அத்தியாயம் 5
எந்த வித சடங்கு சம்பிரதாயம் எதுவும் வேண்டாம் என்று வெற்றி சொல்லி விட்டதால், எதுவும் ஏற்பாடு செய்யவில்லை.
மதி, அவளுடைய அறையில் உறங்க, வெற்றி மற்றும் கற்பகத்திற்கு வேறு ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் அங்கே உறங்கினர்.
முதல் நாள் இரவே நடந்த அனைத்தையும் வெற்றி தன் நண்பன் குமரனிடம் பகிர்ந்து கொள்ள,
"வாழ்த்துக்கள் மச்சான்... யாருக்கு யாருனு அந்த கடவுள் முன்கூட்டியே முடிவு பண்ணிருக்காரு.. எங்க சுத்தி எப்படி சுத்தி நடந்து இருக்கு பாரு. நீ ஆசை பட்டது நடந்துடுச்சுல, சந்தோசமா இரு மச்சான் " என்று அவன் சொல்ல,
" ஆசை பட்டது என்னவோ நடந்துருச்சி தான்.. ஆனால் சந்தோஷமான மனநிலை இல்லை " என்று வெற்றி சொல்ல,
"என்னடா மச்சான்.
எதுக்கு இப்படி சொல்ற " என்ற நண்பனின் கேள்விக்கு,
" மதியை பொறுத்த வரைக்கும் ரவியை தான் கணவனா நெனச்சி இருப்பா.. இப்போ திடிர்னு மாப்பிள்ளை மாறுனதும் அவளால ஏத்துக்க முடியல.. அவ மனசு எனக்கு புரியுது.. அவளுக்கான இடைவெளி குடுக்கணும். பாப்போம். " என்ற வெற்றிக்கு,
" சரி டா மச்சான். உன் மனதுக்கு ஏத்த போல எல்லாம் நல்லதாவே நடக்கும் " என்றவனிடம் மேலும் சில விவரங்களை கேட்டும் பகிர்ந்தும் கொண்டான்.
மறுநாள் விடியல் ஆதவன், யார் எப்படி இருந்தால் என்ன, என் கடமையை செவ்வனே செய்ய நான் வந்து விட்டேன் என்று தன் கதிர்களை பரப்பத் தொடங்கி விட்டான்.
மதி, இரவெல்லாம் யோசனையிலேயே இருந்ததால், எப்பொழுது தூங்கினாலோ, காலை கண் விழித்தது என்னவோ ஏழு மணிக்குதான்.
AC அறை என்பதால், வெளியே ஆட்களின் பேச்சு சத்தம் எதுவும் கேட்கவில்லை.
எழுந்தவள், பாத்ரூம் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், ரூமை ஒட்டியுள்ள பலகணிக்குச் சென்றாள்..
சிறிது நேரம் அங்கு நின்று, நேற்று நடந்தவற்றை மனதில் எண்ணியப்படி நின்றிருந்வளின் கண்ணில் பட்டது என்னவோ, தோட்டத்தில் சூரிய நமஸ்காரம் செய்யும் வெற்றிதான்..
எப்பொழுதும் காலையில் சீக்கிரம் எழும் பழக்கம் கொண்ட வெற்றிக்கு, இன்றும் சீக்கிரம் முழிப்பு தட்டி விட்டதால், கீழே இறங்கி வந்தவன் தோட்டத்து பக்கம் சென்று சிறிது நேரம் தியானம் செய்தவன், பிறகு சூரியன் உதயமானதும் சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்தான்.
அதை தான் மதி பார்த்துக் கொண்டிருந்தாள்..
செய்து முடித்தவன், கழட்டி போட்ட தன் சட்டையை எடுத்து போடும் போது, யாரோ தன்னை பார்ப்பது போல உணர்வு தோன்றிட சுற்றும் முற்றும் பார்த்தவன், யாருமில்லை என்றதும் தோள்களை குலுக்கி விட்டு, சென்று விட்டான்.
இவள் தான், அவன் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனை பற்றிய எண்ணம் தான் அவளது சிந்தனையில் ஓடிக் கொண்டிருந்தது..
எப்படியும் தன் தாய்க்கு சொந்தமாக தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் உரிமையுடன் அவனிடம் சொல்ல மாட்டார்கள்..
தாய் தன் உறவினர்களை பற்றி, தம்மிடம் அதிகமா பேசியது இல்லை. எப்போதாவது தந்தையிடம் பகிர்ந்து கொள்வார் . ஆனால் அவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், தங்களுக்கும் அந்த உணர்வு வரவில்லையோ என்னவோ... என்றவாறு பலதரப்பட்ட யோசனையுடன் உள்ளே சென்று, குளித்து முடித்து கீழே இறங்கி வந்தாள்.
அப்பொழுது தான் வெற்றியும் குளித்து முடித்து வேறு உடைக்கு மாற்றி, நேரே பூஜை அறைக்கு சென்றவன் கடவுளை மனதார வணங்கி விட்டு, ஹாலில் அமர்ந்து இருந்த மூர்த்தியிடம் வந்து,
" மாமா " என்று அழைக்க, அவரோ படித்துக்கொண்டிருந்த செய்தி தாளை மடித்து மேஜையின் மீது வைத்து விட்டு, அவனை பார்த்து
" சொல்லுங்க.. எதுவும் பேசணுமா " என்றார். இத்தனை வருடம் பேசாமல் இருந்ததாளோ என்னவோ சட்டென்று அவனிடம் மாப்பிள்ளை என்று உடனேயே உரிமை பாராட்ட முடியவில்லை..
வெற்றியும் அதனை எல்லாம் பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை.
" இன்னைக்கு ஊருக்கு போகணும் " என்றான்..
அவருக்கும் தெரியும்தானே, பெண்ணை கட்டிக்குடுத்தால் அவள் கணவன் வீட்டில் இருப்பது தானே முறை.. அதுவும் மகள் இப்பொழுது வெற்றியை தவிர வேறு ஒருவனை மணம் முடித்து இருந்தால் , அவள் இந்நேரம் கணவன் வீட்டில் தானே இருப்பாள் என்பதை அறியாத முட்டாள் ஒன்றும் இல்லை அவர்.
அதனாலேயே மூர்த்தியும், ஒரு பெருமூச்சுடன் " எப்போ கிளம்பலாம்னு இருக்கீங்க " என்று கேக்க,
" இன்னைக்கு மத்தியானதுக்கு மேல ட்ரெயின் இருக்கு. அதுல கிளம்புனா ராத்திரிக்கு ஊருக்கு போய் சேந்துடலாம். எங்க கல்யாண விஷயம் அங்க யாருக்கும் தெரியாது. இனிதான் போய் சொல்லணும். " என்று சொல்ல, மூர்த்தியோ தன் மனைவியின் முகத்தை பார்க்க,
அவரும் சரி என்பதாய் தலை அசைக்க, அடுத்து தன் மகளை பார்த்தார். அவளும் நடந்தவற்றை எல்லாம் மாடிப்படியில் நின்றவாரு பார்த்துக் கொண்டிருந்தாள்.
தந்தை, தன்னை பார்த்து தன் அபிப்பிராயத்தை கேக்க, அவளும் ஆமோதிப்பதாய் தலை அசைத்தாள்.
மதியும் தனக்கு தேவையான கொஞ்சம் துணி மணிகள் மற்றும் இன்னும் சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டாள். ஏதும் தேவைபட்டால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றே இருந்தாள்.
அந்தா.. இந்தா.. என்று மதிய உணவை முடித்துக் கொண்டு இரண்டு காரில் அனைவரும் புறப்பட்டனர்.
ஒரு காரில் மூர்த்தி, லட்சுமி, சாந்தவி குடும்பத்தினர்.
இன்னொரு காரில் வெற்றி, மதி மற்றும் கற்பகம்..
வெற்றிக்கு இங்கிருந்து திருச்சி வரை விமானத்தில் சென்று, பின்பு அங்கிருந்து காரில் மணப்பாறை வரை செல்லலாம். ஆனால் விமானப் பயணம் தன் தாயிக்கு ஒத்து கொள்ளாது.. அவர்களை மட்டும் தனியே ட்ரைனில் வர சொல்ல அவனுக்கு விருப்பம் இல்லை..
அதனால் தான் இந்த ரயில் பயணம். யாராவது காரணம் கேட்டால் சொல்லலாம் என்று தான் நினைத்து இருந்தான் . ஆனால் யாரும் எதுவும் கேட்காமல் தன் விருப்பத்திற்கு விட்டது நல்லது தான் என்று நினைத்து அமைதியாக இருந்து விட்டான்...
ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியவுடன் வெற்றி தன் லக்கேஜ் எடுத்துக்கொண்டவன், மதியின் லக்கேஜ்'ம் எடுத்துக் கொண்டான்.
"இல்லை பரவாயில்லை.. நான் கொண்டு வரேன்".. என்று அவள் சொன்னதற்க்கு,
"இருக்கட்டும் மதி.. நான் கொண்டு வரேன். இதுல என்ன இருக்கு " என்று சொல்லி முன்னால் கொண்டு சென்றான்.
ட்ரெயின் நிற்கும் பிளாட்பார்ம்க்கு வந்தவர்கள், அவர்கள் ஏறும் கோச்சிற்கு வந்து, உள்ளே தாங்கள் அமர வேண்டிய இடத்திற்கு சென்று தங்களது பெட்டிகளை அடுக்கி வைத்தான்..
வெற்றி, மதியின் திருமணம் முடிந்த கையோடு அப்படியே ஊருக்கு கிளம்பிச் செல்லலாம் என்று தான் நினைத்து வந்தான்.
ஆனால் நடந்தது என்னவோ வேறு. அதனால் தன் நண்பனிடம் கூறி, மறுநாள் தக்கல் பிரிவில் டிக்கெட் புக் செய்யுமாறு கூறினான்.
அதே போல அவனும் செய்துவிட்டு, இவனுக்கு போனில் அனுப்பி வைத்து விட்டான்..
ட்ரெயின் சற்று நேரத்தில் கிளம்பிவிடும் என்பதால், அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, தாங்கள் அமர வேண்டிய சீட்டில் வந்து அமர்ந்து கொண்டனர்.
பெர்த் பிரிவு தான் புக் செய்ய சொல்லி இருந்தான்.. அவ்வப்போது இளைப்பாரிக்கலாம் என்று..
கற்பகமும் மதியும் எதிர் எதிர் ஜன்னல் சீட்டில் அமர்ந்து கொள்ள,
வெற்றி யார் பக்கத்தில் அமருவது என்ற யோசனையுடன் நின்று கொண்டிருந்தான். அதாவது அவனுக்கு மதியின் பக்கத்து சீட் தான் புக் ஆகி இருந்தது. அவளது அருகில் அமர்ந்தால் , என்ன நினைப்பாளோ என்ற யோசனையுடன் இருக்க..
கற்பகம் " நீ உக்காரலையா சாமி " என்று கேக்க..
"ம்ம். உக்காரனும்மா " என்றவன் மதியின் அருகில் சற்று தள்ளி விலகியே அமர்ந்தான் .
அவளும் அதை ஒரக்கண்ணால் கவனித்தவள், ஒன்றும் கண்டு கொள்ளாது, ஜன்னல் புறமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்..
ஆனால் வெற்றிக்கு தான் அவளது அருகாமை, மனதிற்கு இதத்தை தந்தது..
தலையில் பூ வைத்து, புடவை உடுத்தி , கை நிறைய வளையல் அணிந்து, எல்லாவற்றிற்கும் மேலாக தான் கட்டிய மஞ்சள் தாலியுடன் அவளை பார்க்க கொள்ளை அழகாக இருந்தாள்.
முதன் முதலில் அவளுடைனான பயணம்.. இது வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும் என்று மனதில் எண்ணிகொண்டான்..
தேன் இனிக்கும்...
எந்த வித சடங்கு சம்பிரதாயம் எதுவும் வேண்டாம் என்று வெற்றி சொல்லி விட்டதால், எதுவும் ஏற்பாடு செய்யவில்லை.
மதி, அவளுடைய அறையில் உறங்க, வெற்றி மற்றும் கற்பகத்திற்கு வேறு ஒரு அறை ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்கள் அங்கே உறங்கினர்.
முதல் நாள் இரவே நடந்த அனைத்தையும் வெற்றி தன் நண்பன் குமரனிடம் பகிர்ந்து கொள்ள,
"வாழ்த்துக்கள் மச்சான்... யாருக்கு யாருனு அந்த கடவுள் முன்கூட்டியே முடிவு பண்ணிருக்காரு.. எங்க சுத்தி எப்படி சுத்தி நடந்து இருக்கு பாரு. நீ ஆசை பட்டது நடந்துடுச்சுல, சந்தோசமா இரு மச்சான் " என்று அவன் சொல்ல,
" ஆசை பட்டது என்னவோ நடந்துருச்சி தான்.. ஆனால் சந்தோஷமான மனநிலை இல்லை " என்று வெற்றி சொல்ல,
"என்னடா மச்சான்.
எதுக்கு இப்படி சொல்ற " என்ற நண்பனின் கேள்விக்கு,
" மதியை பொறுத்த வரைக்கும் ரவியை தான் கணவனா நெனச்சி இருப்பா.. இப்போ திடிர்னு மாப்பிள்ளை மாறுனதும் அவளால ஏத்துக்க முடியல.. அவ மனசு எனக்கு புரியுது.. அவளுக்கான இடைவெளி குடுக்கணும். பாப்போம். " என்ற வெற்றிக்கு,
" சரி டா மச்சான். உன் மனதுக்கு ஏத்த போல எல்லாம் நல்லதாவே நடக்கும் " என்றவனிடம் மேலும் சில விவரங்களை கேட்டும் பகிர்ந்தும் கொண்டான்.
மறுநாள் விடியல் ஆதவன், யார் எப்படி இருந்தால் என்ன, என் கடமையை செவ்வனே செய்ய நான் வந்து விட்டேன் என்று தன் கதிர்களை பரப்பத் தொடங்கி விட்டான்.
மதி, இரவெல்லாம் யோசனையிலேயே இருந்ததால், எப்பொழுது தூங்கினாலோ, காலை கண் விழித்தது என்னவோ ஏழு மணிக்குதான்.
AC அறை என்பதால், வெளியே ஆட்களின் பேச்சு சத்தம் எதுவும் கேட்கவில்லை.
எழுந்தவள், பாத்ரூம் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், ரூமை ஒட்டியுள்ள பலகணிக்குச் சென்றாள்..
சிறிது நேரம் அங்கு நின்று, நேற்று நடந்தவற்றை மனதில் எண்ணியப்படி நின்றிருந்வளின் கண்ணில் பட்டது என்னவோ, தோட்டத்தில் சூரிய நமஸ்காரம் செய்யும் வெற்றிதான்..
எப்பொழுதும் காலையில் சீக்கிரம் எழும் பழக்கம் கொண்ட வெற்றிக்கு, இன்றும் சீக்கிரம் முழிப்பு தட்டி விட்டதால், கீழே இறங்கி வந்தவன் தோட்டத்து பக்கம் சென்று சிறிது நேரம் தியானம் செய்தவன், பிறகு சூரியன் உதயமானதும் சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்தான்.
அதை தான் மதி பார்த்துக் கொண்டிருந்தாள்..
செய்து முடித்தவன், கழட்டி போட்ட தன் சட்டையை எடுத்து போடும் போது, யாரோ தன்னை பார்ப்பது போல உணர்வு தோன்றிட சுற்றும் முற்றும் பார்த்தவன், யாருமில்லை என்றதும் தோள்களை குலுக்கி விட்டு, சென்று விட்டான்.
இவள் தான், அவன் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனை பற்றிய எண்ணம் தான் அவளது சிந்தனையில் ஓடிக் கொண்டிருந்தது..
எப்படியும் தன் தாய்க்கு சொந்தமாக தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் உரிமையுடன் அவனிடம் சொல்ல மாட்டார்கள்..
தாய் தன் உறவினர்களை பற்றி, தம்மிடம் அதிகமா பேசியது இல்லை. எப்போதாவது தந்தையிடம் பகிர்ந்து கொள்வார் . ஆனால் அவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால், தங்களுக்கும் அந்த உணர்வு வரவில்லையோ என்னவோ... என்றவாறு பலதரப்பட்ட யோசனையுடன் உள்ளே சென்று, குளித்து முடித்து கீழே இறங்கி வந்தாள்.
அப்பொழுது தான் வெற்றியும் குளித்து முடித்து வேறு உடைக்கு மாற்றி, நேரே பூஜை அறைக்கு சென்றவன் கடவுளை மனதார வணங்கி விட்டு, ஹாலில் அமர்ந்து இருந்த மூர்த்தியிடம் வந்து,
" மாமா " என்று அழைக்க, அவரோ படித்துக்கொண்டிருந்த செய்தி தாளை மடித்து மேஜையின் மீது வைத்து விட்டு, அவனை பார்த்து
" சொல்லுங்க.. எதுவும் பேசணுமா " என்றார். இத்தனை வருடம் பேசாமல் இருந்ததாளோ என்னவோ சட்டென்று அவனிடம் மாப்பிள்ளை என்று உடனேயே உரிமை பாராட்ட முடியவில்லை..
வெற்றியும் அதனை எல்லாம் பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை.
" இன்னைக்கு ஊருக்கு போகணும் " என்றான்..
அவருக்கும் தெரியும்தானே, பெண்ணை கட்டிக்குடுத்தால் அவள் கணவன் வீட்டில் இருப்பது தானே முறை.. அதுவும் மகள் இப்பொழுது வெற்றியை தவிர வேறு ஒருவனை மணம் முடித்து இருந்தால் , அவள் இந்நேரம் கணவன் வீட்டில் தானே இருப்பாள் என்பதை அறியாத முட்டாள் ஒன்றும் இல்லை அவர்.
அதனாலேயே மூர்த்தியும், ஒரு பெருமூச்சுடன் " எப்போ கிளம்பலாம்னு இருக்கீங்க " என்று கேக்க,
" இன்னைக்கு மத்தியானதுக்கு மேல ட்ரெயின் இருக்கு. அதுல கிளம்புனா ராத்திரிக்கு ஊருக்கு போய் சேந்துடலாம். எங்க கல்யாண விஷயம் அங்க யாருக்கும் தெரியாது. இனிதான் போய் சொல்லணும். " என்று சொல்ல, மூர்த்தியோ தன் மனைவியின் முகத்தை பார்க்க,
அவரும் சரி என்பதாய் தலை அசைக்க, அடுத்து தன் மகளை பார்த்தார். அவளும் நடந்தவற்றை எல்லாம் மாடிப்படியில் நின்றவாரு பார்த்துக் கொண்டிருந்தாள்.
தந்தை, தன்னை பார்த்து தன் அபிப்பிராயத்தை கேக்க, அவளும் ஆமோதிப்பதாய் தலை அசைத்தாள்.
மதியும் தனக்கு தேவையான கொஞ்சம் துணி மணிகள் மற்றும் இன்னும் சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டாள். ஏதும் தேவைபட்டால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றே இருந்தாள்.
அந்தா.. இந்தா.. என்று மதிய உணவை முடித்துக் கொண்டு இரண்டு காரில் அனைவரும் புறப்பட்டனர்.
ஒரு காரில் மூர்த்தி, லட்சுமி, சாந்தவி குடும்பத்தினர்.
இன்னொரு காரில் வெற்றி, மதி மற்றும் கற்பகம்..
வெற்றிக்கு இங்கிருந்து திருச்சி வரை விமானத்தில் சென்று, பின்பு அங்கிருந்து காரில் மணப்பாறை வரை செல்லலாம். ஆனால் விமானப் பயணம் தன் தாயிக்கு ஒத்து கொள்ளாது.. அவர்களை மட்டும் தனியே ட்ரைனில் வர சொல்ல அவனுக்கு விருப்பம் இல்லை..
அதனால் தான் இந்த ரயில் பயணம். யாராவது காரணம் கேட்டால் சொல்லலாம் என்று தான் நினைத்து இருந்தான் . ஆனால் யாரும் எதுவும் கேட்காமல் தன் விருப்பத்திற்கு விட்டது நல்லது தான் என்று நினைத்து அமைதியாக இருந்து விட்டான்...
ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியவுடன் வெற்றி தன் லக்கேஜ் எடுத்துக்கொண்டவன், மதியின் லக்கேஜ்'ம் எடுத்துக் கொண்டான்.
"இல்லை பரவாயில்லை.. நான் கொண்டு வரேன்".. என்று அவள் சொன்னதற்க்கு,
"இருக்கட்டும் மதி.. நான் கொண்டு வரேன். இதுல என்ன இருக்கு " என்று சொல்லி முன்னால் கொண்டு சென்றான்.
ட்ரெயின் நிற்கும் பிளாட்பார்ம்க்கு வந்தவர்கள், அவர்கள் ஏறும் கோச்சிற்கு வந்து, உள்ளே தாங்கள் அமர வேண்டிய இடத்திற்கு சென்று தங்களது பெட்டிகளை அடுக்கி வைத்தான்..
வெற்றி, மதியின் திருமணம் முடிந்த கையோடு அப்படியே ஊருக்கு கிளம்பிச் செல்லலாம் என்று தான் நினைத்து வந்தான்.
ஆனால் நடந்தது என்னவோ வேறு. அதனால் தன் நண்பனிடம் கூறி, மறுநாள் தக்கல் பிரிவில் டிக்கெட் புக் செய்யுமாறு கூறினான்.
அதே போல அவனும் செய்துவிட்டு, இவனுக்கு போனில் அனுப்பி வைத்து விட்டான்..
ட்ரெயின் சற்று நேரத்தில் கிளம்பிவிடும் என்பதால், அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, தாங்கள் அமர வேண்டிய சீட்டில் வந்து அமர்ந்து கொண்டனர்.
பெர்த் பிரிவு தான் புக் செய்ய சொல்லி இருந்தான்.. அவ்வப்போது இளைப்பாரிக்கலாம் என்று..
கற்பகமும் மதியும் எதிர் எதிர் ஜன்னல் சீட்டில் அமர்ந்து கொள்ள,
வெற்றி யார் பக்கத்தில் அமருவது என்ற யோசனையுடன் நின்று கொண்டிருந்தான். அதாவது அவனுக்கு மதியின் பக்கத்து சீட் தான் புக் ஆகி இருந்தது. அவளது அருகில் அமர்ந்தால் , என்ன நினைப்பாளோ என்ற யோசனையுடன் இருக்க..
கற்பகம் " நீ உக்காரலையா சாமி " என்று கேக்க..
"ம்ம். உக்காரனும்மா " என்றவன் மதியின் அருகில் சற்று தள்ளி விலகியே அமர்ந்தான் .
அவளும் அதை ஒரக்கண்ணால் கவனித்தவள், ஒன்றும் கண்டு கொள்ளாது, ஜன்னல் புறமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள்..
ஆனால் வெற்றிக்கு தான் அவளது அருகாமை, மனதிற்கு இதத்தை தந்தது..
தலையில் பூ வைத்து, புடவை உடுத்தி , கை நிறைய வளையல் அணிந்து, எல்லாவற்றிற்கும் மேலாக தான் கட்டிய மஞ்சள் தாலியுடன் அவளை பார்க்க கொள்ளை அழகாக இருந்தாள்.
முதன் முதலில் அவளுடைனான பயணம்.. இது வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும் என்று மனதில் எண்ணிகொண்டான்..
தேன் இனிக்கும்...