விழிமொழி: 26
கதிர் நேராக இமையாவை நோக்கி வர, அவளது கன்னத்தில் இடியாக இறங்கியது அவனது கரங்கள்.
“நீ எல்லாம் மனசாச்சியோடத்தான் பிறந்திருக்கியா? அத்தை மாமா உங்க பொண்ண கூட்டிட்டு போங்க. இவ நல்லா சந்தோஷமா இருக்கனும்னு தான் நான் இவளை கட்டிகிட்டேன். நான் அப்படி என்ன கொடுமை இவளை செஞ்சிட்டேன்னு இவ வீட்டைவிட்டு போனா. பார்வை தெரிஞ்சதும் சொல்லாமா எவ்வளவு பெரிய வேலை பார்த்து வச்சிருக்கா. போங்க இவளை கூட்டிட்டு போய் அவளோட காதலன் கிட்ட சேர்த்து வைங்க"
“மாப்பிள்ளை அவ ஏதோ தெரியாம...”
“இல்லை மாமா அவ தெரிஞ்சி தான் பேசிட்டிருக்கா. தயவு செஞ்சி கூட்டிட்டு போயிடுங்க. என்னால முடியலை போதும். எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. கூட்டிட்டு போங்க உங்க பொண்ண"
“அறிவு கெட்டவளே… உன் வாழ்க்கையில் நீயே மண்ணள்ளி போட்டுக்கிட்டயேடி இப்போவாவது புரியுதா உனக்கு. வந்து தொலை” இமை அம்மா வாயில் கிடைக்கும் அனைத்து சொற்களையும் சேர்த்து வழி முழுவதும் திட்டியே அழைத்து சென்றார். சில மணி நேரத்தில் வீடும் வந்தது சேர,
அழகி கத்திக்கொண்டிருக்க, சரண் தான் அழகியை அடக்கி இமையாவுக்கு சாப்பாடு கொடுக்க சொன்னார்.
“இல்லப்பா பசிக்கலை. தூக்கம் வருது பா"
“சரி… தங்கம் நீ தூங்கி எழு எல்லாம் சரி ஆகிடும்"
‘மத்தவங்களுக்கு நல்லது நினைச்சா நம்மளை தான் தப்பு செஞ்சது போல எல்லோரும் கத்துறாங்க. என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டாங்க போல’ இமையா தன் இமையை மூடி தூங்க
சரணும் அழகியும் புலம்பி கதிருக்கு போன் செய்தனர்.
“மாப்பிள்ளை அது...”
“மாமா சாரி.. கொஞ்சம் கோபம். அதான் உங்க பொண்ணை அடிச்சிட்டேன்”
“நீங்க அடிச்சதுல தப்பேயில்லை. டாக்டர்கிட்ட பேசினேன்ப்பா. அவங்க பார்வை சீக்கரம் வந்திடும். அதுக்கு அவ ரொம்ப சந்தோசமா இருக்கனுமாம். டென்சன் ஆகக்கூடாதாம். வீக்கா இருக்க நரம்பு கொஞ்ச கொஞ்சமா சரி ஆகிட்டு வருதுன்னு சொல்லுறாங்க. மனநிலை ஒரு நிலையில் இருக்காது. அதனாலதான் இப்படி ஆகிட்டா. தப்பா நினைச்சிக்காதிங்க. காதல் கீதல்னு ஏதோ பேசிட்டா”
“அத விடுங்க மாமா.. அவளா என்னை தேடுற வரை நான் வரமாட்டேன்” கதிர் உறுதியாக சொன்னான்.
“மாப்பிள்ளை... உங்களுக்கு எது சரினு படுதோ அதை செய்ங்க. நாங்களும் உங்களுக்கு ஏத்தது போல நடந்துக்கறேம்”
“சரி மாமா… அந்த அடங்காதவளை பாத்துக்கோங்க. ரொம்ப சேட்டை இப்போ எல்லாம்"
“ஆமா மாப்பிள்ளை.. சின்ன குழந்தையில் செஞ்சதை விட அதிகம் டார்ச்சர் செஞ்சிட்டிருக்கா"
“அவ என்னை தேடும் போது கூப்பிடுங்க மாமா... உடனே வந்திடுறேன் வச்சிரட்டா மாமா"
இமையா வீட்டு காலிங் பொல் அடிக்க
“யாருப்பா வேணும் ?”
நீட்டாக ஒருவன் வந்து நின்றான். “ஆன்ட்டி இமையாள் அரசி இருக்காளா ?”
“நீங்க ?"
“நான் அரசன்… இமையா வேலை செஞ்ச இடத்தில் பாஸ்"
“ஓ… அப்படியா உள்ள வாங்க. உட்காருங்க இமையா தூங்கிட்டிருக்கா கூட்டிட்டு வரேன்"
“இமையா… உன்னை பார்கக யாரோ உன்கூட வேலை செஞ்சவங்க வந்திருக்காங்க எழுந்திரு"
“யாருமா வந்திருக்கா ?”
“பேரை மறந்துட்டேன்டி.. எந்திரி முதலில்"
“சரிமா இரு முகம் கழுவிட்டு வரேன்"
இமையாவின் கைபிடித்து அழகி அழைத்துவர
“ஆன்ட்டி இமையாவுக்கு என்ன ஆச்சி ?” குரலை வைத்தே இமையா வந்திருப்பது யார் என்று தெரிந்துகொண்டாள்.
“அரசன் சார் எப்படி இருக்கிங்க ?” இமையா எந்த ஒரு தடுமாற்றமும் சலனமும் இல்லாமல் அவனிடம் பேசினாள்.
இமையாவின் கழுந்திலிருந்த தாலியை பார்க்க
“இமையா கல்யாணம் ஆகிடுச்சா ?” அவன் அதிர்ச்சியோடு கேட்க
“ஆமா சார்...” அரசனுக்கு அவளின் இந்த சார் என்ற அழைப்பு புதியது.
‘என்னை இவ்வளவு வெறுத்துட்டியா இமையா?’ மனதில் நினைத்ததை வெளியே சொல்ல முடியவில்லை அவனால்.
“சரி தம்பி நீங்க பேசிட்டிருங்க. எங்களுக்கு தோட்டத்தில் வேலையிருக்கு”
“இமையா எப்படி பார்வை போச்சி"
“ஒரு அக்சிடன்டில் போய்யிடுச்சி சார்”
“ஏன் இமையா புதுசா சார்னு கூப்பிடுற ?”
“வேற கூப்பிட நமக்குள்ள எந்த உறவும் இல்லையே சார்”
“உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா சார் ?”
“இல்லை இமையா... நான் இன்னும் உன்னை தான் நினைச்சிட்டிருக்கேன்"
“சார்… இது சரி இல்லை. நீங்க இப்படி பேசிட்டிருப்பது மட்டும் என் புருஷனுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்.. உங்க புஸ்ஸுனு இருக்க மூஞ்சில காத்தை இறக்கி விட்டுடுவாங்க" இமையா சொல்வது எதும் காதில் வாங்காமல்
“புரிஞ்சிக்கோ அரசி... நான் ஏதோ கோபத்தில் சிஸ்டர்னு சொல்லிட்டேன்"
“சிஸ்டர்னு சொன்னது சொன்னதாகவே இருக்கட்டும் அரசன். உங்க லைப் பாத்துங்கோங்க. சாகுற வரை தனியா இருக்கேன்னு எந்த முட்டாள் தனமும் செஞ்சிக்காதிங்க. உங்களுக்கே தெரியும் இரண்டு பேரும் செஞ்சது காதலே இல்லை. நீங்க உங்க மனசை சொல்லும் போது நான் ஏத்துக்கலை. நான் உங்க கிட்ட சொல்லும் போது அதை காது கொடுத்து கேட்கும் நிலையிலையும் நீங்க இல்லை. இரண்டு பேருதும் ஒன் சைட் லவ் கணக்குதான். நீங்க நினைச்சது போல துரு துருனு கியூட்டா முக்கியமா நல்ல எண்ணங்கள் உடைய பெண் உங்க வாழ்க்கை துணைவியா வர வாழ்த்துக்கள்”
“அரசி…”
“நான் இன்னும் பேசி முடிக்கலை அரசன் சார். நண்பனா நீங்க என்னை எப்போ வேணும் என்றாலும் பார்க்க வரலாம். கிழிந்த பக்கங்கள் கிழிந்ததுதான். என் கணவனை நான் உண்மையா நேசிக்கிறேன். எங்க வாழ்க்கையை டிஸ்டர்ப் செய்யாதிங்க"
அரசனுக்கு மனம் ரணமாக எரிந்தது. வரேன் என்று கூட சொல்லாமல் அரசன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். நல்ல நோக்கத்தில் இல்லை.. அவளது மனதில் இடம் பிடிக்க மீண்டும் வருவேன் என்ற சபதத்தோடு இந்த வீட்டு வாசலை தாண்டினான்.
இமையாவுக்கு கதிர் நினைவாகவே இருந்தது. ‘ரொம்ப கோபமா இருப்பாரா ? என்னிடம் இனி பேச மாட்டாங்களா ? கதிரா.. மாமா.. சாரி' என மனதில் வருந்தினாள். ஆனால் அவளின் மனதை வெளிப்படுத்த சிறிதும் நினைக்கவில்லை. அவளின் எண்ணம் முழுவதும் 'கதிர் சந்தோஷமாக இருக்கனும்… அவனோட குடும்பத்தோடு' என்று.
இமையாவுக்கு தெரியும் “கதிர் வா” என்ற ஒற்றை அழைப்பு அவனை தன் பக்கம் இழுத்துவிடும் என. இமையா கொஞ்சி பேசினால் போதும் கோபமாவது கீபமாவது சிட்டாக பறந்து வந்திடுவான். ஆனால் இமையா அழைக்க போவதில்லை.
சக்தி காமாட்சியின் பெண் சரணுக்கு கால் செய்து “அங்கிள்… நான் இமையா அக்காகிட்ட பேசனும்”
“இருமா கொடுக்கறேன்”
“இமையா பக்கத்து வீட்டு பொண்ணு உன் கிட்ட பேசனுமாம்”
இமையா ஒரு தயக்கத்தேடு சரணிடம் போன் வாங்கினாள்.
“அக்கா ஏன்க்கா இப்படி... கதிர் அண்ணா பாவம். சாப்பிடாம அடம் செஞ்சிட்டிருக்கார். இப்போ தான் நானும் அம்மாவும் மிரட்டி சாப்பிட வைத்தோம்”
“சரி டா… அவரை பாத்துக்க“
“அக்கா எப்ப நாம நம்ம வேலை ஆரம்பிக்கிறது"
“என்ன வேலை டா ?”
“அது தான்க்கா.. கதை பேசலாம் வாங்க.. யூ டியுப்"
“மெதுவா ஆரம்பிக்கலாம்டா”
“அக்கா… ஆல்ரடி பேசியது தானே ? காலேஜ் முடிச்சு வந்த அடுத்த நாள் ஆரம்பிக்கரதுனு"
“சரி சக்தி... நான் உனக்கு ரெக்காட் செஞ்சி அனுப்பறேன்”
“அக்கா எதாவது காலேஜில் நடந்த இன்சிடன்ட் ஆரம்பிச்சா நல்லா இருக்கும்"
“சரி டா" என்ற இமையாவின் மனதில் கல்லூரியின் கடைசி மாதம் தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
அதையே கதை போல சொல்ல முடிவெடுத்தவளை பழைய நினைவுகளுக்குள் மனம் எனும் சுழல் அவளை அழைத்து சென்றது.
கதிர் நேராக இமையாவை நோக்கி வர, அவளது கன்னத்தில் இடியாக இறங்கியது அவனது கரங்கள்.
“நீ எல்லாம் மனசாச்சியோடத்தான் பிறந்திருக்கியா? அத்தை மாமா உங்க பொண்ண கூட்டிட்டு போங்க. இவ நல்லா சந்தோஷமா இருக்கனும்னு தான் நான் இவளை கட்டிகிட்டேன். நான் அப்படி என்ன கொடுமை இவளை செஞ்சிட்டேன்னு இவ வீட்டைவிட்டு போனா. பார்வை தெரிஞ்சதும் சொல்லாமா எவ்வளவு பெரிய வேலை பார்த்து வச்சிருக்கா. போங்க இவளை கூட்டிட்டு போய் அவளோட காதலன் கிட்ட சேர்த்து வைங்க"
“மாப்பிள்ளை அவ ஏதோ தெரியாம...”
“இல்லை மாமா அவ தெரிஞ்சி தான் பேசிட்டிருக்கா. தயவு செஞ்சி கூட்டிட்டு போயிடுங்க. என்னால முடியலை போதும். எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு. கூட்டிட்டு போங்க உங்க பொண்ண"
“அறிவு கெட்டவளே… உன் வாழ்க்கையில் நீயே மண்ணள்ளி போட்டுக்கிட்டயேடி இப்போவாவது புரியுதா உனக்கு. வந்து தொலை” இமை அம்மா வாயில் கிடைக்கும் அனைத்து சொற்களையும் சேர்த்து வழி முழுவதும் திட்டியே அழைத்து சென்றார். சில மணி நேரத்தில் வீடும் வந்தது சேர,
அழகி கத்திக்கொண்டிருக்க, சரண் தான் அழகியை அடக்கி இமையாவுக்கு சாப்பாடு கொடுக்க சொன்னார்.
“இல்லப்பா பசிக்கலை. தூக்கம் வருது பா"
“சரி… தங்கம் நீ தூங்கி எழு எல்லாம் சரி ஆகிடும்"
‘மத்தவங்களுக்கு நல்லது நினைச்சா நம்மளை தான் தப்பு செஞ்சது போல எல்லோரும் கத்துறாங்க. என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டாங்க போல’ இமையா தன் இமையை மூடி தூங்க
சரணும் அழகியும் புலம்பி கதிருக்கு போன் செய்தனர்.
“மாப்பிள்ளை அது...”
“மாமா சாரி.. கொஞ்சம் கோபம். அதான் உங்க பொண்ணை அடிச்சிட்டேன்”
“நீங்க அடிச்சதுல தப்பேயில்லை. டாக்டர்கிட்ட பேசினேன்ப்பா. அவங்க பார்வை சீக்கரம் வந்திடும். அதுக்கு அவ ரொம்ப சந்தோசமா இருக்கனுமாம். டென்சன் ஆகக்கூடாதாம். வீக்கா இருக்க நரம்பு கொஞ்ச கொஞ்சமா சரி ஆகிட்டு வருதுன்னு சொல்லுறாங்க. மனநிலை ஒரு நிலையில் இருக்காது. அதனாலதான் இப்படி ஆகிட்டா. தப்பா நினைச்சிக்காதிங்க. காதல் கீதல்னு ஏதோ பேசிட்டா”
“அத விடுங்க மாமா.. அவளா என்னை தேடுற வரை நான் வரமாட்டேன்” கதிர் உறுதியாக சொன்னான்.
“மாப்பிள்ளை... உங்களுக்கு எது சரினு படுதோ அதை செய்ங்க. நாங்களும் உங்களுக்கு ஏத்தது போல நடந்துக்கறேம்”
“சரி மாமா… அந்த அடங்காதவளை பாத்துக்கோங்க. ரொம்ப சேட்டை இப்போ எல்லாம்"
“ஆமா மாப்பிள்ளை.. சின்ன குழந்தையில் செஞ்சதை விட அதிகம் டார்ச்சர் செஞ்சிட்டிருக்கா"
“அவ என்னை தேடும் போது கூப்பிடுங்க மாமா... உடனே வந்திடுறேன் வச்சிரட்டா மாமா"
இமையா வீட்டு காலிங் பொல் அடிக்க
“யாருப்பா வேணும் ?”
நீட்டாக ஒருவன் வந்து நின்றான். “ஆன்ட்டி இமையாள் அரசி இருக்காளா ?”
“நீங்க ?"
“நான் அரசன்… இமையா வேலை செஞ்ச இடத்தில் பாஸ்"
“ஓ… அப்படியா உள்ள வாங்க. உட்காருங்க இமையா தூங்கிட்டிருக்கா கூட்டிட்டு வரேன்"
“இமையா… உன்னை பார்கக யாரோ உன்கூட வேலை செஞ்சவங்க வந்திருக்காங்க எழுந்திரு"
“யாருமா வந்திருக்கா ?”
“பேரை மறந்துட்டேன்டி.. எந்திரி முதலில்"
“சரிமா இரு முகம் கழுவிட்டு வரேன்"
இமையாவின் கைபிடித்து அழகி அழைத்துவர
“ஆன்ட்டி இமையாவுக்கு என்ன ஆச்சி ?” குரலை வைத்தே இமையா வந்திருப்பது யார் என்று தெரிந்துகொண்டாள்.
“அரசன் சார் எப்படி இருக்கிங்க ?” இமையா எந்த ஒரு தடுமாற்றமும் சலனமும் இல்லாமல் அவனிடம் பேசினாள்.
இமையாவின் கழுந்திலிருந்த தாலியை பார்க்க
“இமையா கல்யாணம் ஆகிடுச்சா ?” அவன் அதிர்ச்சியோடு கேட்க
“ஆமா சார்...” அரசனுக்கு அவளின் இந்த சார் என்ற அழைப்பு புதியது.
‘என்னை இவ்வளவு வெறுத்துட்டியா இமையா?’ மனதில் நினைத்ததை வெளியே சொல்ல முடியவில்லை அவனால்.
“சரி தம்பி நீங்க பேசிட்டிருங்க. எங்களுக்கு தோட்டத்தில் வேலையிருக்கு”
“இமையா எப்படி பார்வை போச்சி"
“ஒரு அக்சிடன்டில் போய்யிடுச்சி சார்”
“ஏன் இமையா புதுசா சார்னு கூப்பிடுற ?”
“வேற கூப்பிட நமக்குள்ள எந்த உறவும் இல்லையே சார்”
“உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா சார் ?”
“இல்லை இமையா... நான் இன்னும் உன்னை தான் நினைச்சிட்டிருக்கேன்"
“சார்… இது சரி இல்லை. நீங்க இப்படி பேசிட்டிருப்பது மட்டும் என் புருஷனுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்.. உங்க புஸ்ஸுனு இருக்க மூஞ்சில காத்தை இறக்கி விட்டுடுவாங்க" இமையா சொல்வது எதும் காதில் வாங்காமல்
“புரிஞ்சிக்கோ அரசி... நான் ஏதோ கோபத்தில் சிஸ்டர்னு சொல்லிட்டேன்"
“சிஸ்டர்னு சொன்னது சொன்னதாகவே இருக்கட்டும் அரசன். உங்க லைப் பாத்துங்கோங்க. சாகுற வரை தனியா இருக்கேன்னு எந்த முட்டாள் தனமும் செஞ்சிக்காதிங்க. உங்களுக்கே தெரியும் இரண்டு பேரும் செஞ்சது காதலே இல்லை. நீங்க உங்க மனசை சொல்லும் போது நான் ஏத்துக்கலை. நான் உங்க கிட்ட சொல்லும் போது அதை காது கொடுத்து கேட்கும் நிலையிலையும் நீங்க இல்லை. இரண்டு பேருதும் ஒன் சைட் லவ் கணக்குதான். நீங்க நினைச்சது போல துரு துருனு கியூட்டா முக்கியமா நல்ல எண்ணங்கள் உடைய பெண் உங்க வாழ்க்கை துணைவியா வர வாழ்த்துக்கள்”
“அரசி…”
“நான் இன்னும் பேசி முடிக்கலை அரசன் சார். நண்பனா நீங்க என்னை எப்போ வேணும் என்றாலும் பார்க்க வரலாம். கிழிந்த பக்கங்கள் கிழிந்ததுதான். என் கணவனை நான் உண்மையா நேசிக்கிறேன். எங்க வாழ்க்கையை டிஸ்டர்ப் செய்யாதிங்க"
அரசனுக்கு மனம் ரணமாக எரிந்தது. வரேன் என்று கூட சொல்லாமல் அரசன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். நல்ல நோக்கத்தில் இல்லை.. அவளது மனதில் இடம் பிடிக்க மீண்டும் வருவேன் என்ற சபதத்தோடு இந்த வீட்டு வாசலை தாண்டினான்.
இமையாவுக்கு கதிர் நினைவாகவே இருந்தது. ‘ரொம்ப கோபமா இருப்பாரா ? என்னிடம் இனி பேச மாட்டாங்களா ? கதிரா.. மாமா.. சாரி' என மனதில் வருந்தினாள். ஆனால் அவளின் மனதை வெளிப்படுத்த சிறிதும் நினைக்கவில்லை. அவளின் எண்ணம் முழுவதும் 'கதிர் சந்தோஷமாக இருக்கனும்… அவனோட குடும்பத்தோடு' என்று.
இமையாவுக்கு தெரியும் “கதிர் வா” என்ற ஒற்றை அழைப்பு அவனை தன் பக்கம் இழுத்துவிடும் என. இமையா கொஞ்சி பேசினால் போதும் கோபமாவது கீபமாவது சிட்டாக பறந்து வந்திடுவான். ஆனால் இமையா அழைக்க போவதில்லை.
சக்தி காமாட்சியின் பெண் சரணுக்கு கால் செய்து “அங்கிள்… நான் இமையா அக்காகிட்ட பேசனும்”
“இருமா கொடுக்கறேன்”
“இமையா பக்கத்து வீட்டு பொண்ணு உன் கிட்ட பேசனுமாம்”
இமையா ஒரு தயக்கத்தேடு சரணிடம் போன் வாங்கினாள்.
“அக்கா ஏன்க்கா இப்படி... கதிர் அண்ணா பாவம். சாப்பிடாம அடம் செஞ்சிட்டிருக்கார். இப்போ தான் நானும் அம்மாவும் மிரட்டி சாப்பிட வைத்தோம்”
“சரி டா… அவரை பாத்துக்க“
“அக்கா எப்ப நாம நம்ம வேலை ஆரம்பிக்கிறது"
“என்ன வேலை டா ?”
“அது தான்க்கா.. கதை பேசலாம் வாங்க.. யூ டியுப்"
“மெதுவா ஆரம்பிக்கலாம்டா”
“அக்கா… ஆல்ரடி பேசியது தானே ? காலேஜ் முடிச்சு வந்த அடுத்த நாள் ஆரம்பிக்கரதுனு"
“சரி சக்தி... நான் உனக்கு ரெக்காட் செஞ்சி அனுப்பறேன்”
“அக்கா எதாவது காலேஜில் நடந்த இன்சிடன்ட் ஆரம்பிச்சா நல்லா இருக்கும்"
“சரி டா" என்ற இமையாவின் மனதில் கல்லூரியின் கடைசி மாதம் தான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
அதையே கதை போல சொல்ல முடிவெடுத்தவளை பழைய நினைவுகளுக்குள் மனம் எனும் சுழல் அவளை அழைத்து சென்றது.