****
பகுதி 15
***
இந்திராவின் வீட்டிற்கு வந்தார் விஸ்வநாதன்..
"அவள் இன்னும் வரலையா?" என்று அவர் கேட்க... "இல்லை" என்று தலை அசைத்தார் இந்திரா.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அந்நேரம் வீட்டிற்குள் நுழைந்தாள் யசோதா... வாசலில் நின்று இருவரையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவள் எதுவும் பேசவில்லை அமைதியாக அவர்களைக் கடந்து தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
யசோதாவை கண்டதும் ஒருகணம் இருவரும் அமைதியாகினர்... பின்னர் விஸ்வநாதனோ " நீ எதுக்கும் கவலைப்படாத இந்திரா அவன் தான் நம்மள அவளை பார்த்துக்க சொன்னான்.. இப்போ அவனே அவளை கூப்பிட்டு போயிட்டான் இதுல நம்ம கவலைப்பட எதுவுமே இல்ல.. அவனுக்கு சொந்தமான ஒன்னு திரும்ப அவன் கிட்டயே போயிடுச்சுன்னு அமைதியா விட்டு விட வேண்டியது தான்"
"என்ன இப்படி சொல்றீங்க? நீங்க சொல்றது எல்லாமே உண்மைதான் நான் இல்லைன்னு சொல்லமாட்டேன் இருந்தாலும் நம்ம யார்கிட்டயும் சொல்லாம அவன் ஏன் திடீர்னு வைஷ்ணவி அழைச்சிட்டு போகணும்? எனக்கு என்னமோ ஏதோ தப்பா இருக்கு ரொம்ப பயமா இருக்கு"
"எனக்கு உன்னுடைய பயம் புரியுது இந்திரா.. ஆனா அதுக்காக நம்ம எதுவுமே பண்ண முடியாது இதுல நம்ம கடமை முடிஞ்சதுன்னு சொல்லி அமைதியாக இருக்கிறது தவிர வேறு வழியே கிடையாது சொல்லப்போனால் அதெல்லாம் யோசிக்கக்கூட எனக்கு இப்போ நேரம் இல்லை.. எனக்கு என் பையன் வாழ்க்கையை பார்க்க வேண்டிய பொறுப்பு இருக்கு.. அப்புறம் ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன் நாளைக்கு ஜீவாவுக்கு பொண்ணு பார்க்க போறோம்... ஏற்கனவே உன்கிட்ட நான் சொல்லி இருக்கேன்ல கங்காவை பத்தி, அவங்க வீட்டுக்கு தான் போறோம்" என்று இந்த கடைசி வரியை மட்டும் அறைக்குள் இருக்கும் யசோதாவின் காதில் விழுமாறு உரக்கச் சொன்னார் விஸ்வநாதன்.
அந்த வரியில் மட்டும் அவர் அழுத்தம் கொடுப்பது இந்திராவிற்கும் நன்கு புரிந்தது... நிச்சயம் தனது மகளின் மனம் இதனை கேட்டு பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து ஒரு தாயாக வருத்தப்பட்டார் இந்திரா, இருந்தும் என்ன செய்ய இயலும் இவள்தான் இந்த அளவுக்கு பிடிவாதமாக இருக்கிறாளே யார் சொல்லியும் கேட்காமல் தன் போக்கில் தான் நடந்து கொள்வேன் என்று தான் தோன்றித்தனமாக தெரியும் பெண்ணிடம் என்ன கூறி தன்னிலையை உணர வைப்பது என்று அவருக்கும் புரியவில்லை... அதனால் அமைதியாக விஸ்வநாதன் சொன்னதற்கு தலையசைத்து வைத்தார்.
"சரி இந்திரா நான் கிளம்புறேன்.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நீ தேவை இல்லாம வைஷ்ணவியை பத்தி யோசிச்சிட்டு இருக்காத..." என்று தன்னால் முடிந்த அளவுக்கு இந்திராவுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் விஸ்வநாதன்.
அவர் சென்ற பிறகு வைஷ்ணவியையும் யசோதாவையும் நினைத்து கவலைப்பட்டபடி சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார் இந்திரா...
வெளியே இருப்பவர்கள் வைஷ்ணவி பற்றி தான் பேசுகிறார்கள் என்பது ஓரளவுக்கு யசோதாவின் காதல் விழுந்தது ஆனால் தெளிவுர எதையும் அவள் கேட்கவில்லை...
விஸ்வநாதன் சென்றதும் தனது அறையை விட்டு வெளியே வந்தாள் யசோதா...
வந்தவள் நேராக சமையலறை நோக்கி போனாள்.. காலையில் சமைத்து வைக்கப்பட்ட உணவு அப்படியே இருந்தது... அதனைப் பார்த்தவள் அப்படியே ஹாலில் கண்ணீருடன் அமர்ந்திருந்த இந்திராவையும் ஒரு கணம் திரும்பி பார்த்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ தனக்கு தேவையான உணவை மட்டும் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
எந்தவித நெருடலும் இல்லாமல் உணவை உண்டு முடித்தவள் மீண்டும் வெளியே வர இன்னும் அதே இடத்தில் தான் இந்திரா அமர்ந்திருந்தார்... யோசனையுடன் ஸ்கூட்டியின் சாவியை எடுத்தவள் வெளியே வந்தாள்.
வாகனத்தை உயிர்ப்பித்து நேராக வைஷ்ணவி எப்போதும் செல்லும் இரு கோவில்களை சுற்றி அவளை தேட ஆரம்பித்தாள். நேரம் போனதே தவிர அங்கு அவள் இருப்பதற்கான சிறு தடையமும் இல்லை... அடுத்ததாக வைஷ்ணவி அவ்வப்போது சென்று வரும் அந்த ஆஸ்ரமத்தை நோக்கி வாகனத்தை செலுத்தினாள்.
இரவு பத்து மணிக்கு மேலானதால் ஆஸ்ரமத்தின் நுழைவாயில் பூட்டப்பட்டிருந்தது... அங்கிருந்த வாட்ச்மேனிடம் வைஷ்ணவி குறித்து விசாரித்தாள்... அவரும் வைஷ்ணவி இங்கு வரவில்லை என்று கூறிவிட, ஏனோ முதல் முறை வைஷ்ணவியை எண்ணி யசோதா கவலை கொள்ள ஆரம்பித்தாள்.
எப்போதும் தன் காலை சுற்றி வரும் பூனை மீது சில நேரம் எரிச்சல் உண்டாகலாம்... அதற்காக அது எப்படியும் ஒளிந்து போகட்டும் என்று அதிகபடியானோர்களால் யோசிக்க முடியாது. அந்த அதிகப்படியானோர்களில் யசோதாவும் ஒருவள். என்னதான் வைஷ்ணவி மீது சிறு கோவம் இருந்தாலும் ஒருநாளும் அவளை அவள் வெறுத்ததும் இல்லை வீட்டிற்கு வந்ததும் அவளை தேடாமல் இருந்ததும் இல்லை.
தன்னால் முடிந்தவரை வைஷ்ணவியை தேடிப் பார்த்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள் யசோதா... இன்னும் இந்திரா அதே இடத்தில் தான் அமர்ந்திருந்தார்.. அதனைக் கண்டு யசோதாவிற்கு கோபம் தான் வந்தது... அவரிடம் வைஷ்ணவியை பற்றி கேட்டறிந்து கொள்ள யசோதவின் பிடிவாதம் இடமளிக்கவில்லை, இருந்தும் வேறு வழி இல்லாமல் கேட்க நினைத்தாள்.
"அவள் எங்க?" யசோதா கேட்டது இந்திராவின் காதல் விழுந்தது இருந்தும் அவர் அமைதியாக இருந்தார்.
"உங்ககிட்ட தான் கேட்கிறேன் வைஷ்ணவி எங்க?"
"தெரியல" என்று கூறியவரின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வடிந்தது...
"இப்படி அழுதுட்டே இருந்தா என்ன பண்ண முடியும்? என்ன நடந்ததுன்னு சொன்னா தானே எதாவது பண்ண முடியும்" என்று அவள் கடுமையான குரலில் கேட்க, நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் இந்திரா கூறி முடித்தார். அதனை கேட்டு மேலும் ஆத்திரமடைந்தாள் யசோதா.
"உங்களுக்கு கொஞ்சமும் அறிவில்லையா? புருஷன்னு சொல்லி எவன் வந்தாலும் அவன் கூட இவளை அனுப்பி வச்சிடுவீங்களா?"
"உனக்கு என்னமா அவள் மேல திடீர்னு இவ்ளோ அக்கறை"
"எனக்கு எல்லாரும் மேலயும் அக்கறை இருக்கு... ஆனால் யாருக்கும் தான் என் மேல அக்கறை இல்லை... ச்சே உங்க கிட்ட போயி இதை எல்லாம் சொல்லிட்டு இருக்கேன் பாருங்க... பெத்த பிள்ளையையே பாதுகாக்க முடியாத உங்க கிட்ட இதை தவிர வேற எதை எதிர்பார்க்க முடியும்" என்று முகத்தில் அடித்தபடி கூறி விட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் யசோதா.
அவள் சொன்ன வார்த்தையை மீட்டெடுத்து பார்த்த இந்திராவின் உடல் மரத்து போனது...
"எனக்கு எதுவும் மறக்கல எல்லாம் ஞாபகம் இருக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு... கணவன் மனைவியா நீயும் அப்பாவும் சேர்ந்து இருந்திருந்தா இன்னிக்கு என் வாழ்க்கையும் நல்லா இருந்து இருக்கும்" என்றோ ஒருநாள் அவள் கூறிய வார்த்தைகள் இன்றும் இந்திராவின் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.
***
காட்டுக்குள் வழி தெறியாமல் சுத்திய மதிவாணன் ஒருவழியாக சாலையை பிடித்து வண்டியை மேலேற்றினான்.
'இது எந்த இடம்' என்று அவனுக்கு சிறிதும் புலபடவில்லை... வழியில் யாரிடமாவது விசாரிக்கலாம் என்று எதிர்பார்த்து வாகனத்தை செலுத்த அவன் நேரத்திற்கு ஒருவரும் அவ்வழியே வரவில்லை... சிறிது நேர பயணத்துக்கு பிறகு தூரத்தில் ஒரு வெளிச்சம் அதனை கண்டதும் 'நல்ல வேளை' என்று மனதில் சந்தோசம் அடைந்து கொண்டவன் அவ்வாகணத்தை நோக்கி சென்றான்.
அங்கு ஒருவன் வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு திரும்பி நின்று யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
"அவளா? அவள் எப்படி இங்க? எல்லாம் மறத்திடுச்சா? நல்லது தான்... சரி அவளை இழுத்துட்டு போனானே அவனை பத்தி எதுவும் தகவல் கிடைச்சதா?"
"இல்லை"
"*** கிடைக்காமலா போயிடுவான்... என் கண்ணுல மாட்டட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு" என்றபடி அவர் பேசிக்கொண்டு நிற்கவும், அவர் அருகில் சென்று தனது காரை நிறுத்திய மதிவாணன்.. "சார் இது எந்த இடம்?" என்று விசாரித்தான்... அவனது அரவம் உணர்ந்து திரும்பி பார்த்த அந்த நபரை கண்டு மிரண்டு முழித்த மதிவாணன் உடனே வாகனத்தை எடுக்க முயற்சிக்க, "ஏய்" என்று கத்தியபடி அவர் நொடியில் துப்பாக்கியை எடுக்க போகவும்... அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்த வாகனத்தை எடுத்து சென்றான் மதிவாணன்.
மதியின் கார் ஒரு பத்தடி தூரம் சென்று இருக்கும் அதற்குள் சரியாக, அவனது கார் டயரில் தோட்டாவை பாய்ச்சி இருந்தான் அந்த புதியவன், தோட்டா பயந்த வேகத்தில் நிலையில்லாமல் வண்டி ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது... உடனே அவ்விடம் நோக்கி ஓடிய புதியவன், காருக்குள் மதியை தேட, அவனோ மோதிய வேகத்தில் மூச்சிரைக்க காரில் அமர்ந்திருத்தான்.
"மதிவாணா..." என்று அவன் அருகில் அந்த புதியவனின் குரல் கேட்கவும், உயிர்வரை நடுக்கம் பரவியது... முகமெல்லாம் வியர்த்து வடிந்து அச்சத்துடன் பார்த்து கொண்டிருந்த மதியின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான் அந்த புதியவன்.
மதிவாணனுக்கு பலமாக மூச்சு வாங்கியது... "துரோகம் பண்ணிட்டியே மதிவாணா... தப்பு பண்ணா தண்டனை கிடைக்கணும்... இது நீ பண்ண துரோகத்துக்கு " என்றபடி அவன் ட்ரிகரை அழுத்த, நொடியில் துப்பாக்கி ஏந்தியிருந்த அவனது கரத்தை பிடித்து தன்னை நோக்கி வளைத்து இழுத்தான் மதிவாணன், அவன் இழுத்த வேகத்தில் அந்த புதியவனின் தலை பகுதி காரில் முட்டி, நெற்றியில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது... குறி தப்பியது, உடனே உச்சபட்ச கோவத்தில் மீண்டும் மீண்டும் அந்த புதியவன் ட்ரிகரை அழுத்த அவனது துப்பாக்கியில் இருந்து வெளிவந்த இரண்டு தோட்டாக்கள் மதியின் வலது தோள் பட்டையை துளைத்தது... இதற்கு மேலும் இவனிடம் போராட முடியாது என்று தெரிந்து கொண்ட மதிவாணன் இறுதியாக அவனது கரத்தை டோர் வளைவில் வைத்து ஓங்கி ஒரே அடி, கை உடைந்தது, வலி பொருக்க முடியாமல் கத்திய அந்த புதியவன் மறு கரத்தில் துப்பாக்கியை பிடித்துக் கொண்டு மீண்டும் மதியினை சுட வரவும், சுதாரித்துக் கொண்ட மதி அப்படியே காட்டு பக்கமாக இறங்கி ஓட ஆரம்பித்தான்... இருளில் அங்கும் இங்கு துப்பாக்கியால் சுட்ட புதியவன், மதியை தேடி காட்டுக்குள் இறங்க தயங்கினான். அதற்கு அவனது கை வலி ஒரு காரணம் என்றால் பாம்புகள் மற்றுமோர் காரணம்.. அந்த காட்டு பகுதியில் மிகுந்த விஷம் நிறைந்த பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். காலை வரை அவன் பிழைத்திருந்தால் நாளை அவனை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் அந்த புதியவன். இந்த புதியவன் தான் ஆரியனின் விபத்துக்கும் காரணாமானவன்.
பகுதி 15
***
இந்திராவின் வீட்டிற்கு வந்தார் விஸ்வநாதன்..
"அவள் இன்னும் வரலையா?" என்று அவர் கேட்க... "இல்லை" என்று தலை அசைத்தார் இந்திரா.
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அந்நேரம் வீட்டிற்குள் நுழைந்தாள் யசோதா... வாசலில் நின்று இருவரையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவள் எதுவும் பேசவில்லை அமைதியாக அவர்களைக் கடந்து தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
யசோதாவை கண்டதும் ஒருகணம் இருவரும் அமைதியாகினர்... பின்னர் விஸ்வநாதனோ " நீ எதுக்கும் கவலைப்படாத இந்திரா அவன் தான் நம்மள அவளை பார்த்துக்க சொன்னான்.. இப்போ அவனே அவளை கூப்பிட்டு போயிட்டான் இதுல நம்ம கவலைப்பட எதுவுமே இல்ல.. அவனுக்கு சொந்தமான ஒன்னு திரும்ப அவன் கிட்டயே போயிடுச்சுன்னு அமைதியா விட்டு விட வேண்டியது தான்"
"என்ன இப்படி சொல்றீங்க? நீங்க சொல்றது எல்லாமே உண்மைதான் நான் இல்லைன்னு சொல்லமாட்டேன் இருந்தாலும் நம்ம யார்கிட்டயும் சொல்லாம அவன் ஏன் திடீர்னு வைஷ்ணவி அழைச்சிட்டு போகணும்? எனக்கு என்னமோ ஏதோ தப்பா இருக்கு ரொம்ப பயமா இருக்கு"
"எனக்கு உன்னுடைய பயம் புரியுது இந்திரா.. ஆனா அதுக்காக நம்ம எதுவுமே பண்ண முடியாது இதுல நம்ம கடமை முடிஞ்சதுன்னு சொல்லி அமைதியாக இருக்கிறது தவிர வேறு வழியே கிடையாது சொல்லப்போனால் அதெல்லாம் யோசிக்கக்கூட எனக்கு இப்போ நேரம் இல்லை.. எனக்கு என் பையன் வாழ்க்கையை பார்க்க வேண்டிய பொறுப்பு இருக்கு.. அப்புறம் ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்ல மறந்துட்டேன் நாளைக்கு ஜீவாவுக்கு பொண்ணு பார்க்க போறோம்... ஏற்கனவே உன்கிட்ட நான் சொல்லி இருக்கேன்ல கங்காவை பத்தி, அவங்க வீட்டுக்கு தான் போறோம்" என்று இந்த கடைசி வரியை மட்டும் அறைக்குள் இருக்கும் யசோதாவின் காதில் விழுமாறு உரக்கச் சொன்னார் விஸ்வநாதன்.
அந்த வரியில் மட்டும் அவர் அழுத்தம் கொடுப்பது இந்திராவிற்கும் நன்கு புரிந்தது... நிச்சயம் தனது மகளின் மனம் இதனை கேட்டு பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து ஒரு தாயாக வருத்தப்பட்டார் இந்திரா, இருந்தும் என்ன செய்ய இயலும் இவள்தான் இந்த அளவுக்கு பிடிவாதமாக இருக்கிறாளே யார் சொல்லியும் கேட்காமல் தன் போக்கில் தான் நடந்து கொள்வேன் என்று தான் தோன்றித்தனமாக தெரியும் பெண்ணிடம் என்ன கூறி தன்னிலையை உணர வைப்பது என்று அவருக்கும் புரியவில்லை... அதனால் அமைதியாக விஸ்வநாதன் சொன்னதற்கு தலையசைத்து வைத்தார்.
"சரி இந்திரா நான் கிளம்புறேன்.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, நீ தேவை இல்லாம வைஷ்ணவியை பத்தி யோசிச்சிட்டு இருக்காத..." என்று தன்னால் முடிந்த அளவுக்கு இந்திராவுக்கு ஆறுதல் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் விஸ்வநாதன்.
அவர் சென்ற பிறகு வைஷ்ணவியையும் யசோதாவையும் நினைத்து கவலைப்பட்டபடி சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தார் இந்திரா...
வெளியே இருப்பவர்கள் வைஷ்ணவி பற்றி தான் பேசுகிறார்கள் என்பது ஓரளவுக்கு யசோதாவின் காதல் விழுந்தது ஆனால் தெளிவுர எதையும் அவள் கேட்கவில்லை...
விஸ்வநாதன் சென்றதும் தனது அறையை விட்டு வெளியே வந்தாள் யசோதா...
வந்தவள் நேராக சமையலறை நோக்கி போனாள்.. காலையில் சமைத்து வைக்கப்பட்ட உணவு அப்படியே இருந்தது... அதனைப் பார்த்தவள் அப்படியே ஹாலில் கண்ணீருடன் அமர்ந்திருந்த இந்திராவையும் ஒரு கணம் திரும்பி பார்த்தாள். பின்னர் என்ன நினைத்தாளோ தனக்கு தேவையான உணவை மட்டும் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
எந்தவித நெருடலும் இல்லாமல் உணவை உண்டு முடித்தவள் மீண்டும் வெளியே வர இன்னும் அதே இடத்தில் தான் இந்திரா அமர்ந்திருந்தார்... யோசனையுடன் ஸ்கூட்டியின் சாவியை எடுத்தவள் வெளியே வந்தாள்.
வாகனத்தை உயிர்ப்பித்து நேராக வைஷ்ணவி எப்போதும் செல்லும் இரு கோவில்களை சுற்றி அவளை தேட ஆரம்பித்தாள். நேரம் போனதே தவிர அங்கு அவள் இருப்பதற்கான சிறு தடையமும் இல்லை... அடுத்ததாக வைஷ்ணவி அவ்வப்போது சென்று வரும் அந்த ஆஸ்ரமத்தை நோக்கி வாகனத்தை செலுத்தினாள்.
இரவு பத்து மணிக்கு மேலானதால் ஆஸ்ரமத்தின் நுழைவாயில் பூட்டப்பட்டிருந்தது... அங்கிருந்த வாட்ச்மேனிடம் வைஷ்ணவி குறித்து விசாரித்தாள்... அவரும் வைஷ்ணவி இங்கு வரவில்லை என்று கூறிவிட, ஏனோ முதல் முறை வைஷ்ணவியை எண்ணி யசோதா கவலை கொள்ள ஆரம்பித்தாள்.
எப்போதும் தன் காலை சுற்றி வரும் பூனை மீது சில நேரம் எரிச்சல் உண்டாகலாம்... அதற்காக அது எப்படியும் ஒளிந்து போகட்டும் என்று அதிகபடியானோர்களால் யோசிக்க முடியாது. அந்த அதிகப்படியானோர்களில் யசோதாவும் ஒருவள். என்னதான் வைஷ்ணவி மீது சிறு கோவம் இருந்தாலும் ஒருநாளும் அவளை அவள் வெறுத்ததும் இல்லை வீட்டிற்கு வந்ததும் அவளை தேடாமல் இருந்ததும் இல்லை.
தன்னால் முடிந்தவரை வைஷ்ணவியை தேடிப் பார்த்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள் யசோதா... இன்னும் இந்திரா அதே இடத்தில் தான் அமர்ந்திருந்தார்.. அதனைக் கண்டு யசோதாவிற்கு கோபம் தான் வந்தது... அவரிடம் வைஷ்ணவியை பற்றி கேட்டறிந்து கொள்ள யசோதவின் பிடிவாதம் இடமளிக்கவில்லை, இருந்தும் வேறு வழி இல்லாமல் கேட்க நினைத்தாள்.
"அவள் எங்க?" யசோதா கேட்டது இந்திராவின் காதல் விழுந்தது இருந்தும் அவர் அமைதியாக இருந்தார்.
"உங்ககிட்ட தான் கேட்கிறேன் வைஷ்ணவி எங்க?"
"தெரியல" என்று கூறியவரின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வடிந்தது...
"இப்படி அழுதுட்டே இருந்தா என்ன பண்ண முடியும்? என்ன நடந்ததுன்னு சொன்னா தானே எதாவது பண்ண முடியும்" என்று அவள் கடுமையான குரலில் கேட்க, நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் இந்திரா கூறி முடித்தார். அதனை கேட்டு மேலும் ஆத்திரமடைந்தாள் யசோதா.
"உங்களுக்கு கொஞ்சமும் அறிவில்லையா? புருஷன்னு சொல்லி எவன் வந்தாலும் அவன் கூட இவளை அனுப்பி வச்சிடுவீங்களா?"
"உனக்கு என்னமா அவள் மேல திடீர்னு இவ்ளோ அக்கறை"
"எனக்கு எல்லாரும் மேலயும் அக்கறை இருக்கு... ஆனால் யாருக்கும் தான் என் மேல அக்கறை இல்லை... ச்சே உங்க கிட்ட போயி இதை எல்லாம் சொல்லிட்டு இருக்கேன் பாருங்க... பெத்த பிள்ளையையே பாதுகாக்க முடியாத உங்க கிட்ட இதை தவிர வேற எதை எதிர்பார்க்க முடியும்" என்று முகத்தில் அடித்தபடி கூறி விட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள் யசோதா.
அவள் சொன்ன வார்த்தையை மீட்டெடுத்து பார்த்த இந்திராவின் உடல் மரத்து போனது...
"எனக்கு எதுவும் மறக்கல எல்லாம் ஞாபகம் இருக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு... கணவன் மனைவியா நீயும் அப்பாவும் சேர்ந்து இருந்திருந்தா இன்னிக்கு என் வாழ்க்கையும் நல்லா இருந்து இருக்கும்" என்றோ ஒருநாள் அவள் கூறிய வார்த்தைகள் இன்றும் இந்திராவின் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.
***
காட்டுக்குள் வழி தெறியாமல் சுத்திய மதிவாணன் ஒருவழியாக சாலையை பிடித்து வண்டியை மேலேற்றினான்.
'இது எந்த இடம்' என்று அவனுக்கு சிறிதும் புலபடவில்லை... வழியில் யாரிடமாவது விசாரிக்கலாம் என்று எதிர்பார்த்து வாகனத்தை செலுத்த அவன் நேரத்திற்கு ஒருவரும் அவ்வழியே வரவில்லை... சிறிது நேர பயணத்துக்கு பிறகு தூரத்தில் ஒரு வெளிச்சம் அதனை கண்டதும் 'நல்ல வேளை' என்று மனதில் சந்தோசம் அடைந்து கொண்டவன் அவ்வாகணத்தை நோக்கி சென்றான்.
அங்கு ஒருவன் வாகனத்தை நிறுத்தி வைத்து விட்டு திரும்பி நின்று யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
"அவளா? அவள் எப்படி இங்க? எல்லாம் மறத்திடுச்சா? நல்லது தான்... சரி அவளை இழுத்துட்டு போனானே அவனை பத்தி எதுவும் தகவல் கிடைச்சதா?"
"இல்லை"
"*** கிடைக்காமலா போயிடுவான்... என் கண்ணுல மாட்டட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு" என்றபடி அவர் பேசிக்கொண்டு நிற்கவும், அவர் அருகில் சென்று தனது காரை நிறுத்திய மதிவாணன்.. "சார் இது எந்த இடம்?" என்று விசாரித்தான்... அவனது அரவம் உணர்ந்து திரும்பி பார்த்த அந்த நபரை கண்டு மிரண்டு முழித்த மதிவாணன் உடனே வாகனத்தை எடுக்க முயற்சிக்க, "ஏய்" என்று கத்தியபடி அவர் நொடியில் துப்பாக்கியை எடுக்க போகவும்... அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்த வாகனத்தை எடுத்து சென்றான் மதிவாணன்.
மதியின் கார் ஒரு பத்தடி தூரம் சென்று இருக்கும் அதற்குள் சரியாக, அவனது கார் டயரில் தோட்டாவை பாய்ச்சி இருந்தான் அந்த புதியவன், தோட்டா பயந்த வேகத்தில் நிலையில்லாமல் வண்டி ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது... உடனே அவ்விடம் நோக்கி ஓடிய புதியவன், காருக்குள் மதியை தேட, அவனோ மோதிய வேகத்தில் மூச்சிரைக்க காரில் அமர்ந்திருத்தான்.
"மதிவாணா..." என்று அவன் அருகில் அந்த புதியவனின் குரல் கேட்கவும், உயிர்வரை நடுக்கம் பரவியது... முகமெல்லாம் வியர்த்து வடிந்து அச்சத்துடன் பார்த்து கொண்டிருந்த மதியின் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து அழுத்தினான் அந்த புதியவன்.
மதிவாணனுக்கு பலமாக மூச்சு வாங்கியது... "துரோகம் பண்ணிட்டியே மதிவாணா... தப்பு பண்ணா தண்டனை கிடைக்கணும்... இது நீ பண்ண துரோகத்துக்கு " என்றபடி அவன் ட்ரிகரை அழுத்த, நொடியில் துப்பாக்கி ஏந்தியிருந்த அவனது கரத்தை பிடித்து தன்னை நோக்கி வளைத்து இழுத்தான் மதிவாணன், அவன் இழுத்த வேகத்தில் அந்த புதியவனின் தலை பகுதி காரில் முட்டி, நெற்றியில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது... குறி தப்பியது, உடனே உச்சபட்ச கோவத்தில் மீண்டும் மீண்டும் அந்த புதியவன் ட்ரிகரை அழுத்த அவனது துப்பாக்கியில் இருந்து வெளிவந்த இரண்டு தோட்டாக்கள் மதியின் வலது தோள் பட்டையை துளைத்தது... இதற்கு மேலும் இவனிடம் போராட முடியாது என்று தெரிந்து கொண்ட மதிவாணன் இறுதியாக அவனது கரத்தை டோர் வளைவில் வைத்து ஓங்கி ஒரே அடி, கை உடைந்தது, வலி பொருக்க முடியாமல் கத்திய அந்த புதியவன் மறு கரத்தில் துப்பாக்கியை பிடித்துக் கொண்டு மீண்டும் மதியினை சுட வரவும், சுதாரித்துக் கொண்ட மதி அப்படியே காட்டு பக்கமாக இறங்கி ஓட ஆரம்பித்தான்... இருளில் அங்கும் இங்கு துப்பாக்கியால் சுட்ட புதியவன், மதியை தேடி காட்டுக்குள் இறங்க தயங்கினான். அதற்கு அவனது கை வலி ஒரு காரணம் என்றால் பாம்புகள் மற்றுமோர் காரணம்.. அந்த காட்டு பகுதியில் மிகுந்த விஷம் நிறைந்த பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். காலை வரை அவன் பிழைத்திருந்தால் நாளை அவனை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் அந்த புதியவன். இந்த புதியவன் தான் ஆரியனின் விபத்துக்கும் காரணாமானவன்.