அத்தியாயம் 10
கேமரா மேன் கீழே சென்றதும்.. இவள் சவியை பார்க்கலாம் என்று அவள் அமர்ந்த சோபாவுக்கு சென்றாள்… ஆனால் அவள் அங்கே இருக்கவில்லை… அத்தான் வந்துட்டாங்க போல என்று முனு முனுத்தவாறு சரி கீழ செல்லலாம் என திருப்பினாள்…
அந்நேரம் தேவ் அவள் முன்னே முறைத்தவாரு வந்து நின்னான்…
“யாத்தே”, என்று பின்னால் தள்ளி நிற்க முற்பட…
அவள் நேரத்திற்கு சோபாவும் தடுத்து விழ பார்க்க.. அவன் அவள் முழங்கை பிடித்து “ஏய், பார்த்து” என்று அவளை பிடித்து நிறுத்தினான்…
அவளை அவள் நிதானபடுத்திகொள்ள அவகாசம் கொடுத்தவன்…
அவளும் தன்னை கொஞ்சம் நிதானபடுத்தி அவனை ஏறிட்டு பார்த்தாள்….
அவனோ “சோ, அம்மா உன்கிட்ட பேசிருக்காங்க ரைட்”…
அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை… அவள் கண்கள் முட்டை போல விரிந்து அவனை பார்த்தது…. ஆனால் பதில் சொல்ல அவள் நினைக்கவில்லை…..
அவள் முட்டை கண்களை பார்த்தவன்… “இதோ, பாரு உனக்கு கடைசியா ஒரு வாய்ப்பு தரேன்… யோசி.. யோசிச்சு நாங்க கிளம்புறதுக்குள்ள நல்ல முடிவா எடு”… என்று கடு கடுவென கூறினான்….
“நான் ஏற்கனவே யோசிச்சு தான் முடிவு எடுத்தேன்… எடுத்த முடிவு உறுதியானது, அத மாத்துறதா இல்லை… “
அவள் அப்படி சொன்னது… அவனுக்கு கோவத்துல என்ன பண்ணுகிறோம் என யோசிக்காமல் அவளை தோள்களை பிடித்து இழுத்து அவன் இரு கால்களுக்கு இடையே நிறுத்தி “என்னத்த யோசிச்ச!! ம்ம்ம்…” என்று கர்ஜித்தவாறு “என்னை கல்யாணம் பண்ணா என்னடி கிடைக்கும் உனக்கு.. ஹ்ம்ம்… சொல்லு… உங்க பிறவிலாம் உடம்புக்கு தானே அலைவீங்க… அது இல்லனா அடுத்த ஆள தேடி போகிற ஜென்மம் தானே ” என்று கோபமும் இகழ்ச்சியுமாய் கூறினான்…
அவன் சொன்னதை கேட்டதும் அந்த வளர்ந்து கெட்டவணை குனிய வச்சு “நங்கு, நங்குனு நல்லா நாலு கொட்டணும்” போல இருந்தது வசுவுக்கு…. இரு டா, ஒரு பொண்ணு பண்ணதுக்கு எல்லாரையும் குறை சொல்ற, உனக்கு நான் பாடமே நடத்துறேன்…என்று மனதிற்குள் சவால் விட்டுக்கொண்டாள்…
அவன் பிடித்த பிடி வேற இரும்பு பிடியாக மிகவும் வலித்தது.. ஆனால் அதை காட்டாமல் அவனுக்கு பதில் பார்வை பார்த்தாள்…
“சரி, சொல்லு.. என்னத்த பார்த்து என்ன புடிச்சிருக்குனு சொன்ன” என்று இன்னுமும் அவள் தோள்களை விடாமல் கேட்டான்…
ஹையோ, வலிக்குதே…விடேன் டா… பாவி….என்று மனதிற்குள் பேசியவாரு… “எனக்கு உங்கள விட உங்க அம்மாவை ரொம்ப புடிச்சிருக்கு”…
இதை கேட்டதும் அவன் கைகள் கொஞ்சம் தளர்ந்தது… அவன் விழிகள் ஆச்சிரியத்தை பிரதிபலித்தது……
“ஆனா, நீ கட்டிக்க போறது என்னை…” என்று மறுமொழி சொன்னான்…
“பையன பிடிக்கிறது விட, பேமிலி பிடிச்சாலும் கட்டிக்கலாம்னு தோணுச்சு”…
“உன் லாஜிக் சகிக்கல..” என்று அவன் சொன்னாலும்…
ஒரு வகையில் அவன் மனம் குளிர்ந்தது… அவன் தம்பி பொண்டாட்டி அவ்ளோவா அவன் அம்மாவோட ஒட்ட மாட்டாள்…
இரண்டும் ஆண் பிள்ளைகள் என்பதால்… மருமகளை மகளாய் பாவிக்கும் நினைப்பு உள்ளவர் தான் ஜெயந்தி…
ஆனால் அவன் தம்பி பொண்டாட்டி தன்யாவுக்கு, தன் கணவன்.. தன் பிள்ளை.. தனக்கு மட்டும் என ரொம்ப இறங்கி பழகமாட்டாள்…
அந்த குறை ஜெயாவுக்கும் உண்டு… ஏனோ அந்த குறையை இவள் தீர்த்து வைப்பாள் என்று அவன் உள்மனம் கூவியது…
இதோ பாரு… நான் திரும்பவும் நினைவு படுத்துறேன்… “என்ன கல்யாணம் பண்ணா உனக்குதான் ரொம்ப கஷ்டம்…என்கிட்டே எதையும் எதிர்பார்க்க கூடாது” அந்த எதையும் என்பதை அழுத்தமாவே கூறினான்…
அவள் சரி என்று தலையை மட்டும் ஆட்டிக் கொண்டவளின் அலைபேசி அடிக்கவே… எடுத்து பார்த்தாள்… சவி எனவும்… சொல்லு சவி….
“ஹே, என்ன அங்கேயே ரெண்டு பேரும் குடும்பம் நடத்த ஆரம்பிச்சுட்டீங்களா?”
“சவிவி… செருப்பை இங்க இருந்து தூக்கி போட்ட உன் மண்டை மேல வந்து விழும் பாத்துக்கோ”…என்று அவனுக்கு கேட்காதவாரு மிரட்டினால்…
“அம்மாடி, நான் பயந்துட்டேன்” என்று நக்கலடித்துவிட்டு… வசு, அண்ணா பேமிலி எல்லாரும் கிளம்ப ரெடி ஆகிட்டாங்க…உங்கள கூப்டு வர சொன்னாங்க… சரி, நான் தான் நீங்க எந்த நிலைமைல இருப்பீங்களோனு போன் பண்ணேன்.. என்று மறுபடியும் வெறுப்பேத்தினால்….
சவி…. என்று பல்லைக்கடித்தவாரு..மெதுவா கத்தி… வை வரோம்.. என்று போனை ஆப் பண்ணினாள்….
உங்க வீட்ல கிளம்ப போறாங்களாம்… உங்கள கூப்பிடறாங்க… வாங்க போலாம் என முன்னே நடந்தாள்….
அவனும் அவள் பின்னே நடந்தான்…
முன்னே நடக்கும் அவளை பார்த்தான்… அவள் நடக்கும் அன்ன நடை, அவளின் பின்னழகில் பட்டு ஆடும் அந்த நீளமான பின்னால்… அவனை கவர்ந்து இழுத்தது…..
அப்டி கவர்ந்து இழுப்பதும் புடிக்கவில்லை…
உடனே அவன் “ஏய், நில்லு”…
அவள் நின்று திரும்பி பார்த்தாள்..அது என்ன ஏய் என்று நினைத்தாலும்…கேட்க தோணவில்லை…
“நீ பின்னே வா, நான் முதல்ல இறங்கிறேன்..” எனவும்…
அவள் வழிவிட்டு நின்றாள்… என்ன தான் வழி விட்டாலும்.. அது குறுகிய படிக்கட்டு.. இடிக்காம செல்ல முடியாது…
அவன் உரசாமல் சென்றுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் சென்றான்.. இருந்தாலும் அவள் என்னவென அறியும் முன்பே.. அவள் முன் தேகம் முழுவதும் அவனோடு உரசி கொண்டு விட்டது…
உரசியதும், அவள் கண்களை இருக்கமாய் மூடிவிட்டாள்….. அவனுக்கும் ஷாக் அடித்த உணர்வு… அவள் மென்மைகள் தன் மீது படர்ந்ததால்…
ஆனாலும் அவன் அந்த உணர்வுக்கு மதிப்பும் அளிக்காமலும், அவளையும் பார்க்காமலும் கடந்து சென்று விட்டான்..
இவளும் தன்னை சுத்தரித்து கொண்டு கீழே இறங்கி சென்றாள்…
அங்கே எல்லாரும் தயாராக இருக்க… மரகதம் அவளை பார்த்து பக்கத்தில் வந்து “ராசாத்தி, நாங்க கிளம்புறோம்.. நல்லா சாப்பிட்டு பத்திரமா இரு… சரியா” என்று அவள் நெத்தியில் ஒரு முத்தம் வைத்து கன்னத்தை வருடினார்…
ஜெயாவும் கிட்ட வந்து அவள் கையை பிடித்து, “வசும்மா, நாங்க கிளம்புறோம்… ரெண்டு மூணு தேதி எல்லாரும் சேர்ந்து பார்த்து வச்சிருக்கோம்.. உனக்கு எது தோதுபடும்னு பார்த்து சொல்லு… சரியா… சீக்கிரமா உன்ன வந்து கூட்டிட்டு போறோம்.” என்றவாரு அவளை அணைத்தார்….
அதை பார்த்த தான்யா “ஹ்ம்ம், உங்க அம்மா இப்டி என்ன ஒரு நாளும் பண்ணதில்லையே.. புது மருமகள் பவுசுல அதான்…” என்று பிரசாத்திடம் முறையிட்டாள்….
“ஏய், எங்க அம்மா உன்ட பாசமா வந்தப்போலா எட்ட நின்னது நீதானே..ஏதும் உன்ட கேக்காததுனால நா கவனிக்கலனு கிடையாது புரிஞ்சுதா”…
இவன் இப்டி சொல்லவும், அவள் வாயை மூடிக்கொண்டாள்…..
ஜெயா குடும்பம் எல்லாரும் எல்லாரிடமும் விடை பெற்றார்கள்..
தேவ் எல்லாரிடமும் விடை பெற்றான் தான்.. ஆனால் இவளை ஏற்எடுத்தும் பார்க்கவில்லை..
அவன் டிரைவ் பண்ணுவதால், முதலில் போய் வண்டியை எடுத்து அவள் வீட்டுக்கு வாசல் முன்பு நிப்பாட்டினான்…
வசுவும், அவள் குடும்பமும்.. வாசலில் வந்து நின்றார்கள்..
அவன் அவளிடம் வேணும் என்றே தான் போய்ட்டு வரேனு சொல்லவில்லை…
உனக்கும் எனக்கும் என்ன என்று நிலை நிறுத்தவே அவன் அப்படி பண்ணினான்…..
எல்லாரும் ஏறினர், அவன் வண்டியை கிளப்பியதும், அவளை பார்த்தான்.. அவளை பார்த்ததும், அவன் தலை தானாகவே போய்ட்டு வரேன் என்று அசைந்தது… உடனே அவன் வண்டியையும் எடுத்துவிட்டான்…
அவன் தன்னிடம் ஏதும் சொல்லவில்லை என சின்ன சுணக்கம் அவளுக்கு இருந்தது… பேய்க்கு வாழ்க்கை பட்டால் முருங்கை மரம் தொங்கி தானே ஆகணும் என்று தன்னை தேற்றி கொண்ட சமயம்… அவன் பண்ணின சின்ன தலை அசைப்பு…
அவள் சுணக்கத்தை முற்றிலும் எடுத்துபோட்டது….!!!
கேமரா மேன் கீழே சென்றதும்.. இவள் சவியை பார்க்கலாம் என்று அவள் அமர்ந்த சோபாவுக்கு சென்றாள்… ஆனால் அவள் அங்கே இருக்கவில்லை… அத்தான் வந்துட்டாங்க போல என்று முனு முனுத்தவாறு சரி கீழ செல்லலாம் என திருப்பினாள்…
அந்நேரம் தேவ் அவள் முன்னே முறைத்தவாரு வந்து நின்னான்…
“யாத்தே”, என்று பின்னால் தள்ளி நிற்க முற்பட…
அவள் நேரத்திற்கு சோபாவும் தடுத்து விழ பார்க்க.. அவன் அவள் முழங்கை பிடித்து “ஏய், பார்த்து” என்று அவளை பிடித்து நிறுத்தினான்…
அவளை அவள் நிதானபடுத்திகொள்ள அவகாசம் கொடுத்தவன்…
அவளும் தன்னை கொஞ்சம் நிதானபடுத்தி அவனை ஏறிட்டு பார்த்தாள்….
அவனோ “சோ, அம்மா உன்கிட்ட பேசிருக்காங்க ரைட்”…
அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை… அவள் கண்கள் முட்டை போல விரிந்து அவனை பார்த்தது…. ஆனால் பதில் சொல்ல அவள் நினைக்கவில்லை…..
அவள் முட்டை கண்களை பார்த்தவன்… “இதோ, பாரு உனக்கு கடைசியா ஒரு வாய்ப்பு தரேன்… யோசி.. யோசிச்சு நாங்க கிளம்புறதுக்குள்ள நல்ல முடிவா எடு”… என்று கடு கடுவென கூறினான்….
“நான் ஏற்கனவே யோசிச்சு தான் முடிவு எடுத்தேன்… எடுத்த முடிவு உறுதியானது, அத மாத்துறதா இல்லை… “
அவள் அப்படி சொன்னது… அவனுக்கு கோவத்துல என்ன பண்ணுகிறோம் என யோசிக்காமல் அவளை தோள்களை பிடித்து இழுத்து அவன் இரு கால்களுக்கு இடையே நிறுத்தி “என்னத்த யோசிச்ச!! ம்ம்ம்…” என்று கர்ஜித்தவாறு “என்னை கல்யாணம் பண்ணா என்னடி கிடைக்கும் உனக்கு.. ஹ்ம்ம்… சொல்லு… உங்க பிறவிலாம் உடம்புக்கு தானே அலைவீங்க… அது இல்லனா அடுத்த ஆள தேடி போகிற ஜென்மம் தானே ” என்று கோபமும் இகழ்ச்சியுமாய் கூறினான்…
அவன் சொன்னதை கேட்டதும் அந்த வளர்ந்து கெட்டவணை குனிய வச்சு “நங்கு, நங்குனு நல்லா நாலு கொட்டணும்” போல இருந்தது வசுவுக்கு…. இரு டா, ஒரு பொண்ணு பண்ணதுக்கு எல்லாரையும் குறை சொல்ற, உனக்கு நான் பாடமே நடத்துறேன்…என்று மனதிற்குள் சவால் விட்டுக்கொண்டாள்…
அவன் பிடித்த பிடி வேற இரும்பு பிடியாக மிகவும் வலித்தது.. ஆனால் அதை காட்டாமல் அவனுக்கு பதில் பார்வை பார்த்தாள்…
“சரி, சொல்லு.. என்னத்த பார்த்து என்ன புடிச்சிருக்குனு சொன்ன” என்று இன்னுமும் அவள் தோள்களை விடாமல் கேட்டான்…
ஹையோ, வலிக்குதே…விடேன் டா… பாவி….என்று மனதிற்குள் பேசியவாரு… “எனக்கு உங்கள விட உங்க அம்மாவை ரொம்ப புடிச்சிருக்கு”…
இதை கேட்டதும் அவன் கைகள் கொஞ்சம் தளர்ந்தது… அவன் விழிகள் ஆச்சிரியத்தை பிரதிபலித்தது……
“ஆனா, நீ கட்டிக்க போறது என்னை…” என்று மறுமொழி சொன்னான்…
“பையன பிடிக்கிறது விட, பேமிலி பிடிச்சாலும் கட்டிக்கலாம்னு தோணுச்சு”…
“உன் லாஜிக் சகிக்கல..” என்று அவன் சொன்னாலும்…
ஒரு வகையில் அவன் மனம் குளிர்ந்தது… அவன் தம்பி பொண்டாட்டி அவ்ளோவா அவன் அம்மாவோட ஒட்ட மாட்டாள்…
இரண்டும் ஆண் பிள்ளைகள் என்பதால்… மருமகளை மகளாய் பாவிக்கும் நினைப்பு உள்ளவர் தான் ஜெயந்தி…
ஆனால் அவன் தம்பி பொண்டாட்டி தன்யாவுக்கு, தன் கணவன்.. தன் பிள்ளை.. தனக்கு மட்டும் என ரொம்ப இறங்கி பழகமாட்டாள்…
அந்த குறை ஜெயாவுக்கும் உண்டு… ஏனோ அந்த குறையை இவள் தீர்த்து வைப்பாள் என்று அவன் உள்மனம் கூவியது…
இதோ பாரு… நான் திரும்பவும் நினைவு படுத்துறேன்… “என்ன கல்யாணம் பண்ணா உனக்குதான் ரொம்ப கஷ்டம்…என்கிட்டே எதையும் எதிர்பார்க்க கூடாது” அந்த எதையும் என்பதை அழுத்தமாவே கூறினான்…
அவள் சரி என்று தலையை மட்டும் ஆட்டிக் கொண்டவளின் அலைபேசி அடிக்கவே… எடுத்து பார்த்தாள்… சவி எனவும்… சொல்லு சவி….
“ஹே, என்ன அங்கேயே ரெண்டு பேரும் குடும்பம் நடத்த ஆரம்பிச்சுட்டீங்களா?”
“சவிவி… செருப்பை இங்க இருந்து தூக்கி போட்ட உன் மண்டை மேல வந்து விழும் பாத்துக்கோ”…என்று அவனுக்கு கேட்காதவாரு மிரட்டினால்…
“அம்மாடி, நான் பயந்துட்டேன்” என்று நக்கலடித்துவிட்டு… வசு, அண்ணா பேமிலி எல்லாரும் கிளம்ப ரெடி ஆகிட்டாங்க…உங்கள கூப்டு வர சொன்னாங்க… சரி, நான் தான் நீங்க எந்த நிலைமைல இருப்பீங்களோனு போன் பண்ணேன்.. என்று மறுபடியும் வெறுப்பேத்தினால்….
சவி…. என்று பல்லைக்கடித்தவாரு..மெதுவா கத்தி… வை வரோம்.. என்று போனை ஆப் பண்ணினாள்….
உங்க வீட்ல கிளம்ப போறாங்களாம்… உங்கள கூப்பிடறாங்க… வாங்க போலாம் என முன்னே நடந்தாள்….
அவனும் அவள் பின்னே நடந்தான்…
முன்னே நடக்கும் அவளை பார்த்தான்… அவள் நடக்கும் அன்ன நடை, அவளின் பின்னழகில் பட்டு ஆடும் அந்த நீளமான பின்னால்… அவனை கவர்ந்து இழுத்தது…..
அப்டி கவர்ந்து இழுப்பதும் புடிக்கவில்லை…
உடனே அவன் “ஏய், நில்லு”…
அவள் நின்று திரும்பி பார்த்தாள்..அது என்ன ஏய் என்று நினைத்தாலும்…கேட்க தோணவில்லை…
“நீ பின்னே வா, நான் முதல்ல இறங்கிறேன்..” எனவும்…
அவள் வழிவிட்டு நின்றாள்… என்ன தான் வழி விட்டாலும்.. அது குறுகிய படிக்கட்டு.. இடிக்காம செல்ல முடியாது…
அவன் உரசாமல் சென்றுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் சென்றான்.. இருந்தாலும் அவள் என்னவென அறியும் முன்பே.. அவள் முன் தேகம் முழுவதும் அவனோடு உரசி கொண்டு விட்டது…
உரசியதும், அவள் கண்களை இருக்கமாய் மூடிவிட்டாள்….. அவனுக்கும் ஷாக் அடித்த உணர்வு… அவள் மென்மைகள் தன் மீது படர்ந்ததால்…
ஆனாலும் அவன் அந்த உணர்வுக்கு மதிப்பும் அளிக்காமலும், அவளையும் பார்க்காமலும் கடந்து சென்று விட்டான்..
இவளும் தன்னை சுத்தரித்து கொண்டு கீழே இறங்கி சென்றாள்…
அங்கே எல்லாரும் தயாராக இருக்க… மரகதம் அவளை பார்த்து பக்கத்தில் வந்து “ராசாத்தி, நாங்க கிளம்புறோம்.. நல்லா சாப்பிட்டு பத்திரமா இரு… சரியா” என்று அவள் நெத்தியில் ஒரு முத்தம் வைத்து கன்னத்தை வருடினார்…
ஜெயாவும் கிட்ட வந்து அவள் கையை பிடித்து, “வசும்மா, நாங்க கிளம்புறோம்… ரெண்டு மூணு தேதி எல்லாரும் சேர்ந்து பார்த்து வச்சிருக்கோம்.. உனக்கு எது தோதுபடும்னு பார்த்து சொல்லு… சரியா… சீக்கிரமா உன்ன வந்து கூட்டிட்டு போறோம்.” என்றவாரு அவளை அணைத்தார்….
அதை பார்த்த தான்யா “ஹ்ம்ம், உங்க அம்மா இப்டி என்ன ஒரு நாளும் பண்ணதில்லையே.. புது மருமகள் பவுசுல அதான்…” என்று பிரசாத்திடம் முறையிட்டாள்….
“ஏய், எங்க அம்மா உன்ட பாசமா வந்தப்போலா எட்ட நின்னது நீதானே..ஏதும் உன்ட கேக்காததுனால நா கவனிக்கலனு கிடையாது புரிஞ்சுதா”…
இவன் இப்டி சொல்லவும், அவள் வாயை மூடிக்கொண்டாள்…..
ஜெயா குடும்பம் எல்லாரும் எல்லாரிடமும் விடை பெற்றார்கள்..
தேவ் எல்லாரிடமும் விடை பெற்றான் தான்.. ஆனால் இவளை ஏற்எடுத்தும் பார்க்கவில்லை..
அவன் டிரைவ் பண்ணுவதால், முதலில் போய் வண்டியை எடுத்து அவள் வீட்டுக்கு வாசல் முன்பு நிப்பாட்டினான்…
வசுவும், அவள் குடும்பமும்.. வாசலில் வந்து நின்றார்கள்..
அவன் அவளிடம் வேணும் என்றே தான் போய்ட்டு வரேனு சொல்லவில்லை…
உனக்கும் எனக்கும் என்ன என்று நிலை நிறுத்தவே அவன் அப்படி பண்ணினான்…..
எல்லாரும் ஏறினர், அவன் வண்டியை கிளப்பியதும், அவளை பார்த்தான்.. அவளை பார்த்ததும், அவன் தலை தானாகவே போய்ட்டு வரேன் என்று அசைந்தது… உடனே அவன் வண்டியையும் எடுத்துவிட்டான்…
அவன் தன்னிடம் ஏதும் சொல்லவில்லை என சின்ன சுணக்கம் அவளுக்கு இருந்தது… பேய்க்கு வாழ்க்கை பட்டால் முருங்கை மரம் தொங்கி தானே ஆகணும் என்று தன்னை தேற்றி கொண்ட சமயம்… அவன் பண்ணின சின்ன தலை அசைப்பு…
அவள் சுணக்கத்தை முற்றிலும் எடுத்துபோட்டது….!!!
Last edited: