அத்தியாயம் 25
அடுத்தடுத்து வந்த நாட்களில் வெற்றியின் ஐவர் குழு, அவர்கள் வேளையில் முழு மூச்சாக இறங்கி விட்டனர்..
மதியை, மருத்துவமனைக்கு கொண்டு போய் விடும் போதும் கூட்டிக்கொண்டு வரும் போதும் மட்டுமே அவனை பார்க்க சந்தர்ப்பம் அமைகிறது..
மற்ற நேரத்தில் அவன் எப்பொழுது வீட்டிற்கு வருகிறான், போகிறான் என்று ஒன்றும் அவளுக்கு தெரிவதில்லை..
இரவு அவன் வரும் வரை காத்திருக்க நினைத்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அவளாள் முழித்திருக்க முடியாமல் அப்படியே உறங்கி விடுகின்றாள்....
வெற்றி வந்த பிறகு தான், அவளை சரியாக படுக்க வைத்து, அவனும் அவள் அருகினில் நெருங்கி படுத்துக் கொள்வான்..
வண்டியில் செல்லும் போதும் அவளுடன் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொள்வான்..
இப்டியே தான் அடுத்தடுத்து வந்த நாட்களும் சென்றது..
இதற்கிடையில், மதி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை இரண்டு தினங்களுக்கு முன் கொடுக்கச் சென்று இருந்தாள்..
ஆனால் மருத்துவமனையின் டீன், வரவில்லை என்ற காரணத்தால் இன்று மீண்டும் சந்திக்க சென்று இருந்தாள்..
அறையின் கதவில்,
Dr. மாணிக்கவேல் என்ற பொன்னிற பலகையில் அவர் பெயர் மின்னிக் கொண்டிருந்தது..
ஐம்பது வயது மதிக்கதக்க அவர், மருத்தவ தொழிலை ஒரு சேவையாக செய்து கொண்டு வருகின்றார்.. மனைவியை இழந்த அவருக்கு மகன் மட்டுமே துணை..
அவரது மகன் Dr. ஹரி பிரசாத்.. இதய நிபுணராகவும், பொது நல மருத்துவராகவும் இருக்கிறான் அதே மருத்துவமனையில்..
" மே ஐ கம் இன் சார்.. " என்று அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு காத்திருக்க,
அவரும், " எஸ்.. கம் இன்.. " என்று அனுமதி அளித்த பிறகு உள் நுழைந்தாள்...
" வாங்க... மிசஸ். மதி..!! ப்ளீஸ் சிட் டவுன்.. " என்று அவளுக்கு இருக்கையில் அமரச் சொல்ல,
அவளும் அதை ஏற்றுக் கொண்டு, " தேங்க் யூ சார்.. " என்று கூறி விட்டு அமர்ந்தாள்..
"சொல்லுங்க மிஸஸ். மதி..!! என்ன விஷயம்.. முக்கியமான விஷயம் இல்லனா, என்னைத் தேடி நேரடியாக வர மாட்டீங்க.. " என்று அவர் அவளைப் பார்த்துக் கூற,
அவளும், " ஆமா.. சார்.. முக்கியமான விஷயம் தான்.. ஆனால் அதை எப்படி சொல்றதுன்னு கொஞ்சம் தயக்கமாவும் இருக்கு.. ஏன் னா, இந்த ஹாஸ்பிடல் ல நான் சேந்தே கொஞ்ச நாட்கள் தான் ஆகுது.. அதுக்குள்ள நான் இந்த விஷயத்தை சொன்னால், நீங்கள் அதை எப்படி எடுத்துப்பீங்களோனு தான் தெரியல.. " என்று சற்று தயக்கத்துடன் அவள் பேசிக் கொண்டிருக்க,
அவள் சொல்வதை கேட்டவரின் முகம் யோசனையுடன் மேலும் சொல்லுங்கள் என்ற அர்த்தத்துடன் அவள் மேல் படிய, அவளும் அவரின் பார்வையயை புரிந்து கொண்டு மேற்கொண்டு பேச ஆரம்பித்தாள்..
" சார்.. இது என்னோட ராஜினாமா லெட்டர்.. " என்று கடிதத்தை நீட்ட, அவரும்,
" என்ன ஆச்சு.. ஏன் அதுக்குள்ள ரிசைன் பண்றீங்க.. " என்று கேட்டவருக்கு,
" சார்.. நாங்க சொந்தமா கிளினிக் ஸ்டார்ட் பண்ண போறோம்.. என் ஹஸ்பண்ட் எனக்காக ஏற்பாடு பண்ணி இருக்காரு.. இப்போ இங்க இருந்து, லெட்டர் குடுத்த 1 மாசம் கம்ப்ல்சரி ஒர்க் பண்ணனும்.. அதுக்குள்ள அங்க எல்லாம் arrange ஆகிரும்.. அதுனால தான் நான் இப்பவே கொடுக்கிறேன்.. " என்று அனைத்தையும் ஒரு வழியாக கூறி முடித்தாள்..
அவரும் அனைத்தையும் கேட்டு விட்டு, பின், " என்ன டாக்டர்.. இப்படி சொல்றீங்க.. உங்களை போல நல்ல திறமை வாய்ந்த டாக்டர், இந்த மகப்பேறு பிரிவுல, சல்லடை போட்டு தான் தேடணும்.. வந்து கொஞ்ச நாள்லையே, கைராசியான டாக்டர்னு பேரு எடுத்துட்டிங்க.. இனி இன்னொரு டாக்டரை தேடணும்.. " என்று சிரித்துக் கொண்டே சொல்ல..
அவளும் என்ன சொல்வதென்று தெரியாமல், சிறு புன்னகையை மட்டும் சிந்தினால்..
" ஓகே.. டாக்டர் மதி.. நீங்க இன்னும் ஒன் மன்த் ஒர்க் பண்ணிட்டு உங்க ஜாப் ல இருந்து ரீலீவ் ஆகிக்கலாம்.. All the best for your future... " என்று அவளிடம் கை குலுக்கி வாழ்த்தி அனுப்பி வைத்தார்..
வெளியில் வந்த மதிக்கு, எப்படி டா இதை சாமாளிக்க போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்..
இப்பொழுது இந்த விஷயம் வெகு சுலபமாக அமைந்ததில், ஒரு பெரிய பாரம் இறங்கியது போல ஆசுவாசத்துடன் அவள் அறைக்குச் சென்றாள்..
மாலை, வெற்றி அழைத்து செல்லும் போது, அவனிடன் விஷயத்தைக் கூறினாள்.. அவனும் " நல்லாதா போச்சு மதி.. நீ அங்க ஆரம்பிக்கிறதுக்கு என்ன என்ன தேவைப்படும் னு சொல்லிட்டா, நம்ம அதுக்குள்ள வாங்கி எல்லாத்தையும் செட் பண்ணிரலாம்.. " என்று சொல்ல,
அவளும் " ம்ம். வீட்டுக்கு போய்ட்டு சொல்றேன்.. " என்று கூறினாள்..
" ஏன் இப்போ எல்லாம் வீட்டுக்கு ரொம்ப லேட்டாவே வர்றீங்க.. " என்று அவன் தாமதமாக வருவதற்கு காரணம் கேட்க,
" ரொம்ப முக்கியமான ஒரு ப்ராஜெக்ட் போய்ட்டு இருக்கு மதி.. அதை ரொம்ப ரொம்ப கவனமா செயல் படுத்தனும்.. அதுனால தான் வர்ற தாமதம் ஆகுது.. " என்று விளக்கம் அளித்தான்..
அப்படியே பேசிக் கொண்டே வர, வீடும் வந்து விட்டது..
அவளை இறக்கி விட்டு செல்லும் தருவாயில், " வேந்தன்!!" என்று அழைத்தவளை என்னவென்று திரும்பிப் பார்த்தவனின் கைகளை பிடித்துக் கொண்டு,
" எனக்கு உங்கள வர வர ரொம்ப மிஸ் பண்ற போல தோணுது.. சீக்கிரம் இந்த வேலையை எல்லாம் முடிங்க.. " என்று குரல் தழுதழுக்க கூறியவளை பார்க்க, அவனுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது...
ஒரு பெருமூச்சுடன் "ம்ம்.."என்று மட்டுமே கூறினான்..
பின்னர் அவனும் சென்று விட, அவளும் வீட்டின் உள்ளே சென்று விட்டாள்..
அதே சமயம், இங்கு ரவியின் வீட்டிலோ, கவி அவன் வீட்டை விட்டு சென்று இருந்தாள் அவன் தம்பியுடன்..
ஏற்கனவே அவள் தங்கி இருந்த அந்த சிறிய வீட்டிற்கே மீண்டும் அக்காவும் தம்பியும் சென்று விட்டனர்..
அன்று இரவு, அவன் இதழில் அழுந்த முத்தம் இட்டு, தன் அறைக்குச் சென்றவள், வெகு நேரம் தூங்காமல் எதை எதையோ யோசித்து, இதுவே சரி என நினைத்து, மறுநாள் காலையில், தன் தம்பியிடம் சில விஷயங்களை மட்டும் கூறி, அவனையும் கூட்டிக்கொண்டு தான் இருந்த பழைய வீட்டிற்கு செல்லலாம் என்று இருவரின் உடுப்புகளையும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தனர்..
ஆனால் அவனுக்கு தெரியாதா.. வந்த நாளில் இருந்து பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றான்.
தன் தமக்கையும் மாமனும் எப்படி இருக்கிறார்கள் என்று..
அதனால் அவன் அவளிடம் எதிர் கேள்வி கேட்கமல் அவளுடன் சென்றான்..
ஆனால் மனதில் ஒன்று மட்டும் நினைத்துக் கொண்டான்..
தன் அக்காவை தான் தான் இனி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று..
இருவரும் இரு வேறு மன நிலையில் வெளியில் வர, எதிரே நடராஜன் அவர்களை பார்த்து யோசனையுடன், " ரெண்டு பேரும் எங்க கிளம்பிடீங்க.. இந்த காலங்காத்தால.. " என்று கேட்டதற்கு,
இருவரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றனர்..
" நான் கேக்குறேன்.. யாருமே பதில் சொல்லமா இருந்தா என்ன மா அர்த்தம் " என்று இப்பொழுது தன் மருமகளை பார்த்து கேள்வி எழுப்ப,
அவளோ தயக்கத்துடன், " மாமா.. நாங்க இந்த வீட்டை விட்டு கிளம்புறோம்.. " என்று அவரைப் பார்த்து சொல்ல,
அவரோ அதிர்ச்சியில், " என்னமா இப்படி சொல்ற.. என்ன ஆச்சு.. எதுக்கு இந்த முடிவு.. " என்றார்..
" என்ன பண்ண சொல்லறீங்க.. எனக்கு வேற வழி தெரியல. என்னை பிடிக்காம அவரு தினம் தினம் குடிச்சு குடிச்சு செத்துருவாரு போல.. அவர் கூட வாழ தான் ஆசை பட்டேன்.. ஆனால் என்னால அவரு அவரையே அழிச்சிக்கிறாரு.. அதை என்னால பார்த்துட்டு சகிச்சிட்டு இருக்க முடியல.. அவரு கூட வாழ முடியலனாலும், அவரை தூரத்தில் இருந்து பார்த்தாவது சந்தோச பட்டுகிறேன்.. " என்று அவரிடம் கூறி முடித்தாள்.
" அவசர பட்டு முடிவு எடுக்க வேண்டாம் மா.. நான் வேணும்னா திரும்ப பேசிப் பாக்குறேன்.. அவன்கிட்ட.. " என்றார்..
" என்ன பேசுவீங்க.. நான் தான் தினமும் பாக்குறேனே... உங்களை கொஞ்சம் கூட மதிக்க மாட்டேங்கிறாரு.. என்னை அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சதுல உங்க மேலயும் அவருக்கு ரொம்ப கோவம்.. நான் இல்லனா எல்லாமே சரி ஆகிரும்.. " என்றவள், பின்
" அவரு இது வரைக்கும் எங்க கல்யாணத்தை முறைப் படி பதிவு பண்ணல.. அதுனால அவருக்கு பிடிச்ச மாதிரி அவர் வாழக்கையை அமைச்சுகிட்டும். நான் அதுக்கு எப்பவும் குறுக்க நிக்க மாட்டேன்.. " என்று கூறியவள், விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள்.
பின் ஏதோ யோசனை வந்தவளாக, மீண்டும் அவரிடம் வந்து, " ஏதாவது ரொம்ப முக்கியமான விடயம் னா எனக்கு தகவல் சொல்லுங்க.. " என்று தன் அலை பேசி எண்ணை அவரிடம் கொடுத்து விட்டு, தன் தம்பியை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்..
இதோ அவள் சென்று இரண்டு நாட்கள் ஆகி விட்டன..
இரு நாட்களும் அவன் நினைப்பிலே வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடந்தவள், இப்டியே இருந்தாள் சரி வராது என்று நினைத்து, இதற்கு முன்னாடி வேலை செய்த அதே இடத்தில் மீண்டும் வேலை தேடிச் செல்ல, அவர்கள் வேலை இல்லை என்று சொல்லி விட்டனர்..
பின்னர், ஒரு ரெஸ்டாரெண்ட்டில் வேலை கிடைக்க, அங்கு அன்றே வேலைக்கு சேர்ந்து விட்டாள்..
அவள் சென்ற விஷயமே ரவிக்கு தெரியாது..
அவனாக அவளை தேடினாள், அவளை பற்றிக் கூறலாம் என்று நினைத்து இருந்தார் நடராஜன்.. ஆனால் அவனோ, அவன் இஷ்டம் போல திரிய அவளைப் பற்றி துளி கூட அவன் நினைத்துப் பார்க்கவில்லை..
" அந்த பொண்ணு போனது சரிதான்.. " என்று உள்ளுக்குள்ளயே நடராஜன் நினைத்துக் கொண்டார்..
வழக்கம் போல, அன்றும் அவன் இரவு குடித்து விட்டு வர, தட்டு தடுமாறி அவன் அறையை வந்து அடைந்து கட்டிலில் படுக்காமல், கீழே விழுந்தவன் அப்படியே படுத்து விட்டான்..
மறுநாள் தலை விண் விண் என்று வலிக்க, அவன் கீழே படுத்து இருப்பதை பார்த்து, சற்று யோசனையுடன் எழுந்து அலுப்பு தீர குளித்து விட்டு வந்தான்..
அவன் எப்பொழுதும் எழும் போது, அவன் அறையில் எலுமிச்சை பழம் ஜூஸ் இருக்கும்.. இருக்கிறதா என்று பார்க்க, அதுவும் இல்லை..
உடை எல்லாம் அணிந்து தயார் ஆகி ஆபீஸ்க்கு செல்ல கிளம்பி கீழே வந்தவன், சாப்பிடுவதற்கு அமர, வேலைக்கார பெண்மணி வந்து பரிமாறினார்..
சாப்பிட்டு பார்த்தவனுக்கு உணவின் சுவையும் வேறு போல இருக்க, யோசனையுடனே சாப்பிட்டு முடித்து கிளம்பி சென்று விட்டான்..
கம்பெனிக்கு சென்றவன், வேலைகளை கவனிக்க ஆரம்பிக்க, இந்த யோசனையில் இருந்து வெளி வந்து, வேலையில் கவனத்தை திசை திருப்பினான்..
மாலை நேரம் நெருங்க, ரவி, அவனது கிளைன்ட் இருவருடன் தொழில் சம்மந்தமாக பேச, ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு வர சொல்லி இருந்தான்..
மூவரும் அங்கே சந்தித்து கொண்டு, பேசிக் கொண்டிருந்தனர்..
பின்னர் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு விட்டு , வெயிட்ரை அழைத்து ஆர்டர் செய்ய,
சிறிது நேரத்தில் அவர்கள் இருந்த டேபிலுக்கு கொண்டு வந்தது என்னவோ கவி தான்..
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, அதிர்ந்து விட்டனர்..
அவளோ அந்த அதிர்வுடனே அங்கிருந்து நகன்றாள்..
அவளையே யோசனையுடன் பார்த்து இருந்தவனை கலைத்தது என்னவோ, அவனின் நண்பர்கள் தான்..
அவர்களின் அழைப்பில் நிதானத்திற்கு வந்தவன், அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவனது பார்வை கவியையே சுற்றிக் கொண்டு வந்தது..
பின்னர் பேசிவிட்டு, அவர் அவர் கிளம்ப இவனும் காரில் கிளம்பி விட்டான்..
ஏதேதோ எண்ண அலைகள்.. " அவ ஏன் இங்க வேலை பாக்குறா.. அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையே.. அப்பாவும் இதை பத்தி சொல்லல.. ரெண்டு நாளா, அவளை வீட்டுல கூட பாக்க முடியலையே.. எப்பவும் என் கண்ணு முன்னாடி வந்து நிப்பா.. எனக்கு என்ன வேணும், வேண்டாம்னு பார்த்து பார்த்து பண்ணுவா.. இப்போ என்ன டா னா, இங்க இருக்கா.. அதுவும் நான் நைட் ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு வந்தா கூட என்னை ரூம்க்கு பத்திரமா கூட்டிட்டு போவா.. ஆனால் அப்பவும் அவ வரலையே.. " என்று ஒவ்வொன்றாய் அவன் நியாபக படுத்திப் பார்க்க, அவனுக்கு ஏதோ ஒன்று புரிந்தும் புரியாமலும் இருந்தது...
" ஒரு வேலை... இப்படி இருக்குமோ.. " என்று அதனை ஆழமாக யோசித்தவன், சாலையில் கவனம் செலுத்த மறந்து விட்டான்..
குறுக்கே மாடு ஒன்று வந்ததை அவன் கவனிக்காமல் செல்ல, அருகில் நெருங்கியதும் கவனித்து வண்டியை திருப்ப முயல, பின்னால் வந்த வண்டி மீது மோதி, விபத்து ஏற்பட்டு, படுகாயங்களுடன் அவன் மயங்கிய நிலைக்குச் சென்றான்..
தேன் இனிக்கும்..
அடுத்தடுத்து வந்த நாட்களில் வெற்றியின் ஐவர் குழு, அவர்கள் வேளையில் முழு மூச்சாக இறங்கி விட்டனர்..
மதியை, மருத்துவமனைக்கு கொண்டு போய் விடும் போதும் கூட்டிக்கொண்டு வரும் போதும் மட்டுமே அவனை பார்க்க சந்தர்ப்பம் அமைகிறது..
மற்ற நேரத்தில் அவன் எப்பொழுது வீட்டிற்கு வருகிறான், போகிறான் என்று ஒன்றும் அவளுக்கு தெரிவதில்லை..
இரவு அவன் வரும் வரை காத்திருக்க நினைத்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அவளாள் முழித்திருக்க முடியாமல் அப்படியே உறங்கி விடுகின்றாள்....
வெற்றி வந்த பிறகு தான், அவளை சரியாக படுக்க வைத்து, அவனும் அவள் அருகினில் நெருங்கி படுத்துக் கொள்வான்..
வண்டியில் செல்லும் போதும் அவளுடன் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொள்வான்..
இப்டியே தான் அடுத்தடுத்து வந்த நாட்களும் சென்றது..
இதற்கிடையில், மதி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை இரண்டு தினங்களுக்கு முன் கொடுக்கச் சென்று இருந்தாள்..
ஆனால் மருத்துவமனையின் டீன், வரவில்லை என்ற காரணத்தால் இன்று மீண்டும் சந்திக்க சென்று இருந்தாள்..
அறையின் கதவில்,
Dr. மாணிக்கவேல் என்ற பொன்னிற பலகையில் அவர் பெயர் மின்னிக் கொண்டிருந்தது..
ஐம்பது வயது மதிக்கதக்க அவர், மருத்தவ தொழிலை ஒரு சேவையாக செய்து கொண்டு வருகின்றார்.. மனைவியை இழந்த அவருக்கு மகன் மட்டுமே துணை..
அவரது மகன் Dr. ஹரி பிரசாத்.. இதய நிபுணராகவும், பொது நல மருத்துவராகவும் இருக்கிறான் அதே மருத்துவமனையில்..
" மே ஐ கம் இன் சார்.. " என்று அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு காத்திருக்க,
அவரும், " எஸ்.. கம் இன்.. " என்று அனுமதி அளித்த பிறகு உள் நுழைந்தாள்...
" வாங்க... மிசஸ். மதி..!! ப்ளீஸ் சிட் டவுன்.. " என்று அவளுக்கு இருக்கையில் அமரச் சொல்ல,
அவளும் அதை ஏற்றுக் கொண்டு, " தேங்க் யூ சார்.. " என்று கூறி விட்டு அமர்ந்தாள்..
"சொல்லுங்க மிஸஸ். மதி..!! என்ன விஷயம்.. முக்கியமான விஷயம் இல்லனா, என்னைத் தேடி நேரடியாக வர மாட்டீங்க.. " என்று அவர் அவளைப் பார்த்துக் கூற,
அவளும், " ஆமா.. சார்.. முக்கியமான விஷயம் தான்.. ஆனால் அதை எப்படி சொல்றதுன்னு கொஞ்சம் தயக்கமாவும் இருக்கு.. ஏன் னா, இந்த ஹாஸ்பிடல் ல நான் சேந்தே கொஞ்ச நாட்கள் தான் ஆகுது.. அதுக்குள்ள நான் இந்த விஷயத்தை சொன்னால், நீங்கள் அதை எப்படி எடுத்துப்பீங்களோனு தான் தெரியல.. " என்று சற்று தயக்கத்துடன் அவள் பேசிக் கொண்டிருக்க,
அவள் சொல்வதை கேட்டவரின் முகம் யோசனையுடன் மேலும் சொல்லுங்கள் என்ற அர்த்தத்துடன் அவள் மேல் படிய, அவளும் அவரின் பார்வையயை புரிந்து கொண்டு மேற்கொண்டு பேச ஆரம்பித்தாள்..
" சார்.. இது என்னோட ராஜினாமா லெட்டர்.. " என்று கடிதத்தை நீட்ட, அவரும்,
" என்ன ஆச்சு.. ஏன் அதுக்குள்ள ரிசைன் பண்றீங்க.. " என்று கேட்டவருக்கு,
" சார்.. நாங்க சொந்தமா கிளினிக் ஸ்டார்ட் பண்ண போறோம்.. என் ஹஸ்பண்ட் எனக்காக ஏற்பாடு பண்ணி இருக்காரு.. இப்போ இங்க இருந்து, லெட்டர் குடுத்த 1 மாசம் கம்ப்ல்சரி ஒர்க் பண்ணனும்.. அதுக்குள்ள அங்க எல்லாம் arrange ஆகிரும்.. அதுனால தான் நான் இப்பவே கொடுக்கிறேன்.. " என்று அனைத்தையும் ஒரு வழியாக கூறி முடித்தாள்..
அவரும் அனைத்தையும் கேட்டு விட்டு, பின், " என்ன டாக்டர்.. இப்படி சொல்றீங்க.. உங்களை போல நல்ல திறமை வாய்ந்த டாக்டர், இந்த மகப்பேறு பிரிவுல, சல்லடை போட்டு தான் தேடணும்.. வந்து கொஞ்ச நாள்லையே, கைராசியான டாக்டர்னு பேரு எடுத்துட்டிங்க.. இனி இன்னொரு டாக்டரை தேடணும்.. " என்று சிரித்துக் கொண்டே சொல்ல..
அவளும் என்ன சொல்வதென்று தெரியாமல், சிறு புன்னகையை மட்டும் சிந்தினால்..
" ஓகே.. டாக்டர் மதி.. நீங்க இன்னும் ஒன் மன்த் ஒர்க் பண்ணிட்டு உங்க ஜாப் ல இருந்து ரீலீவ் ஆகிக்கலாம்.. All the best for your future... " என்று அவளிடம் கை குலுக்கி வாழ்த்தி அனுப்பி வைத்தார்..
வெளியில் வந்த மதிக்கு, எப்படி டா இதை சாமாளிக்க போகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்..
இப்பொழுது இந்த விஷயம் வெகு சுலபமாக அமைந்ததில், ஒரு பெரிய பாரம் இறங்கியது போல ஆசுவாசத்துடன் அவள் அறைக்குச் சென்றாள்..
மாலை, வெற்றி அழைத்து செல்லும் போது, அவனிடன் விஷயத்தைக் கூறினாள்.. அவனும் " நல்லாதா போச்சு மதி.. நீ அங்க ஆரம்பிக்கிறதுக்கு என்ன என்ன தேவைப்படும் னு சொல்லிட்டா, நம்ம அதுக்குள்ள வாங்கி எல்லாத்தையும் செட் பண்ணிரலாம்.. " என்று சொல்ல,
அவளும் " ம்ம். வீட்டுக்கு போய்ட்டு சொல்றேன்.. " என்று கூறினாள்..
" ஏன் இப்போ எல்லாம் வீட்டுக்கு ரொம்ப லேட்டாவே வர்றீங்க.. " என்று அவன் தாமதமாக வருவதற்கு காரணம் கேட்க,
" ரொம்ப முக்கியமான ஒரு ப்ராஜெக்ட் போய்ட்டு இருக்கு மதி.. அதை ரொம்ப ரொம்ப கவனமா செயல் படுத்தனும்.. அதுனால தான் வர்ற தாமதம் ஆகுது.. " என்று விளக்கம் அளித்தான்..
அப்படியே பேசிக் கொண்டே வர, வீடும் வந்து விட்டது..
அவளை இறக்கி விட்டு செல்லும் தருவாயில், " வேந்தன்!!" என்று அழைத்தவளை என்னவென்று திரும்பிப் பார்த்தவனின் கைகளை பிடித்துக் கொண்டு,
" எனக்கு உங்கள வர வர ரொம்ப மிஸ் பண்ற போல தோணுது.. சீக்கிரம் இந்த வேலையை எல்லாம் முடிங்க.. " என்று குரல் தழுதழுக்க கூறியவளை பார்க்க, அவனுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது...
ஒரு பெருமூச்சுடன் "ம்ம்.."என்று மட்டுமே கூறினான்..
பின்னர் அவனும் சென்று விட, அவளும் வீட்டின் உள்ளே சென்று விட்டாள்..
அதே சமயம், இங்கு ரவியின் வீட்டிலோ, கவி அவன் வீட்டை விட்டு சென்று இருந்தாள் அவன் தம்பியுடன்..
ஏற்கனவே அவள் தங்கி இருந்த அந்த சிறிய வீட்டிற்கே மீண்டும் அக்காவும் தம்பியும் சென்று விட்டனர்..
அன்று இரவு, அவன் இதழில் அழுந்த முத்தம் இட்டு, தன் அறைக்குச் சென்றவள், வெகு நேரம் தூங்காமல் எதை எதையோ யோசித்து, இதுவே சரி என நினைத்து, மறுநாள் காலையில், தன் தம்பியிடம் சில விஷயங்களை மட்டும் கூறி, அவனையும் கூட்டிக்கொண்டு தான் இருந்த பழைய வீட்டிற்கு செல்லலாம் என்று இருவரின் உடுப்புகளையும் எடுத்துக் கொண்டு வெளியில் வந்தனர்..
ஆனால் அவனுக்கு தெரியாதா.. வந்த நாளில் இருந்து பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றான்.
தன் தமக்கையும் மாமனும் எப்படி இருக்கிறார்கள் என்று..
அதனால் அவன் அவளிடம் எதிர் கேள்வி கேட்கமல் அவளுடன் சென்றான்..
ஆனால் மனதில் ஒன்று மட்டும் நினைத்துக் கொண்டான்..
தன் அக்காவை தான் தான் இனி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று..
இருவரும் இரு வேறு மன நிலையில் வெளியில் வர, எதிரே நடராஜன் அவர்களை பார்த்து யோசனையுடன், " ரெண்டு பேரும் எங்க கிளம்பிடீங்க.. இந்த காலங்காத்தால.. " என்று கேட்டதற்கு,
இருவரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றனர்..
" நான் கேக்குறேன்.. யாருமே பதில் சொல்லமா இருந்தா என்ன மா அர்த்தம் " என்று இப்பொழுது தன் மருமகளை பார்த்து கேள்வி எழுப்ப,
அவளோ தயக்கத்துடன், " மாமா.. நாங்க இந்த வீட்டை விட்டு கிளம்புறோம்.. " என்று அவரைப் பார்த்து சொல்ல,
அவரோ அதிர்ச்சியில், " என்னமா இப்படி சொல்ற.. என்ன ஆச்சு.. எதுக்கு இந்த முடிவு.. " என்றார்..
" என்ன பண்ண சொல்லறீங்க.. எனக்கு வேற வழி தெரியல. என்னை பிடிக்காம அவரு தினம் தினம் குடிச்சு குடிச்சு செத்துருவாரு போல.. அவர் கூட வாழ தான் ஆசை பட்டேன்.. ஆனால் என்னால அவரு அவரையே அழிச்சிக்கிறாரு.. அதை என்னால பார்த்துட்டு சகிச்சிட்டு இருக்க முடியல.. அவரு கூட வாழ முடியலனாலும், அவரை தூரத்தில் இருந்து பார்த்தாவது சந்தோச பட்டுகிறேன்.. " என்று அவரிடம் கூறி முடித்தாள்.
" அவசர பட்டு முடிவு எடுக்க வேண்டாம் மா.. நான் வேணும்னா திரும்ப பேசிப் பாக்குறேன்.. அவன்கிட்ட.. " என்றார்..
" என்ன பேசுவீங்க.. நான் தான் தினமும் பாக்குறேனே... உங்களை கொஞ்சம் கூட மதிக்க மாட்டேங்கிறாரு.. என்னை அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சதுல உங்க மேலயும் அவருக்கு ரொம்ப கோவம்.. நான் இல்லனா எல்லாமே சரி ஆகிரும்.. " என்றவள், பின்
" அவரு இது வரைக்கும் எங்க கல்யாணத்தை முறைப் படி பதிவு பண்ணல.. அதுனால அவருக்கு பிடிச்ச மாதிரி அவர் வாழக்கையை அமைச்சுகிட்டும். நான் அதுக்கு எப்பவும் குறுக்க நிக்க மாட்டேன்.. " என்று கூறியவள், விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள்.
பின் ஏதோ யோசனை வந்தவளாக, மீண்டும் அவரிடம் வந்து, " ஏதாவது ரொம்ப முக்கியமான விடயம் னா எனக்கு தகவல் சொல்லுங்க.. " என்று தன் அலை பேசி எண்ணை அவரிடம் கொடுத்து விட்டு, தன் தம்பியை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்..
இதோ அவள் சென்று இரண்டு நாட்கள் ஆகி விட்டன..
இரு நாட்களும் அவன் நினைப்பிலே வீட்டுக்குள்ளயே முடங்கிக் கிடந்தவள், இப்டியே இருந்தாள் சரி வராது என்று நினைத்து, இதற்கு முன்னாடி வேலை செய்த அதே இடத்தில் மீண்டும் வேலை தேடிச் செல்ல, அவர்கள் வேலை இல்லை என்று சொல்லி விட்டனர்..
பின்னர், ஒரு ரெஸ்டாரெண்ட்டில் வேலை கிடைக்க, அங்கு அன்றே வேலைக்கு சேர்ந்து விட்டாள்..
அவள் சென்ற விஷயமே ரவிக்கு தெரியாது..
அவனாக அவளை தேடினாள், அவளை பற்றிக் கூறலாம் என்று நினைத்து இருந்தார் நடராஜன்.. ஆனால் அவனோ, அவன் இஷ்டம் போல திரிய அவளைப் பற்றி துளி கூட அவன் நினைத்துப் பார்க்கவில்லை..
" அந்த பொண்ணு போனது சரிதான்.. " என்று உள்ளுக்குள்ளயே நடராஜன் நினைத்துக் கொண்டார்..
வழக்கம் போல, அன்றும் அவன் இரவு குடித்து விட்டு வர, தட்டு தடுமாறி அவன் அறையை வந்து அடைந்து கட்டிலில் படுக்காமல், கீழே விழுந்தவன் அப்படியே படுத்து விட்டான்..
மறுநாள் தலை விண் விண் என்று வலிக்க, அவன் கீழே படுத்து இருப்பதை பார்த்து, சற்று யோசனையுடன் எழுந்து அலுப்பு தீர குளித்து விட்டு வந்தான்..
அவன் எப்பொழுதும் எழும் போது, அவன் அறையில் எலுமிச்சை பழம் ஜூஸ் இருக்கும்.. இருக்கிறதா என்று பார்க்க, அதுவும் இல்லை..
உடை எல்லாம் அணிந்து தயார் ஆகி ஆபீஸ்க்கு செல்ல கிளம்பி கீழே வந்தவன், சாப்பிடுவதற்கு அமர, வேலைக்கார பெண்மணி வந்து பரிமாறினார்..
சாப்பிட்டு பார்த்தவனுக்கு உணவின் சுவையும் வேறு போல இருக்க, யோசனையுடனே சாப்பிட்டு முடித்து கிளம்பி சென்று விட்டான்..
கம்பெனிக்கு சென்றவன், வேலைகளை கவனிக்க ஆரம்பிக்க, இந்த யோசனையில் இருந்து வெளி வந்து, வேலையில் கவனத்தை திசை திருப்பினான்..
மாலை நேரம் நெருங்க, ரவி, அவனது கிளைன்ட் இருவருடன் தொழில் சம்மந்தமாக பேச, ரெஸ்டாரெண்ட் ஒன்றிற்கு வர சொல்லி இருந்தான்..
மூவரும் அங்கே சந்தித்து கொண்டு, பேசிக் கொண்டிருந்தனர்..
பின்னர் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு விட்டு , வெயிட்ரை அழைத்து ஆர்டர் செய்ய,
சிறிது நேரத்தில் அவர்கள் இருந்த டேபிலுக்கு கொண்டு வந்தது என்னவோ கவி தான்..
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, அதிர்ந்து விட்டனர்..
அவளோ அந்த அதிர்வுடனே அங்கிருந்து நகன்றாள்..
அவளையே யோசனையுடன் பார்த்து இருந்தவனை கலைத்தது என்னவோ, அவனின் நண்பர்கள் தான்..
அவர்களின் அழைப்பில் நிதானத்திற்கு வந்தவன், அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவனது பார்வை கவியையே சுற்றிக் கொண்டு வந்தது..
பின்னர் பேசிவிட்டு, அவர் அவர் கிளம்ப இவனும் காரில் கிளம்பி விட்டான்..
ஏதேதோ எண்ண அலைகள்.. " அவ ஏன் இங்க வேலை பாக்குறா.. அதுவும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையே.. அப்பாவும் இதை பத்தி சொல்லல.. ரெண்டு நாளா, அவளை வீட்டுல கூட பாக்க முடியலையே.. எப்பவும் என் கண்ணு முன்னாடி வந்து நிப்பா.. எனக்கு என்ன வேணும், வேண்டாம்னு பார்த்து பார்த்து பண்ணுவா.. இப்போ என்ன டா னா, இங்க இருக்கா.. அதுவும் நான் நைட் ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு வந்தா கூட என்னை ரூம்க்கு பத்திரமா கூட்டிட்டு போவா.. ஆனால் அப்பவும் அவ வரலையே.. " என்று ஒவ்வொன்றாய் அவன் நியாபக படுத்திப் பார்க்க, அவனுக்கு ஏதோ ஒன்று புரிந்தும் புரியாமலும் இருந்தது...
" ஒரு வேலை... இப்படி இருக்குமோ.. " என்று அதனை ஆழமாக யோசித்தவன், சாலையில் கவனம் செலுத்த மறந்து விட்டான்..
குறுக்கே மாடு ஒன்று வந்ததை அவன் கவனிக்காமல் செல்ல, அருகில் நெருங்கியதும் கவனித்து வண்டியை திருப்ப முயல, பின்னால் வந்த வண்டி மீது மோதி, விபத்து ஏற்பட்டு, படுகாயங்களுடன் அவன் மயங்கிய நிலைக்குச் சென்றான்..
தேன் இனிக்கும்..