அத்தியாயம் 15
மறுநாள் விடியல் யாருக்கு எப்படி இருந்ததோ, ஆனால் வெற்றிக்கு மிகுந்த மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் இருந்தது..
அன்று அவளுடன் திருமணம் நடந்த தருணத்தை விட, இன்று நடக்க போகும் நிகழ்விற்கு ஏனோ மனம் இரட்டிப்பு மகிழ்ச்சியில் துள்ளியது...
அன்றைய நாள் அவனுக்கும் சரி மதிக்கும் சரி எதிர்பாராத தருணம் அது.. ஆனால் இன்று அப்படி இல்லை.. முழுதாக இல்லை என்றாளும் ஓரளவு மதி அவனைப் பற்றி தெரிந்து வைத்து இருப்பாள்.. அந்த சந்தோசம் தான்..
வீட்டில் ஒவ்வொருவராக தயாராகி வர ஆரம்பித்தனர்...
காலை உணவை முடித்து விட்டு, வீட்டில் இருந்து கோவிலுக்குச் சென்று தாலி பெருக்கு சடங்கை முடித்து விட்டு, மதியம் அங்கேயே உறவினர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது..
அதை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி...
வெற்றியோ, பட்டு வேஷ்டி மற்றும் மெரூன் நிற சட்டை அணிந்து இருந்தான்..
மதியும் குளித்துவிட்டு, மெரூன் நிற பட்டு புடவை அணிந்து இருந்தாள்.. இவளின் புடவைக்கு மேட்ச் ஆகத் தான் அவன் சட்டை எடுத்தது..
தலையைப் பின்னி , தேவையான அளவு ஒப்பனையிட்டு, சில நகைகளை போட்டுக் கொண்டு வெளியில் வந்தாள்..
வந்தவளை ஆளை விழுங்கி விடும் பார்வையால் அல்லவா அவளை கபலிகரம் செய்தான்..
அவள் இவனை பார்க்கும் போது சட்டென பார்வையை மாற்றிக் கொண்டான்..
கற்பகம் அவளுக்கு பூ கொடுக்க, அவளும் அதை தலையில் வைத்துக் கொண்டாள்..
அதை பார்த்துக் கொண்டிருந்த, லட்சுமியோ, " ரொம்ப அழகா இருக்க மதி.. " என்று அவளிடம் கூறினார்..
அவளும் அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள்..
" மாமா எங்கத்தை.. " என்று வெற்றி தன் அதையிடம் கேட்க,
" அவரு கிளம்பிட்டு இருக்காரு பா.. வந்துருவாரு இன்னும் கொஞ்ச நேரத்துல... " என்றார்..
அனைவரும் காலை உணவை முடித்த பின், சாமி கும்பிட்டு விட்டு, கிளம்பலாம் என்று எண்ணி இருந்தனர்..
கற்பகம், " தம்பி ரெண்டு பெரும் பூஜை அறையில் போய் சாமி கும்பிட்டு வாங்க யா.. " என்றார்...
அவர்களும் அறையின் முன் நின்று, தெய்வத்தை மனதார வணங்கி விட்டு, காரில் கிளம்பினர்..
இதற்கு இடையில், மதியின் அக்கா சாந்தவி வரும் வழியில் கார் பழுதடைந்து விட்டதால், வருவதற்கு தாமதம் ஆகும்.. அதனால் நீங்கள் கிளம்பிச் செல்லுங்கள். எங்களுக்காக காத்திருக்க வேண்டாம் என்று கூறியதால், இவர்களும் அவர்களுக்காக காத்திருக்காமல் கோவிலுக்கு கிளம்பி விட்டனர்..
கோவிலுக்குச் சென்று, அங்கு பூ பழம் வாங்கிக்கொண்டு, ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை முடித்து விட்டு, பிரகாரத்தை சுற்றி விட்டு வர, உறவினர்களும் வந்து சேர்ந்து இருந்தனர்..
ஐயரும் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து தயாராக இருந்தார்..
மதியைப் பார்த்தவன், " மதி..வா.. போய் உக்காரலாம்... " என்று இருவருமாக சேர்ந்து அமர்ந்தனர்..
பொன் தாலியை எடுத்து, ஐயரிடம் கொடுக்க, அவரும் அதை தேங்காயின் மீது வைத்து அதில் மஞ்சள் குங்குமம் இட்டு, பூவைச் சூடி இறைவன் சன்னிதானத்தின் முன் ஒரு முறை காட்டி விட்டு, மற்றவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க லட்சுமியிடம் கொடுத்தார்..
அவரும் அதை பெற்றுக் கொண்டு, வந்த சொந்த பந்தங்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு, மீண்டும் ஐயரிடம் கொண்டு வந்து கொடுத்தார்..
அவரும் சில வேத மந்திரகளை உபசரித்தவர், பொன் மாங்கல்யத்தை எடுத்து வெற்றியிடம் கொடுக்க, அவனும் இறைவனை ஒரு முறை வேண்டிக் கொண்டு, மாங்கல்யத்தை அவளது கழுத்தில் அணிவிக்கும் முன் , அவளின் கண்களை பார்த்து தான் விழிகளால் சம்மதமா என்று அவன் கேட்க...
அந்த பார்வையில் கட்டுண்ட இவளும் தன் இமையை மூடி திறந்து சம்மதம் தெரிவித்தாள் ..
ஆடவனும் இதழ்கள் விரிய ஒரு புன்னகையை சிந்தியவன், அவளது கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான்...
அதில் மஞ்சள், குங்குமம் வைத்தவன், பின் அவளது நெற்றி வகுட்டிலும் வைத்து விட்டான்.. ஏனோ இருவருக்குமே அந்நேரம் உடலில் ஒரு வித சிலிர்ப்பு உண்டானது...
என்னதான் உறவினர்களுக்கு வெற்றியை தங்கள் மகளுக்கு மணம் முடித்து கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அதை இங்கே காட்டாமல் இந்த ஜோடி என்றும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று மனதார அட்சதை தூவி வாழ்த்தினர்...
பின் இருவரும், கையை கோர்த்துக் கொண்டு, மீண்டும் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தனர்...
இந்த பிடிப்பு இப்பொழுது மட்டும் அல்ல.. வாழ்க்கை முழுவதும் இருக்கும் என்று உணர்த்தும் வகையில் அவளது கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.. அந்த அழுத்தத்தை அவளும் உணர்ந்தாள் தான்...
விஷேசம் நல்ல படியாக முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அனைவருக்கும்..
அங்கேயே, வந்து இருந்த உறவினர்களை கெளரவிக்கும் பொருட்டு, குடும்பத்துடம் அழைத்து, புது துணி மணி வைத்துக் கொடுக்க பட்டது.. அதுவும் வெற்றி மற்றும் மதியின் கையால் வழங்கினர்..
இறுதியாக, மதியின் பெற்றோருக்கும் தனிப்பட்ட முறையில், கன்னிகாதானம் செய்ததற்கு, மருமகனின் கடமையாக முறைப்படி அவர்களுக்கு வழங்கப்பட்டது...
அதன் பின்னர், கோவிலுக்கு பின் பக்கம் இருக்கும் மண்டபத்தில் மதிய உணவு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது..
அதனால் வந்து இருந்த அனைவரும் தங்கள் வயிறார உண்டு விட்டு, வெற்றியின் குடும்பத்தாரிடம் சொல்லி விட்டு விடை பெற்றனர்..
அவர்கள் செல்வதற்கு முன், இதே போல, மாலை நிகழ்ச்சிக்கும் வந்து சிறப்பிக்குமாறு கேட்டு கொண்டனர் கற்பகம் மற்றும் வெற்றி இருவரும்...
அனைவரும் உண்டு முடித்து விட்டு, வீட்டிற்கு கிளம்பினர்..
அங்கு சென்று இறங்கியதும் சிறிது நேரத்தில் சாந்தவி குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர்..
அவர்களை அழைத்து உபசரித்து, சிறிது நேரம் ஓய்வெடுக்க சொல்லி இருந்தனர்..
மற்றவர்களும் சிறிது நேரம் ஓய்வு எடுக்கச் சென்று விட்டனர்...
மாலை போல் எழுந்த அனைவரும், வரவேற்புக்கு தயார் ஆகினர்..
மதிக்கு பியூட்டிசியன் வரவழைக்கப் பட்டு இருந்தது.. அலங்காரம் முடித்து வெற்றி எடுத்த அந்த மயில் வண்ணப் புடவையை உடுத்தியதும், அந்த மயில் போலவே அழகாகவும் அவ்வளவு அம்சமாகவும் இருந்தாள் மதி..
" இந்த சாரீ உனக்கு ரொம்ப அழகா இருக்கு மதி... " என்று சாந்தவியும் தன் பங்கிற்கு வந்து கூறினாள்..
" ம்ம்.. நிஜமாவே நல்லா இருக்கா..
" என்று அவள் உறுதி படுத்திக் கொள்ள கேட்க,
அவளும் ஆமாம் என்றாள்..
மதியோ மனதிற்க்குள்,
" பரவாவில்லை... நல்ல செலேக்சன் taught இருக்கு அவருக்கு... " என்று தன் கணவனை எண்ணி மெச்சிக் கொண்டாள்..
ஒவ்வொருவராக தயாராகி வந்து ஹாலில் காத்து இருந்தனர்..
இறுதியில் மதியும் வெற்றியும் வந்து சேர, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
தான் எடுத்துக் கொடுத்த புடவையில் அழகோவியமாக தன் கண் முன்னே நின்றவளைப் பார்த்தவனோ உறைந்து தான் போனான்..
அருகில் நின்று இருந்த சம்பத், (சாந்தவியின் கணவன் ) "சகலை, உங்கள சுத்தி ஆளுங்க இருக்கோம்.. மறந்துராதீங்க....இது எல்லாம் தனியா வச்சிக்கோங்க..." என்று அவனை பார்த்து கிண்டல் செய்தான்..
வெற்றியும் தன் மடத் தனத்தை எண்ணி நொந்து, பின் அவனிடம் ஒரு புன்னகையை சிந்தினான்..
சம்பத் அன்று திருமணத்தன்று பார்த்தது தான் வெற்றியை.. அதன் பிறகு இன்று தான் பார்க்கிறான்.. ஏனோ வெற்றி அவனிடம் நடந்து கொள்ளும் விதம் அவனை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம்..
அதனால் தான் என்னவோ, வெற்றியிடம் வெகு இயல்பாக பேசினான் சம்பத்..
இவன் இப்படி என்றால், மதிக்கோ என்னவென்று சொல்ல முடியாத உணர்வு..
இத்தனை நாள் அவனை வேஷ்டி சட்டையில் பார்த்து இருக்கின்றாள் தான்.. ஆனால் ஏனோ இன்று அவள் கண்களுக்கு தன்னை வசிகரிப்பது போல ஆண்மையின் இலக்கணமாக தன் முன் நிற்பது போல உணர்ந்தாள்..
" சே.. என்ன இது.. இத்தனை நாள் இல்லாம, இன்னைக்கு ஒரு மாதிரி இருக்கே.. " என்று அவளுக்குள் தோன்றும் அவஸ்தையை எண்ணி புலம்பிக் கொண்டிருந்தாள்..
வீட்டுப் பெரியவர்களுக்கு இருவரின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து, " பிள்ளைகளுக்கு யாரு கண்ணும் பட்டுடக் கூடாது... நல்ல படியா அவங்க வாழனும் தெய்வமே... " என்று அந்த இறைவனிடம் ஒரு கோரிக்கையும் வைத்தனர்..
புதுமண தம்பதியினர் மற்றும் சம்பத், சாந்தவி அவர்களின் மகன் ஒரு காரிலும் மற்ற அனைவரும் மற்றொரு காரிலும் கிளம்பினர்..
சம்பத் தான் காரை ஓட்டிச் சென்றான்.. அருகில் சாந்தவி உடன் மானவ் அமர்ந்து இருந்தனர்..
பின்னால் மதியும் வெற்றியும் மட்டுமே அமர்ந்து கொண்டனர்..
கார், மண்டபத்தை நோக்கி புறப்பட்டது...
மண்டபம் ஒன்றும் வெகு தூரத்தில் எல்லாம் இல்லை..
அந்த நகரத்தின் மத்தியிலேயே சற்று பெரிதாக அமைந்து இருந்தது..
மண்டபம் அலங்கார வேலைகள் மற்றும் இதர வேலைகளை எல்லாம் குமரன் மற்றும் மற்ற நண்பர்களிடம் கவனிக்குமாறு சொல்லி இருந்தான் வெற்றி..
இதோ மண்டபதிற்கு வந்தாயிற்று.. மணமக்களை வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்று, மேடையின் மீது நிற்க வைத்தனர்.
வெற்றிக்கு துணையாக சம்பத்தும், மதிக்கு துணையாக அவளது அக்கா சாந்தவியும் கூட இருந்தனர்..
மானவ் அவன் தாத்தா பாட்டியுடன் இருந்து கொண்டான்..
நண்பர்கள் தங்களுக்கு குடுக்கப்பட்ட வேலையை திறம்பட கவனித்துக் கொண்டனர்..
உறவினர்கள், சுற்றத்தார்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என்று ஒவ்வொருவராக மேடையேறி பரிசளித்து, மனம் மகிழ வாழ்த்துக்களை கூறி, வயிறு நிறைய உண்டு விட்டு, விழாவை சிறப்பித்துச் சென்றனர்..
வரவேற்பு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது...
எல்லோருக்குமே அசதி தான்.. காலையில் இருந்து மாற்றி மாற்றி வேலை என்று..
அதனால் வீட்டிற்கு வந்ததும், கற்பகம் குடும்பமாக அனைவரையும் நிற்க வைத்து, திருஷ்டி கழித்து விட்டு, உள்ளே அனுப்பினார்..
அசதியில் அனைவருமே உறங்கச் சென்று விட்டனர்..
மதிக்கோ, அலங்காரம் அப்டியே இருக்க, அதை கலைத்தால் தான் சற்று இலகுவாக இருக்கும் என்று நினைத்தவள், தன் அக்காவை அழைக்கலாம் என்று நினைத்து அங்கு செல்ல, அவர்களோ உடையை மாற்றி விட்டு தூங்கி விட்ருந்தனர்..
அவளுக்கு ஐயோ என்று ஆகி விட்டது.. சரி தன் கையே தனக்குதவி என்று நினைத்து அறைக்கு வந்து, தலையில் இருந்த பூவினையும் கொண்டை ஊசிகளையும் ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல எடுத்துக் கொண்டிருந்தாள்..
அப்பொழுது பார்த்து தலையில் ஒன்று சிக்கிக் கொண்டது.. அவளால் எடுக்க முடியவில்லை... இழுத்து இழுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்..
அந்த நேரத்தில் வெற்றி குளித்து விட்டு வேறு உடைக்கு மாற்றி வந்தான்..
அவள் செய்கையை பார்த்தவன், " மதி என்ன ஆச்சு... " என்று கேட்க..
அவளோ, " தலையில சிக்கிகிருச்சு... அதான் எடுத்துட்டு இருக்கேன்.. இதை கழட்டுன்னா கொஞ்சம் freeya இருக்கும் தூங்குறதுக்கு.. " என்றுக் கூறினாள்..
" உங்க அக்காவை கூப்பிடலாம் ல.. " என்றதற்கு,
" அவளை தான் கூப்பிட போனேன்.. அவ தூங்கிட்டா... இப்போ என்ன பண்றது.. கடுப்பா இருக்கு... " என்று சற்று எரிச்சலுடன் கூறினாள்..
அவள் அருகில் வந்தவன், " கையை எடு.. " என்று அவளது கையை எடுத்து விட்டவன், மெல்ல மெல்ல அவளுக்கு நோகாதவாரு ஒவ்வொன்றாக பிரித்து எடுத்தான்..
ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி இருந்த கண்ணாடியின் ஊடாக தான் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அமர்ந்து இருந்தவாரு... அவனோ நின்றவாக்கில் எடுத்துக் கொண்டிருந்தான்...
எதேர்ச்சியாக முன்னால் பார்த்தவன், கண்ணாடி வழியாக அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து ஒரு கணம் செய்யும் வேலையை நிறுத்தி விட்டு அவனும் நோக்கினான்..
இருவரது பார்வையும் மற்றொருவர் மீது தான் இருந்தது..
அவனது பார்வையில் என்ன கண்டாளோ, சட்டென்று குனிந்து கொண்டாள்.. என்ன பார்வை அது.. உயிரை ஊடுருவி உறிஞ்சி எடுக்கும் பார்வை.. அந்த பார்வையில் இருப்பது என்ன.... ஏதோ ஒரு செய்தி சொல்கின்றதே... ஆனால் என்ன என்று தான் அவளாள் புரிந்து கொள்ள முடியவில்லை..
அவனும் ஒரு மென் புன்னகையை சிந்தி, தலையை இரு பக்கமும் ஆட்டிக் கொண்டே அனைத்தையும் எடுத்து விட்டு, தலை முடியை விரித்து விட்டான்..
" இப்போ ஓகே வா... " என்று அவளை பார்த்துக் கேட்க..
அவளும் ம்ம் என்று மட்டும் சொல்லிக் கொண்டாள்..
" போ.. குளிச்சிட்டு வந்து தூங்கு.. " என்று அவளிடம் சொல்லியவன் நகர்ந்து நிற்கும் முன் அவள் எழுந்து கொண்டதால், அவன் மீது இடித்துக் கொள்ள,
வெற்றியோ பிடிமானம் இன்றி கீழே தடுமாறிய வேளையில் பிடிமானத்திற்கு அவளின் இடுப்பை பிடித்துக் கொள்ள, அவனின் ஸ்பரிசம் பட்டதில் இவள் தடுமாற, இருவருமாக சேர்ந்து அருகில் இருந்த கட்டிலின் மெத்தையில் பொத்தென்று விழுந்தனர்..
விழுந்த வேகத்தில், இருவரது இதழ்களும் ஒன்றுடன் ஒன்று உரசி கலந்து கொண்டன..
அந்த அதிர்ச்சியில் இருவரது விழிகளும் சாசர் போல விரிந்தன..
அதிர்ச்சியில் இருந்து மீண்ட வெற்றியோ, அவளது நெருக்கத்தில் அவன் தான் நிலை தடுமாறிப் போனான்..
அவளது பெண்மையின் வாசனை, அவனது ஆண்மையின் உணர்ச்சிகளை தூண்ட, இடையில் பதிந்த அவனது விரல்கள் கோலம் போட ஆரம்பிக்கும் வேளையில், நிதானம் வந்த மதியோ, சட்டென்று அவனிடம் இருந்து விலகி, " அது.. சாரி.. நான் தான் கவனிக்காம உங்க மேல இடிச்சிட்டேன்.. " என்று அவனைப் பாராமல் சொல்லி விட்டு விறு விறுவென குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்..
" நம்மள கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம் போலயே வெற்றி.. " என்று தனக்குள்ளயே புலம்பிக் கொண்டு ஒரு பெருமூச்சுடன் அப்படியே உறங்கியும் போய் விட்டான்..
இங்கு இப்படி இருக்க, அங்கு ரவியோ ஜான் உடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தான்..
யார் அந்த ஜான்.. ரவி அப்படி என்ன ஒப்பந்தம் போட்டிருந்தான்.. இனி வரும் அத்தியாயங்களில்....
தேன் இனிக்கும்....
மறுநாள் விடியல் யாருக்கு எப்படி இருந்ததோ, ஆனால் வெற்றிக்கு மிகுந்த மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் இருந்தது..
அன்று அவளுடன் திருமணம் நடந்த தருணத்தை விட, இன்று நடக்க போகும் நிகழ்விற்கு ஏனோ மனம் இரட்டிப்பு மகிழ்ச்சியில் துள்ளியது...
அன்றைய நாள் அவனுக்கும் சரி மதிக்கும் சரி எதிர்பாராத தருணம் அது.. ஆனால் இன்று அப்படி இல்லை.. முழுதாக இல்லை என்றாளும் ஓரளவு மதி அவனைப் பற்றி தெரிந்து வைத்து இருப்பாள்.. அந்த சந்தோசம் தான்..
வீட்டில் ஒவ்வொருவராக தயாராகி வர ஆரம்பித்தனர்...
காலை உணவை முடித்து விட்டு, வீட்டில் இருந்து கோவிலுக்குச் சென்று தாலி பெருக்கு சடங்கை முடித்து விட்டு, மதியம் அங்கேயே உறவினர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது..
அதை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி...
வெற்றியோ, பட்டு வேஷ்டி மற்றும் மெரூன் நிற சட்டை அணிந்து இருந்தான்..
மதியும் குளித்துவிட்டு, மெரூன் நிற பட்டு புடவை அணிந்து இருந்தாள்.. இவளின் புடவைக்கு மேட்ச் ஆகத் தான் அவன் சட்டை எடுத்தது..
தலையைப் பின்னி , தேவையான அளவு ஒப்பனையிட்டு, சில நகைகளை போட்டுக் கொண்டு வெளியில் வந்தாள்..
வந்தவளை ஆளை விழுங்கி விடும் பார்வையால் அல்லவா அவளை கபலிகரம் செய்தான்..
அவள் இவனை பார்க்கும் போது சட்டென பார்வையை மாற்றிக் கொண்டான்..
கற்பகம் அவளுக்கு பூ கொடுக்க, அவளும் அதை தலையில் வைத்துக் கொண்டாள்..
அதை பார்த்துக் கொண்டிருந்த, லட்சுமியோ, " ரொம்ப அழகா இருக்க மதி.. " என்று அவளிடம் கூறினார்..
அவளும் அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டாள்..
" மாமா எங்கத்தை.. " என்று வெற்றி தன் அதையிடம் கேட்க,
" அவரு கிளம்பிட்டு இருக்காரு பா.. வந்துருவாரு இன்னும் கொஞ்ச நேரத்துல... " என்றார்..
அனைவரும் காலை உணவை முடித்த பின், சாமி கும்பிட்டு விட்டு, கிளம்பலாம் என்று எண்ணி இருந்தனர்..
கற்பகம், " தம்பி ரெண்டு பெரும் பூஜை அறையில் போய் சாமி கும்பிட்டு வாங்க யா.. " என்றார்...
அவர்களும் அறையின் முன் நின்று, தெய்வத்தை மனதார வணங்கி விட்டு, காரில் கிளம்பினர்..
இதற்கு இடையில், மதியின் அக்கா சாந்தவி வரும் வழியில் கார் பழுதடைந்து விட்டதால், வருவதற்கு தாமதம் ஆகும்.. அதனால் நீங்கள் கிளம்பிச் செல்லுங்கள். எங்களுக்காக காத்திருக்க வேண்டாம் என்று கூறியதால், இவர்களும் அவர்களுக்காக காத்திருக்காமல் கோவிலுக்கு கிளம்பி விட்டனர்..
கோவிலுக்குச் சென்று, அங்கு பூ பழம் வாங்கிக்கொண்டு, ஸ்வாமிக்கு சிறப்பு பூஜை முடித்து விட்டு, பிரகாரத்தை சுற்றி விட்டு வர, உறவினர்களும் வந்து சேர்ந்து இருந்தனர்..
ஐயரும் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து தயாராக இருந்தார்..
மதியைப் பார்த்தவன், " மதி..வா.. போய் உக்காரலாம்... " என்று இருவருமாக சேர்ந்து அமர்ந்தனர்..
பொன் தாலியை எடுத்து, ஐயரிடம் கொடுக்க, அவரும் அதை தேங்காயின் மீது வைத்து அதில் மஞ்சள் குங்குமம் இட்டு, பூவைச் சூடி இறைவன் சன்னிதானத்தின் முன் ஒரு முறை காட்டி விட்டு, மற்றவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க லட்சுமியிடம் கொடுத்தார்..
அவரும் அதை பெற்றுக் கொண்டு, வந்த சொந்த பந்தங்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு, மீண்டும் ஐயரிடம் கொண்டு வந்து கொடுத்தார்..
அவரும் சில வேத மந்திரகளை உபசரித்தவர், பொன் மாங்கல்யத்தை எடுத்து வெற்றியிடம் கொடுக்க, அவனும் இறைவனை ஒரு முறை வேண்டிக் கொண்டு, மாங்கல்யத்தை அவளது கழுத்தில் அணிவிக்கும் முன் , அவளின் கண்களை பார்த்து தான் விழிகளால் சம்மதமா என்று அவன் கேட்க...
அந்த பார்வையில் கட்டுண்ட இவளும் தன் இமையை மூடி திறந்து சம்மதம் தெரிவித்தாள் ..
ஆடவனும் இதழ்கள் விரிய ஒரு புன்னகையை சிந்தியவன், அவளது கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான்...
அதில் மஞ்சள், குங்குமம் வைத்தவன், பின் அவளது நெற்றி வகுட்டிலும் வைத்து விட்டான்.. ஏனோ இருவருக்குமே அந்நேரம் உடலில் ஒரு வித சிலிர்ப்பு உண்டானது...
என்னதான் உறவினர்களுக்கு வெற்றியை தங்கள் மகளுக்கு மணம் முடித்து கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், அதை இங்கே காட்டாமல் இந்த ஜோடி என்றும் பல்லாண்டு வாழ வேண்டும் என்று மனதார அட்சதை தூவி வாழ்த்தினர்...
பின் இருவரும், கையை கோர்த்துக் கொண்டு, மீண்டும் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தனர்...
இந்த பிடிப்பு இப்பொழுது மட்டும் அல்ல.. வாழ்க்கை முழுவதும் இருக்கும் என்று உணர்த்தும் வகையில் அவளது கையை அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.. அந்த அழுத்தத்தை அவளும் உணர்ந்தாள் தான்...
விஷேசம் நல்ல படியாக முடிந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அனைவருக்கும்..
அங்கேயே, வந்து இருந்த உறவினர்களை கெளரவிக்கும் பொருட்டு, குடும்பத்துடம் அழைத்து, புது துணி மணி வைத்துக் கொடுக்க பட்டது.. அதுவும் வெற்றி மற்றும் மதியின் கையால் வழங்கினர்..
இறுதியாக, மதியின் பெற்றோருக்கும் தனிப்பட்ட முறையில், கன்னிகாதானம் செய்ததற்கு, மருமகனின் கடமையாக முறைப்படி அவர்களுக்கு வழங்கப்பட்டது...
அதன் பின்னர், கோவிலுக்கு பின் பக்கம் இருக்கும் மண்டபத்தில் மதிய உணவு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது..
அதனால் வந்து இருந்த அனைவரும் தங்கள் வயிறார உண்டு விட்டு, வெற்றியின் குடும்பத்தாரிடம் சொல்லி விட்டு விடை பெற்றனர்..
அவர்கள் செல்வதற்கு முன், இதே போல, மாலை நிகழ்ச்சிக்கும் வந்து சிறப்பிக்குமாறு கேட்டு கொண்டனர் கற்பகம் மற்றும் வெற்றி இருவரும்...
அனைவரும் உண்டு முடித்து விட்டு, வீட்டிற்கு கிளம்பினர்..
அங்கு சென்று இறங்கியதும் சிறிது நேரத்தில் சாந்தவி குடும்பத்தினர் வந்து சேர்ந்தனர்..
அவர்களை அழைத்து உபசரித்து, சிறிது நேரம் ஓய்வெடுக்க சொல்லி இருந்தனர்..
மற்றவர்களும் சிறிது நேரம் ஓய்வு எடுக்கச் சென்று விட்டனர்...
மாலை போல் எழுந்த அனைவரும், வரவேற்புக்கு தயார் ஆகினர்..
மதிக்கு பியூட்டிசியன் வரவழைக்கப் பட்டு இருந்தது.. அலங்காரம் முடித்து வெற்றி எடுத்த அந்த மயில் வண்ணப் புடவையை உடுத்தியதும், அந்த மயில் போலவே அழகாகவும் அவ்வளவு அம்சமாகவும் இருந்தாள் மதி..
" இந்த சாரீ உனக்கு ரொம்ப அழகா இருக்கு மதி... " என்று சாந்தவியும் தன் பங்கிற்கு வந்து கூறினாள்..
" ம்ம்.. நிஜமாவே நல்லா இருக்கா..
" என்று அவள் உறுதி படுத்திக் கொள்ள கேட்க,
அவளும் ஆமாம் என்றாள்..
மதியோ மனதிற்க்குள்,
" பரவாவில்லை... நல்ல செலேக்சன் taught இருக்கு அவருக்கு... " என்று தன் கணவனை எண்ணி மெச்சிக் கொண்டாள்..
ஒவ்வொருவராக தயாராகி வந்து ஹாலில் காத்து இருந்தனர்..
இறுதியில் மதியும் வெற்றியும் வந்து சேர, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
தான் எடுத்துக் கொடுத்த புடவையில் அழகோவியமாக தன் கண் முன்னே நின்றவளைப் பார்த்தவனோ உறைந்து தான் போனான்..
அருகில் நின்று இருந்த சம்பத், (சாந்தவியின் கணவன் ) "சகலை, உங்கள சுத்தி ஆளுங்க இருக்கோம்.. மறந்துராதீங்க....இது எல்லாம் தனியா வச்சிக்கோங்க..." என்று அவனை பார்த்து கிண்டல் செய்தான்..
வெற்றியும் தன் மடத் தனத்தை எண்ணி நொந்து, பின் அவனிடம் ஒரு புன்னகையை சிந்தினான்..
சம்பத் அன்று திருமணத்தன்று பார்த்தது தான் வெற்றியை.. அதன் பிறகு இன்று தான் பார்க்கிறான்.. ஏனோ வெற்றி அவனிடம் நடந்து கொள்ளும் விதம் அவனை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம்..
அதனால் தான் என்னவோ, வெற்றியிடம் வெகு இயல்பாக பேசினான் சம்பத்..
இவன் இப்படி என்றால், மதிக்கோ என்னவென்று சொல்ல முடியாத உணர்வு..
இத்தனை நாள் அவனை வேஷ்டி சட்டையில் பார்த்து இருக்கின்றாள் தான்.. ஆனால் ஏனோ இன்று அவள் கண்களுக்கு தன்னை வசிகரிப்பது போல ஆண்மையின் இலக்கணமாக தன் முன் நிற்பது போல உணர்ந்தாள்..
" சே.. என்ன இது.. இத்தனை நாள் இல்லாம, இன்னைக்கு ஒரு மாதிரி இருக்கே.. " என்று அவளுக்குள் தோன்றும் அவஸ்தையை எண்ணி புலம்பிக் கொண்டிருந்தாள்..
வீட்டுப் பெரியவர்களுக்கு இருவரின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து, " பிள்ளைகளுக்கு யாரு கண்ணும் பட்டுடக் கூடாது... நல்ல படியா அவங்க வாழனும் தெய்வமே... " என்று அந்த இறைவனிடம் ஒரு கோரிக்கையும் வைத்தனர்..
புதுமண தம்பதியினர் மற்றும் சம்பத், சாந்தவி அவர்களின் மகன் ஒரு காரிலும் மற்ற அனைவரும் மற்றொரு காரிலும் கிளம்பினர்..
சம்பத் தான் காரை ஓட்டிச் சென்றான்.. அருகில் சாந்தவி உடன் மானவ் அமர்ந்து இருந்தனர்..
பின்னால் மதியும் வெற்றியும் மட்டுமே அமர்ந்து கொண்டனர்..
கார், மண்டபத்தை நோக்கி புறப்பட்டது...
மண்டபம் ஒன்றும் வெகு தூரத்தில் எல்லாம் இல்லை..
அந்த நகரத்தின் மத்தியிலேயே சற்று பெரிதாக அமைந்து இருந்தது..
மண்டபம் அலங்கார வேலைகள் மற்றும் இதர வேலைகளை எல்லாம் குமரன் மற்றும் மற்ற நண்பர்களிடம் கவனிக்குமாறு சொல்லி இருந்தான் வெற்றி..
இதோ மண்டபதிற்கு வந்தாயிற்று.. மணமக்களை வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்று, மேடையின் மீது நிற்க வைத்தனர்.
வெற்றிக்கு துணையாக சம்பத்தும், மதிக்கு துணையாக அவளது அக்கா சாந்தவியும் கூட இருந்தனர்..
மானவ் அவன் தாத்தா பாட்டியுடன் இருந்து கொண்டான்..
நண்பர்கள் தங்களுக்கு குடுக்கப்பட்ட வேலையை திறம்பட கவனித்துக் கொண்டனர்..
உறவினர்கள், சுற்றத்தார்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என்று ஒவ்வொருவராக மேடையேறி பரிசளித்து, மனம் மகிழ வாழ்த்துக்களை கூறி, வயிறு நிறைய உண்டு விட்டு, விழாவை சிறப்பித்துச் சென்றனர்..
வரவேற்பு நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது...
எல்லோருக்குமே அசதி தான்.. காலையில் இருந்து மாற்றி மாற்றி வேலை என்று..
அதனால் வீட்டிற்கு வந்ததும், கற்பகம் குடும்பமாக அனைவரையும் நிற்க வைத்து, திருஷ்டி கழித்து விட்டு, உள்ளே அனுப்பினார்..
அசதியில் அனைவருமே உறங்கச் சென்று விட்டனர்..
மதிக்கோ, அலங்காரம் அப்டியே இருக்க, அதை கலைத்தால் தான் சற்று இலகுவாக இருக்கும் என்று நினைத்தவள், தன் அக்காவை அழைக்கலாம் என்று நினைத்து அங்கு செல்ல, அவர்களோ உடையை மாற்றி விட்டு தூங்கி விட்ருந்தனர்..
அவளுக்கு ஐயோ என்று ஆகி விட்டது.. சரி தன் கையே தனக்குதவி என்று நினைத்து அறைக்கு வந்து, தலையில் இருந்த பூவினையும் கொண்டை ஊசிகளையும் ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல எடுத்துக் கொண்டிருந்தாள்..
அப்பொழுது பார்த்து தலையில் ஒன்று சிக்கிக் கொண்டது.. அவளால் எடுக்க முடியவில்லை... இழுத்து இழுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்..
அந்த நேரத்தில் வெற்றி குளித்து விட்டு வேறு உடைக்கு மாற்றி வந்தான்..
அவள் செய்கையை பார்த்தவன், " மதி என்ன ஆச்சு... " என்று கேட்க..
அவளோ, " தலையில சிக்கிகிருச்சு... அதான் எடுத்துட்டு இருக்கேன்.. இதை கழட்டுன்னா கொஞ்சம் freeya இருக்கும் தூங்குறதுக்கு.. " என்றுக் கூறினாள்..
" உங்க அக்காவை கூப்பிடலாம் ல.. " என்றதற்கு,
" அவளை தான் கூப்பிட போனேன்.. அவ தூங்கிட்டா... இப்போ என்ன பண்றது.. கடுப்பா இருக்கு... " என்று சற்று எரிச்சலுடன் கூறினாள்..
அவள் அருகில் வந்தவன், " கையை எடு.. " என்று அவளது கையை எடுத்து விட்டவன், மெல்ல மெல்ல அவளுக்கு நோகாதவாரு ஒவ்வொன்றாக பிரித்து எடுத்தான்..
ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி இருந்த கண்ணாடியின் ஊடாக தான் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அமர்ந்து இருந்தவாரு... அவனோ நின்றவாக்கில் எடுத்துக் கொண்டிருந்தான்...
எதேர்ச்சியாக முன்னால் பார்த்தவன், கண்ணாடி வழியாக அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்து ஒரு கணம் செய்யும் வேலையை நிறுத்தி விட்டு அவனும் நோக்கினான்..
இருவரது பார்வையும் மற்றொருவர் மீது தான் இருந்தது..
அவனது பார்வையில் என்ன கண்டாளோ, சட்டென்று குனிந்து கொண்டாள்.. என்ன பார்வை அது.. உயிரை ஊடுருவி உறிஞ்சி எடுக்கும் பார்வை.. அந்த பார்வையில் இருப்பது என்ன.... ஏதோ ஒரு செய்தி சொல்கின்றதே... ஆனால் என்ன என்று தான் அவளாள் புரிந்து கொள்ள முடியவில்லை..
அவனும் ஒரு மென் புன்னகையை சிந்தி, தலையை இரு பக்கமும் ஆட்டிக் கொண்டே அனைத்தையும் எடுத்து விட்டு, தலை முடியை விரித்து விட்டான்..
" இப்போ ஓகே வா... " என்று அவளை பார்த்துக் கேட்க..
அவளும் ம்ம் என்று மட்டும் சொல்லிக் கொண்டாள்..
" போ.. குளிச்சிட்டு வந்து தூங்கு.. " என்று அவளிடம் சொல்லியவன் நகர்ந்து நிற்கும் முன் அவள் எழுந்து கொண்டதால், அவன் மீது இடித்துக் கொள்ள,
வெற்றியோ பிடிமானம் இன்றி கீழே தடுமாறிய வேளையில் பிடிமானத்திற்கு அவளின் இடுப்பை பிடித்துக் கொள்ள, அவனின் ஸ்பரிசம் பட்டதில் இவள் தடுமாற, இருவருமாக சேர்ந்து அருகில் இருந்த கட்டிலின் மெத்தையில் பொத்தென்று விழுந்தனர்..
விழுந்த வேகத்தில், இருவரது இதழ்களும் ஒன்றுடன் ஒன்று உரசி கலந்து கொண்டன..
அந்த அதிர்ச்சியில் இருவரது விழிகளும் சாசர் போல விரிந்தன..
அதிர்ச்சியில் இருந்து மீண்ட வெற்றியோ, அவளது நெருக்கத்தில் அவன் தான் நிலை தடுமாறிப் போனான்..
அவளது பெண்மையின் வாசனை, அவனது ஆண்மையின் உணர்ச்சிகளை தூண்ட, இடையில் பதிந்த அவனது விரல்கள் கோலம் போட ஆரம்பிக்கும் வேளையில், நிதானம் வந்த மதியோ, சட்டென்று அவனிடம் இருந்து விலகி, " அது.. சாரி.. நான் தான் கவனிக்காம உங்க மேல இடிச்சிட்டேன்.. " என்று அவனைப் பாராமல் சொல்லி விட்டு விறு விறுவென குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்..
" நம்மள கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டம் போலயே வெற்றி.. " என்று தனக்குள்ளயே புலம்பிக் கொண்டு ஒரு பெருமூச்சுடன் அப்படியே உறங்கியும் போய் விட்டான்..
இங்கு இப்படி இருக்க, அங்கு ரவியோ ஜான் உடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்தான்..
யார் அந்த ஜான்.. ரவி அப்படி என்ன ஒப்பந்தம் போட்டிருந்தான்.. இனி வரும் அத்தியாயங்களில்....
தேன் இனிக்கும்....