அத்தியாயம் 5
விடியலில் தெய்வாவும், அகரனும் மருத்துவமனை சென்று பவதாரிணியை அழைத்துக் கொண்டு வீடு வந்தனர்.
வெளியில் இருந்து பார்க்கும் போது, பளிங்கு அரண்மனை போல் வீடு இருந்தது. அதன் பிரம்மாண்டத்தை பார்க்கும் போதே பவதாரிணிக்கு மூச்சு அடைத்தது. இவ்வளவு பெரிய வீட்டில் எப்படி நாம் இருப்பது?, இங்கு வேறு யாரெல்லாம் இருப்பார்கள்?
நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டது.
காரில் இருந்து இறங்கிய தெய்வா, “கௌரி … கௌரி” என்று அழைத்ததும், வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர் வந்து நின்றார்.
“கௌரி.. இதான் பவதாரிணி. நீ தான் இந்த பொண்ணு நடக்கற வரைக்கும் பாத்துக்கணும். ஒரு கைப்பிடி. மெதுவா இறக்கி இந்த ச்சேர்ல உட்கார வைக்கலாம். பாத்து இறங்குமா.” என தெய்வா கைகளை நீட்டி அழைக்க, தாரிணியால் கீழே காலை ஊன்ற முடியவில்லை.
கௌரியும், தெய்வாவும் ஆளுக்கு ஒரு பக்கமாய் பிடித்தாலும் அவளைத் தூக்க முடியவில்லை.
“அகரா, இங்க வா. இந்த பொண்ணை இந்த பக்கம் பிடி. அப்படியே தூக்கி உட்கார வைக்கலாம்” என்று சொன்னதும், அகரன், தாரிணி இருவரும் அதிர்ந்தார்கள்.
பவதாரிணியின் உடல் முழுதும் வேர்க்கத் தொடங்கியது.
அகரன் உறைந்தது போல் நின்றான்.
“என்னப்பா வா “ என்று கூப்பிட்டாலும் அவன் காதில் விழவேயில்லை.
“இல்ல பரவால்ல ஆண்ட்டி..மேம்.. நானே காலை ஊன்றேன்”.
சொல்லிக் கொண்டே காலை கீழே வைத்தாள். அவளால் சம நிலைப்படுத்தி எழுந்திரிக்க முடியவில்லை.
“இரும்மா.. அகரா” என்று சத்தமாக கூப்பிட்டதும் அருகில் வந்து நின்றான்.
“தூக்குப்பா. நான் இந்தப் பக்கம் பிடிக்கிறேன்”
தெய்வா சொன்னதும், அவன் கை நடுங்கியது. இருந்தும் சமாளித்துக் கொண்டே அவளை முழங்கையில் பிடித்தான். அதுவே இரும்புப் பிடி போல் இருந்தது.
அவளுக்கு வலித்ததை அவள் முகம் போன போக்கில் புரிந்தவன், மெதுவாக பிடித்தான்.
“மேலே பிடி அகரா. முழங்கையில் பிடித்தால் எப்படி தூக்குவ” அம்மா சொன்னதும் தான் புரிந்தது.
மெல்ல அவளின் கையை தோள்பட்டையோடு பிடித்து தூக்கியவனின் வாசனை அவள் நுரையீரல் முழுதும் நிரம்பியது. மிக மிக அருகாமையில் அவனது உடல் அவளுக்கு முன் இருந்தது. அவனது ஸ்பரிசத்தில் அத்தனை ரோமங்களும் எழுந்து நின்றதை போல் உணர்வு. இரண்டு கண்களையும் இறுக்கி மூடிக் கொண்டாள்.
அவனுக்கோ அவளின் அருகாமை, உடலின் வெப்பம் எல்லாம் சேர்ந்து என்னவோ செய்தது. ஏதோ ஏழு ஜென்மங்களாய் பிணைந்திருந்த உணர்வு.
மெதுவாக அவளை சக்கர நாற்காலியில் உட்கார வைத்தவன், விடு விடு வென வீட்டுக்குள் சென்றான்.
கௌரியும் தெய்வாவும் அவளை அவுட் ஹவுஸிற்கு அழைத்துச் செனறனர்.
“பவதாரிணி. நீ இங்கே சௌகர்யமா இருக்கலாம். கௌரி உன்னை பாத்துப்பாங்க. ஏதாவது னா என்னை ஃபோன்ல கூப்பிடு. நல்லா சாப்பிடு. மாத்திரை கரெக்டா போட்டுக்க. உன் வீட்டில் இருக்கிற மாதிரி நினைச்சுக்க.. கௌரி பாத்துக்க” என்று சொல்லிவிட்டு தெய்வா கிளம்பினார்.
அப்போது தான் பவதாரிணிக்கு நிம்மதியாக ஒரு பெருமூச்சு வந்தது.
‘அப்பாடா, அந்த முசுடுகிட்ட இருந்து தள்ளி இருக்கலாம். தினமும் அவரை பாத்துக்கிட்டே அங்கேயே இருக்கிறது எவ்ளோ பெரிய தண்டனை’ தனக்குள் சொல்லிக் கொண்டு கௌரியை பார்த்து மெதுவாக சிரித்தாள்.
“ஏதாவது சாப்பிடறீங்களா மா. குடிக்க ஜூஸ் போடவா” கௌரி கேட்டதும், சுற்று முற்றும் பார்த்தாள்.
“உங்க கண்ணுக்கு மட்டும் பக்கத்தில் யாராவது தெரியறாங்களா அக்கா?” என்று தாரிணி கேட்டதும்,
இப்போது சுற்றும் முற்றும் பார்த்து முழித்தது கௌரி.
கேள்வியாய் தாரிணியை பார்க்க, “இல்ல அம்மான்னு யாரையோ கூப்பிட்டீங்களே… அதான்” அவள் சொன்னதும் தான் கௌரிக்கு புரிந்தது.
“அட என்னம்மா நீங்க வேற. சொல்லுங்க ஜூஸ் போடவா? “
“பாத்தீங்களா … பாத்தீங்களா திரும்ப அம்மான்னு.. என்ன பார்த்தா அவ்ளோ வயசானவ மாதிரியா இருக்கு… சும்மா தாரிணின்னு கூப்பிடுங்க..”
“பரவால்ல மா.. எல்லாருமே இங்க மதும்மாவையும் அப்படித்தான் கூப்பிடுவோம். அவங்களுக்கு உங்களை விட ஒன்னு ரெண்டு வயசு தான் கூட இருக்கும்.. தெய்வாம்மா உங்களை கூப்பிட்டு வந்துருக்காங்க. அப்போ நாங்க மரியாதையா தான் கூப்பிடுவோம்”
“மதும்மாவா.. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.. கொஞ்ச நாளா என் வாழ்க்கை ஏதோ ரிப்பீட் மோட்ல போற மாதிரியே இருக்குக்கா. கேட்ட பேரையே கேட்கிறேன். பாத்தவங்களையே பார்க்கறேன்.. எதாவது லூப்ல மாட்டிக்கிட்டேன் போல” தாரிணி பேச, ஒன்றும் புரியாமல் விழித்தார் கௌரி.
அவர் விழித்ததை பார்த்து அசடு வழிந்து தாரிணி மறக்காமல் ஒரு அசட்டு சிரிப்பையும் சிரித்து வைத்தாள்.
இதற்கு மேல் அவளிடம் பேசினால் மண்டையை பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்து அவளுக்காக ஜூஸ் போட சென்றார் கௌரி.
தன் அறைக்கு வந்தவனுக்கு நடந்தவை எல்லாமே ஆச்சர்யமாக இருந்தது. வழக்கமாக தன் தாடியை தடவிக்கொண்டே யோசிப்பவனுக்கு வேறு ஒரு வாசனை அவன் கைகளில் வீசியது போல் இருந்தது. அதை மூக்கிற்கு அருகில் கொண்டு சென்றான்.
பூக்கள் பூத்ததும் வீசும் வாசனை போல் அவன் கைகளில் நறுமணம் வீசியது. தாரிணியின் முகம் அவனுக்கு நினைவில் வந்தது.
தான் அருகே சென்றதும் இறுக்கி மூடிய அவள் கண்களும், உதடுகளும் இப்போது மிக அருகில் இருப்பதாய் அவனுக்கு தெரிந்தது.
அந்த மெல்லிய பட்டுப்போன்ற மேனியும், அவள் வாசனையும், அவளின் பயந்த குரலும், அவன் இதுவரை பார்த்த மேல்தட்டு பெண்களிடம் இருந்து எல்லாவற்றிலும் வித்தியாசப்படுத்தியது.
ஏனோ அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. இது என்ன விசித்திரம் என்று நினைத்து வேகமாக சென்று சில்லென்ற தண்ணீரை முகத்தில் வாரி அடித்தான்.
கண்ணாடியின் முன் வந்து அவன் முகத்தை, உடலை தீர்க்கமாக பார்த்தான்.
இறுக்கி செதுக்கி வைத்ததைப் போன்ற முகம். லேசாக ட்ரிம் செய்யப்பட்ட தாடி, மீசை. கோபத்தில் கூர் நாசி இன்னமும் கூராக இருந்தது. கண்களில் எப்போதும் எரித்து விடுவதைப் போன்ற பார்வை. இரு புருவங்களும் அவன் பார்க்கும் திசையில் தூக்கியது.
உடற்பயிற்சியால் இறுகிய புஜங்கள். டீஷர்ட்டில் திமிரிக் கொண்டு இருக்கும் மார்புகள். சரிதான். எந்த பெண்ணுக்கும் பயம் வரவைக்க கூடிய தோற்றம் தான்.
ஒரு நொடி சிரித்து, உடலை தளர்த்தி, தலையை கலைத்து விட்டு பார்த்தான்.
‘நோ’ அவனே சொல்லிக் கொண்டு மீண்டும் பழையத் தோற்றத்திற்கு உடலை கொண்டு வந்து கண்ணாடியில் பார்த்தான்.
‘ம்ம் இப்பத்தான் கரெக்டா இருக்கு’ தனக்குள் சொல்லிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி கொண்டு அலுவலகம் போக கிளம்பி வந்தவன் எதிரில் தாத்தா நின்றிருந்தார்.
“அகரா. அந்த பொண்ணு வந்ததா அம்மா சொன்னா. அவ ஃபோன், பேக்கெல்லாம் தொலைஞ்சிருச்சுன்னு சொன்ன இல்ல.. வேணா புதுசா வாங்கி கொடுத்திரு” அவன் பதிலை எதிர்பார்க்காமல் கடந்து சென்றார்.
‘என்னங்கடா நடக்குது இங்க. காலையில அம்மா என்னடான்னா அந்த பொண்ண தொட்டு தூக்குன்னு சொல்றாங்க. இவர் என்னடான்னா அந்த பொண்ணுக்கு ஃபோன், பேக் வாங்கித் தர சொல்றார். சம்திங் ராங்.. ஒரு வேளை இதெல்லாமே இவங்க பண்ற செட்டப்போ? எனக்கு கல்யாணம் பண்ண சின்ன பொண்ண வச்சு ப்ளான் கிளான்னு.. நோ..நெவர். இந்த அகரன் வாழ்க்கையில் பெண்ணா.அதுவும் இளம்பெண்ணா… என்னடா அகரா உனக்கு வந்த சோதனை.’ புலம்பியவன் எதிரில் மது முறைத்துக் கொண்டே நின்றிருந்தாள்.
‘இவளுக்கு வாங்கியும் ஒன்னும் அடங்கல.. இருடி உன்னை சமயம் பாத்து நாலு தட்டு தட்டறேன்.. என் பக்கமே எப்பவும் வரக்கூடாது’ என நினைத்துக் கொண்டே அவளை பதிலுக்கு முறைத்து விட்டு கிளம்பினான். அவன் போகும் திசையில் அவள் கண்கள் சென்றது.
‘ஆள் பாக்க ஒன்னும் சரியில்லையே. நேத்து இருந்த மாதிரி இவன் இப்போ இல்ல.இவ்ளோ அமைதியா இவன் வாழ்க்கை போகக் கூடாதே. எதாவது பண்ணனும். ஆனா நான் தான் செஞ்சேன்னு தெரியக்கூடாது. தெரிஞ்சா…. ‘ அன்று கழுத்தை இறுக்கியது அவள் நினைவுக்கு வந்தது.
‘மை காட்’ வாயை குவித்து காற்றை ஊதிவிட்டு நடந்தாள்.
அன்றைய தினம் அவர்களின் முதல் ஏற்றுமதிக்கான ஆர்டர் அனைத்தையும் அனுப்ப வேண்டிய நாள்.
தாத்தாவிடமும், அம்மாவிடமும் ஆசி பெற்றவன், “மாமா. இன்னிக்கு நீங்க என்னோட வாங்க மாமா. முதல் ஆர்டர் உங்க கையால அனுப்பி வைங்க” என அகரன் கூப்பிட்டதும், பாண்டியனின் கண்களில் நீர் கோர்த்தது.
“மது, பாரு உனக்கு கூப்பிட தோணலை. அகரன் கூப்பிடறான் பாரு.” என அவர் சொன்னதும் மதுவிற்கு கோபம் வந்தது.
“அவனா போய் எடுத்த ஆர்டர். அதனால அவன் கூப்பிடறான். நான் சொன்ன மாதிரி டிசைன்ஸ், கலர்ல கொண்டு போய் காமிச்சு இருந்தா இப்ப நாம அனுப்பறதை போல பத்து மடங்கு அனுப்பியிருக்கலாம்.அப்ப நானும் உங்களை கூப்பிட்டு இருப்பேன். இதுல எவ்வளவு நஷ்டம்னு அக்கவுண்ட்ஸ் எடுத்துப் பார்த்தா தான் தெரியும்.”
சமயம் பார்த்து அவனை மட்டம் தட்டினாள்.
“தாத்தா, இங்க பாருங்க. இந்த டிசைன்ஸ் அவங்களை ரீச் ஆகறதுக்கு முன்னாடியே, நாம அனுப்பின சாம்பிள்ஸ் பார்த்து அடுத்த ஆர்டர் வந்திருக்கு. அவங்களே அவங்க சிஸ்டர் கன்சர்ன்ஸ்க்கு ரெஃபர் பண்ணிருக்காங்க. நாம டிசைன்ஸ் மெயில் பண்ணிட்டு சாம்பிள்ஸ் அனுப்பனும்.” அவன் மடிக்கணினியில் விவரங்களை காண்பித்து, சொன்னதும் மூன்று பேரும் அவனை பெருமையாக பார்த்தார்கள்.
மதுமிதாவின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.
“அவன் சொல்ற ஆர்டர்ஸையே நீங்களும் ஒத்துக்கிட்டா நான் எப்படி என்னை நிரூபிக்க முடியும். அப்புறமா ஒரு வருஷம் முடிஞ்சதும் அகரன் தான் நல்லா கம்பெனியை பாத்துக்கிட்டான்னு அவன்கிட்ட மொத்தமா தூக்கி கொடுப்பீங்க. நான் வேடிக்கை பாக்கனும்.”
மது வெடித்தாள்.
“நீ உன் சொந்த முயற்சியில் கிளையண்ட் பிடி. டிசைன்ஸ் அனுப்பு. ஆர்டர் எடு. அகரன் கொண்டு வர கிளையண்ட்ஸ்ட்ட உன் டிசைன்ஸ தான் காமிக்கனும்னு அவன் ஊருக்கு கிளம்பறதுக்கு முன்னாடி நீ பண்ண அமர்க்களம் இருக்கே.. அன்னிக்கே உன்ன கம்பெனியை பார்த்துக்க வேணாம்னு சொல்லியிருக்கனும்”
பாண்டியன் சொல்ல, மதுவுக்கு அவள் அப்பாவின் மீது கோபம் அதிகமானது.
“லுக்…நீங்க மிரட்டற அளவுக்கு நான் ஒன்னுமில்லாதவ இல்ல. தாத்தா சொத்துக்கு சட்டப்படி நான் தான் வாரிசு. உங்களுக்கு கூட இல்ல..இவனுக்கு அதில பங்கு கொடுக்க நாங்க ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம். இதுல மொத்த கம்பெனி உரிமையை அவனுக்கு கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன்”
அவளின் பேச்சை பார்த்து தாத்தாவுக்கு எரிச்சல் வர முகத்தை சுளித்துக் கொண்டார்.
“பாண்டியா, என் ரூம்க்கு வா. அகரா நீ கிளம்பு. அவன் அப்புறமா வருவான்”
சொல்லிவிட்டு நேராக அவர் அறைக்கு சென்றார்.
“அமைதியா போற குடும்பத்தில் உங்க ரெண்டு பேரால் தான் பிரச்சினையே” தலையில் அடித்துக் கொண்டு தன் அப்பாவின் அறைக்கு சென்றார் பாண்டியன்.
அம்மாவைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு தன் நிறுவனத்துக்கு கிளம்பினான் அகரன்.
வாசல் வரை வந்தவன் எட்டி பின்பக்கம் இருக்கும் அவுட் ஹவுஸை பார்த்தான். கதவு மூடியிருந்தது. ஜன்னல் அருகிலும் பவதாரிணி இல்லை.
“தம்பி …தம்பி” பின்னாடி குரல் வந்த திசையை பார்த்தான்.
கௌரி நின்றிருந்தார்.
“என்ன தம்பி பார்க்கறீங்க. இப்பத்தான் தாரிணிம்மா படுத்தாங்க. சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டாங்க”
“ஓ.. இல்ல நான் சும்மாதான் பாத்தேன்.அவங்களை இல்ல… “ என சமாளித்தான்.
“அப்படியா தம்பி. நான் நீங்க அவங்களைத்தான் தேடறீங்களோனு நினைச்சேன்.. அவங்க ரொம்ப குறும்புக்காரங்க தம்பி. நல்லா தமாஷா பேசுறாங்க”
கௌரி சிரித்துக் கொண்டே செல்ல,
‘ஆமாமா.. குறும்பு தான் .. அன்னிக்கே பார்த்தேனே. முன்ன பின்ன தெரியாதவங்களை கூட கிண்டல், நக்கல் பண்ற குணம்’. உதட்டை சுளித்துக் கொண்டு அவன் வண்டியை கிளப்பினான்.
அந்த சத்தம் கேட்டு படுத்த இடத்தில் இருந்தே எட்டிப் பார்த்தாள் தாரிணி. ஜன்னல் வழியே எதுவும் தெரியவில்லை.
வண்டி வெளியில் சென்று விட்டது தேய்ந்த ஒலியில் தெரிந்தது.
அருகில் இருந்த தலையணையை எடுத்து மார்போடு அணைத்தாள்.
சட்டென்று அவனின் வாசனை அவளின் இதயத்தில் நுழைந்தது போல் இருந்தது. அவனின் இரும்பு போன்ற புஜங்கள் அவளின் நினைவில் நின்றது. இன்னும் கொஞ்ச நேரம் அந்த உடும்பு பிடியில் இருக்க மாட்டோமா என்று ஒரு சின்ன ஆசை சில நொடிகளுக்கு வந்தது.
‘ச்ச. என்ன இப்படி வெட்கம் கெட்டு அவரை நினைக்கிறேன். ‘ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே கட்டிலில் முகம் புதைத்தாள்.
**
நிறுவனத்தில் பேக்கிங் பிரிவில் அனைவரும் அவன் வருகைக்காக காத்து இருந்தனர்.
“எல்லாம் ரெடியா.. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை செக் பண்ணிட்டீங்களா. ஹார்பருக்கு தேவையான லீகல் பேப்பர்ஸ் ரெடியா சாரதி..” கேட்டுக் கொண்டே கட்டப்பட்டு இருந்த பெட்டிகளை பார்த்துக் கொண்டே சுற்றி வந்தான்.
சில பெட்டிகளில் ‘எதுவும் ஆபத்தில்லை’ என்ற ஸ்டிக்கர்களுக்கு பதில் , ‘நனைந்தால் ஆபத்து- வெடிபொருள்’ என்று ஒட்டப்பட்டு இருந்த ஸ்டிக்கர்களை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.
அவனின் முகபாவங்களை பார்த்ததுமே அனைவர் முகத்திலும், குழப்பமும், பயமும் தோன்றியது.
அவன் சொல்லும் விஷயத்தில் ஏதேனும் சிறு தப்பு நடந்தாலே அதில் சம்பந்தப்பட்டவர்களை வறுத்தெடுத்து விடுவான்.
ஒரு வாரமாக பல்வேறு பிரச்சினைக்கு இடையில் ஒவ்வொரு பிரிவிலும் சென்று பொறுமையாக எந்த தவறும் நிகழக் கூடாது என்று படித்து படித்து சொல்லியிருந்தான்..
இப்போது என்ன நடக்குமோ என்று மேலாளர் சாரதி பயந்தார்.
அவர் எதிர்பார்த்தது போல அவர் பெயரை சத்தமாக அழைத்தான்.
“சார்.. என்ன சார் … எதுவும் பிரச்சினையா?”
“ம்ம். இல்ல.. சாவகாசமா உட்காந்து பேசத்தான் கூப்பிட்டேன்..என்ன இது…என்ன பண்றீங்க எல்லாரும்” அவன் சுட்டிக் காட்டி கேட்ட இடத்தை பார்த்தார் சாரதி.
முடியில்லாமல் விளக்கு வெளிச்சத்தில் மின்னிய அவர் தலையில் அருவியில் குளித்ததை போல வேர்வை தண்ணீராக வழிந்தது.
“சார்… இது. இது.. நேத்து நைட் நாங்க செக் பண்ணி அடுக்கி வச்சப்ப கரெக்டா தான் சார் இருந்துச்சு. எல்லா லேபிள் அன்ட் ஸ்டிக்கர்ஸ் நான் பார்த்து தான் ஓகே பண்ணேன் சார். ஒட்டறப்பவும் கூட இருந்தேன் சார்.. “
“இப்ப என்ன அதுவா கால் முளைச்சு வந்து பெட்டில ஏறி உட்காந்திருச்சா.. பொறுப்புன்னு ஒன்னு இருந்தா இப்படி கேர்லெஸ்ஸா இருப்பீங்களா? “
“சார்.. சாரி சார்.இதோ உடனே சரி பண்ணிடறேன் சார்” சாரதி பயத்தில் தடுமாறி பேசினார்.
“சாரி.. உங்க சாரி யாருக்கு வேணும். இந்த ப்ராடெக்ட்ஸ் கப்பல்ல ஏறற வரைக்கும் அது உங்க பொறுப்பு. ஒரு தடவைக்கு பத்து தடவை செக் பண்ணனும். நான் சுத்தி வந்து பார்த்த உடனே கண்டுபிடிச்சேன் இல்ல. உங்களுக்கு கண்ணு என்ன பின்னாடியா இருந்துச்சு.” கோபத்தில் அவனது மாந்தளிர் நிற தேகம் சிவந்தது.
மூக்கு நுனி விடைத்து அடங்கியது.
“ஸ்டிக்கர்ஸ் பேஸ்ட் பண்ணவங்க யாரு. இதை உடனே மாத்த சொல்லுங்க. அதோட எப்படி இந்த மிஸ்டேக்ஸ் நடந்ததுன்னு தெரியனும். சிசிடிவி ல பாத்துட்டு எனக்கு டீடெய்ல் ரிப்போர்ட் வேணும்.” சொல்லிக் கொண்டே மீண்டும் ஒவ்வொரு பெட்டியாக கவனிக்க ஆரம்பித்தான்.
விடியலில் தெய்வாவும், அகரனும் மருத்துவமனை சென்று பவதாரிணியை அழைத்துக் கொண்டு வீடு வந்தனர்.
வெளியில் இருந்து பார்க்கும் போது, பளிங்கு அரண்மனை போல் வீடு இருந்தது. அதன் பிரம்மாண்டத்தை பார்க்கும் போதே பவதாரிணிக்கு மூச்சு அடைத்தது. இவ்வளவு பெரிய வீட்டில் எப்படி நாம் இருப்பது?, இங்கு வேறு யாரெல்லாம் இருப்பார்கள்?
நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டது.
காரில் இருந்து இறங்கிய தெய்வா, “கௌரி … கௌரி” என்று அழைத்ததும், வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர் வந்து நின்றார்.
“கௌரி.. இதான் பவதாரிணி. நீ தான் இந்த பொண்ணு நடக்கற வரைக்கும் பாத்துக்கணும். ஒரு கைப்பிடி. மெதுவா இறக்கி இந்த ச்சேர்ல உட்கார வைக்கலாம். பாத்து இறங்குமா.” என தெய்வா கைகளை நீட்டி அழைக்க, தாரிணியால் கீழே காலை ஊன்ற முடியவில்லை.
கௌரியும், தெய்வாவும் ஆளுக்கு ஒரு பக்கமாய் பிடித்தாலும் அவளைத் தூக்க முடியவில்லை.
“அகரா, இங்க வா. இந்த பொண்ணை இந்த பக்கம் பிடி. அப்படியே தூக்கி உட்கார வைக்கலாம்” என்று சொன்னதும், அகரன், தாரிணி இருவரும் அதிர்ந்தார்கள்.
பவதாரிணியின் உடல் முழுதும் வேர்க்கத் தொடங்கியது.
அகரன் உறைந்தது போல் நின்றான்.
“என்னப்பா வா “ என்று கூப்பிட்டாலும் அவன் காதில் விழவேயில்லை.
“இல்ல பரவால்ல ஆண்ட்டி..மேம்.. நானே காலை ஊன்றேன்”.
சொல்லிக் கொண்டே காலை கீழே வைத்தாள். அவளால் சம நிலைப்படுத்தி எழுந்திரிக்க முடியவில்லை.
“இரும்மா.. அகரா” என்று சத்தமாக கூப்பிட்டதும் அருகில் வந்து நின்றான்.
“தூக்குப்பா. நான் இந்தப் பக்கம் பிடிக்கிறேன்”
தெய்வா சொன்னதும், அவன் கை நடுங்கியது. இருந்தும் சமாளித்துக் கொண்டே அவளை முழங்கையில் பிடித்தான். அதுவே இரும்புப் பிடி போல் இருந்தது.
அவளுக்கு வலித்ததை அவள் முகம் போன போக்கில் புரிந்தவன், மெதுவாக பிடித்தான்.
“மேலே பிடி அகரா. முழங்கையில் பிடித்தால் எப்படி தூக்குவ” அம்மா சொன்னதும் தான் புரிந்தது.
மெல்ல அவளின் கையை தோள்பட்டையோடு பிடித்து தூக்கியவனின் வாசனை அவள் நுரையீரல் முழுதும் நிரம்பியது. மிக மிக அருகாமையில் அவனது உடல் அவளுக்கு முன் இருந்தது. அவனது ஸ்பரிசத்தில் அத்தனை ரோமங்களும் எழுந்து நின்றதை போல் உணர்வு. இரண்டு கண்களையும் இறுக்கி மூடிக் கொண்டாள்.
அவனுக்கோ அவளின் அருகாமை, உடலின் வெப்பம் எல்லாம் சேர்ந்து என்னவோ செய்தது. ஏதோ ஏழு ஜென்மங்களாய் பிணைந்திருந்த உணர்வு.
மெதுவாக அவளை சக்கர நாற்காலியில் உட்கார வைத்தவன், விடு விடு வென வீட்டுக்குள் சென்றான்.
கௌரியும் தெய்வாவும் அவளை அவுட் ஹவுஸிற்கு அழைத்துச் செனறனர்.
“பவதாரிணி. நீ இங்கே சௌகர்யமா இருக்கலாம். கௌரி உன்னை பாத்துப்பாங்க. ஏதாவது னா என்னை ஃபோன்ல கூப்பிடு. நல்லா சாப்பிடு. மாத்திரை கரெக்டா போட்டுக்க. உன் வீட்டில் இருக்கிற மாதிரி நினைச்சுக்க.. கௌரி பாத்துக்க” என்று சொல்லிவிட்டு தெய்வா கிளம்பினார்.
அப்போது தான் பவதாரிணிக்கு நிம்மதியாக ஒரு பெருமூச்சு வந்தது.
‘அப்பாடா, அந்த முசுடுகிட்ட இருந்து தள்ளி இருக்கலாம். தினமும் அவரை பாத்துக்கிட்டே அங்கேயே இருக்கிறது எவ்ளோ பெரிய தண்டனை’ தனக்குள் சொல்லிக் கொண்டு கௌரியை பார்த்து மெதுவாக சிரித்தாள்.
“ஏதாவது சாப்பிடறீங்களா மா. குடிக்க ஜூஸ் போடவா” கௌரி கேட்டதும், சுற்று முற்றும் பார்த்தாள்.
“உங்க கண்ணுக்கு மட்டும் பக்கத்தில் யாராவது தெரியறாங்களா அக்கா?” என்று தாரிணி கேட்டதும்,
இப்போது சுற்றும் முற்றும் பார்த்து முழித்தது கௌரி.
கேள்வியாய் தாரிணியை பார்க்க, “இல்ல அம்மான்னு யாரையோ கூப்பிட்டீங்களே… அதான்” அவள் சொன்னதும் தான் கௌரிக்கு புரிந்தது.
“அட என்னம்மா நீங்க வேற. சொல்லுங்க ஜூஸ் போடவா? “
“பாத்தீங்களா … பாத்தீங்களா திரும்ப அம்மான்னு.. என்ன பார்த்தா அவ்ளோ வயசானவ மாதிரியா இருக்கு… சும்மா தாரிணின்னு கூப்பிடுங்க..”
“பரவால்ல மா.. எல்லாருமே இங்க மதும்மாவையும் அப்படித்தான் கூப்பிடுவோம். அவங்களுக்கு உங்களை விட ஒன்னு ரெண்டு வயசு தான் கூட இருக்கும்.. தெய்வாம்மா உங்களை கூப்பிட்டு வந்துருக்காங்க. அப்போ நாங்க மரியாதையா தான் கூப்பிடுவோம்”
“மதும்மாவா.. எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே.. கொஞ்ச நாளா என் வாழ்க்கை ஏதோ ரிப்பீட் மோட்ல போற மாதிரியே இருக்குக்கா. கேட்ட பேரையே கேட்கிறேன். பாத்தவங்களையே பார்க்கறேன்.. எதாவது லூப்ல மாட்டிக்கிட்டேன் போல” தாரிணி பேச, ஒன்றும் புரியாமல் விழித்தார் கௌரி.
அவர் விழித்ததை பார்த்து அசடு வழிந்து தாரிணி மறக்காமல் ஒரு அசட்டு சிரிப்பையும் சிரித்து வைத்தாள்.
இதற்கு மேல் அவளிடம் பேசினால் மண்டையை பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைத்து அவளுக்காக ஜூஸ் போட சென்றார் கௌரி.
தன் அறைக்கு வந்தவனுக்கு நடந்தவை எல்லாமே ஆச்சர்யமாக இருந்தது. வழக்கமாக தன் தாடியை தடவிக்கொண்டே யோசிப்பவனுக்கு வேறு ஒரு வாசனை அவன் கைகளில் வீசியது போல் இருந்தது. அதை மூக்கிற்கு அருகில் கொண்டு சென்றான்.
பூக்கள் பூத்ததும் வீசும் வாசனை போல் அவன் கைகளில் நறுமணம் வீசியது. தாரிணியின் முகம் அவனுக்கு நினைவில் வந்தது.
தான் அருகே சென்றதும் இறுக்கி மூடிய அவள் கண்களும், உதடுகளும் இப்போது மிக அருகில் இருப்பதாய் அவனுக்கு தெரிந்தது.
அந்த மெல்லிய பட்டுப்போன்ற மேனியும், அவள் வாசனையும், அவளின் பயந்த குரலும், அவன் இதுவரை பார்த்த மேல்தட்டு பெண்களிடம் இருந்து எல்லாவற்றிலும் வித்தியாசப்படுத்தியது.
ஏனோ அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. இது என்ன விசித்திரம் என்று நினைத்து வேகமாக சென்று சில்லென்ற தண்ணீரை முகத்தில் வாரி அடித்தான்.
கண்ணாடியின் முன் வந்து அவன் முகத்தை, உடலை தீர்க்கமாக பார்த்தான்.
இறுக்கி செதுக்கி வைத்ததைப் போன்ற முகம். லேசாக ட்ரிம் செய்யப்பட்ட தாடி, மீசை. கோபத்தில் கூர் நாசி இன்னமும் கூராக இருந்தது. கண்களில் எப்போதும் எரித்து விடுவதைப் போன்ற பார்வை. இரு புருவங்களும் அவன் பார்க்கும் திசையில் தூக்கியது.
உடற்பயிற்சியால் இறுகிய புஜங்கள். டீஷர்ட்டில் திமிரிக் கொண்டு இருக்கும் மார்புகள். சரிதான். எந்த பெண்ணுக்கும் பயம் வரவைக்க கூடிய தோற்றம் தான்.
ஒரு நொடி சிரித்து, உடலை தளர்த்தி, தலையை கலைத்து விட்டு பார்த்தான்.
‘நோ’ அவனே சொல்லிக் கொண்டு மீண்டும் பழையத் தோற்றத்திற்கு உடலை கொண்டு வந்து கண்ணாடியில் பார்த்தான்.
‘ம்ம் இப்பத்தான் கரெக்டா இருக்கு’ தனக்குள் சொல்லிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி கொண்டு அலுவலகம் போக கிளம்பி வந்தவன் எதிரில் தாத்தா நின்றிருந்தார்.
“அகரா. அந்த பொண்ணு வந்ததா அம்மா சொன்னா. அவ ஃபோன், பேக்கெல்லாம் தொலைஞ்சிருச்சுன்னு சொன்ன இல்ல.. வேணா புதுசா வாங்கி கொடுத்திரு” அவன் பதிலை எதிர்பார்க்காமல் கடந்து சென்றார்.
‘என்னங்கடா நடக்குது இங்க. காலையில அம்மா என்னடான்னா அந்த பொண்ண தொட்டு தூக்குன்னு சொல்றாங்க. இவர் என்னடான்னா அந்த பொண்ணுக்கு ஃபோன், பேக் வாங்கித் தர சொல்றார். சம்திங் ராங்.. ஒரு வேளை இதெல்லாமே இவங்க பண்ற செட்டப்போ? எனக்கு கல்யாணம் பண்ண சின்ன பொண்ண வச்சு ப்ளான் கிளான்னு.. நோ..நெவர். இந்த அகரன் வாழ்க்கையில் பெண்ணா.அதுவும் இளம்பெண்ணா… என்னடா அகரா உனக்கு வந்த சோதனை.’ புலம்பியவன் எதிரில் மது முறைத்துக் கொண்டே நின்றிருந்தாள்.
‘இவளுக்கு வாங்கியும் ஒன்னும் அடங்கல.. இருடி உன்னை சமயம் பாத்து நாலு தட்டு தட்டறேன்.. என் பக்கமே எப்பவும் வரக்கூடாது’ என நினைத்துக் கொண்டே அவளை பதிலுக்கு முறைத்து விட்டு கிளம்பினான். அவன் போகும் திசையில் அவள் கண்கள் சென்றது.
‘ஆள் பாக்க ஒன்னும் சரியில்லையே. நேத்து இருந்த மாதிரி இவன் இப்போ இல்ல.இவ்ளோ அமைதியா இவன் வாழ்க்கை போகக் கூடாதே. எதாவது பண்ணனும். ஆனா நான் தான் செஞ்சேன்னு தெரியக்கூடாது. தெரிஞ்சா…. ‘ அன்று கழுத்தை இறுக்கியது அவள் நினைவுக்கு வந்தது.
‘மை காட்’ வாயை குவித்து காற்றை ஊதிவிட்டு நடந்தாள்.
அன்றைய தினம் அவர்களின் முதல் ஏற்றுமதிக்கான ஆர்டர் அனைத்தையும் அனுப்ப வேண்டிய நாள்.
தாத்தாவிடமும், அம்மாவிடமும் ஆசி பெற்றவன், “மாமா. இன்னிக்கு நீங்க என்னோட வாங்க மாமா. முதல் ஆர்டர் உங்க கையால அனுப்பி வைங்க” என அகரன் கூப்பிட்டதும், பாண்டியனின் கண்களில் நீர் கோர்த்தது.
“மது, பாரு உனக்கு கூப்பிட தோணலை. அகரன் கூப்பிடறான் பாரு.” என அவர் சொன்னதும் மதுவிற்கு கோபம் வந்தது.
“அவனா போய் எடுத்த ஆர்டர். அதனால அவன் கூப்பிடறான். நான் சொன்ன மாதிரி டிசைன்ஸ், கலர்ல கொண்டு போய் காமிச்சு இருந்தா இப்ப நாம அனுப்பறதை போல பத்து மடங்கு அனுப்பியிருக்கலாம்.அப்ப நானும் உங்களை கூப்பிட்டு இருப்பேன். இதுல எவ்வளவு நஷ்டம்னு அக்கவுண்ட்ஸ் எடுத்துப் பார்த்தா தான் தெரியும்.”
சமயம் பார்த்து அவனை மட்டம் தட்டினாள்.
“தாத்தா, இங்க பாருங்க. இந்த டிசைன்ஸ் அவங்களை ரீச் ஆகறதுக்கு முன்னாடியே, நாம அனுப்பின சாம்பிள்ஸ் பார்த்து அடுத்த ஆர்டர் வந்திருக்கு. அவங்களே அவங்க சிஸ்டர் கன்சர்ன்ஸ்க்கு ரெஃபர் பண்ணிருக்காங்க. நாம டிசைன்ஸ் மெயில் பண்ணிட்டு சாம்பிள்ஸ் அனுப்பனும்.” அவன் மடிக்கணினியில் விவரங்களை காண்பித்து, சொன்னதும் மூன்று பேரும் அவனை பெருமையாக பார்த்தார்கள்.
மதுமிதாவின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது.
“அவன் சொல்ற ஆர்டர்ஸையே நீங்களும் ஒத்துக்கிட்டா நான் எப்படி என்னை நிரூபிக்க முடியும். அப்புறமா ஒரு வருஷம் முடிஞ்சதும் அகரன் தான் நல்லா கம்பெனியை பாத்துக்கிட்டான்னு அவன்கிட்ட மொத்தமா தூக்கி கொடுப்பீங்க. நான் வேடிக்கை பாக்கனும்.”
மது வெடித்தாள்.
“நீ உன் சொந்த முயற்சியில் கிளையண்ட் பிடி. டிசைன்ஸ் அனுப்பு. ஆர்டர் எடு. அகரன் கொண்டு வர கிளையண்ட்ஸ்ட்ட உன் டிசைன்ஸ தான் காமிக்கனும்னு அவன் ஊருக்கு கிளம்பறதுக்கு முன்னாடி நீ பண்ண அமர்க்களம் இருக்கே.. அன்னிக்கே உன்ன கம்பெனியை பார்த்துக்க வேணாம்னு சொல்லியிருக்கனும்”
பாண்டியன் சொல்ல, மதுவுக்கு அவள் அப்பாவின் மீது கோபம் அதிகமானது.
“லுக்…நீங்க மிரட்டற அளவுக்கு நான் ஒன்னுமில்லாதவ இல்ல. தாத்தா சொத்துக்கு சட்டப்படி நான் தான் வாரிசு. உங்களுக்கு கூட இல்ல..இவனுக்கு அதில பங்கு கொடுக்க நாங்க ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம். இதுல மொத்த கம்பெனி உரிமையை அவனுக்கு கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன்”
அவளின் பேச்சை பார்த்து தாத்தாவுக்கு எரிச்சல் வர முகத்தை சுளித்துக் கொண்டார்.
“பாண்டியா, என் ரூம்க்கு வா. அகரா நீ கிளம்பு. அவன் அப்புறமா வருவான்”
சொல்லிவிட்டு நேராக அவர் அறைக்கு சென்றார்.
“அமைதியா போற குடும்பத்தில் உங்க ரெண்டு பேரால் தான் பிரச்சினையே” தலையில் அடித்துக் கொண்டு தன் அப்பாவின் அறைக்கு சென்றார் பாண்டியன்.
அம்மாவைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு தன் நிறுவனத்துக்கு கிளம்பினான் அகரன்.
வாசல் வரை வந்தவன் எட்டி பின்பக்கம் இருக்கும் அவுட் ஹவுஸை பார்த்தான். கதவு மூடியிருந்தது. ஜன்னல் அருகிலும் பவதாரிணி இல்லை.
“தம்பி …தம்பி” பின்னாடி குரல் வந்த திசையை பார்த்தான்.
கௌரி நின்றிருந்தார்.
“என்ன தம்பி பார்க்கறீங்க. இப்பத்தான் தாரிணிம்மா படுத்தாங்க. சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டாங்க”
“ஓ.. இல்ல நான் சும்மாதான் பாத்தேன்.அவங்களை இல்ல… “ என சமாளித்தான்.
“அப்படியா தம்பி. நான் நீங்க அவங்களைத்தான் தேடறீங்களோனு நினைச்சேன்.. அவங்க ரொம்ப குறும்புக்காரங்க தம்பி. நல்லா தமாஷா பேசுறாங்க”
கௌரி சிரித்துக் கொண்டே செல்ல,
‘ஆமாமா.. குறும்பு தான் .. அன்னிக்கே பார்த்தேனே. முன்ன பின்ன தெரியாதவங்களை கூட கிண்டல், நக்கல் பண்ற குணம்’. உதட்டை சுளித்துக் கொண்டு அவன் வண்டியை கிளப்பினான்.
அந்த சத்தம் கேட்டு படுத்த இடத்தில் இருந்தே எட்டிப் பார்த்தாள் தாரிணி. ஜன்னல் வழியே எதுவும் தெரியவில்லை.
வண்டி வெளியில் சென்று விட்டது தேய்ந்த ஒலியில் தெரிந்தது.
அருகில் இருந்த தலையணையை எடுத்து மார்போடு அணைத்தாள்.
சட்டென்று அவனின் வாசனை அவளின் இதயத்தில் நுழைந்தது போல் இருந்தது. அவனின் இரும்பு போன்ற புஜங்கள் அவளின் நினைவில் நின்றது. இன்னும் கொஞ்ச நேரம் அந்த உடும்பு பிடியில் இருக்க மாட்டோமா என்று ஒரு சின்ன ஆசை சில நொடிகளுக்கு வந்தது.
‘ச்ச. என்ன இப்படி வெட்கம் கெட்டு அவரை நினைக்கிறேன். ‘ என்று தனக்குள் சொல்லிக் கொண்டே கட்டிலில் முகம் புதைத்தாள்.
**
நிறுவனத்தில் பேக்கிங் பிரிவில் அனைவரும் அவன் வருகைக்காக காத்து இருந்தனர்.
“எல்லாம் ரெடியா.. ஒரு தடவைக்கு ரெண்டு தடவை செக் பண்ணிட்டீங்களா. ஹார்பருக்கு தேவையான லீகல் பேப்பர்ஸ் ரெடியா சாரதி..” கேட்டுக் கொண்டே கட்டப்பட்டு இருந்த பெட்டிகளை பார்த்துக் கொண்டே சுற்றி வந்தான்.
சில பெட்டிகளில் ‘எதுவும் ஆபத்தில்லை’ என்ற ஸ்டிக்கர்களுக்கு பதில் , ‘நனைந்தால் ஆபத்து- வெடிபொருள்’ என்று ஒட்டப்பட்டு இருந்த ஸ்டிக்கர்களை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.
அவனின் முகபாவங்களை பார்த்ததுமே அனைவர் முகத்திலும், குழப்பமும், பயமும் தோன்றியது.
அவன் சொல்லும் விஷயத்தில் ஏதேனும் சிறு தப்பு நடந்தாலே அதில் சம்பந்தப்பட்டவர்களை வறுத்தெடுத்து விடுவான்.
ஒரு வாரமாக பல்வேறு பிரச்சினைக்கு இடையில் ஒவ்வொரு பிரிவிலும் சென்று பொறுமையாக எந்த தவறும் நிகழக் கூடாது என்று படித்து படித்து சொல்லியிருந்தான்..
இப்போது என்ன நடக்குமோ என்று மேலாளர் சாரதி பயந்தார்.
அவர் எதிர்பார்த்தது போல அவர் பெயரை சத்தமாக அழைத்தான்.
“சார்.. என்ன சார் … எதுவும் பிரச்சினையா?”
“ம்ம். இல்ல.. சாவகாசமா உட்காந்து பேசத்தான் கூப்பிட்டேன்..என்ன இது…என்ன பண்றீங்க எல்லாரும்” அவன் சுட்டிக் காட்டி கேட்ட இடத்தை பார்த்தார் சாரதி.
முடியில்லாமல் விளக்கு வெளிச்சத்தில் மின்னிய அவர் தலையில் அருவியில் குளித்ததை போல வேர்வை தண்ணீராக வழிந்தது.
“சார்… இது. இது.. நேத்து நைட் நாங்க செக் பண்ணி அடுக்கி வச்சப்ப கரெக்டா தான் சார் இருந்துச்சு. எல்லா லேபிள் அன்ட் ஸ்டிக்கர்ஸ் நான் பார்த்து தான் ஓகே பண்ணேன் சார். ஒட்டறப்பவும் கூட இருந்தேன் சார்.. “
“இப்ப என்ன அதுவா கால் முளைச்சு வந்து பெட்டில ஏறி உட்காந்திருச்சா.. பொறுப்புன்னு ஒன்னு இருந்தா இப்படி கேர்லெஸ்ஸா இருப்பீங்களா? “
“சார்.. சாரி சார்.இதோ உடனே சரி பண்ணிடறேன் சார்” சாரதி பயத்தில் தடுமாறி பேசினார்.
“சாரி.. உங்க சாரி யாருக்கு வேணும். இந்த ப்ராடெக்ட்ஸ் கப்பல்ல ஏறற வரைக்கும் அது உங்க பொறுப்பு. ஒரு தடவைக்கு பத்து தடவை செக் பண்ணனும். நான் சுத்தி வந்து பார்த்த உடனே கண்டுபிடிச்சேன் இல்ல. உங்களுக்கு கண்ணு என்ன பின்னாடியா இருந்துச்சு.” கோபத்தில் அவனது மாந்தளிர் நிற தேகம் சிவந்தது.
மூக்கு நுனி விடைத்து அடங்கியது.
“ஸ்டிக்கர்ஸ் பேஸ்ட் பண்ணவங்க யாரு. இதை உடனே மாத்த சொல்லுங்க. அதோட எப்படி இந்த மிஸ்டேக்ஸ் நடந்ததுன்னு தெரியனும். சிசிடிவி ல பாத்துட்டு எனக்கு டீடெய்ல் ரிப்போர்ட் வேணும்.” சொல்லிக் கொண்டே மீண்டும் ஒவ்வொரு பெட்டியாக கவனிக்க ஆரம்பித்தான்.