றாலும் கதவின் மேல் தன் துப்பட்டாவை போட்டு வைத்து விடுவாள். அதனை பார்த்த பிறரும் சரியாக கவனித்து கொண்டு மற்றவர்கள் அங்கிருந்து சென்று விடுவார்கள்.
இன்று அந்த கடையின் முதலாளி சங்கவியை தனியே அழைத்து ஒரு சுடிதாரை பரிசாக கொடுத்தார். ஆரம்பத்தில் அவள் அதனை வாங்க மறுத்தாள், பின்னர் வேறு வழியின்று அதனை வாங்கிக் கொண்டாள்.
எப்போதும் இல்லாத திருநாளாக "சாப்பாடு போடு கவி" என்று சொன்னான் அந்த முதலாளி.
அவன் கேட்டவிதம் பெண்ணவளுக்கு வினோதமாக இருந்தது.
உணவகத்துக்கு ஒட்டி மறைவாக இருந்த ஒரு அறையில் முதலாளி அமர்ந்திருக்க… இலையை எடுத்துக் கொண்டு வந்து போட்டாள் சங்கவி.
"அண்ணா முதலாளிக்கு பரிமாறனும்" என்று கஷ்டமார்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்த ஒருவனிடம் கூறினாள். அவனுக்கோ பெரும் ஆச்சர்யம் 'முதலாளி எப்பவும் இங்க சாப்பிட மாட்டாரே' என்று யோசித்தவன் சந்தேகமாக உள்ளே வரவும்… சிரித்தார் போல முகத்தை வைத்துக் கொண்டு அங்கு உணவுக்காக இலையை வைத்துக் கொண்டு காத்திருந்தார் முதலாளி.
இவனும் கூட்டு, பொரியல் அடுத்து சாதம் என பறிமாறினான். சாம்பார் வாளியை எடுத்து வைத்தவன் அதனை சாதத்தில் ஊற்ற போகவும் கையை வைத்து தடுத்து அவனை பார்த்து ஒரு முறை முறைத்தார் அந்த முதலாளி.
'வெளியே போ' என்று பார்வையாலே அவனை அங்கிருந்து அனுப்பி வைக்க… பாவம் போல ஓரத்தில் நின்ற சங்கவியை ஏதோ போல பார்த்து விட்டு அவனும் அங்கிருந்து சென்றான்.
"அவனுக்கு வெளியே வேலை இருக்கும் கவி… நீ வா வந்து சாம்பாரை ஊத்து" என்ற முதலாளி சாதத்தை விரவியபடி சங்கவியை ஒரு மார்க்கமாக பார்த்தான்.
அவளும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு சாம்பாரை எடுத்து ஊற்ற போகவும், அவளது கரத்தை பிடித்தவன் 'இப்படி ஊத்தனும் கவி" என்று அவள் கரத்தை வளைக்க… அந்த நொடி அவனது இன்னொரு கரம், பாவையின் உடல் மீது உரசி சென்றது, அதனை உணர்ந்த பெண்ணவளின் உடல் கூசி போனது… உடனே அங்கம் அதிர்ந்து கரத்தை உதறினாள், அதன் விளைவாக அவளது உடை மீது சாம்பார் கொட்டியது.
"ஐயோ கவி என்ன இப்படி பண்ணிட்ட?... சரி போ போயி சுத்தம் பண்ணிட்டு வா போ" என்றவன் அவளை தொட்டு தொட்டு அருகில் வர, வேகமாக வெளியே வந்த பெண்ணவளின் கண்களில் தன்னிசையாக கண்ணீர் வழிந்தோடியது.
நேராக கழிவறைக்குள் புகுந்தவள், தன் துப்பட்டாவை எடுத்து கதவில் போட்டு விட்டு, அழுது கொண்டே தன் மேல் சிந்தி இருந்த சாம்பாரை துடைக்க ஆரம்பித்தாள்.
ஏனோ மனம் எல்லாம் பதறியது… இப்போதே இங்கிருந்து சென்று விட வேண்டும் என்பது போல இருந்தது. இந்த சூழ்நிலையை மேலும் சங்கடமாக்கும் விதமாக பட்டென கழிவறை கதவுகளை திறந்து கொண்டு உள்ளே வந்திருந்தான் அந்த முதலாளி.
அவனை கண்டு அதிர்ந்து போனவளின் உடல் கூசி போனது.
"சுத்தம் பண்ணிட்டியா கவி… சும்மா பார்க்கலாம்னு தான் வந்தேன்…" என்று சொன்னபடி அவளை மேலும் கீழும் பார்த்தவன் "நல்லா சுத்தம் பண்ணல போலயே… இதோ இங்க என்னமோ இருக்கு பாரு" என்று சொல்லி அவள் மார்பில் கை வைக்க, துடித்து போனவள், அவனை தள்ளி விட்டுவிட்டு அழுது கொண்டே வெளியே வந்தாள்.
வெளியே இருந்தவர்கள் நனைத்தபடி வெளியே வந்த அவளை ஒரு மாதிரி பார்த்தனர். அப்போது அங்கு பணிபுரியும் ஒருவன் "என்ன ஆச்சுமா" என்று கேட்டான்.
நடந்ததை வெளியே சொல்ல அவமானமாக இருந்ததால் "பாத்ரூம்ல விழுந்துட்டேன்" என்று கூறியடி நேரத்தை பார்த்தாள். மணி இரவு 8.15, உடனே "நான் கிளம்புறேன் அண்ணா" என்று கூறிவிட்டு யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினாள் சங்கவி.
அந்த முதலாளியோ கதவில் கிடந்த சங்கவியின் துப்பட்டாவை எடுத்து முகத்தில் வைத்து முகர்ந்து பார்த்தபடி கண் சொருகி நின்றான்.
நடந்த இதனை எல்லாம் நினைத்து பார்த்தபடி அமர்ந்திருந்த சங்கவியின் கண்களில் சட்டென ஒரு துளி கண்ணீர் வழிய, அதனை கவனித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் அந்த கொடியவன்.
"இப்போ எதுக்கு அழற?" என்று கேட்டான் அவன், அவளிடம் பதில் இல்லை… இன்னும் அழுது கொண்டே இருந்தாள். உடனே "ஏய் உன்னை தான்" என்றவன் அவளது கரத்தை பிடிக்க… "ச்சீ" என்று கூறி கேவலமாக அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
அந்த பார்வை இவனது சுயமரியாதையை சீண்டியது. "இப்போ எதுக்கு ச்சீ ங்குற?" கோவமாக கேட்டான், அவளோ எந்த பதிலும் சொல்லவில்லை அப்படியே அமைதியாக அவனை கடந்து சென்று, அவனை வெளியே விடுத்து விட்டு பின் வாசல் கதவை சட்டென மூடினாள்.
"நான் யார் கிட்டயும் உங்களை பத்தி சொல்ல மாட்டேன்… இருக்குற பிரச்சனையே எனக்கு போதும்… தயவு செய்து இங்கேயிருந்து போயிடுங்க" என்று கூறியவள் அமைதியாக உள்ளே வந்து தன் பாட்டியின் அருகில் ஒரு பாயை விரித்து படுத்துக் கொண்டாள்.
அடுத்தநாள் அவள் எழுந்து வெளியே வர, அந்த கொடியவன் அங்கு இல்லை… ஆனால் அங்கு சிதறி கிடந்த மஞ்சள் தூளும், ரத்த கசடும் அவனை இவளுக்கு நியாபகப்படுத்தியது. பாட்டி எழுந்து வெளியே வரும் முன்னே அவ்விடத்தை சுத்தம் செய்து முடித்தவள் இன்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள்.
ஓரு வாரத்திற்கு முன்பு...
"இந்த எலி தொல்லை பெரும் தொல்லையா இருக்கு, ஒருநாள் மருந்து வச்சா தான் சரி வரும்" என்று கடையின் முதலாளி புலம்பிக் கொண்டிருக்கும் போது சரியாக கடைக்குள் நுழைந்தாள் சங்கவி.
"வணக்கம் அண்ணா" என்று சொன்ன சங்கவியை பார்த்து ஒரு சிறு தலையசைப்புடன் "உள்ள போயி வேலையை பாருமா" என்று சொன்னான் அந்த முதலாளி.
ஒரு சிறிய உணவகத்தில் தான் இவள் வேலை செய்கிறாள். காய்கறி வெட்டிக் கொடுப்பது, உணவை பொட்டலம் கட்டுவது, உண்பவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வைப்பது என சின்ன சின்ன வேலைகளை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருப்பாள்.
காலை 8 மணிக்கு வேலைக்கு வருபவள் இரவு எட்டுமணி வரை அங்கு தான் இருப்பாள்.
அங்கு வேலை செய்பவர்களில் இவள் தான் சிறியவள், அதனால் அங்குள்ள அனைவரும் இவளிடம் பரிவாக நடந்து கொள்வார்கள். அதனால் வேலை பளு எவ்வளவுதான் இருந்தாலும் சிறு புன்னகையுடன் அந்த நாளை கடந்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவாள்.
அப்படியான ஒருநாளில்
எப்போதும்போல் இல்லாமல் அதீத முக வாட்டாத்துடன் தன் வீட்டுக்குள் நுழைந்தாள் சங்கவி.
எப்போதும் தன் பாட்டியின் நலனை கேட்டறிந்து கொண்ட பின்னே தன் அறை நோக்கி செல்பவளின் கால்கள் இன்று அன்னிசையாக அவளின் தாய், தந்தையின் புகைப்படத்தை நோக்கி நகர்ந்தது, இரு நொடி தாயின் முகத்தை பார்த்தவள், அப்படியே அந்த புகைப்படத்தின் கீழே அமர்ந்து கொண்டாள்.
சங்கவியின் முகவாட்டத்தை கவனித்த அவளது பாட்டி "என்னடா இவ்ளோ நேரம் ஆகிடுச்சு வேலை அதிகமா?" என்று கனிவாக கேட்டார். அவரது குரலில் கண்களை துடைத்துக் கொண்டு திரும்பினாள் சங்கவி.
"அப்படி எல்லாம் இல்ல பாட்டி"
"குரல் ஒரு மாதிரி இருக்கு உடம்பு எதுவும் சரி இல்லையா?"
"அப்படி எல்லாம் இல்லை பாட்டி" எல்லா கேள்விக்கும் ஒரே பதில் தான், கலங்கி இருந்த தன் கண்ணை மறைத்துக் கொண்டு பதில் கொடுத்தாள்.
"அப்புறம் எதுக்குடா வேலை விட்டு வந்ததில் இருந்து அப்படியே உட்கார்ந்து இருக்க? இன்னும் சாப்பிட கூட இல்லையே"
"பசிக்கல பாட்டி… நீ சாப்பிட்டாச்சா? தூங்கு, நான் குளிச்சுட்டு வந்து சாப்பிட்டுகிறேன்" என்றவள் மாற்று துணியை எடுத்துக் கொண்டு பின்பக்கம் இருக்கும் குளியல் அறை நோக்கி சென்றாள்.
"இந்த நேரத்தில் குளிச்சு உடம்புக்கு எதாவது வந்திட போகுது சங்கவிமா" என்று பாட்டி சொல்ல சொல்ல அதனை செவிமடுக்காமல் நேரகா குளியலறைக்குள் புகுந்தாள்.
அவள் குளித்து முடித்து விட்டு வெளியே வரவும், அந்நேரம் அவர்கள் வீட்டின் பின் பக்கம் ஏதோ உருட்டுவது போல சத்தம் கேட்டது.
அவள் திரும்பி பார்க்கவும் ஒருவன் அவர்கள் வீட்டு சுவரின் மீது ஏறி குதித்து எழுந்து நின்றான். திடுமென அவனை கண்டதும் ஒரு நொடி அப்படியே உறைந்து நின்றாள் பெண்ணவள், வார்த்தை கூட வெளிவர மறுத்தது. பயத்தில் பின்னால் நகர்ந்தவள் அங்கிருந்த வாளி மீது மோதினாள், அந்த சத்தத்தை கேட்ட அந்த புதியவன் நேராக அவளை நெருங்கி வர, உடனே "ஐயோ திருடன்" என்று கத்த வாயெடுத்தாள் சங்கவி,
அவனோ விரைந்து வந்து தன் ரத்தம் தோய்ந்த கரத்தினால் அவளது வாயை மூடியவன் "ஷ் கத்தாத" என்றான்.
அவளோ பயத்தில் மிடறு விழுங்கி அவனை பார்க்க, "வெளியே என்னை போலீஸ் தேடுது கொஞ்ச நேரத்தில் நானே இங்கே இருந்து போயிடுவேன், அதுவரை சத்தம் போடாதே" என்றவனை பிடித்து தள்ள பார்த்தாள்.
அவனும் அவளுக்கு இடைவெளி கொடுத்து விலகினான், மீண்டும் அவள் கத்த வாயெடுக்க, புறம் கையினால் ஓங்கி ஒரு அடி அவள் கன்னத்தில் விழுந்தது, அவன் அறைந்த வேகத்தில் அப்படியே பொத்தென்று கீழே விழுந்தாள் சங்கவி.
விழுந்த வேகத்தில் அவளது ஆடைகள் அலங்கோலமாக சரிந்து கிடக்க, கொடியில் கிடந்த ஒரு புடவையை தூக்கி அவள் மீது வீசியவன், தன் முதுகை பிடித்துக் கொண்டு அப்படியே அங்கிருந்த சுவரின் அருகே அமர்ந்தான்.
சுவர் எகிறி குதித்தில் கால் வேறு ஒரு பக்கம் பிடித்துக் கொண்டது போல, அது ஒரு பக்கம் வலி என்றால், முதுகில் வேலி கம்பி கிழித்ததால் ஏற்பட்ட காயத்தின் வலி வேறு உயிர் போகும் அளவுக்கு ரணமாக இருந்தது. இதில் இவளும் கத்தி கூப்பாடு போடுகிறாளே என்ற எண்ணத்தில் தான் அடித்து விட்டான்.
சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவன் அங்கு மயங்கி கிடந்த சங்கவியை கண்டான். 'இன்னும் எழுந்திருக்காமல் இருக்கா? ஒருவேளை செத்துகித்து போயிட்டாளா' என்று தனக்குள் பேசிக்கொண்டவன், தன் அருகில் இருந்த பக்கெட்டில் இருந்து நீரை கோரி அவள் முகத்தில் ஊற்றினான்.
முகத்தில் தண்ணீர் படவும் கண் விழித்து கொண்டவள் மீண்டும் அவனை கண்டு மிரண்டு கத்த போக, அவனோ மறுபடியும் தண்ணீரை கோரி அவள் முகத்தில் ஊற்றினான் "கத்தாதன்னு சொன்னா புரியாதா உனக்கு?" என்றவனை இரண்டு நொடி அமைதியாக பார்த்தவள் மெதுவாக அவன் அசந்த நேரம் வீட்டுக்குள் செல்ல பார்த்தாள்.
வலி பொறுக்க முடியாமல் கண் மூடி கிடந்தவன், அவளது கொலுசு சத்தம் கேட்டதும் தன்னை கடந்து சென்றவளின் காலை வலுவாக பிடித்து நிறுத்தினான்.
கதவருகே அமர்ந்து இருந்தவன், தலை உயர்த்தி அவளை பார்க்க "என்னை விடு" என்று காலை உதறினாள் சங்கவி.
அவள் உதறிய வேகத்தில் மேலும் கோவமானவன் அவளது காலை பிடித்து இழுக்க வலுவிழந்து தடுமாறியவள் அப்படியே கீழே விழுந்தாள்.
சிறு இடைவெளியில் தலையானது தரையில் மோதாமல் தப்பித்தாள்.
அதை எண்ணி நிம்மதியடைய கூட விடாமல் அருகில் இருந்த கொடியவன் அவளது தாடையை வலிக்க பற்றி இருந்தான்.
"அமைதியா இருந்தா உன்னை அப்படியே விட்டுட்டு போயிடுவேன்… இல்லை கத்தி கூப்பாடு போட்டு ஊரை கூட்டுவேன்னு சண்டித்தனம் பண்ணன்னு வையேன், சத்தம் கேட்டு இப்போ வந்து போலீஸ் என்னை பிடிச்சிடும், ஆனா ஒரு நாள் கண்டிப்பா நான் திரும்பி வெளியே வருவேன், அப்படி வந்தேன்னா அப்புறம் உன்னை உரு தெரியாம சிதைச்சிடுவேன்… யோசிச்சு அப்புறம் கத்தி ஊரை கூப்பிடு" என்றவன் அவளை விடுத்து அமைதியாக கண்களை மூடி சுவரில் சாய முற்பட்டான், அதனால் அதீத வலியால் பல்லை கடித்துக் கொண்டு பெரு மூச்சு விட்டான்.
"ஸ்ஆ" என்று முதுகை பிடித்துக் கொண்டு அவன் கத்தவும், அவன் அருகில் கல் குண்டு போல அமர்ந்து இருந்தாள் சங்கவி.
அவனை கண்டு சிறிதும் அவள் பரிதாப படவில்லை… அதனை அவனும் எதிர்பார்க்கவில்லை இருந்தும் இந்த காயத்துக்கு மருந்தாக ஏதாவது கிடைத்தால் நலமாக இருக்குமே என்ற எண்ணத்தில் அவளது முகத்தை நேருக்கு நேராக பார்த்தான்.
கலங்கம் இல்லாத அந்த பிறை முகத்தின் கண்கள் கவலைகளை சுமந்தபடி இருந்தது.
அதனை உணர்ந்தவன் தன் வலிகளை மறந்து "உனக்கு ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்டான்.
இப்போதைக்கு அவளது பிரதான பிரச்சனையாக நாம் நினைக்க கூடிய இவனே அவளிடம் 'என்ன பிரச்சனை?' என்று கேட்க…
'உன்னை மீறிய பிரச்சனையில் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்… நீயோ! இல்லை இப்போது நாம் இருக்கும் இந்த சூழ்நிலையோ! இதை எல்லாம் சிந்திக்க கூட மனமில்லாமல் தவிக்கும் ஒரு வாழ்க்கையை தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்' என்பது போல விரக்தியாக அவனை ஒரு பார்வை பார்த்தாள் அந்த பதினேழு வயது இளம் பெண்.
அந்த பார்வைக்கான அர்த்தம் இவனுக்கு விளங்கவில்லை… ஆயினும் அந்த பார்வை இவனது மனதை சற்று அசைத்து பார்த்தது.
இருமுறை இமை தட்டி முழித்தவன் "காயத்துக்கு போட மருந்து ஏதாவது வச்சு இருக்கியா?" என்று கேட்டான்.
"ஹான்" சட்டென கேட்டதும் அவளுக்கு விளங்கவில்லை.
"மருந்து இருக்கான்னு கேட்டேன்"
"எதுக்கு?" என்று அவள் கேட்டதும்… தன் சட்டை பட்டனில் கை வைத்து, அதனை கழட்ட ஆரம்பித்தான்.
"என்ன பண்ணுற" என்றவள் அமர்ந்தபடியே ஒரு அடி தள்ளி நகர, அவளை சலிப்பாக ஒரு பார்வை பார்த்தவன் கடினப்பட்டு தன் சட்டையை கழட்டி முதுகு புறத்தை காட்டினான்.
வேலி கம்பி நன்றாக குத்தி கிழித்ததில் சதை வரை ஆழமாக காயம் ஏற்பட்டிருந்தது… இன்னும் அவ்விடத்தில் எல்லாம் ரத்தம் கசிந்த வண்ணம் இருக்க… மிடறு விழுங்கி முகம் சுளித்தாள் பெண்ணவள்.
ஒருபக்கம் அவனை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் "மருந்து கொடுத்தா இங்கிருந்து போயிடுவீங்க தானே?" என்று மெதுவாக கேட்டாள்.
"ம்ம்ம்" என்ற ஒரு ஒலி மட்டுமே அவனிடம் இருந்து பதிலாக வந்தது.
'தனியாக வேறு இருக்கிறோம், இவன் வேறு பார்ப்பதற்கே பொறுக்கி போல இருக்கிறான். இப்போது கத்தி கூப்பாடு போட்டு இவனை பிடித்து கொடுத்து விட்டோம் என்றால், நாளை இவன் சொன்னது போலவே திரும்பி வந்து நம்மை ஏதாவது செய்து விட்டால் என்னவாவது? அதனால் இப்போதைக்கு பொறுமையாகவே இருப்போம்… எப்படியாவது ஆர்ப்பாட்டமில்லாமல் இவனை இங்கிருந்து அனுப்பி வைத்து விடுவோம். அது தான் நமக்கு நல்லது' என்று யோசனை செய்து கொண்ட சங்கவி அமைதியாக உள்ளே சென்று மஞ்சளை எடுத்துக் கொண்டு வந்தாள்.
உள்ளே அவள் பாட்டி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். உள்ளே சென்ற சங்கவியை நோட்டமிட்டு கொண்டே பின்னே வந்து நின்றான் அந்த கொடியவன்.
"இங்க எதுக்கு வந்தீங்க?" என்றவள் அதீத பயத்தில் அவளது பாட்டியை பார்க்க…
"இது யாரு?" என்று அவளது பாட்டியை குறிப்பிட்டு கேட்டான் அவன்.
"அவங்க என் பாட்டி… அவங்களை எதுவும் பண்ணிடாதீங்க"
"நாளைக்கு சாகபோற கிழவியை கொன்னுட்டு ஜெயிலுக்கு போற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்லை… அப்படியே வெளியே போயி, என்னை பத்தி சொல்லி உதவிக்கு யாரையும் கூப்பிட்டு வந்திடுவியோன்னு நினைச்சு தான் உன் பின்னாடி வந்தேன்… சரி வா பின் பக்கம் போலாம்"
"நான் எதுக்கு வரணும்? இந்தாங்க இது மஞ்சள் பொடி இதை காயத்துல போட்டுட்டு இங்கயிருந்து கிளம்புங்க"
"உன்னை நான் நம்புறதா இல்லை… வா" என்றவன் அவளது கரத்தை பிடிக்க போக, விலகி கொண்டாள்.
"ஏய் ரொம்ப பண்ணாத என்னால ரொம்ப நேரம் நிற்க முடியல… இப்படியே பண்ணிட்டு இருந்தன்னு வையேன், ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்லைன்னு அங்க இருக்க அம்மி கல்லை தூக்கி அந்த கிழவி மண்டையில் போட்டு கொன்னுருவேன்" என்றதும் சிறுபிள்ளை மிரண்டது.
இவன் இருக்கும் உடல் நிலைக்கு இதுவெல்லாம் அவனால் செய்ய முடியுமா என்று கூட சிந்திக்க முடியாத பேதையாகி நின்றாள் சங்கவி. அவளது வயதின் முதிர்ச்சி அவ்வளவு தான்.
அவன் சொல்லிற்கேற்ப இருவரும் வீட்டின் பின் புறம் வந்தனர். அப்போது அமர்ந்திருந்த அதே இடத்தில் அமர்ந்தான் அந்த கொடியவன்.
சங்கவியோ அவனை விட்டு இரு அடி தள்ளி நின்று கொண்டிருந்தாள்.
மஞ்சள் தூளை எடுத்து தன் முதுகில் உள்ள காயத்தில் போட பார்த்தான் அக்கொடியவன், ஆனால் முடியவில்லை, வெகு நேரம் முயன்றான், அந்நேரம் சங்கவியோ அமைதியாக எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது உடல் இங்கிருந்த போதும் மனமோ இன்று மாலை கடையில் நடந்த அந்த சம்பவத்தை அசைபோட்டுக் கொண்டிருந்தது.
சங்கவி வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் கழிவறைக்கு தாழ்ப்பாள் கிடையாது. நான்கு நாட்களுக்கு முன்பு தான் அது உடைந்தது அதனை இன்னும் யாரும் சரி செய்யவில்லை. அதனால் எப்போதும் கவனமாக தான் உள்ளே சென்று விட்டு வெளியே வருவாள் சங்கவி.
பெண் பிள்ளை ஒன்று இங்கு வேலை செய்கிறது என்ற காரணத்தால் அங்கு பணிபுரியும் சக ஊழியர்களும் கூட கொஞ்சம் கவனமாக தான் அங்கு சென்று வருவார்கள். சிறு தயக்கமும் இருக்கும். அதனாலயே சங்கவி எப்போது உள்ளே சென்றாலும் கதவின் மேல் தன் துப்பட்டாவை போட்டு வைத்து விடுவாள். அதனை பார்த்த பிறரும் சரியாக கவனித்து கொண்டு மற்றவர்கள் அங்கிருந்து சென்று விடுவார்கள்.
இன்று அந்த கடையின் முதலாளி சங்கவியை தனியே அழைத்து ஒரு சுடிதாரை பரிசாக கொடுத்தார். ஆரம்பத்தில் அவள் அதனை வாங்க மறுத்தாள், பின்னர் வேறு வழியின்று அதனை வாங்கிக் கொண்டாள்.
எப்போதும் இல்லாத திருநாளாக "சாப்பாடு போடு கவி" என்று சொன்னான் அந்த முதலாளி.
அவன் கேட்டவிதம் பெண்ணவளுக்கு வினோதமாக இருந்தது.
உணவகத்துக்கு ஒட்டி மறைவாக இருந்த ஒரு அறையில் முதலாளி அமர்ந்திருக்க… இலையை எடுத்துக் கொண்டு வந்து போட்டாள் சங்கவி.
"அண்ணா முதலாளிக்கு பரிமாறனும்" என்று கஷ்டமார்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்த ஒருவனிடம் கூறினாள். அவனுக்கோ பெரும் ஆச்சர்யம் 'முதலாளி எப்பவும் இங்க சாப்பிட மாட்டாரே' என்று யோசித்தவன் சந்தேகமாக உள்ளே வரவும்… சிரித்தார் போல முகத்தை வைத்துக் கொண்டு அங்கு உணவுக்காக இலையை வைத்துக் கொண்டு காத்திருந்தார் முதலாளி.
இவனும் கூட்டு, பொரியல் அடுத்து சாதம் என பறிமாறினான். சாம்பார் வாளியை எடுத்து வைத்தவன் அதனை சாதத்தில் ஊற்ற போகவும் கையை வைத்து தடுத்து அவனை பார்த்து ஒரு முறை முறைத்தார் அந்த முதலாளி.
'வெளியே போ' என்று பார்வையாலே அவனை அங்கிருந்து அனுப்பி வைக்க… பாவம் போல ஓரத்தில் நின்ற சங்கவியை ஏதோ போல பார்த்து விட்டு அவனும் அங்கிருந்து சென்றான்.
"அவனுக்கு வெளியே வேலை இருக்கும் கவி… நீ வா வந்து சாம்பாரை ஊத்து" என்ற முதலாளி சாதத்தை விரவியபடி சங்கவியை ஒரு மார்க்கமாக பார்த்தான்.
அவளும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு சாம்பாரை எடுத்து ஊற்ற போகவும், அவளது கரத்தை பிடித்தவன் 'இப்படி ஊத்தனும் கவி" என்று அவள் கரத்தை வளைக்க… அந்த நொடி அவனது இன்னொரு கரம், பாவையின் உடல் மீது உரசி சென்றது, அதனை உணர்ந்த பெண்ணவளின் உடல் கூசி போனது… உடனே அங்கம் அதிர்ந்து கரத்தை உதறினாள், அதன் விளைவாக அவளது உடை மீது சாம்பார் கொட்டியது.
"ஐயோ கவி என்ன இப்படி பண்ணிட்ட?... சரி போ போயி சுத்தம் பண்ணிட்டு வா போ" என்றவன் அவளை தொட்டு தொட்டு அருகில் வர, வேகமாக வெளியே வந்த பெண்ணவளின் கண்களில் தன்னிசையாக கண்ணீர் வழிந்தோடியது.
நேராக கழிவறைக்குள் புகுந்தவள், தன் துப்பட்டாவை எடுத்து கதவில் போட்டு விட்டு, அழுது கொண்டே தன் மேல் சிந்தி இருந்த சாம்பாரை துடைக்க ஆரம்பித்தாள்.
ஏனோ மனம் எல்லாம் பதறியது… இப்போதே இங்கிருந்து சென்று விட வேண்டும் என்பது போல இருந்தது. இந்த சூழ்நிலையை மேலும் சங்கடமாக்கும் விதமாக பட்டென கழிவறை கதவுகளை திறந்து கொண்டு உள்ளே வந்திருந்தான் அந்த முதலாளி.
அவனை கண்டு அதிர்ந்து போனவளின் உடல் கூசி போனது.
"சுத்தம் பண்ணிட்டியா கவி… சும்மா பார்க்கலாம்னு தான் வந்தேன்…" என்று சொன்னபடி அவளை மேலும் கீழும் பார்த்தவன் "நல்லா சுத்தம் பண்ணல போலயே… இதோ இங்க என்னமோ இருக்கு பாரு" என்று சொல்லி அவள் மார்பில் கை வைக்க, துடித்து போனவள், அவனை தள்ளி விட்டுவிட்டு அழுது கொண்டே வெளியே வந்தாள்.
வெளியே இருந்தவர்கள் நனைத்தபடி வெளியே வந்த அவளை ஒரு மாதிரி பார்த்தனர். அப்போது அங்கு பணிபுரியும் ஒருவன் "என்ன ஆச்சுமா" என்று கேட்டான்.
நடந்ததை வெளியே சொல்ல அவமானமாக இருந்ததால் "பாத்ரூம்ல விழுந்துட்டேன்" என்று கூறியடி நேரத்தை பார்த்தாள். மணி இரவு 8.15, உடனே "நான் கிளம்புறேன் அண்ணா" என்று கூறிவிட்டு யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினாள் சங்கவி.
அந்த முதலாளியோ கதவில் கிடந்த சங்கவியின் துப்பட்டாவை எடுத்து முகத்தில் வைத்து முகர்ந்து பார்த்தபடி கண் சொருகி நின்றான்.
நடந்த இதனை எல்லாம் நினைத்து பார்த்தபடி அமர்ந்திருந்த சங்கவியின் கண்களில் சட்டென ஒரு துளி கண்ணீர் வழிய, அதனை கவனித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான் அந்த கொடியவன்.
"இப்போ எதுக்கு அழற?" என்று கேட்டான் அவன், அவளிடம் பதில் இல்லை… இன்னும் அழுது கொண்டே இருந்தாள். உடனே "ஏய் உன்னை தான்" என்றவன் அவளது கரத்தை பிடிக்க… "ச்சீ" என்று கூறி கேவலமாக அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
அந்த பார்வை இவனது சுயமரியாதையை சீண்டியது. "இப்போ எதுக்கு ச்சீ ங்குற?" கோவமாக கேட்டான், அவளோ எந்த பதிலும் சொல்லவில்லை அப்படியே அமைதியாக அவனை கடந்து சென்று, அவனை வெளியே விடுத்து விட்டு பின் வாசல் கதவை சட்டென மூடினாள்.
"நான் யார் கிட்டயும் உங்களை பத்தி சொல்ல மாட்டேன்… இருக்குற பிரச்சனையே எனக்கு போதும்… தயவு செய்து இங்கேயிருந்து போயிடுங்க" என்று கூறியவள் அமைதியாக உள்ளே வந்து தன் பாட்டியின் அருகில் ஒரு பாயை விரித்து படுத்துக் கொண்டாள்.
அடுத்தநாள் அவள் எழுந்து வெளியே வர, அந்த கொடியவன் அங்கு இல்லை… ஆனால் அங்கு சிதறி கிடந்த மஞ்சள் தூளும், ரத்த கசடும் அவனை இவளுக்கு நியாபகப்படுத்தியது. பாட்டி எழுந்து வெளியே வரும் முன்னே அவ்விடத்தை சுத்தம் செய்து முடித்தவள் இன்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தாள்.