அத்தியாயம் - 15
சென்னை ஹைவேய்ஸ் வழியாக கார் சென்றுக் கொண்டு இருக்க
மல்லிகா கேட்டுக் கொண்டதால் மகிழன் ஏசி போடமல் விண்டோஸ் திறந்து விட காற்று மோதி சத்யாவுக்கு ஒருவித சிலிரப்பை தர வேடிக்கை பார்த்து வெளியே ரசித்துக் கொண்டு இருந்தாள் .
பின்னால் அமர்ந்து இருந்த மல்லிகா ஒருவித உணர்ச்சியில் இருந்தார்
மணிவண்ணன் அவரின் கைகளை பிடித்துக் கொண்டு ஆறுதலாக இருந்தார்.
வண்டி ஓட்டிக் கொண்டு இருந்தவன் "என்னமா திடீருனு?"என்று கேள்வி எழுப்ப
சத்யாவுக்கும் அதே கேள்வி மனதுக்குள் இருந்தது.
மகிழன் கேட்டதும் மல்லிவாவுக்கு பழைய நினைவுகள் வர கண்கலங்கியவர் "எங்க அப்பா என்ன கூப்பிட்டு இருகாங்க டா மகிழு "என்க
அதைக் கேட்டவன் ஆச்சரியமாக திரும்பி பார்க்க
அவரும் சிரித்துக் கொண்டே "ஆமாம் "என்க
இவனுக்கு சந்தோசமாக இருந்தது இத்தனை நாள் மல்லிகா சந்தோசமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள்ள இத்தனை நினைத்து வேதனைப்படுவது மகிழனுக்கு நன்றாகவே தெரியும் இப்போது தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
அருகில் அமர்ந்து இருந்த சத்யாவுக்கு தான் கொரியன் சீரிஸ் பார்ப்பது போல இருந்தது எதை பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று புரியாமல் இருந்தாள்.
அவளின் முகத்தை பார்த்து அவளுக்கு ஒன்றும்புரிய வில்லை என்று தெரிந்து மல்லிகா அவர் வாழ்க்கையில் நடந்ததை கூறினார்.
மல்லிகாவின் பிறந்த ஊரு ஏற்கார்ட் தான்.
அவரின் குடும்பத்தில் அவர் தான் மூத்தபிள்ளை இவருக்கு பின் இரண்டு பசங்க
முதல் பெண் என்பதால் இவர் வீட்டில் ரொம்ப செல்லம் கேட்டது எல்லாம் கிடைக்கும் அப்படி தான் இவர் காலேஜ் படிப்பதற்கு சென்னை போக வேண்டும் என்று ஆசைப்பட்டு அடம் பிடித்துக் கொண்டு வந்தார்.
வந்த இடத்தில் மணிவண்ணனை பார்த்து பிடித்து விட நாளாக நாளாக இருவருக்கும் நட்பை தாண்டி காதல் வந்தது.
மணிவண்ணன்க்கு அம்மா அப்பா இல்லை தாத்தா பாட்டி மட்டும் தான் கொடைக்கானலில் இருந்தனர்.
படிப்பை முடித்துக் கொண்டு வரும் போது மல்லிகா மணிவண்ணனையும் கூட்டிக் கொண்டு செல்ல
அதை பார்த்த அவரின் அப்பாவிற்கு கோவம் வந்து அவரை மொத்தமாக தண்ணி தெளித்து விட்டார் மனம்உடைந்து போன மல்லிகாவுக்கு மணிவண்ணன் தான் ஆறுதலாக இருந்தார்.
காலம் மாற அவரின் அப்பா மனதும் மாறிவிடும் என்று நினைக்க எதற்கும் மாறவில்லை மகிழன் பிறந்ததை சொல்ல அப்போதும் ஏற்றுக்கொள்ள வில்லை மகிழனின் திருமணத்தை சொல்லும் போதும் கூட வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளவில்லை.
இனி தனக்கு தாய்வீடே கிடையாது என்று மல்லிகா நினைத்துக் கொண்டு இருக்கும் போது தான் அவரின் தம்பி சேகர் அழைத்து குடும்பத்தோடு வருமாறு சொல்ல சந்தோஷத்துடன் கிளம்பிவிட்டனர்.
மல்லிகா மகிழ்ச்சியுடன் சொல்ல அதை கேட்ட சத்யாவிற்கு "சே காதலுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு இருகாங்க ஆனா இந்த காதல் ஜோடிக்கு பிறந்தவன் மட்டும் எப்படி இப்படி இருக்கான் "என்று சந்தேகம் எழ
அவனை பார்த்துக் கொண்டு வந்தாள்.
அவள் பார்ப்பது தெரிந்தாலும் அவளை கண்டுக் கொள்ளாமல் வர அதை பார்த்தவள் "ரொம்ப தான் " என்று நினைத்து வெளியே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
இரவு சாப்பிட்டு விட்டு மீண்டும் மகிழன் கார் எடுக்க
மல்லிகாவும் மணிவண்ணனும் தூங்கி விட்டனர்.
மகிழன் ரொம்ப நேரம் கார் ஓட்டுவதை பார்த்து "டையேட் ஆ இருக்க நா கார் ஓட்டட்டுமா "என்று ஆசையாக கேட்க
அவளை திரும்பி பார்த்தவன் "கார் ஓட்ட தெரியுமா?"என்க
இவ்ளோ நாள் பேசாமல் இருந்தான் இப்போது பேசவும் மகிழ்ச்சி ஆனவள் "ம்ம் ஓட்டுவேன் ஆனா உங்க அளவுக்கு சூப்பர்ஆ ஓட்ட தெரியாது சுமாரா ஓட்டுவேன் "என்று அவனுக்கு ஐஸ் வைக்க
அதை கண்டுக் கொள்ளாதவன் காரை ஓரமாக நிறுத்தி இறங்கியவன் அவளை ஓட்ட சொல்ல
அதை கேட்டு உற்சாகமானவள் "நிஜமாவா நா டிரைவ் பண்ணட்டுமா?"என்க
"ம்ம் "என சொல்ல
அதை கேட்டவள் சந்தோசமாக கார் டிரைவ் பண்ண முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் பின் நன்றாகவே டிரைவ் செய்தாள்.
"எப்போ கார் டிரைவ் பண்ண கத்துக்கிட்ட"என்று கேட்க
"பிரசன்னாவும் சரணும் அவங்க கார்ல சொல்லிக் கொடுத்தாங்க "என்று ரோட்டை பார்த்துக் கொண்டே சொல்ல
அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன் பின் அவளுக்கு வழி சொல்லிக் கொண்டு வந்தான்.
பாதி வழி அவளும் பாதி வழி அவனும் டிரைவ் செய்து வர
எக்கார்ட் வந்ததும் அவளை பார்த்து "நல்லா டிரைவ் பண்ற சென்னைக்கு போனதும் லைசென்ஸ் எடுத்தரலாம் "என்க
அதை கேட்டவள் சந்தோசமாக தலையாட்ட அதன்பின் அவளிடம் பேச வில்லை ஆனால் அவளுக்கு அவன் பேசியதே போதும் என்று கூகிள்மேப் பார்த்து மல்லிகாவின் வீட்டின் அருகே வந்தது.
மகிழன் தூங்கிக் கொண்டு இருந்தா மல்லிகாவையும் மணிவண்ணனையும் எழுப்பி விட
அப்போதும் தான் சுத்தி பார்த்தவர் "ஏற்கார்ட் வந்துட்டோமா மகிழா இவ்ளோ தூரம் நீயே டிரைவ் பண்ணிக்கிட்டு வந்தியா என்னை எழுப்பி விட்டு இருக்கலாம்ல நா டிரைவ் பண்ணி இருப்பேன் "என்று மணிவண்ணன் குறைப்பட
அவரை திரும்பி பார்க்காமலே "இவ்ளோ தூரம் நா மட்டுமே டிரைவ் பண்ணிக்கிட்டு வரலபா "என்க
அவனை அவர்கள் குழப்பமாக பார்க்கவும் "சத்யா டிரைவ் பண்ணிக்கிட்டு வந்தா பா "என்க
அவளை ஆச்சரியமாக பார்த்த மணிவண்ணன் "உனக்கு டிரைவ் பண்ண தெரியுமா டா"என்க
அவளும் சிரித்துக் கொண்டே தலையாட்ட
சத்யாவை பார்த்த மல்லிகா "அப்போ எனக்கு சொல்லிக் குடு "என்க
அவரை பார்த்து மணிவண்ணன் "இவ்ளோ நாள் நா சொல்லிக் குடுக்கும் போது ஓட்டமா உன் மருமகள் சொல்லி தந்தா மட்டும் தான் ஓட்டுவியா?"என்க
அவர் கேட்டதுக்கு பதில் சொல்ல தெரியாமல் திருதிருவென முழிக்க
அதை பார்த்த சத்யா சிரித்து விட்டாள்.
"சரி சரி இதை பத்தி அப்புறம் பேசிக்கலாம் டேய் மகிழா வீட்டுக்கு போ டா "என்க
அதை கேட்டு சிரித்த மணிவண்ணன் "எப்படி சமாளிக்கறா பார்த்தியா மா "என்று சத்யாவிடம் கேட்க
அவளும் சிரிக்க இதை மல்லிகா கண்டுக் கொள்ளாதவர் போல் தலையை திருப்பிக் கொண்டார்..
அவரை பார்த்த மகிழனுக்கே சிரிப்பு வந்தது அதை காட்டிக் கொள்ளாமல் ரோட்டை பார்க்க
வெகு நாள் கழித்து நிம்மதியாக இருந்தது போல் இருந்தது.
மகிழன் வீட்டுக்குள் செல்ல அவர்களுக்காகவே அந்த நேரத்திலும் மல்லிகாவின் தாயும் அவரின் தம்பிகளும் அவர்களின் மனைவியும் நின்றுக் கொண்டு இருந்தனர்.
அவர்களை பார்த்த மல்லிகா மகிழ்ச்சியுடம் இறங்க மணிவண்ணன் அவரை தொடர்ந்து இறங்கினார்.
மல்லிகாவின் அன்னை சிவகாமி அவரை அணைத்துக் கொள்ள ரொம்ப நாள் கழித்து பார்த்ததினால் சந்தோசமாக இருக்க
இவர்களை பார்த்துக் கொண்டே மகிழனும் சத்யாவும் இறங்கினர்.
மணிவண்ணனை பார்த்து "வாங்க மாப்பிள்ளை "என்று சிவகாமி மரியாதையாக அழைக்க
அவரும் ஏற்றுக் கொண்டது போல் தலையசைய்தார் அவருக்கு என்ன பேசு பேசுவது என்றே தெரியவில்லை.
மல்லிகா அனைவரையும் நலம் விசாரித்தவர் அருகில் நின்றுக் கொண்டு இருந்தா மகிழனை பார்த்து "மா உங்க பேரன் மகிழன் "என்று அறிமுகப் படுத்த
பிறந்ததில் இருந்து இப்போது தான் அவனை பார்ப்பதால் அவனை மேல் இருந்து பார்த்தவர் அவன் கன்னத்தை பிடித்து "அப்படியே ராஜாவாட்டம் இருக்கான் "என்று உணர்ச்சி பொங்க சொல்ல
அவரை பார்த்து சிரித்தான்.
சத்யாவை காட்டி "இது உங்க பேரனோட மனைவி "என்க
அவளை பார்த்தவர் "மஹாலக்ஷ்மி மாதிரியே இருக்க டா "என்க
அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அதை பார்த்தவர்களுக்கு திருப்தி.
மல்லிகா அவரின் முதல் தம்பியின் அருகில் சென்று "இது என்னோட முதல் தம்பி பேரு சேகர் இது என்னோட ரெண்டாவது தம்பி பேரு கண்ணன் "என்று அறிமுக படுத்த மகிழன் எல்லாரையும் பார்த்து சிரித்தான்.
சேகர் அவரின் மனைவி கோதையை அறிமுகப்படுத்த கண்ணன் அவரின் மனைவி ருக்மணியை அறிமுகப்படிய்தினர்.
சிவகாமி தான் "சரி சரி பேசிக் கிட்டே இருந்தா நேரம் போறதே தெரியாது நீங்க போய் ரெஸ்ட் எடுங்க காலையில எல்லார்த்தையும் அறிமுக படுத்தலாம் "என்க
கோதை அவர்களுக்கு ஏற்பாடு செய்து வைத்து இருந்த அறையை காட்டி விட்டு சென்றார்.
மகிழன் ரூம்குள் செல்ல அவன் பின்னால் சத்யாவும் சென்றாள்.
ரூம் நல்லா விசாலமாகவும் அழகாகவும் இருந்தது.
மகிழன் டையேட் ஆக இருப்பதால் அப்படியே சென்று கட்டிலில் படுத்துக் கொள்ள
சத்யா முகம் துடைத்துக் கொண்டு வந்தவள் பாய் ஏதாவது இருக்குதா என்று பார்க்க
ஒன்று இல்லாததால் எங்கு படுப்பது என்று தெரியாமல் நின்றுக் கொண்டு இருக்க ஏற்கார்ட் குளிர் அவள் உடம்பை ஊசியாக குத்தியது.
அவள் நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்தவன் "எதுக்கு நின்னுகிட்டே இருக்க?"என்று கேட்ட
சுத்தி பார்வை விட்டவள் "இல்ல குளிர் ரொம்ப இருக்கு பாய் வேற இல்ல அது தான் எங்க படுக்கறதுனு யோசிக்கிறேன்ங்க "என்க
அவளை பார்க்காமல் "இங்க கிழ படுத்து தூங்க முடியாது கட்டிலயே படுத்து தூங்கு "என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொள்ள
அவன் சொன்னதை கேட்டவள் ஆச்சரியமாக அவன் முகத்தை பார்த்தவள் பின்
"அடியே அவரே ஏதோ பாவம் பார்த்து சொல்லிட்டாரு இப்போ மட்டும் நீ படுக்காம அவரையே பார்த்துகிட்டு இருந்தா அப்புறம் மனசு மாறி கீழயே தூங்க சொல்லிருவாங்க "என்று அவளின் மனம் எச்சரிக்க
கிடைத்த வாய்ப்பை விட மனம் இல்லாமல் வேகமாக சென்று அவனுக்கு அருகில் இடம் விட்டு படுத்துக் கொண்டாள்.
கையை வைத்து முகம் மறைத்து தூங்குபவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள் பின் தூங்கிவிட்டாள்.
காலையில் எழுந்தவளுக்கு காரில் வந்ததால் உடம்பெல்லாம் வலிக்க மெதுவாக எழ பார்த்தவளை ஏதோ தடுக்க
நிமிர்ந்து பார்த்தால் மகிழன் தான் அவள் மீது கை போட்டு தூங்கிக் கொண்டு இருந்தான்.
அதை பார்த்தவள் அவன் முகத்தை பார்க்க அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது தெரிந்து அவன் கையை மெதுவாக அவன் தூக்கம் கலையதவாறு எடுத்து விட்டவள் அவனை பார்த்து சிரித்துவிட்டு குளிக்க சென்றாள்.
இதை எதையும் தெரியாத மகிழன் குளிர்க்கு இதமாக தலையணையை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கினான்.
ஹீட்டர் போட்டு குளித்து வந்தவள் ரெடி ஆகி கீழே செல்ல
அங்கு ஏற்கனவே மல்லிகா கோதையுடனும் ருக்குமணியுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
மல்லிகாவின் முகத்தில் வெகு நாள் கழித்து உறவுகளை சந்தித்த மகிழ்ச்சி தெரிய அதை பார்த்து சிரித்துக் கொண்டு அவர் அருகில் வந்து நிற்க
"அதுக்குள்ள எழுந்துட்டுயா மா "என்று கோதை கேட்கவும்
"ஆமா அத்தை "என்க
மல்லிகா தான் சத்யாவை பார்த்து "அவளை நீ அம்மானு கூப்பிடலாம் டா " என்க
சத்யா கோதையை தயக்கமாக பார்க்க
அவளை பார்த்து சிரித்தவர் "நீ என்ன தரலாமா அப்படியே கூப்பிடலாம் இதுக்கு ஏன் தயக்கப் படற "என்க
"என்னையும் நீ அப்படியே கூப்பிடலாம் "என்று ருக்குமணியும் சொல்ல
அதை பார்த்து சிரித்தவர் "அப்போ ரெண்டு அம்மா இருகாங்க சூப்பர் அப்போ உங்க பொண்ணுக்கு என்ன ஸ்பெஷல் "என்று குறும்பாக கேட்க
அவளை பார்த்து சிரித்த ருக்குமணி "இந்த அம்மாவே உனக்கு ஸ்பெஷல் தான் டா "என்று கேலியாக சொல்ல
அதை கேட்டவள் "சிக்ஸர் அடிச்சிட்டிங்க மா "என்க
இவர்கள் பேசிக் கொள்ளவதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டனர் மல்லிகாவும் கோதையும்.
நேரம் ஆக மணிவண்ணன் கீழே வர அவரை பார்த்து சேகரும் கண்ணனும் "மாமா இங்க வாங்க "என்று அழைக்க
அவர்களுடன் சென்று அமர்ந்து பேச ஆரம்பித்தவர் சிறிது நேரத்திலயே கிளோஸ் ஆகிவிட்டனர்.
இவர்கள் பேசிக் கொள்ளவதை பார்த்து சத்யா எல்லாருக்கும் காபி கொடுக்க
காபி எடுத்துக் கொண்ட சேகர் "நீ ஏன் மா இதை எல்லாம் செய்யற "என்று கேட்க
"நம்ம வீட்ல நா செய்யகூடாதா பா "என்று உரிமையாக கேட்க
அவளின் உரிமை பேச்சில் "நீ செய்யாம வேற யாரு செய்வா டா "என்று வாஞ்சயுடன் சொல்ல
அதை கேட்டவளுக்கு கண் லேசாக கலங்கியது இப்போ தானே முதல் முறையா அப்பா பாசம் எப்படி இருக்கும் என்று தெரிந்துக் கொள்கிறாள்.
இவர்கள் பேசிக் கொண்டு இருக்க
அங்கே வந்தவள் "என்ன என்னை விட்டுட்டு தனியா பாச படம் எடுக்கறிங்க "என்று கேட்டுக் கொண்டே ஒரு பெண் கண்ணன் அருகில் அமர
அவளை பார்த்து சிரித்தவர்கள் "உன்ன விட்டுட்டு ஏதாவது பண்ண முடியுமா?"என்று கேட்டு
"இது என்னோட ரெண்டாவது பொண்ணு நித்யா "என்று கண்ணன் அறிமுகம் செய்ய
அவளை பார்த்து சத்யா சிரிக்க
அதை பார்த்து "அக்கா செம அழகா இருக்கிங்க சிரிக்கும் போது "என்று சொல்ல
அவளை பார்த்து பொய்யாக முறைத்து "சிரிக்கும் போது மட்டும் தான் அழகா இருக்கேனா?"என்க
அவளை பார்த்து "அய்யா அப்போ அக்காவும் நம்ம செட்டு அப்போ ஜாலிஆ இருக்கும் "என்று சத்யாவின் கையை பிடித்துக் கொண்டவள் "நீங்க எப்படி பார்த்தாலும் அழகா இருக்கிங்க "என்க
"நீயும் தான் அழகா இருக்க "என்றாள்.
இவர்கள் பேசிக் கொண்டு இருக்க சேகரின் முத்த மகன் பிரபு இளைய மகன் கார்த்திக் வந்து விட
அவர்களை அறிமுகப் படுத்தி வைத்தனர்.
பிரபுவுக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்க அதற்க்கு தான் மல்லிகாவை அழைத்து இருந்தனர்.
மகிழன் எழுந்தவன் அருகில் சத்யா இல்லாததை பார்த்து கீழே போயிருப்பாள் என்று எண்ணி குளித்து ரெடி ஆகி கீழே செல்ல
சரியாக அந்த நேரம் நித்யாவின் அக்கா சந்தியா கீழே வரும் மகிழனை பார்த்து "மாமா "என்று சத்தம் போட்டு அழைக்க
அவளை யார்என்று தெரியாதவன் மல்லிகாவை பார்க்க "கண்ணன் மாமாவோட பொண்ணு டா "என்று சொன்னதும் அவளை பார்த்து சிரித்தான்.
அவனின் கையை பிடித்துக் கொண்டவள் "செமயா ஹீரோ மாதிரி இருக்கிங்க மாமா "என்க
அவளை பார்த்து சிரித்தவன் நிமிர்ந்து பார்க்க
அங்கே நெஞ்சில் கை வைத்து நிற்கும் சத்யாதான் தெரிந்தாள் அவள் எதற்காக அப்படி நிற்கிறாள் என்று புரியாமல் பார்த்தவன் பின் சந்தியாவின் பக்கம் பார்வையை திருப்பினான்.
நித்யாவுடன் பேசிக் கொண்டு இருந்தா" மாமா "என்று சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க
அங்கே சந்தியா மகிழனின் கையை பிடிப்பதை பார்த்து நெஞ்சில் கை வைத்துக் கொண்டுவள் "அடியே அது என் ஆளு "என்று மனதுக்குள் சத்தம் போட்டாள்.
சந்தியா மகிழனின் கையை உரிமையுடன் பிடித்து இருப்பதை பார்த்து குழந்தை தன் கை பொம்மையை வேறு ஒருவர் எடுத்துக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது
சத்யாவின் கண்ணில் லேசாக பொறாமை எட்டி பார்த்ததோ!...
நிமிர்வாள்….
சென்னை ஹைவேய்ஸ் வழியாக கார் சென்றுக் கொண்டு இருக்க
மல்லிகா கேட்டுக் கொண்டதால் மகிழன் ஏசி போடமல் விண்டோஸ் திறந்து விட காற்று மோதி சத்யாவுக்கு ஒருவித சிலிரப்பை தர வேடிக்கை பார்த்து வெளியே ரசித்துக் கொண்டு இருந்தாள் .
பின்னால் அமர்ந்து இருந்த மல்லிகா ஒருவித உணர்ச்சியில் இருந்தார்
மணிவண்ணன் அவரின் கைகளை பிடித்துக் கொண்டு ஆறுதலாக இருந்தார்.
வண்டி ஓட்டிக் கொண்டு இருந்தவன் "என்னமா திடீருனு?"என்று கேள்வி எழுப்ப
சத்யாவுக்கும் அதே கேள்வி மனதுக்குள் இருந்தது.
மகிழன் கேட்டதும் மல்லிவாவுக்கு பழைய நினைவுகள் வர கண்கலங்கியவர் "எங்க அப்பா என்ன கூப்பிட்டு இருகாங்க டா மகிழு "என்க
அதைக் கேட்டவன் ஆச்சரியமாக திரும்பி பார்க்க
அவரும் சிரித்துக் கொண்டே "ஆமாம் "என்க
இவனுக்கு சந்தோசமாக இருந்தது இத்தனை நாள் மல்லிகா சந்தோசமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள்ள இத்தனை நினைத்து வேதனைப்படுவது மகிழனுக்கு நன்றாகவே தெரியும் இப்போது தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
அருகில் அமர்ந்து இருந்த சத்யாவுக்கு தான் கொரியன் சீரிஸ் பார்ப்பது போல இருந்தது எதை பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று புரியாமல் இருந்தாள்.
அவளின் முகத்தை பார்த்து அவளுக்கு ஒன்றும்புரிய வில்லை என்று தெரிந்து மல்லிகா அவர் வாழ்க்கையில் நடந்ததை கூறினார்.
மல்லிகாவின் பிறந்த ஊரு ஏற்கார்ட் தான்.
அவரின் குடும்பத்தில் அவர் தான் மூத்தபிள்ளை இவருக்கு பின் இரண்டு பசங்க
முதல் பெண் என்பதால் இவர் வீட்டில் ரொம்ப செல்லம் கேட்டது எல்லாம் கிடைக்கும் அப்படி தான் இவர் காலேஜ் படிப்பதற்கு சென்னை போக வேண்டும் என்று ஆசைப்பட்டு அடம் பிடித்துக் கொண்டு வந்தார்.
வந்த இடத்தில் மணிவண்ணனை பார்த்து பிடித்து விட நாளாக நாளாக இருவருக்கும் நட்பை தாண்டி காதல் வந்தது.
மணிவண்ணன்க்கு அம்மா அப்பா இல்லை தாத்தா பாட்டி மட்டும் தான் கொடைக்கானலில் இருந்தனர்.
படிப்பை முடித்துக் கொண்டு வரும் போது மல்லிகா மணிவண்ணனையும் கூட்டிக் கொண்டு செல்ல
அதை பார்த்த அவரின் அப்பாவிற்கு கோவம் வந்து அவரை மொத்தமாக தண்ணி தெளித்து விட்டார் மனம்உடைந்து போன மல்லிகாவுக்கு மணிவண்ணன் தான் ஆறுதலாக இருந்தார்.
காலம் மாற அவரின் அப்பா மனதும் மாறிவிடும் என்று நினைக்க எதற்கும் மாறவில்லை மகிழன் பிறந்ததை சொல்ல அப்போதும் ஏற்றுக்கொள்ள வில்லை மகிழனின் திருமணத்தை சொல்லும் போதும் கூட வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளவில்லை.
இனி தனக்கு தாய்வீடே கிடையாது என்று மல்லிகா நினைத்துக் கொண்டு இருக்கும் போது தான் அவரின் தம்பி சேகர் அழைத்து குடும்பத்தோடு வருமாறு சொல்ல சந்தோஷத்துடன் கிளம்பிவிட்டனர்.
மல்லிகா மகிழ்ச்சியுடன் சொல்ல அதை கேட்ட சத்யாவிற்கு "சே காதலுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு இருகாங்க ஆனா இந்த காதல் ஜோடிக்கு பிறந்தவன் மட்டும் எப்படி இப்படி இருக்கான் "என்று சந்தேகம் எழ
அவனை பார்த்துக் கொண்டு வந்தாள்.
அவள் பார்ப்பது தெரிந்தாலும் அவளை கண்டுக் கொள்ளாமல் வர அதை பார்த்தவள் "ரொம்ப தான் " என்று நினைத்து வெளியே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
இரவு சாப்பிட்டு விட்டு மீண்டும் மகிழன் கார் எடுக்க
மல்லிகாவும் மணிவண்ணனும் தூங்கி விட்டனர்.
மகிழன் ரொம்ப நேரம் கார் ஓட்டுவதை பார்த்து "டையேட் ஆ இருக்க நா கார் ஓட்டட்டுமா "என்று ஆசையாக கேட்க
அவளை திரும்பி பார்த்தவன் "கார் ஓட்ட தெரியுமா?"என்க
இவ்ளோ நாள் பேசாமல் இருந்தான் இப்போது பேசவும் மகிழ்ச்சி ஆனவள் "ம்ம் ஓட்டுவேன் ஆனா உங்க அளவுக்கு சூப்பர்ஆ ஓட்ட தெரியாது சுமாரா ஓட்டுவேன் "என்று அவனுக்கு ஐஸ் வைக்க
அதை கண்டுக் கொள்ளாதவன் காரை ஓரமாக நிறுத்தி இறங்கியவன் அவளை ஓட்ட சொல்ல
அதை கேட்டு உற்சாகமானவள் "நிஜமாவா நா டிரைவ் பண்ணட்டுமா?"என்க
"ம்ம் "என சொல்ல
அதை கேட்டவள் சந்தோசமாக கார் டிரைவ் பண்ண முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் பின் நன்றாகவே டிரைவ் செய்தாள்.
"எப்போ கார் டிரைவ் பண்ண கத்துக்கிட்ட"என்று கேட்க
"பிரசன்னாவும் சரணும் அவங்க கார்ல சொல்லிக் கொடுத்தாங்க "என்று ரோட்டை பார்த்துக் கொண்டே சொல்ல
அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்து பார்த்தவன் பின் அவளுக்கு வழி சொல்லிக் கொண்டு வந்தான்.
பாதி வழி அவளும் பாதி வழி அவனும் டிரைவ் செய்து வர
எக்கார்ட் வந்ததும் அவளை பார்த்து "நல்லா டிரைவ் பண்ற சென்னைக்கு போனதும் லைசென்ஸ் எடுத்தரலாம் "என்க
அதை கேட்டவள் சந்தோசமாக தலையாட்ட அதன்பின் அவளிடம் பேச வில்லை ஆனால் அவளுக்கு அவன் பேசியதே போதும் என்று கூகிள்மேப் பார்த்து மல்லிகாவின் வீட்டின் அருகே வந்தது.
மகிழன் தூங்கிக் கொண்டு இருந்தா மல்லிகாவையும் மணிவண்ணனையும் எழுப்பி விட
அப்போதும் தான் சுத்தி பார்த்தவர் "ஏற்கார்ட் வந்துட்டோமா மகிழா இவ்ளோ தூரம் நீயே டிரைவ் பண்ணிக்கிட்டு வந்தியா என்னை எழுப்பி விட்டு இருக்கலாம்ல நா டிரைவ் பண்ணி இருப்பேன் "என்று மணிவண்ணன் குறைப்பட
அவரை திரும்பி பார்க்காமலே "இவ்ளோ தூரம் நா மட்டுமே டிரைவ் பண்ணிக்கிட்டு வரலபா "என்க
அவனை அவர்கள் குழப்பமாக பார்க்கவும் "சத்யா டிரைவ் பண்ணிக்கிட்டு வந்தா பா "என்க
அவளை ஆச்சரியமாக பார்த்த மணிவண்ணன் "உனக்கு டிரைவ் பண்ண தெரியுமா டா"என்க
அவளும் சிரித்துக் கொண்டே தலையாட்ட
சத்யாவை பார்த்த மல்லிகா "அப்போ எனக்கு சொல்லிக் குடு "என்க
அவரை பார்த்து மணிவண்ணன் "இவ்ளோ நாள் நா சொல்லிக் குடுக்கும் போது ஓட்டமா உன் மருமகள் சொல்லி தந்தா மட்டும் தான் ஓட்டுவியா?"என்க
அவர் கேட்டதுக்கு பதில் சொல்ல தெரியாமல் திருதிருவென முழிக்க
அதை பார்த்த சத்யா சிரித்து விட்டாள்.
"சரி சரி இதை பத்தி அப்புறம் பேசிக்கலாம் டேய் மகிழா வீட்டுக்கு போ டா "என்க
அதை கேட்டு சிரித்த மணிவண்ணன் "எப்படி சமாளிக்கறா பார்த்தியா மா "என்று சத்யாவிடம் கேட்க
அவளும் சிரிக்க இதை மல்லிகா கண்டுக் கொள்ளாதவர் போல் தலையை திருப்பிக் கொண்டார்..
அவரை பார்த்த மகிழனுக்கே சிரிப்பு வந்தது அதை காட்டிக் கொள்ளாமல் ரோட்டை பார்க்க
வெகு நாள் கழித்து நிம்மதியாக இருந்தது போல் இருந்தது.
மகிழன் வீட்டுக்குள் செல்ல அவர்களுக்காகவே அந்த நேரத்திலும் மல்லிகாவின் தாயும் அவரின் தம்பிகளும் அவர்களின் மனைவியும் நின்றுக் கொண்டு இருந்தனர்.
அவர்களை பார்த்த மல்லிகா மகிழ்ச்சியுடம் இறங்க மணிவண்ணன் அவரை தொடர்ந்து இறங்கினார்.
மல்லிகாவின் அன்னை சிவகாமி அவரை அணைத்துக் கொள்ள ரொம்ப நாள் கழித்து பார்த்ததினால் சந்தோசமாக இருக்க
இவர்களை பார்த்துக் கொண்டே மகிழனும் சத்யாவும் இறங்கினர்.
மணிவண்ணனை பார்த்து "வாங்க மாப்பிள்ளை "என்று சிவகாமி மரியாதையாக அழைக்க
அவரும் ஏற்றுக் கொண்டது போல் தலையசைய்தார் அவருக்கு என்ன பேசு பேசுவது என்றே தெரியவில்லை.
மல்லிகா அனைவரையும் நலம் விசாரித்தவர் அருகில் நின்றுக் கொண்டு இருந்தா மகிழனை பார்த்து "மா உங்க பேரன் மகிழன் "என்று அறிமுகப் படுத்த
பிறந்ததில் இருந்து இப்போது தான் அவனை பார்ப்பதால் அவனை மேல் இருந்து பார்த்தவர் அவன் கன்னத்தை பிடித்து "அப்படியே ராஜாவாட்டம் இருக்கான் "என்று உணர்ச்சி பொங்க சொல்ல
அவரை பார்த்து சிரித்தான்.
சத்யாவை காட்டி "இது உங்க பேரனோட மனைவி "என்க
அவளை பார்த்தவர் "மஹாலக்ஷ்மி மாதிரியே இருக்க டா "என்க
அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க அதை பார்த்தவர்களுக்கு திருப்தி.
மல்லிகா அவரின் முதல் தம்பியின் அருகில் சென்று "இது என்னோட முதல் தம்பி பேரு சேகர் இது என்னோட ரெண்டாவது தம்பி பேரு கண்ணன் "என்று அறிமுக படுத்த மகிழன் எல்லாரையும் பார்த்து சிரித்தான்.
சேகர் அவரின் மனைவி கோதையை அறிமுகப்படுத்த கண்ணன் அவரின் மனைவி ருக்மணியை அறிமுகப்படிய்தினர்.
சிவகாமி தான் "சரி சரி பேசிக் கிட்டே இருந்தா நேரம் போறதே தெரியாது நீங்க போய் ரெஸ்ட் எடுங்க காலையில எல்லார்த்தையும் அறிமுக படுத்தலாம் "என்க
கோதை அவர்களுக்கு ஏற்பாடு செய்து வைத்து இருந்த அறையை காட்டி விட்டு சென்றார்.
மகிழன் ரூம்குள் செல்ல அவன் பின்னால் சத்யாவும் சென்றாள்.
ரூம் நல்லா விசாலமாகவும் அழகாகவும் இருந்தது.
மகிழன் டையேட் ஆக இருப்பதால் அப்படியே சென்று கட்டிலில் படுத்துக் கொள்ள
சத்யா முகம் துடைத்துக் கொண்டு வந்தவள் பாய் ஏதாவது இருக்குதா என்று பார்க்க
ஒன்று இல்லாததால் எங்கு படுப்பது என்று தெரியாமல் நின்றுக் கொண்டு இருக்க ஏற்கார்ட் குளிர் அவள் உடம்பை ஊசியாக குத்தியது.
அவள் நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்தவன் "எதுக்கு நின்னுகிட்டே இருக்க?"என்று கேட்ட
சுத்தி பார்வை விட்டவள் "இல்ல குளிர் ரொம்ப இருக்கு பாய் வேற இல்ல அது தான் எங்க படுக்கறதுனு யோசிக்கிறேன்ங்க "என்க
அவளை பார்க்காமல் "இங்க கிழ படுத்து தூங்க முடியாது கட்டிலயே படுத்து தூங்கு "என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொள்ள
அவன் சொன்னதை கேட்டவள் ஆச்சரியமாக அவன் முகத்தை பார்த்தவள் பின்
"அடியே அவரே ஏதோ பாவம் பார்த்து சொல்லிட்டாரு இப்போ மட்டும் நீ படுக்காம அவரையே பார்த்துகிட்டு இருந்தா அப்புறம் மனசு மாறி கீழயே தூங்க சொல்லிருவாங்க "என்று அவளின் மனம் எச்சரிக்க
கிடைத்த வாய்ப்பை விட மனம் இல்லாமல் வேகமாக சென்று அவனுக்கு அருகில் இடம் விட்டு படுத்துக் கொண்டாள்.
கையை வைத்து முகம் மறைத்து தூங்குபவனையே பார்த்துக் கொண்டு இருந்தவள் பின் தூங்கிவிட்டாள்.
காலையில் எழுந்தவளுக்கு காரில் வந்ததால் உடம்பெல்லாம் வலிக்க மெதுவாக எழ பார்த்தவளை ஏதோ தடுக்க
நிமிர்ந்து பார்த்தால் மகிழன் தான் அவள் மீது கை போட்டு தூங்கிக் கொண்டு இருந்தான்.
அதை பார்த்தவள் அவன் முகத்தை பார்க்க அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது தெரிந்து அவன் கையை மெதுவாக அவன் தூக்கம் கலையதவாறு எடுத்து விட்டவள் அவனை பார்த்து சிரித்துவிட்டு குளிக்க சென்றாள்.
இதை எதையும் தெரியாத மகிழன் குளிர்க்கு இதமாக தலையணையை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கினான்.
ஹீட்டர் போட்டு குளித்து வந்தவள் ரெடி ஆகி கீழே செல்ல
அங்கு ஏற்கனவே மல்லிகா கோதையுடனும் ருக்குமணியுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
மல்லிகாவின் முகத்தில் வெகு நாள் கழித்து உறவுகளை சந்தித்த மகிழ்ச்சி தெரிய அதை பார்த்து சிரித்துக் கொண்டு அவர் அருகில் வந்து நிற்க
"அதுக்குள்ள எழுந்துட்டுயா மா "என்று கோதை கேட்கவும்
"ஆமா அத்தை "என்க
மல்லிகா தான் சத்யாவை பார்த்து "அவளை நீ அம்மானு கூப்பிடலாம் டா " என்க
சத்யா கோதையை தயக்கமாக பார்க்க
அவளை பார்த்து சிரித்தவர் "நீ என்ன தரலாமா அப்படியே கூப்பிடலாம் இதுக்கு ஏன் தயக்கப் படற "என்க
"என்னையும் நீ அப்படியே கூப்பிடலாம் "என்று ருக்குமணியும் சொல்ல
அதை பார்த்து சிரித்தவர் "அப்போ ரெண்டு அம்மா இருகாங்க சூப்பர் அப்போ உங்க பொண்ணுக்கு என்ன ஸ்பெஷல் "என்று குறும்பாக கேட்க
அவளை பார்த்து சிரித்த ருக்குமணி "இந்த அம்மாவே உனக்கு ஸ்பெஷல் தான் டா "என்று கேலியாக சொல்ல
அதை கேட்டவள் "சிக்ஸர் அடிச்சிட்டிங்க மா "என்க
இவர்கள் பேசிக் கொள்ளவதை சிரிப்புடன் பார்த்துக் கொண்டனர் மல்லிகாவும் கோதையும்.
நேரம் ஆக மணிவண்ணன் கீழே வர அவரை பார்த்து சேகரும் கண்ணனும் "மாமா இங்க வாங்க "என்று அழைக்க
அவர்களுடன் சென்று அமர்ந்து பேச ஆரம்பித்தவர் சிறிது நேரத்திலயே கிளோஸ் ஆகிவிட்டனர்.
இவர்கள் பேசிக் கொள்ளவதை பார்த்து சத்யா எல்லாருக்கும் காபி கொடுக்க
காபி எடுத்துக் கொண்ட சேகர் "நீ ஏன் மா இதை எல்லாம் செய்யற "என்று கேட்க
"நம்ம வீட்ல நா செய்யகூடாதா பா "என்று உரிமையாக கேட்க
அவளின் உரிமை பேச்சில் "நீ செய்யாம வேற யாரு செய்வா டா "என்று வாஞ்சயுடன் சொல்ல
அதை கேட்டவளுக்கு கண் லேசாக கலங்கியது இப்போ தானே முதல் முறையா அப்பா பாசம் எப்படி இருக்கும் என்று தெரிந்துக் கொள்கிறாள்.
இவர்கள் பேசிக் கொண்டு இருக்க
அங்கே வந்தவள் "என்ன என்னை விட்டுட்டு தனியா பாச படம் எடுக்கறிங்க "என்று கேட்டுக் கொண்டே ஒரு பெண் கண்ணன் அருகில் அமர
அவளை பார்த்து சிரித்தவர்கள் "உன்ன விட்டுட்டு ஏதாவது பண்ண முடியுமா?"என்று கேட்டு
"இது என்னோட ரெண்டாவது பொண்ணு நித்யா "என்று கண்ணன் அறிமுகம் செய்ய
அவளை பார்த்து சத்யா சிரிக்க
அதை பார்த்து "அக்கா செம அழகா இருக்கிங்க சிரிக்கும் போது "என்று சொல்ல
அவளை பார்த்து பொய்யாக முறைத்து "சிரிக்கும் போது மட்டும் தான் அழகா இருக்கேனா?"என்க
அவளை பார்த்து "அய்யா அப்போ அக்காவும் நம்ம செட்டு அப்போ ஜாலிஆ இருக்கும் "என்று சத்யாவின் கையை பிடித்துக் கொண்டவள் "நீங்க எப்படி பார்த்தாலும் அழகா இருக்கிங்க "என்க
"நீயும் தான் அழகா இருக்க "என்றாள்.
இவர்கள் பேசிக் கொண்டு இருக்க சேகரின் முத்த மகன் பிரபு இளைய மகன் கார்த்திக் வந்து விட
அவர்களை அறிமுகப் படுத்தி வைத்தனர்.
பிரபுவுக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்க அதற்க்கு தான் மல்லிகாவை அழைத்து இருந்தனர்.
மகிழன் எழுந்தவன் அருகில் சத்யா இல்லாததை பார்த்து கீழே போயிருப்பாள் என்று எண்ணி குளித்து ரெடி ஆகி கீழே செல்ல
சரியாக அந்த நேரம் நித்யாவின் அக்கா சந்தியா கீழே வரும் மகிழனை பார்த்து "மாமா "என்று சத்தம் போட்டு அழைக்க
அவளை யார்என்று தெரியாதவன் மல்லிகாவை பார்க்க "கண்ணன் மாமாவோட பொண்ணு டா "என்று சொன்னதும் அவளை பார்த்து சிரித்தான்.
அவனின் கையை பிடித்துக் கொண்டவள் "செமயா ஹீரோ மாதிரி இருக்கிங்க மாமா "என்க
அவளை பார்த்து சிரித்தவன் நிமிர்ந்து பார்க்க
அங்கே நெஞ்சில் கை வைத்து நிற்கும் சத்யாதான் தெரிந்தாள் அவள் எதற்காக அப்படி நிற்கிறாள் என்று புரியாமல் பார்த்தவன் பின் சந்தியாவின் பக்கம் பார்வையை திருப்பினான்.
நித்யாவுடன் பேசிக் கொண்டு இருந்தா" மாமா "என்று சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்க
அங்கே சந்தியா மகிழனின் கையை பிடிப்பதை பார்த்து நெஞ்சில் கை வைத்துக் கொண்டுவள் "அடியே அது என் ஆளு "என்று மனதுக்குள் சத்தம் போட்டாள்.
சந்தியா மகிழனின் கையை உரிமையுடன் பிடித்து இருப்பதை பார்த்து குழந்தை தன் கை பொம்மையை வேறு ஒருவர் எடுத்துக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது
சத்யாவின் கண்ணில் லேசாக பொறாமை எட்டி பார்த்ததோ!...
நிமிர்வாள்….