ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பன்னீரைத் தூவும் மழை-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 25

வீடு வந்து சேர இரவு 12 மணி ஆகிவிட்டது…

தேவும், வசுவும் பேசி கொள்ளவில்லை… சுலோச்சனா அடுத்த நாள் காலையில் தான் கிளம்புவதாக இருந்தது…..ஜெயா மற்றும் மற்றவர்களும் அடுத்த நாள் கோயம்பத்தூர் கிளம்ப வேண்டும்…

தேவும் வசுவும் கல்யாணம் முடிந்ததில் இருந்து பிராயணபட்டுக் கொண்டேதான் இருந்தார்கள்… திங்கள் அன்று கல்யாணம் முடிந்தது… செவ்வாய் மறுவீடு… புதன் அன்று வேளாங்கண்ணி… வியாழன் இரவு மதுரையிலிருந்து கோவை கிளம்ப வேண்டும்… பின் சனிக்கிழமை, சென்னை திரும்ப வேண்டும் என்றும் வைத்திருந்தார்கள்….

இதோ வியாழக்கிழமை காலையிலே சுலோச்சனா புறப்பட்டு விட்டர்…

அன்றைக்கு இரவு இவர்கள் எல்லாரும் லிங்க் எக்ஸ்பிரஸ் ஒண்ணே முக்காளுக்கு மதுரையில் இருந்து புறப்படும்… அதில் போவதாக இருந்தது…

தேவும், வசுவும் பக்கத்தில் அமர்ந்து இருந்தாலும் பேசிக்கவில்லை…..

இப்படியாக கோவையும் வந்தாகிட்டு… வசுவிற்கு கோவையில் இருந்த ஜெயா வீடு மிகவும் பிடித்திருந்தது… கீழே ஹால், கிட்சேன்.. ஒரு பெட்ரூம் கிருபா ஜெயாவிற்கென…. இன்னொரு ரூம் ஜெயாவும் கிருபாவும் பயன் படுத்த.. ஆபீஸ் ரூம்… கீழே இருந்து மேலே செல்ல உள்ளேயே படிக்கட்டும் இருந்தது… மேலே நான்கு அறைகள்… இரு படுக்கை அறைகள்.. ஒன்று தேவிற்கும்… இன்னொரு ரூம் பிரசாத்க்கும்…மீதம் இரு ரூம்மில் ஒன்றை தேவ் கிட்டார் வாசிப்பதற்கு மற்றும் ஆபீஸ் பயன்பாட்டிற்கும் என வைத்திருந்தான்…. இன்னொரு ரூம் அப்டியே யாருக்கும் பயன் படுத்தாமல் இருந்தது…

“அத்தை, வீடு ரொம்ப நல்லா இருக்கு… சூப்பர் ஆஹ் மைண்டைன் பண்ணிருக்கீங்க ….”

“தேங்க்ஸ் வசு, உன் மாமாவும் ஹெல்ப் பண்ணுவாங்க…”

“ஓஹ், அப்போ ரெண்டு பேரின் கை வண்ணமா… அசத்தலா இருக்கே”

“ஹ்ம்ம்” சிரித்த படியே கூறினார்…

இவளும் சமையலுக்கு உதவியவாரு மடை திறந்த வெள்ளம் போலே பேசி கொண்டே இருந்தாள் ஜெயாவிடம்… என்னவோ அவரிடம் பேச தடை அவளுக்கு இருக்கவில்லை… உண்மை தான் ஒருத்தங்களுக்கு நம்மள புடிக்கும்னு தெரிஞ்சா தயக்கம் எல்லாம் போய்விடும்…அப்டித்தான் அவளுக்குமே….
ஜெயாவிற்கும் மனதிற்குள் நிறைவாக இருந்தது… பெண் பிள்ளை இல்லை என்று ஒரு சமயம் வருத்தபட்டவருக்கு… இரு மருமகள் மகளாய் வந்த உணர்வு…

“வசுமா, நீ போய் குளிச்சுட்டு வரியா? நானும் போய் குளிச்சுட்டு வரேன்… அப்புறமா நாம சேர்ந்து சாப்டுக்கலாம்…”

காலையில் அவர்கள் வெளியே வாங்கி கொண்டார்கள்… கோவை வந்து இறங்க 7 மணி ஆகியது… அதுனால் வரும் போதே காலை உணவை வாங்கி கொண்டார்கள்… மதியம் சமைக்கவென கறி வாங்கி குடுத்தார் கிருபா…

கறி குழம்பு, சிக்கன் 65, ரசம், சோறு.. என சமைத்தார்… சமையல் முழுவதும் ஜெயாவே தான் பண்ணுவார்… மற்ற வேலைக்கென ஒரு பெண் வருவார்…
“சரி அத்தை” என கூறி விட்டு குளிக்க சென்றாள்….

மேலே தேவ் ரூமிற்குளேயே குளியல் அறை இருந்தது… அதற்குள்ளே குளித்து முடித்து வந்தாள்… தேவ் அவன் ஆபீஸ் ரூம்மில் இருந்தான்…

குளித்து முடித்து தேவ்வையும் சாப்பிட அழைத்து வந்தாள்…

ஏதாவது ஒரு பொழுது அவர்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்…

ரோஷினி பாப்பா தூங்கி விட்டதால்… எல்லாருமே சாப்பிடுகிற மேஜையில் ஆஜர் ஆகிவிட்டனர்… வசு பரி மாற வந்தாள்… அதுலாம் வேணாம் என தடுத்து விட்டார்… நான் எடுத்து வைக்கிறேன்.. நீ சாப்பிட ஆரம்பி, எல்லாருக்கும் எடுத்து வைத்துவிட்டு.. நானும் உக்காருறேன்… என எல்லாருக்கும் எடுத்து வைத்தார்….


சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, தேவ் “அப்பா, நாங்க நாளைக்கு காலையிலே கிளம்பலாம்னு இருக்கோம்..”

அட பாவி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல வில்லை… என மனதில் நினைத்து கொண்டாள் வசு… ஒரு விதமான பயம் மனதில் எழவும் செய்தது… எப்படி இவனோடே ஒரே வீட்டில் குடும்பம் நடத்த… ஒரு வாரத்திற்கே நாக்கு தள்ளுது….

“சரி பா, கிளம்புங்க…” என சொன்னது கிருபா…

பிரசாத், “அப்பா அப்டியே நாங்களும் அவங்களோட கிளம்புறோம்..… அண்ணா சேலம் வழியாக தானே போறாங்க…”

மூன்று பேருக்கும் தனியா கார் வைத்து இருந்தார்கள்…
“சரி பா, பார்த்து போய்ட்டு வாங்க…” என்றார் கிருபா…

“சரி அப்பா” என்றான்…

வசுவோ சிறிது யோசித்துவிட்டு… “அத்தை, மாமா… அப்போ நீங்களும் எங்களோட சென்னை வறீங்களா? கொஞ்ச நாளைக்கு எங்களோட இருக்கீங்களா?” என கேட்டாள்…

அவள் கேட்டதே கிருபாவிற்கு சந்தோசம்…

“இல்லைமா.. நாங்க வரோம் ஆனா இப்போ இல்லை.. ஏற்கனவே ஒரு வாரம் இங்க இல்லைனு கொஞ்சம் வேலைகள் இருக்கு… நீங்க போய்ட்டு வாங்க..” தன்மையாக கூறினாள்…
அவருக்கு இவள் கேட்டது மனதிற்கு ஏதோ இதம் சேர்த்தது… தான்யா ஒரு நாளும் இப்டி கேட்டதில்லை… இருவரும் ஒரே மாதிரியாக தான் பார்க்கிறார்.. இருந்தாலும் இப்டி கேட்கவும் ஒரு மனம் வேண்டும் என்று தோன்றியது… கண்டிப்பா இந்த பெண்.. தேவ்வை மாற்றிவிடுவாள் என்றும் மனதில் தோன்றியது…
“ஹ்ம்ம், சரி மாமா” சுணங்கி கொண்டே சொன்னாள்…

ஜெயாவிற்கு புரிந்தது… அவனோட எப்படி இருப்பது என யோசிக்கிறாள் என்று… இருந்தாலும் அவர்களே நீந்தி வரட்டும் என்கிற எண்ணம்…

தேவ்விற்கோ சிறிது வருத்தம்.. ஏன் என் கூட தனியா வர மாட்டாளாமா.. அப்டி என்ன பண்ணிட போறேன்….. என்கிற கோவமும் கூட…. வேகமாக சாப்பிட்டு எழுந்து கொண்டான்…

“இன்னும் கொஞ்சம் சாப்பிடு தேவ்” என ஜெயா சொல்வதை கேட்காமல்…

“போதும்மா” என தன்னுடைய தட்டையும் எடுத்து சென்று கழுவி வைத்து விட்டான்…
இது ஜெயா பழக்கிய ஒன்று… சாப்பிட்ட தட்டை அவர்களே கழுவி வைத்து விட வேண்டும் என்கிற எழுத படாத சட்டம்… அதை அவர் இரண்டு பிள்ளைகளும் இன்றும் கடை பிடித்து வருகின்றனர்…

வசும்மா, ஈவினிங் கொஞ்ச பொருட்கள் வாங்கிட்டு வரலாமா?வீட்டுக்கு என்ன வேணும்னு அவன்ட கேட்டுக்கோ…. நாம இங்கே வாங்கிக்கலாம்.. என்று சொல்லி கொண்டிருக்கும் போதே தேவும் வெளியே வரவும்…

“தேவ், ஈவினிங் வெளில போனும் கூட்டிட்டு போறியா” என்று கேட்டார்…

“அவனும் சரி என்று விடவே…” கிருபாவை தவிர எல்லாரும் போகலாம் என்று முடுவு எடுத்து கொண்டார்கள்…

சாப்பிட்டு மேலே வந்தாள்… அவன் சுவர் ஓரமாக படுத்து போன் பார்த்து கொண்டிருந்தான்…
அவன் பக்கத்தில் அமர்ந்து.. கூப்பிடவா வேண்டாமா என்று தயக்கம் இருந்தது… முழுதாக ஒரு நாள் பேசிகொள்ளவில்லையே… பரவால்ல… எனக்கு ஈகோலாம் கிடையாது… நா பேசுவேன்… பேசறதால.. ஒண்ணும் குறைய மாட்டேன் என்று தெளிவாக சிந்தித்து…

“ ஏங்க” என்று கூப்பிட்டாள்…
“இந்தா ஆரம்பிச்சுட்டால, ஏங்க ஒங்கனுட்டு…” என்று எண்ணிவாரு…

“ஹ்ம்ம்” பிடி குடுக்காமல் கேட்டான்…

“சென்னை வீட்டுக்கு ஏதாச்சும் வாங்கணுமா?”

இப்போதும்… நம்ம வீடுனு சொல்ல மாட்டிக்குறா… கடுப்பாக வந்தது…
“தேவையில்லை..” பட்டு கத்திரிப்பது போலே வார்த்தை வந்து விழுந்தது…

“ஓஹ் சரி” என்று படுத்து விட்டாள்…
அவள் படுத்தத்திற்கும் கோவம் வந்தது… ஏன் மேலே ஏதும் கேக்க மாட்டிகுரா… நா இல்லைனு சொன்னா அப்டியே போய்டுறா… ஏன் எதுக்கு கேள்வியே வர அவளிடம் வர மாட்டிக்குது..ஆதங்கமாய் இருந்தது…

அவன் எதிர் பார்க்கிறது எல்லாமே ஒரு கணவன் மனைவியிடம் எப்படி எதிர் பார்ப்பார்களோ அப்படியே…

அப்படியென்றால் இவனும் கணவனாக நடந்து கொள்ளும் பட்சத்தில் எதிர் பார்ப்பது தப்பிலை… நீ யாரோ நான் யாரோ என்று இருந்து கொண்டு எதிர் பார்ப்பது முட்டாள்தனம் என்று அவனுக்கும் புரியவில்லை…

ஈவினிங் வெளியே சென்றார்கள்… என்ன வாங்கனும்னு சொன்னானா என்று ஜெயா கேட்டதற்கு ..

“இல்லை அத்தை… ஏதும் வேணாம்னு சொன்னாங்க.. “

“லூசு பய.. அவன் அப்டிதான் சொல்லுவான்… நா சிலது யோசிச்சுருக்கேன்… வாங்கி தரேன்” என்று பாத்திரங்கள் பார்த்தார்…

“பால் குக்கர், பருப்பு வைக்க ஒரு மத்திமம் சைஸ் குக்கர், எலக்ட்ரிகல் குக்கர், சில கரண்டிகள்…பொறிக்கன் சட்டி…ஒரு சில பாத்திரம், இட்லி குக்கர்,…pestle mortar.. குட்டி குட்டி ஏர் டைட் காண்டான்னெர்…” எதோ தன் பொண்ணு கல்யாணம் முடித்து போகிறதுக்கு சீதனம் குடுத்து அனுப்புவது போல் அடுக்கினார்…

இதையெல்லாம் கவனித்த தான்யா, பிரசாத்திடம் “உங்க அம்மா பார்த்திங்களா… அவங்களுக்கு அவ்ளோ செய்றாங்க.. நமக்கு ஒரு நாளும் இப்டி பண்ணதில்லையே…”

அவளை முறைத்து கொண்டே, “நல்லா யோசிச்சு பாரு, எங்க அம்மா வாங்கி தரவானு கேட்டதுக்கு… நீ என்ன சொன்ன.. எங்க வீட்ல வாங்கி தந்தாங்க அத்தை அதுவே போதும்னு நீ தானே சொன்ன… அப்போ கூட சிலது வாங்கி குடுத்தாங்களேடீ…”

“அதுக்காக, இவ்ளோவா..”

“நீயும் இணக்கமா இருந்திருந்தா… இதுக்கு மேலேயே செஞ்சுருப்பாங்க… இப்போ கூட உனக்கு புடிச்சத எடுன்னு சொல்லிட்டு தானே போயிருக்காங்க…”

“ஹ்ம்ம்க்கும், அங்கே பாருங்க பார்த்து பார்த்து எடுத்து தராங்க…”
“கடைனு பாக்க மாட்டேன்டீ.. ஒழுங்கா என்ன சொன்னாங்களோ அத பண்ணு” என்று ரோஷினியை வாங்கி கொண்டு நகர்ந்து விட்டான்…

இவளும் சில பொருட்கள் எடுத்தாள் தான்….

தேவ் அவன் அம்மாவையே பார்த்து கொண்டிருந்தான்… ஜெயா முகங் கொள்ளா புரிப்புடன்…ஒவ்வொன்றாக எடுத்து கொண்டிருந்தார்… இவ்ளோ சந்தோச படுவார் என்று தெரிந்திருந்தால் முன்னமே கல்யாணம் பண்ணிருந்துருக்கலாம் போலவே… என்று எண்ணி கொண்டிருந்தான்…அவன் இன்னொரு மனமோ அப்போ வசு கிடைச்சுருக்க மாட்டா…

அட ஆமா… அவளால தானே அம்மா இவ்ளோ சந்தோசமா இருகாங்க… அப்போ இது சரி தன் என்று அவன் மனமே வக்காலத்து வாங்கியது…

வசுவை பற்றி நினைத்தவுடன் அவளை பார்க்க மனம் உந்தியது… எவ்ளோ தடுத்தும் அவளை பார்த்தான்…

சிவப்பு கலர் அனார்கலி உடுத்தி இருந்தாள்… தனியாக தெரிந்தாள்… கல்யாணகலை அவள் முகத்தில் தெரியவும் செய்தது…


காற்றில் ஆடும் அவள் முடியை ஒதுக்கி விட ஆசை பிறந்தது… அலை பாயும் கண்கள் தனி அழகை குடுத்தது… அந்த உதடுகளை சுண்டி விட தோன்றியது..

அவள் உதடை பார்க்க பார்க்க… இவனுக்கு அவளை சுருட்டி தன்னுள் வைக்க தோன்றியது…

ஐஸ்வர்யாவிடம் தோன்றாத பல உணர்வுகள் கிளர்ந்து எழுந்தது….
இவன் கை தானாகவே தொட்ட முதல் பெண் இவள் தான்…

ஐஸ்வர்யா இவனை அணைத்து பிடித்திருக்கிறாள்… ஆனால் ஒரு நாளும் இவன் கை அவளை அணைக்க உயர்ந்தது இல்லை…

முதல் முறையாக “டி” போட்டு இவன் அழைத்த பெண்ணும் இவள் தான்…

இவன் பத்தாவது படிக்கும் போது, கணக்கு பாடம் கற்க பக்கத்தில் ஒரு வீட்டிற்கு டியூஷன் படிக்க சென்று வருவான்… ஒரு முறை ஜெயா அழைக்க வந்தார்…

அப்பொழுது ஒரு பெண், அவனிடம், “தேவ், நாளைக்கு நான் ஸ்கூல்க்கு வர மாட்டேன்… நோட்ஸ் மட்டும் எடுத்து ஏன் தம்பி கிட்ட குடுத்து விடு” என்று உரைத்தால்…

“சரி டி”என்று சொன்னான்.. அவ்ளோ தன் ஜெயா பிடி பிடிணு பிடித்து விட்டார்…

நீ உன் மனைவியை தவிர யாரையும் “டி” போட்டு கூப்பிட கூடாது… எந்த பொண்ணையும் தொட்டும் பேச கூடாது என அழுத்தமாக கூறினார்… அது அப்டியே அவனுக்கு பதிந்து விட்டது… அதுனால் யாரையும் டி போட்டு அழைத்தது இல்லை…அவன் மனைவியை தவிர…

வசுவிற்கு யாரோ தன்னை பார்ப்பது போல உணர்வு… திடிர்னு தேவ்வை பார்த்தாள்… அவன் தான் வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான்…

“ஹையோ… என்ன இப்டி பார்க்கிறாங்க…” என்று நடுக்கங் கொண்டாள்…
ஏன் டா, ஆளை முழுங்குற மாதிரி பார்க்குற… மனதில் நினைத்தாள்… ஒரு பார்வை ஆளை புரட்டி போடுமா… புரட்டுகிறதே…!!!

அப்டியே அவன் கண்ணில் படாமல் நகர்ந்து கொண்டாள்… அவள் பார்த்து விட்டாள் என்று தெரிந்தும் அவள் மேல் இருந்து கண்களை எடுக்க முடியவில்லை…!!!

ஒரே மனது இருவரை நேசிக்க முடியுமா?? முடியாது என்பது தான் நிதர்சனம் அது புரிகிறது தான்…

ஆனால்… ஐஸ்வர்யாவை பிடித்தது… இவளையும் பிடிக்க ஆரம்பிக்குதே.. அப்போ தான் என்ன ஜென்மம்… என்று சுய அலசல் செய்து கொண்டிருந்தான்…

அவன் மனமே புடித்தது.. என்று கூறுகிறது…புடித்தது என்பது முடிந்த காலம்… இறந்த காலம்…. அது முடிவுற்றது….. என்பது…இன்னும் இந்த மடையனுக்கு புரியவில்லை…!!!

இன்னுமும் சிலர் காதலில் தோற்றாலும் அடுத்த படி எடுத்து வைக்காமல் தேங்கி நின்று விடுகின்றனர்…..
இவர்களுக்கு என்று “தேர் ஈஸ் அ லவ் அஃப்ட்டர் லவ் ஃபயிலியர்”(There is a love after love failure)என எத்தனை படங்கள் எடுத்தாலும்… எத்தனை வாக்கியம் வந்தாலும் புரிவதில்லை…!!!!
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 26

காலையில் 8 மணிக்கு கிளம்புவதாக இருந்தது… எழும்புனதில் இருந்து வயிறு வலிக்க ஆரம்பித்தது…மாதந்திர பிரச்சனை…. மூன்று நாளைக்கு முன்னாடியே வர வேண்டியது… இன்று வந்துவிட்டது… மன அழுத்ததில்….

பிரச்சனை வந்தவுடன் தான் நினைவு வந்தது…. ஊரில் இருந்து வரும் போது நாப்கின் வாங்குனதை எடுக்கவே இல்லை என்று… அங்கே மரகத பாட்டி காரில் தான் மறுவீடு சென்று வந்தார்கள்…
ஹையோ அங்கே இருக்குமே.. இப்போ என்ன செய்வது.. வேற யாராச்சும் பாத்தா என்ன நினைப்பாங்க… பல வித யோசனையில் சுழண்டாள்…

பின், பாட்டிக்கு கால் பண்ணியே கேட்டுவிடுவோம் என்று நினைத்தாள்…

தேவும் ரூமில் தான் இருந்தான்…இவள் அலை புரிதலை காணவும் செய்தான்…. அவள் ஏதும் சொல்லாமல் கேட்கவும் விருப்பம் இல்லை… ஆனால் அவளை மட்டுமே பார்த்துக்கொண்டிரிந்தான்….
எதர்த்தமாக அவள் பின் பக்கம் பார்க்கும் போது தான் கவனித்தான்… அவளின் உதிர போக்கை..

தேவ் அங்கே இருப்பதை பார்த்த அவள்…”ஏங்க.. பாட்டி நம்பர் குடுங்களேன்? கொஞ்சம் பேசணும்”

அவள் கேட்டதும் அவனுக்கு தெளிவாக புரிந்தது… நாப்கின் தான் தேடுகிறாள் என்று…

பாட்டி நம்பர் என்று சொல்லி நடந்து கொண்டே கப்போர்டு அருகே சென்று.. ஒரு கவர் பையை எடுத்து அவளிடம் குடுத்தான்… குடுத்து விட்டு வெளியே சென்று விட்டான்…

நம்பர் குறித்து கொண்டாள்… கவர் பெற்று கொண்டு உள்ளே பார்த்ததும் திகைத்து நின்று விட்டாள்… உள்ளே நாப்கின் தான் இருந்தது…

இத அவங்களா எடுத்துட்டு வந்தாங்க… அவள் அப்பா கூட இதுவரை எடுத்து குடுத்ததில்லை… எல்லாமே அம்மாவின் மூலமாகவே நடக்கும்… இதமான மெல்லிய உணர்வு தாக்கியது!!!

வேகமாக ஒய்வு அறைக்கு சென்று தன் வேலையை முடித்து கொண்டு வந்தாள்… டிரஸ்சும் மாற்றிக்கொண்டாள்… பேக் பண்ணது எல்லாம் சரியாக இருக்கா என்று சரி பார்த்து கொண்டாள்….

தேவ் உள்ளே வந்து பாக் செய்ததை எல்லாம் கார் பூட்டில் வைத்தான்…

திரும்பவும் உள்ளே நுழைந்தான்.. அவள் கொஞ்சம் சோர்வாக அமர்ந்து இருப்பதை கண்டதும்.. தொண்டையை செருமி.. “இன்னிக்கு ட்ராவெல் பண்ணிடுவியா? இல்லை ரெண்டு நாள் ஆகட்டுமா??”

அவன் கேட்டதே வியப்பு தான் அவளுக்கு… “அதுலாம் பிரச்சனை இல்லை… பண்ணிடுவேன்” என்று சொன்னதும் சரி என்று விட்டுவிட்டான்….

அவளும் கீழே இறங்கி வந்தாள்… ஜெயாவை பார்த்து சிறு புன்னகையுடனே வந்தாள்…

“அத்தை.. உங்களுக்கு நேரம் இருக்கும் போதெல்லாம் நீங்க சென்னை வந்துடனும்”

“சரிம்மா கண்டிப்பா…” அவரும் இன்முகத்துடன் கூறினாள்…
சாப்பிடுவது வெளியே பார்த்துக்கலாம் என்று இருந்தார்கள்… பிரசாத், தான்யா, ரோஷினி பாப்பா வரவே… எல்லாரிடமும் விடை பெற்று கொண்டார்கள்….

வசுவிற்கும் கண்களும் கலங்கி விட்டது… அதை மறைக்கவென.. ஜெயாவை இறுக்கமாக அணைத்து கொண்டாள்…

ஜெயாவிற்கும் அப்டியே… ஆனால் சமாளித்து கொண்டார்…“வசும்மா.. இவ்ளோ இறுக்கமாலாம் நீ என் பையன தான் கட்டி புடிக்கணும்” அவளை லகுவாக்க தான் கிண்டலாக கூறினார்…

அவர் அப்டி கூறியதும் தெளிந்து விட்டாள் “ஹ்ம்ம்க்கும்,உங்க பையன் தானே… நா கட்டி புடிச்சதும்.. இந்தாம்மா புடிச்சுக்கோன்னு நிப்பாங்களாக்கும்… தெறிச்சு ஓடிட மாட்டாங்க??”

ஹா ஹா சிரித்து கொண்டே நீ வேண்ணா பாரேன் ஒரு நாள் வரும்… அப்போ நீயே விலகுனாலும் அவன் உன்னை தூரத்தியே உன் பின்னாடி வருவான்”

“அது நடக்கலாம் நடக்காமாலும் இருக்கலாம்.. ஆனா நீங்க நல்ல மாமியார் அத்தை!!” என்று கூறி அவர் கன்னத்தில் இதழ் பதித்தாள்…
அவர்கள் என்ன பேசி கொண்டிருக்கிறார்கள் என்று தேவ்விற்கும் தெரியவில்லை… கிருபாவிற்கும் புரியவில்லை… ஆனால் இருவருக்கும் அந்த பாச பிணைப்பு பார்க்க பிடித்திருந்தது….

மணி ஆகவே… கிளம்பி விட்டார்கள் ஒரே காரில்…தேவ் தான் ஓட்டுனான்… பக்கத்தில் பிரசாத் அமர்ந்து கொண்டான்… தேவிற்கு பின் வசுவும்… பிரசாதிற்கு பின் தான்யாவும் இருந்தார்கள்… ரோஷினி பிரசாதிடம் தான் இருந்தாள்…

காரில் ஏறினதில் இருந்து.. வசுவின் முகம் கலை இழ்ந்து காணப்பட்டது…

தேவ் கவனித்தான்… நேரம் ஆக ஆக சரி ஆகும் என்று விட்டு விட்டான்…

பிரசாத் தான், “என்ன அண்ணி, அம்மாவ மிஸ் பண்ணுறீங்களா? உங்களுக்கு என்ன ஹெல்ப் எப்போ தேவை பட்டாலும் அம்மாகிட்ட சொல்லுங்க… உடனே வந்துடுவாங்க, பீல் பண்ணாதீங்க அண்ணி” ஏனோ அவனுக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது… தன் மனைவி எப்படி தன் அம்மாவிடம் இருக்கனும் என்று நினைத்தானோ.. அப்படியெல்லாம் வசு இருந்தது ஒரு நிறைவு… அதுனால் அவள் வருந்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று நினைத்து தான் வார்த்தைகளால் தேற்றினான்…

“ஹ்ம்ம் சரி அண்ணா.. அத்தையும் சொன்னாங்க…” என்று கொஞ்சம் நிலை படுத்தி கொள்ள ஆரம்பித்தாள்…சிறிது நேரம் தூங்கினாள் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது… ஒரு இடத்தில் நிறுத்தி காலை சாப்பிட்டு முடித்ததும்… அசந்து தூங்கி விட்டாள்…

சேலம் வந்ததும் தான் கண்ணையே திறந்தாள்… அங்கேயே மதிய உணவை முடித்து கொண்டு… பிரசாத் குடும்பத்தை அவர்கள் வீட்டில் விட்டு விட்டு சென்னை நோக்கி பயணித்தார்கள்…..

சேலத்தில் இருந்து முன்னாடி வந்து அமர்ந்து கொண்டாள்…

சென்னை வந்து சேரவே 6 மணி ஆகியது… வந்ததும் முதல் வேலையாக .. சாராவிற்கு, ஜெயாவிற்கும் தெரிவித்து விட்டாள்….

அவன் இருப்பது அபார்ட்மெண்ட்… மூன்று தளங்களை கொண்டது… இவர்கள் இருப்பது இரண்டாவது தளம்… வீடும் விசாலமானது….. இரு பெட் ரூம்… ஒன்று அவன் ஆபீஸ் பயன்பாட்டிர்க்கென வைத்திருந்தான்… அதில் ஒரு கிட்டாரும் வீற்றிருந்தது…. இன்னொரு ரூம் படுப்பதெற்கு…. மோடுலர் வசதியுடன் ஒரு நேர்த்தியான கிட்சேன்… ஒரு ஹால்… அதன் பக்கத்தில் பேல்கனி என இருந்தது… வீடு அவ்ளோ அழகாக இருந்தது… எங்கும் தூசி பார்க்க முடியவில்லை… ஒரு பையன் இவ்ளோ நேர்த்தியாய் வைத்து இருக்கிறான் என்கிற ஆச்சர்யம் எழாமல் இல்லை…

வந்ததும் தன்னை சிறிது சுத்தபடுத்தி கொண்டு பெட் ரூமில் இருந்த சோபாவில் சாய்ந்து விட்டாள்… பெட் இருந்தது தான்… ஆனால் அங்கே செல்ல தயக்கம்… அவனுக்கு ஆபீஸ் வேலை இருந்ததால்.. இன்னொரு ரூமினுள் சென்று அடைந்து கொண்டான்…

வசு ஒரு மணி நேரம் கழித்து எழுந்தாள்…. மணியை பார்க்க நேரம் 8 என்று காட்டியது… பசியும் எடுத்தது…. கிட்சேன் உள்ளே சென்று எதாவது செய்ய இருக்குமா என்று பார்த்தாள்… பாலை தவிர எதுவும் இல்லை…. காபி பவுடர் இருக்கா என்று பார்க்க அது இருந்தது… ஹ்ம்ம், இதுவாச்சும் இருந்ததே என்று இருவருக்கும் சேர்த்தே காபி கலந்தாள்… அவளுக்கு எடுத்து கொண்டு… அவனுக்கு பிளாஸ்க்கில் ஊற்றி வைத்துக்கொண்டாள்…

ஹால் சோபாவில் அமர்ந்து தொலை காட்சி பெட்டியை உயிற்பித்தாள்…. வார இறுதி நாள் என்பதால் ரியாலிட்டி ஷோவிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது… அவளுக்கு பிடித்ததை போட்டு கொண்டு ஒவ்வொரு மிடராக குடித்தாள்…. கொஞ்சம் தேவலாம் போலே இருந்தது…

பின், ஜெயா கிட்சேன் பொருட்கள் வாங்குனது எல்லாம் அடுக்கி வைத்துவிடலாம் என்று ஆரம்பித்தாள்… என்னவோ தனக்கென ஒரு கிட்சேனு இருக்கவும் ரொம்ப புடிக்க செய்தது… உண்மை தான் பெண்களின் ராஜ்யமே அங்கே தானே… அதுவும் தனக்கே தனக்கு என்று இருந்தால் கூடுதல் இஷ்டம் அல்லவா!!!

அடுக்கி விட்டு மணியை பார்க்க 9 ஆகியது.. தேவும் அதே சமயத்தில் வெளியே வந்தான்…

வந்தவன் அவள் அடுக்கி முடித்து இருப்பதை பார்த்தான்… பின், அவளிடம் “ வீட்டில ஏதும் இருக்காது… நா பக்கத்துல போய் சப்பாத்தி வாங்கிட்டு வரேன்.. எத்தனை வேணும் உனக்கு” என்று வினாவினான்…

“மூன்று” என்று சொன்னதும் வாங்கி வர சென்றான்… பதினைந்து நிமிடம் சென்றதும் வந்து விட்டான்…

இருவரும் ஒன்றாக சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டார்கள்… முடித்ததும் காபி குடிப்பீங்களா என்று அவன் கையில் குடுத்தால்.. அவனும் வாங்கி கொண்டான்… பின், எல்லாத்தையும் ஒதுங்க வைத்து ரூமினுள் வந்தாள்…

அவன் முன்னதாகவே வந்து சுவர் ஓரம் படுத்து விட்டான்… நீண்ட நேரம் சோபாவில் படுப்பது என்பது முடியாது என்பதால் அவன் பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டாள்… அவன் எதாவது சொன்னா பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்…

இருவருக்கும் அசதி என்பதால் விரைவாகவே உறங்கி விட்டார்கள்…

அடுத்த நாள் காலை மிக அழகாக புலர்ந்தது….

இவள் எழும்ப 7 மணி ஆகியது… பக்கத்தில் பார்த்தாள் அவன் இல்லை… சரி என்று ஓய்வு அறைக்கு சென்று முகம் கழுவி, காலை கடன்களை முடித்து விட்டு வந்தாள்…

கிட்சேன் உள்ளே அவன் நின்று கொண்டிருந்தான்… அவனை பார்த்ததும்… புன்னகையுடனே “ குட் மார்னிங்” என்று கூறினாள்..
அவன் அவளை பார்த்து வெறும் “ஹ்ம்ம்” என்று சொல்லி திரும்பி நின்று கொண்டான்…

இதுக்கு சொல்லாமலே இருந்துருக்கலாம் என்று எண்ணினாள்.. அவன் எதோ கலக்குக்கிறான் என்று தெரிந்தது…

அவனே அவள் பக்கத்தில் காபி வைத்து விட்டு சென்று விட்டான்… “ஏன் துரை எடுத்துக்கோனு சொல்லி குடுக்க மாட்டாரோ” என்று அங்கலாய்த்தபடி எடுத்து கொண்டாள்…

பால்கணி பக்கம் நேற்று சரியாக பார்க்கவில்லை என்பதால்… அங்கே போனாள்… அங்கே ஒரு குட்டி ஊஞ்சல் இருந்தது… அது அவளை கவர்ந்து இழுத்தது… கொஞ்சம் ஆங்ஆங்கே… குட்டி குட்டி செடி இருந்தது… கீழே செயற்கையான புல் தரையும் இருந்தது… சொல்லப்போனால் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது… கூடை ஊஞ்சல் அல்லாது… சாதாரண ஊஞ்சல் மரத்தில் ஆனது இருந்தது… ரசனைகாரன் தான் போலவே என்றும் தோன்றியது… கால்களை லேசாக உந்தி உந்தி ஆடி கொண்டே காபி குடிக்க ஆரம்பித்தாள்…


ஹாலின் இடது பக்கம் தான் பால்கனி ஆதலால் அவனும் இவளை பார்த்தான் தான்… ஊஞ்சலை பார்த்ததும் சில நினைவுகள் அவனை ஆக்கிரமித்தது… முயன்று அதை நினைக்காமல் இருக்க அணை கட்டினான்…

அதன் பின் வேகமாக குளியல் அறைக்குள் சென்று விட்டான்…

இவளோ ஹெட்செட் எடுத்து வந்து காதில் மாட்டி கொண்டு பிடித்த பாடல்களை கேட்க ஆரம்பித்தாள்…

சிறிது நேரம் சென்றதும் வந்து நின்றான் அவள் பக்கத்தில்…

அவனை பார்த்ததும் பாட்டை நிறுத்தி என்னவென்று பார்த்தாள்…

“மார்னிங் பிரேக் பாஸ்ட் வாங்கிட்டு வரேன்…என்ன வேணும்?”

“2 இட்லி போதும்”

“ஹ்ம்ம்,சரி” என்று போய் விட்டான்…

அவன் சென்றதும் இவளும் குளித்து முடித்து ஆயத்தமாகி வந்தாள்…

அவனும் காலை உணவு வாங்கி கொண்டு வந்தான்… இருவரும் சேர்ந்து சாப்பிட்டு எழுந்து விட்டார்கள்…

11 மணி போல்…வெளியே கிளம்பும் போது உடுத்தும் உடை அணிந்து வெளியே வந்தான்… நேராக அவளிடம் வந்தான்…அவள் ஹால் சோபாவில் அமர்ந்து இருந்தாள்…

“ உன்கூட கொஞ்சம் பேசணும்” தேவ்..

“ஹ்ம்ம், சொல்லுங்க!!”

“இது இந்த வீட்டுக்கு இன்னொரு சாவி… என்கிட்ட ஒன்னு இருக்கு” என்று அவளிடம் தந்தான்…

பின் அவளை பார்த்து.. “அப்புறம்..உன் கிட்ட ஏற்கனவே சொன்னது தான்.. என்கிட்ட இருந்து எதையும் எதிர்பாக்காத…. இதுக்கு அப்புறம் உன் வேலையே நீயே பார்த்துக்கோ… சாப்டாகட்டும்… இல்லை வெளியே போவதாகட்டும்…. இங்க கிட்சேன் இருக்கு உனக்கு வேணுங்கிரத வாங்கி உனக்கு வேணும்னா நீயே சமைச்சுக்கோ.. எனக்கு எதுவும் செய்யாத… செஞ்சாலும் சாப்பிட மாட்டேன்… ஒரே ஆபீஸ் அப்டினால என்னால கூட்டிட்டு போக முடியாது… அதுலாம் நீயே தான் பார்த்துக்கணும்… முக்கியமா ரெண்ட் ஷேர் பண்ணனும்… இது நான் வாங்குனது தான் ஆனா இ எம் ஐ நா தான் கட்டிட்டு இருக்கேன்… சோ அதுக்கு பதில் ரெண்ட்ஆஹ் எனக்கு குடுத்துரு… எலக்ட்ரிகல் பில் எவ்ளோ வருதோ அதுவும் ஷரிங் தான்… எவ்ளோனு நா மொத்தமா மாசகடைசில உனக்கு வாட்ஸாப்ப் பண்ணுகிறேன்… பண்ணதும் அதே நாள்ல பண்ணிடு…. அப்புறம் நா தேவை படுற நேரம் வெளியே போய்ட்டு வருவேன்.. ஏன் எதுக்குனு லாம் கேட்க கூடாது… நீயும் சொல்லணும்னு அவசியம் இல்லை.. ஆனா லேட்டா வர்றத அவொய்ட் பண்ணிக்கோ.. நாம இருக்குறது OMR ரோடுல உள்ள இடத்துல… அத புரிஞ்சு நடந்துக்கோ… அப்புறம் பிரின்ட்ஸ்னு யாரையும் கூட்டிட்டு வராத… எனக்கு பிரைவசி ரொம்ப முக்கியம்.. தென் ரொம்ப முக்கியமான விஷயம்…நா தான் உன் ஹச்பன்ட்னு யார்ட்டயும் சொல்ல கூடாது… இங்க இருக்கணும்னா இதல்லாம் கடைபிடிச்சு தான் ஆகணும்..இல்லை முடியாது அப்டினா நீ கிளம்பலாம்…சரி எனக்கு வேலை இருக்கு.. நா வரேன்… பூட்டிக்கோ…” என்று வெளியேறி விட்டான்….


அவன் சொன்ன விதம் அவளை காயபடுத்தியது… இவன் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த கூட்டிட்டு வந்தானா இல்லை ரூம் ஷேர் பண்ணி ரெண்ட் வாங்க கூட்டிட்டு வந்தானா…. மட பய….லூசு பய… அறிவு இருக்கா…எப்படி பேசிட்டு போறான்… அவளுக்கு அவ்ளோ கோவமும் வருத்தமும் வந்தது..… போடா… ஒண்ணும் நீ பண்ண தேவை இல்லை.. இவ்ளோ நாள் நீ தான் என்ன பார்த்துகிட்டியா எல்லாம் நானே தான் பண்ணிக்கிட்டேன்… அப்டியே இருந்துப்பேன்… வந்துட்டான் பெரிய இவன் மாதிரி… சரியான கோட்டான்… ஒரு நிலைல நிக்க மாட்டான்… என்று திட்டிய படி இருந்தாள்…

புண் பட்ட மனதை நல்ல சாப்பாடா குடுத்து ஆத்துவோம் என பிரியாணி ஆர்டர் பண்ணி கொண்டாள்… வந்ததும் ஒரு கட்டு கட்டிவிட்டு… படுத்து தூங்கிவிட்டாள்……!!!!
 
Status
Not open for further replies.
Top