பகுதி 25
"உன் அண்ணன் நம்பர் இருந்தா கொடு அவன் கிட்ட பேசி ரொம்ப நாள் ஆகுது" என்று வேதா கேட்கவும், முதலில் தங்கிய குணா பின்னர், அவன் மீண்டும் மீண்டும் நச்சரிக்க நீலகண்டனின் அலைபேசி எண்ணை கொடுத்தான்.
"வீட்டுல போயி நிதானமா அவன் கிட்ட பேசணும்…" என்றபடி அலைபேசி எண்ணை பதிவு செய்து வைத்துக் கொண்ட வேதாச்சலம் "சரி குணா அப்போ நாங்க கிளம்புறோம்" என்றான்.
"அதுக்குள்ள என்ன அவசரம்? கொஞ்சம் நேரம் பேசிட்டு போகலாமே" என்ற குணாவின் பார்வை யசோதாவின் மீதே பதிந்து இருந்தது.
"ஏற்கனவே ரொம்ப லேட் ஆகிடுச்சு குணா, வொயிப் வந்திடுவா இன்னொரு நாள் பார்கலாம்" என்றபடி வேதா அங்கிருந்து கிளம்ப…
"ஒரு நிமிஷம்" என்ற குணா, அவனை தடுத்து நிறுத்தி யசோதவின் கரத்தில் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தான்.
"இது எதுக்கு அங்கிள்?" என்று அவள் வாங்க மறுக்க,
"வாங்கிக்கோ" என்றவன் அவளது கரத்தை பற்றி பணத்தை கொடுக்க முயற்சித்தான்.
"பணம் எல்லாம் வேண்டாம் குணா"
"நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டியா?"
"இல்ல வேண்டாம் அங்கிள்"
"அவள் கண்டிப்பா வாங்க மாட்டாள்" என்று வேதா சொல்வதை போலவே பிடிவாதமாக வாங்க மறுத்து நின்றாள் யசோதா.
"பொண்ணையும் உன்னை மாதிரியே வளர்த்து வச்சுயிருக்க வேதா" என்றபடி யசோதாவின் தலையை பொல்லா ஆசையுடன் வருடி விட்டான் குணசேகரன்.
"என் பொண்ணு என்னை மாதிரி தானே இருப்பாள்" கர்வம் கொண்டு சொன்னான் வேதாசலம்.
"உண்மை தான், சரி உன் வீடு எங்கன்னு சொல்லு நானே உன்னை கொண்டு போய் விட்டுடுறேன்"
"இல்ல வேண்டாம் உனக்கு எதுக்கு சிரமம்"
"இதுல என்ன சிரமம் இருக்கு? பேசாமல் வா"
"வீடு பக்கத்தில தான் இருக்கு, நாங்க நடந்தே போயிக்கிறோம்" என்ற வேதாவின் கரத்தை பிடித்து இழுத்தாள் யசோதா.
"என்ன யசோ" என்று அவர் அவள் உயரத்துக்கு குனிய, "அப்பா இந்த அங்கிள் கூடவே கார்ல போகலாம் ப்பா ப்ளீஸ்" என்று சொன்னாள்.
விவரம் அறிய சிறு பிள்ளை தானே, காரினை கண்டதும் அதில் செல்ல வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. அதனால் வேதாவினாலும் மறுக்க முடியவில்லை 'சரி' என்று கூறி அங்கிருந்து இருவரும் குணாவின் காரில் தங்கள் இல்லம் நோக்கி சென்றனர்.
அவர்களை இறக்கி விட்ட குணா "வீட்டுக்குள்ள கூப்பிட மாட்டியா வேதா" என்று கேட்டான்.
"அச்சோ மறந்துட்டேன் வாடா, ஒரு காபி சாப்பிட்டு போயிடலாம்"
"இல்லை வேண்டாம் சும்மா தான் கேட்டேன், இன்னொரு நாள் பார்க்கலாம்" என்றவனின் பார்வை கழுகை போல யசோதாவை வட்டமிட்டது.
யசோதாவை விட்டுவிட்டு வீடு திரும்பிய குணாவின் உள்ளம் முழுக்க ஒருவித அலைவரிசை நேரிடைலை கொடுத்தது, சொல்ல முடியாத அவசத்தையை அவன் உடல் உணர்ந்தது. தன்னிலை தொலைத்த தாபத்தின் தாகம் தணிக்க அப்பெரும் தவறுக்கு அடித்தளமிட்டது அவனது இந்த எண்ணம்.
****
இரவு ஒன்பது மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தாள் இந்திரா… வீட்டுக்குள் வந்தவள் யாரிடமும் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை நேராக குளியலறைக்குள் சென்றவள் அங்கிருந்த குளிர் நீரை எடுத்து ஆடை மீதே தலை வழியாக ஊற்றிக் கொண்டாள்.
நீரின் குளுமையிலும் விழியோரம் துளிர் விட்ட கண்ணீர் துளிகள் கன்னம் தாண்டி வழிந்தது.
குளித்து முடித்து ஆடை மாற்றி விட்டு வெளியே வந்தவள் நேராக பூஜை அறையில் போய் நின்றாள். 'எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்வை கொடுத்தாய்' என்று மனம் நொந்து இறைவனிடம் வேண்டியவளின் கண்களில் கண்ணீர் வற்றி போனது.
இந்திராவும், யசோதாவும் ஒரே படுக்கை அறையில் உறங்க, வேதாசலம் ஹாலில் படுத்துக் கொள்வார்.
எப்போதும் காலை ஐந்து மணிக்கு எழுந்து விடும் இந்திரா இன்று 7 மணி ஆகியும் வெளியே வர வில்லை என்றதும் அவளை காண அறைக்குள் சென்றான் வேதாசலம்.
யசோதா ஒரு பக்கம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, இந்திராவின் அருகில் சென்றவன் அவளை எழுப்ப முயற்சிதான்.
"இந்து" என்று அவன் கரம் பட்டதும் உடல் நடுங்கி கண் விழித்து கொண்டவள், எழுந்து கொள்ள முடியாமல் எழுந்து அமர்ந்தாள்.
"என்ன ஆச்சு உனக்கு? நீ இவ்ளோ நேரம் எல்லாம் தூங்க மாட்டியே?"
"கொஞ்சம் அசதி தூங்கிட்டேன்"
"யசோவுக்கு இன்னிக்கு ஸ்கூல் இருக்கு சமைக்கணும்ல"
"அது எனக்கு தெரியாதா? கவலைபடாதீங்க உங்களுக்கு பொங்கி வைக்காமல் நான் போயி சேர்ந்திட மாட்டேன்.. நேரத்துக்கு ஆக்கி போட தானே பொம்பளை நான் ஒருத்தி இங்க இருக்கேன். சாஞ்சா சடைஞ்சா எனக்கு ஒரு வாய் தண்ணி தர இங்க நாதி இருக்கா? எல்லாம் நானே தான் பண்ண வேண்டியது இருக்கு" என்றவள் தடுமாறி எழுந்து நின்றாள். கண்கள் இருட்டி கொண்டு வந்தது மீண்டும் கட்டிலில் அமர்ந்து விட்டாள்.
அமர்ந்து இருந்தவளின் தலையை தொட்டு பார்த்தான் வேதாசலம். காய்ச்சலில் அவள் உடல் கொதித்தது.
"என்ன உடம்பு இப்படி கொதிக்குது மாத்திரை ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?" என்று கேட்டான்.
"அதுக்கும் என்கிட்ட தானே காசு கேட்பீங்க?" என்று குத்தலாக அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு எழுந்து கொண்ட இந்திரா, சமையலறை நோக்கி சென்றாள்.
காய்சலில் உடல் கொதித்து கொண்டிருக்க, அப்போதும் அவளது வேலையை அவள் தான் செய்து முடித்தாள். எளிமையாக காலை மற்றும் மதிய உணவை செய்து வைத்து விட்டு வேலைக்கு கிளம்பி சென்றாள்.
ஒருநாள் விடுமுறை எடுத்தாலும் அடுத்த மாத பண தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாகிவிடும் என்பதால் வேலைக்கு கிளம்பி சென்றாள்.
வீட்டிலும் இவளுக்கு நிம்மதி இல்லை வேலை செய்யும் இடத்திலும் இவளுக்கு நிம்மதி இல்லை… சுமந்து பெற்ற பிள்ளைக்கு மூன்று வேலை உணவும், உடுத்த உடையும், நல்ல கல்வியும் கொடுக்கவே பிடிக்காத இடத்தில் மனதை கல்லாக்கி கொண்டு மாடாக வேலை செய்து ஓடாக தேய்கிறாள்.
தலைவன் தூக்கி சுமக்காத குடும்ப பாரத்தை தலைவி தூக்கி சுமக்கையில் பல இழப்புகள் நிகழ்வது நிதர்சனமான ஒன்று தான்.
"உன் அண்ணன் நம்பர் இருந்தா கொடு அவன் கிட்ட பேசி ரொம்ப நாள் ஆகுது" என்று வேதா கேட்கவும், முதலில் தங்கிய குணா பின்னர், அவன் மீண்டும் மீண்டும் நச்சரிக்க நீலகண்டனின் அலைபேசி எண்ணை கொடுத்தான்.
"வீட்டுல போயி நிதானமா அவன் கிட்ட பேசணும்…" என்றபடி அலைபேசி எண்ணை பதிவு செய்து வைத்துக் கொண்ட வேதாச்சலம் "சரி குணா அப்போ நாங்க கிளம்புறோம்" என்றான்.
"அதுக்குள்ள என்ன அவசரம்? கொஞ்சம் நேரம் பேசிட்டு போகலாமே" என்ற குணாவின் பார்வை யசோதாவின் மீதே பதிந்து இருந்தது.
"ஏற்கனவே ரொம்ப லேட் ஆகிடுச்சு குணா, வொயிப் வந்திடுவா இன்னொரு நாள் பார்கலாம்" என்றபடி வேதா அங்கிருந்து கிளம்ப…
"ஒரு நிமிஷம்" என்ற குணா, அவனை தடுத்து நிறுத்தி யசோதவின் கரத்தில் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்தான்.
"இது எதுக்கு அங்கிள்?" என்று அவள் வாங்க மறுக்க,
"வாங்கிக்கோ" என்றவன் அவளது கரத்தை பற்றி பணத்தை கொடுக்க முயற்சித்தான்.
"பணம் எல்லாம் வேண்டாம் குணா"
"நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டியா?"
"இல்ல வேண்டாம் அங்கிள்"
"அவள் கண்டிப்பா வாங்க மாட்டாள்" என்று வேதா சொல்வதை போலவே பிடிவாதமாக வாங்க மறுத்து நின்றாள் யசோதா.
"பொண்ணையும் உன்னை மாதிரியே வளர்த்து வச்சுயிருக்க வேதா" என்றபடி யசோதாவின் தலையை பொல்லா ஆசையுடன் வருடி விட்டான் குணசேகரன்.
"என் பொண்ணு என்னை மாதிரி தானே இருப்பாள்" கர்வம் கொண்டு சொன்னான் வேதாசலம்.
"உண்மை தான், சரி உன் வீடு எங்கன்னு சொல்லு நானே உன்னை கொண்டு போய் விட்டுடுறேன்"
"இல்ல வேண்டாம் உனக்கு எதுக்கு சிரமம்"
"இதுல என்ன சிரமம் இருக்கு? பேசாமல் வா"
"வீடு பக்கத்தில தான் இருக்கு, நாங்க நடந்தே போயிக்கிறோம்" என்ற வேதாவின் கரத்தை பிடித்து இழுத்தாள் யசோதா.
"என்ன யசோ" என்று அவர் அவள் உயரத்துக்கு குனிய, "அப்பா இந்த அங்கிள் கூடவே கார்ல போகலாம் ப்பா ப்ளீஸ்" என்று சொன்னாள்.
விவரம் அறிய சிறு பிள்ளை தானே, காரினை கண்டதும் அதில் செல்ல வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. அதனால் வேதாவினாலும் மறுக்க முடியவில்லை 'சரி' என்று கூறி அங்கிருந்து இருவரும் குணாவின் காரில் தங்கள் இல்லம் நோக்கி சென்றனர்.
அவர்களை இறக்கி விட்ட குணா "வீட்டுக்குள்ள கூப்பிட மாட்டியா வேதா" என்று கேட்டான்.
"அச்சோ மறந்துட்டேன் வாடா, ஒரு காபி சாப்பிட்டு போயிடலாம்"
"இல்லை வேண்டாம் சும்மா தான் கேட்டேன், இன்னொரு நாள் பார்க்கலாம்" என்றவனின் பார்வை கழுகை போல யசோதாவை வட்டமிட்டது.
யசோதாவை விட்டுவிட்டு வீடு திரும்பிய குணாவின் உள்ளம் முழுக்க ஒருவித அலைவரிசை நேரிடைலை கொடுத்தது, சொல்ல முடியாத அவசத்தையை அவன் உடல் உணர்ந்தது. தன்னிலை தொலைத்த தாபத்தின் தாகம் தணிக்க அப்பெரும் தவறுக்கு அடித்தளமிட்டது அவனது இந்த எண்ணம்.
****
இரவு ஒன்பது மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தாள் இந்திரா… வீட்டுக்குள் வந்தவள் யாரிடமும் ஒரு வார்த்தை பேசிக் கொள்ளவில்லை நேராக குளியலறைக்குள் சென்றவள் அங்கிருந்த குளிர் நீரை எடுத்து ஆடை மீதே தலை வழியாக ஊற்றிக் கொண்டாள்.
நீரின் குளுமையிலும் விழியோரம் துளிர் விட்ட கண்ணீர் துளிகள் கன்னம் தாண்டி வழிந்தது.
குளித்து முடித்து ஆடை மாற்றி விட்டு வெளியே வந்தவள் நேராக பூஜை அறையில் போய் நின்றாள். 'எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்வை கொடுத்தாய்' என்று மனம் நொந்து இறைவனிடம் வேண்டியவளின் கண்களில் கண்ணீர் வற்றி போனது.
இந்திராவும், யசோதாவும் ஒரே படுக்கை அறையில் உறங்க, வேதாசலம் ஹாலில் படுத்துக் கொள்வார்.
எப்போதும் காலை ஐந்து மணிக்கு எழுந்து விடும் இந்திரா இன்று 7 மணி ஆகியும் வெளியே வர வில்லை என்றதும் அவளை காண அறைக்குள் சென்றான் வேதாசலம்.
யசோதா ஒரு பக்கம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, இந்திராவின் அருகில் சென்றவன் அவளை எழுப்ப முயற்சிதான்.
"இந்து" என்று அவன் கரம் பட்டதும் உடல் நடுங்கி கண் விழித்து கொண்டவள், எழுந்து கொள்ள முடியாமல் எழுந்து அமர்ந்தாள்.
"என்ன ஆச்சு உனக்கு? நீ இவ்ளோ நேரம் எல்லாம் தூங்க மாட்டியே?"
"கொஞ்சம் அசதி தூங்கிட்டேன்"
"யசோவுக்கு இன்னிக்கு ஸ்கூல் இருக்கு சமைக்கணும்ல"
"அது எனக்கு தெரியாதா? கவலைபடாதீங்க உங்களுக்கு பொங்கி வைக்காமல் நான் போயி சேர்ந்திட மாட்டேன்.. நேரத்துக்கு ஆக்கி போட தானே பொம்பளை நான் ஒருத்தி இங்க இருக்கேன். சாஞ்சா சடைஞ்சா எனக்கு ஒரு வாய் தண்ணி தர இங்க நாதி இருக்கா? எல்லாம் நானே தான் பண்ண வேண்டியது இருக்கு" என்றவள் தடுமாறி எழுந்து நின்றாள். கண்கள் இருட்டி கொண்டு வந்தது மீண்டும் கட்டிலில் அமர்ந்து விட்டாள்.
அமர்ந்து இருந்தவளின் தலையை தொட்டு பார்த்தான் வேதாசலம். காய்ச்சலில் அவள் உடல் கொதித்தது.
"என்ன உடம்பு இப்படி கொதிக்குது மாத்திரை ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?" என்று கேட்டான்.
"அதுக்கும் என்கிட்ட தானே காசு கேட்பீங்க?" என்று குத்தலாக அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு எழுந்து கொண்ட இந்திரா, சமையலறை நோக்கி சென்றாள்.
காய்சலில் உடல் கொதித்து கொண்டிருக்க, அப்போதும் அவளது வேலையை அவள் தான் செய்து முடித்தாள். எளிமையாக காலை மற்றும் மதிய உணவை செய்து வைத்து விட்டு வேலைக்கு கிளம்பி சென்றாள்.
ஒருநாள் விடுமுறை எடுத்தாலும் அடுத்த மாத பண தேவையை பூர்த்தி செய்வது மிகவும் கடினமாகிவிடும் என்பதால் வேலைக்கு கிளம்பி சென்றாள்.
வீட்டிலும் இவளுக்கு நிம்மதி இல்லை வேலை செய்யும் இடத்திலும் இவளுக்கு நிம்மதி இல்லை… சுமந்து பெற்ற பிள்ளைக்கு மூன்று வேலை உணவும், உடுத்த உடையும், நல்ல கல்வியும் கொடுக்கவே பிடிக்காத இடத்தில் மனதை கல்லாக்கி கொண்டு மாடாக வேலை செய்து ஓடாக தேய்கிறாள்.
தலைவன் தூக்கி சுமக்காத குடும்ப பாரத்தை தலைவி தூக்கி சுமக்கையில் பல இழப்புகள் நிகழ்வது நிதர்சனமான ஒன்று தான்.