விழிமொழி: 6
வண்டி வீட்டை அடைந்துவிட்டது என்பதை அறிவுருத்தியது வண்டியின் குழுங்கல். அந்த திடீர் அசைவில் கனவுலகிலிருந்து மீண்ட இமையா தனது கைகளை காற்றில் தூலாவினாள்.
“எங்கே இருக்கோம்... வந்துட்டோமா?” இமையாவின் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது.
கதிருக்கு இமையாவின் இந்த பதற்றம் மனதை பிசைந்தது. ‘எப்படி பட்டாம்பூச்சியாக சிறகடித்த இவளது வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே. இவளது பேசும் கண்களில் ஒளி வந்தாலும் சரி வராமலிருந்தாலும் சரி. இந்த நீங்காத இருளையும் அவளை ரசிக்க வைக்க வேண்டும்'
“நம்ம வீட்டுக்கு வந்துட்டோம் இமை” இறங்கியவன் மறு புறம் சென்று, இமையா இறங்க உதவி செய்வதற்காக அவளது தோள்களை தொட.
“பொறுக்கி தொடாதே.. கண்டவன் எல்லாம் வந்து என்னை தொட கார்ப்பரேசன் பைப்பா நான்" அளவுக்கு அதிகமாக காய்ந்த எண்ணையில் படும் தண்ணீர் போல எரிந்து விழுந்தாள்.
‘கதிர் ஆரம்பமே அமோகமா தொடங்குதேடா’ சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
இவள் இவ்வளவு பேசியும் அமைதியாக இருந்த கதிரும் சளைக்காமல்
“தொடக்கூடாதுன்னு நீ அக்ரிமென்டில் போடல இமை குட்டி” அவளது பொன் கன்னங்களை தட்டி வம்படியாக அவளது தோள் தொட்டு காரிலிருந்து இறங்கியவன்,
அவளை வாசலில் நிற்க வைத்தான்.
ஆரத்தி கரைத்து எடுத்துவரும் பக்கத்துவீட்டு பெண்மணி,
“கதிர் தம்பி இரு. நான் வந்து இரண்டு பேருக்கும் ஆரத்தி எடுக்கிறேன்"
“என்னக்கா நீங்க? ஆசையா என் அழகு தேவதைக்கு சுத்தி போடலாம்னு நினைச்சா இப்படி வந்து கெடுக்குறிங்க"
“உன் ஆசைக்கெல்லாம் அப்புறமா சுத்திப்போட்டுக்கோ. முதல் ஆரத்தி தனியா எல்லாம் எடுக்கக் கூடாது" என்று கதிரின் கையிலிருந்த ஆரத்தி தட்டை பிடுங்கிக்கொண்டது, பக்கத்து வீட்டு காமாட்சி அக்கா.
கதிரை இமையா பக்கம் நிறுத்திவிட்டு ஆரத்தி எடுக்க துவங்கினார்.
“மகாலஷ்மி கணக்கா இந்த குடும்பத்தை நல்லா பாத்துக்கோமா” ஆரத்தியை முடித்துவிட்டு.
“நீங்க வலது கால் எடுத்து வச்சி உள்ளே போங்க. நான் ஆரத்தியை வெளியே ஊத்திவிட்டு வரேன்"
இமையா மனதில் திடீரென ஒரு பல்ப் எரிய, இடதுகாலை எடுத்துவைக்க முன் நகரும் போது, இமையா காற்றில் மிதந்தாள். இமையா செய்யப்போவதை புரிந்துகொண்ட கதிர் ஒரே தூக்கு.
“என்ன இமை... என்கிட்ட எல்லாம் உன்னோட தில்லுமுல்லு செல்லாது. நீ எந்த கால் எடுத்துவச்சி வந்தாலும் உன்னை பார்த்துட்டே இருக்கறது தான், என் வாழ்க்கையின் லட்சியம்"
“போதும் காது வலிக்குது. நைட் முழுசும் காதல் படம் பார்த்துட்டு இங்க வந்து காதல் வசனம் பேசி தள்ளவேண்டியது. ஐ ஹேட் இர்ரிட்டேட்டிங் காதல் வசனங்கள்" இமையாவின் திட்டுகளோடு இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.
“ஓ அப்படியா மேடம்! சரி. இது இன்னும் எத்தனை நாளுக்குனு பார்க்கலாம்"
“பாரு பாரு… அதுக்கு முன்னாடி இறக்கி விடுடா பிச்சக்காரா”
“எது பிச்சைக்காரனா?”
“உன் மூடி வெட்ட கூட காசு இல்லாத பிச்சக்காரன் என்னை ராணி மாதிரி வச்சி இருக்க போரானாம். என் பர்ஸ்ல நூறு ரூபா எடுத்துட்டு போய் முதலில் முடியை வெட்டு. அதுக்கு முன்னாடி இறக்கி விடு. உன் உடம்பிலே இருக்க எழும்பு எல்லாம் குத்துது”
இமையை இறக்கிவிட்டவன், "இமை கண்ணுல எதாவது தெரியுதா?” ஆர்வமாக இமையாவை பார்க்க,
“ரொம்ப டிரீம்ஸ்க்கு போகாத. பக்கி நீ தூக்கும் போது உன் முடி என் மூக்குக்குள்ள போயிடுச்சி” இமையா சலித்துக்கொண்டு சொன்னாள்.
சற்றும் முன் ஆர்வமாக இருந்த கதிரின் முகம் சுருங்கியது.
“சரி இரு சாப்பிட எதாவது செஞ்சி எடுத்துட்டு வரேன்" கதிர் கிட்சனுக்குள் நுழையவும் காமாட்சி அக்கா உள்ளே வரவும் சரியாக இருந்தது.
“ஏமா இமையா... கதிர் தம்பி எங்க”
“அக்கா அவர் உள்ள சமைக்க போய்யிருக்கார்" இமையா சொன்ன பதில் காதில் விழ
‘என் செல்ல ராட்சசி! பரவால்ல மத்தவங்க கிட்ட பேசும் போது மரியாதை தூள் பறக்குது. அவராம்ல' கதிர் காய்கறிகள் வெட்டிக்கொண்டே, தன் இதய ராணியை மனதால் ஆராதித்தான்.
“சரி மா. நான் உள்ள பார்த்துட்டு வரேன்" காமாச்சி அக்கா அதிரடியாக உள்ளே வந்து
“கதிரு இன்று சமைக்க வேண்டாம். நீ போய் இமையாக்கு வேற டிரஸ் எடுத்து கொடு. காலையில இருந்து அந்த புடவை கசகசனு இருக்கும். நான் இன்னும் ஒரு மணி நேரத்துல சமைச்சி கொண்டு வரேன்"
“சரிக்கா”
காமாட்சி அக்கா கிளம்பும் வரை அமைதியாக இருந்த இமையா, அவர் வாசலை தாண்டும் சத்தம் கேட்கவும்
“டேய் எங்க டா சாப்பாடு"
“அக்கா சமச்சி கொண்டு வராங்களாம். நீ வா குளிச்சிட்டு வேற டிரஸ் போட்டுக்கோ” கதிர் சொன்னதை கேட்டு, இமையாவின் முகத்தில் ஒரு வித கலவரம் பரவியது.
“இல்ல.. நான் இதுலையே இருந்துக்கிறேன்" அவளது தயக்கத்தை புரிந்துக்கொண்ட கதிர்
“இமையா நான் என் லிமிட்ஸ் எப்பவும் தாண்ட மாட்டேன். நீயா என்னை நெருங்கும் வரை கொஞ்சம் கொஞ்சமா சில விஷயத்தை மாத்திக்க பாரு தங்கம். வா நான் உனக்கு டிரஸ் எடுத்து வைக்கிறேன். குட்டிப்பாப்பா சமத்தா குளிச்சிட்டு வந்ததும், நானே ரெடி செய்து விடுவேனாம்" சிறு குழந்தையிடம் பேசுவது போல கதிர் பேசி பேசி இமையாவை சரிகட்டி குளிக்க அனுப்பி வைத்தான்.
கதிரின் இந்த அக்கறையில் அவன் பக்கம் சாயத்தொடங்கிய மனதை, தன் பிடிவாதம் என்னும் கயிறு கொண்டு, தரி கெட்டு ஓடும் தன் மனதை இழுத்து பிடித்து வைத்தாள் இமையா.
குளித்து முடித்தாள், ஒரு பெரிய போராட்டத்துக்கு பிறகு. அங்கு கதிர் வைத்திருக்கும் ஆடையை கண்டுபிடித்தவள், எடுத்து உடுத்திக்கொண்டு தலையில் ஈரம் சொட்ட நின்றாள்.
‘அறிவு கெட்டவன் எங்க எது இருக்குனு சொன்னானா பாரு… இவன் என்னை ராணி போல பாத்துக்க போறானாம்’ மனதில் இமையா அர்ச்சிக்க,
குளியலறையில் வெளியே நின்ற கதிருக்கு ஒரு பதற்றம். முதல் நாள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வாசலில் நிற்கும் தாய் போல பதற்றமாக நின்றிருந்தான்.
முதலில் எங்கு எது இருக்கு என சொல்லிவிடத்தான் நினைத்தான் கதிர். அவளாக தெரிந்துகொண்டால்தான் சீக்கிரம் கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும் என்று அமைதியானவன், அவள் வெளியே வரும் வரை காதை கூர்மையாக்கி நின்றிருந்தான்.
“என்ன இமை தலையை துடைக்காம நின்னுட்டிருக்க. அச்சோ துண்டு வைக்க மறந்திட்டேன் போல” என்று புலம்பியவன்
பக்கத்திலிருக்கும் ஒரு துண்டை எடுத்து இமையாவுக்கு துவட்டி விட்டான்.
‘இமையா இவன் உன்னை மடக்குறதுக்கு ஏதோ பிளான் போடுறான் மயங்காதே’ என்று தனது மனதுக்கு ஒரு பெரிய பூட்டை பூட்டியவள்,
கதிரின் கைகளை தட்டிவிட்டாள்.
“போதும் உன் நடிப்பு. எனக்கு கண்ணு தான் இல்லை. இரண்டு கையும் நல்லாவே வேலை செய்யும்” என்றவள் காற்றில் துலாவி அவன் கையிலிருக்கும் துண்டை பறித்து துவட்ட ஆரம்பித்தாள்.
‘பச்ச மிளகா.. இன்னைக்கு ஓவர் காரமா இருக்கு கதிரு வாய் கொடுத்து வாங்கி கட்டிக்காத’ கதிரின் அமைதியை இமையா தனது முதல் வெற்றியாக நினைத்தாள்.
‘இந்த புள்ளபூச்சி சத்தம் போட்டா அடங்கிடுறான். இனி இதையே வச்சி செய்யலாம்' என்று மனதில் கணக்கு போட்டவளுக்கு தெரிய வாய்ப்பில்லை. சில நிமிடங்களில் திரும்ப அவனது விளையாட்டை துவங்குவானென்று.
காமாட்சி அக்கா சாப்பாடு எடுத்து வந்தவர், கூடவே தன் மகள் சக்தியை அழைத்துக்கொண்டு வந்தார். வரும் போதே ஸ்பீக்கர் முழுங்கிய குரலோடு வந்தாள் சக்தி.
“கதிர் மாமா என்னை ஏமாத்திட்டிங்கல. அப்படி என்ன இந்த மூஞ்சில இருக்கு" சக்தி கத்திக்கொண்டே உள்ளே வர
‘அய்யோ... இவ வேற நேரங்காலம் புரியாம ஜோக் பேசறேன்னு பேசறா. இமையா எதாவது நினைச்சிக்கிட்டா என்ன செய்றது’
“ஏய் அதிகம் பேசாதே. வாயை கிழித்து சுண்ணாம்பு வச்சிடுவேன்" காமாச்சி மகளை அதட்டிவிட்டு
“இமையா எதும் நினைச்சிக்காத. இந்த ராட்சசி இப்படி தான் பைத்தியம் போல உளறுவா” காமாட்சி இமையாவுக்கு விளக்கம் கொடுக்க
“அது எல்லாம் ஒன்னும் இல்ல அக்கா”
“சக்தி மாமாக்கும் அக்காக்கும் சாப்பாடு பரிமாறிட்டு, சாப்பிட்டு முடிக்கும் வரை இருந்துட்டு வா… புரியுதா. உன் அப்பா பசி தாங்க மாட்டார் நான் போய் அவரை பார்க்குறேன்"
“என்ன மம்மி பேச்சில கொஞ்சம் வெட்கம் தெரியுது என்ன விசயம்?”
“இவளை... வீட்டுக்கு வா கண்டதை பேசும் இந்த வாய்க்கு சூடு வைக்கறேன்" காமாட்சி அர்ச்சித்தவாறு வீட்டைவிட்டு போக
“ஆனா மாமா இந்த மொக்க மூஞ்சிக்கு நீ என்னவே கட்டி இருந்திருக்கலாம்" இமையாவுக்கு சுள்ளென்று கோபம் வர
‘இமையா அமைதியா இரு. சாந்தி… சாந்தி… இவ இங்க இருந்து கிளம்புட்டும். இந்த ஜடமூடிக்காரனின் ஜடையை பிடித்து ஆஞ்சிபுடுரேன் ஆஞ்சி'
அதன் பிறகு சக்தி இமையாவிடம் வம்பு வளர்க்காமல், மூச்சுக்கு முன்னூரு முறை கதிர் மாமா.. கதிர் மாமா தான். இமையா காதில் ரத்தம் ஒன்று தான் வரவில்லை, அந்த வார்த்தையை கேட்டு.
இமையாவுக்கு தனியாக இலை வைக்காமல், இருவருக்கும் ஒரே இலை போட சொன்னான் கதிர்.
சக்தியிடம் கதை அளந்துகொண்டே இமையாவுக்கு ஊட்டிவிட, இமையா தன் மனதை பூட்டி இருந்த பூட்டை பிடிவாதத்தால் பிடித்து வைத்திருந்தாள்.
‘அது எப்படி ஒரே நாளில் ஒருவன் பக்கம் மனம் சாயும்? அப்போது நேற்றுவரை நான் ஒருவனை காதலித்து வந்தேனே... அந்த காதல் பொய்யா?' இமையாவின் மனம் எனும் குட்டையை கலங்கடித்தது இந்த எண்ணங்கள்.
இந்த மனம் என்னும் போர்களத்தில் யார் யாரை வீழ்த்தப் போகிறார்கள்?
இருவரும் தான் வீழப்போவதில்லை என்று நினைத்திருக்கும் இருவரில் வெற்றிவாகை சூடப்போவது யார்?
வண்டி வீட்டை அடைந்துவிட்டது என்பதை அறிவுருத்தியது வண்டியின் குழுங்கல். அந்த திடீர் அசைவில் கனவுலகிலிருந்து மீண்ட இமையா தனது கைகளை காற்றில் தூலாவினாள்.
“எங்கே இருக்கோம்... வந்துட்டோமா?” இமையாவின் குரலில் ஒரு பதற்றம் தெரிந்தது.
கதிருக்கு இமையாவின் இந்த பதற்றம் மனதை பிசைந்தது. ‘எப்படி பட்டாம்பூச்சியாக சிறகடித்த இவளது வாழ்க்கை இப்படி ஆகிடுச்சே. இவளது பேசும் கண்களில் ஒளி வந்தாலும் சரி வராமலிருந்தாலும் சரி. இந்த நீங்காத இருளையும் அவளை ரசிக்க வைக்க வேண்டும்'
“நம்ம வீட்டுக்கு வந்துட்டோம் இமை” இறங்கியவன் மறு புறம் சென்று, இமையா இறங்க உதவி செய்வதற்காக அவளது தோள்களை தொட.
“பொறுக்கி தொடாதே.. கண்டவன் எல்லாம் வந்து என்னை தொட கார்ப்பரேசன் பைப்பா நான்" அளவுக்கு அதிகமாக காய்ந்த எண்ணையில் படும் தண்ணீர் போல எரிந்து விழுந்தாள்.
‘கதிர் ஆரம்பமே அமோகமா தொடங்குதேடா’ சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
இவள் இவ்வளவு பேசியும் அமைதியாக இருந்த கதிரும் சளைக்காமல்
“தொடக்கூடாதுன்னு நீ அக்ரிமென்டில் போடல இமை குட்டி” அவளது பொன் கன்னங்களை தட்டி வம்படியாக அவளது தோள் தொட்டு காரிலிருந்து இறங்கியவன்,
அவளை வாசலில் நிற்க வைத்தான்.
ஆரத்தி கரைத்து எடுத்துவரும் பக்கத்துவீட்டு பெண்மணி,
“கதிர் தம்பி இரு. நான் வந்து இரண்டு பேருக்கும் ஆரத்தி எடுக்கிறேன்"
“என்னக்கா நீங்க? ஆசையா என் அழகு தேவதைக்கு சுத்தி போடலாம்னு நினைச்சா இப்படி வந்து கெடுக்குறிங்க"
“உன் ஆசைக்கெல்லாம் அப்புறமா சுத்திப்போட்டுக்கோ. முதல் ஆரத்தி தனியா எல்லாம் எடுக்கக் கூடாது" என்று கதிரின் கையிலிருந்த ஆரத்தி தட்டை பிடுங்கிக்கொண்டது, பக்கத்து வீட்டு காமாட்சி அக்கா.
கதிரை இமையா பக்கம் நிறுத்திவிட்டு ஆரத்தி எடுக்க துவங்கினார்.
“மகாலஷ்மி கணக்கா இந்த குடும்பத்தை நல்லா பாத்துக்கோமா” ஆரத்தியை முடித்துவிட்டு.
“நீங்க வலது கால் எடுத்து வச்சி உள்ளே போங்க. நான் ஆரத்தியை வெளியே ஊத்திவிட்டு வரேன்"
இமையா மனதில் திடீரென ஒரு பல்ப் எரிய, இடதுகாலை எடுத்துவைக்க முன் நகரும் போது, இமையா காற்றில் மிதந்தாள். இமையா செய்யப்போவதை புரிந்துகொண்ட கதிர் ஒரே தூக்கு.
“என்ன இமை... என்கிட்ட எல்லாம் உன்னோட தில்லுமுல்லு செல்லாது. நீ எந்த கால் எடுத்துவச்சி வந்தாலும் உன்னை பார்த்துட்டே இருக்கறது தான், என் வாழ்க்கையின் லட்சியம்"
“போதும் காது வலிக்குது. நைட் முழுசும் காதல் படம் பார்த்துட்டு இங்க வந்து காதல் வசனம் பேசி தள்ளவேண்டியது. ஐ ஹேட் இர்ரிட்டேட்டிங் காதல் வசனங்கள்" இமையாவின் திட்டுகளோடு இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.
“ஓ அப்படியா மேடம்! சரி. இது இன்னும் எத்தனை நாளுக்குனு பார்க்கலாம்"
“பாரு பாரு… அதுக்கு முன்னாடி இறக்கி விடுடா பிச்சக்காரா”
“எது பிச்சைக்காரனா?”
“உன் மூடி வெட்ட கூட காசு இல்லாத பிச்சக்காரன் என்னை ராணி மாதிரி வச்சி இருக்க போரானாம். என் பர்ஸ்ல நூறு ரூபா எடுத்துட்டு போய் முதலில் முடியை வெட்டு. அதுக்கு முன்னாடி இறக்கி விடு. உன் உடம்பிலே இருக்க எழும்பு எல்லாம் குத்துது”
இமையை இறக்கிவிட்டவன், "இமை கண்ணுல எதாவது தெரியுதா?” ஆர்வமாக இமையாவை பார்க்க,
“ரொம்ப டிரீம்ஸ்க்கு போகாத. பக்கி நீ தூக்கும் போது உன் முடி என் மூக்குக்குள்ள போயிடுச்சி” இமையா சலித்துக்கொண்டு சொன்னாள்.
சற்றும் முன் ஆர்வமாக இருந்த கதிரின் முகம் சுருங்கியது.
“சரி இரு சாப்பிட எதாவது செஞ்சி எடுத்துட்டு வரேன்" கதிர் கிட்சனுக்குள் நுழையவும் காமாட்சி அக்கா உள்ளே வரவும் சரியாக இருந்தது.
“ஏமா இமையா... கதிர் தம்பி எங்க”
“அக்கா அவர் உள்ள சமைக்க போய்யிருக்கார்" இமையா சொன்ன பதில் காதில் விழ
‘என் செல்ல ராட்சசி! பரவால்ல மத்தவங்க கிட்ட பேசும் போது மரியாதை தூள் பறக்குது. அவராம்ல' கதிர் காய்கறிகள் வெட்டிக்கொண்டே, தன் இதய ராணியை மனதால் ஆராதித்தான்.
“சரி மா. நான் உள்ள பார்த்துட்டு வரேன்" காமாச்சி அக்கா அதிரடியாக உள்ளே வந்து
“கதிரு இன்று சமைக்க வேண்டாம். நீ போய் இமையாக்கு வேற டிரஸ் எடுத்து கொடு. காலையில இருந்து அந்த புடவை கசகசனு இருக்கும். நான் இன்னும் ஒரு மணி நேரத்துல சமைச்சி கொண்டு வரேன்"
“சரிக்கா”
காமாட்சி அக்கா கிளம்பும் வரை அமைதியாக இருந்த இமையா, அவர் வாசலை தாண்டும் சத்தம் கேட்கவும்
“டேய் எங்க டா சாப்பாடு"
“அக்கா சமச்சி கொண்டு வராங்களாம். நீ வா குளிச்சிட்டு வேற டிரஸ் போட்டுக்கோ” கதிர் சொன்னதை கேட்டு, இமையாவின் முகத்தில் ஒரு வித கலவரம் பரவியது.
“இல்ல.. நான் இதுலையே இருந்துக்கிறேன்" அவளது தயக்கத்தை புரிந்துக்கொண்ட கதிர்
“இமையா நான் என் லிமிட்ஸ் எப்பவும் தாண்ட மாட்டேன். நீயா என்னை நெருங்கும் வரை கொஞ்சம் கொஞ்சமா சில விஷயத்தை மாத்திக்க பாரு தங்கம். வா நான் உனக்கு டிரஸ் எடுத்து வைக்கிறேன். குட்டிப்பாப்பா சமத்தா குளிச்சிட்டு வந்ததும், நானே ரெடி செய்து விடுவேனாம்" சிறு குழந்தையிடம் பேசுவது போல கதிர் பேசி பேசி இமையாவை சரிகட்டி குளிக்க அனுப்பி வைத்தான்.
கதிரின் இந்த அக்கறையில் அவன் பக்கம் சாயத்தொடங்கிய மனதை, தன் பிடிவாதம் என்னும் கயிறு கொண்டு, தரி கெட்டு ஓடும் தன் மனதை இழுத்து பிடித்து வைத்தாள் இமையா.
குளித்து முடித்தாள், ஒரு பெரிய போராட்டத்துக்கு பிறகு. அங்கு கதிர் வைத்திருக்கும் ஆடையை கண்டுபிடித்தவள், எடுத்து உடுத்திக்கொண்டு தலையில் ஈரம் சொட்ட நின்றாள்.
‘அறிவு கெட்டவன் எங்க எது இருக்குனு சொன்னானா பாரு… இவன் என்னை ராணி போல பாத்துக்க போறானாம்’ மனதில் இமையா அர்ச்சிக்க,
குளியலறையில் வெளியே நின்ற கதிருக்கு ஒரு பதற்றம். முதல் நாள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, வாசலில் நிற்கும் தாய் போல பதற்றமாக நின்றிருந்தான்.
முதலில் எங்கு எது இருக்கு என சொல்லிவிடத்தான் நினைத்தான் கதிர். அவளாக தெரிந்துகொண்டால்தான் சீக்கிரம் கற்றுக்கொள்ள வசதியாக இருக்கும் என்று அமைதியானவன், அவள் வெளியே வரும் வரை காதை கூர்மையாக்கி நின்றிருந்தான்.
“என்ன இமை தலையை துடைக்காம நின்னுட்டிருக்க. அச்சோ துண்டு வைக்க மறந்திட்டேன் போல” என்று புலம்பியவன்
பக்கத்திலிருக்கும் ஒரு துண்டை எடுத்து இமையாவுக்கு துவட்டி விட்டான்.
‘இமையா இவன் உன்னை மடக்குறதுக்கு ஏதோ பிளான் போடுறான் மயங்காதே’ என்று தனது மனதுக்கு ஒரு பெரிய பூட்டை பூட்டியவள்,
கதிரின் கைகளை தட்டிவிட்டாள்.
“போதும் உன் நடிப்பு. எனக்கு கண்ணு தான் இல்லை. இரண்டு கையும் நல்லாவே வேலை செய்யும்” என்றவள் காற்றில் துலாவி அவன் கையிலிருக்கும் துண்டை பறித்து துவட்ட ஆரம்பித்தாள்.
‘பச்ச மிளகா.. இன்னைக்கு ஓவர் காரமா இருக்கு கதிரு வாய் கொடுத்து வாங்கி கட்டிக்காத’ கதிரின் அமைதியை இமையா தனது முதல் வெற்றியாக நினைத்தாள்.
‘இந்த புள்ளபூச்சி சத்தம் போட்டா அடங்கிடுறான். இனி இதையே வச்சி செய்யலாம்' என்று மனதில் கணக்கு போட்டவளுக்கு தெரிய வாய்ப்பில்லை. சில நிமிடங்களில் திரும்ப அவனது விளையாட்டை துவங்குவானென்று.
காமாட்சி அக்கா சாப்பாடு எடுத்து வந்தவர், கூடவே தன் மகள் சக்தியை அழைத்துக்கொண்டு வந்தார். வரும் போதே ஸ்பீக்கர் முழுங்கிய குரலோடு வந்தாள் சக்தி.
“கதிர் மாமா என்னை ஏமாத்திட்டிங்கல. அப்படி என்ன இந்த மூஞ்சில இருக்கு" சக்தி கத்திக்கொண்டே உள்ளே வர
‘அய்யோ... இவ வேற நேரங்காலம் புரியாம ஜோக் பேசறேன்னு பேசறா. இமையா எதாவது நினைச்சிக்கிட்டா என்ன செய்றது’
“ஏய் அதிகம் பேசாதே. வாயை கிழித்து சுண்ணாம்பு வச்சிடுவேன்" காமாச்சி மகளை அதட்டிவிட்டு
“இமையா எதும் நினைச்சிக்காத. இந்த ராட்சசி இப்படி தான் பைத்தியம் போல உளறுவா” காமாட்சி இமையாவுக்கு விளக்கம் கொடுக்க
“அது எல்லாம் ஒன்னும் இல்ல அக்கா”
“சக்தி மாமாக்கும் அக்காக்கும் சாப்பாடு பரிமாறிட்டு, சாப்பிட்டு முடிக்கும் வரை இருந்துட்டு வா… புரியுதா. உன் அப்பா பசி தாங்க மாட்டார் நான் போய் அவரை பார்க்குறேன்"
“என்ன மம்மி பேச்சில கொஞ்சம் வெட்கம் தெரியுது என்ன விசயம்?”
“இவளை... வீட்டுக்கு வா கண்டதை பேசும் இந்த வாய்க்கு சூடு வைக்கறேன்" காமாட்சி அர்ச்சித்தவாறு வீட்டைவிட்டு போக
“ஆனா மாமா இந்த மொக்க மூஞ்சிக்கு நீ என்னவே கட்டி இருந்திருக்கலாம்" இமையாவுக்கு சுள்ளென்று கோபம் வர
‘இமையா அமைதியா இரு. சாந்தி… சாந்தி… இவ இங்க இருந்து கிளம்புட்டும். இந்த ஜடமூடிக்காரனின் ஜடையை பிடித்து ஆஞ்சிபுடுரேன் ஆஞ்சி'
அதன் பிறகு சக்தி இமையாவிடம் வம்பு வளர்க்காமல், மூச்சுக்கு முன்னூரு முறை கதிர் மாமா.. கதிர் மாமா தான். இமையா காதில் ரத்தம் ஒன்று தான் வரவில்லை, அந்த வார்த்தையை கேட்டு.
இமையாவுக்கு தனியாக இலை வைக்காமல், இருவருக்கும் ஒரே இலை போட சொன்னான் கதிர்.
சக்தியிடம் கதை அளந்துகொண்டே இமையாவுக்கு ஊட்டிவிட, இமையா தன் மனதை பூட்டி இருந்த பூட்டை பிடிவாதத்தால் பிடித்து வைத்திருந்தாள்.
‘அது எப்படி ஒரே நாளில் ஒருவன் பக்கம் மனம் சாயும்? அப்போது நேற்றுவரை நான் ஒருவனை காதலித்து வந்தேனே... அந்த காதல் பொய்யா?' இமையாவின் மனம் எனும் குட்டையை கலங்கடித்தது இந்த எண்ணங்கள்.
இந்த மனம் என்னும் போர்களத்தில் யார் யாரை வீழ்த்தப் போகிறார்கள்?
இருவரும் தான் வீழப்போவதில்லை என்று நினைத்திருக்கும் இருவரில் வெற்றிவாகை சூடப்போவது யார்?