விழிமொழி: 31
ஆப்ரேசன் வரை போகவில்லை. இமையாவுக்கு மிக பவரான சில மருந்துகள் மெதுமெதுவாக செலுத்த, தலை வலியால் துடித்து போனாள் இமையா.
கதிருக்கு தான் தாங்கிக்க முடியவில்லை அவள் வலியை கண்டு.
"டாக்டர் இந்த ட்ரீட்மென்ட் வேண்டாம் பிளீஸ். அவ இப்படியே இருந்துடட்டும். கடைசி வரை என்னால அவளை பார்த்துக்க முடியும்" என ஹாஸ்பிட்டலை ஒரு வழி செய்து விட்டான்.
இமையா அப்பாவையும் அம்மாவையும் ஒரு வழி படுத்திட்டான், "மாமா அவ இப்படியே இருக்கட்டும். நான் பாத்துப்பேன் அவளை. வலிக்குது அவளுக்கு"
மயக்கத்தில் இருந்து எழுந்த இமையாவிற்கு காது அடைத்தது கதிரின் சத்தத்தில்.
"கதிரா என்ன சத்தம்..."
"இமையா வா வீட்டுக்கு போலாம்" கையை பிடித்து இழுத்தான்.
"கதிரா... கொஞ்சம் பொறுமையா இருங்க. முதல்ல இங்கே பக்கம் வாங்க"
கதிரின் முகம் மங்கலாக தெரிந்தது.
"கதிரா... எனக்கு உன்னை பார்க்கனும். உன் கண்ணை பார்த்து பேசனும். நிறைய சொல்லனும் என்னோட பழைய பக்கங்களை பத்தி"
"எனக்கு எதும் தெளிவுபடுத்த தேவையில்லை இமையா. எனக்கு எல்லாம் தெரியும்"
"எதே எல்லாம் தெரியுமா"
"ம்ம்ம்ம்...அந்த பொருக்கி பையன் உன்னை பார்க்க அடிக்கடி வருவதும் தெரியும்"
"நான் எதும் தப்பா..."
"உன்னை பத்தி தெரியும்டா... நீ படுத்துக்கோ. உன் கூட பழகியவங்களால உன்னை எப்பவும் வெறுக்க முடியாது அதனால வந்து இருக்கான் இனி அவன் வந்தா நான் பார்த்துக்கறேன். நீ படுத்துக்கோ"
"பாவம் அடிச்சிடாதிங்க சமத்தா சொன்னா அவர் கேட்டுப்பார்"
"சரி அது அவன் நடந்துக்கறது பொருத்து" இமையாவை தூங்க வைத்துவிட்டு வெளியே வர
எதிரில் இருப்பவனை பார்த்து கொந்தளித்தான் கதிர்.
"டேய் நீ எங்க இங்க வந்த. இனி இங்க வரும் வேலை வச்சிக்காதே புரியுதா"
"நான் வருவேன் என் இமையாவை பார்க்கனும் உள்ளே விடு" அரசன் சண்டைக்கு நிற்க
கதிர் அவனை விடுவதாக இல்லை புரட்டி புரட்டி எடுத்தான்.
சத்தம் கேட்டு எழுந்த இமையா, இருவரின் குரலை கேட்டு
"கதிரா... எதுக்கு அரசனை அடிக்கற விடு அவரை"
"இமையா இந்த முரடன் உனக்கு வேணுமா. என் கூட வந்திடு நிம்மதியா வாழலாம்"
"அரசன் இப்படி பேசாதிங்க. உங்களை காதலிச்சது உண்மை தான். ஆனா அது முடிஞ்சது உங்க வாழ்க்கைகாக தான் நான் விட்டு போனேன். உங்க வாழ்க்கையை நீங்க வாழுங்க"
"இல்லை இமையா என்னால் முடியாது" அரசன் திமிராக நிற்க, இமையா மங்கிய பார்வையை வைத்து இருவருக்கும் இடையில் வருவற்குள்
"என்ன சத்தமா இருக்கு" இமையா அப்பா உள்ளே வரவும் சாதாரணமாக இருப்பது போல பேசினார்கள் கதிரும் அரசனும்.
இமையா அப்பா, தன் மாப்பிள்ளையை பார்த்து புன்னகை வீசினார்.
"சரி மாப்பிள்ளை சத்தம் போடாம இருங்க"
இமையா அம்மா உள்ளே வந்து, "தம்பி நீங்களா... இமையா உன் கூட வேலை பார்த்தவங்க வந்து இருக்காங்க. இந்த தம்பி தான் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து சில வேலை எல்லாம் செஞ்சி கொடுப்பாங்க" அந்த பையனை பத்தி அழகி சொல்ல
கதிரின் வயிறு அடுப்பாக பத்தி எரிந்தது.
"டேய் நீ வெளியே போடா"
"இப்போ போறேன். திரும்ப வருவேன்"
"இமையா டார்லிங் வரேன்டா. உன் பார்வை வந்ததும் முதலில் என்னை தான் பார்ப்ப" என்று அரசன் உறுதியாக சொல்ல
"டேய் என் பொண்டாட்டி என்னை தான்டா பார்ப்பா... கிளம்பு முதலில்"
"பார்ப்போம் அதையும்" இரண்டு உருவம் இமையா முன் மீண்டும் சண்டைக்கு சிலுப்பி நிற்க
"போதும்... நிறுத்துங்க இரண்டு பேரும். அம்மா அப்பா காதில் விழுக போவுது. பிரச்சனை வளர்க்காம போங்க"
"சரி அரசிமா நீ சொல்லுவதால போறேன்" என்று அரசன் கதிரை முறைத்து கொண்டே போனான்.
"இமையா அவன் இன்னொரு முறை வந்தான் அவ்வளவு தான். வச்சி செஞ்சிடுவேன்"
"அவர் நல்லவர் ஏதோ கோபத்தில் இப்படி நடந்துகிறாங்க விடுங்க மாமா"
"ஆவுன்னா இந்த மாமா சொல்லியே என்னை அமைதியா ஆக்கிடுற. என்னை பார்க்கனுமா முதலில் இல்லை அவனையா" கதிர் பேச்சில் சிறு பொறாமை இருக்க தான் செய்தது.
"உங்களை தான் மாமா. முதல்ல இந்த தாடி முகத்தை பார்க்கனும்" ஆசையாக அவனது முகத்தை வருடி விட்டாள்.
"ஹாஹா... பார்க்கலாம்"
"மாமா நீ எப்படி இருப்ப"
"கையை கொடு..." கதிர் அவளது கைகளை தன்னிடம் கொண்டு வந்தவன், "இது தான் என் கண், மூக்கு வாய்..." என்று அவளது கைக்கு ஒரு முத்தம் கொடுக்க
"ஏங்க இப்படி செய்யுறிங்க... இது ஹாஸ்பிட்டல்"
"இங்க தான் யாருமே இல்லையே" இமையாவை தன் மடியில் உட்கார வைத்தவன்
"இமையா வலி இருக்கா"
"முதல் ஊசி போடும் போது தான் வலித்தது இப்போ வலி இல்லை கதிரா"
"நிஜமா தான் சொல்லுறியா இல்லை பொய் சொல்லுறியா"
"உண்மை தான்டா ராட்சசா"
"நான் ராட்சசனா டி"
"ஆமா என்னை ஆளும் ராட்சசன். சரியான முறட்டு பீஸ் டா. எல்லாத்திலும் அடாவடி தான் இல்ல உனக்கு"
"ஆமா இவ்வளவு அழகா பொண்டாட்டியை வச்சிட்டு சும்மா வா இருக்க முடியும். இமையா ஆசையா இருக்கு ஒரு உம்மா கொடேன்"
"டேய் யாராவது வந்துடுவாங்க கதிர்... இரண்டு நாள் பொறுத்துக்கோ"
"ஏய் முடியாதுடி"
"அம்மா.... உன்னை வச்சிட்டே சமாளிக்க முடியலை உன் குழந்தையை வச்சி நான் எப்படி சமாளிக்க போறனோ"
"யாரு நான் அடங்காத பாப்பாவா இல்லை நீயா. என் தலை மேல் ஏறி உட்கார்ந்து என்னென்ன ஆட்டம் போடுற தெரியுமா"
"ஈஈஈஈஈ" இமையா அழகாக தன் வரிசை பற்களை காட்டி சிரிக்க
"ரொம்பத்தான்... என்னயவே சமாளிச்சாச்சி. அந்த குட்டி வாலை சமாளிக்க முடியாதா உன்னால. இமையா ஒரு கிஸ் கொடுடி முடியலை மாமா பாவமில்லையா?"
"அம்மா வர போறாங்க விடு டா" அவன் மடியில் இருந்து எந்திரிக்க பார்த்த இமையாவை அப்படியே மெத்தையில் சரித்து இறுக அணைத்துக்கொண்டு, "இப்போ சொல்லு நான் போகட்டா?"
"இல்லை இப்படியே இரு மாமா. உன்னையும் இந்த இறுக அணைப்பையும் ரொம்ப மிஸ் செஞ்சேன். உங்க அம்மா கூட போகனும்னு தான் விட்டு வந்தேன் சாரி. ஆனா என்னால உன்னை விட முடியலைடா. அத்தைக்கு உடம்பு சரி இல்லைனு சொன்னாங்க. போய் பார்த்துட்டு வந்தியா?"
"ம்ம்ம்... போய் பார்த்துட்டு நாலு வார்த்தை கேட்டுட்டு வந்தேன்"
"ஏன் மாமா இப்படி செய்ர. அவங்க பாவமில்ல"
"அவங்களை விட நீ தான் பாவம். அவங்க பொண்ணுக்கு இப்படி ஆகி இருந்தா இப்படி தான் நடந்துப்பாங்களா. சும்மா எது நடந்தாலும் உன்னையவே குத்தம் சொல்லிட்டு இருந்தா எனக்கு கடுப்பாகுமில்ல"
"சரி விடு. அத்தை இப்போ எப்படி இருக்காங்க"
"நல்லாதான் இருக்காங்க பிபி தான் ஏறிடுச்சி. அட்ரஸ் கொடுத்துட்டு வந்திருக்கேன். பார்க்கனும் தோனுச்சினா பஸ் ஏறி வர சொல்லிட்டேன். இனி டென்ஷன் இல்லை"
"அப்போ சரி"
"என்ன சரி... என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா சிம்பிளா முடிச்சி இருப்பேன். அதை விட்டுட்டு பெரிய இவ மாதிரி ஊரை விட்டு போவ. அதை கூட மன்னிச்சிடுவேன். லவ்வர் அது இதுன்னு பேசின பாரு அப்ப வந்தது கோபம். மகளே உன்னை கூட வச்சி தான் செய்ய நினைத்தேன். ஆனா முடியலை, எங்கே உன்னை அடிச்சிட்டுவேனோன்னு பயம் உனக்கு வலிக்கிரதை விட எனக்கு தான்டி வலிக்கும் உன் வலிய பார்க்கும்போது"
"அவ்வளவு லவ்வா மாமா என் மேல"
"ஆமா நிறைய லவ்வோ லவ்வு"
"சரி விடு டாக்டர் வரும் நேரம். தள்ளி போ"
"ஒரு உம்மா கொடு உன்னை விட்டுறன்"
"முடியாது போடா"
"அப்போ டாக்டர் வர வரை இப்படியே இருப்போம். இத்தனை நாளா பட்டினி போட்டுட்ட. இந்த மூஞ்ச கூட பார்க்க முடியாம தவிச்சிட்டேன். போடி...."
"திரும்ப ஆரம்பிக்காத மாமா. இனி இப்படி செய்ய மாட்டேன் சொல்லிட்டேன் இல்ல"
"சரி முதல்ல என் மேல சத்தியம் பன்னு. எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டு போகமாட்டேனு"
"சத்தியமா இனி உன்னை விட்டு போகவே மாட்டேன் எப்பவும்"
"அது... அந்த பயம் இருக்கட்டும்"
"சரி விடு போதும் யாராவது வந்துட்டா சங்கடமா போய்யிடும்"
"சரி ஒரே ஒரு உம்மா கொடுமா" அவனது கையை கண்டு பிடித்து எழுந்தவள் உம்மா கொடுத்துவிட்டு "அவ்வளவு தான் எந்திரி முதலில்"
"சரி அப்படியே... ஒரு பாட்டு பாடு"
"பாட்டு எதுக்குடா"
"எப்படியும் ஒரு மூனு நாள் ஆகிடும் எல்லாம் முடிச்சி வீட்டுக்கு போக. அதுவரை தாங்கனுமில்ல"
"ம்ம்ம்ம்... என்ன பாட்டு பாடலாம்" கதிரிடமே கேட்க.
"முத்தம் பத்தி பாடு" என்றான் ரகசிய குரலில்
"ச்சி அதே நினைப்பிலேயே இருடா லூசு"
"நீ பாடு டி" இன்னும் நெருங்கி படுத்தான்.
"ஏய் கூசுதுடா பக்கி" அவனை விட்டு எழுந்து, அவனின் தோளில் சாய்ந்து அமர்ந்தவள்
"சைவம் முத்தம் கொடுத்தால் ஒத்து போக மாட்டேன்... சாகசத்தை காட்டு செத்து போக மாட்டேன். கெஞ்ச நேரம் என்னை கொல்லய்யா" பாதியில் நிறுத்தியவள் வெட்கத்தில் அவனை அணைத்துக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் டாக்டர் வரவும், இருவரும் சமத்து பிள்ளையாக விலகி நின்றனர்.
'ச்சே... இந்த டாக்டருக்கு நேரமே தெரியலை. என் இமைக்குட்டி எவ்வளவு அழகா பாடினா. பாராட்டி ஒரு முத்தம் கூட கொடுக்க முடியலை'
"இன்னைக்கு அந்த ஊசி போட்டுடுவோம். ஒரு வாரத்தில் எல்லாம் சரியா போயிடும். இமையா அமைதியா இருக்கனும். டென்ஷன் ஆக கூடாது புரியுதா. நர்ஸ் இவங்களை கூட்டிட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
மூவரும் வரிசையாக உட்கார்ந்து இமையா பழைய படி ஆகிடனும் என்று மனதால் பிரார்த்தனையில் இருக்கும் போது, கதிருக்கு கால் வந்தது,
"அண்ணா அம்மாக்கு உடம்பு முடியலை. அப்பா கூட வீட்டில் இல்லை என்ன செய்றதுனு தெரியலை" வள்ளி பதற்றமாக சொல்ல
"சரி நீ பதறாதே... நான் என் ப்ரெண்டை வர சொல்லுறேன்" கதிர் கையோடு அந்த ஊரில் இருக்கும் தனது நண்பனுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, அவர்களை அதே ஊரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சேர்க்கும் ஏற்பாடு செய்தான்.
அப்போது தான் இருவரையும் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்று கதிர் தெளிவாக திட்டம் போட அவனது தங்கை தான் பொங்கிக்கொண்டு இருந்தாள்.
"இந்த அண்ணாக்கு அறிவே இல்லை. இப்பவும் அவளுக்காகதான் பாடுபட்டுட்டு இருக்கு"
கதிரும் அடிக்கடி தன் அம்மாவை போய் பார்த்து வந்தான்.
அவனது தங்கை தான் முகம் கொடுத்து கூட பேசவில்லை கதிரிடம்.
இப்படியே ஆறு நாள் அனைவருக்கும் மருத்துவமனையே கதி என்று இருக்க
அடுத்த நாள் கண்களை திறக்கும் ஏற்பாடு நடந்துக்கொண்டு இருக்கும் போது,
கதிரின் போன் அலரியது. தாய்க்கு உடல் நிலை மோசமாகிவிட, வெளி ஊரில் உள்ள ஹாஸ்பிட்டலில் சேர்க்க சொன்னாதாக தங்கை சொல்லவும்
கண் முன் இமையாவின் கண் கட்டு அவிழ்த்து கொண்டு இருக்க
தாயா தாரமா என்ற ஒரு இக்கட்டான நிலையில் சிக்கி தவித்தான் கதிர்.
ஆப்ரேசன் வரை போகவில்லை. இமையாவுக்கு மிக பவரான சில மருந்துகள் மெதுமெதுவாக செலுத்த, தலை வலியால் துடித்து போனாள் இமையா.
கதிருக்கு தான் தாங்கிக்க முடியவில்லை அவள் வலியை கண்டு.
"டாக்டர் இந்த ட்ரீட்மென்ட் வேண்டாம் பிளீஸ். அவ இப்படியே இருந்துடட்டும். கடைசி வரை என்னால அவளை பார்த்துக்க முடியும்" என ஹாஸ்பிட்டலை ஒரு வழி செய்து விட்டான்.
இமையா அப்பாவையும் அம்மாவையும் ஒரு வழி படுத்திட்டான், "மாமா அவ இப்படியே இருக்கட்டும். நான் பாத்துப்பேன் அவளை. வலிக்குது அவளுக்கு"
மயக்கத்தில் இருந்து எழுந்த இமையாவிற்கு காது அடைத்தது கதிரின் சத்தத்தில்.
"கதிரா என்ன சத்தம்..."
"இமையா வா வீட்டுக்கு போலாம்" கையை பிடித்து இழுத்தான்.
"கதிரா... கொஞ்சம் பொறுமையா இருங்க. முதல்ல இங்கே பக்கம் வாங்க"
கதிரின் முகம் மங்கலாக தெரிந்தது.
"கதிரா... எனக்கு உன்னை பார்க்கனும். உன் கண்ணை பார்த்து பேசனும். நிறைய சொல்லனும் என்னோட பழைய பக்கங்களை பத்தி"
"எனக்கு எதும் தெளிவுபடுத்த தேவையில்லை இமையா. எனக்கு எல்லாம் தெரியும்"
"எதே எல்லாம் தெரியுமா"
"ம்ம்ம்ம்...அந்த பொருக்கி பையன் உன்னை பார்க்க அடிக்கடி வருவதும் தெரியும்"
"நான் எதும் தப்பா..."
"உன்னை பத்தி தெரியும்டா... நீ படுத்துக்கோ. உன் கூட பழகியவங்களால உன்னை எப்பவும் வெறுக்க முடியாது அதனால வந்து இருக்கான் இனி அவன் வந்தா நான் பார்த்துக்கறேன். நீ படுத்துக்கோ"
"பாவம் அடிச்சிடாதிங்க சமத்தா சொன்னா அவர் கேட்டுப்பார்"
"சரி அது அவன் நடந்துக்கறது பொருத்து" இமையாவை தூங்க வைத்துவிட்டு வெளியே வர
எதிரில் இருப்பவனை பார்த்து கொந்தளித்தான் கதிர்.
"டேய் நீ எங்க இங்க வந்த. இனி இங்க வரும் வேலை வச்சிக்காதே புரியுதா"
"நான் வருவேன் என் இமையாவை பார்க்கனும் உள்ளே விடு" அரசன் சண்டைக்கு நிற்க
கதிர் அவனை விடுவதாக இல்லை புரட்டி புரட்டி எடுத்தான்.
சத்தம் கேட்டு எழுந்த இமையா, இருவரின் குரலை கேட்டு
"கதிரா... எதுக்கு அரசனை அடிக்கற விடு அவரை"
"இமையா இந்த முரடன் உனக்கு வேணுமா. என் கூட வந்திடு நிம்மதியா வாழலாம்"
"அரசன் இப்படி பேசாதிங்க. உங்களை காதலிச்சது உண்மை தான். ஆனா அது முடிஞ்சது உங்க வாழ்க்கைகாக தான் நான் விட்டு போனேன். உங்க வாழ்க்கையை நீங்க வாழுங்க"
"இல்லை இமையா என்னால் முடியாது" அரசன் திமிராக நிற்க, இமையா மங்கிய பார்வையை வைத்து இருவருக்கும் இடையில் வருவற்குள்
"என்ன சத்தமா இருக்கு" இமையா அப்பா உள்ளே வரவும் சாதாரணமாக இருப்பது போல பேசினார்கள் கதிரும் அரசனும்.
இமையா அப்பா, தன் மாப்பிள்ளையை பார்த்து புன்னகை வீசினார்.
"சரி மாப்பிள்ளை சத்தம் போடாம இருங்க"
இமையா அம்மா உள்ளே வந்து, "தம்பி நீங்களா... இமையா உன் கூட வேலை பார்த்தவங்க வந்து இருக்காங்க. இந்த தம்பி தான் மாப்பிள்ளை வீட்டுக்கு வந்து சில வேலை எல்லாம் செஞ்சி கொடுப்பாங்க" அந்த பையனை பத்தி அழகி சொல்ல
கதிரின் வயிறு அடுப்பாக பத்தி எரிந்தது.
"டேய் நீ வெளியே போடா"
"இப்போ போறேன். திரும்ப வருவேன்"
"இமையா டார்லிங் வரேன்டா. உன் பார்வை வந்ததும் முதலில் என்னை தான் பார்ப்ப" என்று அரசன் உறுதியாக சொல்ல
"டேய் என் பொண்டாட்டி என்னை தான்டா பார்ப்பா... கிளம்பு முதலில்"
"பார்ப்போம் அதையும்" இரண்டு உருவம் இமையா முன் மீண்டும் சண்டைக்கு சிலுப்பி நிற்க
"போதும்... நிறுத்துங்க இரண்டு பேரும். அம்மா அப்பா காதில் விழுக போவுது. பிரச்சனை வளர்க்காம போங்க"
"சரி அரசிமா நீ சொல்லுவதால போறேன்" என்று அரசன் கதிரை முறைத்து கொண்டே போனான்.
"இமையா அவன் இன்னொரு முறை வந்தான் அவ்வளவு தான். வச்சி செஞ்சிடுவேன்"
"அவர் நல்லவர் ஏதோ கோபத்தில் இப்படி நடந்துகிறாங்க விடுங்க மாமா"
"ஆவுன்னா இந்த மாமா சொல்லியே என்னை அமைதியா ஆக்கிடுற. என்னை பார்க்கனுமா முதலில் இல்லை அவனையா" கதிர் பேச்சில் சிறு பொறாமை இருக்க தான் செய்தது.
"உங்களை தான் மாமா. முதல்ல இந்த தாடி முகத்தை பார்க்கனும்" ஆசையாக அவனது முகத்தை வருடி விட்டாள்.
"ஹாஹா... பார்க்கலாம்"
"மாமா நீ எப்படி இருப்ப"
"கையை கொடு..." கதிர் அவளது கைகளை தன்னிடம் கொண்டு வந்தவன், "இது தான் என் கண், மூக்கு வாய்..." என்று அவளது கைக்கு ஒரு முத்தம் கொடுக்க
"ஏங்க இப்படி செய்யுறிங்க... இது ஹாஸ்பிட்டல்"
"இங்க தான் யாருமே இல்லையே" இமையாவை தன் மடியில் உட்கார வைத்தவன்
"இமையா வலி இருக்கா"
"முதல் ஊசி போடும் போது தான் வலித்தது இப்போ வலி இல்லை கதிரா"
"நிஜமா தான் சொல்லுறியா இல்லை பொய் சொல்லுறியா"
"உண்மை தான்டா ராட்சசா"
"நான் ராட்சசனா டி"
"ஆமா என்னை ஆளும் ராட்சசன். சரியான முறட்டு பீஸ் டா. எல்லாத்திலும் அடாவடி தான் இல்ல உனக்கு"
"ஆமா இவ்வளவு அழகா பொண்டாட்டியை வச்சிட்டு சும்மா வா இருக்க முடியும். இமையா ஆசையா இருக்கு ஒரு உம்மா கொடேன்"
"டேய் யாராவது வந்துடுவாங்க கதிர்... இரண்டு நாள் பொறுத்துக்கோ"
"ஏய் முடியாதுடி"
"அம்மா.... உன்னை வச்சிட்டே சமாளிக்க முடியலை உன் குழந்தையை வச்சி நான் எப்படி சமாளிக்க போறனோ"
"யாரு நான் அடங்காத பாப்பாவா இல்லை நீயா. என் தலை மேல் ஏறி உட்கார்ந்து என்னென்ன ஆட்டம் போடுற தெரியுமா"
"ஈஈஈஈஈ" இமையா அழகாக தன் வரிசை பற்களை காட்டி சிரிக்க
"ரொம்பத்தான்... என்னயவே சமாளிச்சாச்சி. அந்த குட்டி வாலை சமாளிக்க முடியாதா உன்னால. இமையா ஒரு கிஸ் கொடுடி முடியலை மாமா பாவமில்லையா?"
"அம்மா வர போறாங்க விடு டா" அவன் மடியில் இருந்து எந்திரிக்க பார்த்த இமையாவை அப்படியே மெத்தையில் சரித்து இறுக அணைத்துக்கொண்டு, "இப்போ சொல்லு நான் போகட்டா?"
"இல்லை இப்படியே இரு மாமா. உன்னையும் இந்த இறுக அணைப்பையும் ரொம்ப மிஸ் செஞ்சேன். உங்க அம்மா கூட போகனும்னு தான் விட்டு வந்தேன் சாரி. ஆனா என்னால உன்னை விட முடியலைடா. அத்தைக்கு உடம்பு சரி இல்லைனு சொன்னாங்க. போய் பார்த்துட்டு வந்தியா?"
"ம்ம்ம்... போய் பார்த்துட்டு நாலு வார்த்தை கேட்டுட்டு வந்தேன்"
"ஏன் மாமா இப்படி செய்ர. அவங்க பாவமில்ல"
"அவங்களை விட நீ தான் பாவம். அவங்க பொண்ணுக்கு இப்படி ஆகி இருந்தா இப்படி தான் நடந்துப்பாங்களா. சும்மா எது நடந்தாலும் உன்னையவே குத்தம் சொல்லிட்டு இருந்தா எனக்கு கடுப்பாகுமில்ல"
"சரி விடு. அத்தை இப்போ எப்படி இருக்காங்க"
"நல்லாதான் இருக்காங்க பிபி தான் ஏறிடுச்சி. அட்ரஸ் கொடுத்துட்டு வந்திருக்கேன். பார்க்கனும் தோனுச்சினா பஸ் ஏறி வர சொல்லிட்டேன். இனி டென்ஷன் இல்லை"
"அப்போ சரி"
"என்ன சரி... என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தா சிம்பிளா முடிச்சி இருப்பேன். அதை விட்டுட்டு பெரிய இவ மாதிரி ஊரை விட்டு போவ. அதை கூட மன்னிச்சிடுவேன். லவ்வர் அது இதுன்னு பேசின பாரு அப்ப வந்தது கோபம். மகளே உன்னை கூட வச்சி தான் செய்ய நினைத்தேன். ஆனா முடியலை, எங்கே உன்னை அடிச்சிட்டுவேனோன்னு பயம் உனக்கு வலிக்கிரதை விட எனக்கு தான்டி வலிக்கும் உன் வலிய பார்க்கும்போது"
"அவ்வளவு லவ்வா மாமா என் மேல"
"ஆமா நிறைய லவ்வோ லவ்வு"
"சரி விடு டாக்டர் வரும் நேரம். தள்ளி போ"
"ஒரு உம்மா கொடு உன்னை விட்டுறன்"
"முடியாது போடா"
"அப்போ டாக்டர் வர வரை இப்படியே இருப்போம். இத்தனை நாளா பட்டினி போட்டுட்ட. இந்த மூஞ்ச கூட பார்க்க முடியாம தவிச்சிட்டேன். போடி...."
"திரும்ப ஆரம்பிக்காத மாமா. இனி இப்படி செய்ய மாட்டேன் சொல்லிட்டேன் இல்ல"
"சரி முதல்ல என் மேல சத்தியம் பன்னு. எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டு போகமாட்டேனு"
"சத்தியமா இனி உன்னை விட்டு போகவே மாட்டேன் எப்பவும்"
"அது... அந்த பயம் இருக்கட்டும்"
"சரி விடு போதும் யாராவது வந்துட்டா சங்கடமா போய்யிடும்"
"சரி ஒரே ஒரு உம்மா கொடுமா" அவனது கையை கண்டு பிடித்து எழுந்தவள் உம்மா கொடுத்துவிட்டு "அவ்வளவு தான் எந்திரி முதலில்"
"சரி அப்படியே... ஒரு பாட்டு பாடு"
"பாட்டு எதுக்குடா"
"எப்படியும் ஒரு மூனு நாள் ஆகிடும் எல்லாம் முடிச்சி வீட்டுக்கு போக. அதுவரை தாங்கனுமில்ல"
"ம்ம்ம்ம்... என்ன பாட்டு பாடலாம்" கதிரிடமே கேட்க.
"முத்தம் பத்தி பாடு" என்றான் ரகசிய குரலில்
"ச்சி அதே நினைப்பிலேயே இருடா லூசு"
"நீ பாடு டி" இன்னும் நெருங்கி படுத்தான்.
"ஏய் கூசுதுடா பக்கி" அவனை விட்டு எழுந்து, அவனின் தோளில் சாய்ந்து அமர்ந்தவள்
"சைவம் முத்தம் கொடுத்தால் ஒத்து போக மாட்டேன்... சாகசத்தை காட்டு செத்து போக மாட்டேன். கெஞ்ச நேரம் என்னை கொல்லய்யா" பாதியில் நிறுத்தியவள் வெட்கத்தில் அவனை அணைத்துக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் டாக்டர் வரவும், இருவரும் சமத்து பிள்ளையாக விலகி நின்றனர்.
'ச்சே... இந்த டாக்டருக்கு நேரமே தெரியலை. என் இமைக்குட்டி எவ்வளவு அழகா பாடினா. பாராட்டி ஒரு முத்தம் கூட கொடுக்க முடியலை'
"இன்னைக்கு அந்த ஊசி போட்டுடுவோம். ஒரு வாரத்தில் எல்லாம் சரியா போயிடும். இமையா அமைதியா இருக்கனும். டென்ஷன் ஆக கூடாது புரியுதா. நர்ஸ் இவங்களை கூட்டிட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.
மூவரும் வரிசையாக உட்கார்ந்து இமையா பழைய படி ஆகிடனும் என்று மனதால் பிரார்த்தனையில் இருக்கும் போது, கதிருக்கு கால் வந்தது,
"அண்ணா அம்மாக்கு உடம்பு முடியலை. அப்பா கூட வீட்டில் இல்லை என்ன செய்றதுனு தெரியலை" வள்ளி பதற்றமாக சொல்ல
"சரி நீ பதறாதே... நான் என் ப்ரெண்டை வர சொல்லுறேன்" கதிர் கையோடு அந்த ஊரில் இருக்கும் தனது நண்பனுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல, அவர்களை அதே ஊரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சேர்க்கும் ஏற்பாடு செய்தான்.
அப்போது தான் இருவரையும் பார்த்துக்கொள்ள வசதியாக இருக்கும் என்று கதிர் தெளிவாக திட்டம் போட அவனது தங்கை தான் பொங்கிக்கொண்டு இருந்தாள்.
"இந்த அண்ணாக்கு அறிவே இல்லை. இப்பவும் அவளுக்காகதான் பாடுபட்டுட்டு இருக்கு"
கதிரும் அடிக்கடி தன் அம்மாவை போய் பார்த்து வந்தான்.
அவனது தங்கை தான் முகம் கொடுத்து கூட பேசவில்லை கதிரிடம்.
இப்படியே ஆறு நாள் அனைவருக்கும் மருத்துவமனையே கதி என்று இருக்க
அடுத்த நாள் கண்களை திறக்கும் ஏற்பாடு நடந்துக்கொண்டு இருக்கும் போது,
கதிரின் போன் அலரியது. தாய்க்கு உடல் நிலை மோசமாகிவிட, வெளி ஊரில் உள்ள ஹாஸ்பிட்டலில் சேர்க்க சொன்னாதாக தங்கை சொல்லவும்
கண் முன் இமையாவின் கண் கட்டு அவிழ்த்து கொண்டு இருக்க
தாயா தாரமா என்ற ஒரு இக்கட்டான நிலையில் சிக்கி தவித்தான் கதிர்.