அத்தியாயம் 20
இரவு முழுதும் தந்த அசதியில் காலையில் நேரம் கழித்தே தான் தாரிணி எழுந்தாள்.
அவள் மேல் கைகளை போட்டுக் கொண்டு தூங்கியிருந்தவனின் கன்னத்தில் அழுத்தமாக தன் இதழ்களை பதித்து விட்டு, மெல்ல எழுந்தாள். அவளின் அசைவில், இதழ் முத்தத்தில் கூட அவன் எழுந்திரிக்கவில்லை.
தன் உடைகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டு, வந்தவளின் கண்களில் பட்டது அவள் மாமாவின் பை.
‘இன்று ஒரு நாள் தான் இருக்கிறது, அகரனிடம் அவரைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே’ என்று தாரிணி யோசித்தாள்.
அவரின் பையை திறந்து பார்த்தாள். சில உடைகளுடன் அந்த புகைப்படம் இருந்தது.
மெதுவாக எடுத்து தன் புடவையால் அதை துடைத்து பார்த்தாள். அவளுக்கு மிகவும் விருப்பமான படம். எப்பொழுதும் ஒரு பொக்கிஷம் போல் அதை பாதுகாத்து இருக்கிறாள்.
“அம்மா… நீங்க இப்போ இல்லையேன்னு இருக்கு. என் கஷ்டங்களை, வருத்தங்களை தான் உங்க கிட்ட சொல்லியிருக்கேன். ஆனா என் வாழ்க்கைலயே நான் சந்தோஷமா இருக்கிறது இப்போதான். அன்பான புருஷன்.. என் மேல் உயிரையே வச்சு இருக்கார். உங்களை மாதிரியே அவரோட அம்மாவும். என் மேலயும் அவங்களுக்கு அவ்ளோ பாசம்.. இது எல்லாம் நீங்க இருந்து பாத்து சந்தோஷப்பட்டிருக்கனும்.”
அகரன் எழுந்ததும் அவனை முதலில் கூட்டி வந்து காண்பிக்க வேண்டும் என்பதால் அந்த படத்தை கண் பார்வையில் வைக்க இடம் தேடினாள். அலமாரி எதுவும் இல்லாததால் அவர்களின் உடைகள் இருக்கும் டிராலியின் மேல் வைத்து விட்டு, குளித்து
மீண்டும் உடை மாற்ற வந்தவளை பின் இருந்து அணைத்தான் அகரன்.
அவள் கையிலிருந்த சேலை நழுவி கீழே விழுந்தது. அதை பிடித்து அப்படியே அவர்கள் உடைகள் இருந்த பெட்டியின் மீது போட்டான்.
அகரனது கைகள் அவளது இடுப்பில் மாலையானது.
“நீங்க தானா..நான் பயந்துட்டேன்”
“என்னைத் தவிர யார் உன்னை இப்படி புடவை கட்டறப்ப கட்டிப்பிடிப்பாங்க”
“ஆமா. ஆமா. வேற யார் இந்த மாதிரி எப்போ பாத்தாலும் இதே வேலையா இருப்பாங்க”
“புதுசா கல்யாணம் ஆன எல்லாரும் இதே வேலையா தான் இருப்பாங்க..”
“நமக்கு கல்யாணம் ஆகிடுச்சா” என்று அவனின் இரு கைகளையும் விலக்கி திரும்பி, அவளது பெரிய இரு கண்களை சிமிட்டி, அவன் கண்ணை பார்த்து கேட்டாள்.
“அடிப்பாவி.. எல்லாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இதை கேட்காம இப்ப வந்து கேட்கிற”
“ம்ம்.. நேத்து எங்க என்னை பேச விட்டீங்க.. நான் கேட்க?”
“அப்படியே ரீவைண்ட் பண்ணி பாரு. யார் நேத்து மேல சாய்ஞ்சு அத்தனை முத்தங்களா கொடுத்தது”
“போங்க..” என்று சிணுங்கியவளை, “வாங்கன்னு சொல்லனும்” என்று அவளை அவனது உடலோடு அணைத்தான்.
“நமக்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சே.. அதனால் நடந்தது எல்லாம் தப்பில்ல..”என்று எங்கோ பார்த்தபடி சொல்லியவளின், முகம் திருப்பி, தாடையை நிமிர்த்தி, “இதையே தான் நான் இத்தனை நாளும் சொன்னேன். அப்பல்லாம் இல்லன்னு சொல்லிட்டு இப்ப நீயே இப்படி சொல்றினா..” என்று நிறுத்தி அவளின் உதடுகளை பார்த்தான்.
“சொல்றன்னா… “
“நேத்து நான் உன்கிட்ட சரியா நடந்திருக்கேன்னு அர்த்தம்”
“சரியாவா.. தப்பு தப்பா” என்று திருத்தினாள்.
“இது தப்புன்னா. உலகமே தப்பா இருக்குன்னு அர்த்தம்..”
“அப்படியா”
“ஆமா.. நான் சரியா நடந்ததால தான் நீ இப்படி இப்போ என் முன்னாடி நிக்கற” என்று மேலிருந்து அவளை கால் வரை அவன் பார்த்ததை தாரிணி பார்த்து ஒன்றும் புரியாமல் தன்னையே முழுதுமாக பார்த்தாள்.
அவளுக்கு வெட்கம் வந்ததை அவளது கன்னங்கள் சிவந்து காட்டிக் கொடுத்தது. அவசரமாக அவனையே மீண்டும் கட்டிக் கொண்டாள்.
அவளை தூக்கி அப்படியே ஒரு சுற்று சுற்றி இறக்கி அணைத்து,கட்டிலில் படுக்க வைத்தவன், அவளது உதடுகள் தொடங்கி மீண்டும் உடல் முழுதும் முத்தத்தால் சிவக்க வைத்தான்.
இரவில் நடந்த அவர்களின் சங்கமம் மறுபடியும் அரங்கேறியது.
அகரனை அணைத்து படுத்து இருந்தவள், “உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்.”
“சொல்லு பவதா.. “ என்று அவளை அணைத்து கன்னங்களில் இதழ் பதித்து அவள் கண்களை பார்த்தான்.
“நாம நாளைக்கு கிளம்பனும் இல்ல. அதனால நாம இங்க ஒரு இடத்துக்கு போகனும். உங்களுக்கு ஒருத்தங்களை காமிக்கனும்” என்று சொன்னவளை புரியாமல் பார்த்தான்.
“யாரது அவ்ளோ முக்கியமானவங்க? உன் ஃப்ரெண்டா. எங்க இருக்காங்க.. அவங்க?”
“ப்ரெண்டா..ம்ஹூம். இல்ல.. அதை விட முக்கியமானவங்க. நீங்க நேர்ல பாக்கத்தானே போறீங்க.”
“அப்படியா.. நான் ஒன்னு கேட்கறேன்.. நீ சொல்லு.. உன் லைஃப்ல இனி நான் எந்த இடத்தில் இருப்பேன்”
திரும்பி அவனது மார்பில் கைகளை ஊன்றி அவன் முகத்தை பார்த்து, “நீங்க வேற நான் வேறயா என்ன.. என் லைஃப்போட மொத்தமும் நீங்கதான்” என்று அவனின் உதடுகளில் அவள் இதழ்களை ஒற்றி எடுத்தாள்.
“இப்படில்லாம் நீ பண்ணா, அப்புறமா நாம யாரையும் போய் பார்க்க முடியாது”
“ஏன்.. ஒரு கிஸ் தானே”
“அதான் எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி” என்று சொல்லி அவளை மொத்தமாக கொள்ளையிடத் துவங்கினான்.
குமுதினி வெளியில் இருந்து குரல் கொடுத்ததும் அவசரமாக எழுந்து கிடைத்த உடையை எடுத்து மாற்றி கதவை திறந்தாள் தாரிணி..
அவளது முகத்தை பார்த்ததும் குமுதினிக்கு அவள் சந்தோஷத்தை தெரிந்து கொள்ள முடிந்தது.
“நேரம் ஆகுதேன்னு கதவை தட்டினேன் தாரிணி. மழைல அந்த ஓலைக் குடிசை தட்டில்லாம் கீழ விழுந்திடுச்சு. எப்படியும் இங்க தான் இருப்பீங்கன்னு நினைச்சேன். சாப்பிட வறீங்களா.. இல்ல எடுத்துட்டு வரவா?”
“அக்கா.. உங்களுக்கு எதுக்கு சிரமம். அவர் இன்னும் ரெடியாகல. ரெடியானதும் நாங்களே கீழ வரோம்..”
“சரிம்மா.. வாங்க..” என்று குமுதினி சென்றதும், உள்ளே வந்தவள்,
“பாருங்க. அக்கா கூப்பிட்டதும் அவசரம் அவசரமா எதையோ எடுத்து டிரஸ்னு மாத்திட்டு போனேன். அவங்க என்ன நினைச்சிருப்பாங்களோ..”
“அவங்களும் கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகளை பெத்து இருக்காங்க. எல்லாம் தெரியும் அவங்களுக்கு. ஒன்னும் நினைக்க மாட்டாங்க..”
“ம்ம்.. உங்களுக்கென்ன.. அவங்க என்ன தான் எதாவது நினைச்சு இருப்பாங்க… சரி குளிச்சு ரெடியாகுங்க. நாம கீழ போய் சாப்பிட்டுட்டு அப்படியே வெளியே போலாம்..நான் சொன்ன இடத்துக்கு போய் அவங்களை பாக்கலாம்”
“பவதா…ஃபார் யுவர் கைண்ட் இன்பர்மேஷன் .. நீங்க எங்க போனும்னும் சொல்லல.. யாரை பாக்கனும்னும் சொல்லல.”
“அதான சர்ப்பரைஸ்.. என் லைஃப்ல முக்கியமானவங்கன்னு சொன்னேன் இல்ல. இங்க வீட்டை கட்டனும்னு சொன்னேன் இல்ல. அந்த வீட்டுக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இருக்கு.. நீங்க அவங்களை பார்த்தா சந்தோஷப்படுவீங்க.”
“ஓ அவ்ளோ இம்பார்டண்ட் பர்சனா..”
“ஆமா. நேத்தே நான் அங்க போகனும்னு நினைச்சேன். வந்ததும் வீட்டை பத்தி பேசினோம்.. அப்புறம் உங்களை பத்தி பேசினோம்.. அப்புறம் உங்களுக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அப்புறம்.. அப்புறம்”
“அப்புறம் என்ன.. “ ஆவலுடன் தாரிணியையே பார்த்தான்.
“அப்புறம் மழை வந்துச்சு.அவ்வளவு தான்.” உதட்டை பிதுக்கி அவனை பார்த்து சொன்னாள்.
“அந்த மழைக்கு முன்னாடியும், பின்னாடியும்… ”
“மழைக்கு முன்ன அந்த வீட்டில, மழைக்கு அப்புறம் இந்த வீட்டில இருந்தோம்.. வேறென்ன நடந்துச்சாம்.”
“ஓ.. அப்படி.. உனக்கு செலக்ட்டிவ் அம்னீஷியான்னு எனக்கு தெரியாம போச்சு. சோ, இப்ப நாம என்ன பண்றோம்னா..?”
“என்ன… “
“உனக்கு நேத்து நடந்ததெல்லாம் ஞாபகம் வர வைக்க என்னால முடிஞ்சதை பண்ணப் போறேன்.”
“நோ.. நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு தெரியுது.. கிளம்புங்க..நேரம் ஆகுது.”
“உனக்குத்தான் ஞாபகம் இல்லையே.. நினைவுப் படுத்த வேண்டியது என் கடமை இல்லையா.”
“எல்லாம் ஞாபகம் இருக்கு.. நான் சும்மா சொன்னேன்..நீங்க குளிச்சுட்டு கிளம்புங்க. நானும் அதுக்குள்ள கிளம்பறேன்” என்று அவனை தள்ளிக் கொண்டு போய் குளியலறையில் விட்டாள்.
இருவரும் தயாராகி குமுதினி வீட்டுக்கு வந்தனர்.
இருவருக்கும் சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டு, “மழை இப்படி வரும்னு நினைக்கல தாரிணி.. நீ அங்க இருக்கனும்னு ஆசைப்பட்ட.. பாவம் இருக்க முடியல இல்ல.. நீங்க அடுத்த முறை வரதுக்குள்ள அந்த வீடு ரெடியாயிரும். அப்புறம் உன் ஆசைப்படி நீ அங்க இருக்கலாம். மழையோ, வெயிலோ எதுவும் செய்யாது.” என்று சொன்னார் குமுதினி.
“இல்லக்கா.. மழை வலுக்கற வரை அங்க தான் இருந்தோம்.. இப்போவே எனக்கு திருப்தி தான்.” என்று சொல்லும் போதே தாரிணி முகம் சிவந்தாள்.
அகரன் அடக்க முடியாத சிரிப்புடன் சாப்பிட அவனுக்கு புரை ஏறியது.
“பாத்துங்க தம்பி. தண்ணி வேணா குடிங்க” என்று அவன் பக்கம் தண்ணீரை நகர்த்தினார் குமுதினி.
தாரிணி அவனை பார்த்து முறைத்துக் கொண்டு கண்ணால், “ஏன் இப்படி” என்று சொன்னாள்.
“அது அம்மா நினைக்கறாங்க போல” என தாரிணியை பார்த்து அசடு வழிந்தான்.
“உங்க அம்மாவை பத்தி நிறைய சொல்லுவா தாரிணி. இவ அம்மாவும் உங்க அம்மா போல ரொம்ப அழகு.. உன் அம்மா ஃபோட்டோ காமிச்சியா தம்பிக்கு” என அகரனை பார்த்து சொல்லி தாரிணியை பார்த்து முடித்தார்.
“இல்லக்கா. காலைல எடுத்து வச்சேன்.. அதுக்குள்ள இவர் எழுந்து ரெடியாக லேட்டாயிட்டுன்னு இங்க வந்திட்டோம் அப்படியே”
“இருங்க. ரொம்ப பழைய ஃபோட்டோ ஒன்னு இருக்கு.. தாரிணி அம்மா இங்க வந்த புதுசுல நான் பத்தாவது படிச்சிட்டு இருந்தேன். இவ அவ அம்மா வயித்தில் இருந்தா. அப்போ எடுத்த படம் அப்படியே இருக்கு என்கிட்ட..அதை காமிக்கறேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று ஒரு பழைய புகைப்படத்தை எடுத்து வந்து காண்பித்தார்.
அதில் தாரிணியை உரித்து வைத்தது போன்று ஒரு பெண் வயிறு மேடிட்டு குமுதினியோடு நின்றிருந்தார். பார்க்க மிகவும் அழகாக இருக்க, அகரன் தாரிணியையும், அவள் அம்மாவையும் மாறி மாறி பார்த்தான்.
“ஒரே மாதிரி இருக்காங்க இல்ல.. ரொம்ப அழகு” என்றான்.
“ஆமா.. தாரிணி ஏழாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கறப்ப இங்க இருந்து போனாங்க. அவ பெரிய பொண்ணா ஆனதும் எனக்கு ஃபோட்டோ அனுப்பினா.. பார்த்தா அப்படியே அவங்க அம்மாவை உரிச்சு வச்சுட்டு இருந்தா..இங்க பழைய ஆளுங்க எல்லாருக்கும் அதை காமிச்சேன். எல்லாருமே அதே தான் சொன்னாங்க. பாவம் இவ வளரதை பார்க்காமலே போயிட்டாங்க”
“ஓ.. அப்போ மேகாலயா போனதும் அவங்க இறந்துட்டாங்களா.. நான் எதையுமே தாரிணிட்ட இதுவரைக்கும் கேட்டதில்ல” என்று சொன்னவனை அதிசயமாக பார்த்தார் குமுதினி.
அவனை பார்த்து விட்டு, தாரிணியை பார்த்து கண்களாலே ‘எதுவும் சொல்லவில்லையா’ என்று கேட்டார். தாரிணி இல்லையென்று தலையை ஆட்டினாள்.
“எனக்கு இந்த படம் ஒரு காப்பி வேணும். ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன்” என்று அதை அவனது அலைபேசியில் எடுத்து சேமித்தான்.
“தாரிணி… எப்போ ஃப்ளைட்..நீ அங்க எப்போ போக போற..”
“அக்கா.. நாளைக்கு காலைல தான் ஃப்ளைட். அதான் இன்னிக்கே போய் பாத்துட்டு வந்திடலாம்னு இருக்கோம்..”
“அக்கா..இப்போ வரைக்கும் இவ யாரை பாக்க போறோம்னு சொல்லவே இல்ல.. நீங்களும் சர்ப்பரைஸ்னு இதுவரைக்கும் அதை அப்படியே மெயிண்டைன் பண்றீங்க பாருங்க” என்றான் அகரன்.
“அப்படி இல்ல தம்பி. இவ தான் சொல்ல வேணாம்னு சொன்னா..”
“இட்ஸ் ஓகே.. நான் சும்மா சொன்னேன்.. இவ கொடுக்கிற பில்ட்அப்க்கு அது யாருன்னு நேர்ல போய் பார்த்துக்கறேன்.”
“நேரத்தோட போய்ட்டு வரனும். சாயந்திரம் மழை ஆரம்பிச்சிடும்” என்றார்.
“மறந்தே போயிட்டேன்.. நான் கேஷ் டிராப் பண்ணிட்டு அப்படியே அந்த கான்டிராக்டரை பார்த்திட்டு வந்திடறேன். நீ ரெடியா இரு தாரிணி. நான் வந்ததும் கிளம்பிடலாம்” என்றான் அகரன்.
“எதுக்கு.. இப்போ கேஷ். நம்மட்ட இருக்கிறதே போதுமே.. அக்கா கான்டிராக்டரை பார்த்து பேசிப்பாங்க. வாங்க நாம போவோம். அங்க விசிட்டர்ஸ் ஹவர் முடிஞ்சிட போகுது.” என்றாள் தாரிணி.
“ஹேய். வீடு கட்ட அமவுண்ட் வேணும் இல்ல. அவ்ளோலாம் நான் கையில் வச்சிட்டு இல்ல. அதுவும் அந்த கான்ட்ராக்டர்ட்ட நான் கொஞ்சம் மாடிஃபிக்கேஷன் சொல்ல வேண்டியிருக்கு..நேத்து நைட் தான் தோணுச்சு.. “ என்று தாரிணியை பார்த்து கண்ணடித்தான்.
குமுதினி சிரித்துக் கொண்டே, “சரி போய்ட்டு சீக்கிரமா வாங்க தம்பி.. அதுக்குள்ள நானும் தாரிணியும் ரெடியாகறோம். நானும் உங்க கூட அங்க வரேன்.” என்று சொல்லிய வரை வினோதமாக பார்த்து விட்டு வெளியேறினான் அகரன்.
தாரிணி இதுவரை நடந்த கதைகளை குமுதினியிடம் சொல்லியும், கேட்டும் நேரத்தை கடத்தினாள். கண்கள் வாசல் பக்கமே இருந்தது. அவன் வந்ததும்
அவளின் மாமாவை மருத்துவமனையில் சென்று சந்திக்க வேண்டும் என்ற தவிப்பு அவள் முகத்தில் தெரிந்தது.
சொன்னது போலவே சிறிது நேரத்திலேயே அகரன் வந்ததும் தான் அவள் முகத்தில் நிம்மதி தெரிந்தது.
“அக்கா..அவர் வந்துட்டார். வாங்க போகலாம்..” என்று அவசரப்படுத்திய தாரிணியை,
“இரு பவதா. இங்க பாருங்க அக்கா.. நான் கரன்சி மாத்தியே கொண்டு வந்துட்டேன். கான்டிராக்டர்ட்ட பேசி ஃப்ளான் கொஞ்சம் மாத்தி எஸ்டிமேட்டும் வாங்கிட்டேன். எந்த காரணத்துக்காகவும் கட்டிட வேலை நிக்க கூடாது. நாங்க கூடிய சீக்கிரமே இங்க வருவோம். அடுத்த மாசத்துக்குள்ள முடிச்சிடலாம்னு அவர் சொல்லியிருக்கார். நீங்க கொஞ்சம் கிட்ட இருந்து எல்லாம் பாத்துக்கோங்க”
என்று அவரின் கையில் அத்தனை பணத்தை கட்டாக கொடுத்தான்.
தாரிணி அவனையே பார்த்தாள்.
குமுதினி,”என்ன தம்பி வேணும்னா உங்ககிட்ட கேட்க போறேன். கொஞ்சம் கொஞ்சமா அனுப்புனா கூட போதுமே.. இவ்வளோ பணத்தை நான் எப்படி வச்சு பாதுகாப்பேன்”
“நீங்க கால் பண்றப்ப நாங்க ஆயிரத்தெட்டு டென்ஷன்ல வேலைல இருப்போம் அக்கா. ஃபோன் அட்டெண்ட் பண்ண முடியாம போகலாம். அதனாலலாம் கட்டிட வேலை தடையாகிட கூடாது இல்ல.. இதுக்கு மேல தேவைப்பட்டா எனக்கு இல்லன்னா பவதாக்கு கூப்பிடுங்க“ என்று சொல்லி பணத்தை தந்தான்.
“பவதா.. நீ கிளம்பிட்ட இல்ல. நான் ஒரு அஞ்சு நிமிஷத்தில் வந்திடறேன். என் டேப் மாடில இருக்கு. நேத்து மழைல நனைஞ்சிட கூடாதுனு டிராலில வச்சேன். மறந்திட்டு வந்திட்டேன். ஒகே வா” என்று அவளை தோள் தட்டி சொல்லி விட்டு இரண்டு இரண்டு படிகளாக மாடி ஏறினான்.
அவன் சென்றதும், “தாரிணி, ஏற்கனவே அவர் அனுப்பின பணத்தில் தான் அந்த வீடு கட்ட ஆரம்பிச்சோம். அதுலயே கொஞ்சம் மிச்சம் இருக்கு. இந்த பணத்தை நீயே கொண்டு போ.. கொஞ்சம் கொஞ்சமா நான் வாங்கிக்கறேன். இவ்வளோ பணம் வச்சிட்டு..”
“அக்கா.. அவர் சொல்லிட்டா அதுக்கு மறுபேச்சு இல்லக்கா. நீங்க பேங்க்ல போட்டு வச்சுக்கோங்க. அப்பப்ப தேவைகளுக்கு எடுத்துக்கோங்க.
அம்மா இருந்த வீட்டை ஒரு ரூம் தான் போடனும்னு நினைச்சேன். இவர் ஏற்கனவே பெரிய வீடா தான் கட்ட சொல்லியிருக்கார். இப்போ இன்னும் ஆல்ட்ரேஷன் சொல்லிருக்கார்.. இவருக்கு என்ன நான் திருப்பி தர போறேன்னு தெரியல. என் வாழ்க்கை முழுக்க அவரை சந்தோஷமா வச்சுக்கனும். ”
சொல்லிய தாரிணியை தோள் மேல் தட்டிக் கொடுத்தவர், “சின்ன வயசுல இருந்து நீ தனியா இருந்தே கஷ்டப்பட்ட தாரிணி. உங்க மாமா வேலை விஷயமா வெளியூர் போறப்பலாம் குட்டி பொண்ணா இங்க தான் இருப்ப. அப்பவே இந்த பொண்ணுக்கு என்னடா விதி.. அப்பா, அம்மா இல்லாம இப்படி தனியா கஷ்டப்பட்டுதேன்னு நினைச்சுப்பேன். நல்லகாலம் உங்க மாமா உன்னை பொண்ணு மாதிரி பாத்துக்கிட்டார். ஹ்ம்ம். இப்போ இந்த தம்பியை பார்த்தா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். அதை நேர்ல பாக்கனும் தான் நான் கூட வரேன்னு சொன்னேன்.”
“ஆமா அக்கா. என் வாழ்க்கைல நான் ரெண்டு பேருக்கு கடமை பட்டிருக்கேன். மாமா, அப்புறம் இவர். மாமாவை கூட்டிட்டு போகலாம்னு தான் வந்திருக்கேன். ஆண்ட்டிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். ஆனா இவர்ட்ட இன்னும் சொல்லல. நேர்ல மாமாவை பார்த்தா அவரே கூட்டிட்டு போகலாம்னு தான் சொல்வார். எப்படியோ இனிமே மாமாவை கடைசி வரைக்கும் நான் என் கண் முன்னாடி வச்சு நல்லா பாத்துக்கணும்.”
“இப்பவே கூட்டிட்டு போகப் போறியா. இதெல்லாம் முன்னாடியே நீ தம்பிட்ட சொல்லியிருக்கனும் தாரிணி. இப்போ உங்க ரெண்டு பேருக்கு தானே ஃப்ளைட் டிக்கெட் போட்டிருப்பார். திடீர்னு அவரை கூட்டிட்டு போகனும்னு சொன்னா எப்படி டிக்கெட் அரேஞ்ச் பண்ணுவார்”
“அக்கா.. அவரை பத்தி உங்களுக்கு தெரியல. உடனே இந்த டிக்கெட்ஸ் கேன்சல் பண்ணி அடுத்த ஃப்ளைட்டுக்கு புக் பண்ணுவார். மாமாவை பத்தி அவர்ட்ட சொல்ல சந்தர்ப்பமே அமையலக்கா. கிடைச்சிருந்தா சொல்லியிருப்பேன். அதனாலதான் இப்போ சர்ப்பரைஸா கூட்டிட்டு போறேன்”
“இல்ல தாரிணி.. எனக்கு என்னமோ தப்பாவே படுது. முன்னாடியே இதெல்லாம் சொல்லித்தான் நீ கல்யாணம் பண்ணியிருக்கனும். இப்போ கூட்டிட்டு போய் சொன்னா தம்பி எப்படி எடுத்துக்கும். அவர் என்ன மூணாவது மனுஷனா.. நீ சாவகாசமா அறிமுகம் பண்ண. உன் குடும்பம் இல்லையா?” சொல்லிய குமுதினியையும், தன் கழுத்தில் இருக்கும் தாலியையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.
“அக்கா. அகரன் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. அவர் நான் என்ன சொன்னாலும் கேட்டுப்பார். நம்புவார். அவ்ளோ லவ் என் மேல..” பெருமிதம் வழிய தாரிணி சொல்லிக் கொண்டு இருக்கும் போது சரியாக அங்கு
வந்து வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த அகரன் கோபத்துடனும், கண்களில் வழியும் கண்ணீரை கூட துடைக்க இல்லாமல் அவன் பெட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு காரை நோக்கி சத்தமில்லாமல் சென்றான்.
இரவு முழுதும் தந்த அசதியில் காலையில் நேரம் கழித்தே தான் தாரிணி எழுந்தாள்.
அவள் மேல் கைகளை போட்டுக் கொண்டு தூங்கியிருந்தவனின் கன்னத்தில் அழுத்தமாக தன் இதழ்களை பதித்து விட்டு, மெல்ல எழுந்தாள். அவளின் அசைவில், இதழ் முத்தத்தில் கூட அவன் எழுந்திரிக்கவில்லை.
தன் உடைகளை ஒழுங்குப்படுத்திக் கொண்டு, வந்தவளின் கண்களில் பட்டது அவள் மாமாவின் பை.
‘இன்று ஒரு நாள் தான் இருக்கிறது, அகரனிடம் அவரைப் பற்றி எதுவும் சொல்லவில்லையே’ என்று தாரிணி யோசித்தாள்.
அவரின் பையை திறந்து பார்த்தாள். சில உடைகளுடன் அந்த புகைப்படம் இருந்தது.
மெதுவாக எடுத்து தன் புடவையால் அதை துடைத்து பார்த்தாள். அவளுக்கு மிகவும் விருப்பமான படம். எப்பொழுதும் ஒரு பொக்கிஷம் போல் அதை பாதுகாத்து இருக்கிறாள்.
“அம்மா… நீங்க இப்போ இல்லையேன்னு இருக்கு. என் கஷ்டங்களை, வருத்தங்களை தான் உங்க கிட்ட சொல்லியிருக்கேன். ஆனா என் வாழ்க்கைலயே நான் சந்தோஷமா இருக்கிறது இப்போதான். அன்பான புருஷன்.. என் மேல் உயிரையே வச்சு இருக்கார். உங்களை மாதிரியே அவரோட அம்மாவும். என் மேலயும் அவங்களுக்கு அவ்ளோ பாசம்.. இது எல்லாம் நீங்க இருந்து பாத்து சந்தோஷப்பட்டிருக்கனும்.”
அகரன் எழுந்ததும் அவனை முதலில் கூட்டி வந்து காண்பிக்க வேண்டும் என்பதால் அந்த படத்தை கண் பார்வையில் வைக்க இடம் தேடினாள். அலமாரி எதுவும் இல்லாததால் அவர்களின் உடைகள் இருக்கும் டிராலியின் மேல் வைத்து விட்டு, குளித்து
மீண்டும் உடை மாற்ற வந்தவளை பின் இருந்து அணைத்தான் அகரன்.
அவள் கையிலிருந்த சேலை நழுவி கீழே விழுந்தது. அதை பிடித்து அப்படியே அவர்கள் உடைகள் இருந்த பெட்டியின் மீது போட்டான்.
அகரனது கைகள் அவளது இடுப்பில் மாலையானது.
“நீங்க தானா..நான் பயந்துட்டேன்”
“என்னைத் தவிர யார் உன்னை இப்படி புடவை கட்டறப்ப கட்டிப்பிடிப்பாங்க”
“ஆமா. ஆமா. வேற யார் இந்த மாதிரி எப்போ பாத்தாலும் இதே வேலையா இருப்பாங்க”
“புதுசா கல்யாணம் ஆன எல்லாரும் இதே வேலையா தான் இருப்பாங்க..”
“நமக்கு கல்யாணம் ஆகிடுச்சா” என்று அவனின் இரு கைகளையும் விலக்கி திரும்பி, அவளது பெரிய இரு கண்களை சிமிட்டி, அவன் கண்ணை பார்த்து கேட்டாள்.
“அடிப்பாவி.. எல்லாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இதை கேட்காம இப்ப வந்து கேட்கிற”
“ம்ம்.. நேத்து எங்க என்னை பேச விட்டீங்க.. நான் கேட்க?”
“அப்படியே ரீவைண்ட் பண்ணி பாரு. யார் நேத்து மேல சாய்ஞ்சு அத்தனை முத்தங்களா கொடுத்தது”
“போங்க..” என்று சிணுங்கியவளை, “வாங்கன்னு சொல்லனும்” என்று அவளை அவனது உடலோடு அணைத்தான்.
“நமக்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சே.. அதனால் நடந்தது எல்லாம் தப்பில்ல..”என்று எங்கோ பார்த்தபடி சொல்லியவளின், முகம் திருப்பி, தாடையை நிமிர்த்தி, “இதையே தான் நான் இத்தனை நாளும் சொன்னேன். அப்பல்லாம் இல்லன்னு சொல்லிட்டு இப்ப நீயே இப்படி சொல்றினா..” என்று நிறுத்தி அவளின் உதடுகளை பார்த்தான்.
“சொல்றன்னா… “
“நேத்து நான் உன்கிட்ட சரியா நடந்திருக்கேன்னு அர்த்தம்”
“சரியாவா.. தப்பு தப்பா” என்று திருத்தினாள்.
“இது தப்புன்னா. உலகமே தப்பா இருக்குன்னு அர்த்தம்..”
“அப்படியா”
“ஆமா.. நான் சரியா நடந்ததால தான் நீ இப்படி இப்போ என் முன்னாடி நிக்கற” என்று மேலிருந்து அவளை கால் வரை அவன் பார்த்ததை தாரிணி பார்த்து ஒன்றும் புரியாமல் தன்னையே முழுதுமாக பார்த்தாள்.
அவளுக்கு வெட்கம் வந்ததை அவளது கன்னங்கள் சிவந்து காட்டிக் கொடுத்தது. அவசரமாக அவனையே மீண்டும் கட்டிக் கொண்டாள்.
அவளை தூக்கி அப்படியே ஒரு சுற்று சுற்றி இறக்கி அணைத்து,கட்டிலில் படுக்க வைத்தவன், அவளது உதடுகள் தொடங்கி மீண்டும் உடல் முழுதும் முத்தத்தால் சிவக்க வைத்தான்.
இரவில் நடந்த அவர்களின் சங்கமம் மறுபடியும் அரங்கேறியது.
அகரனை அணைத்து படுத்து இருந்தவள், “உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்.”
“சொல்லு பவதா.. “ என்று அவளை அணைத்து கன்னங்களில் இதழ் பதித்து அவள் கண்களை பார்த்தான்.
“நாம நாளைக்கு கிளம்பனும் இல்ல. அதனால நாம இங்க ஒரு இடத்துக்கு போகனும். உங்களுக்கு ஒருத்தங்களை காமிக்கனும்” என்று சொன்னவளை புரியாமல் பார்த்தான்.
“யாரது அவ்ளோ முக்கியமானவங்க? உன் ஃப்ரெண்டா. எங்க இருக்காங்க.. அவங்க?”
“ப்ரெண்டா..ம்ஹூம். இல்ல.. அதை விட முக்கியமானவங்க. நீங்க நேர்ல பாக்கத்தானே போறீங்க.”
“அப்படியா.. நான் ஒன்னு கேட்கறேன்.. நீ சொல்லு.. உன் லைஃப்ல இனி நான் எந்த இடத்தில் இருப்பேன்”
திரும்பி அவனது மார்பில் கைகளை ஊன்றி அவன் முகத்தை பார்த்து, “நீங்க வேற நான் வேறயா என்ன.. என் லைஃப்போட மொத்தமும் நீங்கதான்” என்று அவனின் உதடுகளில் அவள் இதழ்களை ஒற்றி எடுத்தாள்.
“இப்படில்லாம் நீ பண்ணா, அப்புறமா நாம யாரையும் போய் பார்க்க முடியாது”
“ஏன்.. ஒரு கிஸ் தானே”
“அதான் எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி” என்று சொல்லி அவளை மொத்தமாக கொள்ளையிடத் துவங்கினான்.
குமுதினி வெளியில் இருந்து குரல் கொடுத்ததும் அவசரமாக எழுந்து கிடைத்த உடையை எடுத்து மாற்றி கதவை திறந்தாள் தாரிணி..
அவளது முகத்தை பார்த்ததும் குமுதினிக்கு அவள் சந்தோஷத்தை தெரிந்து கொள்ள முடிந்தது.
“நேரம் ஆகுதேன்னு கதவை தட்டினேன் தாரிணி. மழைல அந்த ஓலைக் குடிசை தட்டில்லாம் கீழ விழுந்திடுச்சு. எப்படியும் இங்க தான் இருப்பீங்கன்னு நினைச்சேன். சாப்பிட வறீங்களா.. இல்ல எடுத்துட்டு வரவா?”
“அக்கா.. உங்களுக்கு எதுக்கு சிரமம். அவர் இன்னும் ரெடியாகல. ரெடியானதும் நாங்களே கீழ வரோம்..”
“சரிம்மா.. வாங்க..” என்று குமுதினி சென்றதும், உள்ளே வந்தவள்,
“பாருங்க. அக்கா கூப்பிட்டதும் அவசரம் அவசரமா எதையோ எடுத்து டிரஸ்னு மாத்திட்டு போனேன். அவங்க என்ன நினைச்சிருப்பாங்களோ..”
“அவங்களும் கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகளை பெத்து இருக்காங்க. எல்லாம் தெரியும் அவங்களுக்கு. ஒன்னும் நினைக்க மாட்டாங்க..”
“ம்ம்.. உங்களுக்கென்ன.. அவங்க என்ன தான் எதாவது நினைச்சு இருப்பாங்க… சரி குளிச்சு ரெடியாகுங்க. நாம கீழ போய் சாப்பிட்டுட்டு அப்படியே வெளியே போலாம்..நான் சொன்ன இடத்துக்கு போய் அவங்களை பாக்கலாம்”
“பவதா…ஃபார் யுவர் கைண்ட் இன்பர்மேஷன் .. நீங்க எங்க போனும்னும் சொல்லல.. யாரை பாக்கனும்னும் சொல்லல.”
“அதான சர்ப்பரைஸ்.. என் லைஃப்ல முக்கியமானவங்கன்னு சொன்னேன் இல்ல. இங்க வீட்டை கட்டனும்னு சொன்னேன் இல்ல. அந்த வீட்டுக்கும் அவங்களுக்கும் சம்பந்தம் இருக்கு.. நீங்க அவங்களை பார்த்தா சந்தோஷப்படுவீங்க.”
“ஓ அவ்ளோ இம்பார்டண்ட் பர்சனா..”
“ஆமா. நேத்தே நான் அங்க போகனும்னு நினைச்சேன். வந்ததும் வீட்டை பத்தி பேசினோம்.. அப்புறம் உங்களை பத்தி பேசினோம்.. அப்புறம் உங்களுக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அப்புறம்.. அப்புறம்”
“அப்புறம் என்ன.. “ ஆவலுடன் தாரிணியையே பார்த்தான்.
“அப்புறம் மழை வந்துச்சு.அவ்வளவு தான்.” உதட்டை பிதுக்கி அவனை பார்த்து சொன்னாள்.
“அந்த மழைக்கு முன்னாடியும், பின்னாடியும்… ”
“மழைக்கு முன்ன அந்த வீட்டில, மழைக்கு அப்புறம் இந்த வீட்டில இருந்தோம்.. வேறென்ன நடந்துச்சாம்.”
“ஓ.. அப்படி.. உனக்கு செலக்ட்டிவ் அம்னீஷியான்னு எனக்கு தெரியாம போச்சு. சோ, இப்ப நாம என்ன பண்றோம்னா..?”
“என்ன… “
“உனக்கு நேத்து நடந்ததெல்லாம் ஞாபகம் வர வைக்க என்னால முடிஞ்சதை பண்ணப் போறேன்.”
“நோ.. நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு தெரியுது.. கிளம்புங்க..நேரம் ஆகுது.”
“உனக்குத்தான் ஞாபகம் இல்லையே.. நினைவுப் படுத்த வேண்டியது என் கடமை இல்லையா.”
“எல்லாம் ஞாபகம் இருக்கு.. நான் சும்மா சொன்னேன்..நீங்க குளிச்சுட்டு கிளம்புங்க. நானும் அதுக்குள்ள கிளம்பறேன்” என்று அவனை தள்ளிக் கொண்டு போய் குளியலறையில் விட்டாள்.
இருவரும் தயாராகி குமுதினி வீட்டுக்கு வந்தனர்.
இருவருக்கும் சாப்பாட்டை எடுத்து வைத்துக் கொண்டு, “மழை இப்படி வரும்னு நினைக்கல தாரிணி.. நீ அங்க இருக்கனும்னு ஆசைப்பட்ட.. பாவம் இருக்க முடியல இல்ல.. நீங்க அடுத்த முறை வரதுக்குள்ள அந்த வீடு ரெடியாயிரும். அப்புறம் உன் ஆசைப்படி நீ அங்க இருக்கலாம். மழையோ, வெயிலோ எதுவும் செய்யாது.” என்று சொன்னார் குமுதினி.
“இல்லக்கா.. மழை வலுக்கற வரை அங்க தான் இருந்தோம்.. இப்போவே எனக்கு திருப்தி தான்.” என்று சொல்லும் போதே தாரிணி முகம் சிவந்தாள்.
அகரன் அடக்க முடியாத சிரிப்புடன் சாப்பிட அவனுக்கு புரை ஏறியது.
“பாத்துங்க தம்பி. தண்ணி வேணா குடிங்க” என்று அவன் பக்கம் தண்ணீரை நகர்த்தினார் குமுதினி.
தாரிணி அவனை பார்த்து முறைத்துக் கொண்டு கண்ணால், “ஏன் இப்படி” என்று சொன்னாள்.
“அது அம்மா நினைக்கறாங்க போல” என தாரிணியை பார்த்து அசடு வழிந்தான்.
“உங்க அம்மாவை பத்தி நிறைய சொல்லுவா தாரிணி. இவ அம்மாவும் உங்க அம்மா போல ரொம்ப அழகு.. உன் அம்மா ஃபோட்டோ காமிச்சியா தம்பிக்கு” என அகரனை பார்த்து சொல்லி தாரிணியை பார்த்து முடித்தார்.
“இல்லக்கா. காலைல எடுத்து வச்சேன்.. அதுக்குள்ள இவர் எழுந்து ரெடியாக லேட்டாயிட்டுன்னு இங்க வந்திட்டோம் அப்படியே”
“இருங்க. ரொம்ப பழைய ஃபோட்டோ ஒன்னு இருக்கு.. தாரிணி அம்மா இங்க வந்த புதுசுல நான் பத்தாவது படிச்சிட்டு இருந்தேன். இவ அவ அம்மா வயித்தில் இருந்தா. அப்போ எடுத்த படம் அப்படியே இருக்கு என்கிட்ட..அதை காமிக்கறேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்று ஒரு பழைய புகைப்படத்தை எடுத்து வந்து காண்பித்தார்.
அதில் தாரிணியை உரித்து வைத்தது போன்று ஒரு பெண் வயிறு மேடிட்டு குமுதினியோடு நின்றிருந்தார். பார்க்க மிகவும் அழகாக இருக்க, அகரன் தாரிணியையும், அவள் அம்மாவையும் மாறி மாறி பார்த்தான்.
“ஒரே மாதிரி இருக்காங்க இல்ல.. ரொம்ப அழகு” என்றான்.
“ஆமா.. தாரிணி ஏழாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கறப்ப இங்க இருந்து போனாங்க. அவ பெரிய பொண்ணா ஆனதும் எனக்கு ஃபோட்டோ அனுப்பினா.. பார்த்தா அப்படியே அவங்க அம்மாவை உரிச்சு வச்சுட்டு இருந்தா..இங்க பழைய ஆளுங்க எல்லாருக்கும் அதை காமிச்சேன். எல்லாருமே அதே தான் சொன்னாங்க. பாவம் இவ வளரதை பார்க்காமலே போயிட்டாங்க”
“ஓ.. அப்போ மேகாலயா போனதும் அவங்க இறந்துட்டாங்களா.. நான் எதையுமே தாரிணிட்ட இதுவரைக்கும் கேட்டதில்ல” என்று சொன்னவனை அதிசயமாக பார்த்தார் குமுதினி.
அவனை பார்த்து விட்டு, தாரிணியை பார்த்து கண்களாலே ‘எதுவும் சொல்லவில்லையா’ என்று கேட்டார். தாரிணி இல்லையென்று தலையை ஆட்டினாள்.
“எனக்கு இந்த படம் ஒரு காப்பி வேணும். ஒரு ஃபோட்டோ எடுத்துக்கறேன்” என்று அதை அவனது அலைபேசியில் எடுத்து சேமித்தான்.
“தாரிணி… எப்போ ஃப்ளைட்..நீ அங்க எப்போ போக போற..”
“அக்கா.. நாளைக்கு காலைல தான் ஃப்ளைட். அதான் இன்னிக்கே போய் பாத்துட்டு வந்திடலாம்னு இருக்கோம்..”
“அக்கா..இப்போ வரைக்கும் இவ யாரை பாக்க போறோம்னு சொல்லவே இல்ல.. நீங்களும் சர்ப்பரைஸ்னு இதுவரைக்கும் அதை அப்படியே மெயிண்டைன் பண்றீங்க பாருங்க” என்றான் அகரன்.
“அப்படி இல்ல தம்பி. இவ தான் சொல்ல வேணாம்னு சொன்னா..”
“இட்ஸ் ஓகே.. நான் சும்மா சொன்னேன்.. இவ கொடுக்கிற பில்ட்அப்க்கு அது யாருன்னு நேர்ல போய் பார்த்துக்கறேன்.”
“நேரத்தோட போய்ட்டு வரனும். சாயந்திரம் மழை ஆரம்பிச்சிடும்” என்றார்.
“மறந்தே போயிட்டேன்.. நான் கேஷ் டிராப் பண்ணிட்டு அப்படியே அந்த கான்டிராக்டரை பார்த்திட்டு வந்திடறேன். நீ ரெடியா இரு தாரிணி. நான் வந்ததும் கிளம்பிடலாம்” என்றான் அகரன்.
“எதுக்கு.. இப்போ கேஷ். நம்மட்ட இருக்கிறதே போதுமே.. அக்கா கான்டிராக்டரை பார்த்து பேசிப்பாங்க. வாங்க நாம போவோம். அங்க விசிட்டர்ஸ் ஹவர் முடிஞ்சிட போகுது.” என்றாள் தாரிணி.
“ஹேய். வீடு கட்ட அமவுண்ட் வேணும் இல்ல. அவ்ளோலாம் நான் கையில் வச்சிட்டு இல்ல. அதுவும் அந்த கான்ட்ராக்டர்ட்ட நான் கொஞ்சம் மாடிஃபிக்கேஷன் சொல்ல வேண்டியிருக்கு..நேத்து நைட் தான் தோணுச்சு.. “ என்று தாரிணியை பார்த்து கண்ணடித்தான்.
குமுதினி சிரித்துக் கொண்டே, “சரி போய்ட்டு சீக்கிரமா வாங்க தம்பி.. அதுக்குள்ள நானும் தாரிணியும் ரெடியாகறோம். நானும் உங்க கூட அங்க வரேன்.” என்று சொல்லிய வரை வினோதமாக பார்த்து விட்டு வெளியேறினான் அகரன்.
தாரிணி இதுவரை நடந்த கதைகளை குமுதினியிடம் சொல்லியும், கேட்டும் நேரத்தை கடத்தினாள். கண்கள் வாசல் பக்கமே இருந்தது. அவன் வந்ததும்
அவளின் மாமாவை மருத்துவமனையில் சென்று சந்திக்க வேண்டும் என்ற தவிப்பு அவள் முகத்தில் தெரிந்தது.
சொன்னது போலவே சிறிது நேரத்திலேயே அகரன் வந்ததும் தான் அவள் முகத்தில் நிம்மதி தெரிந்தது.
“அக்கா..அவர் வந்துட்டார். வாங்க போகலாம்..” என்று அவசரப்படுத்திய தாரிணியை,
“இரு பவதா. இங்க பாருங்க அக்கா.. நான் கரன்சி மாத்தியே கொண்டு வந்துட்டேன். கான்டிராக்டர்ட்ட பேசி ஃப்ளான் கொஞ்சம் மாத்தி எஸ்டிமேட்டும் வாங்கிட்டேன். எந்த காரணத்துக்காகவும் கட்டிட வேலை நிக்க கூடாது. நாங்க கூடிய சீக்கிரமே இங்க வருவோம். அடுத்த மாசத்துக்குள்ள முடிச்சிடலாம்னு அவர் சொல்லியிருக்கார். நீங்க கொஞ்சம் கிட்ட இருந்து எல்லாம் பாத்துக்கோங்க”
என்று அவரின் கையில் அத்தனை பணத்தை கட்டாக கொடுத்தான்.
தாரிணி அவனையே பார்த்தாள்.
குமுதினி,”என்ன தம்பி வேணும்னா உங்ககிட்ட கேட்க போறேன். கொஞ்சம் கொஞ்சமா அனுப்புனா கூட போதுமே.. இவ்வளோ பணத்தை நான் எப்படி வச்சு பாதுகாப்பேன்”
“நீங்க கால் பண்றப்ப நாங்க ஆயிரத்தெட்டு டென்ஷன்ல வேலைல இருப்போம் அக்கா. ஃபோன் அட்டெண்ட் பண்ண முடியாம போகலாம். அதனாலலாம் கட்டிட வேலை தடையாகிட கூடாது இல்ல.. இதுக்கு மேல தேவைப்பட்டா எனக்கு இல்லன்னா பவதாக்கு கூப்பிடுங்க“ என்று சொல்லி பணத்தை தந்தான்.
“பவதா.. நீ கிளம்பிட்ட இல்ல. நான் ஒரு அஞ்சு நிமிஷத்தில் வந்திடறேன். என் டேப் மாடில இருக்கு. நேத்து மழைல நனைஞ்சிட கூடாதுனு டிராலில வச்சேன். மறந்திட்டு வந்திட்டேன். ஒகே வா” என்று அவளை தோள் தட்டி சொல்லி விட்டு இரண்டு இரண்டு படிகளாக மாடி ஏறினான்.
அவன் சென்றதும், “தாரிணி, ஏற்கனவே அவர் அனுப்பின பணத்தில் தான் அந்த வீடு கட்ட ஆரம்பிச்சோம். அதுலயே கொஞ்சம் மிச்சம் இருக்கு. இந்த பணத்தை நீயே கொண்டு போ.. கொஞ்சம் கொஞ்சமா நான் வாங்கிக்கறேன். இவ்வளோ பணம் வச்சிட்டு..”
“அக்கா.. அவர் சொல்லிட்டா அதுக்கு மறுபேச்சு இல்லக்கா. நீங்க பேங்க்ல போட்டு வச்சுக்கோங்க. அப்பப்ப தேவைகளுக்கு எடுத்துக்கோங்க.
அம்மா இருந்த வீட்டை ஒரு ரூம் தான் போடனும்னு நினைச்சேன். இவர் ஏற்கனவே பெரிய வீடா தான் கட்ட சொல்லியிருக்கார். இப்போ இன்னும் ஆல்ட்ரேஷன் சொல்லிருக்கார்.. இவருக்கு என்ன நான் திருப்பி தர போறேன்னு தெரியல. என் வாழ்க்கை முழுக்க அவரை சந்தோஷமா வச்சுக்கனும். ”
சொல்லிய தாரிணியை தோள் மேல் தட்டிக் கொடுத்தவர், “சின்ன வயசுல இருந்து நீ தனியா இருந்தே கஷ்டப்பட்ட தாரிணி. உங்க மாமா வேலை விஷயமா வெளியூர் போறப்பலாம் குட்டி பொண்ணா இங்க தான் இருப்ப. அப்பவே இந்த பொண்ணுக்கு என்னடா விதி.. அப்பா, அம்மா இல்லாம இப்படி தனியா கஷ்டப்பட்டுதேன்னு நினைச்சுப்பேன். நல்லகாலம் உங்க மாமா உன்னை பொண்ணு மாதிரி பாத்துக்கிட்டார். ஹ்ம்ம். இப்போ இந்த தம்பியை பார்த்தா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். அதை நேர்ல பாக்கனும் தான் நான் கூட வரேன்னு சொன்னேன்.”
“ஆமா அக்கா. என் வாழ்க்கைல நான் ரெண்டு பேருக்கு கடமை பட்டிருக்கேன். மாமா, அப்புறம் இவர். மாமாவை கூட்டிட்டு போகலாம்னு தான் வந்திருக்கேன். ஆண்ட்டிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். ஆனா இவர்ட்ட இன்னும் சொல்லல. நேர்ல மாமாவை பார்த்தா அவரே கூட்டிட்டு போகலாம்னு தான் சொல்வார். எப்படியோ இனிமே மாமாவை கடைசி வரைக்கும் நான் என் கண் முன்னாடி வச்சு நல்லா பாத்துக்கணும்.”
“இப்பவே கூட்டிட்டு போகப் போறியா. இதெல்லாம் முன்னாடியே நீ தம்பிட்ட சொல்லியிருக்கனும் தாரிணி. இப்போ உங்க ரெண்டு பேருக்கு தானே ஃப்ளைட் டிக்கெட் போட்டிருப்பார். திடீர்னு அவரை கூட்டிட்டு போகனும்னு சொன்னா எப்படி டிக்கெட் அரேஞ்ச் பண்ணுவார்”
“அக்கா.. அவரை பத்தி உங்களுக்கு தெரியல. உடனே இந்த டிக்கெட்ஸ் கேன்சல் பண்ணி அடுத்த ஃப்ளைட்டுக்கு புக் பண்ணுவார். மாமாவை பத்தி அவர்ட்ட சொல்ல சந்தர்ப்பமே அமையலக்கா. கிடைச்சிருந்தா சொல்லியிருப்பேன். அதனாலதான் இப்போ சர்ப்பரைஸா கூட்டிட்டு போறேன்”
“இல்ல தாரிணி.. எனக்கு என்னமோ தப்பாவே படுது. முன்னாடியே இதெல்லாம் சொல்லித்தான் நீ கல்யாணம் பண்ணியிருக்கனும். இப்போ கூட்டிட்டு போய் சொன்னா தம்பி எப்படி எடுத்துக்கும். அவர் என்ன மூணாவது மனுஷனா.. நீ சாவகாசமா அறிமுகம் பண்ண. உன் குடும்பம் இல்லையா?” சொல்லிய குமுதினியையும், தன் கழுத்தில் இருக்கும் தாலியையும் மாற்றி மாற்றி பார்த்தாள்.
“அக்கா. அகரன் நீங்க நினைக்கிற மாதிரி இல்ல. அவர் நான் என்ன சொன்னாலும் கேட்டுப்பார். நம்புவார். அவ்ளோ லவ் என் மேல..” பெருமிதம் வழிய தாரிணி சொல்லிக் கொண்டு இருக்கும் போது சரியாக அங்கு
வந்து வெளியில் நின்று கேட்டுக் கொண்டிருந்த அகரன் கோபத்துடனும், கண்களில் வழியும் கண்ணீரை கூட துடைக்க இல்லாமல் அவன் பெட்டியை மட்டும் எடுத்துக் கொண்டு காரை நோக்கி சத்தமில்லாமல் சென்றான்.