அத்தியாயம் 10
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட, இவன் சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டான்..
அறைக்குச் சென்றவன், அங்கு தன்னை சுத்தப்படுத்தி விட்டு, சிறிது நேரம் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்..
அவனது உணர்வுகளை கட்டுப்படுத்த பெரும்பாடாகி போனது அவனுக்கு...
சிறிது நேரம் இருந்தவன் " சரி கிளம்புவோம் " என்று நினைத்து சட்டையை மாட்டிகொண்டு வெளியில் வர,
இவர்களும் இங்கே சாப்பிட்டு முடித்து, அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, வெற்றியை கண்டதும்,
"எய்யா.. வெற்றி.. நான் மதிகிட்ட கேட்டுட்டேன்... அவ அடுத்த வாரம் வச்சிக்கலாம்னு சொல்றாபா.. நீ அதுக்கு உண்டான வேலையை பாரு " என்று சொல்லிட,
" அப்டியா, சரி மா.. நான் பார்த்துகிறேன்.. நீங்க அத்தை, மாமா கிட்ட சொல்லிடுங்க.. அப்புறம் வெளியூர்ல இருக்க நம்ம சொந்தகாரங்களுக்கு போன்ல சொல்லிட்டு, உள்ளூர்ல இருக்குறவங்களுக்கு நம்ம நேருல போய் சொல்லிக்கலாம்.. " என்றவனுக்கு,
" சரிய்யா.. நான் போன்ல சொல்றவங்களுக்கு எல்லாம் சொல்லிக்கிறேன்... அப்புறம், இங்க உள்ளவங்களுக்கு உனக்கு என்னைக்கு தோது படும்னு சொல்லு.. அன்னைக்கு போகலாம் " என்றார்..
"அப்படியா..." என்று சிறிது நேரம் யோசித்தவன்,
"ஞாயித்துகிழமை போகலாம்மா " எனக் கூற,
" சரிய்யா... " என்றார் அவனது அம்மா..
" சரி, நான் வேலை விஷயமா டவுன் வரைக்கும் போறேன்.. வர நைட் ஆகும்.. போய்ட்டு வரேன் " என்று தன் அம்மாவிடம் சொல்லியவன்,
மதியை பார்த்து போய்ட்டு வருவதாக தலையை ஆட்ட, அவளும் அவனுக்கு பதிலுக்கு தலையை ஆட்டினாள்..
அவனது மனமோ உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டது...
கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் முன்னேற்றத்தை அல்லவா காண்கிறான். வெகு விரைவில் அவள் என்னையும் ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் சென்றான்..
அவன் அப்படிச் செல்ல, இங்கு இவளுக்கோ தன்னையும் மதித்து சொல்லி சென்றவருக்கு, அவளும் மதிப்பளித்து பதில் கூறினாள் என்ற மன நிலையில் தான் இருந்தாளே தவிர, வேறு மாதிரி நினைக்கவில்லை அவள்..
மதியத்திற்கு மேல், எண்ண செய்வதென்று தெரியாமல், சிறிது நேரம் டிவியை ஆன் செய்து பார்த்தவளிடம்,
கற்பகம் " மதிக் கண்ணு, நீ இரு.. பக்கத்துல ஒருத்தவங்க வீட்டுக்கு நான் போய்ட்டு வந்துருறேன்.. நீ தூங்குறதுனா கதவை சாத்திட்டு தூங்கு மா " என்றவருக்கு,
" சரி அத்தை.. நீங்க கவனமா போய்ட்டு வாங்க " என்றாள்..
" அது எப்பவும் போற வார இடம் தான்.. நான் பார்த்துகிருவேன் கண்ணு " என்று சொல்லிவிட்டு சென்றார்..
இவளும் அவர் சென்ற பிறகு கதவை சாத்திவிட்டு வந்தவளுக்கு, கற்பகம் பற்றிய எண்ணம் தான்..
" மனசுல எதுவும் வச்சிக்காம, எவ்ளோ வெள்ளந்தியா இருக்காங்க.... இந்த மாதிரி ஆளுங்களை நம்ம சிட்டில பாக்குறது கஷ்டம் தான்..என் கிட்ட எவ்ளோ அன்பா அனுசரணையா நடந்துகிறாங்க. அது தான் இவங்க இயல்பா இருக்கும்... அத்தை.. உங்கள இத்தனை வருஷம் மிஸ் பண்ணிருக்காலம்.. இனி பண்ண மாட்டேன் " என்று தனக்குள் பேசிக்கொண்டவளுக்கு வெற்றியின் நியாபகம் வர,
" அவரும் நானும் சின்ன வயசுல ரொம்ப குளோஸ்ஸா இருந்து இருக்கோம் போல... எனக்கு தான் எல்லாமே மறந்து போச்சு.. ஆனால் அவருக்கு நியாபகம் இருக்கும் ல.... மாமா.. மாமா.. னு நான் அவரு பின்னாடி தான் எப்போ பாரு சுத்துவேன்னு அத்தை சொன்னாங்க..
ஆனால் இப்போ மாமானு கூப்பிட முடியுமா... " என்று யோசித்தவளுக்கு பதில் கிடைக்கவில்லை..
பின்னர், சிறிது நேரம் படுக்கலாம் என்று எண்ணியவள், அறைக்குச் சென்று கட்டிலில் படுத்தவள் நன்றாக உறங்கியும் விட்டாள்...
கற்பகம் ஐந்து மணி வாக்கில் வீட்டிற்கு வர, வீடு அமைதியாக இருப்பதை பார்த்து, "மதி... மதிக்கண்ணு.. "என்று அழைக்க,
எந்த வித எதிர்வினையும் இல்லாததால், "தூங்குறா போல ".. என முடிவு எடுத்துக் கொண்டவர்,
வரவேற்பு மற்றும் தாலிக் கொடி மாற்றும் வைபவத்தை ஊரில் லட்சுமியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தவர், அவருக்கு அழைப்பு விடுத்தார்..
அழைப்பு அங்கே ஏற்கப்பட, " ஹலோ.. லட்சுமி.. " கற்பகம் அழைக்க,
"சொல்லுங்க அண்ணி.. எப்படி இருக்கீங்க.. வெற்றி எப்படி இருக்கான்... மதி க்கு எல்லாம் செட் ஆகிருச்சா " என அடுத்தடுத்து கேள்விகளை அடுக்க,
"எல்லாரும் நல்லா இருக்கோம். மதி ஓரளவு பழகிகிட்டா... வெற்றிகிட்ட எப்படினு தெரியல.. ஆனால் என்கிட்ட ரொம்ப நல்லாவே சின்ன புள்ளையில இருந்த மாதிரி அத்தை அத்தைனு வாய் நிறைய கூப்பிடுறா " என்று மகிழ்ச்சியுடன் சொல்ல,
லட்சுமிக்கும் அதை கேக்க ஆனந்தமாக இருந்தது..
"உங்ககிட்ட இருக்குற போல, வெற்றிகிட்டயும் கூடிய சீக்கிரம் நல்லா இணக்கமா பழக ஆரம்பிப்பா " லட்சுமி சொல்லிட,
"நல்லது நடந்தா சரி லட்சுமி...அப்புறம் நாள் குறிச்சிட்டு வந்தாச்சு. அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை... அன்னைக்கு வச்சிக்கலாம்னு மூணு பேரும் சேந்து முடிவு எடுத்து இருக்கோம்.... காலைல தாலிக் கொடி மாத்திட்டு, சாய்ந்திரம் வரவேற்பு வச்சிக்கலாம்னு வெற்றி சொல்லிட்டான்.. நீ என்னமா சொல்ற " என கேட்டவருக்கு,
"நல்லது அண்ணி.. அன்னைக்கே பண்ணிக்கலாம்.. நான் அவருகிட்ட சொல்லிருறேன்..." என்றார் லட்சுமி..
"சரி மா.. அப்போ போனை வச்சிருறேன் "என சொல்லி விட்டு போனை அணைத்தார்.
அவள் எழுந்த போது, மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது...
" அச்சோ, இவ்ளோ நேரம் தூங்கிட்டேனா.. நேரம் போனதே தெரியல... " என்றவள்,
குளியல் அறைக்குச் சென்று தன்னை மீண்டும் ஒரு முறை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், தலையை பின்னி, சிறிதாக ஒப்பனையிட்டு, கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு திருப்தி எடுக்க, அறைக் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள்..
அவளைப் பார்த்த கற்பகம், " வாமா.. தூங்கி முழிச்சிட்டியா... நல்ல தூக்கமா " என்று கேட்டவருக்கு,
" ஆமாத்தை... நல்லா தூங்கிட்டேன். நேரம் போனதே தெரியல " என்று சொன்னவளை பார்த்தவர்,
"அம்மாடி, பிரிட்ஜ்ல பூ வச்சிருக்கேன்.. எடுத்து வச்சிக்கிகிட்டு , சாமி ரூம் க்கு போய் விளக்கேத்தி வை மா " என்றார்.
அவளும் தலையில் பூவை வைத்துக் கொண்டு, சாமி படங்களுக்கு பூ வைத்து விளக்கேற்றி, வேண்டிக் கொண்டவள், திருநீரை நெற்றியிலும் குங்குமத்தை வகிட்டிலும் வைத்து விட்டு வெளியில் வந்தவளைப் பார்க்க பார்க்க திகட்டவில்லை கற்பகத்திற்கு..
" ஆத்தாடி.. என் மருமகள் எம்புட்டு அழகு.. என் கண்னே பட்டுடும் போல... இன்னைக்கு ராவுக்கு தூங்க போற முன்னாடி உனக்கு சுத்தி போட்ட பிறகு நீ தூங்க போ மதி " என்று அவளை ரசித்தப்படி சொல்ல,
அவளும் புன்னகையுடன் " ரொம்பத்தான் பண்றீங்கத்தை... அப்படி எல்லாம் எதுவும் இல்லை.." என்று சொல்லியவளை,
" அட உனக்கு தெரியாது கண்ணு.. என் மகன் கிட்ட கேளு.. அவன் சொல்லுவான் " என்று சிரித்தவாரு சொல்லிவிட்டு நகர,
இவளுக்கு தான் ஐயோ என்றானது...
பின் பேச்சை மாற்றி, வேறு பேச்சுக்கு சென்று எதை எதையோ பேசினர்..
" ஏன் அத்தை.., அவரு டவுன்னு சொல்லிட்டு போனாரே, எங்க " என்று கேட்க,
" திரிச்சி தான்.. நமக்கு இங்க இருந்து அதானே பக்கம்.. அவன் வேலை விஷயமா அடிக்கடி போவான் கண்ணு " என்று சொல்லிட,
அவளும் "ஓஹோ.." என்றதோடு முடித்துக் கொண்டாள்..
இரவு உணவை இருவரும் சேர்ந்து சமைத்து உண்டனர்..
" ஏன் அத்தை உங்க புள்ள சாப்பிட்டு வந்துருவாரா.. இல்லை எப்படி " மதி வினவ,
"அவன் பெரும்பாலும் சாப்பிட்டு வந்துருவான் மதி மா... அவனுக்கு எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லிடுவான் " என்றார் கற்பகம்..
அவளும் அவர் கூறியதை கேட்டுக் கொண்டாள்..
சாப்பிட்டு முடித்து, பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்தவள், " நீங்க போய் தூங்குங்க த்தை... நான் மதியம் தூங்குன நாள தூக்கம் வரல.. கொஞ்சம் நேரம் டிவி பார்த்துட்டு அப்பறம் போறேன் " என்றவளிடம்,
" சரி கண்ணு.. அப்போ நான் போய் தூங்குறேன்.. நீயும் வெரசா தூங்க போ " என்று சொல்லி விட்டுச் சென்றார்..
அவளும் வேலைகளை முடித்து விட்டு, உடையை மாற்றி வரலாம் என்று அறைக்குச் சென்றவள் இரவு உடைக்கு தன்னை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தாள்..
சிறிது நேரம் டிவி யை பார்த்துக் கொண்டிருத்தவளுக்கு, தூக்கம் வர, அப்படியே ஷோபாவில் தூங்கியும் போனாள்..
இரவு பதினோரு மணி போல் வந்த வெற்றிக்கு டிவி ஓடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்க,
" இன்னுமா அம்மா டிவி பாக்குறாங்க.. இந்நேரம் தூங்கி இருக்கணுமே " என நினைத்த படி உள்ளே வந்தவன் பார்த்தது என்னவோ, தன் அருமை மனைவியை தான்..
"அட இவதான் தூங்கிட்டு இருக்காளா இங்க.. டிவி ஓடுற சத்தத்துல கூட எப்படி தூங்குறா பாரு " என்று அவளை செல்லமாக திட்டியவன், டிவியை அணைத்து விட்டு, அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்தியவன், வேஷ்டி மற்றும் பனியன் அணிந்து கொண்டு வந்தவன்,
அவளை அப்படியே மெதுவாக, கை தாங்களாக, அவளது தூக்கம் கலையாதவாறு தூக்கி அவர்களது அறைக்கு வந்து, கட்டிலில் மெல்ல படுக்க வைத்தான்..
அவன் கையை எடுக்கும் முன்னரே, அவள் திரும்பி படுக்க, அவன் கை அவளது முதுகுக்கு அடியில் மாட்டிக் கொண்டது...
அவன் தான் விழி பிதுங்கி நின்றான்..
கையை உருவவும் முடியாது.. இழுத்தால் அவளது தூக்கம் கலைந்து தன்னை இப்படி பார்த்தாள், தவறாக எண்ணக் கூடும் என்று நினைத்தவன் அப்படியே இருக்க,
அவளது அங்கங்களும் அவனது கைகளில் உரசிக் கொண்டிருக்க, அவன் தான் உணர்வுகளில் வெள்ளத்தில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தான்..
அவன் படுக்க வைத்ததில் லேசாக உடை வேறு கீழ் இறங்கியதில் அவளது உள்ளாடை தெரிய " மனுஷனை ரொம்ப சோதிக்கிறாளே " என புலம்பியவாறு,
எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டவன், என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்க, அவனை அந்த தாக்கத்தில் இருந்து விடுவிக்க லேசாக நகர்ந்து திரும்பி படுத்தாள் ...
இது தான் சாக்கென்று உடனே கைகளை எடுத்தவன், விளக்கை அனைத்துவிட்டு, இரவு விளக்கை போட்டு விட்டு வந்து படுத்து விட்டான்..
அவன் எப்படி படுத்தாலும் அவனுக்கு உறக்கமே வர வில்லை..." காலையில் இருந்து மனுசன போட்டு பாடா படுத்துறா " என்று வாய் விட்டு புலம்பியவன், ஒரு பெருமூச்சுடன்,
திரும்பி அவளை பார்க்க, அவளோ அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு படுத்து இருந்தாள்..
"தேனு... தேனு.. " என்று இரண்டு முறை சாதாரணமாக அழைத்துப் பார்க்க,
அவளோ இவனது குரல் அவளுக்கு கேட்டதோ என்னவோ, "ம்ம்ம் " என்றபடி தூக்கத்தில் இவனது பக்கம் திரும்பிட,
அவனுக்கோ எல்லை இல்லா மகிழ்ச்சி...
"சீக்கிரம் என்னை புரிஞ்சிகிட்டு என்கிட்ட வந்துருவடி தேனு " என்றவன் அவளை பார்த்தவாறே உறங்கியும் போனான்..
அவன் இவள் மேல் மெழுகு போல் உருக, அவளோ இவனை எப்படி எடுத்துக் கொள்ள போகிறாளோ...
தேன் இனிக்கும்....
அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட, இவன் சாப்பிட்டு விட்டு எழுந்து விட்டான்..
அறைக்குச் சென்றவன், அங்கு தன்னை சுத்தப்படுத்தி விட்டு, சிறிது நேரம் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தான்..
அவனது உணர்வுகளை கட்டுப்படுத்த பெரும்பாடாகி போனது அவனுக்கு...
சிறிது நேரம் இருந்தவன் " சரி கிளம்புவோம் " என்று நினைத்து சட்டையை மாட்டிகொண்டு வெளியில் வர,
இவர்களும் இங்கே சாப்பிட்டு முடித்து, அமர்ந்து பேசிக்கொண்டு இருக்க, வெற்றியை கண்டதும்,
"எய்யா.. வெற்றி.. நான் மதிகிட்ட கேட்டுட்டேன்... அவ அடுத்த வாரம் வச்சிக்கலாம்னு சொல்றாபா.. நீ அதுக்கு உண்டான வேலையை பாரு " என்று சொல்லிட,
" அப்டியா, சரி மா.. நான் பார்த்துகிறேன்.. நீங்க அத்தை, மாமா கிட்ட சொல்லிடுங்க.. அப்புறம் வெளியூர்ல இருக்க நம்ம சொந்தகாரங்களுக்கு போன்ல சொல்லிட்டு, உள்ளூர்ல இருக்குறவங்களுக்கு நம்ம நேருல போய் சொல்லிக்கலாம்.. " என்றவனுக்கு,
" சரிய்யா.. நான் போன்ல சொல்றவங்களுக்கு எல்லாம் சொல்லிக்கிறேன்... அப்புறம், இங்க உள்ளவங்களுக்கு உனக்கு என்னைக்கு தோது படும்னு சொல்லு.. அன்னைக்கு போகலாம் " என்றார்..
"அப்படியா..." என்று சிறிது நேரம் யோசித்தவன்,
"ஞாயித்துகிழமை போகலாம்மா " எனக் கூற,
" சரிய்யா... " என்றார் அவனது அம்மா..
" சரி, நான் வேலை விஷயமா டவுன் வரைக்கும் போறேன்.. வர நைட் ஆகும்.. போய்ட்டு வரேன் " என்று தன் அம்மாவிடம் சொல்லியவன்,
மதியை பார்த்து போய்ட்டு வருவதாக தலையை ஆட்ட, அவளும் அவனுக்கு பதிலுக்கு தலையை ஆட்டினாள்..
அவனது மனமோ உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டது...
கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் முன்னேற்றத்தை அல்லவா காண்கிறான். வெகு விரைவில் அவள் என்னையும் ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையுடன் சென்றான்..
அவன் அப்படிச் செல்ல, இங்கு இவளுக்கோ தன்னையும் மதித்து சொல்லி சென்றவருக்கு, அவளும் மதிப்பளித்து பதில் கூறினாள் என்ற மன நிலையில் தான் இருந்தாளே தவிர, வேறு மாதிரி நினைக்கவில்லை அவள்..
மதியத்திற்கு மேல், எண்ண செய்வதென்று தெரியாமல், சிறிது நேரம் டிவியை ஆன் செய்து பார்த்தவளிடம்,
கற்பகம் " மதிக் கண்ணு, நீ இரு.. பக்கத்துல ஒருத்தவங்க வீட்டுக்கு நான் போய்ட்டு வந்துருறேன்.. நீ தூங்குறதுனா கதவை சாத்திட்டு தூங்கு மா " என்றவருக்கு,
" சரி அத்தை.. நீங்க கவனமா போய்ட்டு வாங்க " என்றாள்..
" அது எப்பவும் போற வார இடம் தான்.. நான் பார்த்துகிருவேன் கண்ணு " என்று சொல்லிவிட்டு சென்றார்..
இவளும் அவர் சென்ற பிறகு கதவை சாத்திவிட்டு வந்தவளுக்கு, கற்பகம் பற்றிய எண்ணம் தான்..
" மனசுல எதுவும் வச்சிக்காம, எவ்ளோ வெள்ளந்தியா இருக்காங்க.... இந்த மாதிரி ஆளுங்களை நம்ம சிட்டில பாக்குறது கஷ்டம் தான்..என் கிட்ட எவ்ளோ அன்பா அனுசரணையா நடந்துகிறாங்க. அது தான் இவங்க இயல்பா இருக்கும்... அத்தை.. உங்கள இத்தனை வருஷம் மிஸ் பண்ணிருக்காலம்.. இனி பண்ண மாட்டேன் " என்று தனக்குள் பேசிக்கொண்டவளுக்கு வெற்றியின் நியாபகம் வர,
" அவரும் நானும் சின்ன வயசுல ரொம்ப குளோஸ்ஸா இருந்து இருக்கோம் போல... எனக்கு தான் எல்லாமே மறந்து போச்சு.. ஆனால் அவருக்கு நியாபகம் இருக்கும் ல.... மாமா.. மாமா.. னு நான் அவரு பின்னாடி தான் எப்போ பாரு சுத்துவேன்னு அத்தை சொன்னாங்க..
ஆனால் இப்போ மாமானு கூப்பிட முடியுமா... " என்று யோசித்தவளுக்கு பதில் கிடைக்கவில்லை..
பின்னர், சிறிது நேரம் படுக்கலாம் என்று எண்ணியவள், அறைக்குச் சென்று கட்டிலில் படுத்தவள் நன்றாக உறங்கியும் விட்டாள்...
கற்பகம் ஐந்து மணி வாக்கில் வீட்டிற்கு வர, வீடு அமைதியாக இருப்பதை பார்த்து, "மதி... மதிக்கண்ணு.. "என்று அழைக்க,
எந்த வித எதிர்வினையும் இல்லாததால், "தூங்குறா போல ".. என முடிவு எடுத்துக் கொண்டவர்,
வரவேற்பு மற்றும் தாலிக் கொடி மாற்றும் வைபவத்தை ஊரில் லட்சுமியிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தவர், அவருக்கு அழைப்பு விடுத்தார்..
அழைப்பு அங்கே ஏற்கப்பட, " ஹலோ.. லட்சுமி.. " கற்பகம் அழைக்க,
"சொல்லுங்க அண்ணி.. எப்படி இருக்கீங்க.. வெற்றி எப்படி இருக்கான்... மதி க்கு எல்லாம் செட் ஆகிருச்சா " என அடுத்தடுத்து கேள்விகளை அடுக்க,
"எல்லாரும் நல்லா இருக்கோம். மதி ஓரளவு பழகிகிட்டா... வெற்றிகிட்ட எப்படினு தெரியல.. ஆனால் என்கிட்ட ரொம்ப நல்லாவே சின்ன புள்ளையில இருந்த மாதிரி அத்தை அத்தைனு வாய் நிறைய கூப்பிடுறா " என்று மகிழ்ச்சியுடன் சொல்ல,
லட்சுமிக்கும் அதை கேக்க ஆனந்தமாக இருந்தது..
"உங்ககிட்ட இருக்குற போல, வெற்றிகிட்டயும் கூடிய சீக்கிரம் நல்லா இணக்கமா பழக ஆரம்பிப்பா " லட்சுமி சொல்லிட,
"நல்லது நடந்தா சரி லட்சுமி...அப்புறம் நாள் குறிச்சிட்டு வந்தாச்சு. அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை... அன்னைக்கு வச்சிக்கலாம்னு மூணு பேரும் சேந்து முடிவு எடுத்து இருக்கோம்.... காலைல தாலிக் கொடி மாத்திட்டு, சாய்ந்திரம் வரவேற்பு வச்சிக்கலாம்னு வெற்றி சொல்லிட்டான்.. நீ என்னமா சொல்ற " என கேட்டவருக்கு,
"நல்லது அண்ணி.. அன்னைக்கே பண்ணிக்கலாம்.. நான் அவருகிட்ட சொல்லிருறேன்..." என்றார் லட்சுமி..
"சரி மா.. அப்போ போனை வச்சிருறேன் "என சொல்லி விட்டு போனை அணைத்தார்.
அவள் எழுந்த போது, மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது...
" அச்சோ, இவ்ளோ நேரம் தூங்கிட்டேனா.. நேரம் போனதே தெரியல... " என்றவள்,
குளியல் அறைக்குச் சென்று தன்னை மீண்டும் ஒரு முறை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், தலையை பின்னி, சிறிதாக ஒப்பனையிட்டு, கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு திருப்தி எடுக்க, அறைக் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள்..
அவளைப் பார்த்த கற்பகம், " வாமா.. தூங்கி முழிச்சிட்டியா... நல்ல தூக்கமா " என்று கேட்டவருக்கு,
" ஆமாத்தை... நல்லா தூங்கிட்டேன். நேரம் போனதே தெரியல " என்று சொன்னவளை பார்த்தவர்,
"அம்மாடி, பிரிட்ஜ்ல பூ வச்சிருக்கேன்.. எடுத்து வச்சிக்கிகிட்டு , சாமி ரூம் க்கு போய் விளக்கேத்தி வை மா " என்றார்.
அவளும் தலையில் பூவை வைத்துக் கொண்டு, சாமி படங்களுக்கு பூ வைத்து விளக்கேற்றி, வேண்டிக் கொண்டவள், திருநீரை நெற்றியிலும் குங்குமத்தை வகிட்டிலும் வைத்து விட்டு வெளியில் வந்தவளைப் பார்க்க பார்க்க திகட்டவில்லை கற்பகத்திற்கு..
" ஆத்தாடி.. என் மருமகள் எம்புட்டு அழகு.. என் கண்னே பட்டுடும் போல... இன்னைக்கு ராவுக்கு தூங்க போற முன்னாடி உனக்கு சுத்தி போட்ட பிறகு நீ தூங்க போ மதி " என்று அவளை ரசித்தப்படி சொல்ல,
அவளும் புன்னகையுடன் " ரொம்பத்தான் பண்றீங்கத்தை... அப்படி எல்லாம் எதுவும் இல்லை.." என்று சொல்லியவளை,
" அட உனக்கு தெரியாது கண்ணு.. என் மகன் கிட்ட கேளு.. அவன் சொல்லுவான் " என்று சிரித்தவாரு சொல்லிவிட்டு நகர,
இவளுக்கு தான் ஐயோ என்றானது...
பின் பேச்சை மாற்றி, வேறு பேச்சுக்கு சென்று எதை எதையோ பேசினர்..
" ஏன் அத்தை.., அவரு டவுன்னு சொல்லிட்டு போனாரே, எங்க " என்று கேட்க,
" திரிச்சி தான்.. நமக்கு இங்க இருந்து அதானே பக்கம்.. அவன் வேலை விஷயமா அடிக்கடி போவான் கண்ணு " என்று சொல்லிட,
அவளும் "ஓஹோ.." என்றதோடு முடித்துக் கொண்டாள்..
இரவு உணவை இருவரும் சேர்ந்து சமைத்து உண்டனர்..
" ஏன் அத்தை உங்க புள்ள சாப்பிட்டு வந்துருவாரா.. இல்லை எப்படி " மதி வினவ,
"அவன் பெரும்பாலும் சாப்பிட்டு வந்துருவான் மதி மா... அவனுக்கு எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லிடுவான் " என்றார் கற்பகம்..
அவளும் அவர் கூறியதை கேட்டுக் கொண்டாள்..
சாப்பிட்டு முடித்து, பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்தவள், " நீங்க போய் தூங்குங்க த்தை... நான் மதியம் தூங்குன நாள தூக்கம் வரல.. கொஞ்சம் நேரம் டிவி பார்த்துட்டு அப்பறம் போறேன் " என்றவளிடம்,
" சரி கண்ணு.. அப்போ நான் போய் தூங்குறேன்.. நீயும் வெரசா தூங்க போ " என்று சொல்லி விட்டுச் சென்றார்..
அவளும் வேலைகளை முடித்து விட்டு, உடையை மாற்றி வரலாம் என்று அறைக்குச் சென்றவள் இரவு உடைக்கு தன்னை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தாள்..
சிறிது நேரம் டிவி யை பார்த்துக் கொண்டிருத்தவளுக்கு, தூக்கம் வர, அப்படியே ஷோபாவில் தூங்கியும் போனாள்..
இரவு பதினோரு மணி போல் வந்த வெற்றிக்கு டிவி ஓடிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்க,
" இன்னுமா அம்மா டிவி பாக்குறாங்க.. இந்நேரம் தூங்கி இருக்கணுமே " என நினைத்த படி உள்ளே வந்தவன் பார்த்தது என்னவோ, தன் அருமை மனைவியை தான்..
"அட இவதான் தூங்கிட்டு இருக்காளா இங்க.. டிவி ஓடுற சத்தத்துல கூட எப்படி தூங்குறா பாரு " என்று அவளை செல்லமாக திட்டியவன், டிவியை அணைத்து விட்டு, அறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்தியவன், வேஷ்டி மற்றும் பனியன் அணிந்து கொண்டு வந்தவன்,
அவளை அப்படியே மெதுவாக, கை தாங்களாக, அவளது தூக்கம் கலையாதவாறு தூக்கி அவர்களது அறைக்கு வந்து, கட்டிலில் மெல்ல படுக்க வைத்தான்..
அவன் கையை எடுக்கும் முன்னரே, அவள் திரும்பி படுக்க, அவன் கை அவளது முதுகுக்கு அடியில் மாட்டிக் கொண்டது...
அவன் தான் விழி பிதுங்கி நின்றான்..
கையை உருவவும் முடியாது.. இழுத்தால் அவளது தூக்கம் கலைந்து தன்னை இப்படி பார்த்தாள், தவறாக எண்ணக் கூடும் என்று நினைத்தவன் அப்படியே இருக்க,
அவளது அங்கங்களும் அவனது கைகளில் உரசிக் கொண்டிருக்க, அவன் தான் உணர்வுகளில் வெள்ளத்தில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தான்..
அவன் படுக்க வைத்ததில் லேசாக உடை வேறு கீழ் இறங்கியதில் அவளது உள்ளாடை தெரிய " மனுஷனை ரொம்ப சோதிக்கிறாளே " என புலம்பியவாறு,
எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டவன், என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளிக்க, அவனை அந்த தாக்கத்தில் இருந்து விடுவிக்க லேசாக நகர்ந்து திரும்பி படுத்தாள் ...
இது தான் சாக்கென்று உடனே கைகளை எடுத்தவன், விளக்கை அனைத்துவிட்டு, இரவு விளக்கை போட்டு விட்டு வந்து படுத்து விட்டான்..
அவன் எப்படி படுத்தாலும் அவனுக்கு உறக்கமே வர வில்லை..." காலையில் இருந்து மனுசன போட்டு பாடா படுத்துறா " என்று வாய் விட்டு புலம்பியவன், ஒரு பெருமூச்சுடன்,
திரும்பி அவளை பார்க்க, அவளோ அவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு படுத்து இருந்தாள்..
"தேனு... தேனு.. " என்று இரண்டு முறை சாதாரணமாக அழைத்துப் பார்க்க,
அவளோ இவனது குரல் அவளுக்கு கேட்டதோ என்னவோ, "ம்ம்ம் " என்றபடி தூக்கத்தில் இவனது பக்கம் திரும்பிட,
அவனுக்கோ எல்லை இல்லா மகிழ்ச்சி...
"சீக்கிரம் என்னை புரிஞ்சிகிட்டு என்கிட்ட வந்துருவடி தேனு " என்றவன் அவளை பார்த்தவாறே உறங்கியும் போனான்..
அவன் இவள் மேல் மெழுகு போல் உருக, அவளோ இவனை எப்படி எடுத்துக் கொள்ள போகிறாளோ...
தேன் இனிக்கும்....