விழிமொழி: 16
தூங்கி எழுந்தவள், ‘இமையா.. நீ எல்லாத்துக்கும் ஓவர் ரியாக்ட் செய்யற. கதிரின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குமில்லை. இனி அவனை தொந்தரவு செய்ய கூடாது. இப்போ டைம் வேற என்னானு தெரியலையே. கதிர் நல்லா தூங்கி இருப்பானோ? இல்லை என் மூஞ்சை பாத்துட்டு யோசனை செஞ்சிட்டிருப்பானா?' சாயந்திரம் நடந்த அந்த கலவரத்திலிருந்து வெளியே வந்தாள்.
அந்த பயம் போய், தன் மனதிலிருக்கும் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று பலத்த யோசனையில் இருந்தாள் இமையா.
இமையாவின் மனதில் புதிதாக வெட்கம் எல்லாம் வந்தது. கதிர் தனக்கு நோ சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை இப்போது பன்மடங்காக பெருகி இருந்தது.
கதிரின் கோபத்தில் கூட அவள் மேலிருக்கும் காதல் தான் வெளிப்பட்டது அவனிடமிருந்து. சில வருடங்களாக பாலைவனமாக இருந்த மனதில் செடி முளைத்தது.
‘சரியான மாயக்காரன் எப்படி இருந்த என்னை இப்படி புலம்ப வச்சிட்டான். டேய் எனக்கு டைம் யார் சொல்லுவா?‘ இமையாவின் முகம் சோகத்தை தத்தெடுத்தது.
‘ச்சே… இந்த கண்ணால ஒரு டைம் கூட தெரிஞ்சிக்க முடியலை இந்த போன் எங்க இருக்கு, கூகுல் அசிஸ்டன்ட்ல ஆச்சி கேட்கலாம்' அக்கம் பக்கத்து தரையை தடவியவளுக்கு, மெத்தையில் கத்தையாக முடி கைக்கு தட்டுப்பட
‘கதிரா.. என்னடா இப்படி முடியை வளர்த்து வச்சிருக்க' முடியின் நீளத்தை குத்துமதிப்பாக அளந்தவள்
‘அட பாவி பயலே எதுக்குடா இவ்வளவு முடி. நான் கூட பேஷனுக்கு ஏதோ வளர்த்து வச்சி இருக்கனு நினைச்சா.. பெரிய போனி டைலே போடலாம் போல!'
இமையா முடியை ஏடாகூடமாக இழுத்துவிட “ஸ்ஸ்ஸ்…” அலறிய கதிரின் கையணைவில் இருந்தாள் இமையா அடுத்த நொடி.
“இமை மா.. தூங்காம என்ன செய்யற?"
“அது…" இமையா சொல்ல துவங்கும் போதே கதிர் அவளது கழுத்தில் தனது முகத்தை புதைத்தான். இமையாவின் பேச்சு அவனால் ஏற்பட்ட குறுகுறுப்பில் தடைப்பட்டது.
“ம்ம்… சொல்லு இமை? தூங்கலையா"
இமையா மெல்லிய குரலில் “ம்ம்…” என்றாள்.
கதிர் தனது முகத்தை இன்னும் புதைத்துகொள்ள இமையா தான், அவனது அணைப்பை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் பொம்மை போலானாள்.
“ஏன் இமை அமைதியா இருக்க.. கோபம் போலையா?”
இமையாவிடமிருந்து அமைதிதான் பதிலாக வந்தது.
“ரொம்ப கோபமா இருக்கியா?”
“இல்லங்க.. கோபமில்லை"
“நீ வாங்கன்னு கூப்பிடுறதுலையே தெரியுது"
இமையா மனதில் ‘லூசு கதிர் இப்படி முகத்தை புதச்சிகிட்டு.. கேட்டா வாங்க போங்க தான் வரும். நானும் பெண் தானே! வெட்கம் வருமில்ல'
இமையா அமைதியாக இருக்க இருக்க, கதிரின் அணைப்பு இறுகிக்கொண்டே போனது.
‘ஆ… இடுப்பு எழும்பை உடச்சிடுவான் போல' இமையாவால் மனதில் மட்டுமே பேச முடிந்தது.
"ஏங்க.. பசிக்குது" உடனே இமையாவை விட்டு வேகமாக பிரிந்தவன்,
“அச்சோ.. இமையாவுக்கு பசிக்குதா? நான் சாப்பாடு எடுத்துவரேன்" எழுந்தவனை பார்த்த இமையாவுக்கு ஆச்சரியம். ‘என்ன இவன்? குழந்தையை பாத்துக்கறது போல இப்படி பாத்துக்குறான்' என வியந்தாள்.
கதிர் சமைத்து வைத்த பிரியாணியை ஊட்டிவிட இமையாவை கூச்சம் தின்றது.
“ஏன் இமையா.. இன்னும் கோபமா இருக்கியா?”
“அச்சோ அப்படி எல்லாம் இல்லைங்க" சாதத்தை இமையா மென்றுக்கொண்டே சொல்ல
“அப்போ ஏன் முகம் இப்படி சிவந்திருக்கு புதுசா... கதிர்
வாங்க போங்கனு கூப்பிடுற”
‘அட கிறுக்கு பயலே! முகம் சிவக்கற அளவுக்கு செய்யறது எல்லாம் செஞ்சிட்டு பேச்சை பாரு' கதிரை மனதில் செல்லம் கொஞ்சிவிட்டு
“அப்படி எல்லாம் இல்லை கதிரா"
இருவரும் சாப்பிட்டு முடிக்கவும், “டைம் என்ன இப்போ?" என கேட்டாள் இமையா.
“பனிரெண்டு மணி ஆக இன்னும் ஐஞ்சி நிமிசமிருக்கு. ஆமா எதுக்கு தூங்குறதுக்கு முன்னாடி எழுப்பி விட சொன்ன"
“கார்டனுக்கு கூட்டிட்டு போ சொல்லுறேன்" கதிரும் இமையாவை தூக்கிக்கொண்டு நடந்தான்.
கதிரின் மூச்சிக்காத்து இமையாவின் நெற்றியில் பட, உடலில் ஒரு சிலிர்ப்பு.
“கதிரா.. நான் குழந்தையில்லை என்னை இறக்கி விடு" கீழே இறங்க நெளிய, கதிர் இன்னும் இறுக்கமாக பிடித்து வந்தான். கார்டனுக்கு வரவும் தான் இமையாவை இறக்கினான்.
“சொல்லு இந்த நேரத்துக்கு இங்க எதுக்கு?”
என்ன தான் இமையா தைரியமாக இதுவரை வந்து விட்டாலும், அதற்குமேல் எப்படி தொடங்குவது என்ற ஒரு வித பதற்றத்தால் முகத்தில் வேர்வை வடிந்தது.
“இமையா உடம்பு சரியில்லையா?"
“இல்லையே"
கதிர் இமையாவின் முகத்தில் வழிந்த வேர்வையை துடைத்து விட, இமையாவுக்கு எப்படி துவங்குவது என்று தெரியவில்லை.
சட்டென இமையாவின்
மண்டையில் கலர் கலராக பல்ப் எரிந்தது. ‘அன்று ஊஞ்சலில் ஒன்றாக கதிர் ஆட கேட்டானே... ஊஞ்சலில் இருவரும் ஆடலாமா? கேட்டுட்டு ஆட துவங்கும் போது லவ் யூ சொல்லிடலாம்?' மனதில் ஒரு நீண்ட ஸ்கெட்ச் போட்டாள் இமையா.
“கதிர்… ஊஞ்சல்" என்று துவங்கும் முன் இருவருக்கும் பின்னிருந்து ஒரு பெண்ணின் குரல்.
“அண்ணா ஹாப்பி பர்த்துடே..” இவ்வளவு நேரம் கோர்த்திருந்த கதிரின் கரங்கள் இமையாவை விட்டு விலக, தங்கையை நோக்கி நடந்தான்.
“பாப்பு… இந்த நேரத்துல இங்க என்ன செஞ்சிட்டிருக்க?"
“உனக்கு விஸ் செய்யனும்னு வீட்டில் அடம்பிடிச்சி வந்தேன்”
“இந்த நேரத்தில் எப்படி வீட்ல தனியா விட்டாங்க?"
“அப்பா இப்போ தான் விட்டுட்டு போனாங்க"
“அப்பா உள்ள வரலையா?"
“அவரை விடு ண்ணா... செம பசி" பேச்சை மாற்றினாள் கதிரின் தங்கை.
“சாப்பிடாம கூட உன்னை யார் இந்த நேரத்தில் வர சொன்னது? வா உள்ள போலாம்" தங்கை வந்த சந்தோஷத்தில் இமையா அங்கிருப்பதையே மறந்துவிட்டான்.
இமையா தனது கையை வருடி விட்டவள் ‘ஏன் கதிரா என் கையை விட்ட' என சிறு பிள்ளை கணக்காக மனம் சுனங்கியது.
தங்கையிடம் பேசிவிட்டு வந்து தன் கரங்களை பிடித்து கொள்வான் என்று நினைத்தவளுக்கு இடியாக மனதை பிளந்தது அவனது நடவடிக்கை.
இருவரின் குரலும் மறைய துவங்கியது. இமையாவை தனியே விட்டுவிட்டு தங்கைக்கு சாப்பாடு போட்டு முடித்ததும் தான் கதிருக்கு நினைவே வந்தது இமையாவை விட்டுவிட்டோம் என்று.
இருவரின் குரலும் மறைந்த பின் 'இமையா உன்னால முடியும்.தனியாவே நடந்து வீட்டுக்கு போய்டலாம்' என்று எடுத்து வைத்த முதல் அடியே தடுக்கல். இரண்டு பூ ஜாடி வெவ்வேறு திசையில் உருண்டது.
இமையா மேலும் இரண்டு அடி வெற்றிகரமாக வைத்தாள். மூன்றாவது அடிக்கு காலில் ஏதோ வலுவலுப்பாக பட, இமையாவுக்கு அது பாம்பு போல தெரிய, சறுக்கி விழுந்து, தட்டுத் தடுமாறி எழுந்தாள்.
அருகில் எதாவது குச்சி போல இருக்கா என்று சோதித்தாள், அதன் உதவியோடு நடக்க.
இமையாவின் உடல் முழுவதும் சேறு. குச்சி தேடும் போது, சற்று முன் தடுக்கிவிட்ட பைப் கையில் பட “பைப்புக்கா பயந்து விழுந்தேன்"
தன்னைத்தானே கடிந்துக்கொண்டவளின் மனதில் உறைத்தது ஒன்று தான். ‘தான் தனியாக நடக்க கத்துக்காதது எவ்வளவு தவறு‘ என்று
எழுந்து நின்று வேறு திசையில் நடந்து சென்றவளின் முகத்தில் அலங்காரத்துக்கு வைத்திருந்த புதர் செடிதான் மோதியது. புதர் செடியை பிடித்துக்கொண்டு ஒரு திசைக்கு நடந்தாள்.
கதிர் பதறி ஓடிவந்தவன் வழி தெரியாத சிறுபிள்ளை போல மிரண்டு விழிகளால் புதரை பிடித்திருக்கும் இமையாவை கண்டு கதிருக்கே தோன்றியது ‘நான் இமையாவுக்கு பொருத்தமானவன் இல்லை' என தோன்றியது.
“இமை மா…" கதிரின் குரல் கேட்டு எந்த அசைவுமில்லாமல் அமர்ந்திருந்தாள்.
சாயந்திரம் ஏற்பட்ட காயத்தின் ரத்தத்தை இமையா தூங்கும் போது முடிந்த அளவுக்கு சுத்தம் செய்தான். வெள்ளை நிற ஆடையில் ரத்தமும் சேறும் இமையா தலையில் மண் என பார்க்க முடியாத அளவுக்கு உருமாறி இருந்தாள்.
“இமை… சாரி"
இமையா மனதிலும் சரி உதட்டிலும் சரி விரக்தி புன்னகை வெளிபட்டது.
“இமை மா… இமை குட்டி"
“நான் உங்க கிட்ட என்னை குட்டி சொல்லாதிங்கனு சொல்லி இருக்கேன்" நிறுத்தி நிதானமாக இமையா சொல்ல
இமையாவின் இந்த கடுமை அவனுக்கு புதியது “எனக்கு ஒரு ஹெல்ப் செய்றிங்களா?”
“சொல்லு இமை.. உனக்காக எதையும்” கதிர் சொல்லி முடிக்கும் முன் தன் கரங்களினால் நிறுத்த சொல்வது போல சைகை காட்ட.
கதிரும்… “சொல்லு மா"
“என்னை ரூம் வரைக்கும் விட்டுவிடுங்க" எப்போதும் ஒருமையில் அழைத்த அவளது குரல் இப்போது பன்மையில் அழைக்க கதிர் உடைந்து போனான்.
“இமையா.. தங்கச்சி வந்திருக்கா. இந்த சண்டை நமக்குள்ள இருக்கட்டும். அவ போனதும் பேசி தீர்த்துக்கலாம். அவ கண் உருத்தாதது போல நடந்துக்க மட்டும் பர்மிசன் கொடுக்கறையா?"
“ம்ம்…” இமையாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இமையாவுக்கு தேவையானதை எடுத்து கொடுத்துவிட, குளியல் அறைக்கு விட்டவன், தங்கச்சியை சாப்பிட வைத்து அவளை ஒரு தனி அறையில் படுக்க சொல்லிவிட்டு வர
இமையா தலையில் நீர் சொட்ட சொட்ட வெறித்த பார்வையில் அமர்ந்திருந்தாள்.
இமையாவின் மனது கல்லாக கனத்தது. சற்றும் முன் ஏற்பட்ட தனிமை, பயம், ஆதறவற்ற நிலை என யாவும் சரண், அழகியை இதயம் தேடி வைத்தது.
கதிரும் வருந்தினான், 'ஆறுதல் சொல்லும் நிலையில் கூட நானில்லையே' என்று
தூங்கி எழுந்தவள், ‘இமையா.. நீ எல்லாத்துக்கும் ஓவர் ரியாக்ட் செய்யற. கதிரின் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்குமில்லை. இனி அவனை தொந்தரவு செய்ய கூடாது. இப்போ டைம் வேற என்னானு தெரியலையே. கதிர் நல்லா தூங்கி இருப்பானோ? இல்லை என் மூஞ்சை பாத்துட்டு யோசனை செஞ்சிட்டிருப்பானா?' சாயந்திரம் நடந்த அந்த கலவரத்திலிருந்து வெளியே வந்தாள்.
அந்த பயம் போய், தன் மனதிலிருக்கும் காதலை எப்படி வெளிப்படுத்துவது என்று பலத்த யோசனையில் இருந்தாள் இமையா.
இமையாவின் மனதில் புதிதாக வெட்கம் எல்லாம் வந்தது. கதிர் தனக்கு நோ சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை இப்போது பன்மடங்காக பெருகி இருந்தது.
கதிரின் கோபத்தில் கூட அவள் மேலிருக்கும் காதல் தான் வெளிப்பட்டது அவனிடமிருந்து. சில வருடங்களாக பாலைவனமாக இருந்த மனதில் செடி முளைத்தது.
‘சரியான மாயக்காரன் எப்படி இருந்த என்னை இப்படி புலம்ப வச்சிட்டான். டேய் எனக்கு டைம் யார் சொல்லுவா?‘ இமையாவின் முகம் சோகத்தை தத்தெடுத்தது.
‘ச்சே… இந்த கண்ணால ஒரு டைம் கூட தெரிஞ்சிக்க முடியலை இந்த போன் எங்க இருக்கு, கூகுல் அசிஸ்டன்ட்ல ஆச்சி கேட்கலாம்' அக்கம் பக்கத்து தரையை தடவியவளுக்கு, மெத்தையில் கத்தையாக முடி கைக்கு தட்டுப்பட
‘கதிரா.. என்னடா இப்படி முடியை வளர்த்து வச்சிருக்க' முடியின் நீளத்தை குத்துமதிப்பாக அளந்தவள்
‘அட பாவி பயலே எதுக்குடா இவ்வளவு முடி. நான் கூட பேஷனுக்கு ஏதோ வளர்த்து வச்சி இருக்கனு நினைச்சா.. பெரிய போனி டைலே போடலாம் போல!'
இமையா முடியை ஏடாகூடமாக இழுத்துவிட “ஸ்ஸ்ஸ்…” அலறிய கதிரின் கையணைவில் இருந்தாள் இமையா அடுத்த நொடி.
“இமை மா.. தூங்காம என்ன செய்யற?"
“அது…" இமையா சொல்ல துவங்கும் போதே கதிர் அவளது கழுத்தில் தனது முகத்தை புதைத்தான். இமையாவின் பேச்சு அவனால் ஏற்பட்ட குறுகுறுப்பில் தடைப்பட்டது.
“ம்ம்… சொல்லு இமை? தூங்கலையா"
இமையா மெல்லிய குரலில் “ம்ம்…” என்றாள்.
கதிர் தனது முகத்தை இன்னும் புதைத்துகொள்ள இமையா தான், அவனது அணைப்பை ஏற்கவும் முடியாமல் விலக்கவும் முடியாமல் பொம்மை போலானாள்.
“ஏன் இமை அமைதியா இருக்க.. கோபம் போலையா?”
இமையாவிடமிருந்து அமைதிதான் பதிலாக வந்தது.
“ரொம்ப கோபமா இருக்கியா?”
“இல்லங்க.. கோபமில்லை"
“நீ வாங்கன்னு கூப்பிடுறதுலையே தெரியுது"
இமையா மனதில் ‘லூசு கதிர் இப்படி முகத்தை புதச்சிகிட்டு.. கேட்டா வாங்க போங்க தான் வரும். நானும் பெண் தானே! வெட்கம் வருமில்ல'
இமையா அமைதியாக இருக்க இருக்க, கதிரின் அணைப்பு இறுகிக்கொண்டே போனது.
‘ஆ… இடுப்பு எழும்பை உடச்சிடுவான் போல' இமையாவால் மனதில் மட்டுமே பேச முடிந்தது.
"ஏங்க.. பசிக்குது" உடனே இமையாவை விட்டு வேகமாக பிரிந்தவன்,
“அச்சோ.. இமையாவுக்கு பசிக்குதா? நான் சாப்பாடு எடுத்துவரேன்" எழுந்தவனை பார்த்த இமையாவுக்கு ஆச்சரியம். ‘என்ன இவன்? குழந்தையை பாத்துக்கறது போல இப்படி பாத்துக்குறான்' என வியந்தாள்.
கதிர் சமைத்து வைத்த பிரியாணியை ஊட்டிவிட இமையாவை கூச்சம் தின்றது.
“ஏன் இமையா.. இன்னும் கோபமா இருக்கியா?”
“அச்சோ அப்படி எல்லாம் இல்லைங்க" சாதத்தை இமையா மென்றுக்கொண்டே சொல்ல
“அப்போ ஏன் முகம் இப்படி சிவந்திருக்கு புதுசா... கதிர்
வாங்க போங்கனு கூப்பிடுற”
‘அட கிறுக்கு பயலே! முகம் சிவக்கற அளவுக்கு செய்யறது எல்லாம் செஞ்சிட்டு பேச்சை பாரு' கதிரை மனதில் செல்லம் கொஞ்சிவிட்டு
“அப்படி எல்லாம் இல்லை கதிரா"
இருவரும் சாப்பிட்டு முடிக்கவும், “டைம் என்ன இப்போ?" என கேட்டாள் இமையா.
“பனிரெண்டு மணி ஆக இன்னும் ஐஞ்சி நிமிசமிருக்கு. ஆமா எதுக்கு தூங்குறதுக்கு முன்னாடி எழுப்பி விட சொன்ன"
“கார்டனுக்கு கூட்டிட்டு போ சொல்லுறேன்" கதிரும் இமையாவை தூக்கிக்கொண்டு நடந்தான்.
கதிரின் மூச்சிக்காத்து இமையாவின் நெற்றியில் பட, உடலில் ஒரு சிலிர்ப்பு.
“கதிரா.. நான் குழந்தையில்லை என்னை இறக்கி விடு" கீழே இறங்க நெளிய, கதிர் இன்னும் இறுக்கமாக பிடித்து வந்தான். கார்டனுக்கு வரவும் தான் இமையாவை இறக்கினான்.
“சொல்லு இந்த நேரத்துக்கு இங்க எதுக்கு?”
என்ன தான் இமையா தைரியமாக இதுவரை வந்து விட்டாலும், அதற்குமேல் எப்படி தொடங்குவது என்ற ஒரு வித பதற்றத்தால் முகத்தில் வேர்வை வடிந்தது.
“இமையா உடம்பு சரியில்லையா?"
“இல்லையே"
கதிர் இமையாவின் முகத்தில் வழிந்த வேர்வையை துடைத்து விட, இமையாவுக்கு எப்படி துவங்குவது என்று தெரியவில்லை.
சட்டென இமையாவின்
மண்டையில் கலர் கலராக பல்ப் எரிந்தது. ‘அன்று ஊஞ்சலில் ஒன்றாக கதிர் ஆட கேட்டானே... ஊஞ்சலில் இருவரும் ஆடலாமா? கேட்டுட்டு ஆட துவங்கும் போது லவ் யூ சொல்லிடலாம்?' மனதில் ஒரு நீண்ட ஸ்கெட்ச் போட்டாள் இமையா.
“கதிர்… ஊஞ்சல்" என்று துவங்கும் முன் இருவருக்கும் பின்னிருந்து ஒரு பெண்ணின் குரல்.
“அண்ணா ஹாப்பி பர்த்துடே..” இவ்வளவு நேரம் கோர்த்திருந்த கதிரின் கரங்கள் இமையாவை விட்டு விலக, தங்கையை நோக்கி நடந்தான்.
“பாப்பு… இந்த நேரத்துல இங்க என்ன செஞ்சிட்டிருக்க?"
“உனக்கு விஸ் செய்யனும்னு வீட்டில் அடம்பிடிச்சி வந்தேன்”
“இந்த நேரத்தில் எப்படி வீட்ல தனியா விட்டாங்க?"
“அப்பா இப்போ தான் விட்டுட்டு போனாங்க"
“அப்பா உள்ள வரலையா?"
“அவரை விடு ண்ணா... செம பசி" பேச்சை மாற்றினாள் கதிரின் தங்கை.
“சாப்பிடாம கூட உன்னை யார் இந்த நேரத்தில் வர சொன்னது? வா உள்ள போலாம்" தங்கை வந்த சந்தோஷத்தில் இமையா அங்கிருப்பதையே மறந்துவிட்டான்.
இமையா தனது கையை வருடி விட்டவள் ‘ஏன் கதிரா என் கையை விட்ட' என சிறு பிள்ளை கணக்காக மனம் சுனங்கியது.
தங்கையிடம் பேசிவிட்டு வந்து தன் கரங்களை பிடித்து கொள்வான் என்று நினைத்தவளுக்கு இடியாக மனதை பிளந்தது அவனது நடவடிக்கை.
இருவரின் குரலும் மறைய துவங்கியது. இமையாவை தனியே விட்டுவிட்டு தங்கைக்கு சாப்பாடு போட்டு முடித்ததும் தான் கதிருக்கு நினைவே வந்தது இமையாவை விட்டுவிட்டோம் என்று.
இருவரின் குரலும் மறைந்த பின் 'இமையா உன்னால முடியும்.தனியாவே நடந்து வீட்டுக்கு போய்டலாம்' என்று எடுத்து வைத்த முதல் அடியே தடுக்கல். இரண்டு பூ ஜாடி வெவ்வேறு திசையில் உருண்டது.
இமையா மேலும் இரண்டு அடி வெற்றிகரமாக வைத்தாள். மூன்றாவது அடிக்கு காலில் ஏதோ வலுவலுப்பாக பட, இமையாவுக்கு அது பாம்பு போல தெரிய, சறுக்கி விழுந்து, தட்டுத் தடுமாறி எழுந்தாள்.
அருகில் எதாவது குச்சி போல இருக்கா என்று சோதித்தாள், அதன் உதவியோடு நடக்க.
இமையாவின் உடல் முழுவதும் சேறு. குச்சி தேடும் போது, சற்று முன் தடுக்கிவிட்ட பைப் கையில் பட “பைப்புக்கா பயந்து விழுந்தேன்"
தன்னைத்தானே கடிந்துக்கொண்டவளின் மனதில் உறைத்தது ஒன்று தான். ‘தான் தனியாக நடக்க கத்துக்காதது எவ்வளவு தவறு‘ என்று
எழுந்து நின்று வேறு திசையில் நடந்து சென்றவளின் முகத்தில் அலங்காரத்துக்கு வைத்திருந்த புதர் செடிதான் மோதியது. புதர் செடியை பிடித்துக்கொண்டு ஒரு திசைக்கு நடந்தாள்.
கதிர் பதறி ஓடிவந்தவன் வழி தெரியாத சிறுபிள்ளை போல மிரண்டு விழிகளால் புதரை பிடித்திருக்கும் இமையாவை கண்டு கதிருக்கே தோன்றியது ‘நான் இமையாவுக்கு பொருத்தமானவன் இல்லை' என தோன்றியது.
“இமை மா…" கதிரின் குரல் கேட்டு எந்த அசைவுமில்லாமல் அமர்ந்திருந்தாள்.
சாயந்திரம் ஏற்பட்ட காயத்தின் ரத்தத்தை இமையா தூங்கும் போது முடிந்த அளவுக்கு சுத்தம் செய்தான். வெள்ளை நிற ஆடையில் ரத்தமும் சேறும் இமையா தலையில் மண் என பார்க்க முடியாத அளவுக்கு உருமாறி இருந்தாள்.
“இமை… சாரி"
இமையா மனதிலும் சரி உதட்டிலும் சரி விரக்தி புன்னகை வெளிபட்டது.
“இமை மா… இமை குட்டி"
“நான் உங்க கிட்ட என்னை குட்டி சொல்லாதிங்கனு சொல்லி இருக்கேன்" நிறுத்தி நிதானமாக இமையா சொல்ல
இமையாவின் இந்த கடுமை அவனுக்கு புதியது “எனக்கு ஒரு ஹெல்ப் செய்றிங்களா?”
“சொல்லு இமை.. உனக்காக எதையும்” கதிர் சொல்லி முடிக்கும் முன் தன் கரங்களினால் நிறுத்த சொல்வது போல சைகை காட்ட.
கதிரும்… “சொல்லு மா"
“என்னை ரூம் வரைக்கும் விட்டுவிடுங்க" எப்போதும் ஒருமையில் அழைத்த அவளது குரல் இப்போது பன்மையில் அழைக்க கதிர் உடைந்து போனான்.
“இமையா.. தங்கச்சி வந்திருக்கா. இந்த சண்டை நமக்குள்ள இருக்கட்டும். அவ போனதும் பேசி தீர்த்துக்கலாம். அவ கண் உருத்தாதது போல நடந்துக்க மட்டும் பர்மிசன் கொடுக்கறையா?"
“ம்ம்…” இமையாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இமையாவுக்கு தேவையானதை எடுத்து கொடுத்துவிட, குளியல் அறைக்கு விட்டவன், தங்கச்சியை சாப்பிட வைத்து அவளை ஒரு தனி அறையில் படுக்க சொல்லிவிட்டு வர
இமையா தலையில் நீர் சொட்ட சொட்ட வெறித்த பார்வையில் அமர்ந்திருந்தாள்.
இமையாவின் மனது கல்லாக கனத்தது. சற்றும் முன் ஏற்பட்ட தனிமை, பயம், ஆதறவற்ற நிலை என யாவும் சரண், அழகியை இதயம் தேடி வைத்தது.
கதிரும் வருந்தினான், 'ஆறுதல் சொல்லும் நிலையில் கூட நானில்லையே' என்று