54
அன்று நடந்த நிகழ்வுகளை அசை போட்டு பார்த்த தர்மனின் மனம் முழுவதும் கோபம் நிரம்பியிருந்தது. அவனது கைகளோ மெல்ல மேலெழுந்து அவன் நெஞ்சில் இருந்த தழும்பினை வருடி கொண்டது.
முகத்தோற்றம் மாறிய சங்கவியின் மீது தர்மனுக்கு எப்போதும் ஒரு வகை ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. அவனையும் மீறி அவளிடம் நெருங்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. ஏற்கனவே பெண் பித்து கொண்டவன், சங்கவியின் வசீகரத்தில் அதீத ஆர்வம் கொண்டிருந்தான்.
தற்போதெல்லாம் ‘அவள் வேண்டும்’ என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் ஆழமாக இருந்தது. மதியைப் பற்றிய சிந்தனையே அவனுக்கு இல்லை.
இப்படியான ஒரு நாளில் மதியை வெளி வேலை விஷயமாக வேறு ஊருக்கு அனுப்பி வைத்திருந்தான் தர்மன். இந்த நேரத்தை பயன்படுத்தி மதியின் வீட்டிற்குள் நுழைந்து இருந்தான் தர்மன்.
அவனை மீறிய அதீத போதையில் இருந்தான்… அப்போது கதவை திறந்த சங்கவி அவனது கண்களில் விழுந்தாள்.
அவனது பார்வையையும், நடவடிக்கையும் கண்டு அச்சம் கொண்ட சங்கவி… அமைதியாக இரு அடி பின்னே நகர்ந்தாள்.
“என்ன விஷயம்? அவர் வீட்டுல இல்லை” என்று சொன்ன சங்கவியை பார்த்தபடி அறைக்குள் நுழைந்தவன் தன் கையில் வைத்திருந்த மது பாட்டிலை அருகில் இருந்த டேபிளில் வைத்தபடி, கவியை நோக்கி கரத்தினை நீட்டி “அது தெரிஞ்சு தானே வந்திருக்கேன்”என்று சொல்லி புன்னகைத்தபடியே அவளை நெருங்க முற்பட்டான்… சட்டென சுதாரித்துக் கொண்ட சங்கவி அவனை வெளியே தள்ளி கதவை தாழிட முற்பட்டாள்.
ஆனால் முடியவில்லை அதற்குள் தர்மன் நடு வீட்டிற்குள் புகுந்து, அவனே கதவை உள் தாழ்பாள் போட்டு கொண்டான்.
“எதுக்கு இப்படி பண்ணுறீங்க? முதலில் வெளியே போங்க” என்றவளின் கரத்தை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்த தருமன் அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தான். அவனிடமிருந்து விலக முற்பட்டவள் ஒரு கட்டத்தில் தன் இதழ் நோக்கி குனிந்தவனின் முகத்தில் காரி உமிழ்ந்து இருந்தாள்.
அவளது செயலில் கோவம் அடைந்த தர்மன் அவளது கன்னத்தில் மாறி மாறி அறைந்தான். அடி வாங்கிய வேகத்தில் அவளது கண்கள் இருண்டு கொண்டு வந்தது.
தடுமாறி நின்று கொண்டிருந்தவளின் உச்ச முடியை கொத்தாகப் பிடித்தவன்… அவளது ஆடைகளை களைய ஆரம்பித்தான். எவ்வளவோ தடுத்து பார்த்தாள் முடியவில்லை. கடந்த கால நிகழ்வுகள் வேறு அவள் கண் முன்னே வந்து போனது. இந்த கேவலமானவனின் செயல்கள் அவளது முதலாளி முத்துவை இவளுக்கு மீண்டும் நினைவு படுத்தியது.
எந்த விஷயத்தை மறக்க வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ அதே விஷயம் மீண்டும் அவள் வாழ்வில் நடப்பதை நினைத்து துடித்துக் கொண்டிருந்தாள். அன்று அவளிடம் எத்தகைய எதிர்வினை இருந்ததோ அதே தான் இன்றும் அவளிடம் இருந்தது.
தப்பிக்க முயன்று பார்த்தவளின் கைகளில் கத்தி போன்ற கூர்மையான ஒரு பொருள் கிடைத்தது. அடுத்த நொடி தாமதிக்காமல் அதனைக் கொண்டு அவன் நெஞ்சை கிழித்திருந்தாள். வழியில் துடித்தவன் அவளை விட்டு விலகி நின்று தன் நெஞ்சில் வடியும் ரத்தத்தினை தொட்டு பார்க்க… தலை கலைந்து, உடை கலைந்து கண்கள் அக்னி போல் கோபத்தில் சிவந்து கொலை வெறியுடன் அவனைப் பார்த்தபடி எதிரில் நின்று கொண்டிருந்தாள் சங்கவி.
அவள் தன்னை காயப்படுத்திய கோபத்தில் தகாத வார்த்தைகள் சொல்லி அவளை திட்டியபடியே அவளை அடிக்க பாய்ந்து இருந்தான் தர்மன்.
அப்போது அவன் வீட்டிற்குள் வரும் போது கொண்டு வந்திருந்த மது பாட்டில் டேபிளில் இருந்தது. அதனை கையில் எடுத்தவள், அதனை உடைத்து அவனது முகத்தில் குத்த சென்றாள். நொடி பொழுதில் நிகழ்ந்த அந்த செயலை கண்டு தர்மனே அதிர்ந்து போனான்.
அவனது கண்களுக்கும், பாட்டிலின் கூர்முனைக்கும் நூலிழை அளவு இடைவெளி தான் இருந்தது. அவளது செயலில் அப்படியே ஆடிப் போய் நின்றான்.
“வெளியே போயிடு… இன்னொரு முறை என்னை நெருங்கணும்னு நெனச்ச அடுத்த நொடி உன் உடம்புல உயிர் இருக்காது” என்றபடி ஆக்ரோஷமாக நின்றவளையும் அந்த பாட்டிலையும் மாறி மாறி பார்த்தவன் உண்மையில் அச்சம் கொண்டு அப்படியே இரண்டு அடிகள் பின்னே நகர்ந்தான்… அவன் விலகி விட்டான்! என்ற எண்ணத்தில் பாட்டிலை அவள் சற்று கீழே இறக்க, அந்த நேரத்திற்காக காத்திருந்தது போல வெறிபிடித்துப்போய் அவளது தலை முடியை பிடித்து சுவரில் ஓங்கி மோதினான். இன்னும் இரண்டு அடி இதேபோன்று பலமாக விழுந்திருந்தால் சங்கவியின் உயிர் அதே இடத்தில் பிரிந்து இருக்கும்.
அந்நொடியில் தனது மொத்த பலத்தையும் கொண்டு பின் பக்கமாக அவனை முட்டி தள்ளியவள், மீண்டும் அவன் தன்னை நெருங்கிய கணம் சட்டென அவனது இடுப்புக்கு கீழே பாட்டிலை சொருகி இருந்தாள் சங்கவி.
வழியில் துடித்துப் போன தர்மன், ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அதே இடத்தில் மயங்கி சரிந்தான். அப்போது அவளின் வீட்டின் கதவு தட்டப்பட்டது.
வெளியே நின்று கொண்டிருந்தது நிர்மலா தான். “வைஷு” என்று அழைத்தபடி அவள் வெளியே நின்று கொண்டிருக்க… இதுவரை கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் மெல்ல அவள் கண்களில் இருந்து வெளியேறியது. ஓடி வந்து கதவை திறந்தாள்.
சுற்றி இருந்த சூழல்… நடந்த நிகழ்வுகளை நிர்மலாவிடம் சொல்லாமல் சொல்லியது. சங்கவிக்கு ஆறுதல் கூறிவிட்டு தர்மனின் நிலையை ஆராய அவன் அருகே சென்றாள். தர்மனுக்கு உயிர் இருந்தது.
அப்போதுதான் உண்மையில் சங்கவிக்கு மூச்சே வந்தது… மீண்டும் ஒரு கொலை செய்து விட்டு இந்த வாழ்க்கையையும் இழக்க அவள் தயாராக இல்லை.
என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்… குணமாகி திரும்பி வந்து அவன் தன்னைக் கொன்றால் கூட பரவாயில்லை… ஆனால் மீண்டும் ஒரு கொலைப் பழியை சுமக்க சங்கவி தயாராக இல்லை.
அதனால் ஆட்களின் உதவியுடன் தர்மனை அழைத்துக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
எந்த ஆண்மையின் திமிரில் அவளை நெருங்கினோ அந்த ஆண்மையை அவள் சிதைத்து இருந்தாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து கண் விழித்தான் தர்மன். அதற்குள் ஊருக்கு சென்ற மதியும் அங்கு திரும்பி வந்திருந்தான்.
கண்விழித்த தர்மனால் தனக்கு நடந்த இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்போதே அவளை கொல்ல வேண்டும் என்ற ஆத்திரம் வந்தது. ஆனால் தான் எப்படி வாழ்நாள் முழுவதும் இனி துன்பப்பட போகிறோமோ அதே போல அவளும் அவளது வாழ்க்கையை எண்ணி எண்ணி துன்பப்பட வேண்டும் என்று நினைத்தான். தான் இழந்ததை விட ஆயிரம் மடங்கு அவள் இழந்து நிற்க வேண்டும் என்று நினைத்தான். அவளிடமிருந்து அனைத்தையும் பறித்துக் கொண்டு “ஏன் வாழ்கிறோம்” என்ற நிலைக்கு அவளை தள்ள வேண்டும் என்று நினைத்தான்.
நடந்த விஷயமறிந்து மதி வந்து அவனை மிரட்டிய போது கூட, “போதையில் தவறாக நடந்து கொண்டேன்” என்று மன்னிப்பு கேட்டு பின் வாங்கினான் தர்மன்.
ஆரம்பத்தில் அவனது மன்னிப்பை மதி நம்பவில்லை. ஆனால் அதன் பிறகான நாட்களில் அவன் மதியிடம் நடந்து கொண்ட முறை அவனை நம்ப வைத்தது.
மதி விஷயத்தில் மட்டுமல்ல… எந்தவித தவறான காரியத்தையும் செய்யாமல் தர்மன் அனைத்திலும் இருந்து சற்று விலகியே இருந்தான். சங்கவியின் பக்கம் அவன் தலை கூட திரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல் பாண்டியன் விடுதலையாகி வந்தவுடன் மதிக்கும், சங்கவிக்கும் அவர் தலைமையில் விரைவில் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்றும் பேசியிருந்தான். மதி மட்டுமல்ல அங்கிருந்த பலரும் தர்மன் மாறிவிட்டதாக தான் நம்பினர்.
ஒரு பெண்ணால் தனது ஆண்மை பறிபோய்விட்டது என்பதை வெளியே சொல்ல வெட்கப்பட்டு அவமானப்பட்டு நின்ற தருமன்… அன்று சங்கவியின் வீட்டில் நடந்த நிகழ்வை யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. அதில் சம்பந்தப்பட்ட பிறரும் அதனை வெளியே பேசிக்கொள்ளவில்லை.
என்னதான் வெளியில் நல்முறையில் நடித்து கொண்டு இருந்தாலும், அவன் இழந்த அந்த விஷயமும் அடைந்த அவமானமும் அவனது மனதில் காட்டுத் தீயென எரிந்து கொண்டிருந்தது.
சங்கவியை பழி தீர்க்க சரியான சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பாண்டியனின் விஷயம் மிகப்பெரும் உதவியாக இருந்தது.
***
உன் ஆருயிர் காதலியை தனது பகைக்காக பாண்டியன் பகடையாக்க நினைக்கிறார் என்பதை மதியிடம் வேறு வகையில் போட்டு உடைத்தான் தர்மன்.
பாண்டியனும் தன் குடும்ப வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் மதியிடம் கூறினான். அனைத்தையும் கேட்டு முடித்த பின்பும் மதி அதற்கு சம்மதிக்கவில்லை.
மதி சம்மதிக்கவில்லை என்பது பாண்டியனுக்கு பெரும் ஏமாற்றம்தான். ஆனால் அதற்காக அவனை வெருக்கத் தோணவில்லை.
“உனக்கு வேண்டாம் என்றால் வேண்டாம்” என்று கூறி அவனை அங்கிருந்து அனுப்பி வைத்திருந்தார்.
***
“மதிக்கு இதுல விருப்பம் இல்ல… நீ வேற ஆளை பாரு” என்று கூறியபடி பாண்டியன் அங்கிருந்து செல்ல.. தர்மன் தனது அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்தான்.
“நான் இதை உங்க கிட்ட சொல்ல வேண்டாம்னு தான் நினைச்சேன்… எனக்கு இப்ப அதை சொல்லியே ஆகணும்னு தோணுது. நீங்க நினைக்கிற அளவுக்கு மதி உங்களுக்கு உண்மையா இல்ல… அன்னைக்கும் அந்த கயல் விஷயத்துல உங்களை கைது பண்ணும் போது, உங்க கூட இருந்த எல்லாரும் மாட்டிக்கிட்டாங்க… ஆனா மதி மட்டும் தப்பிச்சிட்டான்.. அவன் தான் போலீஸ்ல தகவல் கொடுத்து உங்களை மாட்ட வச்சிருக்கான். அவனுக்கும் அந்த குடும்பத்துக்குமே கூட எதாவது சம்மந்தம் இருக்கலாம்னு தோணுது… இல்லனா பணத்துக்காக கூட அதை அவன் பண்ணி இருக்கலாம். காரணம் இல்லாம பொய்யா பழி போடுறன்னு நினைக்காதீங்க… நம்ம டிரைவர் ரெண்டு மூணு தடவை வேதா கூட மதிய பார்த்ததா சொன்னான்… அன்னைக்கு மதி யார்கிட்டயோ கால் பண்ணி கயல் அங்க இருக்க விஷயத்தை சொன்னதை அவன் கேட்டு இருக்கான்”
என்று யார் உண்மையில் வேதாவுக்கு தகவல் கொடுத்தாரோ அதே ஆளை பொய் சாட்சியாக பாண்டியன் முன்னே கொண்டு வந்து நிறுத்தினான் தர்மன்.
டிரைவர் தான் வேதாவுக்கு தகவல் கொடுத்தது என்பதை அறிந்து கொண்ட தர்மன் அவனை மிரட்டி அந்த பழியை மதியின் மீது போடுமாறு எச்சரித்தான். அவனும் உயிருக்கு பயந்து தான் செய்த செயலை மதி செய்ததாக கூறி அவன் மீது பழி சுமத்தினான்.
தான் கைதாகும் போது மதி அங்கு இல்லை என்பதே பாண்டியனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய விஷயம் என்று வரும்போது மதியின் தரப்பிலிருந்து சிந்திக்க பாண்டியன் ஒரு நொடியும் யோசிக்கவில்லை.
இவர்கள் இருவரும் பேசிக் கொள்ள அவகாசம் கிடைத்தால் நிச்சயம் இந்த விஷயம் திசை மாறிவிடும் என்பதை நன்கு உணர்ந்து இருந்த தர்மன் அந்த நேரம் மதியினை ஒரு வழக்கில் கைதாக வைத்தான். அப்போது மதியை வெளியே எடுக்க பாண்டியன் தரப்பிலிருந்து எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஏற்கனவே மதியின் மீது சந்தேகத்தில் இருந்த பாண்டியனும் அதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மதியை அப்படியே விட்டு விட்டார்.
மதியை எப்படியாவது அந்த வழக்கில் இருந்து வெளியே எடுத்து விட வேண்டும் என்று நிர்மலாவும் சங்கவியும் தான் போராடிக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
தனித்துவிடப்பட்டாள் சங்கவி, மதி இல்லாத ஒவ்வொரு நொடியும் அவளுக்கு நரகமாக நகர்ந்தது… நிம்மதி இழந்து வாடினாள்.
***
“நீங்க இப்படியே அமைதியா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டிங்களா?” என்று பாண்டியனிடம் கேட்டான் தர்மன்.
“ புரியல என்ன சொல்ல வர”
“அதான் அன்னைக்கு அந்த ஆரியன் விஷயத்தில ஒரு பிளான் சொல்லி இருந்தேனே”
“அதுக்கு தான் வேற ஒரு பொண்ணை ஏற்பாடு பண்ண சொல்லி இருந்தேனே”
“நம்பிக்கையானவங்க வேற யாரும் கிடைக்கல நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க மீதி எல்லா விஷத்தையும் நான் பார்த்துகிறேன்”
மதியின் விஷயம் இன்னும் பாண்டியனின் மனதை அறுத்துக் கொண்டிருந்தது. முழுதாக மதிய அவரால் சந்தேகபடவும் முடியவில்லை.. அதே சமயம் அவனை முழுவதுமாக நம்பவும் முடியவில்லை.
வெகு நேரம் யோசித்தவரின் கண் முன் தனது மகனின் புகைப்படம் இருந்தது. அதைப் பார்த்தவரின் கண்கள் இரத்தமென சிவந்து போனது… ‘தவறே ஆனாலும் சரி’ தன் மகனுக்காக இதனை தான் செய்து தானாக வேண்டும் என்று முடிவு எடுத்தார்.
“என்ன பண்ணணுமோ பண்ணு எனக்கு அந்த குடும்பத்துல ஒருத்தனும் நிம்மதியாவும் இருக்க கூடாது, உயிரோடவும் இருக்க கூடாது” என்று கூறியபடி அங்கிருந்து எழுந்து சென்றார்.
***
சங்கவியை அடித்து பணியவைக்க தர்மன் முடிவு செய்யவில்லை.
தன் வீட்டிற்கு வந்த தர்மனை பார்த்து சற்று அதிர்ந்து போனாள் சங்கவி. நிர்மலாவும் இப்போது அவளுடன் தான் இருந்தாள்.
“நீயும் இங்க தான் இருக்கியா?” என்று நிர்மலாவை பார்த்து கேட்டபடி வீட்டிற்குள் நுழைந்தான் தர்மன்.
“என்ன விஷயம் எதுக்காக வந்து இருக்கீங்க? அதான் மதி விஷயத்தில் எந்த உதவியும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டீங்கல்ல, அப்புறம் உங்களுக்கு இங்க என்ன வேலை?” என்று கேட்டாள் நிர்மலா.
“நான் உன்கிட்ட பேச வரல” என்றவனின் பார்வை சங்கவியை நோக்கி திரும்பியது “ மதியை ரொம்ப எதிர்பார்க்கிற போல… உன்னுடைய எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்து வைக்கிறேன்… ஆனால் அதுக்கு நீ ஒரு உதவி பண்ணனும்” என்றதும் சற்று அச்சம் கொண்டு அவனது முகத்தைப் பார்த்தாள் சங்கவி.
“தப்பா எதுவும் கேக்க மாட்டேன் பயப்படாதே… அப்படியே ஏதாவது கேக்கலாம்னு தோணுனாலும் என்னால தான் எதுவும் பண்ண முடியாதே… சரி அதை விடு… நான் சொல்ற ஒருத்தருக்கு நீ பொண்ணா நடிக்கணும்… அப்புறம் ஒருத்தனுக்கு பொண்டாட்டியாவும் நடிக்கணும்” குழப்பமான சங்கவி “என்ன பேசிட்டு இருக்க நீ? நீ சொல்ற எதையும் பண்ணனும் எனக்கு எந்த அவசியமும் இல்லை… உனக்கு பயந்து எதையும் செய்யணும்னு எனக்கு எந்த தேவையும் இல்லை” என்று துணிச்சலாக பதில் கூறினாள் சங்கவி
“ஓ அப்படியா? “ என்றபடி தன் இடையில் சொருகி இருந்த கத்தியை எடுத்து நிர்மலாவின் வயிற்றில் ஓங்கி குத்து இருந்தான் தர்மன்.
ரத்தம் வடிய வயிற்றை பிடித்துக் கொண்டு நிர்மலா அப்படியே கீழே அமர… கதறி துடித்தபடி அவள் அருகில் செல்ல பார்த்த சங்கவியின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினான் தர்மன்.
“சும்மா உன்ன மிரட்டிட்டு போகலாம் நான் இங்க வரல இப்ப நான் சொல்ல போற விஷயத்தை நீ செய்யலன்னா என்ன நடக்குங்கறத்துக்கான ஒரு சின்ன முன்னோட்டம் தான் இது… நான் சொல்லுறபடி எல்லாம் நீ நடந்துக்கணும் அப்படி இல்லன்னா இதே நிலைமை ஜெயிலுக்குள்ள இருக்க மதிக்கும் வரும். கடைசில அவனோட பிணத்தைக் கூட உன்னால பார்க்க முடியாது… அந்த அளவு ஆக்கிடுவேன்…”
“ நீ என்ன சொன்னாலும் அதை நான் செய்றேன் ஆனா தயவு செஞ்சு நிர்மலாவை காப்பாத்து” கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரிந்து கொண்டிருந்த நிர்மலாவை பார்த்து கதறினாள் சங்கவி.
“பச் இப்ப அவள காப்பாத்துற மூடுல நான் இல்ல… நாளைக்கு நீ ஒரு இடத்துக்கு போக வேண்டியது இருக்கும் ரெடியா இரு… நான் சொன்ன மாதிரி எல்லாம் நீ அங்க நடந்துக்கணும்… அங்கு ஏதாவது ஒரு சின்ன தப்பு நடந்தா கூட அன்னையோட மதியை நீ மறந்து விட வேண்டியதுதான்” என்றவன் நிர்மலாவின் கழுத்தில் ஓங்கி மிதித்தான். அவன் மிதித்த வேகத்தில் அவள் உயிர் பிரிந்திருந்தது.
“இதோ இதே போல மதியையும் முடிச்சுட்டு போயிட்டு இருப்பேன்” சங்கவிக்கு அழ கூட நேரம் கொடுக்காமல்… நிர்மலாவின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் தர்மனின் ஆட்கள்.
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்க ஆளில்லாமல் மீண்டும் நிற்கதியானாள் சங்கவி.
தன்னைக்காத்து நின்றவனின் உயிருக்காக அனைத்து பாவத்தையும் சுமந்து கொண்டு நிற்க தயாராகி ஆரியனின் வீட்டில் காலடி எடுத்து வைத்தால் சங்கவி இப்போது பல்லவியாக…
அன்று நடந்த நிகழ்வுகளை அசை போட்டு பார்த்த தர்மனின் மனம் முழுவதும் கோபம் நிரம்பியிருந்தது. அவனது கைகளோ மெல்ல மேலெழுந்து அவன் நெஞ்சில் இருந்த தழும்பினை வருடி கொண்டது.
முகத்தோற்றம் மாறிய சங்கவியின் மீது தர்மனுக்கு எப்போதும் ஒரு வகை ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. அவனையும் மீறி அவளிடம் நெருங்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. ஏற்கனவே பெண் பித்து கொண்டவன், சங்கவியின் வசீகரத்தில் அதீத ஆர்வம் கொண்டிருந்தான்.
தற்போதெல்லாம் ‘அவள் வேண்டும்’ என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் ஆழமாக இருந்தது. மதியைப் பற்றிய சிந்தனையே அவனுக்கு இல்லை.
இப்படியான ஒரு நாளில் மதியை வெளி வேலை விஷயமாக வேறு ஊருக்கு அனுப்பி வைத்திருந்தான் தர்மன். இந்த நேரத்தை பயன்படுத்தி மதியின் வீட்டிற்குள் நுழைந்து இருந்தான் தர்மன்.
அவனை மீறிய அதீத போதையில் இருந்தான்… அப்போது கதவை திறந்த சங்கவி அவனது கண்களில் விழுந்தாள்.
அவனது பார்வையையும், நடவடிக்கையும் கண்டு அச்சம் கொண்ட சங்கவி… அமைதியாக இரு அடி பின்னே நகர்ந்தாள்.
“என்ன விஷயம்? அவர் வீட்டுல இல்லை” என்று சொன்ன சங்கவியை பார்த்தபடி அறைக்குள் நுழைந்தவன் தன் கையில் வைத்திருந்த மது பாட்டிலை அருகில் இருந்த டேபிளில் வைத்தபடி, கவியை நோக்கி கரத்தினை நீட்டி “அது தெரிஞ்சு தானே வந்திருக்கேன்”என்று சொல்லி புன்னகைத்தபடியே அவளை நெருங்க முற்பட்டான்… சட்டென சுதாரித்துக் கொண்ட சங்கவி அவனை வெளியே தள்ளி கதவை தாழிட முற்பட்டாள்.
ஆனால் முடியவில்லை அதற்குள் தர்மன் நடு வீட்டிற்குள் புகுந்து, அவனே கதவை உள் தாழ்பாள் போட்டு கொண்டான்.
“எதுக்கு இப்படி பண்ணுறீங்க? முதலில் வெளியே போங்க” என்றவளின் கரத்தை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்த தருமன் அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தான். அவனிடமிருந்து விலக முற்பட்டவள் ஒரு கட்டத்தில் தன் இதழ் நோக்கி குனிந்தவனின் முகத்தில் காரி உமிழ்ந்து இருந்தாள்.
அவளது செயலில் கோவம் அடைந்த தர்மன் அவளது கன்னத்தில் மாறி மாறி அறைந்தான். அடி வாங்கிய வேகத்தில் அவளது கண்கள் இருண்டு கொண்டு வந்தது.
தடுமாறி நின்று கொண்டிருந்தவளின் உச்ச முடியை கொத்தாகப் பிடித்தவன்… அவளது ஆடைகளை களைய ஆரம்பித்தான். எவ்வளவோ தடுத்து பார்த்தாள் முடியவில்லை. கடந்த கால நிகழ்வுகள் வேறு அவள் கண் முன்னே வந்து போனது. இந்த கேவலமானவனின் செயல்கள் அவளது முதலாளி முத்துவை இவளுக்கு மீண்டும் நினைவு படுத்தியது.
எந்த விஷயத்தை மறக்க வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாளோ அதே விஷயம் மீண்டும் அவள் வாழ்வில் நடப்பதை நினைத்து துடித்துக் கொண்டிருந்தாள். அன்று அவளிடம் எத்தகைய எதிர்வினை இருந்ததோ அதே தான் இன்றும் அவளிடம் இருந்தது.
தப்பிக்க முயன்று பார்த்தவளின் கைகளில் கத்தி போன்ற கூர்மையான ஒரு பொருள் கிடைத்தது. அடுத்த நொடி தாமதிக்காமல் அதனைக் கொண்டு அவன் நெஞ்சை கிழித்திருந்தாள். வழியில் துடித்தவன் அவளை விட்டு விலகி நின்று தன் நெஞ்சில் வடியும் ரத்தத்தினை தொட்டு பார்க்க… தலை கலைந்து, உடை கலைந்து கண்கள் அக்னி போல் கோபத்தில் சிவந்து கொலை வெறியுடன் அவனைப் பார்த்தபடி எதிரில் நின்று கொண்டிருந்தாள் சங்கவி.
அவள் தன்னை காயப்படுத்திய கோபத்தில் தகாத வார்த்தைகள் சொல்லி அவளை திட்டியபடியே அவளை அடிக்க பாய்ந்து இருந்தான் தர்மன்.
அப்போது அவன் வீட்டிற்குள் வரும் போது கொண்டு வந்திருந்த மது பாட்டில் டேபிளில் இருந்தது. அதனை கையில் எடுத்தவள், அதனை உடைத்து அவனது முகத்தில் குத்த சென்றாள். நொடி பொழுதில் நிகழ்ந்த அந்த செயலை கண்டு தர்மனே அதிர்ந்து போனான்.
அவனது கண்களுக்கும், பாட்டிலின் கூர்முனைக்கும் நூலிழை அளவு இடைவெளி தான் இருந்தது. அவளது செயலில் அப்படியே ஆடிப் போய் நின்றான்.
“வெளியே போயிடு… இன்னொரு முறை என்னை நெருங்கணும்னு நெனச்ச அடுத்த நொடி உன் உடம்புல உயிர் இருக்காது” என்றபடி ஆக்ரோஷமாக நின்றவளையும் அந்த பாட்டிலையும் மாறி மாறி பார்த்தவன் உண்மையில் அச்சம் கொண்டு அப்படியே இரண்டு அடிகள் பின்னே நகர்ந்தான்… அவன் விலகி விட்டான்! என்ற எண்ணத்தில் பாட்டிலை அவள் சற்று கீழே இறக்க, அந்த நேரத்திற்காக காத்திருந்தது போல வெறிபிடித்துப்போய் அவளது தலை முடியை பிடித்து சுவரில் ஓங்கி மோதினான். இன்னும் இரண்டு அடி இதேபோன்று பலமாக விழுந்திருந்தால் சங்கவியின் உயிர் அதே இடத்தில் பிரிந்து இருக்கும்.
அந்நொடியில் தனது மொத்த பலத்தையும் கொண்டு பின் பக்கமாக அவனை முட்டி தள்ளியவள், மீண்டும் அவன் தன்னை நெருங்கிய கணம் சட்டென அவனது இடுப்புக்கு கீழே பாட்டிலை சொருகி இருந்தாள் சங்கவி.
வழியில் துடித்துப் போன தர்மன், ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அதே இடத்தில் மயங்கி சரிந்தான். அப்போது அவளின் வீட்டின் கதவு தட்டப்பட்டது.
வெளியே நின்று கொண்டிருந்தது நிர்மலா தான். “வைஷு” என்று அழைத்தபடி அவள் வெளியே நின்று கொண்டிருக்க… இதுவரை கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் மெல்ல அவள் கண்களில் இருந்து வெளியேறியது. ஓடி வந்து கதவை திறந்தாள்.
சுற்றி இருந்த சூழல்… நடந்த நிகழ்வுகளை நிர்மலாவிடம் சொல்லாமல் சொல்லியது. சங்கவிக்கு ஆறுதல் கூறிவிட்டு தர்மனின் நிலையை ஆராய அவன் அருகே சென்றாள். தர்மனுக்கு உயிர் இருந்தது.
அப்போதுதான் உண்மையில் சங்கவிக்கு மூச்சே வந்தது… மீண்டும் ஒரு கொலை செய்து விட்டு இந்த வாழ்க்கையையும் இழக்க அவள் தயாராக இல்லை.
என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்… குணமாகி திரும்பி வந்து அவன் தன்னைக் கொன்றால் கூட பரவாயில்லை… ஆனால் மீண்டும் ஒரு கொலைப் பழியை சுமக்க சங்கவி தயாராக இல்லை.
அதனால் ஆட்களின் உதவியுடன் தர்மனை அழைத்துக் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
எந்த ஆண்மையின் திமிரில் அவளை நெருங்கினோ அந்த ஆண்மையை அவள் சிதைத்து இருந்தாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து கண் விழித்தான் தர்மன். அதற்குள் ஊருக்கு சென்ற மதியும் அங்கு திரும்பி வந்திருந்தான்.
கண்விழித்த தர்மனால் தனக்கு நடந்த இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இப்போதே அவளை கொல்ல வேண்டும் என்ற ஆத்திரம் வந்தது. ஆனால் தான் எப்படி வாழ்நாள் முழுவதும் இனி துன்பப்பட போகிறோமோ அதே போல அவளும் அவளது வாழ்க்கையை எண்ணி எண்ணி துன்பப்பட வேண்டும் என்று நினைத்தான். தான் இழந்ததை விட ஆயிரம் மடங்கு அவள் இழந்து நிற்க வேண்டும் என்று நினைத்தான். அவளிடமிருந்து அனைத்தையும் பறித்துக் கொண்டு “ஏன் வாழ்கிறோம்” என்ற நிலைக்கு அவளை தள்ள வேண்டும் என்று நினைத்தான்.
நடந்த விஷயமறிந்து மதி வந்து அவனை மிரட்டிய போது கூட, “போதையில் தவறாக நடந்து கொண்டேன்” என்று மன்னிப்பு கேட்டு பின் வாங்கினான் தர்மன்.
ஆரம்பத்தில் அவனது மன்னிப்பை மதி நம்பவில்லை. ஆனால் அதன் பிறகான நாட்களில் அவன் மதியிடம் நடந்து கொண்ட முறை அவனை நம்ப வைத்தது.
மதி விஷயத்தில் மட்டுமல்ல… எந்தவித தவறான காரியத்தையும் செய்யாமல் தர்மன் அனைத்திலும் இருந்து சற்று விலகியே இருந்தான். சங்கவியின் பக்கம் அவன் தலை கூட திரும்பவில்லை. அதுமட்டுமல்லாமல் பாண்டியன் விடுதலையாகி வந்தவுடன் மதிக்கும், சங்கவிக்கும் அவர் தலைமையில் விரைவில் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்றும் பேசியிருந்தான். மதி மட்டுமல்ல அங்கிருந்த பலரும் தர்மன் மாறிவிட்டதாக தான் நம்பினர்.
ஒரு பெண்ணால் தனது ஆண்மை பறிபோய்விட்டது என்பதை வெளியே சொல்ல வெட்கப்பட்டு அவமானப்பட்டு நின்ற தருமன்… அன்று சங்கவியின் வீட்டில் நடந்த நிகழ்வை யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. அதில் சம்பந்தப்பட்ட பிறரும் அதனை வெளியே பேசிக்கொள்ளவில்லை.
என்னதான் வெளியில் நல்முறையில் நடித்து கொண்டு இருந்தாலும், அவன் இழந்த அந்த விஷயமும் அடைந்த அவமானமும் அவனது மனதில் காட்டுத் தீயென எரிந்து கொண்டிருந்தது.
சங்கவியை பழி தீர்க்க சரியான சமயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பாண்டியனின் விஷயம் மிகப்பெரும் உதவியாக இருந்தது.
***
உன் ஆருயிர் காதலியை தனது பகைக்காக பாண்டியன் பகடையாக்க நினைக்கிறார் என்பதை மதியிடம் வேறு வகையில் போட்டு உடைத்தான் தர்மன்.
பாண்டியனும் தன் குடும்ப வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் மதியிடம் கூறினான். அனைத்தையும் கேட்டு முடித்த பின்பும் மதி அதற்கு சம்மதிக்கவில்லை.
மதி சம்மதிக்கவில்லை என்பது பாண்டியனுக்கு பெரும் ஏமாற்றம்தான். ஆனால் அதற்காக அவனை வெருக்கத் தோணவில்லை.
“உனக்கு வேண்டாம் என்றால் வேண்டாம்” என்று கூறி அவனை அங்கிருந்து அனுப்பி வைத்திருந்தார்.
***
“மதிக்கு இதுல விருப்பம் இல்ல… நீ வேற ஆளை பாரு” என்று கூறியபடி பாண்டியன் அங்கிருந்து செல்ல.. தர்மன் தனது அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்தான்.
“நான் இதை உங்க கிட்ட சொல்ல வேண்டாம்னு தான் நினைச்சேன்… எனக்கு இப்ப அதை சொல்லியே ஆகணும்னு தோணுது. நீங்க நினைக்கிற அளவுக்கு மதி உங்களுக்கு உண்மையா இல்ல… அன்னைக்கும் அந்த கயல் விஷயத்துல உங்களை கைது பண்ணும் போது, உங்க கூட இருந்த எல்லாரும் மாட்டிக்கிட்டாங்க… ஆனா மதி மட்டும் தப்பிச்சிட்டான்.. அவன் தான் போலீஸ்ல தகவல் கொடுத்து உங்களை மாட்ட வச்சிருக்கான். அவனுக்கும் அந்த குடும்பத்துக்குமே கூட எதாவது சம்மந்தம் இருக்கலாம்னு தோணுது… இல்லனா பணத்துக்காக கூட அதை அவன் பண்ணி இருக்கலாம். காரணம் இல்லாம பொய்யா பழி போடுறன்னு நினைக்காதீங்க… நம்ம டிரைவர் ரெண்டு மூணு தடவை வேதா கூட மதிய பார்த்ததா சொன்னான்… அன்னைக்கு மதி யார்கிட்டயோ கால் பண்ணி கயல் அங்க இருக்க விஷயத்தை சொன்னதை அவன் கேட்டு இருக்கான்”
என்று யார் உண்மையில் வேதாவுக்கு தகவல் கொடுத்தாரோ அதே ஆளை பொய் சாட்சியாக பாண்டியன் முன்னே கொண்டு வந்து நிறுத்தினான் தர்மன்.
டிரைவர் தான் வேதாவுக்கு தகவல் கொடுத்தது என்பதை அறிந்து கொண்ட தர்மன் அவனை மிரட்டி அந்த பழியை மதியின் மீது போடுமாறு எச்சரித்தான். அவனும் உயிருக்கு பயந்து தான் செய்த செயலை மதி செய்ததாக கூறி அவன் மீது பழி சுமத்தினான்.
தான் கைதாகும் போது மதி அங்கு இல்லை என்பதே பாண்டியனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய விஷயம் என்று வரும்போது மதியின் தரப்பிலிருந்து சிந்திக்க பாண்டியன் ஒரு நொடியும் யோசிக்கவில்லை.
இவர்கள் இருவரும் பேசிக் கொள்ள அவகாசம் கிடைத்தால் நிச்சயம் இந்த விஷயம் திசை மாறிவிடும் என்பதை நன்கு உணர்ந்து இருந்த தர்மன் அந்த நேரம் மதியினை ஒரு வழக்கில் கைதாக வைத்தான். அப்போது மதியை வெளியே எடுக்க பாண்டியன் தரப்பிலிருந்து எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஏற்கனவே மதியின் மீது சந்தேகத்தில் இருந்த பாண்டியனும் அதற்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. மதியை அப்படியே விட்டு விட்டார்.
மதியை எப்படியாவது அந்த வழக்கில் இருந்து வெளியே எடுத்து விட வேண்டும் என்று நிர்மலாவும் சங்கவியும் தான் போராடிக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
தனித்துவிடப்பட்டாள் சங்கவி, மதி இல்லாத ஒவ்வொரு நொடியும் அவளுக்கு நரகமாக நகர்ந்தது… நிம்மதி இழந்து வாடினாள்.
***
“நீங்க இப்படியே அமைதியா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டிங்களா?” என்று பாண்டியனிடம் கேட்டான் தர்மன்.
“ புரியல என்ன சொல்ல வர”
“அதான் அன்னைக்கு அந்த ஆரியன் விஷயத்தில ஒரு பிளான் சொல்லி இருந்தேனே”
“அதுக்கு தான் வேற ஒரு பொண்ணை ஏற்பாடு பண்ண சொல்லி இருந்தேனே”
“நம்பிக்கையானவங்க வேற யாரும் கிடைக்கல நீங்க சரின்னு மட்டும் சொல்லுங்க மீதி எல்லா விஷத்தையும் நான் பார்த்துகிறேன்”
மதியின் விஷயம் இன்னும் பாண்டியனின் மனதை அறுத்துக் கொண்டிருந்தது. முழுதாக மதிய அவரால் சந்தேகபடவும் முடியவில்லை.. அதே சமயம் அவனை முழுவதுமாக நம்பவும் முடியவில்லை.
வெகு நேரம் யோசித்தவரின் கண் முன் தனது மகனின் புகைப்படம் இருந்தது. அதைப் பார்த்தவரின் கண்கள் இரத்தமென சிவந்து போனது… ‘தவறே ஆனாலும் சரி’ தன் மகனுக்காக இதனை தான் செய்து தானாக வேண்டும் என்று முடிவு எடுத்தார்.
“என்ன பண்ணணுமோ பண்ணு எனக்கு அந்த குடும்பத்துல ஒருத்தனும் நிம்மதியாவும் இருக்க கூடாது, உயிரோடவும் இருக்க கூடாது” என்று கூறியபடி அங்கிருந்து எழுந்து சென்றார்.
***
சங்கவியை அடித்து பணியவைக்க தர்மன் முடிவு செய்யவில்லை.
தன் வீட்டிற்கு வந்த தர்மனை பார்த்து சற்று அதிர்ந்து போனாள் சங்கவி. நிர்மலாவும் இப்போது அவளுடன் தான் இருந்தாள்.
“நீயும் இங்க தான் இருக்கியா?” என்று நிர்மலாவை பார்த்து கேட்டபடி வீட்டிற்குள் நுழைந்தான் தர்மன்.
“என்ன விஷயம் எதுக்காக வந்து இருக்கீங்க? அதான் மதி விஷயத்தில் எந்த உதவியும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டீங்கல்ல, அப்புறம் உங்களுக்கு இங்க என்ன வேலை?” என்று கேட்டாள் நிர்மலா.
“நான் உன்கிட்ட பேச வரல” என்றவனின் பார்வை சங்கவியை நோக்கி திரும்பியது “ மதியை ரொம்ப எதிர்பார்க்கிற போல… உன்னுடைய எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்து வைக்கிறேன்… ஆனால் அதுக்கு நீ ஒரு உதவி பண்ணனும்” என்றதும் சற்று அச்சம் கொண்டு அவனது முகத்தைப் பார்த்தாள் சங்கவி.
“தப்பா எதுவும் கேக்க மாட்டேன் பயப்படாதே… அப்படியே ஏதாவது கேக்கலாம்னு தோணுனாலும் என்னால தான் எதுவும் பண்ண முடியாதே… சரி அதை விடு… நான் சொல்ற ஒருத்தருக்கு நீ பொண்ணா நடிக்கணும்… அப்புறம் ஒருத்தனுக்கு பொண்டாட்டியாவும் நடிக்கணும்” குழப்பமான சங்கவி “என்ன பேசிட்டு இருக்க நீ? நீ சொல்ற எதையும் பண்ணனும் எனக்கு எந்த அவசியமும் இல்லை… உனக்கு பயந்து எதையும் செய்யணும்னு எனக்கு எந்த தேவையும் இல்லை” என்று துணிச்சலாக பதில் கூறினாள் சங்கவி
“ஓ அப்படியா? “ என்றபடி தன் இடையில் சொருகி இருந்த கத்தியை எடுத்து நிர்மலாவின் வயிற்றில் ஓங்கி குத்து இருந்தான் தர்மன்.
ரத்தம் வடிய வயிற்றை பிடித்துக் கொண்டு நிர்மலா அப்படியே கீழே அமர… கதறி துடித்தபடி அவள் அருகில் செல்ல பார்த்த சங்கவியின் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினான் தர்மன்.
“சும்மா உன்ன மிரட்டிட்டு போகலாம் நான் இங்க வரல இப்ப நான் சொல்ல போற விஷயத்தை நீ செய்யலன்னா என்ன நடக்குங்கறத்துக்கான ஒரு சின்ன முன்னோட்டம் தான் இது… நான் சொல்லுறபடி எல்லாம் நீ நடந்துக்கணும் அப்படி இல்லன்னா இதே நிலைமை ஜெயிலுக்குள்ள இருக்க மதிக்கும் வரும். கடைசில அவனோட பிணத்தைக் கூட உன்னால பார்க்க முடியாது… அந்த அளவு ஆக்கிடுவேன்…”
“ நீ என்ன சொன்னாலும் அதை நான் செய்றேன் ஆனா தயவு செஞ்சு நிர்மலாவை காப்பாத்து” கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரிந்து கொண்டிருந்த நிர்மலாவை பார்த்து கதறினாள் சங்கவி.
“பச் இப்ப அவள காப்பாத்துற மூடுல நான் இல்ல… நாளைக்கு நீ ஒரு இடத்துக்கு போக வேண்டியது இருக்கும் ரெடியா இரு… நான் சொன்ன மாதிரி எல்லாம் நீ அங்க நடந்துக்கணும்… அங்கு ஏதாவது ஒரு சின்ன தப்பு நடந்தா கூட அன்னையோட மதியை நீ மறந்து விட வேண்டியதுதான்” என்றவன் நிர்மலாவின் கழுத்தில் ஓங்கி மிதித்தான். அவன் மிதித்த வேகத்தில் அவள் உயிர் பிரிந்திருந்தது.
“இதோ இதே போல மதியையும் முடிச்சுட்டு போயிட்டு இருப்பேன்” சங்கவிக்கு அழ கூட நேரம் கொடுக்காமல்… நிர்மலாவின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் தர்மனின் ஆட்கள்.
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைக்க ஆளில்லாமல் மீண்டும் நிற்கதியானாள் சங்கவி.
தன்னைக்காத்து நின்றவனின் உயிருக்காக அனைத்து பாவத்தையும் சுமந்து கொண்டு நிற்க தயாராகி ஆரியனின் வீட்டில் காலடி எடுத்து வைத்தால் சங்கவி இப்போது பல்லவியாக…