அத்தியாயம் 20
இரு வாரம் கடந்து இருந்த நிலையில், மதிக்கு அந்த மருத்துவமனையில் இருந்து வர சொல்லி இருக்க, இவளும் போய் வர ஆரம்பித்து இருந்தாள்..
காலையில், வெற்றி கொண்டு போய் விட்டு வர, வேலை முடிந்து ஒன்று வெற்றியால் முடிந்தால் அவன் அழைத்து வருவான் அல்லது மதியே கிளம்பி வந்து விடுவாள்..
மதிக்கு தனியாக பைக் ஒன்று வாங்கி தருகிறேன் என்று வெற்றி சொன்ன போதும் அவள் வேண்டாம் என்று மறுத்து விட்டாள்..
ஏனோ அவளுக்கு வெற்றியின் கூட செல்வதற்கு விருப்பமோ என்னவோ, தினமும் அவனுடன் பயணம் செய்வதில் அவளுக்கு அளாதி விருப்பம்..
அவளுக்கே அப்படி என்றால் அவனுக்கு சொல்லவா வேண்டும்..
இப்படியே அவர்களின் நாட்களும் கழிந்தன...
அன்று அப்டித்தான்.. வெற்றி காலையில் மதியை மருத்துவமனையில் விட்டவன், மாலையில் அவளுக்கு அவசரமாக ஒரு பிரசவ கேஸ் பார்க்க வேண்டி இருப்பதால், வெற்றியிடம் வருவதற்கு தாமதம் ஆகும் நீங்கள் வரவேண்டாம் என்று கூறி விட்டாள்..
அவனுக்கும் அன்று முக்கியான வேலை ஒன்று இருந்ததால், அவனும் அதை பார்ப்பதற்கு சென்று விட்டான்..
மதியும் அந்த டெலிவரி வழக்கை முடித்து விட்டு, குழந்தை மற்றும் தாயிக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு, செவிலியரிடம் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு சென்று விட்டாள் ..
இரவு 9 மணி கடந்து விட்டதால், தனியாக செல்ல வேண்டாம் என்று வெற்றிக்கு அழைத்துப் பார்த்தாள்..
அவனுக்கோ பிஸி பிஸி என்றே வெகு நேரமாக வந்ததால், ஆட்டோ பிடித்து செல்லலாம்.. பிறகு அழைத்தால் விஷயத்தைக் கூறலாம் என்று நினைத்து இருந்தாள்..
ஆனால் அந்தோ பாவம்.. அவளது அலைபேசியில் சார்ஜ் மிக மிக குறைவாக இருந்ததை அவள் கவனிக்கவில்லை..
ஆனால் அங்கு வெற்றியோ, மதி இன்னும் வராதாதை தன் தாயின் மூலம் தெரிந்து கொண்டவன், மதிக்கு தொடர்பு விடுக்க, அவளது அலை பேசியோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கூறியது..
மீண்டும் மீண்டும் தொடர்பு விடுக்க, ஒரு கட்டத்தில் அணைத்து வைக்கப் பட்டுள்ளது என்று சொல்லியது..
இவனும் சரி, நேரில் சென்றே பார்க்கலாம் என்று மதியை அழைத்து வர கிளம்பி விட்டான்..
செல்லும் வழியில் எதிரில் வரும் ஆட்டோவில் மதி வருகிறாளா என்று பார்த்துக் கொண்டே வந்தான்..
ஆனால் அவளுக்கு அங்கு ஆட்டோ கிடைக்காமல் அல்லவா நின்று இருந்தாள்..
சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த ஆட்டோவை, அங்கு வேலை பார்த்த செக்யூரிட்டி நிப்பாட்டி, மதியை ஏற்றி விட்டார்...
அவளும் அவருக்கு நன்றி சொல்ல, அந்த செக்யூரிட்டி ஆட்டோக்காரரிடம், " தம்பி, மேடம் டாக்டர்.. பத்திரமா இறக்கி விட்டுரனும் சொல்ற இடத்துல.. " என்று சொல்லி அனுப்பினார்..
சிறிது தூரம் சென்றதும், அலைபேசியை எடுத்து பார்க்க, அதுவோ அணைந்து இருந்தது..
"சே.. சுவிட்ச் ஆப் ஆகிடுச்சே .... இப்போ அவரு கூப்டாளும் பேச முடியாது.. நம்மளும் பேச முடியாதே.. " என்று யோசித்தவள், பிறகு " சரி வீட்டுக்கு போய் பார்த்துகிருவோம்.. " என்று நினைத்தாள் ..
ஆனால் வெற்றி வருவது ஒரு வழி.. இவர்கள் செல்வது ஒரு வழி என்பதால், வெற்றி இவர்களை காண்பதற்காண சாத்தியம் இல்லை..
வெற்றி, மருத்துவமனைக்கு வந்தவன், அங்கு இருந்த செக்யூரிட்டி இடம் கேட்க, அவரோ " அவங்க கிளம்பிட்டாங்களே சார் .. நான் தான் ஆட்டோ பிடிச்சு ஏத்தி விட்டேன்.. " என்று சொல்ல,
இவனோ, " ஓ.. அப்டியா.. கிளம்பி எவ்ளோ நேரம் ஆகும் ண்ணா.. " என்று கேட்டான்..
இவன் அண்ணா என்று அழைத்ததில் அவர் தம்பி என்று இயல்பாக பேச ஆரம்பித்தார்..
" அவங்க கிளம்பி கால் மணி நேரம் ஆகும் தம்பி.. " என்று கூறினார்..
" அப்டியா.. ஆனால் நான் வரும் போது எதிரில் பாக்கவே இல்லையே.. " என்று சொல்ல,
அவரோ, " தம்பி, அந்த ஆட்டோக்காரன் இந்த பக்கமா ஒரு ரோடு போகுது பாருங்க.. இங்குட்டு தான் போனான்.. இப்படியும் போகலாம்.. நீங்க இந்த பாக்கமா போய் பாருங்க .. " என்று சொல்ல,
" சரிங்க ண்ணா.. நான் பார்த்துகிறேன்.. " என்று அவர் கூறிய வழியில் சென்றான்..
ஆட்டோ முக்கால் வாசி தூரம் வந்ததும் ஏதோ கோளாறு காரணமாக, நின்று விட அதற்கு மேல் ஆட்டோ செல்லவில்லை..
அவனும் எவ்வளோவோ முயற்சி செய்து பார்க்க, ஹுஹும்.. நகரவே இல்லை..
" மேடம்.. ஏதோ ப்ரோப்லேம் ஆகிருச்சு மேடம்.. இதுக்கு மேல ஆட்டோ போக மாட்டேங்குது.. இன்னும் கொஞ்ச தூரம் தான் நீங்க யாரையாவது வர சொல்லி போங்க மேடம்.. " என்று சொல்ல,
அவளோ, " என்னண்ணா
இப்படி பண்றீங்க.. " என்று அவரிடம் சொல்லி விட்டு, ஆட்டோ பயணதிற்காண பணத்தை கொடுத்து விட்டு, இறங்கிப் பார்த்தாள்..
இன்னும் சிறிது தூரம் சென்றாள் வீடு வந்து விடும். அழைப்பும் விடுக்க முடியாது.. சரி நடந்து சென்று விடலாம் என்று நினைத்து நடக்கத் தொடங்கி விட்டாள்..
தெருவில் ஆள் அரவம் யாரும் இல்லை.. நாய்கள் தான் படுத்து உறங்கிக் கொண்டிருந்தன..
அவளுக்கு நாய்கள் என்றாளே பயம்.. பயந்து நின்று விட்டாள், நம்மை துரத்த ஆரம்பித்து விடும் என்று கருதி, மெல்ல நடந்து கொண்டிருந்தாள் ..
அவள் நடந்து செல்வதை தூரத்தில் ஒரு உருவம் பார்த்துக் கொண்டே இருந்தது..
ஒரு கட்டத்தில் அவளை பின் தொடரவும் ஆரம்பித்தது..
பின்னால் வந்த உருவம், வேகத்தை கூட்டி அவளை நெருங்க ஆரம்பிக்க, தனக்கு பின்னால் யாரோ வருகிறார்கள் என்று காலடிச் சத்தத்தின் மூலமாக உணர்ந்தவள், யாரது என்று திரும்பிப் பார்க்க, பின்னால் வந்தது, வேறு யாருமல்ல பாண்டியே தான்..
அவள் தனியாக செல்வதை பார்த்த பாண்டிக்கு, வெற்றியின் மேல் உள்ள வஞ்சத்தை இவளை வைத்து தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியவன், அவளை பின் தொடர்ந்து வந்து விட்டான்..
அவனை பார்த்ததும் அவளுக்கு யார் என்று தெரியவில்லை.. இந்த ஊர் காரராக இருந்தாலும் தெரியாத ஆளிடம் பேச அவளுக்கு விருப்பம் இல்லை..
அதுவும் அவனிடம் இருந்து மதுவின் வாடை வேறு வந்ததால், நிலைமை சரி இல்லை என்று உணர்ந்து வேகமாக நடக்க ஆரம்பித்தாள்..
ஆனால் அவனோ விடுவானா என்ன இந்த சந்தர்ப்பத்தை..
கண்கொத்தி பாம்பாக அவளை பார்த்தான் அல்லவா...
அவளின் நடையில் வேகத்தை பார்த்தவன் அவனும் வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டான்..
அவளை நெருங்கி, அவளது வாயை ஒரு கையால் பொத்தியவன், மறு
கையால் அவளது இடுப்பை பிடித்து தூக்கி, அருகில் இருந்த சந்து வழியாக அடுத்த தெருவிற்கு சென்று அவனது தோப்பு வீட்டு பக்கம் அவளை கொண்டு சென்றான்.
அவள் திமிரிக் கொண்டிருந்தாள்.. இருந்தாலும் அவளை அடக்கிக் கொண்டே தோப்பு வீட்டை நெருங்கி அவளை வீட்டுக்குள் கொண்டு வந்து கதவிற்கு தாள்ப்பால் போட முயலும் போது, மதி தப்பிக்க முயற்ச்சி செய்தாள்..
ஆனால் அவனிடம் இருந்து விலக அவளுக்கு சற்று சிரமம்ஆக தான் இருந்தது..
அதே சமயத்தில், வெற்றியும் அதே வழியாக வந்து ஆட்டோ நிற்பதை கண்டதும், அவனிடம் என்னவென்று விசாரிக்க, அவனோ " கொஞ்ச நேரம் முன்ன தான் சார் மேடம் இறங்கி போனாங்க.. " என்று கூறினான்..
" அப்டியா சரி பா.. " என்று தன் அன்னைக்கு அழைத்து விசாரிக்க, அவரோ "இன்னும் வரலையே சாமி.." என்று சொன்னார்..
" இன்னேரம் போய் இருக்கனுமே... " என்று யோசித்தவன், அவளை தேடி பார்க்க, அப்பொழுது அவன் காலுக்கு ஏதோ ஒன்று தட்டுப் பட்டது..
அதை பார்த்தவனுக்கு கைப் பை போல தெரிந்தது...
எடுத்துப் பார்த்தவனுக்கு அது மதியுடையது என்று ஊர்ஜித படுத்திக் கொண்டான்..
ஏதோ விபரீதமாக நடந்து உள்ளது என்று அவன் மூளை சொல்ல, இவனும் அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்தான்..
அப்பொழுதே, அவனுடைய நண்பர்களுக்கு அழைத்து விசயத்தை கூற, அவர்களின் வீடுகளும் அருகருகில் இருக்க, அனைவரும் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி வந்து விட்டனர்..
அவர்களிடம் விஷயத்தை சொல்ல, அவர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் தேட சென்றனர்..
வெற்றியும் ஒரு பக்கம் தேடச் சென்றான்..
மனதில் ஏதேதோ எண்ண அலைகள்..
"மதிக்கு ஒன்னும் ஆகிற கூடாது " என்று நினைத்துக் கொண்டே தேடிக் கொண்டிருந்தான்..
சட்டென்று அவனுக்கு மூலையில் மின்னல் வெட்டியது போல ஒரு யோசனை..
" ஏன் மதியை அந்த பாண்டி பையன் தூக்கிட்டு போயிருக்க கூடாது.. இந்த நேரத்துல அவன் தான் தண்ணிய அடிச்சிட்டு கெடப்பான்.. அவனுக்கு ரொம்ப நாளா என் மேல பகை.. அவன் பண்ணிருக்க வாய்ப்பு அதிகமா இருக்கு.. அவன் மட்டும் பண்ணி இருக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு..." என்று சரியாக சிந்தித்தவன், அவனது தோப்பு வீட்டை நோக்கி ஓடினான்..
அவனது வீட்டிற்கு அருகில் எந்த வீடும் இல்லாமல் தனிமையாக இருக்கும்.. அதனால் அவனுக்கு மதியை அங்கு வைத்து இருப்பதில் மிகவும் சௌகரியமாக போனது..
அவன் வீட்டை நெருங்கியதும், கதவு உள் பக்கமாக பூட்டி இருந்தது..
வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தான்.. பலத்த அமைதி.. இவன் நடக்கும் போது கேட்கும் சருகுகளின் சத்தம் தான் கேட்டது..
மீண்டும் முன் பக்கமாக வந்து, கதவிற்கு மேல் தன் காதை வைத்து கூர்மையாக கேக்க, உள்ளிருந்து மெல்லிய முனகல் சத்தம்..
கேட்டது தான் தாமதம்.. வேஷ்டியை மடித்துக் கொண்டு, கதவை ஓங்கி ஒரு மிதி..
கதவு படாரெண்டு திறந்து கொண்டது..
உள்ளே, பாண்டி மதியின் வாயை இறுக்கமாக மூடி, சத்தம் எழுப்பாதவாறு அவளை பிடித்துக் கொண்டு இருந்தான்..
எப்படியும் வெற்றி அவனது மனைவியை தேடிக் கொண்டு வருவான் என்று தெரியும்.. ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை பாண்டி..
அவன் வருவதற்குள் அவனது மனைவியை தான் அடைய வேண்டும் என்று நினைத்து திட்டம் போட்டு இருந்தான்..
அவள் இவனிடம் திமிறிக் கொண்டு, அவனிடம் இருந்து விடு பட வேண்டும் என்று நினைத்து போராடிக் கொண்டிருந்தவள், ஜன்னல் வழியாக தூரத்தில் வெற்றி வருவதை பார்த்து விட்டாள் மதி..
தன்னை தேடி, விரைவில் தன் கணவன் வருவான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை..
அவனைக் கண்டதும் அவளின் முகத்தில் தோன்றிய புன்னகையை வைத்து, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த பாண்டிக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது..
அவன் மட்டும் கண்டு கொண்டால் , அவ்வளவுதான் இனி இந்த ஊரிலே இருக்க விட மாட்டான், என்று எண்ணியவன், உடனே விளக்கை எல்லாம் அணைத்து விட்டு, ஜன்னல் கதவு எல்லாவற்றையும் சாத்தியவன், அவளின் கையை பின்னால் வைத்து இறுக்கமாக கட்டி விட்டு, வாயையும் இறுக்க பொத்திக் கொண்டான்..
வெற்றி வந்து ஒரு சத்தமும் கேக்கவில்லை என்றால் , சென்று விடுவான் என்று முட்டாள்தனமாக நினைத்து இருக்க, வெற்றியோ அதை பொய்யாக்கி இதோ தன்னுடைய மதியை மீட்கப் போகிறான்..
வெற்றியைக் கண்டதும் அவனுக்கு பயம் சூழ ஆரம்பித்து விட்டது..
பாண்டி, மதியை, இழுத்து பிடித்து வைத்து இருப்பதைக் கண்டதும், அவனை கொன்று போடும் ஆத்திரம் வர, அவன் அருகில் சென்றவன்,
" யாரு மேல கைய வைக்கிற.... பொறுக்கி நாயே.. " என்றவன் மதியை தன் பக்கம் இழுத்து, ஓங்கி பளாரென்று ஒரு அறை.. அடித்த அவனுக்கே கை வழித்து விட்டது..
கையை உதறிக் கொண்டவன் மீண்டும் அவன் அருகில் வந்து, " என் பொண்டாட்டி மேல கைய வைக்க உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கனும்.. ஹான்.. " என்று பேசிக் கொண்டே ஓங்கி ஒரு மிதி..
அவ்வளவு தான் அவன் சுருண்டே விட்டான்..
இருந்தாளும் அவனை அப்படியே விட மனம் இல்லை.. அடி வெளுத்து வாங்கி விட்டான்..
" இனிமே உன் பார்வை கூட அவ மேல படக்கூடாது.. " என்றவன் மதியைப் பார்க்க, அவளும் கலங்கிய கண்களோடு அவனைதான் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவனும் ஒரு கை நீட்டி அருகில் வா என்று தலை அசைத்து அழைக்க, அவளும் ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டாள்..
அவனும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..
எங்கே அவளை மீண்டும் தூக்கிச் சென்று விடுவாரோ என்ற பயத்தில் காற்று கூட புகாதவாரு அவளை இறுக்கி அணைத்து, முகம் எங்கும் முத்த மழை பொழிந்தான்..
அவள் சென்று அணைத்தாள் தான்... ஆனால் இந்த அசுர வேகத்தை அவள் அவனிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை..
திக்கு முக்காடி போனாள் அவன் தந்த முத்த மழையில்..
அவள் விழி விரித்து அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அவனும் அவளைப் பார்த்து, " ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா.. உன்ன காணோம்னு தெரிஞ்சதும்.. உசுரே போய்டுச்சு டி.. " என்றவன் அவளது பிறை நெற்றியில் அவள் சம்மதத்துடன் ஆழ்ந்த முத்தம் ஒன்றை வைத்தான்..
அவளுக்கு தான் அவனது செய்கைகள் அனைத்தும் வியப்பாக இருந்தன ..
இந்த கொஞ்ச நாளில் என் மீது இவ்வளவு காதலா என்று..
" என்னடி.. பார்த்துட்டே இருக்க.. என்ன யோசனை.. " என்றவன் அவளைப் பார்க்க,
அவளோ, ஒன்றும் இல்லை என்று தலை ஆட்டியவள், அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்..
அவனும் அவளை தோளோடு சேர்த்து அணைத்து வெளியில் வந்தவன், அவனின் நண்பர்களுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி, வீட்டுக்கு புறப்பட்டு போகுமாறு கூறினான்,
இவனும் வண்டியை நிறுத்திய இடத்திற்கு அழைத்து வந்து இருவருமாக வீட்டிற்கு கிளம்பினர்..
தேன் இனிக்கும்..
இரு வாரம் கடந்து இருந்த நிலையில், மதிக்கு அந்த மருத்துவமனையில் இருந்து வர சொல்லி இருக்க, இவளும் போய் வர ஆரம்பித்து இருந்தாள்..
காலையில், வெற்றி கொண்டு போய் விட்டு வர, வேலை முடிந்து ஒன்று வெற்றியால் முடிந்தால் அவன் அழைத்து வருவான் அல்லது மதியே கிளம்பி வந்து விடுவாள்..
மதிக்கு தனியாக பைக் ஒன்று வாங்கி தருகிறேன் என்று வெற்றி சொன்ன போதும் அவள் வேண்டாம் என்று மறுத்து விட்டாள்..
ஏனோ அவளுக்கு வெற்றியின் கூட செல்வதற்கு விருப்பமோ என்னவோ, தினமும் அவனுடன் பயணம் செய்வதில் அவளுக்கு அளாதி விருப்பம்..
அவளுக்கே அப்படி என்றால் அவனுக்கு சொல்லவா வேண்டும்..
இப்படியே அவர்களின் நாட்களும் கழிந்தன...
அன்று அப்டித்தான்.. வெற்றி காலையில் மதியை மருத்துவமனையில் விட்டவன், மாலையில் அவளுக்கு அவசரமாக ஒரு பிரசவ கேஸ் பார்க்க வேண்டி இருப்பதால், வெற்றியிடம் வருவதற்கு தாமதம் ஆகும் நீங்கள் வரவேண்டாம் என்று கூறி விட்டாள்..
அவனுக்கும் அன்று முக்கியான வேலை ஒன்று இருந்ததால், அவனும் அதை பார்ப்பதற்கு சென்று விட்டான்..
மதியும் அந்த டெலிவரி வழக்கை முடித்து விட்டு, குழந்தை மற்றும் தாயிக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு, செவிலியரிடம் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு சென்று விட்டாள் ..
இரவு 9 மணி கடந்து விட்டதால், தனியாக செல்ல வேண்டாம் என்று வெற்றிக்கு அழைத்துப் பார்த்தாள்..
அவனுக்கோ பிஸி பிஸி என்றே வெகு நேரமாக வந்ததால், ஆட்டோ பிடித்து செல்லலாம்.. பிறகு அழைத்தால் விஷயத்தைக் கூறலாம் என்று நினைத்து இருந்தாள்..
ஆனால் அந்தோ பாவம்.. அவளது அலைபேசியில் சார்ஜ் மிக மிக குறைவாக இருந்ததை அவள் கவனிக்கவில்லை..
ஆனால் அங்கு வெற்றியோ, மதி இன்னும் வராதாதை தன் தாயின் மூலம் தெரிந்து கொண்டவன், மதிக்கு தொடர்பு விடுக்க, அவளது அலை பேசியோ தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக கூறியது..
மீண்டும் மீண்டும் தொடர்பு விடுக்க, ஒரு கட்டத்தில் அணைத்து வைக்கப் பட்டுள்ளது என்று சொல்லியது..
இவனும் சரி, நேரில் சென்றே பார்க்கலாம் என்று மதியை அழைத்து வர கிளம்பி விட்டான்..
செல்லும் வழியில் எதிரில் வரும் ஆட்டோவில் மதி வருகிறாளா என்று பார்த்துக் கொண்டே வந்தான்..
ஆனால் அவளுக்கு அங்கு ஆட்டோ கிடைக்காமல் அல்லவா நின்று இருந்தாள்..
சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்த ஆட்டோவை, அங்கு வேலை பார்த்த செக்யூரிட்டி நிப்பாட்டி, மதியை ஏற்றி விட்டார்...
அவளும் அவருக்கு நன்றி சொல்ல, அந்த செக்யூரிட்டி ஆட்டோக்காரரிடம், " தம்பி, மேடம் டாக்டர்.. பத்திரமா இறக்கி விட்டுரனும் சொல்ற இடத்துல.. " என்று சொல்லி அனுப்பினார்..
சிறிது தூரம் சென்றதும், அலைபேசியை எடுத்து பார்க்க, அதுவோ அணைந்து இருந்தது..
"சே.. சுவிட்ச் ஆப் ஆகிடுச்சே .... இப்போ அவரு கூப்டாளும் பேச முடியாது.. நம்மளும் பேச முடியாதே.. " என்று யோசித்தவள், பிறகு " சரி வீட்டுக்கு போய் பார்த்துகிருவோம்.. " என்று நினைத்தாள் ..
ஆனால் வெற்றி வருவது ஒரு வழி.. இவர்கள் செல்வது ஒரு வழி என்பதால், வெற்றி இவர்களை காண்பதற்காண சாத்தியம் இல்லை..
வெற்றி, மருத்துவமனைக்கு வந்தவன், அங்கு இருந்த செக்யூரிட்டி இடம் கேட்க, அவரோ " அவங்க கிளம்பிட்டாங்களே சார் .. நான் தான் ஆட்டோ பிடிச்சு ஏத்தி விட்டேன்.. " என்று சொல்ல,
இவனோ, " ஓ.. அப்டியா.. கிளம்பி எவ்ளோ நேரம் ஆகும் ண்ணா.. " என்று கேட்டான்..
இவன் அண்ணா என்று அழைத்ததில் அவர் தம்பி என்று இயல்பாக பேச ஆரம்பித்தார்..
" அவங்க கிளம்பி கால் மணி நேரம் ஆகும் தம்பி.. " என்று கூறினார்..
" அப்டியா.. ஆனால் நான் வரும் போது எதிரில் பாக்கவே இல்லையே.. " என்று சொல்ல,
அவரோ, " தம்பி, அந்த ஆட்டோக்காரன் இந்த பக்கமா ஒரு ரோடு போகுது பாருங்க.. இங்குட்டு தான் போனான்.. இப்படியும் போகலாம்.. நீங்க இந்த பாக்கமா போய் பாருங்க .. " என்று சொல்ல,
" சரிங்க ண்ணா.. நான் பார்த்துகிறேன்.. " என்று அவர் கூறிய வழியில் சென்றான்..
ஆட்டோ முக்கால் வாசி தூரம் வந்ததும் ஏதோ கோளாறு காரணமாக, நின்று விட அதற்கு மேல் ஆட்டோ செல்லவில்லை..
அவனும் எவ்வளோவோ முயற்சி செய்து பார்க்க, ஹுஹும்.. நகரவே இல்லை..
" மேடம்.. ஏதோ ப்ரோப்லேம் ஆகிருச்சு மேடம்.. இதுக்கு மேல ஆட்டோ போக மாட்டேங்குது.. இன்னும் கொஞ்ச தூரம் தான் நீங்க யாரையாவது வர சொல்லி போங்க மேடம்.. " என்று சொல்ல,
அவளோ, " என்னண்ணா
இப்படி பண்றீங்க.. " என்று அவரிடம் சொல்லி விட்டு, ஆட்டோ பயணதிற்காண பணத்தை கொடுத்து விட்டு, இறங்கிப் பார்த்தாள்..
இன்னும் சிறிது தூரம் சென்றாள் வீடு வந்து விடும். அழைப்பும் விடுக்க முடியாது.. சரி நடந்து சென்று விடலாம் என்று நினைத்து நடக்கத் தொடங்கி விட்டாள்..
தெருவில் ஆள் அரவம் யாரும் இல்லை.. நாய்கள் தான் படுத்து உறங்கிக் கொண்டிருந்தன..
அவளுக்கு நாய்கள் என்றாளே பயம்.. பயந்து நின்று விட்டாள், நம்மை துரத்த ஆரம்பித்து விடும் என்று கருதி, மெல்ல நடந்து கொண்டிருந்தாள் ..
அவள் நடந்து செல்வதை தூரத்தில் ஒரு உருவம் பார்த்துக் கொண்டே இருந்தது..
ஒரு கட்டத்தில் அவளை பின் தொடரவும் ஆரம்பித்தது..
பின்னால் வந்த உருவம், வேகத்தை கூட்டி அவளை நெருங்க ஆரம்பிக்க, தனக்கு பின்னால் யாரோ வருகிறார்கள் என்று காலடிச் சத்தத்தின் மூலமாக உணர்ந்தவள், யாரது என்று திரும்பிப் பார்க்க, பின்னால் வந்தது, வேறு யாருமல்ல பாண்டியே தான்..
அவள் தனியாக செல்வதை பார்த்த பாண்டிக்கு, வெற்றியின் மேல் உள்ள வஞ்சத்தை இவளை வைத்து தான் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணியவன், அவளை பின் தொடர்ந்து வந்து விட்டான்..
அவனை பார்த்ததும் அவளுக்கு யார் என்று தெரியவில்லை.. இந்த ஊர் காரராக இருந்தாலும் தெரியாத ஆளிடம் பேச அவளுக்கு விருப்பம் இல்லை..
அதுவும் அவனிடம் இருந்து மதுவின் வாடை வேறு வந்ததால், நிலைமை சரி இல்லை என்று உணர்ந்து வேகமாக நடக்க ஆரம்பித்தாள்..
ஆனால் அவனோ விடுவானா என்ன இந்த சந்தர்ப்பத்தை..
கண்கொத்தி பாம்பாக அவளை பார்த்தான் அல்லவா...
அவளின் நடையில் வேகத்தை பார்த்தவன் அவனும் வேகமாக நடக்க ஆரம்பித்து விட்டான்..
அவளை நெருங்கி, அவளது வாயை ஒரு கையால் பொத்தியவன், மறு
கையால் அவளது இடுப்பை பிடித்து தூக்கி, அருகில் இருந்த சந்து வழியாக அடுத்த தெருவிற்கு சென்று அவனது தோப்பு வீட்டு பக்கம் அவளை கொண்டு சென்றான்.
அவள் திமிரிக் கொண்டிருந்தாள்.. இருந்தாலும் அவளை அடக்கிக் கொண்டே தோப்பு வீட்டை நெருங்கி அவளை வீட்டுக்குள் கொண்டு வந்து கதவிற்கு தாள்ப்பால் போட முயலும் போது, மதி தப்பிக்க முயற்ச்சி செய்தாள்..
ஆனால் அவனிடம் இருந்து விலக அவளுக்கு சற்று சிரமம்ஆக தான் இருந்தது..
அதே சமயத்தில், வெற்றியும் அதே வழியாக வந்து ஆட்டோ நிற்பதை கண்டதும், அவனிடம் என்னவென்று விசாரிக்க, அவனோ " கொஞ்ச நேரம் முன்ன தான் சார் மேடம் இறங்கி போனாங்க.. " என்று கூறினான்..
" அப்டியா சரி பா.. " என்று தன் அன்னைக்கு அழைத்து விசாரிக்க, அவரோ "இன்னும் வரலையே சாமி.." என்று சொன்னார்..
" இன்னேரம் போய் இருக்கனுமே... " என்று யோசித்தவன், அவளை தேடி பார்க்க, அப்பொழுது அவன் காலுக்கு ஏதோ ஒன்று தட்டுப் பட்டது..
அதை பார்த்தவனுக்கு கைப் பை போல தெரிந்தது...
எடுத்துப் பார்த்தவனுக்கு அது மதியுடையது என்று ஊர்ஜித படுத்திக் கொண்டான்..
ஏதோ விபரீதமாக நடந்து உள்ளது என்று அவன் மூளை சொல்ல, இவனும் அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்தான்..
அப்பொழுதே, அவனுடைய நண்பர்களுக்கு அழைத்து விசயத்தை கூற, அவர்களின் வீடுகளும் அருகருகில் இருக்க, அனைவரும் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி வந்து விட்டனர்..
அவர்களிடம் விஷயத்தை சொல்ல, அவர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் தேட சென்றனர்..
வெற்றியும் ஒரு பக்கம் தேடச் சென்றான்..
மனதில் ஏதேதோ எண்ண அலைகள்..
"மதிக்கு ஒன்னும் ஆகிற கூடாது " என்று நினைத்துக் கொண்டே தேடிக் கொண்டிருந்தான்..
சட்டென்று அவனுக்கு மூலையில் மின்னல் வெட்டியது போல ஒரு யோசனை..
" ஏன் மதியை அந்த பாண்டி பையன் தூக்கிட்டு போயிருக்க கூடாது.. இந்த நேரத்துல அவன் தான் தண்ணிய அடிச்சிட்டு கெடப்பான்.. அவனுக்கு ரொம்ப நாளா என் மேல பகை.. அவன் பண்ணிருக்க வாய்ப்பு அதிகமா இருக்கு.. அவன் மட்டும் பண்ணி இருக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு..." என்று சரியாக சிந்தித்தவன், அவனது தோப்பு வீட்டை நோக்கி ஓடினான்..
அவனது வீட்டிற்கு அருகில் எந்த வீடும் இல்லாமல் தனிமையாக இருக்கும்.. அதனால் அவனுக்கு மதியை அங்கு வைத்து இருப்பதில் மிகவும் சௌகரியமாக போனது..
அவன் வீட்டை நெருங்கியதும், கதவு உள் பக்கமாக பூட்டி இருந்தது..
வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தான்.. பலத்த அமைதி.. இவன் நடக்கும் போது கேட்கும் சருகுகளின் சத்தம் தான் கேட்டது..
மீண்டும் முன் பக்கமாக வந்து, கதவிற்கு மேல் தன் காதை வைத்து கூர்மையாக கேக்க, உள்ளிருந்து மெல்லிய முனகல் சத்தம்..
கேட்டது தான் தாமதம்.. வேஷ்டியை மடித்துக் கொண்டு, கதவை ஓங்கி ஒரு மிதி..
கதவு படாரெண்டு திறந்து கொண்டது..
உள்ளே, பாண்டி மதியின் வாயை இறுக்கமாக மூடி, சத்தம் எழுப்பாதவாறு அவளை பிடித்துக் கொண்டு இருந்தான்..
எப்படியும் வெற்றி அவனது மனைவியை தேடிக் கொண்டு வருவான் என்று தெரியும்.. ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை பாண்டி..
அவன் வருவதற்குள் அவனது மனைவியை தான் அடைய வேண்டும் என்று நினைத்து திட்டம் போட்டு இருந்தான்..
அவள் இவனிடம் திமிறிக் கொண்டு, அவனிடம் இருந்து விடு பட வேண்டும் என்று நினைத்து போராடிக் கொண்டிருந்தவள், ஜன்னல் வழியாக தூரத்தில் வெற்றி வருவதை பார்த்து விட்டாள் மதி..
தன்னை தேடி, விரைவில் தன் கணவன் வருவான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை..
அவனைக் கண்டதும் அவளின் முகத்தில் தோன்றிய புன்னகையை வைத்து, ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த பாண்டிக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது..
அவன் மட்டும் கண்டு கொண்டால் , அவ்வளவுதான் இனி இந்த ஊரிலே இருக்க விட மாட்டான், என்று எண்ணியவன், உடனே விளக்கை எல்லாம் அணைத்து விட்டு, ஜன்னல் கதவு எல்லாவற்றையும் சாத்தியவன், அவளின் கையை பின்னால் வைத்து இறுக்கமாக கட்டி விட்டு, வாயையும் இறுக்க பொத்திக் கொண்டான்..
வெற்றி வந்து ஒரு சத்தமும் கேக்கவில்லை என்றால் , சென்று விடுவான் என்று முட்டாள்தனமாக நினைத்து இருக்க, வெற்றியோ அதை பொய்யாக்கி இதோ தன்னுடைய மதியை மீட்கப் போகிறான்..
வெற்றியைக் கண்டதும் அவனுக்கு பயம் சூழ ஆரம்பித்து விட்டது..
பாண்டி, மதியை, இழுத்து பிடித்து வைத்து இருப்பதைக் கண்டதும், அவனை கொன்று போடும் ஆத்திரம் வர, அவன் அருகில் சென்றவன்,
" யாரு மேல கைய வைக்கிற.... பொறுக்கி நாயே.. " என்றவன் மதியை தன் பக்கம் இழுத்து, ஓங்கி பளாரென்று ஒரு அறை.. அடித்த அவனுக்கே கை வழித்து விட்டது..
கையை உதறிக் கொண்டவன் மீண்டும் அவன் அருகில் வந்து, " என் பொண்டாட்டி மேல கைய வைக்க உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கனும்.. ஹான்.. " என்று பேசிக் கொண்டே ஓங்கி ஒரு மிதி..
அவ்வளவு தான் அவன் சுருண்டே விட்டான்..
இருந்தாளும் அவனை அப்படியே விட மனம் இல்லை.. அடி வெளுத்து வாங்கி விட்டான்..
" இனிமே உன் பார்வை கூட அவ மேல படக்கூடாது.. " என்றவன் மதியைப் பார்க்க, அவளும் கலங்கிய கண்களோடு அவனைதான் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவனும் ஒரு கை நீட்டி அருகில் வா என்று தலை அசைத்து அழைக்க, அவளும் ஓடிச் சென்று அவனை அணைத்துக் கொண்டாள்..
அவனும் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்..
எங்கே அவளை மீண்டும் தூக்கிச் சென்று விடுவாரோ என்ற பயத்தில் காற்று கூட புகாதவாரு அவளை இறுக்கி அணைத்து, முகம் எங்கும் முத்த மழை பொழிந்தான்..
அவள் சென்று அணைத்தாள் தான்... ஆனால் இந்த அசுர வேகத்தை அவள் அவனிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை..
திக்கு முக்காடி போனாள் அவன் தந்த முத்த மழையில்..
அவள் விழி விரித்து அவனையே பார்த்துக்கொண்டிருக்க, அவனும் அவளைப் பார்த்து, " ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா.. உன்ன காணோம்னு தெரிஞ்சதும்.. உசுரே போய்டுச்சு டி.. " என்றவன் அவளது பிறை நெற்றியில் அவள் சம்மதத்துடன் ஆழ்ந்த முத்தம் ஒன்றை வைத்தான்..
அவளுக்கு தான் அவனது செய்கைகள் அனைத்தும் வியப்பாக இருந்தன ..
இந்த கொஞ்ச நாளில் என் மீது இவ்வளவு காதலா என்று..
" என்னடி.. பார்த்துட்டே இருக்க.. என்ன யோசனை.. " என்றவன் அவளைப் பார்க்க,
அவளோ, ஒன்றும் இல்லை என்று தலை ஆட்டியவள், அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்..
அவனும் அவளை தோளோடு சேர்த்து அணைத்து வெளியில் வந்தவன், அவனின் நண்பர்களுக்கு அழைத்து விஷயத்தை சொல்லி, வீட்டுக்கு புறப்பட்டு போகுமாறு கூறினான்,
இவனும் வண்டியை நிறுத்திய இடத்திற்கு அழைத்து வந்து இருவருமாக வீட்டிற்கு கிளம்பினர்..
தேன் இனிக்கும்..