அத்தியாயம் 15
தினமும் தாரிணிக்கு காலை, மாலை என பிஸியோதெரபி மருத்துவரை அழைத்து பயிற்சிகளை செய்ய சொல்லியிருந்தான் அகரன்.
இப்போது சுவரைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் தாரிணி.
அவள் அறைக்கு உணவு எடுத்து வந்த கௌரி, “தாரிணிம்மா.. இப்பதான் இங்க வேலை செய்யறவங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இப்படி அகரன் தம்பி வாழ்க்கை மாறாதான்னு இருந்தோம்.. இன்னும் இரண்டு மாசத்தில கல்யாணம்னு தெய்வாம்மா சொன்னாங்க.. தம்பிக்கு ஏத்த மாதிரி நீங்களும் தேவதை தான். “ என தாரிணியின் முகத்தை நெட்டி முறித்தார்.
“அக்கா.. நானே நினைச்சு பாக்கல. இந்த வீட்டை விட்டு எப்படா போவோம்னு தான் வந்தேன். ஆனா எப்படி இதே வீட்டில மருமகளா வாழ வேண்டி வந்துச்சுன்னு நினைக்க நினைக்க ஆச்சர்யமா இருக்கு.”
“அதான் மா.. இவங்களுக்கு இவங்கதான்னு கடவுள் போடற முடிச்சு இது.. எனக்கு அப்பவே தெரியும்.. நீங்க தான் அகரன் தம்பிக்கு மனைவியா வருவீங்கன்னு..”
“அதெப்படி தெரியும்.. இந்த வீட்டை விட்டு போக உங்ககிட்டே கூட காசு கேட்டேனே..”
“அதெல்லாம் தெரியும் மா.. அகரன் தம்பி ஒரு நாள் நைட் நான் அந்த பக்கம் போறப்ப வரைய ஆரம்பிச்சுச்சு.. காலைல நான் காபி கொண்டு போறப்ப வரைஞ்சு முடிச்சு அது மேலேயே படுத்துட்டு இருந்துச்சு.. என்ன தான் வரைஞ்சிருக்குனு பாத்தா எல்லாமே ரெண்டு பேர் கல்யாண கோலத்தில் நிக்கற மாதிரி படங்க. தெய்வாம்மாட்ட சொன்னேன். அவங்களும் வந்து பாத்துட்டு தெய்வம் இதான் நினைக்குதுன்னா அதுவே நடக்கட்டும்னு சொன்னாங்க..
அடுத்த நாள் நீங்க வீட்டுக்கு வந்ததும் தான் அந்த படத்தில் இருக்கறது நீங்கதான்னு தெரிஞ்சது.
அப்பவே தம்பி மனசுல நீங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்.
உங்க ரெண்டு பேருக்கும் கடவுள் முடிச்சு போடனும்னு வேண்டிக் கிட்டேன்.
அதுக்கு ஏத்த மாதிரி ஒன்னொன்னா நடக்கவும் இப்ப நீங்க அகரன் தம்பிக்கு மனைவியாக போறீங்க”
“ஓ.. இதெல்லாம் எப்போ.. ஆஃபிஸ் ல கூட ஒன்னு ரெண்டு படங்கள் பாத்தேன்.. “
“நீங்க அடிப்பட்டு ஹாஸ்பிட்டல்ல இருந்தீங்க இல்ல… அப்போதான்.. “
“நிஜமாவே ஆச்சர்யமா இருக்குக்கா.. எப்படி அவர் மனசில நான் போனேன்.. என் மனசில் அவர் வந்தார்னு.. நான் அந்த படங்களை பாக்க முடியுமா”
“தம்பி ரூம்ல மறைச்சு வச்சிருக்கு போல.. எங்கேயும் வெளிய காணோம்..” கௌரி சொல்ல அவருடன் அகரனின் அறைக்கு வந்து வார்ட்ரோப்களை ஆராய ஆரம்பித்தாள்.
“இதோ இருக்கு.. “ என்று எடுத்து பார்த்தவள், “வாவ்.. நாங்க ஃபோட்டோ ஷூட் பண்ணோம் இல்ல.. அதெல்லாமே அப்படியே அப்பவே வரைஞ்சு வச்சுருக்கார் கா. இது நிஜமாவே போன ஜென்ம பந்தம் தான். “ என்று மார்போடு அவை அனைத்தையும் அணைத்துக் கொண்டாள்.
________
தெய்வா, “தாரிணி.. நீ இன்னிக்கு கம்பெனிக்கு போகலையா? அகரனும் ஒன்னும் சொல்லாம போயிட்டான் போல.. நான் கோவிலுக்கு போய்ட்டு இப்போதான் வரேன்..” என கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.
“ஆமா.. ஆண்ட்டி.. இன்னிக்கு அவர் எங்கேயோ வெளிய ஒரு ப்ரசண்டேஷனுக்கு போறாராமா..அதான் என்னை வீட்டிலேயே இருக்க சொல்லிட்டார்..”
“ஓ.. அப்ப நீ நல்லா ரெஸ்ட் எடு.. எனக்கு கல்யாண வேலைகள் நிறைய இருக்கு.. உனக்கு புது புடவை எடுக்க இன்னிக்கு புடவைகளை கொண்டு வர சொல்லியிருக்கேன்” என்றார்.
“ஆண்ட்டி நான் ஒன்னு கேட்கவா”
“சொல்லும்மா.. வேற எதாவது வேணுமா?”
“இல்ல ஆண்ட்டி.. அகரன் வரைஞ்சு வச்ச படங்களை அவர் ரூம்ல பாத்தேன். அதெல்லாம் ஏற்கனவே நீங்க பாத்தீங்களா.. அதை பாத்துட்டு தான் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்களா?”
தெய்வா ஒரு நிமிடம் சுதாரித்து, “உனக்கெப்படி தெரியும்.. கௌரி சொன்னாளா.?”
“ஆமா ஆண்ட்டி.. “
“ம்ம் ஆமாம்மா.. அகரன் அவன் கண்டிஷன்ல இருந்து பின்வாங்க மாட்டான்னு நினைச்சிட்டு இருந்தப்ப தான் அவன் வரைஞ்சதை பாத்தேன். எனக்கு ஒன்னும் புரியலை.. ஆனா அகரன் நடவடிக்கையில் மாற்றம் தெரிஞ்சது. உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததும் மொத்தமாவே அவன் மாற ஆரம்பிச்சான். அவனுக்கு உன்னை பிடிக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கும் உன்னை முதல் முதல்ல பார்த்ததுமே ரொம்ப பிடிச்சது.. ஏற்கனவே ஏதோ ஒரு பந்தம் இருக்க மாதிரி..”
“ஆண்ட்டி.. எனக்கும் உங்களை தான் முதல்ல பிடிச்சது. எனக்கு அம்மா கூட இருக்கற கொடுப்பினை இல்ல.. என்னவோ உங்களை பாத்ததும் அம்மாவோட இருக்க மாதிரி தோணுச்சு.. உங்களை பிடிக்க போய் தான் அவரை பிடிச்சிருச்சு போல..” என தெய்வாவை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
தெய்வாக்கும் கண்களில் கண்ணீர் வந்தது. தாரிணியின் கைகளை பிடித்துக் கொண்டார்.
“ஆண்ட்டி.. அப்புறமா அவர்ட்ட நான் இன்னும் மாமாவை பத்தி சொல்லல. அவரைப் போய் நான் கூட்டிட்டு வரணுமே..“
“ஆமா .. சொன்ன இல்ல.. நான் அகரன்ட்ட பேசறேன் மா. அவரை வரவழைக்க முடியுமான்னு கேட்கிறேன். இல்லனா அண்ணனை போய் கூட்டிட்டு வர சொல்றேன்.”
"அச்சோ.. நான் நேரா போறேன் ஆண்ட்டி.. மாமாவை பாத்து எல்லா விஷயத்தையும் சொல்லி சம்மதம் வாங்கிட்டு கூட்டிட்டு வரேன்.. “
“நீ தனியா எப்படி போவ.. கால் நல்லா நடக்க வரட்டும். அகரனும் என்ன சொல்றான்னு கேட்போம்.. “
“கால் நல்லா ஆகட்டும். ஆனா நானே தான் போவேன்.. ப்ளீஸ் என் ஆசையை நிறைவேத்தி வைக்க வேண்டியது உங்க பொறுப்பு ஆண்ட்டி “ என்றாள்.
“சரிம்மா... நீ ஆசைப்பட்ட மாதிரி போய்ட்டு வா.. ஆனா அண்ணனை வேணா கூட கூட்டிட்டு போ..”
“சரி ஆண்ட்டி..” என்று மீண்டும் தெய்வாவை அணைத்துக் கொண்டாள்.
____________
கல்யாண வேலைகள் ஒருபுறம், தாரிணி தனியே மெல்ல மெல்ல நடக்க ஆர்ம்பித்தது ஒரு புறம் என்று நாட்கள் சென்றது.
திருமணத்திற்கு நாள் குறித்தார்கள். ஒரு மாதத்தில் திருமணம்.
அகரன், தினம் தினம் தாரிணி மேல் காதலை வளர்த்துக் கொண்டே இருந்தான். அவளை ஒரு இளவரசியை போல் தாங்க துவங்கினான்.
ஆண்டாளும், மதுவும் சமயம் பார்த்து காத்திருந்தார்கள். தாரிணியை வீட்டை விட்டு துரத்துவதற்கு காரணம் தேடிக் கொண்டு இருந்தார்கள்.
திருமண பத்திரிக்கையை அகரன் அவன் நண்பர்களுக்கு அனுப்ப, வைபவ் உடனே அகரனை அழைத்தான்.
“டேய்.. என்னடா ஜெட் ஸ்பீட்ல போற.. அந்த பொண்ணை கல்யாணம் பண்ற அளவு வந்திட்ட.. சொல்லவே இல்ல.. “
“இல்லடா.. வைபவ்.. பவதா தான் என்னோட சோல்மேட்.. அது புரிஞ்சதும் எதுக்கு காலத்தை கடத்தனும்னு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன் டா..”
“என்னடா இவ்வளோ ஷார்ட்டா ஒரு காரணம் சொல்ற”
“ஆமா டா.. என் வாழ்க்கையில் இருந்த எல்லா கேள்விக்கும் அவ பதிலா வந்திருக்கா டா. அவளை எதுக்காகவும் இழக்க விரும்பல டா.”
“அது .. அது ஓகே டா. ஆனா ரொம்ப அவசரப்படறியோன்னு தோணுது. நிதானமா செய்யலாம் இல்ல. “
“இல்லடா.. நிதானமா இருந்தா என் மனசே மாறிடும்னு தோணுது. உனக்கு தான் தெரியுமே.. எனக்கு ஒரு முடிவெடுத்தா அதை உடனே செயல்படுத்தனும்..”
“கரெக்ட் டா.. அவங்க சைட்ல யாரும் இல்ல தான். ஆனா அந்த பொண்ணை பத்தி வேற என்ன தெரியும்.. அவங்க பேக் ரவுண்ட் என்ன? அவங்க சொந்தம்னு யாராச்சும் இருந்தா அவங்கள்ட்ட பேசினியா.. இதெல்லாம் தெரிஞ்சுக்காம எப்படிடா? ஆண்ட்டி கூடவா அதை பத்தி யோசிக்கல”
“என்னடா பவதாவை சந்தேகப்பட சொல்றியா?”
“சந்தேகப்பட சொல்லல. நாளைக்கு எதுவும் பிரச்சினைன்னு வந்து நிக்க கூடாது டா”
“டேய் அவ இங்க வந்து ஏறக்குறைய நாலஞ்சு மாசம் ஆகுது. இதுவரை அவ என்னையும், அம்மாவையும் தான் உயிரா நினைக்கிறா டா.. “
“சரி டா.. ஆனா அவங்க மாமா.. ஒருத்தர் இருக்கார்னு” என்று வைபவ் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே தெய்வாவின் சத்தம் காதில் கேட்டது. அலறியடித்தபடி ஓடி வந்தான் அகரன். அலைபேசியில் வைபவ் தனியாக பேசிக் கொண்டிருந்தான்.
“அம்மா.. என்ன ஆச்சு.” என்று பதறினான் அகரன். அவன் உள்ளே வந்ததும் தாரிணி கீழே விழுந்திருந்ததை பார்த்தான். அவளருகில் தெய்வா அமர்ந்திருந்தார்.
“அகரா.. அவளா தனியா நடக்கறேன்னு சுவரை பிடிக்காம காலை எடுத்து வச்சிருக்கா.. அப்படியே கீழ விழுந்திட்டு இருக்கா.”
“அறிவிருக்கா உனக்கு. எதுக்கு இப்படி அவசரப்படற. உன்னை தனியா நீயா நடக்காதன்னு சொல்லியிருக்கேன் இல்ல.. “ என கத்தினான்.
“அகரா பொறுமையா இரு. எதுக்கு அவசரப்படற
.” தெய்வா சொல்லியதும் கூட அவனுக்கு கோபம் அடங்கவில்லை. அவளின் கால்களை ஆராய்ந்தான். வேறு எங்கேயாவது அடிப்பட்டு இருக்கிறதா என்று பார்த்தான்.
அவர்கள் இருவரும் தனியாக பேசிக் கொள்ளட்டும் என்று தெய்வா அங்கு இருந்து கிளம்பினார்.
“ஏன் இப்படி பண்ற… பவதா… உனக்கு எதாவது ஒன்னுன்னா என்னால் தாங்கிக்க முடியாது.” என்று அவளை தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்தான்.
“அப்படியென்ன அவசரம். இவ்வளோ கேட்கிறேன் இல்ல..வாயைத்திறந்து பதில் சொல்லு” என்று அவளையே முறைத்தான்.
“இல்ல தனியா நடக்க வருதான்னு பார்த்தேன். அப்போ தானே ஸ்ரீலங்காக்கு சீக்கிரமா போக முடியும்”
“ஸ்ரீலங்காக்கா. அங்க எதுக்கு போகனும். அதுவும் அவ்வளவு அவசரமா?”
“இல்ல அங்க எங்க வீடு.. அங்க கல்யாணத்துக்கு முன்னாடி போய் பார்க்கனும்னு தான்.”
“ஓ அங்க உனக்கு வீடு வேற இருக்கா? உன்னை பத்தி தெரிஞ்சுக்க நிறைய இருக்கும் போலயே..”
“என்ன.. அதான் எல்லாம் சொன்னேனே ஹாஸ்பிட்டல்ல.”
“நீ ஸ்ரீலங்கான்னு சொல்றதே புதுசா இருக்கு..நீ அன்னிக்கு உங்க பக்கத்து வீட்டு சிஸ்டர் பிரதர்னு சொன்னது அங்க இருக்கறவங்களையா?”
வைபவ் தாரிணியை பற்றி விசாரித்து சொல்லும்போது வட இந்தியா என்றது அவனுக்கு ஞாபகம் வர குழப்பமானது.
“இல்ல அவங்க மேகாலயால இருக்காங்க. நான் ஸ்கூலிங் அங்க தான் பண்ணேன்.. நான் பொறந்தது ஸ்ரீலங்கால தான்.. அங்க வீட்டை விட்டுட்டு தான் அப்படியே மேகாலயா போனோம்.”
“ இதெல்லாம் அம்மாக்கு தெரியுமா?”
“ஆண்ட்டிக்கு முன்னாடியே தெரியும். நான் அங்க இருந்த வீட்டை கல்யாணத்துக்கு முன்னாடி சரியாக்கனும்னு ஆசைப்பட்டேன்.. நாம அங்க நம்ம வாழ்க்கையை ஆரம்பிச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு… அதான் நானே போகனும்னு ஆண்ட்டிட்ட கேட்டேன்.. கால் சரியானதும் தான் போகனும்னு சொன்னாங்க.. அங்கிளை வேணா கூட்டிட்டு போக சொன்னாங்க”
“ஓ..இவ்வளோ விஷயம் இருக்கா.. ஆனா எதையும் என்கிட்ட சொல்லனும்னு தோணலை.. ஏன் நான் என்ன போக வேண்டாம்னு சொல்லப் போறேனா?”
“அய்யோ.. உங்ககிட்ட சொல்ல வந்தேன்.. ஆனா யாராச்சும் டிஸ்ட்ராக்ட் பண்ணிருவாங்க.. அது அப்படியே மறந்துரும். அதுக்கான நேரமும் சரியாக கிடைக்கல்ல.. ஆனா இப்ப சொல்லனும்னு தான் நினைச்சேன்”
“மணிக்கணக்கா கிஸ் பண்ணிட்டு இருந்தப்பலாம் டைம் இருக்கு.. இதை சொல்லத்தான் உனக்கு டைம் இல்ல..”
சட்டென அமைதியானாள் தாரிணி.. அவள் முகம் சோர்ந்து மாறியது. தலை குனிந்துக் கொண்டாள்.
“ஹேய்.. பவதா.. என்னை பாரு. கோவமா..” என்று அவளின் தாடையை பிடித்து தூக்கினான்.
கண்களில் அவளுக்கு நீர் கோர்த்தது.
குனிந்து ஒரு விரலால் அந்த கண்ணீரை சுண்டியவன், அவள் கண்களில் இதழ்களை பதித்தான். அவளை எழுப்பி உட்கார வைத்து அவளை நெஞ்சோடு இறுக்கினான். தலையை அமைதியாக தடவி கொடுத்தவன், அவளருகில் அமர்ந்து அவளை தோளோடு சாய்த்துக் கொண்டான்.
“இங்க பாரு. உன்னை பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. உன்னை ஆக்ஸிடெண்ட் பண்ணப்ப அம்மா சொன்னாங்க. உனக்கு யாரும் இல்லைன்னு. நான் நீ எங்கேயோ ஹாஸ்டல்ல வளர்ந்தன்னு நினைச்சேன். அப்பா இல்லாத கஷ்டம் எனக்கு தெரியும். உனக்கு அம்மாவும் இல்லன்னு தெரிஞ்சு எனக்கு ரொம்ப பாவமா இருந்துச்சு. இப்ப வந்து எனக்கு வீடு இருக்கு.. ஆடு இருக்குனு சொன்னா கோபம் வருமா… வராதா..”
“ஆடுலாம் இல்ல அங்க. வெறும் வீடு தான். அதுவே இடிஞ்சு கிடக்கு”
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. வாய் மட்டும் இல்லன்னா …”
“இல்லன்னா?”
“ம்ம்ம்… இப்படி முத்தம் தர முடியாது..” என்று முழுதுமாக அவளின் இரு உதடுகளையும் தனக்குள் இழுத்துக் கொண்டான்.
அகரனின் இடுப்பை இறுக்கி கொண்டவள், அவன் கண்களை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
“என்ன அப்படி பாக்குற.. நாமளே பத்து நாள்ல அங்க போவோம்.. உன் ஆசையை நான் எப்பவும் நிறைவேத்துவேன்.” என்று அவளின் கன்னத்தை கிள்ளி, பின் இதழ் பதித்து எழுந்தான்.
“நிஜமாவா..”
“ஆமா.. போறோம். ஆனா அவ்ளோ கஷ்டப்பட்டு உன்னை அங்க கூப்பிட்டு போறதுக்கு நான் என்ன கேட்டாலும் நீ கொடுக்கனும்..”
“டீல்.. என்ன கேட்டுட போறீங்க.. ஆயிரம் கிஸ்ஸஸ் தானே..”
“ஓ… அவ்ளோ சாதாரணமா போச்சா.. அங்க வா.. இருக்கு உனக்கு” என்று சொல்லி விட்டு அவளை அணைத்து விட்டு சென்றான்.
சிறிது நேரத்தில் தெய்வா அங்கு வர, “ஆண்ட்டி.. அவர் ரொம்ப கோச்சுக்கிட்டார். நான் ஸ்ரீலங்கா போகனும்னு சொன்னதுக்கு. நான் அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல சொன்னப்ப அவர் இருந்தார் தானே. இப்போ வந்து எதுவும் சொல்லலைன்னு கோவப்படறாரு..”
“அப்படியா.. அவன் அன்னிக்கு அங்க தானே என்கூட இருந்தான். அன்னிக்கு நீ யாருன்னு கண்டுபிடிக்கற டென்ஷன்ல இருந்தான் இல்ல.சரியா கேட்டிருக்க மாட்டான். அவனுக்கு எல்லாமே அவசரந்தான். அது இருக்கட்டும். நான் தான் உன்னை பொறுமையா நடன்னு சொன்னேன் இல்ல.. ஏன் இப்படி பண்ண?”
“ஹையோ.. ஆண்ட்டி.. அது நான் நடந்து பாக்கலாம்னு தான் பண்ணேன். ஊருக்கு போனும். அங்க எங்க வீட்டை சரி பண்ண முடியுமான்னு பாத்துட்டு மாமாவை பாக்கனும். அச்சோ மாமாவை பத்தி வேற இவர்ட்ட சொல்லலையே.. ம்ம்ம்.. வேணா.. சர்ப்பரைஸா அங்க கூட்டிட்டு போய் சொல்றேன். ப்ளீஸ் ஆண்ட்டி..நீங்க அதுக்குள்ள அவர்ட்ட சொல்லிடாதீங்க.ப்ளீஸ் ஆண்ட்டி..”
“ஓகே ஓகே.. நான் சொல்லல. ஆனா அகரன் பத்தி இன்னும் நீ முழுசா புரிஞ்சுக்கல. அவனுக்கு சர்ப்பரைஸ் தரேன்னு நீ எதாவது பண்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சு பண்ணு. அவனுக்கு எப்போ எதுக்கு கோவம் வரும்னு தெரியாது. ஒரு ப்ளான் போட்டா அதை கரெக்டா செய்யனும்.. மாத்திட்டே இருக்க முடியாது..”
“சரி ஆண்ட்டி.. நான் யோசிச்சு செய்யறேன் எதையும்..”
“நீ சாப்பிட்டு முதல்ல ரெஸ்ட் எடு.. கால் வலி இருக்கா.. டாக்டர வேணா வர சொல்லவா.?”
“ஆண்ட்டி.. அவ்ளோலாம் இல்ல.. நீங்க ரெண்டு பேரும் இப்படி பாத்துக்கறப்ப எனக்கு எப்படி வலி இருக்கும்?”
“ம்ம்.. நல்லா பேசற..”
“அதேதான் ஆண்ட்டி அவரும் சொன்னார்.. வாய் மட்டும் இல்லன்னா… அப்பிடின்னு”
“அப்படியா.. இல்லன்னா.. என்ன சொன்னான்..?”
“அது அது வந்து.. போங்க ஆண்ட்டி..” என்று தலையை குனிந்து கொண்டாள்.
தெய்வாக்கு சிரிப்பு வந்தது.. “சரி சரி ரெஸ்ட் எடு” என்று கிளம்பினார்.
தன் அலைபேசியில் அன்று எடுத்த திருமண கோல புகைப்படத்தை பார்த்தபடியே இருந்தாள் தாரிணி.
“ஆளும்.. அவரும்.. சிடுமூஞ்சி.. சிரிப்பு மூஞ்சி.. பெரிய…”
“ஆணழகன்னு நினைப்பு அதானே” என்று அகரன் உள்ளே வர பதறி திரும்பினாள்.
“என்ன அதானே திட்டிட்டு இருந்த”
“திட்டலையே…. கொஞ்சிட்டு இருந்தேன்..”
“ஓ அதான் எனக்கு தெரிஞ்சிருச்சு. இப்பதான் நேர்ல இருக்கேனே.. என்னையே கொஞ்சிக்க. ஃபோட்டோ பாத்து ஏன் கொஞ்சற”
“ஆசை தான்.. நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியும்.. கிளம்புங்க.. நான் தூங்கனும்” என்றாள்..
“வா வா.. சேர்ந்து தூங்கலாம்” என்று அவளின் பக்கம் வர,
“ஆண்ட்டி..” என்று சத்தமாக கத்தியவளை பார்த்து அவள் வாயை கையால் பொத்தினான்.
தினமும் தாரிணிக்கு காலை, மாலை என பிஸியோதெரபி மருத்துவரை அழைத்து பயிற்சிகளை செய்ய சொல்லியிருந்தான் அகரன்.
இப்போது சுவரைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள் தாரிணி.
அவள் அறைக்கு உணவு எடுத்து வந்த கௌரி, “தாரிணிம்மா.. இப்பதான் இங்க வேலை செய்யறவங்க எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இப்படி அகரன் தம்பி வாழ்க்கை மாறாதான்னு இருந்தோம்.. இன்னும் இரண்டு மாசத்தில கல்யாணம்னு தெய்வாம்மா சொன்னாங்க.. தம்பிக்கு ஏத்த மாதிரி நீங்களும் தேவதை தான். “ என தாரிணியின் முகத்தை நெட்டி முறித்தார்.
“அக்கா.. நானே நினைச்சு பாக்கல. இந்த வீட்டை விட்டு எப்படா போவோம்னு தான் வந்தேன். ஆனா எப்படி இதே வீட்டில மருமகளா வாழ வேண்டி வந்துச்சுன்னு நினைக்க நினைக்க ஆச்சர்யமா இருக்கு.”
“அதான் மா.. இவங்களுக்கு இவங்கதான்னு கடவுள் போடற முடிச்சு இது.. எனக்கு அப்பவே தெரியும்.. நீங்க தான் அகரன் தம்பிக்கு மனைவியா வருவீங்கன்னு..”
“அதெப்படி தெரியும்.. இந்த வீட்டை விட்டு போக உங்ககிட்டே கூட காசு கேட்டேனே..”
“அதெல்லாம் தெரியும் மா.. அகரன் தம்பி ஒரு நாள் நைட் நான் அந்த பக்கம் போறப்ப வரைய ஆரம்பிச்சுச்சு.. காலைல நான் காபி கொண்டு போறப்ப வரைஞ்சு முடிச்சு அது மேலேயே படுத்துட்டு இருந்துச்சு.. என்ன தான் வரைஞ்சிருக்குனு பாத்தா எல்லாமே ரெண்டு பேர் கல்யாண கோலத்தில் நிக்கற மாதிரி படங்க. தெய்வாம்மாட்ட சொன்னேன். அவங்களும் வந்து பாத்துட்டு தெய்வம் இதான் நினைக்குதுன்னா அதுவே நடக்கட்டும்னு சொன்னாங்க..
அடுத்த நாள் நீங்க வீட்டுக்கு வந்ததும் தான் அந்த படத்தில் இருக்கறது நீங்கதான்னு தெரிஞ்சது.
அப்பவே தம்பி மனசுல நீங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்.
உங்க ரெண்டு பேருக்கும் கடவுள் முடிச்சு போடனும்னு வேண்டிக் கிட்டேன்.
அதுக்கு ஏத்த மாதிரி ஒன்னொன்னா நடக்கவும் இப்ப நீங்க அகரன் தம்பிக்கு மனைவியாக போறீங்க”
“ஓ.. இதெல்லாம் எப்போ.. ஆஃபிஸ் ல கூட ஒன்னு ரெண்டு படங்கள் பாத்தேன்.. “
“நீங்க அடிப்பட்டு ஹாஸ்பிட்டல்ல இருந்தீங்க இல்ல… அப்போதான்.. “
“நிஜமாவே ஆச்சர்யமா இருக்குக்கா.. எப்படி அவர் மனசில நான் போனேன்.. என் மனசில் அவர் வந்தார்னு.. நான் அந்த படங்களை பாக்க முடியுமா”
“தம்பி ரூம்ல மறைச்சு வச்சிருக்கு போல.. எங்கேயும் வெளிய காணோம்..” கௌரி சொல்ல அவருடன் அகரனின் அறைக்கு வந்து வார்ட்ரோப்களை ஆராய ஆரம்பித்தாள்.
“இதோ இருக்கு.. “ என்று எடுத்து பார்த்தவள், “வாவ்.. நாங்க ஃபோட்டோ ஷூட் பண்ணோம் இல்ல.. அதெல்லாமே அப்படியே அப்பவே வரைஞ்சு வச்சுருக்கார் கா. இது நிஜமாவே போன ஜென்ம பந்தம் தான். “ என்று மார்போடு அவை அனைத்தையும் அணைத்துக் கொண்டாள்.
________
தெய்வா, “தாரிணி.. நீ இன்னிக்கு கம்பெனிக்கு போகலையா? அகரனும் ஒன்னும் சொல்லாம போயிட்டான் போல.. நான் கோவிலுக்கு போய்ட்டு இப்போதான் வரேன்..” என கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார்.
“ஆமா.. ஆண்ட்டி.. இன்னிக்கு அவர் எங்கேயோ வெளிய ஒரு ப்ரசண்டேஷனுக்கு போறாராமா..அதான் என்னை வீட்டிலேயே இருக்க சொல்லிட்டார்..”
“ஓ.. அப்ப நீ நல்லா ரெஸ்ட் எடு.. எனக்கு கல்யாண வேலைகள் நிறைய இருக்கு.. உனக்கு புது புடவை எடுக்க இன்னிக்கு புடவைகளை கொண்டு வர சொல்லியிருக்கேன்” என்றார்.
“ஆண்ட்டி நான் ஒன்னு கேட்கவா”
“சொல்லும்மா.. வேற எதாவது வேணுமா?”
“இல்ல ஆண்ட்டி.. அகரன் வரைஞ்சு வச்ச படங்களை அவர் ரூம்ல பாத்தேன். அதெல்லாம் ஏற்கனவே நீங்க பாத்தீங்களா.. அதை பாத்துட்டு தான் என்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தீங்களா?”
தெய்வா ஒரு நிமிடம் சுதாரித்து, “உனக்கெப்படி தெரியும்.. கௌரி சொன்னாளா.?”
“ஆமா ஆண்ட்டி.. “
“ம்ம் ஆமாம்மா.. அகரன் அவன் கண்டிஷன்ல இருந்து பின்வாங்க மாட்டான்னு நினைச்சிட்டு இருந்தப்ப தான் அவன் வரைஞ்சதை பாத்தேன். எனக்கு ஒன்னும் புரியலை.. ஆனா அகரன் நடவடிக்கையில் மாற்றம் தெரிஞ்சது. உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததும் மொத்தமாவே அவன் மாற ஆரம்பிச்சான். அவனுக்கு உன்னை பிடிக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கும் உன்னை முதல் முதல்ல பார்த்ததுமே ரொம்ப பிடிச்சது.. ஏற்கனவே ஏதோ ஒரு பந்தம் இருக்க மாதிரி..”
“ஆண்ட்டி.. எனக்கும் உங்களை தான் முதல்ல பிடிச்சது. எனக்கு அம்மா கூட இருக்கற கொடுப்பினை இல்ல.. என்னவோ உங்களை பாத்ததும் அம்மாவோட இருக்க மாதிரி தோணுச்சு.. உங்களை பிடிக்க போய் தான் அவரை பிடிச்சிருச்சு போல..” என தெய்வாவை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
தெய்வாக்கும் கண்களில் கண்ணீர் வந்தது. தாரிணியின் கைகளை பிடித்துக் கொண்டார்.
“ஆண்ட்டி.. அப்புறமா அவர்ட்ட நான் இன்னும் மாமாவை பத்தி சொல்லல. அவரைப் போய் நான் கூட்டிட்டு வரணுமே..“
“ஆமா .. சொன்ன இல்ல.. நான் அகரன்ட்ட பேசறேன் மா. அவரை வரவழைக்க முடியுமான்னு கேட்கிறேன். இல்லனா அண்ணனை போய் கூட்டிட்டு வர சொல்றேன்.”
"அச்சோ.. நான் நேரா போறேன் ஆண்ட்டி.. மாமாவை பாத்து எல்லா விஷயத்தையும் சொல்லி சம்மதம் வாங்கிட்டு கூட்டிட்டு வரேன்.. “
“நீ தனியா எப்படி போவ.. கால் நல்லா நடக்க வரட்டும். அகரனும் என்ன சொல்றான்னு கேட்போம்.. “
“கால் நல்லா ஆகட்டும். ஆனா நானே தான் போவேன்.. ப்ளீஸ் என் ஆசையை நிறைவேத்தி வைக்க வேண்டியது உங்க பொறுப்பு ஆண்ட்டி “ என்றாள்.
“சரிம்மா... நீ ஆசைப்பட்ட மாதிரி போய்ட்டு வா.. ஆனா அண்ணனை வேணா கூட கூட்டிட்டு போ..”
“சரி ஆண்ட்டி..” என்று மீண்டும் தெய்வாவை அணைத்துக் கொண்டாள்.
____________
கல்யாண வேலைகள் ஒருபுறம், தாரிணி தனியே மெல்ல மெல்ல நடக்க ஆர்ம்பித்தது ஒரு புறம் என்று நாட்கள் சென்றது.
திருமணத்திற்கு நாள் குறித்தார்கள். ஒரு மாதத்தில் திருமணம்.
அகரன், தினம் தினம் தாரிணி மேல் காதலை வளர்த்துக் கொண்டே இருந்தான். அவளை ஒரு இளவரசியை போல் தாங்க துவங்கினான்.
ஆண்டாளும், மதுவும் சமயம் பார்த்து காத்திருந்தார்கள். தாரிணியை வீட்டை விட்டு துரத்துவதற்கு காரணம் தேடிக் கொண்டு இருந்தார்கள்.
திருமண பத்திரிக்கையை அகரன் அவன் நண்பர்களுக்கு அனுப்ப, வைபவ் உடனே அகரனை அழைத்தான்.
“டேய்.. என்னடா ஜெட் ஸ்பீட்ல போற.. அந்த பொண்ணை கல்யாணம் பண்ற அளவு வந்திட்ட.. சொல்லவே இல்ல.. “
“இல்லடா.. வைபவ்.. பவதா தான் என்னோட சோல்மேட்.. அது புரிஞ்சதும் எதுக்கு காலத்தை கடத்தனும்னு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன் டா..”
“என்னடா இவ்வளோ ஷார்ட்டா ஒரு காரணம் சொல்ற”
“ஆமா டா.. என் வாழ்க்கையில் இருந்த எல்லா கேள்விக்கும் அவ பதிலா வந்திருக்கா டா. அவளை எதுக்காகவும் இழக்க விரும்பல டா.”
“அது .. அது ஓகே டா. ஆனா ரொம்ப அவசரப்படறியோன்னு தோணுது. நிதானமா செய்யலாம் இல்ல. “
“இல்லடா.. நிதானமா இருந்தா என் மனசே மாறிடும்னு தோணுது. உனக்கு தான் தெரியுமே.. எனக்கு ஒரு முடிவெடுத்தா அதை உடனே செயல்படுத்தனும்..”
“கரெக்ட் டா.. அவங்க சைட்ல யாரும் இல்ல தான். ஆனா அந்த பொண்ணை பத்தி வேற என்ன தெரியும்.. அவங்க பேக் ரவுண்ட் என்ன? அவங்க சொந்தம்னு யாராச்சும் இருந்தா அவங்கள்ட்ட பேசினியா.. இதெல்லாம் தெரிஞ்சுக்காம எப்படிடா? ஆண்ட்டி கூடவா அதை பத்தி யோசிக்கல”
“என்னடா பவதாவை சந்தேகப்பட சொல்றியா?”
“சந்தேகப்பட சொல்லல. நாளைக்கு எதுவும் பிரச்சினைன்னு வந்து நிக்க கூடாது டா”
“டேய் அவ இங்க வந்து ஏறக்குறைய நாலஞ்சு மாசம் ஆகுது. இதுவரை அவ என்னையும், அம்மாவையும் தான் உயிரா நினைக்கிறா டா.. “
“சரி டா.. ஆனா அவங்க மாமா.. ஒருத்தர் இருக்கார்னு” என்று வைபவ் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே தெய்வாவின் சத்தம் காதில் கேட்டது. அலறியடித்தபடி ஓடி வந்தான் அகரன். அலைபேசியில் வைபவ் தனியாக பேசிக் கொண்டிருந்தான்.
“அம்மா.. என்ன ஆச்சு.” என்று பதறினான் அகரன். அவன் உள்ளே வந்ததும் தாரிணி கீழே விழுந்திருந்ததை பார்த்தான். அவளருகில் தெய்வா அமர்ந்திருந்தார்.
“அகரா.. அவளா தனியா நடக்கறேன்னு சுவரை பிடிக்காம காலை எடுத்து வச்சிருக்கா.. அப்படியே கீழ விழுந்திட்டு இருக்கா.”
“அறிவிருக்கா உனக்கு. எதுக்கு இப்படி அவசரப்படற. உன்னை தனியா நீயா நடக்காதன்னு சொல்லியிருக்கேன் இல்ல.. “ என கத்தினான்.
“அகரா பொறுமையா இரு. எதுக்கு அவசரப்படற
.” தெய்வா சொல்லியதும் கூட அவனுக்கு கோபம் அடங்கவில்லை. அவளின் கால்களை ஆராய்ந்தான். வேறு எங்கேயாவது அடிப்பட்டு இருக்கிறதா என்று பார்த்தான்.
அவர்கள் இருவரும் தனியாக பேசிக் கொள்ளட்டும் என்று தெய்வா அங்கு இருந்து கிளம்பினார்.
“ஏன் இப்படி பண்ற… பவதா… உனக்கு எதாவது ஒன்னுன்னா என்னால் தாங்கிக்க முடியாது.” என்று அவளை தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்தான்.
“அப்படியென்ன அவசரம். இவ்வளோ கேட்கிறேன் இல்ல..வாயைத்திறந்து பதில் சொல்லு” என்று அவளையே முறைத்தான்.
“இல்ல தனியா நடக்க வருதான்னு பார்த்தேன். அப்போ தானே ஸ்ரீலங்காக்கு சீக்கிரமா போக முடியும்”
“ஸ்ரீலங்காக்கா. அங்க எதுக்கு போகனும். அதுவும் அவ்வளவு அவசரமா?”
“இல்ல அங்க எங்க வீடு.. அங்க கல்யாணத்துக்கு முன்னாடி போய் பார்க்கனும்னு தான்.”
“ஓ அங்க உனக்கு வீடு வேற இருக்கா? உன்னை பத்தி தெரிஞ்சுக்க நிறைய இருக்கும் போலயே..”
“என்ன.. அதான் எல்லாம் சொன்னேனே ஹாஸ்பிட்டல்ல.”
“நீ ஸ்ரீலங்கான்னு சொல்றதே புதுசா இருக்கு..நீ அன்னிக்கு உங்க பக்கத்து வீட்டு சிஸ்டர் பிரதர்னு சொன்னது அங்க இருக்கறவங்களையா?”
வைபவ் தாரிணியை பற்றி விசாரித்து சொல்லும்போது வட இந்தியா என்றது அவனுக்கு ஞாபகம் வர குழப்பமானது.
“இல்ல அவங்க மேகாலயால இருக்காங்க. நான் ஸ்கூலிங் அங்க தான் பண்ணேன்.. நான் பொறந்தது ஸ்ரீலங்கால தான்.. அங்க வீட்டை விட்டுட்டு தான் அப்படியே மேகாலயா போனோம்.”
“ இதெல்லாம் அம்மாக்கு தெரியுமா?”
“ஆண்ட்டிக்கு முன்னாடியே தெரியும். நான் அங்க இருந்த வீட்டை கல்யாணத்துக்கு முன்னாடி சரியாக்கனும்னு ஆசைப்பட்டேன்.. நாம அங்க நம்ம வாழ்க்கையை ஆரம்பிச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு… அதான் நானே போகனும்னு ஆண்ட்டிட்ட கேட்டேன்.. கால் சரியானதும் தான் போகனும்னு சொன்னாங்க.. அங்கிளை வேணா கூட்டிட்டு போக சொன்னாங்க”
“ஓ..இவ்வளோ விஷயம் இருக்கா.. ஆனா எதையும் என்கிட்ட சொல்லனும்னு தோணலை.. ஏன் நான் என்ன போக வேண்டாம்னு சொல்லப் போறேனா?”
“அய்யோ.. உங்ககிட்ட சொல்ல வந்தேன்.. ஆனா யாராச்சும் டிஸ்ட்ராக்ட் பண்ணிருவாங்க.. அது அப்படியே மறந்துரும். அதுக்கான நேரமும் சரியாக கிடைக்கல்ல.. ஆனா இப்ப சொல்லனும்னு தான் நினைச்சேன்”
“மணிக்கணக்கா கிஸ் பண்ணிட்டு இருந்தப்பலாம் டைம் இருக்கு.. இதை சொல்லத்தான் உனக்கு டைம் இல்ல..”
சட்டென அமைதியானாள் தாரிணி.. அவள் முகம் சோர்ந்து மாறியது. தலை குனிந்துக் கொண்டாள்.
“ஹேய்.. பவதா.. என்னை பாரு. கோவமா..” என்று அவளின் தாடையை பிடித்து தூக்கினான்.
கண்களில் அவளுக்கு நீர் கோர்த்தது.
குனிந்து ஒரு விரலால் அந்த கண்ணீரை சுண்டியவன், அவள் கண்களில் இதழ்களை பதித்தான். அவளை எழுப்பி உட்கார வைத்து அவளை நெஞ்சோடு இறுக்கினான். தலையை அமைதியாக தடவி கொடுத்தவன், அவளருகில் அமர்ந்து அவளை தோளோடு சாய்த்துக் கொண்டான்.
“இங்க பாரு. உன்னை பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. உன்னை ஆக்ஸிடெண்ட் பண்ணப்ப அம்மா சொன்னாங்க. உனக்கு யாரும் இல்லைன்னு. நான் நீ எங்கேயோ ஹாஸ்டல்ல வளர்ந்தன்னு நினைச்சேன். அப்பா இல்லாத கஷ்டம் எனக்கு தெரியும். உனக்கு அம்மாவும் இல்லன்னு தெரிஞ்சு எனக்கு ரொம்ப பாவமா இருந்துச்சு. இப்ப வந்து எனக்கு வீடு இருக்கு.. ஆடு இருக்குனு சொன்னா கோபம் வருமா… வராதா..”
“ஆடுலாம் இல்ல அங்க. வெறும் வீடு தான். அதுவே இடிஞ்சு கிடக்கு”
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல.. வாய் மட்டும் இல்லன்னா …”
“இல்லன்னா?”
“ம்ம்ம்… இப்படி முத்தம் தர முடியாது..” என்று முழுதுமாக அவளின் இரு உதடுகளையும் தனக்குள் இழுத்துக் கொண்டான்.
அகரனின் இடுப்பை இறுக்கி கொண்டவள், அவன் கண்களை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
“என்ன அப்படி பாக்குற.. நாமளே பத்து நாள்ல அங்க போவோம்.. உன் ஆசையை நான் எப்பவும் நிறைவேத்துவேன்.” என்று அவளின் கன்னத்தை கிள்ளி, பின் இதழ் பதித்து எழுந்தான்.
“நிஜமாவா..”
“ஆமா.. போறோம். ஆனா அவ்ளோ கஷ்டப்பட்டு உன்னை அங்க கூப்பிட்டு போறதுக்கு நான் என்ன கேட்டாலும் நீ கொடுக்கனும்..”
“டீல்.. என்ன கேட்டுட போறீங்க.. ஆயிரம் கிஸ்ஸஸ் தானே..”
“ஓ… அவ்ளோ சாதாரணமா போச்சா.. அங்க வா.. இருக்கு உனக்கு” என்று சொல்லி விட்டு அவளை அணைத்து விட்டு சென்றான்.
சிறிது நேரத்தில் தெய்வா அங்கு வர, “ஆண்ட்டி.. அவர் ரொம்ப கோச்சுக்கிட்டார். நான் ஸ்ரீலங்கா போகனும்னு சொன்னதுக்கு. நான் அன்னிக்கு ஹாஸ்பிட்டல்ல சொன்னப்ப அவர் இருந்தார் தானே. இப்போ வந்து எதுவும் சொல்லலைன்னு கோவப்படறாரு..”
“அப்படியா.. அவன் அன்னிக்கு அங்க தானே என்கூட இருந்தான். அன்னிக்கு நீ யாருன்னு கண்டுபிடிக்கற டென்ஷன்ல இருந்தான் இல்ல.சரியா கேட்டிருக்க மாட்டான். அவனுக்கு எல்லாமே அவசரந்தான். அது இருக்கட்டும். நான் தான் உன்னை பொறுமையா நடன்னு சொன்னேன் இல்ல.. ஏன் இப்படி பண்ண?”
“ஹையோ.. ஆண்ட்டி.. அது நான் நடந்து பாக்கலாம்னு தான் பண்ணேன். ஊருக்கு போனும். அங்க எங்க வீட்டை சரி பண்ண முடியுமான்னு பாத்துட்டு மாமாவை பாக்கனும். அச்சோ மாமாவை பத்தி வேற இவர்ட்ட சொல்லலையே.. ம்ம்ம்.. வேணா.. சர்ப்பரைஸா அங்க கூட்டிட்டு போய் சொல்றேன். ப்ளீஸ் ஆண்ட்டி..நீங்க அதுக்குள்ள அவர்ட்ட சொல்லிடாதீங்க.ப்ளீஸ் ஆண்ட்டி..”
“ஓகே ஓகே.. நான் சொல்லல. ஆனா அகரன் பத்தி இன்னும் நீ முழுசா புரிஞ்சுக்கல. அவனுக்கு சர்ப்பரைஸ் தரேன்னு நீ எதாவது பண்றதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிச்சு பண்ணு. அவனுக்கு எப்போ எதுக்கு கோவம் வரும்னு தெரியாது. ஒரு ப்ளான் போட்டா அதை கரெக்டா செய்யனும்.. மாத்திட்டே இருக்க முடியாது..”
“சரி ஆண்ட்டி.. நான் யோசிச்சு செய்யறேன் எதையும்..”
“நீ சாப்பிட்டு முதல்ல ரெஸ்ட் எடு.. கால் வலி இருக்கா.. டாக்டர வேணா வர சொல்லவா.?”
“ஆண்ட்டி.. அவ்ளோலாம் இல்ல.. நீங்க ரெண்டு பேரும் இப்படி பாத்துக்கறப்ப எனக்கு எப்படி வலி இருக்கும்?”
“ம்ம்.. நல்லா பேசற..”
“அதேதான் ஆண்ட்டி அவரும் சொன்னார்.. வாய் மட்டும் இல்லன்னா… அப்பிடின்னு”
“அப்படியா.. இல்லன்னா.. என்ன சொன்னான்..?”
“அது அது வந்து.. போங்க ஆண்ட்டி..” என்று தலையை குனிந்து கொண்டாள்.
தெய்வாக்கு சிரிப்பு வந்தது.. “சரி சரி ரெஸ்ட் எடு” என்று கிளம்பினார்.
தன் அலைபேசியில் அன்று எடுத்த திருமண கோல புகைப்படத்தை பார்த்தபடியே இருந்தாள் தாரிணி.
“ஆளும்.. அவரும்.. சிடுமூஞ்சி.. சிரிப்பு மூஞ்சி.. பெரிய…”
“ஆணழகன்னு நினைப்பு அதானே” என்று அகரன் உள்ளே வர பதறி திரும்பினாள்.
“என்ன அதானே திட்டிட்டு இருந்த”
“திட்டலையே…. கொஞ்சிட்டு இருந்தேன்..”
“ஓ அதான் எனக்கு தெரிஞ்சிருச்சு. இப்பதான் நேர்ல இருக்கேனே.. என்னையே கொஞ்சிக்க. ஃபோட்டோ பாத்து ஏன் கொஞ்சற”
“ஆசை தான்.. நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியும்.. கிளம்புங்க.. நான் தூங்கனும்” என்றாள்..
“வா வா.. சேர்ந்து தூங்கலாம்” என்று அவளின் பக்கம் வர,
“ஆண்ட்டி..” என்று சத்தமாக கத்தியவளை பார்த்து அவள் வாயை கையால் பொத்தினான்.