அத்தியாயம் 35
மாலையில் தாரிணி ஆற்றங்கரையோரம் நடந்துக் கொண்டிருந்தாள். காலம் வேகமாய் ஓடும், அதில் சில மறந்து போகும். சில மாறிப் போகும்.
ஆனால் ஒரு வாரத்தில் எத்தனை மாற்றங்கள். சென்னை தான் அவளுக்கு ஒரு வாழ்க்கையை கொடுக்க போகிறது என நினைத்தாள். அங்கிருந்து இலங்கை, அங்கிருந்து மீண்டும் சென்னை, கொல்கத்தா, இம்பால் என்று மாறி மாறி இந்த ஆறைப் போல ஓடிக்கொண்டு இருக்கிறாள்.
இனி தன் வாழ்வு யாரையும் எதிர்ப்பார்க்காமல் தனக்காகவும், தன் மாமாவுக்காகவும் தான் இந்த ஆறைப் போல ஓடப்போகிறது என்று நினைத்துக்கொண்டாள்.
மெதுவாக அங்கிருந்த ஒரு பாறையின் மேல் அமர்ந்தாள்.
அவளின் உருவம் தண்ணீரில் பிரதிபலிக்க அதை பார்த்திருந்தவளின் அருகில் அகில் வந்து நின்றான்.
“இங்க கூட என்னை தனியா இருக்க விட மாட்டீங்களா?” என்றாள்.
“ச்ச..ச்ச.. நானும் உங்களை மாதிரி இந்த ஆறோட அழகை ரசிக்கத்தான் வந்தேங்க.. பார்த்தா அந்த ஆறை விட அழகா, பேரழகா ஒரு மஞ்சள் தேவதை இங்க இருக்கறதை பார்த்து என் கால்கள் தானா இங்க வந்து நின்னுடுச்சு”
“அச்சோ ப்ளீஸ் நிறுத்துங்க. இந்த பேச்சுக்கு டைம் னு ஒன்னு இல்லையா?”
“சரி விடுங்க. உண்மைக்கு எப்போவும் மரியாதையில்ல”
தாரிணி அவன் பக்கம் திரும்பாமலேயே ஆற்றை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கோல்டன் ஏஞ்சல்.. உங்களை ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே.”
“அது நீங்க கேட்கறதை பொறுத்து”
“நீங்க இதுவரைக்கும் காதல் வயப்படவே இல்லையா?” திரும்பி அவனை முறைத்தாள்.
“ஓ. சாரி கேள்வியை தப்பா கேட்டுட்டேன். உங்க மேல யாரும் காதல் வயப்பட்டாங்களா.. ஏன்னா இப்படி ஒரு ஏஞ்சலை யாரும் லவ் பண்ணாம இருக்கறது தான் ஆச்சர்யம்.”
இப்போது அவள் அவனை முறைக்கவில்லை. தரையையும் ஆற்றையும் மாறி மாறி பார்த்தாள்.
“இந்த அமைதி ஆமாவா.. இல்லையா?எதை சொல்லுது?”
“இல்ல.”
“அப்பாடா..” என்றான்.
“என்ன?”
“இல்லைங்க. நாம ஒரு பாதைல போகலான்னு இருப்போம். எதிர்ல யாராச்சும் மொத்தமா அந்த வழியை அடைச்சிட்டு வந்து நின்னா, என்ன பண்றது?”
“சம்பந்தமே இல்லாம பேசறது தான் உங்க வழக்கமா?”
“சம்பந்தம் இருக்கு. உங்களுக்கு புரியல..”
“எதிர்ல இருக்கவங்களுக்கு புரியாம எதுக்கு பேசணும்”
“புரியற மாதிரி பேசற நாள் சீக்கிரமே வரும்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு.”
“ஹ்ம்ம்.. “ என்றவள் மீண்டும் ஆற்றை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவளின் உடை காற்றில் பறந்துக் கொண்டிருந்தது. அதை இழுத்துப் பிடித்துக் கொண்டாள் தாரிணி. இருந்தும் அவளின் கழுத்தை சுற்றி இருந்த துப்பட்டா மேல் நோக்கி பறக்க ஆரம்பித்தது.
ஒரு நொடி பதறி பறந்த துப்பட்டாவை அவள் எழுந்து பிடிப்பதற்குள் அகில் அதை பிடித்தான். அவளது கைகளில் அவன் அதை தர, அவளுக்கோ தாலியை அவன் பார்த்திருப்பானோ என்ற பயம்.
அகில் வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்தான்.
“கோல்டன் ஏஞ்சல்..அப்படியே இந்த டிரஸ்ல ஒரு மாடல் மாதிரி இருக்கீங்க. டாப் மாடல் மாதிரி அப்படி ஒரு வளைவு நெளிவான உடம்பு உங்களுக்கு. ஆனா நீங்க இந்த துணியால மொத்தமா மூடி மறைச்சு வச்சு ஏன் இப்படி அநியாயம் பண்றீங்க.”
“ஹலோ.. என்ன பேசறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசறீங்களா? ஒரு பொண்ணுட்ட எப்படி பிஹேவ் பண்ணனும்னு தெரியாதா.. ச்சீ”
“ஹேய்.. நான் என்ன அப்படி சொல்லிட்டேன். எத்தனை மாடல்ஸ நம்ம ப்ரொபைல்க்கோ, ஃபோர்ட் போலியோக்கோ நாம புக் பண்றோம். அவங்க உடம்பை நம்ம டிரஸ் டிசைன்ஸ்க்கு கரெக்டா இருக்கான்னு பாக்கற மாதிரி தான் நான் சொன்னேன். எந்த தப்பான அர்த்தமும் இதில் இல்லை. நம்ம டிரைபல் ஃபெஸ்டிவல்க்கு நம்ம கம்பெனி சார்பா அத்தனை டிரஸ்ஸையும் உங்களை வச்சு தான் நான் டிசைன் பண்ணி போஸ்டர்ஸ் ரெடி பண்ண போறேன்.”
“நானா. அதெல்லாம் என்னால் முடியாது. நீங்களா எப்படி சொல்லலாம்.?”
“நீங்க தானே சொன்னீங்க. நான் உதவி கேட்கறப்ப நிச்சயம் பண்ணுவேன்னு. அப்போ நான் கேட்க போற ஃப்ர்ஸ்ட் உதவி இது தான்.”
“அப்ப இன்னும் கேட்டுட்டே இருப்பீங்களா?”
“அஃப்கோர்ஸ். கண்டிப்பா நீங்க அனுமதிச்சா வாழ்க்கை முழுசும் கேட்பேன்.”
“வாழ்க்கை முழுக்க நான் இங்கேயே இருப்பேன்னு நினைக்காதீங்க.”
“நிச்சயமா இருப்பீங்க. நான் சொல்றது நடக்கும்.”
அவனை பார்த்து ஒரு விரக்தி சிரிப்பை சிரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள் தாரிணி.
********
மேகாலயாவில் தாரிணி இருந்த வீட்டு முகவரியை வைபவ் வாங்கியிருந்தான்.உடனே அதை டிஎஸ்பியிடம் அனுப்பி வைத்து விட்டு அவருக்கு அழைத்தான் அகரன்.
“அங்கிள். தாரிணியோட வீட்டு அட்ரஸ் உங்களுக்கு அனுப்பியிருக்கேன். நான் வேணா உடனே அங்க கிளம்பி போய்ட்டு வரவா…”
“அகரா. இருங்க.. நான் அவங்க அங்க தான் இருக்காங்களான்னு விசாரிக்க சொல்றேன். கன்ப்ர்ம் ஆச்சுன்னா நீங்க போங்க”
அவர் அங்கிருக்கும் காவல் நிலையத்திற்கு அதை அனுப்பி வைத்தார்.
அங்கிருந்து பதில் கிடைக்கும் வரை அகரன் தவித்துப் போனான்.
ஒவ்வொரு நாளும் போக போக தான் அவனிடம் பதட்டம் அதிகரித்தது.
அதை மருதனும் கவனித்தார். ஆனாலும் அவன் இன்னும் தாரிணியை முழுதாக நம்பவில்லையோ என்று ஒரு சந்தேகம் வர முடிந்தவரை தாரிணி இருக்குமிடத்தை அவனாக தேடிப் போக வேண்டும் என்று தான் விரும்பினார்.
“அகரா. செல்வா எதாவது சொன்னாரா. தாரிணி மேகாலயாவில் தான் இருப்பான்னு எனக்கு என்னமோ தோணுது. அப்படி அவ அங்க இருந்தா உடனே கிளம்பி போய் அவளை கூட்டிட்டு வா.”
“தாத்தா கண்டிப்பா கூட்டிட்டு வந்திடுவேன். ஆனா அவளை கண்டுபிடிச்சதும் அவ மாமாவை பத்தி முழுசா விசாரிக்கணும் தாத்தா. அவரை நேர்ல பாக்க எனக்கு விருப்பமில்ல. சோ, தாரிணிட்ட தான் எல்லாத்தையும் கேட்கணும். அவ மேல தப்பில்லன்னு அம்மாக்கும் மாமாவுக்கும் சொல்லணும்.”
“பொறுமையா இருப்பா. அவ மேல் தப்பில்லன்னு இப்ப புரிஞ்சுது இல்ல. அப்போ அவ மாமா மேல என்ன தப்புன்னு அவர்ட்ட கேட்டா தானே தெரியும்.” சிரிப்புடன் மருதன் சொல்ல,
“என்னால முடியாது தாத்தா. அவரை பாத்தா நான் கண்டிப்பா கோவப்படுவேன்.”
“சரிப்பா. முதல்ல தாரிணியை கண்டுபிடி. அதுக்கு பிறகு மத்ததை பேசிக்கலாம்.”
சரியாக அப்போது அவனின் அலைபேசி ஒலித்தது.
“சொல்லுங்க அங்கிள். தாரிணி அங்க தான் இருக்காளா?” ஆர்வமாக கேட்டான்.
அவனது முகம் மாறியதை மருதன் பார்த்தார். அலைபேசியை வைத்தான்.
“அகரா.. என்ன ஆச்சு. செல்வா என்ன சொன்னார்.?”
“தாத்தா. மேகாலயாக்கு அவ போகவே இல்லையாம். அவ பக்கத்து வீட்ல விசாரிச்சிருக்காங்க. அவளை அவங்களும் காண்டாக்ட் பண்ண டிரை பண்ணியிருக்காங்க. அவங்களுக்கும் அவளை ரீச் பண்ண முடியலையாம்.”
“இம்பால் போனான்னு தானே சொன்ன. அப்ப அங்க போகலைன்னா வேற எங்க போய் இருப்பா.?”
“தாத்தா. ஒன்னும் புரியல. அவ தூரமா போகப் போக தான் உண்மையிலேயே அவ தப்பு பண்ணலைன்னு நிரூபணம் ஆகுது. அவ நிச்சயமா என்னையோ நம்ம வீட்டையோ ஏமாத்த வரல. இந்த பணத்தையெல்லாம் தூர தூக்கி எறிஞ்சமாதிரி என்னையும் எறிஞ்சிட்டு போய்ட்டா”
“நீ இதை புரிஞ்சிக்கிட்டயே அது போதும் எனக்கு. கவலைப்படாத.. நிச்சயம் அவ எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடலாம்.”
“தாத்தா. இதுக்கு மேல வெயிட் பண்ண வேண்டாம். வேற பிரைவட் டிடெக்டிவ் யாரையாச்சும் நாம பாக்கலாம். அவங்க நிச்சயமா கண்டுபிடிச்சிருவாங்க.”
“ம்ம்.. செல்வாட்டையே பேசு. அவரே யாரையாச்சும் சொல்வார்”
“சரிங்க தாத்தா” என்று சொல்லிவிட்டு உடனே டிஎஸ்பிக்கு அழைத்தான்.
அவரிடம் விஷயத்தை சொல்லியதும்,
“அகரா.. டிடெக்டிவ் ஏற்பாடு பண்றதை பத்தி எனக்கு ஒன்னும் இல்ல. ஆனா அந்த அளவு போகத் தேவைப்படாது. ஒரு ரெண்டு நாள் வெயிட் பண்ணீங்கனா.. நாங்களே விசாரிச்சு சொல்லிடுவோம். நான் தாத்தா கிட்ட பேசறேன்"என அவர் சொல்ல, சரியென்று அகரன் வைத்தான்.
அடுத்து வைபவை அழைத்தான்.
“டேய்.. இதுவரை ஒன்னும் தெரியல டா. எனக்கு இதுக்கு மேல பொறுமை இல்லை. தாத்தாவுக்கும், செல்வா அங்கிளுக்கும் டிடெக்டிவ்வ உடனே ஏற்பாடு பண்றதுல விருப்பம் இல்ல. எனக்கும் இன்னொருத்தரை பார்த்து முதல்ல இருந்து எல்லாம் சொல்லி, அவங்க விசாரிச்சு சொல்ற வரைக்கும் காத்திட்டு இருக்க முடியாது.”
“அதுக்கு என்னடா பண்ண போற.”
“நானே கிளம்ப போறேன் டா. எவ்வளவு நாளானாலும் பரவால்ல. நானே நேர்ல போய் விசாரிச்சு அவளை கூட்டிட்டு வரப் போறேன்..”
“டேய் அவசரப்படாத. எந்த ஊர்லன்னு போய் கேப்ப. ஒவ்வொரு ஸ்டேட்டலயும் விசாரிக்க எவ்வளவு நாளாகும்.”
“பரவால்ல. முதல்ல மேகாலயால தேடப்போறேன். அங்க நிச்சயம் ஏதோ ஒரு விஷயம் கிடைக்கும் னு எனக்கு தோணுது. நான் இப்பவே கிளம்பறண்டா.”
“இருடா. நானும் வரேன். தனியா போய் என்ன பண்ணப்போற”
“நான் கிளம்பிட்டேன் டா. எதாவது உதவி தேவைப்பட்டா நான் கூப்பிடுறேன்.”
“சரிடா. பத்திரமா போய்ட்டு வா. தாரிணிய பாத்ததும் நிச்சயமா எனக்கு கால் பண்ணனும்.”
*****
“தாரிணிக்கு கல்யாணம் நிச்சயமாகிருக்குன்னு அவ சொன்னப்ப நாங்க அவ்ளோ சந்தோஷப்பட்டோம். ஆனா இப்ப அவளை காணோம்னு போலீஸ்ல இருந்து வந்து சொன்னதும் எனக்கு நிஜமாவே ஒன்னும் புரியல. அவளுக்கு எங்களை விட்டா யாரு இருக்காங்க. அப்படி எங்க போயிருப்பா?” என நிசிலி சொன்னார்.
இலங்கை சென்றதும் அங்கிருந்து அவள் சந்திரனை அழைத்து வந்த விஷயத்தை சொல்லியதும் நிசிலிக்கு கொஞ்சம் அழுகையே வந்தது.
“சந்திரன் மாமா.. அவரும் தாரிணியும் இங்க வரப்ப அவ ஏழாவதோ எட்டாவதோ படிச்சிட்டு இருந்தா. இதோ இந்த வீட்டில் தான் இருந்தாங்க. அவளுக்கு தேவையானதை செய்யறதுக்கு எவ்ளோ வேலைகள் செஞ்சு ரொம்ப கஷ்டப்பட்டார். ஆனாலும் பெத்த மகளை விட ரொம்ப பாசமா வளர்த்தார். அதே போல் என்னையும் என் தங்கையையும் கூட பாசமா தான் பாத்துக்கிட்டார். அப்பா இல்லாத எங்க வீட்டில் ஒரு அப்பாவை போல பாசம் காமிச்சவர் அவர்.”
கண்களில் நீர் வடிய நிசிலி கூறியதும் அகரனுக்கு ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது.
எப்போதும் அவரை வெறுத்து வெறுத்து, இப்போது அனைவரும் அவரை பற்றி நல்ல விதமாக சொல்லியதும் அவனுக்கு மனதின் ஓரத்தில் ஒரு சந்தேகம் வந்தது.
உண்மையிலேயே தான் வெறுக்கும் அளவு மோசமானவரா என்று தோன்றியது.
ஆனால் அதற்கு முன் அவனுக்கு தாரிணி எங்கு சென்றிருப்பாள் என்ற கவலை தான் அதிகமாக இருந்தது.
நிசிலி, தாரிணிக்கு தெரிந்தவர்களில் அங்கு இருப்பவர்களை அழைத்து அகரனுக்கு அறிமுகம் செய்தார்.
யாருக்கும் அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை. உடன் படித்தவர்கள் சிலரும் கூட தாரணியை பார்க்கவில்லை என்று கூறினார்கள்.
வேறு எதாவது தகவல் கிடைக்குமா என்று அத்தனை நேரம் அலைந்தவனுக்கு எதுவுமே சாதகமாக இருக்கவில்லை.
அகரன் அவர்களிடம் சொல்லி விட்டு கிளம்பினான்.
கடைசியாக திரும்பி தாரிணியின் வீட்டை பார்த்து விட்டு நடந்தவன் காரில் ஏறப்போகும் நேரம் நிசிலி ஓடிவந்தார்.
“நீங்க எதுக்கும் டிரைபல் வெல்ஃபேர்ல விசாரிங்க. அவங்க நிச்சயமா ஹெல்ப் பண்ணுவாங்க. அவங்களுக்கு கண்டிப்பா நிறைய ஆட்களை தெரியும்” என்று அந்த அலுவலக முகவரியை தந்தார்.
ஷில்லாங்கில் இருக்கும் அலுவலகத்திற்கு அகரன் வந்தான்.
தாரிணியின் புகைப்படத்தை காண்பித்து விசாரித்த போது சிலருக்கு அவளை தெரிந்து இருந்தது.
ஆனால் இப்போது அவளை பார்க்கவில்லை என்று தான் சொன்னார்கள்.
அலுவலகத்தில் இருக்கும் ஒருவர் மட்டும் ரதீஷின் பெயரை சொன்னார். அவருக்கு இங்கு இருப்பவர்களையும் தெரியும், மற்ற கிராமங்களில் இருக்கும் பழங்குடியினரையும் தெரியும். ஊருக்குள் இருப்பவர்களையும் அவருக்கு தெரியும் என்று சொல்லவே அகரனுக்கு சிறிது நம்பிக்கை வந்தது.
அவரின் அலுவலக எண்ணை வாங்கி அவருக்கு அழைத்தான். அவர்கள் ரதீஷின் அலுவலக முகவரியை தந்தார்கள்.
தாரிணியை தேடி அடுத்த மாநிலத்திற்கு அகரன் வந்தான்.
அஸ்ஸாம்..
மலைப் பகுதிகள், ஆறுகள், தேயிலைத் தோட்டங்கள், காடுகள் என மேகாலயாவைப் போலவே இருந்தது.
வெயிலும், மழையும், குளிரும் ஒரே நேரத்தில் மாறி மாறி இருந்தது.
ரதீஷின் அலுவலகம் ரூப்நகரில் இருந்தது. கவுகாத்தியில் இருந்து அகரன் அங்கு காரில் பயணம் செய்தான்.
அதே நேரம் அகிலும், தாரிணியும் அவர்களின் புதிய வடிவமைப்புகளையும், மல்பெரி சில்க்கின் புதிய ‘ரெடி டூ வியர்’ ஆடை வகைகளையும் ரதீஷிடம் காண்பிப்பதற்காக வந்திருந்தனர்.
ஆனால் ரதீஷ், ஸூவாகுசியில் நடக்க இருக்கும் கண்காட்சிக்கான ஏற்பாட்டிற்கு சென்றிருப்பதாக அலுவலகத்தில் சொன்னார்கள்.
“கோல்டன் ஏஞ்சல், அண்ணா போயிருக்கற இடம் தான் முகா சில்க் உருவாக்கற இடம். அங்க நடக்கப்போற எக்ஸிபிஷன்க்கு தான் பிரிசிடெண்ட் வரப்போறாங்க. முகா சில்க் வீவர்ஸ் உருவாக்கற டிசைன்ஸ் விட நம்ம ட்ரைபல் டிசைன்ஸ் பக்காவா இருக்கனும். நாமளும் அங்க போய் பாத்துட்டு வந்திடலாமா. அப்படியே போற வழில நீங்க ஒரு நல்ல சாப்பாடும் சாப்டூவீங்க.”
“சாப்பிடறதுக்கா வந்தோம் இங்க. வந்த வேலையை முடிச்சிட்டு சீக்கிரமா போகலாம். நாளைக்கு மாமாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும் இல்ல.”
“எப்படியும் அண்ணா வர ஒன் ஹவர் மேல ஆகும். உங்களைப் பாத்து கண்ணைதான் நிறைச்சுப்பேன். வயறு தாங்கணும் இல்ல. அது நிறையறதுக்கு ஒரு வழி சொல்லுங்க..”
“இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.சரி வாங்க சாப்பிட போகலாம்.” என்று அவனுடன் கிளம்பினாள்.
அவர்கள் ஜீப்பில் ஏறும் போது, அகரன் அவர்களுக்கு பின்பக்க தெருவில் காரில் இருந்து இறங்கினான்.
அங்கிருந்து எதிர் பக்கத்தில் இருக்கும்
‘டிரைபல் வெல் ஃபேர் அலுவலகம்’ போர்டை பார்த்து விட்டு அங்கு இருந்த ஜீப்பை பார்த்தான். முன்பக்கம் ஒரு பெண் ஏறுவதைப் பார்த்தான்.
நன்றாக பார்க்கும் போது, தாரிணி தான் ஏறிக் கொண்டு இருந்தாள்.
அகரனுக்கு அவன் கண்களை நம்ப முடியவில்லை. அஸ்ஸாம் வந்து எங்கேயோ தேடி அலையப் போகிறோம் என்று வந்தவனுக்கு, கண் எதிரில், அவன் கூப்பிடும் தூரத்தில் அவள் இருந்தாள்.
‘பவதா’ என்று கத்தினான். அவள் அதற்குள் கதவை சாத்திவிடவே அவனின் குரல் அவளுக்கு கேட்கவில்லை.
“ஏஞ்சல்.. என்ன யோசிக்கறீங்க.. சீட் பெல்ட் போடுங்க. நான்…வேணா “
“அகில்.. யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது.. “ என்று பின்பக்கம் திரும்ப போனாள்.
“இங்க உங்களை யார் கூப்பிடப்போறாங்க..சீட் பெல்ட் போடுங்க..” என்று அவன் வண்டியை கிளப்பினான்.
அகரன் வண்டி கிளம்புவதை பார்த்து சாலையை பார்க்காமலே “ஹேய் பவதா பவதா” என்று கத்திக் கொண்டு சாலையை கடக்க, பக்கவாட்டில் இருந்து வந்த லாரியில் அவன் அடிப்பட்டு தூக்கி எறியப்பட்டான்.
கண்களில் கடைசியாக தாரிணி சென்ற வாகனம் தான் பட்டது.
‘பவதா’ என்று இருளுக்குள் மூழ்கினான்.
மாலையில் தாரிணி ஆற்றங்கரையோரம் நடந்துக் கொண்டிருந்தாள். காலம் வேகமாய் ஓடும், அதில் சில மறந்து போகும். சில மாறிப் போகும்.
ஆனால் ஒரு வாரத்தில் எத்தனை மாற்றங்கள். சென்னை தான் அவளுக்கு ஒரு வாழ்க்கையை கொடுக்க போகிறது என நினைத்தாள். அங்கிருந்து இலங்கை, அங்கிருந்து மீண்டும் சென்னை, கொல்கத்தா, இம்பால் என்று மாறி மாறி இந்த ஆறைப் போல ஓடிக்கொண்டு இருக்கிறாள்.
இனி தன் வாழ்வு யாரையும் எதிர்ப்பார்க்காமல் தனக்காகவும், தன் மாமாவுக்காகவும் தான் இந்த ஆறைப் போல ஓடப்போகிறது என்று நினைத்துக்கொண்டாள்.
மெதுவாக அங்கிருந்த ஒரு பாறையின் மேல் அமர்ந்தாள்.
அவளின் உருவம் தண்ணீரில் பிரதிபலிக்க அதை பார்த்திருந்தவளின் அருகில் அகில் வந்து நின்றான்.
“இங்க கூட என்னை தனியா இருக்க விட மாட்டீங்களா?” என்றாள்.
“ச்ச..ச்ச.. நானும் உங்களை மாதிரி இந்த ஆறோட அழகை ரசிக்கத்தான் வந்தேங்க.. பார்த்தா அந்த ஆறை விட அழகா, பேரழகா ஒரு மஞ்சள் தேவதை இங்க இருக்கறதை பார்த்து என் கால்கள் தானா இங்க வந்து நின்னுடுச்சு”
“அச்சோ ப்ளீஸ் நிறுத்துங்க. இந்த பேச்சுக்கு டைம் னு ஒன்னு இல்லையா?”
“சரி விடுங்க. உண்மைக்கு எப்போவும் மரியாதையில்ல”
தாரிணி அவன் பக்கம் திரும்பாமலேயே ஆற்றை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கோல்டன் ஏஞ்சல்.. உங்களை ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டீங்களே.”
“அது நீங்க கேட்கறதை பொறுத்து”
“நீங்க இதுவரைக்கும் காதல் வயப்படவே இல்லையா?” திரும்பி அவனை முறைத்தாள்.
“ஓ. சாரி கேள்வியை தப்பா கேட்டுட்டேன். உங்க மேல யாரும் காதல் வயப்பட்டாங்களா.. ஏன்னா இப்படி ஒரு ஏஞ்சலை யாரும் லவ் பண்ணாம இருக்கறது தான் ஆச்சர்யம்.”
இப்போது அவள் அவனை முறைக்கவில்லை. தரையையும் ஆற்றையும் மாறி மாறி பார்த்தாள்.
“இந்த அமைதி ஆமாவா.. இல்லையா?எதை சொல்லுது?”
“இல்ல.”
“அப்பாடா..” என்றான்.
“என்ன?”
“இல்லைங்க. நாம ஒரு பாதைல போகலான்னு இருப்போம். எதிர்ல யாராச்சும் மொத்தமா அந்த வழியை அடைச்சிட்டு வந்து நின்னா, என்ன பண்றது?”
“சம்பந்தமே இல்லாம பேசறது தான் உங்க வழக்கமா?”
“சம்பந்தம் இருக்கு. உங்களுக்கு புரியல..”
“எதிர்ல இருக்கவங்களுக்கு புரியாம எதுக்கு பேசணும்”
“புரியற மாதிரி பேசற நாள் சீக்கிரமே வரும்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு.”
“ஹ்ம்ம்.. “ என்றவள் மீண்டும் ஆற்றை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவளின் உடை காற்றில் பறந்துக் கொண்டிருந்தது. அதை இழுத்துப் பிடித்துக் கொண்டாள் தாரிணி. இருந்தும் அவளின் கழுத்தை சுற்றி இருந்த துப்பட்டா மேல் நோக்கி பறக்க ஆரம்பித்தது.
ஒரு நொடி பதறி பறந்த துப்பட்டாவை அவள் எழுந்து பிடிப்பதற்குள் அகில் அதை பிடித்தான். அவளது கைகளில் அவன் அதை தர, அவளுக்கோ தாலியை அவன் பார்த்திருப்பானோ என்ற பயம்.
அகில் வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்தான்.
“கோல்டன் ஏஞ்சல்..அப்படியே இந்த டிரஸ்ல ஒரு மாடல் மாதிரி இருக்கீங்க. டாப் மாடல் மாதிரி அப்படி ஒரு வளைவு நெளிவான உடம்பு உங்களுக்கு. ஆனா நீங்க இந்த துணியால மொத்தமா மூடி மறைச்சு வச்சு ஏன் இப்படி அநியாயம் பண்றீங்க.”
“ஹலோ.. என்ன பேசறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசறீங்களா? ஒரு பொண்ணுட்ட எப்படி பிஹேவ் பண்ணனும்னு தெரியாதா.. ச்சீ”
“ஹேய்.. நான் என்ன அப்படி சொல்லிட்டேன். எத்தனை மாடல்ஸ நம்ம ப்ரொபைல்க்கோ, ஃபோர்ட் போலியோக்கோ நாம புக் பண்றோம். அவங்க உடம்பை நம்ம டிரஸ் டிசைன்ஸ்க்கு கரெக்டா இருக்கான்னு பாக்கற மாதிரி தான் நான் சொன்னேன். எந்த தப்பான அர்த்தமும் இதில் இல்லை. நம்ம டிரைபல் ஃபெஸ்டிவல்க்கு நம்ம கம்பெனி சார்பா அத்தனை டிரஸ்ஸையும் உங்களை வச்சு தான் நான் டிசைன் பண்ணி போஸ்டர்ஸ் ரெடி பண்ண போறேன்.”
“நானா. அதெல்லாம் என்னால் முடியாது. நீங்களா எப்படி சொல்லலாம்.?”
“நீங்க தானே சொன்னீங்க. நான் உதவி கேட்கறப்ப நிச்சயம் பண்ணுவேன்னு. அப்போ நான் கேட்க போற ஃப்ர்ஸ்ட் உதவி இது தான்.”
“அப்ப இன்னும் கேட்டுட்டே இருப்பீங்களா?”
“அஃப்கோர்ஸ். கண்டிப்பா நீங்க அனுமதிச்சா வாழ்க்கை முழுசும் கேட்பேன்.”
“வாழ்க்கை முழுக்க நான் இங்கேயே இருப்பேன்னு நினைக்காதீங்க.”
“நிச்சயமா இருப்பீங்க. நான் சொல்றது நடக்கும்.”
அவனை பார்த்து ஒரு விரக்தி சிரிப்பை சிரித்து விட்டு அங்கிருந்து கிளம்பினாள் தாரிணி.
********
மேகாலயாவில் தாரிணி இருந்த வீட்டு முகவரியை வைபவ் வாங்கியிருந்தான்.உடனே அதை டிஎஸ்பியிடம் அனுப்பி வைத்து விட்டு அவருக்கு அழைத்தான் அகரன்.
“அங்கிள். தாரிணியோட வீட்டு அட்ரஸ் உங்களுக்கு அனுப்பியிருக்கேன். நான் வேணா உடனே அங்க கிளம்பி போய்ட்டு வரவா…”
“அகரா. இருங்க.. நான் அவங்க அங்க தான் இருக்காங்களான்னு விசாரிக்க சொல்றேன். கன்ப்ர்ம் ஆச்சுன்னா நீங்க போங்க”
அவர் அங்கிருக்கும் காவல் நிலையத்திற்கு அதை அனுப்பி வைத்தார்.
அங்கிருந்து பதில் கிடைக்கும் வரை அகரன் தவித்துப் போனான்.
ஒவ்வொரு நாளும் போக போக தான் அவனிடம் பதட்டம் அதிகரித்தது.
அதை மருதனும் கவனித்தார். ஆனாலும் அவன் இன்னும் தாரிணியை முழுதாக நம்பவில்லையோ என்று ஒரு சந்தேகம் வர முடிந்தவரை தாரிணி இருக்குமிடத்தை அவனாக தேடிப் போக வேண்டும் என்று தான் விரும்பினார்.
“அகரா. செல்வா எதாவது சொன்னாரா. தாரிணி மேகாலயாவில் தான் இருப்பான்னு எனக்கு என்னமோ தோணுது. அப்படி அவ அங்க இருந்தா உடனே கிளம்பி போய் அவளை கூட்டிட்டு வா.”
“தாத்தா கண்டிப்பா கூட்டிட்டு வந்திடுவேன். ஆனா அவளை கண்டுபிடிச்சதும் அவ மாமாவை பத்தி முழுசா விசாரிக்கணும் தாத்தா. அவரை நேர்ல பாக்க எனக்கு விருப்பமில்ல. சோ, தாரிணிட்ட தான் எல்லாத்தையும் கேட்கணும். அவ மேல தப்பில்லன்னு அம்மாக்கும் மாமாவுக்கும் சொல்லணும்.”
“பொறுமையா இருப்பா. அவ மேல் தப்பில்லன்னு இப்ப புரிஞ்சுது இல்ல. அப்போ அவ மாமா மேல என்ன தப்புன்னு அவர்ட்ட கேட்டா தானே தெரியும்.” சிரிப்புடன் மருதன் சொல்ல,
“என்னால முடியாது தாத்தா. அவரை பாத்தா நான் கண்டிப்பா கோவப்படுவேன்.”
“சரிப்பா. முதல்ல தாரிணியை கண்டுபிடி. அதுக்கு பிறகு மத்ததை பேசிக்கலாம்.”
சரியாக அப்போது அவனின் அலைபேசி ஒலித்தது.
“சொல்லுங்க அங்கிள். தாரிணி அங்க தான் இருக்காளா?” ஆர்வமாக கேட்டான்.
அவனது முகம் மாறியதை மருதன் பார்த்தார். அலைபேசியை வைத்தான்.
“அகரா.. என்ன ஆச்சு. செல்வா என்ன சொன்னார்.?”
“தாத்தா. மேகாலயாக்கு அவ போகவே இல்லையாம். அவ பக்கத்து வீட்ல விசாரிச்சிருக்காங்க. அவளை அவங்களும் காண்டாக்ட் பண்ண டிரை பண்ணியிருக்காங்க. அவங்களுக்கும் அவளை ரீச் பண்ண முடியலையாம்.”
“இம்பால் போனான்னு தானே சொன்ன. அப்ப அங்க போகலைன்னா வேற எங்க போய் இருப்பா.?”
“தாத்தா. ஒன்னும் புரியல. அவ தூரமா போகப் போக தான் உண்மையிலேயே அவ தப்பு பண்ணலைன்னு நிரூபணம் ஆகுது. அவ நிச்சயமா என்னையோ நம்ம வீட்டையோ ஏமாத்த வரல. இந்த பணத்தையெல்லாம் தூர தூக்கி எறிஞ்சமாதிரி என்னையும் எறிஞ்சிட்டு போய்ட்டா”
“நீ இதை புரிஞ்சிக்கிட்டயே அது போதும் எனக்கு. கவலைப்படாத.. நிச்சயம் அவ எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடலாம்.”
“தாத்தா. இதுக்கு மேல வெயிட் பண்ண வேண்டாம். வேற பிரைவட் டிடெக்டிவ் யாரையாச்சும் நாம பாக்கலாம். அவங்க நிச்சயமா கண்டுபிடிச்சிருவாங்க.”
“ம்ம்.. செல்வாட்டையே பேசு. அவரே யாரையாச்சும் சொல்வார்”
“சரிங்க தாத்தா” என்று சொல்லிவிட்டு உடனே டிஎஸ்பிக்கு அழைத்தான்.
அவரிடம் விஷயத்தை சொல்லியதும்,
“அகரா.. டிடெக்டிவ் ஏற்பாடு பண்றதை பத்தி எனக்கு ஒன்னும் இல்ல. ஆனா அந்த அளவு போகத் தேவைப்படாது. ஒரு ரெண்டு நாள் வெயிட் பண்ணீங்கனா.. நாங்களே விசாரிச்சு சொல்லிடுவோம். நான் தாத்தா கிட்ட பேசறேன்"என அவர் சொல்ல, சரியென்று அகரன் வைத்தான்.
அடுத்து வைபவை அழைத்தான்.
“டேய்.. இதுவரை ஒன்னும் தெரியல டா. எனக்கு இதுக்கு மேல பொறுமை இல்லை. தாத்தாவுக்கும், செல்வா அங்கிளுக்கும் டிடெக்டிவ்வ உடனே ஏற்பாடு பண்றதுல விருப்பம் இல்ல. எனக்கும் இன்னொருத்தரை பார்த்து முதல்ல இருந்து எல்லாம் சொல்லி, அவங்க விசாரிச்சு சொல்ற வரைக்கும் காத்திட்டு இருக்க முடியாது.”
“அதுக்கு என்னடா பண்ண போற.”
“நானே கிளம்ப போறேன் டா. எவ்வளவு நாளானாலும் பரவால்ல. நானே நேர்ல போய் விசாரிச்சு அவளை கூட்டிட்டு வரப் போறேன்..”
“டேய் அவசரப்படாத. எந்த ஊர்லன்னு போய் கேப்ப. ஒவ்வொரு ஸ்டேட்டலயும் விசாரிக்க எவ்வளவு நாளாகும்.”
“பரவால்ல. முதல்ல மேகாலயால தேடப்போறேன். அங்க நிச்சயம் ஏதோ ஒரு விஷயம் கிடைக்கும் னு எனக்கு தோணுது. நான் இப்பவே கிளம்பறண்டா.”
“இருடா. நானும் வரேன். தனியா போய் என்ன பண்ணப்போற”
“நான் கிளம்பிட்டேன் டா. எதாவது உதவி தேவைப்பட்டா நான் கூப்பிடுறேன்.”
“சரிடா. பத்திரமா போய்ட்டு வா. தாரிணிய பாத்ததும் நிச்சயமா எனக்கு கால் பண்ணனும்.”
*****
“தாரிணிக்கு கல்யாணம் நிச்சயமாகிருக்குன்னு அவ சொன்னப்ப நாங்க அவ்ளோ சந்தோஷப்பட்டோம். ஆனா இப்ப அவளை காணோம்னு போலீஸ்ல இருந்து வந்து சொன்னதும் எனக்கு நிஜமாவே ஒன்னும் புரியல. அவளுக்கு எங்களை விட்டா யாரு இருக்காங்க. அப்படி எங்க போயிருப்பா?” என நிசிலி சொன்னார்.
இலங்கை சென்றதும் அங்கிருந்து அவள் சந்திரனை அழைத்து வந்த விஷயத்தை சொல்லியதும் நிசிலிக்கு கொஞ்சம் அழுகையே வந்தது.
“சந்திரன் மாமா.. அவரும் தாரிணியும் இங்க வரப்ப அவ ஏழாவதோ எட்டாவதோ படிச்சிட்டு இருந்தா. இதோ இந்த வீட்டில் தான் இருந்தாங்க. அவளுக்கு தேவையானதை செய்யறதுக்கு எவ்ளோ வேலைகள் செஞ்சு ரொம்ப கஷ்டப்பட்டார். ஆனாலும் பெத்த மகளை விட ரொம்ப பாசமா வளர்த்தார். அதே போல் என்னையும் என் தங்கையையும் கூட பாசமா தான் பாத்துக்கிட்டார். அப்பா இல்லாத எங்க வீட்டில் ஒரு அப்பாவை போல பாசம் காமிச்சவர் அவர்.”
கண்களில் நீர் வடிய நிசிலி கூறியதும் அகரனுக்கு ஒரு குற்ற உணர்ச்சி தோன்றியது.
எப்போதும் அவரை வெறுத்து வெறுத்து, இப்போது அனைவரும் அவரை பற்றி நல்ல விதமாக சொல்லியதும் அவனுக்கு மனதின் ஓரத்தில் ஒரு சந்தேகம் வந்தது.
உண்மையிலேயே தான் வெறுக்கும் அளவு மோசமானவரா என்று தோன்றியது.
ஆனால் அதற்கு முன் அவனுக்கு தாரிணி எங்கு சென்றிருப்பாள் என்ற கவலை தான் அதிகமாக இருந்தது.
நிசிலி, தாரிணிக்கு தெரிந்தவர்களில் அங்கு இருப்பவர்களை அழைத்து அகரனுக்கு அறிமுகம் செய்தார்.
யாருக்கும் அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரியவில்லை. உடன் படித்தவர்கள் சிலரும் கூட தாரணியை பார்க்கவில்லை என்று கூறினார்கள்.
வேறு எதாவது தகவல் கிடைக்குமா என்று அத்தனை நேரம் அலைந்தவனுக்கு எதுவுமே சாதகமாக இருக்கவில்லை.
அகரன் அவர்களிடம் சொல்லி விட்டு கிளம்பினான்.
கடைசியாக திரும்பி தாரிணியின் வீட்டை பார்த்து விட்டு நடந்தவன் காரில் ஏறப்போகும் நேரம் நிசிலி ஓடிவந்தார்.
“நீங்க எதுக்கும் டிரைபல் வெல்ஃபேர்ல விசாரிங்க. அவங்க நிச்சயமா ஹெல்ப் பண்ணுவாங்க. அவங்களுக்கு கண்டிப்பா நிறைய ஆட்களை தெரியும்” என்று அந்த அலுவலக முகவரியை தந்தார்.
ஷில்லாங்கில் இருக்கும் அலுவலகத்திற்கு அகரன் வந்தான்.
தாரிணியின் புகைப்படத்தை காண்பித்து விசாரித்த போது சிலருக்கு அவளை தெரிந்து இருந்தது.
ஆனால் இப்போது அவளை பார்க்கவில்லை என்று தான் சொன்னார்கள்.
அலுவலகத்தில் இருக்கும் ஒருவர் மட்டும் ரதீஷின் பெயரை சொன்னார். அவருக்கு இங்கு இருப்பவர்களையும் தெரியும், மற்ற கிராமங்களில் இருக்கும் பழங்குடியினரையும் தெரியும். ஊருக்குள் இருப்பவர்களையும் அவருக்கு தெரியும் என்று சொல்லவே அகரனுக்கு சிறிது நம்பிக்கை வந்தது.
அவரின் அலுவலக எண்ணை வாங்கி அவருக்கு அழைத்தான். அவர்கள் ரதீஷின் அலுவலக முகவரியை தந்தார்கள்.
தாரிணியை தேடி அடுத்த மாநிலத்திற்கு அகரன் வந்தான்.
அஸ்ஸாம்..
மலைப் பகுதிகள், ஆறுகள், தேயிலைத் தோட்டங்கள், காடுகள் என மேகாலயாவைப் போலவே இருந்தது.
வெயிலும், மழையும், குளிரும் ஒரே நேரத்தில் மாறி மாறி இருந்தது.
ரதீஷின் அலுவலகம் ரூப்நகரில் இருந்தது. கவுகாத்தியில் இருந்து அகரன் அங்கு காரில் பயணம் செய்தான்.
அதே நேரம் அகிலும், தாரிணியும் அவர்களின் புதிய வடிவமைப்புகளையும், மல்பெரி சில்க்கின் புதிய ‘ரெடி டூ வியர்’ ஆடை வகைகளையும் ரதீஷிடம் காண்பிப்பதற்காக வந்திருந்தனர்.
ஆனால் ரதீஷ், ஸூவாகுசியில் நடக்க இருக்கும் கண்காட்சிக்கான ஏற்பாட்டிற்கு சென்றிருப்பதாக அலுவலகத்தில் சொன்னார்கள்.
“கோல்டன் ஏஞ்சல், அண்ணா போயிருக்கற இடம் தான் முகா சில்க் உருவாக்கற இடம். அங்க நடக்கப்போற எக்ஸிபிஷன்க்கு தான் பிரிசிடெண்ட் வரப்போறாங்க. முகா சில்க் வீவர்ஸ் உருவாக்கற டிசைன்ஸ் விட நம்ம ட்ரைபல் டிசைன்ஸ் பக்காவா இருக்கனும். நாமளும் அங்க போய் பாத்துட்டு வந்திடலாமா. அப்படியே போற வழில நீங்க ஒரு நல்ல சாப்பாடும் சாப்டூவீங்க.”
“சாப்பிடறதுக்கா வந்தோம் இங்க. வந்த வேலையை முடிச்சிட்டு சீக்கிரமா போகலாம். நாளைக்கு மாமாவை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும் இல்ல.”
“எப்படியும் அண்ணா வர ஒன் ஹவர் மேல ஆகும். உங்களைப் பாத்து கண்ணைதான் நிறைச்சுப்பேன். வயறு தாங்கணும் இல்ல. அது நிறையறதுக்கு ஒரு வழி சொல்லுங்க..”
“இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.சரி வாங்க சாப்பிட போகலாம்.” என்று அவனுடன் கிளம்பினாள்.
அவர்கள் ஜீப்பில் ஏறும் போது, அகரன் அவர்களுக்கு பின்பக்க தெருவில் காரில் இருந்து இறங்கினான்.
அங்கிருந்து எதிர் பக்கத்தில் இருக்கும்
‘டிரைபல் வெல் ஃபேர் அலுவலகம்’ போர்டை பார்த்து விட்டு அங்கு இருந்த ஜீப்பை பார்த்தான். முன்பக்கம் ஒரு பெண் ஏறுவதைப் பார்த்தான்.
நன்றாக பார்க்கும் போது, தாரிணி தான் ஏறிக் கொண்டு இருந்தாள்.
அகரனுக்கு அவன் கண்களை நம்ப முடியவில்லை. அஸ்ஸாம் வந்து எங்கேயோ தேடி அலையப் போகிறோம் என்று வந்தவனுக்கு, கண் எதிரில், அவன் கூப்பிடும் தூரத்தில் அவள் இருந்தாள்.
‘பவதா’ என்று கத்தினான். அவள் அதற்குள் கதவை சாத்திவிடவே அவனின் குரல் அவளுக்கு கேட்கவில்லை.
“ஏஞ்சல்.. என்ன யோசிக்கறீங்க.. சீட் பெல்ட் போடுங்க. நான்…வேணா “
“அகில்.. யாரோ கூப்பிட்ட மாதிரி இருந்தது.. “ என்று பின்பக்கம் திரும்ப போனாள்.
“இங்க உங்களை யார் கூப்பிடப்போறாங்க..சீட் பெல்ட் போடுங்க..” என்று அவன் வண்டியை கிளப்பினான்.
அகரன் வண்டி கிளம்புவதை பார்த்து சாலையை பார்க்காமலே “ஹேய் பவதா பவதா” என்று கத்திக் கொண்டு சாலையை கடக்க, பக்கவாட்டில் இருந்து வந்த லாரியில் அவன் அடிப்பட்டு தூக்கி எறியப்பட்டான்.
கண்களில் கடைசியாக தாரிணி சென்ற வாகனம் தான் பட்டது.
‘பவதா’ என்று இருளுக்குள் மூழ்கினான்.