விழிமொழி: 21
கையை எடுத்து பூ மீது வைக்க, இமையாவுக்கு அந்த மென்மை ஏதோ செய்தது. அதை மனதார ரசிக்கவும் செய்தாள்.
"சரி தூங்க போலாமா இமை?"
"தூங்கலாம்... ஏமாத்துகாரா கதை சொல்லுறேன்னு ஏமாத்திட்ட"
"ஹாஹா... மறந்துட்டேன் வா சொல்லுறேன்"
"போ எனக்கு தூக்கம் வருது நாளைக்கு சொல்லு" என இருவரும் மனநிறைவோடு தூங்கினார்கள்.
ஆனால் விடியும் நாள் இமையாவுக்கு இடியை இறக்கி இருந்தது.
இமையாவிற்கு ஏதோ கொடூர கனவு. அதனை ஜீரணிக்க முடியாமல் பயத்தில் எழுந்தவள்
“கதிரா… கதிரா” பயத்தில் பேய் போல கத்தினாள்.
“இமை என்னாச்சி" அருகில் வந்து அமர்ந்தவனை தாவி அணைத்து கொண்டாள். இப்போது எல்லாம் அம்மா என்று அலறுவதையே மறந்து இருந்தாள். கதிரா தான் எல்லாம்.
“என்னாச்சி... இமை பேட் டிரீமாஸ்சா" அவளது முகத்தை ஆறுதலாக ஏந்தி பிடித்தான்.
“ம்ம்.. பயமா இருக்கு என்னைவிட்டுடாத” இறுக அணைத்தவள், ஏதேதோ பிதற்றி கொண்டிருந்தாள்.
‘என்ன பெட் ஈரமா இருக்கு... இமையா தண்ணீ கொட்டிட்டாளா ?’ கதிர் சுற்றிப்பார்க்க, இரவு வைத்த தண்ணீர் அப்படியே இருந்தது. தண்ணீ எங்கிருந்து வந்தது.
அப்போது தான் இமையாவை பார்த்தான். பயத்தில் படுக்கையை நனைத்திருந்தாள். இமையாவை விட இப்போது கதிர் தான் பதறினான்.
‘கதிர் எதாவது யோசி... இதை இமையா உணர்வதற்குள். எப்படியாவது குளியல் அறைக்கு கூட்டிட்டு போகனும்’
“இமையா… எழுந்திரு குளிச்சா சரியா போயிடும். இனி பேட் டிரீம்ஸ் வராது. வா எழு குட்டிமா”
“இல்லை இப்படியே இரு இரூட்டு ராட்சசன் வரான். என்னை உன்னிடம் இருந்து பிரிக்க” இமையா ஏதோ உணர்ந்தவள்,
திடீரென கதிரை தள்ளிவிட்டாள் தன் முழு பலம் கொண்டு.
இமையா அலர துவங்கினாள். இந்த வயதில் இப்படி மெத்தையை நனைத்து வைத்திருப்பதை அவமானமாக எண்ணினாள். அவளது நடவடிக்கை கதிர் மனதில் ஒரு தாக்கத்தை உருவாக்கியது.
தனது டாப்பின் நுனியை பிடித்து கொண்டவள், அந்த இடத்தை விட்டு நான்கு காலில் தவழ்ந்து சென்று மெத்தையின் ஒரு மூலையில் அமர்ந்து அருகில் இருந்த அவளது ஷாலை எடுத்து தன் மீது போற்றிக்கொண்டாள்.
இமையாவின் தலையில் யாரோ வெடி வைத்தது போல வலித்தது.
தலையை பிடித்து கொண்டவளின் அருகில் உட்கார்ந்த கதிரின் கைகள் நடுங்கியது. தைரியத்தை வரவழைத்து கொண்டு இமையாவின் தோளை தோட,
“என்னை தொடாத நான் கெட்ட பாப்பா… மெத்தையை அழுக்கு செஞ்சிட்டேன். பேட் ஸ்மல் வருது. இங்க இருக்காத வெளியே போ”
“இமையா குளிக்கலாம் வாடா… எந்திரி” இமையாவின் தோற்றம் கதிரை நடுங்க செய்தது.
“இல்லை… போ என்னை தொடாத. பயமா இருக்கு இங்கிருந்து போ. நான் உனக்கு வேண்டா. மெத்தை நனைக்காத, நல்ல பொண்ணு பாத்துக்கோ. முக்கியமா உடல்ல எந்த குறையும் இல்லாத பொண்ணா பாத்துக்கோ" இமையா இதையே திரும்ப திரும்ப சொன்னாள்.
“மெத்தையை வீணாக்கிட்டேன். உன் காசு எல்லாம் வீண் செஞ்சிட்டேன்” இப்படி ஏதேதோ சொல்லி புலம்பியவள், ஒரு கட்டத்துக்கு மேலே அடம்பிடிக்க துவங்கினாள்.
“அம்மா வேணும் அம்மா... அம்மா” அழுகையும் விசும்பலும் அதிகரித்துக்கொண்டே போனது.
“இமையா இங்க பாரு ஒன்னுமில்லை. என் தங்கமில்ல. வா எந்திரி குளிச்சிட்டு வந்துடலாம். தங்க பிள்ளை சொன்ன பேச்சி கேட்குமாம்”
“போ... என் பக்கம் வராத போடா... நான் சுச்சு போயிட்டேன். நா...நான் பேட் கேர்ள்” இமையா வெறிபிடித்தவள் போல கதிரை தள்ளி விட்டாள். அவள் எத்தனை முறை தள்ளி விட்டாலும், கதிர் மீண்டும் மீண்டும் அவள் அருகில் வந்து உட்கார்ந்து சமாதானம் படுத்தினான்.
“அத்தை.. மாமா இது கேட்டா ரொம்ப கஷ்டப்படு வாங்க இமையா. என்னை பாரு இது எல்லாம் ஒரு விஷயமே இல்லடா"
இமையா காதை பொத்திக்கொண்டாள் “இங்கிருந்து போ...”
“இல்லை நான் போகமாட்டேன். என் இமையா கூட தான் இருப்பேன்"
“கதிர் பிளீஸ் வெளியே போ... எனக்கு அசிங்கமா இருக்கு போ" இமையாவின் விசும்பல் அதிகரித்துக்கொண்டே போனது.
கதிருக்கு இமையாவை எப்படி சரி கட்டுவது என்று ஒன்றும் விளங்கவில்லை.
கதிர் சொல்லுவது கேட்கும் நிலையிலும் அவள் இல்லை. சைக்காலாஜிக்கலாக இமையா படிபடியாக பின் அடைவு அடைந்தாள், மனதளவிலும் சரி உடலிலும் சரி.
முதலில் காதல் தோல்வி. அதன் பிறகு பார்வை இழந்தது, கட்டாய திருமணம், இவன் மீது காதல், வள்ளி சொன்னது, அவனது தந்தை பேசிய வார்த்தைகள், கதிரின் காதல் என அவளை எவ்வளவு முடியுமோ அவ்வளவும் அவளது மனதை பாதித்தது.
இதற்கிடையில் இந்த கனவு. அதனின் பயத்தால் ஏற்பட்ட நிகழ்வு என இமையாவின் வாழ்க்கையை புரட்டிபோட போவது இந்த நிகழ்வுதான்.
இது இரண்டாவது முறை. இமையா பெட்டை நனைத்தது. காதல் பிரிவுக்கு முன் ஒரு முறை. அவளது காதலனை பிரிய காரணமாக இருந்தது. இந்த முறை கணவனை பிரிய காரணமாக இருக்க போகிறது.
அழுது அழுது களைத்து போனாள் இமையா. ஒரு கட்டத்துக்கு மேல் தேம்பி அழுததில் மூச்சி பிடித்து கொண்டது. மூச்சி விடவே சிரமப்பட்டாள். உடல் வெட்டிக்கொண்டு, தலை சரிந்தது.
கதிரும் இரண்டடி தள்ளியே அமர்ந்திருந்தான். அவள் அருகில் நெருங்க நெருங்க, அவளின் அழுகை அதிகரித்ததை உணர்ந்தவன் தூரம் இருந்து என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியாமல் குழம்பி நின்றான்.
தலை சரியவும் அவன் தாங்கி பிடிக்க, பாதி மயக்கத்திலும்
“கதிரா என்னை தொடாதே நா… நான் பேட் கேர்ள்”
“இமையா ஒன்னுல்ல ரிலாக்ஸ். இப்படி டென்சன் ஆகாதே. தலை வலிக்கும்” அவளது வியர்த்து இருந்த முகத்தை துடைத்து விட்டு, முன் கலைந்திருந்த முடியை விலக்கியவன்,
“இமையா… நான் சொன்னா கேட்பில்ல...?”
“ம்ம்..."
"எந்திரி குளிச்சிட்டு வந்துடலாம்"
“அம்மா வேணும்...” பிதற்றினாள்.
“இங்க பாரு நான் தான் இனி உனக்கு எல்லாம். வயசானவங்களை தொந்தரவு செய்யக்கூடாதுடா பட்டு"
“அம்மா வேணும்” பாதி மயக்கத்திலிருந்து அம்மா அம்மா என்று கதறும் சிறுமியை என்ன செய்ய?
கதிர் பார்த்து விரும்பிய அந்த இமையா இவளில்லை, முற்றிலும் மாறுபட்டவள். துருதுரு விழிகளோடு… சேட்டை செய்யும் சிரிப்பு… போனி டெயில் போட்ட தோள் வரை பரவும் கூந்தல்... சத்தமாக பேசும் அவளது குரல்... உலகத்தை சுற்ற நினைத்த எண்ணம்.... என அனைத்தும் மாறிவிட்டது.
தற்போது இருக்கும் இமையாவை ஆராய்ச்சி பார்வை பார்த்தவன், 'கருமை சூழ்ந்த விழிகள். நீண்ட முடி ஆனால் பராமரிப்பதில்லை. இரண்டு அடி தனியாக எடுத்து வைக்க தயங்குகிறாள். பேச்சு குறைந்தது, அதுவும் சத்தமில்லாத அடங்கிய குரல். கதிர் மனம் துடித்தது இமையா வேண்டும் என. பழைய இமையாவாக அந்த பட்டாம்பூச்சி எனக்கு எப்போ கிடைப்பாள்? கடவுளே சீக்கிரம் கொடுத்துடு என் இமையாவை' மனதில் ஒரு வேண்டுதல் வைத்தவன்
இமையாவின் டாக்டருக்கு போன் செய்து நடந்ததை சொன்னான்.
“டாக்டர் இப்ப என்ன செய்றது? அரைமணி நேரமா பேசிட்டிருக்கேன். ஒன்னும் வேலைக்கு ஆகலை. ஏதோ கனவு கண்டிருக்கா பயத்துல இப்படி ஆகிடுச்சி"
“கதிர் ஒன்னுமில்லை. இப்ப அவ குழந்தை மைன்ட் செட்டிலிருக்கா. கொஞ்ச கொஞ்சமா கியூர் ஆகிட்டு தான் வரா… கவலை படுறதுக்கு ஒன்னுமில்லை சரியா. ரிலாக்ஸ்.. இப்பா பாதி மயக்கத்தில் தானே இருக்கா பெட்டர். நீங்க குளிக்க வச்சிடுங்க இல்லனா பக்கத்தில் இருக்கும் யாராவதை குளிக்க வைக்க சொல்லுங்க"
“சரி டாக்டர்" கதிருக்கு காமாட்சி அக்காவை கூப்பிட்டத்தான் நினைத்தான். ஆனால், இது வெளியாட்களுக்கு தெரிய படுத்த கதிருக்கு விருப்பமில்லை.
கதிருக்கு தான் குளிக்க வைப்பதிலும் ஒரு தயக்கம் இருந்தது. ஆனா வேறு வழியில்லை என்று இமையாவை தூக்கி வந்து ஒரு குட்டி நார்காலியில் அமர வைத்தான்.
ஆடையுடன் ஷவரின் கீழ் நிறுத்தினான். இமையாவுக்கு தண்ணார் பட்டதும் மயக்கம் தெளிய துவங்கியது.
கதிரின் கை அணைவில் இருந்து நெளிய துவங்கினாள்.
“இமையா இங்க பாரு நான் வெளியே இருக்கேன் குளிச்சிட்டு வந்துடுறியா. இல்லை நான் இங்கவே இருக்கட்டுமா?”
அவன் கேட்டதில் மீதி மயக்கமும் எங்கோ சென்றது இமையாவுக்கு.
“இல்லை நானே”
“சரி டா”
“முடியுமாடா நிற்க?”
“ம்ம்...”
“சரி.. கதவு தாள் போடாத. நான் வெளியே தான் இருக்கேன். எதாவது வேணும்னா கூப்பிடு”
கதிர் பாத்ரும் அருகில் இருந்த சுவற்றில் சாய்ந்து நின்றவன், கண்கள் மூடியிருக்க காதை கூர்மையாக்கி வைத்திருந்தான். அவனுக்கு தெரியும் இமையா எதாவது என்றால் அவனை உதவிக்கு கூட கூப்பிட மாட்டாள்.
அவளது பூ போன்ற நெஞ்சம் கல்லாக மாறி பல மாதங்கள் ஆகியிருந்தது. யாரிடமும் உதவிக்கு நிற்க கூடாது என்ற எண்ணம் அவளுள் நிறைந்திருந்தது. அது கதிருக்கு மட்டுமில்லை. அவளது அப்பா அம்மாவுக்கும் பொருந்தும்.
தண்ணீர் சத்தம் நின்றது. வேகமாக கண்களை திறந்தவன்
“இமையா... குளிச்சிட்டியா ?”
“ம்ம்....”
ஐந்து நிமிடம் ஆனது. இமையாவிடம் இருந்து எந்த சத்தமும் இல்லை.
‘இன்னும் என்ன செய்யறா ?’
“இமையா... இன்னும் என்ன பண்ற ?”
“கதிர்… டிரஸ்” வெளிப்படையாகவே தன் தலையை அடித்து கொண்டான்.
‘ச்சே இந்த மன குழப்பத்தில் டிரஸ் எடுத்து வைக்க மறந்துட்டேனே.. ஈஸ்வரா' ஆடையை எடுத்து வந்து கொடுக்க, இமையாவும் சிறு தயக்கத்தோடு கைகளை மட்டும் வெளி நீட்டி வாங்கி கொண்டாள்.
இமையா வாங்கிய ஆடையை கம்பியில் போட்டவள், ஆடை அணியும் போது தான் ஒன்றை கவனித்தாள். ஒரு ஆடவன் தனது அனைத்து உடையையும் எடுத்து தந்தது ஒரு வித கூச்சத்தை ஏற்படுத்தியது. இமையா ஒன்றை மறந்தாள், சில மாதங்களாகவே அவன் தான் அவளது அனைத்து தேவையையும் எடுத்து வைக்கிறான் என்று.
இன்னும் ஒன்றையும் மறந்திருந்தாள். வேறு ஒரு ஆடவனில்லை அவன் தன்னவன், தன் கணவன் என்பதையும் மறந்திருந்தாள் இமையா.
வெளியே வந்தவள் “கதிர் தேங்க்ஸ்” அதன் பிறகு இமையாவிடம் இருந்து அமைதி மட்டும் தான். போனில் கதையை கேட்க துவங்கியவள், இரவு வரை அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.
கதிரும் அவளிடம் பேச்சு வளர்க்கவில்லை. அவனது வேலை அவளுக்கு நேரத்துக்கு ஊட்டி விடுவது அவ்வளவு தான்.
அந்த நாள் அமைதியாக போனது இருவருக்கும். இமையா மனதில் ஆயிரம் போராட்டங்கள், வேதனைகள். வெளியே சொல்லவும் முடியாமல் உள்வைத்து பூட்டவும் முடியாமல் கலங்கி நின்றாள்.
மாலை கதிர் வெளியே அழைத்து சென்றவன், வழக்கம் போல சுற்றி நடப்பதை சொல்லி, அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுக்க, காலையில் நடந்த அக்கசப்பான நிகழ்வுகளை கொஞ்சம் மறந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
கதிரை இமையா மனம் தேடியது. முன்பிருந்த தயக்கம் இப்போதில்லை. எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது. தன்னை குழந்தை போல பார்த்துக் கொள்ளும் கணவன் கிடைக்க.
உரிமையாக தோள் சாய்ந்தாள்.
“கதிரா… நான் உனக்கு ஜடை போட்டு விடட்டா ?” என்று கேட்டாள்.
கதிரே குழம்பினான். காலையில் அந்நிய பார்வை வீசினாள். இப்போது இந்த உரிமை பேச்சு... 'சந்திர முகிக்கே டப் கொடுப்பா போல. இந்த செல்ல ராட்சசி’
“சரி” என்று தலையை தெரியாமல் கதிர் கொடுத்துவிட்டான். சீப்பை வைத்து சீவுகிறேன் என்று மூடியை இன்னும் சிக்காக்கினாள். பின்னுகிறேன் என்ற பெயரில் குதறி வைத்திருந்தாள் அவனது தலை மூடியை.
“கதிரா போட்டு முடிச்சிட்டேன். ஒரு செல்பி எடேன்” கதிர் இருவரையும் சேர்த்து அவளது போனில் நிழல் படம் எடுத்தவனின் மனதில் ஆயிரம் யோசனை.
இவளை அந்த இருள் உலகில் இருந்து எப்போது அழைத்து வருவது? எப்படி அழைத்து வருவது? என்று தான் புரியாமல் கதிர் திகைத்து நின்றான்.
கையை எடுத்து பூ மீது வைக்க, இமையாவுக்கு அந்த மென்மை ஏதோ செய்தது. அதை மனதார ரசிக்கவும் செய்தாள்.
"சரி தூங்க போலாமா இமை?"
"தூங்கலாம்... ஏமாத்துகாரா கதை சொல்லுறேன்னு ஏமாத்திட்ட"
"ஹாஹா... மறந்துட்டேன் வா சொல்லுறேன்"
"போ எனக்கு தூக்கம் வருது நாளைக்கு சொல்லு" என இருவரும் மனநிறைவோடு தூங்கினார்கள்.
ஆனால் விடியும் நாள் இமையாவுக்கு இடியை இறக்கி இருந்தது.
இமையாவிற்கு ஏதோ கொடூர கனவு. அதனை ஜீரணிக்க முடியாமல் பயத்தில் எழுந்தவள்
“கதிரா… கதிரா” பயத்தில் பேய் போல கத்தினாள்.
“இமை என்னாச்சி" அருகில் வந்து அமர்ந்தவனை தாவி அணைத்து கொண்டாள். இப்போது எல்லாம் அம்மா என்று அலறுவதையே மறந்து இருந்தாள். கதிரா தான் எல்லாம்.
“என்னாச்சி... இமை பேட் டிரீமாஸ்சா" அவளது முகத்தை ஆறுதலாக ஏந்தி பிடித்தான்.
“ம்ம்.. பயமா இருக்கு என்னைவிட்டுடாத” இறுக அணைத்தவள், ஏதேதோ பிதற்றி கொண்டிருந்தாள்.
‘என்ன பெட் ஈரமா இருக்கு... இமையா தண்ணீ கொட்டிட்டாளா ?’ கதிர் சுற்றிப்பார்க்க, இரவு வைத்த தண்ணீர் அப்படியே இருந்தது. தண்ணீ எங்கிருந்து வந்தது.
அப்போது தான் இமையாவை பார்த்தான். பயத்தில் படுக்கையை நனைத்திருந்தாள். இமையாவை விட இப்போது கதிர் தான் பதறினான்.
‘கதிர் எதாவது யோசி... இதை இமையா உணர்வதற்குள். எப்படியாவது குளியல் அறைக்கு கூட்டிட்டு போகனும்’
“இமையா… எழுந்திரு குளிச்சா சரியா போயிடும். இனி பேட் டிரீம்ஸ் வராது. வா எழு குட்டிமா”
“இல்லை இப்படியே இரு இரூட்டு ராட்சசன் வரான். என்னை உன்னிடம் இருந்து பிரிக்க” இமையா ஏதோ உணர்ந்தவள்,
திடீரென கதிரை தள்ளிவிட்டாள் தன் முழு பலம் கொண்டு.
இமையா அலர துவங்கினாள். இந்த வயதில் இப்படி மெத்தையை நனைத்து வைத்திருப்பதை அவமானமாக எண்ணினாள். அவளது நடவடிக்கை கதிர் மனதில் ஒரு தாக்கத்தை உருவாக்கியது.
தனது டாப்பின் நுனியை பிடித்து கொண்டவள், அந்த இடத்தை விட்டு நான்கு காலில் தவழ்ந்து சென்று மெத்தையின் ஒரு மூலையில் அமர்ந்து அருகில் இருந்த அவளது ஷாலை எடுத்து தன் மீது போற்றிக்கொண்டாள்.
இமையாவின் தலையில் யாரோ வெடி வைத்தது போல வலித்தது.
தலையை பிடித்து கொண்டவளின் அருகில் உட்கார்ந்த கதிரின் கைகள் நடுங்கியது. தைரியத்தை வரவழைத்து கொண்டு இமையாவின் தோளை தோட,
“என்னை தொடாத நான் கெட்ட பாப்பா… மெத்தையை அழுக்கு செஞ்சிட்டேன். பேட் ஸ்மல் வருது. இங்க இருக்காத வெளியே போ”
“இமையா குளிக்கலாம் வாடா… எந்திரி” இமையாவின் தோற்றம் கதிரை நடுங்க செய்தது.
“இல்லை… போ என்னை தொடாத. பயமா இருக்கு இங்கிருந்து போ. நான் உனக்கு வேண்டா. மெத்தை நனைக்காத, நல்ல பொண்ணு பாத்துக்கோ. முக்கியமா உடல்ல எந்த குறையும் இல்லாத பொண்ணா பாத்துக்கோ" இமையா இதையே திரும்ப திரும்ப சொன்னாள்.
“மெத்தையை வீணாக்கிட்டேன். உன் காசு எல்லாம் வீண் செஞ்சிட்டேன்” இப்படி ஏதேதோ சொல்லி புலம்பியவள், ஒரு கட்டத்துக்கு மேலே அடம்பிடிக்க துவங்கினாள்.
“அம்மா வேணும் அம்மா... அம்மா” அழுகையும் விசும்பலும் அதிகரித்துக்கொண்டே போனது.
“இமையா இங்க பாரு ஒன்னுமில்லை. என் தங்கமில்ல. வா எந்திரி குளிச்சிட்டு வந்துடலாம். தங்க பிள்ளை சொன்ன பேச்சி கேட்குமாம்”
“போ... என் பக்கம் வராத போடா... நான் சுச்சு போயிட்டேன். நா...நான் பேட் கேர்ள்” இமையா வெறிபிடித்தவள் போல கதிரை தள்ளி விட்டாள். அவள் எத்தனை முறை தள்ளி விட்டாலும், கதிர் மீண்டும் மீண்டும் அவள் அருகில் வந்து உட்கார்ந்து சமாதானம் படுத்தினான்.
“அத்தை.. மாமா இது கேட்டா ரொம்ப கஷ்டப்படு வாங்க இமையா. என்னை பாரு இது எல்லாம் ஒரு விஷயமே இல்லடா"
இமையா காதை பொத்திக்கொண்டாள் “இங்கிருந்து போ...”
“இல்லை நான் போகமாட்டேன். என் இமையா கூட தான் இருப்பேன்"
“கதிர் பிளீஸ் வெளியே போ... எனக்கு அசிங்கமா இருக்கு போ" இமையாவின் விசும்பல் அதிகரித்துக்கொண்டே போனது.
கதிருக்கு இமையாவை எப்படி சரி கட்டுவது என்று ஒன்றும் விளங்கவில்லை.
கதிர் சொல்லுவது கேட்கும் நிலையிலும் அவள் இல்லை. சைக்காலாஜிக்கலாக இமையா படிபடியாக பின் அடைவு அடைந்தாள், மனதளவிலும் சரி உடலிலும் சரி.
முதலில் காதல் தோல்வி. அதன் பிறகு பார்வை இழந்தது, கட்டாய திருமணம், இவன் மீது காதல், வள்ளி சொன்னது, அவனது தந்தை பேசிய வார்த்தைகள், கதிரின் காதல் என அவளை எவ்வளவு முடியுமோ அவ்வளவும் அவளது மனதை பாதித்தது.
இதற்கிடையில் இந்த கனவு. அதனின் பயத்தால் ஏற்பட்ட நிகழ்வு என இமையாவின் வாழ்க்கையை புரட்டிபோட போவது இந்த நிகழ்வுதான்.
இது இரண்டாவது முறை. இமையா பெட்டை நனைத்தது. காதல் பிரிவுக்கு முன் ஒரு முறை. அவளது காதலனை பிரிய காரணமாக இருந்தது. இந்த முறை கணவனை பிரிய காரணமாக இருக்க போகிறது.
அழுது அழுது களைத்து போனாள் இமையா. ஒரு கட்டத்துக்கு மேல் தேம்பி அழுததில் மூச்சி பிடித்து கொண்டது. மூச்சி விடவே சிரமப்பட்டாள். உடல் வெட்டிக்கொண்டு, தலை சரிந்தது.
கதிரும் இரண்டடி தள்ளியே அமர்ந்திருந்தான். அவள் அருகில் நெருங்க நெருங்க, அவளின் அழுகை அதிகரித்ததை உணர்ந்தவன் தூரம் இருந்து என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியாமல் குழம்பி நின்றான்.
தலை சரியவும் அவன் தாங்கி பிடிக்க, பாதி மயக்கத்திலும்
“கதிரா என்னை தொடாதே நா… நான் பேட் கேர்ள்”
“இமையா ஒன்னுல்ல ரிலாக்ஸ். இப்படி டென்சன் ஆகாதே. தலை வலிக்கும்” அவளது வியர்த்து இருந்த முகத்தை துடைத்து விட்டு, முன் கலைந்திருந்த முடியை விலக்கியவன்,
“இமையா… நான் சொன்னா கேட்பில்ல...?”
“ம்ம்..."
"எந்திரி குளிச்சிட்டு வந்துடலாம்"
“அம்மா வேணும்...” பிதற்றினாள்.
“இங்க பாரு நான் தான் இனி உனக்கு எல்லாம். வயசானவங்களை தொந்தரவு செய்யக்கூடாதுடா பட்டு"
“அம்மா வேணும்” பாதி மயக்கத்திலிருந்து அம்மா அம்மா என்று கதறும் சிறுமியை என்ன செய்ய?
கதிர் பார்த்து விரும்பிய அந்த இமையா இவளில்லை, முற்றிலும் மாறுபட்டவள். துருதுரு விழிகளோடு… சேட்டை செய்யும் சிரிப்பு… போனி டெயில் போட்ட தோள் வரை பரவும் கூந்தல்... சத்தமாக பேசும் அவளது குரல்... உலகத்தை சுற்ற நினைத்த எண்ணம்.... என அனைத்தும் மாறிவிட்டது.
தற்போது இருக்கும் இமையாவை ஆராய்ச்சி பார்வை பார்த்தவன், 'கருமை சூழ்ந்த விழிகள். நீண்ட முடி ஆனால் பராமரிப்பதில்லை. இரண்டு அடி தனியாக எடுத்து வைக்க தயங்குகிறாள். பேச்சு குறைந்தது, அதுவும் சத்தமில்லாத அடங்கிய குரல். கதிர் மனம் துடித்தது இமையா வேண்டும் என. பழைய இமையாவாக அந்த பட்டாம்பூச்சி எனக்கு எப்போ கிடைப்பாள்? கடவுளே சீக்கிரம் கொடுத்துடு என் இமையாவை' மனதில் ஒரு வேண்டுதல் வைத்தவன்
இமையாவின் டாக்டருக்கு போன் செய்து நடந்ததை சொன்னான்.
“டாக்டர் இப்ப என்ன செய்றது? அரைமணி நேரமா பேசிட்டிருக்கேன். ஒன்னும் வேலைக்கு ஆகலை. ஏதோ கனவு கண்டிருக்கா பயத்துல இப்படி ஆகிடுச்சி"
“கதிர் ஒன்னுமில்லை. இப்ப அவ குழந்தை மைன்ட் செட்டிலிருக்கா. கொஞ்ச கொஞ்சமா கியூர் ஆகிட்டு தான் வரா… கவலை படுறதுக்கு ஒன்னுமில்லை சரியா. ரிலாக்ஸ்.. இப்பா பாதி மயக்கத்தில் தானே இருக்கா பெட்டர். நீங்க குளிக்க வச்சிடுங்க இல்லனா பக்கத்தில் இருக்கும் யாராவதை குளிக்க வைக்க சொல்லுங்க"
“சரி டாக்டர்" கதிருக்கு காமாட்சி அக்காவை கூப்பிட்டத்தான் நினைத்தான். ஆனால், இது வெளியாட்களுக்கு தெரிய படுத்த கதிருக்கு விருப்பமில்லை.
கதிருக்கு தான் குளிக்க வைப்பதிலும் ஒரு தயக்கம் இருந்தது. ஆனா வேறு வழியில்லை என்று இமையாவை தூக்கி வந்து ஒரு குட்டி நார்காலியில் அமர வைத்தான்.
ஆடையுடன் ஷவரின் கீழ் நிறுத்தினான். இமையாவுக்கு தண்ணார் பட்டதும் மயக்கம் தெளிய துவங்கியது.
கதிரின் கை அணைவில் இருந்து நெளிய துவங்கினாள்.
“இமையா இங்க பாரு நான் வெளியே இருக்கேன் குளிச்சிட்டு வந்துடுறியா. இல்லை நான் இங்கவே இருக்கட்டுமா?”
அவன் கேட்டதில் மீதி மயக்கமும் எங்கோ சென்றது இமையாவுக்கு.
“இல்லை நானே”
“சரி டா”
“முடியுமாடா நிற்க?”
“ம்ம்...”
“சரி.. கதவு தாள் போடாத. நான் வெளியே தான் இருக்கேன். எதாவது வேணும்னா கூப்பிடு”
கதிர் பாத்ரும் அருகில் இருந்த சுவற்றில் சாய்ந்து நின்றவன், கண்கள் மூடியிருக்க காதை கூர்மையாக்கி வைத்திருந்தான். அவனுக்கு தெரியும் இமையா எதாவது என்றால் அவனை உதவிக்கு கூட கூப்பிட மாட்டாள்.
அவளது பூ போன்ற நெஞ்சம் கல்லாக மாறி பல மாதங்கள் ஆகியிருந்தது. யாரிடமும் உதவிக்கு நிற்க கூடாது என்ற எண்ணம் அவளுள் நிறைந்திருந்தது. அது கதிருக்கு மட்டுமில்லை. அவளது அப்பா அம்மாவுக்கும் பொருந்தும்.
தண்ணீர் சத்தம் நின்றது. வேகமாக கண்களை திறந்தவன்
“இமையா... குளிச்சிட்டியா ?”
“ம்ம்....”
ஐந்து நிமிடம் ஆனது. இமையாவிடம் இருந்து எந்த சத்தமும் இல்லை.
‘இன்னும் என்ன செய்யறா ?’
“இமையா... இன்னும் என்ன பண்ற ?”
“கதிர்… டிரஸ்” வெளிப்படையாகவே தன் தலையை அடித்து கொண்டான்.
‘ச்சே இந்த மன குழப்பத்தில் டிரஸ் எடுத்து வைக்க மறந்துட்டேனே.. ஈஸ்வரா' ஆடையை எடுத்து வந்து கொடுக்க, இமையாவும் சிறு தயக்கத்தோடு கைகளை மட்டும் வெளி நீட்டி வாங்கி கொண்டாள்.
இமையா வாங்கிய ஆடையை கம்பியில் போட்டவள், ஆடை அணியும் போது தான் ஒன்றை கவனித்தாள். ஒரு ஆடவன் தனது அனைத்து உடையையும் எடுத்து தந்தது ஒரு வித கூச்சத்தை ஏற்படுத்தியது. இமையா ஒன்றை மறந்தாள், சில மாதங்களாகவே அவன் தான் அவளது அனைத்து தேவையையும் எடுத்து வைக்கிறான் என்று.
இன்னும் ஒன்றையும் மறந்திருந்தாள். வேறு ஒரு ஆடவனில்லை அவன் தன்னவன், தன் கணவன் என்பதையும் மறந்திருந்தாள் இமையா.
வெளியே வந்தவள் “கதிர் தேங்க்ஸ்” அதன் பிறகு இமையாவிடம் இருந்து அமைதி மட்டும் தான். போனில் கதையை கேட்க துவங்கியவள், இரவு வரை அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.
கதிரும் அவளிடம் பேச்சு வளர்க்கவில்லை. அவனது வேலை அவளுக்கு நேரத்துக்கு ஊட்டி விடுவது அவ்வளவு தான்.
அந்த நாள் அமைதியாக போனது இருவருக்கும். இமையா மனதில் ஆயிரம் போராட்டங்கள், வேதனைகள். வெளியே சொல்லவும் முடியாமல் உள்வைத்து பூட்டவும் முடியாமல் கலங்கி நின்றாள்.
மாலை கதிர் வெளியே அழைத்து சென்றவன், வழக்கம் போல சுற்றி நடப்பதை சொல்லி, அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுக்க, காலையில் நடந்த அக்கசப்பான நிகழ்வுகளை கொஞ்சம் மறந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
கதிரை இமையா மனம் தேடியது. முன்பிருந்த தயக்கம் இப்போதில்லை. எந்த பெண்ணுக்கு தான் பிடிக்காது. தன்னை குழந்தை போல பார்த்துக் கொள்ளும் கணவன் கிடைக்க.
உரிமையாக தோள் சாய்ந்தாள்.
“கதிரா… நான் உனக்கு ஜடை போட்டு விடட்டா ?” என்று கேட்டாள்.
கதிரே குழம்பினான். காலையில் அந்நிய பார்வை வீசினாள். இப்போது இந்த உரிமை பேச்சு... 'சந்திர முகிக்கே டப் கொடுப்பா போல. இந்த செல்ல ராட்சசி’
“சரி” என்று தலையை தெரியாமல் கதிர் கொடுத்துவிட்டான். சீப்பை வைத்து சீவுகிறேன் என்று மூடியை இன்னும் சிக்காக்கினாள். பின்னுகிறேன் என்ற பெயரில் குதறி வைத்திருந்தாள் அவனது தலை மூடியை.
“கதிரா போட்டு முடிச்சிட்டேன். ஒரு செல்பி எடேன்” கதிர் இருவரையும் சேர்த்து அவளது போனில் நிழல் படம் எடுத்தவனின் மனதில் ஆயிரம் யோசனை.
இவளை அந்த இருள் உலகில் இருந்து எப்போது அழைத்து வருவது? எப்படி அழைத்து வருவது? என்று தான் புரியாமல் கதிர் திகைத்து நின்றான்.