அத்தியாயம் 25
ஆண்டாளுக்கும், மதுவுக்கும் கூட அவர்கள் தங்கள் காதில் கேட்டது நிஜமாக தானா என்று தோனறியது. ஒருவரையொருவர் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டனர்.
மருதன் அமைதியாக அகரனையும், தெய்வாவையும் பார்த்தார்.
பாண்டியன், “அகரா.. என்ன சொல்ற? உனக்கெப்படி தெரியும்.”
“மாமா. அந்த ஆளும், அவளோட அம்மாவும் ஒன்னா சேர்ந்து இருக்கற ஃபோட்டோவ பார்த்தேன். அதுவும் அவ அம்மா ப்ரெக்னண்டா இருக்கறப்ப, அவங்க தோள் மேல் கைப்போட்டு அவங்களையே பாத்துட்டு இருக்கார்.இன்னும் என்ன ஆதாரம் வேணும்?”
“அது நிஜமா அவர் தானா? நல்லா பாத்தியா. ஏன் கேட்கிறேன்னா அவர் விட்டுட்டு போறப்ப நீ ரொம்ப சின்ன பையன். உனக்கு அவரை ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை.”
பாண்டியன் சொன்னதும்,
“மாமா. நேர்ல பாத்த ஞாபகம் இல்லைன்னாலும் தினமும் அந்த ஆள் ஃபோட்டோவ பாத்திட்டே தானே இருந்தேன். இதோ இந்த கையால் அவனை நேர்ல பாக்கறப்ப அடிச்சு கொல்லனும்னு காத்திட்டு இல்ல இருந்தேன். அப்புறம் எப்படி மாமா அந்த ஆளை தெரிஞ்சுக்காம இருக்க முடியும். அதுவும் அம்மா நான் வயித்துல இருக்கப்ப அவனோட எடுத்துக்கிட்ட அதே ஃபோட்டோ மாதிரி. அப்படியே நிறை மாசத்தோட அவங்க தோள்ல கை போட்டுட்டு இருக்க மாதிரி எடுத்து வச்சிருக்கான். இதுல அவ அம்மாவ பாத்து அப்படி ஒரு சிரிப்போட நிக்கிறான். பாத்துட்டு அவ்ளோ ஆத்திரமா வந்துச்சு. அதான் அப்படியே கிளம்பி வந்துட்டேன்.”
அகரன் பேச, பேச அனைவரின் முகமும் மாறியது.
அதுவும் தெய்வாக்கு அதிர்ச்சி.
அகரன் நான்கு வயது இருக்கும் போது அவர் கணவர் விட்டு சென்றதும், காரணம் தெரியாமல் இன்று வருவார், நாளை வருவார் என்று காத்திருந்து ஒரு நாள் அந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
அவர் வேறொரு பெண்ணோடு சென்றதாக பாண்டியன் சொன்னதும் வீட்டில் இருந்து களவு போன பணம், நகைக்கான காரணம் புரிந்தது.
அப்போதும் கூட மனதின் ஓரத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது.
அகரன் மீதும் தெய்வாவின் மீதும் உயிரையே வைத்திருந்த ஒருவரால் எப்படி அவ்வளவு சீக்கிரம் துரோகம் செய்ய முடியும் என்று அவரால் நம்பவே முடியவில்லை.
நாட்கள் தான் கடந்ததே தவிர அவர் வரவே இல்லை.
அதன் பிறகு தான் தெய்வா கொஞ்சம் கொஞ்சமாக அவர் கணவரின் மீது இருந்த காதலை தன் மனதில் இருந்து தூக்கி எறிந்தார்.
மொத்தமாக ஒழிந்து போன ஒரு உறவு இன்று தாரிணி மூலம் எப்படி வந்து சேர்ந்திருக்கிறது? விதிக்கு கொஞ்சம் கூட கருணையில்லையா? என்று அவர் மனம் அடித்துக் கொண்டது.
அகரன் வளர வளர சந்திரனின் ஞாபகம் கொஞ்சம் கொஞ்சமாக தெய்வாவை விட்டுப் போனது. வாழ்க்கை முழுக்க அகரனுக்காகவே வாழ வேண்டும் என்று முடிவெடுத்தவர் சந்திரனை அதன் பின் யோசித்துக் கூட பார்க்கவில்லை.
சந்திரன் மேல் இருந்த ஆத்திரம் தாரிணி மேல் திரும்பியது.
‘எப்படி ஒரு பெண்ணால் அகரன் யாரென்று தெரிந்தும் இங்கு வந்து இப்படி நடிக்க முடியம். திட்டம் போட்டு அகரன் வண்டியில் விழுந்து இவர்கள் மூலமாகவே வீட்டுக்கு வந்து, வந்த சிறிது நாளிலேயே அகரனை அவள் பிடிக்கு கொண்டு வந்திருக்க முடியும்?’ மனம் கொந்தளித்தது.
இதுவரை கூட தாரிணி மீது எங்கோ ஒரு மூலையில் ஒரு சின்ன பரிதாபம் இருந்தது. ஆனால் இன்று அகரனின் பேச்சை கேட்டதும் தாரிணி மீதும் அவளின் அம்மா மீதும் கண்மூடித்தனமான கோபம் வந்தது.
‘தன் வாழ்க்கையை மொத்தமாக அழித்த ஒருத்தியின் மகள் தன் மகனின் வாழ்க்கையை அழிக்க வந்திருக்கிறாள்.’ நினைக்கவே முடியவில்லை.
“பாம்புக்கு நானே பால் ஊத்தி வளர்த்திருக்கேன். அவ திட்டம் போட்டு தான் வீட்டுக்குள்ள வந்திருக்கா. என் பையனை கல்யாணத்தன்னிக்கு தலை குனிய வைக்க தான் வந்திருப்பா. நல்லகாலம் கடவுள் தான் இப்போவே அவளை பத்தியும் அவ குடும்பத்தை பத்தியும் தெரிய வச்சிருக்கு.” என்றவரை அகரன் கண் இமைக்காமல் பார்த்தான்.
“மருமகனே. நீ சொல்றதை என்னால் நம்பவே முடியல. அவ எதுக்கு உன்னை பாக்க இங்க வரணும். அவங்களுக்கும் நமக்கும் எல்லாம் முடிஞ்சு போனதுன்னு தானே இத்தனை நாள் நினைச்சிட்டு இருந்தோம்.. இப்ப உன்னை வந்து ஏமாத்தி என்ன ஆகப்போகுது?”
“இதென்ன கேள்வி. அப்பன் அன்னிக்கு இருந்த பணம், நகையை ஆட்டைய போட்டுட்டு போனான். இப்ப இவ்வளோ பெரிசா வளர்ந்திருக்கே இந்த சொத்து, அதை மொத்தமா இவ ஆட்டைய போட வந்திருக்கா. ச்சீ.. அவ இவனுக்கு என்ன உறவு. எவ்ளோ கேவலமானவளா இருந்தா இப்படி வந்து இவனோட பழகியிருப்பா. இவனும் அவளை தலைக்கு மேல தூக்கி வச்சிட்டு ஆடினான். அன்னிக்கு இவன் அப்பனை வேணாம்னு சொன்னேன், கேட்காம கல்யாணம் பண்ணி வச்சீங்க. அவன் துரோகம் பண்ணிட்டு போனான். இப்பவும் அவளை வேணாம்னு சொன்னேன். யாரும் கேட்கலை. கல்யாணம் ஆகியிருந்தா ஊர்ல தலை காமிச்சிருக்க முடியுமா? எவ்ளோ கேவலமா பேசியிருக்கும் இந்த உலகம். பாவம் மாமா தான் துக்கம் தாங்காம தூக்குல தொங்கனும். நல்லவேளை ஆண்டவன் காப்பாத்திட்டான். நான் சொன்னா உங்களுக்கெல்லாம் நான் என்னவோ உங்களுக்கு நல்லது நடக்க கூடாதுன்னு நினைக்கிறேன்னு தோணும். எல்லாமே மாமாக்காக தான். நான் இந்த குடும்பத்தை என் கண்ணுக்குள்ள வச்சு பார்க்கறேன்” மதுவுக்கே ஆண்டாளின் பேச்சு கொஞ்சம் அதிகமாகத்தான் பட்டது.
‘இது தான் சாக்கு என்று எப்படியெல்லாம் பேசுகிறார்.’ என்று கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் பார்த்தாள்.
அகரனுக்கோ உள்ளுக்குள் அழுகை, கோபம், பயம், அருவருப்பு என்று பல உணர்வுகள் எரிமலை போல் கொந்தளித்தன.
‘நல்லவேளை கல்யாணம் நடக்கவில்லையென இவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் மனதை தொலைத்தது மட்டுமில்லாமல் அவளை உடலால் தீண்டினேனே. தீண்டிய இந்த உடலை என்ன செய்வது..’ யோசிக்க யோசிக்க அவனை நினைக்கவே அவனுக்கு அவ்வளவு கோபம்.
‘திருமணமே வேண்டாம் என்று நினைத்த தன்னை மாற்றியவள் ஏன் ஒரு துரோகியாக இருந்திருக்க வேண்டும். அவள் நிஜமாகவே அவனின் மகளாக இல்லாமல் இருந்திருக்க கூடாதா?’ மனம் தவித்தது. அவனே அவனை உள்ளுக்குள் துப்பிக் கொண்டான். இவ்வளவு நடந்த பின்னும் அவளுக்காக இப்படி யோசிக்கிறோமே என்று.
ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லிக் கொண்டு இருந்தார்கள், அத்தனைக்கும் தாரிணி தான் பகடைக்காயாக இருந்தாள்.
மருதனோ வாயே திறக்கவில்லை.
“அப்பா.. பாத்தீங்களா? அவன் பண்ணதையே அவன் பொண்ணும் இங்க வந்து செய்ய பாத்திருக்கா. நல்லவேளை நம்ம அகரன் தப்பிச்சான்.” பாண்டியன் பேசியதும் மருதன்,
“இப்பவும் சொல்றேன். நீங்க அன்னிக்கு அவசரப்பட்ட மாதிரியே இன்னிக்கும் அவசரப்படறீங்க. அப்பவே சந்திரனை தேடி போகலாம்னு சொன்னேன். ஒரு வேளை அவன் என் பொண்ணுக்கு நிஜமாவே துரோகம் பண்ணியிருந்தா
என் கையாலேயே அவனை கொன்னுருப்பேன். ஆனா நீங்க யாரும் நான் சொன்னதை கேட்கவே இல்லை. எப்பவும் ஒரு பக்கம் மட்டுமே பாத்து முடிவெடுக்கறது ரொம்ப தப்பு. அந்த பொண்ணுட்டையும் ஒரு வார்த்தை நேரா கேட்டுட்டா நமக்கு இரண்டு பக்கத்தோட நியாயம் புரியும்”
“அவகிட்ட போய் என்ன நியாயத்தை கேட்க போறீங்க?. அவ பக்கம் அப்படி ஒன்னு இருந்தா இங்க வந்த அன்னிக்கே நான் இன்னார் பொண்ணுன்னு உண்மையை சொல்லியிருக்கனும் இல்ல. கேடு கெட்ட குடும்பம் தானே அது. அகரன் தான் எல்லாத்தையும் நேரா பாத்துட்டு வந்துட்டானே. இதுக்கு மேல விசாரிக்க என்ன இருக்கு. தலை முழுகிட்டு வேற வேலையை பாருங்க.”
ஆண்டாள் சொன்னதும், மருதனுக்கு மட்டும் தான் இதே வார்த்தைகளை அன்றும் சந்திரனை பற்றி ஆண்டாள் சொன்னது ஞாபகம் வந்தது. மற்றவர்களுக்கு கோபம் தான் தலைக்கேறி இருந்ததே தவிர யோசிக்க தோன்றவில்லை.
“பாண்டியா நீ நேர்ல போய் அந்த பொண்ணை விசாரிச்சு என்ன ஏதுன்னு கேட்டுட்டு வா. அதுக்கு அப்புறம் எல்லாத்தையும் முடிவெடுத்துக்கலாம்.”
மருதன் சொல்லியதும் அனைவரது முகம் போன போக்கை பார்த்து அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது புரிந்தது.
“தாத்தா. என் மேல் நம்பிக்கை இல்லையா. நான் பார்த்தது அந்த ஆள் ஃபோட்டோவ தான். அவனைத்தான் நல்லா பாத்து வச்சிருக்கேனே. கூட நின்னது அவ அம்மாதான். அதை அவளே தான் அவங்க தனியா இருக்க ஃபோட்டோ காமிச்சு சொன்னா. அப்ப அவன் பொண்ணு தானே இவ. நல்லகாலம் அவன் செத்து போய்ட்டான். இல்லன்னா அவன் இப்ப என்னால செத்திருப்பான். யாரும் அங்க போக வேண்டாம். அவள்ட்ட எதையும் கேட்கவும் வேணாம்”
அகரன் சொன்னதை தெய்வாவும், பாண்டியனும் தலையை ஆட்டி தங்கள் முடிவும் அதான் என்று சொன்னார்கள்.
“அகரா. எப்பவும் ஆத்திரம், கோபத்துல முடிவெடுக்க கூடாது. எப்பவும் நான் சொல்றது தான். கண்ணால பாக்கறதும், காதால் கேட்கறதும் உண்மை கிடையாது. விசாரிச்சு உண்மையை தெரிஞ்சுக்க. அப்புறம் முடிவெடு. அந்த பொண்ணு பக்க நியாயம் கேளு. பாவம் அப்பா அம்மா இல்லாத பொண்ணு.. அநாதையா அங்க விட்டுட்டு வந்திருக்க” மருதன் சொல்லும் போதே ஆண்டாள் மதுவிடம் அலைபேசியில் அகரனை வீடியோவாக எடுக்க சொன்னார் யாருக்கும் தெரியாமல்.
“தாத்தா. முதல் முறையா உங்க பேச்சை மீறறதுக்கு மன்னிச்சுக்கங்க. அவள்ட்ட யாரும் போய் பேச வேண்டாம். அவ பண்ணதுக்கான தண்டனையை அவ அனுபவிச்சு தான் ஆகனும். . அவ அனாதையா நிக்கட்டும். நான் அவளோட தங்கியிருந்ததை அந்த ஊரே பாத்துச்சு. அவளை இனி யாரு கல்யாணம் பண்ணுவா. அவ அப்படியே தனி மரமா நிக்கட்டும். அப்பதான் எங்க அம்மாவோட வேதனை அவளுக்கு புரியும், எப்படி அவங்க கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு”
“ஆமா அப்பா. அந்த பொண்ணுக்கு அவன் தான் அப்பன்னா என் தங்கச்சி வடிச்ச கண்ணீரை அவ வடிக்கட்டும். நம்ப வச்சு ஏமாத்தறது அவங்களுக்கு வழக்கம் தானே. அதுக்கான தண்டனையை அனுபவிக்கட்டும்” பாண்டியன் நாடித்துடிக்க சத்தமாக சொன்னார்.
தெய்வா,”அப்பா. இந்த விஷயத்தை இதோட விட்டுடலாம். எப்ப அவ அந்த ஆளுக்கு பொறந்தவன்னு தெரிஞசதோ, அவ மேல தப்பே இல்லைன்னாலும் இனி அவளை யாரும் போய் பார்க்கவோ, எதுவும் கேட்கவோ வேண்டாம். அவளை இனி நான் பார்த்தா அவ அப்பா ஞாபகம் தான் எனக்கு வரும். எல்லாத்தையும் மறந்துட்டு வாழ்ந்துட்டு இருக்கேன். அது அப்படியே இருக்கட்டும். எல்லாருமே இதை இதோட விட்டுடுங்க.“
“தெய்வா. அவசர முடிவு எப்பவும் சரியா வராது. பொறுமையா யோசி. உன் வாழ்க்கையை தான் உன் அண்ணன், அண்ணி பேச்சை கேட்டுட்டு முடிவெடுத்த. இது அகரன் வாழ்க்கை. அந்த பொண்ண பாத்தப்பவே அவ கள்ளம் கபடம் இல்லாதவன்னு தான் எனக்கு தோணுச்சு. அவ என்ன சொல்றான்னு கேட்டு பார்ப்போமே. இதுல அகரன் கல்யாண விஷயம் வேற இருக்கு.”
“என்ன மாமா பேசறீங்க. தெய்வா வாழ்க்கையை நாங்க என்னமோ அழிச்சிட்ட மாதிரி பேசறீங்க. இங்க பாருங்க, உங்க அப்பா பழியை போடறதை. இத்தனை சொத்தை சேத்து வச்சீங்களே. அவர் இப்போ எப்படி பழி போட்டார் பாருங்க. அகரன் கல்யாண விஷயம் பத்தி சொன்னீங்களே மாமா? அவ இவனுக்கு தங்கச்சி முறை. அவளை போய் பாத்து பேசி இவனுக்கு கல்யாணம் வேற பண்ண போறீங்களா. விளங்கிடும். ஊர் முழுக்க உங்களை அசிங்கமா பேசறதை நீங்களே சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க போறீங்க. இந்த குடும்பத்துல வாழ்க்கை பட்டு, நான் இன்னும் என்ன அசிங்கத்தையெல்லாம் பாக்கனுமோ?” ஆண்டாள் புலம்பியதை பார்த்து பாண்டியனுக்கே எரிச்சல் வந்தது.
“இவ ஒருத்தி. நேரம் காலம் தெரியாம. இப்ப அவளை கல்யாணம் பண்ணி வைக்க வா அப்பா போய் கேட்க சொன்னார். அவ ஏன் இப்படி பண்ணா, இதுக்கு பின்னாடி யார் இருக்கா? அவளுக்கு நம்ம குடும்பத்தை பத்தி யார் சொல்லியிருப்பாங்க என்ன ஏதுன்னு விசாரிக்க தான் போக சொன்னார். நாக்குல நரம்பு இல்லாம பேசாத.”
ஆண்டாள் முகம் வெளிறியது.
“குடும்ப வழக்கத்தை யார் சொல்லி வேற கொடுக்க போறாங்க. அவ தான் அகரன் இப்படி அவகிட்ட மயங்கி கிடக்கறதை பாத்து கல்யாணம் பண்ணிட்டு சொத்தை எல்லாம் எடுத்துட்டு போக வந்திருப்பா. இதை போய் விசாரிக்க வேற வேணுமா?”
“அண்ணி. அண்ணன் எங்கேயும் போக மாட்டார். எல்லாரும் இதோட விடுங்க. இனி அவளை பத்தி பேச்சே வேண்டாம்.”
“அகரன் கல்யாணத்தை எந்த காரணம் சொல்லி நின்னுப் போச்சுன்னு சொல்லுவ தெய்வா?” மருதன் கேட்டார்.
“பொண்ணு ஊரை விட்டு போய்ட்டான்னு சொல்லிக்கலாம் பா. அதனால் கல்யாணம் நின்னுருச்சுன்னா யாரும் நம்மளை எந்த குறையும் சொல்ல மாட்டாங்க.” பாண்டியன் சொன்னதும் அவசரம் அவசரமாக ஆண்டாள்,
“கல்யாணத்தை நிறுத்திட்டா மாமா மரியாதை என்ன ஆகறதுங்க. எல்லாருக்கும் பத்திரிக்கை வச்சிட்டு இப்ப இபப்டி சொன்னா எல்லாரும் நம்மளை தான் கேவலமா பேசுவாங்க. ஒழுங்கா விசாரிக்காம போய் பொண்ணை நிச்சயம் பண்ணியிருக்கீங்கன்னு.”
“அதுக்கு என்ன பண்ண சொல்ற”
“நான் ஒரு வழி சொல்லுவேன். நீங்க என்ன தப்பா நினைக்க கூடாது. இது கூட மாமா மரியாதை கெடக்கூடாதுன்னு தான். நம்ம மதுவை அகரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம் அதே தேதில”
மதுவுக்கு மயக்கம் வராத குறைதான். பாண்டியனுக்கும் தெய்வாக்குமே அதிர்ச்சி. ஆனாலும் இருவருக்கும் அது பிடித்திருந்தது.
மருதன் முகத்தில் சலனமே இல்லை.
அகரன் ஆண்டாளையும் தெய்வாவையும் மாற்றி மாற்றி பார்த்தான்.
“என்ன சொல்ற மதுவுக்கும், அகரனுக்குமா?”
“ஆமா. நாம தானே நம்ம குடும்பத்து மானத்தை காப்பாத்தனும். இந்த குடும்பத்துக்கு நம்ம வாழ்க்கையை தியாகம் பண்றது புதுசா என்ன?”
“அம்மா.. “ மது அலறினாள்.
“நீ சும்மா இரு மதும்மா. உனக்கு அம்மா புரிய வைக்கிறேன். எல்லாரும் என்ன சொல்றீங்க. சொன்ன தேதில இந்த கல்யாணம் நடக்கும். யாருக்கும் எந்த விளக்கத்தையும் நாம சொல்லத் தேவை இல்லை”
பாண்டியனுக்கும் தெய்வாக்கும் பரம திருப்தி.
“தாத்தா. ப்ளீஸ் இந்த விஷயத்தை இத்தோட விடுங்க. எனக்கு கல்யாணமே வாழ்க்கையில் வேணாம். அதுவும் இவளை கல்யாணம் பண்ண என்னால முடியாது.”
“அகரா அம்மா சொன்னா மீற மாட்ட இல்ல. இந்த கல்யாணம் நடக்கனும். அந்த பொண்ணுக்கு தெரியனும். அவ பண்ண பிரச்சினையால என் பையன் தலை குனிஞ்சு நிக்க மாட்டான்னு.”
“அம்மா. நான் சொல்றது உங்களுக்கு புரியலம்மா. இந்த கல்யாணம் நடக்க கூடாதும்மா. ஏற்கனவே நான் செஞ்ச கேவலமான விஷயத்தில் இருந்து நான் வெளிய வரலை. இப்போ இன்னொரு பாவத்தை பண்ண வைக்காதீங்க”
“மருமகனே. எல்லாத்தையும் காலம் மாத்ததும். நீ தெரிஞ்சு அந்த பொண்ண ஒன்னும் விரும்பல. நீயே ஏன் கில்ட்டியா ஃபீல் பண்ற. இந்த கல்யாணம் நடக்கனும். எங்களுக்காக நீ ஒத்துக்கிட்டு தான் ஆகனும்”
“தாத்தா ப்ளீஸ் இந்த விஷயத்துல நீங்க முடிவெடுங்க. எனக்காக இது வேணாம்னு சொல்லுங்க. ப்ளீஸ் தாத்தா.”
“ என்னை என்னப்பா சொல்ல சொல்ற. அதான் நான் சொல்றதை யாரும் கேட்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களே. இதுல மட்டும் நான் முடிவெடுக்கறதை கேட்கவா போறீங்க”
“அப்பா.. ப்ளீஸ். இது நம்ம எல்லார் நல்லதுக்காக தான். ப்ளீஸ் ஒத்துக்கோங்க”
தெய்வா கெஞ்சியதும்,
“ஹ்ம்ம். எனக்கு இதுல துளிக்கூட விருப்பம் இல்ல. நீங்களே முடிவெடுங்க. நான் குறுக்க நிக்க மாட்டேன். “ என்று சொல்லிவிட்டு அவர் அறைக்கு சென்றார்.
அகரன் பேச்சை கேட்பதற்கு யாருமே இல்லை.
“அம்மா.. “ என்றவனை தெய்வா,”அகரா அம்மா மேல உனக்கு நிஜமாவே மரியாதை, பாசம் இருந்தா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க”
“ஆமா மருமகனே. உனக்கு தாத்தா, அம்மா, நான் வேணும்னா இதுக்கு ஒத்துக்க. நாங்க உன் நல்லதுக்கு தான் சொல்வோம். தாத்தா மரியாதையை காப்பாத்தறது
உன்கிட்ட தான் இருக்கு.”
ஆண்டாள் முகம் புன்னகையில் ஜொலித்தது.
மது அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே போனாள்.
ஆண்டாளுக்கும், மதுவுக்கும் கூட அவர்கள் தங்கள் காதில் கேட்டது நிஜமாக தானா என்று தோனறியது. ஒருவரையொருவர் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டனர்.
மருதன் அமைதியாக அகரனையும், தெய்வாவையும் பார்த்தார்.
பாண்டியன், “அகரா.. என்ன சொல்ற? உனக்கெப்படி தெரியும்.”
“மாமா. அந்த ஆளும், அவளோட அம்மாவும் ஒன்னா சேர்ந்து இருக்கற ஃபோட்டோவ பார்த்தேன். அதுவும் அவ அம்மா ப்ரெக்னண்டா இருக்கறப்ப, அவங்க தோள் மேல் கைப்போட்டு அவங்களையே பாத்துட்டு இருக்கார்.இன்னும் என்ன ஆதாரம் வேணும்?”
“அது நிஜமா அவர் தானா? நல்லா பாத்தியா. ஏன் கேட்கிறேன்னா அவர் விட்டுட்டு போறப்ப நீ ரொம்ப சின்ன பையன். உனக்கு அவரை ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை.”
பாண்டியன் சொன்னதும்,
“மாமா. நேர்ல பாத்த ஞாபகம் இல்லைன்னாலும் தினமும் அந்த ஆள் ஃபோட்டோவ பாத்திட்டே தானே இருந்தேன். இதோ இந்த கையால் அவனை நேர்ல பாக்கறப்ப அடிச்சு கொல்லனும்னு காத்திட்டு இல்ல இருந்தேன். அப்புறம் எப்படி மாமா அந்த ஆளை தெரிஞ்சுக்காம இருக்க முடியும். அதுவும் அம்மா நான் வயித்துல இருக்கப்ப அவனோட எடுத்துக்கிட்ட அதே ஃபோட்டோ மாதிரி. அப்படியே நிறை மாசத்தோட அவங்க தோள்ல கை போட்டுட்டு இருக்க மாதிரி எடுத்து வச்சிருக்கான். இதுல அவ அம்மாவ பாத்து அப்படி ஒரு சிரிப்போட நிக்கிறான். பாத்துட்டு அவ்ளோ ஆத்திரமா வந்துச்சு. அதான் அப்படியே கிளம்பி வந்துட்டேன்.”
அகரன் பேச, பேச அனைவரின் முகமும் மாறியது.
அதுவும் தெய்வாக்கு அதிர்ச்சி.
அகரன் நான்கு வயது இருக்கும் போது அவர் கணவர் விட்டு சென்றதும், காரணம் தெரியாமல் இன்று வருவார், நாளை வருவார் என்று காத்திருந்து ஒரு நாள் அந்த விஷயத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
அவர் வேறொரு பெண்ணோடு சென்றதாக பாண்டியன் சொன்னதும் வீட்டில் இருந்து களவு போன பணம், நகைக்கான காரணம் புரிந்தது.
அப்போதும் கூட மனதின் ஓரத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது.
அகரன் மீதும் தெய்வாவின் மீதும் உயிரையே வைத்திருந்த ஒருவரால் எப்படி அவ்வளவு சீக்கிரம் துரோகம் செய்ய முடியும் என்று அவரால் நம்பவே முடியவில்லை.
நாட்கள் தான் கடந்ததே தவிர அவர் வரவே இல்லை.
அதன் பிறகு தான் தெய்வா கொஞ்சம் கொஞ்சமாக அவர் கணவரின் மீது இருந்த காதலை தன் மனதில் இருந்து தூக்கி எறிந்தார்.
மொத்தமாக ஒழிந்து போன ஒரு உறவு இன்று தாரிணி மூலம் எப்படி வந்து சேர்ந்திருக்கிறது? விதிக்கு கொஞ்சம் கூட கருணையில்லையா? என்று அவர் மனம் அடித்துக் கொண்டது.
அகரன் வளர வளர சந்திரனின் ஞாபகம் கொஞ்சம் கொஞ்சமாக தெய்வாவை விட்டுப் போனது. வாழ்க்கை முழுக்க அகரனுக்காகவே வாழ வேண்டும் என்று முடிவெடுத்தவர் சந்திரனை அதன் பின் யோசித்துக் கூட பார்க்கவில்லை.
சந்திரன் மேல் இருந்த ஆத்திரம் தாரிணி மேல் திரும்பியது.
‘எப்படி ஒரு பெண்ணால் அகரன் யாரென்று தெரிந்தும் இங்கு வந்து இப்படி நடிக்க முடியம். திட்டம் போட்டு அகரன் வண்டியில் விழுந்து இவர்கள் மூலமாகவே வீட்டுக்கு வந்து, வந்த சிறிது நாளிலேயே அகரனை அவள் பிடிக்கு கொண்டு வந்திருக்க முடியும்?’ மனம் கொந்தளித்தது.
இதுவரை கூட தாரிணி மீது எங்கோ ஒரு மூலையில் ஒரு சின்ன பரிதாபம் இருந்தது. ஆனால் இன்று அகரனின் பேச்சை கேட்டதும் தாரிணி மீதும் அவளின் அம்மா மீதும் கண்மூடித்தனமான கோபம் வந்தது.
‘தன் வாழ்க்கையை மொத்தமாக அழித்த ஒருத்தியின் மகள் தன் மகனின் வாழ்க்கையை அழிக்க வந்திருக்கிறாள்.’ நினைக்கவே முடியவில்லை.
“பாம்புக்கு நானே பால் ஊத்தி வளர்த்திருக்கேன். அவ திட்டம் போட்டு தான் வீட்டுக்குள்ள வந்திருக்கா. என் பையனை கல்யாணத்தன்னிக்கு தலை குனிய வைக்க தான் வந்திருப்பா. நல்லகாலம் கடவுள் தான் இப்போவே அவளை பத்தியும் அவ குடும்பத்தை பத்தியும் தெரிய வச்சிருக்கு.” என்றவரை அகரன் கண் இமைக்காமல் பார்த்தான்.
“மருமகனே. நீ சொல்றதை என்னால் நம்பவே முடியல. அவ எதுக்கு உன்னை பாக்க இங்க வரணும். அவங்களுக்கும் நமக்கும் எல்லாம் முடிஞ்சு போனதுன்னு தானே இத்தனை நாள் நினைச்சிட்டு இருந்தோம்.. இப்ப உன்னை வந்து ஏமாத்தி என்ன ஆகப்போகுது?”
“இதென்ன கேள்வி. அப்பன் அன்னிக்கு இருந்த பணம், நகையை ஆட்டைய போட்டுட்டு போனான். இப்ப இவ்வளோ பெரிசா வளர்ந்திருக்கே இந்த சொத்து, அதை மொத்தமா இவ ஆட்டைய போட வந்திருக்கா. ச்சீ.. அவ இவனுக்கு என்ன உறவு. எவ்ளோ கேவலமானவளா இருந்தா இப்படி வந்து இவனோட பழகியிருப்பா. இவனும் அவளை தலைக்கு மேல தூக்கி வச்சிட்டு ஆடினான். அன்னிக்கு இவன் அப்பனை வேணாம்னு சொன்னேன், கேட்காம கல்யாணம் பண்ணி வச்சீங்க. அவன் துரோகம் பண்ணிட்டு போனான். இப்பவும் அவளை வேணாம்னு சொன்னேன். யாரும் கேட்கலை. கல்யாணம் ஆகியிருந்தா ஊர்ல தலை காமிச்சிருக்க முடியுமா? எவ்ளோ கேவலமா பேசியிருக்கும் இந்த உலகம். பாவம் மாமா தான் துக்கம் தாங்காம தூக்குல தொங்கனும். நல்லவேளை ஆண்டவன் காப்பாத்திட்டான். நான் சொன்னா உங்களுக்கெல்லாம் நான் என்னவோ உங்களுக்கு நல்லது நடக்க கூடாதுன்னு நினைக்கிறேன்னு தோணும். எல்லாமே மாமாக்காக தான். நான் இந்த குடும்பத்தை என் கண்ணுக்குள்ள வச்சு பார்க்கறேன்” மதுவுக்கே ஆண்டாளின் பேச்சு கொஞ்சம் அதிகமாகத்தான் பட்டது.
‘இது தான் சாக்கு என்று எப்படியெல்லாம் பேசுகிறார்.’ என்று கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் பார்த்தாள்.
அகரனுக்கோ உள்ளுக்குள் அழுகை, கோபம், பயம், அருவருப்பு என்று பல உணர்வுகள் எரிமலை போல் கொந்தளித்தன.
‘நல்லவேளை கல்யாணம் நடக்கவில்லையென இவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் மனதை தொலைத்தது மட்டுமில்லாமல் அவளை உடலால் தீண்டினேனே. தீண்டிய இந்த உடலை என்ன செய்வது..’ யோசிக்க யோசிக்க அவனை நினைக்கவே அவனுக்கு அவ்வளவு கோபம்.
‘திருமணமே வேண்டாம் என்று நினைத்த தன்னை மாற்றியவள் ஏன் ஒரு துரோகியாக இருந்திருக்க வேண்டும். அவள் நிஜமாகவே அவனின் மகளாக இல்லாமல் இருந்திருக்க கூடாதா?’ மனம் தவித்தது. அவனே அவனை உள்ளுக்குள் துப்பிக் கொண்டான். இவ்வளவு நடந்த பின்னும் அவளுக்காக இப்படி யோசிக்கிறோமே என்று.
ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லிக் கொண்டு இருந்தார்கள், அத்தனைக்கும் தாரிணி தான் பகடைக்காயாக இருந்தாள்.
மருதனோ வாயே திறக்கவில்லை.
“அப்பா.. பாத்தீங்களா? அவன் பண்ணதையே அவன் பொண்ணும் இங்க வந்து செய்ய பாத்திருக்கா. நல்லவேளை நம்ம அகரன் தப்பிச்சான்.” பாண்டியன் பேசியதும் மருதன்,
“இப்பவும் சொல்றேன். நீங்க அன்னிக்கு அவசரப்பட்ட மாதிரியே இன்னிக்கும் அவசரப்படறீங்க. அப்பவே சந்திரனை தேடி போகலாம்னு சொன்னேன். ஒரு வேளை அவன் என் பொண்ணுக்கு நிஜமாவே துரோகம் பண்ணியிருந்தா
என் கையாலேயே அவனை கொன்னுருப்பேன். ஆனா நீங்க யாரும் நான் சொன்னதை கேட்கவே இல்லை. எப்பவும் ஒரு பக்கம் மட்டுமே பாத்து முடிவெடுக்கறது ரொம்ப தப்பு. அந்த பொண்ணுட்டையும் ஒரு வார்த்தை நேரா கேட்டுட்டா நமக்கு இரண்டு பக்கத்தோட நியாயம் புரியும்”
“அவகிட்ட போய் என்ன நியாயத்தை கேட்க போறீங்க?. அவ பக்கம் அப்படி ஒன்னு இருந்தா இங்க வந்த அன்னிக்கே நான் இன்னார் பொண்ணுன்னு உண்மையை சொல்லியிருக்கனும் இல்ல. கேடு கெட்ட குடும்பம் தானே அது. அகரன் தான் எல்லாத்தையும் நேரா பாத்துட்டு வந்துட்டானே. இதுக்கு மேல விசாரிக்க என்ன இருக்கு. தலை முழுகிட்டு வேற வேலையை பாருங்க.”
ஆண்டாள் சொன்னதும், மருதனுக்கு மட்டும் தான் இதே வார்த்தைகளை அன்றும் சந்திரனை பற்றி ஆண்டாள் சொன்னது ஞாபகம் வந்தது. மற்றவர்களுக்கு கோபம் தான் தலைக்கேறி இருந்ததே தவிர யோசிக்க தோன்றவில்லை.
“பாண்டியா நீ நேர்ல போய் அந்த பொண்ணை விசாரிச்சு என்ன ஏதுன்னு கேட்டுட்டு வா. அதுக்கு அப்புறம் எல்லாத்தையும் முடிவெடுத்துக்கலாம்.”
மருதன் சொல்லியதும் அனைவரது முகம் போன போக்கை பார்த்து அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது புரிந்தது.
“தாத்தா. என் மேல் நம்பிக்கை இல்லையா. நான் பார்த்தது அந்த ஆள் ஃபோட்டோவ தான். அவனைத்தான் நல்லா பாத்து வச்சிருக்கேனே. கூட நின்னது அவ அம்மாதான். அதை அவளே தான் அவங்க தனியா இருக்க ஃபோட்டோ காமிச்சு சொன்னா. அப்ப அவன் பொண்ணு தானே இவ. நல்லகாலம் அவன் செத்து போய்ட்டான். இல்லன்னா அவன் இப்ப என்னால செத்திருப்பான். யாரும் அங்க போக வேண்டாம். அவள்ட்ட எதையும் கேட்கவும் வேணாம்”
அகரன் சொன்னதை தெய்வாவும், பாண்டியனும் தலையை ஆட்டி தங்கள் முடிவும் அதான் என்று சொன்னார்கள்.
“அகரா. எப்பவும் ஆத்திரம், கோபத்துல முடிவெடுக்க கூடாது. எப்பவும் நான் சொல்றது தான். கண்ணால பாக்கறதும், காதால் கேட்கறதும் உண்மை கிடையாது. விசாரிச்சு உண்மையை தெரிஞ்சுக்க. அப்புறம் முடிவெடு. அந்த பொண்ணு பக்க நியாயம் கேளு. பாவம் அப்பா அம்மா இல்லாத பொண்ணு.. அநாதையா அங்க விட்டுட்டு வந்திருக்க” மருதன் சொல்லும் போதே ஆண்டாள் மதுவிடம் அலைபேசியில் அகரனை வீடியோவாக எடுக்க சொன்னார் யாருக்கும் தெரியாமல்.
“தாத்தா. முதல் முறையா உங்க பேச்சை மீறறதுக்கு மன்னிச்சுக்கங்க. அவள்ட்ட யாரும் போய் பேச வேண்டாம். அவ பண்ணதுக்கான தண்டனையை அவ அனுபவிச்சு தான் ஆகனும். . அவ அனாதையா நிக்கட்டும். நான் அவளோட தங்கியிருந்ததை அந்த ஊரே பாத்துச்சு. அவளை இனி யாரு கல்யாணம் பண்ணுவா. அவ அப்படியே தனி மரமா நிக்கட்டும். அப்பதான் எங்க அம்மாவோட வேதனை அவளுக்கு புரியும், எப்படி அவங்க கஷ்டப்பட்டிருப்பாங்கன்னு”
“ஆமா அப்பா. அந்த பொண்ணுக்கு அவன் தான் அப்பன்னா என் தங்கச்சி வடிச்ச கண்ணீரை அவ வடிக்கட்டும். நம்ப வச்சு ஏமாத்தறது அவங்களுக்கு வழக்கம் தானே. அதுக்கான தண்டனையை அனுபவிக்கட்டும்” பாண்டியன் நாடித்துடிக்க சத்தமாக சொன்னார்.
தெய்வா,”அப்பா. இந்த விஷயத்தை இதோட விட்டுடலாம். எப்ப அவ அந்த ஆளுக்கு பொறந்தவன்னு தெரிஞசதோ, அவ மேல தப்பே இல்லைன்னாலும் இனி அவளை யாரும் போய் பார்க்கவோ, எதுவும் கேட்கவோ வேண்டாம். அவளை இனி நான் பார்த்தா அவ அப்பா ஞாபகம் தான் எனக்கு வரும். எல்லாத்தையும் மறந்துட்டு வாழ்ந்துட்டு இருக்கேன். அது அப்படியே இருக்கட்டும். எல்லாருமே இதை இதோட விட்டுடுங்க.“
“தெய்வா. அவசர முடிவு எப்பவும் சரியா வராது. பொறுமையா யோசி. உன் வாழ்க்கையை தான் உன் அண்ணன், அண்ணி பேச்சை கேட்டுட்டு முடிவெடுத்த. இது அகரன் வாழ்க்கை. அந்த பொண்ண பாத்தப்பவே அவ கள்ளம் கபடம் இல்லாதவன்னு தான் எனக்கு தோணுச்சு. அவ என்ன சொல்றான்னு கேட்டு பார்ப்போமே. இதுல அகரன் கல்யாண விஷயம் வேற இருக்கு.”
“என்ன மாமா பேசறீங்க. தெய்வா வாழ்க்கையை நாங்க என்னமோ அழிச்சிட்ட மாதிரி பேசறீங்க. இங்க பாருங்க, உங்க அப்பா பழியை போடறதை. இத்தனை சொத்தை சேத்து வச்சீங்களே. அவர் இப்போ எப்படி பழி போட்டார் பாருங்க. அகரன் கல்யாண விஷயம் பத்தி சொன்னீங்களே மாமா? அவ இவனுக்கு தங்கச்சி முறை. அவளை போய் பாத்து பேசி இவனுக்கு கல்யாணம் வேற பண்ண போறீங்களா. விளங்கிடும். ஊர் முழுக்க உங்களை அசிங்கமா பேசறதை நீங்களே சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க போறீங்க. இந்த குடும்பத்துல வாழ்க்கை பட்டு, நான் இன்னும் என்ன அசிங்கத்தையெல்லாம் பாக்கனுமோ?” ஆண்டாள் புலம்பியதை பார்த்து பாண்டியனுக்கே எரிச்சல் வந்தது.
“இவ ஒருத்தி. நேரம் காலம் தெரியாம. இப்ப அவளை கல்யாணம் பண்ணி வைக்க வா அப்பா போய் கேட்க சொன்னார். அவ ஏன் இப்படி பண்ணா, இதுக்கு பின்னாடி யார் இருக்கா? அவளுக்கு நம்ம குடும்பத்தை பத்தி யார் சொல்லியிருப்பாங்க என்ன ஏதுன்னு விசாரிக்க தான் போக சொன்னார். நாக்குல நரம்பு இல்லாம பேசாத.”
ஆண்டாள் முகம் வெளிறியது.
“குடும்ப வழக்கத்தை யார் சொல்லி வேற கொடுக்க போறாங்க. அவ தான் அகரன் இப்படி அவகிட்ட மயங்கி கிடக்கறதை பாத்து கல்யாணம் பண்ணிட்டு சொத்தை எல்லாம் எடுத்துட்டு போக வந்திருப்பா. இதை போய் விசாரிக்க வேற வேணுமா?”
“அண்ணி. அண்ணன் எங்கேயும் போக மாட்டார். எல்லாரும் இதோட விடுங்க. இனி அவளை பத்தி பேச்சே வேண்டாம்.”
“அகரன் கல்யாணத்தை எந்த காரணம் சொல்லி நின்னுப் போச்சுன்னு சொல்லுவ தெய்வா?” மருதன் கேட்டார்.
“பொண்ணு ஊரை விட்டு போய்ட்டான்னு சொல்லிக்கலாம் பா. அதனால் கல்யாணம் நின்னுருச்சுன்னா யாரும் நம்மளை எந்த குறையும் சொல்ல மாட்டாங்க.” பாண்டியன் சொன்னதும் அவசரம் அவசரமாக ஆண்டாள்,
“கல்யாணத்தை நிறுத்திட்டா மாமா மரியாதை என்ன ஆகறதுங்க. எல்லாருக்கும் பத்திரிக்கை வச்சிட்டு இப்ப இபப்டி சொன்னா எல்லாரும் நம்மளை தான் கேவலமா பேசுவாங்க. ஒழுங்கா விசாரிக்காம போய் பொண்ணை நிச்சயம் பண்ணியிருக்கீங்கன்னு.”
“அதுக்கு என்ன பண்ண சொல்ற”
“நான் ஒரு வழி சொல்லுவேன். நீங்க என்ன தப்பா நினைக்க கூடாது. இது கூட மாமா மரியாதை கெடக்கூடாதுன்னு தான். நம்ம மதுவை அகரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம் அதே தேதில”
மதுவுக்கு மயக்கம் வராத குறைதான். பாண்டியனுக்கும் தெய்வாக்குமே அதிர்ச்சி. ஆனாலும் இருவருக்கும் அது பிடித்திருந்தது.
மருதன் முகத்தில் சலனமே இல்லை.
அகரன் ஆண்டாளையும் தெய்வாவையும் மாற்றி மாற்றி பார்த்தான்.
“என்ன சொல்ற மதுவுக்கும், அகரனுக்குமா?”
“ஆமா. நாம தானே நம்ம குடும்பத்து மானத்தை காப்பாத்தனும். இந்த குடும்பத்துக்கு நம்ம வாழ்க்கையை தியாகம் பண்றது புதுசா என்ன?”
“அம்மா.. “ மது அலறினாள்.
“நீ சும்மா இரு மதும்மா. உனக்கு அம்மா புரிய வைக்கிறேன். எல்லாரும் என்ன சொல்றீங்க. சொன்ன தேதில இந்த கல்யாணம் நடக்கும். யாருக்கும் எந்த விளக்கத்தையும் நாம சொல்லத் தேவை இல்லை”
பாண்டியனுக்கும் தெய்வாக்கும் பரம திருப்தி.
“தாத்தா. ப்ளீஸ் இந்த விஷயத்தை இத்தோட விடுங்க. எனக்கு கல்யாணமே வாழ்க்கையில் வேணாம். அதுவும் இவளை கல்யாணம் பண்ண என்னால முடியாது.”
“அகரா அம்மா சொன்னா மீற மாட்ட இல்ல. இந்த கல்யாணம் நடக்கனும். அந்த பொண்ணுக்கு தெரியனும். அவ பண்ண பிரச்சினையால என் பையன் தலை குனிஞ்சு நிக்க மாட்டான்னு.”
“அம்மா. நான் சொல்றது உங்களுக்கு புரியலம்மா. இந்த கல்யாணம் நடக்க கூடாதும்மா. ஏற்கனவே நான் செஞ்ச கேவலமான விஷயத்தில் இருந்து நான் வெளிய வரலை. இப்போ இன்னொரு பாவத்தை பண்ண வைக்காதீங்க”
“மருமகனே. எல்லாத்தையும் காலம் மாத்ததும். நீ தெரிஞ்சு அந்த பொண்ண ஒன்னும் விரும்பல. நீயே ஏன் கில்ட்டியா ஃபீல் பண்ற. இந்த கல்யாணம் நடக்கனும். எங்களுக்காக நீ ஒத்துக்கிட்டு தான் ஆகனும்”
“தாத்தா ப்ளீஸ் இந்த விஷயத்துல நீங்க முடிவெடுங்க. எனக்காக இது வேணாம்னு சொல்லுங்க. ப்ளீஸ் தாத்தா.”
“ என்னை என்னப்பா சொல்ல சொல்ற. அதான் நான் சொல்றதை யாரும் கேட்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களே. இதுல மட்டும் நான் முடிவெடுக்கறதை கேட்கவா போறீங்க”
“அப்பா.. ப்ளீஸ். இது நம்ம எல்லார் நல்லதுக்காக தான். ப்ளீஸ் ஒத்துக்கோங்க”
தெய்வா கெஞ்சியதும்,
“ஹ்ம்ம். எனக்கு இதுல துளிக்கூட விருப்பம் இல்ல. நீங்களே முடிவெடுங்க. நான் குறுக்க நிக்க மாட்டேன். “ என்று சொல்லிவிட்டு அவர் அறைக்கு சென்றார்.
அகரன் பேச்சை கேட்பதற்கு யாருமே இல்லை.
“அம்மா.. “ என்றவனை தெய்வா,”அகரா அம்மா மேல உனக்கு நிஜமாவே மரியாதை, பாசம் இருந்தா இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க”
“ஆமா மருமகனே. உனக்கு தாத்தா, அம்மா, நான் வேணும்னா இதுக்கு ஒத்துக்க. நாங்க உன் நல்லதுக்கு தான் சொல்வோம். தாத்தா மரியாதையை காப்பாத்தறது
உன்கிட்ட தான் இருக்கு.”
ஆண்டாள் முகம் புன்னகையில் ஜொலித்தது.
மது அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே போனாள்.
Last edited: