அத்தியாயம் 40
“பாண்டியா” என்ற குரல் முடிவதற்குள் பாண்டியன் மருதன் முன் நின்றிருந்தார்.
“இந்த ந்யூஸ்ல காமிச்சது யாரு.. தாரிணி மாதிரி தானே இருக்கு.”
“நா பாக்கலையேப்பா. அவளை இன்னும் ஞாபகம் வச்சு இருக்கீங்களாப்பா?”
“என்னப்பா. என் பேரன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை நான் எப்படி மறந்திடுவேன்னு நினைக்கற”
“தெய்வா தான் அந்த பொண்ணை எல்லாரும் மறந்திடனும்னு சொல்லிருக்கா இல்ல. இப்ப திரும்ப எதுக்கு அந்த பேச்சு.”
“நீ ந்யூஸ்ல காமிச்சது அந்த பொண்ணத்தானான்னு பார்த்து சொல்லு.”
“அப்பா..” தெய்வா அவரின் முன் வந்து நின்றார்.
“வாம்மா. உன் மருமகளை தான் டிவில காமிச்சாங்கன்னு நினைக்கிறேன். நீயே பாத்து அவ தானான்னு சொல்லு.”
“அப்பா.. அகரனை இந்த நிலைமையில் பாத்தும் உங்களுக்கு இதே பேச்சு தானா. படிச்சு படிச்சு சொன்னேன். அவன்ட்ட அந்த பொண்ண பத்தி எதுவும் சொல்லாதீங்க, அவளை பாக்க அனுப்பாதீங்கன்னு. ஆனா அவனை உசுப்பேத்தி அவளை தேடிப் போக வச்சீங்க. இப்ப என் பிள்ளை இப்படி கிடக்கிறான்.”
“அவன் மருந்தே அவ தான் மா. தாரிணிதான்னு தெரிஞ்சா நானே போய் அவளை கூட்டிட்டு வருவேன் என் பேரனுக்காக. அவளை பாத்ததும் எழுந்து நின்னுருவான் பாரு.”
“அவ என்ன டாக்டரா? அவ வந்தா இவனுக்கு சரியாகறதுக்கு. நல்லா இருந்த பிள்ளையை இப்படி நடக்க விடாம படுத்த படுக்கையா இருக்க வச்சிட்டீங்க. இனிமே என் பிள்ளை விஷயத்துல நீங்க எதுவும் முடிவு செய்யாதீங்கபா.”
மருதனிடம் இப்போது தான் வாழ்க்கையில் முதல் முறையாக தெய்வா இப்படி முகத்தில் அடித்தால் போல பேசுகிறார்.
அவருக்கு வலித்தது. ஆனாலும் பேரனின் வாழ்க்கைக்காக பொறுத்துக் கொண்டார்.
தெய்வாவும், பாண்டியனும் அவர் அறையில் இருந்து நகர்ந்ததும், மெதுவாக அகரனின் அறைக்குச் சென்றார்.
“அகரா..” அவர் அழைத்ததும் கண் திறந்து அவரை பார்த்தான் அகரன்.
காயங்களின் வடு அவனது முகத்தில் ஆறி இருந்தது. ஆனால் தழும்பு அப்படியே இருந்தது.
தலையில் அடிப்பட்ட இடம் தையல் போடப்பட்டு ஆறியிருந்தாலும், அந்த இடங்களில் முடி இல்லாமல் இருந்தது.
இடது கையில் மணிக்கட்டு
உடைந்து சரியாவதற்காக கட்டுப் போடப்பட்டு இருந்தது. காலில் தான் அதிகமான காயம் அவனுக்கு.
முட்டி எலும்பு முறிந்து வேறு புதிய எலும்பு மாற்ற அறுவை சிகிச்சை நடந்து இருந்ததால் எழுந்து நடக்க முடியவில்லை.
எவ்வளவுக்கெவ்வளவு கம்பீரமாக இருந்தானோ அந்த அளவு படுத்த படுக்கையில் அவனை பார்க்கும் போது அனைவருக்கும் கஷ்டமாக தான் இருந்தது.
தெய்வா தான் உடைந்து போய் விட்டார். இந்த நிலைமைக்கு தாரிணியை தேடி அவன் போனது தான் காரணம் என்பதால் இன்னும் கூடுதலாக அவள் மேல் கோபம் இருந்தது.
மருதன் அகரன் குணமானதும் எவ்வளவு செலவழித்தாலும் மீண்டும் பழையபடி அவனை கொண்டு வர வேண்டும் என்று விரும்பினார்.
“உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லப் போறேன். இந்தா, இந்த நியூஸ் பாரு. நிக்கறது தாரிணி தானே. அப்பவே அவ அங்க இருக்கறது கன்பர்ம் பண்ணிட்டு தான் அந்த ஆபிசர்ட்ட கேட்க சொன்னேன். அவர் அவ அஸ்ஸாம்லயே இல்லன்னு சொன்னார் இல்ல. இப்ப பாரு அவங்க பங்ஷன்லயே அவளை காமிக்கறாங்க.
இதை வச்சே அந்த ஆள்ட்ட கேட்க போறேன். நீ சரியாகனும் தான் இத்தனை நாள் வெயிட் பண்ணேன். இனி அவளை கூட்டிட்டு வரது என் பொறுப்பு. நீ கவலைப்படாத.” என்றார்.
“தாத்தா. பவதா தான் இது. இப்பவே என்னை அங்க கூட்டிட்டு போங்க தாத்தா. அவளை நான் பாக்கனும்.”
“இப்போதான் உங்க அம்மா உன் விஷயத்துல என்னை தலையிட வேண்டாம்னு சொல்லிட்டு போறா. போன முறையே நீயே தான் அவளை தேடி போகனும்னு தான் செல்வாவை கொஞ்சம் டிலே பண்ண சொன்னேன். ஆனா நீ போய் ஆக்ஸிடெண்ட் ஆனதும் என்னால் தாங்கிக்கவே முடியல. இந்த முறை நானே அவளை கூட்டிட்டு வரேன். நீ ரெஸ்ட் எடு.”
“தாத்தா ப்ளீஸ்.அவளை தவிக்க விட்டதுக்கு தான் எனக்கு இந்த தண்டனை. இந்த இரண்டு மாசமும் நான் அவளை ரொம்ப மிஸ் பண்றேன். தெரியாத ஊரில் அவ எப்டி மேனேஜ் பண்றான்னு தெரியல” என்றான் அகரன்.
“சொன்னா கேட்கணும். இன்னும் டாக்டர் உன்னை நடக்க சொல்லல. இப்ப எப்படி அங்க போவ. நான் பார்த்துக்கறேன்”
அகரன் அவர் காண்பித்த பவதாரிணியின் படத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனின் தலையை தடவிக் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார் மருதன்.
தன் அலைபேசியில் வைபவை அழைத்தான் அகரன்.
“டேய். எப்படிடா இருக்க. இந்த வீக் எண்ட் அங்க வரலாம்னு இருந்தேன். வந்தனா அவ அம்மா வீட்டுக்கு வர சொன்னான்னு தான் அங்க பாக்க போயிருந்தேன்.”
“பரவால்லடா. குழந்தை எப்படி இருக்கா? நீ டுடே ந்யூஸ் சேனல்ல ஒரு டிரைபல் ப்ங்க்ஷன் அஸ்ஸாம்ல நடந்ததை காமிச்சு இருக்காங்க அதை பாரு. தாரிணி அங்க தாண்டா இருக்கா. நீங்க யாரும் அன்னிக்கு நான் சொன்னதை நம்பல இல்ல. எனக்கு தலையில அடிப்பட்டு உளறறேன்னு சொன்னீங்க. இப்ப பாரு அது அவளே தான்.”
“இருடா பார்க்கறேன்” என்று வைபவ் நியூஸ் சேனலில் அந்த செய்தியை பார்த்தான். அது தாரிணி தான்.
“ஆமா டா. அவ தான். அங்க என்ன பண்றாடா? அப்போ அந்த ஆபிசர் அவ அங்க இல்லைன்னு சொன்னது பொய்யா?”
“ஆமா டா. எனக்கு ஒரு உதவி செய்டா. நீ கொஞ்சம் நேரா போய் அவளை பாத்து எல்லா உண்மையும் சொல்லுடா. அவ நான் இப்படி இருக்கறது தெரிஞ்சா கண்டிப்பா நேர்ல வருவா டா”
“நானா டா. என்னை அவளுக்கு தெரியாதே. எப்படி என் கூட நம்பி வருவா.?”
“லூசு மாதிரி பேசாத. அங்க போய் நடந்த விஷயங்களை சொல்லி அவள்ட்ட கால் பண்ணி கொடு. நான் பேசறேன்.”
“சரிடா. நாளைக்கு மார்னிங்கே நான் கிளம்பறேன்.”
“ப்ளீஸ் டா. என் வாழ்க்கை இப்போ உன் கையில் தான் இருக்கு. எனக்காக செய். தாத்தா அவரே போறேன்னு சொல்றார். ஆனா கண்டிப்பா அம்மாவும், மாமாவும் விட மாட்டாங்க. அதான் உன்னை போக சொல்றேன்.”
“டேய்.. உன் வாழ்க்கையை நிச்சயம் நான் சரியாக்குவேன்டா. நீ கவலைப்படாத.” என்று வைபவ் சொல்லி விட்டு அடுத்த நாளே அஸ்ஸாமிற்கு டிக்கெட் புக் செய்தான்.
மருதன் விமான பயணத்திற்கு ஏற்பாடு செய்ய, அகரன் சொல்லியது போல் தெய்வாவும், பாண்டியனும் அவரை தடுத்து விட்டார்கள்.
********
ரூப் நகர் வந்து சேர்ந்தான் வைபவ். ரதீஷின் அலுவலகத்தில் அவர் இல்லை.. அந்த அலுவலகத்தில் தாரிணியின் புகைப்படத்தை காண்பித்து கேட்டான். அங்குள்ளவர்கள் தாரிணி இருக்கும் ஊரை சொன்னார்கள்.
அங்கிருந்து நேராக தாரிணியை தேடி வந்தான்.
தாரிணிக்கு அடிப்பட்டு இருந்ததால் அகில் அவளை நிறுவனத்திற்கு வரவிடவில்லை.
சந்திரன் உள்ளே படுத்து இருந்தார். கதவு தட்டப்டும் சத்தம் கேட்டு தாரிணி கதவு திறந்தாள். வைபவை எங்கோ பார்த்தது போல இருந்தது. ஆனால் அவளால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.
“தாரிணி. ஐ’ம் வைபவ். சென்னையில் இருந்து வரேன்” அவன் தமிழில் பேசியதும், சென்னை என்றதும் அவசரம் அவசரமாக கதவை சாத்தி விட்டு வெளியில் வந்தாள்.
“நீங்க எதுக்கு வந்திருக்கீங்க. யார் உங்களுக்கு இந்த அட்ரஸ் தந்தது.?”
“நான் அகரன் ப்ரெண்ட் மா. உங்ககூட பேசணும்.”
“நோ. அவர் சம்பந்தப்பட்டவங்க யாரும் என்கூட பேச வேண்டாம். உங்களுக்கு யார் சொன்னது நான் இங்கிருக்கறதை.”
“உன்னோட டிரைபல் எக்ஸ்போ ஃபோட்டோஸ் தான் நீ இங்க இருக்கிறதை சொன்னது. ப்ளீஸ் கொஞ்சம் நேரம் நான் சொல்றதை கேளு. உனக்கே புரியும் எல்லாம்”
அவன் சொன்னதும் தலையில் அடித்துக் கொண்டாள்.
“ச்ச் கவனமா நான் இருந்துருக்கனும்”
“கவனமா இல்லாம இருந்தது தான் நல்லது தாரிணி. இல்லன்னா நீ இங்க இருக்கிறதை எங்களால் எப்படி தெரிஞ்சுக்க முடியும்.”
“ஓ.. அப்படி தெரிஞ்சும் அவர் மனசு இறங்கவே இல்ல. இப்போ வரைக்கும் அவர் எதுக்காக என்னை தண்டிச்சுட்டு இருக்கார்னு எனக்கு தெரியவே இல்லை. இப்போ உங்களை அனுப்பி என்ன பண்ண சொல்லியிருக்கார்? கல்யாணம் கூட ஆகலையே. டைவர்ஸ் நோட்டீஸ்ல கையெழுத்து கேட்க?” அனிச்சையாக அவளின் கைகள் கழுத்தை துணியால் இழுத்து மூடின.
ஆனாலும் அவளின் மஞ்சள் நிற கயிறு லேசாக தெரிந்தது. காயத்தினால் அந்த பக்கம் அவளால் துணியை கொண்டு மூட முடியவில்லை.
“உள்ள போய் பேசலாமா.. “
“எதுக்கு. எதுவா இருந்தாலும் எனக்கு கேட்க விருப்பம் இல்ல. நீங்க கிளம்புங்க”
“அகரன் படுத்த படுக்கையா இருக்கான். அவனுக்கு ஆக்ஸிடென்ட். இப்போவாச்சும் நான் சொல்றதை கேட்க விரும்பறியா”
அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.
“எது.. ஆக்ஸிடென்ட்டா.. எப்போ. இப்போ எப்படி இருக்கார்?” என்று பதறினாள். வைபவிற்கு அவள் மனம் புரிந்தது. அதற்காகதானே இதை சொன்னான்.
“இங்கேயே தான் பேசுணுமா..” என்றான்.
“வீட்ல மாமா இருக்கார். இங்க வேணாம். வாங்க ஆற்றங்கரைக்கு போகலாம்.” என்று அவனை அழைத்துக் கொண்டு ஆற்றிற்கு சென்றாள்.
“சொல்லுங்க… அவருக்கு இப்போ எப்படி இருக்கு. எப்போ ஆக்ஸிடென்ட் ஆச்சு.”
“நீ தான் அதுக்கு காரணம்.”
“நானா.. குழப்பாம ப்ளீஸ் தெளிவா சொல்லுங்க.” பதறி தவித்தாள்.
“உன்னை தேடி இங்க வந்து தான்மா அவனுக்கு ஆக்ஸிடென்ட் ஆனது. மூச்சு பேச்சு இல்லாம தான் அவனை நாங்க பாத்தோம். அவன் பிழைப்பான்னு நம்பிக்கையே இல்ல எங்களுக்கு”
“இங்க என்னை தேடி வந்தாரா. எப்போ?”
“இரண்டு மாசம் இருக்கும். உன்னை தேடி இங்க வந்தான். நீ கார்ல ஏறப்போறதை பாத்து உன்னை கூப்பிட்டுட்டே ரோட்டை பாக்காம க்ராஸ் பண்ணியிருக்கான். அப்போதான் லாரி அடிச்சிருச்சு.” .
தாரிணிக்கு தலை சுற்றியது. அவளுக்கு அன்று நடந்தது ஞாபகம் வந்தது.
“அப்போ.. அப்போ அவர் தானா அன்னிக்கு என்னை கூப்பிட்டது. அய்யோ நான் அவரை பாக்காம போய்ட்டேனே. அடிப்பட்டு எவ்ளோ துடிச்சிருப்பார். நான் தான் அவரை துடிக்க விட்டுட்டேன்” தலையில் அடித்துக் கொண்டாள்.
“அழாத தாரிணி. இங்க அவனை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு தான் எங்களுக்கு தகவல் தந்தாங்க. அப்புறமா தான் அவனை சென்னைக்கு கூட்டிட்டு போனோம். தலையில் நல்ல அடி. நாலு தையல் போட்டுருந்தாங்க. கை எலும்பும் கால் எலும்பும் முறிஞ்சு போச்சு. கால்ல ப்ராக்சர்னால புதுசா எலும்பு தான் வச்சிருக்கு. அதான் நடக்க முடியல. ஆளே மாறிப்போயிட்டான். இன்னும் ப்ளாஸ்டிக் சர்ஜரி
பண்ணனும்னு தாத்தா சொல்லிட்டு இருக்கார்.”
“அவர் உயிருக்கு..”
“ம்ம். கஷ்டமான காலகட்டத்தை தாண்டிட்டான். இப்போ பரவால்ல. இன்னும் கொஞ்ச நாள்ல நடக்க ஆரம்பிச்சிருவான்.”
“கடவுளே அவருக்கு சீக்கிரம் சரியாகணும். கண்டிப்பா எழுந்து நடந்திடுவார்.”
“உன்ட்ட தகவல் சொல்லி கூட்டிட்டு போக தான் வந்தேன். ஆமா, உன் மாமா எப்படி இருக்கார்? அவரால் எழுந்து நடமாட முடிஞ்சதா?”
“அவரை உங்களுக்கு எப்படி தெரியும்?”
“என்னமா.. நாங்கதான் இலங்கை போய் அங்க விசாரிச்சோமே”
“எப்போ நான் அங்க இருந்த வரைக்கும் வரலையே.. அவர் தான் அவ்ளோ கோபமா அந்த வீடியோல பேசினாரே. அப்போ எப்படி அங்க போய் விசாரிச்சார்?”
“எல்லாத்தையும் நான் சொல்றேன்.” என்று அகரன் கோபித்து போனதில் இருந்து இலங்கை போய் உண்மை தெரிந்தது, அவன் அஸ்ஸாம் வந்தது வரை சொல்லி முடித்தான்.
தாரிணிக்கு பயங்கர அதிர்ச்சி. அவள் கனவில் கூட சந்திரனுக்கும், அகரனுக்கும் சம்பந்தம் இருக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை.
“அப்போ.. அவருக்கும் மாமாக்கும்… “
“ம்ம்.. உங்க மாமா பையன் தான் அகரன். அதனால்தானே அந்த ஃபோட்டோ பாத்து உன்னை தப்பா நினைச்சு அவர் மேல் இருக்க கோபத்தை உன் மேல் காமிச்சு இவ்வளோ பெரிய பிரச்சினை ஆச்சு..”
“ஓ.. அப்ப அவர் என்கிட்ட நேரா கேட்க கூட விருப்பப்படல. அவரா நான் தப்பு செஞ்சிருப்பேன், அவரை ஏமாத்த தான் நான் அவரோட பழகினேன்னு என்னை அவ்ளோ கேவலமா நினைச்சிட்டார் இல்ல.”
“அது அப்போ மா. எப்போ உண்மை தெரிஞ்சுதோ அவன் உன்னை தேடி ஓடிவந்தான் இல்ல”
“அப்படியா. உண்மையான காதல்னா என்னன்னு அவருக்கு தெரியுமா? ஒருத்தரை ஒருத்தர் நம்பணும். எந்த பிரச்சினை வந்தாலும் கூட இருக்கணும். இந்த கதை எதுவுமே தெரியாம அவர் வருவார்னு நான் எவ்ளோ நம்பினேன். அந்த வீடியோ வரவரைக்கும் அவரை தப்பா நினைக்காம, அவரை தேடி சென்னைக்கு
வரணும்னு இருந்தேன். அந்த நம்பிக்கை என் மேல் இல்லை இல்ல அவருக்கு”
“அவன் கொஞ்சம் அவசரக்காரன் மா. அதுவுமில்லாம உங்க மாமா மேல அவனுக்கு இருந்த கோபம் தான் உனக்கே தெரியும் இல்ல. அதான் அவன் அன்னிக்கு தப்பா நினைச்சு”
“போதும். எப்படி அவருக்கு நான் தங்கையா இருந்தும் அவர் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரோட பழகினேன்னு அவர் அவ்ளோ அசிங்கமா என்னை நினைச்சு விட்டுட்டு போயிருக்கார்.”
“அதான் உண்மை தெரிஞ்சுடுச்சு இல்ல. நீ அவன் அத்தை பொண்ணுன்னு”
“ஆனா ஒரு நாள்னாலும் அவர் என்னை கேவலமா நினைச்சுது நினைச்சது தானே. அவஙக அம்மாவும் என்னை நம்பல இல்ல. இரண்டு பேருக்குமே என்கிட்ட நேரா கேட்கனும்னு தோணவே இல்ல இல்ல. இப்போ வரைக்கும் எனக்கு அவர் சந்திரன் மாமா பையன்னு தெரியாது. ஆனா அவங்களுக்கு தெரிஞ்சும் அவங்க மாமாவை தேடி வரல. அவர் உடம்பு சரியில்லாம அவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருக்கார்னு தெரிஞ்சும் அவங்க அம்மாவால மாமாவை தேடிவர முடியல”
“தாரிணி.. அது அவங்க பிரச்சினை மா. நீ அதையும் உன் வாழ்க்கையும் போட்டு குழப்பிக்காத. அகரன் அன்னிக்கே எல்லாம் தெரிஞ்சு தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்க வந்தான். அதுக்குள்ள தான்.”
“ஓ. எப்படி.. எனக்காகவே வாழ்ந்த எங்க மாமாவை பத்தி யோசிக்காம என் வாழ்க்கையை பத்தி மட்டும் நான் யோசிக்கனுமா? அவர் என்ன தப்பு பண்ணார். அவர் ஏன் வீட்டை விட்டு வந்தார்? இதை தெரிஞ்சுக்கவும் அவங்க யாரும் விரும்பல.
அவர் இப்போ இப்படி இருக்காரே அது தெரிஞ்சும் அவரை பாக்கவும் அவங்களுக்கு தோணல இல்ல?”
“அது நீ அங்க வந்து உன் அத்தையை கேளும்மா? இப்போதான் அவங்க உனக்கு மாமியாரும் அத்தையும் ஆகிட்டாங்களே. உரிமையா சண்டை போடு. ஆனா அகரனுக்காக அங்க வா?”
“ஹ்ம்ம்.. இப்பவும் அவர் என்னை மட்டும் தானே கூட்டிட்டு வர சொல்லியிருப்பார். மாமா மேல இருக்க கோபம் அவருக்கு குறையவே இல்ல இல்ல…”
“நீ முதல்ல வாம்மா. அப்புறமா உங்க வீட்ல எல்லார்ட்டையும் பேசி சமாதானப்படுத்தி அவரை பத்தி சொல்லி அப்புறம் வந்து கூட்டிட்டு போகலாம்.”
“ஓ.. அநாதையா அவரை விட்டுட்டு வர சொல்றீங்க?”
“இல்லம்மா. ஹாஸ்பிட்டல்ல அவரை சேர்த்துட்டு போகலாம்.. எனக்கு அவர் மேல் தப்பு இருக்காதுன்னு தான் ஆரம்பத்துல இருந்து தோணுது. ஆனா அகரனும் அவங்க அம்மாவும் அவர் மேல் கோபத்தில இல்ல இருக்காங்க? அதான்”
“உண்மைன்னு ஒன்னு இருக்கு.. நீங்க யாருன்னே தெரியாத எங்க மாமாவை நம்பறீங்க. ஆனா அவங்க நம்ப தயாரா இல்ல. அவர் என்னையவே அவ்ளோ நல்லா பாத்துக்கிட்டார்னா அவங்களை அப்படி விட்டுட்டு வர ஆளில்ல. அதை நான் நம்பறேன். அதுவுமில்லாம அவரை தனியா விட்டுட்டு நான் வர முடியாது. என்னை பத்தி தெரியாம, என் காதலை மதிக்காம, என்னை அவர் மனைவியா நடத்திட்டும் என் மேல் சந்தேகப்பட்டு என்னை அம்போன்னு விட்டுட்டு போனதுக்கும் அவருக்கு மன்னிப்பே கிடையாது”
“தாரிணி. நீயும் அவனை மாதிரியே இருந்தா உங்க வாழ்க்கை என்ன ஆகறதும்மா? நான் உனக்கு உத்தரவாதம் தரேன். உங்க மாமாவை பத்தி நாம் போய் பேசி நல்ல முடிவை எடுப்போம்”
“என்னால் முடியாது. என் சுய கௌரவம் எனக்கு முக்கியம். அவர் வான்னா வரதுக்கும் போன்னா போறதுக்கும் நான் என்ன அவர் சம்பளம் கொடுக்கற வேலைக்காரியா?”
“எல்லாத்தையும் விட்டுட்டு இப்போ அகரன் இருக்கற நிலைமையை பாரும்மா”
“ஓ.. இலங்கைல அப்போதான் நான் நடக்க ஆரம்பிச்சிருந்தேன். எவ்ளோ வலில இருந்தேன். தெரிஞ்சே என்னை விட்டுட்டு போனார். மாமா அப்படி இருக்கார்னு தெரிஞ்சும் அவங்க அம்மா அவரை வந்து பாக்கல. ஆனா நான் மட்டும் அவரை தேடி ஓடி வரணுமா”
வைபவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
“சரிம்மா. அவன்ட்ட ஒரு முறை பேசு. அப்புறம் முடிவெடு.”
“பாத்தீங்களா.. ஈமோஷனலா முடிவெடுக்க வைக்க பாக்குறீங்க. என்னால் அவரோட பேச முடியாது..”
“அப்போ அவன் மேல் உனக்கு பாசம் இருக்கு இல்ல. அதனால் தானே பயப்படற. இன்னும் அவன் சும்மா கட்டின தாலியை வேற போட்டு இருக்க? அப்புறம் எதுக்கு இந்த ஈகோ. உனக்கு அங்க உங்க மாமாவையும் கூட்டிட்டு போனும் இல்ல. நான் கூட்டிட்டு போறேன். அங்க போய் பேசிக்கலாம் வா” என்று கூப்பிட்டான்.
“அண்ணா உங்களுக்கு புரியவே இல்லையா. அவங்க தப்பே செய்யாத எங்களை தண்டிச்சிட்டு இருக்காங்க. நான் அவரோட அத்தை பொண்ணுன்னு தெரிஞ்சு, நான் அங்கருந்து வந்தப்புறம் தானே அவருக்கு என் மேல் தப்பில்லன்னு புரிஞ்சுது. ஒரு வேளை நான் அங்கேயே இருந்து இருந்தா அவர் செலவு பண்ண காசுல வீட்டை கட்டி நாங்க ஏமாத்தி வாழறோம்னு தானே அவர் எங்களை நினைச்சு இருப்பார். எனக்கு நினைக்க நினைக்க கேவலமா இருக்கு அண்ணா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க நீங்க கிளம்புங்க”
“என்ன தான்மா சொல்ல வர. அது என்னன்னு தெரிஞ்சா அவனை
நான் அதை சரி செய்ய சொல்றேன்”
“அவர் அம்மா எங்க மாமாவை பாக்க வரணும். அவர்ட்ட மன்னிப்பு கேட்கணும். என்னை தப்பா நினைச்சதுக்கும் அவங்க ஃபீல் பண்ணனும். அவரும் அதை உணரனும்”
வைபவிற்கு இது ஆகாத காரியம் என்று தோன்றியது.
“பாண்டியா” என்ற குரல் முடிவதற்குள் பாண்டியன் மருதன் முன் நின்றிருந்தார்.
“இந்த ந்யூஸ்ல காமிச்சது யாரு.. தாரிணி மாதிரி தானே இருக்கு.”
“நா பாக்கலையேப்பா. அவளை இன்னும் ஞாபகம் வச்சு இருக்கீங்களாப்பா?”
“என்னப்பா. என் பேரன் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை நான் எப்படி மறந்திடுவேன்னு நினைக்கற”
“தெய்வா தான் அந்த பொண்ணை எல்லாரும் மறந்திடனும்னு சொல்லிருக்கா இல்ல. இப்ப திரும்ப எதுக்கு அந்த பேச்சு.”
“நீ ந்யூஸ்ல காமிச்சது அந்த பொண்ணத்தானான்னு பார்த்து சொல்லு.”
“அப்பா..” தெய்வா அவரின் முன் வந்து நின்றார்.
“வாம்மா. உன் மருமகளை தான் டிவில காமிச்சாங்கன்னு நினைக்கிறேன். நீயே பாத்து அவ தானான்னு சொல்லு.”
“அப்பா.. அகரனை இந்த நிலைமையில் பாத்தும் உங்களுக்கு இதே பேச்சு தானா. படிச்சு படிச்சு சொன்னேன். அவன்ட்ட அந்த பொண்ண பத்தி எதுவும் சொல்லாதீங்க, அவளை பாக்க அனுப்பாதீங்கன்னு. ஆனா அவனை உசுப்பேத்தி அவளை தேடிப் போக வச்சீங்க. இப்ப என் பிள்ளை இப்படி கிடக்கிறான்.”
“அவன் மருந்தே அவ தான் மா. தாரிணிதான்னு தெரிஞ்சா நானே போய் அவளை கூட்டிட்டு வருவேன் என் பேரனுக்காக. அவளை பாத்ததும் எழுந்து நின்னுருவான் பாரு.”
“அவ என்ன டாக்டரா? அவ வந்தா இவனுக்கு சரியாகறதுக்கு. நல்லா இருந்த பிள்ளையை இப்படி நடக்க விடாம படுத்த படுக்கையா இருக்க வச்சிட்டீங்க. இனிமே என் பிள்ளை விஷயத்துல நீங்க எதுவும் முடிவு செய்யாதீங்கபா.”
மருதனிடம் இப்போது தான் வாழ்க்கையில் முதல் முறையாக தெய்வா இப்படி முகத்தில் அடித்தால் போல பேசுகிறார்.
அவருக்கு வலித்தது. ஆனாலும் பேரனின் வாழ்க்கைக்காக பொறுத்துக் கொண்டார்.
தெய்வாவும், பாண்டியனும் அவர் அறையில் இருந்து நகர்ந்ததும், மெதுவாக அகரனின் அறைக்குச் சென்றார்.
“அகரா..” அவர் அழைத்ததும் கண் திறந்து அவரை பார்த்தான் அகரன்.
காயங்களின் வடு அவனது முகத்தில் ஆறி இருந்தது. ஆனால் தழும்பு அப்படியே இருந்தது.
தலையில் அடிப்பட்ட இடம் தையல் போடப்பட்டு ஆறியிருந்தாலும், அந்த இடங்களில் முடி இல்லாமல் இருந்தது.
இடது கையில் மணிக்கட்டு
உடைந்து சரியாவதற்காக கட்டுப் போடப்பட்டு இருந்தது. காலில் தான் அதிகமான காயம் அவனுக்கு.
முட்டி எலும்பு முறிந்து வேறு புதிய எலும்பு மாற்ற அறுவை சிகிச்சை நடந்து இருந்ததால் எழுந்து நடக்க முடியவில்லை.
எவ்வளவுக்கெவ்வளவு கம்பீரமாக இருந்தானோ அந்த அளவு படுத்த படுக்கையில் அவனை பார்க்கும் போது அனைவருக்கும் கஷ்டமாக தான் இருந்தது.
தெய்வா தான் உடைந்து போய் விட்டார். இந்த நிலைமைக்கு தாரிணியை தேடி அவன் போனது தான் காரணம் என்பதால் இன்னும் கூடுதலாக அவள் மேல் கோபம் இருந்தது.
மருதன் அகரன் குணமானதும் எவ்வளவு செலவழித்தாலும் மீண்டும் பழையபடி அவனை கொண்டு வர வேண்டும் என்று விரும்பினார்.
“உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லப் போறேன். இந்தா, இந்த நியூஸ் பாரு. நிக்கறது தாரிணி தானே. அப்பவே அவ அங்க இருக்கறது கன்பர்ம் பண்ணிட்டு தான் அந்த ஆபிசர்ட்ட கேட்க சொன்னேன். அவர் அவ அஸ்ஸாம்லயே இல்லன்னு சொன்னார் இல்ல. இப்ப பாரு அவங்க பங்ஷன்லயே அவளை காமிக்கறாங்க.
இதை வச்சே அந்த ஆள்ட்ட கேட்க போறேன். நீ சரியாகனும் தான் இத்தனை நாள் வெயிட் பண்ணேன். இனி அவளை கூட்டிட்டு வரது என் பொறுப்பு. நீ கவலைப்படாத.” என்றார்.
“தாத்தா. பவதா தான் இது. இப்பவே என்னை அங்க கூட்டிட்டு போங்க தாத்தா. அவளை நான் பாக்கனும்.”
“இப்போதான் உங்க அம்மா உன் விஷயத்துல என்னை தலையிட வேண்டாம்னு சொல்லிட்டு போறா. போன முறையே நீயே தான் அவளை தேடி போகனும்னு தான் செல்வாவை கொஞ்சம் டிலே பண்ண சொன்னேன். ஆனா நீ போய் ஆக்ஸிடெண்ட் ஆனதும் என்னால் தாங்கிக்கவே முடியல. இந்த முறை நானே அவளை கூட்டிட்டு வரேன். நீ ரெஸ்ட் எடு.”
“தாத்தா ப்ளீஸ்.அவளை தவிக்க விட்டதுக்கு தான் எனக்கு இந்த தண்டனை. இந்த இரண்டு மாசமும் நான் அவளை ரொம்ப மிஸ் பண்றேன். தெரியாத ஊரில் அவ எப்டி மேனேஜ் பண்றான்னு தெரியல” என்றான் அகரன்.
“சொன்னா கேட்கணும். இன்னும் டாக்டர் உன்னை நடக்க சொல்லல. இப்ப எப்படி அங்க போவ. நான் பார்த்துக்கறேன்”
அகரன் அவர் காண்பித்த பவதாரிணியின் படத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். அவனின் தலையை தடவிக் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார் மருதன்.
தன் அலைபேசியில் வைபவை அழைத்தான் அகரன்.
“டேய். எப்படிடா இருக்க. இந்த வீக் எண்ட் அங்க வரலாம்னு இருந்தேன். வந்தனா அவ அம்மா வீட்டுக்கு வர சொன்னான்னு தான் அங்க பாக்க போயிருந்தேன்.”
“பரவால்லடா. குழந்தை எப்படி இருக்கா? நீ டுடே ந்யூஸ் சேனல்ல ஒரு டிரைபல் ப்ங்க்ஷன் அஸ்ஸாம்ல நடந்ததை காமிச்சு இருக்காங்க அதை பாரு. தாரிணி அங்க தாண்டா இருக்கா. நீங்க யாரும் அன்னிக்கு நான் சொன்னதை நம்பல இல்ல. எனக்கு தலையில அடிப்பட்டு உளறறேன்னு சொன்னீங்க. இப்ப பாரு அது அவளே தான்.”
“இருடா பார்க்கறேன்” என்று வைபவ் நியூஸ் சேனலில் அந்த செய்தியை பார்த்தான். அது தாரிணி தான்.
“ஆமா டா. அவ தான். அங்க என்ன பண்றாடா? அப்போ அந்த ஆபிசர் அவ அங்க இல்லைன்னு சொன்னது பொய்யா?”
“ஆமா டா. எனக்கு ஒரு உதவி செய்டா. நீ கொஞ்சம் நேரா போய் அவளை பாத்து எல்லா உண்மையும் சொல்லுடா. அவ நான் இப்படி இருக்கறது தெரிஞ்சா கண்டிப்பா நேர்ல வருவா டா”
“நானா டா. என்னை அவளுக்கு தெரியாதே. எப்படி என் கூட நம்பி வருவா.?”
“லூசு மாதிரி பேசாத. அங்க போய் நடந்த விஷயங்களை சொல்லி அவள்ட்ட கால் பண்ணி கொடு. நான் பேசறேன்.”
“சரிடா. நாளைக்கு மார்னிங்கே நான் கிளம்பறேன்.”
“ப்ளீஸ் டா. என் வாழ்க்கை இப்போ உன் கையில் தான் இருக்கு. எனக்காக செய். தாத்தா அவரே போறேன்னு சொல்றார். ஆனா கண்டிப்பா அம்மாவும், மாமாவும் விட மாட்டாங்க. அதான் உன்னை போக சொல்றேன்.”
“டேய்.. உன் வாழ்க்கையை நிச்சயம் நான் சரியாக்குவேன்டா. நீ கவலைப்படாத.” என்று வைபவ் சொல்லி விட்டு அடுத்த நாளே அஸ்ஸாமிற்கு டிக்கெட் புக் செய்தான்.
மருதன் விமான பயணத்திற்கு ஏற்பாடு செய்ய, அகரன் சொல்லியது போல் தெய்வாவும், பாண்டியனும் அவரை தடுத்து விட்டார்கள்.
********
ரூப் நகர் வந்து சேர்ந்தான் வைபவ். ரதீஷின் அலுவலகத்தில் அவர் இல்லை.. அந்த அலுவலகத்தில் தாரிணியின் புகைப்படத்தை காண்பித்து கேட்டான். அங்குள்ளவர்கள் தாரிணி இருக்கும் ஊரை சொன்னார்கள்.
அங்கிருந்து நேராக தாரிணியை தேடி வந்தான்.
தாரிணிக்கு அடிப்பட்டு இருந்ததால் அகில் அவளை நிறுவனத்திற்கு வரவிடவில்லை.
சந்திரன் உள்ளே படுத்து இருந்தார். கதவு தட்டப்டும் சத்தம் கேட்டு தாரிணி கதவு திறந்தாள். வைபவை எங்கோ பார்த்தது போல இருந்தது. ஆனால் அவளால் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.
“தாரிணி. ஐ’ம் வைபவ். சென்னையில் இருந்து வரேன்” அவன் தமிழில் பேசியதும், சென்னை என்றதும் அவசரம் அவசரமாக கதவை சாத்தி விட்டு வெளியில் வந்தாள்.
“நீங்க எதுக்கு வந்திருக்கீங்க. யார் உங்களுக்கு இந்த அட்ரஸ் தந்தது.?”
“நான் அகரன் ப்ரெண்ட் மா. உங்ககூட பேசணும்.”
“நோ. அவர் சம்பந்தப்பட்டவங்க யாரும் என்கூட பேச வேண்டாம். உங்களுக்கு யார் சொன்னது நான் இங்கிருக்கறதை.”
“உன்னோட டிரைபல் எக்ஸ்போ ஃபோட்டோஸ் தான் நீ இங்க இருக்கிறதை சொன்னது. ப்ளீஸ் கொஞ்சம் நேரம் நான் சொல்றதை கேளு. உனக்கே புரியும் எல்லாம்”
அவன் சொன்னதும் தலையில் அடித்துக் கொண்டாள்.
“ச்ச் கவனமா நான் இருந்துருக்கனும்”
“கவனமா இல்லாம இருந்தது தான் நல்லது தாரிணி. இல்லன்னா நீ இங்க இருக்கிறதை எங்களால் எப்படி தெரிஞ்சுக்க முடியும்.”
“ஓ.. அப்படி தெரிஞ்சும் அவர் மனசு இறங்கவே இல்ல. இப்போ வரைக்கும் அவர் எதுக்காக என்னை தண்டிச்சுட்டு இருக்கார்னு எனக்கு தெரியவே இல்லை. இப்போ உங்களை அனுப்பி என்ன பண்ண சொல்லியிருக்கார்? கல்யாணம் கூட ஆகலையே. டைவர்ஸ் நோட்டீஸ்ல கையெழுத்து கேட்க?” அனிச்சையாக அவளின் கைகள் கழுத்தை துணியால் இழுத்து மூடின.
ஆனாலும் அவளின் மஞ்சள் நிற கயிறு லேசாக தெரிந்தது. காயத்தினால் அந்த பக்கம் அவளால் துணியை கொண்டு மூட முடியவில்லை.
“உள்ள போய் பேசலாமா.. “
“எதுக்கு. எதுவா இருந்தாலும் எனக்கு கேட்க விருப்பம் இல்ல. நீங்க கிளம்புங்க”
“அகரன் படுத்த படுக்கையா இருக்கான். அவனுக்கு ஆக்ஸிடென்ட். இப்போவாச்சும் நான் சொல்றதை கேட்க விரும்பறியா”
அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.
“எது.. ஆக்ஸிடென்ட்டா.. எப்போ. இப்போ எப்படி இருக்கார்?” என்று பதறினாள். வைபவிற்கு அவள் மனம் புரிந்தது. அதற்காகதானே இதை சொன்னான்.
“இங்கேயே தான் பேசுணுமா..” என்றான்.
“வீட்ல மாமா இருக்கார். இங்க வேணாம். வாங்க ஆற்றங்கரைக்கு போகலாம்.” என்று அவனை அழைத்துக் கொண்டு ஆற்றிற்கு சென்றாள்.
“சொல்லுங்க… அவருக்கு இப்போ எப்படி இருக்கு. எப்போ ஆக்ஸிடென்ட் ஆச்சு.”
“நீ தான் அதுக்கு காரணம்.”
“நானா.. குழப்பாம ப்ளீஸ் தெளிவா சொல்லுங்க.” பதறி தவித்தாள்.
“உன்னை தேடி இங்க வந்து தான்மா அவனுக்கு ஆக்ஸிடென்ட் ஆனது. மூச்சு பேச்சு இல்லாம தான் அவனை நாங்க பாத்தோம். அவன் பிழைப்பான்னு நம்பிக்கையே இல்ல எங்களுக்கு”
“இங்க என்னை தேடி வந்தாரா. எப்போ?”
“இரண்டு மாசம் இருக்கும். உன்னை தேடி இங்க வந்தான். நீ கார்ல ஏறப்போறதை பாத்து உன்னை கூப்பிட்டுட்டே ரோட்டை பாக்காம க்ராஸ் பண்ணியிருக்கான். அப்போதான் லாரி அடிச்சிருச்சு.” .
தாரிணிக்கு தலை சுற்றியது. அவளுக்கு அன்று நடந்தது ஞாபகம் வந்தது.
“அப்போ.. அப்போ அவர் தானா அன்னிக்கு என்னை கூப்பிட்டது. அய்யோ நான் அவரை பாக்காம போய்ட்டேனே. அடிப்பட்டு எவ்ளோ துடிச்சிருப்பார். நான் தான் அவரை துடிக்க விட்டுட்டேன்” தலையில் அடித்துக் கொண்டாள்.
“அழாத தாரிணி. இங்க அவனை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு தான் எங்களுக்கு தகவல் தந்தாங்க. அப்புறமா தான் அவனை சென்னைக்கு கூட்டிட்டு போனோம். தலையில் நல்ல அடி. நாலு தையல் போட்டுருந்தாங்க. கை எலும்பும் கால் எலும்பும் முறிஞ்சு போச்சு. கால்ல ப்ராக்சர்னால புதுசா எலும்பு தான் வச்சிருக்கு. அதான் நடக்க முடியல. ஆளே மாறிப்போயிட்டான். இன்னும் ப்ளாஸ்டிக் சர்ஜரி
பண்ணனும்னு தாத்தா சொல்லிட்டு இருக்கார்.”
“அவர் உயிருக்கு..”
“ம்ம். கஷ்டமான காலகட்டத்தை தாண்டிட்டான். இப்போ பரவால்ல. இன்னும் கொஞ்ச நாள்ல நடக்க ஆரம்பிச்சிருவான்.”
“கடவுளே அவருக்கு சீக்கிரம் சரியாகணும். கண்டிப்பா எழுந்து நடந்திடுவார்.”
“உன்ட்ட தகவல் சொல்லி கூட்டிட்டு போக தான் வந்தேன். ஆமா, உன் மாமா எப்படி இருக்கார்? அவரால் எழுந்து நடமாட முடிஞ்சதா?”
“அவரை உங்களுக்கு எப்படி தெரியும்?”
“என்னமா.. நாங்கதான் இலங்கை போய் அங்க விசாரிச்சோமே”
“எப்போ நான் அங்க இருந்த வரைக்கும் வரலையே.. அவர் தான் அவ்ளோ கோபமா அந்த வீடியோல பேசினாரே. அப்போ எப்படி அங்க போய் விசாரிச்சார்?”
“எல்லாத்தையும் நான் சொல்றேன்.” என்று அகரன் கோபித்து போனதில் இருந்து இலங்கை போய் உண்மை தெரிந்தது, அவன் அஸ்ஸாம் வந்தது வரை சொல்லி முடித்தான்.
தாரிணிக்கு பயங்கர அதிர்ச்சி. அவள் கனவில் கூட சந்திரனுக்கும், அகரனுக்கும் சம்பந்தம் இருக்கும் என நினைத்துப் பார்க்கவில்லை.
“அப்போ.. அவருக்கும் மாமாக்கும்… “
“ம்ம்.. உங்க மாமா பையன் தான் அகரன். அதனால்தானே அந்த ஃபோட்டோ பாத்து உன்னை தப்பா நினைச்சு அவர் மேல் இருக்க கோபத்தை உன் மேல் காமிச்சு இவ்வளோ பெரிய பிரச்சினை ஆச்சு..”
“ஓ.. அப்ப அவர் என்கிட்ட நேரா கேட்க கூட விருப்பப்படல. அவரா நான் தப்பு செஞ்சிருப்பேன், அவரை ஏமாத்த தான் நான் அவரோட பழகினேன்னு என்னை அவ்ளோ கேவலமா நினைச்சிட்டார் இல்ல.”
“அது அப்போ மா. எப்போ உண்மை தெரிஞ்சுதோ அவன் உன்னை தேடி ஓடிவந்தான் இல்ல”
“அப்படியா. உண்மையான காதல்னா என்னன்னு அவருக்கு தெரியுமா? ஒருத்தரை ஒருத்தர் நம்பணும். எந்த பிரச்சினை வந்தாலும் கூட இருக்கணும். இந்த கதை எதுவுமே தெரியாம அவர் வருவார்னு நான் எவ்ளோ நம்பினேன். அந்த வீடியோ வரவரைக்கும் அவரை தப்பா நினைக்காம, அவரை தேடி சென்னைக்கு
வரணும்னு இருந்தேன். அந்த நம்பிக்கை என் மேல் இல்லை இல்ல அவருக்கு”
“அவன் கொஞ்சம் அவசரக்காரன் மா. அதுவுமில்லாம உங்க மாமா மேல அவனுக்கு இருந்த கோபம் தான் உனக்கே தெரியும் இல்ல. அதான் அவன் அன்னிக்கு தப்பா நினைச்சு”
“போதும். எப்படி அவருக்கு நான் தங்கையா இருந்தும் அவர் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரோட பழகினேன்னு அவர் அவ்ளோ அசிங்கமா என்னை நினைச்சு விட்டுட்டு போயிருக்கார்.”
“அதான் உண்மை தெரிஞ்சுடுச்சு இல்ல. நீ அவன் அத்தை பொண்ணுன்னு”
“ஆனா ஒரு நாள்னாலும் அவர் என்னை கேவலமா நினைச்சுது நினைச்சது தானே. அவஙக அம்மாவும் என்னை நம்பல இல்ல. இரண்டு பேருக்குமே என்கிட்ட நேரா கேட்கனும்னு தோணவே இல்ல இல்ல. இப்போ வரைக்கும் எனக்கு அவர் சந்திரன் மாமா பையன்னு தெரியாது. ஆனா அவங்களுக்கு தெரிஞ்சும் அவங்க மாமாவை தேடி வரல. அவர் உடம்பு சரியில்லாம அவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருக்கார்னு தெரிஞ்சும் அவங்க அம்மாவால மாமாவை தேடிவர முடியல”
“தாரிணி.. அது அவங்க பிரச்சினை மா. நீ அதையும் உன் வாழ்க்கையும் போட்டு குழப்பிக்காத. அகரன் அன்னிக்கே எல்லாம் தெரிஞ்சு தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்க வந்தான். அதுக்குள்ள தான்.”
“ஓ. எப்படி.. எனக்காகவே வாழ்ந்த எங்க மாமாவை பத்தி யோசிக்காம என் வாழ்க்கையை பத்தி மட்டும் நான் யோசிக்கனுமா? அவர் என்ன தப்பு பண்ணார். அவர் ஏன் வீட்டை விட்டு வந்தார்? இதை தெரிஞ்சுக்கவும் அவங்க யாரும் விரும்பல.
அவர் இப்போ இப்படி இருக்காரே அது தெரிஞ்சும் அவரை பாக்கவும் அவங்களுக்கு தோணல இல்ல?”
“அது நீ அங்க வந்து உன் அத்தையை கேளும்மா? இப்போதான் அவங்க உனக்கு மாமியாரும் அத்தையும் ஆகிட்டாங்களே. உரிமையா சண்டை போடு. ஆனா அகரனுக்காக அங்க வா?”
“ஹ்ம்ம்.. இப்பவும் அவர் என்னை மட்டும் தானே கூட்டிட்டு வர சொல்லியிருப்பார். மாமா மேல இருக்க கோபம் அவருக்கு குறையவே இல்ல இல்ல…”
“நீ முதல்ல வாம்மா. அப்புறமா உங்க வீட்ல எல்லார்ட்டையும் பேசி சமாதானப்படுத்தி அவரை பத்தி சொல்லி அப்புறம் வந்து கூட்டிட்டு போகலாம்.”
“ஓ.. அநாதையா அவரை விட்டுட்டு வர சொல்றீங்க?”
“இல்லம்மா. ஹாஸ்பிட்டல்ல அவரை சேர்த்துட்டு போகலாம்.. எனக்கு அவர் மேல் தப்பு இருக்காதுன்னு தான் ஆரம்பத்துல இருந்து தோணுது. ஆனா அகரனும் அவங்க அம்மாவும் அவர் மேல் கோபத்தில இல்ல இருக்காங்க? அதான்”
“உண்மைன்னு ஒன்னு இருக்கு.. நீங்க யாருன்னே தெரியாத எங்க மாமாவை நம்பறீங்க. ஆனா அவங்க நம்ப தயாரா இல்ல. அவர் என்னையவே அவ்ளோ நல்லா பாத்துக்கிட்டார்னா அவங்களை அப்படி விட்டுட்டு வர ஆளில்ல. அதை நான் நம்பறேன். அதுவுமில்லாம அவரை தனியா விட்டுட்டு நான் வர முடியாது. என்னை பத்தி தெரியாம, என் காதலை மதிக்காம, என்னை அவர் மனைவியா நடத்திட்டும் என் மேல் சந்தேகப்பட்டு என்னை அம்போன்னு விட்டுட்டு போனதுக்கும் அவருக்கு மன்னிப்பே கிடையாது”
“தாரிணி. நீயும் அவனை மாதிரியே இருந்தா உங்க வாழ்க்கை என்ன ஆகறதும்மா? நான் உனக்கு உத்தரவாதம் தரேன். உங்க மாமாவை பத்தி நாம் போய் பேசி நல்ல முடிவை எடுப்போம்”
“என்னால் முடியாது. என் சுய கௌரவம் எனக்கு முக்கியம். அவர் வான்னா வரதுக்கும் போன்னா போறதுக்கும் நான் என்ன அவர் சம்பளம் கொடுக்கற வேலைக்காரியா?”
“எல்லாத்தையும் விட்டுட்டு இப்போ அகரன் இருக்கற நிலைமையை பாரும்மா”
“ஓ.. இலங்கைல அப்போதான் நான் நடக்க ஆரம்பிச்சிருந்தேன். எவ்ளோ வலில இருந்தேன். தெரிஞ்சே என்னை விட்டுட்டு போனார். மாமா அப்படி இருக்கார்னு தெரிஞ்சும் அவங்க அம்மா அவரை வந்து பாக்கல. ஆனா நான் மட்டும் அவரை தேடி ஓடி வரணுமா”
வைபவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
“சரிம்மா. அவன்ட்ட ஒரு முறை பேசு. அப்புறம் முடிவெடு.”
“பாத்தீங்களா.. ஈமோஷனலா முடிவெடுக்க வைக்க பாக்குறீங்க. என்னால் அவரோட பேச முடியாது..”
“அப்போ அவன் மேல் உனக்கு பாசம் இருக்கு இல்ல. அதனால் தானே பயப்படற. இன்னும் அவன் சும்மா கட்டின தாலியை வேற போட்டு இருக்க? அப்புறம் எதுக்கு இந்த ஈகோ. உனக்கு அங்க உங்க மாமாவையும் கூட்டிட்டு போனும் இல்ல. நான் கூட்டிட்டு போறேன். அங்க போய் பேசிக்கலாம் வா” என்று கூப்பிட்டான்.
“அண்ணா உங்களுக்கு புரியவே இல்லையா. அவங்க தப்பே செய்யாத எங்களை தண்டிச்சிட்டு இருக்காங்க. நான் அவரோட அத்தை பொண்ணுன்னு தெரிஞ்சு, நான் அங்கருந்து வந்தப்புறம் தானே அவருக்கு என் மேல் தப்பில்லன்னு புரிஞ்சுது. ஒரு வேளை நான் அங்கேயே இருந்து இருந்தா அவர் செலவு பண்ண காசுல வீட்டை கட்டி நாங்க ஏமாத்தி வாழறோம்னு தானே அவர் எங்களை நினைச்சு இருப்பார். எனக்கு நினைக்க நினைக்க கேவலமா இருக்கு அண்ணா. ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க நீங்க கிளம்புங்க”
“என்ன தான்மா சொல்ல வர. அது என்னன்னு தெரிஞ்சா அவனை
நான் அதை சரி செய்ய சொல்றேன்”
“அவர் அம்மா எங்க மாமாவை பாக்க வரணும். அவர்ட்ட மன்னிப்பு கேட்கணும். என்னை தப்பா நினைச்சதுக்கும் அவங்க ஃபீல் பண்ணனும். அவரும் அதை உணரனும்”
வைபவிற்கு இது ஆகாத காரியம் என்று தோன்றியது.