ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

12 கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ கதைக்கான விமர்சனங்கள்

டுவிஸ்ட் T 21
நாவல் போட்டி


கதை இல 12

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ!

கதை விமர்சனம்

#shayini_review#


சாதாரண வாசகியாக கதை பற்றிய எனது விமர்சனம்


மண மேடையில் திருமணக் கோலத்தில் ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புகளுடனிருக்கும் அஸ்வினி, அவளைத் திருமணம் செய்யத் தயாராகும் கெளதம். திடீரென நுழைந்து மண மேடையில் கெளதமை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி, அஸ்வினியை கவர்ந்து செல்கின்றான் தீரன்.???


யாரிந்த தீரன்? இராமனா? இராவணனா? இவனின் இச் செயலுக்கு உள்நோக்கம் என்ன? ????

தீரன் எதற்கு கெளதம் திருமணம் செய்யப் போகும் பெண்ணைக் கடத்த வேண்டும் ?????

தீரன் , கெளதம் ,அஸ்வினி மூவருக்கும் என்ன சம்மந்தம்? தீரனின் மன வலிகளுக்கு
காரணம்? ????



தீரன், தன்னை சுற்றி எதிரிகளினை வேட்டையாடும் வீரன் . தீரனின் நண்பனாக தீரனின் உயிர் காக்கும் காவலனாக வரும்
ஆத்மா என்னும் பரமன். ???இவனே உண்மையான நட்பிற்கு இலக்கணம் . பரமனை பற்றி நினைத்தாலே பெருமை ஏற்பட்டு மெய் சிலிர்க்கின்றது. ?????

தீரனை அணைத்து தனது உரிமையை வெளிப்படுத்தும் தருணமாகட்டும் , அவனின் பேச்சில் மட்டுமல்லாது செயலில் ஒவ்வொரு நொடியுமே பரமன் தீரனுக்காக மட்டுமே தன்னையே மனமார அர்ப்பணிப்பது தீரனுக்காக வாழ்வது மெய் சிலிர்க்கின்றது..

எவ்வகையான சிறிதும் சுயநலமில்லாத அன்பு . தீரன் மிகவும் அதிர்ஷ்டசாலி ☺?????

தீரன் காதலில் நெஞ்சத்தை உருக்கினாலும் பரமன் அவனின் எல்லையில்லா அன்பிலும் பாசத்திலும் இருவருமே நெஞ்சத்தை கொள்ளையடித்து மனங்கவர்ந்து விட்டனர்.???????

அஸ்வினி இவள் அப்பாவி பேதை , இவளின் அறியாமை பரிதாபத்துக்குரியது. ??????பெண்ணவளைச் சுற்றி பின்னப்பட்ட சதிவலையில் , பேதைப் பெண்ணவள் அவளின் அறியாமையினால் , யார் உண்மையான நிஜமென அறியாது , நிஜத்தை வெறுத்து , கானல் நீரை நிஜமென நம்புவது பரிதாபத்துக்குரியது. இதனால் இவளும் வலிகளுடன் , மனங்கவர்ந்தவனுக்கும் வலிகளை பரிசளிக்கிறாள். அவள் அறியாமை அகலும் போது பெண்ணவளின் நிலை என்னாகுமோ?????

மரகதம் கதையின் ஆரம்பம் இவரே , ஏழையாக இருந்தாலும் மனசாட்சியுள்ள நல்ல குணவதி, உயிர் அச்சுறுத்தலிருந்தும் , தக்க சமயத்தில் புத்தி சாதுரியமாக செயற்படுவது பாரட்டப்பட வேண்டியது. இருந்தாலும் இவர் பேச வேண்டிய இடத்தில் அமைதியாக இருந்தது கதையில் எதிர்பார்க்காத தருணம். ?????


அல்லி ; அவளின் மனதைக் கவர்ந்தவனின் காதலில் கட்டுண்டு இருப்பவள், அவளின் குழந்தையாக அபிநவ் . நல்ல குணமுள்ளவளாக இப் பேதை இருந்தாலும் , எந்த பக்கம் சார்ந்து நிற்பதென்று தெரியாமல் முடிவெடுக்க திணறுகிறாள். சுயமரியாதை கேள்வி குறியாகும் இடத்தில் இவள் காதலென்ற பெயரில் தொடர்ந்து ஆதிக்கத்திற்கு அடங்கிப் போவதை என்ன சொல்ல? ????

கெளதம் இவனெல்லாம் எவ்வகையில் சேர்த்தி ? சுயநல உருவின் மறுவடிவம்.. மற்றவர்களை சார்ந்து வாழ கூடாது என்பதற்கு இவனே சிறந்த உதாரணம்..???

ராதிகா இவளின் செயலுக்கு துணை போகும் அவளின் கணவன் தேவராஜ் ,உறவையே கொல்ல துணியும்

இவர்களிருவருமே.. ஆண் பெண் இனத்திற்கே சாபக்கேடு..?????


ராதிகா போன்ற சிலர் செய்யும் வன் கொடுமைகள் சில , நிஜ வாழ்க்கையில் நாம் கேள்வியுற்றாலும் எப்போது எல்லாவற்றிற்கும் விடிவு காலம் வருமோ..? ???


இவர்களுடன் விருஷாலி?

இவர்களுடன் கதையில் பயணிக்கும் துணை மாந்தர்கள் மோகினி, கார்த்திக் மற்றும் தேவகி .????

கார்த்திக்கின் அழகான ஆத்மார்த்த காதல் அவளின் காதல் மனைவி தேவகி இவர்களின் காதலுடன் கெடிய செல்ல செல்ல ஊடல்கள் மிகவும் அழகு..?????

மோகினி , இவளின் கனவில் வரும் தீரன் , இவளின் கனவில் தீரன் வர காரணம்???☺

கதையின் மாந்தர்களான


இவர்கள் அனைவரைச் சுற்றியும்
ஆரம்பத்திலிருந்து இறுதி வரையிலும் பலபல முடிச்சுகளுடனும் நம் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக, பயணிக்கும் கதையோட்டத்தில்,
எங்கும் எந்தவித தொய்வுமில்லாமல் இறுதிவரை அழகாக கதையை படிக்கும் வாசகர்களை மனதை கொய்து கொள்ளை கொண்டுள்ளார் கதையின் ஆசிரியர். டுவிஸ்ட் கதை என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளமை மிகவும் பாரட்டப்பட வேண்டிய விடயம்.



கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ!


டுவிஸ்ட் 21 போட்டி நாவல் (இல 12) போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன் ஷாயினி

Date :- 27/06/2021

Time :- 9pm
அழகான விமர்சனம் ரொம்ப ரொம்ப நன்றி ????
 
#Twist21

#No12

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா

ஏதோ தோஷம் என்று மறுபடியும் கல்யாணம் செய்ய இருக்கும் நிலையில் மேடையில் இருந்து கடத்தி போறான் தீரன் அஷ்வினியை...

அவன் தன் மனைவி என்க (!?)? அவள் நான் கௌதம் மனைவி என்க அவன் தாய் தான் குழம்பி போறார்? நாமும் தான்!!!

இந்த கௌதமோ அடிபட்டு ஹாஸ்பிடலில் நர்ஸ் அல்லி கூட அவன் நடக்கும் முறை எல்லாம், இவன் நல்லவனா? கெட்டவனா? என்று குழம்ப வைக்கும்... அல்லிக்கு குழைந்தை வேற இருக்கு!!

முதன் முறை முகம் பார்த்து அச்சத்தில் மயக்கமும், மறுமுறை முகம் பார்க்கையில் அதிர்ச்சியில் பயமுமாய் அஸ்வினி??? ஏன்??

கோவிலுக்கு போகும் வழியில் கார் பிரச்சனையால் தீரனின் ஆள் பரமனுடன் வரும் மோகினி அண்ட் கோ, மோகினிக்கு வரும் கனவு??? தீரன் வீட்டுக்கு வராங்க, ஒரு எமர்ஜென்சிக்கு!! இந்த மோகினி வேறு கனவின் தாக்கத்தில் செய்யும் சிறு செயலால் தீரனின் உயிரே ஊசலாடுது???

இதில் யார் சொல்வது உண்மை அஷ்வினியா, தீரனா? கௌதம் யாருக்கு கணவன்? தீரனை காக்க பரமன் வருவானா??

இதையெல்லாம் அடுத்தடுத்து சுவாரஸ்யமா சொல்லி கதையை நகர்த்தி இருக்காங்க..

எனக்கு ரொம்ப பிடித்தது பரமன் அண்ட் தீரன் காம்போ???... பரமாத்மா அவ்வளவு அருமையான மனுஷன்.. தீரனின் லக்கி சார்ம் சொல்லலாம்.. ஒவ்வொருமுறையும் தீரன் காக்கப்படுவது இவனால் தான்?? (எப்போ என்ன படிச்சு தெரிஞ்சுக்கோங்க)

தீரன் அருமையான மகன், அன்பான நண்பன், செம்ம காதலன்??? இவன் பண்ண ஒவ்வொன்றும் ரொம்பவே பிடிச்சது...

அல்லி செஞ்ச தப்புக்கு வேணும் என்று தான் தோணுச்சு... இருந்தும் பல நேரம் பாவமா இருந்துச்சு... கடைசியில் இவள் அண்ட் மரகதம் பண்ணது கொஞ்சம் பிடிக்கலை தான்.. மரகதம் நல்லவர் தான்.. அனைத்தும் அருகில் இருந்து பார்த்தவர் கொஞ்சம் கவனமாய் இருந்து இருக்கணும் என்பது எனது எண்ணம்... அஸ்வி மேல் கைவைத்த போது இவங்க மேல தான் கோபம் வந்துச்சு...

ராதிகா??? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத மிருகம்.. இவர் அண்ட் இவர் கணவர் பேராசையால் பண்ணிய தப்புக்கு தான் அத்தனையும் நடந்து இருக்கு.. எதுவுமே அளவாய் இருக்கணும்... அளவு மீறிய இவர்களின் ஜோசிய பக்தி அதால் எவ்வளவு அனர்த்தங்கள்??? அந்த தண்டனை எல்லாம் சின்னது தான்??

ஏமாறுவோர் இருந்தா ஏமாத்த தான் செய்வாங்க... விருஷாலி பண்ணது தப்பா தெரியலை..

கௌதம் என்ன தான் செய்து இருந்தாலும், சொன்னாலும் எனக்கு இவனை பல விடயங்களில் பிடிக்கலை.. கொஞ்சம் சுயநலம் இவனுக்கு... எதையும் ஆராயும் பாங்கும் இவனுக்கு கிடையாது, எதிர்க்கும் துணிவும் கிடையாது... அஸ்வி விசயத்தில் எனக்கு இவனை சுத்தமா பிடிக்கலை... அதுவும் கடைசி செம்ம கோபம் வந்தது???

தீரனின் அம்மா அப்பா??? எனக்கு ரொம்ப பிடித்த மனிதர்கள்.. குகன் கூட, நல்ல நண்பன்...

கதை ரொம்ப நல்லா இருந்தது... நீங்க வச்ச டுவிஸ்ட் க்கு பக்கம் வர வந்தாலும் சரியாக கணிக்க முடியலை.. சூப்பர்...

வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே????
 
  • Love
Reactions: T21
sis nalla story nanum niraya stories across panni iruken .ithuvari entha story oda heading m enna intha alavuku feel panna vaikala,rc amma,srikala,infa ,ippadi niraya per story padichirunthalum thalaipu ennai unga thalaipu pola kavarala.first unga story than padikanum nu ninaithen eppoda finish aahum nu wait panni padichen.nalla viru virupu.enna aahum enna aahum nu ore excitement ah irunthuchu.ungaluku intha genere nalla varum nu ninaikiren .neenga innum konjam try pannina itha vida suspense stories eluthalam.congrats sis
 
  • Love
Reactions: T21
#Twist21

#No12

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா

ஏதோ தோஷம் என்று மறுபடியும் கல்யாணம் செய்ய இருக்கும் நிலையில் மேடையில் இருந்து கடத்தி போறான் தீரன் அஷ்வினியை...

அவன் தன் மனைவி என்க (!?)? அவள் நான் கௌதம் மனைவி என்க அவன் தாய் தான் குழம்பி போறார்? நாமும் தான்!!!

இந்த கௌதமோ அடிபட்டு ஹாஸ்பிடலில் நர்ஸ் அல்லி கூட அவன் நடக்கும் முறை எல்லாம், இவன் நல்லவனா? கெட்டவனா? என்று குழம்ப வைக்கும்... அல்லிக்கு குழைந்தை வேற இருக்கு!!

முதன் முறை முகம் பார்த்து அச்சத்தில் மயக்கமும், மறுமுறை முகம் பார்க்கையில் அதிர்ச்சியில் பயமுமாய் அஸ்வினி??? ஏன்??

கோவிலுக்கு போகும் வழியில் கார் பிரச்சனையால் தீரனின் ஆள் பரமனுடன் வரும் மோகினி அண்ட் கோ, மோகினிக்கு வரும் கனவு??? தீரன் வீட்டுக்கு வராங்க, ஒரு எமர்ஜென்சிக்கு!! இந்த மோகினி வேறு கனவின் தாக்கத்தில் செய்யும் சிறு செயலால் தீரனின் உயிரே ஊசலாடுது???

இதில் யார் சொல்வது உண்மை அஷ்வினியா, தீரனா? கௌதம் யாருக்கு கணவன்? தீரனை காக்க பரமன் வருவானா??

இதையெல்லாம் அடுத்தடுத்து சுவாரஸ்யமா சொல்லி கதையை நகர்த்தி இருக்காங்க..

எனக்கு ரொம்ப பிடித்தது பரமன் அண்ட் தீரன் காம்போ???... பரமாத்மா அவ்வளவு அருமையான மனுஷன்.. தீரனின் லக்கி சார்ம் சொல்லலாம்.. ஒவ்வொருமுறையும் தீரன் காக்கப்படுவது இவனால் தான்?? (எப்போ என்ன படிச்சு தெரிஞ்சுக்கோங்க)

தீரன் அருமையான மகன், அன்பான நண்பன், செம்ம காதலன்??? இவன் பண்ண ஒவ்வொன்றும் ரொம்பவே பிடிச்சது...

அல்லி செஞ்ச தப்புக்கு வேணும் என்று தான் தோணுச்சு... இருந்தும் பல நேரம் பாவமா இருந்துச்சு... கடைசியில் இவள் அண்ட் மரகதம் பண்ணது கொஞ்சம் பிடிக்கலை தான்.. மரகதம் நல்லவர் தான்.. அனைத்தும் அருகில் இருந்து பார்த்தவர் கொஞ்சம் கவனமாய் இருந்து இருக்கணும் என்பது எனது எண்ணம்... அஸ்வி மேல் கைவைத்த போது இவங்க மேல தான் கோபம் வந்துச்சு...

ராதிகா??? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத மிருகம்.. இவர் அண்ட் இவர் கணவர் பேராசையால் பண்ணிய தப்புக்கு தான் அத்தனையும் நடந்து இருக்கு.. எதுவுமே அளவாய் இருக்கணும்... அளவு மீறிய இவர்களின் ஜோசிய பக்தி அதால் எவ்வளவு அனர்த்தங்கள்??? அந்த தண்டனை எல்லாம் சின்னது தான்??

ஏமாறுவோர் இருந்தா ஏமாத்த தான் செய்வாங்க... விருஷாலி பண்ணது தப்பா தெரியலை..

கௌதம் என்ன தான் செய்து இருந்தாலும், சொன்னாலும் எனக்கு இவனை பல விடயங்களில் பிடிக்கலை.. கொஞ்சம் சுயநலம் இவனுக்கு... எதையும் ஆராயும் பாங்கும் இவனுக்கு கிடையாது, எதிர்க்கும் துணிவும் கிடையாது... அஸ்வி விசயத்தில் எனக்கு இவனை சுத்தமா பிடிக்கலை... அதுவும் கடைசி செம்ம கோபம் வந்தது???

தீரனின் அம்மா அப்பா??? எனக்கு ரொம்ப பிடித்த மனிதர்கள்.. குகன் கூட, நல்ல நண்பன்...

கதை ரொம்ப நல்லா இருந்தது... நீங்க வச்ச டுவிஸ்ட் க்கு பக்கம் வர வந்தாலும் சரியாக கணிக்க முடியலை.. சூப்பர்...

வெற்றி பெற வாழ்த்துகள் ஆசிரியரே????
ரொம்ப ரொம்ப நன்றி ? அழகான விமர்சனம் ?
 
sis nalla story nanum niraya stories across panni iruken .ithuvari entha story oda heading m enna intha alavuku feel panna vaikala,rc amma,srikala,infa ,ippadi niraya per story padichirunthalum thalaipu ennai unga thalaipu pola kavarala.first unga story than padikanum nu ninaithen eppoda finish aahum nu wait panni padichen.nalla viru virupu.enna aahum enna aahum nu ore excitement ah irunthuchu.ungaluku intha genere nalla varum nu ninaikiren .neenga innum konjam try pannina itha vida suspense stories eluthalam.congrats sis
ரொம்ப ரொம்ப நன்றிங்க... ?❤️
 
Top